- Messages
- 403
- Reaction score
- 659
- Points
- 93
தொடுக்காத பூச்சரமே!
அத்தியாயம் 9
ஆடலரசும், செந்தழையும்.. இனியும் நிறையாழிக்கு திருமணத்தை தாமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்தார்கள்.
தாழ்குழலியும் திருமணத்திற்கு அவசரப்படுத்திக் கொண்டே இருந்தார்.
ஆடலரசுக்கோ, தன் தங்கை தாழ்குழலி என்ன தான் உதியனம்பி நான் சொன்னால் திருமணத்திற்கு சம்மதித்து விடுவான் என்று கூறியிருந்தாலும், அதில் அவருக்கு உடன்பாடில்லை.. தானே நேரடியாக உதியனம்பியிடம் பேசிவிட வேண்டும் என்று முடிவு செய்தார்.
அதன்படி நம்பியை தனியாக சந்தித்து பேசினார்.. தான் சொல்ல நினைத்ததை எல்லாம் சொல்லி முடித்து விட்டு.. "உன் முடிவை சொல்லுப்பா.. எனக்காகவும், உன் அம்மாவுக்காவும் சம்மதம் சொல்லாதே.. இது உன் வாழ்க்கை உன் மனப்பூர்வமான சம்மதம் எனக்கு வேண்டும்.. நீ எனக்கும் பையனைப் போல.. உன்முகத்தில் மகிழ்ச்சி இருந்தால் தான் நான் நிம்மதியாக இருக்க முடியும்.." என்று கண்கலங்க கூறினார்.
நம்பியோ, "மாமா! அம்மா ஏற்கனவே எல்லாம் சொல்லிட்டாங்க.. எனக்கு பரிபூரண சம்மதம்.. உங்க மனசுக்கும், அம்மா மனசுக்கும் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.. எனக்கு இந்த திருமணத்தில் முழு சம்மதம்.." என்று அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னான்.
அவரோ, அவன் கைகளை தன் கண்களில் ஒற்றிக் கொண்டு, "உன் மனசுக்கு நீ நல்லா இருப்பேப்பா.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை.. வயசுல நீ சின்னவனா இருந்தாலும் மனசுல உயர்ந்துட்டே.. ஆனால் எனக்கு மட்டும் குற்றவுணர்வா இருக்குப்பா.. இப்படி ஒரு பெண்ணை உன் தலையில் கட்டி உன் வாழ்க்கையை சீரழிக்கிறேனோன்னு.." என்று கூறி வருந்தினார்.
உதியனம்பியோ, "மாமா என்ன பேச்சு இது.. நீங்களே இப்படி சொல்லலாமா? நிறை போல் மனைவி அமைய நான் தான் கொடுத்து வைத்திருக்கனும்.. அவள் மனசு குழந்தை மாமா.. அவ மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். நாம் நல்லதையே நினைப்போம். நீங்க கவலைப் படாதீங்க. எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.. நான் நிறையை முழுமனதாகத் தான் கல்யாணம் பண்ண ஆசைப்படுகிறேன். நீங்க வருத்தப்படாம கல்யாண வேலையை ஆரம்பிங்க .." என்றவன் சிறு தயக்கத்துடன்,
"மாமா நிறை சம்மதித்துவிட்டாளா?" என்று தயங்கியபடியே கேட்டான்.
அவரோ, "உன்னிடம் பேசிவிட்டு நிறையிடம் பேசலாம்ன்னு இருந்தேன்ப்பா.. இனிமேல் தான் பேசனும்.. அவள சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு.."
"மாமா, அவளிடம் தயவுசெய்து உண்மையை சொல்லிடாதீங்க.. அவ தாங்க மாட்டா.." என்றவனை கட்டி அணைத்துக்கொண்டவர்..
"சொல்ல மாட்டேன் பா. நீ நிம்மதியா இரு.." என்றார்.
"மாமா, எனக்கு ஒரே ஒரு ஆசை! கல்யாணத்தை எளிமையாக கோயிலில் வைத்துக்கலாம்.. அப்புறம் ஏதாவது ஆசிரமத்திற்கு சென்று உணவு வழங்கலாம்ன்னு நினைக்கிறேன்.." என்றவனிடம்,
"சரிப்பா உன் விருப்பப்படியே செய்யலாம்.." என்ற ஆடலரசு மருமகனின் குணத்தை நினைத்து பெருமைபட்டவருக்கு மனம் நிறைந்திருந்தது. அதே மகிழ்ச்சியுடன் வீடு வந்தார்.
நம்பியோ, தன் மாமாவுடன் பேசிய பிறகு நிறை என்ன சொல்வாளோ? என்று பயத்திலேயே சுற்றிக் கொண்டிருந்தான்.
ஆடலரசோ, தன் மருமகனிடம் பேசிவிட்டு வந்த பின் அவருக்கு இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்ற நம்பிக்கை வந்தது.
நிறையிடம் கல்யாண விசயத்தை பேசும் பொறுப்பை மனைவியிடமே கொடுத்தார்.
நிறையோ, செந்தழை திருமண விசயத்தைச் சொன்னதிலிருந்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தாள்.
"அம்மா எப்படி உங்களுக்கு இப்படிச் செய்ய மனசு வந்தது.. என்னால் இதை ஜீரணிக்கவே முடியலை.." என்ற மகளை சலனமே இல்லாமல் பார்த்தார் செந்தழை.
தாய் அமைதியாகவே இருப்பதைக் கண்டவளுக்கு மேலும் ஆத்திரம் பொங்கியது.
தன் கோபத்தைக் கஷ்டப்பட்டு அடக்கியபடியே, "அம்மா நான் எம்.பில் முடித்து இருக்கேன். அவனோ, வெறும் பத்தாவது.. அப்படி இருக்க நான் எப்படிம்மா அவனை கல்யாணம் செய்து கொள்வது.." என்றாள்.
செந்தழையோ, "அவன், இவன்னு பேசினே பல்லைத் தட்டிவிடுவேன்.. கொஞ்சம் படித்தால் மட்டு மரியாதை தெரியாதா உனக்கு..?" என்றார் கோபமாக.
அவளோ, தாயின் கோபத்தைப் பொருட்படுத்தாமல், ஏம்மா இப்படி ஒரு முடிவு எடுத்தீங்க? நான் எந்த விதத்தில் எதில் குறைந்தேன். அப்பா எப்படிம்மா இதற்கு சம்மதித்தார்..?" என்று கலங்கியவாறு கூறிய மகளை நெஞ்சில் தவிப்புடன் பார்த்தார் செந்தழை.
எப்படி சொல்வார் உண்மையை.. மகள் அதை தாங்குவாளா? என்று மனதிற்குள் துடிதுடித்தவர், தன் கோபத்தை முகமூடியாக போட்டுக்கொண்டு, மகளிடம், "நிறை நானும் அப்பாவும் முடிவெடுத்தது, எடுத்தது தான். அதில் மாற்றம் இல்லை.. நாங்கள் எது செய்தாலும் அது உன் நன்மைக்குத் தான்னு நினை.." என்றார்.
மகளோ, "அம்மா எனக்கு அவனைச் சுத்தமாகப் பிடிக்கவே இல்லை.. பேரைப் பார் பேரை உதியனம்பியாம்.. நம்பியார்ன்னு வெச்சிருக்கலாம்.." என்ற மகளை முறைத்தவாறே..
"பேருக்கு என்னடி குறைச்சல், அழகான தமிழ் பெயர்.. பெயரைப் போல் ஆளும் ராஜகுமாரன் தான்.. குணத்திலும் தங்கம்.." என்ற தாயாரிடம்,
"ஆமாம் தங்கத்தை உருக்கி நீங்களே மாலையா போட்டுக்கோங்க.." என்ற மகளை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் செந்தழை குழம்பி நின்றார்.
"அம்மா அவன் வேலையும் பிடிக்கலை.. அவனையும் பிடிக்கலை.. பிளீஸ் மா புரிஞ்சுக்கோங்க.."
"நிறை வர.. வர உனக்கு வாய் ஜாஸ்தியாகிடுச்சு.. வேலைக்கு என்னடி குறைச்சல். இந்த வயசுலையே சொந்தமா கடை வைத்து நல்லபடியா சம்பாதிக்கிறான். நீ தான் நாங்க சொல்வதைப் புரிஞ்சுக்கனும்.."
"நீங்க என்ன சொன்னாலும் என்னால் ஒரு மெக்கானிக்கை கல்யாணம் செய்துக்க முடியாது.." என்றாள்.
செந்தழையோ, தன் மகளிடம் இனி அன்பாக பேசினால் வேலைக்காகாது என்று எண்ணியவர், "நிறை அப்பாவும் நானும் முடிவெடுத்தாச்சு.. கொஞ்சமாவது எங்கள் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தால் நாங்கள் சொல்வதைக் கேளு.. நாங்க என்னைக்கும் உனக்கு தீங்கு செய்ய மாட்டோம்.." என்று கூறியவர் அவளுக்கு யோசிக்க டைம் கொடுத்து பேச்சை முடித்துக் கொண்டு தன் வேலைகளைப் பார்க்க சென்றார்.
நிறையோ, என்ன செய்வது என்று புரியாமல் கலங்கினாள். இப்படி ஒரு நிலை வருமென்று அவள் கனவில் கூட நினைக்கவில்லை.
பனிநிலவும் திருமண விசயத்தை கேள்விப்பட்டதும் பெரிதாக ஆச்சரியப்படலை. அவள் இதை எதிர்பார்த்ததுதான்.
தன் பெற்றோருக்கு நம்பி என்றால் என்றுமே தனிப்பிரியம். அதனால் நிறையின் வாழ்க்கை உதியனம்பியுடன் தான் என்று முன்னமே பனிநிலவு நினைத்திருந்தாள்.
நிறையோ, தன் தாயிடம் பேச முடியாமல் தந்தையிடம் பேசிப் பார்த்தாள்.. ஆனால் அவரோ, "நம்பியை விட வேறு நல்ல மாப்பிள்ளை எங்களால் பார்க்க முடியாது.. இது உன் வாழ்க்கை தான்.. உன் முடிவு தான்.. ஆனால் உன் அப்பா உனக்கு கெடுதல் செய்ய மாட்டார்ன்னு நீ நம்பினால் திருமணத்திற்கு சம்மதி.." என்று கூறிவிட்டார்.
நிறையோ, எதுவும் செய்ய முடியாமல் தவித்தாள். தன் தோழி பூவணியிடம் புலம்பித் தள்ளினாள்.
பூவணியோ, "நிறை நம்பியண்ணா மாதிரி ஒரு ஆள் கிடைக்காது. அம்மா, அப்பா சொல்வதைக் கேட்டு ஒழுங்காக கல்யாணத்துக்கு ஒத்துக்கோ.." என்றாள்.
நிறையோ, கோபத்துடன் பூவணியிடம் எதுவும் பேசாமல் வந்துவிட்டாள்.
திருமணத்தை நிறுத்த தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று தவித்தாள்.
உதியனம்பி தான் இத்தனைக்கும் காரணம் என்று நினைத்து அவன் மீது அளவுகடந்த கோபத்தை வளர்த்துக் கொண்டாள்.
நிறையின் மெளனத்தைச் சம்மதமாக நினைத்து கல்யாண வேலைகளை ஆரம்பித்தார் ஆடலரசு.
உதியனம்பியோ, தன் மாமாவின் மூலம் நிறையின் சம்மதத்தை அறிந்து கொண்டவன் நிம்மதி அடைந்தான்.
திருமணம் எளிமையாகத் தான் நடக்கப்போகிறது என்று அறிந்தும், நிறை எந்த வருத்தமும் படவில்லை..
திருமணத்தைப் பற்றி அவள் பெரிதாக எந்த கனவும் இதுவரை கண்டதில்லை..
பிடிக்காத திருமணம் எப்படி நடந்தால் என்ன? என்ற எண்ணமே! அவள் மனம் முழுவதும் நிரம்பி வழிந்தது.
திருமண நாளும் அழகாக விடிந்தது!
உதியனம்பியின் ஆசைப்படியே பெரியவர்கள் குலதெய்வக் கோவிலில் எளிமையாக திருமணததை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
உதியனம்பியோ, பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக பார்ப்போரை கவர்ந்திழுக்கும் வசீகரத்துடன் மணமேடையில் அமர்ந்திருந்தான். அவன் முகம் மட்டும் யோசனையிலேயே இருந்தது.
நிறையாழியோ, அவன் அருகில் செந்நிறப் பட்டுப்புடவையில் எளிமையான ஒப்பனையில் நேர்த்தியாக தயாராகி மணமேடையில் அமர்ந்திருந்தாள். ஆனால் அவள் முகத்தில் மருந்துக்குக் கூட மலர்ச்சி இல்லை.
மணமக்களைத் தவிர அனைவரும் மனம் கொள்ளா மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்!
குறித்த நேரத்தில் தாழ்குழலி, திருமாங்கல்யத்தை தன் கையால் எடுத்து.. மனதார மகன் வாழ்வு செழிக்க வேண்டுமென்று, கண்களை மூடி.. கைகூப்பி கடவுளை வணங்கிவிட்டு மகனிடம் தந்தார்.
உதியனம்பியோ, மகிழ்ச்சியுடன் தாயிடமிருந்து திருமாங்கல்யத்தை வாங்கி பெரியோரின் ஆசியுடன் நிறையாழியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.
தாழ்குழலி, மகனிடம் மாங்கல்யத்தை தான் எடுத்து கொடுக்க கூடாது, என்று சொல்லி தயங்கியவரை,
உதியனம்பியோ, "அம்மா உங்களை விட நான் நல்லா இருக்கணும்ன்னு யார் நினைப்பார்கள், அதனால் நீங்க தான் எடுத்து தரனும்.." என்று பிடிவாதம் பிடித்து அவரை சம்மதிக்க வைத்தான்.
நிறையாழியோ, தன் கழுத்தில் புதிதாக மின்னிய மஞ்சள் கயிறை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
உதியனம்பியோ, முழுமனதுடன் அனைத்து சடங்குகளையும் செய்தான்.. நிறையாழியோ சடங்கு செய்யும் பொழுது கூட நம்பியின் சிறு தொடுகைகளை நாசூக்காக தவிர்த்தாள்.
உதியனம்பிக்கோ, அவளின் செய்கை வலிக்கச் செய்தாலும் வெளியில் காட்டிக்காமல் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.
திருமணம் இனிதாக முடிந்தவுடன் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிய மணமக்கள்! நேராக ஆசிரமம் சென்று அங்கிருந்த குழந்தைகளுக்கு உணவை வழங்கினார்கள்.
ஆடலரசும் செந்தழையும் நிம்மதியுடனும், எல்லையில்லா மகிழ்ச்சியுடனும் வலம் வந்தார்கள்.
சேத்தனும், பனிநிலவும் வற்றாத புன்னகையுடன் மணமக்களுடனேயே சுற்றினார்கள்.
நிறையாழியின் தோழியாக பூவணி மட்டுமே வந்திருந்தாள்.. அவளுக்கு தன் மனம் கவர்ந்த இருவரும் திருமணம் செய்து கொண்டது அளவில்லா ஆனந்தத்தை அளித்தது.
மணமக்களோ, ஆசிரமத்திலிருந்து நேராக உதியனம்பி வீட்டிற்குச் சென்றனர். அங்கு தாழ்குழலியே அவர்களை ஆலம் சுற்றி வரவேற்றார்.
பனிநிலவும், பூவணியும் நிறையுடன் வந்திருந்தார்கள்.
தாழ்குழலியோ, மூவரையும் நம்பியின் அறையில் ஓய்வெடுக்கச் சொல்லி அனுப்பி வைத்தார்.
நம்பியும் சேத்தனும் வெளியில் வராண்டாவில் அமர்ந்து கொண்டார்கள்.
தாழ்குழலி, பாலும், பழமும் எடுத்து வந்து பனிநிலவிடம் கொடுத்து புதுமணத் தம்பதியருக்கு கொடுக்கச் சொன்னார்.
பனிநிலவோ, இருவரையும் அழைத்து அருகருகே அமரவைத்து பாலையும் பழத்தையும் கொடுத்தாள்.
உதியனம்பியிடம் முதலில் கொடுத்து குடிக்கச் சொல்ல.. அவனோ, தான் முதலில் குடிக்காமல் நிறையை குடிக்கச் சொன்னான்.
நிறையோ மற்றவர்கள் முன் வழியில்லாமல் முதலில் குடித்து விட்டு மீதியை நம்பியிடம் தந்தாள்.
அவனோ, அதை ஆசையாக வாங்கிக் குடித்தான். அவனுக்குத் தெரியும் தான் முதலில் பாதி பாலைக் குடித்து விட்டு கொடுத்தால், நிறை அதை குடிக்க மாட்டாளென்று, அது தான் அவன் அவளை முதலில் அருந்த வைத்தான்.
மாலை வரை அனைவரும் அவர்களுடன் இருந்து விட்டுச் சென்றனர்.
சேத்தனோ, உதியனம்பியின் வாடிய முகத்தைத் கண்டு ஆறுதலாக.. "நம்பி எல்லாம் சீக்கிரம் சரியாகும்.. நிறை உன்னைப் புரிந்து கொள்வாள். நீ எதையும் நினைத்து கவலைப்படாதே.." என்று தேற்றிச் சென்றான்.
நிறையோ, அவர்கள் சென்ற பின் நம்பியின் அறையில் தான் இருந்தாள்.. அவள் நம்பியின் அறைக்குள் வந்து பலவருடங்கள் இருக்கும்.. இன்று தான் வந்திருக்கிறாள்.
கண்களாலேயே அறையை வலம் வந்தவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் எதிர்பார்த்தற்கு வேறாக அவன் அறை காட்சி தந்தது. அலமாரி முழுவதும் புத்தகம்தான்.. உடைகள் உட்பட அனைத்தும் மிக நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தான்.
அவன் அறையில் புத்தகத்தைக் கண்டவளுக்கு மிகுந்த வியப்பாக இருந்தது. அதை எடுத்து பார்த்தவளுக்கு திகைப்பே மிஞ்சியது. அத்தனை புத்தகமும் இன்ஜினியரிங் படிப்பு சம்மந்தமான புத்தகங்கள்..
அவள் மனமோ மெக்கானிக்கும் இன்ஜினியரிங்குக்கும் என்ன சம்மந்தம் என்று குழம்பியது.
அதைப் பற்றி யோசித்துக்கொண்டே தன் உடைமைகளை எல்லாம் எடுத்து, அங்கே காலியாகயிருந்த அலமாரியில் அடுக்கி வைத்தாள்.
உதியனம்பியோ, கைகால் முகம் கழுவ தன் அறைக்கு வந்தவன், நிறையிடம் ஒரு வார்த்தைக் கூட பேசாமல், தான் வந்த வேலையை மட்டும் பார்த்துச் சென்றான்.
தாழ்குழலியோ,
மருமகளிடம் இரவு உடுத்திக்கொள்ள பட்டுப் புடவையைக் கொடுக்க வந்தவர், நிறை தன் உடைமைகளை அடுக்குவதைக் கண்டு அவளுக்கு உதவினார்.
நிறையோ தன் அத்தையிடம் பேசியபடியே தன் வேலையை கவனித்தாள்..
பேச்சுவாக்கில் புத்தகங்களைப் பற்றி கேட்க தாழ்குழலியோ அனைத்தையும் மருமகளிடம் ஒப்புவித்தார்.
நிறையோ, அதைக் கேட்டு திகைத்தாள். நம்பியை தான் படிக்கவில்லை என்று அவமானப்படுத்தியதால் படிக்கிறானோ! சான்றிதழ் இல்லாமல் படித்து என்ன செய்யப் போகிறான் என்று எண்ணினாள்.
அவளுக்கு நடப்பது எதுவும் புரியவில்லை. அவள்
மனம் முழுவதும் குழப்பமே நிரம்பி வழிந்தது.
தாழ்குழலியோ, இரவு உணவு உண்டபிறகு நிறையின் கையில் பால் சொம்பைக் கொடுத்து மகனின் அறைக்கு அனுப்பி வைத்தார்.
தொடரும்..
Hi friends,
அடுத்த அத்தியாயம் நாளை காலை..இன்றைய அத்தியாயத்தை படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
அத்தியாயம் 9
ஆடலரசும், செந்தழையும்.. இனியும் நிறையாழிக்கு திருமணத்தை தாமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்தார்கள்.
தாழ்குழலியும் திருமணத்திற்கு அவசரப்படுத்திக் கொண்டே இருந்தார்.
ஆடலரசுக்கோ, தன் தங்கை தாழ்குழலி என்ன தான் உதியனம்பி நான் சொன்னால் திருமணத்திற்கு சம்மதித்து விடுவான் என்று கூறியிருந்தாலும், அதில் அவருக்கு உடன்பாடில்லை.. தானே நேரடியாக உதியனம்பியிடம் பேசிவிட வேண்டும் என்று முடிவு செய்தார்.
அதன்படி நம்பியை தனியாக சந்தித்து பேசினார்.. தான் சொல்ல நினைத்ததை எல்லாம் சொல்லி முடித்து விட்டு.. "உன் முடிவை சொல்லுப்பா.. எனக்காகவும், உன் அம்மாவுக்காவும் சம்மதம் சொல்லாதே.. இது உன் வாழ்க்கை உன் மனப்பூர்வமான சம்மதம் எனக்கு வேண்டும்.. நீ எனக்கும் பையனைப் போல.. உன்முகத்தில் மகிழ்ச்சி இருந்தால் தான் நான் நிம்மதியாக இருக்க முடியும்.." என்று கண்கலங்க கூறினார்.
நம்பியோ, "மாமா! அம்மா ஏற்கனவே எல்லாம் சொல்லிட்டாங்க.. எனக்கு பரிபூரண சம்மதம்.. உங்க மனசுக்கும், அம்மா மனசுக்கும் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.. எனக்கு இந்த திருமணத்தில் முழு சம்மதம்.." என்று அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னான்.
அவரோ, அவன் கைகளை தன் கண்களில் ஒற்றிக் கொண்டு, "உன் மனசுக்கு நீ நல்லா இருப்பேப்பா.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை.. வயசுல நீ சின்னவனா இருந்தாலும் மனசுல உயர்ந்துட்டே.. ஆனால் எனக்கு மட்டும் குற்றவுணர்வா இருக்குப்பா.. இப்படி ஒரு பெண்ணை உன் தலையில் கட்டி உன் வாழ்க்கையை சீரழிக்கிறேனோன்னு.." என்று கூறி வருந்தினார்.
உதியனம்பியோ, "மாமா என்ன பேச்சு இது.. நீங்களே இப்படி சொல்லலாமா? நிறை போல் மனைவி அமைய நான் தான் கொடுத்து வைத்திருக்கனும்.. அவள் மனசு குழந்தை மாமா.. அவ மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். நாம் நல்லதையே நினைப்போம். நீங்க கவலைப் படாதீங்க. எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.. நான் நிறையை முழுமனதாகத் தான் கல்யாணம் பண்ண ஆசைப்படுகிறேன். நீங்க வருத்தப்படாம கல்யாண வேலையை ஆரம்பிங்க .." என்றவன் சிறு தயக்கத்துடன்,
"மாமா நிறை சம்மதித்துவிட்டாளா?" என்று தயங்கியபடியே கேட்டான்.
அவரோ, "உன்னிடம் பேசிவிட்டு நிறையிடம் பேசலாம்ன்னு இருந்தேன்ப்பா.. இனிமேல் தான் பேசனும்.. அவள சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு.."
"மாமா, அவளிடம் தயவுசெய்து உண்மையை சொல்லிடாதீங்க.. அவ தாங்க மாட்டா.." என்றவனை கட்டி அணைத்துக்கொண்டவர்..
"சொல்ல மாட்டேன் பா. நீ நிம்மதியா இரு.." என்றார்.
"மாமா, எனக்கு ஒரே ஒரு ஆசை! கல்யாணத்தை எளிமையாக கோயிலில் வைத்துக்கலாம்.. அப்புறம் ஏதாவது ஆசிரமத்திற்கு சென்று உணவு வழங்கலாம்ன்னு நினைக்கிறேன்.." என்றவனிடம்,
"சரிப்பா உன் விருப்பப்படியே செய்யலாம்.." என்ற ஆடலரசு மருமகனின் குணத்தை நினைத்து பெருமைபட்டவருக்கு மனம் நிறைந்திருந்தது. அதே மகிழ்ச்சியுடன் வீடு வந்தார்.
நம்பியோ, தன் மாமாவுடன் பேசிய பிறகு நிறை என்ன சொல்வாளோ? என்று பயத்திலேயே சுற்றிக் கொண்டிருந்தான்.
ஆடலரசோ, தன் மருமகனிடம் பேசிவிட்டு வந்த பின் அவருக்கு இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்ற நம்பிக்கை வந்தது.
நிறையிடம் கல்யாண விசயத்தை பேசும் பொறுப்பை மனைவியிடமே கொடுத்தார்.
நிறையோ, செந்தழை திருமண விசயத்தைச் சொன்னதிலிருந்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தாள்.
"அம்மா எப்படி உங்களுக்கு இப்படிச் செய்ய மனசு வந்தது.. என்னால் இதை ஜீரணிக்கவே முடியலை.." என்ற மகளை சலனமே இல்லாமல் பார்த்தார் செந்தழை.
தாய் அமைதியாகவே இருப்பதைக் கண்டவளுக்கு மேலும் ஆத்திரம் பொங்கியது.
தன் கோபத்தைக் கஷ்டப்பட்டு அடக்கியபடியே, "அம்மா நான் எம்.பில் முடித்து இருக்கேன். அவனோ, வெறும் பத்தாவது.. அப்படி இருக்க நான் எப்படிம்மா அவனை கல்யாணம் செய்து கொள்வது.." என்றாள்.
செந்தழையோ, "அவன், இவன்னு பேசினே பல்லைத் தட்டிவிடுவேன்.. கொஞ்சம் படித்தால் மட்டு மரியாதை தெரியாதா உனக்கு..?" என்றார் கோபமாக.
அவளோ, தாயின் கோபத்தைப் பொருட்படுத்தாமல், ஏம்மா இப்படி ஒரு முடிவு எடுத்தீங்க? நான் எந்த விதத்தில் எதில் குறைந்தேன். அப்பா எப்படிம்மா இதற்கு சம்மதித்தார்..?" என்று கலங்கியவாறு கூறிய மகளை நெஞ்சில் தவிப்புடன் பார்த்தார் செந்தழை.
எப்படி சொல்வார் உண்மையை.. மகள் அதை தாங்குவாளா? என்று மனதிற்குள் துடிதுடித்தவர், தன் கோபத்தை முகமூடியாக போட்டுக்கொண்டு, மகளிடம், "நிறை நானும் அப்பாவும் முடிவெடுத்தது, எடுத்தது தான். அதில் மாற்றம் இல்லை.. நாங்கள் எது செய்தாலும் அது உன் நன்மைக்குத் தான்னு நினை.." என்றார்.
மகளோ, "அம்மா எனக்கு அவனைச் சுத்தமாகப் பிடிக்கவே இல்லை.. பேரைப் பார் பேரை உதியனம்பியாம்.. நம்பியார்ன்னு வெச்சிருக்கலாம்.." என்ற மகளை முறைத்தவாறே..
"பேருக்கு என்னடி குறைச்சல், அழகான தமிழ் பெயர்.. பெயரைப் போல் ஆளும் ராஜகுமாரன் தான்.. குணத்திலும் தங்கம்.." என்ற தாயாரிடம்,
"ஆமாம் தங்கத்தை உருக்கி நீங்களே மாலையா போட்டுக்கோங்க.." என்ற மகளை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் செந்தழை குழம்பி நின்றார்.
"அம்மா அவன் வேலையும் பிடிக்கலை.. அவனையும் பிடிக்கலை.. பிளீஸ் மா புரிஞ்சுக்கோங்க.."
"நிறை வர.. வர உனக்கு வாய் ஜாஸ்தியாகிடுச்சு.. வேலைக்கு என்னடி குறைச்சல். இந்த வயசுலையே சொந்தமா கடை வைத்து நல்லபடியா சம்பாதிக்கிறான். நீ தான் நாங்க சொல்வதைப் புரிஞ்சுக்கனும்.."
"நீங்க என்ன சொன்னாலும் என்னால் ஒரு மெக்கானிக்கை கல்யாணம் செய்துக்க முடியாது.." என்றாள்.
செந்தழையோ, தன் மகளிடம் இனி அன்பாக பேசினால் வேலைக்காகாது என்று எண்ணியவர், "நிறை அப்பாவும் நானும் முடிவெடுத்தாச்சு.. கொஞ்சமாவது எங்கள் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தால் நாங்கள் சொல்வதைக் கேளு.. நாங்க என்னைக்கும் உனக்கு தீங்கு செய்ய மாட்டோம்.." என்று கூறியவர் அவளுக்கு யோசிக்க டைம் கொடுத்து பேச்சை முடித்துக் கொண்டு தன் வேலைகளைப் பார்க்க சென்றார்.
நிறையோ, என்ன செய்வது என்று புரியாமல் கலங்கினாள். இப்படி ஒரு நிலை வருமென்று அவள் கனவில் கூட நினைக்கவில்லை.
பனிநிலவும் திருமண விசயத்தை கேள்விப்பட்டதும் பெரிதாக ஆச்சரியப்படலை. அவள் இதை எதிர்பார்த்ததுதான்.
தன் பெற்றோருக்கு நம்பி என்றால் என்றுமே தனிப்பிரியம். அதனால் நிறையின் வாழ்க்கை உதியனம்பியுடன் தான் என்று முன்னமே பனிநிலவு நினைத்திருந்தாள்.
நிறையோ, தன் தாயிடம் பேச முடியாமல் தந்தையிடம் பேசிப் பார்த்தாள்.. ஆனால் அவரோ, "நம்பியை விட வேறு நல்ல மாப்பிள்ளை எங்களால் பார்க்க முடியாது.. இது உன் வாழ்க்கை தான்.. உன் முடிவு தான்.. ஆனால் உன் அப்பா உனக்கு கெடுதல் செய்ய மாட்டார்ன்னு நீ நம்பினால் திருமணத்திற்கு சம்மதி.." என்று கூறிவிட்டார்.
நிறையோ, எதுவும் செய்ய முடியாமல் தவித்தாள். தன் தோழி பூவணியிடம் புலம்பித் தள்ளினாள்.
பூவணியோ, "நிறை நம்பியண்ணா மாதிரி ஒரு ஆள் கிடைக்காது. அம்மா, அப்பா சொல்வதைக் கேட்டு ஒழுங்காக கல்யாணத்துக்கு ஒத்துக்கோ.." என்றாள்.
நிறையோ, கோபத்துடன் பூவணியிடம் எதுவும் பேசாமல் வந்துவிட்டாள்.
திருமணத்தை நிறுத்த தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று தவித்தாள்.
உதியனம்பி தான் இத்தனைக்கும் காரணம் என்று நினைத்து அவன் மீது அளவுகடந்த கோபத்தை வளர்த்துக் கொண்டாள்.
நிறையின் மெளனத்தைச் சம்மதமாக நினைத்து கல்யாண வேலைகளை ஆரம்பித்தார் ஆடலரசு.
உதியனம்பியோ, தன் மாமாவின் மூலம் நிறையின் சம்மதத்தை அறிந்து கொண்டவன் நிம்மதி அடைந்தான்.
திருமணம் எளிமையாகத் தான் நடக்கப்போகிறது என்று அறிந்தும், நிறை எந்த வருத்தமும் படவில்லை..
திருமணத்தைப் பற்றி அவள் பெரிதாக எந்த கனவும் இதுவரை கண்டதில்லை..
பிடிக்காத திருமணம் எப்படி நடந்தால் என்ன? என்ற எண்ணமே! அவள் மனம் முழுவதும் நிரம்பி வழிந்தது.
திருமண நாளும் அழகாக விடிந்தது!
உதியனம்பியின் ஆசைப்படியே பெரியவர்கள் குலதெய்வக் கோவிலில் எளிமையாக திருமணததை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
உதியனம்பியோ, பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக பார்ப்போரை கவர்ந்திழுக்கும் வசீகரத்துடன் மணமேடையில் அமர்ந்திருந்தான். அவன் முகம் மட்டும் யோசனையிலேயே இருந்தது.
நிறையாழியோ, அவன் அருகில் செந்நிறப் பட்டுப்புடவையில் எளிமையான ஒப்பனையில் நேர்த்தியாக தயாராகி மணமேடையில் அமர்ந்திருந்தாள். ஆனால் அவள் முகத்தில் மருந்துக்குக் கூட மலர்ச்சி இல்லை.
மணமக்களைத் தவிர அனைவரும் மனம் கொள்ளா மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்!
குறித்த நேரத்தில் தாழ்குழலி, திருமாங்கல்யத்தை தன் கையால் எடுத்து.. மனதார மகன் வாழ்வு செழிக்க வேண்டுமென்று, கண்களை மூடி.. கைகூப்பி கடவுளை வணங்கிவிட்டு மகனிடம் தந்தார்.
உதியனம்பியோ, மகிழ்ச்சியுடன் தாயிடமிருந்து திருமாங்கல்யத்தை வாங்கி பெரியோரின் ஆசியுடன் நிறையாழியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.
தாழ்குழலி, மகனிடம் மாங்கல்யத்தை தான் எடுத்து கொடுக்க கூடாது, என்று சொல்லி தயங்கியவரை,
உதியனம்பியோ, "அம்மா உங்களை விட நான் நல்லா இருக்கணும்ன்னு யார் நினைப்பார்கள், அதனால் நீங்க தான் எடுத்து தரனும்.." என்று பிடிவாதம் பிடித்து அவரை சம்மதிக்க வைத்தான்.
நிறையாழியோ, தன் கழுத்தில் புதிதாக மின்னிய மஞ்சள் கயிறை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
உதியனம்பியோ, முழுமனதுடன் அனைத்து சடங்குகளையும் செய்தான்.. நிறையாழியோ சடங்கு செய்யும் பொழுது கூட நம்பியின் சிறு தொடுகைகளை நாசூக்காக தவிர்த்தாள்.
உதியனம்பிக்கோ, அவளின் செய்கை வலிக்கச் செய்தாலும் வெளியில் காட்டிக்காமல் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.
திருமணம் இனிதாக முடிந்தவுடன் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிய மணமக்கள்! நேராக ஆசிரமம் சென்று அங்கிருந்த குழந்தைகளுக்கு உணவை வழங்கினார்கள்.
ஆடலரசும் செந்தழையும் நிம்மதியுடனும், எல்லையில்லா மகிழ்ச்சியுடனும் வலம் வந்தார்கள்.
சேத்தனும், பனிநிலவும் வற்றாத புன்னகையுடன் மணமக்களுடனேயே சுற்றினார்கள்.
நிறையாழியின் தோழியாக பூவணி மட்டுமே வந்திருந்தாள்.. அவளுக்கு தன் மனம் கவர்ந்த இருவரும் திருமணம் செய்து கொண்டது அளவில்லா ஆனந்தத்தை அளித்தது.
மணமக்களோ, ஆசிரமத்திலிருந்து நேராக உதியனம்பி வீட்டிற்குச் சென்றனர். அங்கு தாழ்குழலியே அவர்களை ஆலம் சுற்றி வரவேற்றார்.
பனிநிலவும், பூவணியும் நிறையுடன் வந்திருந்தார்கள்.
தாழ்குழலியோ, மூவரையும் நம்பியின் அறையில் ஓய்வெடுக்கச் சொல்லி அனுப்பி வைத்தார்.
நம்பியும் சேத்தனும் வெளியில் வராண்டாவில் அமர்ந்து கொண்டார்கள்.
தாழ்குழலி, பாலும், பழமும் எடுத்து வந்து பனிநிலவிடம் கொடுத்து புதுமணத் தம்பதியருக்கு கொடுக்கச் சொன்னார்.
பனிநிலவோ, இருவரையும் அழைத்து அருகருகே அமரவைத்து பாலையும் பழத்தையும் கொடுத்தாள்.
உதியனம்பியிடம் முதலில் கொடுத்து குடிக்கச் சொல்ல.. அவனோ, தான் முதலில் குடிக்காமல் நிறையை குடிக்கச் சொன்னான்.
நிறையோ மற்றவர்கள் முன் வழியில்லாமல் முதலில் குடித்து விட்டு மீதியை நம்பியிடம் தந்தாள்.
அவனோ, அதை ஆசையாக வாங்கிக் குடித்தான். அவனுக்குத் தெரியும் தான் முதலில் பாதி பாலைக் குடித்து விட்டு கொடுத்தால், நிறை அதை குடிக்க மாட்டாளென்று, அது தான் அவன் அவளை முதலில் அருந்த வைத்தான்.
மாலை வரை அனைவரும் அவர்களுடன் இருந்து விட்டுச் சென்றனர்.
சேத்தனோ, உதியனம்பியின் வாடிய முகத்தைத் கண்டு ஆறுதலாக.. "நம்பி எல்லாம் சீக்கிரம் சரியாகும்.. நிறை உன்னைப் புரிந்து கொள்வாள். நீ எதையும் நினைத்து கவலைப்படாதே.." என்று தேற்றிச் சென்றான்.
நிறையோ, அவர்கள் சென்ற பின் நம்பியின் அறையில் தான் இருந்தாள்.. அவள் நம்பியின் அறைக்குள் வந்து பலவருடங்கள் இருக்கும்.. இன்று தான் வந்திருக்கிறாள்.
கண்களாலேயே அறையை வலம் வந்தவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் எதிர்பார்த்தற்கு வேறாக அவன் அறை காட்சி தந்தது. அலமாரி முழுவதும் புத்தகம்தான்.. உடைகள் உட்பட அனைத்தும் மிக நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தான்.
அவன் அறையில் புத்தகத்தைக் கண்டவளுக்கு மிகுந்த வியப்பாக இருந்தது. அதை எடுத்து பார்த்தவளுக்கு திகைப்பே மிஞ்சியது. அத்தனை புத்தகமும் இன்ஜினியரிங் படிப்பு சம்மந்தமான புத்தகங்கள்..
அவள் மனமோ மெக்கானிக்கும் இன்ஜினியரிங்குக்கும் என்ன சம்மந்தம் என்று குழம்பியது.
அதைப் பற்றி யோசித்துக்கொண்டே தன் உடைமைகளை எல்லாம் எடுத்து, அங்கே காலியாகயிருந்த அலமாரியில் அடுக்கி வைத்தாள்.
உதியனம்பியோ, கைகால் முகம் கழுவ தன் அறைக்கு வந்தவன், நிறையிடம் ஒரு வார்த்தைக் கூட பேசாமல், தான் வந்த வேலையை மட்டும் பார்த்துச் சென்றான்.
தாழ்குழலியோ,
மருமகளிடம் இரவு உடுத்திக்கொள்ள பட்டுப் புடவையைக் கொடுக்க வந்தவர், நிறை தன் உடைமைகளை அடுக்குவதைக் கண்டு அவளுக்கு உதவினார்.
நிறையோ தன் அத்தையிடம் பேசியபடியே தன் வேலையை கவனித்தாள்..
பேச்சுவாக்கில் புத்தகங்களைப் பற்றி கேட்க தாழ்குழலியோ அனைத்தையும் மருமகளிடம் ஒப்புவித்தார்.
நிறையோ, அதைக் கேட்டு திகைத்தாள். நம்பியை தான் படிக்கவில்லை என்று அவமானப்படுத்தியதால் படிக்கிறானோ! சான்றிதழ் இல்லாமல் படித்து என்ன செய்யப் போகிறான் என்று எண்ணினாள்.
அவளுக்கு நடப்பது எதுவும் புரியவில்லை. அவள்
மனம் முழுவதும் குழப்பமே நிரம்பி வழிந்தது.
தாழ்குழலியோ, இரவு உணவு உண்டபிறகு நிறையின் கையில் பால் சொம்பைக் கொடுத்து மகனின் அறைக்கு அனுப்பி வைத்தார்.
தொடரும்..
Hi friends,
அடுத்த அத்தியாயம் நாளை காலை..இன்றைய அத்தியாயத்தை படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்