- Messages
- 264
- Reaction score
- 406
- Points
- 63
எண்ணங்களே வண்ணங்களாய்...
நாற்காலியின் மீது ஏறிக் கொண்டு அலமாரியில் புத்தக்கத்தை வைத்துவிட்டு கீழே இறங்கினாள் சாரு.
"ஏன் இவ்வளவு சிரமப்பட்டு புத்தகத்ததை வைக்கிறீங்க? சேர்ல ஏறி புக்க வைக்கிறேனு போய், கீழ விழுந்துட்டீங்கனா என்ன பண்ணுறது? ஏங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருந்தா நான் வச்சுருப்பேன்ல" என்று சந்துரு கூறியதும், "விழுந்தால் என்னங்க சந்துரு? என்னை தாங்கி பிடிக்கத்தான் நீங்க இருக்கீங்களே! நல்லா தான் அக்கறை காட்டுறீங்க. ஆனால் உங்க மனசுல நினைக்கிறத மட்டும் ஏங்கிட்ட சொல்லாதீங்க.நான் உங்களை விரும்புவது மாதிரி நீங்களும் என் மேல ரொம்ப அன்பு வச்சுருக்கீங்கனு, அன்னைக்கு நான் கையில அடிப்பட்டு மயங்கி உங்க மடியில் படுத்திருக்கும்போது நீங்க துடித்த துடிப்பும், என் முகத்தில் விட்ட கண்ணீரும் எல்லாமே எனக்கு தெரியும்.மயக்கத்துல இருந்தாலும் நீங்க பேசுனது எல்லாமே என் காதுல விழுந்ததுங்க.இவ்வளவு பாசத்தையும் மனசுகுள்ள வச்சுக்கிட்டு வெளியே எதுவுமே காட்டிக்கொள்ளாமல், ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் மாதிரி ஏன் நடிக்கிறீங்க சந்துரு?" என்று சந்துருவின் கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டே வழக்கம் போல நேரடியாக பேசாமல் மனதிலே சந்துருவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
"ஏங்க உங்கக்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன்.'ஹலோ!' இங்க தான் இருக்கீங்களா? என்று சந்தரு தனது கையை சாருவின் கண்களின் முன் கொண்டு சென்று கை அசைத்த பிறகு தான் சுயநினைவுக்கு வந்தாள் சாரு.
"எதாவது தூக்கனும், வைக்கனும்னா என்னை கூப்பிடுங்க" என்று சந்துரு கூறினான்.
"ம்ம்...சரிங்க" என்று சொன்னாள் சாரு.
"அம்மா சாரு! சாரு!" என்று ஜானகி அம்மா சாருவை கீழே இருந்து அழைத்துக் கொண்டிருந்தார்.
மாமியரின் குரல் கேட்டதும் மின்னல் வேகத்தில் கீழே இறங்கி வந்தாள் சாரு.
"என்னங்க அத்தை ஜோசியரை பார்த்துட்டு வந்துட்டீங்களா?" என்று கேட்டாள் சாரு.
"ஆமாம் சாரு.அடுத்த வாரம் புதன்கிழமை காலை பத்து மணிக்கு நல்ல நேரமாக இருக்குதாம். அன்னைக்கே நிச்சயதார்த்தம் வச்சுக்க சொல்லி ஜோசியர் நாள் குறிச்சு கொடுத்திருக்காருமா" என்று கூறினார் ஜானகி அம்மா.
"நான் பானுவோட அப்பா அம்மாக்கிட்டையும் கலந்து பேசிட்டேன்.பானுவோட அண்ணன் வீட்டுக்கு போய்ட்டு அப்படியே டவுனுக்கு போய் நிச்சயதார்த்த புடவையும் மோதிரமும் வாங்கிட்டு வந்திருவோம் சாரு.இன்னைக்கு நல்ல முகூர்த்த நாளாக இருக்கும்மா சாரு" என்றதும், "சரிங்க அத்தை... நானும் பானுக்கு போன் பண்ணி அவளோட மோதிரத்தோட சைஸ் என்னனு கேட்டு சொல்லுறேன் அத்தை" என்றாள் சாரு.
"சரிம்மா...சந்துருவை கொஞ்சம் கூப்பிடும்மா..." என்றார் ஜானகி அம்மா.
அறைக்கு சென்று சந்துருவை அழைத்துக் கொண்டு கீழே வந்தாள் சாரு.
"கல்யாண மண்டம் புக் பண்ணிட்டியா சந்துரு?" என்று கேட்டார் ஜானகி அம்மா.
"மண்டபம், கேட்டரிங், நிச்சயதார்த்த மாலை எல்லாமே புக் பண்ணி அட்வான்ஸ் கொடுத்துட்டேன்ம்மா..." என்று கூறினான் சந்துரு.
"சரிப்பா சீக்கிரம் எல்லாரும் கிளம்புங்க" என்று கூறினார் ஜானகி அம்மா.
"ஏங்க ஒரு மாதிரி இருக்கீங்க? என்னமோ ஆழமாக யோசிக்கிற மாதிரி தெரியுது..." என்று தனது கணவரிடம் கேட்டார் பங்கஜம்.
"ஆமாம் பங்கஜம்...நம்ம பையன் இப்படி மாறிருவானு ஒரு நாள் கூட நினைத்து பார்த்ததே இல்ல.நம்ம கண்ணு முன்னாடியே பானுவை இப்படி பேசிட்டு போறான்.நமக்கு பிறகு நம்ம பொண்ண இவன் எப்படி பார்ப்பான்? மாப்பிள்ளை நல்ல பையனா அமைந்ததுனால பானுவை குறித்து பயப்பட வேண்டியது இல்லை.இருந்தாலும் வீட்டுக்கு மூத்த பையனா பொறுப்பா இருந்து அவன்தான பானுவோட கல்யாணத்தை முன்னிருந்து நடத்தனும்" என்று தன்னுடைய மனவேதனையை மனைவியிடம் கூறிக் கொண்டிருந்தார் கனகராஜ்.
"பரத் நம்ம வளர்த்த பையன்ங்க.ஒரு நாள் கண்டிப்பா திருந்தி வருவான். நீங்க தேவையில்லாமல் எதையாவது நினைத்து கவலைப்படுவதை விட்டுட்டு பானுவோட நிச்சயதார்த்தத்திற்கு ஆக வேண்டிய வேலையை பாருங்க..."என்று கூறினார் பங்கஜம்.
"சரி பங்கஜம்... நிச்சயதார்த்த செலவுக்கு தேவையான பணத்தை பேங்க்ல போய் எடுக்க வேண்டியது இருக்கு.நான் பேங்க் வரைக்கும் போய்ட்டு வந்திர்றேன் பங்கஜம்..." என்று கூறிவிட்டு கிளம்பிச் சென்றார் கனகராஜ்.
கனகராஜ் கிளம்பியதும் தனது அறைக்கு சென்று சுவற்றில் மாட்டியிருந்த பரத்தின் போட்டோவை கையில் எடுத்துக் கொண்டு, "ஏன் பரத் இப்படி எங்களை தனியாக தவிக்க விட்டுட்டு போயிட்டப்பா? நான் உன்னை நல்லா தானேடா வளர்த்தேன்.கடைசி காலத்துல நம்ம பிள்ளை நம்மள நல்லா பார்ப்பானு உங்க அப்பாட்ட ஓயாமல் சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டனே! எங்க நம்பிக்கையை எல்லாம் சுக்குநூறாக உடைச்சுட்டு போய்ட்டியேடா பரத்" என்று போட்டோவை பார்த்து கதறி அழுது கொண்டிருந்தார்.
அம்மா அழும் குரல் கேட்டு பானுவின் அம்மா அறைக்கு சென்று பார்த்தாள் பானு."அப்பாவிடம் தைரியமாக பேசிட்டு கடைசி நீங்களே இப்படி அழலாமா அம்மா?" என்று கேட்டாள் பானு.
"அந்த மனுஷன் ஏற்கனவே நொந்து போய் இருக்காரு பானு.பத்தாத குறைக்கு நானும் சேர்ந்து அழுதனா மனசு உடைஞ்சு போயிருவாரு பானு என்று கூறிவிட்டு மகளை கட்டிப்பிடித்து அழுதார் பங்கஜம்."
"சரிம்மா அழாதீங்க... நீங்க வேணும்னா பாருங்க.என் நிச்சயதார்த்தத்தையே அண்ணன் தான் முன் நின்று நடத்துவாங்க பாருங்க... "என்று நம்பிக்கையுடன் கூறினாள் பானு.
"அப்படி நடந்த ரொம்ப சந்தோஷமாக இருக்கும் பானு" என்று கூறினார் பங்கஜம்.
சந்துருவின் குடும்பத்தில் உள்ள அனைவரும் கிளம்பி காரில் ஏறி பரத்தை காண்பதற்கு புறப்பட்டு சென்றார்கள்.
"அம்மா! மனோஜ் முகத்துல கல்யாண கலை வந்திருச்சு பார்த்தீங்களமா?" என்று சிரித்துக் கொண்டே ஜானகி அம்மாவிடம் கூறினான் சந்துரு.
எப்போதும் எதிர்ப்பேச்சு பேசும் மனோஜ், வெட்கத்தில் எதுவும் பதில் பேசாமல் அமைதியாக சிரித்துக்
கொண்டே காரை ஓட்டினான்.
பார்கவி வீட்டின் வாசலில் கார் வந்து நிற்பதை மாடியிலிருந்து பார்த்த சோமசுந்தரம் கீழே இறங்கி வந்தார். வீட்டிற்கு வந்தவர்களை உள்ளே வரவேற்று ஷோபாவில் உட்கார சொன்னார்.
சோமசுந்தரத்தின் மகன் பாபுவும் வந்து அவர்களை குறித்து விசாரித்துவிட்டு பேசிக் கொண்டிருந்தான்.
"ருத்ரா! எல்லாருக்கும் குடிக்க காபி கொண்டு வாமா..." என்று தனது மனைவியிடம் மரியாையாக கூறுவதைக் கண்டு சாரு ஆச்சரியப்பட்டாள்.
"பானு பல முறை அவளது அண்ணி பார்கவியை பற்றி கூறியிருக்கிறாள். ஆனால் பார்க்கவியின் அப்பா, அண்ணன் அண்ணி எல்லாரையும் பார்த்த ரொம்ப சாதுவாக இருக்காங்களே! பார்கவி குணத்துக்கு அப்படியே எதிர்மறையாக இருக்காங்களே!" என்று மனதில் நினைத்து ஆச்சரியப்பட்டு அவர்களை பார்த்து சந்தோஷப்பட்டாள் சாரு.
"நீங்க எல்லாரும் பேசிக்கிட்டு இருங்க.நான் மச்சானை கூப்பிட்டு வர்றேன்" என்று கூறிவிட்டு பரத்தை அழைக்க மாடியில் உள்ள அறைக்கு சென்றான் பாபு.
மாடியிலிருந்து கீழே பரத் இறங்கி வருவதை பார்த்த சோமசுந்தரம், மருமகன் வந்தவுங்கள்ட்ட எப்படி பேசுவாருனு தெரியலையே! என்று பரத்தை நினைத்து பயந்து கொண்டிருந்தார்.
கீழே வந்த பரத் அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு
மரியாதையுடன் பேசிக் கொண்டிருந்தான்.
ஜானகி அம்மா பேசுவதற்கு முன்பே எந்த குறையும் இல்லாமல் "எங்களால் முடிந்த அளவுக்கு பானுக்கு நகை போட்டு சீரும் சிறப்புமாக நல்ல படியாக கல்யாணத்தை முடிக்க ஏற்பாடு செய்கிறோம்மா" என்று பரத் கூறுவதை கேட்டதும் பார்கவி வீட்டில் இருந்தவர்களும் ஜானகி அம்மாவின் குடும்பத்தாரும் பரத் பேசுவதை கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தனர்.
சோமசுந்தரம் கண்ணாடியை கழற்றி நன்கு துடைத்து விட்டு மீண்டும் பரத் பேசுவதை உற்றுப்பார்த்தார்.
இது கனவா? நிஜமா? பேசுறது நம்ம மாப்பிள்ளை தானா! என்று வியப்புடன் பரத் பேசுவதை பார்த்துக்
கொண்டிருந்தார்.
மனோஜின் கையை குழுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்தான் பரத்.
சந்துருவின் குடும்பத்தினர் அனைவரும் நிச்சயதார்த்தத்திற்கு நீங்கள் அனைவரும் குடும்பத்தோடு வந்து மணமக்களை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள்.
அவர்கள் கிளம்பியதும் தலையில் கையை வைத்து உட்கார்ந்து விட்டான் பரத்.சந்துருவின் கார் கிளம்பியதும் பார்கவியின் வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நின்றது.பார்கவியும் அவளது அம்மா சரோஜாவும் ஆட்டோவிலிருந்து இறங்கினார்கள்.வீட்டிற்குள் வந்ததும்
"யாருப்பா காருல வந்துட்டு போறது?" என்று கேட்டதும், "பானுவோட வருங்கால கணவர் மனோஜூ்ம் அவருடைய குடும்பத்தாரும் வந்திருந்தாங்க" என்றார் சோமசுந்தரம்.
பரத் தலையில் கை வைத்திருப்பதை பார்த்த பார்கவி, "நான் வீட்டுல இல்லாத நேரமா பார்த்து என் வீட்டுக்காரரை வீடு தேடி வந்து அவமானப்படுத்திட்டு போக ஆள் அனுப்பி வச்சுருக்காங்களா?"
"ஒரு கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு வரதுகுள்ள இவ்வளவு நடந்திருச்சா.நீங்க எதுக்குங்க தலையில கைவச்சுட்டு உட்கார்ந்து இருக்கீங்க.வாங்க உங்க வீட்டுக்கு போய் நாலு வார்த்தை நாக்க புடுங்குற மாதிரி கேட்டா தான் அவுங்க அடங்குவாங்க..." என்று பார்கவி கூறியவுடன் பார்கவியின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைந்தான் பரத்.
"இதுக்கு மேல ஒரு வார்த்தை எதாவது வாயை திறந்து பேசுனா செவுளு பேந்துரும் பார்த்துக்கோ!" என்று கூறியதும் எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள் பார்கவி.
பார்கவியின் வீட்டில் நடந்ததையும் பரத் தனக்கு வாழ்த்துக்கள் சொல்லியதையும் சந்தோஷத்துடன் பானுவிற்கு கால் செய்து தகவல் சொன்னான் மனோஜ்.
பானு உடனே அவளுடைய அப்பா அம்மாவிடம் சென்று பரத் மனோஜிடம் பேசியதையும் அங்கு நடந்ததையும் சொன்னவுடன், "நீ சொல்லுறத நம்பவே முடியலமா பானு!" என்று கூறினார் கனகராஜ்.
"பொறுத்திருந்து பார்ப்போம் பானு.அவசரப்பட்டு சந்தோஷப்பட வேண்டாம்.புயலுக்கு முன் அமைதியாக கூட இருக்கலாம்..." என்று கூறினார் பானுவின் அம்மா.
பார்கவி வீட்டிலிருந்து புறப்பட்டு டவுனுக்கு போகும் வழியில் பரத் நடந்து கொண்ட விதம் குறித்து பேசிக்கொண்டு வந்தனர்.என்னம்மா சாரு? பானு அண்ணன் பேசுன விதத்தை பார்த்தால், "நீ சொன்ன மாதிரி அவுங்க குடும்பத்தில பிரச்சனை நடந்தது மாதிரியே தெரியலம்மா" என்று கூறினார் ஜானகி அம்மா.
"அதுதான் அத்தை எனக்கும் ஒன்னும் புரியல."
"சரி எப்படியோம்மா பானு, மனோஜ் நிச்சயதார்த்தம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நல்ல படியாக நடந்தா போதும்மா சாரு..." என்று கூறினார் ஜானகி அம்மா.
அனைவரும் ஜவுளி கடைக்கு வந்து இறங்கினார்கள்.ஜானகி அம்மாவும் சாருவும் சேலை பார்க்க தொடங்கினார்கள்.
"என்னப்பா புதுமாப்பிள்ளை! பானுக்கு எந்த கலர் பிடிக்கும்?" என்று கேட்டார் ஜானகி அம்மா.
"அம்மா! அதுவந்து என்று இழுத்ததும்... சும்மா சொல்லுப்பா மனோஜ்" என்றார் ஜானகி அம்மா.
"அவளுக்கு நீல நிறம்தான் பிடிக்கும்" என்று பதில் கூறினான் மனோஜ்.
"சரிப்பா மனோஜ்! நீயே வந்து உன் வருங்கால மனைவிக்கு சேலையை செலக்ட் செய்ப்பா..." என்றதும் மனோஜ் கொஞ்சம் வெட்கப்பட்டு தயங்கினான்.
"சும்மா நடிக்காதடா மனோஜ்! சீக்கிரம் வந்து சேலையை செலக்ட் செய்" என்று சந்துரு கூறியதை பார்த்த சாரு, இவர் இப்படிலாம் ஜாலியாக பேசுவாரா? என்று முதன் முறையாக சந்துரு நக்கலடித்து சிரித்து பேசுவதை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் சாரு.
ஐந்து நிமிஷத்தில் மனதிலே பானுவிற்கு சேலையை கட்டி பார்த்து "இந்த சேலை பானுவிற்கு நல்லா இருக்கும்லம்மா..." என்று ஜானகி அம்மாவிடம் ஒரு சேலையை எடுத்துக் கொண்டு போய் காட்டினான் மனோஜ்.
"வாவ்! சூப்பரா இருக்கு அண்ணா!" என்று கூறினாள் சாரு.
"நாங்க கூட இவ்வளவு பாஸ்ட்டா சூப்பரா செலக்ட் பண்ண மாட்டோம் அண்ணா.பானுக்கு இந்த சேலை ரொம்ப அழகாக இருக்கும்" என்று மனோஜிடம் கூறினாள் சாரு.
எல்லாம் "காதல் செய்யும் மாயம்" சாரு என்று ஜானகி அம்மாவும் சேர்ந்து மனோஜை கேலி செய்து சிரிக்கத் தொடங்கினார்.
"நாங்க பக்கத்துல இருக்கும் நகைக்கடைக்கு போய் மோதிரம் பார்த்துக்கிட்டு இருக்கோம் சந்துரு.நீ சீக்கிரமா பில் பே பண்ணிட்டு வந்திருப்பா" என்று கூறிவிட்டு சாருவையும் மனோஜையும் அழைத்துக் கொண்டு நகைக் கடைக்கு சென்றார் ஜானகி அம்மா.
மோதிரம் செலக்ட் பண்ணி முடித்து பில் போடும் நேரத்திற்கு தான் வந்தான் சந்துரு.
"பில் பே செஞ்சுட்டு வர்ற இவ்வளவு நேரமா சந்துரு? நாங்க மோதிரமே செலக்ட் பண்ணி முடுச்சிட்டோம்."
"இல்லம்மா...அது வந்து என்று இழுக்க தொடங்கியதும், சரி... சரி… நீயும் ஒரு முறை மோதிரத்தைப் பார்த்து நல்லா இருக்கானு சொல்லுப்பா?" என்று கேட்டார் ஜானகி அம்மா.
"மனோஜ்க்கு ஓகேனா எனக்கும் ஓகே தான்ம்மா" என்றான்.மனோஜை பார்த்து புருவத்தை தூக்கிக் கொண்டு ஜாடையிலே மோதிரம் சூப்பர் என்று கூறினான் சந்துரு.
"இங்க வா சந்துரு! நீயும் சாருவும் சேர்ந்து மோதிரத்தை கையில வாங்கிக்கோங்க..." என்று கூறினார் ஜானகி அம்மா.
நகைக்கடை முதலாளி சாமியின் முன் மோதிரம் உள்ள டப்பாவை பூ போட்டு வைத்து கும்பிட்டு நிச்சயதார்த்த மோதிரத்தைக் கொடுக்க சந்துருவும் சாருவும் சேர்ந்து மோதிரத்தை பெற்று கொண்டு வீட்டிற்கு கிளம்பினார்கள்.
பரத்தின் திடீர் மனமாற்றத்திற்கு காரணம் என்ன? என்ன நடந்திருக்கும்? பானு நினைத்தது போல பரத்தின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடக்குமா? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்.
- தொடரும் -
* * * * * * * * * * * * * *
இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
அத்தியாயம் 20
நாற்காலியின் மீது ஏறிக் கொண்டு அலமாரியில் புத்தக்கத்தை வைத்துவிட்டு கீழே இறங்கினாள் சாரு.
"ஏன் இவ்வளவு சிரமப்பட்டு புத்தகத்ததை வைக்கிறீங்க? சேர்ல ஏறி புக்க வைக்கிறேனு போய், கீழ விழுந்துட்டீங்கனா என்ன பண்ணுறது? ஏங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருந்தா நான் வச்சுருப்பேன்ல" என்று சந்துரு கூறியதும், "விழுந்தால் என்னங்க சந்துரு? என்னை தாங்கி பிடிக்கத்தான் நீங்க இருக்கீங்களே! நல்லா தான் அக்கறை காட்டுறீங்க. ஆனால் உங்க மனசுல நினைக்கிறத மட்டும் ஏங்கிட்ட சொல்லாதீங்க.நான் உங்களை விரும்புவது மாதிரி நீங்களும் என் மேல ரொம்ப அன்பு வச்சுருக்கீங்கனு, அன்னைக்கு நான் கையில அடிப்பட்டு மயங்கி உங்க மடியில் படுத்திருக்கும்போது நீங்க துடித்த துடிப்பும், என் முகத்தில் விட்ட கண்ணீரும் எல்லாமே எனக்கு தெரியும்.மயக்கத்துல இருந்தாலும் நீங்க பேசுனது எல்லாமே என் காதுல விழுந்ததுங்க.இவ்வளவு பாசத்தையும் மனசுகுள்ள வச்சுக்கிட்டு வெளியே எதுவுமே காட்டிக்கொள்ளாமல், ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் மாதிரி ஏன் நடிக்கிறீங்க சந்துரு?" என்று சந்துருவின் கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டே வழக்கம் போல நேரடியாக பேசாமல் மனதிலே சந்துருவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
"ஏங்க உங்கக்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன்.'ஹலோ!' இங்க தான் இருக்கீங்களா? என்று சந்தரு தனது கையை சாருவின் கண்களின் முன் கொண்டு சென்று கை அசைத்த பிறகு தான் சுயநினைவுக்கு வந்தாள் சாரு.
"எதாவது தூக்கனும், வைக்கனும்னா என்னை கூப்பிடுங்க" என்று சந்துரு கூறினான்.
"ம்ம்...சரிங்க" என்று சொன்னாள் சாரு.
"அம்மா சாரு! சாரு!" என்று ஜானகி அம்மா சாருவை கீழே இருந்து அழைத்துக் கொண்டிருந்தார்.
மாமியரின் குரல் கேட்டதும் மின்னல் வேகத்தில் கீழே இறங்கி வந்தாள் சாரு.
"என்னங்க அத்தை ஜோசியரை பார்த்துட்டு வந்துட்டீங்களா?" என்று கேட்டாள் சாரு.
"ஆமாம் சாரு.அடுத்த வாரம் புதன்கிழமை காலை பத்து மணிக்கு நல்ல நேரமாக இருக்குதாம். அன்னைக்கே நிச்சயதார்த்தம் வச்சுக்க சொல்லி ஜோசியர் நாள் குறிச்சு கொடுத்திருக்காருமா" என்று கூறினார் ஜானகி அம்மா.
"நான் பானுவோட அப்பா அம்மாக்கிட்டையும் கலந்து பேசிட்டேன்.பானுவோட அண்ணன் வீட்டுக்கு போய்ட்டு அப்படியே டவுனுக்கு போய் நிச்சயதார்த்த புடவையும் மோதிரமும் வாங்கிட்டு வந்திருவோம் சாரு.இன்னைக்கு நல்ல முகூர்த்த நாளாக இருக்கும்மா சாரு" என்றதும், "சரிங்க அத்தை... நானும் பானுக்கு போன் பண்ணி அவளோட மோதிரத்தோட சைஸ் என்னனு கேட்டு சொல்லுறேன் அத்தை" என்றாள் சாரு.
"சரிம்மா...சந்துருவை கொஞ்சம் கூப்பிடும்மா..." என்றார் ஜானகி அம்மா.
அறைக்கு சென்று சந்துருவை அழைத்துக் கொண்டு கீழே வந்தாள் சாரு.
"கல்யாண மண்டம் புக் பண்ணிட்டியா சந்துரு?" என்று கேட்டார் ஜானகி அம்மா.
"மண்டபம், கேட்டரிங், நிச்சயதார்த்த மாலை எல்லாமே புக் பண்ணி அட்வான்ஸ் கொடுத்துட்டேன்ம்மா..." என்று கூறினான் சந்துரு.
"சரிப்பா சீக்கிரம் எல்லாரும் கிளம்புங்க" என்று கூறினார் ஜானகி அம்மா.
"ஏங்க ஒரு மாதிரி இருக்கீங்க? என்னமோ ஆழமாக யோசிக்கிற மாதிரி தெரியுது..." என்று தனது கணவரிடம் கேட்டார் பங்கஜம்.
"ஆமாம் பங்கஜம்...நம்ம பையன் இப்படி மாறிருவானு ஒரு நாள் கூட நினைத்து பார்த்ததே இல்ல.நம்ம கண்ணு முன்னாடியே பானுவை இப்படி பேசிட்டு போறான்.நமக்கு பிறகு நம்ம பொண்ண இவன் எப்படி பார்ப்பான்? மாப்பிள்ளை நல்ல பையனா அமைந்ததுனால பானுவை குறித்து பயப்பட வேண்டியது இல்லை.இருந்தாலும் வீட்டுக்கு மூத்த பையனா பொறுப்பா இருந்து அவன்தான பானுவோட கல்யாணத்தை முன்னிருந்து நடத்தனும்" என்று தன்னுடைய மனவேதனையை மனைவியிடம் கூறிக் கொண்டிருந்தார் கனகராஜ்.
"பரத் நம்ம வளர்த்த பையன்ங்க.ஒரு நாள் கண்டிப்பா திருந்தி வருவான். நீங்க தேவையில்லாமல் எதையாவது நினைத்து கவலைப்படுவதை விட்டுட்டு பானுவோட நிச்சயதார்த்தத்திற்கு ஆக வேண்டிய வேலையை பாருங்க..."என்று கூறினார் பங்கஜம்.
"சரி பங்கஜம்... நிச்சயதார்த்த செலவுக்கு தேவையான பணத்தை பேங்க்ல போய் எடுக்க வேண்டியது இருக்கு.நான் பேங்க் வரைக்கும் போய்ட்டு வந்திர்றேன் பங்கஜம்..." என்று கூறிவிட்டு கிளம்பிச் சென்றார் கனகராஜ்.
கனகராஜ் கிளம்பியதும் தனது அறைக்கு சென்று சுவற்றில் மாட்டியிருந்த பரத்தின் போட்டோவை கையில் எடுத்துக் கொண்டு, "ஏன் பரத் இப்படி எங்களை தனியாக தவிக்க விட்டுட்டு போயிட்டப்பா? நான் உன்னை நல்லா தானேடா வளர்த்தேன்.கடைசி காலத்துல நம்ம பிள்ளை நம்மள நல்லா பார்ப்பானு உங்க அப்பாட்ட ஓயாமல் சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டனே! எங்க நம்பிக்கையை எல்லாம் சுக்குநூறாக உடைச்சுட்டு போய்ட்டியேடா பரத்" என்று போட்டோவை பார்த்து கதறி அழுது கொண்டிருந்தார்.
அம்மா அழும் குரல் கேட்டு பானுவின் அம்மா அறைக்கு சென்று பார்த்தாள் பானு."அப்பாவிடம் தைரியமாக பேசிட்டு கடைசி நீங்களே இப்படி அழலாமா அம்மா?" என்று கேட்டாள் பானு.
"அந்த மனுஷன் ஏற்கனவே நொந்து போய் இருக்காரு பானு.பத்தாத குறைக்கு நானும் சேர்ந்து அழுதனா மனசு உடைஞ்சு போயிருவாரு பானு என்று கூறிவிட்டு மகளை கட்டிப்பிடித்து அழுதார் பங்கஜம்."
"சரிம்மா அழாதீங்க... நீங்க வேணும்னா பாருங்க.என் நிச்சயதார்த்தத்தையே அண்ணன் தான் முன் நின்று நடத்துவாங்க பாருங்க... "என்று நம்பிக்கையுடன் கூறினாள் பானு.
"அப்படி நடந்த ரொம்ப சந்தோஷமாக இருக்கும் பானு" என்று கூறினார் பங்கஜம்.
சந்துருவின் குடும்பத்தில் உள்ள அனைவரும் கிளம்பி காரில் ஏறி பரத்தை காண்பதற்கு புறப்பட்டு சென்றார்கள்.
"அம்மா! மனோஜ் முகத்துல கல்யாண கலை வந்திருச்சு பார்த்தீங்களமா?" என்று சிரித்துக் கொண்டே ஜானகி அம்மாவிடம் கூறினான் சந்துரு.
எப்போதும் எதிர்ப்பேச்சு பேசும் மனோஜ், வெட்கத்தில் எதுவும் பதில் பேசாமல் அமைதியாக சிரித்துக்
கொண்டே காரை ஓட்டினான்.
பார்கவி வீட்டின் வாசலில் கார் வந்து நிற்பதை மாடியிலிருந்து பார்த்த சோமசுந்தரம் கீழே இறங்கி வந்தார். வீட்டிற்கு வந்தவர்களை உள்ளே வரவேற்று ஷோபாவில் உட்கார சொன்னார்.
சோமசுந்தரத்தின் மகன் பாபுவும் வந்து அவர்களை குறித்து விசாரித்துவிட்டு பேசிக் கொண்டிருந்தான்.
"ருத்ரா! எல்லாருக்கும் குடிக்க காபி கொண்டு வாமா..." என்று தனது மனைவியிடம் மரியாையாக கூறுவதைக் கண்டு சாரு ஆச்சரியப்பட்டாள்.
"பானு பல முறை அவளது அண்ணி பார்கவியை பற்றி கூறியிருக்கிறாள். ஆனால் பார்க்கவியின் அப்பா, அண்ணன் அண்ணி எல்லாரையும் பார்த்த ரொம்ப சாதுவாக இருக்காங்களே! பார்கவி குணத்துக்கு அப்படியே எதிர்மறையாக இருக்காங்களே!" என்று மனதில் நினைத்து ஆச்சரியப்பட்டு அவர்களை பார்த்து சந்தோஷப்பட்டாள் சாரு.
"நீங்க எல்லாரும் பேசிக்கிட்டு இருங்க.நான் மச்சானை கூப்பிட்டு வர்றேன்" என்று கூறிவிட்டு பரத்தை அழைக்க மாடியில் உள்ள அறைக்கு சென்றான் பாபு.
மாடியிலிருந்து கீழே பரத் இறங்கி வருவதை பார்த்த சோமசுந்தரம், மருமகன் வந்தவுங்கள்ட்ட எப்படி பேசுவாருனு தெரியலையே! என்று பரத்தை நினைத்து பயந்து கொண்டிருந்தார்.
கீழே வந்த பரத் அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு
மரியாதையுடன் பேசிக் கொண்டிருந்தான்.
ஜானகி அம்மா பேசுவதற்கு முன்பே எந்த குறையும் இல்லாமல் "எங்களால் முடிந்த அளவுக்கு பானுக்கு நகை போட்டு சீரும் சிறப்புமாக நல்ல படியாக கல்யாணத்தை முடிக்க ஏற்பாடு செய்கிறோம்மா" என்று பரத் கூறுவதை கேட்டதும் பார்கவி வீட்டில் இருந்தவர்களும் ஜானகி அம்மாவின் குடும்பத்தாரும் பரத் பேசுவதை கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தனர்.
சோமசுந்தரம் கண்ணாடியை கழற்றி நன்கு துடைத்து விட்டு மீண்டும் பரத் பேசுவதை உற்றுப்பார்த்தார்.
இது கனவா? நிஜமா? பேசுறது நம்ம மாப்பிள்ளை தானா! என்று வியப்புடன் பரத் பேசுவதை பார்த்துக்
கொண்டிருந்தார்.
மனோஜின் கையை குழுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்தான் பரத்.
சந்துருவின் குடும்பத்தினர் அனைவரும் நிச்சயதார்த்தத்திற்கு நீங்கள் அனைவரும் குடும்பத்தோடு வந்து மணமக்களை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள்.
அவர்கள் கிளம்பியதும் தலையில் கையை வைத்து உட்கார்ந்து விட்டான் பரத்.சந்துருவின் கார் கிளம்பியதும் பார்கவியின் வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நின்றது.பார்கவியும் அவளது அம்மா சரோஜாவும் ஆட்டோவிலிருந்து இறங்கினார்கள்.வீட்டிற்குள் வந்ததும்
"யாருப்பா காருல வந்துட்டு போறது?" என்று கேட்டதும், "பானுவோட வருங்கால கணவர் மனோஜூ்ம் அவருடைய குடும்பத்தாரும் வந்திருந்தாங்க" என்றார் சோமசுந்தரம்.
பரத் தலையில் கை வைத்திருப்பதை பார்த்த பார்கவி, "நான் வீட்டுல இல்லாத நேரமா பார்த்து என் வீட்டுக்காரரை வீடு தேடி வந்து அவமானப்படுத்திட்டு போக ஆள் அனுப்பி வச்சுருக்காங்களா?"
"ஒரு கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு வரதுகுள்ள இவ்வளவு நடந்திருச்சா.நீங்க எதுக்குங்க தலையில கைவச்சுட்டு உட்கார்ந்து இருக்கீங்க.வாங்க உங்க வீட்டுக்கு போய் நாலு வார்த்தை நாக்க புடுங்குற மாதிரி கேட்டா தான் அவுங்க அடங்குவாங்க..." என்று பார்கவி கூறியவுடன் பார்கவியின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைந்தான் பரத்.
"இதுக்கு மேல ஒரு வார்த்தை எதாவது வாயை திறந்து பேசுனா செவுளு பேந்துரும் பார்த்துக்கோ!" என்று கூறியதும் எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள் பார்கவி.
பார்கவியின் வீட்டில் நடந்ததையும் பரத் தனக்கு வாழ்த்துக்கள் சொல்லியதையும் சந்தோஷத்துடன் பானுவிற்கு கால் செய்து தகவல் சொன்னான் மனோஜ்.
பானு உடனே அவளுடைய அப்பா அம்மாவிடம் சென்று பரத் மனோஜிடம் பேசியதையும் அங்கு நடந்ததையும் சொன்னவுடன், "நீ சொல்லுறத நம்பவே முடியலமா பானு!" என்று கூறினார் கனகராஜ்.
"பொறுத்திருந்து பார்ப்போம் பானு.அவசரப்பட்டு சந்தோஷப்பட வேண்டாம்.புயலுக்கு முன் அமைதியாக கூட இருக்கலாம்..." என்று கூறினார் பானுவின் அம்மா.
பார்கவி வீட்டிலிருந்து புறப்பட்டு டவுனுக்கு போகும் வழியில் பரத் நடந்து கொண்ட விதம் குறித்து பேசிக்கொண்டு வந்தனர்.என்னம்மா சாரு? பானு அண்ணன் பேசுன விதத்தை பார்த்தால், "நீ சொன்ன மாதிரி அவுங்க குடும்பத்தில பிரச்சனை நடந்தது மாதிரியே தெரியலம்மா" என்று கூறினார் ஜானகி அம்மா.
"அதுதான் அத்தை எனக்கும் ஒன்னும் புரியல."
"சரி எப்படியோம்மா பானு, மனோஜ் நிச்சயதார்த்தம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நல்ல படியாக நடந்தா போதும்மா சாரு..." என்று கூறினார் ஜானகி அம்மா.
அனைவரும் ஜவுளி கடைக்கு வந்து இறங்கினார்கள்.ஜானகி அம்மாவும் சாருவும் சேலை பார்க்க தொடங்கினார்கள்.
"என்னப்பா புதுமாப்பிள்ளை! பானுக்கு எந்த கலர் பிடிக்கும்?" என்று கேட்டார் ஜானகி அம்மா.
"அம்மா! அதுவந்து என்று இழுத்ததும்... சும்மா சொல்லுப்பா மனோஜ்" என்றார் ஜானகி அம்மா.
"அவளுக்கு நீல நிறம்தான் பிடிக்கும்" என்று பதில் கூறினான் மனோஜ்.
"சரிப்பா மனோஜ்! நீயே வந்து உன் வருங்கால மனைவிக்கு சேலையை செலக்ட் செய்ப்பா..." என்றதும் மனோஜ் கொஞ்சம் வெட்கப்பட்டு தயங்கினான்.
"சும்மா நடிக்காதடா மனோஜ்! சீக்கிரம் வந்து சேலையை செலக்ட் செய்" என்று சந்துரு கூறியதை பார்த்த சாரு, இவர் இப்படிலாம் ஜாலியாக பேசுவாரா? என்று முதன் முறையாக சந்துரு நக்கலடித்து சிரித்து பேசுவதை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் சாரு.
ஐந்து நிமிஷத்தில் மனதிலே பானுவிற்கு சேலையை கட்டி பார்த்து "இந்த சேலை பானுவிற்கு நல்லா இருக்கும்லம்மா..." என்று ஜானகி அம்மாவிடம் ஒரு சேலையை எடுத்துக் கொண்டு போய் காட்டினான் மனோஜ்.
"வாவ்! சூப்பரா இருக்கு அண்ணா!" என்று கூறினாள் சாரு.
"நாங்க கூட இவ்வளவு பாஸ்ட்டா சூப்பரா செலக்ட் பண்ண மாட்டோம் அண்ணா.பானுக்கு இந்த சேலை ரொம்ப அழகாக இருக்கும்" என்று மனோஜிடம் கூறினாள் சாரு.
எல்லாம் "காதல் செய்யும் மாயம்" சாரு என்று ஜானகி அம்மாவும் சேர்ந்து மனோஜை கேலி செய்து சிரிக்கத் தொடங்கினார்.
"நாங்க பக்கத்துல இருக்கும் நகைக்கடைக்கு போய் மோதிரம் பார்த்துக்கிட்டு இருக்கோம் சந்துரு.நீ சீக்கிரமா பில் பே பண்ணிட்டு வந்திருப்பா" என்று கூறிவிட்டு சாருவையும் மனோஜையும் அழைத்துக் கொண்டு நகைக் கடைக்கு சென்றார் ஜானகி அம்மா.
மோதிரம் செலக்ட் பண்ணி முடித்து பில் போடும் நேரத்திற்கு தான் வந்தான் சந்துரு.
"பில் பே செஞ்சுட்டு வர்ற இவ்வளவு நேரமா சந்துரு? நாங்க மோதிரமே செலக்ட் பண்ணி முடுச்சிட்டோம்."
"இல்லம்மா...அது வந்து என்று இழுக்க தொடங்கியதும், சரி... சரி… நீயும் ஒரு முறை மோதிரத்தைப் பார்த்து நல்லா இருக்கானு சொல்லுப்பா?" என்று கேட்டார் ஜானகி அம்மா.
"மனோஜ்க்கு ஓகேனா எனக்கும் ஓகே தான்ம்மா" என்றான்.மனோஜை பார்த்து புருவத்தை தூக்கிக் கொண்டு ஜாடையிலே மோதிரம் சூப்பர் என்று கூறினான் சந்துரு.
"இங்க வா சந்துரு! நீயும் சாருவும் சேர்ந்து மோதிரத்தை கையில வாங்கிக்கோங்க..." என்று கூறினார் ஜானகி அம்மா.
நகைக்கடை முதலாளி சாமியின் முன் மோதிரம் உள்ள டப்பாவை பூ போட்டு வைத்து கும்பிட்டு நிச்சயதார்த்த மோதிரத்தைக் கொடுக்க சந்துருவும் சாருவும் சேர்ந்து மோதிரத்தை பெற்று கொண்டு வீட்டிற்கு கிளம்பினார்கள்.
பரத்தின் திடீர் மனமாற்றத்திற்கு காரணம் என்ன? என்ன நடந்திருக்கும்? பானு நினைத்தது போல பரத்தின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடக்குமா? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்.
- தொடரும் -
* * * * * * * * * * * * * *
இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
Last edited: