Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL எண்ணங்களே வண்ணங்களாய் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
753
Reaction score
861
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அன்பிற்குரிய வாசகர்களுக்கு வணக்கம்🙏,

இது என்னுடைய முதல் நாவல்.படித்து விட்டு தங்களது விமர்சனங்களை சகாப்தம் தளத்தில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


மிக்க நன்றி,


அன்புடன்
திருமதி.ராஜதிலகம் பாலாஜி

* * * * * * * * * * * * * * * *

அத்தியாயம் 1


"புதுமாப்பிள விட்டா இப்போவே ஊருக்கு போய் பொண்ணு கழுத்துல தாலிக் கட்டிடுவான் போல தெரியுது.
பொண்ண நேர்ல பார்க்காமலே வீடியோ காலில் பார்த்து சம்மதம் சொல்லியவன்டா இவன்" என்று மாறி மாறி சந்துருவை அவனது நண்பர்கள் கிண்டலடித்து கொண்டிருந்தனர்.


"எப்போடா பேஜ்லர் பார்டி தரப்போற ?" என்று கேட்க அவர்கள் கூறிய எதுவுமே காதில் விழாதது போல, லேப்டாப்பை ஆன் செய்து மும்முரமாக வேலை பார்க்க தொடங்கினான் சந்துரு.


"டேய்! சந்துரு என்னடா? நாங்கள் உங்கிட்ட தான் பேசிக்கிட்டு
இருக்கோம்.நாங்க வேற யாரையோ பத்தி பேசுற மாதிரியும், உனக்கும் இதுக்கும் எந்தவொரு சம்பந்தமே இல்லாத மாதிரியும், நீ எந்த ரியாஸ்கான் இல்லமா உன் வேலையை பார்த்துக்கிட்டு இருக்கடா சந்துரு?" என்று கேட்டனர் அவனது நண்பர்கள்.


"இன்னைக்கு மதியம் எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு.
அதுக்குள்ள ஒரு சில வேலைகளை முடிக்கனும்.இதைப் பற்றி பிறகு பேசிக்கலாம்..." என்று கூறிவிட்டு தனது வேலையில் கவனம் செலுத்தினான் சந்துரு.


சந்துரு அமெரிக்காவில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்கிறான்.
நண்பர்களுடன் சேர்ந்து ஒரே ரூமில் வசித்து வருகிறான்.


சாரு, கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறாள்.அவளது குடும்பம் மிகப்பெரிய கூட்டுக்குடும்பம்.
கூந்தலில் மல்லிகை பூச்சூடி, நீல நிற சேலை அணிந்து முகத்தில் புன்கைப்பூ பூத்த முகத்துடன் பூலோக தேவதை பூமிக்கு இறங்கி பள்ளிக்கு வந்தது போல காட்சியளித்தாள் சாரு.
பெண்களே பொறாமைப்பட வைக்கும் அளவிற்கு அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கினாள் சாரு.
அன்பான உள்ளம் கொண்டவள்.
பொறுமையின் சிகரமவள்.இரக்க குணம் படைத்தவள்.அவள் பேசும் பேச்சில் கனிவும் தெளிவும் இருக்கும்.
மொத்தத்தில் பாரதி கண்ட புதுமைப் பெண் சாரு.


ஒரு நாள் ஆசிரியர்களின் ஓய்வு அறையில் அமர்ந்து புத்தகம் படித்து கொண்டிருந்தாள் சாரு.அப்போது அவளுடன் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், "அமெரிக்கா மாப்ள என்ன சொல்கிறார் சாரு? என்றதும் நாணத்தில் முகம் சிவந்து போனாள் சாரு.உங்கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் சாரு.நாங்கள் எல்லோரும் சேர்ந்து அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை டவுனுக்கு போய் ஆசிரியர் தினத்துக்கு செட் சேலை எடுக்கலாம்னு முடிவு செய்திருக்கிறோம்.நேற்று நீ லீவு என்பதால் உன்னிடம் சொல்ல முடியவில்லை.சேலை எடுக்க நீயும் வருகிறாயா சாரு?"


"சும்மா இருங்க டீச்சர்! இனிமேல் அவளுக்கு நம்ம கூட பேசலாம் நேரம் கிடையாது.மாப்ள சார் கிட்ட கடலை போடவே நேரம் சரியாக இருக்கும்" என்றாள் சாருவின் நெருங்கிய சிநேகிதியும், அங்கு பணிபுரியும் ஆசிரியரான பானு.


"சும்மாயிரு பானு! என்றாள் சாரு.அந்த ஞாயிற்றுக்கிழமை தான் வீட்டில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடக்க இருக்குது டீச்சர்.ஸாரி டீச்சர்... என்னால வரமுடியாது."


"நான் சொன்னது உண்மையாகிடுச்சுல டீச்சர்... என்று சிரித்து கொண்டிருக்கும் போது ஸ்கூல் பெல் அடித்த சத்தம் கேட்டது.எனக்கு அடுத்த கிளாஸ்க்கு டைம் ஆகிடுச்சு டீச்சர்.பிறகு பேசலாம்..." என்று சொல்லிவிட்டு தன்னுடைய வகுப்பிற்கு பாடம் எடுக்க கிளம்பிவிட்டாள் சாரு.


அந்திசாயும் மாலை நேரம், தனது வேலையை முடித்துவிட்டு வீட்டு தோட்டத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டே வானத்தை நோக்கி பார்த்து கொண்டிருந்தான் சந்துரு.சந்துருவின் தோள்பட்டையை தட்டினான் மனோஜ்.


"என்னடா சந்துரு! இன்னும் முடிந்ததையே நினைத்து கொண்டிருக்கிறாயா?" என்று கேட்டான் மனோஜ்.


"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடா மனோஜ்..."


"நீ மனசுல நினைக்கிறதை மறைக்கனும்னு நினைத்தாலும், உன் முகம் நல்லா காட்டிக் கொடுக்குது சந்துரு.அதையெல்லாம் விட்டு தள்ளுடா.காலப்போக்கில் எல்லாம் சரியாகிடும்.உனக்கு மூன்று முறை அம்மா போன் பண்ணியும் நீ போன் எடுத்து பேசவில்லையாம்.அம்மா எனக்கு போன் பண்ணாங்க.முதலில் அம்மாவிடம் போன் பண்ணி பேசுடா" என்றான் மனோஜ்.


"அந்த பொண்ணுக்கிட்ட இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை போன் பண்ணி பேச சொல்லுறாங்க.எனக்கு அதுல சுத்தமாக விருப்பம் இல்லடா..." என்றான் சந்துரு.


"லூசாடா நீ! அடுத்த மாதம் கல்யாணம் வச்சுக்கிட்டு பேச இஷ்டமில்லங்கிற.
அந்த பொண்ணு எவ்வளவு எதிர்பார்ப்புடன் இருப்பாங்க.ஒழுங்கா அந்த பொண்ணுட்ட பேசுகிற வழியப்பாரு" என்றான் மனோஜ்.


சனிக்கிழமை இரவு வந்தது.சாருவிற்கு மனதில் உற்சாகம் தாங்க முடியவில்லை.சாரு வேகமாக சென்று தனது நாட்குறிப்பு டைரியில் பல கனவுகளுடன் காதல் கவிதைளை கொட்டும் அருவிப்போல எழுதித் தீர்த்தாள் சந்துருவை நினைத்து...


எழுதி முடித்து படுக்கை அறைக்கு வந்த சாருவால் சந்தோஷத்தில் தூங்க முடியவில்லை.கண்ணை மூடினால் சந்துருவின் முகம்தான்.அவரது குரல் எப்படி இருக்கும்? என்று கற்பனையில் சந்துருவுடன் பேசுவது போல பேசிப் பார்த்தாள்.அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து தேவதை போல கிளம்பி சந்துருவின் அழைப்பிற்காக மொபைலை கையிலே வைத்துக் கொண்டு மணியையும் பார்த்தாள், மொபைலையும் பார்த்தாள்.


போன் ரிங் அடித்ததும் வேகமாக எடுத்து, "ஹலோ!" என்று சாரு சொல்ல "வணக்கம் மேடம்! நாங்க வங்கியில் இருந்து பேசுகிறோம்.உங்களுக்கு லோன் வேணுமா மேடம்?" என்று வங்கியிலிருந்து அழைப்பு வந்தது.
இல்லங்க சார் வேண்டாம்! என்று கூறி ஃபோன் காலை கட் செய்தாள்.
நேரங்காலம் தெரியமால் இவுங்க வேற இந்த நேரத்தில் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மீண்டும் ஒரு அழைப்பு மணி வந்தது.நம்பரை பார்த்தாள் சாரு.வெளிநாட்டு நம்பராக தான் இருந்தது.


சாரு ஆவலுடன் "ஹலோ.!" என்று சொல்ல எதிர்த்தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.
தனது இனிமையான குரலில் மீண்டும் "ஹலோ!"என்று கூறினாள்."ஹாய்!" என்று ஒரு குரல் கேட்டதும் சாருவின் இதயத்துடிப்பு வழக்கத்தை விட வேகமாக துடிக்க ஆரம்பித்தது.


என்ன தான் ஆசிரியராக இருந்தாலும் தன் வருங்கால கணவருடன் முதல் முதலாக பேசும்போது சந்தோஷத்தில் பதற்றம் ஏற்படத்தானே செய்யும்.
அடுத்து அவள் பேச ஆரம்பிக்கும் போது திடீரென 'டொய்ங்.... டொய்ங்னு....' ஒரு சத்தம் கேட்டது.



சாரு சந்துருவுடன் பேசினாளா? இல்லையா? என்ன நடந்தது? என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.


- தொடரும் -

* * * * * * * * * * * * * * * *

இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துக்களை அழுத்தி பதிவு செய்யவும்.🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...

அத்தியாயம் 2


"ஏன்டா சந்துரு! இப்படி பண்ணுன?" என்று கேட்டான் மனோஜ்.


"நான் தான் ஆரம்பத்தில இருந்தே அந்த பொண்ணுட்ட பேச
இஷ்டமில்லைனு சொல்லிக்கிட்டே இருக்கேன்.நீதான் நான் சொல்லுற எதையும் கேட்காமல் போன் பண்ணி கொடுத்த மனோஜ்" என்றான் சந்துரு.


"ஹாய்... மட்டும் சொன்னவன் கூட ஒரு வார்த்தை சேர்த்து பேசினாதான் என்ன? எதுவும் குறைந்து போகிடுவாயா? என்றான் மனோஜ்.
உனக்கு பிடிக்கலைனா நேரடியா அம்மாக்கிட்ட சொல்லிட வேண்டியது தானடா.உனக்கு கல்யாணம் செய்ய விருப்பமில்லைனு.தேவையில்லாமல் ஒரு பொண்ணோட மனசுல ஆசையை வளர்த்துட்டு, அந்த பொண்ண ஆசைக்காட்டி மோஷம் செய்ய போறீயாடா?" என்று கோபமாக பேசினான் மனோஜ்.


"அம்மாட்ட மூன்று வருஷமா இல்லாத பொல்லாத சாக்கு போக்குலாம் சொல்லி, பார்த்த எல்லா பொண்ணையும் தட்டிக்கழுச்ச மாதிரி, இப்பவும் ஏதாவது குறைசொல்லி இந்த பொண்ணையும் பிடிக்கலைனு சொல்லிட வேண்டியது தானடா?"


"ஒன்றும் பேச முடியாமல் அம்மாவின் பேச்சை மறுக்க முடியாத சூழ்நிலை கைதியாகிவிட்டேன்" என்று பதில் கூறினான் சந்துரு.


"அம்மா இந்த முறை நீ சொல்வதை நான் கேட்க மாட்டேன் சந்துரு.நான் பார்த்து சொல்லுகிற பொண்ணு கழுத்துல நீ வந்து தாலியக்கட்டினா போதும்.அதையும் மீறி மாட்டேனு, நீ ஏதாவது சொன்ன நம்ம வீட்டில கல்யாணத்துக்கு பதிலாக கருமாரி தான் நடக்கும் பார்த்துக்கோ அப்படினு சொல்லிட்டாங்க."


"இதுக்கு மேல நான் என்னடா செய்ய முடியும்? அதான் வேற வழியில்லாமல் சம்மதம் சொல்லிட்டேன்."


"அப்படினா! அதுக்கு ஏற்ற மாதிரி நடக்க முயற்சி செய் சந்துரு. கல்யாணம்னு சொன்னாலே எல்லாருடைய மனசுலையும் பல மனக்கோட்டை கட்டி வச்சுருப்பாங்க.
பசங்கள விட பொண்ணுங்களுக்கு ரொம்ப கனவுகளும் எதிர்பார்ப்பும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
வீடியோ காலில் அந்த பொண்ணு முகத்தைக்கூட நீ சுத்தமா பார்க்கல.
அதையெல்லாம் நான் ஆரம்பித்துல இருந்து உன்னை கவனிச்சுக்கிட்டு தான் வர்றேன்.அம்மா மெயிலில் அனுப்பி வைத்த அந்த பொண்ணு போட்டோவையும் பார்க்கல.
இன்னைக்கு வரை அந்த மெயில ஓபன் செய்து நீ பார்க்கவே இல்லங்கிறதும் எனக்கு தெரியும்.நீ போகிற போக்கில போய் கொஞ்சம் விட்டு பிடிக்கலாம்னு பார்த்தால், நீ உன் எண்ணத்தை கொஞ்சம் கூட மாற்றிக்கொள்வது மாதிரி தெரியவே இல்லை."


"ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கோ சந்துரு.நடந்து முடிந்ததை நம்மால் மாற்ற முடியாது, ஆனால் இனி நடக்க இருப்பதை நம்மால் மாற்ற முடியும்.நம்ம மனசுதான் எல்லாத்துக்கும் ஆணி வேர்.உன் எண்ணங்களை மாற்ற முயற்சி செய்டா நண்பா."


"நான் சொல்லுறதை சொல்லிட்டேன்.
யோசிச்சு முடிவு எடுக்க வேண்டியது உன் கையில்தான் இருக்கு.நாளைக்கு காலையில 8 மணிக்கு ப்லைட்ங்கிறத மறந்துடாத.சரி, டைம் ஆச்சு! நீ போய் தூங்கு.மீதி கதையை நாளைக்கு ப்லைட்ல போய் பேசிக்கலாம்" என்றான் மனோஜ்.


அழைப்பு துண்டிக்கப்பட்டது கூட தெரியாமல் "ஹலோ! ஹலோ!" என்று சாரு மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்தாள்.'டொய்ங்...டொய்ங்...' சத்தம் கேட்டவுடன் மொபைலை பார்த்த அவளது முகம் வாடிய மலர் போல மாறியது.திடீரென்று அவள் அறையின் கதவை வேகமாக பல கரங்கள் சேர்ந்து தட்டிய ஓசையை கேட்டு கதவை திறந்தாள் சாரு.


அவளது தங்கைகள் வந்து "அக்கா! தாத்தா முகூர்த்தக்கால் பூஜை ஆரம்பிக்க போறாங்கலாம்.உங்கள கையோடு அழைச்சுட்டு வரச் சொன்னாங்க..." என்று கூறினார்கள்.


"சரி வாங்க போகலாம்..." என்று கூறிக் கொண்டு தன் தங்கைகளுடன் சென்று முகூர்த்தக்கால் பூஜை நிகழ்வில் கலந்து கொண்டு சாஸ்திர சம்பிரதாய முறைகளை செய்ய தொடங்கினாள் சாரு.


மூத்த தங்கை மதி, மெதுவாக சாருவின் காதருகே சென்று "மாம்ஸ் என்ன சொன்னாங்க அக்கா?" என்று கேட்டாள்.


"பேசுறதுக்குள்ள சிக்னல் கிடைக்காமல், கால் கட் ஆகிடுச்சு மதி."


"சரி விடுங்க... அடுத்த வாரம் நேரில் பார்த்து பேசிடலாம்..." என்று கூறிவிட்டாள்.


"சரி எல்லாரும் சீக்கிரம் சாப்பிட்டு ரெடி ஆகுங்க.டவுன்ல போய் எல்லாருக்கும் ஜவுளி எடுத்துட்டு வந்திடுவோம்.மாப்பிள்ளை அடுத்த வாரம் வந்ததும், அவரைப் பார்க்க போகும் போது புது துணி வாங்கி கொடுக்கனும்ல.அவருக்கும் சேர்த்தே எடுத்துட்டு வந்திடலாம்..." என்றார் சாருவின் தாத்தா.


சாருவின் குடும்பம் பரம்பரை ஜமீன் குடும்பம்.தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை என்று ஒட்டு மொத்தமாக காலம் காலமாக சேர்ந்து வாழும் கூட்டுக்குடும்பம்.ஊரே கண்டு ஆச்சரியப்படும் வகையில் அவ்வளவு ஒற்றுமையாக, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து எப்போதும் கலகலவென சந்தோஷமாக வாழும் அன்புக் குடும்பம் தான் சாருவின் குடும்பம்.


எல்லோரும் சாப்பிட்டு முடித்த பின்னர், வண்டியில் ஏறினார்கள்.வண்டி கிளம்பியதும் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியாக ஆடிப் பாடி கொண்டிருந்தனர்.டவுனும் வந்தது.


ஜவுளி கடையினுள் சென்றதும், எல்லாரும் உங்களுக்கு பிடிச்ச துணியை எடுத்துட்டு கடைசியாக பில் போடுற இடத்துக்கு வந்திடுங்க..." என்று தன் குடும்பத்தாரிடம் கூறினார் தாத்தா.


சாரு மட்டும் தாத்தாவுடன் இருந்தாள்
."வாடா சாரு! நாம்ம மாப்பிள்ளைக்கு சட்டைப் பார்ப்போம் என்றார்."


"சரிங்க தாத்தா! கடையின் இரண்டாவது மாடியில் தான் ஆண்கள் பிரிவு உள்ளது.வாங்க தாத்தா! லிஃப்ட்டில போவோம்" என்று தாத்தாவை அழைத்துக் கொண்டு செல்லும் வழியின் எதிரில் அவள் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் வந்தனர்.


"சாரு! நீயும் இங்கே தான் இருக்கியா? என்றாள் பானு.அப்போ நல்லதா போச்சு.நாம்ம எல்லாரும் சேர்ந்து பார்த்தே சேலையை எடுத்திடலாம்" என்றாள் பானு.


"கல்யாணத்துக்கு வீட்டில் உள்ள எல்லோருக்கும் துணி எடுக்க வந்தோம் பானு" என்றாள் சாரு.


"நீங்க சேலையை பார்த்துக்கிட்டு இருங்க.நான் ஒரு பதினைந்து நிமிஷத்தில் வந்து வந்திர்றேன்..."
என்று சொல்லிவிட்டு தாத்தாவை அழைத்துக் கொண்டு இரண்டாவது மாடிக்கு சென்று மாப்பிள்ளைக்கு சட்டையைப் பார்க்க தொடங்கினாள் சாரு.


மின்னல் வேகத்தில் ஒவ்வொரு பிராண்ட்லையும் தேடி தேடி மொத்தமாக நான்கு சட்டையை தேர்வு செய்து தாத்தாவிடம் காட்டினாள்.
தாத்தா, பேத்தியின் ஆர்வம் கண்டு ஆச்சரியமாக அவளை பார்த்து மனதில் மகிழ்ச்சியடைந்தார்.சாரு தன் மனக்கண்ணிலே சந்துருவிற்கு நேரடியாக ஒவ்வொரு சட்டையையும் போட்டு பார்த்து ஆசை ஆசையாக சட்டையை தேர்ந்தெடுத்தாள்.


"தாத்தா, சாருவிடம் நீ பார்த்து வைத்த அனைத்து சட்டையையும் வாங்கிடலாம் சாரு..." என்றதும் சாருவின் மனதில் எல்லையில்லா ஆனந்தம் ஆட்கொண்டது.


"தாத்தா! நான் போய் என் ஸ்கூல் டீச்சர்ஸை பார்த்துட்டு ஐந்து நிமிஷத்தில் வந்திர்றேன்.நீங்கள் கீழே உட்கார்ந்திருங்கள் தாத்தா!"


"சரிடா, நீ சீக்கரமா போய்ட்டு வா!" என்றார் தாத்தா.


மூன்றாவது மாடியில் சேலை செக்ஸனில் ஆசிரியர்கள் அனைவரும் பத்து சேலையை எடுத்து வைத்துக் கொண்டு, எதை எடுக்கலாம்... என்று குழம்பி கொண்டிருந்த சமயம் பார்த்து சாரு வந்தாள்.அவளிடம் அனைத்து சேலையையும் காட்டினார்கள்.சாரு வேகமாக ஒரு சேலையை எடுத்து, இந்த நீல நிறப்புடவை எல்லோருக்கும் அழகாக இருக்கும் என்று சொன்னதும், "சாரு மாதிரி சரியாக தேர்ந்தெடுக்க யாராலும் முடியாது.வந்த ஐந்து நிமிஷத்தில சேலையை எல்லோருக்கும் பொறுத்தமாக தேர்ந்தெடுத்துட்ட சாரு!" என்றாள் பானு.


"சரி பானு! நாளைக்கு ஸ்கூல்ல பார்க்கலாம்.தாத்தா கீழே தனியாக இருக்காங்க" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி தாத்தாவிடம் சென்றாள்.


வீட்டில் உள்ள அனைவரும் துணியை வாங்கி முடித்ததும் வீட்டிற்கு கிளம்பிச் சென்றனர்.அமெரிக்காவில் இருந்து சந்துருவும் அவனது நண்பன் மனோஜூம் விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.விமானமும் இந்தியாவை நோக்கி புறப்பட்டது.



சந்துருவின் மனதில் மாற்றம் வந்ததா? என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.


- தொடரும் -

* * * * * * * * * * * * * * *

இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துக்களை அழுத்தி பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 3


"எங்கே கிளம்பிட்ட சாருமா?" என்று கேட்டார் சாருவின் பாட்டி.


"ஸ்கூலுக்கு தான் பாட்டி! என்னோடு வேலை பார்க்குற எல்லோருக்கும் இன்னைக்கு தான் பத்திரிக்கை கொடுக்க போகிறேன்.அப்பாவையும், அம்மாவையும் மதியம் ஸ்கூலுக்கு வரச்சொல்லியிருக்கேன் பாட்டி" என்றாள் சாரு.


"எல்லாரையும் கல்யாணத்துக்கு முந்தைய நாளே வரச்சொல்லிருமா சாரு..." என்றார் பாட்டி.


"சரிங்க பாட்டி! ஸ்கூலுக்கு டைம் ஆகிடுச்சு! போய்ட்டு வருகிறேன்" என்று கூறிவிட்டு கிளம்பினாள் சாரு.


விமானத்தில் ஏறி அமர்ந்தவன் கண்களை மூடியதும், மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த காட்சிகள் அனைத்தும் அவன் கண் முன்னே வந்து சென்றது.அவனை அறியாமலேயே சந்துருவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.மனோஜ் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் சந்துருவின் கண்ணீரை கவனிக்கவில்லை.இன்னும் சில மணி நேரங்களில் விமானம் தரையிறங்க போகிறது என்று விமான ஓட்டுனரும், விமான பணிப் பெண்களும் முன் அறிவிப்பு செய்து கொண்டிருந்தனர்.


மனோஜ் தூங்கி எழுந்து கண்களை திறக்கும் முன், வேகமாக தன் கண்களைத் துடைத்து விட்டு தண்ணீரைக் குடித்தான் சந்துரு.
விமானம் இந்தியாவை வந்தடைந்தது.
விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்ல, சந்துருவின் சித்தப்பா காரில் வந்திருந்தார்.


"நம்ம ஊரு, நம்ம ஊரு தான்டா மச்சான்! அடடா! என்ன அழகு? என்ன அழகு? பச்சை பசேல்னு கண்ணுக்கு குளுமையா, பார்க்கும் போதே மனசுக்கு நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்குதுல சந்துரு" என்றான் மனோஜ்.


"ம்ம்..." என்ற சத்தம் மட்டும் சந்துருவிடமிருந்து வந்தது.


கார் வீட்டை நெருங்கியதும், வாசலில் வாழை மரமும், வீடு முழுக்க மாவிலை தோரணங்களாலும் மலர்களாலும் அலங்காரம் செய்து வைத்திருந்தனர்.


"கல்யாண ஏற்பாடுலாம் வேகமாக நடக்குது போல சித்தப்பா" என்றான் மனோஜ்.


"ஆமாப்பா மனோஜ்..." என்றார் சந்துருவின் சித்தப்பா.


வாசலில் அம்மாவும், சந்துருவின் சித்தியும் ஆராத்தி தட்டுடன் காத்திருந்தனர்.சந்துரு காரில் இருந்து இறங்கியதும் சந்துருவுடன் சேர்த்து மனோஜுக்கும் திருஷ்டி சுத்திவிட்டு வீட்டிற்குள் அழைத்து சென்றனர்.


"உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா சாரு? அடுத்த வாரம் கல்யாணம் வச்சுக்கிட்டு இன்னைக்கு போய் ஸ்கூலுக்கு வந்திருக்க" என்று கேட்டாள் பானு.


"எல்லா டீச்சர்ஸ்க்கும் பத்தரிக்கை கொடுத்து விட்டு, விடுமுறை விண்ணப்பத்தையும் தலைமை ஆசிரியர் கையில் கொடுத்து சொல்லிட்டு கிளம்பலாம்னு தான் வந்திருக்கிறேன்" என்றாள் சாரு.


"கல்யாண கலை முகத்துல தெரிய ஆரம்பிச்சிருச்சு சாரு.இன்னைக்கு வழக்கத்தை விட ரொம்ப பொலிவாக இருக்க.நேத்து மாப்பிள சார்க்கிட்ட பேசிய தாக்கம் முகத்துல நல்லா ஜொலிக்குதே சாரு" என்றாள் பானு.


"அப்படிலாம் ஒன்னும் இல்லடி பானு.நேத்து பாட்டி நிறைய பயிறு வகையை அரைச்சு முகத்துல பூச சொன்னாங்க.அதுதான் இந்த பொலிவுக்கு காரணம் என்றாள் சாரு.அவுங்கக்கிட்ட இன்னும் நான் பேசவே இல்ல பானு."


"என்னடி நீ... இந்த காலத்துல போய் இப்படி இருக்கியே சாரு! இந்த நேரத்துக்கு வாட்ஸ்அப், பேஸ்புக்னு பேசி டூயட் சாங்க் பாடிருக்க வேண்டாமா? படிப்பிலும், செய்யும் வேலையில் மட்டும் புலியாக இருந்தா போதாது சாரு" என்று தொடர்ந்து பல அறிவுரைகளை அடுக்கிக் கொண்டே போனாள் பானு.


அவள் பேசுவது அனைத்தையும் மெல்லிய புன்கையுடன் ரசித்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தாள் சாரு.


"என்னடி? நான் பேசிக்கிட்டே இருக்கேன். நீ எதுவும் சொல்லாமல் சிரித்துக் கொண்டு இருக்குற சாரு?" என்றாள் பானு.


"என் வருங்கால அண்ணன் ரொம்ப கொடுத்து வைத்தவர் தான்" என்று உன்னை நினைத்து பார்த்தேன்.
அதனால்தான் சிரித்தேன்" என்று சாரு கூறியதும் பானுவிற்கு வெட்கம் வந்துவிட்டது.


"சரி சரி பானு! அப்பா, அம்மா வரும் நேரமாச்சு.நான் போய் பார்த்துட்டு எல்லோருக்கும் பத்திரிக்கை கொடுத்துவிட்டு அப்படியே வீட்டு கிளம்பிடுவேன்.கண்டிப்பாக குடும்பத்தோடு எல்லோரும் கல்யாணத்துக்கு வந்துருங்க பானு..." என்றாள் சாரு.


"சரி.. சரி... நீ முதல்ல போய் மாப்பிள சார்க்கிட்ட பேசுகிற வழியைப்பாரு சாரு என்றாள் பானு."


"கண்டிப்பாக கல்யாணத்துக்கு முன்னாடி பேச முயற்சி செய்கிறேன்" என்று கூறிவிட்டு சென்றாள் சாரு.


"ஏன்பா மனோஜ்! நீ கூட சொல்லக் கூடாதா.தலைமுடி வெட்டாமல், தாடியும் மீசையுமா பார்க்க புதுமாப்பிள்ளை மாதிரியா இருக்கான்?"


"நான் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் அம்மா.என் பேச்சை கேட்கவே இல்லம்மா" என்றான் மனோஜ்.


"சரி...சரி...இரண்டு பேரும் போய் குளிச்சுட்டு வந்து சாப்பிடுங்க.
கொஞ்சம் நேரம் ஓய்வெடுத்த பிறகு டவுனுக்கு போய் நல்லா மாப்பிள்ளை தோரணைக்கு தலைமுடியை வெட்டிவிட்டு தாடியை வழுச்சுட்டு வாடா சந்துரு!" என்றார் சந்துருவின் அம்மா.


"சரிம்மா..." என்று சலிப்புடன் சொல்லி விட்டு மனோஜை அழைத்துக் கொண்டு தனது அறைக்கு சென்றான் சந்துரு.


சாருவின் கைபேசிக்கு மீண்டும் ஒரு அழைப்புமணி வந்தது.வேறு யாருமில்லை சாருவின் வருங்கால மாமியாரிடமிருந்து தான்.கைபேசியை எடுத்தவுடன் முதல் வார்த்ததையாக வணக்கம் அத்தை என்று கூறிய சாருவின் மரியாதை குணம் கண்டு சந்துருவின் அம்மாவின் நெஞ்சம் நெகிழ்ந்தது.சாருவையும் குடும்பத்தாரையும் நலம் விசாரித்து விட்டு சந்துரு வந்துவிட்ட தகவலையும் கூறினார்.


"நாளைக்கு தாத்தா வீட்டிற்கு வரும்போது நீயும் சந்துருவும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து பேச ஏற்பாடு செய்கிறேன் சாரு.உனக்கு ஓகேவா சாரு?" என்று கேட்டார் சந்துருவின் அம்மா.


கண்டிப்பாக அத்தை.இத்தனை நாட்கள் அந்த ஒரு நொடிக்காக தான் தவமாய் தவமிருந்து காத்துக் கொண்டிருக்கின்றேன்.இந்த சாஸ்திர சம்பிரதாயம் மட்டும் இல்லையென்றால், நான் இப்போதே புறப்பட்டு அவரைக் காண அங்கு வந்துவிடுவேன் அத்தை..." என்று சொல்லனும் போல அவளது மனம் துடியாய் துடித்தது.


ஆனால், அவளோ தனது உணர்வுகளையெல்லாம் அடக்கிக் கொண்டு "சரிங்க அத்தை..." என்றாள்.


"தாத்தா என்ன சொல்கிறாரோ அதன்படி செய்கிறேன்" என்று கூறினாள்.


மறுநாள் காலையில் சாருவின் தாத்தாவும் பாட்டியும், அவளது அப்பா அம்மாவும் சந்துருவை பார்க்க அவனது வீட்டிற்கு சென்றனர்.
சந்துருவை பார்த்ததும், தனது பேத்திக்கு பொருத்தமான பையனை தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று நினைத்து மனதில் மகிழ்ச்சியடைந்தார் தாத்தா.
சந்துருவின் அம்மா, சாருவின் தாத்தவிடம் சந்துருவும் சாருவும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்து பேசுவதற்கு அனுமதி கேட்டார்.


"நானே இது குறித்து உங்களிடம் பேச வேண்டும் என்றிருந்தேன்.எங்களது வீட்டில் வந்து பேசினால் மாப்பிள்ளையால் சகஜமாக பேச முடியாது.புது இடம் என்பதால் கொஞ்சம் அவருக்கு தயக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.எங்கள் ஊர் எல்லையில் உள்ள மலைப்பிள்ளையார் கோவிலுக்கு, நாளை காலை பத்து மணியளவில் சாருவை அவளது சிநேகிதியுடன் அனுப்பி வைக்கிறேன்" என்றார் தாத்தா.


"ரொம்ப சந்தோஷம் ஐயா! அப்போ நானும் சந்துருவையும் அவனது நண்பனுடன் அனுப்பி வைக்கிறேன்" என்று கூறினார் சந்துருவின் அம்மா.


"அந்த காலத்து தாத்தாவாக இருந்தாலும் இந்த காலத்து பசங்களின் மனதை நன்கு புரிந்து வைத்து அருமையாக யோசித்து முடிவு எடுக்கிறார்ல சந்துரு என்றான் மனோஜ்.நல்ல குடும்பத்துல தான் அம்மா உனக்கு பொண்ணு பார்த்துருக்காங்க..."


"சரி... சரி... மறுபடியும் உன் புராணம் பாட ஆரம்பிக்காதடா மனோஜ்" என்றான் சந்துரு.


சாருவின் குடும்பத்தார் கிளம்பியதும், "முடிந்ததையே நினைச்சுக்கிட்டு இருக்காத சந்துரு.மாப்பிள்ளையா இலட்சனமாக அந்த பொண்ணுகிட்ட மனம் விட்டுப்பேசுடா.அவள் தான் இனி உனக்கு எல்லாமே.இரண்டு பேருக்கு இடையில் எந்தவித ஒளிவும் மறைவும் இருக்கக்கூடாது சந்துரு.உனக்கு எல்லாம் தெரியும்.பார்த்து பக்குவமாக சாருக்கிட்ட எடுத்து சொல்லு.நீ எதுவும் சொல்ல வேண்டாம்னு சொன்னதால் தான், நான் இன்னும் எதுவும் சாருக்கிட்ட அந்த விஷயத்தை பற்றி சொல்லவில்லை.இன்னைக்கு இல்லாட்டிலும் என்றாவது ஒரு நாள் சொல்லித்தான ஆகனும் சந்துரு என்றார் சந்துருவின் அம்மா."


"சரி... சரி... அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்றான் சந்துரு."


"வெளிநாட்டிலிருந்து என் மருமகளுக்கு என்னடா வாங்கிட்டு வந்த சந்துரு? என்றார் சந்துருவின் அம்மா.ஒன்றுமே வாங்கிட்டு வரவில்லைனு சந்துரு மட்டும் சொன்னா, சந்துருவோட சேர்ந்து இதெல்லாம் நீ எடுத்து சொல்ல மாட்டியானு நமக்கும் சேர்த்து செம திட்டு விழும் என்று மனதில் நினைத்து பார்த்தான் மனோஜ்.உடனே மனோஜ் அதெல்லாம் நிறைய வாங்கிட்டு வந்திருக்கிறான் அம்மா என்றான்."


கண் சைகையில் சந்துருவிடம் பேசாமலிரு! என்றான் மனோஜ்.


"சாருவிற்கு புத்தகம் படிக்க ரொம்ப பிடிக்கும். அவளுக்காக ஒரு புத்தகம் வாங்கி வச்சுருக்கேன்.அதையும் நீ வாங்கிய பொருட்களோடு சேர்த்து கொண்டு போய் கொடுத்துவிடு" என்றார் சந்துருவின் அம்மா.


தாத்தா என்ன கூறுவார் என்று ஆவலாக அவரது வருகைக்காக வழியின் மீது விழியை வைத்துக் கொண்டு காத்திருந்தாள் சாரு.தாத்தா வந்ததும், சாரு வேகமாக மான் துள்ளிக்குதித்து ஓடுவது போல வேகமாக ஓடி தாத்தவிடம் சென்றாள்.


"தாத்தா! மாமா பார்க்க நடிகர் அஜித் மாதிரி இருக்கிறாரா? இல்ல நடிகர் ரஜினி மாதிரி இருக்கிறாரா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் சாருவின் தங்கை மதி.


"அட போடா மதி! மாப்பிள்ளை முகத்தில் நிறைய பருவும், முடி எல்லாம் கொட்டி கொஞ்சம் சொட்டையாவும் இருக்கிறார்" என்று சொல்லிக் கொண்டே சாருவை பார்த்தார் தாத்தா.


"சும்மாயிருங்க! உங்களுக்கு எப்பவும் கேலிதான் என்றார் பாட்டி.மாப்பிள்ளை போட்டோவை விட நேரில் ரொம்ப அழகாக கதாநாயகன் போல இருக்கிறார் சாரு என்றார் பாட்டி.
அந்த காலத்து எம்.ஜி.ஆர் போல நல்லா கலரா இருந்தாருடா" என்று பாட்டி சொன்னதும் சாருவிற்கு வெட்கம் வந்துவிட்டது.


"நாளைக்கு காலையில் பானுவை அழைத்து கொண்டு நம்ம ஊர் மலைப்பிள்ளையார் கோவிலுக்கு ஒரு எட்டுப்போய் மாப்பிள்ளையை பார்த்துவிட்டு வந்திருடா சாரு" என்றார் தாத்தா.


"சரிங்க தாத்தா... என்று கூறிவிட்டு சந்தோஷமாக தனது அறைக்கு விரைந்து சென்றாள்."


பானுவிற்கு போன் செய்து அவளிடம் எல்லா கதையையும் சொல்லி முடித்து விட்டு, "நாளைக்கு காலையில் கோவிலுக்கு போகனும் நேரத்துக்கு வீட்டிற்கு வந்திரு பானு..." என்றாள் சாரு.


சந்துருவின் ஹாய்! என்ற குரல் கேட்பதற்கே ஒரு நாள் இரவெல்லாம் தூங்கதவள்.தன்னுடைய வாழ்க்கை துணையை முதன் முதலாக நேரில் சந்திக்க போகும் செய்தியை கேட்டதும் சாருவினால் இனி தூங்க முடியுமா?


சாரு, சந்துரு இவர்களின் முதல் முறை சந்திப்பு எப்படி இருந்தது? என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.


- தொடரும் -

* * * * * * * * * * * * * * * *

இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 4


சந்துருவின் அறையிலுருந்து சத்தம் வருவதை கேட்ட சந்துருவின் அம்மா, வேகமாக அவனது அறைக்கு சென்றார்.


"சந்துரு! சந்துரு!" என்று அறையின் கதவை தட்டினார்.மனோஜ் வேகமாக எழுந்து வந்து கதவை திறந்தான்.


சந்துரு காதில் ஹெட்செட் மாட்டிக்
கொண்டு லேப் டாப்பில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான்.


அம்மா வந்ததை பார்த்ததும், "என்னமா... இன்னும் தூங்காமல் என்ன செய்றீங்க?" என்று கேட்டான் சந்துரு.


"அந்த கேள்வியை நான் தான் உங்களிடம் கேட்கனும்.இராத்திரி ஒரு மணி ஆக போகுது.இன்னும் தூங்காமல் இரண்டு பேரும் என்ன பண்ணுறீங்க? தண்ணீர் குடிப்பதற்காக சமையலறைக்கு வந்து பார்த்தா, உங்க ரூம்ல இருந்து ஒரே சிரிப்பு சத்தம் கேட்டது" என்றார் சந்துருவின் அம்மா.


"நாளைக்கு காலையில் எழுந்து சாருவை பார்க்க போகனும்.நியாபகம் இருக்கா? இல்லையா சந்துரு?"


"அம்மா! அமெரிக்கா நேரமும், இந்தியா நேரமும் மாறுவதால் எங்களுக்கு தூக்கம் வரவில்லை.அது தான் நான் சும்மா காமெடி நிகழ்ச்சி பார்த்து சிரிச்சிக்கிட்டு இருந்தேன்.சந்துரு ஏதோ இங்கிலீஸ் படம் பார்த்துக்கிட்டு இருந்தான் அம்மா" என்றான் மனோஜ்.


"சரி, சரி எல்லாதையும் ஆஃப் பண்ணிட்டு இரண்டு பேரும் ஒழுங்கா தூங்குற வழியை பாருங்க.காலையில் சீக்கிரம் எழுந்து சாருவை போய் பார்க்கனும்ல..." என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்றார் சந்துருவின் அம்மா.


சாருவினால் நிதானமாக இருக்க முடியவில்லை.நாளைக்கு எந்த சேலை கட்டிட்டு போகலாம்னு சிந்திக்க தொடங்கினாள்.பீரோவிலிருந்து ஒவ்வொரு சேலையாக எடுத்து எடுத்து அவள் தோள்பட்டையின் மீது வைத்து கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தாள்.ஒரு வழியாக அவளுக்கு பிடித்த நீல நிற சேலையை அணிந்து செல்ல முடிவு செய்துவிட்டாள்.பேதை அவளின் உள்ளமோ காதல் மோகத்தில் சிக்கிக் கொண்டு சிறகடித்து பறக்கத் தொடங்கியது.மணியோ! இரவு ஒன்றாகிவிட்டது.சாருவின் கண்ணகளில் சிறிதளவு கூட தூக்கம் வரவில்லை.சரி ஏதாவது பாட்டு கேட்டுக் கொண்டே உறங்கிவிடலாம் என்று ரேடியோவை ஆன் செய்தாள்.

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே…


அவள் மனதில் நினைத்து கொண்டிருந்த எண்ணங்களெல்லாம் சூழ்நிலைக்கு ஏற்றார் போல, அந்தப்பாடல் வரிகள் மேலும் சந்துருவின் நினனப்பை தூண்டிவிட தொடங்கியது.சந்துருவை நினைத்து கொண்டே கண்களை மூடி தூங்கி விட்டாள் சாரு.அதிகாலையில் எழுந்து குளித்து வேகமாக கிளம்பி தயாரகியிருந்தாள் சாரு.


காரிகை இவளின் கண்களோ
பார்ப்பவரை கவர்ந்திழுக்கும் காந்தமாய் இருந்தது.

காதில் ஜிம்மிக்கி கம்மலும்,
செக்க சிவந்த செவ்விதழும்
அவள் சிரிக்கும் போது
அவளின் முத்துப்பற்களும்...

கை நிறைய கலகல ஓசையுடன் கூடிய வளையல்கள் அணிந்து...

காலில் மெல்லிய சத்தம் கொண்ட கொலுசு அணிந்து...

தலைநிறைய மல்லிகை பூச்சூடி...

அழகோவியம் போல் நடந்து வந்தாள் சாரு...


அவளை பார்த்ததும் பானு, அவளின் அழகை கண்டு கண் இமைக்காமல் அவளையே ரசித்துக் கொண்டிருந்தாள்.


"பானு! பானு!" என்ற சாருவின் குரல் கொஞ்சம் கூட அவளது செவிகளில் விழாதது போல சாருவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.சாரு, அவள் தோள்பட்டையை பிடித்து குலுக்கியதும் சுயநினைவுக்கு வந்தாள் பானு.


"என்னடி ஆச்சு பானு? காத்து கருப்பு பார்த்து பயந்தது மாதிரி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க?" என்று கேட்டாள் சாரு


"உண்மைதான் சாரு.கொஞ்சம் நேரம் நான் என்னுடைய சுயநினைவையே இழந்துட்டேன்."


"என்னடி சொல்லுற பானு?சொல்வதை தெளிவாக சொல்லுடி. என்ன நடந்தது? என்ன ஆச்சு?"


"உன்னை பார்த்து தான் மெய்மறந்து போயிட்டேன்.என்னமா அழகா இருக்க! பொண்ணு நானே பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு செதுக்கி வைத்த சிலையாட்டம் அவ்வளவு அழகாக இருக்கிற சாரு.நான் மட்டும் பையனா பிறந்திருந்தா உன்னைதான் கல்யாணம் பண்ணிருப்பேன் சாரு என்றாள் பானு.அம்மாகிட்ட சொல்லி உனக்கு முதலில் திருஷ்டி சுத்தி போட சொல்லனும்."


"இன்னைக்கு மாப்பிள்ளை சார் உன்னை பார்த்ததும், அங்கேயே வைத்து கல்யாணம் செஞ்சு கையோட அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போனாலும் போயிருவாரு சாரு" என்றாள் பானு.


பானு அவளை வர்ணித்ததிற்கு வராத வெட்கம், மாப்பிள்ளை பற்றி சொன்னதும் நாணத்தில் சாருவின் முகம் சிவந்து போனது.


"சும்மாயிருடி பானு! சரி கிளம்பலாம் வா..." என்றாள் சாரு.


"ஏய் சாரு! மணி எட்டு தான் ஆகுது...
மாப்பிள்ளை சார் பத்து மணிக்கு தான வருவாங்கனு சொன்ன."


"ஆமா... கொஞ்சம் முன்னாடியே கோவிலுக்கு போய்சாமி கும்பிடலாம் தான் கிளம்புவோம்னு சொன்னேன் பானு."


"உன் மன உணர்வும் புரியுது.
உன் ஆர்வமும் கோளாறும் தெரியுது."



என்று பேசிக் கொண்டிருக்கும்போது சாருவின் அம்மா வந்தார்.சாருவையும் பானுவையும் சாப்பிட அழைத்தார்.


"எனக்கு பசிக்கல அம்மா... பானுக்கு மட்டும் டிபன் கொடுங்க..." என்றாள் சாரு.


"ஆமா...ஆமா... சாரு அக்காவுக்கு காதல் நிமோனியா பிடிச்சிருக்கும்மா.
அதுதான் பசிக்க மாட்டிங்குது" என்றாள் மதி.


"இது என்னடி புதுசா இருக்கு?"


"ஆமா அம்மா.இந்த நோய் வந்தா சரியாக தூங்க மாட்டாங்க.நேரத்துக்கு சாப்பிட மாட்டாங்க.தன்னால சிரிப்பாங்க.நம்ம எவ்வளவு பேசினாலும் அவுங்க காதில வாங்காத மாதிரி காதல் படகில் மிதந்து கொண்டு இருப்பாங்க."


"சரியா சொன்னடா மதி!" என்று பானு சொல்லியதும், அவர்கள் அனைவரும் சேர்ந்து சிரிக்கத் தொடங்கினார்கள்.


"சும்மாவே என்ன நீ கேலி செய்வ. போதாத குறைக்கு இவளும் வந்துட்டாள்.இனி சொல்ல தேவையே இல்லை.கஷாப் கடைக்காரன் கையில சிக்கின ஆடு மாதிரிதான் இப்போ என் நிலைமையும்" என்று சிரித்துக் கொண்டே கூறினாள் சாரு.


"சரி, சரி நேரமாச்சு! கோவிலுக்கு கிளம்புவோம் பானு என்றாள் சாரு."


அனைவரிடமும் சொல்லிவிட்டு பானுவும் சாருவும் ஸ்கூட்டியில் கிளம்பினார்கள்.இருவரும் மலைப்பிள்ளையார் கோவிலில் சந்துருவின் வருகைக்காக ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர்.மணியும் பத்தாகிவிட்டது.ஒரு வெள்ளை நிற கார் வரும் சத்தம் கேட்டது.கூடவே 'குக்கூ... குக்கூ...' என்ற குருவி சத்தமும் கேட்டது.


குக்கூ சத்தம் வேறெங்கிருந்தும் வரவில்லை.சாருவின் கைபேசியில் இருந்து தான் வந்தது.படபடத்து போய் கைபேசியை எடுத்து பார்த்தாள் சாரு.காலை ஆறு மணிக்கு வைத்த அலாரத்தின் சத்தம்தான் அது.


"அடக்கடவுளே! இவ்வளவு நேரம் கண்டது எல்லாம் கனவா?" என்று தன் கனவை நினைத்து சிரித்துவிட்டு சந்துருவை சந்திக்க கிளம்பத் தொடங்கினாள் சாரு.


சந்துருவும், சாருவும் சந்தித்தார்களா?கோவிலில் என்ன நடந்தது? என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.


- தொடரும் -

* * * * * * * * * * * * * * * * *

இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 5


"சந்துரு! சந்துரு! எழுந்திருடா...மணி எட்டு ஆகிடுச்சுடா..." என்றான் மனோஜ்.


"ஒரு ஐந்து நிமிஷம்டா மனோஜ்.நீ போய் முதலில் குளிச்சு ரெடியாகி கிளம்புடா" என்றான் சந்துரு.


"டேய்! மாப்பிள்ளை நீயா? இல்ல நானாடா? ஒழுங்கு மரியாதையாக எழுந்து கிளம்புகிற வழியைப்பாரு.
இல்லை என்றால் அம்மாவை அழைத்து வந்திருவேன் சந்துரு" என்றான் மனோஜ்.


"ஒரு ஐந்து நிமிஷம் நிம்மதியாக தூங்க விடுகிறாயா மனோஜ்" என்று அவனை திட்டிக் கொண்டே குளிக்க சென்றான் சந்துரு.சந்துருவும் மனோஜூம் தயாராக கிளம்பி சாப்பிட வந்தனர்.


"நேரத்துக்கு தூங்குனா தான சீக்கிரம் எழுந்திருக்க முடியும்.மணியை பாரு! ஒன்பது மணி ஆகிடுச்சு.உனக்கு அந்த பொண்ண பார்க்கனும்னு விருப்பம் இருக்கிற மாதிரி கொஞ்சம் கூட தெரியவில்லை.உன் வயசு பசங்களாம் போய் பாருடா சந்துரு.கல்யாணம் பேசி முடிக்கிறதுக்கு முன்னாடியே தான் கட்டிக்க போற பொண்ணோட சேர்ந்து பீச், பார்க், சினிமானு நல்லா ஊர் சுத்திக்கிட்டு இருக்காங்க.நீ என்னடானா இரண்டு நாளுல கல்யாணத்தை வச்சுக்கிட்டு இன்னும் சாருவை பார்க்காமல் இருக்க.சரி, வெளிநாட்டில இருந்ததால் அதுக்கு வாய்ப்பில்லைனு கூட ஒரு பக்கம் வச்சுக்கலாம்.நீ வந்து மூன்று நாளில் ஒரு நாளாவது சாருக்கிட்ட போன் பண்ணி பேசினுயா?" என்று தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார் சந்துருவின் அம்மா.


சந்துரு மறுபதில் எதுவுமே கூறாமல் மௌனமாக இருந்தான்.சாப்பிட்டு முடித்தவுடன் அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு "சாருவை சென்று பார்த்துவிட்டு வருகிறோம்" என்று சொன்னதும் சந்துருவின் அம்மாவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.


"சரிப்பா கவனமாக போய்ட்டு வாங்க..." என்றார்.


மலர்ந்த முகத்துடன் சமையலறைக்குள் நுழைந்தார் சந்துருவின் அம்மா.


"அம்மா... கடந்த இருப்பதைந்து வருஷத்துக்கு பிறகு இன்னைக்கு தான் உங்களோட முகத்துல இவ்வளவு சந்தோஷத்தை பார்க்குறேன். என்னம்மா... சின்ன ஐயா பழைய மாதிரி மனசு மாறீட்டாங்களா?" என்று கேட்டார் அங்கு வீட்டு வேலை செய்யும் கண்ணம்மா.


"ஆமாம் கண்ணம்மா...சந்துரு இதுநாள் வரைக்கும் சாருக்கிட்ட எதுவுமே பேசவும் இல்ல.அவள போய் பார்க்கவும் இல்ல.அவளைப் பற்றி ஒரு நாள் கூட என்னிடம் எதுவும் கேட்டதுமில்ல.சந்துருக்கு விருப்பமில்லாமல் அவனை கட்டாயப்படுத்தி கஷ்டப்படுத்துவது மட்டுமில்லாமல் நம்ம குடும்பத்தை பற்றி எதுவுமே சொல்லாமல் சாருவையும் சேர்த்து சங்கடத்துக்கு ஆளாக்கிட்டு இருக்கிறேனோ? என்று சில நாட்களாகவே மனதிற்குள் கொஞ்சம் நெருடலாகவே இருந்து கொண்டிருந்தது கண்ணம்மா.நான் சந்தோஷபடும் அளவுக்கு எதுவும் பெரியதாக ஒன்றும் நடக்கல.
இருந்தாலும் என்னமோ தெரியல கண்ணம்மா.சந்துரு இன்னைக்கு முதல் முதலாக சாருவோட பெயரை அவன் வாயால சொன்னதை கேட்டதும் மனசுலா என்னையே அறியாமல் அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது கண்ணம்மா.சாரு ரொம்ப பொறுமையான பொண்ணு கண்ணம்மா.பண்பாடு தெரிந்த புத்ததிசாலி பொண்ணும் கூட.அவள் இந்த வீட்டுக்கு வந்ததும், சந்துரு பழைய மாதிரி மாறிடுவானு எனக்கு நம்பிக்கை இருக்கிறது கண்ணம்மா."


"அம்மா! நீங்கள் தப்பா எடுத்துக்கமாட்டீங்கனா? நான் உங்களிடம் ஒன்று சொல்லலாமா அம்மா? என்றாள் கண்ணம்மா."


"நீ சொல்ல வருவதை சொல்லு கண்ணம்மா.நான் ஒன்றும் தப்பா நினைக்க மாட்டேன்."


"இல்லங்கம்மா... நீங்களே சின்னம்மாவிடம் எல்லா
விஷயத்தையும் நேரில் பார்த்து சொல்லிவிடலாம்ல அம்மா."


"நானும் அதைப்பற்றி பல முறை சந்துருவிடம் பேசி பார்த்துவிட்டேன் கண்ணம்மா.அவன் என் பேச்சை கேட்கிற மாதிரி தெரியவே இல்லை.
அவனுக்கா சொல்லனும்னு தோணும் போது சொல்லிக்கிறேன் என்று கூறிவிட்டான்.இப்போதைக்கு எதுவும் நீங்க அவசரப்பட்டு சொல்ல வேண்டாம்மா என்று கூறி என் வாயை அடச்சுட்டான் கண்ணம்மா.சந்துரு குணம் பற்றி தான் உனக்கு நல்லாவே தெரியும்ல கண்ணம்மா" என்றார் சந்துருவின் அம்மா.


"சரி கண்ணம்மா... வடக்கு தெருல இன்னும் கொஞ்ச பேருக்கு பத்திரிக்கை கொடுக்க வேண்டியது இருக்கு.நான் சென்று கொடுத்துவிட்டு வருகிறேன்.மதியம் சாப்பாட்டுக்கு பூண்டு குழம்பும், பீட்ரூட் பொறியலும் சமைத்து வச்சிரு கண்ணம்மா" என்று கூறிவிட்டு சென்றார் சந்துருவின் அம்மா.


கடந்த இருபத்தைந்து வருஷமாக சந்துருவின் வீட்டோடு தங்கி சமையல் வேலை செய்து வருபவர் தான் கண்ணம்மா.சந்துருவின் வீட்டில் தொடர்ந்து நடந்த கசப்பான சம்பவங்களின் துக்கத்திலிருந்து, ஜானகி அம்மாவை மீட்டெடுத்து பழைய நிலைக்கு கொண்டு வந்தது மட்டுமில்லாமல், அவருக்கு எப்போதும் ஆறுதலாகவும் பக்க பலமாகவும் இருப்பவர் தான் இந்த கண்ணம்மா.
சந்துருவின் அம்மாவின் பெயர் தான் ஜானகி.


சாரு கனவில் பார்த்தது போலவே செதுக்கி வைத்த சிலையாட்டம் கிளம்பி வந்தாள்.


"ஏய் சாரு! இந்த பையை மாப்பிள்ளைக்கிட்ட கொடுத்துடு என்றார் சாருவின் அம்மா."


"இந்த பையில் என்ன இருக்குமா?"


"முதல் முதலாக மாப்பிள்ளையை பார்க்க போகும் போது வெறுங்கையை வீசிக்கிட்டு போக போகிறீயா சாரு?
நான் கொஞ்சம் பலகாரம் சுட்டு அதில் எடுத்து வச்சிருக்கேன்.நீ கொண்டு போய் கொடுத்துடு."


"இந்த யோசனை எனக்கு வராமல் போயிருச்சே அம்மா? என்றாள் சாரு."


"உங்கள் நினைவெல்லாம் மாமாக்கிட்ட இருக்கும் போது, அந்த யோசனை உங்களுக்கு எப்படி அக்கா வரும்?" என்று சொல்லிவிட்டு சிரித்தாள் மதி.


"நீ சும்மா இருக்கவே மாட்டட மதி.நான் ஒரு வார்த்தை பேசிறக்கூடாது.உடனே கிண்டலடிக்க ஆரம்பிச்சிடுவியே என்றாள் சாரு."


"சரிங்கம்மா.. நான் அவுங்களை சென்று பார்த்துட்டு வருகிறேன்" என்று கூறிவிட்டு சந்துருவை பார்க்க மிகவும் ஆவலாக புறப்பட்டாள் சாரு.


பானு, சாருவின் வீட்டு வாசலில் ஸ்கூட்டியில் காத்துக் கொண்டிருந்தாள்.பானு சாருவின் அழகை கண்டு வர்ணிக்க தொடங்கினாள்.சாரு ஒன்றும் பேசாமல் செல்லும் வழியெல்லாம் சந்துருவை நினைத்து கொண்டே சென்றாள்.இருவரும் கோவிலின் வாசலை வந்தடைந்தார்கள்.அங்குள்ள பூக்கார பாட்டியிடம், ஒருவர் ஒரு முழப்பூவிற்கு பேரம் பேசிக் கொண்டிருந்தார்.அவர் வாங்கிவிட்டு சென்றதும், "ஒரு முழம் பூ எவ்வளவு பாட்டி?" என்றாள் சாரு.


"முழம் பத்து ரூபாய்மா என்றார் பாட்டி."


"சரிங்க பாட்டி... எனக்கு ஐந்து முழம் பூ கொடுங்க" என்றாள் சாரு.அந்த பாட்டியிடம் நூறு ரூபாயை கொடுத்தாள் சாரு.


"ஏங்கிட்ட நூறு ரூபாய்க்கு சில்லரை இல்லையேம்மா! என்றார் பாட்டி."


"பரவாயில்லை பாட்டி! மீதி பணம் உங்களிடமே இருக்கட்டும்.நான் அடுத்த முறை கோவிலுக்கு வரும் போது மீதி பணத்தை வாங்கி கொள்கிறேன்" என்று கூறிவிட்டு சென்றாள் சாரு.


சாருவும் பானுவும் மலையில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு படி கட்டுகளில் ஏறி நடக்க ஆரம்பித்தனர்.


"அந்த பாட்டிக்கிட்ட மீதி பணம் வாங்காமல் நூறு ரூபாயை அப்படியே கொடுத்துட்டு வந்துட்ட சாரு.நீ இந்த கோவிலுக்கு அடிக்கடி வரும் ஆளும் கிடையாது.பிறகு எப்போது வந்து மீதி பணத்தை திருப்பி வாங்குவ? என்றாள் பானு."


"யாரு வந்து பணத்தை வாங்க போறா? கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி நீதான அப்படி பாட்டிக்கிட்ட சொன்ன சாரு."


"ஆமாம்... அப்படி சொன்னதால் தான் அந்த பாட்டி சரினு ஒத்துகிட்டாங்க.
நீங்களே மீதி பணத்தை வச்சுக்கோங்க பாட்டினு மட்டும் நான் சொல்லியிருந்தா கண்டிப்பாக பணத்தை வாங்கிக்க சம்மதிச்சிருக்க மாட்டாங்க.பாட்டிக்கு பாக்கியை எப்படி திருப்பி கொடுப்பது என்று நினைத்து பூவை விற்கவும் முடியாமல் போயிருக்கும்.இப்போது பாரு.பாட்டி பூவையும் விற்ற மாதிரி ஆச்சு.பாட்டி மனசும் நிறைஞ்ச மாதிரி ஆச்சு."


சிறிது நேரத்திற்கு முன்னர் அந்த பாட்டியிடம் பேரம் பேசியவரின் அருகே வேகமாக நடந்து சென்றாள் சாரு.


"ஒரு நிமிஷம் உங்களிடம் பேசலாமா சார்... " என்றாள் சாரு.


"ம்ம்...சொல்லுங்கமா..." என்றார்.


"தள்ளாடும் வயதிலும், வேகாத வெயிலில் உட்கார்ந்து ஒரு வேளை சாப்பாட்டுக்காக பூவை விற்று வயிற்றை நிரப்பும் அந்த பாட்டிக்கிட்ட இனிமேல் தயவு செய்து இந்த மாதிரி பேரம் பேசாதீங்க சார்.அந்த பூவை விற்றால் ஐந்தோ! பத்தோ! தான் கிடைக்கும்.நம்மை ஒன்னும் பெரிசா ஏமாற்றி, அந்த பாட்டி கோட்டை கட்டுவதற்கு பூ வியாபாரம் செய்யவில்லை சார்.உங்களால் டவுன்ல உள்ள ஏதாவதொரு பெரிய கடைக்கு சென்று, இப்படி பேரம் பேசி விலையை குறைத்து ஒரு பொருளை வாங்க முடியுமா சார்?" என்றாள் சாரு.


சாருவின் கேள்விக்கு திருப்பி பதிலளிக்க முடியாமல் தலைகுனிந்து அமைதியாக இருந்தார் அவர்.


"நான் பேசியதில் ஏதாவது தவறு இருந்திருந்தால் மன்னிகவும் சார்..." என்று கூறிவிட்டு படிகளில் ஏறி நடக்க தொடங்கினாள் சாரு.


"எப்படி சாரு? உன் எண்ணங்களும் உன்னைப் போலவே ரொம்ப அழகாக இருக்கிறது என்றாள் பானு.
மாப்பிள்ளை சார் ரொம்ப கொடுத்து வைத்தவர் தான்" என்று சந்துருவை பற்றி பேசத் தொடங்கினாள் பானு.


சந்துருவை பற்றி பேச ஆரம்பித்ததும் செடிகளில் பூத்துக்குலுங்கும் மலர்களை போல சாருவின் முகத்தில் புன்கைப் பூ பூத்துக்குலுங்க தொடங்கியது.


"தாத்தாவுக்கு வேற இடமே கிடைக்கவில்லையா சாரு? கோடை வெயில் கொளுத்தி எடுக்குது.
படிக்கட்டில் நடக்க நடக்க அப்படியே தோசை கல்லில் காலை வைத்தது போல இருக்கிறது சாரு" என்றாள் பானு.


"அப்படியா! எனக்கு அப்படி எதுவும் தெரியவில்லையே பானு" என்றாள் சாரு.


"உனக்கு மாப்பிள்ளை சாரை பார்க்க போகிற குஷில சூட்டெரிக்கும் சூடுலாம் உனக்கு தெரியாதுமா என்றாள் பானு."


ஒரு வழியாக கோவிலுக்கு வந்தடைந்தனர்.ஆனால் சாருவின் நினைவெல்லாம் சந்துருவை பற்றியே இருந்தது.மணியும் பத்தாகி விட்டது.கோவிலின் மேலிருந்து, கீழே ஏதேனும் கார் வருகிறதா? என்று பார்த்து கொண்டும் நடந்து கொண்டும் இருந்தாள் சாரு.மணியையும் பார்த்தாள்.பாதையும் பார்த்தாள்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்தவொரு காரும் வருவதாக தெரியவில்லை.மணியும் மதியம் இரண்டாகிவிட்டது.கோவில் பூசாரி சாருவிடம் வந்து கோவில் நடையை மூட நேரமாகி விட்டதும்மா.மீண்டும் மாலை ஐந்து மணிக்குதான் நடைத் திறக்கப்படும் என்று கூறிவிட்டு சீக்கிரம் கிளம்புங்கள் என்றார்.


பானும் சாருவும் படியிலிருந்து இறங்கியதும், அவள் கனவில் கண்ட அதே வெள்ளை நிற கார் வந்தது.
ஆசை நாயகனை காண ஆவலுடன் அக்காரின் அருகில் சென்றாள் சாரு.
ஆனால் காரிலிருந்து இறங்கியது சந்துரு அல்ல, அவனது நண்பன் மனோஜ்.


"வணக்கம் சாரு.நான் சந்துருவின் நெருங்கிய நண்பன் என்று சாருவிடம் அவனை அறிமுகம் செய்தான் மனோஜ்."


"உங்களை இவ்வளவு நேரம் காத்திருக்க வைத்ததிற்கு மன்னிகனும் சாரு" என்றதும் பானுவிற்கு பயங்கரமாக கோபம் பொங்கி வந்துவிட்டது.


"என்னங்க சார்? செய்வதெல்லாம் செஞ்சிட்டு மன்னிப்பு வேற
கேட்கிறீங்களா? என்று கேட்டாள் பானு.
வருவதற்கு நேரமாகும் என்றால், ஒரு போன் பண்ணி சொல்லனும் கூடவா உங்களுக்கும் உங்க ப்ரெண்டுக்கும் தெரியாது.சாரு காலையிலே சீக்கிரமாக கிளம்பி சாப்பிடாம கூட, அவ்வளவு ஆசையாக மாப்பிள்ளை பார்க்கனும்னு வேகமாக வந்து காத்துக்கொண்டு இருக்கிறாள்."


"கொஞ்சம் நேரம் அமைதியாகயிரு பானு என்றாள் சாரு."


"அண்ணா! மன்னிகனும்.பானு பேசியதை தவறாக எண்ண வேண்டாம்! என்றாள் சாரு."


"இருக்கட்டும் சாரு.அவுங்க கேட்டதிலும் நியாயம் இருக்குதுமா என்றான் மனோஜ்.சந்துரு மருத்துவமனையில் இருக்கின்றான் சாரு.அதனால்தான் நான் வந்திருக்கின்றேன்" என்று கூறினான்.


"அந்த செய்தியை கேட்டதும், ஐயோ! அவுங்களுக்கு என்ன ஆச்சு அண்ணா?"என்று கண்களில் கண்ணீருடனும் குரலில் பதற்றத்துடனும் கேட்டாள் சாரு.


சந்துருவிற்கு என்ன நிகழ்ந்தது? ஏன் மருத்துவமனையில் இருக்கின்றான்? என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.


- தொடரும் -

* * * * * * * * * * * * * * * * *

இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும் .
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 6


"கண்ணம்மா! சந்துருவும், மனோஜூம் சாப்பிட்டாங்களா?" என்று கேட்டார் ஜானகி அம்மா.


"சின்ன ஐயாவும், மனோஜ் தம்பியும் இன்னும் வீட்டுக்கு வரவில்லை அம்மா..." என்றார் கண்ணம்மா.


"மணி ஐந்து ஆகிடுச்சு.இன்னும் இரண்டு பேரையும் ஆளையே காணோம்.என்னாச்சுனு தெரியவில்லையே! போன் போட்டாலும் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்னு வருது" என்று கண்ணம்மாடவிம் கூறிக் கொண்டிருந்தார் ஜானகி அம்மா.


"சின்னம்மாவை முதல் முதலாக இன்றைக்கு தான் சின்ன ஐயா பார்க்க போயிருக்காங்க.இத்தனை நாட்களாக பேசாதது எல்லாம் சேர்த்து வைத்து மொத்தமாக பேசுவதால நேரமாகும் பெரியம்மா.மலைக்கு மேலே கோவில் இருப்பதால் சிக்னல் கிடைக்காதுல அம்மா.அதுதான் போன் போக மாட்டிங்குது நினைக்கிறேன்.நீங்கள் கவலைப்படாமல் இருங்கம்மா. கொஞ்சம் நேரத்துல வந்திருவாங்க" என்றார் கண்ணம்மா.


"மதி! சாரு வந்தாச்சா?" என்று கேட்டார் தாத்தா.


"அக்கா இன்னும் வரல தாத்தா!" என்றாள் மதி.


"பொழுது சாயப்போது இன்னும் வரலையா?" என்றார் தாத்தா.


"அக்காவிடம் பத்து நிமிஷத்திற்கு முன்பு தான் போன் பேசினேன் தாத்தா.கோவிலிருந்து புறப்பட போகிறோம் என்று சொன்னாங்க."


தாத்தா ஆர்வமுடன் "என் பேராண்டி என்ன சொன்னாருனு கேட்டாயா மதி?"


"அட போங்க தாத்தா! நான் கேட்டதுக்கு அதைப் பற்றி வீட்டில் வந்து சொல்லுறேனு சொல்லிட்டு போனை வச்சுட்டாங்க..."


மனோஜ் நடந்த அனைத்து சம்பவங்களையும் சொல்லி முடித்ததும், "மன்னித்து விடுங்கள் சார்... உங்களுடைய சூழ்நிலை தெரிந்து கொள்ளாம அவசரப்பட்டு வேகமாக பேசிட்டேன் சார்..." என்றாள் பானு.


"அட என்னாங்க நீங்க? இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்டுக்கிட்டு இருக்கீங்க...
நீங்க பேசியதில் எந்தவொரு தவறுமே இல்ல.உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தா, இதற்கு மேல திட்டித் தீர்த்திருப்பேன்.நீங்கள் எவ்வளவோ பரவாயில்ல..." என்று கூறினான் மனோஜ்.


"நீங்களும் சாருவும் எவ்வளவு நெருக்கமான தோழிகள் என்பது உங்களது கோபத்திலே நல்லாவே தெரிந்தது பானு" என்றான் மனோஜ்.


"சரிங்கண்ணா நேரமாச்சு! நாங்க வீட்டுக்கு கிளம்புறோம்.நீங்களும் கவனமாக சென்று வாங்க..." என்று கூறினாள் சாரு.


"சரிம்மா சாரு... சந்துருவும் எனக்காக மருத்துவமனையில் காத்துக் கொண்டிருப்பான்.நானும் புறப்படுகிறேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து விடைப் பெற்றான் மனோஜ்.


நடந்த சம்பவங்களை கேட்டு கொண்டிருந்ததில் பலகார பையை மனோஜிடம் கொடுக்க மறந்துவிட்டாள் சாரு.


திடீரென ஒரு பெண், கையில் குழந்தையுடன் சாருவிடம் வந்து "அம்மா! பசிக்குது ஏதாவது இருந்தால் தாருங்கள்..." என்றார்.


உடனே சாரு தன் கையில் இருந்த பலகார பையுடன் சேர்த்து நூறு ரூபாயையும் கொடுத்தாள்.


"ஏன்ம்மா... இப்படி குழந்தையை வைத்து கொண்டு கஷ்டப்படுறீங்க?" என்று யாசகம் பெற்ற அந்தப் பெண்ணிடம் கேட்டாள் சாரு.


"அம்மா! என் கணவர் என் வயிற்றில் ஒரு குழந்தையை மட்டும் கொடுத்துட்டு வேறொரு பெண்ணுடன் இரவோடு இரவாக ஓடி விட்டார்.வாழ வழி தெரியாமல் நானும் ஒவ்வொரு வீடு வீடாக சென்று வேலை கேட்டுப் பார்த்தேன்.என்னை நம்பியாரும் வேலை தருவதற்கு முன் வரவில்லை. குழந்தையின் பசியை போக்க வேறு வழி தெரியாமல்தான் யாசகம் எடுக்கின்றேன் அம்மா..." என்றார்.


"இனிமேல் நீங்கள் கவலைப்படாதீங்க! இருக்க இருப்பிடமும், மூன்று வேளை சாப்பாட்டுடன் சேர்த்து மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தால், வேலை செய்ய வருவீர்களா?" என்று கேட்டாள் சாரு.


"நிஜமாகவாமா சொல்லுறீங்க..."


"இந்த காலத்தில் இவ்வளவு சலுகைகளுடன் ஊரு பேரு தெரியாத என்னை மாதிரி ஆளுக்கு யாரும்மா வேலை தருவாங்க?" என்றார் அந்த பெண்.


"உங்களுக்கு வீட்டு வேலை செய்ய சம்மதமா என்று மட்டும் பதில் சொல்லுங்கமா" என்றாள் சாரு.


"ஒரு வேளை சாப்பாட்டிற்க்கே திண்டாடும் எனக்கு இவ்வளவு வசதியுடன் வேலை கிடைத்தால் வேண்டாம்னு எப்படிம்மா சொல்லுவேன்.எனக்கு வீட்டு வேலை செய்ய சம்மதம் தான்ம்மா" என்றார் அந்தப் பெண்.


"ரொம்ப சந்தோஷம்மா.வேலை வேறெங்கும் இல்லை.எங்க வீட்டில் தான்" என்றாள் சாரு.


"நீங்கள் நல்லா இருக்கனும்மா..."என்று கையெடுத்து கும்பிட்டு, கதறி அழுது சாருவின் காலில் விழுந்தார் அந்தப் பெண்.


"ஐயோ! அம்மா எழுந்திருங்க... அழாதீங்க! ஏன்ம்மா இப்படி என் காலில் எல்லாம் போய் விழுகிறீங்க? மனதிற்கு ரொம்ப சங்கடமாக இருக்குதும்மா.நான் உங்களைவிட வயதில் இளையவள்.இனி இப்படிலாம் செய்யாதீங்கம்மா."


"அப்படி இல்லம்மா.தாலிக்கட்டுன புருஷன் வயித்துல பிள்ளையை கொடுத்துட்டு என்னையும் குழந்தையும் பற்றி எதையுமே யோசிக்காம அனாதையாக பறிதவிக்க விட்டு போய்ட்டான்.சொந்த பந்தங்கள் எல்லாம் கைவிட்டு விட்டுடாங்க.என் குழந்தை மட்டும் இல்லைனா என்னைக்கோ நான் தற்கொலை செஞ்சிருப்பேன் அம்மா.
பாவி மனுஷன் செஞ்ச தப்புக்கு, பாவம் இந்த பச்சக்குழந்தை என்ன பண்ணும்? என்று நினைச்சு தான் ஒவ்வொரு நாளும் எப்படியாவது கஷ்டப்பட்டு குழந்தையை நல்ல படியாக வளர்க்கனும்னு தினமும் போராடிக் கொண்டு இருக்குறேன்ம்மா.


தெருவில் பரதேசியாக திரிந்த எனக்கு யாருமே வேலையும் கொடுக்க மாட்டேனு சொல்லிட்டாங்க.தினமும் இந்த கோவில் வாசலில் வந்து நான் அழுத புலம்பியது, மலையில் இருக்கிற அந்த சாமிக்கு கேட்டுருச்சோ! என்னம்மோ! உங்க ரூபத்தில வந்து எனக்கு உதவி செய்கிறார்" என்று சொல்லி பல நாட்களாக தன் மனதில் இருந்த வேதனை அனைத்தையும் கொட்டித் தீர்த்து கதறி அழுதாள் அந்தப் பெண்.


அப்பெண்ணை சமாதனப்படுத்தி, அவளது கண்ணீரைத் துடைத்து கட்டி அணைத்து தட்டிக் கொடுத்தாள் சாரு.


அந்த பெண்ணின் வாழ்க்கை கதையை கேட்ட பானுவின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.


"உங்களது கஷ்ட காலம் எல்லாம் முடிந்துவிட்டது.உங்களுக்கு உறவு என்று உரிமை கொண்டாட நாங்கள் இருக்கோம்.இன்று ஒருநாள் இரவு மட்டும் எதைப் பற்றியும் யோசிக்காமல் நிம்மதியாக போய் தூங்குங்கம்மா..." என்றாள் சாரு.


"நீங்கள் இப்போது வசிக்கும் இடத்தை மட்டும் சொல்லுங்கள் அம்மா."


"எனக்குனு வீடோ! முகவரியோ! எதுவும் கிடையாதும்மா.ரொம்ப நாட்களாவே இந்த கோவிலுக்கு பின்பக்கம்தான் குடில் போட்டு வசித்து வர்றேன்ம்மா" என்றார்.


"நாளைக்கு காலையில் உங்களின் துணியெல்லாம் எடுத்து வைத்து தயாராக இருங்கள்.காலை எட்டு மணிக்கு உங்களை அழைத்து வர ஆள் அனுப்பி வைக்கின்றேன்" என்று கூறிவிட்டு சாருவும், பானுவும் வீட்டிற்கு புறப்பட்டனர்.


"என்னடா சந்துரு! டாக்டர் என்ன சொல்லுறாங்க?" என்றான் மனோஜ்.


"இனி எதுவும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லையாம்.ஒரு நாள் எங்கும் அலையாமல் ஓய்வு எடுத்தா சரியாகிவிடும்னு டாக்டர் சொன்னார்.
ஒரு வாரத்திற்கு மாத்திரை மருந்து கொடுத்திருக்காங்க மனோஜ்..." என்றான் சந்துரு.


"உங்க நல்ல மனசுக்கு நீங்க எப்பவும் நல்லா இருப்பீங்க தம்பி..." என்று முத்து சந்துருவிடம் கூறிவிட்டு அவரது வீட்டிற்கு கிளம்பினார்.


சந்துருவும் மனோஜூம் மருத்துவமனையிலிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.சந்துருவின் சட்டையில் இரத்தக் கறையை பார்த்ததும் ஜானகி அம்மா, பதறி அடித்து ஓடி வந்து அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்துவிட்டார்.


சந்துரு வேகமாக ஓடி சென்று ஜானகி அம்மாவை தாங்கி பிடித்து தன் மடியில் வைத்து, "அம்மா! அம்மா!" என்று உரக்க கத்தி அழைத்தான்.


சந்துருவின் சத்தம் கேட்டு கண்ணம்மா வேகமாக தண்ணீர் கொண்டு வந்து சந்துருவிடம் கொடுத்து, "அம்மாவின் முகத்தில் தண்ணீர் தெளியுங்கள் சின்ன ஐயா..." என்று சந்துருவிடம் கூறினார்.தண்ணீரை தெளித்ததும் ஜானகி அம்மாவிற்கு மயக்கம் தெளிந்தது.


"இந்தாங்க பெரியம்மா... கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள்" என்று டம்பளரில் தண்ணீர் கொடுத்தார் கண்ணம்மா.


"சந்துரு! உனக்கு என்னப்பா ஆச்சு? ஏன் இப்படி சட்டையெல்லாம் இரத்தமாக இருக்குது?" என்று அழுது கொண்டே கேட்டார் ஜானகி அம்மா.


"அம்மா! நீங்க பதறுகிற அளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை.முதலில் அழுவதை நிறுத்துங்கள்.சாருவை பார்க்க போகும் வழியில் ஒரு சின்ன ஆக்ஸிடன்ட்" என்றான் சந்துரு.


எப்படி விபத்து நடந்தது? சாருவை பார்க்க சென்ற வழியில் அப்படி என்ன விபத்து நடந்தது? என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.


- தொடரும் -


* * * * * * * * * * * * * *


இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 7


சாருவை அவளது வீட்டு வாசலில் இறக்கிவிட்டு, "நான் சொன்னதை மறந்துவிடாதே சாரு! நாளைக்கு பார்க்கலாம் சாரு..." என்று கூறிவிட்டு தன் வீட்டிற்கு சென்றாள் பானு.


சாரு வீட்டிற்குள் நுழைந்ததும், "என்ன அக்கா! மாமா உங்களை பார்த்ததும் உங்க அழகுல மயங்கி கீழ விழுந்துட்டாரா? காதல் கவிதையை அப்படியே கொட்டி தீர்த்துருப்பாரே..." என்று மதி சிரித்துக் கொண்டே கூறினாள்.


"ஏய் நீ கொஞ்ச நேரம் சும்மாயிருடி மதி..." என்று அவளை அதட்டினார் சாருவின் அம்மா.


"என்னடா ஆச்சு சாரு? உன் முகத்துல மாப்பிள்ளையை பார்த்த சந்தோஷமே தெரியல" என்று கேட்டார் சாருவின் அம்மா சிவகாமி.


"ஆமாம் அம்மா... மாப்பிள்ளை வரும் வழியில் ஒரு சின்ன ஆக்ஸிடன்டாகி விட்டது."


"ஐயோ! என்னமா சாரு சொல்லுற? பயப்படாதீங்கம்மா... அவருக்கு எந்த பாதிப்பும் இல்ல.அவுங்க காரில் வரும் போது எதிரில் வேகமாக பைக் ஓட்டிட்டு வந்த இரண்டு வாலிப வயது பசங்க ரோட்டின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த நிறை மாதமான அலமுவின் மீது ஏத்திட்டு நிற்காம போய்ட்டாங்களாம்.காரில் வரும் போது இந்த சம்பவங்களை பார்த்த உங்க மாப்பிள்ளை, உடனே காரை நிறுத்தி அலமுவை தூக்கிக் கொண்டு டவுன்ல இருக்கிற ஆஸ்பத்திரிக்கு அழைத்து கொண்டு சென்றிருக்கிறார்."


"கையில் பைக் கிடைத்தால் போதும் சில பசங்க கண்ணு முன்னு தெரியாமல் கண்ட படி ஓட்டிக் கொண்டு போறாங்க.பிள்ளைகளின் பிடிவாத்தால் பைக் கொடுத்துட்டு பெத்த தாய் மனசுக்கு பிள்ளை வீட்டுக்கு வரும் வரை நிம்மதியாகவே இருக்க முடியாது..." என்று ஒவ்வொரு தாய்படும் மனக்குமறலை கூறினார் சிவகாமி அம்மா.


"பாவம் அந்த வாயில்லா ஜீவன் அடிபட்டதும் வலியால் எவ்வளவு துடிதுடித்தோ! சரி, அப்போ மாப்பிள்ளை உனக்கு போன் போட்டு இந்த தகவலைச் சொன்னாங்களா?" என்று கேட்டார் சிவகாமி அம்மா.


"அவுங்க நண்பர் மனோஜ் நேரில் வந்து தகவல் சொன்னார்ம்மா."


"மாப்பிள்ளைக்கு எவ்வளவு தங்கமான மனசு பாரு" என்று சிவகாமி அம்மா கூறியதும் சாருவின் முகத்தில் சந்தோஷம் பொங்கியது.


"சரிம்மா... நீ முதல்ல போய் கை, கால் முகத்தை கழுவிட்டு வந்து சாப்பிடு சாரு..." என்றார் சிவகாமி அம்மா.


"என்னப்பா சந்துரு சொல்லுற?உண்மையாவே இது தான் நடந்ததா?"என்று கேட்டார் ஜானகி அம்மா.


"ஆமாம் அம்மா...நான் சொல்வது எல்லாம் உண்மை தான்.என்னை நம்புங்கள்..." என்றான் சந்துரு.


"வாயில்லா ஜீவன் கூட பார்க்காமல் ஆடு மேல ஏத்திட்டாங்கம்மா" என்றான் மனோஜ்.


உடனே மருத்துவமனைக்கு மட்டும் அழைத்து கொண்டு போகாமல் இருந்திருந்தால், அலமுவோட சேர்ந்து அது வயிற்றில் இருந்த குட்டியும் செத்து போயிருக்கும்மா.அலமுவோட காலில்தான் கொஞ்சம் பெரிய அடி.உயிருக்கு எந்த வித ஆபத்துமில்லமா காப்பாத்தியச்சு
அம்மா.இப்போது தாயும் சேயும் பத்திரமாக இருக்காங்க..." என்று சந்துரு சொன்னதும், சந்துருவை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டார் ஜானகி அம்மா.இந்த முறையும் சாருவை சந்துருவினால் பார்க்க முடியாமல் ஆகிவிட்டது என்றான் மனோஜ்.


"என்ன நீ மட்டும் பார்த்த மாதிரி சொல்கிறாய் மனோஜ்..." என்று கேட்டார் ஜானகி அம்மா.


"ஆமாம் அம்மா... நான் தான் அவனை சென்று தகவல் சொல்லிட்டு வர சொன்னேன்" என்றான் சந்துரு.


"ஒரு போன் போட்டு நீயே சொல்லிருக்கலாமே சந்துரு?" என்றார் ஜானகி அம்மா.


"நேரில் சென்று சொல்வது தான் சரி என்று தோணுச்சுமா.அதுதான் மனோஜை அனுப்பி வைத்தேன்."


"அம்மா! பொண்ணு மகாலெஷ்மி அம்சமாக இருக்காங்கம்மா.நம்ம சந்துருவிற்கு பொருத்தமான பொண்ணுமா.நல்லா மரியாதை தெரிந்த பொறுமைசாலியான பொண்ணுமா சாரு..." என்றான் மனோஜ்.


"பத்து நிமிஷம் பார்த்து பேசியதை வைத்து எப்படி மனோஜ் தம்பி அவுங்க குணத்தை பற்றியெல்லாம் சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டார் கண்ணம்மா.


"எவ்வளவு நிமிஷம் பேசினாங்க என்பது முக்கியமில்லம்மா, எப்படி மரியாதை கொடுத்து பேசினாங்க தான் முக்கியம்" என்றான் மனோஜ்.


மனோஜ் சாருவை பற்றி சொல்லியதைக் கேட்ட சந்துரு கொஞ்சம் கூட அவன் சொல்லுவதை கண்டு கொள்ளாமல், "அம்மா! நீங்க சாப்பாடு ரெடியாக எடுத்து வையுங்க.நான் போய சட்டையை மாற்றி விட்டு வருகிறேன்..." என்று கூறிவிட்டு தனது அறைக்குச் சென்றான் சந்துரு.


சாரு சாப்பிட்டு முடித்ததும், தாத்தவை பார்க்க அவரது அறைக்குச் சென்றாள்.


"வாடா சாரு! மதி கோவிலில் நடந்ததை எல்லாம் சொன்னாள்" என்றார் தாத்தா.


"அந்த காலத்தில் எல்லாம் இப்போது மாதாி கல்யாணத்திற்கு முன்பே மாப்பிள்ளையை நேரில் பார்த்து பேச அனுமதிக்க மாட்டங்கமா சாரு.உங்க தாத்தா என் கழுத்தில் மூன்று முடிச்சு போட்ட பிறகுதான், உங்க தாத்தாவோட முகத்தையே நான் பார்த்தேன்..." என்று சாருவின் பாட்டி அவுங்க கல்யாண கதையை சொல்ல ஆரம்பித்துவிட்டார்.


"உன் பாட்டி நேரம் காலம் தெரியாமல் போன கதை வந்த கதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருப்பாம்மா.
நீ சொல்ல வந்ததை சொல்லுடா சாரு..." என்றார் தாத்தா.


"பரவாயில்லை இருக்கட்டும் தாத்தா! பாட்டி உங்க கல்யாணக் கதையை சொல்லி முடித்ததும் நான் சொல்லுறேன் தாத்தா..." என்றாள் சாரு.


"உன் பாட்டி சொல்ல ஆரம்பித்துவிட்டா இன்னைக்கு இராத்திரி முழுக்க விடிய விடிய கதையை சொல்லிக் கொண்டே இருப்பாள்.நீ முதலில் சொல்லுடா சாரு..." என்றார் தாத்தா.


சாரு கோவிலில் யாசகம் பெற்ற பெண்ணின் வாழ்க்கை கதையையும் அங்கு நடந்ததையும் கூறினாள்.


"தாத்தா மன்னிக்கனும்.உங்களிடம் அனுமதி கேட்காமல் அந்த பெண்ணிற்கு வாக்கு கொடுத்து விட்டேன்" என்றாள் சாரு.


"நீ அந்த பொண்ணுக்கு வாக்கு கொடுக்காமல் வந்திருந்தால்
தான் உன்னை நான் மன்னித்திருக்க மாட்டேன் சாரு..." என்று பதிலளித்தார்.


"நீ என் பேத்தினு நிரூபித்துவிட்டாய் சாரு..." என்று தன் பேத்தியின் தோளைத் தட்டி கொடுத்து பாராட்டினார்.


"நாளைக்கு காலையிலே அந்த பெண்ணை அழைத்து வரச் சொல்லி காரையும் கந்தசாமியையும் அனுப்பி வைக்கிறேன்டா சாரு...இப்போது நீ சென்று நிம்மதியாக தூங்குடா சாரு..." என்றார் தாத்தா.


தாத்தா சம்மதம் தெரிவித்ததை எண்ணி மிகுந்த சந்தோஷத்துடன் தன் அறைக்கு சென்றாள் சாரு.தனது அறைக்குள் சென்ற சாருவிற்கு வீட்டிற்கு புறப்படும் போது பானு சொன்னது நியாபகம் வந்தது.உடனே வேகமாக கம்ப்யூட்டரை ஆன் செய்தாள்.தனது முகநூல் பக்கத்தை திறந்து சந்துருவின் பெயரை டைப் செய்து தேடிப் பார்த்தாள்.பல்லாயிரம் பேர் சந்துருவின் பெயரில் இருந்தனர்.
இருப்பினும் சந்துருவின் முகநூல் பக்கத்தை ஒரு வழியாக தேடி கண்டுபிடித்து விட்டாள்.ஆனால் திடீரென்று சாரு என்ன நினைத்தாலோ தெரியவில்லை.
முகநூல் பக்கத்தை மூடிவிட்டு கம்ப்யூட்டரை அணைத்துவிட்டு படுத்து உறங்கிவிட்டாள்.


மறுநாள் காலையில் சாருவிற்கு போன் செய்தாள் பானு."மாப்பிள்ளை எதுவும் போன் போட்டு பேசினாரா சாரு? மாப்பிள்ளை சாரோடு பேஸ்புக்கில் ப்ரண்டாகிட்டியா?" என்று கேட்டாள் பானு.


அதற்கு சாரு கூறிய பதிலை கேட்டு ஆச்சரியம் அடைந்து, "அடேங்கப்பா! தாங்க முடியவில்லை..." என்றாள் பானு.



அப்படி என்ன பதில் கூறியிருப்பாள் சாரு? என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.



- தொடரும் -


* * * * * * * * * * * * * *


இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 8


"கந்தசாமி! நீ சீக்கிரம் கிளம்பி போய் மலைப்பிள்ளையார் கோவிலுக்கு பின்னாடி இருக்கும் அந்தப் பொண்ணையும் குழந்தையையும் பார்த்து பத்திரமாக அழைச்சிட்டு வந்திரு.பத்து மணிக்கு மாப்பிள்ளை அழைப்பிற்கு, மாப்பிள்ளை வீட்டிற்கு போகனும்" என்று கூறினார் தாத்தா.


"சரிங்க ஐயா! சீக்கிரமாக வந்து விடுகிறேன்..." என்று கூறிவிட்டு கோவிலுக்கு கிளம்பினான் கந்தசாமி.


காதில் ஹெட்செட் மாட்டிக்கிட்டு பாட்டு கேட்டுக் கொண்டே மெதுவாக படியிலிருந்து இறங்கி வந்தான் சந்துரு.அதைப் பார்த்ததும், ஜானகி அம்மா வேகமாக அவன் காதில் மாட்டியிருந்த ஹெட்செட்டை கழற்றி வீசி எறிந்தார்.


"உன்னோடு கத்தி கத்தியே என் தொண்டை தண்ணீரெல்லாம் வற்றி போயிரும் போல..."


"ஏன்ம்மா ஹெட்செட்டை தூக்கி எறிஞ்சீங்க..." என்று கேட்டான் சந்துரு.


"இன்னைக்கு என்ன நாள் சந்துரு?"


"இன்னைக்கு செவ்வாய் கிழமை" என்றான் சந்துரு.


"செம காமெடி! சிரிப்பே எனக்கு வரல..." என்று கூறினார் ஜானகி அம்மா.


"இன்னைக்கு சாயங்காலம் உனக்கு நிச்சயதார்த்தம்.அது உனக்கு நியாபகம் இருக்குதா? இல்லையா? இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை மாப்பிள்ளை அழைக்க பொண்ணு வீட்டிலிருந்து எல்லோரும் வந்திருவாங்க.நீ என்னடான.... இன்னும் குளிக்காமல் பாட்டு கேட்டுக்கிட்டு பொண்ணு மாதிரி அன்ன நட போட்டு மெதுவாக நடந்து வந்துக்கிட்டு இருக்க..." என்று சந்துருவை திட்டிக் கொண்டிருந்தார்.


"போதும் போதும்மா... காலையிலே சுப்ரபாதம் பாட ஆரம்பிக்காதீங்க! காபி குடிக்கலாம்னு கீழே இறங்கி வந்தது ஒரு குத்தமா?" என்று கேட்டான் சந்துரு.


"காபி குடிக்க வந்தது ஒன்றும் குத்தமில்ல.ஆனால் இப்படி பொறுப்பில்லாம இருப்பதுதான் தவறு சந்துரு."


என்னை அவுங்க அழைக்க வரும் நேரத்திற்கு, நான் கிளம்பி தயாராக இருப்பேன்.உங்க கையில் இருக்கின்ற காபியை முதலில் கொடுங்கம்மா.நீங்க போய் மற்ற வேலையை பாருங்கம்மா..." என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு காபியை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான் சந்துரு.


கோவிலில் இருந்த அந்தப் பெண்ணை அழைத்து வந்தார் கந்தசாமி.
வீட்டிலிருந்த அனைவரும் அவளை வரவேற்கும் விதத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்தாள் அந்தப் பெண்.


"உனது பெயர் என்னமா?"என்று கேட்டார் பாட்டி.


"என் பெயர் சுதாம்மா.என் குழந்தையின் பெயர் கண்ணன் அம்மா" என்றாள்.


"பெயருக்கேற்றார் போல கண்ணன் மாதிரியே அழகாக இருக்கிறான்" என்று கூறி குழந்தையை வாங்கி முத்தம் கொடுத்தார் பாட்டி.


"சரிம்மா சுதா... நீயும் குழந்தையும் போய் குளிச்சுட்டு சாப்பிடுங்க.மதியம் இந்த பையில் இருக்கிற புதுத்துணியை உடுத்தி கிளம்பி தயாராகயிரும்மா..." என்று ஒரு நீல நிற துணிப் பையை சுதாவிடம் கொடுத்தார் பாட்டி.


"ரொம்ப நன்றி அம்மா.நான் வந்த வழியல்லாம் சீரியல் பல்பும், மாவிலை தோராணமும், வீடு முழுக்க மலர்களால் அலங்கரித்து ரொம்ப அழகாக இருந்ததும்மா.வீட்டில எதுவும் விசேஷமா அம்மா?" என்று கேட்டாள் சுதா.


"ஆமாம் சுதா.இன்னைக்கு சாயங்காலம் என் பேத்தி சாருவிற்கு நிச்சயதார்த்தம்.நாளைக்கு காலையில் சாருவிற்கு கல்யாணம் சுதா.சரிம்மா சுதா... நாங்க மாப்பிள்ளை அழைப்பிற்கு செல்ல நேரமாகிடுச்சு.
மதியம் கார் அனுப்பி வைக்கிறோம். வீட்டில் வேலை செய்யும் மற்றவர்களோடு சேர்ந்து நீயும் கிளம்பி மண்டபத்திற்கு வந்துவிடு சுதா..." என்று கூறிவிட்டு பாட்டி புறப்பட்டார்.


"என்னடா சந்துரு? ஆச்சரியமாக இருக்குது.அதுக்குள்ள கிளம்பி தயாராகி இருக்க..."என்று கேட்டான் மனோஜ்.


"உனக்கு என்னடா மனோஜ் பிரச்சனை. கிளம்பிட்டாலும் கேள்வி கேட்குற, கிளம்பாட்டாலும் கேள்வி கேட்குற..." என்று கொஞ்சம் கோபமாக கேட்டான் சந்துரு.


பதில் சொல்லத் தெரியாமல் சிரித்து சமாளித்தான் மனோஜ்.சந்துரு வீட்டின் வாசலில் நாலைந்து கார்கள் வருகின்ற சத்தம் கேட்டது.


ஜானகி அம்மாவும், சந்துருவின் சித்தி மாலதி அம்மாவும் சாரு வீட்டிலிருந்து மாப்பிள்ளை அழைப்பிற்கு வந்த அனைவரையும் வரவேற்று உபசரித்தனர்.சந்துரு இருக்கும் அறையை ஒரு கரம் வேகமாக தட்டியது.மனோஜ் சென்று திறந்ததும், உள்ளே நுழைந்தான் சங்கர்.


"சந்துருவை பார்த்து, நீங்கள் தான் மாப்பிள்ளையா?" என்று கேட்டான் சங்கர்.


"ஆமாம்...நீங்க யாரென்று தெரிந்து கொள்ளலாமா சார்?" என்றான் சந்துரு.


"நான் தான் சாருவின் முறைப்பையன் சங்கர்.நான் கட்டிக்க வேண்டிய பொண்ணதான் நீங்க கல்யாணம் செய்ய போகிறீங்க சந்துரு..." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஜானகி அம்மா வந்துவிட்டார்.


"கீழே எல்லோரும் உனக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள் சந்துரு.சீக்கிரம் வா!" என்று கூறி கையோடு அழைத்து சென்றார் ஜானகி அம்மா.


அவருடைய முகநூல் பக்கம் எல்லாம் திறந்து பார்த்தேன்.பிறகு கொஞ்சம் நேரம் சிந்தித்து பார்த்தேன்.


"ஆக்க பொறுத்தவுங்களுக்கு ஆற பொறுக்க முடியாத என்ன? "


அப்படினு நினைத்து முகநூலை விட்டு வெளியே வந்து கம்ப்யூட்டரை ஆப் செய்து விட்டேன்" என்றாள் சாரு.


"உன்னையெல்லாம் இந்த ஜென்மத்தில் திருத்தவே முடியாது சாரு! நீயெல்லாம் இந்த காலத்துல பிறக்க வேண்டிய பெண்ணே கிடையாது.மன்னர்கள் காலத்தில் பிறக்க வேண்டியவள்.அந்த காலத்தில் கூட புறாக்கள் மூலமாக தூது அனுப்பி காதலனோடு பேசு வாங்கலாம்.நீ அந்த காலத்தில் பிறந்திருந்தாலும் கூட இப்படிதான், வாய்ப்பு கிடைத்திருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ளாமல் தனியாக நீ மட்டும் வருங்கால கணவனை நினைத்து கொண்டு கனவுலேயே காதல் கீதம் பாடிக் கொண்டிருந்திருப்பாய் சாரு" என்றாள் பானு.


"சாரு! சாரு!" என்று சாரு இருக்கும் அறையின் கதவை தட்டினார் சாருவின் சித்தி.


"சீக்கிரம் போன் பேசிவிட்டு சாப்பிட வாடா சாரு.உனக்கு மேக்கப் போட பியூட்டிசன் வந்திட்டாங்கம்மா..." என்றார்.


"இதோ ஐந்து நிமிஷத்தில் வந்து விடுகிறேன் சித்தி..."என்றாள் சாரு.


"ஏய் பானு! சீக்கிரம் கிளம்பி வீட்டிற்கு வாடி" என்றாள் சாரு.


"நீ கண்ணை மூடி திறப்பதற்குள் உன் கண் முன்னாடி வந்து நிற்பேன் சாரு" என்று சொன்னாள் பானு.


அதைப் போலவே சாரு திரும்பியதும் அவள் முன் வந்து நின்று கொண்டிருந்தாள் பானு.


"சொன்ன மாதிரியே வந்துட்ட பானு.
நான் எப்போ வருவேன்? எப்படி வருவேனு? யாருக்கும் தெரியாது? ஆனால் வர வேண்டிய நேரத்துக்கு கரெக்டாக வந்திருவேன்" என்றாள் பானு.


"சரி, வா பானு! சாப்பிட போகலாம்" என்று பானுவை அழைத்துச் சென்றாள் சாரு.


"உனக்கு புது ப்ரெண்ட் கிடைச்சிருக்காங்க போல பானு" என்று கேட்டாள் சாரு.


"அப்படி யாரும் இல்லையே!" என்றாள் பானு.


"முழு பூசணிக்காயை சோத்துக்குள்ள வைத்து மறைக்க நினைக்காதே பானு!" என்று சாரு கூறியதும் பானுவின் குரலில் தடுமாற்றம் தெரிந்தது.


"அது வந்து..." என்று இழுத்தாள் பானு.


"பார்த்து பேசி பத்து நிமிஷம் கூட ஆகவில்லை.அதுக்குள்ள நீயும், மனோஜ் அண்ணாவும் முகநூலில் நண்பர்கள் ஆகிட்டீங்களா?" என்று கேட்டாள் சாரு.


"உன்னிடம் இதுவரை ஏதாவது மறைத்திருக்கின்றேனா சாரு?"


"நீயே! இன்னும் மாப்பிள்ளை சாரை பார்க்காமல் வருத்ததில் இருக்குற.அதனால்தான் உன்னை நேரில் பார்க்கும் போது இந்த விஷயத்தை பற்றி சொல்லிக்கலாம்னு இருந்தேன்" என்றாள் பானு.


"ஏன் சாரு! நான் ஒன்னு சொன்னா கோபப்பட மாட்டியே?"


"நீ முதலில் விஷயத்தை சொல்லு பானு."


"மாப்பிள்ளை சார் சரியான கல் நெஞ்சக்காரராக இருப்பாரோ! அவருக்கு ஒரு நாள் கூட உன்னிடம் பேசனும்னு என்று தோன்றவே இல்லையா?"என்று கேட்டாள் பானு.


"கல் நெஞ்சம் படைத்தவராக இருந்திருந்தால், வாயில்லா ஜீவனை காப்பாற்றுவதற்கு உதவி செய்ய முன் வந்திருப்பாங்களா பானு..." என்று கேள்வியை திருப்பி பானுவிடம் கேட்டாள் சாரு.


"இந்த வயசுலேயே உன்னால் மட்டும் எப்படி இந்த மாதிரி பல கோணங்களில் சிந்திக்க முடிகிறது சாரு? உன்னை நினைத்து ஒரு பக்கம் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.இப்படி அருமையான எண்ணங்கள் கொண்ட உன்னிடம் இன்னும் மாப்பிள்ளை சார் பேசவில்லையே என்று நினைத்து மறுப்பக்கம் வருத்தமாகவும் இருக்கிறது" என்றாள் பானு.


சாருவும் பானுவும் சாப்பிட்டு முடித்தனர்.சாருவிற்கு மேக்கப் போட தொடங்கினார் பியூட்டிசன்.சாருவை அலங்காரம் செய்வதைக் கண் இமையை கூட அசைக்காமல் பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் பானு.


சந்துருவின் வீட்டில் அனைத்து சாஸ்திர சம்பிரதாய முறைகளையும் முடித்த பின்னர், சாருவின் உறவினர்கள் சந்துருவை மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.


சாருவை மண்டபத்திற்கு அழைத்து செல்ல காரும் தயாராக வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தது.இத்தனை நாட்களாக சாரு காத்திருந்த அந்த பொன்னான தருணம் நெருங்கி அருகில் வந்தது.


தனது ஆசை நாயகனை பார்த்ததும், அந்த பேதையின் உள்ளம் கொண்ட இன்பம் எப்படி இருந்தது? சாருவின் மீது இவ்வளவு உரிமை கொண்டாடும் அந்த சங்கர் யார்? என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.



- தொடரும் -


* * * * * * * * * * * * * *


இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 9


மாப்பிள்ளை அழைப்பின் போது செண்டா மேளம் வாத்தியத்துடனும், நடன கலைஞர்களின் நடனத்தடனும், மறுபக்கம் பட்டாசு வெடிகளின் சத்தத்தோடும் சிவப்பு கம்பளத்தில் ராஜ மரியாதையுடன் மாப்பிள்ளைக்கு மலர்கள் தூவி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.ராஜா மாதிரி உடை அணிந்து கம்பீரமான தோற்றத்துடன் குதிரையில் வந்து இறங்கினார் மாப்பிள்ளை சந்துரு.உடைக்கேற்ப உருவமும் ஒத்து போயிருந்தது.


மண்டபத்தின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த யானை, மாப்பிள்ளைக்கு மாலைப்போட்டு ஆசிர்வாதம் செய்து வரவேற்றது.
மண்டபத்தின் அலங்காரங்கள் அனைத்தும் காண்போரின் மனதை கவரும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தனர்.


பல வண்ண மலர்கள் மற்றும் பழங்களை கொண்டு பறவைகளின் உருவத்தை தத்தரூபமாக வடிவமைத்து வைத்திருந்தனர்.அதோடு மட்டுமல்லாமல் தாமரை, செவ்வந்தி, அல்லி, மல்லி, செம்பருத்தி மற்றும் பல வண்ண நிற ரோஜாக்கள் என அனைத்து வகையான மலர்களால் மண்டபத்தின் வாசலில் மிகப்பெரிய ரங்கோலி கோலம் மலர்களை கொண்டு வரைந்திருந்தனர்.


மண்டபத்தின் ஒவ்வொரு பகுதியும் பல வண்ண மலர்களாலும், சீரியல் பல்புகளாலும், மாவிலை தோரணங்களாலும் மிகவும் அற்புதமாக அலங்காரம் செய்யப் பட்டிருந்தது.மண்டபம் பார்ப்பதற்கு அப்படியே பூலோக சொர்க்கம் போல காட்சியளித்தது.மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுக்க பதினாறு வகையான வெள்ளி தட்டுகளில் பல வகையான பொருட்களைக் கொண்டு வித விதமாக அலங்காரம் செய்து ஆரத்தி தட்டை தயார் செய்து வைத்திருந்தனர்.


சந்துருவிற்கு மச்சினிச்சி என்ற முறையில் முதல் ஆரத்தியை மதி எடுத்தாள்.ஆரத்தி எடுத்ததிற்கு பரிசாக நூறு ரூபாயை மதியின் ஆரத்தி தட்டில் வைத்தான் சந்துரு.


"மாமா! நூறு ரூபாய்லாம் வேண்டாம்...
அமெரிக்கா டாலர் இருந்தா தாங்க..." என்றாள் மதி.


"அதற்கென்ன கொடுத்துட்டா போச்சு" என்றார் ஜானகி அம்மா.


"ஏய் மதி! எந்த நேரத்தில் விளையாடனும் உனக்கு தெரியாதாடி?" என்று மதியின் அம்மா சரோஜா அவளைச் சத்தமிட்டார்.


"அதனால் என்ன சம்மந்திம்மா...மதி அவள் மாமாக்கிட்ட உரிமையாக கேட்குறா.இதுல சத்தம் போடுவதற்கு என்ன இருக்குது? அவளை சத்தம் போடாதீங்க!" என்றார் ஜானகி அம்மா.


அமெரிக்கா டாலரை தனது பர்ஸிலிருந்து எடுத்து மதியிடம் கொடுத்தான் சந்துரு.அடுத்ததாக சாருவின் தம்பி பாபு, சந்துருவிற்கு பாத பூஜை செய்தான்.அதற்கு பரிசாக பாபுவின் கழுத்தில் தங்க சங்கிலியை போட்டு விட்டான் சந்துரு.இறுதியாக தனது மாமாவாகிய சந்துருவை மண்டபத்திற்குள் கைப்பிடித்து அழைத்து சென்றான் பாபு.


சாருவிற்கு அலங்காரம் செய்து முடித்ததும், வீட்டில் உள்ள அனைத்து பெரியோர்களிடமும் ஆசிர்வாதம் பெற்றாள் சாரு.


"நல்ல நேரம் முடிவதற்குள் வண்டியில் வந்து ஏறுமா சாரு..." என்றார் சாருவின் அப்பா சுப்ரமணியன்.


"நாங்க எல்லாரும் சாருவை அழைத்துக் கொண்டு முன்னாடி கிளம்புறோம் ராஜூ.நீ வீட்டில் உள்ள மற்ற எல்லாரையும் அழைத்து கொண்டு பின்னாடி வரும் வண்டியில் சீக்கிரமாக மண்டபத்திற்கு வந்து சேர்ந்துடு" என்று சாருவின் சித்தாப்பா ராஜூவிடம் கூறினார் சுப்ரமணியன்.


சாரு வண்டியில் ஏறியதும் அவளது எண்ணமெல்லாம் சந்துருவை பற்றி சிந்திக்க தொடங்கியது.வண்டியின் ஜன்னலோரமாக அமர்ந்திருந்தாள் சாரு.சாருவை அடுத்து பானு உட்கார்ந்திருந்தாள்.சாருவின் மனம் இருக்கும் இடத்தை அறியாமல், தானாக கதை பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் வந்தாள் பானு.


வண்டி வேக தடையைத் தாண்டி செல்லும் போது திடீரென்று போட்ட ப்ரேக்கில், வண்டி குலுங்கிய போதுதான் சுயநினைவுக்கு வந்தாள் சாரு.வண்டியின் ஜன்னல் வழியாக வானத்தையே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் சாரு.


"ஏய் சாரு! வானத்தில் அப்படி என்னடி தெரியுது?" என்று வண்டியின் ஜன்னல் வழியாக எட்டிக் கொண்டு வானத்தை பார்த்தாள் பானு.


"வானத்துல அப்படி எதுவும் வித்தியாசமாக தெரியலையே!" என்றாள் பானு.


மீண்டும் பதில் ஏதும் சொல்லாமல் சிரிக்க தொடங்கினாள் சாரு.


"அது சரிதான்... நான் ஒரு மடச்சி.நீ கற்பனை உலகத்தில் உலாவுவது தெரியாம நான் சொல்லுவதை நீ கேட்குறயா? இல்லையானு? கூட தெரியாமல் லூசு மாதிரி தனியாக புலம்பிட்டு வந்திருக்கேன் பாரு.நீ இப்போது எதை நினைத்து சிரிக்கிறனு எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு.நீ மாப்பிள்ளை சாரோடு சேர்ந்து டூயட் பாட்டுக்கு வானத்தில் ஆடிக்கிட்டு இருக்குறது போல கற்பனை செஞ்சு பார்த்துதான சாரு சிரிக்கிற..." என்று கேட்டாள் பானு.


"உனக்கு எப்போது பார்த்தாலும் டூயட் பாட்டு நினைப்பு தான் வருமாடி பானு?"


"அப்படியெல்லாம் ஒன்னுமில்ல..."


"பிறகு மேடம் எதை நினைத்து சிரிக்கிறீங்களாம்?" என்று கேட்டாள் பானு.


"ஒரு நாள் ஒரு கனவு கண்டேன். இன்றைக்கு அதை நினைத்து பார்த்தேன்.அதுதான் சிரிப்பு வந்தது."


"அப்படி என்ன கனவு சாரு அது?" என்று பானு கேட்டதும், கனவின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அனைத்தையும் சொன்னாள் சாரு.


"இதில் சிரிப்பதற்கு என்ன சாரு இருக்குது?" என்றாள் பானு.


"கனவில் காரில் வந்து இறங்கியது மனோஜ் அண்ணானு தெரியாமல் போச்சு.இப்போது பாரு நீங்கள் ப்ரெண்ட்ஸ் ஆகியாச்சு.அடுத்த கட்ட நடவடிக்கையாக இரண்டு வீட்டு பக்கமும் பேசி சம்மதம் வாங்கிட வேண்டியது தான் பாக்கி..." என்று கூறிச் சிரிக்கத் தொடங்கினாள் சாரு.


"நாணத்தில் குனிந்து கொண்டு சும்மாயிரு சாரு..." என்றாள் பானு.


வண்டி மண்டபத்தை நெருங்கியதும் சாருவின் மனம் பட படத்தது.அவளது கண்கள் தேனீக்கள் பூவை தேடுவது போல சந்துருவை தேடி ரிங்காரமிட்டது.
சாருவிற்கு ஆரத்தி எடுத்து வரவேற்று மணமகள் அறைக்கு அழைத்து சென்றனர்.


மணமகள் அறையின் எதிர்ப்புறத்தில் தான் மணமகனின் அறையும்
இருந்தது.சாருவின் உடல் மட்டும்தான் அறையில் இருந்தது.மனமும் கண்களும் அலைபாய்ந்து சந்துருவை தேடி சுற்றித் திரிந்தது.அவளை சுற்றியிருந்த உறவுகளின் சத்தம் எதுவும் அவளது காதில் விழவில்லை.
திடீரென ஜில்லுனுெ ஒரு காற்று அவளை கடந்து செல்வது போல உணர்ந்தாள்.சந்துரு மணமகள் அறையை கடந்து சென்றான்.அவன் மீது கொண்ட ஆழமான காதல்தான் சாருவிற்கு அவனது வருகையை முன்பே உணர செய்தது போலும்!


முதலில் மணமகனை அழைத்து வருமாறு புரோகிதர் கூறினார்.
மணமகன் சந்துரு மேடைக்கு வந்தார். பார்த்தவுடன் ஈர்க்கும் அளவிற்கு மாய கண்ணனை போல அவ்வளவு அழகாக இருந்தான் சந்துரு.அதன் பின்னர் மணமகளின் நிச்சயதார்த்த புடவையை கொடுத்து விட்டு மணமகளை அழைத்து வருமாறு கூறினார்.


"நாளிகை ஆகுது! மணப்பெண்ணை சீக்கிரம் அழைச்சிட்டு வாங்கோ!" என்றார் புரோகிதர்.


அழகுனா அழகு! அப்படி ஒரு அழகுடா சாமி! பௌர்ணமி நிலவு போன்று பிரகாசமான முகமும், மீன்களை போன்ற விழிகளும், செக்க சிவந்த செவ்விதழும், கட்டுக்கோப்பான உடலமைப்பும் கொண்டு நீல வண்ண சேலை அணிந்து பூமாதேவிக்கு வலிக்காதவாறு மெதுவாக அடி எடுத்து வைத்து நடந்து வந்தாள் சாரு.சாரு உடுத்தியிருந்த நீல வண்ண சேலையில் ஆங்காங்கே வெள்ளை நிற கற்கள் பதிக்கப்பட்டிருந்தது.அது பார்ப்பதற்கு வானத்தில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் போல காட்சியளித்தது.


மணமகள் அறையிலிருந்து மணமேடைக்கு செல்லும் ஒவ்வொரு நொடியும் சாருவின் மனதில்,
சந்துருவை பார்க்க போகும் அந்த தருணத்தை நினைத்து மிகுந்த சந்தோஷத்துடன் ஆவலாக இருந்தாள்.
மணமேடையில் ஏறினாள் சாரு.
அவளது கண்களோ சந்துருவை உடனே பார்க்க வேண்டும் என்று கண் இமைகள் வேகமாக துடித்தது.
உதடுகளோ அவனோடு பேச வேண்டும் என்று முணு முணுத்தது.
ஆனால் சந்துருவிற்கோ, தன் எதிர்கால துனைவியை பார்க்க போகின்றோம் என்ற எந்தவித உணர்வும் எதிர்ப்பார்ப்பும் சிறுதுளி அளவு கூட இல்லாமல் எங்கேயோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.


சந்துருவின் அருகில் சென்று நிற்பதற்காக அடியின் மேல் அடி வைத்து நடந்து சென்ற போது சாருவின் மனதில் காதல் கீதம் அரங்கேற துவங்கியது.சந்துருவின் அருகே சென்று நின்றவள் அவனை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் மனதில் பரிதவித்து கொண்டிருந்தாள்.


"மாப்பிள்ளையும் பொண்ணும் மாலையை மாத்திக்கோங்கோ..." என்று சொன்னார் புரோகிதர்.


சாருவின் கழுத்தில் மாலையை போட போகும் பொழுது முதன் முறையாக சாருவை பார்த்த சந்துரு, கண் இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.


பக்கத்திலிருந்த பானு, "மாப்பிள்ளை சார்! உன் அழகில் மயங்கி சிலையாகிட்டாரு போல சாரு.தட்டி எழுப்பிவிடு..." என்று சொல்லிக் கொண்டு சிரித்தாள்.


சந்துருவை நேருக்கு நேராக பார்த்த சாருவும் அவனது கண்களால் கவர்ந்திழுக்கப்பட்டு சந்துருவின் இதய சிறையில் கைதியாகிவிட்டாள்.


"டேய் சந்துரு! மாலையை சாருவின் கழுத்தில் போடுடா..." என்று அவனது தோள்பட்டையை தட்டினான் மனோஜ்.


தோள்பட்டையை தட்டியதும் சுயநினைவுக்கு வந்த சந்துரு டக்குனு மாலையை சாருவின் கழுத்தில் போட்டு விட்டு திரும்பிக் கொண்டான்.
சந்துருவின் கழுத்தில் மாலையை போடும் போது, சாருவின் மனதில்


இதுதானா இதுதானா
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?

இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன்
இவன் தானா?


என்ற பாடல் வரிகள் ஓடிக் கொண்டிருந்தது.

சாருவிற்கு நிச்சயதார்த்த மோதிரம் போட அவளது கையை சந்துரு பிடித்த போது, இருவரும் பூர்வ ஜென்ம உறவு போல இருவரின் மனதிற்குள்ளும் ஏதோ ஒரு உணர்வு வந்து போனது.
உறவினர்கள் ஒவ்வொருவரும் தொடர்ச்சியாக மேடையில் வந்து வாழ்த்து தெரிவித்து கொண்டிருந்ததால், சந்துருவுடன் தனியாக பேசுவதற்கு சாரு எவ்வளவோ முயற்சி செய்தும் பேச முடியாமல் போனது.சாப்பிடுவதற்காக மாப்பிள்ளையையும் பெண்ணையும் அழைத்துக் கொண்டு சென்றனர்.


சாப்பிடும் போதாவது பேசிவிடலாம் என்று நினைத்த சாருவிற்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.சந்துரு மற்றும் சாருவின் நடுவில் வந்து அமர்ந்தான் சங்கர்.சாப்பிட்டு முடித்ததும் எதுவுமே பேசாமல் அவரவர் அறைக்கு சென்றுவிட்டனர்.சாருவின் கண்கள் சந்துருவையே நோக்கி கொண்டிருந்தது.ஆனால் சந்துருவோ, சாருவிடம் எதுவும் சொல்லாமல் போனில் ஏதோ பார்த்துக் கொண்டே அவனது அறைக்கு நடந்து சென்றுவிட்டான்.அறைக்குள் வந்தவனால் நிதானமாக இருக்க முடியவில்லை.சாருவை பற்றி சிந்திக்க தொடங்கினான்.


"என்னடா சந்துரு! சாருவை பார்த்ததும் காதல் போதை தலைக்கேறிருச்சாடா? மாலையை போட சொன்னால் ஆடாமல் அசையாமல் அப்படியே சாருவையே பார்த்துக்கிட்டு இருந்த..." என்று கேட்டான் மனோஜ்.


"டேய்! சும்மாயிருடா.நானே ரொம்ப குழப்பத்தில் இருக்கேன்..."என்றான் சந்துரு.


"அப்படி சார்க்கு என்ன குழப்பம்னு தெருஞ்சுக்கலாமா?"


"சாருவை தொட்டதும் எனக்கு அப்படியே சஞ்சுளா கையை தொட்டது போலவே இருந்ததுடா மனோஜ்..."


"அப்படியே கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை விட்டேனா...நீ சுயநினைவுக்கு வந்திருவனு நினைக்கிறேன்.
விடிஞ்சதும் கல்யாணத்தை வச்சுக்கிட்டு இப்போது பேசுகின்ற பேச்சைப்பாரு.நீ இன்னுமாடா சஞ்சுளாவை மறக்காமல் இருக்க?" என்று கேட்டான் மனோஜ்.


மனோஜ் கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் உறங்க சென்றுவிட்டான் சந்துரு.


பாட்டு பாடிக் கொண்டே சாருவின் அறைக்குள் வந்தாள் பானு.


"மேடம் ரொம்ப குஷியாக இருக்கீங்க போல...ரொம்ப நேரமாக ஆளையே காணோம்?" என்று பானுவை பார்த்து கேட்டாள் சாரு.


"அவுங்க கிட்ட கொஞ்சம் நேரம் பேசிக்கிட்டு இருந்தேன்..." என்றாள் பானு.


"அவுங்கனா... எவுங்க மேடம்?" என்று கேட்டாள் சாரு.


"மனோஜ் சார்..." என்றாள் பானு.


"நடக்கட்டும்... நடக்கட்டும்... என் கல்யாணத்துக்கு வந்துவிட்டு உன் கல்யாணத்துக்கு ப்ளான் போடுகிறாயா?" என்று பானுவை கிண்டலடித்தாள் சாரு.


"இன்னும் தூங்கவலையா சாரு? கதையெல்லாம் இன்னொரு நாள் பேசிக்கலாம்.அதிகாலையில் எழுந்து தயாராகனும்.சீக்கிரம் தூங்குங்கடா சாரு!"என்று கூறிவிட்டு அவரது அறைக்கு சென்றார் சிவகாமி அம்மா.


பொழுது விடிந்தது...மேள தாளங்களும் நாதஸ்வரமும் வாசிக்க தொடங்கிய சத்தம் கேட்டது.


புரோகிதர் மந்திரம் ஓத ஆரம்பித்தார்...


இளவரசியை அழைத்து வருவது போல சாருவை பல்லக்கில் தூக்கி கொண்டு வந்தனர்.சிவப்பு வண்ண நிற சேலை உடுத்தி பார்ப்பதற்கு சாட்சாத் மகாலெஷ்மி போலவே இருந்தாள் சாரு.பல்லக்கில் இருந்து இறங்கியதும், சாருவை மணமேடைக்கு அழைத்துச் சென்றார் சாருவின் முறைமாமன் பசுபதி.
தூரத்தில் அவள் வருவதை பார்த்தவன்.சாரு அருகில் வந்ததும் பார்த்தும் பார்க்காதது போல அமர்ந்திருந்தான் சந்துரு.


சந்துரு, சாரு இருவரும் புரோகிதர் சொல்ல சொல்ல மந்திரம் சொல்ல ஆரம்பித்தனர்.அனைத்து சாஸ்திர சம்பிரதாய சடங்குகள் முடிந்ததும், தட்டில் வைத்திருந்த திருமாங்கல்யத்தையும், அட்சதை அரிசியையும் சாருவின் அத்தை சரளாவின் கையில் கொடுத்தார் புரோகிதர்.


"அனைவரிடமும் சென்று மாங்கல்யத்தை தொட்டு ஆசிர்வாதம் பெற்று அட்சதை அரிசியை கொடுத்து விட்டு சீக்கிரம் வாங்கோ"என்றார் புரோகிதர்.


புரோகிதர் மாங்கலயத்தை எடுத்து சந்துருவின் கையில் கொடுக்க போகும் பத்து நிமிடத்திற்கு முன்னர் காவல்துறை அதிகாரி சந்துருவை தேடி மண்டபத்திற்கு வந்தார்.அவரை பார்த்த சந்துருவும் உடனே மணமேடையை விட்டு கீழே இறங்கிச் சென்றான்.


"டேய் சந்துரு! முகூர்த்த நேரத்தில் எங்கடா சந்துரு எழுந்து போற?" என்று கேட்டார் ஜானகி அம்மா.


பதில் ஏதுவும் கூறாமல் வேகமாக இறங்கி சென்றான் சந்துரு.திடீரென போலீஸ் அதிகாரியை பார்த்த அனைவருக்கும் ஒன்றும் புரியாமல் ஒரே குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் இருந்தனர்.


மணமேடையின் கீழே அமர்ந்திருந்த சங்கர் வேகமாக எழுந்து மணமேடைக்கு வந்தான்.சாருவின் அருகே சென்ற சங்கர், நீ எதுவும் "கவலைப்படாதே சாரு! சந்துரு போனால் போகட்டும்.உன்னை கல்யாணம் செய்து கொள்ள நான் இருக்குறேன்..."என்றான்.


"புரோகிதரே! அந்த தாலியை எடுத்து என் கையில் கொடுங்கோ..." என்றான் சங்கர்.


திடீரென போலீஸ் வந்ததற்கு காரணம் என்ன? யார் அந்த சஞ்சுளா? சாருவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டது யார்? என்று இனி வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்.



- தொடரும் -


* * * * * * * * * * * * * *


இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
 
Last edited:
Status
Not open for further replies.

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom