- Messages
- 264
- Reaction score
- 406
- Points
- 63
மிக்க நன்றி சகி🙏😍Aaathi என்ன இது வில்லங்கம் வீடு தேடி வந்து இருக்கே சாரு தான் பாவம் ஹீரோ vera ஏதோ நினைப்பில் சுத்திட்டு இருக்காரு எப்படித்தான் சமாளிக்க போறா? Waiting sis😍
மிக்க நன்றி சகி🙏😍Aaathi என்ன இது வில்லங்கம் வீடு தேடி வந்து இருக்கே சாரு தான் பாவம் ஹீரோ vera ஏதோ நினைப்பில் சுத்திட்டு இருக்காரு எப்படித்தான் சமாளிக்க போறா? Waiting sis😍
மிக்க நன்றி சகோதரி🙏😍😍விரைவில் பதிவு செய்கிறேன்.sam beriya villanaa iruppaapola semma sis sandru valantha kulandhai pola so spr sis waiting for next epi sago 🤩 🤩 💕 💕 💕![]()
![]()
கதையின் விறுவிறுப்பு இன்னும் கூடிக்ககொண்டே போகிறது. அடுத்த பதிவிற்கு வெகு ஆவலாக காத்திருக்கிறேன்.எண்ணங்களே வண்ணங்களாய்...
அத்தியாயம் 12
மேலிருந்து கீழே வந்த சந்துரு நேராக ஜானகி அம்மாவின் அறைக்கு சென்று படுத்து விட்டான்.சமையலறையில் இருந்து சந்துரு தனது அறைக்கு செல்வதை பார்த்த ஜானகி அம்மா, வேகமாக அவரது அறைக்கு விரைந்து சென்றார்.
சந்துரு! என்ன ஆச்சுப்பா? இங்கே வந்து படுத்திருக்க? என்று கேட்டார் சந்துருவின் அம்மா.
என் ரூம்ல சாரு இருக்காம்மா.
அதனால் என்னப்பா சந்துரு? அவள் இப்போ உன்னுடைய பொண்டாட்டி சந்துரு.சாருவை வேற யாரோ விருந்தினர் மாதிரி உன் ரூம்ல தனியாக இருக்க வச்சுட்டு, நீ மட்டும் இங்கே வந்திருக்க என்றார் ஜானகி அம்மா.
இரண்டு நாட்களாக சரியா தூங்காமல் ஒரே அசதியாக இருக்கு அம்மா.
சாருவுக்கும் நம்ம வீடு புதுசு.நான் அங்கே இருந்தால் அவளும் சகஜமாக இருக்க மாட்டாள்.அது தான் அவள் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்னு இங்கே வந்துட்டேன்.
ஒரு பக்கம் நீ சொல்லும் காரணம் எல்லாம் யோசித்து பார்த்தால் சரியாக இருந்தாலும் மறுபக்கம் இது தவறு சந்துரு.
இந்த காலத்துல பிறந்த பசங்க யாராவது இப்படி செய்வாங்களா சந்துரு? எப்படா கல்யாணம் முடியும்.
தனியாக பேசி பழக வாய்ப்பு கிடைக்கும்னு இருப்பாங்க.
அந்த காலத்துல நானும் உன் அப்பாவும் கூட கல்யாணம் முடிந்த மறு நொடியிலிருந்து ஒரு நிமிஷம் கூட பிரிந்து இருந்ததே இல்லை.
இடம் புதுசாக இருந்தாலும் தாலி கட்டிய புருஷன் பக்கத்தில் இருந்தால் எப்படி பட்ட சூழ்நிலையையும் ஒரு பெண் சமாளித்து விடுவாள் சந்துரு.
நீ ரெஸ்ட் எடுத்தாலும் சரி...எடுக்காட்டிலும் சரி...
உன் ரூம்ல சாரு கூட தான் இருக்கனும்.முதலில் உன் ரூம்க்கு கிளம்பு சந்துரு என்றார் ஜானகி அம்மா.
அம்மாவின் பேச்சை மீற முடியாமல் தனது அறைக்கு சென்றான் சந்துரு.
இப்படியாடி வந்து பயமுறுத்துவ பானு? என்று கேட்டாள் சாரு.
நீ மாப்பிள்ளை சார்னு நினைச்சுட்டியா சாரு? என்று சொல்லி கிண்டலடித்து சிரிக்க தொடங்கினாள் பானு.
பானுவிடம் கேட்ட கேள்வியை மறந்து விட்டு பதில் ஏதும் சொல்லாமல் வெட்கத்தில் திரும்பி கொண்டாள் சாரு.
அம்மாடி புதுப்பொண்ணே! வெட்கம் மொத்தத்தையும் கொட்டிடாமல் மிச்ச மீதி கொஞ்சம் வச்சிருமா என்றாள் பானு.
சரி... சரி....முதலில் இதைப்பிடி என்று கூறி சாருவின் கையில் ஒரு மொபைலை கொடுத்தாள் பானு.நேரம் கிடைக்கும் போது எல்லாம் சரியாக போட்டோ எடுத்திருக்கேனா என்று பார்த்துவிட்டு போன் செய்து சொல்லு சாரு.
எனக்கு நேரமாச்சு சாரு.நான் வீட்டுக்கு கிளம்புறேன் என்று கூறிவிட்டு சென்றாள் பானு.
டேய் ஷ்யாம்! வெளியே நின்று அங்கே அப்படி என்னத்தடா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க? இங்கே சீக்கிரம் வா! என்று அழைத்தார் ஷ்யாமின் அம்மா மாலாதி.இங்க நடக்கிறதை பார்த்தியாடா ஷ்யாம்.இந்த சந்துரு அவன் ரூம்ல இருக்காமல் உன் பெரியம்மா ரூம்ல வந்து இருக்கிறான் பாரு.அன்னைக்கு நீ சந்துருவ பத்தி சொல்லும் போது நான் நம்பல.ஆனால் இப்போது நடக்கிறது எல்லாம் வச்சு பார்த்தால் நீ சொன்னதில் சந்தேகமே இல்லடா என்று ஷ்யாமிடம் பேசிக்கொண்டிருந்தார் மாலதி.
புதுசா கல்யாணம் முடித்த யாராவது கல்யாணம் முடிந்த முதல் நாளே பொண்டாட்டியை விட்டுட்டு, வேற ரூம்ல வந்து இப்படி தூங்குவாங்களாடா? என்று ஷ்யாமிடம் சொல்லி கொண்டிருந்தார் மாலதி.
சரிம்மா...பொறுத்திருந்து என்னதான் நடக்குதுனு பார்ப்போம்.இதுவும் ஒரு வகையில் நமக்கு வசதியாக போச்சு என்று மனதில் நினைத்து கொண்டான் ஷ்யாம்.
என்னம்மா பானு! சீக்கிரமா கிளம்பிட்ட? இன்னும் கொஞ்சம் நேரம் இருந்து சாப்பிட்டு போகாலமே பானு என்று கூறினார் ஜானகி அம்மா.
வானம் வேற இருட்டிக்கிட்டு மழை வருவது மாதிரி இருக்கு பானு.நீ தனியாக போக வேண்டாம்மா.
மனோஜை கூட துணைக்கு அனுப்பி வைக்கிறேன்.
மனோஜ்! காரில் பானுவை அழைத்து கொண்டு அவுங்க வீட்டில் பத்திரமாக விட்டுட்டு வந்துருப்பா என்று ஜானகி அம்மா சொன்னதும், மனோஜ்க்கு மனதில் உற்சாகம் தாங்க முடியவில்லை.
அதெல்லாம் வேண்டாம் அம்மா! நான் தனியாக போயிடுவேன் என்றாள் பானு.
பொழுது வேற சாஞ்சிருச்சு.இனி உன்னை தனியாக அனுப்பவது சரியாக இருக்காது பானு.நான் சொல்வதை கேளுமா என்று ஜானகி அம்மா கூறியதும், அவரின் பேச்சை மீறாமல் சரிங்கம்மா என்று கூறினாள் பானு.
கண்ணம்மா! கண்ணம்மா! என் ரூம்ல நீல நிறத்தில் ஒரு பை இருக்கும் அதை எடுத்து கொண்டு வா! என்றார்.
சரிங்கம்மா என்று கூறிய கண்ணம்மா, அந்த பையை எடுத்து வந்து ஜானகி அம்மாவிடம் கொடுத்தார்.
அந்த பையை வாங்கி பானுவிடம் கொடுத்தார் ஜானகி அம்மா.எதுக்கும்மா இதெல்லாம் என்றாள் பானு.
கல்யாண பலகாரம் பழங்கள் தான் பானு. அடிக்கடி வீட்டுக்கு வாமா பானு என்று கூறினார் ஜானகி அம்மா.
அனைவரிடமும் கூறிவிட்டு அங்கிருந்து விடைப்பெற்றாள்.
பானுவிற்காக காரின் முன் பக்க கதவை திறந்து வைத்து கிளம்புவதற்கு தயாராக இருந்தான் மனோஜ்.
வேகமாக வந்த பானு காரின் முன் பக்கம் ஏறாமல், பின் இருக்கையில் உள்ள கதவை திறந்து அமர்ந்தாள்.முன் சீட்டில் வந்து உட்காரு பானு! என்றான் மனோஜ்.
பரவாயில்லை இருக்கட்டும் சார் என்றாள்.
காரினுள் உள்ள கண்ணாடியை பின் இருக்கையில் உள்ள பானுவின் முகம் தெரியுமாரு வைத்தான்.
திடீரென்று காற்று வேகமாக அடிக்க தொடங்கியதும் ஜன்னலின் கதவுகள் டப... டப... டப... வென்று அடிக்க தொடங்கியது.
சந்துருவின் அறையிலிருந்த அனைத்து ஜன்னல் கதவுகளையும் சாரு மூடிக்கொண்டிருக்கும் சமயம் சந்துரு அறைக்குள் நுழைந்தான்.
திடீரென்று இடி இடித்த சத்தத்தில் சாரு பயந்து சந்துருவை கட்டிப்பிடித்ததும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை…
என்று பானுவை நினைத்து பாட்டு பாடிக்கொண்டே காரை
ஓட்டிக்கொண்டிருந்தான் மனோஜ்.
சார்...பாட்டு பாடினது போதும்! ரோட்டை பார்த்து கவனமாக ஓட்டுங்க சார்.சார் ரொம்ப குஷியா இருக்கீங்க போல தெரியுது என்றாள் பானு.
ஆமாம் பானு... முதன் முறையாக என் மாமானார் மாமியாரை பார்க்க போகிறேன்.சந்தோஷம் இருக்காதா என்ன? என்று பதில் சொன்னான் மனோஜ்.
அதுவும் சரிதான்... என்று இழுத்து கொண்டு சிரிக்க தொடங்கினாள் பானு.
நீ வந்ததிலிருந்து உன் முகமே சரியில்லையே ஷ்யாம்.எதுவும் பிரச்சனையாடா? அம்மாகிட்ட எதையும் மூடி மறைக்காமல் சொல்லுப்பா என்று ஷ்யாமிடம் கேட்டார் மாலதி.
அம்மா! மூன்று வருஷத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு என் கன்னத்தில அறைந்தானு சொன்னேன்.நியாபகம் இருக்காம்மா? என்று மாலதியிடம் கேட்டான்.
முடிஞ்சு போன கதையை பத்தி இப்போது எதுக்குடா மறுபடியும் நியாபகம் படுத்துற? என்று கேட்டார் மாலாதி.
அந்த பொண்ணு வேற யாருமில்லை.
இந்த வீட்டிற்கு வந்திருக்கும் புது மருமகள் சாரு தான் அம்மா என்றான் ஷ்யாம்.
என்னடா சொல்லுற? சாருதானா?
நல்லா நியாபகம் இருக்காடா? வேற யாரையாவது பார்த்துட்டு மாத்தி எதுவும் சொல்லாதாடா என்றார் மாலதி.
அம்மா! நான் அத்தனை பேர் முன்னாடி அவமானப்பட்டதுக்கு காரணமாக இருந்த அந்த முகத்தை அவ்வளவு சீக்கிரமா எப்படி மறப்பேன்.என் கண்ணத்துல அறைந்தது இந்த சந்துருவோட பொண்டாட்டி சாரு தான் என்றான் ஷ்யாம்.
எவ்வளவு திமிரு பிடித்தவளாக இருந்திருந்தால் ஆம்பள பையனு கூட பார்க்காமல் எல்லாரு முன்னாடி உன்னை கை நீட்டி அடிச்சிருப்பா.
இத்தனை நாள் யாருனு தெரியாமல் தேடிக்கிட்டு இருந்தோம்.
என் பையன் மேலே கை வச்சுட்டாள.
இனி எப்படி இந்த குடும்பத்துல நிம்மதியாக வாழ போறானு பார்க்குறேன்.
சாருவை நிம்மதியாக வாழ விடக்கூடாது அம்மா.வீட்டில் உள்ள எல்லாரு முன்னாடியும் அவமானப்படுத்தி வீட்டை விட்டே அடித்து துரத்திவிடனும்மா.
அப்போது தான் என் மனசு திருப்தி அடையும் என்றான் ஷ்யாம்.
கார் பானுவின் வீட்டு வாசலில் வந்து நின்றது.பானுவின் அப்பா ஒரு குடையை கையில் பிடித்துக்கொண்டு காரை நோக்கி வந்தார்.
காரில் பானு வந்திருப்பதை பார்த்ததும், டிரைவர் தம்பி! கொஞ்சம் இருங்கள்! பானுவை விட்டுட்டு வந்து உங்களை அழைச்சிட்டு போகிறேன் என்றதும் பானு சிரித்தாள்.
அவரது குடையில் பானுவை அழைத்து சென்று வீட்டினுள் விட்டார்.அதற்கு பிறகு மனோஜையும் அழைத்து கொண்டு வீட்டிற்குள் வந்ததும் பானுவின் அம்மா மனோஜை வீட்டிற்குள் வரவேற்று உபசரித்தார்.
ரொம்ப நன்றி டிரைவர் தம்பி! என்று மனோஜை பார்த்து மீண்டும் சொல்லும் போது, அப்பா! அவுங்க டிரைவர் இல்லப்பா.மாப்பிள்ளையோட நெருங்கிய நண்பர்.அவரது பெயர் மனோஜ் என்றாள் பானு.நான் அவரை டிரைவர் தம்பினு கூப்பிடும் போதே சொல்ல மாட்டியாம்மா பானு? மன்னிக்கனும் தம்பி! தெரியாமல் சொல்லிட்டேன் என்றார் பானுவின் அப்பா.
இதுக்கு எதுக்கு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் கேட்கிறீங்க அங்கிள்.நானும் டிரைவர் மாதிரி இருப்பதால், நீங்கள் அப்படி சொன்னதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று மனோஜ் கூறியதும், அவனுடைய நகைச்சுவையான பேச்சை கேட்டு அனைவரும் சிரித்தனர்.
பானுவின் அப்பா மனோஜுடன் பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில் சுட சுட டீயும், சூடான மெது வடையையும் கொண்டு வந்து மனோஜிடம் கொடுத்தார் பானுவின் அம்மா.சாப்பிட்டு முடித்ததும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு புறப்பிட்டான் மனோஜ்.
மனோஜ் கிளம்பி சென்றதும் பானுவின் அப்பா, மனோஜ் தம்பி நல்லா ஜாலியாகவும் மரியாதையாகவும் பேசிகிறார்ல என்று பானுவின் அம்மாவிடம் கூறி கொண்டிருப்பதை கேட்ட பானுவிற்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
சாருவை அடித்து துரத்தும் அளவுக்கு சாருவின் மேல் அப்படி என்ன குரோதம் ஷ்யாமிற்கு? என்று இனி வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்...
- தொடரும் -
* * * * * * * * * * * * * *
இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
தங்கள் தொடர் விமர்சனங்கள் மற்றும் அன்பிற்கு மிக்க நன்றி அம்மா🙏🙏🙏கதையின் விறுவிறுப்பு இன்னும் கூடிக்ககொண்டே போகிறது. அடுத்த பதிவிற்கு வெகு ஆவலாக காத்திருக்கிறேன்.
மிக்க நன்றி சிஸ்🙏கண்டிப்பா இந்த ஷ்யாம் மேல தான் தப்பு இருக்கு...வீட்டை விட்டு துரத்தப்போறானமா அதையும் பார்க்கலாம்.....ஜானகி அம்மா உபயத்தால மனோஜ் நல்ல அனுபவிக்கறாடா நீ...பானுவோட அப்பா டிரைவர்னு சொன்னது
நைஸ் கோயிங் சிஸ்
திக்திக் குறையாமல் கொண்டு செல்கிறீரர்கள். பரபரப்புடன் காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு.எண்ணங்களே வண்ணங்களாய்...
அத்தியாயம் 13
மின்சாரம் துண்டிக்கப்பட்ட ஐந்து நிமிடத்திலேயே மீண்டும் மின்சாரம் வந்தது.
திடீரென அறைக்குள் கலகலவென சிரிப்பு சத்தம் கேட்டது.சிரித்தது வேறு யாருமில்லை சந்துரு தான்.
சாரு மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள்.அவளது கைகளை வேகமாக எடுத்தாள்.அவள் கட்டி அணைத்திருந்தது சந்துருவை அல்ல.அங்கிருந்த கட்டிலின் ஒரு மூலையில் இருந்த தூணை தான்.
சந்துருவின் மீது கொண்ட காதல் சாருவின் கண்ணை மட்டும் அல்ல, அவளது தொடு உணர்வையும் மறத்து போக செய்துவிட்டது.
சந்துருவின் தேகத்திற்கும் தேக்கு மரக்கட்டிலிருக்கும் வித்தியாசம் தெரியாமல் இறுக்க கட்டிப்பிடித்திருந்தாள் சாரு.
அதைப்பார்த்த சந்துரு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டிருந்தான்.
சாரு செய்வதொன்று அறியாது சத்தம் வராது சிரித்தாள்.நல்லா பல்பு வாங்கிட்டியே சாரு! என்று மனதில் நினைத்து கொண்டு வெட்கத்தில் தலை குனிந்து நின்றாள்.
நீங்க கட்டிலில் படுங்க.எனக்கு முக்கியமான ஒரு ப்ராஜெக்ட் ஒர்க் இருக்கு.இன்னைக்கு நைட்குள்ள முடிச்சாகனும் என்று சாருவிடம் கூறினான்.
சரிங்க என்று பதில் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினாள் சாரு.
ஷோபாவில் உட்கார்ந்து லேப்டாப்பை ஆன் செய்து வேலை செய்ய தொடங்கினான் சந்துரு.
சந்துருவை பார்த்தவாரே படுத்திருந்தாள் சாரு.நான் எவ்வளவு ஆசை ஆசையாக உங்களிடம் மனம் விட்டு பேசனும் இருந்தே தெரியுமாங்க.
இன்னைக்குனு பார்த்தா உங்களுக்கு வேலை வரனும்.இதை நாளைக்கு பார்த்துக்க கூடாதாங்க என்று சந்துருவிடம் கேட்க வேண்டும் போல் தோன்றியது சாருவிற்கு.
ஆனால் இவை எதுவும் சந்துருவிடம் கேட்காமல் அவனையும் அவன் வேலை செய்யும் அழகையும் ரசித்து கொண்டிருந்தாள் சாரு.அவனை பார்த்து கொண்டே அசந்து உறங்கிவிட்டாள்.
அதிகாலையில் எழுந்து கண்களை விழித்து பார்த்தால் எதிரே சந்துரு உறங்காமல் வேலை செய்து கொண்டிருந்தான்.
வேகமாக எழுந்து குளித்து விட்டு சமையலறைக்கு சென்றாள்.காபி போட்டு சந்துருவிற்கு கொடுக்கலாம் என்று நினைத்து சமையலறைக்கு வந்தால் எந்தெந்த பொருள் எங்கே இருக்கிறது? என்று தெரியாமல்
தேடிக்கொண்டிருந்தாள்.
பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டு கண்ணம்மா எழுந்து சமையலறைக்கு வந்தார்.எதுவும் வேணுமா சின்னம்மா? சொல்லுங்க...நான் எடுத்து தருகிறேன் என்றார் கண்ணம்மா.அம்மா! நீங்க என்னை சாருனே கூப்பிடுங்கள்.
இல்லங்க சின்னம்மா...அம்மா! நான் உங்க பொன்னு மாதிரி தான்.நீங்க தாராளமாக என் பெயர் சொல்லி கூப்பிடலாம் என்றாள் சாரு.அப்போதும் பெயர் சொல்லி கூப்பிட தயக்கப்பட்டு சாரும்மானு கூப்பிட்டார் கண்ணம்மா.
அதன்பிறகு காபி போடுவதற்கு தேவையான பொருட்கள் எங்கே இருக்கிறது? என்று கேட்டாள் சாரு.
நீங்க ரூமிற்கு போங்க சாரும்மா.நான் ஐந்து நிமிஷத்தில் காபி போட்டு உங்க ரூம்மிற்கு எடுத்து வருகிறேன் என்றார் கண்ணம்மா.நீங்க கொஞ்ச நேரம் இப்படி உட்காருங்கம்மா என்று சொல்லி மூன்று கப் காபி போட்டு, ஒரு கப்பை கண்ணம்மாவிடம் கொடுத்து குடிக்க சொன்னாள்.
மற்ற இரண்டு கப்பை தட்டில் வைத்து அவளது அறைக்கு எடுத்து சென்றாள்.
சந்துருவிடம் காபியை கொடுத்தாள்.
சாருவிடம் தங்க்ஸ் என்று கூறினான் சந்துரு.
முதன் முதலாக சந்துருவிற்காக போட்டு வந்த காபிக்கு ஏதேனும் காமெண்ட்ஸ் அவனிடம் இருந்து வருமா? என்று எதிர்ப்பார்த்தாள் சாரு.
ஆனால் சந்துருவின் கவனம் முழுவதும் வேலையில் இருந்தது.சந்துரு காபி குடித்ததும் கப்பை எடுத்து கொண்டு கீழே வந்தாள்.அதற்கு பிறகு பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தாள்.தனது மருமகளை பார்த்த ஜானகி அம்மாவின் மனம் நெகிழ்ந்தது.
சாரு! இன்றைக்கு நம்ம குலதெய்வம் கோவிலுக்கு போகனும்.சந்துருவ சீக்கிரம் குளிச்சு ரெடியாக சொல்லும்மா என்றார் ஜானகி அம்மா.
அவுங்க நேத்து இராத்திரி முழுக்க ஆபிஸ் வேலை பார்த்துட்டு இப்போது தான் தூங்குறாங்க அத்தை என்றாள் சாரு.
காலங்காத்தால யாரும்மா வீடு முழுக்க புகை போட்டுக்கிட்டு இருக்கா? என்று கேட்டான் ஷ்யாம்.இது புகையில்லடா ஷ்யாம்.சாம்பிராணி ஊதுபத்தி வாசனை.என்னமோ ஒன்னு என்று சொல்லி விட்டு இருவரும் வீட்டின் நடுப்பத்திக்கு வந்து பார்த்தனர்.
ஜானகி அம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதை பார்த்த மாலதி, மாமியாருக்கு இப்போவே ஐஸ் வைக்க ஆரம்பிச்சுட்டாளா இந்த சாரு என்று ஷ்யாமிடம் கூறினாள்.
நீங்க இப்படியே வெட்டியா பேசிக்கிட்டே இருக்க வேண்டியது தான்.கடைசி நாம்ம அவளை வீட்டை விட்டு விரட்டுவதற்குள்ள அவள் நம்மள விரட்டிடுவா போல என்று மாலதியிடம் கூறினான் ஷ்யாம்.
சந்துருவிடம் ஆசிர்வாதம் வாங்க ரூம்மிற்கு வந்து பார்த்தாள் சாரு.
சந்துருவோ வேலை பார்த்த களைப்பில் ஷோபாவிலே படுத்து உறங்கிவிட்டான்.
அவன் காலை மட்டும் தொட்டு கும்பிட்டாள்.
மொபைலை எடுத்துப்பார்த்தால், பானு பத்து முறை அழைத்திருக்கிறாள்.
பால்கனியில் நின்று பானுவிற்கு போன் செய்தாள் சாரு.முதல் ரிங்கிலே எடுத்தாள் பானு.
என்னம்மா புதுப்பெண்ணே! மேடம் ரொம்ப பிஸியாகிட்டீங்க போல தெரியுது.உனக்கு நேத்து ராத்திரி எத்தனை தடவை கால் பண்ணினேன் தெரியுமா? வீட்டுக்கு பத்திரமாக வந்து சேர்ந்திட்டேனு சொல்ல தான் உனக்கு கால் பண்ணிருந்தேன் என்று சாருவை பேசவிடாமல் பானுவே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.
மேடம் பேசி முடிச்சுட்டீங்களா?
நான் பேசலாமா? என்று கேட்டாள் சாரு.
உன்னை வீட்டிற்கு கூட்டி கொண்டு போய் விட்டது மனோஜ் அண்ணா தானு எனக்கு தெரியும்.
அது எப்படி உனக்கு தெரியும்? நீதான் கீழேயே இறங்கி வரவில்லையே! என்று கேட்டாள் பானு.
நீ காரின் முன் சீட்டில் ஏறாமல் பின் சீட்டில் உட்கார்ந்தது எல்லாத்தையும் மாடியிலிருந்து பார்த்துக்கொண்டு தான் இருந்தேன் என்றாள் சாரு.
என் மொபைலையும் சார்ஜ் இல்லாமல் இருந்தது.மனோஜ் அண்ணா உன்னை பத்திரமாக வீட்டில் கொண்டு போய் சேர்த்திருப்பாங்கனு தெரியும் என்று சாரு சொன்னதும் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தாள் பானு.
ஹலோ மேடம்! என்ன சத்தமே கேட்கல?லைன்ல தான் இருக்கீங்களா? என்று சாரு கேட்டதும், பானு வெட்கப்படுவதை மறைத்து கொண்டு சாருவை கிண்டலடிக்க தொடங்கினாள் பானு.
மாப்பிள்ளை சார் என்ன பண்ணுறாங்க சாரு? என்று கேட்டாள் பானு.
அவுங்க அசந்து தூங்கிக்கிட்டு இருக்காங்க.ஓ! அவ்வளவு அலுப்பா? என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் பானு.
ஏய் பானு! கொஞ்சம் சிரிக்கிறதை நிறுத்து.என்னனு விஷயம் புரியாமல் நீயா எதாவது கற்பனை கட்டாத பானு.
அவுங்களுக்கு ஏதோ முக்கியமான ஆபிஸ் ஒர்க் முடிக்கனுமா.நேத்து இராத்திரி முழுக்க கண் முழுச்சு வேலை பார்த்துட்டு இப்போ தான் தூங்குறாங்க என்றாள் சாரு.
மாப்பிள்ளை சாரோட கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவில்லாமல் போச்சு.சாந்தி முகூர்த்தம் அதுவுமா யாராவது இப்படி இராத்திரி முழுக்க உட்கார்ந்து வேலை பார்ப்பாங்களா சாரு? என்று பானு கேட்டாள்.
ஆபிஸ்ல ஏதாவது அவசர தேவையாக கூட இருந்திருக்கலாம்.எதுவும் தெரியாமல் பேசாத பானு என்றாள் சாரு.
நீ எப்படியும் உன் கணவரை விட்டு கொடுக்க மாட்டேனு தெரியும்.
எங்கிட்டோ நல்லா இருந்தா சரிதான் என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டாள் பானு.
மாலதி வீட்டில் யாருமில்லாத நேரம் பார்த்து சந்துருவின் ரூம்மிற்கு செல்லும் படிக்கட்டுகளில் எண்ணெய் ஊற்றி விட்டாள்.
இன்னும் கொஞ்ச நேரத்துல பாரு ஷ்யாம் அந்த சாரு படிக்கட்டிலிருந்து இறங்கி வருவாள்.படிக்கட்டில் காலை வச்சதும் வழுக்கி விழுந்து உருண்டு பிரண்டு கை, கால், இடுப்பெலும்புலாம் உடஞ்சு ஒரு மாசத்துக்கு எழுந்திருக்கவே முடியாமல் ஆஸ்பத்தரியில் படுத்த படுக்கையாக கிடக்கப்போறா பாரு என்று ஷ்யாமிடம் கூறினாள் மாலதி.
சூப்பர் அம்மா! என்று சொல்லி மாலதியை கட்டிப்பிடித்தான் ஷ்யாம்.
யாரோ வருவது மாதிரி இருக்கு ஷ்யாம்.சீக்கிரம் வா ஷ்யாம்! அப்பறம் நம்ம மேல சந்தேகம் வந்துவிடும் என்று கூறி அவர்களது அறைக்கு சென்றனர்.
சாருவிடம் பேசி வைத்ததும் மனோஜிற்கு போன் செய்தாள் பானு.
குட்மார்னிங்ங மேடம்.அதிசயமாக இருக்கு! எப்போதும் பேஸ்புக்ல தான சேட்டிங் வருவீங்க.இன்றைக்கு என்னடான காலையிலேயே போன் போடுறீங்க.
நம்ம கல்யாணத்துக்கு என் மாமானார் மாமியார் பச்சைக்கொடி காட்டீடாங்களா? என்று கேட்டான்.
சார்...சார்...என்னை கொஞ்சம் பேச விடுங்க என்றாள் பானு.
ம்ம்...சொல்லுங்க மேடம் என்றான் மனோஜ்.
உங்க ப்ரெண்ட் ஏன் இப்படி இருக்காரு?
யாரு சந்துருவையா சொல்லுற பானு என்று கேட்டான்.
ஆமாம் சார்...
அவனுக்கு என்ன ராஜா மாதிரி தான இருக்கிறான் என்றான் மனோஜ்.
காமெடியா? எனக்கு சிரிப்பே வரலை சார் என்றாள் பானு.
சரி விடு...நீ சொல்ல வந்ததை தெளிவாக சொல்லு பானு என்றான் மனோஜ்.
நேத்து இராத்திரி என்ன நடந்தது தெரியுமா?என்று பானு சொல்லி முடிக்கும் முன்னரே அதெல்லாம் நமக்கு எதுக்கு பானு? புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும் என்று அவன் பேச தொடங்கியதும்.....
சார்...சார்....ரொம்ப ஓவரா யோசிக்காதீங்க...நான் சொல்ல வந்ததே வேற விஷயம் என்றாள் பானு.உங்க ஆருயிர் தோழன் நேத்து இராத்திரி முழுக்க உட்கார்ந்து ஆபிஸ் வேலை பார்த்திருக்கிறார் என்றாள் பானு.
என்ன சொல்லுற பானு? நிஜமாகவே?என்று கேட்டான் மனோஜ்.
சரி நான் பார்த்துக்கிறேன்.நீ ஸ்கூலுக்கு கிளம்பு என்று கூறிவிட்டு நேராக சந்துருவின் அறைக்கு சென்றான்.
சாரு! சாரு! என்று சாருவை அழைத்தார் ஜானகி அம்மா.
இதோ வருகிறேன் அத்தை என்று கூறிக்கொண்டு கீழே இறங்க தொடங்கினாள் சாரு.
சாரு வழுக்கி விழுந்து விட்டாளா?சாருவிற்கு என்ன நடந்தது? என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...
- தொடரும் -
* * * * * * * * * * * * * *
இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
தங்களது தொடர் விமர்சனங்களுக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி அம்மா🙏😍திக்திக் குறையாமல் கொண்டு செல்கிறீரர்கள். பரபரப்புடன் காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு.