Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update மதுரதுளசி

Megala Pazhaniyappan

Saha Writer
Team
Messages
72
Reaction score
109
Points
33
அத்தியாயம் - 10

காதல் இரு மனங்களில் அன்பைத் துளிர்க்க செய்கிறது. அந்த அன்பு சாதியையும், மதத்தையும் ஏன் வயதையும் கூட பார்ப்பதில்லை. கட்டுப்பாடுகள் நிறைந்த அந்த கிராமத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆண் பெண்ணுடன் நின்று பேசுவதே தவறு. காதல் என்பதெல்லாம் அவர்களை பொறுத்தவரை வயசுகோளாறு ஒரு கால் கட்டை போட்டா சரியாகும் என்று சொல்லும் பாமரமக்கள். இன்றும் கூட அவர்களெல்லாம் பெரிதாய் ஒன்றும் மாறிவிடவில்லை.


இங்கு வேற்று மதத்தினரோடு காதல் என்றால் நீ என் மதமா என முதலில் சண்டையிடுவார்கள். ஒரே மதம் தான் வேறு என்ன பிரச்சினை என்றால் நீ என் சாதியா என்பார்கள்.
அதே காதல் அவர்களை எதிர்த்து திருமணத்தில் முடியுமேயானால் குடும்பத்தையே வேரறுக்க கூட அஞ்சுவதில்லை இவர்கள்.


ராதாவின் காதல் கொஞ்சம் தெரிந்திருந்தால் கூட இது சாத்தியமில்லாத ஒன்று என்று தடுத்திருப்பார்கள் அவளை பெற்றவர்கள். ஏன் துளசிக்கு தெரிந்திருந்தால் கூட நிச்சயம் தடுத்திருப்பாள்.


அப்படித்தான் எண்ணினாள் துளசி. ஒவ்வொரு முறையும் தன் சகோதரியிடம் அதையே கேட்பாள். அப்படி அவள் கேட்கும் பொழுதெல்லாம் மதுரன் அவள் மனதிற்குள் வந்து போவான்.

மதுரன் அவளை அடிக்கடி பார்ப்பதும், கிறங்குவதும் அவளுக்காக உருகுவதையும் அவள் அறியாமலா இருந்தாள். அந்த வயதிற்கே உரிய பட்டாம்பூச்சி அவள் உள்ளத்திலும் பறக்காமலில்லை... ஆனால் இதற்கெல்லாம் நீ தகுதியே இல்லை என்று ராசம்மாவின் செய்கை சொல்லாமல் சொல்லிவிட்டதே.

தன் கை பட்ட தண்ணீரைக் கூட குடிக்காதவரின் வீட்டில் எப்படி தான் வாழமுடியும் என்பதை அவள் அப்போதே உணர்ந்தாள். அவன் பார்த்த போதெல்லாம் சிறகடிக்கும் தன் மனதினை உள்ளுக்குள்ளேயே பூட்டிக்கொண்டேனே... இதோ இப்பொழுது கோயிலில் அவனை கண்டு எத்தனை ஆனந்தம் கொண்டேன். இத்தனை ஆண்டுகளாய் மனதினுள் பூட்டி வைத்து இனிமேல் அவனை காண வாய்ப்பே இல்லை என்றிருந்த நேரத்தில் அவனைக் கண்டு எத்தனை மகிழ்ந்தேன். ஆனால் அது எல்லாம் அவன் என்னை அடையாளம் காணும் நொடிவரை தானே... அவன் என்னை கண்டு கொண்டதுமே என் மனதை நத்தையாய் சுருட்டிக்கொண்டேனே... எப்பொழுதும் நடக்காத ஒன்றை நினைத்து ஏங்குவதைக் காட்டிலும் இப்பொழுது இருக்கும் வாழ்வை தக்கவைத்துக் கொள்வது அல்லவா எனக்கு சரியாகப் பட்டது.

இவனை பார்க்கும் பொழுதெல்லாம் யாரென்று தெரியாது என்று சொல்லிவிட்டு எப்படி துடித்துப் போனேன்.
எத்தனை ஆண்டுகால சிநேகிதி வெண்பா. இவள் தோழமை கிடைக்க நான் என்ன செய்தேன். அவளை கூட யாரென தெரியாதது என்றல்லவா கூறினேன்.

அக்கா எத்தனை அழகாய் இருக்க வேண்டியவள், பெரிய அளவில் இல்லை என்றால் கூட இருக்கின்ற வசதிக்கு தக்க அவள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து குழந்தை குட்டியென இருந்திருப்பாளே.‌‌.. இன்று முகம், தோள் என உடல் முழுக்க வெட்டு காயங்களின் வடுக்கள் மட்டுமின்றி மனக்காயத்தின் வடுக்களோடு அல்லவா போராடிக் கொண்டிருக்கிறாள்.

ராதாவை பார்த்தவாறே இருந்தவள் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தன் கைக்கடிகாரத்தை பார்த்தாள்.


துளசியின் மீது தன் பார்வையை பதிந்திருந்த மதுரன் அவளின் முகமாறுதல்களையும்,கண்ணீரையும் கண்டு
'இப்போது எதைச் சொன்னாலும் துளசி ஏற்கப் போவதில்லை என்பதை தெளிவாக தெரிந்து கொண்டான். அவள் நம்பிக்கைக்கு தான் பாத்திரமாகும் வரை தான் எதை செய்தாலும், எதை கூறினாலும் அவள் பயத்தோடும், சந்தேகத்தோடும் தான் பார்ப்பாள் என்பதை புரிந்து கொண்டான்.

ரகு துளசியின் தந்தையிடம் பேசியதை வைத்து அவர்கள் அருந்ததியின் கல்லூரி சேர்கைக்காக வந்திருப்பதை அறிந்து கொண்டான்.

அருந்ததி பள்ளி இறுதி தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று இருக்கவே ஒரு பெரிய தனியார் கல்லூரியில் முழு கட்டணச் சலுகையோடு அவளுக்கு இடம் கிடைத்திருப்பதையும் அறிந்து கொண்டான்.


"வாழ்த்துக்கள் அருந்ததி என்ன மேஜர் எடுத்திருக்க.." என்று மதுரன் வினவ

"BE cyber security ." என்றாள் கண்கள் விரிய அருந்ததி.

அவளின் முக மலர்ச்சியிலேயே அவளுக்கு அந்த படிப்பின் மீதான ஆர்வத்தை அவனுக்கு உணர்த்தி விட

"குட்... நல்லபடியா படி ஏதாவது தேவைன்னா சொல்லு.." என்றான் பொறுப்பானவனாய்.

"காலேஜ் அட்மிஷன் முடிஞ்சதா.." என்று ரகு கேட்க


"அட்மிஷன் எல்லாம் பத்து நாள் முன்னாடியே முடிஞ்சது சார். நாளைல இருந்து காலேஜ் திறக்குறாங்க.. அதான் கொண்டு வந்து விடுவதற்கு அப்பா வந்தாரு.. அப்படியே ராதாக்காவையும் ஹாஸ்பிடல்ல காட்டிட்டு போலாம்னு கூப்பிட்டு வந்தாரு.." என்று கூற

"ராதாவுக்கு என்ன..." என ஒரு மருத்துவனாய் சின்னசாமியிடம் அக்கறையாய் வினவினான் மதுரன்.

"அவ உசிரோட எங்ககிட்ட வந்துதுலேர்ந்து அவ நல்லா பேசி நாங்க பாக்கல.. சரியா சாப்பிடறதும் இல்லை. தூங்குறதும் இல்லை. திடீர், திடீர்னு எந்திரிச்சு உட்கார்ந்து எங்கேயோ வெறிச்சு பார்த்துட்டு இருக்கா.. யார் கூப்பிட்டாலும் திரும்பியும் பார்க்கறதில்ல. அப்புறம் அவளா தானா சரியாகி எப்போ எந்திருக்கிறாளோ அப்போதான். நாங்களும் அங்கங்க ஆஸ்பத்திரி கூட்டிட்டு போய் பார்த்தோம் ஒன்னும் சரியாகல. துளசி தான் சொல்லுச்சு நீங்க வர்றப்ப கூட்டிட்டு வாங்கப்பா இங்க ஆஸ்பத்திரில காட்டலாம்னு அதான் கூட்டியாந்தேன் என்றார் ஒரு பெருமூச்சோடு.

ரகுவும், மதுரனும் ராதாவைப் பார்க்க அவள் எதுவும் பேசாமல் தலைகுனிந்தாள்.

சில நிமிடங்கள் யோசித்த மதுரன் "ரகு சீனியர் டாக்டர் பர்வீன் இப்போ அவைலபிலா இருக்காங்களா பாரு.." என்றான் பரபரப்பாக.

"எஸ் எஸ் யுவர் சாய்ஸ் இஸ் கரெக்ட்.." என்ற படியே தன் கைபேசியில் தேடி டாக்டர் ஃபர்வினை அழைத்தான். எதிர் முனையில் அவனது அழைப்பு எடுக்கப்படாமல் போகவே விபரங்களை குறுஞ்செய்தியாக அவருக்கு அனுப்பி விட்டு காத்திருந்தான் ரகு.

துளசிக்கு ஒன்றும் புரியவில்லை இவர்கள் யார் எதற்கு இதை அவர்கள் செய்ய வேண்டும் என்பது போல் இருந்தது அவளது பார்வை. வெண்பா அதை சரியாக யூகித்தாள்.

"இங்க பாரு இன்னும் எதிரி மாதிரி பார்த்து சந்தேகப்பட்டுட்டு இருக்காதே.. உனக்கு எந்த அளவுக்கு ராதா மேல அக்கறை இருக்கோ.. அதே அளவுக்கு எங்களுக்கும் இருக்கு. தேவையில்லாம முறைச்சுட்டு இருக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத... இனி இதெல்லாம் அண்ணன் பார்த்துப்பான். என்னையும், அவனையும் யாருன்னு தெரியாதுன்னு சொல்லி நீ எடுத்தெருஞ்சு பேசுனதுக்கே உன் மூஞ்சி முகரை எல்லாம் பேத்து இருக்கணும் . போனா போகுது ஃப்ரண்டாச்சேன்னு விடறேன்.." என்று முகத்தை திருப்பிக் கொண்டாள் வெண்பா.

"என்னத்துக்கு டி.." என்று தான் அமர்ந்திருந்த நாற்காலியைத் தள்ளியபடி கோபத்தோடு துளசி எழ

"வெண்பா பேசாம இரு..." என்று அவளை அடக்கினான் மதுரன்.

அதே நேரம் ரகுவின் கைபேசி மெதுவாய் இசைக்க "ப்ளீஸ்... ப்ளீஸ்.. ப்ளீஸ்..' கொஞ்சம் அமைதியா இருங்க டாக்டர் பர்வீன் கிட்ட இருந்து தான் கால்..‌" என்று சைகையால் அவர்களை அமைதிப்படுத்திபடியே கைபேசியில் ரகு


"ஹாய் டாக்டர் ஐ அம் டாக்டர் ரகுபதி.

..............


எஸ் எஸ் .. என்னோட பிரண்டுக்கு உங்களை பார்க்க அப்பாய்ன்மெண்ட் தேவை. எப்போ வரனும்னு சொன்னா அவங்களை வந்து பார்க்க சொல்வோம்.." என்று அவன் கூற எதிர் முனையில் என்ன பதில் வந்ததோ....

"ஓகே தேங்க்யூ தேங்க்யூ சோ மச்.." என்றபடி கைபேசியை அணைத்து பாக்கெட்டில் வைத்தான்.

"டாக்டர் பர்வின் இன்னைக்கு இவ்னிங் 6 மணிக்கு அப்பாய்ன்ட்மெண்ட் குடுத்திருக்காங்க...." என்றான் பொதுவாய் எல்லோரிடமும்.

துளசி அறிவாள் டாக்டர் பர்வின் பானு கோவையின் எத்தனை பெரிய பிரபல சைக்யாட்ரிஸ்ட் என்பதை. அவரை காண்பது என்பது அத்தனை எளிதல்ல என்பதையும் அறிவாள். தங்கள் மருத்துவமனை மருத்துவர்களிடமோ அல்லது வேறு ஏதேனும் ஒரு மருத்துவரிடமோ தங்கள் சக்திக்கு ஏற்ப ராதாவிற்கு சிகிச்சை அளிக்கலாம் என்றே அவளை வரச் செய்ததது இவர்களானால் என்ன செய்கிறார்கள் என்று ரகுவை இடையிட்டாள்

"டாக்டர் அவங்க ரொம்ப பெரிய டாக்டர். அங்கே பார்க்கிற அளவுக்கு... "என்று தடுமாற

"டாக்டர் பர்வீன் எங்களுடைய சீனியர் தான் துளசி, சாரி ஏஞ்சலின். எங்களுக்கு ரொம்ப நல்ல பிரண்டும் கூட.. தெரியாத ஒரு டாக்டர்ட்ட பாக்குறது விட நமக்கு தெரிஞ்ச ஒரு டாக்டர் கிட்ட பார்க்கும்போது ராதாவுக்கு என்ன அப்படிங்கறது நாம தெளிவா கேட்டு அதுபடி ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கலாம். ரொம்ப எக்ஸ்பென்ஸ் எல்லாம் ஒன்னும் வராது பார்த்துக்கலாம்..." என்றான் மதுரன்.


வெறுப்பும், கோபமாய் அவனை ஏறிட்டாள் துளசி. "நீங்க என்ன பார்க்கிறது. இத்தனை நாள் நீங்களா பார்த்தீங்க.." என்று வார்த்தைகளை உமிழ..
ரகுபதி இடையிட்டான்

"இங்க பாருங்க ஏஞ்சலின் ,டாக்டர் பர்வீன் எங்களுக்கு நல்ல ஃப்ரெண்ட். அவங்களோட குழந்தைகளுக்கு நான் தான் பீடியாட்ரிசன். சோ பெருசா இதுல நாங்க உதவுவ எதுவும் இல்லை. மதுரன் சொன்ன மாதிரி தெரியாத ஒரு டாக்டர் கிட்ட போறத விட நமக்கு தெரிஞ்ச டாக்டர் னா அவங்களுக்கு வைத்தியம் பார்க்கிறது இன்னும் ஈசியா இருக்கும் புரிஞ்சுக்கோங்க.." என்றான்.

எதுவும் புரியாமல் விழித்தபடி அமர்ந்திருந்தார் சின்னசாமி. அவருக்கு புரிய வைக்க முயன்றான் மதுரன். அவன் கூறுவதை பொறுமையாக கேட்டுக் கொண்டவர் "தம்பி சொல்றதிலும் ஒரு நியாயம் இருக்கு சாமி, அவங்க சொல்றபடி கேட்டு தான் பார்ப்போமே.." என்று அவர் துண்டை உதறி தோளில் போட்டபடி எழுந்தார் இனி பேச எதுவும் இல்லை எனும் தொணியில்.

"சரி சாமி அந்த டாக்டரு விலாசத்தை குடுங்க நான் இந்த புள்ளைங்கள கொண்டு போய் காட்டிட்டு அப்படியே துளசியோட வீட்டுல விட்டுட்டு நான் ஊருக்கு கிளம்புறேன்.." என்றார்

"ஏன் கிளம்புறீங்க ஒரு ரெண்டு மூணு நாலு இருந்து உங்க பொண்ணுக்கு என்ன ஏதுன்னு பார்த்துட்டு போலாமே.." என்றான் ரகு.

"போலாம் தா தம்பி. ஆனா துளசி இருக்கறது பொம்பள புள்ளைங்க தங்குற வூடு.. வூட்டுகரங்க ஆம்பளைங்க தங்கறது கூடாதுன்னு ஏற்கனவே சொல்லிருக்காங்கன்னு துளசி சொல்லிருக்கு... என்று அவர் விளக்க

"அதுக்கென்ன எங்க ரூம்க்கு வாங்க... நாங்க ரெண்டு பேர் தான் இருக்கோம். ரெண்டா நாள் தங்கி உங்க பொண்ணுக்கு என்னான்னு பார்த்துட்டு அப்புறமா ஊருக்கு போகலாம்.." என்றான் உரிமையாய் ரகு.

"உங்களுக்கு எதுக்கு தம்பி சிரமம்.." என்று அவர் தயங்க

"இதுல எங்களுக்கு என்ன சிரமம். அதெல்லாம் ஒன்னும் இல்ல.. வாங்க" என்றவாறே அவர்கள் கிளம்ப அங்கே இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்தாள் துளசி.

இவர்களோடு தன் தந்தையை எப்படி தங்கவைப்பது என்பது ஒரு புறமும் ராதாவை எப்படி டாக்டர். பர்வீனிடம் கூட்டிச் செல்வது என்று மறுபுறமுமாய் தவித்தபடி தன் கைக்கடிகாரத்தை மீண்டும் அவள் பார்க்க..

அவள் தவிப்பை உணர்ந்த மதுரன் அதை குறிப்பாய் ரகுவுக்கு உணர்த்தினான்.
அதை உணர்ந்தவனாய் ரகுவும்

"என்னாச்சு என்று கேட்க

"டாக்டர் இன்னைக்கு ஆஃப் எடுக்கலாம்னு பார்த்தேன். ஆனா இன்னைக்கு ரெண்டு பேர் லீவ் ஸ்டாப் நர்ஸ் மூனு பேர்தான் வார்ட்ல இருக்கோம். சோ நான் நகர முடியாது. இப்போ ராதாவை எப்படி டாக்டர் ட்ட கூட்டிட்டு போறதுன்னு தான்... என முடிக்காமல் நிறுத்தியவள்


"அப்பாக்கும் இங்க அவ்ளோவா தெரியாது. அவரையும், இவங்களையும் தனியா அனுப்ப முடியாது என்று தன் நிலையை உணர்த்தினாள் துளசி.

"நான் கூட்டிட்டு போறேன் க்கா... அட்ரஸ் கண்டுபுடிச்சு போறது கஷ்டமா என்ன... நீ போய் டூட்டி பாருக்கா நான் கூட்டிட்டு போறேன். என்றாள் அருந்ததி.


"நோ.. நோ.‌‌... அது வேண்டாம் பழக்கமில்லாத ஏரியாவுல ரிஸ்க் வேணா..." என மதுரன் யோசிக்க

"நான் வேணா போறேனே.." என்றாள் வெண்பா.. ஆனால் அவளை இரவுக்குள் வீட்டிற்கு அனுப்பாவிட்டால் அது சிக்கலாகிவிடும் என்று மதுரன் அறிவான்.

"ரகு உனக்கு ஈவ்னிங் அப்பாய்ன்மெண்ட் இருக்கா.." என்றான்.

"இதுவரை இல்லை... என்றவன் ஓகே நான் கூட்டு போறேன். துளசி சாரி ஏஞ்சலின், யூ டோன்ட் வொர்ரி. ஐ வில் டேக் கேர்( நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன்).."
என்றான்.

"ஏற்கனவே மணி நாலரை சோ நான் போய் சொல்லிட்டு கெளம்பி வர்றேன். நீங்க வெளியே வெய்ட் பண்ணுங்க.." என்றபடி "என்னடா ஓகே தானே போலாமா .. நாம வந்து ரொம்ப நேரமாச்சு.." என்றவாறே கிளம்பினான்.

அவர்களிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு அரை மனதோடு துளசி கிளம்ப அவளை அழைத்தான் மதுரன்

"துளசி... சாரி ஏஞ்சலின் ..."


வேண்டா வெறுப்பாய் அவனை என்ன என்பது போல ஏறிட்டாள் அவள்.

"அவங்க வந்து ரொம்ப நேரமாச்சு ஸ்டாப் டிரெஸ்ஸிங் ரூம் கூட்டிட்டு போய் அவங்களை ரெப்ரெஸ் ஆக வைச்சு அனுப்பு..." என்று கூற

'ச்சே இதை எப்படி மறந்தேன்...' என்று எண்ணியவள் அவர்களை அழைத்துக்கொண்டு கிளம்பினாள். என்ன செய்வதென்று தெரியாமல் வெண்பா குழம்பி நிற்க..

"வா.." என அவளையும் கை பற்றி அழைத்துச் சென்றதை கண்ட மதுரன் உதடுகளில் ஒரு புன்சிரிப்பு மலர்ந்தது.

துளசியின் தந்தையிடம் பேசிக்கொண்டு மருத்துவமனை வாயில் வரை வந்தவன் "நீங்க இங்கயே உட்க்காருங்க ரகு வந்து உங்களை கூட்டிட்டு போவான்.." என்று விட்டு தன் பணியை தொடர சென்றான் மதுரன்.

அங்கு துளசியின் மனமோ நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது..

தொடர்வார்கள்...
 

Megala Pazhaniyappan

Saha Writer
Team
Messages
72
Reaction score
109
Points
33
அத்தியாயம் - 11



இன்றோடு அருந்ததிக்கு கல்லூரி திறந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டிருந்தன. இந்த இரண்டு மாதங்கள் எப்படி சென்றது என்ன துளசிக்கு மலைப்பாய் இருந்தது. சமையலறையில் சமைத்துக் கொண்டு இருந்த ராதாவை கண்டவள் மனம் கசிந்தது.

இந்த இரண்டு மாதங்களில் அவளிடம் இருந்த மாற்றங்களை கண்டு மகிழ்ந்தாள். இந்த மாற்றத்திற்கு நிச்சயம் மதுரனும், ரகுவும் தான் முழு காரணமும் அதை அவள் நன்கு அறிவாள்.

எதிர்பாராத சம்பவங்கள் நமக்கு நிகழ்வதும், அவற்றிலிருந்து நாம் மீண்டுவருவதும் இயல்பானது. ஆனால் அப்படி நடந்த ஒரு நிகழ்வை மறக்காமல், மறக்கமுடியாமல் திரும்பத் திரும்ப நினைத்தே ராதா ஆங்சைட்டி டிஸ்ஸாடர் எனும் மனநோயால் பாதிக்கபட்டிருந்தாள்.

ராதா தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் நினைவுகளில் இருந்து மீளவே இல்லை எனலாம். ஒவ்வொரு நாளும் தன்னால் தானே தன் குடும்பம் இப்படி ஆனது. நாம் அந்த தவறை செய்யாது இருந்திருந்தால் இந்த நிலை தன் குடும்பத்திற்கு நேர்ந்திருக்காதே என்று குற்ற உணர்ச்சியாலேயே அவள் உடலும் மனமும் பாதிக்கப்பட்டது.

டாக்டர் பர்வீனின் தொடர் சிகிச்சையாலும், ஆலோசனையாலும் ராதா ஓரளவு தேறியிருக்கிறாள் என்றாலும் கூட மதுரனும், ரகுவும் அவளின் இந்த மாற்றத்திற்கு முக்கியபங்கு என்பதை துளசியின் குடும்பம் உணர்ந்தே இருந்தது. இப்பொழுதெல்லாம் சின்னச்சாமி மகள்களுக்கு அழைத்து பேசுகிறாரோ இல்லையோ. மதுரனிடமும், ரகுவிடமும் தினமும் ஒருமுறையாவது அழைத்து பேசிவிடுவார். அவர்களோடு அத்தனை நெருக்கமாகியிருந்தார்.

அதுவும் இருவரும் மருத்துவர்கள். பெரிய படிப்பெல்லாம் படித்தவர்கள் தன்னோடு அத்தனை இலகுவாய் பழகுவதில் அவருக்கு அத்தனை ஆனந்தம். ராதாவை மருத்துவமனை அழைத்து சென்றதும், உடனிருந்து அவர்களை பொறுப்பாய் பார்த்துக் கொண்டதோடு அல்லாது அவர்கள் வீட்டினரை போல் உரிமையாய் நடத்தியது சின்னச்சாமிக்கு பெருத்த ஆச்சரியம். எத்தனை அருமையான பிள்ளைகள் என்று தன் மக்களிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போனார்.

ராதாவின் சிகிச்சைக்காக அவர் தங்கியிருந்த அந்த மூன்று நாட்களில் உணவுக்காக இவர்கள் படும் பாட்டை கவனித்தவர். ராதாவை சமைத்து தரச் சொல்லி தினமும் கொண்டு வந்து கொடுக்கத் தொடங்கினார். அவர் ஊருக்கு செல்லும் முன்னர் இருவருக்கும் மூன்று வேலைக்கும் சமைத்துக் கொடுக்கும் படி செய்துவிட்டே சென்றார்.

ரகுவுக்கு அப்பாடா என்றிருந்தது. "நல்லவேளைடா இனி மூனு வேளையும் சோத்துக்கு பஞ்சமில்ல..." என்று அவர் முன்னேயே கூறியவனை பார்த்து தலையில் அடித்துக் கொண்டான் மதுரன்.

"விடுங்க தம்பி நம்ம ரகு தம்பி தானே.." என அவரும் கூற

"ஆங் அப்படி சொல்லுங்க... இவன் வர்றதுக்கு முன்னாடியாவது மெஸ்ல சோறுங்கற பேர்ல எதையாவது தின்னுட்டு இருந்தேன். ரெண்டு பாத்திரத்த வெச்சிட்டு காபி போடவும், நூடுல்ஸ்னு எதையாவது கெளறி தின்னுட்டு இருந்தேன். இவன் வந்ததுலேர்ந்து கொலபட்டினி தான்... இருந்த பாத்திரத்தையும் கருக விட்டுட்டான்..." என்றபடியே அந்த கருகிய பாத்திரத்தை எடுத்து காட்ட

அதை பார்த்தவருக்கு சிரிப்பு தாளவில்லை "என்ன தம்பி இப்படி கருக்கி வெச்சிருங்கீங்க..." என்று கேட்க

"ம்... கேளுங்க... ஒரு நாளு... ஒரே நாளு காப்பி போடறேன்னு போனான். அதுக்கே இந்த கதி. இதை பத்திரமா வெச்சிருந்த அவன் வருங்கால பொண்டாட்டிக்கு பரிசா குடுக்கப் போறேன் அங்கிள்.." என்று நமட்டு சிரிப்போடு ரகு கூற

"அடேய்... உன்ன.." என்று வந்த மதுரனின் கைக்கு அகப்படாமல் சின்னச்சாமியின் பின்னே ஒளிந்தான் ரகு. வளர்ந்துவிட்ட இளைஞர்கள் என்றாலும், என்னதான் மருத்துவர்கள் என்றாலும் தன் பணி நேரம் தவிர அவர்கள் வெகு எளிமையாய் பழகுவதும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமலும், அதே நேரத்தில் அவரையும் தங்களோடு இணைத்துக் கொண்டு அவரை எந்தவித பாகுபாடுமில்லாமல் அவர்கள் அவரை நடத்திய விதம் அவரை அவர்களோடு இயல்பாய் ஒன்ற வைத்தது.

காலையில் அவள் தந்தை அழைத்த போதே "என்ன துளசி சோறு ஆக்கியாச்சா.. நேரமா செஞ்சு கொண்டு போய் குடுங்கம்மா அந்த புள்ளைங்க ஆஸ்பத்திரிக்கு போகனுமில்ல.." என்று தான் கூறுவார்.

"ஏப்பா அதே ஆஸ்பிடல்க்கு தானே நானும் போறேன். எனக்கு நேரமாகாதா.."

"அதில்ல கண்ணு... நல்லா சாப்டு வளர்ந்த புள்ளைங்க பசி தாங்காதுங்க... அதான் சாமி.." என்றவரிடம் மேற்கொண்டு பேச்சை வளர்த்தாமல்

"சரிப்பா.. நான் கெளம்பனும். அருந்ததி இன்னைக்கு சீக்கிரமா போய்ட்டா எல்லாருக்கும் நான் தான் கொண்டு போகனும். அக்காவை அப்புறமா பேச சொல்றேன்.." என்று வைத்துவிட்டு ராதா தயாராக வைத்திருந்த டிபன் கேரியர் கூடைகளை கையில் எடுத்தாள்.

இந்த இரண்டு மாதங்களில் நிகழ்ந்த மாற்றங்களில் இதுவும் ஒன்று ராதா உணவு கொடுக்க தொடங்கிய இரண்டு நாட்களிலேயே போது மதுரனும், ரகுவும் மாதம் ஒரு கணிசமான தொகையை கொடுத்து விடுகிறோம். தினமும் எங்களுக்கு சமைத்து தர முடியுமா என கேட்க என்ன சொல்வதென்று தெரியாமல் யோசித்த ராதாவை ரகுதான் சம்மதிக்க வைத்தான்.

எப்படியும் சிகிச்சைக்காக சில மாதங்கள் தொடர்ந்து இங்கேயே இருக்க வேண்டி இருக்கும் என்று டாக்டர் பர்வீன் கூறியிருக்க ஏற்கனவே பெற்றவர்களுக்கும் உடன் பிறந்தவர்களுக்கும் சுமையாக இருக்கிறோம் என்ற எண்ணத்தோடு இருந்த ராதாவுக்கு இங்கே துளசிக்கு சுமையாக தான் இருப்பதாய் தோன்றியது. ரகுவம், மதுரனும் உணவு சமைத்து தரச் சொல்லிக் கேட்க தன் தங்கைகளுக்கும் சேர்த்து சமைத்து தருவது அவளுக்கு மகிழ்வாகவே இருந்தது.

அத்தோடு நின்று விடாமல் ரகுவிற்கு ஒரு யோசனையும் தோன்றியது அங்கிருக்கும் அப்பார்ட்மெண்டில் தங்கி வேலைக்கு செல்லும் பேச்சிலர்கள் சிலருக்கு உணவு சமைத்து தந்தால் அது ராதாவுக்கு ஒரு வருமானமாகவும் ஆகும். அவளை சிந்தனையையும் அது மாற்றும் என்று துளசியிடம் கூற அவளுக்கும் அது சரியென்றே தோன்றியது. ஆனால் என்று அவள் யோசிக்க..‌

"நான் ராதாவிடமே பேசுகிறேன்.." என்றவன் அவளிடம் தன் யோசனையை கூற அவள் கண்களில் ஆர்வம். தனக்கு படிப்பில்லை. எந்த வேலையும் இல்லை தன்னால் எந்த வேலைக்கும் போக முடியாது என்று தனக்குள்ளேயே ஒரு வட்டத்தை போட்டு கொண்டு வாழ்ந்தவளுக்கு ரகுவின் யோசனை ஒரு வரமாகத் தோன்றியது.

சாதாரணமாகவே நன்றாக சமைக்கத் தெரிந்தவள் ராதா. சிறு வயதிலேயே பொறுப்பாக தன் தங்கைகளை கவனித்துக் கொண்டே சமைத்து பழகியவள். அவளின் கிராமத்து கைமணம் பிடித்தே ரகுவும் இந்த யோசனையை கூற மகிழ்ச்சியோடு தலையசைத்தாள்.

ஆனால் எப்படி என கேட்டவளுக்கு "எல்லாத்துக்கும் நானாச்சு.." என்றவன் அதோடு நிற்காமல் அப்பார்ட்மெண்ட்டில் தினமும் கூடையோடு மேலேறவும் கீழே வரவுமாக இரண்டு நாட்கள் செய்ய ... அவனை விசாரித்தவர்களை சுலபமாய் ராதாவின் வாடிக்கையாளராக்கினான்.

ஓட்டல் உணவை சாப்பிட்டு வெறுத்து போய் இருந்தவர்களுக்கு ராதாவின் கைப்பக்குவுமும், ருசியும் மிகவும் பிடித்து போக இப்பொழுது தினமும் இருபது பேருக்கு ராதா சமைத்து தருகிறாள்.

நான்கு பேர் தங்கியிருந்த அறையில் செய்வது மற்றவர்களுக்கு இடைஞ்சலாய் இருக்கும் என்று அதே தெருவில் இருந்த தனி வீடு ஒன்றை பேசி துளசியின் தந்தைக்கு தெரிவிக்க அவரும் மகிழ்ச்சியாய் வந்து புது வீட்டிற்கு தம் மக்களை குடி வைத்துவிட்டு சென்றார்.

இதுவரை எதிலுமே மதுரன் நேரடியாய் சம்பந்தபடவில்லை.

துளசியின் கோபத்தாலேயே அவன் அவளின் விசயத்தில் தலையிடாமல் இருந்தான். அவளின் கோபமும், அதற்கான காரணமும் நியாயமானது தான் ஆனால் அவள் தன்னை தவிர்ப்பதற்கான காரணம் மட்டும் மதுரனுக்கு புரியவேயில்லை. அவளை காணாது இருந்தபோது அவளை பார்த்தாலே போதும் என்று தேடியவன், இப்பொழுது அவளை பார்க்காமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்னும் நிலைக்கு வந்துவிட்டான்.

காலை பணிக்கு வந்ததும் நேராக வார்டிற்கு வருபவன் நோயாளிகளின் குறைகளை கேட்டுக் கொண்டே துளசியை பார்த்துவிட்டு செல்வான். இருவருக்கும் ஒரே மாதிரியான பணி நேரம் கிடைத்தது அவனுக்கு இன்னும் சாதகமாகிப் போனது. இல்லையென்றாலும் கூட அவன் மாற்றிக்கொண்டிருப்பான் என்பதே உண்மை.


அவளை காணும் பொழுதெல்லாம் அவளை சீண்டி அவள் கோபத்தில் சிவக்கும் முகத்தை காண அவனுக்கு அத்தனை ஆர்வம்.


அப்புறம் சொல்லுங்க துளசி... சாரி ..சாரி ... ஏஞ்சலின். ஏஞ்சலினா துளசியா...? என்று கடுப்பேற்றுவான்.

"ஏஞ்சலின் என்கிற துளசி.." என்று அவள் ஒரு நாள் கூறவே


"மிஸ். ஏஞ்சலின் என்கிற துளசி..." என்றுவிட்டு ஆனா கூப்டவே லென்த்தா இருக்கு நான் வேணா எனக்கு புடிச்ச மாதிரி வேற ஒரு பெட் நேம் வெச்சிக்கவா.." என்று சிரித்து வைக்க துளசியின் முகத்தில் கடுகு வெடித்தது.

'என்னதான் நினைச்சிட்டு இருக்கான் இவன்..' என்று ஆத்திரபட்டவள் "இங்க நான் ஏஞ்சலின்.." என்று கூற


"ஆனா எனக்கு நீ என்னைக்கும் துளசி தானே..." என்றவன் "ஏஞ்சலின் க்கு பதிலா ஏஞ்சல்ன்னே வெச்சிருக்கலாம்ல...‌" என்று சீண்டி விட்டு சென்றான்.

துளசியிடம் தங்கள் பணியினைத் தாண்டி அவ்வப்போது அவள் பெயரை வைத்து வம்பு செய்வானே தவிர வேறு எதையும் பேசவில்லை.

துளசிக்கும் தன்னை அவ்வப்போது சீண்டுவது தவிர மதுரன் தன்னை நெருங்காதது ஆச்சர்யத்தை கொடுத்தது. ஆனாலும் தனக்கு எந்த இடைஞ்சலும் கொடுக்காத வரை இதுவும் நல்லதே என்று தன் அன்றாட பணிகளை தொடர்ந்தாள் துளசி.


காலை ஏழரை மணிக்கு காலை
, மதியம் என இரண்டு வேலை உணவுகளையும் சேர்த்து டிபன் கேரியரில் நிறைத்து அவரவர் கூடைகளில் ராதா வைத்து விடுவாள். அருந்ததி கொண்டு போய் அவரவர் வீட்டு வாசலில் வைத்துவிட்டு அழைப்பு மணியை அழுத்தி விடுவாள். உணவு வந்துவிட்டதற்கான அழைப்பு அது.

வழக்கம் போல் டிபன் கேரியர் பையை வைத்துவிட்டு துளசியும் அழைப்பு மணியை அழுத்துவிட்டு வந்தாள். மதுரனின் வீட்டை அடைந்தவள் பையை வைத்து அழைப்பு மணியை அழுத்தும் முன் கதவு திறந்து வெளியே வந்து நின்றான் மதுரன்.

அவனை எதிர்பார்க்காத துளசி தடுமாறி நிற்க. "உள்ளே வாங்க துளசி.. சாரி ஏஞ்சலின்..." என்றான் அழுத்தமாய். இரண்டு மாதங்களாய் இப்படித்தான் அவளை அழைத்து வெறுப்பேற்றுகிறான்.

அவனை முறைத்தவாறே "இல்ல நேரமாச்சு..." என நகரப் போனவளுக்கு அடுத்து என்ன நடந்தது என்று யூகிக்கும் முன் அவள் கரம் பற்றி அவளை உள்ளிழுத்து கதவை அடைத்து அவளை தன் கை வளையத்திற்குள் கொண்டு வந்திருந்தான் மதுரன்.

கண்ணிமைக்கும் நொடிக்குள் நடந்தது கனவா, நனவா என அவள் சுதாரிக்கும் முன் அவளை ஒரு கையால் தன் பிடிக்குள் வைத்துக்கொண்டு தன் வலகரத்தால் அவள் கலைந்த கூந்தலை ஒதுக்கியவன் அவள் நெற்றியில் முத்துக்களாய் பூத்திருந்த வியர்வை பூக்களுக்கு மத்தியில் அவனிதழ் பதித்தான். அதிர்ந்து விழித்தவள் விலகத்தோன்றாமல் அவனை ஏறிட அந்த கண்களை நேருக்கு நேராய் கண்டவன் அந்த மருண்ட விழிகளும் துடித்த அவள் இதழ்களும் அவனுக்கு ஏதோ உணர்த்த தன் அத்தனை வருட காதலை ஒரு முத்தத்தில் உணர்த்திவிடுபவனாய் அவனையறியாமல் அவள் இதழோடு இதழ் கோர்த்திருந்தான். பத்து ஆண்டு கால காத்திருப்பு.. காதல்.. அவன் தவிப்பு என மொத்தத்தையும் அவன் இதழ் முத்தத்தில் உணர்த்த எண்ணினானோ என்னவோ...

மங்கையவள்
ஒரு கணம் ஒரே ஒரு கணம் அவள் இந்த உலகில் இல்லை. இந்த பிரபஞ்சம் முழுவதும் தட்டாமாலை சுற்றுவதாய் தோன்றியது அவளுக்கு. யாருமே இல்லாத ஒரு மாய உலகில் அவன் கைவளைவிற்குள் வைத்தபடி அவன் அவளை அழைத்து செல்வதாய் தோன்றியது. அப்படியே அவனுள் உருகி கரைந்து அவனுள் தொய்ந்து கொண்டிருந்தவளை அந்த குரல் நடப்புக்கு கொண்டு வந்தது.

"டேய் ... "‌என்ற குரலில் அதிர்ந்தவள் சட்டென அவனை உதற
அவன் பிடி லேசாய் தளர்ந்தது. அவள் தன்னிலை உணர்ந்தாள் என்ன காரியம் செய்துவிட்டோம். இவனிடம் இப்படி உருகி விட்டோமே.. இவ்வளவு தான் என் வைராக்கியமா... இத்தனை பலவீனமாவளா நான் என அவள் மனதுக்குள் உலுக்கி எடுக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

உன்னை கண்டுகொண்டேனடி பெண்ணே என்னும் விதத்தில் அவன் கண்ணில் காதல் பொங்க அவளை கண்டவன், அவள் கண்களில் திரண்டு வழிந்த கண்ணீர் மணி கண்டு பதறினான்.


"துளசி...." என்றவனை பளாரென அறைந்தாள். அந்த அறையில் அவளின் மொத்த ஆக்ரோஷமும் தெரிந்தது. சட்டென கதவு திறந்து அவள் வெளியேற

நடந்தவைகளை பார்த்துக்கொண்டிருந்த ரகு "என்னடா ஆச்சு.." என்றான்

நடந்தவைகளை நம்பமுடியாமல் திகைத்து,
சற்று முன் அவள் கண்களில் கண்ட ஏக்கமும், காதலும் எந்த அளவு உண்மையோ அதே அளவு இப்பொழுது அவள் கண்களில் கண்ட கோபமும் வெறுப்பும் உண்மை. ஏன்...? என்னாச்சு இவளுக்கு..? என்று எண்ணியவா
றே அவள் சென்ற திசை பார்த்து கலங்கி நின்றான் மதுரன்.


தொடர்வார்கள்....
 

Megala Pazhaniyappan

Saha Writer
Team
Messages
72
Reaction score
109
Points
33
அத்தியாயம் 12


ஒரு காதலின் முதல் முத்தம் என்பது அத்தனை அரிதானது. எத்தனை காலமானாலும் நினைத்து நினைத்து பூரிக்க வைப்பது. நினைத்தாலே மனதிற்குள் பரவசத்தை ஏற்படுத்தும் மாயை கொண்டது. தானாய் உடலும் மனமும் ஒருசேர உற்சாகம் கொள்ள வைப்பது. அப்படிப்பட்ட முதல் முத்தம் மதுரனை கவலையுறச் செய்தது.

அவள் கண்களில் கண்ட காதலையும், முத்தத்தையும் தாண்டி அவள் கண்ணில் கண்ட கண்ணீர் அவனை வாட்டியது.

என்னை அவள் விரும்புவது உண்மை‌. அதை அவள் எவ்வளவு மறைத்தாலும் இன்று அவள் என்னுள் கரைந்த நொடி என் மேலான அவள் காதலை எனக்கு நன்றாகவே உணர்த்திவிட்டது ஆனால் அந்த கண்ணீர், அது ஏன்...? அந்த கண்ணீருக்கான காரணம் புரியாமல் தவித்தான் மதுரன்.


'தான் செய்தது தவறோ என யோசித்தான். அவள் சம்மதமின்றி அவளை முத்தமிட்டது தவறு தானே...? தன் அவளுக்கு காதலை தெரிவித்து அவளும் அவள் காதலை சொல்லி இருந்து இயல்பாய் நடந்திருந்தால் அது தவறில்லை ஆனால் அவளும் மனம் விட்டு தன் காதலை கூறவில்லை நானும் என் காதலை வெளிப்படையாக அவளிடம் தெரிவிக்கவுமில்லை. அப்படியிருக்க இது தவறு தானே..' என எண்ணி வருந்தினான்.

'ச்சே எப்படி ஒரு முட்டாள்தனமான காரியத்தை செய்திருக்கிறேன்..' என்று அவன் எண்ணும் போதே, அவள் அவனோடு உருகி கரைந்தது நினைவுக்கு வந்தது.


அவள் ஒதுங்கி, ஒதுங்கி சென்றாலும் அவளுக்கும் தன் மேல் காதல் உண்டு என்பதை அவன் அறிந்தே இருந்தான். அவன் இல்லா பொழுதுகளில் அவனை தேடும் விழிகளை எட்ட இருந்தே ரசித்திருக்கிறான். அவளையும் அறியாமல் அவள் பார்வை அவனை வருடுவதை உணர்ந்திருக்கிறான். இவன் கண்டால் உடனே முகத்தைத் திருப்பிக் கொள்ளும் பாசாங்கை கண்டு உள்ளுக்குள் சிரித்துக்கொள்வான். ஏனோ மறைக்கிறாள் என்பது மட்டும் உறுதி. ஆனால் சர்வ நிச்சயமாய் துளிசி இல்லாமல் தன் வாழ்வு இல்லை என்பது மட்டும் அவன் அறிந்தே இருந்தான். அதை அவளுக்கும் உணர்த்த எண்ணியே அவன் வீட்டிற்கு அவள் வந்தபோது அவன் முத்தமிட்டது. அவன் உள்ளிழுத்து அணைத்த போது அவள் தடுத்திருந்தால் நிச்சயம் அவன் அடுத்த கட்டத்திற்கு சென்றிருப்பானா என்பது கேள்வியே... அவனை
நோக்கிய அவளது விழிகளில் அவன் கண்ட காதல், ஏக்கம் எல்லாம் சேர்ந்து அவனை ஏதோ செய்ய அதற்கு மேல் தாங்கமாட்டாதவனாய் முத்தமிட்டிருந்தான். அவன் முதல் ஸ்பரிசத்தில் அவள் உடல் நடுங்க.. பின் அவன் இதழ் முத்தத்தில் உருகி கரைவதை அவள் உடல் மொழி உணர்த்தவே அவனுள் அவள் மேல் இருந்த மொத்த காதலும் முத்தமாய் மாறிப் போக தன் காதலை வெளிபடுத்திவிட்டோம். அவளுக்கும் தன் சம்மதத்தை சொல்லாமல் சொல்லிவிட்டாளென மகிழ்ந்த மதுரனுக்கு அவள் கண்ணீரும், அவள் கொடுத்த அறையும் கவலையை ஏற்படுத்தியது.


கன்னத்தை தேய்த்த வாறே கதவை அடைத்துவிட்டு தன் நண்பனை நோக்கியவன் பதிலேதும் கூறாமல் அவனை முறைக்க

"இங்க பாரு எனக்கென்ன ஜோசியமா தெரியும். குளிச்சிட்டு வெளியே வந்தா நீ அவளை கிஸ் பண்ணிட்டு நிக்கற.. எனக்கு பார்த்ததும் என்ன செய்யறதுன்னு தெர்ல.." என்று தடுமாறியவனை பார்த்து

"கரடி... உன்னால தான்டா..‌" என்று அவன் குரல் அவனை கடித்து துப்பியது.

"போதும் டா... ஒரு கன்னி பையன் இருக்க ரூம்ல நீ உன் ஆளோட கொஞ்சிட்டு இருப்ப நான் வேடிக்கை பாக்கனுமா..."


"டேய்... பேசாம போய்டு இருந்து இருந்து இன்னைக்கு தான்..." என்று இழுத்தவன், "அதுலயும் ஒரு லாரி மண்ண அள்ளி போட்டல்ல.. நீயெல்லாம் கடைசி வரை சிங்கிள் தான்டா... என் சாபம்லா உன்னை சும்மா விடாது..." என்று முறைத்தபடியே குளியலறை புகுந்தவனை கண்டு


"நான் என்னடா பண்ணேன். கிஸ் அடிச்சது நீ... உன்னை அடிச்சது அவ.. இதுல எனக்கு ஏன்டா சாபம் வுட்ற..? அய்யைய்யோ அவ வேற கோவமா போறா... அடுத்த வேளை சோறு கிடைக்குமா..? கிடைக்காதா தெர்லயே...? என்ற குரல் கேட்டு குளியலறையில் இருந்து ஷாம்பூ பாட்டில் ஒன்று பறந்து வர


"ப்ச் என் கஷ்டம் எனக்கு.." இவனுக்கென்ன என்றபடியே தயாராகினான் ரகு.


'என்னதான் அவள் மனதில் எண்ணிக்கொண்டிருக்கிறாள் என சொன்னாலாவது பரவாயில்லை. அதுவும் இல்லை. இப்பொழுது இது வேறு வேதாளம் இன்னும் உச்சாணிக் கொம்பில் அல்லவா ஏறிக்கொள்ளும்..' என்று எண்ணியவாறே கிளம்பியவனுக்கு ரகு கொடுத்த உணவு இறங்க மறுத்தது. உணவை வீணாக்ககூடாது என்ற பால்யபாடம், இறங்க மறுத்த உணவை வழுகட்டாயமாய் உள்ளே தள்ளியது.

இருவரும் மருத்துவமனை சென்றனர். மதுரனின் முகவாட்டம் கண்டு ரகு எதுவும் பேசவில்லை. அவன் மனநிலையை உணர்ந்தவனாய் தோள் தட்டி 'ஒன்னும் ஆகாது..' என்று கண்ணசைவால் விடை பெற்று தன் அறையை நோக்கி சென்றான்.

எப்பொழும் வந்தவுடன் முதல் பணியாய் நோயாளிகளை பார்வையிட செல்வதை வழக்கமாக கொண்டவன் அன்றும்
உணர்ச்சிகள் துடைத்த முகத்தோடு துளசி தயாராய் இருந்தாள்.

அவளை உற்று நோக்கியவனால் உணர்சிகளை துடைத்த அந்த முகத்தில் எதையும் இனம் காண இயலவில்லை. வந்தவுடன் அவளிடம் ஏதும் பேசவேண்டாம் என்று எண்ணியவன் எதுவும் பேசாமல் முன்னே செல்ல குறிப்புணர்ந்தவளாய் நோயாளிகளின் கோப்புகளோடு அவனைத் தொடர்ந்தாள். வழக்கமான பணிகள் தவிர வேறு எதையுமே இருவரும் பேசிக்கொள்ளவில்லை.


துளிசிக்கு எப்போதும் ஓர் பழக்கமுண்டு. எத்தனை தனிபட்ட பிரச்சினை ஆனாலும் சரி குடும்ப பிரச்சினை என்றாலும் அதை மருத்துவமனைக்கு வெளியே விட்டு விடுவாள். காலை மருத்துவமனை உள்ளே நுழைந்துவிட்டாள் வேறு எந்த நினைவுகளும் அவளுக்கு இருக்காது. மாலை பணி முடிந்து வெளியேறிய பின்னரே அவளுக்கு வீட்டு நினைவு வரும்.

அதுபோலவே அவள் மற்ற நினைவுகளை வழுகட்டாயமாக ஒதுக்கி தள்ளிவிட்டு தன் போக்கில் பணிகளை தொடர்ந்தாள்.

மதுரனுக்கும் தொடர்ந்து பணிகள் இருக்க உணவு இடைவேளை தாண்டியும் கூட அவன் நோயாளிகளை பார்த்துவிட்டு மணிக்கட்டில் இருந்த கடிகாரத்தை பார்த்தபடியே கேன்டீன் வர அவனுக்காய் ரகு காத்திருந்தான்.

"வெண்ணிலா கால் பண்ணிருந்தாளா ஏன் எடுக்கல.? எனக்கு கூப்டா.." என்றான்.

பேஷன்ட் பாத்துட்டு இருந்தேன். ஃப்ரீ டைம் கிடைக்கவேல்ல. சரி லஞ்ச் பிரேக்ல பேசிக்கலாம்னு இருந்தேன். இப்ப தான் முடிஞ்சது. என்று ஒரு நாற்காலியை இழுத்துவிட்டு அமர ரகு கேரியரை திறந்துவைத்தான்.

இருவரும் பசியில் இருந்ததால் எதுவும் பேசாமல் உணவை உண்டு கொண்டிருக்க மதுரனின் அலைபேசி அழைத்து அவர்களை கலைத்தது.

உணவை உண்டபடியே "சொல்லு குட்டிமா.." என்று அவன் தங்கையிடம் பேசியவன் சிறிது நேரம் பேசிய பின் "இன்னைக்கு ரொம்ப பிஸிடா நைட் நான் ரூம் போய்ட்டு பேசறேன்.." என்றபடி வைத்தான்.

அதுவரை தன் மருத்துவர் பணிக்குள் மூழ்கி இருந்தவன் மனது துளசியை தேடு தொடங்கியது. பேசாம அவகிட்ட மன்னிப்பு கேட்கலாமா ஆமா கண்டிப்பா அவ கிட்ட மன்னிப்பு கேட்கணும் இனி அவ சம்மதம் இல்லாம இந்த மாதிரி எதுவும் நடக்காதுன்னு உறுதி தரணும் ஆனா இங்கே வேண்டாம் மாலை பணி முடிந்ததும் அவளை பார்த்து விடலாம் என்று எண்ணியபடியே உண்டு முடிக்க


அவன் மனதை படித்தவனாய் "என்னடா துளசியை எப்படி சமாதானப்படுத்தலாம் என்று யோசிச்சிட்டு இருக்கியோ... இதெல்லாம் தப்பு செய்யறதுக்கு முன்னாடி யோசிக்கணும் செஞ்சுட்டு யோசிக்க கூடாது..." என்றவன் மேலும் தொடர்தான் அவளை அவ்வளவு சீக்கிரம் சமாதானப்படுத்த முடியும்னு எனக்கு தோணல..." என்றான்.


"ஏன்டா அப்படி சொல்ற.." என்று மதுரன் யோசனையோடு கேட்க

"லஞ்ச் டைம்க்கு கேண்டீன் வரும்போது மதியத்தோட அவ கிளம்பி போறதை பார்த்தேன். என்னை பார்த்தும் யாரையோ பாக்கறது போல முகத்தை திருப்பிட்டு போயிட்டா... எனக்கே இந்த நிலைமைன்னா உன்னை நெனச்சு பாரு..." என்றான் வருத்தத்தோடு.

மதுரன் யோசனையோடு அமர்ந்திருக்க

"சரி வா பாத்துக்கலாம்.." என்றவாறே எழுந்து கொண்டு நண்பனையும் அழைத்துக்கொண்டு கிளம்பினான். ஆனால் அதன் பின் துளசியை பார்ப்பதே அபூர்வமாகி போகும் என மதுரன் நினைத்து கூட பார்க்கவில்லை.


மதுரன் திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை. துளசியை சீண்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடங்கிய விஷயம் அவளை அவ்வளவு அருகில் கண்டதும் அவள் மேலிருந்த அத்தனை வருட அதீத காதல் அவளை முத்தமிட தூண்டியது. இவள் என்னுடையவள் என்ற எண்ணம் மனதில் வேரூன்றி இருந்ததன் விளைவு அது. ஆனால் அது இத்தனை பெரிய விளைவை உருவாக்கும் என்று அந்த நொடி அவன் அறிந்திருக்கவில்லை.

அன்று முதல் மீண்டும் நத்தையாய் தனக்குள் சுருங்கி போனாள் துளசி. யாரிடமும் சரியாக பேசுவதில்லை. உணவுகளை கொடுக்க நேரும் சமயங்களில் கூட "என்னால் முடியாது நீயே போய்க்கொள்..." என்று ராதாவை கடிந்து கொண்டாள்.

மருத்துவமனையில் தன் பணி நேரத்தை மாற்றி அமைத்துக் கொண்டாள். மதுரன் அவளை பார்ப்பது அரிதாகி போனது. அன்று அவள் சென்றபோது கூட எப்படியாவது அவளிடம் பேசி அவனை சரி செய்து விடலாம் என எண்ணியிருக்க அவளைப் பார்ப்பதே அரிதாகிவிட எப்படி அவளிடம் பேசுவது.

தன்னை காணவே கூடாது என்று வைராக்கியத்தோடு அவள் ஒவ்வொன்றையும் செய்வது அவனுக்கு புரிந்தது. தப்பித்தவறி கூட மருத்துவமனையில் அவள் அவன் கண்களில் தென்படுவதே இல்லை எதேச்சையாக ஒரு நாள் காண நேர்கையில் கூட இவன் அவளை நாடிச் செல்லும் முன் அவள் வேறு வழியே விலகிச் சென்றிருந்தாள்.

மதுரன் தவித்துப் போனான். இத்தனை வருட தேடலுக்கு பின் சந்தித்த அவளிடம் சகஜமாய் தன் காதலி சொல்லி பேச முடியாவிட்டாலும் கூட அவளை தினமும் பார்த்துக் கொண்டாவது இருந்தான். ஆனால் இப்பொழுது அதுவும் கேள்விக்குறியாகி போனது.

ரகுவை வைத்து ராதாவிடம் விசாரித்து பார்த்தான். வீட்டிலும் அவள் சகஜமாய் யாரோடும் பேசுவதில்லை என்பதை அறிந்து கொண்டான்.

"எங்கே துளசியை பார்க்கவேமுடியல.." என ரகு விசாரிக்க

"இவளுக்கு என்ன ஆச்சுன்னே தெரியல டாக்டர். இப்பல்லாம் யார் கூடவும் பேச மாட்டேங்கறா. எப்ப பாரு விட்டத்தை பார்த்தபடி உட்கார்ந்திருக்கா ஏன்டி என்று கேட்டா உட்கார கூட இந்த வீட்டில காரணம் சொல்லனுமானு கேக்குறா.. பேசலாம்னு நெனச்சு போனா கவுந்து அடிச்சு படுத்துக்குறா. இந்த சின்னவளும் காலேஜ் போயிட்டு வந்தா படிப்பு வேலைன்னு இருக்கா எனக்குத்தான் பேசக்கூட ஆள் இல்லாத மாதிரி இருக்கு. என்னால தான் இப்படி இருக்காளோன்னு கஷ்டமா இருக்கு டாக்டர் நான் வேணா திரும்ப ஊருக்கு போய்டவா..." என்று ராதா கண்ணீர் தழும்ப கேட்க அவளை சமாதனபடுத்த இயலாமல் நின்றான் ரகு.


தொடர்வார்கள்...
 

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom