வாவ்
. அடப்பாவிங்களா இப்படியா ரெண்டு பேர கானும்னா ஒரேடியா போய்டாங்கனுதான் நினைக்கனுமா? பாவம் அவங்களும் என்ன பண்ணுவாங்க அந்த ஏரிக்குள்ளையா போய் தேட முடியும். அனிச்சம் அண்ட் நளன் ஆதிபகவனையே அசைச்சுட்டாங்க. வாவ் குட்டி நளனோ இல்லை அனியோ வரப்போறாங்க
. அமரா
செம அடி ஆனாலும் செழியன் அப்பா திருந்திருக்காரா
. எபி
இந்த கதை வித்தியாசமானது. எதிர்காலம் அல்லது வேற உலகம் அப்படினு பாக்குறப்ப இதுவரை டெக்னாலஜில முன்னேறுன உலகமாதான் படிச்சுருக்கேன். இது அதுல இருந்து வித்தியாசமா இருக்கு அண்ட் இப்ப இருக்கும் நிலை அப்படியே போனால் பூமி இப்படிதான் ஆகும்.
1. பூமில வந்த அனிச்சம், நளனோட வாழ்வதற்கான் போராட்டம். ஆதிபகவனையே குழப்புன தீரன். அவங்க பிரபஞ்சப் பயணம் அதுல அவங்க கத்துகிட்ட உணர்வுகள் எல்லாமே
கடைசியா செழியனோட நெல்மணிகளை விளைவித்தது
பூமி புதுசா பிறந்து வளர்ர மாதிரி இருக்கு.
2. பொழில் இந்த பிரபஞ்சத்துல நளன் அண்ட அனிச்சம் பயணிச்ச மாதிரி நானும் பயணிச்சேன். வேலுநாச்சியார் வரலாறு ஏற்கனவே கேட்டது அப்படினாலும் இப்பவும் அந்த வீரம் அப்படியே வருது படிக்கும் போது. குயிலி அவங்களோட நாட்டுப்பற்று வீரம் அப்பறம் மங்கை வேலன் அவங்க வாழ்க்கைப் பயணம் எல்லாமே
. இதுல என்ன ஹைலட்னா ஆதிபகவனுக்கு தெரியாத இணைபிரபஞ்ச கான்செப்ட் நம்ம வேலுநாச்சியாருக்கு தெரிஞ்சுருக்குறதா சொன்னதுதான். அது உண்மையாவும் இருக்கலாம். ஏன்னா சங்க நூல்களில் இணைப் பிரபஞ்ச கூற்றுகள் இருந்து அதை படிச்சுருக்கலாம்.
3. புடவி- கொடி செழியன் காதல் வாய்விட்டு சொல்லாமலே எல்லாவற்றையும் புரிந்து கொண்டனர். அமரா அந்த காலத்துல வாழ்ந்த விவேக மங்கை. அமரா செழியன் காதலுடன் வாழ்ந்த வாழ்க்கைப் பயணம்
. அமரா கடைசில செழியன் அப்பாகிட்ட கேட்ட கேள்வி
செழியன் அமராக்கு எழுதின கடிதம் அவங்க ஆழமான காதலை காட்டுது
. அரசி அவங்க கதை. கோகிலம் அம்மா, மலர் மற்றும் மலரின் கணவன் எல்லாருமே
செழியன் அப்பாதான்
பிடிக்காத மனுஷன்(மனுஷனா
).
இந்த கதைல எந்த சுவை இல்லை எல்லாமே இருக்கு. சிரிப்பு, அழுகை, கோவம், சோகம், ஆதங்கம், வெக்கம், குழப்பம், பயம், வெகுளித்தனம், பெருமிதம், வீரம், தவிப்பு அப்படினு எனக்கு தெரிஞ்ச எல்லா சுவையையும் திருப்திகரமாக சுவைத்துவிட்டேன். என்னால் புரிந்து கொள்ள முடியாத சுவையும் இருந்திருக்கலாம் அதையும் இனி வரும் கதைகளில் அடையாளப்படுத்தி கண்டறிய முயலுகிறேன். எப்பவும் போல உங்க எழுத்தும் கருத்தும்
சூப்பரோ சூப்பர். கமென்ட் கொஞ்சம் பெரிசு ஆகிடுச்சு