1
மாவட்ட குடும்ப நீதிமன்றம்…வளாகம்
கோவைமாவட்டம்.
நீதிமன்ற வளாகத்தில் உள்ளே இருந்த ஒரு கட்டண கழிப்பறையின் உள்ளே இருந்து தண்ணீர் சத்தத்தையும் மீறி
ஒரு பெண்ணின் அழுகை சத்தம் வெளியே வந்து கொண்டிருந்தது
அந்த அழுகையில் வலி மட்டுமே நிறைந்திருந்தது அந்த வலிக்கு யாராலும் மறந்து விட முடியாது
என்பது மறைமுகமாக அந்த அழுகையில் தெரிந்தது
கழிப்பறை யை உபயோகப்படுத்த உள்ளே வந்த ஒரு பெண்மணியோ அழுகை சத்தத்தை கேட்டு ஒரு நிமிடம் பயந்தவர்
பிறகு எந்தக் அறையிலிருந்து அந்த சத்தம் வருகிறது என கண்டு பிடித்தவர் அந்த அறையின் கதவை மெதுவாகத் தட்டினார்
திடீரெனத் தண்ணீர் சத்தம் நின்றது அழுகை சத்தமும் நின்றது அடுத்த சில வினாடிகளிலேயே உள்ளிருந்து பவித்ரா வெளியே வந்தாள் இருபத்தி ஆறு வயது அழகிய வட்ட முகம்,மாநிறம்,துறுதுறு கண்கள்,குட்டையும் அல்லாது வளர்த்தியும் அல்லாத ஐந்தேகால் அடி உயரம், சற்று பூசிய தேகம் அடர்த்தியான குட்டையான கூந்தல் அதை நன்கு இறக்கி போனிடெய்ல் போட்டிருந்தாள்,நெற்றியில் கோபி ஸ்டிக்கர் பொட்டு ,திருமணம் ஆனதற்கு அடையாளமாக கழுத்தில் பொன் தாலியும் கால்களில் மெட்டியும் ,வகிட்டில் சிறிய அளவு குங்குமம் இருந்தது.
அழுததின் காரணமாக கண்களும் மூக்கும் சிவந்து காணப்பட்டது.
வெளியே வரவும் அந்த பெண்மணி இவளை ஆச்சர்யத்துடன் பார்க்க பவித்ரா அவரை கண்டுகொள்ளாமல் அங்கிருந்த வாஷ்பேஷனில் முகம் கழுவ வந்தாள்.
தண்ணீரின் அளவை வேகமாக திருகிவிட்டாள்.
பிறகு இரு கைகளாலும் தண்ணீரை பிடித்தபடி முகத்தில் இடைவிடாது அடிக்கத் தொடங்கினாள் இப்பொழுது மௌனமாக தண்ணீருடன் அவளின் கண்ணீரும் வெளியேறத் தொடங்கியது.
பலமுறை முகம் கழுவியும் கூட அவள் அழுத தடயத்தை மறைக்க முடியவில்லை...முகத்தை அழுத்தி துடைத்தவள் ,நெற்றியில் இருந்த பொட்டை சரி செய்தாள்,வகிட்டில் இருந்த குங்குமத்தில் சற்று தண்ணீர் வைத்து முற்றிலும் அழித்தாள். ஆனாலும் பல நாட்களாக அந்த இடத்தில் வைப்பதால் குங்குமம் வைக்கும் அடையாளம் இருக்க அதை கண்டதும் தானாக கோபம் வந்தது.கோபமாக தலையில் மாட்டியிருந்த ரப்பர் பாண்டை கழட்டினாள்.
பிறகு தலைமுடியை பிரித்து வகிட்டை மறைப்பதுபோல் விரலாலே சைடாக வகிரெடுத்தவள் அந்த தடயத்தை மறைத்து
மீண்டும் தலை மூடியை ரப்பர் பாண்டால் இறுக்கி கட்டினாள்.
புடவையை சரிசெய்தவள் பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள்.
பாத்ரூம் வாசலில் கட்டணம் வசூலிக்கும் பெண்மணியிடம் இருந்த தன்னுடைய தோள் பையை வாங்கிய பவித்ரா அதிலிருந்து ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து அப்பெண்ணிடம் நீட்ட அவரோ சிரித்தபடியே பெற்றுக் கொண்டு
போன் ரொம்ப நேரமா கத்திக்கிட்டே இருந்துச்சும்மா என்று கூற
அவசரமாக பேக்கில் இருந்து தன்னுடைய மொபைல் போனை எடுத்து பார்த்தாள்.
அவளின் தம்பி வெங்கட் மூன்று முறை அழைத்து இருந்தான்.
உடனே இவள் வேகமாக தம்பிக்கு ஃகால் செய்து அழைக்க இவள் ஹலோ சொல்லி முடிக்கும் முன்னே எதிர்முனையில் இருந்த அவனது தம்பி வெங்கட் நாராயணன் வேகமாக பேச ஆரம்பித்தான்.
பவி நீ எங்க இருக்க... பாத்ரூம் போய்ட்டு வர இவ்ளோ நேரமா….இங்க லன்ஞ் டைம் முடிஞ்சது ஜட்ஜ் சார் வந்தாச்சி உன்ன இன்னும் காணோம் அடுத்து நம்ம கேஸ் தான் சீக்கிரம் வா வக்கீல் உன்னத் தேடறாங்க என்று கூற
இவளோ இதோ இப்போ வர்றேன்
இங்க கூட்டமா இருந்தது அதான் லேட் இதோ வர்றேன் என்று ஃபோனை ஆஃப் செய்து வைத்தவளுக்கு நீதி மன்றத்துக்குள் செல்லும் மன வலிமை இல்லை அவளுக்கு கண்டிப்பாக தெரியும் என்ன தீர்ப்பு வரும் என்று அதை தாங்கி கொள்ளும் வலிமை அவளுக்கு இப்பொழுது அவளுக்கு இல்லை... இருந்தாலும் செல்ல வேண்டுமே என்று அங்கிருந்து கிளம்பினாள்.சில மீட்டர் தூரம் நடக்க வேண்டும் வளாகத்திற்குள் செல்ல ஆனால் அவளால் எளிதாக செல்ல முடியவில்லை.
பல குழப்பங்கள்,காலையிலிருந்து சாப்பிடாததால் ஏற்பட்ட சோர்வு,நிதானம் இல்லாத நடை,கண்ணை விட்டு பாதை மறைய சற்று தலைசுற்றுவது போல் தோண்ற தலையில் கை வைத்த படி அங்கேயே சற்று நிற்க பூமி காலை விட்டு நகர்வது போல் தோண்றியது தள்ளாடியபடியே நடந்து சென்றாள்
அப்பொழுது ஒரு சொகுசு கார் ஒன்று அவள் கால் அருகே வேகமாக வந்து சடன் பிரேக் போட வினாடியில் பவித்ரா பயப்பட்டு வேகமாக நகர்ந்தவள் கோபத்துடன் வளாகத்திற்குள் யார் இவ்வளவு வேகமாக வண்டி ஓட்டி வருவது என தெரிந்துகொள்ள திரும்பிப் பார்த்தாள்.
இவளின் கோபத்தை தூசியாக மதித்தபடி ரிஷிகேஷ் நக்கலான பார்வையுடன் காரை விட்டு வெளியே வந்தான்.ரிஷிகேஷ் வயது இருபத்தி ஒன்பது...பவித்ராவின் முன்னால் கணவன்... மிகப்பெரும் பணக்காரன்
அவன் போடும் காலணியில் இருந்து தலையில் தேய்க்கும் ஹேர் ஆயில் வரை தரம் பார்ப்பவன்…
அவனைக் கண்டதும் மேலும் பயந்தவள் நீதிமன்றங்களுக்கு உள்ளே வேகமாக ஓடினாள்
இயலாமையுடன் ஒடும் அவளையே வேதனையுடன் பார்த்த ரிஷிகேஷூம் அவளின் பின்னே சென்றான்.
நேராக ஓடிய பவித்ரா அவளின் தம்பி வெங்கட்டின் மீது பலமாக மோத
அவளைப் பிடித்து நிறுத்தியவன்
என்னாச்சு பவி எதுக்கு இப்படி ஓடி வர்ற…
அங்க... அங்க... என்று திணறியபடி அவள் கையை காட்ட
அங்க யாரு என்று என்று நின்ற இடத்தில் இருந்தே வெங்கட் எட்டிப் பார்க்க உள்ளே கம்பீரமாக பளீரென்ற வெள்ளை சட்டையும் கருப்பு கலர் டெனிம் ஜீன்ஸூம் அணிந்த படி
அந்த இடத்திற்க்கும் அவனின் ஆரம்பரத்திற்க்கும் சற்றும் சம்மந்தமில்லாமல் ரிஷிகேஷ் அவனுடைய வழக்கறிஞர்கள் படையுடன் வந்து கொண்டிருந்தான்.
அவர் வந்தா என்ன ?
நீ ஏன் இப்படி பயப்படற என்று கோபபட்டவனிடன்
இல்ல வெங்கி அவர் வர்ற வேகத்திலேயே தெரியுது இங்க நமக்கு நியாயம் கிடைங்காதுன்னு இது வரை ஒருமுறை கூட இங்க வந்ததில்ல இன்னைக்கு வர்றாங்க அதும் கடைசி
நாளான தீர்ப்பு அன்னைக்கு
ஒரு முறை ஏன் வரலனு ஜட்ஜ் கூட கேக்கல எனக்கு பயமாயிருக்கு வெங்கி என்று அழத்தொடங்கினாள்.
அழாத பவி அவர் முன்னாடி அழுது நம்மள நாமே இறக்கிக்க கூடாது என்ன வந்தாலும் சரி இங்க நியாயம் கிடைக்கலனா நா மேல்முறையீடு பண்ணலாம் பயப்படாத என்று ஆறுதல் கூறினான்.
அதற்குள்ளாகவே ரிஷிகேஷ் அவன் படையுடன் இவர்களை கடக்க இவர்களின் வக்கீல் கூட அவனையும் அவனுடன் வந்த வக்கீல்களை பார்த்து மரியாதை செலுத்து வெங்கட்டுக்குமே தன்னம்பிக்கை போகத் தொடங்கிவிட்டது.
செல்லும் அவனை கலக்கத்துடன் பார்த்துகொண்டிருந்த பவித்ரா அவளின் தம்பியின் கைகளை பிடிமானத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ள இவர்களின் வக்கீல் இவர்களிடத்தில் வந்தபடி வாங்க நாமளும் உள்ள போகலாம் என்று அழைத்துச் சென்றார்.
உள்ளே இவர்களின் வழக்கு வந்தது…
பவித்ரா எதிர்பார்த்த தீர்ப்பு தான் வந்தது ஆனாலும் அதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை
அங்கேயே கத்தி அழ ஆரம்பித்தாள்
அவளின் அழுகையை கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற ரிஷிகேஷிடம் வந்தவள்
நீங்க சொன்னது போல சாதிச்சிட்டிங்கல்ல போங்க போய் உங்க சந்தோஷத்தை கொண்டாடுங்க ஆனா கண்டிப்பா என் கண்ணீருக்கு நீங்க பதில் சொல்லனும் என்று கூற
அழுது கொண்டே பேசும் அவளை மௌனமாக பார்த்துக்கொண்டு. இருந்த ரிஷிகேஷோ
மெதுவான குரலில் சாபம் விடறியா பவி பலன் கிடையாது இந்த காலத்துல ரொம்ப நல்ல பொண்ணுங்க சாபம் கொடுத்தாலே பழிக்கறது இல்லை அதுவும் உன்னை மாதிரி பெண் சாபம் கொடுத்தால் அது அந்த சாபத்துக்கு தான் இழுக்கு ப்ளீஸ் வழிவிடு என்றவனிடம்
மறுபடியும் மறுபடியும் என்னோட கேரக்டர் மென்ஷன் பண்ணாதீங்க நீங்க ரொம்ப ஒழுக்கம் மாதிரி என்னோட கேரக்டரை குறை சொல்றீங்க
ஆமா பவித்ரா நான் ஒழுக்கம் இல்லாதவன் தான் அதனால்தான் சுலபமா உன்னையும் சொல்ல முடியுது நான் ஒழுங்கா இருந்திருந்தா இப்படி என் முன்னாடி எல்லாம் நீ நின்னு கத்திக்கிட்டு இருந்திருக்க மாட்ட என்று மிகவும் பொறுமையாக கூற
மறுபடியும் சொல்லறேன் என்னை ஒழுக்கம் இல்லாதவ மாதிரி பேசாதீங்க
நான் எப்போ அப்படி சொன்னேன் பவி நீயே கற்பனை பண்ணிக்கிட்டு
பேசறதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்
பொய் சொல்லாதீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன்ன மாதிரி பொண்ணுங்க எல்லாம் சாபம் கொடுத்தா பலிக்காதுனு சொன்னிங்கல்ல
ம்ம்... சொன்னேன் உன்ன மாதிரி பொண்ணுனு சொன்னேன் அதுக்கு நீ எந்த அர்த்தம் வேணாலும் போட்டுக்கலாம் உன்ன மாதிரி பொண்ணுனா உன்ன மாதிரி பொண்ணு தான் அர்த்தம் நீ என்ன அர்த்தம் எடுத்துக்கறனு எனக்கு தெரியாது என்று அவளுக்குப் புரியாதவாரு பேச
ச்சே எப்பவுமே இதான உங்க பிரச்சினை
வாய்க்கு வந்தபடி பேசி விட வேண்டியது அதுக்கப்புறமா அதை அப்படியே எதிர்ல இருக்கறவங்க மேல திருப்பி விட வேண்டியது உங்களைப் பற்றி தெரிந்தும் வந்து பேசுறேன் பாருங்க என்ன சொல்லணும் என்று குறைபட
பார் பவித்ரா இப்போ நீதான் வந்து என் கிட்ட பேசினது இப்ப கூட கோர்ட்டு தீர்ப்பை மதிக்காம நீ என்கிட்ட வந்து சண்டை போடுறனு என்னால மறுபடியும் உன்மேல கேஸ் போட முடியும்...என்ன கேஸ்னு யோசிக்கறீயா
நீதிமன்ற அவமதிப்பு கேஸ் அந்த அளவுக்கு என்னை கொண்டு போக மாட்டேனு நினைக்கிறேன் வழியை விடு என்று அவளை தாண்டி ரிஷிகேஸ் செல்ல அவன் பின்னே அவனின் வழக்கறிஞர் படைகளும் அவனின் அடிபுடிகளும் பின்னே ஓடத் தொடங்கினர்.
அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்ற கோபத்திலும் தனது கையாலாகாத தனத்தையும் நினைத்து பவித்ரா அங்கேயே முகத்தை மூடியபடி அழத்தொடங்கினாள்
வளாகத்தின் மற்றொரு இடத்தில் வெங்கட் அவர்களின் சார்பாக வாதாடிய வழக்கறிஞரிடம் கடுமையாக சண்டையிட்டு கொண்டிருந்தான்
சார் நீங்க வேணும்னு தானே விட்டு கொடுத்துட்டீங்க இத்தனை நாள் வாய்தாவா வாங்கீனிங்க இன்னைக்கு ரிஷிகேஸ் வந்துட்டாருனு நீங்க வாயே திறக்கல
நம்ம கிட்ட அவ்ளோ பாயிண்ட்ஸ் இருந்தும் கூட நீங்க ஒரு பாயின்ட்ஸ் கூட எடுத்து வைக்கல ஒரு பாயிண்ட்ஸ் எடுத்து வைத்திருந்தா கூட கேஸ் நமக்கு சாதகமாக இருந்திருக்கும் உங்க மௌனத்தால இன்னிக்கி என் அக்காவோட நிம்மதி கேள்விக்குறி ஆயிருச்சு
கோபப்படாதீங்க மிஸ்டர் வெங்கட் இப்போ ஒன்னும் இல்ல இந்த கோட்டுல இல்லைன்னா நம்ம மேல் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம் அங்கு கண்டிப்பா நமக்கு பேவரா தான் இருக்கும்
அவரின் பேச்சை கேட்டு கோபமடைந்த வெங்கட் இருகைகளாலும் கூம்பிட்ட படி வேணாம் சார் போதும் உங்களால நாங்க பட்டது
ஆறு மாசத்துல முடிக்கவேண்டிய கேஸை ரெண்டு வருஷம் இழுத்து அடிச்சிருக்கீங்க பெரிய தப்பு பண்ணிட்டேன் உங்கள நம்பி வந்து
இனியும் உங்களை நம்பி ஏமாற நான் தயாரா இல்ல
இதை எப்படி சரி பண்ணனும்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிலாம்ல ரிஷிகேஷ் எதிர்த்து ஆஜர் ஆக மாட்டேன்னு
சைலன்ட்டா இருந்து எங்க கழுத்த அறுத்துட்டிங்களே இனியாவது செய்கிற வேலைக்கு கொஞ்சமாவது நியாயமா நடந்துக்க பாருங்க உங்களை நம்பி ஒருத்தன் வர்றான்னா அவன் முழுசா உங்கள மட்டும் தான் நம்பி வரான் இப்படி பாதியில கைவிடாதீங்க சார்
இதுக்கு நியாயம் அவங்க பக்கம் இருந்து நீங்க அவங்களுக்கு பேவரா செயல்பட்டு இருந்தா கூட உங்களை நான் மன்னித்து இருப்பேன் ஆனால் அநியாயம்னு தெரிஞ்சும் அவருக்கு துணை போய்ட்டீங்க இல்ல நல்லா இருங்க சார் உங்களோட பேலன்ஸ் பீஸ் உங்களைத் தேடி வரும்
அவர்கிட்ட நீங்க எவ்வளவு பணம் வாங்கினீங்களோ அதுகூட சேர்த்து எங்களோட பணத்தையும் வெச்சுக்கோங்க ஏன்னா அந்தப் பாவப்பட்ட பணத்துல உங்களால ஆடம்பர வாழ்க்கையை வேணா வாழ முடியும் ஆனா எங்கள மாதிரி நியாயவாதிகளோட பணத்தால் தான் உங்களால நிம்மதியா ஓருவேளையாவது சாப்பிட முடியும் என்று கூறியவன் தனது தமக்கையை தேடி செல்ல ஆரம்பித்தான்
தொடரும்...