Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவை களவாடிய அனேகனே

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு - 1
அதிகாலை பொழுது வீட்டு வாசலில் கிடந்த பால் பாக்கெட்டையும் செய்தி தாளையும் தன் ஒரு கையால் எடுத்துக் கொண்டு, நான்கு அடி எடுத்து வைத்து, அங்கிருந்த மர நாற்காலியில் வைத்த சுப்பு, தன் மறுகையில் பிடித்திருந்த துடைப்பத்தின் உதவியால் வழக்கம் போல அந்த பெரிய காரிடாரை சுத்தம் செய்யத் தொடங்கினாள். அவளை எட்ட நின்னு வேவு பார்த்துக் கொண்டிருந்தது கழட்டி எறியப்பட்ட அந்த ஒற்றை கருப்பு காலணி.

“இந்த பொண்ணுக்கு வேற வேலையே இல்ல.. இதோட செருப்ப கூட நான் தான் எடுத்து வைக்கனுமா..? ஏதோ ஐம்பது ரூபாய் அதிகமா கிடைக்குதே-னு இதெல்லாம் பொறுத்துக்க வேண்டியதா இருக்கு.. எல்லாம் என் தலை விதி..” என்று சுப்புவின் வாய் முணுமுணுத்துக் கொண்ட வேகத்திற்கு ஈடுக் கொடுத்து கையும் தன் துப்புரவு வேலையை செய்துக் கொண்டிருந்தது.

அந்நேரம் வாயிற்கதவு திறக்கப் படும் சத்தம் கேட்கவும் தன் வாய் கதவை பூட்டிக் கொண்ட சுப்பு மனதிற்குள்,

“நாம பேசினது கேட்டிருக்குமோ..? அய்யய்யோ.. வேலைய விட்டு தூக்கிட்டான்னா வீட்டுல அந்த மனுஷன் என் ஜீவனை அத்துருவானே..! தினம் தினம் குடிக்க கஞ்சி இருக்கோ இல்லையோ அவனுக்கு கவலை இல்லை.. இந்த பொண்ணு கூடுதலா தர்ற ஐம்பது ரூபாயில தான் தினம் ஒரு கட்டிங்-காவது அடிக்கிறேன், அதுல மண்ண அள்ளிப் போட்டுட்டேன் –னு அந்த நாற வாயன் என் தோல உறிக்கப் போறான்.. ஆத்தா மகமாயி.. இந்த ஒரு முறை என்ன காப்பாத்திரு ஆத்தா.. இனி இப்படி அடாவடியா பேச மாட்டேன்..” என்று தொன்னூற்றி எட்டாவது முறையாக தனது நிறை செலுத்தா வேண்டுதலை வைத்துக் கொண்டிருந்தாள்.

அவள் வேண்டுதலை அந்த மகமாயி இம்முறையும் நம்பி விட்டாள் போலும். கதவுவை திறந்துக் கொண்டு வெளியில் வந்த ஆஷ்ரிதா எதையும் கேட்டிருக்கவில்லை. எப்பொழுதும் போல

“குட் மார்னிங் சுப்பு..” என்றாள் ஆஷ்ரிதா.

“வணக்கோ மா..” என்று அவளை பார்த்து பல் இளித்த சுப்புவின் உள்ளமும் சேர்ந்தே இளித்தது. அவளை காப்பாற்றிய மகமாயிக்கு நன்றி சொல்ல கூட மறந்துவிட்டவள் அங்கிருந்து சீக்கிரம் கிளம்பினாள் போதும் என்று பரபரவென குப்பைகளைத் தூற்றுக் கொண்டிருந்தாள்.

“என்ன சுப்பு.. நான் சொன்னத மறந்துட்ட போல..?” என கேட்டாள் ஆஷ்ரிதா.

‘இந்த புள்ள என்னாத்த கேக்குது’ என்று மனதில் எண்ணியவள் “என்ன மா சொன்னீங்க..?” என்று கேட்டாள் தன் வேலைக்கு இடைவெளி கொடுத்த அந்த நிமிடத்தில்.

“வணக்கம் சொல்லாத குட் மார்னிங் சொல்லி பழகு –னு சொன்னேனா இல்லையா..? அப்புறம் எப்படி என்கிட்ட இருந்து இங்கிலிஷ் கத்துப்ப..?” - பாசத்துடனும் உரிமையுடனும் கேட்டாள் ஆஷ்ரிதா.

‘என் வீட்டு பொடிசு இங்கிலிஷ் –ல சந்தேகம் கேட்டு சாவடிக்குதுனு தெரியாம வாய கொடுத்துட்டேன்.. இந்த அம்மா என்ன இங்கிலிபிஷ் படிக்க சொல்லி உயிர வாங்குது.. என் மனசு முழுக்க ரேசன் கடைக்கு ஆளுக்கு முன்ன போய் எடை குறையாம பருப்ப வாங்கிட்டு வரனுமே, உடஞ்ச ஓட்டுல இருந்து வீட்டுக்குள்ளாறக் கொட்டுற மண்ண அந்த மனுஷ வாரதுக்குள்ள அள்ளிப் போடனுமே-னு கவலை ஓடிக்கிட்டு இருக்கு.. பளிங்கு வீட்டுல இருக்குறவுகளுக்குலாம் அந்த கவலை எங்க தெரிய போகுது..? இப்ப இந்த குட்டு மாரி –ய தெரிஞ்சிக்காம போனதுதான் ஆகாச குத்தமாக்கும்’ என்று எண்ணியவள் “எனக்கு அதுலாம் வராது மா..” என்றாள் இளிப்பு மாறாமல்.

சுப்புவுக்கு அங்கு வேலை செய்வதில் கடுப்பை உண்டாக்கியது அந்த பெரிய காரிடாரோ இல்லை கழட்டி எறியப்பட்ட காலணியோ தெரியாது. ஆனால் மொத்த கடுப்பும் சுப்புவின் மனதில் விஸ்வரூபம் எடுப்பது பாசத்தின் உரிமையில் ஆஷ்ரிதா கண்டித்து பேசும் சில பொழுதுகளில் தான்.

இவற்றை அறியாத ஆஷ்ரிதாவின் மனதில் இருப்பது எல்லாம் ஒன்றே ஒன்று தான். சுப்பு தன் வயதை ஒத்த இளம் பெண். இளமை வயதில் அனுபவிக்க வேண்டிய எந்த ஒரு சுதந்திரத்தையும் அனுபவிக்காது, குடிகார கணவனுக்கு வாக்கப்பட்டு, குட்டிப் போடும் இயந்திரமாய் மட்டுமே இன்று வரை வாழ்ந்து வருகிறவள் அவளிடம் தன்னால் இயன்றவரை அன்பாய், தோழமையாய், உதவியாய் இருக்க வேண்டும் என்பது மட்டும் தான்.

“நான் வேலையை முடிச்சிட்டேன்.. போயாறேன் மா..” என்று இடுப்பில் சொருகியிருந்த தன் கந்தல் சேலையின் முந்தானையை எடுத்து முகத்தை துடைத்தவாறு விரைவு ரயிலென பறந்து விட்டாள் சுப்பு.

“கிரேஸீ கேள்..” என்று சிறிய புன்முறுவலுடன் பால் பாக்கெட்டையும் செய்தி தாளையும் எடுத்துக் கொண்டு வீட்டினுள் சென்ற ஆஷ்ரிதா தேனீர் தயார் செய்துவிட்டு அவர்களது அறையை அடைந்தாள். நன்கு உறங்கிக் கொண்டிருந்த அவளது தங்கை அம்ரிதாவை பார்த்தாள்.

ஆஷ்ரிதா அம்ரிதாவின் அக்கா. இருவரும் இரட்டை சகோதரிகள். இருவரின் பெயர்களையும் சுருக்கி அச்சு, அம்மு என்று அனைவரும் அழைப்பர்.

அம்முவின் தலையை வருடிவிட்டவள் தன் அலைபேசியை எடுத்து டாக்டர் பிரபாகரனுக்கு அலைப்பு கொடுத்தவாறு வீட்டு வராண்டாவிற்கு வந்தாள்.

“ஹலோ.. மிஸ். ஆஷ்ரிதா..”

“ஹலோ சார்.. குட் மார்னிங்.. சாரி சார்.. ரொம்ப சீக்கிரமா கால் பண்ணி தொந்தரவு பண்ணுறேனா..?”

“நோ மை டியர்.. ஏன் ரொம்ப அஃபீசியலா பேசுற..? நீ எப்ப வேணும்னாலும் எனக்கு கால் பண்ணலாம்.. நான் தான் சொல்லியிருக்கேனே..”

“இல்லை சார்.. தங்கச்சி தூங்கிட்டு இருக்கா.. அவ எழுந்துட்டா நாம பேச முடியாதுல.. அதான் அவ எழுந்துக்க முன்னாடியே கால் பண்ணேன்..”

“சரி மா.. நேத்து பேசினது போல இன்னைக்கு டென் ஓ க்ளாக்குக்கே க்ளீனிக் வந்திரு..”

“சரிங்க சார்.. வந்திடுறேன்..”

“ஓகே மா.. டேக் கேர்.. பாய்..”

“தேன்க் யூ சார்..”

அலைப்பை துண்டித்தவள் அவளது அம்மாவின் அறைக்கு சென்றாள். அவரது பீரோவை திறந்து இளம் சிவப்பு நிற காட்டன் புடவை ஒன்றை எடுத்துக் கொண்டவள் குளியலறை நோக்கி சென்றாள். பின் தன் முடிவை மாற்றிக் கொண்டவளாய் அம்மாவின் புடவையை இருந்த இடத்தில் வைத்துவிட்டு தன் பச்சை நிற தாவணியை கட்டிக் கொள்ளவதாய் எடுத்த முடிவுடனும் அந்த உடையுடனும் குளியலறை வந்து தண்ணீர் குழாயை திறந்துவிட்டவளுக்கு அப்பொழுதுதான் நியாபகம் வந்தது இன்று புதன்கிழமை என்று.

‘அய்யய்யோ.. இன்னைக்கு புதனா..? அம்மா எண்ணெய் வச்சிதான் குளிக்கனும்னு சொல்லியிருக்காங்களே..!’ என எண்ணியவள் “அம்மா சாரி.. நான் உனக்காக எண்ணெய் வச்சிக்கிறேன்.. எனக்காக பூ வச்சிக்கிறேன்.. ஆனா கோவிலுக்கு போறதுலாம் என்னால முடியாது கோவிச்சுக்காத..” என்று ஆசுவாசமாய் நினைத்தவள் சமயலறைக்கு வந்து எண்ணெய் பாட்டிலை எடுத்துக் கொண்டு மீண்டும் குழியலறைக்குள்ளேயே சென்றாள்.

பார்ப்பதற்கு டிரெடீஷ்னலாய் இருக்கும் அச்சு, காலையில் சீக்கிரமாக எழுந்துக் கொள்வாள்; சடங்கு சம்பிரதாயம் என வீட்டில் இருந்த படி என்ன செய்ய சொன்னாலும் செய்துவிடுவாள். ஆனால் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் மட்டும் அத்தனை கசப்பு அவளுக்கு.

அவளுக்கு அப்படியே நேர்மாறாக இருப்பவள் அம்மு. பக்தியில் நாட்டம் இல்லாவிட்டாலும் கோவில் போன்ற பண்பாடான இடங்களுக்கு செல்வது அவளுக்கு மிகவும் பிடித்த விஷயம். ஆனால் எங்கு சென்றாலும் இடம், பொருள், ஏவல் பார்க்காமல், தான் ஒரு நவ நாகரீக யுவதி என்பதை அவளது உடையிலும் நடையிலும் தான் காட்டுவாள். சூர்யா பாடலில் வருவது போல அவளுக்கு ஏர்லி மார்னிங் பத்து மணி தான்.

"சகி.. சகி.. எழுந்திரு சகி.. ப்ளீஸ் எழுந்திரு.." என்று அவள் காதில் கேட்டுக்கொண்டிருந்த அந்த அழுகை குரல் கோபம் நிறைந்த குரலாய் மாறுவதை உணர்ந்தபடியே எழுந்தாள் அம்ரிதா.

கண்களை மெல்ல மெல்ல திறந்து உடலின் சோம்பலை முறித்தபடி கூறினாள் “ப்சே.. இன்னைக்கும் அதே கனவா..?” என்று.

கொஞ்சமும் தூக்கம் கலையா முகத்தை தொங்கவிட்டுக் கொண்டு, பாதி கண்களையும் பாதி முதுகு தண்டினையும் குடைசாய்த்துக் கொண்டு மெத்தையில் அமர்ந்திருந்தவளது காதுகளை துளைத்தது அடுத்த அழைப்பு.

“எவ்வளவு நேரமா கத்திக்கிட்டு இருக்க.. சீக்கிரம் எழுந்திரு டி.. மணிய பாரு 10 ஆகுது.. வர வர உனக்கு ஏந்தான் லீவ் விடுறாங்கனு தோனுது..” என்று அடுப்பங்கறையில் இருந்து குரல் கொடுத்துக்கிட்டு இருந்த அம்மாவை சென்றடைந்தாள் அம்மு.

“அம்மா.. காபி கொடும்மா.. தலை ரொம்ப வலிக்குது..” என்றாள்.

“இப்படி 10 மணி வர தூங்கினா தலை வலிக்காம என்ன செய்யும்..? பல்ல தேய்சிட்டு வா முதல்ல..” என்ற அம்மாவை பின்புறத்தில் இருந்து அணைத்துக்கொண்டவள்,

“அம்மா அதே கனவு இன்னைக்கும் வந்தது மா..” என்றாள்.

ஒரு நிமிடம் அமைதிக் கொண்ட அம்மா, “கண்டதையும் உட்கார்ந்து யோசிக்காத.. சீக்கிரம் ரெடி ஆகு, கோவிலுக்கு போய்ட்டு வரலாம்..” என்றார்.

இருவரும் தயாராகி தாங்கள் வழக்கமாக செல்லும் கோவிலுக்கு சென்றனர். சுவாமி தரிசனம் முடிந்தவுடன் அம்மா பிரகாரத்தை சுற்றி வரத்தொடங்கினாள்.

அம்ரிதா வழக்கம்போல் அங்கு விளையாடித் திரியும் குழந்தைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தூரத்தில் கம்பு ஒன்றின் உதவியுடன் நின்றுக்கொண்டிருந்த ஓர் வயதான பாட்டி தன்னையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பதை கண்டாள். சிறிது நேரம் அவளும் அந்த பாட்டியை நோட்டமிட, பாட்டி தன் பார்வையை திருப்புவதாய் இல்லை.

“என்ன டி.. கிளம்பலாமா..” என்று அம்மாவின் குரல்.

“ம்ம்ம்.. போகலாம் மா..” என்று சொல்லி எழுந்து வாசலுக்கு நடந்தாள். செருப்பை காலில் மாட்டுகையில் பளார் என முதுகில் ஓர் அடி. வலி தாங்காமல் ‘ஆஆஆ….’ என கத்திக்கொண்டே அம்மாவை பார்த்து,

“ஏன் மா இப்படி அடிக்கிற.. அதுவும் நடு ரோட்டுல.. நான் என்ன சின்ன குழந்தையா..?” என்றாள்.

“அதையேதான் டி நானும் கேட்குற.. சின்ன புள்ளையா நீ..? ஒரு இடத்துல இருக்க மாட்டியா..? இவ்வளவு வேகமா எழுந்து எங்க ஓடுற..? கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன்.. காது கேட்கலையா..? உன் வேகத்துக்கு என்னால ஓடியாற முடியுமா…??” என்று கோவத்தில் பொறிந்தாள் அம்மா.

“நீதான மா போகலாம்னு சொன்ன.. அதனால தான நான் எழுந்து வந்த ..!?” என்று அம்மாவிடம் சிணுங்கினாள்.

“நான் எப்ப சொன்ன..? சரி வா வீட்டுக்கு போகலாம்..” என அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டை சென்றடைந்தாள் அம்மா.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் தன் கைப்பையை படார் என வீசி எறிந்து கதறத் தொடங்கினாள் அம்ரிதா.

“எனக்கு என்ன மா ஆகுது..? நான் என்ன பாவம் செஞ்சேன்..? தூக்கததுல கூட நிம்மதியில்லாத இப்படி ஒரு வாழ்க்கை எதுக்கு எனக்கு கடவுள் கொடுத்தாரு..?” என்று அவள் ஆர்ப்பாட்டம் செய்ய, எதிர் புறத்தில் மயான அமைதி நிறைந்திருப்பதை உணர்ந்தவள் பேச்சை நிறுத்திவிட்டு அழுது வீங்கிய முகத்தோடு கண்ணீர் வடியும் கண்கள் மாறாமது வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் தென்படவில்லை. பயத்தில் “அம்மா.. அம்மா.. எங்க மா போன..?” என அலறத் தொடங்கினாள்.

வீட்டின் அறைகள் அனைத்திலும் தேடினாள். வீட்டிற்கு வெளியே தேடலாமென ஓடிச்சென்று தலைவாசல் கதவை திறக்க முயற்சித்தாள். திறக்க முடியவில்லை. மறுபக்கம் தாழிடப் பட்டிருப்பதாய் உணர்ந்தவள் கதவை பலமாக தட்டத் தொடங்கினாள்.

திறப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. கதவை தட்டி தட்டி ஓய்ந்தவள், தன் உயிரின் ஈரப்பதம் குறைந்து கதவின் அருகிலேயே அமர்ந்துவிட்டாள். சில நிமிடங்களில் கதவு திறக்கப்பட்டது.

“ஏய்..! ஏன் டி கதவ போட்டு இப்படி ஒடச்ச..? வரேன் வரேன்-னு கத்திக்கிட்டே இருக்கேன்-ல..” என்று கேட்டபடி வெளியில் வந்த அச்சு, தன் தலையை துவட்டிக்கொண்டே அவர்களது அறைக்குச் சென்றாள்.

“என்ன டி இது..? எங்க போய்டு வர இந்த கோலத்துல..? அம்மா எங்க..? வீட்டு கதவ யாரு வெளியில தாழ் போட்டது..?” என்று கேள்விகளை அடுக்கினாள் அம்மு.

அச்சு அதிர்ச்சிக்குள்ளானாள். வேகமாக வந்து வீட்டு வாசலை பார்த்துவிட்டு, “கதவ யாரு டி தாழ் போட்டுருக்கா..? திறந்து தானே இருக்கு..! நீ பாத்ரூம் கதவ தட்டுன தட்டுல எங்கையோ கிளம்பப் போறியோனு அவசர அவசரமா காக்காய் குளியல் போட்டுட்டு வெளியில வந்தேன்.. வந்து பார்த்தா மேடம் ஏற்கனவே குளிச்சி கிளம்பி அலங்காரத்தோட நிக்குறீங்க..!” என்று தன் அதிர்ச்சி கலந்த கவலை உணர்வினை மறைத்து பொய் சிரிப்பின் முகம் காட்டி கேலி செய்தாள்.

இதை கேட்டு குழம்பிப் போன அம்மு குளியலறை கதவையும் வாசல் கதவையும் ஒன்றுக்கு இரண்டு முறை திரும்பி திரும்பி பார்த்து ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டு அழத் தொடங்கினாள்.

சத்தம் கேட்டு ஓடி வந்த அச்சு, “ஏய்.. என்ன டி ஆச்சு..?” என பதற,

“தலை வெடிச்சிரும் போல இருக்கு டி.. அம்மாவை கூப்பிடு பிளீஸ்..” என்று கத்தினாள் அம்மு.

அவள் நிலையை கண்டு நொந்துப்போன அச்சு செய்வதறியாது “என்ன டி கனவு கண்டியா..?” என்று குறுகிய குரலில் கேட்டாள்.

மேலும் மேலும் கேட்கப்படும் கேள்விகள் அம்முவின் தலைக்குள் நூறாயிரம் பூராண்கள் கடிப்பது போன்ற உண்ர்வினை கொடுக்க “அம்மாவை கூப்பிட போறியா இல்லையா..?” என ஆங்காரமாய் கர்ஜித்தாள் அம்மு.

அச்சு, அம்முவை சமாதானப்படுத்த முடியாமல், “பொன்னம்மா.. இங்க கொஞ்சம் வாங்க..” என்றாள் தன் சிரசை மேலே உயர்த்தி.

மொட்டை மாடியில் துணிக் காயப்போட்டுக் கொண்டிருந்த வேலைக்கார பாட்டி பொன் லெட்சுமி வேகமா கீழே இறங்கி வந்தார்.

கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களாக இவர்களது வீட்டில் வேலை செய்கிறார் பொன்னம்மா. நீண்ட காலமாக இவர்களுடனேயே இருப்பதாலோ என்னவோ அறுபது வயதைத் தொட்டிருக்கும் இவர் சுப்பு மாதிரி இல்லை. குழந்தை இல்லா பொன்னம்மாவுக்கு அம்மு மற்றும் அச்சு மீது அதீத பாசம் உண்டு.

தினமும் காலை ஒன்பது மணிக்கு வரும் பொன்னம்மா காலை உணவு தயாரிப்பதில் தொடங்கி இரவு ஏழு மணிக்கு இரவு உணவை தயார் செய்து வைப்பது வரை எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு எட்டு மணிக்குள்ளாக தன் வீட்டிற்கு சென்றுவிடுவார்.

ஒரு வருடத்திற்கு முன் தன் கணவனை இழந்த பிறகு இங்கேயே தங்கிவிடுமாறு கூறிய அம்முவின் பேச்சுக்கு பொன்னம்மாவால் மறுப்புக் கூற முடியவில்லை. வயது முதிர்ந்த காலத்தில் மானம் ரோசம் பார்க்காமல் அன்புக்கும் பாசத்துக்கும் மட்டும் தானே ஏங்கும் இந்த பேதை நெஞ்சம்.

அச்சுவின் அலைப்பு சத்தம் கேட்டு கீழே இறங்கி வந்த பொன்னம்மா “என்ன பாப்பா..?” என்று கேட்க அம்மு -வின் கோபம் உச்சிக்கு ஏறியது.

“நான் சொன்னது புரியுதா புரியலையா….? நான் என்னோட அம்மா-வ கேட்ட.. இந்த வேலைக்கார கிழவிய இல்லை..!” என்று அச்சுவிடம் கத்தினாள் அம்மு.

கோவத்தில் பளார் என அச்சு அடிக்க அங்கேயே மயங்கி விழுந்தாள் அம்மு.

(களவாடுவான்)

*****************************************

விஜயதசமியை முன்னிட்டு இன்று கதையை தொடங்கிவிட்டேன் நட்பூஸ். அடுத்த பதிவு அக்டோபர் 14 அன்று வரும். அன்றில் இருந்து தொடர்ந்து அத்தியாயங்களை பதிவிடுகிறேன். வாரத்தில் 2 நாட்கள் (திங்கள் மற்றும் வியாழன்) யூடி வரும் பா.
என்றும் அன்புடன்
உங்கள் ஆனந்த லெட்சுமி
❤️
 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 2
“அய்யோ.. என்ன பாப்பா இப்படி பண்ணிட்டீங்க..?” என்று பதட்டத்துடன் கூறிய பொன்னம்மா, அம்முவை தண்ணீர் தெளித்து எழுப்ப ஓடினார்.
“வேணாம் பொன்னம்மா.. அவ கொஞ்ச நேரம் இப்படியே இருக்கட்டும்.. அவளாவே எழுந்துப்பா.. எழுந்ததும் சகஜமாகிடுவா.. நான் இப்ப அம்மு விஷயமாதான் வெளியில போறேன்.. நீங்க அவள பார்த்துக்கோங்க.. அவ எழுந்ததும் எதையும் காட்டிக்க வேண்டாம்.. முக்கியமா அவ வெளியில எங்கேயும் போகாம பார்த்துக்கோங்க.. நான் முடிஞ்சவர சீக்கிரமா வந்துடுறேன்..” என்றாள் அச்சு.
“சின்ன பாப்பாவுக்கு என்ன மா ஆச்சு..? இப்ப எல்லாம் ஏன் இப்படி இருக்காங்க..?” என்று அழுகுரலில் கேட்டாள் பொன்னாம்மா.
“தெரியல பொன்னம்மா.. ஆனா சீக்கிரம் சரிப்பண்ணணும்.. நான் போய்ட்டு வர்றேன்..” என்று கிளம்பியவள் இறந்து போன தங்கள் தாயின் படத்தின் முன் நின்று தன் கண்களை மூடிக்கொண்டு
“நீதான் மா எனக்கு துணையா இருக்கனும்..!” என்று பிரார்த்தனை செய்தாள்.
ஆஷ்ரிதா – அம்ரிதா இரட்டை சகோதரிகளின் அம்மா உயிரோடு இல்லை. அப்பா உயிரோடு இருக்கிறாரா இல்லையா என தெரியவில்லை. அம்முவுக்கும் அச்சுவிற்கு எட்டு வயது இருக்கும் பொழுது தன் குடும்பத்தை விட்டுவிட்டு வேறு குடும்பம் உருவாக்கிக் கொண்ட விஸ்வனாதனை விவாகரத்து செய்துவிட்ட யசோதா தன் திறமையாலும் செல்வாக்காலும் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் நன்றாகவே வளர்த்து வந்தாள்.
சிறு வயதிலேயே அப்பா செய்த இப்படியொரு அருவருக்கத்தக்க காரியம் ஆண் என்றாலே அனலை மூட்டுவதாய் ஆயிற்று இரட்டை சகோதரிகளுக்கு. பெண்கள் கூட்டணியாய், செல்வத்திற்கும் சந்தோஷத்திற்கும் குறைவில்லாது வாழ்ந்தார்கள் யசோதாவும் இரட்டை தேவதைகளும். சிறுமிகளின் பத்தாம் வயதில் ஏர்காட்டில் ஒரு எஸ்டேட் வாங்கினாள் யசோதா.
அதனை பார்வையிட சென்றுவிட்டு வீடு திரும்பும் பொழுது இரவின் இருள் கண்மணிகளை குருடாக்கிட, காரின் ஹெட் லைட்டை ஒளிறவிட்டபடி வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தாள் யசோதா.
திடீரென வண்டி நிலைப்பாடற்று அங்குமிங்குமாய் வளைந்து திரிந்து சென்றதில், பின் இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த அம்முவும் அச்சுவும் எழுந்துக் கொண்டனர். அச்சு பயத்தில் கத்தி கூப்பாடு போட, அம்மு அவளை தன்னோடு அனைத்துக் கொண்டு சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள்.
சிறு வயதில் இருந்தே அம்மு அச்சுவை விட தைரியசாலியாக இருந்தாள். எதிலும் தீர்க்கமாக முடிவெடுக்கும் திறம் கொண்டவள். உள்ளதை உள்ளதென பட்டென உடைக்கும் ஸ்ட்ரெயிட் ஃபார்வேடு கேரக்டர். ஆனால் என்ன அதிர்ஷ்டமோ தெரியவில்லை, தான் எவ்வளவு முயன்றும் அச்சு -வால் அவ்வாறு இருக்க முடிந்ததில்லை.
சில வினாடிகளில் கார் நின்றதும், அழுதுக்கொண்டே காரை விட்டு வேகமாக கீழே இறங்கிய ஓடிய அச்சுவை பார்த்து அடக்க முடியாத சிரிப்புடன் தானும் கீழே இறங்கினாள் அம்மு.
இரட்டை சகோதரிகள் உருவத்தில் ஒன்று பட்டவர்கள்; செயல்களிலும் ஒன்று பட்டார்கள் – காரை விட்டு கீழே இறங்கியது.
இரட்டை சகோதரிகள் உடலால் வேறுபட்டவர்கள்; உணர்வாலும் வேறுபட்டார்கள் – ஒருத்தி அழுதாள், மற்றொருத்தி சிரித்தாள்.
இவற்றை எல்லாம் காரின் உள்ளே ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த யசோதா சிலாகித்துக் கொண்டிருந்த தருணம் காரின் விளக்குகள் மொத்தமும் அணைந்துப் போக, கருமை இருளில் சிக்கிய அந்த கார் நின்றுக் கொண்டிருந்தது என்னவோ ரயில்வே தண்டவாளம்.
கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக அந்த கார் ரயிலால் அடித்து வீசப்பட்டதில் உடல் சிதறி அங்கேயே உயிரிழந்து விட்டாள் யசோதா.
அழுகையின் காரணமாக கண்களை மூடியிருந்த அச்சு நடந்த அந்த கொடூரத்தை தன் கண்களால் பார்க்கவில்லை. ஆனால் சிரித்துக் கொண்டு நின்றிருந்த அம்முவின் விழிகள் உள்வாங்கிய அந்த காட்சி அவளது மூளையை சீண்டிப் பார்த்துவிட்டது.
அதீத சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தார் ஓடி வந்து ஆகவேண்டிய காரியங்களை செய்து இன்றோடு பன்னிரெண்டு வருடங்கள் ஆகிறது. அன்று முதல் இன்றுவரை அவர்களுடன் இருப்பது அம்மா சேர்த்துவைத்த சொத்து செல்வங்களும் பொன்னம்மாவும் தான்.
விபத்து நடந்து இரண்டு வருடங்களுக்கு யாரிடமும் பேசாமல், உணர்வுகள் எதையும் வெளிக்காட்டாமல் சிலையென வாழ்ந்து வந்த அம்மு, மருத்துவ உதவியால் கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள்.
இருவரும் தங்கள் பருவ வயதை எய்தி கன்னிகளானது அவர்களது பதினாறாம் வயதில். அதன் பிறகு ஒரு வருடமே சகஜமாய் இருந்த அம்முவின் நடவடிக்கைகள் மாறுபடத் தொடங்கின.
தன் அம்மாவின் சாவை நேருக்கு நேராக பார்த்த அதிர்ச்சியும், சிகிச்சையின் காரணமாக எடுத்துக் கொண்ட மருந்துகளின் வீரியமும், பருவ வயதில் ஏற்பட்டுள்ள ஹார்மோன் மாற்றங்களும் அம்முவின் உடலில் பல்வேறு வேதிவினைகளைத் தூண்டி, தேவையற்ற கனவுகளையும் வெவ்வேறான நினைவலைகளையும் தந்து துடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
இதில் கொடுமையிலும் கொடுமையான விஷயம் என்னவென்றால், வேற்று சிந்தனையில் சிதறும் பொழுது கத்தி கதறி துடிதுடிக்கும் அம்மு, தன் நிகழ்காலத்தின் நினைவுகளுக்கு திரும்பிய பின்னர் தான் செய்த எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் அறியாதவளாய், நடந்தவை எதுவும் நியாபகத்தில் இல்லாதவளாய் இருப்பாள். இந்த விபரீத நிலையில் இருந்து அவளை வெளிக் கொண்டுவந்து முற்றிலுமாய் குணப்படுத்தப் போராடிக் கொண்டிருக்கிறாள் அச்சு.
அம்மாவின் போட்டோ முன் நின்று தன் வேண்டுதலை கூறிவிட்டு அவரது ஆசியை பெற்றுக்கொண்ட அச்சு, தன் வைலட் நிற ஸ்கூட்டி பெப்பை எடுத்துக்கொண்டு டாக்டர் பிரபாகரன் க்ளீனிக்குக்கு விரைந்தாள்.
சென்னையின் போக்குவரத்து நெரிசலை பற்றி சொல்லியா தெரியவேண்டும். தன் வீட்டில் இருந்து கிளம்பிய அச்சு, அவள் வீட்டு தெருவின் குண்டும் குழியுமான சாலையில் நான்கு கிலோமீட்டர் தூரத்தை கூட மின்னல் வேகத்தில் தாண்டி வந்து விட்டாள். ஆனால் சம தளம் கொண்ட அந்த ஹய்வே தார் ரோட்டில் தன் வாகனத்தின் இரண்டு டயர்களையும் ஒரு முறை சுழற்றுவதற்கே ஒன்றரை மணி நேரம் காக்க வேண்டி இருந்தது.
தீயாய் சுட்டெரிக்கும் சூரியன் அவள் தேகத்தில் கனலை அள்ளித் தெளிக்க, அதில் அவளது பச்சை தாவணியில் இருந்து எட்டிப் பார்த்து மின்னிக்கொண்டிருந்த தங்க நிற இடுப்பை இமையாது வெகுண்டு நோக்கிக் கொண்டிருந்தது ஒரு ஹெல்மட் அணிந்த முகத்தின் கண்கள்.
சூரிய கனலை பொருத்துக் கொண்ட அவளால் அந்த கூரிய பார்வை கொடுத்த தழலை ஏற்க முடியவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு தன் ஒற்றை புருவத்தை தூக்கி அவனை பார்த்து முறைத்த அம்மு, தன் பார்வையை தனது கால்களுக்கு திருப்பி செருப்பை வெறித்தவள் மீண்டும் அவன் முகம் கிழியுமாறு அவனை நோக்கி முறைத்தாள்.
‘செருப்பு பிஞ்சிடும்’ என அவள் எச்சரிப்பதை அவளது பார்வையின் மூலம் அறிந்தவன் அப்பொழுதுதான் சுதாரித்தான்; தான் அவளை விழுங்கும் அளவு வாய்பிளந்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை. சற்றே அசடு வலிய சிக்னல் விளக்கின் மீது தன் பார்வையை திருப்பினான் அவன்.
இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே நிற்பது என்ற எரிச்சலோடு தன் கை கடிகாரத்தை பார்த்தாள் அம்மு. பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
“சுத்தம்.. இங்கேயே பத்து ஆக போகுதா..? அவரு என்ன நினைப்பாரு இப்படி லேட்டா போனா..? ப்சே..” என்ற அவளது புலம்பல் சத்தம் ஆண்டவனுக்கு கேட்டதோ இல்லையோ, அங்கே விமான வேகத்தில் இடைவிடாது எட்டு கார்கள் பறந்து சென்ற வேகம் அனைவரது காதுகளிலும் கேட்டது. அந்த சத்தம் ஓய்ந்த பிறகே பச்சை விளக்கு எறிந்தது.
பெட்டியை திறந்து பறக்கவிடப்பட்ட பட்டாம்பூச்சிகள் போல அனைத்து வாகனங்களும் சிறிதும் தாமதமின்றி தங்கள் இலக்குகளை நோக்கி பறக்கத் தொடங்கின. எண்ணி பன்னிரெண்டாம் நிமிஷத்தில் க்ளீனிக்கை அடைந்திருந்தாள் அச்சு. உள்ளே வந்தவள் பார்க்கிங் ஏரியாவில் தன் வாகனத்தை நிறுத்தச் சென்றாள்.
அங்கே அவள் அருகே ஓடி வந்த ஒரு குட்டி பெண் “அக்கா இந்தாங்க..” என ஒற்றை சிவப்பு ரோஜாவை நீட்டினாள். முகத்தில் புன்முறுவலோடு அதை வாங்கிக் கொண்ட அச்சு
“யார் குட்டிமா கொடுத்தாங்க..?” என்றாள்.
“அதோ.. அந்த தூணுக்கு பின்னாடி இருக்குற அண்ணா..” என திசையை காட்டினாள் அந்த குட்டி பெண். குட்டி குழந்தை அண்ணா என்று சொல்லியதால் அந்த குட்டியை விட ஒன்று இரண்டு வயது மூத்திருப்பான் அந்த அண்ணா என்ற கற்பனையுடன் தன் ஸ்கூட்டியில் அமர்ந்திருந்த வண்ணம் அதனை உருட்டிக் கொண்டே அங்கும் இங்கும் ஆடியபடி தூணுக்கு அருகில் வந்து சிரித்த முகத்தோடு “யாரு ஒழிஞ்சிட்டு இருக்கீங்க..!” என்று மழலையாய் பேசி எட்டிப் பார்த்தாள் அச்சு.
சிக்னலில் பார்த்தவனுக்கு ஒத்த அதே உடற்கட்டும் அவன் அணிந்திருந்த அதே வெள்ளை நிற ஷர்ட்டும் போட்ட ஆடவன் ஒருவன் நின்றுக் கொண்டிருந்தான். அவனை கண்டவுடன் அவளது முகமோ, தன் உடம்பின் ஒட்டு மொத்த இரத்த ஓட்டத்தையும் மொத்தமாக முகம் நோக்கி பாய செய்தது போல அத்தனை சிகப்பைக் கக்கிக்கொண்டிருந்தது.
அவளது வெளிர் மேனி கோவத்தின் சிகப்பை இன்னும் அதிகரித்தே காட்ட, ‘சிக்னல் –ல இடுப்ப பார்த்ததோடு மட்டும் இல்லாம ஃபாலோ பண்ணிக்கிட்டு வந்து பூ வேற கொடுக்கிறியா..?’ என்று எண்ணியவள் வாய் திறப்பதற்குள்,
“ஹலோ டு யூ ஹவ் எனி சென்ஸ்..? இவ்வளவு லேட்டாவா வருவ..?” என்று கத்தத் தொடங்கினான் அவன். தனக்கு முன்னதாக கத்திய அவனது குரல் ஒலித்த வாசகத்தின் தெளிந்த அழுத்தத்தில் ஒரு வினாடி அடங்கியிருந்தாள் அச்சு. பின் தன்னை தானே சமாதானப் படுத்திக் கொண்டவள்
“ஹலோ மிஸ்டர்.. யாரு நீ..? என்னமோ உன் பொண்டாட்டி கிட்ட கத்துற மாதிரி உரிமையா கத்துற..? என்ன கேட்ட..? எவ்வளவு லேட்டா வர்றேன்னா..? ஆமா.. நாம தினம் தினம் இங்க டைம்-க்கு மீட் பண்ணுறோம்-ல..?” என்ன நினைச்சிக்கிட்டு இருக்க மனசுல..? சிக்னல்-ல நின்னது நீதான..? பின்னாடியே வந்து பூ வேற கொடுக்குறியா..?” என்று அவனை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்தாள்.
அவன் தனது கர்ஜனை முகத்தை மாற்றிக் கொள்ளாமல் அவள் எடுத்து வைத்திருந்த இரண்டு அடியை சமன் செய்து இருவருக்கும் இடையேயான தூரத்தை பூஜியமாக்கினான். அவனது அந்த ஆஜானுபாகுவான உடல் வாகைக் கண்டு பயத்தில் கை கால்கள் நடுக்கமெடுக்க கண்கள் படபடத்தவாறு அவனை பார்த்துக்கொண்டிருந்தாள் அச்சு.
“ஷட் யுவர் மவுத் அண்ட் கம் வித் மீ..” என்று அவள் விழிகளை நோக்கி கத்தியை விட கூர்மையாய் கூறியவன் வேகமாக நடந்து க்ளீனிக்கின் உள்ளே சென்றுவிட்டான்.
தான் நின்றுக் கொண்டிருந்த இடத்தில் சற்றும் அசையாது சிலையென நின்றிருந்த அச்சு இதுவரை என்ன நடந்தது என்று அசைப்போட்டுக் கொண்டிருந்தாள். ‘யாரு இவன்..? அவனா பூ கொடுத்தான்.. அவனா கத்தினான்.. இப்ப என் கூட வா-னு சொல்லிக்கிட்டு போய்க்கிட்டே இருக்கான்.. ஒரு வேளை லூசா இருப்பானோ..” என்று எண்ணிக் கொண்டிருந்தவளது தொடையை தட்டி கூப்பிட்டால் அந்த குட்டி பாப்பா.
அவள் அளவிற்கு மண்டியிட்டு அமர்ந்த அச்சு “என்ன குட்டிமா..?” என்றாள்.
“அந்த அண்ணா எனக்கு பூ கொடுத்ததுக்கு நீங்க எதுக்கு திட்டுனீங்க..?” என்று கேட்டது அந்த குட்டி தேவதை.
“என்ன.. உனக்கு கொடுத்தானா..?” என்று தன் செயலை எண்ணி தன்னையே நொந்துக் கொண்ட அச்சு,
“அத எதுக்கு டா நீ என் கிட்ட கொடுத்த..?” என்று கேட்ட அச்சுவின் கன்னத்தில் தன் பிஞ்சு இதழை பதித்துவிட்டு ஓடிவிட்டாள் அந்த குட்டி. குழந்தையின் ஸ்பரிச முத்தம் ஒரு பக்கம் புத்துயிர் கொடுக்க
“இறைவா.. காலைலயே என்ன ஏன் இப்படி படுத்துற..? கோவிலுக்கு வர மாட்டேன்னு சொன்னதுக்கா..?” என்று அந்த வெள்ளை சட்டைக்காரனை நினைத்து வருந்திக்கொண்டாள்.
அடுத்த கணம் “சரி நாம வந்த வேலையை பார்ப்போம்..” என ரிசப்ஷனில் அனுமதி வாங்கிக் கொண்டு டாக்டர் பிரபாகரன் அறைக்கு சென்றாள்.
“எக்ஸ்க்யூஸ் மீ சார்..” – தாமத்ததின் தயக்கத்தோடு அச்சுவின் குரல்.
“எஸ்.. கம் இன்..” – வந்துட்டியா.. வா.. வா.. என்ற தோரணையில் டாக்டர் பிரபாகரன்.
“சாரி சார்.. வரும்போது டிராஃபிக்..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க, அந்த அறையில் செதுக்கப்பட்டிருந்த அலமாரி ஒன்றில் இருந்து ஒரு கோப்பை எடுத்துக் கொண்டவனாய் டாக்டர் பிரபாகரன் எதிரே வந்து அமர்ந்தான் அந்த ஆடம்பர உடற்கட்டுக்கு சொந்தமானவன்.
அச்சுவின் வாய் பிரபாகரனிடம் பேசிக் கொண்டிருக்க, அவள் கண்கள் ஆடம்பரக்காரனை குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அவள் மனமோ ‘இவன் எதுக்கு என் விசிட்டிங் டைம்-ல இங்க வந்து உட்கார்ந்திருக்கான்..?’ என எண்ணிக் கொண்டிருந்தது.
“சாரி சார்.. வரும்போது டிராஃபிக்.. அதான் இவ்வளவு டிலே ஆகிடுச்சு..” – ஒரு வழியாக சொல்லி முடித்துவிட்டாள் அச்சு.
“ம்ம்ம்.. டோண்ட் ரிபீட் இட் அகைன்.. டேக் யுவர் சீட்..” என்றார் டாக்டர் பிரபாகரன்.
“தேன்க் யூ சார்..” என்றவள் முதலில் அவனுக்கு அருகில் இருக்கும் சீட்டில் அமர யோசித்தாள். பிறகு,‘இது எனக்கான விசிட்டிங் டைம்.. ஓசியில வந்து உட்கார்ந்திருக்குற நீயே கெத்தா இருந்தா நான் அதவிட கெத்தா இருப்பேன் டா..’ என்று எண்ணிக் கொண்டு இருக்கை முழுதும் நிறைந்தவாறு நிமிர்ந்து அமர்ந்துக் கொண்டாள்.
“சார்.. நாம தனியா டிஸ்கஸ் பண்ணனும்னு சொன்னீங்க.. பட்..” – என்ன தனியா வர சொல்லிட்டு நீங்க யாரையோ எதுக்கு கூப்பிட்டு வச்சிருக்கீங்க..? என்ற பாணியில் கேட்டாள் அச்சு.
ஒரு வேளை நான் லேட்டா வந்ததால என் டைம் முடிஞ்சிருச்சோ..?இப்ப இந்த ஆடம்பர அராத்தோட டைம்-ஆ..? என்ற குழப்பமும் அவள் மண்டையில் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது.
“ஆமா அஷ்ரிதா.. மீட் மிஸ்டர் அனேகன்.. அமெரிக்க மனோ தத்துவ கவுன்சில்-ல நம்பர் வன் அவார்டு வாங்கினவர். நம்ம சென்னை தான்.. இவருதான் உங்க கேஸ் டீல் பண்ண போறாரு..” என்றார் டாக்டர் பிரபாகரன்.
“ஓ.. இதுக்கு தான் என் கூட வா –னு சொல்லிட்டு போனியா டா..? பாவி பயலே.. முழுசா சொல்லிட்டு போயிருக்கலாம்-ல.. கிராதகா..” என மனதினுள் எண்ணியவள் டாக்டர் பிரபாகரனிடம் “ஓ.. ஓகே சார்.. தேங்க் யூ..” என்றாள்.
“ம்ம்ம்.. உங்க சிஸ்டர் பத்தின ஃபுல் டீடெயில்ஸ் நான் அவருக்கு கொடுத்துட்டேன்.. உங்க நம்பர் அவர்கிட்ட இருக்கு.. அவருடைய கார்டு வாங்கிக்கோங்க.. இனி தினசரி நீங்க என்ன செய்யனும்-னு டாக்டர் அனேகன் உங்களுக்கு சொல்லுவாரு.. வீக்லீ ஒன்ஸ் நான் கேஸ் ஃபைல் பார்த்துக்குறேன்.. எனக்கு பேஷண்ட் வெயிட் பண்ணுறாங்க.. ஹீ வில் கேரி யூ..” என்ற டாக்டர் பிரபாகரன் அங்கிருந்து கிளம்பினார்.
(களவாடுவான்)
என்றும் அன்புடன்
உங்கள் ஆனந்த லெட்சுமி
 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு - 3
‘அய்யய்யோ.. அம்மாவுக்கு தெரிஞ்சவருனு தானே இவர தேடி வந்தோம்.. இவரு என்னனா வேற யாருக்கிட்டயோ.. வேற யாரா இருந்தா கூட பரவாயில்லை.. இந்த ஆடம்பர ஆசாமிகிட்ட மாட்டி விட்டுட்டு போய்டாரே..’ என தனக்குள் தயங்கிக் கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.
அந்த நேரத்திற்குள் கையில் வைத்திருந்த கோப்பினை முழுவதுமாக படித்து முடித்துவிட்ட அனேகன் ஆஷ்ரிதாவை நோக்கி, “லுக் மிஸ். ஆஷ்ரிதா.. எனக்கு பண்ட்சுவாலிட்டி ரொம்ப முக்கியம்.. உங்களுக்காக என் நேரத்தை என்னால வேஸ்ட் பண்ண முடியாது.. சோ இனி எப்போ மீட் பண்ணுறதா இருந்தாலும் இத நியாபகம் வச்சிக்கோங்க..” என்றான் ஆடம்பர அனேகன்.
“சரிங்க சார்.. என் தங்கச்சி-ய குணப்படுத்திடலாம்-ல..?” – அவ்வளவு நேரம் வளர்த்த வம்பை மறந்து தங்கையின் மேல் அவளுக்கிருந்த பாசம் முன் நின்று கேட்டது.
“ஐ அம் ஹியர் ஃபார் ஹெர்..” என்றான் மிகவும் தீர்க்கமாக.
“தேங்க் யூ சார்.. அவள நீங்க சரி பண்ணீட்டீங்கனா நீங்க என்ன கேட்டாலும் நான் செய்யுறேன்..” என்றவளை காட்டமான ஒரு பார்வை பார்த்தவன் “இட்ஸ் மை டியூடி.. தட்ஸ் ஆல்.. அளவுக்கு அதிகமா பேச வேணாம்..” என்று கூறியவனின் வார்த்தைகளின் வேகம் அவளை அடுத்து பேச வைக்கவில்லை.
‘இப்ப நான் என்ன சொன்னேன் –னு இப்படி பச்ச மிளகாவ தின்ன மாதிரி பேசிக்கிட்டு இருக்கான்..?’ என்று நினைக்க மட்டுமே வைத்தது.
எழுந்து தனது முழு உயரத்திற்கும் நின்றவன், அவனது கூலிங் கிளாலை எடுத்து சட்டையில் மாட்டிக் கொண்டு, பேண்ட் பாக்கெட்டினில் இருந்த கார் சாவியை கையில் எடுத்தவாறு வாசலை நோக்கி கம்பீரமாய் நடந்தான். அந்த வாசல் கதவை அனேகன் அடைவதற்கும் க்ளீனிக்கின் கம்பவுண்டர் அந்த கதவை திறப்பதற்கும் சரியாக இருந்தது.
“சார்.. டாக்டர் பிரபாகரன் அனுப்பிச்சாங்க..” என்ற அந்த கம்பவுண்டரிடம் கார் சாவியை பொருத்தியிருந்த தனது வலது கையின் ஆள்காட்டி விரலால் பின்னால் இருந்த மேஜையை திரும்பாமலேயே சுட்டிக்காட்டி விட்டு வெளியேறினான் அனேகன்.
அந்த கம்பவுண்டர் மேஜை மேல் அடுக்கப்பட்டிருந்த அனைத்து கோப்புகளையும் எடுத்துக் கொண்டு அவன் பின்னே ஓடிச் சென்றான்.
இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆஷ்ரிதா “இவனுக்கும் நமக்கும் செட் ஆகுமா..? நார்மலாவே இல்லையே இவன்.. இவன் எப்படி அப்னார்மல் பேஷண்ட் எல்லாம் பார்ப்பான்.. ?” என யோசித்தவள் ‘சரி வீட்டுக்கு கிளம்புவோம் முதல்ல..’ என க்ளீனிக்கை விட்டு வெளியேறி வீட்டை வந்தடைந்தாள்.
வீட்டில் மயக்கத்தில் இருந்த அம்மு எழுந்து “பொன்னம்மா….” என்றாள்.
அம்ரிதா தற்பொழுது என்ன நிலையில் இருக்கிறாள் என்பது அறியாது சிறிது பதட்டத்துடன் அந்த அறைக்கு சென்றார் பொன்னம்மா.
“என்ன பொன்னம்மா.. இவ்வளவு நேரமாச்சு.. என்ன எழுப்பியிருக்கலாம்ல.. இப்படி என்ன தூங்க விட்டுட்டியே..” என்றாள்.
“இல்லமா.. நேத்து உங்களுக்கு ஆபீஸ் வேலை அதிகமா இருந்துதுல.. இன்னைக்கு அசந்து தூங்கிட்டு இருந்தீங்க.. அதான் எழுப்ப வேணாமேனு விட்டுட்டேன்..” என்றாள் பொன்னம்மா.
“இப்ப எல்லாம் எப்ப பார்த்தாலும் தூங்கிக்கிட்டே இருக்கேன் பொன்னம்மா.. என் நேரம் எல்லாம் தூக்கத்துல தான் போகுது.. ஒரு நாள் முழுக்க என்ன செஞ்சனு யோசிச்சா ஒன்னும் இல்லை.. தூங்கினது மட்டும் தான் நியாபகத்துல இருக்கு..” என்று பாவமாய் கூறிய அம்முவிடம் என்ன கூறுவதென்று தெரியாமல் நின்றுக்கொண்டிருந்தாள் பொன்னம்மா.
அந்த சமயம் உள்ளே நுழைந்த அச்சு, “என்ன டி மகாராணி.. எழுந்தாச்சா..” என்றபடி கையில் இருந்த பைகளை டயனிங் டேபிள் மேல் வைத்துவிட்டு அமர்ந்தாள்.
“மேடம் எங்க போய்ட்டு வர்றீங்க என்ன விட்டுட்டு..?” என்று கேட்டபடி அச்சுவின் அருகில் வந்தாள் அம்மு.
“அம்மாவோட போட்டோ பழசாகிடுச்சுனு புது போட்டோக்கு ஆர்டர் கொடுத்திருந்தோம்-ல.. அத போய் வாங்கிட்டு வந்தேன்.. பாரு நல்லா இருக்கானு..” என அம்முவிடம் கொடுத்தாள் அச்சு.
“ரொம்ப அழகா இருக்கு அச்சு.. அம்மா முகத்துல இருக்குற சிரிப்ப பாரேன்.. நான் கடைசியா அம்மா முகத்தை இந்த சிரிப்புல தான் பார்த்தேன்.. இந்த சிரிப்ப நான் பார்த்துட்டு இருக்கும்போதே கார் லைட் எல்லாம் ஆஃப் ஆகிடுச்சு.. கூடவே அம்மாவும்….” என்றவள் அதற்கு மேல் பேச முடியாள் அழுகையை தொண்டைக்குள் அடக்கினாள். கண்களில் வடிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு வலிகள் சுமந்த சிரிப்பு ஒன்றை தன் முகத்தில் அப்பியவள்
“ஆனா அம்மா கிரேட்ல அச்சு மா.. அந்த விஷ்வனாதன் ஏமாத்திட்டான்னு தெரிஞ்ச அப்புறமா உடைஞ்சு ஒரு மூலையில முடங்கிடாம, அவன நம்ம வாழ்க்கையில இருந்து அடிச்சு தொரத்திட்டு தைரியமா இந்த உலகத்தை ஃபேஸ் பண்ணாங்க.. யசோதாவோட இரத்தம் நம்ம உடம்புல ஓடுது.. அவ வருத்தப்படுற மாதிரி நாம என்னைக்கும் நடந்துக்கக் கூடாது டா அச்சு..” என்றாள் வீர மங்கை யசோதாவின் விராங்கனை மகளான அம்ரிதா.
அம்ரிதா பேசிக்கொண்டிருப்பதை அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த ஆஷ்ரிதா மற்றும் பொன்னம்மா கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் கொட்டிக்கொண்டிருந்தது. அதற்கு காரணம் யசோதாவின் முந்தைய நினைவுகளா இல்லை அம்ரிதாவின் தற்போதைய நிலையா என அவர்களாலேயே கண்டுக்கொள்ள இயலவில்லை. ஆனால் ஏதோ ஒருவித கனம் அவ்விருவர் மனதையும் பிசைந்தெடுக்க, டையனிங் டேபிள் மேல் இருந்த அம்ரிதாவின் கைப்பேசி அலறியது. அதனை எடுத்த அம்ரிதா திரையில் வரும் ‘காண்டாமிருகம் காலிங்’ எனும் வாசகத்தை பார்த்ததும் “மூக்கு வேர்த்துடுச்சா இவனுக்கு” என கூறிவிட்டு கைபேசியில் பேசத் தொடங்கினாள்.
“குட் மார்னிங் சார்..” (மைண்டு வாய்ஸ்: சொல்லி தொல டா)
“இட்ஸ் குட் ஆஃப்டர்னூன் ஆம்ரிதா” – குரலில் காரம் கொஞ்சம் தூக்கலாகத்தான் இருந்தது.
“ஓ.. சாரி சார்..” (மைண்டு வாய்ஸ்: இத சொல்லவாடா கால் பண்ண..)
“வாட் சாரி..? நான் கேட்ட டீடெயில்ஸ் என்ன ஆச்சு..? இன்னைக்கு கண்டிப்பா சப்மிட் பண்ணிடுவேன்னு சொல்லி நேத்து லீவ் எல்லாம் எடுத்துக்கிட்டு போன..? வீட்டுல உட்கார்ந்து வேலை செய்யாம ஊரு சுத்த போயிட்டியா என்ன..?”
கடுப்பில் தன் பற்களைக் கடித்துக் கொண்ட அம்ரிதா “கம்மிங் சார்.. இன்னும் ஹாஃப் அன் அவர்ல உங்க முன்னாடி ஃபைல் இருக்கும்..” என்று அழுத்தம் திருத்தமாக கூறினாள்.
“இட்ஸ் குட் ஃபார் யூ..” என்றவன் அழைப்பை துண்டித்தான்.
“ஏன் டி.. இப்படி ஒரு வேலை வேணுமா உனக்கு..? நம்ம எஸ்டேட்ல எத்தனையோ ஆட்களுக்கு நாம வேலை கொடுத்துக்கிட்டு இருக்கோம்.. அம்மா பேருல ஆரம்பிச்சிருக்கற ஸ்கூல் இருக்கு.. இங்க வந்து ராணி மாதிரி உட்காராம எவன்கிட்டயோ போய் இப்படி கைக்கட்டி அடிபட்டு ஒரு வேலை பார்க்கனுமா அம்மு..?” – தங்கை படும் கஷ்டம் காண முடியாமல் ஆதங்கத்தில் கூச்சலிட்டாள் ஆஷ்ரிதா.
“அச்சு.. நான் ஏன் இந்த வேலை-ல ஜாயிண்ட் செஞ்சேன்னு உனக்கு தெரியாதா..?” என்ற அம்ரிதாவின் ஒற்றை கேள்வி அச்சுவை வாயடைக்க வைத்தது.
“எப்பவும் இதையே சொல்லு.. என் பேச்சை எங்க கேட்கப்போற..” என்றவள் தங்கள் அறைக்குள் தஞ்சமானாள்.
“பொன்னம்மா.. எனக்கு சாப்பாட மட்டும் கட்டி வை.. நான் போயிட்டு வந்திடுறேன்..” என்றவள் தான் சொன்னபடியே அரைமணி நேரத்தில் ஆஃபீஸை அடைந்தாள். மேனேஜர் சொன்ன ஃபைலுடன் அவரது அறையை அடைந்தவள் கதவினை காற்று செல்லும் அளவு திறந்துக்கொண்டு
“எக்ஸ்க்யூஸ் மீ சார்” என்றாள்.
“கம் இன்..” என்றார் மேனேஜர் மோகன்.
“ஹீயர் இஸ் யுவர் ஃபைல் சார்..” என கோப்பினை அவனது மேஜையில் வைத்தாள் அம்ரிதா.
மோகன் தனது கைக்கடிகாரத்தையும் அவளையும் ஒருமுறை பார்த்துவிட்டு “குட்” என்றான். “அதை நீயே வச்சிக்கோ..” என்று தன் மனதினுள் எண்ணியவள் “அடுத்த ஸ்டெப் என்ன சார்..?” என கேட்டாள்.
“லெக்சர்..” என்றான் கேலி புன்னகையுடன்.
“வாட் சார்..?” என்றாள் அம்ரிதா.
“டியூட்டிக்கு ஒழுங்கா எப்படி வரனும், வேலை எப்படி ஒழுங்கா செய்யனும், லீவ் போடாம எப்படி இருக்கனும்.. இதை எல்லாம் உனக்கு லெக்சர் கொடுக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன்..” – மீண்டும் ஒரு நக்கல் சிரிப்புடன் கூறினான் மோகன்.
‘இவன் மூஞ்ச நார்மலாவே பார்க்க்க முடியாது..இதுல இந்த சிரிப்பு… யப்பாஆஆஆ… சகிக்கல இறைவா..’ என்று மனதினுள் எண்ணியவள் அவனை ஒருவித அங்கலாய்ப்புடன் பார்த்தாள்.
“என்ன முழிக்கற..? அதுக்கு தான் எனக்கு நேரம்னு நினைச்சியா..? உன்ன தூக்கிட்டு வேற ஆள போட எனக்கு ரொம்ப நேரம் ஆகாது.. மைண்ட் இட்.. இதோ இதுதான் அடுத்த ப்ளான்..” என்றவன் வேறொரு கோப்பினை எடுத்து மேஜையில் வைத்தான். அதன் நீல நிற அட்டையை பார்த்தவளுக்கு சிந்தையில் என்ன தோன்றியதோ தெரியவில்லை அவ்வளவு நேரம் இருந்த அங்கலாய்ப்பான முக பாவணை மாறி புதியதோர் முகவரிக்கண்டது.
“ஹலோ.. என்ன இளிச்சிக்கிட்டு நிக்குற..? ஒரு வேலையை செய்து முடிக்க எக்ஸ்ட்ரா லீவ் வேற கேக்குது..கெட் அவுட் நான்சென்ஸ்..” என்ற மோகனின் அதிரும் பேச்சில் எரிச்சல் மூண்டவள் விரைந்து தனது கேபினுக்குள் நுழைந்தாள்.
“அய்யோ கடவுளே.. ஏன் தான் நேத்து லீவ் போட்டேனோ.. இந்த மேனேஜர் தொல்லை தாங்க முடியலை..” என்று முணுங்கியபடி தனது இருக்கையில் வந்து அமர்ந்தாள் அம்ரிதா.
அமர்ந்த இரண்டாம் நிமிடம் அத்தனை புத்துணர்வான வாசம் அவள் மனதினை தொட்டது. அவளுக்கு நிச்சயமாக தெரியும் அந்த வாசம் அவளது நாசியின் வழியே உணரப்படவில்லை. ஆனால் மூச்சுக்குழலெங்கும் பரவி தன்னை மூர்ச்சையாக்கும் அந்த புதுவித புத்துணர்வை அவள் ரசித்த வண்ணமே தனக்குள் ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.
அந்த நேரம் படாரென திறக்கப்பட்ட அவளது கேபின் கதவின் சத்தம் அவள் நிலைக்கொண்டிருந்த பரவச சுகத்தை கலைத்திட, கடும் கோபம் கொண்டவளாய் எழுந்து நின்று
“அறிவு இருக்கா ப்ளெடி ஃபூல்..” என்று கத்தி முடித்த பின்பு தான் கவனித்தாள் அங்கு நின்றுக்கொண்டிருந்தது சாட்சாத் அவளது மேனேஜர் மோகன் தான்.
“வாட் ..? யஸ்.. ஐ அம் அ ஃபூல்.. உன்ன போய் இங்க வேலைக்கு வச்சேன் –ல.. நான் ஃபூல் தான்..” – கொந்தளிப்புடன் மேனேஜர் கேட்க
“அ.. ஆ.. ஐ அம் சாரி சார்.. ஆக்ட்சுவலி..” – திக்கித்திணறிக் கொண்டிருந்தாள் அம்ரிதா.
“இந்த ஃபைல் –அ எடுத்துக்கிட்டு போ –னு அவ்வளவு நேரம் லெக்சர் கொடுத்துருக்கேன்.. எடுக்காம இங்க வந்து நின்னு கனவு கண்டுக்கிட்டு இருக்கியா..? வேலை செய்ய இஷ்டம் இருந்தா இருக்கலாம்.. அதர்வைஸ் லீவ் திஸ் ஆஃபீஸ் ரைட் நவ்..” என்றபடி கோப்பினை அம்ரிதாவின் முன் வீசிவிட்டு சென்றார் மோகன்.
“ஓ.. ஷிட்.. வாட் தி ஹெல் ஹப்பனிங் ஹியர்..?! கம் ஆன் அம்மு.. ச்சில்..” என தன்னை தானே சமாதானப்படுத்தியவளை விட்டு அப்போதும் நீங்காது நிறைந்திருந்தது அந்த ஆத்மார்த்தமான வாசம்.
வேலையை கவனிப்பதா இல்லையேல் இந்த வாசத்துடன் பயணிப்பதா என அவள் மனம் சிதறிக்கொண்டிருந்த நேரம் மீண்டும் கேட்டது கதவு தட்டப்படும் சத்தம்.
‘போன காண்டாமிருகம் திரும்ப வந்திருச்சோ..?!’ என்ற பயத்துடன் “யஸ் கம் இன்..” என்றவளது பார்வையில் பிரம்மிப்பு ஆட்சி செய்யும் வண்ணம் பிரகாசமான உருவமாய் தேஜஸ் கலந்த சிரிப்புடன் வந்து நின்றான் அனேகன். ஆம்.. அவளது அனேகன். அவளுக்கு வேண்டுமானால் அவனை தெரியாதிருக்கலாம். ஆனால் தன்னவளுக்காகவே தவம் செய்து சர்வ வல்லமைகளையும் பெற்று வந்த அவன் அறியமாட்டானா அவளை..?
அவனது முகம் வெளிக்கொணரும் ஈர்ப்பில் இருந்து தன் பார்வையை மிகவும் கஷ்டப்பட்டு விடுவித்தாள் அம்ரிதா. ஆனால் அதனை மீண்டும் தன் வசமாக்க ஒரு சிறு புன்னகை போதுமானதாய் இருந்தது அனேகனுக்கு.
“ஹலோ பேபி..” என்றவன் தன் கைகளில் வைத்திருந்த பூங்கொத்தினை அவளிடம் நீட்டினான். அவளது கைகள் தன்னை அறியாமலேயே அதனை வாங்கிக்கொண்டது.
தற்பொழுது தன் கைகள் வெற்று மனையாக இருப்பதை விரும்பாத அனேகன் அம்ரிதாவின் அருகில் வந்தான். தன் கரங்கள் கொண்டு தன்னவளின் மெல்லிடையை சுற்றி அணைத்தான். தன்னோடு மேலும் இறுக்கினான்.
ஆனால் அவளோ அவனை கண்ட முதல் பார்வையின் பிரம்மிப்பு மாறாமல், நடப்பது என்னவென்றே உணராமல் சிலையாய் அவனது விழிகளை மட்டுமே நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் உடம்பின் உறுப்புகள் அனைத்தும் அவனது அணைப்பினால் அசையாதிருந்தது. அசைவு பெற அனுமதி வாங்கியிருந்தது அவளது கருவிழிகள் மட்டுமே. அதுவும் தன்னவன் விழிகள் செல்லும் இடத்திற்கெல்லாம் அவன் பின்னே மட்டுமே செல்வேன் என அடம் பிடித்திருந்தது.
அது சரி.. அவன்தான் வந்த நொடிப் பொழுதினிலேயே சிறிதும் தாமதிக்காமல் அவள் பார்வையை சிறை வைத்து விட்டானே..! பிறகு எங்கணம் கன்னியவள் தன் கட்டளையை கட்டவிழ்க்க முடியும்..?
கட்டழகியின் கர்வம் தன்னை கண்டுக்கொள்ளும் முன் தேனிதழ் வண்ணமாய் பூவிதழ் சின்னமாய் விளங்கிய அவளது சிற்றிதழுக்கு கச்சிதமான இதழ் முத்தம் ஒன்றை பரிசளித்து தன் காதலின் ஆழம் அதனை அவள் அடிமனதினுள் பதியும் வண்ணம் அழுத்தமான முத்திரையாக்கினான்.
அவனது இதழ் சூட்டினால் சற்றே சிலிர்த்துக் கொண்டவள் திடுமென தன்னிலைத் திரும்பினாள். நின்ற இடத்தில் இருந்தே ஒரு வித படபடப்புடன் தன் அறையை கண்களால் அங்கும் இங்கும் அளந்துப்பார்த்தாள்.
“ச்சீசீ.. என்ன ஆச்சு இப்ப எனக்கு..? மேனேஜர் தானே உள்ள வந்தான்..? இல்லை வேற யாரும் வந்தாங்களா..? இதோ ஃபைல் கிடக்குதே.. அவன்தான வந்து வீசிட்டு போனான்.. அப்புறம் என்ன கருமம் டா இந்த யோசனை..” என்று தன் தலையில் அடித்துக் கொண்டவள் மேனேஜரால் தரையில் வீசி எறியப்பட்ட கோப்பினை எடுக்க முனைந்தாள். அப்போதுதான் தன் கையில் தான் பிடித்திருக்கும் பூங்கொத்தினை உணர்ந்தாள்.
“வாட்..? சீரியஸ்லீ..? இந்த பொக்கே எப்படி நம்ம கையில..? அப்படீன்னா….” என்று யோசித்தவள் சற்றுமுன் என்ன நடந்ததென்று தன் மனதிற்குள் ரீவைண்ட் செய்து பார்த்து பதில் ஏதும் கிடைக்கப்பெறாமல் தோற்றாள்.
“கடவுளே.. என்ன இது.. ஏன் எனக்கு எதுவும் நியாபகத்துக்கு வர மாட்டேங்குது..? இப்ப என்ன நடந்துது..? எப்படி இந்த பொக்கே என் கையில..? எனக்கு ஏன் ஏதோ வித்யாசமான உணர்வு ஒன்னு வந்துது..? இதுவரை இப்படி இருந்ததில்லையே..” என சிந்தனை குதிரையை ஓடவிட்டவள் மனது கேட்காமல் அச்சுவிற்கு கால் செய்வதற்காக தனது கைபேசியை எடுக்க அச்சுவே அழைப்பில் வந்தாள்.
“ஹலோ.. இப்ப தான் டி உனக்கு கால் பண்ண வந்தேன்..” – அம்மு தொடங்க
“தெரியும்.. தெரியும்.. என்கிட்ட சொல்லாம மேடம் புறப்பட்டு போயாச்சு.. நான் கோபமா இருப்பேன்னு சமாதானப்படுத்த நீ கால் பண்ணுவனு தெரியும்.. அதான் நானே கால் பண்ணேன்..” என்ற அச்சுவிடம் தற்பொழுது நடந்த எதையும் சொல்ல வேண்டாமென உள்மனது கூற அதற்கு ஆமோதித்தவள்
“ஆமா டி அச்சு.. அதுக்குதான் கால் பண்ண வந்தேன்..” என்று முதல்முறையாக தன் சரிபாதியிடம் பொய் கூறினாள் அம்ரிதா.
“ஒன்னுமில்லை.. டென்ஷன் இல்லாம வேலைய பாரு.. சாப்பிட மறந்திடாத.. அப்படியே உன் போன்ல காண்டாமிருகம்-னு இருக்குறத மாத்தி அந்த சிடிமூஞ்சியோட பேர போட்டு பதிஞ்சி வை.. என்னைக்காவது பார்த்துத்தொலஞ்சிட்ட அதுக்கு வேற வசைப் பாடப்போறான்..” என்ற ஆஷ்ரிதா தொலைபேசி அழைப்பைத் துண்டிக்க, சற்று நேரத்திற்கு முன் தனக்கு என்ன நடந்தது என்று ஆராயத்துணிந்த அம்ரிதா பூச்செண்டுக்காரனை பற்றி யோசிக்களானாள்; தன் தங்கையை எவ்வாறு மீட்டெடுத்து இன்பம் காணுவேன் என்ற எண்ணத்தில் ஆஷ்ரிதா ஆடம்பரக்காரனை பற்றி யோசிக்களானாள். இருவர் சிந்தையிலும் வெவ்வேறு சித்திரமாய் உயிர்த்தெழுந்த அனேகனோ ‘மை கேம் ஸ்டாட்ஸ்’ என மந்திர புன்னகையுடன் அம்ரிதாவை அவள் அறையின் ஜன்னல் வழியே நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்.
(களவாடுவான்)

என்றும் அன்புடன்
உங்கள் ஆனந்த லெட்சுமி
 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 4
அம்ரிதாவுக்கு தெரியாமல் அனேகன் அவளை பார்த்துக் கொண்டிருந்த நேரம் அவன் கையில் வைத்திருந்த அலைப்பேசி உறும ஆரம்பித்தது. ஒரு வித எரிச்சலோடு கண்களை அழுந்த மூடியவன் அதனை அணைத்துவிட்டு தன் காற்சட்டை பையினுள் போட்டான். மீண்டும் ஒரு முறை அம்ரிதாவை சினேகப்பார்வைப் பார்த்தவன் மன நிறைவுடன் அங்கிருந்து கிளம்பினான்.
அலுவலகம் சென்ற அம்ரிதாவை எதிர்நோக்கி வீட்டு வாசலில் காத்துக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா. “உள்ள வந்து உட்காருங்க பெரிய பாப்பா.. அம்மு இப்ப வந்துடும்..” என்றார் பொன்னம்மா.
அந்த அழகிய அந்திசாய்ந்த பொழுது அள்ளித்தெளித்த ரம்மியமான தென்றல் காற்று ஆஷ்ரிதாவின் மனதில் இருந்த இறுக்கத்தை சிறிது தளர்த்திக்கொண்டிருந்தது. அந்த சுகத்தில் இருந்து விடுபட விரும்பாதவள் “இல்லை பொன்னம்மா.. இன்றைக்கு க்ளைமெட் கொஞ்சம் நல்லா இருக்கு.. அம்மு வந்ததும் உள்ளே வர்றேன்..” என கூறிவிட்டு மீண்டும் தன்னை அந்த தென்றலிடமே தொலைத்துக் கொண்டிருந்தாள்.
என்னதான் தன் மனதை தென்றலிடம் அவள் ஒப்படைத்தாலும், அதனை வழுக்கட்டாயமாக கடத்திச்சென்றது அன்று காலையில் அவள் கடந்து வந்த ஒரு நிகழ்வின் நினைவு.
டாக்டர் பிரபாகரனின் க்ளீனிக்கில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆஷ்ரிதா, தனது அம்மாவின் புகைப்படத்தை வாங்குவதற்காக வடபழநியில் இருக்கும் ஒரு பெரிய மால்-ஐ சென்றடைந்தாள். வாடிக்கையாக அச்சுவும் அம்முவும் அந்த மால்-க்கு தான் வருவார்கள். அவ்வாறு அவர்களுக்கு பரிட்சயமானவன் தான் திரவியம். அவன் அந்த மாலில் உள்ள பொக்கே ஷாப் ஒன்றின் மேற்ப்பார்வையாளன். நட்பின் பெயரில் திரவியத்திற்கு தெரிந்தவர் ஒருவரிடம் யசோதாவின் உருவ படத்தை வரைந்து வாங்கித்தரும்படி கேட்டிருந்தாள் ஆஷ்ரிதா. வரைந்து முடித்த அம்மாவின் படத்தை வாங்கிக்கொள்ளவே அவள் அங்கு சென்றிருந்தாள். அந்த சந்திப்பு அவர்களை ஒரு கப் தேனீருக்கும் அழைக்க, இருவரும் அந்த மாலின் இரண்டாம் தளத்தில் இருந்த காஃபி டே அரங்கை அடைந்தனர்.
“ஆஷ்ரிதா.. நீ ஆர்டர் கொடு, நான் இதோ வந்திடுறேன்..” என்றவனிடம் சரி என தலையாட்டி வைத்த ஆஷ்ரிதா அவன் திரும்பி வருவதற்குள் இரண்டு காப்புசினோ காஃபியை ஆர்டர் எடுத்து வைத்திருந்தாள். வந்தவன் எதுவும் பேசாமல் அமர்ந்து காஃபியை குடிக்கவும் அவனை செல்லமாய் முறைத்துப்பார்த்தாள் ஆஷ்ரிதா. ஆனால் அதை எதையும் கவனித்துக் கொள்ளாத திரவியம், தான் உண்டு தன் காஃபி உண்டு என்று அதனை ருசித்துக் குடித்து முடித்தான்.
அடுத்த கணம் எழுந்து நின்றவன் “போலாமா..” என்றான். ஆஷ்ரிதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ பிரம்மை பிடித்தாற்போல அவனை பார்த்துக்கொண்டிருந்தவளின் தோளை உலுக்கிய திரவியம் “என்னாச்சு..?” என்றான்.
“நான் இன்னும் காஃபி குடிக்கவே இல்லை..” என்றாள் ஆஷ்ரிதா.
“குடி..” என்றான் ஒன்றும் அறியாதவனாய்.
“வேணாம்..” என்றாள் இவள் ஒற்றை வரியில்.
“சரி..” என்றவன் அவளது காஃபியினையும் எடுத்து ஒரே கல்ப்பாக அடித்துவிட்டான்.
கோபத்துடன் எழுந்து நின்ற ஆஷ்ரிதா “ஆர் யூ கிட்டிங் மீ..? உனக்காக தானே வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்.. வந்த.. காஃபி ஆர்டர் பண்ண சொல்லிட்டு போன.. மறுபடியும் வந்து ரெண்டையும் நீயே குடிச்சிட்டு கிளம்புற.. இதுக்கு எதுக்கு நான் வரணும்.. நீயே வந்து குடிச்சிருக்க வேண்டியதுதானே..?” என்று கடிந்துக் கொண்டாள்.
அவளது இந்த செயலைக் கண்டதும் திரவியத்துக்கு சிரிப்புதான் வந்தது. “இப்ப என்ன உனக்கு காஃபி வேணும் அவ்வளவு தானே..” என கேட்டான் திரவியம்.
“ஆமா..” என்று வெடுக்கென கூறிவிட்டு தன் கைகளைக்கட்டிக் கொண்டும் முகத்தை திருப்பிக்கொண்டும் நின்றிருந்தாள் ஆஷ்ரிதா. சிறுபிள்ளை தனமான அவளது இந்த செயலில் சிரித்துக்கொண்டவன் மீண்டும் அதே காப்புசினோ காஃபியை ஆர்டர் செய்து ஆஷ்ரிதாவிடம் கொடுத்தான். அவள் குடித்து முடிக்கும் வரை பொறுமையாய் காத்திருந்தான். ஆஷ்ரிதா காஃபியை குடித்து முடித்து கப்-ஐ மேஜையில் வைக்கவும் பேரர் வந்து பில்லை நீட்ட, பணம் கொடுக்கப்போன திரவியத்தை தடுத்த ஆஷ்ரிதா “நோ திரு.. என் அம்மாவோட போட்டோவ இவ்வளவு அழகா வரைஞ்சி வாங்கிட்டு வந்ததுக்காக இன்னைக்கு என்னோட ட்ரீட்..” என்றவள் தானே பணத்தை கட்டினாள்.
அவள் சொன்னதற்கு பதிலும் கூறாமல் எந்த பாவணையும் செய்யாமல் அமர்ந்திருந்த திரவியத்திடம் “ரொம்ப நன்றி திரு.. போட்டோ அவ்வளவு உயிர்ப்பா இருக்கு..” என்றாள்.
“ஆனா நீ அப்படி இல்லையே அச்சு..” என்ற திரவியத்தின் வார்த்தையில் ஒரு நிமிடம் அமைதியான ஆஷ்ரிதா மீண்டும் பேசத்தொடங்கினாள்.
“உனக்கு தெரியாதா திரு..? என் கவலை எல்லாம் அம்மு பத்தினது தான்.. இன்னைக்கு காலையில கூட அம்மாவ வர சொல்லுனு கேட்டு வீட்டுல அத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணிட்டாள்.. அம்மாவுக்கு தெரிஞ்ச டாக்டர் மூலமா அனேகன் –னு ஒருத்தர் கிடச்சிருக்காரு.. அவர மீட் பண்ணிட்டு தான் இப்போ இங்க வந்தேன்..” என்றவளது குரலில் இருந்த சோர்வை உணர்ந்தவன் “எனக்கு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்-ல.. நானும் கூட வந்திருப்பேன்..” என்றான்.
“நானே சமாளிச்சிடுவேன் திரு.. தேவைனா கண்டிப்பா உன்ன கூப்பிடுறேன்.. சரியா..?” என ஆஷ்ரிதா கூற பிரச்சனைக்கு உட்பட்டிருப்பவள் பெண் என்பதை கருத்தில் கொண்டு அதிகம் முக்கை நுழைக்க விரும்பாமல் “சரி..” என்று நாகரிகமாய் முடித்துக் கொண்டான்.
அப்பொழுது தான் அந்த சம்பவம் நடந்தது. திரவியமும் ஆஷ்ரிதாவும் பேசிக்கொண்டிருந்த அந்த டேபிளை நோக்கி கடுங்கோபத்தோடு வேகமாக வந்த பெண் ஒருத்தி திரவியத்தைச் சுட்டிக் காட்டி “உனக்கு தான் நல்ல பார்க்க இலட்சணமா இதோ ஒருத்தன் இருக்கான் –ல.. அப்புறமா எதுக்கு டி என் புருஷனுக்கு வலைய வீசுற..? அன்னைக்கு என்கிட்ட தப்பிச்சிட்ட ஆனால் இன்னைக்கு வசமா மாட்டினியா..?” என்று ரத்தம் கொதிக்க கொதிக்க அவள் பேசிய வார்த்தைகளை தன் காதுகளால் கேட்க முடியவில்லை ஆஷ்ரிதாவுக்கு.
அத்தனை பேர் முன்னிலையில் தன்மேல் பொய்யாக அதுவும் இத்தனை கீழ் தரமான குற்றச்சாட்டை வைத்தது ஆஷ்ரிதாவுக்கு அதிர்ச்சியையும் அவமானத்தையும் ஒன்றாய் சேர்த்துத் தந்ததில் அவள் மனமுடைந்து வாயடைத்து நின்றிருந்தாள்.
“ஹலோ.. யாரு நீங்க..?” என்று திரவியம் அந்த பெண்ணிடம் சீற
“இதோ நிக்குறாளே இவகிட்ட கேளுங்க சொல்லுவா..” என்று திரவியத்தின் சீறலுக்கு சிறிதும் சளைக்காது கத்தினாள் அந்த பெண்.
“யாரு அச்சு இவங்க..?” என்று திரவியம் அச்சுவிடம் கேட்க
“எனக்கு தெரியாது திரு..” என மிகவும் பயந்தவாறு கூறினாள் அஷ்ரிதா.
“ஆமா டி.. ஆமா.. என்ன எப்படி தெரியும்..? என் ஆத்துக்காரன மட்டும் தானே தெரியும்..” என்றவளை மேலும் பேசவிடாமல்
“நிறுத்துங்க உங்க பேச்சை.. பப்ளிக்-ல எப்படி பேசனும்-னு தெரியாதா..?” என்றான் திரவியம்.
“ஓ.. நான் பேசுறது அசிங்கமா இருக்கா.. இவ நடு ரோட்டுல நின்னு என் புருஷன்கிட்ட பல்ல இளிச்சுக்கிட்டு, இந்த நீல கலர் சட்டை நல்லா இருக்கு-ன்னு கொஞ்சிக்கிட்டு இருந்தாளே.. அது அசிங்கமா இல்லையா..? அன்னைக்கு அவரு வீட்டுக்கு வந்த முதல் வேலையா அந்த சட்டைய எரிச்சிட்டேன்.. இதோட உன் மனசுல இருக்கற எண்ணத்த நீயும் எரிச்சிடு.. இல்லைனா அடுத்த முறை எரியுறது சட்டையா இருக்காது.. ஜாக்கிரதை..” என்றவள் அவர்களது பதிலையும் எதிர்பார்க்காமல் விறுவிறுவென வந்த வழியை நோக்கிச் சென்றுவிட்டாள்.
அங்கு சுற்றியிருந்த அனைவரும் ஆஷ்ரிதாவை ஒருவிதமான அருவருப்பு பார்வை பார்க்க, கண்களில் கண்ணீரை வடிய விட்டவாறு தலைகுனிந்து அங்கிருந்து ஓடினாள் ஆஷ்ரிதா. அவள் பின்னாலேயே ஓடிய திரவியம் அவளை சமாதனப்படுத்தி ஒரு நிலைக்குக் கொண்டுவந்தான்.
“நிஜமாவே அவங்க யாருனு எனக்கு தெரியாது திரு..” என்று விசும்பிக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.
“அதை எனக்கு நீ சொல்லனுமா..? என்ன இது சின்ன புள்ள மாதிரி அழுதிக்கிட்டு.. வந்து முகத்தை கழுவு.. வா..” என்றான் திரவியம்.
“நீ இரு திரு.. நான் பார்த்துக்கிறேன்.. அம்மு எழுந்துக்கிறதுக்கு முன்னால நான் வீட்டுக்கு போகனும்.. ஆல்ரெடி லேட் ஆகிடுச்சு.. நான் கிளம்புறேன்..” என்று அவனிடம் விடைப்பெற்று வீட்டை வந்து அடைந்தது வரை ஆஷ்ரிதாவின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
‘அந்த பொண்ணு யாரா இருக்கும்..? எதுக்காக நம்மகிட்ட அப்படி நடந்துக்கனும்..? ஒருவேளை அம்முனு நினைச்சு என்கிட்ட..???’ என்று யோசித்தவளுக்கு ஒரு நிமிடம் பதறிப்போனது மனது.
“அம்மு எதுக்காக யார்க்கிட்டயோ இப்படி பேசப்போறா..? என்ன தான் நடக்குது என்ன சுத்தி..?” என்று தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் ஆஷ்ரிதா.
அப்போது அங்கே வந்திருந்த அம்ரிதா “என்ன அச்சு மா தலை வலிக்குதா..?” என்று கேட்டவாறு ஆஷ்ரிதாவின் சிரசை தன் கரங்களால் தடவிக்கொடுத்தாள்.
மிகவும் மென்மையாக அவளை ஏறிட்டு பார்த்த ஆஷ்ரிதா “ஆமா டி.. உனக்காக தான் வெயிட் பண்ணுறேன்.. வா..” என்றாள்.
“லூசு.. வந்தா உள்ள தானே வர போறேன்.. தலை வலியோட எதுக்கு இந்த காத்துல உட்கார்ந்திருக்க..? உள்ள வா..” என தன் அக்காவை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தாள் அம்ரிதா.
“நீ ஃப்ரெஷ் ஆகிட்டு வா.. நான் டின்னர் எடுத்து வைக்குறேன்..” என்று ஆஷ்ரிதா கூற, ஒரு குளியல் போட்டுவிட்டு உணவு மேஜையில் அமர்ந்தாள் அம்ரிதா.
“பொன்னம்மா.. நீங்க சாப்டீங்களா..?” என்று பாசமாய் ஆம்ரிதா கேட்க
“நான் சாப்பிட மாட்டேன் பாப்பா.. உங்க மேல நான் கோவமா இருக்கேன்..” என்றார் பொன்னம்மா.
“என்னாச்சு பொன்னம்மா..? என் மேல என்ன கோபம்..?” என கேட்டாள் ஆம்ரிதா.
“வேலை வேலைனு ஓடி உடம்ப எப்படி ஆக்கி வச்சிருக்கீங்க பாருங்க..! பேசாம அக்கா சொல்லுற மாதிரி இருக்க சொத்துகள கவனிச்சிக்கிட்டு ராணியாட்டம் இருக்கலாம்ல..” என சிறிது ஏக்கத்தோடு கேட்டார் பொன்னம்மா.
“என்ன அச்சு.. உன் வேலையா..?” என்றாள் அம்ரிதா.
“ஆமா டி.. எனக்கு வேற வேலையே இல்லைல.. பொன்னம்மாவ நான்தான் உசுப்பேத்திவிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கேன்..” என்று சலித்துக்கொண்டாள் ஆஷ்ரிதா.
“பெரிய பாப்பா எதும் சொல்லல மா.. நான்தான் கேட்குற..” என்றார் பொன்னம்மா.
ஒருமுறை ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்ட அம்ரிதா உணவு மேஜையில் இருந்து எழுந்து பொன்னம்மாவின் அருகில் சென்றாள். அவள் என்ன சொல்ல வருகிறாள் என காத்துக்கிடக்கும் ஆர்வம் பொன்னம்மாவின் கண்களில் தெரிந்தது. தனது வலது கையினால் பொன்னம்மாவின் இடது கன்னத்தை ஏந்திய அம்ரிதா “அம்மா-வ நீங்க மிஸ் பண்ணுறீங்களா பொன்னம்மா..?” என்று கேட்டாள்.
“என்ன மா இப்படி கேட்டுட்டீங்க..? தாயி என்ன இந்த வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்ததுல இருந்து இன்னைய வர அவதா என் குலசாமி.. அவள என்னால எப்படி..?” என அழத் தொடங்கினார் பொன்னம்மா.
“நீங்க குலசாமியா நினைக்கிற யசோதாவோட குலமே சிதைஞ்சி, இன்னைக்கு நானும் அக்காவும் அப்பா - அம்மா இல்லாம அனாதையா நிக்குறோம்னா அதுக்கு காரணம் அந்த மோகன் தான்..” என்று கண்கள் சிவக்க சிவக்க கூறினாள் அம்ரிதா. அவள் கோபத்தின் உச்ச நிலையை அடைந்துவிட்டாள் என்று உணர்ந்த ஆஷ்ரிதா, அம்ரிதாவின் அருகே வந்து அவளது தோள்களை பற்றி அழுத்தினாள். அதில் கொஞ்சம் சமாதானமான அம்ரிதா
“எல்லாம் கொஞ்சம் காலம் தான் பொன்னம்மா.. அந்த மோகனை மண்ண கவ்வ வைக்கனும்.. அதுக்காக நான் எவ்வளவு வேணும்னாலும் கஷ்டப்பட தயாரா இருக்கேன்..” என்றாள் ரெளத்திர புன்னகையோடு.
யசோதாவின் நினைவுகளுடனேயே ஒன்றி இருந்த அவர்களுக்கு அன்றைய இரவு முழுவதும் விடியலை தேடியபடியே கழிந்துவிட்டது. சற்றும் இரக்கம் காட்டாத பகலவனோ இன்று தாமதமாய் தான் தலையைக் காட்டினான். சிறிது நேரம் கூட கண்கள் அயறாத மூவரையும் பார்த்துக்கொண்டே உள்ளே வந்தாள் சுப்பு.
“என்ன மா.. இன்னைக்கு கதவ சாமத்துலையே துறந்துட்டீக போல.. அதுவும் நல்லதுதான்.. என் பையனோட இஸ்கூல் –ல பணம் கட்டச்சொல்லி நேத்து புள்ளைய அடிச்சிட்டாங்க மா.. கொஞ்சம்..” என அவள் முடிப்பதற்குள் வேகமாக எழுந்து தன் அறையினுள் சென்ற அம்ரிதா பணத்தை எடுத்து வந்து சுப்புவிடம் கொடுத்துவிட்டு,
“உன்கிட்ட எத்தன முறை சொல்லியிருக்கேன்.. ஸ்கூல் ஃபீஸ்-அ கரெக்ட்டா கேட்டு வாங்கிட்டு போ-னு..” என திட்டத்தொடங்கினாள்.
ஓரிரவு தூக்கமின்மை, அம்மாவின் நினைவுகள் தரும் தீரா கனம், அப்பாவின் துரோகம், எதிரியை வீழ்த்த போராடும் சுமை இவ்வாறு பல ரணங்களை தன் முதுகில் சுமக்கும் பொழுதும் எப்படி இவளால் மட்டும் இத்தனை சுறுசுறுப்பாய் தன்னை நாடியவர்களுக்கு கரம் கொடுக்க முடிகிறது என ஒரு நிமிடம் அதிசயித்துப்போனார்கள் ஆஷ்ரிதாவும் பொன்னம்மாவும். அவர்களது எண்ண ஓட்டத்தின் குரல் அடங்கி அம்ரிதாவின் குரல் கேட்கத் தொடங்கியது.
“இனிமே மாச சம்பளத்தோட சேர்த்து பையனோட ஃபீஸ் அமெளண்டையும் வாங்கிட்டு போ.. உன் புருஷன் கண்ணுல படாம வைச்சிருந்து சரியான நேரத்துல பணத்தை கட்டு.. என்ன புரியுதா..?” என்று உரிமையாய் கூறிய அம்ரிதாவிடம் சரி என வேகமாக தலையை ஆட்டி வைத்த சுப்பு தனது வழக்கமான வீட்டு வேலையை செய்யத் தொடங்கினாள்.
சுப்புவிடம் பேசிவிட்டு திரும்பிய அம்ரிதா “அக்கா.. இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்திருப்ப..? எழுந்து வேலைய பாரு..” என்றவள் குளித்துக் கிளம்பி அலுவலகத்திற்குச் சென்றாள்.
அம்ரிதா வீட்டை விட்டு கிளம்பிய அரைமணி நேரத்தில் ஆஷ்ரிதாவிற்கு அழைப்புக் கொடுத்திருந்தான் அனேகன். இன்று பத்து முப்பது மணியளவில் தன்னை அவள் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவில் சந்திக்குமாறு கூறியவன், தான் சொன்ன நேரத்திற்கு பத்து நிமிடங்கள் முன்னதாகவே அங்கு வந்திருந்தான். குறித்த நேரத்தில் சரியாக அங்கு சென்ற ஆஷ்ரிதா பூங்காவின் வாசலில் நின்றுக்கொண்டு தன் கை கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இன்னைக்கு அந்த ஆடம்பரக்காரன் வரட்டும்.. அவன் நேரம் மட்டும் தான் வேஸ்ட் ஆக கூடாதா..? இன்னைக்கு நான் கரெக்டா வந்துட்டேன்.. உன்னதான் காணோம்.. மவனே நீ வா.. உனக்கு வச்சிருக்கேன் கச்சேரி..” என்று அவனை வென்றுவிட்ட சந்தோஷத்தில் பூரித்துக் கொண்டிருந்தாள்.
அந்த நேரம் அவளது கைப்பேசி அலற, அழைத்திருந்தது அனேகன் தான். “வா டா என் வாட்டர் ஃபால்ஸ் மண்டையா.. இப்ப பாரு இந்த அச்சு யாரு-னு காட்டுறேன்..” என்று கைப்பேசியிடம் சொல்லிவிட்டு அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் “உங்களுக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுறது.. நீங்க மட்டும் சொன்ன நேரத்துக்கு வர மாட்டீங்களா..?” என்ற சிறிது அதட்டலுடன் கேட்டாள்.
“பார்க்குக்கு உள்ளே தான மீட் பண்ணுறதா சொன்னேன்.. வாசல்-ல என்ன பண்ணிக்கிட்டு இருக்க..?” என்று அவன் சொன்னதும் ஈயாடவில்லை ஆஷ்ரிதாவின் முகத்தில்.
“எ..எ..எங்க இருக்கீங்க..?” என்றாள் ஆஷ்ரிதா.
“திரும்பு” என ஒற்றை வரியில் பதில் கூறினான் அனேகன்.
‘செத்தான் டா சேகரு..’ என்று திருதிருவென முழித்தவாறு பின்னால் திரும்பினாள் ஆஷ்ரிதா.
அங்கே அவளுக்கு மிக அருகில் இருந்த ஒரு நீண்ட பென்ச்-ல் கால்மேல் கால்போட்டவாறு வலது கையின் ஆட்காட்டி விரலில் தன் கார் சாவியை சுழலவிட்டவாறு மிகவும் தோரணையாக அமர்ந்திருந்தான் அனேகன்.
“ஆகா.. இங்க தான் இருக்கானா.. ப்சே.. கச்சேரி மிஸ் ஆகிடுச்சே..” என்று நொடித்துக்கொண்டவள் வேகமாக அவன் அருகே சென்று அமர்ந்தாள். கார் சாவியின் சுழற்றலை நிறுத்தியவன் தன் காதில் மாட்டியிருந்த ப்ளூடூத்தை கழட்டிவிட்டு அவளைத் திரும்பிக் கூர்மையாகப் பார்க்க, அவளோ தன் செயலை எண்ணி நெளிந்துக் கொண்டிருந்தாள்.
(களவாடுவான்)
என்றும் அன்புடன்
உங்கள் ஆனந்த லெட்சுமி
 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 5
“நான் சொன்ன டைம்-க்கு கரெக்ட் -ஆ தான் வந்திருக்கேன்.. நீங்க சீக்கிரமே வந்து உட்கார்ந்திருந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்லை சார்.. இதுக்கும் என்ன திட்டாதீங்க..” அவனது பார்வையில் பயந்தவள் தாமாக உளறத் துவங்கினாள். அதனை கொஞ்சமும் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அனேகன். அவளாய் கஷ்டப்பட்டு தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு, வாயை மூட முடியாமல் மூடி, ஒரு நிலைக்கு வர, தற்போது அவன் பேசலானான்.
“உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா..?” – அனேகன்.
‘என்ன இவன் திட்டப்போறான்னு பார்த்தா இப்படி கேட்குறான்..?’ என மனதினுள் நினைத்தவள், “அது எல்லாம் உங்களுக்கு எதுக்கு..? என் தங்கச்சியோட பிரச்சனை என்ன-னு கண்டுப்பிடிச்சி சரி செய்யுறதுதான் உங்க வேலை.. அதை மட்டும் பாருங்க..” என்றாள் ஆஷ்ரிதா.
.
‘மூஞ்சியையும் முழியையும் பாரு.. ஒரு பொண்ணு வந்து பேசிட்டா போதுமே.. ஜாதகத்தையே கேப்பீங்களே..’ என்று தன் வாய்க்குள் முணுமுணுத்தவள் அவனை முறைத்துவிட்டு வேறு திசைக்கு தன் தலையை திருப்பிக்கொண்டாள்.
இப்பொழுதும் அவன் முகத்தில் எந்த ஒரு சலனமும் காணப்படவில்லை. மாறாக நாயகனுக்கே உரித்தான கச்சித புன்னகையை மட்டும் தன் உதட்டில் மாட்டிக்கொண்டவன் தன் விரல்களை சுண்டி சப்தமெழுப்பி அவளை அழைத்தான். அதில் இன்னும் அதிகம் சூடானவள் “என்ன நீங்க வச்ச ஆளு மாதிரி சுண்டிக் கூப்பிடுறீங்க..?” என்று வெடிக்கத் தொடங்கினாள்.
அப்பொழுதும் புன்னகை மாறாதவனாய் “ஆத்மா, முன் ஜென்மம் இதை பற்றியெல்லாம் கேள்வி பட்டது உண்டா..?” என்றான்.
அவனது சிரிப்பினில் ஆஷ்ரிதாவின் எரிச்சல் எல்லையை மீறியது. “நான் பேசுறது உங்க காதுல விழுதா இல்லையா.. நான் சொல்லிக்கிட்டே இருக்கேன்..” என்றவளது வாயினை தன் கைகளால் சட்டென அழுந்த மூடியதோடு அவ்வளவு நேரம் தன் உதட்டில் தேக்கி வைத்திருந்த சிரிப்பினை தெரிந்தே தொலைத்துவிட்டு ஒரு கொடூரப் பார்வை பார்த்தான் அனேகன்.
“பேய்-க்கு பயப்படுவியா..?” என்றான் அரக்கனின் குரலில்.
பேய் என்று கேட்டவுடன் எங்கிருந்துதான் அவ்வளவு சக்தி வந்ததோ தெரியவில்லை படாரென அவன் கைகளை தன் வாயிலிருந்து தட்டிவிட்டவள் “என்னது பேயாஆஆஆஆ..??!!” என விழிகள் பிதுங்கிடக் கேட்டு நின்றாள்.
“அமைதியா உட்காரு..” என்றான் அனேகன்.
“இப்ப உங்களுக்கு என்ன வேணும்..? தங்கச்சி பத்தி பேசனும்னு தானே வர சொன்னீங்க..? வந்தா உங்க இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்கீங்க..? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல..?” என்று கோபமாய் கேட்க ஆசைப்பட்டாலும் பயத்தின் காரணமாய் படபடத்த குரலில் மட்டுமே கேட்க முடிந்தது ஆஷ்ரிதாவால்.
“இதுவும் உங்க சிஸ்டர் பத்தின விஷயம் தான்..” என்று சுறுக்கமாக விடையளித்தான் அனேகன்.
அவனது பதிலில் அமைதியடைந்த ஆஷ்ரிதா “அம்மு-வ பத்தியா..?” என குழப்பத்துடன் நின்றுக்கொண்டிருக்க “டோண்ட் வேஸ்ட் மை டைம்!” என அழுத்தமாக கூறினான்.
“சாரி சார்.. சொல்லுங்க.. ஆமா.. எனக்கு பேய்-னா பயம்.. கடவுள் நம்பிக்கை இல்லைனு கிடையாது.. ஆனா ரொம்ப பக்தி பழமாவும் இருக்க மாட்டேன்.. ஆத்மா, முன் ஜென்மம் இதை பத்தி எல்லாம் கொஞ்சம் கேள்வி பட்டிருக்கேன் சார்..” என்று அவனது கேள்விகள் அனைத்திற்கும் மொத்தமாக பதில் அளித்தாள் ஆஷ்ரிதா.
“குட்.. லிசன் கேர்ஃபுலி.. மிஸ். அம்ரிதா அடிக்கடி அம்மாவ கேட்குறது, சம்பந்தம் இல்லாம எதையாவது பேசுறது இது எல்லாத்துக்கும் காரணம் அவங்களோட முன்ஜென்ம நினைவுகள் தான்..” – அனேகன்.
“என்ன.. முன்ஜென்மமா..?” அதிர்ச்சித்தாள் ஆஷ்ரிதா.
“எஸ்.. முன்ஜென்மம் மட்டும் இல்லை.. அவளுக்கான அடுத்த ஜென்மத்தோட தேடலும் அவங்களோட ஆன்மாவுல ரொம்ப அழுத்தமாவே இருக்கு..” – அனேகன்.
“வாட் ஆர் யூ சேயிங்??!! சீரியஸ்லி??” தலை வெடித்துவிடும் போல இருந்தது ஆஷ்ரிதாவுக்கு.
“யஸ்.. ஒரு மனுஷன் பூமியில பிறக்கும் பொழுதே அவனது ஆழ்மனசுல அவனோட பூர்வ ஜென்ம வாசனை இருக்கும். குழந்தையில இருந்து பெரியவனா வளர வளர அவனோட ஆழ்மனதுல இருக்குற ஜென்ம ரகசியங்கள் அமைதி ஆகிடும்.. அந்த நேரம் வெளி மனது அப்பொழுதைய வாழ்க்கையை மட்டுமே முன்னிலைப்படுத்திக் காட்டும்.. அதனால ஆழ்மனசோட குரல நம்மால கேட்க முடியுறது இல்லை.. நூறு-ல இருபது சதவிகித மக்களுக்கு மட்டும் தங்களோட கடந்த காலத்து நிகழ்வுகள் நிகழ்காலத்தோட வந்து இம்சை செய்யுது.. அம்ரிதாவுக்கு நடந்துக்கிட்டு இருக்குறதும் இதுதான்.. கூடுதலா வரும் காலத்தோட தேடலும் அந்த ஆத்மாக்கு அதிகமா இருக்கறதால இது எனக்கே ஒரு சேலஞ்சிங்கான கேஸ்-ஆ தான் இருக்க போகுது..” மிகவும் சுருக்கமாக அதே நேரம் அம்ரிதாவுடைய பிரச்சனையின் வீரியம் எவ்வளவு பெரிது என்பதை ஆஷ்ரிதாவுக்கு புரியும்படி கூறினான் அனேகன்.
தன் தங்கையின் நிலையை தெரிந்துக்கொண்டவளால் தன் கண்களில் அருவியைக் கொட்டாது இருக்க முடியவில்லை. அவன் கூறிய செய்தியில் மனம் பாறை போல கனத்தது ஆஷ்ரிதாவுக்கு. மனவலியில் வாயடைத்து அமர்ந்திருந்தவளை புரிந்துக் கொண்டவன் அவளுக்காய் சிறிது நேரம் பொறுமை காத்தான். ஒரு சிறு நிமிடங்களில் பெரு மூச்சு ஒன்றை வெளியே விட்ட ஆஷ்ரிதா “இத சரி பண்ணிடலாம்-ல சார்..??” என்று பாவமாய் அனேகனிடம் கேட்டாள்.
“எனக்கு உங்க கோ-ஆப்ரேஷன் வேணும்.. ஐ வில் டூ மை பெஸ்ட்.. இந்த கேஸ்-க்கு தேவையில்லாத எத பத்தியும் உங்களிடம் பேசவோ கேட்கவோ மாட்டேன்.. அதுக்கு எனக்கு நேரமும் இல்லை.. அது எனக்கு தேவையும் இல்லை..” – அனேகன்.
“சாரி சார்.. இனிமே சரியா நடந்துக்குறேன்..” என்றவளுக்கு திடீரென எழுந்தது அந்த சந்தேகம்.
“சார்.. என் தங்கச்சி முன்ஜென்மத்தோட நினைவுகளால தான் இப்படியெல்லாம் நடந்துக்கறா அப்படீன்னு எத வச்சு சொல்லுறீங்க..?” என்று அவள் கேட்கவும் அவளை ஒரு கோபப்பார்வை பார்த்தான் அனேகன். ‘இப்பதான ஒழுங்கா நடந்துக்கறேன் –னு சொன்ன..? அதுக்குள்ள முருங்க மரம் ஏறுறியா..?’ என்று அவன் மனதில் நினைப்பதை அந்த பார்வையிலேயே புரிந்துக்கொண்டாள் ஆஷ்ரிதா.
“இல்லை சார்.. அவ முன்ஜென்மம் நியாபகம் வந்து தான் அம்மாவ கேட்குறா –னு சொல்லுறீங்க.. ஆனால் என் அம்மா யசோதா இந்த ஜென்மத்துல தானே அவளுக்கு அம்மா..?” என்று சற்று பணிவோடு கேட்டாள்.
“அவள் கேட்கறது யசோதாவை இல்லை.. அவளது முந்தைய ஜென்மத்து அம்மாவ..” என்று இடியைத் தூக்கிப்போட்டான் அனேகன்.
இதை கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அவ்வாறே அங்கிருந்து வீடு திரும்பிய ஆஷ்ரிதாவுக்கு நிம்மதியாய் இருக்க முடியவில்லை. அம்மாவை கேட்டு அவள் அழுத பொழுது என்னவெல்லாம் பேசினாள் என்று தன் மனதினுள் அசைப்போட்டுப் பார்த்துக்கொண்டிருந்தாள். முந்தைய ஜென்மத்தில் அம்ரிதா யாருக்கு மகளாக இருந்திருப்பாள்? அவள் அம்மாவின் பெயர் என்ன? அவளது வாழ்வு எவ்வாறு இருந்திருக்கும்? என தன் மனதிடம் விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தாள். ஆனால் பாவம் அவள் மனதினிடத்தில் இதற்கான பதில்கள் எதுவும் இல்லையே. தனக்கு தெரியாத ஒன்றை எவ்வாறு அது கூறும்..?
ஆனால் அவளது கேள்விக்கான பதிலைக் கொடுக்க இயலாமல் தவித்த மனமோ அவளுக்கு உதவும் விதமாக ஒன்றை செய்தது. என்றோ ஓர் நாள் அம்ரிதா தூக்கத்தில் உளறிய செய்தி ஒன்றை அவளுக்கு நியாபகப்படுத்தியது.
ஓர் நாள் நீண்ட பயணம் ஒன்றை மேற்க்கொண்டிருந்த ஆஷ்ரிதாவும் அம்ரிதாவும் நள்ளிரவு 2 மணியளவில் தங்கள் வீட்டை அடைந்தனர். அன்று தூக்கக்கலக்கமும் பயண அலுப்புமாக தங்கள் படுக்கையில் இருவரும் தஞ்சம் அடைந்த பொழுது அம்ரிதா “அம்மா எதுனாலும் உன்கிட்ட தானே சொல்லுவேன்.. இப்படி என்கிட்ட கோவிச்சிக்கிட்டு உட்கார்ந்தா நான் எங்கே போவேன்.. நான் காலேஜ் போகமாட்டேன் போ” என்று தன்னை அறியாது ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். தானும் அதீத கலைப்பில் இருந்ததால் அதனை ஆஷ்ரிதா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறுவதை விட அவளது மூளை அப்பொழுது அதனை சரிவர கிரகிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.
இந்த நிகழ்வினை யோசித்த ஆஷ்ரிதாவுக்கு ஒன்று தெளிவாய் புரிந்தது. தங்களின் குழந்தை பருவத்திலேயே யசோதா இறந்துவிட்டாள். அம்மு புலம்பும் பொழுது காலேஜ்- க்கு போகமாட்டேன் என அம்மாவிடம் சொல்கிறாள். அப்படியானால் அனேகன் சொல்லியபடி அவள் யசோதாவை கேட்டு இத்தனை நாள் அழவில்லை. உண்மையை உணர்ந்த ஆஷ்ரிதாவுக்கு தலைக்குள் லட்சம் அணுகுண்டுகள் வெடித்துத் தெறிப்பதுபோல இருந்தது. தன் கைகளால் தலையை இறுகப்பற்றிக்கொண்டு அடை மழையென அழதுத் தீர்த்தாள்.
பின்பு இவை அனைத்தையும் ஆழ்ந்து யோசித்தவள் தீர்க்கமாக ஒரு முடிவுக்கு வந்தாள். இனி எந்த ஒரு சூழ்நிலையிலும் அம்ரிதாவை தனியே விடக்கூடாது. அவளது செயல்கள் ஒவ்வொன்றையும் மிகவும் கூர்மையாக கவனிக்கவேண்டும் என எண்ணினாள். அவர்களது அறையில் யாரும் அறியாத வண்ணம் ஒரு கண்காணிப்பு கேமராவை பொருத்திவிட வேண்டும் என உறுதியானாள்.
அதே நேரம் ஆஷ்ரிதாவை சந்தித்துவிட்டு கிளம்பிய அனேகன் அம்ரிதாவின் அலுவலகத்தை அடைந்திருந்தான். அங்கே மோகனின் அறை கதவைத் தட்ட எத்தனித்தவனை தடுத்தது அவனது அலைபேசியின் மணியோசை. அழைப்பில் வந்திருந்தது டாக்டர் பிரபாகரன்.
“ஹலோ டாக்டர்” – அனேகன்.
“வெரி குட் மிஸ்டர் அனேகன். நீங்க கண்டிப்பா சக்சஸ் பண்ணிடுவீங்கனு எனக்கு தெரியும்.. ஆனால் இவ்வளவு சீக்கிரத்துல பிரச்சனையோட ரூட்-அ கண்டுபிடிப்பீங்க-னு நான் எதிர்பார்க்கலை..” – மிகுந்த மரியாதையுடன் கூறினார் டாக்டர் பிரபாகரன்.
“சார்.. யூ ஆர் டூ லேட்.. நான் சொலியூஷனே கண்டிபிடிச்சிட்டேன்.. இன்னும் நீங்க அந்த மெயிலை பார்க்கலைனு நினைக்கிறேன்.. நான் ஸ்பாட் –ல தான் இருக்கேன்.. நீங்க மெயில் செக் பண்ணிட்டு எனக்கு ரிப்ளை பண்ணுங்க.. நான் வேலைய முடிச்சிட்டு உங்களுக்கு கால் பண்ணுறேன்..” என்றவன் சட்டென அலைபேசியை அணைத்து பையில் போட்டுவிட்டு மோகனது அறையின் கதவைத் தட்டினான்.
இவ்வளவு படு சுறுசுறுப்பான ஒருவனை கண்டிறாத டாக்டர் பிரபாகரன் தனது வாழ்த்துக்களை தெரிவித்தால் அவன் பூரித்துப்போவான் என எண்ணி அவனை அழைத்து பேசினார். ஆனால் அவனோ ‘உங்கள் பாராட்டை கேட்டு விண்ணில் மிதப்பதற்கு நான் சராசரி மனிதன் அல்ல. அத்துடன் நீங்கள் வியப்பதை விடவும் அதிவேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் அனேகன் நான்’ என்று தனது செயலின் வழியே காண்பித்துவிட்டான். இதனை உணர்ந்த டாக்டர் பிரபாகரன் அனேகனை எண்ணி கூடுதல் வியப்படைந்து “மிஸ்டீரியஸ் மேன்” என்று புன்னகைத்துக் கொண்டே அவனது மின்னஞ்சலை தேடலானார்.
அங்கே அனேகன் மோகனது அறை கதவைத் தட்டவும் “யஸ் கம் இன்” என்ற குரல் அவனை உள்ளே அழைத்து வந்தது. வந்ததும் கையை குழுக்கிக்கொள்ள நீண்டு நின்ற மோகனது கரத்தை அலட்சியம் செய்தவனாய் எதிரில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்துக்கொண்டான் அனேகன். இதில் மூக்கறுபட்ட மோகன் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல்
“தேங்க்ஸ் அனேகன். நீங்க இவ்வளவு சீக்கிரம் ஓகே சொல்லுவீங்கனு நான் எதிர்பார்க்கலை..” – மோகன்.
“நானும் தான்” – விரைப்பாக கூறினான் அனேகன்.
அவன் எதற்கு அப்படி கூறுகிறான் என்பது புரியவில்லை என்று முகத்தில் அப்பட்டமாக காட்டிய மோகன் சிரித்துக்கொண்டே “காஃபி, டீ, ஃப்ரெஷ் ஜூஸ்” என்றார்.
“என்ன இதுக்கு முன்னாடி பிளாட்ஃபாம் கடையில் வேலை பார்த்தீங்களா..?” – கேலி புன்னகையோடு கேட்டான் அனேகன்.
இதை கேட்டதும் மோகனுக்கு ஈயாடவில்லை. அடுத்த வார்த்தை பேச மோகன் வாயெடுக்கவும் அனேகனது அலைபேசி மீண்டும் அலறியது. ‘இவன் மட்டும் இல்லாம இவனோட ஃபோனும் சேர்ந்து நம்மை வாருதே’ என்று தன் தலையில் அடித்துக் கொண்டவன் வேறு வழியின்றி அமைதி காத்தான்.
அலைபேசியின் அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் “யஸ் மாம்” என்றான்.
“என்ன டா.. ரீச் ஆகிட்டியா இல்லையா..” – அனேகனின் அம்மா.
“இன்ஃபிரண்ட் ஆஃப் ஹிம்” – அனேகன்.
“ஓகே.. டேக் கேர்” – அனேகனின் சுருக்கமான பேச்சுக்கு வித்தான அவனது தாய் அழைப்பை துண்டித்திருந்தாள்.
“உங்க அம்மாவ மாதிரியே வளராத டா.. மனுஷனா பொறந்தா கொஞ்சமாவது கலகல –னு பேசனும்” கூறியவர் வேறு யாரும் இல்லை அனேகனின் அப்பா மோகனே தான்.
“டோண்ட் வேஸ்ட் மை டைம்” மீண்டும் சுருக்கம் காக்கும் பாணியில் அனேகன் கூறினான்.
“உன்ன எல்லாம் திருத்த முடியாது.. சரி சொல்லு.. கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டியாமே.. எப்ப பண்ணிக்க போற..?” – மோகன்.
“சீக்கிரமே” – அனேகன்.
“ஏதோ ஒரு பொண்ண செலக்ட் பண்ணிட்டதா உங்க அம்மா சொன்னாளே!” – மோகன்.
“யஸ்” – அனேகன்.
“யார் அந்த பொண்ணு? சிதம்பரம் அங்கிள் டாட்டரா? யூ.கே. –ல டெண்டிஸ்-ஆ இருக்கிறாள்.. எனக்கு ஓகே தான்” – மோகன்.
“நோ” – அனேகன்.
“இல்லையா? இந்த பொண்ண தான் செலக்ட் பண்ணிருப்ப-னு நினைச்சேன்.. அப்போ அந்த வெள்ளக்காரி ஃபெல்சியா தானா..? உங்க அம்மா எப்படி ஒத்துக்கிட்டா..? உன் ப்ரெண்டு ராபர்ட் க்ளையண்ட் தானே அந்த பொண்ணு..?” என மோகன் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது அந்த அறையின் கதவை தட்டினாள் அம்ரிதா.
“சார்.. எக்ஸ்க்யூஸ் மீ” என அம்ரிதா கேட்க
“கம் கம்” என்று ஏளனமான குரலில் மோகன் கூற அனேகனுக்கோ மோகனை சுட்டெறிக்கும் அளவு கோபம் வந்தது.
இது பழகிப்போன ஒன்று என்பதால் அவள் அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லையா இல்லையேல் அனேகன் அங்கிருந்ததால் மீண்டும் அவனது பரஸ்பர வாசம் அவளது ஆன்மாவை தொட்டு அவளை ஆல்ஃபா நிலையில் வைத்திருந்ததா என தெரியவில்லை. அம்ரிதா எந்த எரிச்சலும் இன்றி தான் வந்த விஷயத்தை நிதானமாய் கூறலானாள்.
“சார்.. நேத்து பெங்களூர் பிரான்ச்-ல இருந்து வந்த ஃபண்ட்ஸ்-அ செக் பண்ணி லே-அவுட் ரெடி பண்ணிட்டேன். நீங்க வெரிஃபை பண்ணி ஓகே சொல்லிட்டா ப்ரிண்ட்க்கு அனுப்பிடலாம்” என்றாள்.
“வச்சிட்டு போ” என்றான் மோகன்.
“ஓகே சார்” என்ற அம்ரிதா அனேகனது தோளை கடந்து அவன் முன் இருந்த அந்த மேஜையில் லே-அவுட்டை வைத்தாள். வைத்திவிட்டு திரும்பும் நேரம் அவனது தோள்பட்டையில் அவளது மோதிர விரல் லேசான தீண்டலை சந்திக்க, ஒரு நொடி உயிர் பூத்து நின்றாள் அம்ரிதா. அவளது நிலையை தன் மனம் வழியே படித்த அனேகன் மென்மையாய் முறுவலித்துக்கொண்டிருந்தான்.
தனக்கு ஏற்பட்ட அந்த உணர்வில் ‘யார் இவன்’ என திடுக்கிட்டுப் பார்த்த அம்ரிதாவுக்கு அவனது முதுகு மட்டுமே தரிசனம் தந்தது. அவளது மேனியை தன் மனதின் உதவியால் அனேகன் ஊடுருவிச் செல்ல, அது தரும் ஒருவித வர்ணிக்க இயலா உணர்வினின்று அவளால் வெளிவர இயலவில்லை. இந்த உணர்வுக்கும் முந்தைய நாள் தன் கையில் இருந்த பூச்செண்டிற்கும் நிச்சயம் சம்பந்தம் இருக்கிறது என்று அவளது மனது ஆணித்தரமாய் கூறியது.
அவன் யார் என்று நிச்சயம் பார்த்துவிட வேண்டும் என்று துடித்தாள். அவளது துடிப்பினை தன் மனதினுள் ரசித்துக் கொண்டிருந்தவன் வேண்டுமென்றே திரும்பாமல் சிலையென அமர்ந்திருந்தான். அவளது கண்களும் உதடுகளும் படபடக்க மலையென விரிந்திருந்த அவனது முதுகையே ஏக்கமாய் பார்த்தவாறு நின்றுக்கொண்டிருந்தாள் அம்ரிதா.
“வச்சிட்டு போக சொன்னேன்” என்று மிரட்டலாக கூறிய மோகனின் குரல் அம்ரிதாவை தன்னிலைக்கு திருப்பியதும் தான் அங்கு மோகனும் இருக்கிறான் என்பது அவள் நினைவிற்கு வந்தது.
‘எப்படி கத்துது பாரு காண்டாமிருகம்’ என்று மனதில் திட்டியவாறு அங்கிருந்து வெளியேறிய அம்ரிதா தனது அறைக்குச் சென்றாள்.
“ச்சே.. அவன் முன்னால என்ன இப்படி திட்டிட்டானே அந்த காண்டாமிருகம்.. அவன் என்ன பத்தி என்ன நினைச்சிருப்பான்.. காண்டாமிருகம்.. காண்டாமிருகம்.. நல்லா முட்ட போண்டா மாதிரி மூஞ்சியை வச்சிக்கிட்டு இவன் மொறைக்குற மொறை இருக்கே.. அந்த கண்ணு ரெண்டையும் நோண்டல என் பேரு அம்மு இல்லை.. ச்சே.. அவன் முகத்தை எப்படியாவது பார்த்திடலாம்-னு நினைச்சேன்.. எல்லாம் போச்சு..” என்று அவளது அறையில் அங்கும் இங்கும் நடந்தவாறு புலம்பிக்கொண்டிருந்தாள் அம்ரிதா.
சட்டென தனது புலம்பலை நிறுத்திக்கொண்டு காலுக்கு பிரேக் போட்ட அம்ரிதா “இவன் யாரு என்ன போ –னு சொல்லுறதுக்கு..? இன்னைக்கு அவன் முகத்தை நான் பார்க்காம ஓயமாட்டேன்..” என்றவள் தன் அறையின் வாசலை நோக்கி திருப்பிட, அங்கே அவளது அறையின் கதவை தாழிட்டு அதன் மேல் சாய்ந்துக்கொண்டு தன் கைகளைக் கட்டியவாறு சுவற்றில் இடது காலை ஊன்றி தன் தேகத்தின் மொத்த எடையையும் வலது தாங்கிய வண்ணம் மர்ம புன்னகையோடு நின்றிருந்தான் அனேகன்.
(களவாடுவான்)



என்றும் அன்புடன்
உங்கள் ஆனந்த லெட்சுமி
 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 6
எதிர்பாராத விதமாக தன் அறைக்குள் வந்து கதவினை சாத்தியபடி நின்றிருந்தவனைக் கண்டு அதிர்ந்துதான் போனாள் அம்ரிதா.
“ஏய்.. யா..யா..யார் நீ..?” என்றாள் திக்கித்திணறி.
“நான் யாருனு தெரிஞ்சிக்க அவ்வளவு ஆர்வமா..?” மெல்ல மெல்ல அவளை நோக்கி அடி எடுத்துவைத்துக் கொண்டே கேட்டான் அனேகன்.
“என்ன பேசிட்டு இருக்க..? எதுக்கு இப்ப கதவை மூடின..?” - பதட்டம் குறையவே இல்லை அம்ரிதாவுக்கு.
“நீதான என்ன பார்க்கனும்னு துடிச்சிட்டு இருந்த.. அதனால தான் வந்தேன்..” – தற்பொழுது அவளை முற்றிலுமாக நெருங்கியிருந்தான் அனேகன்.
‘நாம இவனை பார்க்கனும்னு நினைச்சது இவனுக்கு எப்படி தெரியும்’ என அவள் யோசித்துக்கொண்டிருக்க அவனது வாசனை மீண்டும் அவளது உயிரினுள் பிரவேசிக்கத் தொடங்கியது. அதனை இன்பத்தோடு நுகர்ந்தவளாய் மெல்ல மெல்ல கண்களை மூடினாள் அம்ரிதா. தன்னவள் இமை மூடிய அழகிய கற்சிலையாய் நிற்பதை கண்ட அனேகன் ஒரு நிமிடம் ஆடிப் போனான். தங்கள் இருவருக்கும் இடையில் செல்ல காற்றுக்கு கூட தடை விதித்திருந்தான் அவன். அவனது அருகாமை அவள் மனதினுள் ஏகாம்பர அமைதியை பரவச்செய்தது. அதிலிருந்து சிறிதும் விலகாதவளாய் மெல்லிய சிரிப்பு ஒன்றை அவள் வெளிப்படுத்த அனேகனது நெஞ்சமோ வஞ்சம் இன்றி அவள் காலடியில் வீழ்ந்தது.
“சகி….” என்று காற்றுக்கும் வலிக்காதபடி இதமாய் அழைத்தான் அவன்.
தற்பொழுது அவளுடைய புன்னகை கூடுதல் அடர்த்தியானது. அதனை ரசித்தபடியே மீண்டும் அழைத்தான் “சகி….” என்று.
இந்த முறை அந்த பொற்சிலை அசையத்தொடங்கியது. கண்களை திறக்காமலேயே அருகில் இருந்தவனின் கழுத்தினை தன் கரங்களால் வளைத்தது. அதனை அமோதித்தவனாய் அவள் இடையினை இறுக்கிக்கொண்டான் அனேகன். நகமும் சதையுமென ஒட்டியிருந்த அனேகனும் அம்ரிதாவும் வேறொரு உலகினில் பிரவேசித்துக் கொண்டிருக்க திடீரென கேட்ட “அம்மு” என்ற கர்ஜனை குரல் அவர்களை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது. இருவரும் ஒருசேர வாசலை நோக்க அங்கு காளியின் அவதாரம் எடுத்து நின்றுக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.
“அச்சு” என மிகவும் சாந்தமாக கேள்வியை கண்ணில் கொண்டு அழைத்தாள் அம்ரிதா.
“என்ன டி இது??” ஆத்திரம் வெடிக்க ஆஷ்ரிதா கேட்ட பின்புதான் அனேகனுடன் தான் அத்தனை நெருக்கமாய் நின்றிருப்பதை உணர்ந்தாள் அம்ரிதா. அதிர்ச்சியில் மின்சாரம் தூக்கி அடித்தது போல அவனிடம் இருந்து விலகி பின்னே சென்றவள் நாற்காலியின் கால் தடுக்கி கீழே விழ, அவளை ஓடிச்சென்று தாங்கிப்பிடித்தான் அனேகன். அவனது செயலைக் கண்டு மீண்டும் கொதித்த ஆஷ்ரிதா, அனேகன் அம்ரிதாவை நிலையாய் நிறுத்தவும் விரைந்து அவனிடம் சென்று அவன் கன்னத்தில் அறைய முற்பட அவளது கையை தடுத்துப்பிடித்தாள் அம்ரிதா.
அம்ரிதாவிடம் இருந்து இதனை எதிர்பார்க்காத ஆஷ்ரிதா கோபத்தில் மூச்சிறைத்தபடி அவளை திரும்பிப் பார்த்தாள். தீர்க்கமான பார்வையுடன் துளியும் கண்ணிமைக்காமல் ஆஷ்ரிதாவை பார்வையால் துளைத்துக்கொண்டிருந்தாள் அம்ரிதா.
“அம்மு.. என்ன பண்ணுற நீ” – அடக்க முடியா கோபத்தில் ஆஷ்ரிதா கத்தினாள்.
அம்ரிதாவிடம் எந்த ஒரு பதிலும் வரவில்லை. மாறாய் தன் கைகளில் வெறி கூட்டியவளாய் ஆஷ்ரிதாவின் கையினை இறுக்கிக்கொண்டிருந்தாள் அம்ரிதா. வலி தாங்க முடியாமல் அவளது கையில் இருந்து தன் கையை விடிவிக்க முயன்றுக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா. ஆனால் பலனோ பூஜ்யம் தான். கையின் பிடி வழுவாய் இருக்க அதன் வீரியம் எவ்வளவு என்று ஆஷ்ரிதாவின் கண்களில் தெரிந்தது. கோபம் நிறைந்திருந்த கண்கள் தற்போது வலி தரும் வேதனையில் கண்ணீரை கொட்டிக்கொண்டிருந்தது. தன்னை காப்பாற்றும்படி வேண்டும் பாணியில் அனேகனை நோக்கினாள் ஆஷ்ரிதா. அதுவரை அமைதியாய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அனேகன் “சகி” என்றபடி அம்ரிதாவின் தோளில் கைவைக்க, அது என்ன செய்தி சொன்னதோ தெரியவில்லை அம்ரிதா தன் இறுக்கத்தை மெல்ல விடுவித்தாள்.
சிறிய தளர்ச்சி கிடைக்கப் பெற்றவுடன் வேகமாக தன் கையினை உருவிக்கொண்ட ஆஷ்ரிதா சிவந்த தன் மணிகட்டுகளை கண்ணீர் மல்க தடவினாள்.
“ஆஷ்ரிதா” – அனேகன் அழைத்தான்.
“யாரு டா நீ..? என்ன செஞ்சிக்கிட்டு இருக்க..?” – கை வலி தரும் வேதனையை விட, தான் கண்ட காட்சியும் அம்ரிதாவின் செய்கையும் மனதில் அதிகம் வலியை தந்திருந்தது ஆஷ்ரிதாவுக்கு.
“நான் சொல்லுறத கொஞ்சம் கேளு..” – அனேகன்.
“இன்னும் என்ன கேட்க சொல்லுற..? ஆரம்பத்துல இருந்தே உன்ன நான் நம்பல.. நீதான் என்னென்னவோ பேசி என்ன குழப்பிட்ட.. இப்ப என்னடானா என் அம்முவ.. ச்சீ.. நீயெல்லாம் மனுஷனா..? என் அம்முவ என்ன செஞ்சி வச்சிருக்க..? அவ என்கிட்ட இப்ப இப்படி நடந்துக்க நீதான் காரணம்.. நான் உன்ன சும்மா விடமாட்டேன்..” – என எள்ளும் கொள்ளுமாக வெடித்தாள் ஆஷ்ரிதா.
இவர்கள் இவ்வாறு ஒருவரை ஒருவர் முட்டிக்கொண்டிருக்க, தனக்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதுபோல அமைதியாக நின்றிருந்தாள் அம்ரிதா.
“என்ன டா நினைச்சிட்டு இருக்க..? ஆம்பளை இல்லாத வீடு-னு என்ன வேணும்னாலும் பண்ணலாம்-னு நினைச்சிட்டியா..? கழுத்த அறுத்து கீழ வச்சிருவேன் ஜாக்கிரதை” - ஆதங்கம் அடங்காமல் சீறிக்கொண்டிருந்த ஆஷ்ரிதாவிடம் ஆயிரம் காளியின் பிம்பத்தை காண முடிந்தது அனேகனுக்கு. இருந்தும் அவன் முகத்தில் எந்த ஒரு சலனமும் காணப்படவில்லை. அது இன்னும் ஆத்திரத்தை ஏற்றியது ஆஷ்ரிதாவுக்கு.
“என்ன நாடகம் டா நடத்திக்கிட்டு இருக்க..? எங்க உன் தலையில பாதி முடிய காணோம்..? தரைய தூக்குற மாதிரி வளர்த்து வச்சிருப்ப.. என்கிட்ட அப்படி முகத்தை காட்டிட்டு என் அம்முவ ஏமாத்த இந்த வேஷமா..? இது வேஷமா இல்லை அது வேஷமா..? என்ன பார்க்க வரும் போது விக் வச்சிட்டு வருவியா..?” – அவனை பேசவிடாது மேலும் மேலும் சாட்டையடியாய் கேள்வியை அடுக்கிக்கொண்டே இருந்தாள் ஆஷ்ரிதா.
“கேன் யூ ஷட் ஆப்” – பொறுமை இழந்தவனாய் இடியென கத்தினான் அனேகன்.
அந்த சத்தத்தில் திடுக்கிட்டு தன் வாயை கைகளால் மூடியபடி நின்ற ஆஷ்ரிதா யாரேனும் வந்துவிடுவாரோ என்ற அச்சத்தில் நடுங்கியபடியே வாசலை திரும்பிப்பார்த்தாள். அவள் மனதின் அச்சத்தை புரிந்துக்கொண்டவன் “யாரும் வர மாட்டாங்க.. ஏ.சி. ரூம் தான். சத்தம் வெளியில போகாது..” என்றான்.
யாரும் அறிய மாட்டார் என்ற செய்தி நிம்மதியளித்தாலும் அந்த சூழலில் அவளது மனது நொந்துப்போய் தான் இருந்தது.
“உன் அம்முவ தொட்டு பாரு..” என்றான் அனேகன்.
எதற்கு சொல்கிறான் என்று புரியாமல் திருதிருவென விழித்தாள் ஆஷ்ரிதா.
“டச் ஹெர்..” என மீண்டும் சீறினான் அனேகன்.
அந்த அலறலில் பதறிய ஆஷ்ரிதா தனது நடுங்கும் கைகளால் மெல்ல அம்ரிதாவை தொட்டு உலுக்க அங்கேயே மயங்கி விழுந்தாள் அம்ரிதா.
“அம்மு.. அம்மு.. என்ன ஆச்சு அம்மு..” என்று வேகமாக அவள் கன்னத்தில் தட்டினாள் ஆஷ்ரிதா. அம்ரிதா எழுந்துக்கொள்ளவில்லை என்கவும் அனேகனை வினாவாக பார்த்தாள் ஆஷ்ரிதா.
“வா.. வந்து இங்க உட்காரு..” என அருகில் இருந்த சோபாவை காட்டிய அனேகன் அவளுக்கு முன் அங்கு போய் அமர்ந்தான். அம்ரிதாவின் அருகில் இருந்து எழுந்தவள் மெல்ல மெல்ல நடந்து அனேகனுக்கு எதிர் சோபாவில் அமர்ந்தாள்.
“உன் கோபம் எனக்கு புரியுது.. ஆனால் இது எல்லாம் உன் அம்மு-வ அதாவது என் சகி-ய சரி செய்யுறதுக்குதான்..” – அனேகன் சொல்லி முடித்ததுதான் தாமதம்.
“என்ன உன் சகியா..?” - ஆஷ்ரிதாவின் கண்கள் மீண்டும் அனலை கக்கத் தொடங்கியிருந்தது.
“கொஞ்சம் நேரம் நான் பேசுறத அமைதியா கேளு..” என்று அனேகன் கூறவும் தனக்கு வந்த ஆத்திரத்தை மிகுந்த சிரத்தையுடன் கட்டுப்படுத்தினாள் ஆஷ்ரிதா. அவளை சொல்லியும் குற்றமில்லை. யாருக்கும் வரக்கூடிய கோபம் தானே. அப்படி ஒரு காட்சியை கண்ட பின்னர் அவளால் எவ்வாறு அமைதியாய் இருந்திருக்க முடியும்.
“நான் இந்த கேஸ் –க்கு சம்பந்தம் இல்லாத எதையும் உன்கிட்ட பேசவோ கேட்கவோ மாட்டேன் –ன்னு ஆல்ரெடி சொல்லியிருக்கேன்..” என அனேகன் சொல்ல அவனை இடை வெட்டிய ஆஷ்ரிதா
“ஆமா சார்.. அவசியம் இல்லாததை என்கிட்ட பேசமாட்டேன் –னு சொன்னீங்க.. ஆனால் அவசியம் இல்லாத அநாகரீகமான செயலை செய்ய மாட்டேன் –னு நீங்க எனக்கு சொல்லலையே.. பின்ன நான் எப்படி உங்கள சத்தம் போட முடியும்..” என்று வலி நிறைந்த புன்னகையோடு கூறிய ஆஷ்ரிதா அநாகரிகம் என்ற வார்த்தையில் கொடுத்த அழுத்தம் அனேகனின் சினத்தைத் தூண்டிட
“எது அநாகரிகம்..? என் சகி -அ நான் பார்த்துகிறதா..?” என்று சோபாவின் இருபுறமும் ஓங்கி அடித்தபடி ஆக்ரோஷமாய் எழுந்து நின்றான் அனேகன்.
நடப்பவை புரியாமல் வெதும்பிப்போய் இருந்த ஆஷ்ரிதாவுக்கு என்ன சொல்வதென்று விளங்கவில்லை. ஒரு வித அசவுகரியமான அமைதி அங்கு நிலவ அதை கலைக்கும் விதமாய் ஒலித்தது அனேகனின் அலைபேசி.
“யஸ் பா..” - அனேகன்
“என்ன டா.. பதில் சொல்லாம எழுந்து போய்ட்ட..? க்ளையண்ட் –அ தான் கல்யாணம் பண்ணிக்க போறியா..?” – அலைபேசியில் மோகன் கேட்டார்.
“பேஷண்ட் –அ” என அஷ்ரிதாவின் விழிகளை கூர்மையாக பார்த்தபடி கூறிவிட்டு அலைபேசியை அணைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான் அனேகன்.
வாசலில் அவன் பிம்பம் மறையும் வரை அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஆஷ்ரிதா, மயக்கத்தில் இருந்து முனங்கிக்கொண்டே எழும் அம்ரிதாவை கண்டதும் வேகமாக எழுந்து அவள் அருகே ஓடினாள்.
“தலை வலிக்குது அச்சு” – பாவமாக கூறிய அம்ரிதாவை கண்டு கண்கள் கலங்கித்தான் போனது ஆஷ்ரிதாவுக்கு.
“எழுந்து உட்காரு வா” – என அவளை தூக்கி சோபாவில் அமரவைத்தாள் ஆஷ்ரிதா.
“அச்சு.. ஆபீஸ்லயா இருக்கேன்.. இங்க போய் நான் ஏன் தரையில படுத்திருந்தேன்..? ஆமா நீ எப்படி இங்க..?” – அம்ரிதா.
“சாப்பாட வீட்டுல வச்சிட்டு வந்துட்ட.. இதோ இந்த ஃபைலும் இருந்தது.. ஏதாவது முக்கியமான ஃபைலானு தெரியல.. உனக்கு கால் பண்ணா ஸ்விட் ஆஃப்.. ஆதான் இங்க வந்தேன்..” – ஆஷ்ரிதா.
“ஆமா.. நேத்து நைட் பேசிட்டே உட்கார்ந்துட்டோம்.. ஃபோன எடுக்கவும் இல்லை, சார்ஜ் போடவும் இல்லை..” என்றபடி எழுந்து தன் கை பையில் இருந்த அலைபேசியை எடுத்து சார்ஜரில் மாட்டி வைத்தாள் அம்ரிதா. அவள் மயங்கிக்கிடந்ததன் காரணத்தை தான் கூறாமல் விட்டதை அவள் கேட்கவில்லை என சிறியதாய் ஆசுவாசமடைந்தாள் ஆஷ்ரிதா.
ஆனால் அந்த நிம்மதி அவளுக்கு சற்று நேரம் கூட நிலைக்கவில்லை. சார்ஜ் போட்டு திரும்பிய முதல் கனமே அதை பற்றிதான் கேட்டாள் அம்ரிதா.
“வீட்டுலதான் நான் தூங்கிட்டே இருக்கேன் –னு பார்த்தா ஆஃபீஸ்க்கும் வந்தும் இப்படிதான் இருக்கேனா..?” தன் நிலையை நினைத்து வருந்தியவளாய் கேட்டாள் அம்ரிதா.
நடந்தவை எதுவும் அம்ரிதாவுக்கு நினைவில் இல்லை என புரிந்தது ஆஷ்ரிதாவுக்கு. ‘என் அம்முவ இவன் என்ன செஞ்சி வச்சிருக்கான்னு தெரியலையே.. ஒன்னுமே நியாபகம் இல்லைனு சொல்லுறா.. இவன நம்புறதா வேணாமா..? ஒரே குழப்பமா இருக்கே இறைவா’ என மனதினுள் நொந்துக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.
“ஏய் என்ன..? எனக்கு ஒன்னும் இல்லை டி.. டேபிலெட் டோசேஜ் அதிகமாகிடுச்சுனு நினைக்குறேன்.. அதனால தான் இங்க வந்து தூங்கிட்டேன். நல்ல வேளை அந்த காண்டாமிருகம் என்ன பார்க்கல..” என்று ஆஷ்ரிதாவை சமாதனப்படுத்தும் வண்ணம் அம்ரிதா பேசிக்கொண்டிருக்க வேகமாக எழுந்து அந்த அறையின் வாயிலை நோக்கி நடந்தாள் ஆஷ்ரிதா.
“எங்க டி போற..?” – குழப்பமாய் அம்ரிதா கேட்க
“நீ உன் வேலையை கவனி.. எனக்கு முக்கியமான வேலை இருக்கு.. போய்டு வர்றேன்..” என்றவள் அம்ரிதாவின் அலுவலகத்தின் கார் பார்க்கிங் –க்கு விரைந்தாள். அங்கு அனேகனது கார் இல்லை. அவன் சென்றுவிட்டான் என உணர்ந்தவள் வேகமாக தனது அலைபேசியை எடுத்து அனேகனுக்கு அழைப்புக் கொடுத்தாள்.
அவன் அழைப்பை எடுக்காமல் போக, அதில் உட்சபட்ச கோபத்தை அடைந்தவள் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு டாக்டர் பிரபாகரன் க்ளீனிக்கிற்கு விரைந்தாள். வெளி நோயாளிகளை பார்ப்பதில் டாக்டர் பிரபாகரன் பரபரப்பாக இருக்க சிறிது நேர காத்திருப்புக்கு பின்னரே அவரை சந்திக்க முடியும் என்றார் வரவேற்பரையில் இருந்த பெண்.
“எனக்கு இப்பவே டாக்டரை பார்க்கனும் சிஸ்டர்.. என்ன உள்ள அனுப்புங்க” -ஆங்காரமாய் அவள் கத்தியதில் அங்கிருந்த நோயாளிகள் அனைவர் கண்களுக்கும் வேடிக்கை பொருளானாள் ஆஷ்ரிதா.
“சொன்ன புரியாத உங்களுக்கு.. இத்தனை பேஷண்ட் வந்து வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. பார்த்தா தெரியலையா..?” -வரவேற்பறை பெண் காட்டமாக கூற
“என்ன வேலைக்கு புதுசா.. ரிஷப்ஷனிஸ்ட் ஸ்ரீஜா எங்கே..? அவங்க கிட்ட கேளுங்க நான் யாருனு..” – ஆஷ்ரிதா.
இவ்வாறு இங்கே சண்டை நடந்துக்கொண்டிருக்க அங்கு எதர்ச்சையாக தன் அம்மாவை சிகிச்சைக்காக கூட்டிக்கொண்டு வந்திருந்த திரவியம் ஆஷ்ரிதாவை கண்டு அதிர்ச்சியானான். அவனது அம்மாவை ஒரு நாற்காலியில் அமரவைத்துவிட்டு ஆஷ்ரிதாவின் அருகே வந்தவன்
“அச்சு.. வாட் ஆர் யூ டூயிங்..? பிஹேவ் யுவர்செல்ஃப்..” என அதட்டினான்.
“திரு.. வா.. வந்து என்ன உள்ளே விட சொல்லு.. நான் டாக்டர் பிரபாகரன உடனே பார்க்கனும்..” என்று அவனிடமும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.
“அப்படி என்ன தலை போற விஷயம்..? எல்லாரும் உன்னதான் பார்க்குறாங்க.. பாரு..” என்றான் திரவியம்.
அப்பொழுது சுற்றிலும் தன் பார்வையை சுழலவிட்ட ஆஷ்ரிதா தான் செய்துக்கொண்டிருக்கும் காரியத்தை எண்ணி தன்னை தானே நொந்துக்கொண்டாள். அனைவரும் தன்னையே நோக்கிக்கொண்டிருக்க அவமானமாய் உணர்ந்தவள் அதற்கு மேல் அங்கு இருக்க இயலாதவளாய் க்ளீனிக்கை விட்டு வேகமாக வெளியேறி அவளது இருசக்கர வாகனம் அருகே சென்று நின்றுக்கொண்டாள்.
அவள் பின்னாடியே ஓடி வந்த திரவியம் அவளது கைகளை பற்றிக் கொண்டு “என்ன ஆச்சு அச்சு..” என்றான் சாந்தமாக.
அவள் ஏதோ சொல்ல வாயெடுக்கவும் அவள் வாயின் மீது கைவைத்தவன் “ஒன்னும் இல்லை.. நான் பாத்துகறேன்னு மட்டும் சொல்லாத அச்சு..” என்றான்.
இதை கேட்ட ஆஷ்ரிதா தன் உதட்டில் மெளத்தை ஒட்டிக்கொண்டு கண்கள் கலங்கி நின்றாள். எப்பொழுதும் அவள் முகத்தில் சிரிப்பை மட்டுமே கண்ட திரவியத்தால் அந்த அழுகை தொற்றிய முகத்தை காண இயலவில்லை. தன் நெஞ்சில் ஆயிரம் ஈட்டி பாய்ந்தது போல உணர்ந்தான்.
“உன்ன நான் இப்படி பார்த்ததில்லை அச்சு.. நீ இப்படி நடந்துகிறவளும் இல்லை.. என்னாதான் நடக்குது..? என்மேல நம்பிக்கை இருந்தா சொல்லு.. என்னால முடிஞ்ச உதவிய நான் செய்யறேன்.. இல்லை சொல்லக்கூடாத விஷயம்னா வேணாம்.. நான் உன்ன கம்பல் பண்ணல..” என்று அவன் சொல்லவும் நடந்த எல்லா விஷயத்தையும் ஒட்டு மொத்தமாய் கூறினாள் ஆஷ்ரிதா.
அதை கேட்டவுடன் “ஹாஹாஹா” என இடைவிடாது வாய்விட்டு சிரித்தான் திரவியம். ஒன்றும் புரியாதவளாய் அவனை பார்த்துக்கொண்டிருந்த ஆஷ்ரிதா ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தவளாய் “ஷட் அப் திரு.. வாட் நான்சென்ஸ்” என்று கர்ஜித்தாள்.
அவளுக்கு கோபம் வந்துவிட்டதே என எண்ணி தன் சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிய திரவியம் சிற்சில இடைவெளியில் சிரித்த வண்ணம் “எது நான்சென்ஸ் அச்சு.. நீதான் நான்சென்ஸ் மாதிரி பேசுற” என்று கூறினான்.
“என்ன நான் நான்சென்ஸ் –ஆ” என கண்கள் சிவக்க அவள் கேட்க
“கூல் கூல்.. என்ன பேசுற நீ.. முன் ஜென்மமாம் மறு ஜென்மமாம்.. அது யாரு அவன் அனேகனா.. அவன் கண்டுபிடிச்சி சொன்னானா இத..? படிச்ச பொண்ணு தான நீ..வெரி சில்லி..” என்று சிறிய முறுவலோடு கேட்டான் திரவியம்.
“டோண்ட் ஹர்ட் மை ஃபீலிங்க்ஸ் திரு.. ஜஸ்ட் ஸ்டாப் லாஃபிங்” என்று வலிகள் நிறம்பிய குரலில் கூறினாள் ஆஷ்ரிதா.
(களவாடுவான்)




என்றும் அன்புடன்
உங்கள் ஆனந்த லெட்சுமி
 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 7
“ஓகே ஓகே.. சாரி.. ஆனால் இத எல்லாம் நீ எப்படி நம்பின அச்சு.. நீயே சொல்லு.. அம்முவுக்கு தூக்கத்துல மல்டிபிள் டிரீம்ஸ் வந்து ஏதோ அறகுறையா நியாபகத்துல வச்சி என்னமோ அப்பப்ப பேசுறா.. அவ இத்தனை இயர்ஸ் –ஆ எடுத்துக்கற டேபிளட்ஸோட எஃபக்ட்.. டேபிளட்ஸ் நிறுத்த வேண்டிய பீரியட் வரும் போது இது எல்லாம் தானா சரியா போகும்..” என்றான் திரவியம்.
“அம்மு சொல்லுற கனவு, திடீர் திடீர்னு அவ கத்தி கலாட்டா பண்ணுற விஷயம் இது எல்லாம் டேபிளட் எஃபெட் –னு சொல்லுற.. சரி.. ஆனால் இன்னைக்கு அம்மு அந்த அனேகனோட அப்படி நின்னது..? அவ மயங்கி விழுந்தது..?” என்று கண்ணீர் குளமாய் இருந்த கண்களை துடைத்தவாறு கேட்டாள் ஆஷ்ரிதா.
“எல்லாம் அந்த பொறுக்கி நாயி வேலையாதான் இருக்கும்.. அவன் என்னத்த பண்ணி தொலச்சானோ யாருக்கு தெரியும்..?” என திரவியம் சொல்லவும் பட்டென அவனை திரும்பிப் பார்த்து முறைத்த ஆஷ்ரிதாவிடம்
“ஹேய்.. அம்மு –வ தப்பு சொல்லல.. அம்மு மயங்கி விழுந்தானு சொல்லுற, எழுந்ததும் அவளுக்கு ஒன்னும் நியாபகம் இல்லைனு சொல்லுற.. அவன் டாக்டர் வேற.. என்னத்தையாவது எதுலயாவது கலந்துக் கொடுத்திருந்தா..? அதை தான் சொன்னேன்.. நீ ஆளு யாருனு மட்டும் காட்டு எனக்கு.. நான் பார்த்துக்கறேன் அவன..” என தான் அணிந்திருந்த சட்டையின் கையினை மணிக்கட்டு வரை மடக்கிவிட்டவாறு கூறினான் திரவியம்.
அனேகனுக்கும் ஆஷ்ரிதாவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே முட்டிக் கொண்டிருந்தாலும் அவன் மேல் இப்படி ஒரு சந்தேகம் ஆஷ்ரிதாவுக்கு மனதளவில் வந்தது இல்லை என்பதே உண்மை. ஆண்கள் இல்லா வீடு பதம் பார்த்து விடலாம் என மற்றவர் தங்களை நினைத்துவிட கூடாது என்பதற்காக யாரையும் எதனையும் நம்பாதவளாய் தன்னை காட்டிக் கொள்ள குறுக்கு கேள்விகளும் அடாவடி பேச்சுமாக இருப்பாலே தவிர வேறு எந்த எண்ணமும் ஆஷ்ரிதா மனதில் இதுவரை இருந்ததில்லை.
திரவியம் “அவன் என்னத்தையாவது எதுலயாவது கலந்துக் கொடுத்திருந்தா..?” என்று கூறும் பொழுது அனேகன் அத்தனை கீழ் தரமானவன் இல்லை என ஆஷ்ரிதாவின் மனம் அடித்து கூறியது. அதை இவனிடம் எப்படி சொல்லுவது என எண்ணியவள்
“இல்லை திரு.. நான் பார்த்துக்கறேன்..” என கண்டிப்போடு கூறினாள். இதை கேட்ட திரவியத்திற்கு ஆஷ்ரிதாவின் மீது கோபம் தான் வந்தது.
“என்னத்த பார்த்துக்க போற நீ..? நீ பார்த்த லட்சணம் தான் தெரியுதே.. எவனோ வந்தானாம், முன்ஜென்மம் -னு சொன்னானாம், கட்டிப்புடிச்சிட்டு நின்னானாம் அவன் கூட ஹாயா உட்கார்ந்து பேசிட்டு வந்தாளாம்.. இனி நான் சொல்லுறத..” அடுத்த வார்த்தையை அவன் சொல்லுவதற்கு முன்னால் பளார் என அவன் கன்னத்தில் ஒரு அறை வைத்திருந்தாள் ஆஷ்ரிதா.
ஏற்கனவே நடந்தவற்றில் மனம் முழுவதுமாக உடைந்திருந்தவளுக்கு எது உண்மை எது பொய் எதை நம்ப வேண்டும் என்ற எல்லா குழப்பங்களுடன் சேர்ந்து அம்ரிதாவை எப்படி சரி செய்ய போகிறோம் என்ற அச்சமும் வாட்டிக் கொண்டிருக்க, ஆரம்பத்தில் தான் சொல்வதை கேட்டு சிரித்ததோடு மட்டும் இல்லாமல் இப்போது உரிமை என்னும் பெயரிலும் அக்கறை என்னும் பெயரிலும் அவன் பேசிய இத்தகைய கடுமையான வார்த்தைகள் ஆஷ்ரிதாவின் நெஞ்சில் கீறல்களை ஏற்படுத்தியது.
அவளிடம் இருந்து இப்படி ஒரு எதிர்வினையை எதிர்பார்த்திடாத திரவியம் அதிர்ச்சியில் அசையாது நின்றுக்கொண்டிருந்தான். அவனை அறைந்த கையின் விரல்களை மடக்கி இறுக்கிக் கொண்டு, கண்களை மூடி பல்லை கடித்துக்கொண்டு பெறுமூச்சு ஒன்றை வெளியே விட்ட ஆஷ்ரிதா அவனை ஏறிட்டும் பார்க்காமல் தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
நேராக தன் வீட்டிற்கு வந்த ஆஷ்ரிதா குளியலறைக்குள் சென்று ஷவரை திறந்துவிட்டவள் அதிலிருந்துக் கொட்டும் தண்ணீரில் நனைந்துக் கொண்டே அழ ஆரம்பித்தாள். சத்தம் கேட்டு ஓடி வந்த பொன்னம்மாவுக்கு அந்த காட்சியை கண்டதும் மனம் பதறிப்போனது.
“அய்யோ.. என்ன பாப்பா ஆச்சு.. எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க..?” என்று திறந்திருந்த குளியலறையை நோக்கி ஓடினார்.
“வாங்க பாப்பா.. வெளியில வாங்க.. உடம்புக்கு ஏதாவது வந்திடப்போகுது.. சொன்னா கேளுங்க..” என ஆஷ்ரிதாவை வெளியில் இழுத்து வர முயன்றுக் கொண்டிருந்தார் பொன்னம்மா.
“என்ன விடு பொன்னம்மா.. தலை வெடிச்சிரும் போல இருக்குது.. இந்த தண்ணீல நனஞ்சாலாவது தலையில இருக்கற சூடு கொஞ்சம் குறையுதானு பார்க்கிறேன்..” என்று அழுதவாறே கூறினாள்.
பொன்னம்மாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, என்ன விஷயம் என்றும் புரியவில்லை. இப்படி மனம் உடைந்து அழும் ஆஷ்ரிதாவை இந்த சமயத்தில் அதிகம் கட்டாயப்படுத்த விரும்பாத பொன்னமா அங்கிருந்து அகன்று சமயலறைக்குள் சென்றார். சூடாக தேனீர் தயாரித்துக் கொண்டு வந்து உணவு மேஜையில் வைத்தவர் ஆஷ்ரிதாவை தேடிப் பார்த்தார்.
இன்னும் அவள் குளியலறையில் இருந்து வெளியே வரவில்லை என்றதும் அங்கு சென்ற பொன்னம்மா, அழுது அழுது சோர்ந்தவளாய் லேசான மூச்சிறைப்புடன் ஸ்வப்த நாடிகளும் அடங்கி போய் அமர்ந்திருந்த ஆஷ்ரிதாவை கண்டார்.
இத்தனை வருடத்தில் தான் கண்டிராத இத்தகைய காட்சி அவரின் மனதை பிழிந்தெடுக்க, “ஆத்தா.. பேச்சியம்மா.. உனக்கு கண்ணு இல்லையா.. இந்த புள்ளைங்கள ஏன் இப்படி போட்டு படுத்தற..? ஒருத்தரையும் ஒரு சொல்லு சொல்லாத இந்த புள்ளைங்களுக்கு எதுக்கு இப்படியெல்லாம் நடக்குது..?” என்று தன் மார்பில் அடித்துக்கொண்டு அழுதவாறு ஆஷ்ரிதாவை நெருங்கினார்.
“பாப்பா.. உள்ள எழுந்து வாங்க.. இப்படியே தண்ணிக்குள்ள உட்கார்ந்திருந்தா உடம்பு என்ன ஆகுறது..? வாங்க..” என ஒரு கையால் ஆஷ்ரிதாவை தூக்கிய பொன்னம்மா மறு கையால் ஷவரை அடைத்தார். கைத்தாங்கலாக ஆஷ்ரிதாவை அவளது அறைக்கு அழைத்து வந்த பொன்னம்மா மாற்று உடையை எடுத்துக் கொடுத்து அதை மாற்றிவிட்டு வரும் படி கூறினார். ஆனால் எந்த உணர்ச்சியும் வெளிப்படாது பேயறைந்தாற் போல நின்றிருந்தாள் ஆஷ்ரிதா.
அவளை தோள் பற்றி பொன்னம்மா உலுக்கிட, அவரது கை நடுக்கத்தை உணர்ந்த ஆஷ்ரிதா வயதானவரை தான் மிகவும் துன்பப்படுத்திக் கொண்டிருக்கிறோமே என எண்ணி தன் நிலை மீண்டாள். பொன்னம்மாவின் கைகளில் இருந்த உடைகளை வாங்கியவள் அதனை மாற்றிக் கொண்டு வெளியே வந்து சோஃபாவின் மீது பொத்தென்று அமர்ந்து தன் முதுகை மொத்தமும் சோஃபாவின் சாய்விடத்தில் சாய்தவளாய் கண்மூடி அமர்ந்திருந்தாள்.
பொன்னம்மா தான் தயாரித்து வைத்திருந்த தேனீரை கொண்டுவந்து ஆஷ்ரிதாவிடம் நீட்டி “இத குடிங்க பாப்பா” என்றார். கண்கள் திறந்து பார்த்தவள் வேண்டாமென தலையை மட்டும் அசைத்திட பொன்னம்மாவின் கண்கள் மீண்டும் கலங்கத் தொடங்கியது. அப்படியே அசையாது தேனீரை நீட்டியவாறு அங்கேயே நின்றிருந்தார் பொன்னம்மா.
இதனை கண்ட ஆஷ்ரிதா “பொன்னாம்மா.. எதுக்கு இப்ப அழறீங்க.. கொடுங்க நான் குடிக்கிறேன்..” என வாங்கிக்கொள்ள தற்போது அவர் புன்னகை பூத்தார். “குடிச்சிட்டேன்.. இப்ப சந்தோஷமா..?” என ஆஷ்ரிதா கேட்கவும் இல்லை என மறுப்பாக தலையாட்டிய பொன்னம்மாவை என்ன என்பது போல பார்த்தாள் ஆஷ்ரிதா.
“என்ன ஆச்சு பாப்பா.. இதுவரை நான் உங்கள இப்படி பார்த்ததே இல்லை.. இவ்வளவு அழற அளவு என்ன நடந்தது..?” என கேட்டவாறு ஆஷ்ரிதாவின் காலுக்கு அருகே தரையில் அமர்ந்தார் பொன்னாம்மா. ஆஷ்ரிதாவிடம் பதில் எதுவும் இல்லை. அமைதியாக அமர்ந்திருந்த ஆஷ்ரிதாவை கண்டதும் அவளுக்கு சொல்ல விருப்பமில்லை என்று எண்ணிய பொன்னம்மா அங்கிருந்து எழுந்துக் கொள்ள எத்தனித்தார். திடுமென அவரது தோளைப் பிடித்து நிறுத்திய ஆஷ்ரிதா “உங்களுக்கு மந்திரவாதி யாரையாவது தெரியுமா பொன்னம்மா..?” என்று கேட்டாள்.
“என்ன மந்திரவாதியா..??” அதிர்ச்சியும் குழப்பமுமாய் கேட்டார் பொன்னம்மா.
“ஆமாம் பொன்னம்மா” என்ற ஆஷ்ரிதா பொன்னமாவிடம் அம்ரிதாவுக்கு முன் ஜென்ம நினைவுகள் வந்து போவதாய் மட்டும் சொன்னவள் “ஏதாவது பூஜை புனஸ்காரம் செய்து பார்த்தால் என்ன என தோன்றுகிறது..?” என்கவும் ஒரு யோசனை பார்வை பார்த்த பொன்னம்மா “தெரியும் மா.. நான் வருகிற வெள்ளிக்கிழமை அவங்க கிட்ட உங்களை கூட்டிட்டு போறேன்..” என்றார்.
“சரி பொன்னம்மா” என்றவளுக்கு அப்பொழுது தான் நியாபகம் வந்தது டாக்டர் பிரபாகரனை பார்க்காமலேயே தான் வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டோம் என்று. உடனே தனது அலைப்பேசியை எடுத்தவள் அவருக்கு அழைப்புக் கொடுத்தாள். அழைப்பு மணி முழுவதுமாக ஒலித்து நின்றது மறு பக்கத்தில். “ப்ச்” என அலைபேசியை சோஃபாவில் தூக்கி எறிந்தவள் கண்களை மூடி அப்படியே சரிந்தாள்.
அத்தனை அழுத்தங்களையும் உள்ளடக்கியதால் சோர்ந்திருந்த அவளது மூளைக்கு சிறிது ஓய்வு தேவைப்பட்டது. அதன் விளைவாய் நன்கு உறங்கிக்கொண்டிருந்த ஆஷ்ரிதாவை பார்த்த பொன்னம்மா அவர்களது தாய் யசோதையின் உருவ படத்திற்கு முன் சென்று விளக்கை ஏற்றி “உன் புள்ளைகள நீதான் பார்த்துக்கனும்.. அவங்களுக்கு துணை நீதான் தாயி” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஒரு முறை ஆஷ்ரிதாவை பார்த்தவர் அடுத்த வேலையை கவனிக்கச் சென்றுவிட்டார்.
அதே நேரம் அனேகன் அவனது ஃபிளாட்டில் தனது மடிகணினியை வெறித்தவாறு அமர்ந்திருக்க வேகமாக உள்ளே வந்த மோகன்
“என்ன மிஸ்டர் அனேகன்.. உங்கள பார்க்கறதுக்கும் உங்ககிட்ட இருந்து ஒரு பதில வாங்குறதுக்கும் நாங்க நாய் மாதிரி உங்க பின்னால சுத்திக்கிட்டே திரியனுமா..? வேற வேலை இல்லையா எனக்கு?” என்று கத்தினான்.
தனக்கு முன் வந்து நின்று காட்டு கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கும் மோகனை சிறிதும் சட்டை செய்யாதவன் தன் வேலையிலேயே மூழ்கியிருந்தான்.
“டேய்.. உங்கிட்ட தான் டா கத்திக்கிட்டு இருக்கேன்..” என்று கோபம் கொந்தளிக்க கூறினான் மோகன்.
மடிகணினியின் திரையில் இருந்த தன் பார்வையை சற்றே நிமிர்த்தி மிகவும் அமைதியாய் மோகனை பார்த்தான் அனேகன். கோபத்தின் தீவிரம் கூடி மேலும் கீழுமாய் மூச்சை வேகமாக விட்டுக்கொண்டிருந்தான் மோகன். தான் அருகில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அனேகன் மோகனிடம் நீட்ட, அதனை வாங்கிப் பருகிக் கொண்ட மோகன் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அனேகனுக்கு அருகே அமர்ந்தான்.
“டேய்.. அப்பா மேல இவ்வளவு பாசம் இருக்குதுல.. பின்ன ஏன் டா இப்படி என்ன அங்க இங்கனு சுத்த விடுற..? வயசான காலத்துல என்னால இப்படி உன் பின்னாடியே ஓடிக்கிட்டு இருக்க முடியுமா..? நம்ம வீட்டுல வந்து இருக்க சொன்னாலும் கேட்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்க.. கால காலத்துல எனக்கும் உன் அம்மாவுக்கும் பேர புள்ளைங்கள பார்க்க ஆசை இருக்காதா?” என்று அடுக்கு மொழியாய் ஸ்ருதி பாட ஆரம்பித்தார்.
அனேகனோ அதற்கு விடையாய் ஒரே ஒரு பார்வையை தான் செலுத்தினான். அதை கண்ட மோகன் “புரியுது.. கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டனே அப்படீன்னு என்னை பார்க்கறது புரியுது.. ஆனால் பொண்ணு யாரு, எப்ப கல்யாணம் பேசலாம் எதுவும் சொல்லாம போய்ட்டியே பா” என்றார் பாவமாக.
அப்பாவி போல பேசிய மோகனை மிகவும் ஏளனமாய் திரும்பிப் பார்த்த அனேகன் “அப்பா.. உங்க மேல உள்ள பாசத்துல தண்ணி எடுத்துக் கொடுத்தேன்னு நினைச்சீங்களா..? அடுத்து நான் சொல்ல போற விஷயத கேட்டு டீஹைடிரேட் ஆகிற கூடாதேனு தான் கொடுத்தேன்..” என்றான்.
ஒன்றும் புரியாமல் அனேகனை பார்த்துக் கொண்டிருந்த மோகனின் அலைபேசி அங்கிருந்த அமைதியை சிதறடிக்கும் வண்ணம் அலற மோகனும் தான் அதிர்ந்து போனான். திடீரென ஏற்பட்ட சத்தத்தில் கை கால் பறக்க வியர்த்து கொட்ட ஆரம்பித்தது மோகனுக்கு.
“உடம்புல இவ்வளவு பிரஷர் –ஐ வச்சிக்கிட்டு இப்படி ஒரு ரிங் டோன் தேவையா உங்களுக்கு” என நக்கலாக கேட்டான் அனேகன். அதற்கு அசடு வழிந்தாற் போல சிரித்து வைத்த மோகன் யாரிடம் இருந்து அழைப்பு வந்தது என பார்த்துவிட்டு ஒரு கள்ள முழிப்போடு அங்கும் இங்கும் தன் கருவிழிகளை உருட்டியவன் மீண்டும் அலைபேசியை தன் பாக்கெட்டினுள் வைத்தான்.
“இதுக்கு தான் தேவை இல்லாத விஷயங்களை எல்லாம் செய்ய கூடாதுனு சொல்லுறது.. இப்படி சிரமப்பட வேண்டிய அவசியம் இருந்துருக்காதுல..?” என்று அனேகன் கூற, அது ஏதோ இரு அர்த்தத்தில் அவன் கூறுவது போலவே தோன்றியது மோகனுக்கு. விஷயம் தெரிந்திருக்குமோ என ஒரு நிமிடம் மோகனின் மனம் பதபதைக்க, ‘இருக்காது இருக்காது.. நமக்கு குற்றம் உள்ள நெஞ்சம் குறுகுறுக்குது’ என தனக்கு தானே சமாதானம் செய்தவனது எண்ணம் அடுத்த நொடியே சுக்குநூறானது.
அனேகனுக்கு அருகில் வந்து அமர்ந்த மோகன் அவனது மடிகணினியை அப்போது தான் பார்த்தான். அதில் அம்ரிதாவின் புகைப்படம் இருந்தது. அதை பார்த்து பெரும் குழம்பத்தில் மூழ்கிப்போன மோகனின் மனம் தற்பொழுது வந்த அலைப்பேசி அழைப்பை சிந்தித்து மேலும் பீதியானான். இருந்தும் எதையும் காட்டிக் கொள்ளாமல் “என்ன டா அனேகா.. இவ ஃபோட்டோ எப்படி உன்னோட லேப்டாப் –ல..? இவள உனக்கு தெரியுமா..?” என்றான் கரகரப்பான குரலில்.
“எனக்கு தெரியும்.. ஆனால் உங்களுக்கு தான் தெரியாது..” என்றான் அனேகன்.
“ஹாஹா.. நைஸ் ஜோக் மை மேன்.. உனக்கு தெரியும் எனக்கு தெரியாதா..? இவ என்னோட ஆஃபீஸ் –ல தான் வேலை செய்கிறாள்.. எனக்கு தெரியாம எப்படி.. ஹாஹா.. சரி காமடி பண்ணாம சொல்லு பா.. இவள ஏன் பார்த்துட்டு இருக்க..?” என தொப்பை குலுங்க குலுங்க சிரித்தவாறு கேட்டான் மோகன்.
அனேகன் பதில் எதுவும் சொல்லாமல் தன் இருக்கையில் இருந்து எழுந்து தான் அணிந்திருந்த டீ ஷர்ட்டை சரி செய்துக் கொண்டே கண்ணாடி முன் சென்றவன் தனது கைகளால் முடியினை சீவிக் கொண்டிருந்தான். மோகனும் எழுந்து அவனது அருகில் வர அவரை திரும்பி ஒரு முறை கண்ணடித்துவிட்டு சமயலறை நோக்கிச் சென்றவன் ஒரு டம்ளரில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு வந்தான்.
அனேகன் கண்ணடித்ததை வைத்து தப்பு கணக்குப் போட்ட மோகன் “மறுபடியும் எனக்கு தண்ணியா..?” என கூறிவிட்டு ஹாஹா என பலமாக சிரித்தான். அவனது அருகில் வந்த அனேகன் “குடிங்க பா” என டம்ளரை நீட்டினான்.
“டேய் மகனே.. அப்பாக்கு புரிஞ்சிப்போச்சி டா.. ஹாஹா.. இதுக்கெல்லாம் எதுக்கு டா தண்ணி.. நான் டென்ஷன் ஆகல டா மகனே.. என் மகன்னு நிரூபிச்சிட்ட டா..” என்றவாறு அவனது தோள் மீது கைப்போட்டுக் கொண்டவர் அவனது காதருகே சென்று “பணக்கார இடத்துல இது எல்லாம் சகஜம் டா மகனே.. என்ஜாய்” என்றுவிட்டு மீண்டும் சத்தமாக சிரிக்கலானான்.
மோகனை பேசவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அனேகன் அவனது தோள் அணைப்பில் இருந்து மெல்ல நகன்று வந்து தனது மடிகணினியை தட்டிக்கொண்டிருந்தான். மோகனோ தன் பேச்சை நிறுத்தாதவனாய்
“ நீ உன் அம்மா மாதிரி ஆட் ஒன் ஒவுட் –னு நினைச்சிருந்தேன் டா.. ஆனால் நீ என் புள்ளனு ஃப்ரூவ் பண்ணிட்ட..சும்மாவா கம்பெனியெல்லாம் நடத்துறோம்.. இதுக்கெல்லாம் யூஸ் ஆகும் தானே.. ஹாஹா” என்று ஏதோ மகா சாதனை செய்தாற் போல் பெருமை ஓலம் போட்டுக் கொண்டிருந்தவனை சொடக்கு இட்டு நிறுத்தினான் அனேகன்.
என்ன சொல்லப்போகிறான் என விழித்துக் கொண்டிருந்த மோகனை நோக்கி மடிகணினியை திருப்பினான் அனேகன். அந்த திரை தற்போது காட்டிக் கொண்டிருந்த புகைப்படத்தை கண்டதும் மோகனின் இதயம் அதிவேகத்தில் அடித்திட, அத்தனை நேரம் சிரித்துக்கொண்டிருந்த அந்த முகத்தில் கொஞ்சம் கூட ஈயாடவில்லை இப்போது. தன் மேஜையில் வைத்திருந்த கூலர்ஸை எடுத்து மாட்டிக் கொண்ட அனேகன் கொஞ்சம் முன்பு தான் கொண்டு வந்த தண்ணீர் டம்ளரை எடுத்துக் கொண்டு மோகனின் அருகில் சென்றான்.
“இதுக்கு தான் முன்னாடியே சொன்னேன்.. இப்ப டென்ஷன் ஆகுதா..? இந்தாங்க தண்ணீர் குடிங்க” என டம்ளரை நீட்டினான் அனேகன். ஆனால் அதிர்ச்சி மாறாத மோகனோ மடிகணினியையும் அனேகனையும் மாறி மாறி பார்த்தவாறு இயந்திரமாய் நின்றுக் கொண்டிருந்தான்.
(களவாடுவான்)



என்றும் அன்புடன்
உங்கள் ஆனந்த லெட்சுமி
 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 8
மீண்டும் அங்கு அமைதி நிலவ மறுபடியும் அலைபேசி அதிர்ந்து தன் வேலையை செவ்வன செய்தது. உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருந்ததாலோ என்னவோ அலைபேசி மணியின் திடீர் சத்தத்திற்கு இம்முறை மோகன் பதறவில்லை.
“எடுத்து பேசுங்க பா.. மிஸ்டர் விச்சு முக்கியமான விஷயம் ஒன்னு உங்ககிட்ட சொல்லுறதுக்கு தான் கால் பண்ணுறாரு” என்றான் அனேகன்.
ஆம்.. அந்த மடிகணினியின் திரையில் தற்பொழுது இருக்கும் புகைப்படமும் மோகனது அலைபேசி அழைப்பில் வந்திருப்பதும் மிஸ்டர் விச்சு தான். அம்ரிதா – ஆஷ்ரிதாவின் அருவருப்பிற்கு சொந்தமான அப்பாவும் யசோதாவின் வெறுப்பிற்குரிய கணவனுமான தீ கிரேட் விஸ்வநாதன் தான்.
மோகன் வேகமாக அழைப்பை ஏற்று பேசத் தொடங்கினான். அனேகன் அங்கிருந்து நகன்று குளிர்சாதனப் பெட்டியை அடைந்தான். அதில் வைத்திருந்த பழச்சாறு எசன்ஸ் ஒன்றை எடுத்து வந்து பால் சேர்த்து கலக்கத் துவங்கினான். சரியான விகிதத்தில் பாலையும் எசன்ஸையும் கலந்தவன் அதில் சர்க்கரையை சேர்க்கத் தொடங்கிய நிமிடம் வேகமாக அனேகனின் அருகில் வந்தான் மோகன்.
அனேகன் கொஞ்சமும் திரும்பிப் பார்க்காமல் “சொல்லிட்டாரா எல்லாம்.? எதையும் மறந்துடலையே..?” என்றான்.
“என்ன டா செஞ்சுக்கிட்டு இருக்க நீ..?” என மிகுந்த ஆவேசத்தில் கத்தினான் மோகன்.
“பார்த்தா தெரியலை.. ஜூஸ் ரெடி பண்ணிட்டு இருக்கேன்” – அனேகன்.
“டேய்.. அந்த விச்சுவோட பொண்ணா டா இவ..? இந்த மாதிரி பொண்ணுகள எல்லாம் தொட்டோமா விட்டோமானு யூஸ் அன் த்ரோ போல தூக்கிப்போட்டுட்டு போய்கிட்டே இருக்கனும்.. கல்யாணம் பண்ணி வாழ்க்கை கொடுக்க நினைக்கறதுலாம் டூ மச் டா..” – ஆத்திரத்தில் பொரிந்துக் கொண்டிருந்தான் மோகன்.
“அப்பா சொல்லுறத கேட்ப தானே.. இந்த பொண்ண புடிச்சிருக்கா உனக்கு? சரி நாளைக்கே நான் ஏற்பாடு பண்ணுறேன்.. அடுத்த வாரம் கனடா மாமாகிட்ட பேசுறேன். அவரோட பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ.. ஒரே பொண்ணுங்கறதால அவங்க பிஸ்னஸ் பிராஃபிட் எல்லாம் அவளுக்குதான் வரும். அவளுக்குனா அஃப்கோர்ஸ் நமக்கு தான்.. எப்படி ஐடியா..?” என தற்போது தன்மையாய் பேசி நயவஞ்சகமாய் காயை நகர்த்தி அனேகனை தன் பக்கம் இழுக்கப்பார்த்தான் மோகன்.
மோகனின் வார்த்தைகளைக் கேட்ட அனேகன் சிரித்துக்கொண்டே திரும்ப, “என் மகன் டா நீ.. ஹாஹா..” என அனேகனை கட்டி அணைக்க வந்த மோகன் அடுத்த நொடியே மூக்கில் ரத்தம் சொட்ட சொட்ட தரையில் வீழ்ந்துக் கிடந்தான்.
தன் மூக்கில் இருந்து வழியும் ரத்தத்தினை தொட்டு பார்த்த மோகனுக்கு அதீத வலியின் காரணமாக சற்றுமுன் என்ன நடந்தது என ஒரு நாளிகைக்கு மறந்திருக்க, நடந்தவற்றை தன் மனதினுள் மீண்டும் காட்சிப்படுத்திப் பார்த்தான். தன்னை கட்டி அணைக்க முற்பட்டவனின் மூக்கை தன் கை முட்டியினைக் கொண்டு ஒரு விநாடியில் உடைத்திருந்தான் அனேகன்.
“டேய்.. அப்..அப்..அப்பா மேலயே கை வைக்குறியா..?” என திக்கிதிணறி வார்த்தைகள் வெளியே வந்து விழுந்தது மோகனிடம் இருந்து.
எரிமலையென கொதித்துக் கொண்டிருந்த அனேகன் அருகில் இருந்த மர நாற்காலியை இழுத்து மோகனுக்கு அருகில் போட்டு அதன் இருக்கை பகுதியில் ஒரு காலை வைத்துக்கொண்டு ஒரு முழங்கையினை அந்த கால் முட்டியின் மேல் சாய்வாக சரித்தவண்ணம் நின்றான். கண்கள் நெருப்பை கக்கிக்கொண்டிருக்க பற்கள் கடித்து முழுங்கிவிடும் ஆக்ரோஷத்தை அடக்கிக் கொண்டிருக்க எதிரே நிற்கும் அனேகனை கண்ட மோகனுக்கு நீண்ட நாள் பட்டினி போட்டு கூண்டில் இருந்து வெளியே விடப்பட்ட சிங்கத்தின் முன் நிற்பது போலவே இருந்தது.
“டேய் அனேகா.. அப்பா டா” – தற்பொழுது பம்மியேவிட்டான் மோகன்.
“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..” என கண்களில் ருத்ர தாண்டவம் தெரிய கூறினான் அனேகன்.
பயத்தில் நடுநடுங்கிய மோகனுக்கு தொண்டை வரண்டு போனது. வாயினுள் எச்சில் கூட்டி முழுங்கிக்கொண்டவன் “த..தண்ணீர்” என்றான். அனேகன் கொஞ்சமும் கருணை காட்டவில்லை என்பதால் மெல்ல அசைந்து அருகே இருந்த தண்ணீர் குடுவையை எடுக்க முயன்றான் மோகன். அவனுக்கு முன் விரைந்துச் சென்று அந்த குடுவையை எடுத்த அனேகன் தனக்கு எதிர்திசையில் அதனை தூக்கி எறிந்தான்.
எறியப்பட்ட வேகத்தில் சுவற்றில் பயங்கரமாக மோதிய தண்ணீர் குடுவை கீழே விழுந்து, மூடி உடைந்து தண்ணீர் அனைத்தும் சிந்தி சிதறத் தொடங்கியது. சிந்தும் தண்ணீரை ஏக்கத்துடன் பார்த்த மோகன் “அப்பாக்கு தண்ணீர் கொடு டா” என மீண்டும் கெஞ்சினான்.
“பெத்த அப்பனா இருந்தாலும் சரி, அந்த அம்மையப்பனா இருந்தாலும் சரி.. தப்பு பண்ணினா இதுதான் கதி” என்றவன் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர நாற்காலியை எடுத்து மோகனது காலில் ஒரே அடியாக அடித்து உடைத்தான்.
“அம்மாஆஆஆஆ” என உயிர் போகும் வலியில் தொண்டையே கிழியும் வண்ணம் கத்தித் துடித்தான் மோகன்.
“இப்படி தான அந்த ரெண்டு பொண்ணுகளும் அம்மா அம்மானு அழுது கதறிருக்கும்.. கத்து பா.. நல்லா கத்து.. அந்த யசோதாவுக்கு நீ கத்தித் துடிக்கிறது கேட்கனும்.. ம்ம்ம்.. இன்னும் சத்தமா கத்து” என வெறி பிடித்தாற் போல கர்ஜித்தான் அனேகன்.
வலியில் முனகிக்கொண்டே “அப்பாவ பார்த்தா பாவமா இல்லையா டா.. வலிக்குதுடா அனேகா” என்று உளறிய வண்ணம் கூறினான் மோகன்.
“அப்பாவா..? நீ எனக்கு அப்பாவா..? அப்படி சொல்லாத இனிமேல்.. நான் உன்மேல உள்ள பாசத்துல உன்ன அப்பானு கூப்பிடல..! நீ செஞ்ச பாவத்துக்கு உன் மகன் என்கிற அடையாளத்தோட நான் பரிகாரம் செய்ய நினைச்சேன்.. அப்படி செஞ்சா மட்டும்தான் யசோதாவோட ஆத்மா அவங்க பொண்ணுகள பத்தி கவலை படாம ஷாந்தி அடையும்.. அந்த ஒரு விஷயத்துக்காக மட்டும் தான் உன்ன நான் அப்பானு கூப்பிட்டேன்” என்ற அனேகனின் கோபம் தற்பொழுது அவன் கட்டுப்பாட்டுக்குள் இல்லை.
“என்ன மன்னிச்சிடு அனேகா.. இனி திருந்தி வாழறேன் டா.. ப்ளீஸ் டா” என உடைந்த காலோடு தரையில் நகர்ந்து நகர்ந்து வந்து கேட்டான் மோகன்.
“நீ செஞ்சது மன்னிக்க முடியாத தவறு மிஸ்டர் மோகன். ஒரு அழகான குருவி கூட்ட தேவை இல்லாம துவம்சம் பண்ணிட்ட.. உன்னோட பேராசையால எந்த தப்புமே பண்ணாத ஒரு உயிரு போய்டுச்சு. தன் அம்மாவோட சாவ பிஞ்சு வயசுல பார்த்த ஒரு உயிரு தனக்கு என்ன நடக்குதுனே தெரியாம இந்த பூமியில நடமாடிக்கிட்டு இருக்கு. அத பார்த்து இன்னும் ஒரு உயிரு தினம் தினம் அணுஅணுவா வலிய அனுபவிச்சு சித்ரவதையோட வாழ்ந்துட்டு இருக்கு. இது எல்லாத்துக்கும் காரணம் நீயும் அந்த விஸ்வநாதனும் தான்..” – அனேகன்.
“இல்லை.. இல்லை அனேகா.. இனி நான் அந்த தப்ப பண்ண மாட்டேன்.. நீ என்ன சொன்னாலும் செய்யறேன்.. உன் சொல் கேட்டு நடக்கறேன்.. ப்ளீஸ்.. ப்ளீஸ் டா.. ஹாஸ்பிடல் கூட்டிக்கிட்டு போ பா.. வலி தாங்க முடியலை..” என கதறினான் மோகன்.
“ஓ.. என்ன சொன்னாலும் செய்வியா..?” – மோகனின் தலையை கோதியபடியே கேட்டான் அனேகன்.
“ம்ம்.. ஆஆ.. கண்டிப்பா செய்யறேன்.. செய்யறேன்..” – அவசர அவசரமாக வார்த்தைகளை அடுக்கினான் மோகன்.
“யசோதாவ திருப்பிக் கொடு” என கையை நீட்டினான் அனேகன்.
என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த மோகன் “அது எப்படி பா கொடுக்க முடியும்..?” என கேட்டவும்
“அப்போ உன் உயிர கொடு டா” என ஓங்கி மோகனின் செவிட்டில் தன் அத்தனை ஆத்திரமும் வெளிப்படும் வண்ணம் அறைந்தான் அனேகன். அதில் தலை சுற்றி நிலை தடுமாறிப்போனவன் அப்படியே தரையில் தன் முழு நீளத்திற்கும் சரிந்தான்.
“நீ என்னோட அம்மாவுக்கு வேணாம். நீ செத்துட்டனு தெரிஞ்சா அவங்க அனுபவிக்கிற வலிய விட, நீ துரோகம் செஞ்சுருக்கனு தெரிஞ்சா வர்ற வலிதான் அதிகமா இருக்கும்.. அந்த கொடுமை என் அம்மாவுக்கு வேணாம்.. அவங்கள நான் பார்த்துக்கறேன்” என்ற அனேகன் வாசலை நோக்கி நடக்கலானான்.
அவன் பேசுவதின் அர்த்தம் முழுமையாக புரியாமல் அரை மயக்கத்தில் கிடந்த மோகன் அனேகனது காலை பிடித்து நிறுத்தி கேள்வியாய் பார்த்தான்.
“கிட்சன் –ல என்ன சும்மா சர்க்கரைய மட்டும் கலந்துக்கிட்டு இருந்தேன்னு நினைச்சியா” என தந்திரமாய் ஒரு புன்னகை சிந்தியபடி தன் காலை உதறிவிட்டு லேப்டாப்பை எடுத்துக்கொண்டு மீண்டும் வாசலை நோக்கி அடியெடுத்தான் அனேகன்.
அவ்வளவு நேரம் அங்கு நடப்பவற்றை வாசலில் பதுங்கி நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த திரவியத்தின் மூக்கு சமையல் எரிவாயுவின் வாடை வந்துக்கொண்டிருப்பதை அப்பொழுதுதான் உணர்ந்தது.
அதிர்ந்து போன திரவியம் மெதுவாக உள்ளே எட்டிப்பார்க்க அனேகன் வாசலை நோக்கி வந்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் பட்டுவிடக் கூடாது என அங்கிருந்து வேகமாக வெளியேறிய திரவியம் பிளாட்டின் அடி தளத்திற்கு விரைந்து அங்கிருந்த ஒரு தூணின் பின் மறைந்துக் கொண்டு அனேகன் வருகிறானா என கவனிக்கலானான். அனேகனது பிளாட் முதல் தளத்தில் என்பதால் திரவியத்தால் எளிமையாக தப்பித்து கீழே வர முடிந்தது.
திரவியம் கீழே வந்த இரண்டாம் நிமிடம் அனேகனும் அங்கு வந்திருந்தான். அவனை கண் சிமிட்டாது ஒருவித பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திரவியம். மேலே சமையல் எரிவாயுவினை நுகர்ந்தவனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என யூகிக்க முடிந்திருந்தது. கை கால் லேசாக நடுக்கம் கொடுக்க அந்த தூணுக்கு பின்னிருந்தே வெறித்துக் கொண்டிருந்தான் திரவியம்.
கீழே வந்த அனேகன் தன் காற்சட்டை பையில் இருந்து சிகரெட் லைட்டரை எடுத்து அதில் இருக்கும் பொத்தான் அழுந்தி நிற்கும் வண்ணம் ஒரு க்ளிப்பை மாட்டியவன் எரியும் தீச்சுடரை கூர்மையாக பார்த்து “யசோதா மா.. இது உங்களுக்காக” என கூறிவிட்டு தன் பிளாட்டின் ஜன்னல் நோக்கி எறிந்தான்.
அவன் வீசிய ஒற்றை கொள்ளியில் வெடித்து சிதறியது சிலிண்டர் மட்டும் அல்ல; மோகனும் தான். தீடிரென ஏற்பட்ட சத்தத்தில் அருகாமை தளத்தில் வசித்தவர்கள் எல்லாரும் ஓடி வர, அனேகன் அந்த லைட்டரை தூக்கி எறிந்தவாறு அப்பார்ட்மெண்டை விட்டு வெளியேறினான்.
இத்தனை சாதூரியமாக இவ்வளவு பெரிய காரியத்தை இவனால் எப்படி செய்ய முடிந்ததென திரவியம் வியந்தாலும், கொஞ்சமும் கருணையின்றி பெற்ற தகப்பனை இப்படி கொலை செய்யும் அளவு என்ன தவறு செய்திருப்பான் அந்த மோகன் என்ற யோசனை அவனது தலையினுள் கிடந்து குடைந்துக் கொண்டிருந்தது.
ஆஷ்ரிதாவை உடனே சந்திக்க எண்ணி அவளது எண்ணிற்கு அழைப்பு கொடுத்தான் திரவியம். அசந்து தூங்கிக்கொண்டிருந்த ஆஷ்ரிதா வைப்ரேஷனில் இருக்கும் தனது அலைபேசி உறுமுவதை உணரவில்லை. இரண்டு மூன்று முறை அழைத்து சோர்ந்தவன் தற்பொழுது ஒன்றும் செய்ய இயலாது என எண்ணி தன் வீட்டிற்கு விரைந்தான்.
வீட்டில் தனது அறைக்குள் சென்று கதவினை மூடிக்கொண்டு கட்டிலில் அமர்ந்த திரவியம், அனேகன் பேசியவற்றை மீண்டும் மீண்டும் தன் தலைக்குள் ஓட விட்டுக் கொண்டிருந்தான். ‘இப்படி தான அந்த ரெண்டு பொண்ணுகளும் அம்மா அம்மானு கத்திருக்கும்’ என்று அனேகன் கூறியதில் இருந்து மட்டுமே ஒட்டுக்கேட்டவனுக்கு அதற்கு முன் என்னென்ன பேசியிருப்பார்கள், மோகன் யார், அவன் என்ன செய்திருப்பான், இவர்களுக்கும் ஆஷ்ரிதாவின் குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம் என பல கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தது. அத்துடன் அவர்களது கடந்த காலத்தை பற்றி ஒன்றும் அறியாமல் ஆஷ்ரிதாவை நோகடித்துவிட்டோமோ என எண்ணி வருந்தினான் திரவியம்.
நல்ல தோழர்களாய் பழகுகிறார்கள் என்றாலும் தங்களது அலைபேசி எண்களை பறிமாறிக்கொண்ட ஆஷ்ரிதாவும் அம்ரிதாவும் தங்களது வீட்டு விலாசத்தை திரவியத்திடம் கொடுக்கவில்லை. அதை அவர்கள் செய்திருந்தால் இப்பொழுது இருக்கும் நிலைமையில் திரவியம் ஆஷ்ரிதாவின் வீட்டிற்கு சென்றே மன்னிப்பு கேட்டிருப்பான். இளம் வயது பெண்கள் தனியே வாழ்க்கை போராட்டம் நடத்தும் பொழுது வெள்ளையாய் இருப்பதெல்லாம் பால் என நம்பிவிட முடியாது அல்லவா..! இக்காலத்தில் நூறு சதவிகிதம் யாரையும் நம்பிவிட முடிவதில்லை. பெற்ற தகப்பனே தங்களுக்கு துரோகம் இளைத்து விட்டுச் சென்றுவிட்டான் என்கையில் இந்த உலகில் வேறு யாரை நம்பத் தோன்றும் அந்த கன்னிகளுக்கு.
மற்றவர்கள் யாரையும் நம்பாத பெண்கள் தன்னிடம் ஓரளவு நட்புணர்வோடு பழகியது திரவியத்திற்கு சந்தோஷமாய் இருந்தது என்பது எவ்வளவு உண்மையோ இனி இந்த நட்பு தொடருமா என அவன் நெஞ்சில் ஏற்பட்ட பயமும் அதே அளவு உண்மை. மேம்போக்காக காதில் கேட்ட விஷயங்களே நம்மை உயிர் வரை பதறச் செய்கிறது என்றால் இவை அனைத்தையும் அனுபவித்து கடந்து வந்தவர்கள் அவர்கள் இருவர் நெஞ்சிலும் எந்த அளவு காயம் இருக்கும். அவள் இன்று டாக்டர் பிரபாகரன் க்ளீனிக்கில் அப்படி நடந்துக்கொண்ட போதும், அம்ரிதாவை பற்றி பேசும் பொழுதும் அவளை புரிந்து நடந்துக்கொள்ளாமல் வாய்க்கு வந்தவாறு வார்த்தைகளை உதிர்த்து துன்பம் செய்துவிட்டோமே என உள்ளுக்குள் மருகிக்கொண்டிருந்தான் திரவியம்.
இவ்வாறு இத்தனை பிரளயங்களும் நடந்துக்கொண்டிருக்க இவை ஒன்றும் அறியாத அம்ரிதா வழக்கம் போல தனது அலுவலக பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தாள். உள்ளே நுழைந்ததும் சோஃபாவில் உறங்கிக் கொண்டிருந்த ஆஷ்ரிதாவை கண்டவளுக்கு இதயம் படபடத்தது. அவளது அருகே சென்று அமர்ந்தவள் மென்மையாய் தலையை வருடிவிட ஆஷ்ரிதா விழித்துக் கொண்டாள்.
“என்ன டி ஆச்சு..? இந்த நேரத்துல தூங்கிட்டு இருக்க..?உடம்புக்கு எதுவும் முடியலையா..?” என நெற்றியிலும் கழுத்திலும் தொட்டுப்பார்த்தாள் அம்ரிதா.
அந்த நேரம் அங்கு வந்த பொன்னம்மா “வந்துட்டீங்களா சின்ன பாப்பா” என்றவாறு நடந்தவற்றை சொல்ல வாயெடுக்கவும் அவரை பேசவிடாது தடுப்பதற்காக “எனக்கு உடனே ஒரு டீ போட்டு கொடுங்களேன் பொன்னம்மா.. பாதி தூக்கத்துல எழுந்தது தலைக்கு பாரமாய் இருக்கு” என்றாள் ஆஷ்ரிதா.
“இதோ எடுத்துட்டு வர்றேன் மா” என பொன்னம்மா செல்லவும் பெருமூச்சு விட்ட ஆஷ்ரிதா அம்ரிதாவிடம் திரும்பி “எனக்கு ஒன்னும் இல்லை டி.. இன்னைகு ஸ்கூல் –ல குழந்தைகள் எல்லாரும் க்ரவுண்டுல விளையாடிக்கிட்டு இருந்தத பார்த்துட்டே நின்னேன். வெளியிலோ என்னவோ தலை ரெம்ப வலிக்க ஆரம்பிச்சிட்டு.. அதான் சீக்கிரம் வீட்டுக்கு வந்து படுத்துட்டேன்..” என்று சொல்லி சமாளித்தாள்.
“அடடா.. இந்த நோஞ்சான் அக்காவ வச்சிக்கிட்டு நான் என்னதான் செய்ய போறேனோ.. சின்ன வயசுலையே என் கூட கபடி விளையாட வா-னு எத்தனை முறை கூப்பிட்டிருக்கேன்.. அந்த தடியன் பாலுவுக்கு பயந்து போய் வரவே இல்லை நீ.. அப்பவே நின்னு பழகியிருந்தால் இன்னைக்கு இப்படி இருப்பியா..?” என்று ஆஷ்ரிதாவை வார ஆரம்பித்தாள் அம்ரிதா.
“அய்யோ.. கீழ எங்கையும் விழுந்து வாங்கினா வலிய யாரு தாங்குறது..?” என உண்மையை அம்ரிதா கண்டுபிடிக்கா வண்ணம் அவளிடம் சகஜமாய் பேச முயற்சித்துக் கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.
“ஒரு சின்ன வலிய கூட தாங்க பயப்படுற.. உன்னை எல்லாம் என்ன பண்ணட்டும்.. இதுக்கு எல்லாம் பயந்தா முடியுமா.. தைரியமா இருக்கனும் சரியா.. பயந்தாங்கோலி.. ஹாஹா” என ஆஷ்ரிதாவின் கையில் ஒரு செல்ல அடியினை வைத்தவள் சிரித்தவாறு தன் உடைகளை மாற்றிக்கொள்ள தங்கள் அறைக்குள் புகுந்தாள்.
தனக்காக ஆஷ்ரிதா எத்தனை வலிகளை சுமந்துக்கொண்டிருக்கிறாள் என அறியாத பேதையாய் அம்ரிதா இருக்கிறாள். உண்மை என்னவென்று அம்ரிதாவுக்கு தெரியவந்தால் இந்த கேலி கிண்டல்கள் என்ன ஆகுமோ? அவள் மனம் எப்படி வாடுமோ?? அந்த இறைவனே அறிவான்.
(களவாடுவான்)

என்றும் அன்புடன்
உங்கள் ஆனந்த லெட்சுமி
 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 9

அம்ரிதா தங்கள் அறையினுள் புகுந்து கதவினை அடைத்தவுடன் விரைந்து சமையலறைக்கு சென்ற ஆஷ்ரிதா பொன்னம்மாவின் அருகில் சென்று “அய்யோ பொன்னம்மா.. நல்ல காரியம் செய்ய பார்த்தீங்க.. அம்முகிட்ட எந்த விஷயத்தையும் சொல்லிடாதீங்க.. நான் அழுதது அவ விஷயமாக தான். அவளுக்கு எதுவும் தெரிய கூடாது உங்ககிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன் –ல” என்று கிசுகிசுத்த குரலில் கூறினாள்.

“ஆமா பாப்பா.. ஏதோ பதட்டத்துல புத்திய கடன் கொடுத்துட்டேன்.. இனி ரொம்ப ஜாக்கிரதையா நடந்துக்கறேன்..” என்ற பொன்னாம்மாவின் தோளை அணைத்து அன்பை தெரிவித்தாள் ஆஷ்ரிதா.

பொன்னம்மாவும் ஆஷ்ரிதாவும் தேனீருடன் உணவு மேஜையை அடைய அம்ரிதாவும் ஒரு குளியல் போட்டுவிட்டு உடையை மாற்றிக்கொண்டு வந்திருந்தாள்.

“அச்சு.. எஸ்டேட்-ல இருந்து கால் வந்திருந்தது. நாம சொல்லிவச்ச காட்டேஜ் சேலுக்கு வருதாம். ஒரு கோடியில் இருந்து ஒன்றரை கோடி வரை வரும்னு நினைக்கிறேன். முடிச்சிடலாமா எப்படி..?” – அம்ரிதா ஆஷ்ரிதாவிடம் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே பொன்னம்மா தொலைக்காட்சியை உயிர்பிக்க,

“பொன்னம்மா.. நியூஸ் சேனல் வைங்க.. ஏற்காடு எஸ்டேட் சேல்ஸ் பத்தி நியூஸ் இருக்குனு சொன்னாங்க.. என்ன வருதுனு பார்ப்போம்” என்றாள் ஆஷ்ரிதா.

“போங்க மா.. இப்ப நான் என் சீரியல் பார்க்குற நேரம்.. நீங்க உங்க கையில உள்ள டப்பால பாருங்க” என்றார் பொன்னம்மா.

“பொன்னம்மா.. டப்பானு சொல்லாதீங்கனு எத்தனை முறை சொல்லியிருகேன்” என ஆஷ்ரிதா செல்லமாய் கோபித்துக்கொள்ள “எனக்கு அது தான் மா ஈசியா வருது” என்றார் பொன்னம்மா.

“ஆமா.. ஆமா.. வரும்..” என்றவாறு தனது அலைபேசியை எடுத்த ஆஷ்ரிதா அதில் தவறி இருந்த திரவியத்தின் தொடர் அழைப்புகளை கண்டு “என்னவாம் இவனுக்கு.. அப்படி பேசிட்டு எதுக்கு கால் பண்ணனும்? ச்சே” என்று எரிச்சலானவள் கைபேசியை மீண்டும் சோஃபாவின் மீதே விட்டெறிந்தாள்.

“ஹேய்.. என்ன டி ஆச்சு..? எதுக்கு இப்படி தூக்கி வீசுற?” என அம்ரிதா கேட்கவும் ‘பொன்னம்மாவ சொல்லிட்டு இப்ப நானே அம்முகிட்ட காட்டிக் கொடுத்திடுவேன் போலயே’ என தன் செயலை நொந்துக்கொண்டவள் என்ன சொல்வதென அலைபேசி கிடந்த கிடப்பை பார்த்து விழிக்க, அப்போது அவள் கண்ணில் பட்டது பேட்டரி வார்னிங் மெசேஜ்.

‘ஐ.. ஐடியா..’ என மனதினுள் துள்ளாட்டம் போட்டவள் “சார்ஜ் போட மறந்துட்டேன் டி.. மொபைல் டெத் ஆக போகுது” என்றாள்.

“அதுக்கு சார்ஜர் –ல போடனும் மா.. இப்படி விட்டெறிஞ்ச தூக்கிட்டு போய் பாடை கட்ட வேண்டியதுதான்” என்று சொல்லி அம்ரிதா சிரித்துக்கொண்டிருக்க

“சரி சரி.. ரொம்ப பண்ணாம உன் மொபைல் எடு.. என்ன செய்தினு பார்க்கலாம்” என கூறிய ஆஷ்ரிதா தன் மொபைலை சார்ஜரில் மாட்டிவிட்டு அம்ரிதாவுடன் இணைந்துக்கொண்டாள்.

இருவரும் ஒரே சோஃபாவில் லாவகமாக அமர்ந்துக்கொண்டு அம்ரிதாவின் கைபேசியில் செய்திகளுக்கான செயலி ஒன்றை எடுத்துப்பார்க்க, அதில் முதலில் தோன்றிய செய்தியினை கண்டு ஒரு நிமிடம் ஆடிப்போயினர் இருவரும்.

“என்ன டி இது.. உன் மேனேஜர் செத்துட்டாரா..??” – அதிர்ச்சியே உருவாய் கேட்டாள் ஆஷ்ரிதா. அதே அதிர்ச்சியில் இருந்த அம்ரிதாவுக்கு நடப்பவை என்ன என யோசிப்பது கூட முடியாத காரியமாய் இருந்தது.

“இன்னைக்கு தானே டி நான் உன் ஆஃபீஸ் –க்கு வந்தேன். நான் கூட பார்த்தனே இவனை” என்று மீண்டும் ஆஷ்ரிதா கேள்வியை எழுப்ப மோகன் இறந்த அதிர்ச்சி ஒரு பக்கம் இருக்க, தான் நினைத்த காரியம் ஈடேறாமல் போய்விட்டதே என உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்தாள் அம்ரிதா.

“ஹேய்.. உன்ன தான் டி கேட்குறேன்” என அம்ரிதாவின் தலையில் ஆஷ்ரிதா ஒரு போடு போட “என்ன டி இது.. நான் ஆப்பு வைக்கறதுக்கு முன்னாடியே போய் சேர்ந்துட்டான்.. இனி நான் யாருக்கு ஆப்பு வைக்குறது..?” என கேட்டாள் அம்ரிதா.

“அடியேய்.. இவ வேற நேரம் கெட்ட நேரத்துல.. முதல்ல அவன் எப்படி செத்தான்னு கேளு டி.. உன் ஆபீஸ் –ல இருந்து இன்னும் ஏன் உனக்கு எந்த தகவலும் வரலை.?” – ஆஷ்ரிதா.

“இன்னைக்கு வரும் போது ஒரு ஃபைலோட டேட்டால ஒரு தில்லுமுல்லு பண்ணி வச்சிட்டு வந்தேன்.. இந்த முறை கண்டிப்பா மிஸ் ஆகாது அந்த காண்டாமிருகம் மாட்டிடுவான்னு சந்தோஷமா இருந்தேன். இறைவா நீ கூட அவனுக்கு தான் சப்போர்ட்டா? இப்படி அவனை எஸ்கேப் பண்ணி கூட்டிகிட்டு போய்ட?!” என குழந்தை போல சிணுங்கியபடி கூறிக்கொண்டிருந்தாள் அம்ரிதா.

“என்னது.. எஸ்கேப் பண்ணி கூட்டிட்டு போய்ட்டாரா? ஹேய்.. பைத்தியம் எதுவும் புடிச்சிட்டா டி உனக்கு? நான் என்ன கேட்டுக்கிட்டு இருக்கேன் நீ என்ன சொல்லுற” – ஆஷ்ரிதா.

“இல்லை டி.. அவனுங்க மாத்தி மாத்தி கால் பண்ண கூடாதுனு ஆபீஸ் சிம்- அ கழட்டி வச்சிட்டேன். நான் தான் பர்சனல் நம்பர் யாருக்கும் கொடுக்கலையே.. அதனால தான் இப்ப வரை நமக்கு நியூஸ் வரல போல” – அம்ரிதா.

“உன்ன எல்லாம்.. சீக்கிரம் சிம்-அ மாட்டி யாருகிட்டயாவது என்ன விவரம்னு கேளு” என ஆஷ்ரிதா தன் அக்காள் தோரணையை காட்ட அம்ரிதாவும் அவள் அக்கா கூறியதை செயலாக்கினாள்.

“ஹலோ.. மனோஜ்..” – அம்ரிதா.

“மேம்.. என்ன மேம்.. ரொம்ப நேரமா ட்ரை பண்ணுறேன் உங்க மொபைல் –க்கு. கால் ரீச் ஆகவே இல்லை” – மனோஜ்

“பேட்டரி டை மனோஜ்.. என்னாச்சு மோகன் சார் –க்கு” – அம்ரிதா.

“ஏதோ ஃபயர் ஆக்சிடெண்ட் –னு சொன்னாங்க.. இன்னும் நான் சாரோட வீட்டுக்கு ரீச் ஆகல.. போய் பார்த்துட்டு உங்களுக்கு விவரம் சொல்லுறேன் மேம்” – மனோஜ்.

“ஆக்சிடண்ட் நடந்திருக்கிறது வீட்டுல இல்லையே” – அம்ரிதா.

“ஆமா மேம்.. அண்ணா நகர் பக்கத்துல ஒரு அப்பார்ட்மெண்ட்” – மனோஜ்.

“தென் எதுக்கு வீட்டுக்கு போறீங்க.? நேரா அந்த அப்பார்ட்மெண்ட் போங்க” – அம்ரிதா.

“இல்லை மேம். பாடி க்ளியர் பண்ணியாச்சி. இப்ப அங்க போன எப்படியும் யூஸ்ஃபுல்-ஆ ஒன்னும் நடக்காது. சார் விட்டு ஆளுங்க எல்லாரும் வீட்டுல தான் இருக்காங்க. எந்த செய்தியா இருந்தாலும் வீட்டுக்கு தான் வரும்” – மனோஜ்.

“ஓகே மனோஜ்.. சாரி.. கோ அஹெட்.. நான் நாளைக்கு காலை –ல வர்றேன். பாடி எப்ப எடுப்பாங்கனு மட்டும் கேட்டு எனக்கு இன்ஃபார்ம் பண்ணிடு” – அம்ரிதா.

“ஓகே மேம்.. ஸ்யூர்..” – மனோஜ்.

“தேங்க்ஸ் மனோஜ்” – அம்ரிதா.

இருவரின் உரையாடல் முடிந்து அம்ரிதா அலைபேசியை துண்டிக்கவும் “என்ன டி ஆச்சாம்” பரபரப்பு குறையா குரலில் கேட்டாள் ஆஷ்ரிதா.

“ஃபயர் ஆக்சிடண்ட் –ஆம்” – ஆஷ்ரிதா.

“ஆமா.. இன்னும் முழுசா ஒரு டீடெயில்ஸும் தெரியலை.. மனோஜ் இன்னும் ரீச் ஆகலையாம்.. விசாரிச்சிட்டு சொல்லுறேன்னு சொல்லிருக்கான்.. ஆனால் இந்த நியூஸ்-ல காட்டியிருக்கற அப்பார்ட்மெண்ட்.. அதுதான் யோசனையா இருக்கு” என்றாள் அம்ரிதா.

“இதுல என்ன டி யோசனை” - ஆஷ்ரிதா.

“இவனுக்கும் இந்த அப்பார்ட்மெண்ட் –க்கும் என்ன சம்பந்தம். இதுவரை இந்த இடம் பத்தி இவன் பேசி நான் கேட்டதே இல்லை” – அம்ரிதா.

“ஹேய்.. அவனுக்கு பெர்சனல்னு எதும் இருக்காதா.? வேலை பார்க்கற எம்ப்லாயிகிட்ட எல்லாத்தையும் சொல்லிகிட்டா இருப்பாங்க” – ஆஷ்ரிதா.

“இல்லை எனக்கு என்னவோ சரியா படல.. சரி நாளைக்கு பார்த்துக்கலாம்.. வா போய் டின்னர் செய்யலாம்” – அம்ரிதா.

அம்ரிதாவும் ஆஷ்ரிதாவும் எழுந்து சமயலறைக்கு செல்ல தடார் என எழுந்து ஓடி வந்தார் பொன்னம்மா. “என்ன பாப்பா.. நீங்க ஏன் செய்யறீங்க.. நான் செஞ்சி தர்றேன்.. போய் உட்காருங்க” என்றார்.

“பாத்தியா அம்மு நம்ம பொன்னம்மா-வ.. சீரியலுக்கு உள்ளே போய்ட்டா வீட்டுல என்ன நடக்குதுனு கூட கவனிக்கறது இல்லை.. இவ்வளவு நேரம் நாம என்ன பேசிகிட்டு இருந்தோம்னு கேளு.. எதுவும் தெரியாது அவங்களுக்கு..” என சப்பாத்திக்கு மாவு பிசைந்துக் கொண்டே கேலியாக கூறினாள் அம்ரிதா.

சிரித்துக்கொண்டே “போங்க பாப்பா.. வயசான காலத்துல இந்த சீரியல தவிர வேற என்ன இருக்கு எங்களுக்கு.. அதுவும் அவன் போடுற நேரம் தான் பார்க்க முடியும்.. நாங்க நினைச்ச நேரம் நினைச்சத பார்க்க முடியுது.. உங்கள போல டப்பா –வா இருக்கு எனக்கு.. இல்ல இருந்தாலும் எதுக்கு.. எனக்கு அத எப்படி கையில புடிக்கனும்னு கூட தெரியாது” என்றார் பொன்னம்மா.

பொன்னம்மா மீண்டும் டப்பா என்று சொன்னதில் சூடான ஆஷ்ரிதா “பொன்னம்மா……” என்கவும் “ஹாஹா.. சரி சரி விடு அச்சு” என கூறிய அம்ரிதா மோகன் விஷயத்தை பொன்னம்மாவிடம் கூறினாள்.

“என்ன சின்ன பாப்பா சொல்லுறீங்க.. நிசமாவா” – பொன்னம்மா வாயை பிளந்தார்.

“இதுல யாராவது பொய் சொல்லுவாங்களா பொன்னம்மா” – ஆஷ்ரிதா.

“அட அப்படி கேட்கல மா.. சரி.. அந்த கிரகம் புடிச்சவன் தான் போய் சேர்ந்துட்டானே.. இனி நீங்க அங்க வேலைக்கு போக மாட்டீங்கல?” என கேட்டார் பொன்னம்மா.

மோகன் இறந்துவிட்டான் என்பதை விட அம்ரிதா இன்னும் வேலை வேலை என தன் உடலையும் மனதையும் கெடுத்துக்கொள்ள கூடாது என்பதே ஆஷ்ரிதா மட்டும் பொன்னம்மா ஆகிய இருவர் மனதிலும் பிரதானமாய் இருந்தது. அவளது பிரச்சனை என்ன என்பது அவளுக்கு தான் தெரியாது. இவர்களுக்கு தெரியும் அல்லவா?

‘வேலைக்கு போகமாட்டீங்க –ல?’ என பொன்னம்மா அம்ரிதாவிடம் கேட்டதும் “சூப்பர் பொன்னம்மா.. இதையே தான் நானும் நினைச்சேன்” என்றாள் ஆஷ்ரிதா.

ஏற்கனவே அம்ரிதாவுக்கு ஏற்படும் உணர்வு சிதறல்களை எண்ணி பயந்த ஆஷ்ரிதா இவளை வேலையில் இருந்து நிறுத்தி எவ்வாறு தன்னுடனே வைத்துக் கொள்வது என்ற யோசனையில் இருந்தாள். அதற்கு வழிவகுக்கும் விதமாய் நிகழ்ந்த மோகனின் மரணத்தை ஆண்டவன் தனக்கு அளித்த வாய்ப்பாகவே கருதினாள் அவள்.

“வேலைய விடுறத பத்தி நான் இன்னும் யோசிக்கலை பொன்னம்மா.. பார்ப்போம்” என்றாள் அம்ரிதா.

“என்னது பார்ப்போமா? ஹேய்.. அவன் அங்க இருக்கறதால தானே நீ அங்க வேலைக்கு போயே தீருவேன்னு இருந்த? இப்பதான் அவன் இல்லையே பிறகு என்ன?” என்று சிடுசிடுத்தாள் ஆஷ்ரிதா.

“ஓ.. அப்படீங்களா மேடம்.. சரி.. அந்த மோகம் என்ன படாத பாடு படுத்தறான்னு தானே அந்த வேலையை விட சொன்னீங்க ரெண்டு பேரும்? இப்ப தான் அவன் போய் சேர்ந்துட்டானே.. இனி என்ன உங்களுக்கு?” என்று புன்முறுவலுடன் கேட்டாள் அம்ரிதா.

“லூசா டி நீ.. நம்மகிட்ட நாலு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடற அளவு சொத்து இருக்கு. ஏவனோ ஒருத்தன் நடத்துற கம்பெனியில போய் நீ இப்படி மாடு மாதிரி உழைக்கனுமா?” – கொஞ்சம் வலியுடனே வார்த்தைகள் வந்தது ஆஷ்ரிதாவிடம் இருந்து.

“அச்சு.. இப்ப எதுக்கு இவ்வளவு அவசரப்படுற.. இத பத்தி மெதுவா பேசிக்கலாம். இப்ப வா சாப்பிடலாம்” என்றாள் அம்ரிதா.

இவர்கள் இந்த பேச்சை பேசிக்கொண்டிருந்த நேரத்தில் சப்பாத்தி தயார் செய்து முடித்த பொன்னம்மா இருவருக்கும் பரிமாறிவிட்டு தானும் ஒரு தட்டில் எடுத்துக் கொண்டார். வயிறார உண்டு முடித்து மூவரும் படுக்கைக்கு சென்றனர்.

உண்ட மயக்கத்தில் பொன்னம்மா ஆழ்ந்து உறங்கிப்போக, இரட்டை சகோதரிகளுக்கு தூக்கம் வரவில்லை. இருவரும் படுக்கையில் உருண்டுக்கொண்டே இருக்க

“அச்சு” என்று மெல்லமாக அழைத்தாள் அம்ரிதா.

“என்ன டி” – கண்களை திறக்காமலேயே கேட்டாள் ஆஷ்ரிதா.

“தூக்கமே வர மாட்டேங்குது டி” பாவமாய் கூறினாள் அம்ரிதா.

“எனக்கும் தான் டி” – ஆஷ்ரிதா இன்னும் கண்களை திறப்பதாய் இல்லை.

“நீ எனக்கு அந்த தோட்டத்து ரோஜா கதை சொல்லுவியே அத சொல்லுறியா நான் தூங்குறேன்” – அம்ரிதா.

“தோட்டத்து ரோஜா கதையா?” – ஆஷ்ரிதா புரியாமல் கேட்டாள்.

எதிரில் பதில் எதுவும் இல்லை.

“உன்ன தான் டி கேட்குறேன்” – மீண்டும் ஆஷ்ரிதா கேட்க அப்பொழுதும் அம்ரிதாவிடம் இருந்து பதில் வரவில்லை.

கண்களை திறந்துக்கொண்ட ஆஷ்ரிதா அம்ரிதாவை திரும்பிப் பார்க்க, அவளோ கண்களை மூடியவண்ணம் தலையை ஆட்டிக் கொண்டே கதை கேட்பது போலவே செய்கை செய்துக்கொண்டிருந்தாள். அவளது நடவடிக்கையின் மாறுதலை கற்பூரமென புரிந்துக்கொண்ட ஆஷ்ரிதா தனது அலைபேசியை எடுத்து வீடியோ பதிவு செய்ய எண்ணி அருகில் இருக்கும் மேசையை தடவினாள். அலைபேசி அவளது கைகளில் தட்டுப்படவில்லை. அப்பொழுதுதான் சார்ஜரில் போட்ட நியாபகம் வந்தது அவளுக்கு. மெதுவாக கட்டிலில் இருந்து எழுந்துக்கொண்டவள் வீட்டின் வரவேற்பு அறைக்கு சென்று சார்ஜரில் இருந்த அலைபேசியை எடுத்துக் கொண்டு வந்தாள்.

சத்தம் ஏதும் எழும்பாதவாறு அம்ரிதாவின் அருகே வந்தவள் அலைபேசியை அம்ரிதாவின் முகத்திற்கு அருகில் கொண்டு சென்று கேமராவை செயலாக்கினாள். அதில் இருந்து வெளிப்பட்ட ஃப்ளாஷ் லைட்டின் வெளிச்சம் அம்ரிதாவின் முகத்தில் ஒருவித அசவுகரியத்தை ஏற்படுத்த, அதில் சிணுங்கிய அம்ரிதா “முகத்துல டார்ச் அடிக்காதனு எத்தனை தடவ சொல்லிருக்கேன் அர்ஜுன்.. போடா” என ஆஷ்ரிதாவின் கையில் இருந்த அலைபேசியை தட்டிவிட்டு மறுபக்கம் திரும்பி படுத்துக்கொண்டாள்.

அம்ரிதா அலைபேசியை தட்டிவிட்ட வேகத்தில் பதறிப்போன ஆஷ்ரிதா தனது கைகளால் வாயை பொத்திக்கொண்டு கட்டிலுக்கு கீழா சட்டென அமர்ந்துவிட்டாள். மேனி எங்கும் படபடக்க மெதுவாக நிமிர்ந்து அம்ரிதாவை காண, அவளோ ஆழமான துயில் கொண்டு அசையாதிருந்தாள். தற்பொழுது ஒரு பெருமூச்சு விட்ட ஆஷ்ரிதா கட்டிலுக்கு கீழேயே கால் நீட்டி அமர்ந்துக்கொண்டாள்.

“அர்ஜுன்.. அப்படி தானே சொன்னா அம்மு.? யார் அது அர்ஜுன்.. அப்போ அனேகன் சொன்னது உண்மைதானே.. முன் ஜென்மத்துல அம்முவுக்கு அர்ஜுன் –னு யாரையோ தெரியும். கரெக்ட்.” என எண்ணியவள் மீண்டும் அம்ரிதாவை வாஞ்சையாக பார்த்தாள்.

“நீ போன ஜென்மத்துல யாரா வேணும்னாலும் இருந்துக்கோ அம்மு.. அடுத்த ஜென்மத்துல கூட வேற யாராவது உனக்கு அக்காவா இருந்துக்கட்டும்.. இப்ப இந்த ஜென்மத்துல நீ எனக்கு வேணும்.. முழுசா என் தங்கச்சி அம்முவா வேணும்.. என்னால நீ இல்லாம இருக்க முடியாது அம்மு.. உன்ன யாருக்கும் நான் விட்டு தரமாட்டேன்..” என்றவள் தன் கண்ணில் துளிர்த்த துளிகளை துடைக்கவும் மறந்தவாறு அன்பு தங்கையையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ எப்பொழுது உறங்கிப்போனாளோ தெரியாது. காலை பொழுது விடியும் வேளையில் வெறும் தரையில் படுத்துக்கிடந்த ஆஷ்ரிதாவை அம்ரிதா தான் எழுப்பினாள்.

“அடியேய் எரும?! என்ன டி இங்க படுத்திருக்குற? எழுந்திரு டி” – அம்ரிதா.

காலை சோம்பலுடன் கண்விழித்த ஆஷ்ரிதா, தான் தரையில் கிடப்பதை மெல்ல மெல்ல உணர, முந்தைய நாள் இரவு நடந்தவை அனைத்தும் அவள் மனத்திரையில் வரிசையாய் காட்சியாகின.

‘அய்யோ நமக்கு முன்னாடி இவ எழுந்துட்டாளா? ஏன் இங்க படுத்து இருக்கேன்னு கேட்டா எப்படி சமாளிக்கிறது?’ என மனதினுள் யோசித்தவாறு எழுந்து அமர்ந்தாள் ஆஷ்ரிதா.

“என்ன டி நீ? எதுக்கு கீழ படுத்திருக்க” அம்ரிதா கேட்க திருதிருவென முழித்துக் கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

“ஹாஹா” என அடக்க முடியாமல் சிரித்த அம்ரிதா “வழக்கம் போல தூக்கத்துல உன்ன மிதிச்சு கீழ தள்ளிட்டேனா?” என்றாள்.

என்ன சொல்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி இருந்த ஆஷ்ரிதா தப்பிக்கும் நோக்கத்துடன் ‘ஆமாம்’ என தலையாட்டி வைக்க, மீண்டும் ஒரு குபீர் சிரிப்பு சிரித்த அம்ரிதா எழுந்து பல் துலக்க சென்றுவிட்டாள்.

தரையில் இருந்து கட்டிலுக்கு இடம் மாறி அமர்ந்த ஆஷ்ரிதா சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து முந்தைய நாள் நடந்தவற்றை தன் மனதிற்குள் அசைப்போட்டுக் கொண்டிருந்தாள்.

“சீக்கிரமே அனேகனை பார்க்கனும்.. அம்ரிதா மோகன் வீட்டுக்கு போகட்டும். அந்த நேரம் நாம அனேகன் வீட்டுக்கு போகலாம். வரும்போது சி.சி.டி.வி. கேமரா விஷயமா பேசிட்டு வந்திடலாம்” என்று முடிவெடுத்துவிட்டு காலை வேலைகளை கவனிக்கலானாள் ஆஷ்ரிதா.

(களவாடுவான்)
 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 10

வழக்கத்தை விட சீக்கிரம் எழுந்த அம்ரிதா துரிதமாக தன்னை தயார்படுத்திக்கொண்டு “அச்சு நீ நம்ம ஸ்கூல் பஸ் –ச வர சொல்லி போ இன்னைக்கு மட்டும். நான் ஸ்கூட்டி எடுத்துட்டு போறேன்” என்றாள்.

அனேகனை பார்க்க போகலாம் என எண்ணியிருந்தவளிடம் இரு சக்கர வாகனத்தை கேட்கவும் என்ன சொல்வதென அறியாது அமைதியாய் இருந்தாள் ஆஷ்ரிதா.

“சின்ன பாப்பா.. தனியாவா போறீங்க?” – பொன்னம்மா கேட்டார்.

“ஆமா பொன்னம்மா.. என்ன?” – அம்ரிதா.

“அச்சு பாப்பா.. நீங்களும் கூட போயிட்டு வரலாம்ல” – பொன்னம்மா.

‘எப்பவுமே என்ன அம்முகிட்ட மாட்டிவிடுற வேலையதான் பார்க்குறாங்க இந்த பொன்னம்மா’ என ஆஷ்ரிதா மனதினுள் நினைக்க

“ஏன் பொன்னம்மா.. நான் என்ன சின்ன குழந்தையா” – அம்ரிதா.

“அதுக்கு இல்ல பாப்பா.. நல்லவனோ கெட்டவனோ.. இந்த மாதிரி காரியத்துக்கு ஒரு எட்டு தலைய காட்டிட்டு வரனும் பாப்பா” – பொன்னம்மா.

சூழ்நிலை கைதியாக நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

“என்ன பேசுறீங்க பொன்னம்மா.. அவன் பொறந்ததே தப்பு.. இதுல அவன மேலோகத்துக்கு வழியனுப்ப சகல மரியாதையோட எல்லாரும் போகனுமா?” – அம்ரிதா.

“அப்படியெல்லாம் சொல்ல கூடாது பாப்பா.. எவ்வளவு கெட்டவனா இருந்தாலும் காரியம் பண்ணி அனுப்புறப்ப எல்லாரும் அவன் செஞ்ச நல்லதை மட்டும் தான் சொல்லி அழுவாங்க” – பொன்னம்மா.

“நல்லது செஞ்சா தானே” – அம்ரிதா.

“அப்படி இல்லை பாப்பா” – பொன்னம்மா.

“அட.. எந்த காலத்துல இருக்கீங்க பொன்னம்மா.. இப்ப நான் கூட என் மேனேஜர் செத்துட்டாரேனு போகல.. போன ஏதாவது தெரிஞ்சிக்கலாம்னு தான் போறேன்.. இவனுக்கு அவ்வளவு சீன் எல்லாம் இல்லை.. நீங்க வீட்ட பார்த்துக்கோங்க.. பாடி எடுத்ததும் நான் வர்றேன்.. பாய் டி அச்சு” என்று சொல்லியவாறு ஸ்கூட்டியை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டாள் அம்ரிதா.

“என்ன பாப்பா நீங்களாவது சொல்ல கூடாதா? அமைதியாவே இருந்துட்டீங்க?” – பொன்னம்மா.

“கொஞ்சம் நேரத்துல காரியத்தையே கெடுக்க பார்த்தீங்க போங்க” – ஆஷ்ரிதா.

“என்னது காரியத்தை கெடுக்க பார்த்தேனா? என்ன ஆச்சு பாப்பா?” – பொன்னம்மா.

நேற்று இரவு நடந்ததை சொல்வதா வேண்டாமா என யோசித்து தெளிந்தவள், “நான் அம்மு விஷயமா ஒரு முக்கியமான ஆள பார்க்க போகணும் இன்னைக்கு” என்று மட்டும் சொல்லி வைத்தாள்.

பொன்னம்மாவிடம் மறைக்கும் எண்ணம் எதுவும் இல்லை ஆஷ்ரிதாவுக்கு. உண்மைகளை சொன்னால் பொன்னம்மாவின் வயதிற்கு இதை அவர் எவ்வாறு எடுத்துக்கொள்வார், இந்த அதிர்ச்சியை அவர் மனதால் தாங்க முடியுமா என்ற ஐயமே ஆஷ்ரிதாவை வாய் திறக்க விடவில்லை.

“இப்போ எல்லாம் நான் என்ன பேசினாலுமே தப்பா போய்டுது என்ன பாப்பா?!” பாவமாய் கேட்டார் பொன்னம்மா.

“அய்யய்யோ.. அப்படி இல்லை பொன்னம்மா” பதறியே போனாள் ஆஷ்ரிதா.

“விடுங்க பாப்பா. கட்டையில போற வயசுல வாய வச்சிக்கிட்டு நான் தான் சும்மா கிடக்கனும்” – வலியுடனே வந்து விழுந்தது வார்த்தைகள்.

வயது முதிர்ச்சி அடைய அடைய மனம் என்னவோ குழந்தையாய் தான் மாறிப்போகிறது. உரோமங்கள் நரைத்த காலங்களில் உள்ளமும் தளர்ந்திடுமோ என்னவோ அதீத அன்பான மென்மையான சொற்களுக்கு மட்டுமே ஏங்கி நிற்கின்றது அவர்களது மனம். காண்போர் எல்லாம் தன்னை தூக்கிக் கொஞ்ச வேண்டுமென்ற குழந்தையின் அப்பட்டமான அடம்பிடிப்பே அவர்களுக்குள் அகிம்சையாய் நடக்கிறது. அநேக நேரங்களில் நாம் விளையாட்டாய் சொல்லும் ஒரு சில வார்த்தைகள் கூட விலையின்றி அவர்களை மனதளவில் வதம் செய்து விடுகிறது.

“ஏன் பொன்னம்மா இப்படியெல்லாம் பேசிட்டு இருக்கீங்க.. இந்த மாதிரியெல்லாம் சொன்னா அப்புறம் நான் உங்க கூட பேசவே மாட்டேன்” – கடிந்துக் கொண்டாள் ஆஷ்ரிதா.

“அது வந்து பாப்பா…” – பொன்னம்மா.

“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். எனக்கு இன்னைக்கு நீங்கதான் சாப்பாடு ஊட்டி விடனும். இதுதான் தண்டனை உங்களுக்கு. சீக்கிரம் இந்த தோசையை ஊட்டி விடுங்க. நான் கிளம்புறேன்” என தனது கையில் வைத்திருந்த தட்டை பொன்னம்மாவின் கையினில் திணித்தாள் ஆஷ்ரிதா.

உணவினை உண்டு முடித்தவள் அனேகனிடம் தன் வரவை தெரிவிப்பதற்காக அழைப்பு விடுக்க அவனோ அழைப்பை எடுத்த பாடில்லை.

‘ஆமா. நேரம் கெட்ட நேரத்துல தான் இவனும் படுத்துவான்’ எண்ணியவள் மீண்டும் முயற்சித்தாள். அப்பொழுதும் தோல்வியே கிட்டியது.

“கடவுளே இப்ப நான் என்ன செய்ய?” – சோர்ந்து போய் அமர்ந்தாள் ஆஷ்ரிதா.

தற்பொழுது அவளது அலைபேசி சிணுங்கிட அழைப்பது அனேகனே என எண்ணி வேகமாக எடுத்துப் பார்த்தாள். அலைபேசியின் திரை திரவியத்தின் பெயரை காட்டியது.

“இவன் எதுக்காக கூப்பிடுறான்” என வாய்விட்டு புலம்பியவள் அழைப்பை துண்டித்து வைத்தாள். மீண்டும் அலைபேசி மணியடிக்க “என்னதான் வேணுமாம் இவனுக்கு ச்சே” என்றவள் அடுத்த கணம் அமைதியாய் யோசித்தாள்.

‘கோவத்துல நாம அடிச்சிட்டோமே. அது தப்புதானே. அதுக்காக ஒரு மன்னிப்பு கேட்டுவிடுவோமா?’ என்று தோன்றவும் இரண்டாம் அழைப்பை ஏற்று காதில் வைத்து “சா” என்பதற்குள் எதிரில் அவன் முடித்திருந்தான்.

“சாரி அச்சு.. நான் அப்படி பேசிருக்க கூடாது.. அதுக்காக இப்படியா இருப்ப? ஒரு கால் அட்டண்ட் பண்ண கூடாதா?” – நட்பின் தவிப்பில் கேட்டான் திரவியம்.

“இல்ல.. அது.. நான்.. அயம் சாரி.. நானும் கை நீட்டியிருக்க கூடாது” – ஆஷ்ரிதா.

“அத எல்லாம் விடு அச்சு.. நான் அந்த அனேகனை போய் பார்த்தேன்” என்று திரவியம் சொல்லவும் மீண்டும் முருங்கை மரம் ஏறினாள் ஆஷ்ரிதா.

“என்ன அனேகனை போய் பார்த்தியா? என்ன தைரியம் திரு? அவரு என்ன பத்தி என்ன நினைப்பாரு? யார்கிட்ட கேட்டு அவர பார்க்க போன நீ” பொரிந்துத் தள்ளினாள் ஆஷ்ரிதா.

“ஹேய்.. பார்த்தேன் –னு தானே சொன்னேன். பேசினேன் –னு சொல்ல்லையே. அவரும் என்ன பார்க்கல.. நான் தான் அவர பார்த்தேன்” – திரவியம்.

“கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லேன்” – கடுப்புடன் கூறினாள் ஆஷ்ரிதா.

“ஃபோன் –ல பேசுற விஷயமில்லை இது.. நீ நேர்ல வா கிளம்பி.. நான் மால் –க்கு தான் போறேன்..” – திரவியம்.

“நான் அனேகன பார்க்க போகனும். நீ ஃபோன் –ல யே சொல்லு” – ஆஷ்ரிதா.

“இப்ப நீ அவன பார்க்க முடியாது.. சொல்லுறத கேளு.. வா கிளம்பி..” – திரவியம்.

“ஏன் அவன பார்க்க முடியாது?” – ஆஷ்ரிதா.

“உன்ன கிளம்பி வா –னு சொன்னேன்” – திரவியம்.

கோபத்தில் பல்லை கடித்தவள் “வந்து தொலையுறேன்” என்று அழைப்பை துண்டித்துவிட்டாள்.

சட்டென்று அழைப்பு துண்டிக்கப்பட்டதும் அலைபேசியின் திரையை பார்த்த திரவியம் “இந்த கோவத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்றான்.

அப்பொழுது அருகே வந்த அவன் அம்மா திரவியத்திடம் “அந்த பொண்ண உனக்கு பிடிச்சிருக்கா பா? பிடிச்சிருக்குனா சொல்லு மாமாகிட்ட சொல்லி பேசிப் பார்ப்போம்” என்றார்.

“அம்மா.. அவ என் ப்ரெண்டு மா.. உனக்கு எப்ப பாரு என் கல்யாணம் பத்திதான் நினைப்பா? நான் எந்த பொண்ணுகிட்ட பேசினாலும் இதையே கேட்குற?” என்றான் திரவியம்.

“இந்த வயசுல எனக்கு வேற என்ன கவலை டா இருக்க போகுது. ஒத்த புள்ளைய பெத்து வச்சிருக்கேன். உங்க அப்பாவும் இல்லை. நான் கண்ண மூடுறதுக்குள்ள உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி என் பேர புள்ளைங்கள பார்க்கனும்னு ஆசை இருக்காதா டா?” – நியாயமான கேள்வியை தான் கேட்டார் திரவியத்தின் அம்மா.

“அம்மா.. அவ்வளவு சீக்கிரம் உனக்கு எதுவும் ஆகாது.. கவல படாம இரு.. நான் மாலுக்கு கிளம்புறேன்.. பின்ன அச்சு வந்து வெயிட் பண்ண போறா..” என்றவன் வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான்.

“அன்னைக்கு ஆஸ்பத்திரியில அவ கத்திட்டு இருக்கறத பார்த்ததும் என்ன ஓரமா உட்கார வச்சிட்டு அவகிட்ட பேச ஓடிட்டான். அவளுக்காக யாருனே தெரியாத ஒருத்தன தேடி கண்டுபிடிச்சு பார்த்துட்டு வந்திருக்கான், ரெண்டு பேருக்கும் சண்டை வந்ததும் விடாம ஃபோன் போட்டு சாரி கேட்குறான், இப்ப அவள காத்திருக்க வைக்கக் கூடாதுனு ஓடுறான்.. கல்யாணம் பண்ணிக்கறயானு கேட்டா ப்ரெண்டு –னு சொல்லுறான்.. என்னத்த சொல்லுறது.. இறைவா என் புள்ளைக்கு ஒரு நல்ல பொண்ண காட்டுப்பா” என்று வாசலை தாண்டி சென்றுக்கொண்டிருக்கும் தன் மகனை பார்த்து புலம்பிக்கொண்டிருந்தார் திரவியத்தின் அம்மா.

சிறிது நேரத்தில் தன் வீட்டை விட்டு கிளம்பிய ஆஷ்ரிதா ஒரு ஷேர் ஆட்டோவை பிடித்துக்கொண்டு திரவியம் வேலை செய்யும் மாலுக்கு விரைந்தாள். அந்த நான்குவழி சாலையின் போக்குவரத்து நெரிசலில் ஷேர் ஆட்டோ நின்று கொண்டிருக்க ஆஷ்ரிதாவுக்கு மீண்டும் ஒரு சிந்தனை தோன்றியது.

‘இப்ப எதுக்கும் ஒருமுறை அனேகனை கூப்பிட்டு பார்ப்போமா?’ என எண்ணியவள் அழைக்கவும் செய்தாள். அப்பொழுதும் அவளது அழைப்பு ஏற்கப்படவில்லை.

“என்னதான் செய்யுறான் இவன்” என்று எரிச்சலுடன் தனது கைப்பையினுள் அலைபேசியை போட்டாள் ஆஷ்ரிதா. போட்ட மறுகணம் மீண்டும் அலைபேசி ஒலிக்க “ச்சீ என்ன டா இது இரிட்டேட்டிங் டே” என்றவள் தடார் படார் என அலைபேசியை பையில் இருந்து எடுத்தாள்.

ஆஷ்ரிதாவுக்கு அருகில் அமர்ந்திருந்த பாட்டி ஒருவர் “ஏம்மா.. பக்கத்துல மனுஷங்க எல்லாம் இல்ல? கூட்டத்துல ஒழுங்கா உட்கார்ந்து வா மா. நானும் அப்பத இருந்து பார்த்துட்டே இருக்கேன் ச்சை த்தொய் –னு” என்று திட்ட கண்கள் அவளை கேட்காமலேயே கலங்கிப்போனது ஆஷ்ரிதாவுக்கு.

‘கார் –அ இந்த நேரத்துலயா சர்வீஸ்க்கு விடுவேன்? அவசரத்துல ஒரு கேப் புக் பண்ணி வரனும்னு மூலைக்கு எட்டல.. எல்லாம் என் நேரம்’ என்று தன்னை நொந்துக்கொண்டவள் திரவியத்தின் மால் வந்ததும் வேகமாக கீழே இறங்கி ஓட்டுனரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு மீதி சில்லரை கூட வாங்காமல் மாலுக்குள் ஓடினாள்.

“ஏம்மா.. மிச்ச காசு இந்தா மா.. ஏய்..” என்று அந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனர் கத்த, அது ஆஷ்ரிதாவின் மூலையை எட்டவில்லை. அவள் தலைக்குள் ஓடிக்கொண்டிருந்த்து எல்லாம் திரவியம் என்ன சொல்ல போகிறான் என்பது மட்டுமே.

“இன்னைக்கு உனக்கு லாட்டரி தான் அடிச்சுருக்கு.. கலக்கு மணி கலக்கு” என்று அந்த ஷேர் ஆட்டோவில் இருந்த ஒருவர் கூற ஆஷ்ரிதா கொடுத்த ஐந்நூறு ரூபாயை பார்த்து சிரித்துவிட்டு தன் சட்டை பைக்குள் வைத்துக்கொண்ட ஓட்டுனர் மணி தன் சவாரியை தொடர்ந்தான்.

மாலுக்குள் வேகமாக சென்ற ஆஷ்ரிதா அங்கிருந்த வாட்டர் ப்யூரிஃபையரில் இருந்து தண்ணீர் பிடித்து குடித்துவிட்டு திரவியம் வேலை செய்யும் பொக்கே ஷாப்பிற்கு சென்றாள்.

“வந்துட்டியா? வா அச்சு” என்று அவர்கள் அங்கிருந்த காஃபி டே அரங்கிற்கு சென்று அமர்ந்தனர். அமர்ந்ததில் இருந்து ஏதோ அச்சு ஏதோ அசெளகரியமாய் உணர்வது திரவியத்திற்கு தெளிவாய் தெரிந்தது.

“அச்சு… ஆர் யூ ஓகே…” என்றான் கேள்வியாக.

“இல்லை திரு… அன்னைக்கு இங்க தானே ஒரு லேடி வந்து என்ன அசிங்கமா பேசிட்டு போனாங்க?” என்றாள் பாவமாக.

“எந்த லேடி?” என கேட்ட திரவியத்தை பார்த்து முறைத்தாள் ஆஷ்ரிதா.

“ஓ… சாரி… சாரி… அந்த ப்ளூ ஷர்ட் விஷயம் தானே… இன்னுமா அதை நினைச்சிட்டு இருக்க அச்சு?” என கேட்டான்.

“எப்படி திரு மறக்க முடியும்… இப்ப கூட அந்த லேடி இங்க இருக்கற மாதிரியும் என்னை பார்த்துட்டு இருக்கற மாதிரியும் இருக்கு. வர வர ப்ளூ கலர் –னாலே அலர்ஜியா இருக்கு” என்றாள் ஆஷ்ரிதா.

“ஹே கம் ஆன் யா… ஃப்ரீயா விடு. தேவை இல்லாதத எல்லாம் எதுக்கு யோசிக்கிற?” என்று கேட்டவன் இருவருக்கும் வழக்கம் போல காப்புசினோ காஃபியை ஆர்டர் செய்தான்.

“சரி… நீ சொல்ல வந்த விஷயத்தை சொல்லு. அனேகனை எப்படி நீ பார்த்த?” என்று வந்த வேலையில் மும்மரமானாள் ஆஷ்ரிதா.

“நீ பேசிட்டு போனதுக்கு அப்பறம்.. இல்ல இல்ல அடிச்சிட்டு போன அப்பறம்…” என்று சிறு இடைவெளி விட்டு ஆஷ்ரிதாவின் முகபாவணையை கவனித்தான் திரவியம். முகத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விஷயத்தை கேட்கும் முனைப்பில் தான் தீவிரமாய் இருந்தாள் ஆஷ்ரிதா.

‘அடிச்சதுக்கு சாரி சொன்னதுலாம் சும்மா தான் போல… ஒரு ரியாக்‌ஷனும் காணோமே!’ என யோசித்துக் கொண்டிருந்தான் திரவியம்.

“நான் அடிச்சதுக்கு அப்பறம்… என்னனு சொல்லு திரு” என்று அவசரித்தாள் ஆஷ்ரிதா.

‘அட இரு மா… நானே வாய கொடுத்து மாட்டிக்கிட்டேன் போலயே.. ஒரு தடவ அடிச்சிட்டு ஓராயிரம் தடவ சொல்லுறாளே’ என்று சலித்துக்கொண்டவன் பேச்சை தொடர்ந்தான்.

“நீ போன பிறகு நான் டாக்டர் பிரபாகரனை போய் பார்த்தேன். அவரு எங்க பேமிலி டாக்டர் தான். நல்ல பழக்கம். அதனால நம்ம ப்ரெண்ட்ஷிப் பத்தியும், அன்னைக்கு ரிஷப்ஷன் –ல நடந்த விஷத்தை பத்தியும் சொல்லி அனேகன் பத்தி விசாரித்தேன். அவரு இருக்குற இடம் தேடி போனேன்” என்றான் திரவியம்.

“என் விஷயத்தை பத்தி என்னோட நாலேட்ஜ் இல்லாம நீ எப்படி திரு அவருகிட்ட விசாரிக்கலாம். உன்கிட்ட இத்தனை நாள் நான் எதுவும் சொல்லாம இருந்ததுதான் கரெக்ட்-னு நினைக்க வச்சிட்ட. அனேகன் என்ன பத்தி என்ன நினைப்பாரு?” என்று கொந்தளித்தாள் ஆஷ்ரிதா.

“ஹே… கூல்… ஏன் அச்சு இப்படி பேசுற? நான் உன் ப்ரெண்ட் இல்லையா. உனக்கு நல்லது தானே நான் நினைக்சிறேன். இத விசாரிக்க எனக்கு உரிமை இல்லையா?” என கேட்டான் திரவியம்.

“உனக்கு யார் அந்த உரிமைய கொடுத்தா திரு? உரிமை –ங்கறது நாங்க உனக்கு கொடுக்க வேண்டியது… நீயா எடுத்துக்க வேண்டியது இல்ல” என்று காரம் சாரமாக கூறினாள் ஆஷ்ரிதா.

“அச்சு… நீ இப்ப கோபத்துல பேசுற. இத நான் மனசுல வச்சிக்க மாட்டேன். உனக்கு பிடிக்கலைனா இனி நான் தலையிடல… ஆனால் நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லிடுறேன்” என்றான் திரவியம்.

‘இன்னும் சொல்லி முடிக்கலையா நீ’ என்பது போல பார்த்தாள் ஆஷ்ரிதா.

“நான் அந்த அனேகன பார்க்க போன போது அவன் ஒருத்தர போட்டு அப்படி அடிச்சிட்டு இருந்தான். அது அவனோட அப்பா –னு நினைக்கறேன். கடைசியா…” என்று இழுத்தான் திரவியம்.

“என்ன கடைசியா? சொல்லு” என்று பரபரப்பாய் கேட்டாள் ஆஷ்ரிதா.

“சொன்னா நம்ப மாட்ட… அங்க இருந்த கேஸ் சிலிண்டர வெடிக்க வச்சி அந்த மனுஷன கொலை பண்ணிட்டான்” என்று சொல்லிவிட்டு மெளனமானான் திரவியம்.

அதிர்ச்சியில் உறைந்திருந்த ஆஷ்ரிதா “என்ன கொலை பண்ணாரா? திரவியம்… டோண்ட் பீ ஓவர் ஸ்மார்ட்… இப்படியெல்லாம் சொன்னா நான் அவன பார்க்க போக மாட்டேன் –னு தானே உன் ப்ளான்” என கேட்டாள் ஆஷ்ரிதா.

“வாட்! என்ன பேசுற ஆஷ்ரிதா! நான் எதுக்காக உன்கிட்ட பொய் சொல்லனும்? அதுவும் இவ்வளவு பெரிய விஷயத்துல?” என கேட்டான் திரவியம்.

“அதை தான் நானும் கேட்குறேன் திரு. எதுக்கு இப்படி ஒரு பொய் நீ சொல்லனும் என்கிட்ட?” என்று சினந்துக் கொண்டாள் ஆஷ்ரிதா. அந்நேரம் அவர்கள் ஆர்டர் செய்த காஃபி அந்த டேபிளில் வைக்கப்பட்டது.

“நான் சொல்லுறத கொஞ்சம் பொறுமையா கேளு அச்சு… கோபப்படாதே” என்று அவளது கையை பிடித்தான் திரவியம்.

“கையை விடு திரு” என்று அவள் வேகமாக எழுந்துக்கொள்ள மேஜையில் இருந்த காஃபி திரவியத்தின் மேலே மொத்தமாய் கொட்டியது. அதையும் பொருட்படுத்தாத ஆஷ்ரிதா “ப்ரெண்டா பழகிட்டோம் அப்படீங்கறதுக்காக டோண்ட் டேக் அட்வாண்டேஜ். என் விஷயத்துல நீ தலையிடாத. இனி நீ எங்க கூப்பிட்டாலும் நான் வருவேன்னு நினைக்காத” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

அவளுக்கு எப்படி புரியவைப்பது என்று குழம்பிப்போய் அமர்ந்திருந்தான் திரவியம்.

(களவாடுவான்)
 
Top Bottom