- Messages
- 607
- Reaction score
- 782
- Points
- 93
Thank you So much Shiyamala... a very encouraging comment...ரொம்ப ரொம்ப சூப்பரான கதை சிஸ். விறுவிறுப்பா சஸ்பன்சோட கதை எழுதியிருக்கின்றீர்கள். மிருது பகவானின் பொண்ணென்டதை நான் கெஸ் பண்ணேல்லை. அருமையான ட்விஸ்ட். டேவிட் பாவம். மிருதுவக் கபடமில்லாம உண்மையாக் காதலிச்சு காதலும் நிறைவேறாம ஆளும் உயிரோட இல்லை. சுஜித்தும் இதே மாதிரித்தான். தன்னோட குழந்தை சுமன் வயித்தில வளருதென்பது சுமனின் வாய்வார்த்தையால் அறியாமல் கெஸ்ஸிங்கில்(சுமன் வையிற்றைத் தடவினது) உணர்ந்தான். உணர்ந்ததை சுமனோட அனுபவிக்க முடியாமப் போச்சு. பாகவான் பக்கம் சேர்ந்து உயிரை விட்டாச்சு. சுமனின் நிலையும் பரிதாபம். காதலனும் இல்லை வயித்தில குழந்தையோட கஸ்ரம். சுமன விரும்பின மாலிக் ப்ளூஸ்டாரிடம் மாட்டிட்டான் உயிரோட வெளில வருவானா தெரியாது. அவனிருந்தாலாவது சுமனுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். அர்ஜூன் என்கின்ற அபிமன்யு கபடமாக கேடயமாக மிருதுவ வைச்சிருந்தாலும் காதல் என்று வரும் போது கடைசியில உண்மையாகக் காதலிச்சிருக்கின்றான். அபிமன்யு வெகு திறமையான உளவாளி. உளவாளிகள் கடுமையான உளவாளிகளாக மாறி எதிரிகளோட வாழ்ந்து உணர்வுகளை(அபிமன்யு மாதிரி கடமையில் இருக்கும் போது காதலில் சிக்குவர்களும் உண்டு என்ன தான் விறைப்பாக கடமையோடு இருந்தாலும் அவர்களும் மனிதர்கள் தானே.) அடக்கி இலக்கொன்றே குறியாக வாழ்ந்து அவர்கள் வழமையான இலகு வாழ்க்கைக்கு மாறுவது கடினம் என்று நீங்கள் எழுதியிருப்பது. அருமை. ஆராய்ந்து எழுதியிருக்கின்றீர்கள் சூப்பர். மிருதுக்கு முதலில் அபிமன்யு மேல் பயமிருந்தாலும் பிறகு காதலித்து விட்டால். பெற்றோரைப் பற்றித் தெரியாமல் தெரிச்ச பிறகு தவிப்பது, அர்ஜினிடம் பெற்றோருக்காக மன்றாடுவது அருமை. கண்முன்னால் பெற்றோரை பறி கொடுத்தது பேரதிர்ச்சியென்றால் அபிமன்யுவின் சுயமறிந்து மனநிலை பாதித்தது பாவம். பெற்றோர் எவ்வளவு கெட்டவர்களென்றாலும் பிள்ளைகள் முன் தலை சிதறிச் சாவது அதிர்சியும் கொலை செய்தவர்கள் மேல் வெறுப்பும் வரும் தானே. அபிமன்யு என்ன தான் நேர்மையான அதிகாரியாக இருந்தாலும் பெற்றோர்களை கொலை செய்தவன் என்ற எண்ணம் மிருதுவுக்கு இருக்கும் தானே. ஆர்த்தியும் சூப்பர் அர்ஜூனுக்காகக் குழந்தையோடு விசத்தைச் சாப்பிட்டு அந்த நிலையிலும் அர்ஜுனைக் காப்பாற்றி விட்டு உயிரை விடுகிறாள். மிருது எப்படி பகவானின் மகளென்று எனக்குத் தெரியாதோ அதே மாதிரி ஆர்த்தியும் சுக்லாவின் மகளென்று தெரியாது. சூப்பர் சூப்பரான மாஃபியா கதை சிஸ். என்னை தூங்க, குளிக்க, சமைக்க விடாம இந்தக் கதை கட்டிப் போட்டுது. வேற கதை படிக்க மனம் வரேல்லை. இதனோட பாகம் இரண்டை நான் எங்கே படிப்பது. அந்தப் பாகத்தின் பெயரென்ன? தயவு செய்து அறியத் தாருங்கள் சகோதரி நன்றி.