Thank you sister🙏😍Super
மிகமிக சுவாரஸ்யமாகவும் திரில்லாகவும் போகிறதது அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன் வெகு ஆவலாய்எண்ணங்களே வண்ணங்களாய்...
அத்தியாயம் 20
நாற்காலியின் மீது ஏறி அலமாரியில் புத்தக்கத்தை வைத்து விட்டு கீழே இறங்கினாள் சாரு.
ஏன் இவ்வளவு சிரமப்பட்டு புத்தகத்ததை வைக்கிறீங்க? சேர்ல ஏறி புக்க வைக்கிறேனு போய் கீழ விழுந்துட்டீங்கனா என்ன பண்ணுறது? ஏங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருந்தா நான் வச்சுருப்பேன்ல என்று சந்துரு கூறியதும், விழுந்தால் என்னங்க சந்துரு? என்னை தாங்கி பிடிக்கத்தான் நீங்க இருக்கீங்களே! நல்லா தான் அக்கறை காட்டுறீங்க.ஆனால் உங்க மனசுல நினைக்கிறதை மட்டும் ஏங்கிட்ட சொல்லாதீங்க.
நான் உங்களை விரும்புவது மாதிரி நீங்களும் என் மேல ரொம்ப அன்பு வச்சுருக்கீங்கனு, அன்னைக்கு நான் கையில அடிப்பட்டு மயங்கி உங்க மடியில் படுத்திருக்கும் போது நீங்க துடித்த துடிப்பும், என் முகத்தில் விட்ட கண்ணீரும் எல்லாமே எனக்கு தெரியும்.மயக்கத்துல இருந்தாலும் நீங்க பேசுனது எல்லாமே என் காதுல விழுந்ததுங்க.
இவ்வளவு பாசத்தையும் மனசுகுள்ள வச்சுக்கிட்டு வெளியே எதுவுமே காட்டிக்கொள்ளாமல், சிடிரிக்ட் ஆபிஸர் மாதிரி ஏன் நடிக்கிறீங்க சந்துரு? என்று சந்துருவின் கண்களை இமைக்காமல் பார்த்துக்கொண்டே வழக்கம் போல நேரடியாக பேசாமல் மனதிலே சந்துருவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
ஏங்க உங்கக்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன்.ஹலோ! இங்க தான் இருக்கீங்களா? என்று சந்தரு தனது கையை சாருவின் கண்களின் முன் கொண்டு சென்று கை அசைத்த பிறகு தான் சுயநினைவுக்கு வந்தாள் சாரு.
எதாவது தூக்கனும் வைக்கனும்னா என்னை கூப்பிடுங்கள் என்று சந்துரு கூறினான்.
ம்ம்...சரிங்க என்று சொன்னாள் சாரு.
அம்மா சாரு! சாரு! என்று ஜானகி அம்மா சாருவை கீழே இருந்து அழைத்துக் கொண்டிருந்தார்.
மாமியரின் குரல் கேட்டதும் மின்னல் வேகத்தில் கீழே இறங்கி வந்தாள் சாரு.
என்னங்க அத்தை ஜோசியரை பார்த்துட்டு வந்துட்டீங்களா? என்று கேட்டாள் சாரு.
ஆமாம் சாரு.அடுத்த வாரம் புதன்கிழமை காலை பத்து மணிக்கு நல்ல நேரமாக இருக்குதாம்.அன்னைக்கே நிச்சயதார்த்தம் வச்சுக்க சொல்லி ஜோசியர் நாள் குறிச்சு கொடுத்திருக்காருமா என்று கூறினார் ஜானகி அம்மா.
நான் பானுவோட அப்பா அம்மாக்கிட்டையும் கலந்து பேசிட்டேன்.பானுவோட அண்ணன் வீட்டுக்கு போய்ட்டு அப்படியே டவுனுக்கு போய் நிச்சயதார்த்த புடவையும் மோதிரமும் வாங்கிட்டு வந்திருவோம் சாரு.இன்னைக்கு நல்ல முகூர்த்த நாளாக இருக்கும்மா சாரு என்றதும், சரிங்க அத்தை... நானும் பானுக்கு போன் பண்ணி அவளோட மோதிரத்தோட சைஸ் என்னனு கேட்டு சொல்லுறேன் அத்தை என்றாள் சாரு.
சரிம்மா...சந்துருவை கொஞ்சம் கூப்பிடும்மா என்றார் ஜானகி அம்மா.
அறைக்கு சென்று சந்துருவை அழைத்துக் கொண்டு கீழே வந்தாள் சாரு.
கல்யாண மண்டம் புக் பண்ணிட்டியா சந்துரு? என்று கேட்டார் ஜானகி அம்மா.
மண்டபம், கேட்டரிங், நிச்சயதார்த்த மாலை எல்லாமே புக் பண்ணி அட்வான்ஸ் கொடுத்துட்டேன்ம்மா என்று கூறினான் சந்துரு.
சரிப்பா சீக்கிரம் எல்லாரும் கிளம்புங்க என்று கூறினார் ஜானகி அம்மா.
ஏங்க ஒரு மாதிரி இருக்கீங்க? என்னமோ ஆழமாக யோசிக்கிற மாதிரி தெரியுது என்று தனது கணவரிடம் கேட்டார் பங்கஜம்.
ஆமாம் பங்கஜம்...நம்ம பையன் இப்படி மாறிருவானு ஒரு நாள் கூட நினைத்து பார்த்ததே இல்லை.
நம்ம கண்ணு முன்னாடியே பானுவை இப்படி பேசிட்டு போறான்.நமக்கு பிறகு நம்ம பொண்ண இவன் எப்படி பார்ப்பான்? மாப்பிள்ளை நல்ல பையனா அமைந்ததுனால பானுவை குறித்து பயப்பட வேண்டியது இல்லை.
இருந்தாலும் வீட்டுக்கு மூத்த பையனா பொறுப்பா இருந்து அவன் தான பானுவோட கல்யாணத்தை முன்னிருந்து நடத்தனும் என்று தன்னுடைய மனவேதனையை மனைவியிடம் கூறிக்கொண்டிருந்தார் கனகராஜ்.
பரத் நம்ம வளர்த்த பையன்ங்க.ஒரு நாள் கண்டிப்பா திருந்தி வருவான்.நீங்க தேவையில்லாமல் எதையாவது நினைத்து கவலைப்படுவதை விட்டுட்டு பானுவோட நிச்சயதார்த்தத்திற்கு ஆக வேண்டிய வேலையை பாருங்க என்று கூறினார் பங்கஜம்.
சரி பங்கஜம்...நிச்சயதார்த்த செலவுக்கு தேவையான பணத்தை பேங்க்ல போய் எடுக்க வேண்டியது இருக்கு.நான் பேங்க் வரைக்கும் போய்ட்டு வந்திர்றேன் பங்கஜம் என்று கூறிவிட்டு கிளம்பிச் சென்றார் கனகராஜ்.
கனகராஜ் கிளம்பியதும் தனது அறைக்கு சென்று சுவற்றில் மாட்டியிருந்த பரத்தின் போட்டோவை கையில் எடுத்துக்கொண்டு, ஏன் பரத் இப்படி எங்களை தனியாக தவிக்க விட்டுட்டு போயிட்டப்பா? நான் உன்னை நல்லா தானேடா வளர்த்தேன்.கடைசி காலத்துல நம்ம பிள்ளை நம்மள நல்லா பார்ப்பானு உங்க அப்பாட்ட ஓயாமல் சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டனே! எங்க நம்பிக்கையை எல்லாம் சுக்குநூறாக உடைச்சுட்டு போய்ட்டியேடா பரத் என்று போட்டோவை பார்த்து கதறி அழுது கொண்டிருந்தார்.
அம்மா அழும் குரல் கேட்டு பானுவின் அம்மா அறைக்கு சென்று பார்த்தாள் பானு.
அப்பாவிடம் தைரியமாக பேசிட்டு கடைசி நீங்களே இப்படி அழலாமா அம்மா? என்று கேட்டாள் பானு.
அந்த மனுஷன் ஏற்கனவே நொந்து போய் இருக்காரு பானு.பத்தாத குறைக்கு நானும் சேர்ந்து அழுதனா மனசு உடைஞ்சு போயிருவாரு பானு என்று கூறிவிட்டு மகளை கட்டிப்பிடித்து அழுதார் பங்கஜம்.
சரிம்மா அழாதீங்க... நீங்க வேணும்னா பாருங்க.என் நிச்சயதார்த்தத்தையே அண்ணன் தான் முன் நின்று நடத்துவாங்க பாருங்க என்று நம்பிக்கையுடன் கூறினாள் பானு.
அப்படி நடந்த ரொம்ப சந்தோஷமாக இருக்கும் பானு என்று கூறினார் பங்கஜம்.
சந்துருவின் குடும்பத்தில் உள்ள அனைவரும் கிளம்பி காரில் ஏறி பரத்தை காண்பதற்கு புறப்பட்டு சென்றார்கள்.
அம்மா! மனோஜ் முகத்துல கல்யாண கலை வந்திருச்சு பார்த்தீங்களமா? என்று சிரித்துக்கொண்டே ஜானகி அம்மாவிடம் கூறினான் சந்துரு.
எப்போதும் எதிர்ப்பேச்சு பேசும் மனோஜ், வெட்கத்தில் எதுவும் பதில் பேசாமல் அமைதியாக சிரித்துக்
கொண்டே காரை ஓட்டினான்.
பார்கவி வீட்டின் வாசலில் கார் வந்து நிற்பதை மாடியிலிருந்து பார்த்த சோமசுந்தரம் கீழே இறங்கி வந்தார்.
வீட்டிற்கு வந்தவர்களை உள்ளே வரவேற்று ஷோபாவில் உட்கார சொன்னார்.
சோமசுந்தரத்தின் மகன் பாபுவும் வந்து அவர்களை குறித்து விசாரித்துவிட்டு பேசிக் கொண்டிருந்தான்.
ருத்ரா! எல்லாருக்கும் குடிக்க காபி கொண்டு வாமா என்று தனது மனைவியிடம் மரியாையாக கூறுவதை கண்டு சாரு ஆச்சரியப்பட்டாள்.
பானு பல முறை அவளது அண்ணி பார்கவியை பற்றி கூறியிருக்கிறாள்.
ஆனால் பார்க்கவியின் அப்பா, அண்ணன் அண்ணி எல்லாரையும் பார்த்த ரொம்ப சாதுவாக இருக்காங்களே! பார்கவி குணத்துக்கு அப்படியே எதிர்மறையாக இருக்காங்களே! என்று மனதில் நினைத்து ஆச்சரியப்பட்டு அவர்களை பார்த்து சந்தோஷப்பட்டாள் சாரு.
நீங்க எல்லாரும் பேசிக்கிட்டு இருங்க.நான் மச்சானை கூப்பிட்டு வர்றேன் என்று கூறிவிட்டு பரத்தை அழைக்க மாடியில் உள்ள அறைக்கு சென்றான் பாபு.
மாடியிலிருந்து கீழே பரத் இறங்கி வருவதை பார்த்த சோமசுந்தரம், மருமகன் வந்தவுங்கள்ட்ட எப்படி பேசுவாருனு தெரியலையே! என்று பரத்தை நினைத்து பயந்து கொண்டிருந்தார்.
கீழே வந்த பரத் அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு
மரியாதையுடன் பேசிக் கொண்டிருந்தான்.
ஜானகி அம்மா பேசுவதற்கு முன்பே எந்த குறையும் இல்லாமல் எங்களால் முடிந்த அளவுக்கு பானுக்கு நகை போட்டு சீரும் சிறப்புமாக நல்ல படியாக கல்யாணத்தை முடிக்க ஏற்பாடு செய்கிறோம்மா என்று பரத் கூறுவதை கேட்டதும் பார்கவி வீட்டில் இருந்தவர்களும் ஜானகி அம்மாவின் குடும்பத்தாரும் பரத் பேசுவதை கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தனர்.
சோமசுந்தரம் கண்ணாடியை கழற்றி நன்கு துடைத்து விட்டு மீண்டும் பரத் பேசுவதை உற்றுப்பார்த்தார்.
இது கனவா? நிஜமா? பேசுறது நம்ம மாப்பிள்ளை தானா என்று வியப்புடன் பரத் பேசுவதை பார்த்துக்
கொண்டிருந்தார்.
மனோஜின் கையை குழுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்தான் பரத்.
சந்துருவின் குடும்பத்தினர் அனைவரும் நிச்சயதார்த்தத்திற்கு நீங்கள் அனைவரும் குடும்பத்தோடு வந்து மணமக்களை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள்.
அவர்கள் கிளம்பியதும் தலையில் கையை வைத்து உட்கார்ந்து விட்டான் பரத்.
சந்துருவின் கார் கிளம்பியதும் பார்கவியின் வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நின்றது.
பார்கவியும் அவளது அம்மா சரோஜாவும் ஆட்டோவிலிருந்து இறங்கினார்கள்.வீட்டிற்குள் வந்ததும் யாருப்பா காருல வந்துட்டு போறது? என்று கேட்டதும் பானுவோட வருங்கால கணவர் மனோஜூ்ம் அவருடைய குடும்பத்தாரும் வந்திருந்தாங்க என்றார் சோமசுந்தரம்.
பரத் தலையில் கை வைத்திருப்பதை பார்த்த பார்கவி, நான் வீட்டுல இல்லாத நேரமா பார்த்து என் வீட்டுக்காரரை வீடு தேடி வந்து அவமானப்படுத்திட்டு போக ஆள் அனுப்பி வச்சுருக்காங்களா?
ஒரு கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு வரதுகுள்ள இவ்வளவு நடந்திருச்சா.
நீங்க எதுக்குங்க தலையில கைவச்சுட்டு உட்கார்ந்து இருக்கீங்க.
வாங்க உங்க வீட்டுக்கு போய் நாலு வார்த்தை நாக்க புடுங்குற மாதிரி கேட்டா தான் அவுங்க அடங்குவாங்க என்று பார்கவி கூறியவுடன் பார்கவியின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைந்தான் பரத்.
இதுக்கு மேல ஒரு வார்த்தை எதாவது வாயை திறந்து பேசுனா செவுளு பேந்துரும் பார்த்துக்கோ! என்று கூறியதும் எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள் பார்கவி.
பார்கவியின் வீட்டில் நடந்ததையும் பரத் தனக்கு வாழ்த்துக்கள் சொல்லியதையும் சந்தோஷத்துடன் பானுவிற்கு கால் செய்து தகவல் சொன்னான் மனோஜ்.
பானு உடனே அவளுடைய அப்பா அம்மாவிடம் சென்று பரத் மனோஜிடம் பேசியதையும் அங்கு நடந்ததையும் சொன்னவுடன், நீ சொல்லுறத நம்பவே முடியலமா பானு! என்று கூறினார் கனகராஜ்.
பொறுத்திருந்து பார்ப்போம் பானு.
அவசரப்பட்டு சந்தோஷப்பட வேண்டாம்!
புயலுக்கு முன் அமைதியாக கூட இருக்கலாம் என்று கூறினார் பானுவின் அம்மா.
பார்கவி வீட்டிலிருந்து புறப்பட்டு டவுனுக்கு போகும் வழியில் பரத் நடந்து கொண்ட விதம் குறித்து பேசிக்கொண்டு வந்தனர்.
என்னம்மா சாரு? பானு அண்ணன் பேசுன விதத்தை பார்த்தால், நீ சொன்ன மாதிரி அவுங்க குடும்பத்தில பிரச்சனை நடந்தது மாதிரியே தெரியலமா என்று கூறினார் ஜானகி அம்மா.
அதுதான் அத்தை எனக்கும் ஒன்னும் புரியல.சரி எப்படியோமா பானு மனோஜ் நிச்சயதார்த்தம் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் நல்ல படியாக நடந்தால் போதும்மா சாரு என்று கூறினார் ஜானகி அம்மா.
அனைவரும் ஜவுளி கடைக்கு வந்து இறங்கினார்கள்.ஜானகி அம்மாவும் சாருவும் சேலை பார்க்க தொடங்கினார்கள்.
என்னப்பா புதுமாப்பிள்ளை! பானுக்கு எந்த கலர் பிடிக்கும்? என்று கேட்டார் ஜானகி அம்மா.
அம்மா! அதுவந்து என்று இழுத்ததும்...சும்மா சொல்லுப்பா மனோஜ் என்றார் ஜானகி அம்மா.அவளுக்கு நீல நிறம் தான் பிடிக்கும் என்று பதில் கூறினான் மனோஜ்.
சரிப்பா மனோஜ்! நீயே வந்து உன் வருங்கால மனைவிக்கு சேலையை செலக்ட் செய்ப்பா என்றதும் மனோஜ் கொஞ்சம் வெட்கப்பட்டு தயங்கினான்.
சும்மா நடிக்காதடா மனோஜ்! சீக்கிரம் வந்து சேலையை செலக்ட் செய் என்று சந்துரு கூறியதை பார்த்த சாரு, இவர் இப்படிலாம் ஜாலியாக பேசுவாரா? என்று முதன் முறையாக சந்துரு நக்கலடித்து சிரித்து பேசுவதை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் சாரு.
ஐந்து நிமிஷத்தில் மனதிலே பானுவிற்கு சேலையை கட்டி பார்த்து இந்த சேலை பானுவிற்கு நல்லா இருக்கும்லம்மா என்று ஜானகி அம்மாவிடம் ஒரு சேலையை எடுத்துக்கொண்டு போய் காட்டினான் மனோஜ்.
வாவ் சூப்பரா இருக்கு அண்ணா! என்று கூறினாள் சாரு.நாங்க கூட இவ்வளவு பாஸ்ட்டா சூப்பரா செலக்ட் பண்ண மாட்டோம் அண்ணா.பானுக்கு இந்த சேலை ரொம்ப அழகாக இருக்கும் என்று மனோஜிடம் கூறினாள் சாரு.
எல்லாம் "காதல் செய்யும் மாயம்" சாரு என்று ஜானகி அம்மாவும் சேர்ந்து மனோஜை கேலி செய்து சிரிக்கத்தொடங்கினார்.
நாங்கள் பக்கத்துல இருக்கும் நகைக்கடைக்கு போய் மோதிரம் பார்த்துக்கிட்டு இருக்கோம் சந்துரு.நீ சீக்கிரமா பில் பே பண்ணிட்டு வந்திருப்பா என்று கூறிவிட்டு சாருவையும் மனோஜையும் அழைத்துக் கொண்டு நகைக்கடைக்கு சென்றார் ஜானகி அம்மா.
மோதிரம் செலக்ட் பண்ணி முடித்து பில் போடும் நேரத்திற்கு தான் வந்தான் சந்துரு.பில் பே செஞ்சுட்டு வர்ற இவ்வளவு நேரமா சந்துரு? நாங்க மோதிரமே செலக்ட் பண்ணி முடுச்சிட்டோம்.இல்லம்மா அது வந்து என்று இழுக்க தொடங்கியதும்...சரி... சரி…நீயும் ஒரு முறை மோதிரத்தை பார்த்து நல்லா இருக்கானு சொல்லுப்பா என்று கேட்டார் ஜானகி அம்மா.
மனோஜ்க்கு ஓகேனா எனக்கும் ஓகே தான்ம்மா என்றான்.மனோஜை பார்த்து புருவத்தை தூக்கிக்கொண்டு ஜாடையிலே மோதிரம் சூப்பர் என்று கூறினான் சந்துரு.இங்க வா சந்துரு! நீயும் சாருவும் சேர்ந்து மோதிரத்தை கையில வாங்கிக்கோங்க என்று கூறினார் ஜானகி அம்மா.
நகைக்கடை முதலாளி சாமியின் முன் மோதிரம் உள்ள டப்பாவை பூ போட்டு வைத்து கும்பிட்டு நிச்சயதார்த்த மோதிரத்தை கொடுக்க சந்துருவும் சாருவும் சேர்ந்து மோதிரத்தை பெற்று கொண்டு வீட்டிற்கு கிளம்பினார்கள்.
பரத்தின் திடீர் மனமாற்றத்திற்கு காரணம் என்ன? என்ன நடந்திருக்கும்? பானு நினைத்தது போல பரத்தின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடக்குமா? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்...
- தொடரும் -
* * * * * * * * * * * * * *
இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
தங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி அம்மா🙏😍மிகமிக சுவாரஸ்யமாகவும் திரில்லாகவும் போகிறதது அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன் வெகு ஆவலாய்
Thank you sister😍🙏பரத் இன்னும் ரெண்டு அறை கொடுத்திருக்கனும் பார்கவிக்கு....nice sis
சொல்ல வார்த்தைகளே இல்லை விறுவிறுப்பு கூடிக்கொண்டே போகிறது. அருமையான அருமைம்மாஎண்ணங்களே வண்ணங்களாய்...
அத்தியாயம் 21
என்னைக்கும் இல்லாம இன்னைக்கு மட்டும் என்ன மாப்பிள்ளை புதுசா கை ஓங்குறீங்க? இப்போ பார்கவி என்ன சொல்லிட்டானு அவளை தேவையில்லாமல் அடிச்சீங்க.
பெத்தவுங்க நாங்க இருக்கும் போது எங்க கண் முன்னாடியே எங்க பொண்ண எப்படி நீங்கள் அறையலாம்? என்று கேட்டார் பரத்தின் மாமியார் சரோஜா.
ஒரு அறையோட விட்டேனு சந்தோஷப்படுங்கள்.எல்லாத்துக்கும் மூலக்காரணமே நீங்கள் தான் அத்தை.
மாமா! அத்தையை இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம்னு சொல்லுங்கள் என்று கூறினான் பரத்.
எதுக்கு நான் பேசக்கூடாதுனு சொல்லுறீங்க மாப்பிள்ள? என் வீட்டில இருந்துக்கிட்டு சொந்த மாமியாருனு கூட பார்க்காமல் மரியாதை இல்லாமல் என்னையவே சத்தம் போட்டு பேசுறீங்க என்றதும், வேகமாக மாடிக்கு சென்று கையில் சூட்கேஸை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி வந்தான்.
மாப்பிள்ள சூட்கேஸ் எடுத்துக்கிட்டு எங்க போறீங்க? என்று கேட்டார் சோமசுந்தரம்.
எங்க வீட்டுக்கு தான் மாமா.இனி நான் இங்க இருந்தேனா அது எனக்கு மரியாதை இல்ல மாமா என்று கூறினான் பரத்.
என்னாச்சு மாப்பிள? பார்கவி என்ன தப்பு பண்ணுனானு சொல்லுங்க மாப்பிள.எதுனாலும் பேசி தீர்த்துக்குலாம் என்று சோமசுந்தரம் கூறியதும், உங்க மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? பெத்த பொண்ண நம்ம கண் முன்னாடி அடிச்சுட்டு நிக்கிராரு.ஏன் அடிச்சீங்கனு கேட்காமல் அதை விட்டுட்டு பார்கவி என்ன தப்பு செஞ்சானு கேட்கிறீங்க? என்று பார்கவியின் அப்பாவிடம் சீறிக்கொண்டு கோபமாக பேசினார் சரோஜா.
அம்மா! கொஞ்சம் நேரம் பேசாமல் அமைதியாக இருங்க என்று பாபு கூறினான்.
மச்சான்! என்ன பிரச்சனைனு? நீங்கள் சொன்னா தான எங்களுக்கு தெரியும் என்று பரத்திடம் கேட்டான் பாபு.
வேகமாக பார்கவியின் மொபைலை ஆன் செய்து வாய்ஸ் ரெக்காடரை அனைவருக்கும் போட்டுக்காட்டினான் பரத்.
பார்கவியும், சரோஜாவும் பரத் குடும்பத்தை பத்தி பேசியது பதிவாகியிருந்தது.
பார்கவி கோவிலுக்கு போகும் போது மொபைலை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டு சென்றுவிட்டாள்.அந்த சமயம் பார்த்து, பரத்தின் மகள் சிவானி அப்பா! நேற்று அம்மா மொபைல்ல ஹோம் ஒர்க் படிச்சு வாய்ஸ் ரெக்கார்டு பண்ணிருந்தேன்.அதை எடுத்து மிஸ் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கனும்.கொஞ்சம் எடுத்து தாங்க என்று பரத்திடம் கொடுத்திருக்கிறாள்.
நேற்றைய தேதியிலிருந்த வாய்ஸ் ரெக்கார்டரை போட்டு பார்த்தாள் பார்கவியும் சரோஜாவும் அவரு இனி அந்த வீட்டுப்பக்கமே போகாத மாதிரி பிரச்சனையை பெருசாக்கிட்டேன் அம்மா.உங்க மாப்பிள்ள சரியான மாங்க மடையன்ம்மா.நான் சொல்லுறது தான் வேத வாக்கா நம்பிக்கிட்டு இருக்காரு என்று அவள் பேசியதும், இதே மாதிரி எப்போதும் உன் புருஷனை கைக்குள்ள போட்டு வச்சுக்கோ பார்கவி! அதுதான் உனக்கு நல்லது என்று சரோஜா பேசியிருந்ததும் பதிவாகியிருந்தது.
உங்க பொண்ண எதுக்கு அடிச்சேனு இப்போ புரியுதாங்க.இந்த ஆதாரம் போதுமாங்க? என்று தனது மாமியாரை பார்த்து பரத் கேட்டதும், எதுவும் பேச முடியாமல் தலையை குனிந்து கொண்டார் சரோஜா.
என்னங்க... அது வந்து என்று பார்கவி பேச ஆரம்பிக்கும் போது, அம்மா தாயே! இனி நீ எதுவும் பேச வேண்டாம்.
நீ சொன்ன மாதிரி நான் மாங்கா மடையன் தான்.
உனக்கு என்னடி நான் குறைவச்சேன்? நீ ஆசைப்பட்டது எல்லாம் செஞ்சேன்லடி.நீ ஆசைப்படுறதுனால தான வயசான என் அப்பா அம்மாவை விட்டுட்டு உன் வீட்டில வந்து இருக்க சம்மதிச்சேன்.
ஆனால் நீ எனக்கு பதிலுக்கு நல்ல கைமாறு பண்ணிட்டமா தாயே! இல்லாத பொல்லாத நாடகம் போட்டு என் குடும்பத்தை ஏங்கிட்ட இருந்து அநியாயமா பிரிச்சுட்டியேடி பாவி! என்று அக்ரோசமாக பேசினான் பரத்.
சின்ன பிள்ளைய பக்கத்துல வச்சுட்டு பேச்சாடி நீ பேசிருக்க?
உன்னோட நான் வாழ்ந்ததெல்லாம் போதும்.அடுத்த வாரம் டைவர்ஸ் நோட்டீஸ் வரும் என்று கூறிவிட்டு பிள்ளையை தூக்கிக்கொண்டு பார்கவியின் வீட்டை விட்டு கிளம்பிச் சென்றான் பரத்.
மாப்பிள ஒரு நிமிஷம் நான் சொல்லுறத கேளுங்கள்! என்று சோமசுந்தரமும், மச்சான்! மச்சான்! கொஞ்சம் நில்லுங்கள்! என்று பாபுவும் பரத் பின்னாடியே அவனை கூப்பிட்டு கொண்டே வீட்டின் வாசல் வரை சென்றனர்.
அவர்கள் கூப்பிடுவதை சிறிது கூட காதில் வாங்கி கொள்ளாமல் ஆட்டோவில் ஏறி தன்னுடைய வீட்டிற்கு குழந்தையுடன் சென்றான் பரத்.
பார்கவி தலையில் அடித்து அழுது கொண்டிருந்தாள்.
அழுங்க! இரண்டு பேரும் சேர்ந்து நல்லா சுவத்துல போய் முட்டிக்கிட்டு அழுங்க! ஆரம்பத்துல இருந்தே படிச்சு படிச்சு உங்கிட்ட சொன்னேன்.
கேட்டியாடி நீ? என்று சரோஜாவை பார்த்து திட்டினார் சோமசுந்தரம்.
நம்ம பொண்ணு சந்தோஷமா இருக்கனும் நினைச்சு தானங்க.
அவளை இங்க இருக்க வச்சேன்! என்று கூறினார் சரோஜா.
ஓ அப்படியா! சரி, அப்போ ஒன்னு பண்ணுவோம்.நாளைக்கே பாபுவையும் ருத்ராவையும் ருத்ராவோட வீட்டுக்கு அனுப்பி வச்சிருவோம்.ருத்ரா அவுங்க வீட்டில போய் நம்ம பிள்ளையோட சந்தோஷமாக இருக்கட்டும் என்றதும், அது எப்படிங்க? நம்ம பையனை போய் அவுங்க வீட்ல இருக்க சொல்லுறீங்க என்று கேட்டார் சரோஜா.
நமக்காவது இரண்டு பிள்ளைங்க.நம்ம சம்பந்திக்கு ருத்ரா ஒரே பொண்ணு.
அது மட்டுமில்லாமல் அவுங்க வீட்டில எல்லாத்துக்கும் வேலைக்கு ஆள் வச்சுருக்ககாங்க.ருத்ரா, நம்ம பார்கவியை விட அதிகமான மேற்ப்படிப்பு படிச்சு வேலைப்பார்த்து கை நிறைய சம்பாதித்த பொண்ணு.
அப்படிலாம் சொகுசா பிறந்து வளர்ந்த பொண்ணு, நமக்காக வேலையை விட்டுட்டு குடும்பம் தான் முக்கியம்னு எல்லா வீட்டு வேலையையும் ஆளே இல்லாமல் தனியாக சமாளிச்சு வீட்டையும் பார்த்து நம்மளையும் பார்த்துக்கிறாள்.
நீ என்னடானா! உலகத்துல யாருமே பார்க்காத வேலையை அவள் மாமியார் உன் மகளை பார்க்க சொன்ன மாதிரி பெருசா பேசுற.
சந்தோஷத்துக்கு அர்த்தம் தெரியாமல், நீ கெட்டதும் இல்லாம அவளையும் கெடுத்து பார்கவி வாழ்க்கைய வீணாக்கிட்டு இப்போ அழுது புலம்பிக்கிட்டு இருக்கீங்க.
அம்மா பார்கவி! என்னடா அப்பா நம்மள அண்ணியோட கம்பேர் பண்ணி சொல்லுறாருனு தப்பா நினைக்காதமா.
குடும்பம்னா கூட குறைய இருக்கத்தான் செய்யும் பார்கவி.வீட்டு வேலை செய்றதெல்லாம் போய் பெருசா நினைக்காதம்மா.நம்ம வீட்டுக்காக தான செய்யுறோம்னு முதலில் சிந்திக்கனும்.குடும்பத்துல எது நடந்தாலும் அனுசரிச்சு போனா தான் வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும் பார்கவி.விட்டுக்கொடுத்து போறவுங்க யாரும் வாழ்க்கையில கெட்டு போனதா சரித்திரமே கிடையாது.
மாப்பிள்ளையும் சரி, அவுங்க குடும்பமும் சரி ரொம்ப நல்ல குணம் கொண்டவுங்க பார்கவி.நீ செஞ்ச தப்பை ஒத்துக்கிட்டு
மாப்பிளக்கிட்டையும், அவுங்க அப்பா அம்மாக்கிட்டையும் மன்னிப்பு கேளு பார்கவி என்று கூறினார்.
கல்யாணம் முடிஞ்ச பிறகு ஒரு பொண்ணு அவள் புகுந்த வீட்டில இருந்து வாழ்வது தான் அந்த பொண்ணுக்கும் அவளுடைய பிறந்த வீட்டுக்கும் பெருமை.
என் வாழ்க்கை அனுப்பவத்துல நான் தெரிஞ்கிட்டதை வைத்து உனக்கு சொல்லுறேன். "உன்மையான சந்தோஷமே பிறருக்காக நாம் வாழ்வது தான்ம்மா" பார்கவி என்று சோமசுந்தரம் கூறியதும், அவரைக் கட்டிப்பிடித்து கொண்டு நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்ப்பா.எனக்கு கிடைச்ச நல்ல வாழ்க்கையை நானே என் தலையில மண் அள்ளி போட்டுக்கிட்டேன் என்று கதறி அழுதவளை தட்டிக்கொடுத்து சமாதானப்படுத்தினார் சோமசுந்தரம்.
வீட்டு வாசலில் பரத்தும் குழந்தையும் நின்று கொண்டிருப்பதை பார்த்த பானு, வீட்டுக்குள்ள வாங்க அண்ணா! ஏன் வாசலையே நிக்கிறீங்க? என்று கூறி வீட்டுக்குள் பரத்தை அழைத்தாள் பானு.
ஹேய்! சிவானி செல்லம் என்று பானு குழந்தையை அழைத்ததும், அத்தை என்று சந்தோஷமாக கூறிக்கொண்டு துள்ளி குதித்து ஓடி வந்து பானுவை கட்டிக்கொண்டாள் பரத்தின் மகள் சிவானி.
வீட்டிற்குள் வந்த பரத் அவனுடைய அப்பா அம்மா காலில் விழுந்து, என்னை மன்னிச்சிருங்க என்று சொல்லி அழுது மன்னிப்பு கேட்டான்.
பிள்ளை அழுது புலம்பி மன்னிப்பு கேட்டதும், மனமுருகி எழுந்திருப்பா பரத்.இப்போ எதுக்கு இப்படி அழுகுற? ஆம்பிள பிள்ளை கண் கலங்கலாமா? என்று மனதிற்குள்ளே மகன் அழுவதை பார்த்து கலங்கினாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் தைரியமாக பேசி ஆறுதல் கூறினார் கனகராஜ்.
நீயும் என்ன மன்னிச்சிருமா பானு.சொந்த தங்கச்சினு கூட பார்க்காமல் கண்டபடி உன்னை பேசிட்டேன் என்று பரத் கூறியதும்,
ஐயையோ! என்ன அண்ணா? பெரிய பெரிய வாரத்தையெல்லாம் ஏங்கிட்ட போய் நீங்க கேட்டுக்கிட்டு இருக்கீங்க.என் மேல உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு என்றதும் தன் தங்கையை கட்டி அணைத்து கண்ணீர் சிந்தினான்.
அந்த ராட்சசி பேச்சை கேட்டு உங்க எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்மா! நான் பெரிய பாவிமா.பெத்த அப்பா அம்மாவையே மரியாதை இல்லாமல் பேசிட்டேன் என்று தான் செய்த தவறு அனைத்தையும் சொல்லி புலம்பி தீர்த்தான்.
சரி விடுப்பா பரத்.நடந்தது நடந்து போச்சு! நீ பழைய பரத்தா திரும்பி வந்ததே எங்களுக்கு போதும்பா என்று கூறினார் பங்கஜம்.பார்கவி வரலையப்பா பரத்? என்று கேட்டதும் அவளுக்கும் எனக்கும் இனி எந்த ஒட்டும் இல்ல உறவும் இல்ல.அவளை பத்தி இனி ஏங்கிட்ட எதுவும் பேசாதீங்கம்மா என்று கூறிவிட்டு தனது அறைக்குள் சென்று விட்டான்.
மறுநாள் காலையில் சாருவின் பிறந்தநாள்.சாரு ரொம்ப ஆவலாக மணியையே பார்த்துக்
கொண்டிருந்தாள்.சாருவின் கல்யாணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.அதனால் சந்துருவின் மேல் உள்ள காதலில் சந்துருவை தவிர வேறு யாரும் தனக்கு முதலில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி விடக்கூடாது என்று அவளுடைய மொபைலை சுவிட்ச் ஆப் செய்துவிட்டாள் சாரு.
சந்துரு லேப்டாப்பில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தான்.சாரு படுத்துக்கொண்டே புத்தகம் படிப்பது போல சந்துருவையும் சுவரில் உள்ள கடிகாரத்தில் மணியையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.பனிரெண்டு மணியாக இன்னும் ஐந்து நிமிடம் தான் இருந்தது.
சாரு மணியை பார்த்துக்கொண்டே உறங்கிவிட்டாள்.
சந்துரு மெதுவாக சாருவின் அருகில் வந்து சாருவின் மேனி வலிக்காதவாறு தட்டி எழுப்பி பிறந்தநாள் வாழ்த்துக்கள் எதுவும் கூறாமல், அவளது கண்களை துணியால் கட்டிக்கொண்டு வீட்டின் மாடிக்கு அழைத்து சென்றான்.
மாடிக்கு அழைத்து சென்றதும் கண்களில் கட்டியிருந்த துணியை அவிழ்த்தான்.வண்ண நிற மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்காரம் செய்து அதன் நடுவே பெரிய பிறந்தநாள் கேக் ஒன்றும் இருந்தது.
"மெனி மோர் ஹேபி ரிட்டன்ஸ் ஆப் தி டே சாரு" என்று சந்துரு கூறியதும் சாருவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
சாரு கேக் கட் செய்து சந்துருவிற்கு ஊட்டிவிட்டாள்."தாங்க் யூ சோ மச்ங்க" என்று சாரு கூறியதும் அவளது கையில் உள்ள மீதமுள்ள கேக்கை வாங்கி சாருவிற்கு ஊட்டிவிட்ட பின்னர் "ஐ லவ் யூ சாரு" என்று கூறினான் சந்துரு.
முதன் முறையாக சாருவிடம் தனது காதலை சந்துரு சொன்னதும், சாரு அவனருகில் சென்று கண்களிரண்டையும் சிமிட்டாமல் சந்துருவின் கண்களே பார்த்துக் கொண்டிருந்தாள்.
சந்துரு அவளை தொட்டு அணைக்க வரும்போது கொக்கரக்கோ... என்ற சத்தம் கேட்டது.
என்ன சத்தம்? என்று பார்த்தால் ஜன்னலின் வழியாக கொக்கரக்கோ…
கொக்கரக்கோ…என்று சேவல் கூவிக்கொண்டிருந்தது.
சாரு கடிகாரத்தை பார்த்தாள்.காலை ஆறு மணியாகிவிட்டது.சந்துரு நன்றாக குறட்டை விட்டு தூக்கிக்
கொண்டிருந்தான்.
நான் கண்டது எல்லாம் கனவா? அப்போ இவரு நமக்கு நேத்து நைட் விஸ் பண்ணவே இல்லையா! என்று மனதில் குமுறிக்கொண்டே குளிக்க சென்றாள் சாரு.
சாரு வேகமாக குளித்து கிளம்பி,சந்துரு எழுந்திருக்கும் வரை அவனருகிலே அமர்ந்து ஆசை ஆசையாக சந்துருவின் வாயால் முதல் முதலாக பிறந்தநாள் வாழ்த்து கேட்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருந்தாள்.
சந்துரு எழுந்து "குட் மார்னிங்க" என்று கூறிவிட்டு பாத் ரூம் சென்றுவிட்டான்.
ப்ரெஸ் அப் ஆகிட்டு வந்தவன் சாருவிற்கு பிறந்தநாள் வாழ்த்து எதுவும் கூறாமல் கீழே இறங்கி காபி குடிக்க சென்றுவிட்டான்.
இன்னைக்கு எனக்கு பிறந்தநாளுங்கிறது இவருக்கு தெரியுமா? தெரியாதா? என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு மொபைலை ஆன் செய்தாள் சாரு.
ஆன் செய்ததும் பானுவிடமிருந்து போன் வந்தது.சாருவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தாள் பானு.சாரு ஒரு குட் நியூஸ்.என் பழைய அண்ணா வீட்டுக்கு வந்துட்டாங்க... என்றாள் பானு.
என்ன பானு சொல்லுற? பழைய அண்ணாவா! அது யாரு பானு? உனக்கு ஒரு அண்ணா இருக்காங்கனு தான சொல்லிருக்க என்று சாரு கேட்டதும், என் அண்ணன் கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி பாசமாக இருந்தாங்களோ அந்த மாதிரி இப்போ வீட்டுக்கு திரும்பி வந்துட்டாங்கனு சொன்னேன் என்று கூறினாள் பானு.
அப்படி தெளிவாக சொல்லு பானு என்றாள் சாரு.நேற்று நடந்த அனைத்தையும் சாருவிடம் கூறினாள் பானு.இன்னைக்கு முடிந்தால் நீ வீட்டுக்கு வா சாரு! என்று கூறினாள் பானு.
சரி... இதெல்லாம் இருக்கட்டும்.மாப்பிள சரர் பேர்த் டேக்கு என்ன சர்ப்ரைஸ் கொடுத்தாங்க? என்று கேட்டதும், பதில் ஏதும் சொல்லாமல் அவரு எனக்கு இன்னும் விஸ் கூட பண்ணல.இதுல எங்கிட்டு சர்ப்ரைஸ் கொடுக்க என்று மனதிற்குள்ளே நினைத்து வேதனையில் தவித்தவள் நேரில் வந்து சொல்லுறேன் பானு.என் அம்மா லைன்ல வர்றாங்க என்று கூறி போனை கட் செய்துவிட்டாள் சாரு.
சந்துரு சாருவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுவானா? மாட்டானா? பார்கவியை பரத் மன்னித்து ஏற்றுக் கொள்வானா? மாட்டானா? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்...
- தொடரும் -
* * * * * * * * * * * * * *
இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
கல்யாணம் கலை கதையில் படமாக்கிவிட்டீர்கள் 👌 கண் முன்னே தான் காட்சிகளும் வந்து போகின்றது 😍❤எண்ணங்களே வண்ணங்களாய்...
அத்தியாயம் 20
நாற்காலியின் மீது ஏறி அலமாரியில் புத்தக்கத்தை வைத்து விட்டு கீழே இறங்கினாள் சாரு.
ஏன் இவ்வளவு சிரமப்பட்டு புத்தகத்ததை வைக்கிறீங்க? சேர்ல ஏறி புக்க வைக்கிறேனு போய் கீழ விழுந்துட்டீங்கனா என்ன பண்ணுறது? ஏங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருந்தா நான் வச்சுருப்பேன்ல என்று சந்துரு கூறியதும், விழுந்தால் என்னங்க சந்துரு? என்னை தாங்கி பிடிக்கத்தான் நீங்க இருக்கீங்களே! நல்லா தான் அக்கறை காட்டுறீங்க.ஆனால் உங்க மனசுல நினைக்கிறதை மட்டும் ஏங்கிட்ட சொல்லாதீங்க.
நான் உங்களை விரும்புவது மாதிரி நீங்களும் என் மேல ரொம்ப அன்பு வச்சுருக்கீங்கனு, அன்னைக்கு நான் கையில அடிப்பட்டு மயங்கி உங்க மடியில் படுத்திருக்கும் போது நீங்க துடித்த துடிப்பும், என் முகத்தில் விட்ட கண்ணீரும் எல்லாமே எனக்கு தெரியும்.மயக்கத்துல இருந்தாலும் நீங்க பேசுனது எல்லாமே என் காதுல விழுந்ததுங்க.
இவ்வளவு பாசத்தையும் மனசுகுள்ள வச்சுக்கிட்டு வெளியே எதுவுமே காட்டிக்கொள்ளாமல், சிடிரிக்ட் ஆபிஸர் மாதிரி ஏன் நடிக்கிறீங்க சந்துரு? என்று சந்துருவின் கண்களை இமைக்காமல் பார்த்துக்கொண்டே வழக்கம் போல நேரடியாக பேசாமல் மனதிலே சந்துருவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
ஏங்க உங்கக்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன்.ஹலோ! இங்க தான் இருக்கீங்களா? என்று சந்தரு தனது கையை சாருவின் கண்களின் முன் கொண்டு சென்று கை அசைத்த பிறகு தான் சுயநினைவுக்கு வந்தாள் சாரு.
எதாவது தூக்கனும் வைக்கனும்னா என்னை கூப்பிடுங்கள் என்று சந்துரு கூறினான்.
ம்ம்...சரிங்க என்று சொன்னாள் சாரு.
அம்மா சாரு! சாரு! என்று ஜானகி அம்மா சாருவை கீழே இருந்து அழைத்துக் கொண்டிருந்தார்.
மாமியரின் குரல் கேட்டதும் மின்னல் வேகத்தில் கீழே இறங்கி வந்தாள் சாரு.
என்னங்க அத்தை ஜோசியரை பார்த்துட்டு வந்துட்டீங்களா? என்று கேட்டாள் சாரு.
ஆமாம் சாரு.அடுத்த வாரம் புதன்கிழமை காலை பத்து மணிக்கு நல்ல நேரமாக இருக்குதாம்.அன்னைக்கே நிச்சயதார்த்தம் வச்சுக்க சொல்லி ஜோசியர் நாள் குறிச்சு கொடுத்திருக்காருமா என்று கூறினார் ஜானகி அம்மா.
நான் பானுவோட அப்பா அம்மாக்கிட்டையும் கலந்து பேசிட்டேன்.பானுவோட அண்ணன் வீட்டுக்கு போய்ட்டு அப்படியே டவுனுக்கு போய் நிச்சயதார்த்த புடவையும் மோதிரமும் வாங்கிட்டு வந்திருவோம் சாரு.இன்னைக்கு நல்ல முகூர்த்த நாளாக இருக்கும்மா சாரு என்றதும், சரிங்க அத்தை... நானும் பானுக்கு போன் பண்ணி அவளோட மோதிரத்தோட சைஸ் என்னனு கேட்டு சொல்லுறேன் அத்தை என்றாள் சாரு.
சரிம்மா...சந்துருவை கொஞ்சம் கூப்பிடும்மா என்றார் ஜானகி அம்மா.
அறைக்கு சென்று சந்துருவை அழைத்துக் கொண்டு கீழே வந்தாள் சாரு.
கல்யாண மண்டம் புக் பண்ணிட்டியா சந்துரு? என்று கேட்டார் ஜானகி அம்மா.
மண்டபம், கேட்டரிங், நிச்சயதார்த்த மாலை எல்லாமே புக் பண்ணி அட்வான்ஸ் கொடுத்துட்டேன்ம்மா என்று கூறினான் சந்துரு.
சரிப்பா சீக்கிரம் எல்லாரும் கிளம்புங்க என்று கூறினார் ஜானகி அம்மா.
ஏங்க ஒரு மாதிரி இருக்கீங்க? என்னமோ ஆழமாக யோசிக்கிற மாதிரி தெரியுது என்று தனது கணவரிடம் கேட்டார் பங்கஜம்.
ஆமாம் பங்கஜம்...நம்ம பையன் இப்படி மாறிருவானு ஒரு நாள் கூட நினைத்து பார்த்ததே இல்லை.
நம்ம கண்ணு முன்னாடியே பானுவை இப்படி பேசிட்டு போறான்.நமக்கு பிறகு நம்ம பொண்ண இவன் எப்படி பார்ப்பான்? மாப்பிள்ளை நல்ல பையனா அமைந்ததுனால பானுவை குறித்து பயப்பட வேண்டியது இல்லை.
இருந்தாலும் வீட்டுக்கு மூத்த பையனா பொறுப்பா இருந்து அவன் தான பானுவோட கல்யாணத்தை முன்னிருந்து நடத்தனும் என்று தன்னுடைய மனவேதனையை மனைவியிடம் கூறிக்கொண்டிருந்தார் கனகராஜ்.
பரத் நம்ம வளர்த்த பையன்ங்க.ஒரு நாள் கண்டிப்பா திருந்தி வருவான்.நீங்க தேவையில்லாமல் எதையாவது நினைத்து கவலைப்படுவதை விட்டுட்டு பானுவோட நிச்சயதார்த்தத்திற்கு ஆக வேண்டிய வேலையை பாருங்க என்று கூறினார் பங்கஜம்.
சரி பங்கஜம்...நிச்சயதார்த்த செலவுக்கு தேவையான பணத்தை பேங்க்ல போய் எடுக்க வேண்டியது இருக்கு.நான் பேங்க் வரைக்கும் போய்ட்டு வந்திர்றேன் பங்கஜம் என்று கூறிவிட்டு கிளம்பிச் சென்றார் கனகராஜ்.
கனகராஜ் கிளம்பியதும் தனது அறைக்கு சென்று சுவற்றில் மாட்டியிருந்த பரத்தின் போட்டோவை கையில் எடுத்துக்கொண்டு, ஏன் பரத் இப்படி எங்களை தனியாக தவிக்க விட்டுட்டு போயிட்டப்பா? நான் உன்னை நல்லா தானேடா வளர்த்தேன்.கடைசி காலத்துல நம்ம பிள்ளை நம்மள நல்லா பார்ப்பானு உங்க அப்பாட்ட ஓயாமல் சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டனே! எங்க நம்பிக்கையை எல்லாம் சுக்குநூறாக உடைச்சுட்டு போய்ட்டியேடா பரத் என்று போட்டோவை பார்த்து கதறி அழுது கொண்டிருந்தார்.
அம்மா அழும் குரல் கேட்டு பானுவின் அம்மா அறைக்கு சென்று பார்த்தாள் பானு.
அப்பாவிடம் தைரியமாக பேசிட்டு கடைசி நீங்களே இப்படி அழலாமா அம்மா? என்று கேட்டாள் பானு.
அந்த மனுஷன் ஏற்கனவே நொந்து போய் இருக்காரு பானு.பத்தாத குறைக்கு நானும் சேர்ந்து அழுதனா மனசு உடைஞ்சு போயிருவாரு பானு என்று கூறிவிட்டு மகளை கட்டிப்பிடித்து அழுதார் பங்கஜம்.
சரிம்மா அழாதீங்க... நீங்க வேணும்னா பாருங்க.என் நிச்சயதார்த்தத்தையே அண்ணன் தான் முன் நின்று நடத்துவாங்க பாருங்க என்று நம்பிக்கையுடன் கூறினாள் பானு.
அப்படி நடந்த ரொம்ப சந்தோஷமாக இருக்கும் பானு என்று கூறினார் பங்கஜம்.
சந்துருவின் குடும்பத்தில் உள்ள அனைவரும் கிளம்பி காரில் ஏறி பரத்தை காண்பதற்கு புறப்பட்டு சென்றார்கள்.
அம்மா! மனோஜ் முகத்துல கல்யாண கலை வந்திருச்சு பார்த்தீங்களமா? என்று சிரித்துக்கொண்டே ஜானகி அம்மாவிடம் கூறினான் சந்துரு.
எப்போதும் எதிர்ப்பேச்சு பேசும் மனோஜ், வெட்கத்தில் எதுவும் பதில் பேசாமல் அமைதியாக சிரித்துக்
கொண்டே காரை ஓட்டினான்.
பார்கவி வீட்டின் வாசலில் கார் வந்து நிற்பதை மாடியிலிருந்து பார்த்த சோமசுந்தரம் கீழே இறங்கி வந்தார்.
வீட்டிற்கு வந்தவர்களை உள்ளே வரவேற்று ஷோபாவில் உட்கார சொன்னார்.
சோமசுந்தரத்தின் மகன் பாபுவும் வந்து அவர்களை குறித்து விசாரித்துவிட்டு பேசிக் கொண்டிருந்தான்.
ருத்ரா! எல்லாருக்கும் குடிக்க காபி கொண்டு வாமா என்று தனது மனைவியிடம் மரியாையாக கூறுவதை கண்டு சாரு ஆச்சரியப்பட்டாள்.
பானு பல முறை அவளது அண்ணி பார்கவியை பற்றி கூறியிருக்கிறாள்.
ஆனால் பார்க்கவியின் அப்பா, அண்ணன் அண்ணி எல்லாரையும் பார்த்த ரொம்ப சாதுவாக இருக்காங்களே! பார்கவி குணத்துக்கு அப்படியே எதிர்மறையாக இருக்காங்களே! என்று மனதில் நினைத்து ஆச்சரியப்பட்டு அவர்களை பார்த்து சந்தோஷப்பட்டாள் சாரு.
நீங்க எல்லாரும் பேசிக்கிட்டு இருங்க.நான் மச்சானை கூப்பிட்டு வர்றேன் என்று கூறிவிட்டு பரத்தை அழைக்க மாடியில் உள்ள அறைக்கு சென்றான் பாபு.
மாடியிலிருந்து கீழே பரத் இறங்கி வருவதை பார்த்த சோமசுந்தரம், மருமகன் வந்தவுங்கள்ட்ட எப்படி பேசுவாருனு தெரியலையே! என்று பரத்தை நினைத்து பயந்து கொண்டிருந்தார்.
கீழே வந்த பரத் அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு
மரியாதையுடன் பேசிக் கொண்டிருந்தான்.
ஜானகி அம்மா பேசுவதற்கு முன்பே எந்த குறையும் இல்லாமல் எங்களால் முடிந்த அளவுக்கு பானுக்கு நகை போட்டு சீரும் சிறப்புமாக நல்ல படியாக கல்யாணத்தை முடிக்க ஏற்பாடு செய்கிறோம்மா என்று பரத் கூறுவதை கேட்டதும் பார்கவி வீட்டில் இருந்தவர்களும் ஜானகி அம்மாவின் குடும்பத்தாரும் பரத் பேசுவதை கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தனர்.
சோமசுந்தரம் கண்ணாடியை கழற்றி நன்கு துடைத்து விட்டு மீண்டும் பரத் பேசுவதை உற்றுப்பார்த்தார்.
இது கனவா? நிஜமா? பேசுறது நம்ம மாப்பிள்ளை தானா என்று வியப்புடன் பரத் பேசுவதை பார்த்துக்
கொண்டிருந்தார்.
மனோஜின் கையை குழுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்தான் பரத்.
சந்துருவின் குடும்பத்தினர் அனைவரும் நிச்சயதார்த்தத்திற்கு நீங்கள் அனைவரும் குடும்பத்தோடு வந்து மணமக்களை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள்.
அவர்கள் கிளம்பியதும் தலையில் கையை வைத்து உட்கார்ந்து விட்டான் பரத்.
சந்துருவின் கார் கிளம்பியதும் பார்கவியின் வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நின்றது.
பார்கவியும் அவளது அம்மா சரோஜாவும் ஆட்டோவிலிருந்து இறங்கினார்கள்.வீட்டிற்குள் வந்ததும் யாருப்பா காருல வந்துட்டு போறது? என்று கேட்டதும் பானுவோட வருங்கால கணவர் மனோஜூ்ம் அவருடைய குடும்பத்தாரும் வந்திருந்தாங்க என்றார் சோமசுந்தரம்.
பரத் தலையில் கை வைத்திருப்பதை பார்த்த பார்கவி, நான் வீட்டுல இல்லாத நேரமா பார்த்து என் வீட்டுக்காரரை வீடு தேடி வந்து அவமானப்படுத்திட்டு போக ஆள் அனுப்பி வச்சுருக்காங்களா?
ஒரு கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு வரதுகுள்ள இவ்வளவு நடந்திருச்சா.
நீங்க எதுக்குங்க தலையில கைவச்சுட்டு உட்கார்ந்து இருக்கீங்க.
வாங்க உங்க வீட்டுக்கு போய் நாலு வார்த்தை நாக்க புடுங்குற மாதிரி கேட்டா தான் அவுங்க அடங்குவாங்க என்று பார்கவி கூறியவுடன் பார்கவியின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைந்தான் பரத்.
இதுக்கு மேல ஒரு வார்த்தை எதாவது வாயை திறந்து பேசுனா செவுளு பேந்துரும் பார்த்துக்கோ! என்று கூறியதும் எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள் பார்கவி.
பார்கவியின் வீட்டில் நடந்ததையும் பரத் தனக்கு வாழ்த்துக்கள் சொல்லியதையும் சந்தோஷத்துடன் பானுவிற்கு கால் செய்து தகவல் சொன்னான் மனோஜ்.
பானு உடனே அவளுடைய அப்பா அம்மாவிடம் சென்று பரத் மனோஜிடம் பேசியதையும் அங்கு நடந்ததையும் சொன்னவுடன், நீ சொல்லுறத நம்பவே முடியலமா பானு! என்று கூறினார் கனகராஜ்.
பொறுத்திருந்து பார்ப்போம் பானு.
அவசரப்பட்டு சந்தோஷப்பட வேண்டாம்!
புயலுக்கு முன் அமைதியாக கூட இருக்கலாம் என்று கூறினார் பானுவின் அம்மா.
பார்கவி வீட்டிலிருந்து புறப்பட்டு டவுனுக்கு போகும் வழியில் பரத் நடந்து கொண்ட விதம் குறித்து பேசிக்கொண்டு வந்தனர்.
என்னம்மா சாரு? பானு அண்ணன் பேசுன விதத்தை பார்த்தால், நீ சொன்ன மாதிரி அவுங்க குடும்பத்தில பிரச்சனை நடந்தது மாதிரியே தெரியலமா என்று கூறினார் ஜானகி அம்மா.
அதுதான் அத்தை எனக்கும் ஒன்னும் புரியல.சரி எப்படியோமா பானு மனோஜ் நிச்சயதார்த்தம் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் நல்ல படியாக நடந்தால் போதும்மா சாரு என்று கூறினார் ஜானகி அம்மா.
அனைவரும் ஜவுளி கடைக்கு வந்து இறங்கினார்கள்.ஜானகி அம்மாவும் சாருவும் சேலை பார்க்க தொடங்கினார்கள்.
என்னப்பா புதுமாப்பிள்ளை! பானுக்கு எந்த கலர் பிடிக்கும்? என்று கேட்டார் ஜானகி அம்மா.
அம்மா! அதுவந்து என்று இழுத்ததும்...சும்மா சொல்லுப்பா மனோஜ் என்றார் ஜானகி அம்மா.அவளுக்கு நீல நிறம் தான் பிடிக்கும் என்று பதில் கூறினான் மனோஜ்.
சரிப்பா மனோஜ்! நீயே வந்து உன் வருங்கால மனைவிக்கு சேலையை செலக்ட் செய்ப்பா என்றதும் மனோஜ் கொஞ்சம் வெட்கப்பட்டு தயங்கினான்.
சும்மா நடிக்காதடா மனோஜ்! சீக்கிரம் வந்து சேலையை செலக்ட் செய் என்று சந்துரு கூறியதை பார்த்த சாரு, இவர் இப்படிலாம் ஜாலியாக பேசுவாரா? என்று முதன் முறையாக சந்துரு நக்கலடித்து சிரித்து பேசுவதை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் சாரு.
ஐந்து நிமிஷத்தில் மனதிலே பானுவிற்கு சேலையை கட்டி பார்த்து இந்த சேலை பானுவிற்கு நல்லா இருக்கும்லம்மா என்று ஜானகி அம்மாவிடம் ஒரு சேலையை எடுத்துக்கொண்டு போய் காட்டினான் மனோஜ்.
வாவ் சூப்பரா இருக்கு அண்ணா! என்று கூறினாள் சாரு.நாங்க கூட இவ்வளவு பாஸ்ட்டா சூப்பரா செலக்ட் பண்ண மாட்டோம் அண்ணா.பானுக்கு இந்த சேலை ரொம்ப அழகாக இருக்கும் என்று மனோஜிடம் கூறினாள் சாரு.
எல்லாம் "காதல் செய்யும் மாயம்" சாரு என்று ஜானகி அம்மாவும் சேர்ந்து மனோஜை கேலி செய்து சிரிக்கத்தொடங்கினார்.
நாங்கள் பக்கத்துல இருக்கும் நகைக்கடைக்கு போய் மோதிரம் பார்த்துக்கிட்டு இருக்கோம் சந்துரு.நீ சீக்கிரமா பில் பே பண்ணிட்டு வந்திருப்பா என்று கூறிவிட்டு சாருவையும் மனோஜையும் அழைத்துக் கொண்டு நகைக்கடைக்கு சென்றார் ஜானகி அம்மா.
மோதிரம் செலக்ட் பண்ணி முடித்து பில் போடும் நேரத்திற்கு தான் வந்தான் சந்துரு.பில் பே செஞ்சுட்டு வர்ற இவ்வளவு நேரமா சந்துரு? நாங்க மோதிரமே செலக்ட் பண்ணி முடுச்சிட்டோம்.இல்லம்மா அது வந்து என்று இழுக்க தொடங்கியதும்...சரி... சரி…நீயும் ஒரு முறை மோதிரத்தை பார்த்து நல்லா இருக்கானு சொல்லுப்பா என்று கேட்டார் ஜானகி அம்மா.
மனோஜ்க்கு ஓகேனா எனக்கும் ஓகே தான்ம்மா என்றான்.மனோஜை பார்த்து புருவத்தை தூக்கிக்கொண்டு ஜாடையிலே மோதிரம் சூப்பர் என்று கூறினான் சந்துரு.இங்க வா சந்துரு! நீயும் சாருவும் சேர்ந்து மோதிரத்தை கையில வாங்கிக்கோங்க என்று கூறினார் ஜானகி அம்மா.
நகைக்கடை முதலாளி சாமியின் முன் மோதிரம் உள்ள டப்பாவை பூ போட்டு வைத்து கும்பிட்டு நிச்சயதார்த்த மோதிரத்தை கொடுக்க சந்துருவும் சாருவும் சேர்ந்து மோதிரத்தை பெற்று கொண்டு வீட்டிற்கு கிளம்பினார்கள்.
பரத்தின் திடீர் மனமாற்றத்திற்கு காரணம் என்ன? என்ன நடந்திருக்கும்? பானு நினைத்தது போல பரத்தின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடக்குமா? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்...
- தொடரும் -
* * * * * * * * * * * * * *
இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
அதுதானே பார்த்தேன் சந்துரு birthday wish பண்ணுறதே? ஆச்சிரியம் தான் இதில் லவ் U வேறேன்னு யோசிச்சேன் அது கனவா போச்சு 😄 Good going sis 👌எண்ணங்களே வண்ணங்களாய்...
அத்தியாயம் 21
என்னைக்கும் இல்லாம இன்னைக்கு மட்டும் என்ன மாப்பிள்ளை புதுசா கை ஓங்குறீங்க? இப்போ பார்கவி என்ன சொல்லிட்டானு அவளை தேவையில்லாமல் அடிச்சீங்க.
பெத்தவுங்க நாங்க இருக்கும் போது எங்க கண் முன்னாடியே எங்க பொண்ண எப்படி நீங்கள் அறையலாம்? என்று கேட்டார் பரத்தின் மாமியார் சரோஜா.
ஒரு அறையோட விட்டேனு சந்தோஷப்படுங்கள்.எல்லாத்துக்கும் மூலக்காரணமே நீங்கள் தான் அத்தை.
மாமா! அத்தையை இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம்னு சொல்லுங்கள் என்று கூறினான் பரத்.
எதுக்கு நான் பேசக்கூடாதுனு சொல்லுறீங்க மாப்பிள்ள? என் வீட்டில இருந்துக்கிட்டு சொந்த மாமியாருனு கூட பார்க்காமல் மரியாதை இல்லாமல் என்னையவே சத்தம் போட்டு பேசுறீங்க என்றதும், வேகமாக மாடிக்கு சென்று கையில் சூட்கேஸை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி வந்தான்.
மாப்பிள்ள சூட்கேஸ் எடுத்துக்கிட்டு எங்க போறீங்க? என்று கேட்டார் சோமசுந்தரம்.
எங்க வீட்டுக்கு தான் மாமா.இனி நான் இங்க இருந்தேனா அது எனக்கு மரியாதை இல்ல மாமா என்று கூறினான் பரத்.
என்னாச்சு மாப்பிள? பார்கவி என்ன தப்பு பண்ணுனானு சொல்லுங்க மாப்பிள.எதுனாலும் பேசி தீர்த்துக்குலாம் என்று சோமசுந்தரம் கூறியதும், உங்க மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? பெத்த பொண்ண நம்ம கண் முன்னாடி அடிச்சுட்டு நிக்கிராரு.ஏன் அடிச்சீங்கனு கேட்காமல் அதை விட்டுட்டு பார்கவி என்ன தப்பு செஞ்சானு கேட்கிறீங்க? என்று பார்கவியின் அப்பாவிடம் சீறிக்கொண்டு கோபமாக பேசினார் சரோஜா.
அம்மா! கொஞ்சம் நேரம் பேசாமல் அமைதியாக இருங்க என்று பாபு கூறினான்.
மச்சான்! என்ன பிரச்சனைனு? நீங்கள் சொன்னா தான எங்களுக்கு தெரியும் என்று பரத்திடம் கேட்டான் பாபு.
வேகமாக பார்கவியின் மொபைலை ஆன் செய்து வாய்ஸ் ரெக்காடரை அனைவருக்கும் போட்டுக்காட்டினான் பரத்.
பார்கவியும், சரோஜாவும் பரத் குடும்பத்தை பத்தி பேசியது பதிவாகியிருந்தது.
பார்கவி கோவிலுக்கு போகும் போது மொபைலை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டு சென்றுவிட்டாள்.அந்த சமயம் பார்த்து, பரத்தின் மகள் சிவானி அப்பா! நேற்று அம்மா மொபைல்ல ஹோம் ஒர்க் படிச்சு வாய்ஸ் ரெக்கார்டு பண்ணிருந்தேன்.அதை எடுத்து மிஸ் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கனும்.கொஞ்சம் எடுத்து தாங்க என்று பரத்திடம் கொடுத்திருக்கிறாள்.
நேற்றைய தேதியிலிருந்த வாய்ஸ் ரெக்கார்டரை போட்டு பார்த்தாள் பார்கவியும் சரோஜாவும் அவரு இனி அந்த வீட்டுப்பக்கமே போகாத மாதிரி பிரச்சனையை பெருசாக்கிட்டேன் அம்மா.உங்க மாப்பிள்ள சரியான மாங்க மடையன்ம்மா.நான் சொல்லுறது தான் வேத வாக்கா நம்பிக்கிட்டு இருக்காரு என்று அவள் பேசியதும், இதே மாதிரி எப்போதும் உன் புருஷனை கைக்குள்ள போட்டு வச்சுக்கோ பார்கவி! அதுதான் உனக்கு நல்லது என்று சரோஜா பேசியிருந்ததும் பதிவாகியிருந்தது.
உங்க பொண்ண எதுக்கு அடிச்சேனு இப்போ புரியுதாங்க.இந்த ஆதாரம் போதுமாங்க? என்று தனது மாமியாரை பார்த்து பரத் கேட்டதும், எதுவும் பேச முடியாமல் தலையை குனிந்து கொண்டார் சரோஜா.
என்னங்க... அது வந்து என்று பார்கவி பேச ஆரம்பிக்கும் போது, அம்மா தாயே! இனி நீ எதுவும் பேச வேண்டாம்.
நீ சொன்ன மாதிரி நான் மாங்கா மடையன் தான்.
உனக்கு என்னடி நான் குறைவச்சேன்? நீ ஆசைப்பட்டது எல்லாம் செஞ்சேன்லடி.நீ ஆசைப்படுறதுனால தான வயசான என் அப்பா அம்மாவை விட்டுட்டு உன் வீட்டில வந்து இருக்க சம்மதிச்சேன்.
ஆனால் நீ எனக்கு பதிலுக்கு நல்ல கைமாறு பண்ணிட்டமா தாயே! இல்லாத பொல்லாத நாடகம் போட்டு என் குடும்பத்தை ஏங்கிட்ட இருந்து அநியாயமா பிரிச்சுட்டியேடி பாவி! என்று அக்ரோசமாக பேசினான் பரத்.
சின்ன பிள்ளைய பக்கத்துல வச்சுட்டு பேச்சாடி நீ பேசிருக்க?
உன்னோட நான் வாழ்ந்ததெல்லாம் போதும்.அடுத்த வாரம் டைவர்ஸ் நோட்டீஸ் வரும் என்று கூறிவிட்டு பிள்ளையை தூக்கிக்கொண்டு பார்கவியின் வீட்டை விட்டு கிளம்பிச் சென்றான் பரத்.
மாப்பிள ஒரு நிமிஷம் நான் சொல்லுறத கேளுங்கள்! என்று சோமசுந்தரமும், மச்சான்! மச்சான்! கொஞ்சம் நில்லுங்கள்! என்று பாபுவும் பரத் பின்னாடியே அவனை கூப்பிட்டு கொண்டே வீட்டின் வாசல் வரை சென்றனர்.
அவர்கள் கூப்பிடுவதை சிறிது கூட காதில் வாங்கி கொள்ளாமல் ஆட்டோவில் ஏறி தன்னுடைய வீட்டிற்கு குழந்தையுடன் சென்றான் பரத்.
பார்கவி தலையில் அடித்து அழுது கொண்டிருந்தாள்.
அழுங்க! இரண்டு பேரும் சேர்ந்து நல்லா சுவத்துல போய் முட்டிக்கிட்டு அழுங்க! ஆரம்பத்துல இருந்தே படிச்சு படிச்சு உங்கிட்ட சொன்னேன்.
கேட்டியாடி நீ? என்று சரோஜாவை பார்த்து திட்டினார் சோமசுந்தரம்.
நம்ம பொண்ணு சந்தோஷமா இருக்கனும் நினைச்சு தானங்க.
அவளை இங்க இருக்க வச்சேன்! என்று கூறினார் சரோஜா.
ஓ அப்படியா! சரி, அப்போ ஒன்னு பண்ணுவோம்.நாளைக்கே பாபுவையும் ருத்ராவையும் ருத்ராவோட வீட்டுக்கு அனுப்பி வச்சிருவோம்.ருத்ரா அவுங்க வீட்டில போய் நம்ம பிள்ளையோட சந்தோஷமாக இருக்கட்டும் என்றதும், அது எப்படிங்க? நம்ம பையனை போய் அவுங்க வீட்ல இருக்க சொல்லுறீங்க என்று கேட்டார் சரோஜா.
நமக்காவது இரண்டு பிள்ளைங்க.நம்ம சம்பந்திக்கு ருத்ரா ஒரே பொண்ணு.
அது மட்டுமில்லாமல் அவுங்க வீட்டில எல்லாத்துக்கும் வேலைக்கு ஆள் வச்சுருக்ககாங்க.ருத்ரா, நம்ம பார்கவியை விட அதிகமான மேற்ப்படிப்பு படிச்சு வேலைப்பார்த்து கை நிறைய சம்பாதித்த பொண்ணு.
அப்படிலாம் சொகுசா பிறந்து வளர்ந்த பொண்ணு, நமக்காக வேலையை விட்டுட்டு குடும்பம் தான் முக்கியம்னு எல்லா வீட்டு வேலையையும் ஆளே இல்லாமல் தனியாக சமாளிச்சு வீட்டையும் பார்த்து நம்மளையும் பார்த்துக்கிறாள்.
நீ என்னடானா! உலகத்துல யாருமே பார்க்காத வேலையை அவள் மாமியார் உன் மகளை பார்க்க சொன்ன மாதிரி பெருசா பேசுற.
சந்தோஷத்துக்கு அர்த்தம் தெரியாமல், நீ கெட்டதும் இல்லாம அவளையும் கெடுத்து பார்கவி வாழ்க்கைய வீணாக்கிட்டு இப்போ அழுது புலம்பிக்கிட்டு இருக்கீங்க.
அம்மா பார்கவி! என்னடா அப்பா நம்மள அண்ணியோட கம்பேர் பண்ணி சொல்லுறாருனு தப்பா நினைக்காதமா.
குடும்பம்னா கூட குறைய இருக்கத்தான் செய்யும் பார்கவி.வீட்டு வேலை செய்றதெல்லாம் போய் பெருசா நினைக்காதம்மா.நம்ம வீட்டுக்காக தான செய்யுறோம்னு முதலில் சிந்திக்கனும்.குடும்பத்துல எது நடந்தாலும் அனுசரிச்சு போனா தான் வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும் பார்கவி.விட்டுக்கொடுத்து போறவுங்க யாரும் வாழ்க்கையில கெட்டு போனதா சரித்திரமே கிடையாது.
மாப்பிள்ளையும் சரி, அவுங்க குடும்பமும் சரி ரொம்ப நல்ல குணம் கொண்டவுங்க பார்கவி.நீ செஞ்ச தப்பை ஒத்துக்கிட்டு
மாப்பிளக்கிட்டையும், அவுங்க அப்பா அம்மாக்கிட்டையும் மன்னிப்பு கேளு பார்கவி என்று கூறினார்.
கல்யாணம் முடிஞ்ச பிறகு ஒரு பொண்ணு அவள் புகுந்த வீட்டில இருந்து வாழ்வது தான் அந்த பொண்ணுக்கும் அவளுடைய பிறந்த வீட்டுக்கும் பெருமை.
என் வாழ்க்கை அனுப்பவத்துல நான் தெரிஞ்கிட்டதை வைத்து உனக்கு சொல்லுறேன். "உன்மையான சந்தோஷமே பிறருக்காக நாம் வாழ்வது தான்ம்மா" பார்கவி என்று சோமசுந்தரம் கூறியதும், அவரைக் கட்டிப்பிடித்து கொண்டு நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்ப்பா.எனக்கு கிடைச்ச நல்ல வாழ்க்கையை நானே என் தலையில மண் அள்ளி போட்டுக்கிட்டேன் என்று கதறி அழுதவளை தட்டிக்கொடுத்து சமாதானப்படுத்தினார் சோமசுந்தரம்.
வீட்டு வாசலில் பரத்தும் குழந்தையும் நின்று கொண்டிருப்பதை பார்த்த பானு, வீட்டுக்குள்ள வாங்க அண்ணா! ஏன் வாசலையே நிக்கிறீங்க? என்று கூறி வீட்டுக்குள் பரத்தை அழைத்தாள் பானு.
ஹேய்! சிவானி செல்லம் என்று பானு குழந்தையை அழைத்ததும், அத்தை என்று சந்தோஷமாக கூறிக்கொண்டு துள்ளி குதித்து ஓடி வந்து பானுவை கட்டிக்கொண்டாள் பரத்தின் மகள் சிவானி.
வீட்டிற்குள் வந்த பரத் அவனுடைய அப்பா அம்மா காலில் விழுந்து, என்னை மன்னிச்சிருங்க என்று சொல்லி அழுது மன்னிப்பு கேட்டான்.
பிள்ளை அழுது புலம்பி மன்னிப்பு கேட்டதும், மனமுருகி எழுந்திருப்பா பரத்.இப்போ எதுக்கு இப்படி அழுகுற? ஆம்பிள பிள்ளை கண் கலங்கலாமா? என்று மனதிற்குள்ளே மகன் அழுவதை பார்த்து கலங்கினாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் தைரியமாக பேசி ஆறுதல் கூறினார் கனகராஜ்.
நீயும் என்ன மன்னிச்சிருமா பானு.சொந்த தங்கச்சினு கூட பார்க்காமல் கண்டபடி உன்னை பேசிட்டேன் என்று பரத் கூறியதும்,
ஐயையோ! என்ன அண்ணா? பெரிய பெரிய வாரத்தையெல்லாம் ஏங்கிட்ட போய் நீங்க கேட்டுக்கிட்டு இருக்கீங்க.என் மேல உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு என்றதும் தன் தங்கையை கட்டி அணைத்து கண்ணீர் சிந்தினான்.
அந்த ராட்சசி பேச்சை கேட்டு உங்க எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்மா! நான் பெரிய பாவிமா.பெத்த அப்பா அம்மாவையே மரியாதை இல்லாமல் பேசிட்டேன் என்று தான் செய்த தவறு அனைத்தையும் சொல்லி புலம்பி தீர்த்தான்.
சரி விடுப்பா பரத்.நடந்தது நடந்து போச்சு! நீ பழைய பரத்தா திரும்பி வந்ததே எங்களுக்கு போதும்பா என்று கூறினார் பங்கஜம்.பார்கவி வரலையப்பா பரத்? என்று கேட்டதும் அவளுக்கும் எனக்கும் இனி எந்த ஒட்டும் இல்ல உறவும் இல்ல.அவளை பத்தி இனி ஏங்கிட்ட எதுவும் பேசாதீங்கம்மா என்று கூறிவிட்டு தனது அறைக்குள் சென்று விட்டான்.
மறுநாள் காலையில் சாருவின் பிறந்தநாள்.சாரு ரொம்ப ஆவலாக மணியையே பார்த்துக்
கொண்டிருந்தாள்.சாருவின் கல்யாணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.அதனால் சந்துருவின் மேல் உள்ள காதலில் சந்துருவை தவிர வேறு யாரும் தனக்கு முதலில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி விடக்கூடாது என்று அவளுடைய மொபைலை சுவிட்ச் ஆப் செய்துவிட்டாள் சாரு.
சந்துரு லேப்டாப்பில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தான்.சாரு படுத்துக்கொண்டே புத்தகம் படிப்பது போல சந்துருவையும் சுவரில் உள்ள கடிகாரத்தில் மணியையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.பனிரெண்டு மணியாக இன்னும் ஐந்து நிமிடம் தான் இருந்தது.
சாரு மணியை பார்த்துக்கொண்டே உறங்கிவிட்டாள்.
சந்துரு மெதுவாக சாருவின் அருகில் வந்து சாருவின் மேனி வலிக்காதவாறு தட்டி எழுப்பி பிறந்தநாள் வாழ்த்துக்கள் எதுவும் கூறாமல், அவளது கண்களை துணியால் கட்டிக்கொண்டு வீட்டின் மாடிக்கு அழைத்து சென்றான்.
மாடிக்கு அழைத்து சென்றதும் கண்களில் கட்டியிருந்த துணியை அவிழ்த்தான்.வண்ண நிற மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்காரம் செய்து அதன் நடுவே பெரிய பிறந்தநாள் கேக் ஒன்றும் இருந்தது.
"மெனி மோர் ஹேபி ரிட்டன்ஸ் ஆப் தி டே சாரு" என்று சந்துரு கூறியதும் சாருவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
சாரு கேக் கட் செய்து சந்துருவிற்கு ஊட்டிவிட்டாள்."தாங்க் யூ சோ மச்ங்க" என்று சாரு கூறியதும் அவளது கையில் உள்ள மீதமுள்ள கேக்கை வாங்கி சாருவிற்கு ஊட்டிவிட்ட பின்னர் "ஐ லவ் யூ சாரு" என்று கூறினான் சந்துரு.
முதன் முறையாக சாருவிடம் தனது காதலை சந்துரு சொன்னதும், சாரு அவனருகில் சென்று கண்களிரண்டையும் சிமிட்டாமல் சந்துருவின் கண்களே பார்த்துக் கொண்டிருந்தாள்.
சந்துரு அவளை தொட்டு அணைக்க வரும்போது கொக்கரக்கோ... என்ற சத்தம் கேட்டது.
என்ன சத்தம்? என்று பார்த்தால் ஜன்னலின் வழியாக கொக்கரக்கோ…
கொக்கரக்கோ…என்று சேவல் கூவிக்கொண்டிருந்தது.
சாரு கடிகாரத்தை பார்த்தாள்.காலை ஆறு மணியாகிவிட்டது.சந்துரு நன்றாக குறட்டை விட்டு தூக்கிக்
கொண்டிருந்தான்.
நான் கண்டது எல்லாம் கனவா? அப்போ இவரு நமக்கு நேத்து நைட் விஸ் பண்ணவே இல்லையா! என்று மனதில் குமுறிக்கொண்டே குளிக்க சென்றாள் சாரு.
சாரு வேகமாக குளித்து கிளம்பி,சந்துரு எழுந்திருக்கும் வரை அவனருகிலே அமர்ந்து ஆசை ஆசையாக சந்துருவின் வாயால் முதல் முதலாக பிறந்தநாள் வாழ்த்து கேட்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருந்தாள்.
சந்துரு எழுந்து "குட் மார்னிங்க" என்று கூறிவிட்டு பாத் ரூம் சென்றுவிட்டான்.
ப்ரெஸ் அப் ஆகிட்டு வந்தவன் சாருவிற்கு பிறந்தநாள் வாழ்த்து எதுவும் கூறாமல் கீழே இறங்கி காபி குடிக்க சென்றுவிட்டான்.
இன்னைக்கு எனக்கு பிறந்தநாளுங்கிறது இவருக்கு தெரியுமா? தெரியாதா? என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு மொபைலை ஆன் செய்தாள் சாரு.
ஆன் செய்ததும் பானுவிடமிருந்து போன் வந்தது.சாருவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தாள் பானு.சாரு ஒரு குட் நியூஸ்.என் பழைய அண்ணா வீட்டுக்கு வந்துட்டாங்க... என்றாள் பானு.
என்ன பானு சொல்லுற? பழைய அண்ணாவா! அது யாரு பானு? உனக்கு ஒரு அண்ணா இருக்காங்கனு தான சொல்லிருக்க என்று சாரு கேட்டதும், என் அண்ணன் கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி பாசமாக இருந்தாங்களோ அந்த மாதிரி இப்போ வீட்டுக்கு திரும்பி வந்துட்டாங்கனு சொன்னேன் என்று கூறினாள் பானு.
அப்படி தெளிவாக சொல்லு பானு என்றாள் சாரு.நேற்று நடந்த அனைத்தையும் சாருவிடம் கூறினாள் பானு.இன்னைக்கு முடிந்தால் நீ வீட்டுக்கு வா சாரு! என்று கூறினாள் பானு.
சரி... இதெல்லாம் இருக்கட்டும்.மாப்பிள சரர் பேர்த் டேக்கு என்ன சர்ப்ரைஸ் கொடுத்தாங்க? என்று கேட்டதும், பதில் ஏதும் சொல்லாமல் அவரு எனக்கு இன்னும் விஸ் கூட பண்ணல.இதுல எங்கிட்டு சர்ப்ரைஸ் கொடுக்க என்று மனதிற்குள்ளே நினைத்து வேதனையில் தவித்தவள் நேரில் வந்து சொல்லுறேன் பானு.என் அம்மா லைன்ல வர்றாங்க என்று கூறி போனை கட் செய்துவிட்டாள் சாரு.
சந்துரு சாருவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுவானா? மாட்டானா? பார்கவியை பரத் மன்னித்து ஏற்றுக் கொள்வானா? மாட்டானா? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்...
- தொடரும் -
* * * * * * * * * * * * * *
இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏