Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL காதல் கடிதமடி நான் உனக்கு! - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
753
Reaction score
861
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

சுவிட்ஷரா

Member
Vannangal Writer
Messages
30
Reaction score
38
Points
18
காதல் கடிதமடி நான் உனக்கு

("காதல் கடிதம் தீட்டவே" என்று இருந்த என் கதையின் பெயரை நான்
"காதல் கடிதமடி நான் உனக்கு"
என்று மாற்றி விட்டேன் டியர்ஸ்!
வாங்க கதைக்குள் போகலாம்
- சுவிட்ஷரா)


கதை முன்னோட்டம்

திருமண மண்டத்தின் மணமகள் அறையில்... அழகுப் பதுமையாய் தயாராகி அமர்ந்திருந்த மணமகளைக் கிண்டல் செய்துக் கொண்டிருந்தார்கள் அவளின் தோழிகள்.

இப்படி ஆரவாரம் செய்யும் தோழிகளுக்கு நடுவில் அவள் மட்டும் அமைதியாய் அமர்ந்திருந்தாள் மணமகள் சாமன்யா ராமலிங்கம்.

எப்பொழுதும் கலகலவென இருக்கும் சாமன்யா, தன் தோழிகளின் கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் செவி சாய்க்காமல் பதட்டத்துடன் அமர்ந்திருந்திருக்க...
அவளை புரியாமல் பார்த்த அவள் தோழி லேகா...

"இவளுக்கு என்ன டி பிரச்சனை, இப்படி மூஞ்சியை உம்முன்னு வெச்சு உட்கார்ந்து இருக்கா?" என்று நக்கலாக சிரிக்க...

"ஃபர்ஸ்ட் நைட்டை நினைச்சு பயம் போல?" என்று அதே நக்கலுடன் சிரித்தாள் ரியா.

தன் தோழிகளை ஒரு பார்வைப் பார்த்த சாமன்யா... "அய்யோ... சிரிக்காதீங்க டி, நானே அவரை நினைச்சு பயத்தில் இருக்கேன், நீங்க வேற." என்று பாவமாய் விழிக்க...

"எவரை நினைச்சு?" என்று ரியா கண்ணடிக்க...

தன் வாயைப் பிதிக்கிய சாமன்யா... "நான் எவரை சொல்றேன்னு உண்மையாவே உனக்கு தெரியலையா, இல்லை தெரியாத மாறி நடிக்கிறையா?"

"ஹிஹி... உன் வருங்கால ஆத்துக்காரரை தான சொல்லற?" என்று பல்லைக் காட்டினாள் ரியா.

"சம்மு, அவரை நினைச்சு உனக்கு என்ன டி பயம்?" என்று தன் கிண்டலை விடுத்து லேகா பொறுமையாய் வினவ...

"நான் கேள்வி பட்டிருக்கேன் லேகா. அவருக்கு கோபம் ரொம்ப வருமாம். கண்டிப்பா அவர் என்னை திட்டப் போறார்... எல்லாம் முடிஞ்சுது! எனக்கு அழுகையே வருது." என்று தன் அழகான முட்டைக் கண்கள் விரிய சாமன்யா மேலும் புலம்ப ஆரம்பிக்க...

"அவர் எதுக்கு டி உன்னை திட்டனும்?" என்று புரியாமல் தன் தோழியை நோக்கினாள் லேகா.

"அதான! அவர் உன்னை திட்ட என்ன காரணம் இருக்குது?" என்ற வண்ணம் சுகந்தியும், ரியாவும் சாமன்யாவின் எதிரில் வந்து அமர்ந்தார்கள்.

தோழிகள் மூவரையும் விழிகள் விரிய மாறி, மாறிப் பார்த்த சாமன்யா, நீண்ட ஒரு பெருமூச்சுடன் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த அந்த நிகழ்வைப் பகிற ஆரம்பித்தாள்...
"அன்னைக்கு பொண்ணு பார்க்கிறப்போது அவர் என்கிட்ட என்ன சொன்னாரு தெரியுமா?" என்று அன்று நடந்த விஷயங்களை எல்லாம் ஒன்று விடாமல் தன் தோழியிடம் கூறியவள்...
"இதை எல்லாம் சொல்லிட்டு கடைசியா அவர் ஒன்னு சொன்னாரு டி...
'இங்க பாரு சாமன்யா, நான் சொன்னது எல்லாம் உனக்கு புரிஞ்சுது தான?
உனக்கும் எனக்கும் கண்டிப்பா செட் ஆகாது. உன் வாழ்க்கையை நான் கெடுக்க விரும்பல. என் வீட்டில் தான் நான் என்ன சொன்னாலும் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாங்க. இன்னைக்கு எனக்கே சொல்லாம பொண்ணுப்பார்க்க ஏற்பாடு பண்ண மாதிரி நாளைக்கு என்கிட்ட என்னுடைய விருப்பத்தைக் கேட்காம அவங்க கல்யாண ஏற்பாட்டை பண்ணவும் நிறைய வாய்ப்பு இருக்குது. அதான் சொல்லறேன்! அவங்களுக்கு என் விருப்பம் எல்லாம் முக்கியமே இல்ல... அவங்க சொல்லற பொண்ணு கழுத்தில் நான் தாலிக் கட்டணும் அவ்வளவு தான். அதனால், என்னைப் பிடிக்கலைனு நீயே உன் வாயால சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்திடு. நிறுத்துவ தான? இல்லேனா... அதுக்கப்பறம் நடக்கும் எந்த ஒரு விஷயத்துக்கும் நான் பொறுப்பு இல்ல. என் உண்மையான முகத்தை அப்போ நீ நிச்சயம் பார்ப்ப!" என்று அன்னைக்கு அவர் கோபமா சொல்ல...
நான் அப்போதிக்கு சரி, சரினு வேகமா பயத்தில் தலையசைச்சுட்டேன். ஆனா எனக்கு அவரைப் பிடித்து இருந்துச்சு டி. அதான்! அவர் அவ்வளவு சொல்லியும் அவரைக் கல்யாணம் பண்ணிக்க நான் முடிவுப் பண்ணிட்டேன்." என்று...
தற்பொழுது தன் எதிரே இருக்கும் தோழிகளிடம் பாவமான முகத்துடன் சொல்லி முடித்தாள் சாமன்யா.

வாயைப் பிளந்து அவளைப்பார்த்த சுகந்தி... "அடிப்பாவி! இவ்வளவு பெரிய விஷயத்தை அவரு சொல்லி... உன்னை கல்யாணத்தையும் நிறுத்த சொல்லி இருக்காரு. இதுக்கு அப்பறமும் நீ எதுக்காக டி கல்யாணத்துக்கு சம்மந்தம் சொன்ன? அவர் சொன்ன விஷயத்தை எல்லாம் கேட்ட பிறகும் உனக்கு அவரை தான் கல்யாணம் பண்ணிக்கணுமா என்ன?" என்று அதிர்ச்சியாய் வினவினாள்.

நீண்ட ஒரு பெருமூச்சை இழுத்த விட்ட சாமன்யா... "இந்த ஒரு விஷயத்தை தவிற மத்த எல்லா விஷயத்திலும் அவரு பக்காவான ஆளு தான் டி. அதில்லாம, இந்த காலத்தில் எந்த பையன் தான் கட்டிக்கயிருக்கும் பொண்ணுக்கிட்ட தன்னைப் பத்தி இப்படி ஓபனா சொல்லுவான்? இதை மறைச்சு கல்யாணம் பண்ணி, அதுக்கு அப்பறம் எனக்கு இந்த விஷயம் தெரிய வந்திருந்தா தான் நான் கஷ்டப் பட்டிருப்பேன். அதில்லாம, அவர் செஞ்சது ஒன்னும் பெரிய தப்பா எல்லாம் எனக்கு தெரியல. இந்த காலத்தில் இது ரொம்பவே சகஜம் தான். எனக்கு அவர் நேர்மை பிடிச்சிருந்துச்சு... அதில்லாம அவரைப் பார்த்த உடனே எனக்கு அவரைப் பிடிச்சிருச்சு டி." என்று அவள் லேசான வெட்கத்துடன் கூறி முடிப்பதற்குள்...

"இருந்தாலும்!" என்று விழித்தாள் சுகந்தி.

"என்ன டி இருந்தாலும்...னு இழுக்கிற?" என்ற வண்ணம் சாமன்யா மற்றும் சுகந்திக்கு இடையில் வந்து வந்தமர்ந்த லேகா, தன் தோழிகளை நோக்கி...
"சாமன்யாக்கு பார்த்த மாப்பிள்ளைக்கு என்ன டி குறைச்சல்? நல்ல வசதியான வீட்டுப் பையன், பார்க்கவும் ஆளு நல்லா சமார்ட்டா இருக்காரு. நிறைய படிச்சு இருக்காரு, பொறுப்பான ஆளு. இந்த மாதிரி ஒரு பையன் எல்லாம் கிடைக்கவே குடுத்துவெச்சிருக்கணும். அதில்லாம சாமன்யா சொன்ன மாதிரி முக்கால்வாசி எந்த பையனும் தன்னைப் பத்தி முழுசா கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி ஓபனா எல்லாம் சொல்லமாட்டாங்க." என்று தன் தோழிக்கு ஆறுதலாய் பேசினாள்.

புன்னகைத்துக் கொண்டே... "ஆம்!" என்பது போல வேகமாய் தலையசைத்தாள் சாமன்யா... நடக்கவிருக்கும் விஷயத்தைப் பற்றி அறியாமல்!

சுகந்தி மற்றும் ரியாவும்... "உனக்கே சரி'னா நாங்க என்ன சொல்றது? எங்களுக்கு ஹாப்பி தான்." என்று சாமன்யாவைக் கட்டிக் கொண்டார்கள்.

அதே சமயம்... மற்றொரு அறையில்...

பல்லைக் கடித்த வண்ணம் கடுப்பாய் அமர்ந்து இருந்தான்
மணமகன் அழகிற்கு இனியன்.

அவன் கண்களோ கோபத்தினால் சிவந்து இருக்க... "இன்னைக்கு நானா, அவளா பார்த்துக்கலாம். அன்னைக்கு ஒரு நாள் அவளைத் தனியா அழைத்து என் வாழ்க்கையில் நடந்த எல்லாத்தையும் ஒன்னு விடாம சொல்லி, என்னை பிடிக்கலைனு சொல்ல சொன்னா... என்னை ரொம்ப பிடிச்சு இருக்கிறதா சொல்லி இருக்கா அந்த சாமன்யா. அப்படி பிடிக்காத ஒருத்தனை கட்டிக்க அவளுக்கு என்ன அப்படி ஒரு ஆசை? இதில் என் அப்பா, அம்மா வேற... என்னைக் கேட்காம பத்திரிக்கை அடிச்சு, இத்தனை பேரைக் கூப்பிட்டு... எனக்கே பிடிக்காம என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டு இருக்காங்க. இப்போ அவங்க மானம் போகாம இருக்க, நான் பலி ஆடா ஆகனும். அதான... சூப்பரா இருக்குடா எல்லாரோட பிளாக் மெயிலும். மத்தவங்க முன்னாடி பெத்தவங்கள அவமானம் பண்ண வேண்டாமேனு பொறுமையா இருக்கேன். தயவு செஞ்சு நீங்களா இந்த கல்யாணத்தை நிறுத்தினா நல்லது, இல்லேனாலும் நான் நிறுத்திடுவேன்." என்று அந்த அறை அதிறக் கோவத்தில் கத்திக் கொண்டிருந்தான் இனியன்.

*****

ஒரு மணி நேரத்திற்கு பிறகு..!

என்ன சொல்லி அவனை சம்மதிக்க வைத்தார்கள் என்று தெரியவில்லை. மணமேடையில் அமர்ந்திருந்தான் அழகிற்கு இனியன்.

சில நொடிகளிலேயே அவன் அருகில் தங்கச்சிலைப் போல அலங்கரிக்கப்பட்ட சாமன்யா வந்து அமர... இனியனுக்கு அவளைக் காணுகையில் சுருக்கென்று தன் உள்ளே கோபம் ஏறியது.

தான் அவ்வளவு எடுத்துச் சொல்லியும் தனக்கு துரோகம் செய்யும் காரியத்தை அவள் செய்து விட்டாள் என்பது தான் அவனின் அப்போதிய மனவோட்டம்.
அவளைக் கண்களால் எரிப்பது போல ஒரு பார்வைப் பார்த்தான் அழகிற்கு இனியன்.

அவன் பார்வையை கண்ட சாமன்யாவிற்கு உள்ளுக்குள்ளே சிறு நடுக்கும் வர... அவள் கைகள் எல்லாம் உரைந்துப் போனது. பயத்தில் எச்சில் விழுந்துவள்... அவனை ஓரக்கண்ணால் பார்க்க...

அவன் கண்களோ கோபத்தில் சிவந்து, முகம் எல்லாம் இறுகிப் போய் இருந்தது.

அவனின் பார்வை அவளைக் கலங்கடிக்காமல் இல்லை.
கண்கள் ஓரத்தில் லேசாய் துளிர்த்த நீரைத் துடைத்துக் கொண்டாள் அவள்.

மற்றொருப்புறம் நரநரவென்று கோவத்தில் பற்களைக் கடித்துக் கொண்டிருந்த இனியனால் அவனைக் கட்டு படுத்திக்கொள்ள முடியவில்லை.

கண்கள் சிவக்க சாமன்யாவைப் பார்த்துக் கொண்டிருந்த அழகிற்கு இனியனின் கண்களில்... சரியாக பட்டாள் குடி போதையில் தள்ளாடிக் கொண்டே கடைசியாய் இருக்கும் ஒரு நாற்காலியில் அமர்ந்து இருக்கும் சாம்பவி.

அவளைக் கண்டதும் ஏற்கனவே கடும் கோவத்தில் இருந்த இனியனின் நரம்புகள் மேலும் கோபத்தில் புடைக்க தான் செய்தது.

இறுகி இருந்த அவனின் முகத்தை கண்ட சாம்பவி, திமிரான ஒரு புன்னகையை அவனிடம் வீசி... 'எனக்கு தெரியும் டா உன்னால என்னை மறக்க முடியாதுனு.' என்பது போல் ஒரு ஏலன பார்வையுடன் கால் மீது கால் போட்டு அமர...

அவ்வளவு நேரம் கோபத் தீயைக் கக்கிக் கொண்டிருந்த இனியன், அவளை வெறுப்பேற்றும் முயற்ச்சியில் தன் அத்தனைக் கோபத்தையும் தன் கட்டுக்குள் முடிந்துவிட்டு அவளைப் பார்த்து புன்னகையுடன் கையசைக்க...
அதைக் கண்ட சாம்பவி லேசாய் எரியாமல் இல்லை.

அவள் எரியுவதைக் கண்டு உள்ளுக்குள்ளே குளிர்ந்த இனியன்... சாமன்யாவைத் திரும்பிப் பார்த்து லேசாய் சிரிக்க...

சாமன்யாவிற்கு தான் அவன் திடீர் புன்னகைக்கு அர்த்தம் புரியாமல் போனது. அவனை ஆச்சரியமாய் பார்த்த வண்ணம் விழித்துக் கொண்டிருந்தாள்.

மறுப்புறம் சாம்பவிக்கோ உள்ளே எரிய தான் செய்தது.

*****

யார் இந்த அழகிற்கு இனியன்? அவன் வாழ்வில் அப்படி என்ன தான் நடந்தது?

அப்படி அவன் எந்த விஷயத்தை சாமன்யாவிடம் கூறினான்.

அவன் அவ்வளவு எடுத்துக் கூறியும் சாமன்யா எதற்காக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள்.

அவனுக்கே விருப்பமில்லை என்றாலும் எதற்காக அவன் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்பாடு செய்தார்கள்.

அழகிற்கு இனியனின் திருமணத்திற்கு குடி போதையில் வந்திருந்த அந்தப் பெண் சாம்பவி யார்? அவளுக்கு இனியனுக்கும் எதாவது சம்மந்தம் இருக்குமா?

தெரிந்துகொள்ள கதையை முழுமையாய் படியுங்கள்.

*****


முழுக்க, முழுக்க காதல் கதை தான்❤️.
கண்டிப்பா எமோஷன் நிறையா இருக்கும்❤️.
அதை விட காதல் கண்டிப்பா நிறையவே இருக்கும்❤️.

உங்கள் விமர்சனத்தை கீழே உள்ள லிங்கை அமுக்கி பதிவிடவும்... (Share your comments here friends.)⬇️

 
Last edited:

சுவிட்ஷரா

Member
Vannangal Writer
Messages
30
Reaction score
38
Points
18
❤️காதல் கடிதமடி நான் உனக்கு 01❤️



டிசம்பர் மாதத்தின் வருகையால் குளிரும் அல்லாது, வெயிலும் அல்லாது இதமான ஒரு தட்பவெப்பநிலையில் கோயம்பத்தூர் மாநகரம் அன்றைய நாள் பொழுதில் அமைந்திருக்க... மிதமான சூரிய ஒளியில் அழகாய் ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த காலை வேளை.

அந்த காலைப் பொழுதினை ரசித்த வண்ணம் தனது வீட்டைச் சுற்றியுள்ள அந்தப் பெரிய தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான் அன்பு என்கின்ற அன்பிற்கினியன்.

அன்பு... பெயருக்கு ஏற்றார் போல அன்பானவன் தான், அதே சமயம் கொஞ்சம் முரடன். அவனின் குடும்பம் தான் அவனுக்கு அனைத்தையும் விடப் பிரதானம்.
தன் குடும்பத்தினை யாராவது தீண்டினால் அவர்களை வாயாலே வசைப்பாடி விடுபவன். தனது கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு, தன் தந்தைக்கு துணையாய் தங்கள் குடும்ப பிசினஸ்சை தற்சமயம் கவனித்து வருகிறான். அத்துடன் இவர்கள் வீட்டின் இப்பெரிய தோட்டத்தினை கவனிப்பவனும் இவனே!

எப்பொழுதும் போல தங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றி முடித்த அன்பு, கைக் கால்களை எல்லாம் கழுவி விட்டு தனது வீட்டிற்குள் நுழையும் சமயம்... கையில் காஃபி கப்புடன் அவனை நோக்கி வந்தாள் அம்மா திரிபுரசுந்தரி.

அவளின் கையிலிருக்கும் காஃபியை வாங்கிய அன்பு, அங்கிருந்த சோபாவின் மீது அமர...
அவனின் அருகே அமர்ந்த திரிபுரசுந்தரி... "அன்பு!" என்று லேசான தயக்கத்துடன்
அவனை நோக்கினாள்.

"சொல்லுங்க மா." என்றான் அன்பு காஃபியை ஒரு வாய் பருகியப்படி.

"அது வந்து டா... இந்த காஃபியைக் குடிச்சுட்டுப் போயி உன் அண்ணனை எழுப்பி விடு. இன்னும் தூங்கிட்டு இருக்கான் அவன். நாளைக்கு திருமங்கலத்தில் அவனுக்குக் கல்யாணம் என்கிற விஷயம் உனக்கு நியாபகம் இருக்கு தான? நாம இப்போ திருமங்கலத்துக்குக் கிளம்பினா தான் சாயங்காலத்துக்குள்ளப் போயி சேர முடியும். கல்யாண வேலைகள் எல்லாம் நிறைய இருக்குதுல?" என்றாள் திரிப்புரசுந்தரி படபடப்புடன்.

அவள் கூறியதைக் கேட்ட அன்பின் முகம் அடுத்த நொடி மாறியது.
ஏதோ ஒரு யோசனையுடன் தன் அம்மாவின் முகத்தை நோக்கியவன்...
"அம்மா! நான் ஒன்னு கேட்டா நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்களே."

"சொல்லு அன்பு."

"இல்ல மா, அண்ணனுக்கு நாம இப்படி ஒரு கட்டாயக் கல்யாணத்தைப் பண்ணிவைக்கிறது சரி தானா?" என்று தன் தாயைப் பார்த்தான் கேள்வியாக...

"டேய்! காலில் விழாதக்குறையா கஷ்டப்பட்டு அவனை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சிருக்கோம் நானும், உன் அப்பாவும். அவன் எந்த நிமிஷத்தில் வேணாலும் மனசு மாறலாம். வெறும் பத்து நாளில் பெண் பார்த்து ஏற்பாடான கல்யாணம் டா இது. நானே உன் அண்ணன் என்னப் பண்ணுவான், ஏதுப் பண்ணுவான்னு புரியாம ஒரு பயத்துல வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கேன். நீ வேற என்னை இப்படி எல்லாம் கேள்விக் கேட்டு டென்ஷன் பண்ணாத. அவனைப் பார்த்து பக்குவமா எழுப்பிக் கூப்பிட்டு வா. புரியுதா?" என்று படபடப்புடன் பேசினாள் திரிபுரசுந்தரி.

காப்பியை குடித்து முடித்து, அந்த டம்பிளரை தன் அம்மாவின் கையிலே கொடுத்த அன்பு... "மா, உன் பதட்டமும், அப்பாவுடைய வருத்தமும் எனக்குப் புரியுது மா. ஆனாலும், எனக்கு என்னமோ தப்பாப் படுது. இப்படி அவசர, அவசரமா ஒரு கல்யாணம் நடந்து தான் ஆகணுமா மா?"

"அய்யோ ஏன் அன்பு? உன் அண்ணனே அமைதியா இருந்தாலும் நீ இப்படி என்னை கேள்விக் கேட்டுக் குடையற? இதெல்லாம் நாங்க உன் அண்ணனின் நல்லதுக்கு தான பண்றோம்." என்று தன் இளைய மகனை திரிபுரசுந்தரி முறைக்க...

"அவன் நல்லதுக்காகப் பண்றீங்க சரி. ஆனா மாட்டப் போறது அந்தப் பொண்ணு தான? பாவம் அது சின்னப் பொண்ணு மா. அண்ணன் என்னை மாதிரிக் கிடையாது. நான் எந்தப் பொண்ணை நீங்கக் கைக்காட்டினாலும் அடுத்த நொடி அவள் கழுத்தில் தாலிக் கட்டி, உங்க வார்த்தைக்காகவே அவளை என் பொண்டாட்டியா ஏத்துப்பேன். ஆனா, அண்ணன் அப்படி இல்ல. அவன் இதுவரை வாழ்வில் யார் சொன்னதையும் கேட்டு நடந்ததே இல்ல. இந்த ஒரு விஷயத்தில் தான் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்... அப்படி, இப்படினு சொல்லி அவனைக் கட்டாயப் படுத்தி கல்யாணத்துக்கு எப்படியோ சம்மதிக்க வச்சிட்டீங்க. நாளைக்கே விவகாரத்துன்னு அவன் வந்து நின்னா... அந்தப் பொண்ணோட கதி?"

"ஏன் டா இப்படி அபாசகுணமா பேசற? உன் அண்ணன் நாகரிகம் அறிஞ்சப்பையன், அவன் அப்படி எல்லாம் தப்பா கண்டிப்பா நடந்துக்க மாட்டான்." என்று தன் மூத்த மகனின் மேலுள்ள நம்பிக்கையில் பேசிய திரிபுரசுந்தரி, நீண்ட ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு... "அப்படியே அவன் எதாவது பண்ணாலும், அவனை சமாளிக்க வேண்டியது நம்ம கடமை.
என்னப் பண்ண சொல்லற அன்பு? அவனை இப்படியே அழிந்துப்போக விட சொல்லறையா?" என்றவளின் முகம் வாடியது.

"புரியுது மா... ஆனாலும்?" என்று வாடிய தன் அம்மாவின் முகத்தை தனது கைகளால் ஏந்திப் பிடித்தான் அன்பு.

"இங்க பாரு அன்பு. சாமன்யா நம்ம சொந்தக்காரப் பொண்ணு... படிச்சப் பொண்ணு. உன் அண்ணன் இனியன் பத்தின எல்லா விஷயமும் அவளுக்கு தெரியும். இருந்தும், அவ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்கா. நீயும் தான அவக்கிட்ட அன்னைக்குப் பேசிப் பார்த்த. இதை விட ஒரு நல்ல பொண்ணு உன் அண்ணனுக்கு இந்த ஜென்மத்தில் கிடைக்காது."

"உண்மை தான் அம்மா. எனக்கும் அவங்க அண்ணியா வந்தா அண்ணாவை மாத்திடுவாங்கன்னு தோணுது. ஆனா, கொஞ்சம் நாள் பொறுத்து ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாமே மா. இப்படி பத்து நாள்ல அவசர அவசரமா தான் பண்ணனுமா? அவன் தான் இப்போதிக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லாறான்ல... அப்பறம் ஏன் வற்புறுத்தறீங்க? அவனே ஆல்ரெடி மனசு உடைஞ்சுப் போயி இருக்கான். இந்த சமயத்தில் திடீர்னு அவன் கையில் ஒரு பொண்ணை தூக்கிக் கொடுத்தா அவன் என்ன மாதிரி ரியாக்ட் பண்ணுவான்னு நினைச்சாலே பயமா இருக்குது."

"ஏன் டா அவனுக்கு அடுத்த மாசம் வந்தா 31 வயசு முடிஞ்சு 32 ஆகப் போகுது. இதுக்கு மேல எல்லாம் லேட் பண்ண முடியாது. ஜோசியர் வேற 32'குள்ள உன் அண்ணனுக்கு கல்யாணம் நடக்கணும், இல்லேனா... அதுக்கப்பறம் அவனுக்கு கல்யாணமும் நடக்காது, ஒரு பெரிய கண்டமும் வருமுன்னு சொல்லி இருக்காரு. அதனால் புரிஞ்சுக்க அன்பு, எனக்கு தெரியாது இந்த கல்யாணம் நடந்தே ஆகனும்... இதுதான் உன் அப்பாவோட முடிவும், என் முடிவும் கூட! அங்க ஊருக்கு போயிட்டா... நம்ம மொத்த சொந்தக் காரங்களும் அங்க தான் இருக்காங்க. எல்லாம் ஒரு வாரமா அங்க கல்யாண ஏற்பாட்டை எல்லாம் பண்ணிட்டு இருக்காங்க. இவன் அங்க வந்து அழும்பு பண்ணாலும் தாலிக் கட்டாம தப்பமுடியாது. எதா இருந்தாலும் அங்கப் போயி சமாளித்துக்களாம்.
அதனால் எதிர்த்துப் பேசாம அவனைக் கிளப்பிக் கூட்டிக்கிட்டு வா." என்று முடிவாக சொல்லிவிட்டு, அங்கிருந்து எழுந்து சென்றாள் திரிபுரசுந்தரி.

நீண்ட இரு பெருமூச்சை இழுத்து விட்ட அன்பிற்கினியன்... 'இப்படி சிக்கலான வேலையில் எல்லாம் என்னையே நல்லாக் கோர்த்து விட்டு வேடிக்கைப் பார்க்கிறாங்க புருஷனும், பொண்டாட்டியும்! இன்னைக்கு ஒரு சம்பவம் நடக்கப் போறது உறுதி.' என்று தன் நெற்றியை கைவிரலால் அழுத்தமாய் தேய்த்த வண்ணம், தன் அண்ணன் அறைக்கு சென்றான்.

அவன் உள்ளே சென்ற சமயம்... ஒரு தலையணையின் மீதுக் காலைத் தூக்கிப் போட்டவாறு அசந்து உறங்கிக் கொண்டிருந்தான் அவனின் அண்ணன் அழகிற்கு இனியன் என்கின்ற "இனியன்."

அழகிற்கு இனியன்... பெயருக்கு ஏற்றார் போல பெரிய ஆணழகனில்லை என்றாலும் அழகன் தான் அவன். நல்ல உயரம், கட்டுமஸ்தான உடல், மாநிறம் என்று கண்களைக் கவரும் விதத்தில் அழகாகவே இருப்பான்.

அவனுடைய பெயர் இனியனாய் இருந்தாலும் அவனிடத்தில் சில நாட்களாகவே இனிமையை பூதக்கண்ணாடிப் போட்டு தான் தேட வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் இருந்தே அழகிற்கு இனியன் சிறிது கோபக்கார முரடன் தான். அவ்வளவு எளிதில் யாருக்கும் வளைந்துக் கொடுக்க மாட்டான், அவனுக்கு எப்பொழுதும் அவன் முடிவே பிராதனம்! யார் சொல்லையும் கேட்டு நடப்பவணும் அல்ல.

இவ்வளவு இருந்தும்... அவனிடத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு வரை ஒரு லேசான இனிமை இருந்தது.
ஆனால், கடந்த ஒரு மாதக் காலமாய் அந்தக் கொஞ்ச இனிமையையும் அவன் முற்றிலும் இழந்துப் போய் தான் இருக்கிறான்.

அந்த தயக்கத்தில் தான் அன்பு, அவனை எப்படி எழுப்பித் தயார் செய்வது என்று அறியாமல் திண்டாடிக் கொண்டிருந்தான்.

இனியன் கோபப்பட்டு அடித்தால் கூடக் கூட அன்பு பொறுத்துக் கொள்வான். ஆனால், அன்பின் பயமே இனியன் தன்னை நோக்கி எதாவது வார்த்தையை இறக்கி விடுவானோ என்று தான்.

அதே சமயம்... சாமன்யா தான் இவனின் மனவலிக்கு மருந்தாய் இருப்பாள் என்றும் தோன்றியது அன்பிற்கு. சாமன்யா அழகான, அன்பானப் பெண். பேச்சில் இனிமையை அள்ளித் தெளிப்பவள்.
அவளைப் போன வாரம் தன் அண்ணனிற்காகப் பெண் பார்க்க சென்றிருந்த சமயமே அன்பிற்கு அவள் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் வந்து விட்டது. அவளுடன் இனியன் வாழ்ந்தால் கண்டிப்பாக அந்த ஏமாத்துக்காரியை மறந்து நிம்மதியாய் வாழுவான் என்று அன்பு மனதிற்கு தோன்ற...
தன் அண்ணன் தம்மை வெறுத்தாலும் பரவாயில்லை, அவனை எழுப்பி ஊருக்கு தயார் செய்வோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டான். ஆகையால், தன் முழு தைரியத்தையும் வரவழைத்து... அழகிற்கு இனியனின் முதுகில் அழுத்தமாய் ஒரு தட்டுத் தட்டினான்.

அவன் தட்டிய தட்டில் இனியன் லேசாய் தூக்கத்தில் அசைய...

"இனியா...! அண்ணா...! எழுத்துரு." என்று சத்தமாய் கூச்சல் போட்ட வண்ணம், மீண்டும் அவனைத் தட்டினான் அன்பு.

அதிலே தூக்கம் விழித்த அழகிற்கு இனியன்... தன் கைக் கால்களை நீட்டி சோம்பல் நெட்டி முறித்த வண்ணம் உம்மென்ற முகத்துடன் எழுந்து அமர்ந்தான் .

அவன் தோளின் மீது மெதுவாக கைவைத்த அன்பு... "சீக்கிரம் குளிச்சுட்டு புது ட்ரெஸ் போட்டுட்டு வா அண்ணா. நாளைக்கு உன் கல்யாணம் மறந்துட்டியா?" என்று அவன் கூறி முடிப்பதற்குள்...

அழகிற்கு இனியனின் தூக்கம் முற்றிலும் கலைந்துப் போனது.

தன் தோள் மீதிருந்த அன்பின் கையைத் தட்டி விட்டு, அவனை எரிப்பது போல ஒரு பார்வைப் பார்த்த அழகிற்கு இனியன்... "உருகி, உருகி லவ் பண்ணவளே செருப்பை கழட்டிப் போடற மாதிரி என்னை வீசிட்டு போயிட்டா. இதுல அரேஞ் மேரேஜ் விளங்கிடும். எல்லாரும் சேர்ந்து என்னை கட்டாயப் படுத்தி என்ன சுகத்தை அனுபவிக்கப் போறீங்களோ எனக்குப் புரியல. ஆனா அன்பு நீ கூட என்னைப் புரிஞ்சுக்கல... அப்படி தான? உன்னை நான் எவ்வளவு நம்பினேன் தெரியுமா டா? ஆனா கடைசியில் நீயும் எனக்கு எதிரா செயல் பட்டு இருக்க." என்று வலி மிகுந்த குரலில் கூறியவனின் அந்த வெறுமையான வார்த்தைகள் அன்பைத் தாக்காமல் இல்லை. தன் அண்ணனி்டம் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அவன் விழிக்க...

இனியன் என்ன நினைத்தானோ என்று தெரியவில்லை, தன் கோபத்தை லேசாய் கட்டுப் படுத்திக் கொண்டவன்...
"ஹம்... விடு டா! எது நடக்கணும்னு இருக்கோ அது தான் நடக்கும். விடு! நான் போய் குளிக்கிறேன்." என்று உணர்ச்சியற்ற முகத்துடன் எழுந்து குளிக்க சென்றான்.

அவன் முகத்திலேயே அவன் எத்தனை வலியில் இருக்கிறான் என்பது அன்பிற்கு புரிய தான் செய்தது.

நீண்ட ஒரு பெருமூச்சை இழுத்து விட்ட அன்பு... 'எல்லாம் நன்மைக்கே!' என்று நினைத்த வண்ணம் தன் அறைக்கு குளிக்க சென்றான்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு...

குடும்பத்தில் உள்ள நால்வரும் கிளம்பித் தயாராகி, காரில் திருமங்கலத்தை நோக்கி பயணித்தார்கள்.

______________________

தொடரும்...❤️ கதையின் ஆரம்பம் எப்படி இருக்குது'னு மறக்காம கமென்ட் பண்ணுங்க. கீழே உள்ள லிங்கை/விஷயத்தை அமுக்கினால் கமென்ட் பக்கத்திற்கு போகும். அந்த பக்கத்தை கொஞ்சம் கீழே தள்ளி சென்றால் நீங்க விமர்சனம் எழுத "reply" என்ற பெயருடன் ஒரு பாக்ஸ் வரும். அதில் பண்ணுங்க நண்பர்களே❤️!

 
Last edited:

சுவிட்ஷரா

Member
Vannangal Writer
Messages
30
Reaction score
38
Points
18

❤️ காதல் கடிதமடி நான் உனக்கு 02 ❤️


ஒரு மணி நேரத்திற்கு பிறகு...

குடும்பத்தில் உள்ள நால்வரும் கிளம்பித் தயாராகி, காரில் திருமங்கலத்தை நோக்கி பயணித்தார்கள்.

அன்பு வாகனத்தை செலுத்த... பின் சீட்டில் அமர்ந்த வண்ணம் கிசுகிசுவென ரகசியம் பேசிக் கொண்டிருந்தார்கள் இவர்களின் தந்தை விக்ரமன் மற்றும் தாய் திரிபுரசுந்தரி.

இனியனோ அன்பின் அருகே அமைதியாய் அமர்ந்திருந்தான்.

கார் பயணம் முழுவதும் இனியன் யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை. அன்பு காரை ஓட்டிக் கொண்டிருக்க, சீட்டில் சாய்ந்த வண்ணம் ஜன்னல்
வழியாய் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான் இனியன்.

அவனுக்கோ அவளின் நினைவுகள் தான் விடாமல் துரத்தியது.

'டேய் அழகா... டேய் அழகா...' என்று தான் அவனை எப்பொழுதும் அழைப்பாள் அவள்.

"டேய் அழகா, எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? நீ என்கூட இருந்தா போதும், எனக்கு வேற எதுவும் தேவையில்லை. எனக்கு உன்னை மாதிரியே ஒரு ஆண் குழந்தை, அப்பறம் உன்னோட இந்த அழகான கண்கள் இருக்கிற மாதிரி ஒரு பெண் குழந்தை வேணும். உன்னையும், நம்ம குழந்தைகளையும் நான் காலம் முழுக்க ரசிச்சுப் பார்க்கணும். நூறு வருஷம் நான் உன்கூட வாழனும் டா அழகா. அப்பறம் கடைசியில் உன் இதயத்தில் தலை சாய்ந்து, உன்னோட இந்த அழகான கண்ணைப் பார்த்துட்டே நான் என் உயிரை விட்டு விடனும்." என்று கொஞ்சும் கண்களுடன், சிரித்த உதடுகளால் உருகி உருகிப் பேசிய அவளே தான், சில நாட்களுக்குப் பிறகு...

"அழகிற்கு இனியன், தயவு செஞ்சு என்னை விட்டிரு. எனக்கு இன்னும் ரெண்டு மாசத்தில் கல்யாணம். அவன் உன்னை விட பெரியப் பணக்காரன். நீ நல்லா வசதியான வீட்டுப் பையன் தான்... ஆனா என்ன உன் மொத்த சொத்தையும் சேர்த்தா என்ன ஒரு 20 கோடி வருமா? அதுல பாதி உன் தம்பிக்கு போக மீதி 10 கோடி... இந்தக் காலத்தில் ரொம்பவே கம்மி. ஆனா, அவன் சொத்து மதிப்பு 100 கோடி. உன்னை விடப் பத்து மடங்கு அதிகம்! அவன் வீட்டுக்கு ஒரே பையன்... சோ, நான் அவனைக் கல்யாணம் பண்ணிக்க முடிவுப் பண்ணிட்டேன். ஏதோ சில மாதங்கள் உன்னை நான் லவ் பண்ணித் தொலைஞ்சுட்டேன். இனியும் என்னால உன்னை மாறி ஒருத்தன் கூட எல்லாம் குப்பைக் கொட்ட முடியாது." என்று மூஞ்சியில் அடிப்பது போல தான் சொல்லிவிட்டு சென்றாள்.

எதற்கும் கலங்காத, கட்டுக்கடங்காத இனியனை முதன் முதலில் கலங்கடித்த பெருமை அவள் ஒருத்தியையே சேரும்.
அனைத்து விஷயங்களிலும் தெளிவாய் இருக்கும் இனியன் கடைசியில் காதலில் ஏமாறுவான் என்பதை அவனே எதிர்பார்த்தது இல்லை.

அந்த வலி தான் அவனை அதிகமாய் வாட்டியது.

என்ன செய்தாலும் அவனால் அவள் செய்த துரோகத்தை மட்டும் மறந்திட முடியைவில்லை.

இவ்வாறு ஏமாந்து விட்டோமே என்று தன்னைத் தானே கடிந்த வண்ணம் அமர்ந்திருந்தான்.

சுமார் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு... கோயம்புத்தூரிலிருந்து,
திருமங்கலத்தில் இருக்கும் சாமன்யாவின் வீட்டை வந்து அடைந்தார்கள் அழகிற்கு இனியன் மற்றும் குடும்பத்தினர்.

அன்பு தனதுக் காரை அந்த இரண்டு அடுக்கு வீட்டின் முன்னால் நிறுத்த...
காரில் இருந்து இறங்கினார்கள் விக்ரமன் மற்றும் திரிபுரசுந்தரி.

இனியன் மட்டும் ஏதோ ஒரு யோசனையில் காரின் உள்ளேயே அமர்ந்து இருக்க...

"அண்ணா, பொண்ணு வீட்டுக்கு வந்துட்டோம்." என்று இனியனின் தோள்களை உலுக்கினான் அன்பு.

அவன் குழுக்களில் நினைவுத் திரும்பிய இனியன்... "நான் இங்க சாமன்யா வீட்டுக்கு வரல. எனக்கு டயர்டா இருக்குது, நான் தூங்கனும். இங்க தான் நமக்குன்னு ஒரு சொந்த வீடு இருக்கே. அப்பறம் ஏன் நான் இங்கே தங்கனும்? என்னை நம்ம வீட்டில் இறக்கி விடு. அதைக் கல்யாணத்துக்காக சுத்தம் பண்ணி தான வெச்சு இருப்பாங்க? நான் நம்ம வீட்டுக்குப் போறேன்... சாவிக் கூட என்கையில் தான் இருக்குது." என்று இறங்க மறுத்தான்.

அதனால் வேறுவழியின்றி விக்ரமன் மற்றும் திரிபுரசுந்தரியை சாமன்யா வீட்டில் இறக்கி விட்ட அன்பு... தன் அண்ணனை அழைத்துக் கொண்டு திருமங்கலத்தில் தங்களுக்கென சொந்தமாய் இருக்கும் அந்த பூர்வீக வீட்டில் கொண்டுப் போய் இறக்கி விட்டான்.

விக்ரமனின் சொந்த ஊர் திருமங்கலம் தான்.

வேலைக்காக 30 வருடங்களுக்கு முன்பு விக்ரமன் கோயம்பத்தூருக்குக் குடிப் பெயர்ந்து விட... அங்கே தான் வளர்ந்தார்கள் இனியன் மற்றும் அன்பு. எப்பொழுதாவது எதாவது விஷேசம், திருவிழா என்றால் தான் திருமங்கலம் பக்கமே வருவார்கள் இவர்கள். அதனாலேயே சொந்தங்களுடன் இனியன் மற்றும் அன்பிற்கு பெரிதாய் பழக்கமில்லை.
அன்பாவது சற்று உறவுகளுடன் ஒட்டுவான். இனியன் பெரிதாய் யாரிடமும் ஒட்டமாட்டான். அவன் உலகம் மிக சிறியது தான்... அதில் அவன் குடும்பம் மற்றும் நண்பர்கள் பத்து பேர் மட்டுமே அடக்கும்.

அதனால் தனித்து இருந்தே பழக்கப்பட்ட இனியன், அன்றும் யாரிடமும் ஒட்டி உறவாட விருப்பமின்றித் தங்கள் வீட்டிற்கு சென்று விட... அவனை அங்கே இறக்கிவிட்ட அன்பு திருமண வேலைகளை கவனிக்க வேண்டி அங்கிருந்து நேராக மண்டபத்திற்கு சென்று விட்டான்.

அன்று மாலை...
இனியனுடைய நட்பு வட்டாரமும் இவர்களுடைய ஊருக்கு வந்து விட... அவர்களிடம் தான் அமர்ந்து அன்றைய பொழுதை கழித்தான் இனியன்.

*****

அடுத்த நாள் காலை...

திருமண மண்டபத்தில்...

அந்த கல்யாண மண்டபம் முழுக்க சொந்த பந்தங்கள் நிரம்பியிருக்க... ஆளுக்கொரு திசையில் வேலைகளும் தீவிரமாய் நடந்துகொண்டிருந்தது. அனைவர் மனதிலும், முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி... அந்த மகிழ்ச்சியை மேலும் மெருகேற்றும் விதமாய் சத்தமாக கேட்டது மணமகள் அறையினுள் இருந்து வந்தன சிரிப்போசை சத்தங்கள்.

அழகுப் பதுமையாய் தயாராகி அமர்ந்திருந்த மணமகளைக் கிண்டல் செய்துக் கொண்டிருந்தார்கள் அவளின் தோழிகள்.

இப்படி ஆரவாரம் செய்யும் தோழிகளுக்கு நடுவில் அமைதியாய் அமர்ந்திருந்தாள் மணமகள் சாமன்யா ராமலிங்கம்.

எப்பொழுதும் கலகலவென இருக்கும் சாமன்யா, தன் தோழிகளின் கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் செவி சாய்க்காமல் பதட்டத்துடன் அமர்ந்திருந்திருக்க...
அவளை புரியாமல் பார்த்த அவள் தோழி லேகா...

"இவளுக்கு என்ன டி பிரச்சனை, இப்படி மூஞ்சியை உம்முன்னு வெச்சு உட்கார்ந்து இருக்கா?" என்று நக்கலாக சிரிக்க...

"ஃபர்ஸ்ட் நைட்டை நினைச்சு பயம் போல?" என்று அதே நக்கலுடன் சிரித்தாள் ரியா.

தன் தோழிகளை ஒரு பார்வைப் பார்த்த சாமன்யா... "அய்யோ... சிரிக்காதீங்க டி, நானே அவரை நினைச்சு பயத்தில் இருக்கேன், நீங்க வேற." என்று பாவமாய் விழித்தாள்.

"எவரை நினைச்சு?" என்று ரியா கண்ணடிக்க...

தன் வாயைப் பிதிக்கிய சாமன்யா... "நான் எவரை சொல்றேன்னு உண்மையாவே உனக்கு தெரியலையா, இல்லை தெரியாத மாறி நடிக்கிறையா?"

"ஹிஹி... உன் வருங்கால ஆத்துக்காரரை தான சொல்லற?" என்று பல்லைக் காட்டினாள் ரியா.

லேகாவோ, சாமன்யாவிடம்... "சம்மு, அவரை நினைச்சு உனக்கு என்ன டி பயம்?" என்று தன் கிண்டலை விடுத்து பொறுமையாய் வினவ...

"நான் கேள்விப் பட்டிருக்கேன் லேகா. அவருக்கு கோபம் ரொம்ப வருமாம். கண்டிப்பா அவர் என்னை திட்டப் போறார்... எல்லாம் முடிஞ்சுது! எனக்கு அழுகையே வருது." என்று தன் அழகான முட்டைக் கண்கள் விரிய சாமன்யா மேலும் புலம்ப ஆரம்பிக்க...

"அவர் எதுக்கு டி உன்னை திட்டனும்?" என்று புரியாமல் தன் தோழியை நோக்கினாள் லேகா.

"அதான..! அவர் உன்னைத் திட்ட என்னடி காரணம் இருக்குது?" என்ற வண்ணம் சுகந்தியும், ரியாவும் சாமன்யாவின் எதிரில் வந்து அமர்ந்தார்கள்.

தோழிகள் மூவரையும் விழிகள் விரிய மாறி, மாறிப் பார்த்த சாமன்யா, நீண்ட ஒரு பெருமூச்சுடன் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த அந்த நிகழ்வைப் பகிற ஆரம்பித்தாள்...
"அன்னைக்கு பொண்ணு பார்க்கிறபோது அவர் என்கிட்ட என்ன சொன்னாரு தெரியுமா?" என்று அன்று நடந்த விஷயங்களை எல்லாம் ஒன்று விடாமல் தன் தோழியிடம் கூறியவள்...
"இதை எல்லாம் சொல்லிட்டு கடைசியா அவர் ஒன்னு சொன்னாரு டி... 'நான் சொன்னது எல்லாம் உனக்கு புரிஞ்சுது தான சாமன்யா? உனக்கும் எனக்கும் கண்டிப்பா செட் ஆகாது. உன் வாழ்க்கையை நான் கெடுக்க விரும்பல. என் வீட்டில் தான் நான் என்ன சொன்னாலும் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாங்க. இன்னைக்கு எனக்கே சொல்லாம பொண்ணுப்பார்க்க ஏற்பாடு பண்ண மாதிரி நாளைக்கு என் விருப்பமே இல்லாம எனக்கொரு கல்யாண ஏற்பாட்டை அவங்க பண்ணவும் நிறைய வாய்ப்பு இருக்குது. அவங்களுக்கு என் விருப்பம் எல்லாம் முக்கியமே இல்ல... அவங்க சொல்லற பொண்ணு கழுத்தில் நான் தாலிக் கட்டணும் அவ்வளவு தான். அதனால், என்னைப் பிடிக்கலைனு நீயே உன் வாயால சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்திடு. என் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக், அது, இதுனு சொல்லி என்னை எல்லாப் பக்கமும் லாக் பண்ணிட்டாங்க. என்னால என் சைடில் இருந்து எதுமே பண்ண முடியல. அதனால் எனக்குத் தெரியாது சாமன்யா! நீ தான் இந்த கல்யாணத்தை நிறுத்தனும்.
நிறுத்துவ தான? இல்லேனா... அதுக்கப்பறம் நடக்கும் எந்த ஒரு விஷயத்துக்கும் நான் பொறுப்பு இல்ல. என் உண்மையான முகத்தை அப்போ நீ நிச்சயம் பார்ப்ப!" என்று அன்னைக்கு அவர் கோபமா சொல்ல...
நான் அப்போதிக்கு சரி, சரினு வேகமா பயத்தில் தலையசைச்சுட்டேன். ஆனா எனக்கு நிஜமாவே அவரைப் பிடித்து இருந்துச்சு டி. அதான்! அவர் அவ்வளவு சொல்லியும் அவரைக் கல்யாணம் பண்ணிக்க நான் முடிவுப் பண்ணிட்டேன்." என்று... வாடிய முகத்துடன், தன் எதிரே இருக்கும் தோழிகளிடம் அன்று நடந்த நிகழ்வை சொல்லி முடித்தாள்.

வாயைப் பிளந்து அவளைப்பார்த்த சுகந்தி... "அடிப்பாவி! இவ்வளவு பெரிய விஷயத்தை அவரு சொல்லி... உன்னை கல்யாணத்தையும் நிறுத்த சொல்லி இருக்காரு. இதுக்கு அப்பறமும் நீ எதுக்காக டி கல்யாணத்துக்கு சம்மந்தம் சொன்ன? அவர் சொன்ன விஷயத்தை எல்லாம் கேட்ட பிறகும் உனக்கு அவரை தான் கல்யாணம் பண்ணிக்கணுமா என்ன?" என்று அதிர்ச்சியாய் வினவினாள்.

நீண்ட ஒரு பெருமூச்சை இழுத்த விட்ட சாமன்யா... "இந்த ஒரு விஷயத்தை தவிற மத்த எல்லா விஷயத்திலும் அவரு பக்காவான ஆளு தான் டி. அதில்லாம, இந்த காலத்தில் எந்த பையன் தான் கட்டிக்கயிருக்கும் பொண்ணுக்கிட்ட தன்னைப் பத்தி இப்படி ஓபனா சொல்லுவான்? இதை மறைச்சு கல்யாணம் பண்ணி, அதுக்கு அப்பறம் எனக்கு இந்த விஷயம் தெரிய வந்திருந்தா தான் நான் கஷ்டப் பட்டிருப்பேன். அதில்லாம, அவர் செஞ்சது ஒன்னும் பெரியத் தப்பா எல்லாம் எனக்குத் தெரியல. இந்த காலத்தில் இது ரொம்பவே சகஜம் தான். எனக்கு அவர் நேர்மை பிடிச்சிருந்துச்சு... அதில்லாம அவரைப் பார்த்த உடனே எனக்கு அவரைப் பிடிச்சிருச்சு டி." என்று அவள் கூறி முடிப்பதற்குள்...

"இருந்தாலும்!" என்று விழித்தாள் சுகந்தி.

"என்ன டி இருந்தாலும்...னு இழுக்கிற?" என்று... சாமன்யா மற்றும் சுகந்திக்கு இடையில் வந்து வந்தமர்ந்த லேகா, தன் தோழிகளை நோக்கி...
"சாமன்யா மாப்பிள்ளைக்கு என்ன டி குறைச்சல்? நல்ல வசதியான வீட்டுப் பையன், பார்க்கவும் ஆளு நல்லா சமார்ட்டா இருக்காரு.
அதை விட நிறைய படிச்சு இருக்காரு, பெங்களூருல ஒருப் பெரிய கம்பனியில் பெரிய பதவியில் இருக்காரு, பொறுப்பான ஆளு. இந்த மாதிரி ஒரு பையன் எல்லாம் கிடைக்கவே குடுத்துவெச்சிருக்கணும். அதில்லாம சாமன்யா சொன்ன மாதிரி முக்கால்வாசி எந்த பையனும் தன்னைப் பத்தி முழுசா கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி ஓபனா எல்லாம் சொல்லமாட்டாங்க." என்று தன் தோழிக்கு ஆறுதலாய் பேசினாள்.

புன்னகைத்துக் கொண்டே... "ஆம்!" என்பது போல வேகமாய் தலையசைத்தாள் சாமன்யா... நடக்கவிருக்கும் விஷயத்தைப் பற்றி அறியாமல்!

சுகந்தி மற்றும் ரியாவும்... "உனக்கே சரி'னா நாங்க என்ன சொல்றது? எங்களுக்கு ஹாப்பி தான்." என்று சாமன்யாவைக் கட்டிக் கொண்டார்கள்.

____________________________________

தொடரும்...❤️ கதை எப்படி போகுது என்று கீழே இருக்கும் லிங்க்/ விஷயத்தை அமுக்கி... மறக்காமல் கமென்ட் பண்ணுங்க நண்பர்களே. நன்றி. -சுவிட்ஷரா.
 
Last edited:
Status
Not open for further replies.

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom