Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வியூகம் - கதை

Messages
79
Reaction score
61
Points
18
வியூகம் 10
தன் வீட்டு தோட்டத்தில் மரங்களுக்கு நடுவே அமரும் பொழுது எப்போதும் விஷ்ணுவின் மனம் சமனப்படும் ஆனால் இன்று அது நடக்கவில்லை.
அவனது கண்கள் ஓரிடத்தில் நிலைத்திருந்தது அங்கே ஒரு மாதத்திற்கு முன் அவன் புதைத்து வைத்த நாட்டு மாங்கொட்டை தன் பசுமையான சிறகுகளை விரித்து சின்னஞ்சிரியதாய் பூமித்தாயின் புதுக்குழந்தையாய் பார்ப்பதற்கே இனிமையாய், மென்மையாய். ஆனால் இதனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவின் கண்கள் ரத்தமென சிவந்திருந்தன. அந்த கண்களிலுள் அடங்கா ரௌத்திரம். அவனது காதினுள் சிங்க ஐயாவின் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது.
ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு பின் நேற்று இரவு தான் அவரது குரலை கேட்டான். "தீ......நிக்கவேயில்லை தம்பி"
“.........”
"நம்ம ஆள் மரியன் அங்க தான் இருக்கான் ஆனா...." அவரின் நடுக்கமான குரல் அவர் பேசும் நிலையில் இல்லை என்பதை சுட்டிக் காண்பித்தது. அதுவே அவரது மனநிலையை வெளிச்சம் போட்டு காண்பிக்க

"நான் இருக்கிறேன் ஐயா ஏதாவது செய்ய முயல்கிறேன். உங்கள் மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம்" தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்தும் அவருக்கு நம்பிக்கை வார்த்தையளித்தான்.
தொலைபேசி கை மாறியது
"மரியன் என்ன சொன்னான்?" விஷ்ணுவின் குரலில் தீவிரமிருந்தது.
"எங்க போனாலும் முட்டு தாம்"
"இத சொல்ல அவனுக்கு வெட்கமாயில்ல?"
“.........”
“அறுபதாயிரத்தை தாண்டியாச்சு இந்த தீ விபத்து.அங்கிருக்கும் பழங்குடியை மீட்க போட்ட பிளான் என்ன ஆச்சு?"
"அவங்க நம்மளை நம்பலை ,யாரை பார்த்தாலும் கண்மூடித்தனமா தாக்கிறாங்களாம்"
"மரியனோட டீம் இரண்டு வருஷமா என்ன தான் செய்யிறாங்க, இப்படி நடக்கப் போகுதுன்னு பகிரங்கமா சொல்லிட்டு தானே செய்யிறாங்க"
"......"
"அப்போ......நம்ம தோத்துட்டோம், இரண்டு வருஷமா பிளான் போட்டுக் கூட எதுவும் செய்ய முடியல, அப்படித்தானே?" எதிர்முனையில் நிலவிய அமைதி அவனது கோபத்தில் நெய் ஊற்றியது. அவனது உடம்பில் ஓடும் ரத்தம் முழுமையும் சூடேறி கொதித்தது.தொலைபேசியை ஓங்கியடித்தான்.
அந்த கோபம் இப்போதும் தணியவில்லை. ஒரே ஒரு செடி, மரம், சிறு தோப்பு இதனை உருவாக்க மனிதன் படும்பாடு ஏராளம். ஆனால் பல்லாயிரக்கணக்கான வருடத்திற்கு முன்னால் நம் இயற்கையன்னை வைத்துக் கொள் என்று அள்ளிக் கொடுத்த வளங்களில் ஒன்று தான் காடுகள். இப்படிப்பட்ட காடுகள் அழிக்கப்பட்டால் நாம் சுவாசிக்க முடியாமல் சாவோம். இல்லையென்றால் ஆக்சிஜனை சிலிண்டரில் அடைத்து விற்கும் நிறுவணம் கொடிகட்டிப் பறக்கும்.

அதுவும் இப்போது எரிந்து கொண்டிருக்கும் காடு அடர்த்தியான காடு, உலகில் இருக்கும் ஐந்தில் ஒரு பங்கு ஆக்சிஜன் இங்கிருந்து தான் கிடைக்கிறது, அதற்குள் இருக்கும் விளங்குகள் , மரங்கள், பறவைகள், பூச்சிகள், மீன்கள் ஆகியவற்றின் வகைகள் கூட நமக்கு தெரியாது. ஏன் அங்கிருக்கும் லட்சக்கணக்கான பழங்குடியினர்கள் பற்றியும் நமக்கு தெரியாது. அவர்கள் இந்த உலகுடன் அவர்களை இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் அவர்களை விட்டார்களா? இல்லையே.... .தீ.... .தீ.....எத்தனை பேர் தீயில் மடிந்தார்களோ? விளைவு? இன்னொரு இனம் அழிக்கப்படும். விஷ்ணுவின் கை முஷ்டி இறுகியது. கண்களிலிருக்கும் நரம்புகள் வெடித்து அதிலிருந்து ரத்தம் சிதறுமளவு அவனது கண்கள் குரோதத்துடனிருந்தது. ஏதாவது செய்ய வேண்டும் செய்ய வேண்டும்..... நிச்சயம் செய்ய வேண்டும்... மூளை அதி தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தது. எங்கோ ஏதோ பொறி தட்டியது போல் தன் பாக்கெட்டினுள் துழாவி செல்போனை எடுத்து சில நம்பர்களை டயல் செய்து காதுக்கு கொடுத்தான்.

***************************************

தியேட்டர் வளாகம்-
பொதுவாக ஐஷ்வர்யா திரையரங்கிற்குள் விற்கும் உணவுப்பொருட்களை வாங்குவதில்லை. பொரித்த சோளம் நூற்றி ஐம்பது ரூபாவா? அதுவே வெளியே முப்பது ரூபாய். மீதம் நூற்றி இருபது ரூபாய் யாருக்கு?எதற்கு? இந்த நியாயத்தை கேட்க ஆளில்லை , இதற்கு எதிர்மறையாக உள்ளே திரையில் அநியாயத்தை கண்டால் பொங்கும் ஹீரோக்களுக்கு நம்மூரில் பஞ்சமும் இல்லை. புற்றீசல்போல் எங்கிருந்துதான் வருகிறார்களோ தெரியவில்லை.
அப்படி ஒரு புற்றீசலின் படத்திற்கு தான் இப்போது அவள் வந்திருக்கிறாள். படம் சுமாராகத்தான் இருக்கும் என்று டிரைலரை பார்த்ததுமே தெரிந்து விட்டது இருப்பினும் பார்த்து தான் ஆக வேண்டும். சேனலின் சப்ஸ்கிரைபர்ஸ் (பார்வையாளர்கள்) இவளது விமர்சனத்திற்காக காத்திருப்பார்களே. கடந்த சில நாட்களிலேயே அறநூருக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்ஸ் வந்திருக்கிறார்கள். இன்னும் இருநூறு வந்தால் போதுமானது ஆயிரத்தை தாண்டிவிடும். தற்போதைய யூடியூபின் விதிப்படி ஆயிரம் சப்ஸ்கிரைபர்ஸ் மற்றும் சில ஆயிரம் நிமிஷ பார்வை நேரம் இருந்து விட்டால் இவளது சேனல் மானிடைஸ் ஆகிவிடும்- அதாவது விளம்பரம் வர ஆரம்பமாகும் பிறகு அதன் மூலம் இவளது கணக்கில் பணம் சேரும். இப்படி பல கனவுகளுடன் கையிலிருந்த சமோசாவை சாப்பிட்டுக்கு கொண்டிருந்தவளை விஷ்ணுவின் "ஹலோ! வாட் எ சர்ப்ரைஸ் " உற்சாக குரல் நிகழ் உலகம் கொண்டு வந்தது.


சில நொடி விழித்தவள் தன் நினைவு அடுக்குகளை தூசு தட்டி விஷ்ணுவை நினைவில் கொணர்ந்தாள். "ஹா....ஹாய், "நட்பாய் புன்னகைத்தாள்.
“அன்னைக்கு நம்ம பார்த்த படத்துக்கு நீங்க கொடுத்த விமர்சனம் சூப்பர், என்னோட கான்டாக்ட்ல இருந்த எல்லாருக்கும் ஷேர் பண்ணேன். எல்லாரையும் சப்ஸ்கிரைப் பண்ண சொல்லிட்டேன்.”
“ ஓ...... தேங்க்யூ சோ மச் “ திடுமென பார்வையாளர்கள் எப்படி கூடினார்கள் என்று இப்போது புரிந்து விட்டது . எதிரிலிருப்பவன் மீது மரியாதை கூடியது.
“நான் நோட் செய்த எல்லா விஷயத்தையும் நீங்க சொல்லிட்டீங்க.... உங்க வீடியோஸ் பார்த்ததிலிருந்து எனக்கு சேனல் ஆரம்பிக்கும் எண்ணமே போயிடுச்சி. ரெண்டுபேரும் ஒரே பாயின்ட்ஸ் சொன்னா நல்லாயிருக்காதே." சிரிப்பினுடே அவன் கூறியதை ஓர் மென்சிரிப்புடன் தனக்கான பாராட்டாகவே எடுத்துக் கொண்டாள் ஐஸ்வர்யா.
 
Messages
79
Reaction score
61
Points
18
வியூகம் - 11
டம்டம்டம்...... டிரம்சின் ஒலி காதை பிளந்தது, துணையாய் தாரை தப்பட்டை வேறு, அதுவும் பத்தாதென ஒரு பத்து பேர் டப்பாங்குத்து ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள். பூக்களும் மாலைகளும் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது, விவரம் புரியாதவர்கள் பார்த்தால் ஏதோ சாவு வீட்டு சம்பிரதாயம் என்று நினைத்துக் கொள்வார்கள். பால் மட்டும் குறைகிறதோ? அங்கே அதுவும் ஊற்றப்பட்டது, பிணத்தின் மீது அல்ல இருபதடி உயரமிருந்த அந்த பிரபல நட்சத்திரத்தின் கட்டவுட் மீது.
மிகப்பெரிய ஆளுமை கொண்ட நட்சத்திரத்தின் திரைப்பட வெளியீடு. முதல் நாள் முதல் ஷோ.காலை ஏழு மணிதான் இருப்பினும் அந்த தியேட்டர் வளாகத்தில் மனித கூட்டம் நெட்டி தள்ளியது.கால் வைக்க கூட இடமில்லை, புறநகர் பகுதியில் அமைந்திருந்த அந்த திரையரங்கின் சின்னஞ்சிறிய வளாகம் அந்த மனித கூட்டத்தை தன்னுள் அடக்க முடியாமல் தினறியது.. டிக்கெட் கிடைக்காதவர்கள் கூட அங்கே இருந்தார்கள், தலைவனின் முதல் ஷோவாம்,தக்க மரியாதை செய்யவேண்டுமாம்....
இந்தக் கூட்டத்தில் தான் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார்கள் விஷ்ணுவும், ஐஸ்வர்யாவும்.
முதலில் சில சினிமா சந்திப்புகள் எதேர்ச்சையாக ஏற்பட பிறகு இருவரும் தகவல் பரிமாறிக்கொண்டு சந்திக்கும் நிலைக்கு முன்னேறிவிட்டார்கள். இருவரும் சேர்ந்து படம் பார்ப்பதோடு மட்டுமில்லாமல் அதனை தொடர்ந்து ஏதாவது ஒரு ரெஸ்டாரன்டில் அந்த படத்தை பற்றிய அவர்களது விமர்சனங்களை பகிர்ந்து கொள்வார்கள்
அடுத்த நாள் ஐஸ்வர்யாவின் யூடியூப் வீடியோவில் இருவரது கருத்துகளும் சேர்த்தே சொல்லப்படும். விஷ்ணுவின் அறிமுகம் கிடைத்தது மாபெரும் வரப்பிரசாதமாக தோன்றிய ஐஸ்வர்யாவிற்கு இவ்விருவருக்குள்ளும் ஓர் அழகான நட்பு மலர்ந்திருந்தது.
செல்போன் நம்பர் பரிமாற்றமும் இனிதே நடந்தேறி விட்டிருந்தது.
முந்தைய நாள் விஷ்ணுவை ஃபோனில் அழைத்தது ஐஸ்வர்யா தான். "நம்ம மாஸ் ஹீரோ படத்துக்கு ஃபஸ்ட் டே ஃபஸ்ட் ஷோ ரெண்டு டிக்கெட் வாங்கிட்டேன்" உற்சாக குரலில் ஆர்ப்பரித்தாள் .
"வாவ் கிரேட், எப்படி கிடைச்சது" உற்சாகத்தில் அவளுக்கு ஈடு கொடுத்தான்
. "தியேட்டர் ஓனர் கிட்ட பேசி பேசியே வாங்கிட்டேன்" என்றாள் பெருமிதமாக.
“என்ன ஓனரா?” எந்த தியேட்டர்? சந்தேகமாக கேட்டான் -
"ஹி ஹி...மாரன் தியேட்டர்" அவன் எதிர்பார்த்தது போலவே ஒரு லோக்கல் தியேட்டர் பெயரை தான் அவள் குறிப்பிட்டாள்
"உனக்கு வேற தியேட்டரே கிடைக்கலையா?"
"டிக்கட் கிடைச்சதே பெருசு.ப்ளீஸ் விஷ்ணு நீங்க கண்டிப்பா வந்துடுங்க அந்த தியேட்டருக்கு தனியா போக எனக்கே ஒரு மாதிரி இருக்கு" உண்மையை கூற வேண்டும் என்றால் கூட்டமான தியேட்டரினுள் விஷ்ணு நுழையவே மாட்டான். ஆனால் ஐஸ்வர்யாவின் கெஞ்சலான குரலுக்காக “சரி" என்றான்.
தன்னால் முடிந்த அளவு ஜஸ்வர்யாவை யாரும் இடித்து விடாமல் ஓர் அரண் போல அவளை முன்னே விட்டு தன் இருகைகளையும் விரித்து பின்னே நடந்தான் விஷ்ணு .அப்போது தான் இந்த தாரைத் தப்பட்டையும் பாலபிஷேகமும் ஜஸ்வர்யாவின் மனதை வருத்தியது. பாலின் விலை படிப்படியாக ஏறிக்கொண்டிருக்கும் பொழுது இவ்வளவு பாலை வீணடிப்பவர்களின் மீது பெருங்கோபமெழுந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஓரு மீம்ஸ் படித்தாள் பாலுக்காக ஒரு குழந்தை அழுகிறது, பால் விலையை பார்த்து ஏழைத் தாய் அழுது கொண்டிருக்கிறாள்" அப்படிப்பட்ட ஏழை குழந்தைகளின் வயிற்றுக்கு எட்டாத பால் இந்த கட்டவுட்டிற்கா? அது மட்டுமல்லாமல் கரணம் தப்பினால் மரணம் என்பது போல் கட்டவுட்டின் மீது ஏறி நின்று பால் ஊற்றும் இளைஞர்களை பார்த்தால் அடிவயிற்றில் குளிர் பரவியது. அவர்களின் கால் தடுமாறினால்?" ஏனோ படம் பார்க்கும் ஆர்வம் துணி கொண்டு துடைத்தது போல் சுத்தமாகிவிட்டது
"நம்ம திரும்ப போயிடலாம் விஷ்ணு" பின்னே அவன் தோளோடு சாய்ந்து காதுக்கருகில் சத்தமாகவே கேட்டாள். விஷ்ணுவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர்கள் யூடியூப் பற்றி பேசும்பொழுதெல்லாம் ஐஸ்வர்யாவின் வாயிலிருந்து வரும் முக்கிய ஸ்டாட்டர்ஜி இதுதான். "ஒரு மாஸ் ஹீரோ படம் பாக்கனும் விஷ்ணு. முதல் நாள் முதல் ஷோ, முதல் விமர்சனமா நம்ம வீடியோதான் இருக்கனும். அப்படி மட்டும் செஞ்சிட்டா நம்ம சப்ஸ்கிரைபர்சை அள்ளிடலாம்” இப்படிக் கூறும் போது அவளது கண்களில் தெரிந்த பளபளப்பு இன்றும் அவனது நினைவில் நின்றது.
இப்போது ஏன் இப்படி முரணாக பேசுகிறாள் என்று புரியாமல் யோசித்தான் விஷ்ணு. இருப்பினும் அவளுக்கு பதிலளிக்க அவள் காதோரம் முன்னே சாய்ந்து "திரும்பிப் போக துளியும் வழியில்லையே ஐஸ்வர்யா, உடம்புக்கு ஏதாவது முடியலையா?" என்று விசாரித்தான். தன் மனநிலையை அவனிடம் இப்போது இந்த நெருக்கடியில் விளக்க முடியாது என்று புரிந்து விட மறுப்பாய் தலை அசைத்தவள் முன்னேறினாள்.
எப்படியோ ரசிகர்களின் ஆர்ப்பரிப்பிற்கு நடுவில் படம் பார்த்து முடித்து அப்பாடா என்று வெளியே வந்தால் இவர்களின் பின்னோடு வந்த சிலர் அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். "டேய் முன்னே போறது யார் தெரியுதா?" என்று ஒருவனும் "தெரியலையே மாமு" என்று இன்னொருவனும் பேசிக்கொள்வது இவர்கள் இருவரது காதிலும் தெளிவாக கேட்டது. அவர்கள் நிரம்பக் குடித்திருப்பது அவர்களின் குளரலிலேயே தெரிந்தது.

"நம்ம ஐஸ்வர்யா டா! அதான்டா அந்த யூடியூப் சேனல் ஏதோ கோளாருன்னு வருமே. படத்தை பத்தி எல்லாம் பேசுவாங்களே" என்று பேசிக்கொண்டே தனது செல்போனை எடுத்து அதில் ஐஸ்வர்யாவின் வீடியோவை எடுத்து நண்பனுக்கு காட்டினான். இனி என்ன நடக்கும் என்று யூகித்து விட்டானோ என்னவோ "வேகமா நட ஐஸ்வர்யா" என்றான் விஷ்ணு அவளுக்குமே உள்ளே கலக்கம் தான். விஷ்ணுவை ஒட்டியபடியே வேகமாக நடக்கலானாள். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களால் அதிக தூரம் போக முடியவில்லை. அதற்குள் அவர்களது எண்ணம் புரிந்து விட பின்னிருந்த இருவரும் இவர்களை விட வேகமாக முன்னேறி இவர்களுக்கு முன்னே வந்து நின்றனர். ஐஸ்வர்யாவின் கைகள் தாமாக விஷ்ணுவின் முழங்கையை அழுந்தப்பற்றின, அதில் நடுக்கத்தை அவனால் உணர முடிந்தது.
"நீதானே ஐஸ்வர்யா" என்றான் ஒருவன்.
இன்னொருவனோ தலையை கீழிருந்து மேலாக ஆட்டி கையை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு டி.ஆர்ஐ போல "ஏய் ஐஸ்வர்யா! நீ ஃபிரியா? என் கூட வரியா?" என்றான். முஷ்டி இறுக கண்கள் சிவக்க அதுவரை தன்னை அடக்கிக் கொண்டிருந்த விஷ்ணு மெல்ல தன் விரல்களை தளர்த்தினான் சுற்று முற்றும் நோட்டமிட்டான் சிசிடிவி கேமிரா எதுவும் கண்ணில் படவில்லை.
ஐந்து வினாடிகூட இருந்திருக்காது அவனது இரண்டு கைவிரல்களும் அந்த இருவர் உடம்பிலும் சட்சட் என தொட்டு மீண்டன. முடிவில் இருவரும் கீழே கிடந்தனர்.
ஐஸ்வர்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை, விஷ்ணு என்ன செய்தான் என்று அவளின் மூளை சிந்திப்பதற்குள்ளேயே அவளை தியேட்டருக்கு வெளியே அழைத்துச் சென்று ஒரு ஆட்டோவை மரித்து அவளை ஏற்றி உள்ளே தானும் ஏறிக்கொண்டான்.
ஐஷ்வர்யாவின் சிந்தனை தியேட்டரிலேயே நின்றது‘ஒருவேளை வர்மக்கலையோ? இல்லையே அது இருவிரல்களை வைத்து திருப்புவது போல் அல்லவா இருக்கும், இந்தியன் படத்தில் பார்த்திருக்கிறாளே. இவன் ஒற்றை விரலில் மு .... முதலில் நெற்றியில் எங்கோ வைத்தான் பிறகு கழுத்து பிறகு இதயம் பிறகு வயிறு அவ்வளவு தான் இருவரும் கீழே. அது என்ன என்று அவனிடமே கேட்டு விடலாம் என்றால் அவன் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தான் ; வாய் திறக்கவே பயந்து அமைதியாக வந்தாள்.
சிறு தியேட்டரில் பார்க்கிங் சரியாக இருக்காது என்று இருவரும் வண்டியை விடுத்து ஆட்டோவில் சென்றதும் ஓரளவு நல்லதாகவே முடிந்தது.
ஐஸ்வர்யாவின் வீட்டருகில் அவளை இறக்கிவிட்டவன். “நிறைய விலை கொடுத்து இந்த படத்தை பார்த்திருக்கிறோம் அதனால் விரைவாக வீடியோ வந்தால் மட்டுமே நமக்கு லாபம்" என்று இருபொருள் பட பேசி விட்டு ஆட்டோவை எடுக்கச் சொல்லி அவன் சென்றே விட்டான். ஏனோ ஆட்டோ கண்ணில் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா.
அன்புடன்
இந்திரா செல்வம்
 
Messages
79
Reaction score
61
Points
18
வியூகம் 12
மாடித்தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு மீன் உரம் தயாரித்துக் கொண்டிருந்தான் விஷ்ணு. நாய் பிளாக்கி அவனருகில் வாலாட்டிக் கொண்டிருந்தது. அப்போது பாக்கெட்டிலிருந்த செல்போன் சத்தமெழுப்ப தன் கையை கழுவிக் கொண்டு செல்போனை காதுக்கு கொடுத்தான் " சொல்லு ஐஸ்வர்யா"

"வீடியோ போட்டாச்சு, அனேகமா நம்மளோடதுதான் ஃபர்ஸ்ட்" அவளது குரலில் அவன் எதிர்பார்த்த சந்தோஷமில்லை.

"ஆர் யூ ஓ.கே" என்று கேட்டான்

."ம்" ஒற்றை எழுத்து பதில் மட்டுமே வந்தது.

"தியேட்டரில் நடந்ததை மறந்திடு"

அவளை சகஜ நிலைக்கு கொண்டு வர முயன்றான்.

"ம்" என்றாள் மீண்டும்..

"ம்....ச்.....இப்போ வருத்தப்படற அளவுக்கு என்ன ஆகிடுச்சி?"

அவனது கேள்வியில் கோபமிருந்தது.

"அவங்களை எதுக்கு அடிச்சீங்க விஷ்ணு?" ஏதோ ஒரு பதிலை எதிர்பார்த்து தான் அவள் கேட்டிருக்க வேண்டும்



"பெண்களிடம் வாலாட்டினால் தண்டனை கொடுக்க வேண்டாமா?" பொதுவான பதில் ஒன்றை அளித்தான்

அவனது பதில் அவளதோடு ஒத்துப் போகவில்லை போலும் சில பல நொடிகள் அமைதிக்கு பின் பேசலானாள்

"அது... நீங்கள் அவங்களை தொட்டீங்க தானே? அது என்ன கலை? வர்மக்கலை தானே?" இப்போது அமைதி காத்தது விஷ்ணு

"கரெக்ட்தானே விஷ்ணு" அவனது பாராட்டுக்காக காத்திருந்தாள்.

ஆனால் அவனோ "ம்....... நான் வீடியோ பாக்கனுமே வைக்கட்டுமா?" என்று சம்பந்தமில்லாமல் பேசி தொடர்பை துண்டித்தும் விட்டான்.

செல்பேசியை பாக்கெட்டில் போட்ட விஷ்ணுவின் கைகள் இயந்திரமாய் உரத்தை செடிகளுக்கு தெளித்துக்கொண்டிருந்தன ஆனால் அவனது சிந்தனை அதிலில்லை.

அன்றைய நள்ளிரவு உரையாடலும் விஷ்ணுவிற்கு எரிச்சலைதான் ஏற்படுத்தியது.

செல்பேசியை எடுத்து காதுக்கு கொடுக்கும் போதே

"எதற்காக முதல் ஷோ?" கோபத்தை வெளிக்காட்டியது எதிர்முனை.

"அவசியமிருந்தது" என்றான் ஒற்றை வார்த்தையில்.

"சரி, சண்டைபோடவும் அவசியமிருந்ததோ?" குத்தலாக வந்தன கேள்வியை தொடர்ந்து "அங்கே கேமிராக்கள் இருந்திருந்தால்? எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல் நம் தற்காப்புக்கலையை வேறு பயன்படுத்தியிருக்கிறாய்" அடுக்கடுக்காய் அவன் மீது குற்றச்சாட்டு அடுக்கப்பட்டது

கைமுஷ்டி இறுக பற்களை கடித்தான் விஷ்ணு

"என்னை வேவு பார்க்க ஆள்????" கடித்த பற்களினுடே வார்த்தைகளை துப்பினான்.

"உன்னை யாரும் வேவு பார்க்கவில்லை என்று உனக்கு நன்றாகவே தெரியும்" எதிர்முனையில் இப்போது நிதானமிருந்தது.

"எனக்கு பாதுகாப்பும் வேண்டாம்”

"உன் உயிரின் மதிப்பு உனக்கு நன்றாகவே தெரியும்"

“....”

"இனி கவனம் இரட்டிப்பாய் இருக்க வேண்டும், அடுத்த திட்டமென்ன"

எதிர்முனை பேசிக்கொண்டிருக்கும் பொழுதே

"நாளை பேசலாம்" தொடர்பை துண்டித்தான். முகம் ரத்தமென சிவந்திருந்தது.

ஓர் ஆங்கிலப் பாடலை முணுமுணுத்தபடியே கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். இந்த வாரம் தண்ணீர் இறைப்பது இவனது வேலை. விஷ்ணு மாடுகளுக்கு கழுநீர் வைக்க சென்றுவிட்டான். சமையலறையில் விஷ்ணுவின் செல்போன் அடித்துக்கொண்டிருந்தது.

விஷ்ணுவை தவிர வேறு யாரும் அவனுடைய செல்போனை தொடக்கூடாது என்பது அங்கு எழுதப்படாத சட்டம். அதனால் மீண்டும் தண்ணீர் இறைக்கலானான் அர்ஜுன், இப்போது முணுமுணுத்துக் கொண்டிருந்த ஆங்கிலப் பாடலை மறந்தவனாய், "புத்தம் புது பூமி வேண்டும்.......நித்தம் ஒரு வானம் வேண்டும், தங்க மழை பெய்ய வேண்டும். தமிழில் குயில் பாட வேண்டும். இந்த விஷ்ணு நல்லாய் சமைக்க வேண்டும்.. தண்ணி இழுக்கும் என் கை வலிக்காமல் இருக்க வேண்டும். இந்த வீட்டில் மோட்டார் போட வேண்டும்" என்று அழகான பாடலில் ஆரம்பித்து தனக்கு வேண்டியதை எல்லாம் பட்டியல் போட்டுக் கொண்டிருந்தான்.

மீண்டும் செல்பேசி அழைத்தது, நல்லவேளையாக இந்த முறை விஷ்ணு எடுத்து விட்டான். "ஹல்லோ தன்ஷிகா! வாட் எ சர்ப்ரைஸ், நானே உனக்கு கால் பண்ணனும்னு நினைச்சேன். ஹவ் ஆர் யூ?"

“......”

“எஸ் .....நான் ஃபிரி தான், கண்டிப்பா மீட் பண்ணலாம். இல்ல....வேற பிளேஸ் வேண்டாம் ஹனி, ஐ லைக் மும்பை பார், அங்குதான் நமக்கு பிரைவசி இருக்கும்,

“அண்ட் ஐ வான்ட் தட் பிரைவசி , யூ நோ மீ" என்றான் ஒருமாதிரி குரலில்.

“ஓகே டியர், மீட்யூ டுநைட் , பை"

தொடர்பை துண்டித்தவன் அன்றைய சமையலில் ஈடுபட்டான்.

உளுந்தங்களிக்கு தேவையானவற்றை எடுத்தகொண்டு,

தன் தோட்டத்தில் விளைந்த சக்கரைவள்ளிக் கிழங்கை இட்லி பாத்திரத்தில் வேக வைத்தான்.

மும்பை பார் சன்னமான கூட்டத்திலும் அபரிமிதமான கொண்டாட்டத்தில் திளைத்தது, யாருடனோ கைகோர்த்து ஆடிக்கொண்டிருந்த தன்ஷிகாவை விழி அகற்றாமல் பார்த்துக்கொண்டிருந்தான் விஷ்ணு. அவ்வப்பொழுது ஆட்டத்தினூடே அவனது கண்களை சந்தித்த தன்ஷிகாவின் முகத்தில் ஒரு வித மகிழ்ச்சி தென்பட்டது. இப்போது இது தானே டிரெண்ட் காதலியோ, கேர்ள் ஃபிரண்டோ, யாருடன் வேண்டுமானாலும் ஆடலாம்,கட்டிப்பிடிக்கலாம், மணிக்கணக்காக பேசலாம், அதனை பெருந்தன்மையோடும், நம்பகத்தன்மையோடும் சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொள்வதுதான் காதலன் அல்லது ஃபாய் ஃபிரண்டின் கடமை. அப்போது தான் அவனை ஜென்டில்மேனாக அந்தப் பெண் பார்ப்பாள். இப்போது தன்ஷிகாவின் கண்களுக்கு விஷ்ணு ஜென்டில்மேனாக தெரிந்தான்

ஒரு வழியாக ஆட்டம் சலிப்பு தட்ட போதையில் தட்டுத்தடுமாறி கோணலாக நடந்து வந்தவள் விஷ்ணுவின் மீதே பொத்தென விழுந்தாள். அவளை வாகாக தன் மடிமீது ஏந்திக்கொண்டு முகத்தோடு முகம் வைத்து அவளது காதுகளுக்கு மட்டுமே கேட்கும் கிசுகிசுப்பான குரலில் "ஆர் யூ ஓகே பேபி....?"அவன் முடிப்பதற்குள் அவளது இதழ்கள் அவனது இதழ்களை சிறைபடுத்தியிருந்தன. அவனது கால்களுக்கு இடமும் வலமுமாக தன் கால்களை போட்டுக்கொண்டு அவன் மடியிலேயே அமர்ந்தவளின் கை அவன் பின்னங்கழுத்தை வருடி அப்படியே சிகையினுள் புகுந்து விளையாட......மற்றொரு கை அவன் முதுகினில் படர்ந்து இறுக தழுவியபடி அவள் முன்னேற. "ஷ்...ஹனி திஸ் இஸ் பப்ளிக் பிளேஸ், நம்ம ரூம்கு போயிடலாம்"

அவளது பிடியிலிருந்து மெல்ல மெல்ல தன்னை விடுவித்துக்கொண்டான், கைத்தாங்கலாக அவளை மாடியறைக்கு அழைத்து வந்து படுக்கையில் கிடத்திவிட்டு "டூ மினிட்ஸ் ஹனி" என்று பாத்ரூமினுள் சென்று தாழிட்டான். நடக்க ஆரம்பித்தான் குளியலரையினுள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்தான் கால் வலிக்கும்வரை நடந்தான், இறுக்கமான அவனது முகமும், சிவந்த கண்களும், சுட்டெரிக்கும் அவனது சுவாசமும், வேக மூச்சுக்களால் விரிந்து சுருங்கிய அவன் இதயக் கூடும் 'அவ்வப்பொழுது இறுகிய கை முஷ்டியும் அவனது கோபத்தை வெளிப்படுத்த, அங்கிருந்த கண்ணாடிகள் உடையாமலிருந்தது அவனது பொறுமைக்கும் நிதானத்திற்கும் எடுத்துக்காட்டாகின.



எத்தனை மணி நேரம் நடந்தானோ பாக்கெட்டிலிருந்த செல்போன் "டங்" என்று சத்தமெழுப்ப, அதனை எடுத்துப் பார்த்தவனின் கண்கள் சுறுங்கின. அது ஒரு யூடியூப் நோட்டிபிக்கேஷன் - பீயிங் கோளாருவின் புது வீடியோ பதிவேற்றப்பட்டிருப்பதற்கான அலாரம். ஏதோ ஒரு காண்டினன்டல் உணவு தயாரிக்கும் காணொலி.அதில் ஐஷ்வர்யாவின் கண்கள் சந்தோஷத்தில் மின்னியதை பார்த்த அவனது இதழ்கடையில் வெற்றி புன்னகை ஒன்று ஆழமாக அரும்பியது. தன் விரல்களால் மீசையை நீவி அந்த புன்னகையை அதனுள் மறைத்தான். குளியலறையிலிருந்து வெளியேறி கட்டிலையடைந்தவன் மட்டையாகி விட்டிருந்த தன்ஷிகாவின் மேலாடையையும் ஜூன்ஸ்சையும் அகற்றி போர்வை கொண்டு போர்த்திவிட்டான். தன் பாக்கெட்டிலிருந்த ஓர் துண்டு காகிதத்தை எடுத்து "லவ் யூ டார்லிங், நேரமாகிவிட்டதால் நான் கிளம்புகிறேன். இட் வாஸ் எ மெமரபிள் நைட் " என்று எழுதியவன் இதய வடிவத்தில் முற்றுப்புள்ளி வைத்திருந்தான். ஃபிளவர் வாஷிலிருந்து ஒரு ரோஜாவை அந்த லெட்டரின் மீது வைத்து அதனுடன் அவளது செல்பேசியையும் சேர்த்து டீபாயின் மீது வைத்துவிட்டு சத்தமில்லாமல் வெளியேறினான். போகிற போக்கில் ஓர் வேலையாளின் கண்களை அர்த்தத்துடன் சந்தித்து விட்டு சென்றான்.இனி அவன் பார்த்துக் கொள்வான்......
 
Messages
79
Reaction score
61
Points
18
வியூகம் - 13

ஜனனம் மருத்துவமனை.

டிரிங்....டிரிங்.... டாக்டர் சரளாவின் டேபிளில் இருந்த லேண்ட்லைன் சத்தமெழுப்பியது. எதிரில் இருந்த பேஷண்டிற்கான மருந்துகளை கம்ப்யூட்டரில் அடித்துக்கொண்டிருந்தவர் தன் இடது கையால் போனை எடுத்து காதில் வைத்து தன் தலையை சாய்த்து போன் நழுவி விடாமல் தோளில் அழுத்தி "ஹலோ" என்று வாய் பேச கைகள் மீண்டும் கீ போர்டில் தஞ்சம் புகுந்தன.



"எஸ் எஸ்... ஐ....சா த மெயில் "(நான் மின் அஞ்சலை பார்த்தேன்) "எஸ் டாக்டர் ஐ வில் பி தேர்" (நான் அங்கே இருப்பேன்)



"பை த வே, ஒய் இஸ் திஸ் மீட்டிங் கால்டு அப்ஆன்?" (எதற்காக இந்த மீட்டிங்)



"ஓ.கே. டாக்டர் லெட்ஸ் சீ. (சரி என்னவென்று பார்ப்போம்). பேசிக்கொண்டே பிரின்டரிலிருந்து வெளிவந்த பேப்பரை எடுத்து கை எழுத்திட்டு எதிரிலிருந்தவரிடம் நீட்ட, அதனை மரியாதையுடன் பெற்றுக் கொண்டு "தேங்க்யூ டாக்டர்" என்று சன்னமான குரலில் பேசி விட்டு சென்றவனுக்கு அந்த பேப்பரில் இருக்கும் பாதி மாத்திரை அவனுக்கு தேவையில்லாத மாத்திரை என்று தெரியாது பாவம். சிறு தலையசைப்பை மட்டும் பதிலாக கொடுத்து விட்டு தொலைபேசி பேச்சில் மூழ்கிப் போனார் டாக்டர் சரளா.



அந்த மீட்டிங் ஹால் முழுவதும் சேனிடைசரின் வாசத்தால் நிறைந்திருந்தது. அதாவது டாக்டர்களால் நிரம்பியிருந்தது என்று கூட சொல்லலாம். எல்லோரது முகத்திலும் சிறு அலுப்பு தென்பட்டது. எதற்காக இந்த மீட்டிங்? என்ற கேள்வி ஒரு புறமிருந்தாலும் பதில் ஓரளவு அனுமானிக்க முடிந்ததாகவே இருந்தது.. அவர்களை கொஞ்சநேரம் காக்க வைத்தபின் போர்ட் ஆப் டிரைக்டர்ஸ் குழுவிலிருந்து இரண்டு பேர் வேகமாக உள்ளே நுழைய பின்னோடு சீஃப் டாக்டர் சடகோபன் வந்தார். பரஸ்பரம்முகமன் தெரிவித்துக் கொண்டபன் சடகோபன் மைக்கில் தன் பேச்சை தொடங்கினார்.



"நம்முடைய ஹாஸ்பிடல் நேஷனல் லெவல்ல நம்பர் திரில இருக்கு. போன வருஷத்தோட மூன்று படி மேல ஏறி இருக்கோம், ஐ வாண்ட் கங்கிராஜுலேட் ஈச் அண்ட் எவிரி ஒன் ஃபார் திஸ் சக்ஸஸ்" என்று நிறுத்தினார்.



அங்கே மெல்லிய கரகோஷம் ஒன்று எழுந்து மறைந்தது. சோநெக்ஸ்ட் நம்மளோட டார்கெட் நம்பர் ஒன் பொசிஷன்தான். நாம எல்லோரும் சேர்ந்து அதுக்கு பாடுபடனும்.



ப்ரொஜக்டர் இயக்கப்பட்டது. அதில் போடப்பட்ட ஸ்லைட்ஸ் எதுவும் நோயாளியை பற்றியதோ அல்லது நோயை பற்றியதோ இல்லை. அவர்களது மருத்துவமனையின் வருவாய் கணக்கு மட்டுமே அங்கு காட்டப்பட்டது.



தங்களது வருமானத்தை எப்படி கூட்டுவதுஎன்கின்ற கேள்வி எழுப்பப்பட்டு அதற்கு பலரது யோசனையும் கம்யூட்டரில் ஏற்றப்பட்டது. இறுதியாக அந்த அதிநவீன ஸ்கேனரை பற்றி பேசிய சடகோபன்,

இதற்கான மந்திலி டார்கெட் ஒரு கோடி பட் இது இனிஷியல் டார்கெட் தான். ஸ்டார்டிங் ஸ்டேஜ் , இதை வைத்து நம்மளால ஸ்கேனரோட லோன் அமெளண்ட்டோட இன்டரஸ்ட் மட்டும்தான் கட்ட முடியும். சோவி ஹேவ் டு மூவ் ஆன்." என்று கூறி சில நொடிகள் நிறுத்தினார் கூட்டத்தில் யாரும் எதுவும் பேசாமல் அமைதி காக்க "ஓ.கே டாக்டர்ஸ் விகேன் டிஸ்பர்ஸ் நவ்'குட்டே" முடித்துக் கொண்டு அவரது குழுவுடன் வெளியேரினார் சடகோபன்.



*****************

நவின் மும்பை.....
குஷி மருத்துவமணை ....




ஓயாமல் மழை பெய்து கொண்டே இருந்தது அதில் அந்த கட்டிடமே நசநசத்தது.உள்ளே இரண்டு வெள்ளை கோட்டுக்கள் பேசிக்கொண்டிருந்தது. "ஹே....ஏ.... கியா டார்கட் கா சோர்மசாரகாஹ், முஜே ஏசப் நகி ஹோகா" ( இது என்னடா கருமம் புடிச்ச டார்கெட்டு டார்கெட்டுன்னு கடுப்பேத்தராங்க, என்னால முடியாதுப்பா) எரிச்சலுடன் ஒருவன் பேச “அட விடுப்பா இது மழை காலம், வியாதிகள் தானா வரும் நம்மளோட வேலை ,எல்லாருக்கும் ஸ்கேன் ரிப்போர்ட் வேணும்னு எழுதி கொடுக்கனும் அவ்ளோதான் என்றான் இன்னொருவன் கூலாக.



"ஏ.....கலத் " ( இது தப்பு) என்றான் முந்தயவன்.



“இது பணத்தை மட்டுமே மையமாக கொண்ட உலகம் சரி தவறை யார் பார்பது? வாப்பா சூடா டீ குடிக்கலாம் இந்த மழைக்கு அருமையா இருக்கும்” என்று கருத்து சொல்லிவிட்டு முன்னவனின் தோள் மீது கை போட்டு கேண்டினை நோக்கி நடந்தான் பின்னவன்.



****************

நல்லிரவு ஒரு மணி-


தொலைபேசி அழைக்க ஒரே ரிங்கில் எடுத்து காதுக்கு கொடுத்தான் விஷ்ணு.


"எதிரியோட பலம் அதிகமாகி கிட்டே இருக்கு, மிஷன் ‘எம்’ யை எந்த பிசிரும் இல்லாம கச்சிதமா முடிக்கனும்"- நிதானமாகவும் அதே நேரம் அழுத்தமாகவும் பேசியது எதிர்முனை.


"ம்....தெரியும் நம்மளோட மிஷன் குறிப்பிட்ட தேதில சரியா நடக்கும்”, தன்னம்பிக்கை யோடு பேசியவன் தொடர்ந்து "மற்ற இடங்களின் தகவல்?" என்ற கேள்வி எழுப்ப


"எல்லாம் சரியா போகுது, நீ முடிச்சிட்டு பச்சை கொடி காட்டிட்டா அப்படியே செயின் ரியாக்ஷன் மாதிரி எல்லா இடங்கள்ளயும் அடுத்தடுத்து அறங்கேற்றப்படும்” என்றது எதிர்முனை.


“ஒ.கே” - விஷ்ணு


"யாழினியை எப்போ அனுப்பட்டும்?" எதிர்முனையின் குரலில் மாற்றமிருந்தது


உடல் விறைப்புற "நான் சொல்லும்பொழுது " என்றான்


“சரி, சிரியாவிலும், ஹாங்காங்கிலும் இருக்கும் நம் ஆட்களை தொடர்பு கொள்ள முடியவில்லை,"


"கவலை வேண்டாம் எனக்கு தகவல் வந்து கிட்டு தான் இருக்கு, மிஷன் எம் முடிஞ்சதும் பொதுக் கூட்டம் இருக்கே. அப்போ விளக்கமா சொல்றேன். எல்லாம் சரியாகவே போய்கிட்டு இருக்கு, வேற?" கேள்வியோடு விஷ்ணு முடிக்க


"நல்லது" என்று எதிர்முனை தொடர்பை துண்டித்தது.


தண்ணீர் குடித்து விட்டு படுக்கையில் விழுந்தவன் வாட்ஸ் ஆப்பை ஒருமுறை பார்வையிட்டான், பல குரூப்கள் இருந்தன எல்லாவற்றிலும் ஃபார்வேர்ட் செய்யப்பட்ட செய்திகள் மற்றும் மீம்ஸ் அணைத்தையும் ஒன்று விடாமல் படித்தான். அப்படி பார்த்துக் கொண்டே வந்தவன் ஐஸ்வர்யாவின் பெயரில் "டைபிங்.....” என்று காட்ட துணுக்குற்றான்.


'இன்னும் தூங்காம இவ என்ன பன்றா?’என்ற கேள்வி யோடு அவளது Chatடினுள் சென்றவன் அவள் இந்த நேரத்தில் தனக்காக என்ன டைப் செய்கிறாள் என்று பொருத்திருந்து பார்த்தான். ஆனால் ஒரு மூன்று நிமிடத்திற்கு மேலாக டைப் செய்யப்படுவது மட்டுமே காட்டியது ஆனால் எதுவும் சென்ட் ஆகவில்லை. பொறுமையை இழந்தவனாக "ஹேய் ஸ்டில் அவேக்?"


(இன்னுமா முழிச்சிருக்க?) என்ற குறிப்பை அனுப்பி அவனே பேச்சை ஆரம்பித்தான். "ம் .... எஸ்" "தூக்கம் வரலை?" இல்லை ஏன்? தெரியல சரி என்ன டைப் பன்னிகிட்டு இருந்த? எதுவுமில்லையே "ஓ....அப்படியா......சரி நாளை ஃபிரஷ் ஜூஸ் பார், ஈவினிங் 4:00 மீட் பன்னலாமா?" சில நிமிடங்கள் அமைதிக்கு பின் "ஓ.கே" என்ற வாசகத்தோடு வெட்கப்படும் ஸ்மைலியும் வந்தது. இதை இதைத்தானே அவன் எதிர்பார்த்தான். வெண்ணை திரண்டு விட்டது சரியாக எடுத்து விட வேண்டும். என்று நினைத்தவன் சரிக்கும் ஸ்மைலியுடன் "குட் நைட்" மெசேஜைபோட்டு விட்டு படுத்தான். படுத்தவனுள் தன் திட்டத்தை அமலாக்க தான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் எனும் பட்டியல் நீண்டு விரிந்தது. அங்கே ஐஸ்வர்யாவோ நாளை அவனை பார்க்கப் போகும் சந்தோஷத்தில் தலையனையை இருக்கி பிடித்து தூங்களாலாள், பற்பல கனவுகளுடன்.
 

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom