- Messages
- 264
- Reaction score
- 406
- Points
- 63
எண்ணங்களே வண்ணங்களாய்...
அத்தியாயம் 30
வீட்டு வாசலில் கார் வந்த சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த கண்ணம்மா வேகமாக வாசலுக்கு சென்று பார்த்தார்.
"வாங்க ஐயா! சீக்கிரம்மா வந்து சவிதாம்மாவுக்கு என்னாச்சசு பாருங்க..." என்று கண்ணீருடன் படபடத்து கொண்டு டாக்டரிடம் கூறினார்.
"சரிங்கம்மா... ப்ளீஸ் அழாதீங்க! சவிதா எந்த ரூம்ல இருக்காங்கனு சொல்லுங்க?" என்று கேட்டார் டாக்டர்.
"சவிதாம்மா மாடிலதான் இருக்காங்க ஐயா..." என்று கூறிக் கொண்டே சவிதாவின் அறைக்கு டாக்டரை அழைத்துச் சென்றார் கண்ணம்மா.
"ப்ளீஸ்... எல்லாரும் கொஞ்ச நேரம் வெளியே வெயிட் பண்ணுங்க..." என்று டாக்டர் கூறியதும் அனைவரும் அறையை விட்டு வெளியே சென்று காத்துக் கொண்டிருந்தனர்.
பதினைந்து நிமிடத்திற்கு பிறகு டாக்டர் ரூமை விட்டு வெளியே வந்ததும், "சவிதாவுக்கு என்ன சார் ஆச்சு?" என்று சாருவும், ஜானகி அம்மாவும் பதற்றத்துடனும் பயத்துடனும் கேட்டனர்.
"நீங்க பயப்படுற மாதிரி சவிதாவுக்கு ஒன்றுமில்ல மேடம்.உங்க எல்லாருக்கும் குட் நியூஸ்தான்" என்று கூறினார் டாக்டர்.
"என்ன சார் சொல்லுறீங்க? என் பொண்ணுக்கு சுயநினைவு வந்திருச்சா டாக்டர்..." என்று மிகுந்த ஆவலுடனும் கண்ணீருடனும் கேட்டார் ஜானகி அம்மா.
"முழுசா சுயநினைவு வந்திருச்சுனு சொல்ல முடியாது.ஆனால் சவிதாவோடு உடம்புல நிறைய இம்ப்ரூவ்மென்ட்ஸ் வந்திருக்கு.
ரொம்ப நாட்களுக்கு பிறகு ஏதோ ஒரு விஷயம் டீப்பா அவுங்க மனசுல ஆழப்பதிஞ்சு சில உணர்வு நரம்புகளை தூண்டிவிட்டிருக்கு. அதனால் தான் சவிதாவுக்கு திடீருனு கண்ணீரும் மூச்சுத்திணறலும் வந்திருக்கு.இது எல்லாமே சுயநினைவு சீக்கிரமா வருவதற்கான அறிகுறிகள் தான்.மூன்று வருஷமா எந்தவித சுயநினைவுமே இல்லாத இவுங்களுக்கு கடந்த மூன்று வாரத்துல நிறைய இம்ப்ரூவ்மென்ட் வந்திருப்பது பார்த்து எனக்கே ரொம்ப ஆச்சரியமாவும் சந்தோஷமாவும் இருக்கு மேடம்.நீங்க கொடுத்த பயிற்சினால தான் மேடம் சவிதாவோட இந்த இம்ப்ரூவ்மென்ட்க்கு காரணம். சூப்பர் மேடம்.அவுங்களுக்கு தொடர்ந்து விடாமல் பயிற்சி கொடுங்க..." என்று சாருவிடம் கூறினார் டாக்டர்.
"இந்த மாதிரி கேஷஸ் நிறைய பேரை பாத்திருக்கேன்.என்னோட முப்பது வருஷ சர்வீஸ்ல இப்படி சீக்கிரமா இம்ப்ரூமென்ட் வந்த பேஷன்ட் யாரையும் நான் பார்த்ததே இல்ல.சில பேர் கோமாலிருந்து மீண்டு வரமாலும் அப்படியேவும் இருந்திருக்காங்க. இன்னும் ஒரு சில பேருக்கு இருபது வருஷத்துக்கு பிறகுலாம் சுயநினைவு வந்திருக்கு.பட் சவிதா இஸ் டிப்ரெண்ட் கேஷ் என்று கூறினார்.சவிதாவை இனிமேல் தான் நீங்க கவனமாக ஹேன்டில் பண்ணணும். அவுங்களுக்கு சுயநினைவு கொஞ்சம் கொஞ்சமா திரும்ப வரும்போது எல்லாரையும் சரியா அடையாளம் தெரியமா அவுங்களுக்கு குழப்பமும், அதனால் கோபம் மன அழுத்தம் எல்லாமே வர்றதுக்கு சான்ஸஸ் இருக்கு.
ஸோ பீ கேர் புஃல்! எதுனாலும் எனக்கு இமிடியேட்டா கால் பண்ணி இன்பார்ம் பண்ணிருங்க..." என்று கூறினார் டாக்டர்.
"ஸ்யோர் சார்... தாங்க் யூ சோ மச் டாக்டர்" என்று சாரு கூறியதும் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றார் டாக்டர்.
சவிதாவின் அருகில் சென்று அமர்ந்து அவளது தலையைக் கோரிவிட்டு அழுதுக் கொண்டிருந்தார் ஜானகி அம்மா.ஜானகி அம்மாவின் கண்ணீர்த்துளி சவிதாவின் கை விரல்களில் பட்டதும், அவளது விரல்களில் ஐந்து நிமிடங்கள் அசைவுகள் ஏற்பட்டது.
"மேடம் ப்ளீஸ் அழாதீங்க! சீக்கிரமா உங்க பொண்ணு குணமாகிடுவாங்க. நீங்க கொஞ்சம் நேரம் சவிதாவ டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்!" என்று கூறினார் நர்ஸ்.
நர்ஸ் கூறியதும் தன்னுடைய மாமியாரை அழைத்துக் கொண்டு வெளியே கூட்டிச் சென்று ஆறுதல் வா்த்தைகள் கூறி சமாதானப்படுத்தினாள் சாரு.நாட்கள் கரைப்புருண்டு ஓடியது.ஒரு நாள் மாலைப் பொழுது தோட்டத்தில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டு வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் சந்துரு.எப்போதும் போன் கால் பண்ணாத சாருவிடமிருந்து, சந்துருவிற்கு அழைப்பு வந்தது.
மொபைலை அட்டன் செய்து "ஹலோ!" என்று சந்துரு கூறியதும், "குட் நீயூஸ்ங்க.கம்மிங் தார்ஸ்டே பாஸ்போர்ட் எடுத்துக்கிட்டு விசா ஸ்டாம்பிங்கு கன்சோலேட்டுக்கு வரச் சொல்லி மெயில் பண்ணிருக்காங்கங்க.." என்று சாரு கூறியதும் "வாவ் சூப்பர்ங்க!" என்று சந்தோஷமாக சந்துரு கூறியதைக் கேட்டதும் சாருவிற்கு உற்சாகம் தாங்க முடியவில்லை.
"ஓகேங்க! அடுத்தவாரம் அமெரிக்கா கிளம்ப தயாராகுங்க.நான் இப்போவே ப்ளைட் டிக்கட்ஸ் பார்த்து புக் பண்ணுறேன்.நான் ஒரு அட்ரஸையும் லட்டரையும் அனுப்பி வைக்கிறேன்.
அந்த லட்டர்ல எல்லா டீடைல்ஸ் பிஃல் பண்ணி லட்டரோட சேர்த்து உங்க பாஸ்போர்ட்டையும் சேர்த்து கொரியர் பண்ணிருங்க..." என்றான் சந்துரு.
"சரிங்க..." என்று கூறியவள் வேகமாக ஜானகி அம்மாவிடம் சென்று தகவலைச் சொல்லியதும் ரொம்ப சந்தோஷப்பட்டார்.
"சரிம்மா சாரு.நீ ஒரு இரண்டு நாள் மட்டுமாவது உங்க அம்மா வீட்டுல போய் இருந்துட்டு வாம்மா..." என்று கூறினார்.
"அவுங்களுக்கும் உன் கூட இருக்கனும்னு ஆசை இருக்கும்லம்மா. அடுத்த ஆறு மாசத்துக்கு அவுங்கள நீ பார்க்க முடியாதுலம்மா? என்றதும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் சரிங்க அத்தை..." என்று பதில் கூறினாள் சாரு.
"சவிதாவை கவனமாக பார்த்துக் கோங்க அத்தை..." என்று கூறிவிட்டு தன்னுடைய பிறந்த வீட்டிற்குக் கிளம்பிச் சென்றாள் சாரு.
வீட்டிற்கு போகும் வழியிலே சந்துரு சொன்ன அட்ரஸிற்கு கொரியர் செய்து விட்டு அவனுக்கு வாட்ஸ்அப் மூலமாக மெஸேஜ் செய்து தகவலை கூறினாள் சாரு.சாரு அவளுடைய வீட்டிற்கு வருவதாக முன்கூட்டியே எந்த தகவலும் சொல்லாமல் மெதுவாக யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் நுழைந்தாள்.தூணில் சாய்ந்து கொண்டு உரலில் வெத்தலைத் தட்டிக் கொண்டிருந்த பாட்டியின் கண்களை மெதுவாக மூடியதும், "சாரும்மா..." என்று பாட்டி கூறினார்.
"எப்படி பாட்டி? நான் தானு கரெக்ட்டா கண்டுப்பிடிச்சீங்க..." என்று கேட்டாள்.
"பஞ்சு போல இருக்கும் என் பேத்தியோட மிருதுவான கை எனக்கு தெரியாதமா!" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது சிவகாமி அம்மா வந்தார்.தன் மகளைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.வீட்டில் உள்ள அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து சாருவிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
"தாத்தா எங்க பாட்டி? ரூம்ல இருக்காங்களா?" என்று கேட்டாள்.
காலையிலேயே ஒருபஞ்சாயத்தை தீர்த்து வைக்க கிளம்பி போயிருட்டாரு சாரு.இப்போ வர்ற நேரம்தான்..." என்று பாட்டி சொல்லிக் கொண்டிருக்கும் போதே தாத்தா வீட்டிற்குள் நுழைந்தார்.
தாத்தாவைப் பார்த்ததும் சாருவின் கால்களிரண்டும் தாத்தா இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக ஓடிச்சென்றது.
"எப்படிடா இருக்க சாரு?" என்று நலம் விசாரித்தார் தாத்தா.
நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாருவிடம் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.தன் குடும்பத்திலுள்ள அனைவரிடமும் தனக்கு விசா கிடைத்து விட்டதையும் அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் கூறினாள் சாரு.
"அம்மா! நாளைக்கு ஸ்கூல்ல டீச்சர்ஸ் டே பங்ஷன் இருக்கும்மா.காலையில எட்டு மணிக்கெல்லாம் கிளம்பி போகனும்.நீங்க சீக்கிரமா டிபன் ரெடி பண்ணீருங்கம்மா..." என்று கூறிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்று டைரியை ஓபன் செய்து எழுதத் தொடங்கினாள்.
மை டியர் ஸ்வீட் ஹார்ட்,
அடுத்தவாரம் உங்கள நேர்ல வந்து பார்க்க போறேனாங்க? எத்தனை நாட்கள் காத்திருப்புங்க சந்துரு.
எனக்கு விசா கிடைத்த மெயிலைப் பார்த்த மறுகணமே உங்களிடம் நேரில் வந்து சேர்ந்தது போல உணர்ந்தேன்.நீங்கள் என்னருகில் இல்லாத ஒவ்வொரு நிமிஷமும் தனிமையின் கொடுமை எவ்வளவு கொடியது என்று புரிந்தது.என் தலையனைக்கு மட்டுமே தெரியுங்க சந்துரு.உங்களை பிரிந்து இருந்த நாட்களில் நான் சிந்திய கண்ணீர்த் துளிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று.முடிந்ததை நினைத்து வருந்துவதில் பயனேதுமில்லை என்பதை நான் நன்கு அறிவேன் சந்துரு.பல சூழ்நிலைகளை கடந்து வரத் தெரிந்த எனக்கு உங்களை மட்டும் பிரிந்திருக்க முடியாமல் நித்தமும் துடியாய் துடித்தேன்.என் சிந்தைக்கு தெரிந்த எதார்த்தம் ஏனோ என் மனம் ஏற்க மறுத்துவிட்டது.
உங்களை சந்திக்க போகும் அந்த நாட்கள் இதோ என்னருகில் வந்துவிட்டது சந்துரு என்று பக்கம் பக்கமாக கதைகளை எழுதி முடித்தாள் சாரு.
முதலில் இருந்த அபார்ட்மென்ட்டை விட்டு புதிதாக வேறொரு அபார்ட்மென்ட்டிற்கு குடியேறினான் சந்துரு.
"என்னடா சந்துரு! இன்னைக்கு உன் முகத்துல அதிகமா காதல் பொலிவு பொழியுது" என்று மனோஜ் கூறினான்.
"இது என்னடா புதுசா இருக்கு? முகப்பொலிவு கேள்விப் பட்டிருக்கேன். அது என்னடா காதல் பொலிவு?" என்று மனோஜிடம் கேட்டான்.
"புதுசா கல்யாணம் முடிஞ்சவுங்க ரொம்ப நாள் பிரிஞ்சு இருந்துட்டு மறுபடியும் சேர பேறாங்கனா அந்த நேரத்துல இப்படி தெரியும்னு" மனோஜ் சொன்னதை கேட்டதும், "ஐயா ராசா! மறுபடியும் மொக்கை போட ஆரம்புச்சுட்டுயா? எனக்கு நிறைய வேலை இருக்கு.முதல்ல இங்க இருந்து கிளம்புற வழியைப் பாரு..." என்று கூறினான் சந்துரு.
"நீயா பேசியது என் அன்பே!" என்று மனோஜ் பாட தொடங்கியதும், நீ பானுவை பார்க்க முடியாம காதல் போதை தலைக்கு ஏறி கொஞ்சம் மூளை கலங்கிருச்சுனு நினைக்கிறேன்.வா! நாளைக்கே மென்டல் ஆஸ்பத்திரில ஒரு அப்பாய்ண்மென்ட் போட்டு டாக்டரை பார்த்துட்டு வந்திரலாம்..." என்று சிரித்துக் கொண்டே கூறினான் சந்துரு.
"அப்பா சாமி! ஆளவிடு ராசா!" என்று கூறிவிட்டுச் சென்றான் மனோஜ்.
மறுநாள் காலையில் ஆசிரியர் தினத்திற்காக எடுத்த செட் ஸேரியை உடுத்திக் கொண்டு பள்ளிக்குச் சென்றாள் சாரு.
மூன்று மாதங்களுக்கு பிறகு சாருவைப் பார்த்த மற்ற டீச்சர்ஸ் எல்லோரும் அவளை நலம் விசாரித்து கொண்டிருந்தனர்.பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் 'ஹேப்பி டீச்சர்ஸ் டே' என்று சாரு வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டிருக்கும் சமயத்தில் பானுவும் வந்துவிட்டாள். ஆசிரியர் தின கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் எல்லாம் நடைபெற தொடங்கியது.நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும் சாருவும் பானுவும் பள்ளியின் ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
"என்ன மேடம்? பேக்கிங்லாம் ஸ்டார்ட் பண்ணியாச்சா? மேடம் வர வர முன்ன மாதிரி எதுவுமே ஏங்கிட்ட சொல்லுறது இல்ல" என்று பானு கூறினாள்.
"அப்படிலாம் ஒன்னுமில்ல பானு.எப்பவும் சவிதாவ பத்தி யோசிச்சுக்கிட்டே இருக்குறதுல வேற யார்க்கிட்டையும் பேசுறதுக்கு நேரமில்ல..." என்று கூறினாள் சாரு.
"யாருடி அந்த சவிதா? அதுக்குள்ள எனக்கு தெரியாம புது ப்ரெண்ட்ஸ்லாம் பிடிச்சுட்டியா?" என்று கேட்டாள் பானு.
"நீ நினைக்கிற மாதிரி சவிதா புது ப்ரெண்ட்லாம் கிடையாது.என் கணவருடைய சொந்த தங்கச்சி.
இன்னொரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா பானு? சவிதா இஸ் மை ஓல்டு காலேஜ் ஸ்டூடண்ட் பானு."
"என்ன சாரு அடுத்தடுத்து ஷாக் கொடுக்குற மாதிரி நியூஸா சொல்லுற? மனோஜ் சார் கூட ஏங்கிட்ட சவிதாவ பத்தி எதுவுமே இதுவரை சொன்னதில்ல.கூடப் பிறந்த தங்கச்சியை மறச்சு கல்யாணம் பண்ணுற அளவுக்கு அப்படி என்னடி அந்த பொண்ணு பண்ணுனா?" என்று பானு கேட்டதும் சவிதா கோமாவிலிருப்பதையும் அவளுக்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறினாள் சாரு.
"சவிதா செம டேலண்டான பொண்ணு பானு.சவிதா பரத நாட்டியம் ஆடும்போது பார்த்தா, அப்படியே தில்லானா மோகனாம்பாள் படத்துல ஆடுற பத்மினி அம்மா மாதிரியே இருக்கும்.பரதம் ஆடும்போது அவளுடைய முகத்துல நவரசமும் தெரியும்.காலேஜ் ஜாயின் பண்ண பஸ்ட் இயர்லேயே படிப்பு, பரதம், ஸ்டேஜ்ல காம்பேரிங்குனு ஸ்டாப்ஸ் ஸ்டூடண்ட் மத்தியில செம நேம் வாங்கிருந்தா.ரொம்ப போல்டான பொண்ணு.அவளுக்கு எப்படி இப்படி நடந்ததுனு நினைச்சு ஆச்சரியமா இருக்கு பானு."
வெள்ளெந்தி மனம் கொண்ட பானு சவிதாவின் கடந்த கால நிகழ்வை கேட்டு கண்ணீர் விட்டாள்.
"எனக்கு உங்கிட்ட இருந்து ஒரு உதவி வேணும் பானு!" என்று கேட்டாள் சாரு.நான் அடுத்த வாரம் அமெரிக்கா போனதும் நீதான் சவிதாவை பத்திரமா பார்த்துக்கனும்.நான் அவரு ஆபிஸ் போனதுக்கு பிறகு வீடியோ கால் போட்டு சவிதாவுக்கு பேசுறேன்" என்று கூறினாள்.
"என்னால முடிஞ்ச வரை எல்லா உதவியும் கண்டிப்பா செய்றேன் சாரு.நீ எதுவும் சவிதாவைப் பத்தி கவலைப்படாமல் பத்திரமா போய்ட்டு வா.அவளை நான் கவனமா பாத்துக்கிறேன்" என்று கூறினாள் பானு.
"தாங்க் யூ சோ மச் பானு" என்று கூறிவிட்டு அவளைக் கட்டிப்பிடித்தாள்.
இரண்டு நாட்கள் கழித்து சாருவை அழைத்து செல்ல ஜானகி அம்மா அவளுடைய வீட்டிற்கு வந்திருந்தார். ஜானகி அம்மா வந்ததும், அவரை வீட்டிற்குள் வரவேற்று உபசரித்தார் சிவகாமி அம்மா.
"சவிதா எப்படி சம்பந்தி இருக்கா? என்று கேட்டதும், தயக்கத்துடன் என்னை மன்னிச்சிருங்க சம்பந்தி அம்மா..." என்று கூறினார்.
"ஐயோ! எதுக்கு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுறீங்க. நீங்க எதுவும் கவலைப்படாதீங்க சம்பந்தி அம்மா.சவிதா சீக்கிரம் குணமாகிருவா.சவிதாவைப் பத்தி சாரு சொன்னதும், நாங்க எங்க குலதெய்வத்துக்கு காணிக்கை முடிஞ்சு நேத்திக்கடன் வச்சிருக்கோம் சம்பந்தி.இதுவரை நாங்க வேண்டுனா எல்லாமே அந்த நரசிங்கமூர்த்தி சாஸ்தா முடிச்சு கொடுத்திருக்காரு. கண்டிப்பா நம்ம சவிதாவையும் சுகமாக்கி கொடுப்பாரு.நீங்க எதை நினைச்சும் கவலைப்படாமல் தைரியமா இருங்க..." என்று கூறியதும் கண்கலங்கி கையெடுத்து கும்பிட்டார் ஜானகி அம்மா.
"இப்படி நல்ல மனசு உள்ள உங்கக்கிட்ட போய் உண்மையை மறச்சுட்டேனே!" என்று சொல்லி வருந்தினார் ஜானகி அம்மா.
"உங்க இடத்துல நான் இருந்திருந்தாலும் இதைத் தான் சம்பந்தி பண்ணிருப்பேன்" என்று சிவகாமி அம்மா கூறினார்.
மாடியிலிருந்து கீழே வந்த சாரு ஜானகி அம்மாவை தன்னுடைய ரூம்மிற்கு அழைத்துச் சென்று கொஞ்ச நேரம் ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு சென்றாள்.கட்டிலில் படுத்த ஜானகி அம்மா சுவற்றில் மாட்டியிருந்த போட்டோவைப் பார்த்து திகைத்து வேகமாக எழுந்து போட்டோவின் அருகே சென்று உற்றுப் பார்த்தார்.
சாருவின் அறைக்குள் வந்த பாட்டி, "என்னம்மா ஜானகி அந்த போட்டோவ அப்படி உத்துப்பாக்குற?" என்று கேட்டார்.
"இந்த போட்டோ ப்ரேம் எப்படிம்மா சாருவோட ரூம்ல இருக்கு?" என்று கேட்டார் ஜானகி அம்மா.
சாருவின் ஓல்டு ஸ்டூடண்டா சவிதா? பிறகு எதுக்கு சாரு ஸ்கூல்ல டீச்சரா வேலைப்பாக்குறா? சாருவின் அறையிலிருந்த போட்டோவில் இருப்பது யார்? அந்த போட்டோவைப் பார்த்து ஜானகி அம்மா திகைத்தற்கு காரணம் என்ன? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் பல திருப்பங்களோடு காண்போம்.
- தொடரும் -
* * * * * * * * * * * * * *
இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
அத்தியாயம் 30
வீட்டு வாசலில் கார் வந்த சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த கண்ணம்மா வேகமாக வாசலுக்கு சென்று பார்த்தார்.
"வாங்க ஐயா! சீக்கிரம்மா வந்து சவிதாம்மாவுக்கு என்னாச்சசு பாருங்க..." என்று கண்ணீருடன் படபடத்து கொண்டு டாக்டரிடம் கூறினார்.
"சரிங்கம்மா... ப்ளீஸ் அழாதீங்க! சவிதா எந்த ரூம்ல இருக்காங்கனு சொல்லுங்க?" என்று கேட்டார் டாக்டர்.
"சவிதாம்மா மாடிலதான் இருக்காங்க ஐயா..." என்று கூறிக் கொண்டே சவிதாவின் அறைக்கு டாக்டரை அழைத்துச் சென்றார் கண்ணம்மா.
"ப்ளீஸ்... எல்லாரும் கொஞ்ச நேரம் வெளியே வெயிட் பண்ணுங்க..." என்று டாக்டர் கூறியதும் அனைவரும் அறையை விட்டு வெளியே சென்று காத்துக் கொண்டிருந்தனர்.
பதினைந்து நிமிடத்திற்கு பிறகு டாக்டர் ரூமை விட்டு வெளியே வந்ததும், "சவிதாவுக்கு என்ன சார் ஆச்சு?" என்று சாருவும், ஜானகி அம்மாவும் பதற்றத்துடனும் பயத்துடனும் கேட்டனர்.
"நீங்க பயப்படுற மாதிரி சவிதாவுக்கு ஒன்றுமில்ல மேடம்.உங்க எல்லாருக்கும் குட் நியூஸ்தான்" என்று கூறினார் டாக்டர்.
"என்ன சார் சொல்லுறீங்க? என் பொண்ணுக்கு சுயநினைவு வந்திருச்சா டாக்டர்..." என்று மிகுந்த ஆவலுடனும் கண்ணீருடனும் கேட்டார் ஜானகி அம்மா.
"முழுசா சுயநினைவு வந்திருச்சுனு சொல்ல முடியாது.ஆனால் சவிதாவோடு உடம்புல நிறைய இம்ப்ரூவ்மென்ட்ஸ் வந்திருக்கு.
ரொம்ப நாட்களுக்கு பிறகு ஏதோ ஒரு விஷயம் டீப்பா அவுங்க மனசுல ஆழப்பதிஞ்சு சில உணர்வு நரம்புகளை தூண்டிவிட்டிருக்கு. அதனால் தான் சவிதாவுக்கு திடீருனு கண்ணீரும் மூச்சுத்திணறலும் வந்திருக்கு.இது எல்லாமே சுயநினைவு சீக்கிரமா வருவதற்கான அறிகுறிகள் தான்.மூன்று வருஷமா எந்தவித சுயநினைவுமே இல்லாத இவுங்களுக்கு கடந்த மூன்று வாரத்துல நிறைய இம்ப்ரூவ்மென்ட் வந்திருப்பது பார்த்து எனக்கே ரொம்ப ஆச்சரியமாவும் சந்தோஷமாவும் இருக்கு மேடம்.நீங்க கொடுத்த பயிற்சினால தான் மேடம் சவிதாவோட இந்த இம்ப்ரூவ்மென்ட்க்கு காரணம். சூப்பர் மேடம்.அவுங்களுக்கு தொடர்ந்து விடாமல் பயிற்சி கொடுங்க..." என்று சாருவிடம் கூறினார் டாக்டர்.
"இந்த மாதிரி கேஷஸ் நிறைய பேரை பாத்திருக்கேன்.என்னோட முப்பது வருஷ சர்வீஸ்ல இப்படி சீக்கிரமா இம்ப்ரூமென்ட் வந்த பேஷன்ட் யாரையும் நான் பார்த்ததே இல்ல.சில பேர் கோமாலிருந்து மீண்டு வரமாலும் அப்படியேவும் இருந்திருக்காங்க. இன்னும் ஒரு சில பேருக்கு இருபது வருஷத்துக்கு பிறகுலாம் சுயநினைவு வந்திருக்கு.பட் சவிதா இஸ் டிப்ரெண்ட் கேஷ் என்று கூறினார்.சவிதாவை இனிமேல் தான் நீங்க கவனமாக ஹேன்டில் பண்ணணும். அவுங்களுக்கு சுயநினைவு கொஞ்சம் கொஞ்சமா திரும்ப வரும்போது எல்லாரையும் சரியா அடையாளம் தெரியமா அவுங்களுக்கு குழப்பமும், அதனால் கோபம் மன அழுத்தம் எல்லாமே வர்றதுக்கு சான்ஸஸ் இருக்கு.
ஸோ பீ கேர் புஃல்! எதுனாலும் எனக்கு இமிடியேட்டா கால் பண்ணி இன்பார்ம் பண்ணிருங்க..." என்று கூறினார் டாக்டர்.
"ஸ்யோர் சார்... தாங்க் யூ சோ மச் டாக்டர்" என்று சாரு கூறியதும் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றார் டாக்டர்.
சவிதாவின் அருகில் சென்று அமர்ந்து அவளது தலையைக் கோரிவிட்டு அழுதுக் கொண்டிருந்தார் ஜானகி அம்மா.ஜானகி அம்மாவின் கண்ணீர்த்துளி சவிதாவின் கை விரல்களில் பட்டதும், அவளது விரல்களில் ஐந்து நிமிடங்கள் அசைவுகள் ஏற்பட்டது.
"மேடம் ப்ளீஸ் அழாதீங்க! சீக்கிரமா உங்க பொண்ணு குணமாகிடுவாங்க. நீங்க கொஞ்சம் நேரம் சவிதாவ டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்!" என்று கூறினார் நர்ஸ்.
நர்ஸ் கூறியதும் தன்னுடைய மாமியாரை அழைத்துக் கொண்டு வெளியே கூட்டிச் சென்று ஆறுதல் வா்த்தைகள் கூறி சமாதானப்படுத்தினாள் சாரு.நாட்கள் கரைப்புருண்டு ஓடியது.ஒரு நாள் மாலைப் பொழுது தோட்டத்தில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டு வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் சந்துரு.எப்போதும் போன் கால் பண்ணாத சாருவிடமிருந்து, சந்துருவிற்கு அழைப்பு வந்தது.
மொபைலை அட்டன் செய்து "ஹலோ!" என்று சந்துரு கூறியதும், "குட் நீயூஸ்ங்க.கம்மிங் தார்ஸ்டே பாஸ்போர்ட் எடுத்துக்கிட்டு விசா ஸ்டாம்பிங்கு கன்சோலேட்டுக்கு வரச் சொல்லி மெயில் பண்ணிருக்காங்கங்க.." என்று சாரு கூறியதும் "வாவ் சூப்பர்ங்க!" என்று சந்தோஷமாக சந்துரு கூறியதைக் கேட்டதும் சாருவிற்கு உற்சாகம் தாங்க முடியவில்லை.
"ஓகேங்க! அடுத்தவாரம் அமெரிக்கா கிளம்ப தயாராகுங்க.நான் இப்போவே ப்ளைட் டிக்கட்ஸ் பார்த்து புக் பண்ணுறேன்.நான் ஒரு அட்ரஸையும் லட்டரையும் அனுப்பி வைக்கிறேன்.
அந்த லட்டர்ல எல்லா டீடைல்ஸ் பிஃல் பண்ணி லட்டரோட சேர்த்து உங்க பாஸ்போர்ட்டையும் சேர்த்து கொரியர் பண்ணிருங்க..." என்றான் சந்துரு.
"சரிங்க..." என்று கூறியவள் வேகமாக ஜானகி அம்மாவிடம் சென்று தகவலைச் சொல்லியதும் ரொம்ப சந்தோஷப்பட்டார்.
"சரிம்மா சாரு.நீ ஒரு இரண்டு நாள் மட்டுமாவது உங்க அம்மா வீட்டுல போய் இருந்துட்டு வாம்மா..." என்று கூறினார்.
"அவுங்களுக்கும் உன் கூட இருக்கனும்னு ஆசை இருக்கும்லம்மா. அடுத்த ஆறு மாசத்துக்கு அவுங்கள நீ பார்க்க முடியாதுலம்மா? என்றதும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் சரிங்க அத்தை..." என்று பதில் கூறினாள் சாரு.
"சவிதாவை கவனமாக பார்த்துக் கோங்க அத்தை..." என்று கூறிவிட்டு தன்னுடைய பிறந்த வீட்டிற்குக் கிளம்பிச் சென்றாள் சாரு.
வீட்டிற்கு போகும் வழியிலே சந்துரு சொன்ன அட்ரஸிற்கு கொரியர் செய்து விட்டு அவனுக்கு வாட்ஸ்அப் மூலமாக மெஸேஜ் செய்து தகவலை கூறினாள் சாரு.சாரு அவளுடைய வீட்டிற்கு வருவதாக முன்கூட்டியே எந்த தகவலும் சொல்லாமல் மெதுவாக யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் நுழைந்தாள்.தூணில் சாய்ந்து கொண்டு உரலில் வெத்தலைத் தட்டிக் கொண்டிருந்த பாட்டியின் கண்களை மெதுவாக மூடியதும், "சாரும்மா..." என்று பாட்டி கூறினார்.
"எப்படி பாட்டி? நான் தானு கரெக்ட்டா கண்டுப்பிடிச்சீங்க..." என்று கேட்டாள்.
"பஞ்சு போல இருக்கும் என் பேத்தியோட மிருதுவான கை எனக்கு தெரியாதமா!" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது சிவகாமி அம்மா வந்தார்.தன் மகளைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.வீட்டில் உள்ள அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து சாருவிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
"தாத்தா எங்க பாட்டி? ரூம்ல இருக்காங்களா?" என்று கேட்டாள்.
காலையிலேயே ஒருபஞ்சாயத்தை தீர்த்து வைக்க கிளம்பி போயிருட்டாரு சாரு.இப்போ வர்ற நேரம்தான்..." என்று பாட்டி சொல்லிக் கொண்டிருக்கும் போதே தாத்தா வீட்டிற்குள் நுழைந்தார்.
தாத்தாவைப் பார்த்ததும் சாருவின் கால்களிரண்டும் தாத்தா இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக ஓடிச்சென்றது.
"எப்படிடா இருக்க சாரு?" என்று நலம் விசாரித்தார் தாத்தா.
நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாருவிடம் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.தன் குடும்பத்திலுள்ள அனைவரிடமும் தனக்கு விசா கிடைத்து விட்டதையும் அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் கூறினாள் சாரு.
"அம்மா! நாளைக்கு ஸ்கூல்ல டீச்சர்ஸ் டே பங்ஷன் இருக்கும்மா.காலையில எட்டு மணிக்கெல்லாம் கிளம்பி போகனும்.நீங்க சீக்கிரமா டிபன் ரெடி பண்ணீருங்கம்மா..." என்று கூறிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்று டைரியை ஓபன் செய்து எழுதத் தொடங்கினாள்.
மை டியர் ஸ்வீட் ஹார்ட்,
அடுத்தவாரம் உங்கள நேர்ல வந்து பார்க்க போறேனாங்க? எத்தனை நாட்கள் காத்திருப்புங்க சந்துரு.
எனக்கு விசா கிடைத்த மெயிலைப் பார்த்த மறுகணமே உங்களிடம் நேரில் வந்து சேர்ந்தது போல உணர்ந்தேன்.நீங்கள் என்னருகில் இல்லாத ஒவ்வொரு நிமிஷமும் தனிமையின் கொடுமை எவ்வளவு கொடியது என்று புரிந்தது.என் தலையனைக்கு மட்டுமே தெரியுங்க சந்துரு.உங்களை பிரிந்து இருந்த நாட்களில் நான் சிந்திய கண்ணீர்த் துளிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று.முடிந்ததை நினைத்து வருந்துவதில் பயனேதுமில்லை என்பதை நான் நன்கு அறிவேன் சந்துரு.பல சூழ்நிலைகளை கடந்து வரத் தெரிந்த எனக்கு உங்களை மட்டும் பிரிந்திருக்க முடியாமல் நித்தமும் துடியாய் துடித்தேன்.என் சிந்தைக்கு தெரிந்த எதார்த்தம் ஏனோ என் மனம் ஏற்க மறுத்துவிட்டது.
உங்களை சந்திக்க போகும் அந்த நாட்கள் இதோ என்னருகில் வந்துவிட்டது சந்துரு என்று பக்கம் பக்கமாக கதைகளை எழுதி முடித்தாள் சாரு.
முதலில் இருந்த அபார்ட்மென்ட்டை விட்டு புதிதாக வேறொரு அபார்ட்மென்ட்டிற்கு குடியேறினான் சந்துரு.
"என்னடா சந்துரு! இன்னைக்கு உன் முகத்துல அதிகமா காதல் பொலிவு பொழியுது" என்று மனோஜ் கூறினான்.
"இது என்னடா புதுசா இருக்கு? முகப்பொலிவு கேள்விப் பட்டிருக்கேன். அது என்னடா காதல் பொலிவு?" என்று மனோஜிடம் கேட்டான்.
"புதுசா கல்யாணம் முடிஞ்சவுங்க ரொம்ப நாள் பிரிஞ்சு இருந்துட்டு மறுபடியும் சேர பேறாங்கனா அந்த நேரத்துல இப்படி தெரியும்னு" மனோஜ் சொன்னதை கேட்டதும், "ஐயா ராசா! மறுபடியும் மொக்கை போட ஆரம்புச்சுட்டுயா? எனக்கு நிறைய வேலை இருக்கு.முதல்ல இங்க இருந்து கிளம்புற வழியைப் பாரு..." என்று கூறினான் சந்துரு.
"நீயா பேசியது என் அன்பே!" என்று மனோஜ் பாட தொடங்கியதும், நீ பானுவை பார்க்க முடியாம காதல் போதை தலைக்கு ஏறி கொஞ்சம் மூளை கலங்கிருச்சுனு நினைக்கிறேன்.வா! நாளைக்கே மென்டல் ஆஸ்பத்திரில ஒரு அப்பாய்ண்மென்ட் போட்டு டாக்டரை பார்த்துட்டு வந்திரலாம்..." என்று சிரித்துக் கொண்டே கூறினான் சந்துரு.
"அப்பா சாமி! ஆளவிடு ராசா!" என்று கூறிவிட்டுச் சென்றான் மனோஜ்.
மறுநாள் காலையில் ஆசிரியர் தினத்திற்காக எடுத்த செட் ஸேரியை உடுத்திக் கொண்டு பள்ளிக்குச் சென்றாள் சாரு.
மூன்று மாதங்களுக்கு பிறகு சாருவைப் பார்த்த மற்ற டீச்சர்ஸ் எல்லோரும் அவளை நலம் விசாரித்து கொண்டிருந்தனர்.பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் 'ஹேப்பி டீச்சர்ஸ் டே' என்று சாரு வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டிருக்கும் சமயத்தில் பானுவும் வந்துவிட்டாள். ஆசிரியர் தின கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் எல்லாம் நடைபெற தொடங்கியது.நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும் சாருவும் பானுவும் பள்ளியின் ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
"என்ன மேடம்? பேக்கிங்லாம் ஸ்டார்ட் பண்ணியாச்சா? மேடம் வர வர முன்ன மாதிரி எதுவுமே ஏங்கிட்ட சொல்லுறது இல்ல" என்று பானு கூறினாள்.
"அப்படிலாம் ஒன்னுமில்ல பானு.எப்பவும் சவிதாவ பத்தி யோசிச்சுக்கிட்டே இருக்குறதுல வேற யார்க்கிட்டையும் பேசுறதுக்கு நேரமில்ல..." என்று கூறினாள் சாரு.
"யாருடி அந்த சவிதா? அதுக்குள்ள எனக்கு தெரியாம புது ப்ரெண்ட்ஸ்லாம் பிடிச்சுட்டியா?" என்று கேட்டாள் பானு.
"நீ நினைக்கிற மாதிரி சவிதா புது ப்ரெண்ட்லாம் கிடையாது.என் கணவருடைய சொந்த தங்கச்சி.
இன்னொரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா பானு? சவிதா இஸ் மை ஓல்டு காலேஜ் ஸ்டூடண்ட் பானு."
"என்ன சாரு அடுத்தடுத்து ஷாக் கொடுக்குற மாதிரி நியூஸா சொல்லுற? மனோஜ் சார் கூட ஏங்கிட்ட சவிதாவ பத்தி எதுவுமே இதுவரை சொன்னதில்ல.கூடப் பிறந்த தங்கச்சியை மறச்சு கல்யாணம் பண்ணுற அளவுக்கு அப்படி என்னடி அந்த பொண்ணு பண்ணுனா?" என்று பானு கேட்டதும் சவிதா கோமாவிலிருப்பதையும் அவளுக்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறினாள் சாரு.
"சவிதா செம டேலண்டான பொண்ணு பானு.சவிதா பரத நாட்டியம் ஆடும்போது பார்த்தா, அப்படியே தில்லானா மோகனாம்பாள் படத்துல ஆடுற பத்மினி அம்மா மாதிரியே இருக்கும்.பரதம் ஆடும்போது அவளுடைய முகத்துல நவரசமும் தெரியும்.காலேஜ் ஜாயின் பண்ண பஸ்ட் இயர்லேயே படிப்பு, பரதம், ஸ்டேஜ்ல காம்பேரிங்குனு ஸ்டாப்ஸ் ஸ்டூடண்ட் மத்தியில செம நேம் வாங்கிருந்தா.ரொம்ப போல்டான பொண்ணு.அவளுக்கு எப்படி இப்படி நடந்ததுனு நினைச்சு ஆச்சரியமா இருக்கு பானு."
வெள்ளெந்தி மனம் கொண்ட பானு சவிதாவின் கடந்த கால நிகழ்வை கேட்டு கண்ணீர் விட்டாள்.
"எனக்கு உங்கிட்ட இருந்து ஒரு உதவி வேணும் பானு!" என்று கேட்டாள் சாரு.நான் அடுத்த வாரம் அமெரிக்கா போனதும் நீதான் சவிதாவை பத்திரமா பார்த்துக்கனும்.நான் அவரு ஆபிஸ் போனதுக்கு பிறகு வீடியோ கால் போட்டு சவிதாவுக்கு பேசுறேன்" என்று கூறினாள்.
"என்னால முடிஞ்ச வரை எல்லா உதவியும் கண்டிப்பா செய்றேன் சாரு.நீ எதுவும் சவிதாவைப் பத்தி கவலைப்படாமல் பத்திரமா போய்ட்டு வா.அவளை நான் கவனமா பாத்துக்கிறேன்" என்று கூறினாள் பானு.
"தாங்க் யூ சோ மச் பானு" என்று கூறிவிட்டு அவளைக் கட்டிப்பிடித்தாள்.
இரண்டு நாட்கள் கழித்து சாருவை அழைத்து செல்ல ஜானகி அம்மா அவளுடைய வீட்டிற்கு வந்திருந்தார். ஜானகி அம்மா வந்ததும், அவரை வீட்டிற்குள் வரவேற்று உபசரித்தார் சிவகாமி அம்மா.
"சவிதா எப்படி சம்பந்தி இருக்கா? என்று கேட்டதும், தயக்கத்துடன் என்னை மன்னிச்சிருங்க சம்பந்தி அம்மா..." என்று கூறினார்.
"ஐயோ! எதுக்கு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுறீங்க. நீங்க எதுவும் கவலைப்படாதீங்க சம்பந்தி அம்மா.சவிதா சீக்கிரம் குணமாகிருவா.சவிதாவைப் பத்தி சாரு சொன்னதும், நாங்க எங்க குலதெய்வத்துக்கு காணிக்கை முடிஞ்சு நேத்திக்கடன் வச்சிருக்கோம் சம்பந்தி.இதுவரை நாங்க வேண்டுனா எல்லாமே அந்த நரசிங்கமூர்த்தி சாஸ்தா முடிச்சு கொடுத்திருக்காரு. கண்டிப்பா நம்ம சவிதாவையும் சுகமாக்கி கொடுப்பாரு.நீங்க எதை நினைச்சும் கவலைப்படாமல் தைரியமா இருங்க..." என்று கூறியதும் கண்கலங்கி கையெடுத்து கும்பிட்டார் ஜானகி அம்மா.
"இப்படி நல்ல மனசு உள்ள உங்கக்கிட்ட போய் உண்மையை மறச்சுட்டேனே!" என்று சொல்லி வருந்தினார் ஜானகி அம்மா.
"உங்க இடத்துல நான் இருந்திருந்தாலும் இதைத் தான் சம்பந்தி பண்ணிருப்பேன்" என்று சிவகாமி அம்மா கூறினார்.
மாடியிலிருந்து கீழே வந்த சாரு ஜானகி அம்மாவை தன்னுடைய ரூம்மிற்கு அழைத்துச் சென்று கொஞ்ச நேரம் ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு சென்றாள்.கட்டிலில் படுத்த ஜானகி அம்மா சுவற்றில் மாட்டியிருந்த போட்டோவைப் பார்த்து திகைத்து வேகமாக எழுந்து போட்டோவின் அருகே சென்று உற்றுப் பார்த்தார்.
சாருவின் அறைக்குள் வந்த பாட்டி, "என்னம்மா ஜானகி அந்த போட்டோவ அப்படி உத்துப்பாக்குற?" என்று கேட்டார்.
"இந்த போட்டோ ப்ரேம் எப்படிம்மா சாருவோட ரூம்ல இருக்கு?" என்று கேட்டார் ஜானகி அம்மா.
சாருவின் ஓல்டு ஸ்டூடண்டா சவிதா? பிறகு எதுக்கு சாரு ஸ்கூல்ல டீச்சரா வேலைப்பாக்குறா? சாருவின் அறையிலிருந்த போட்டோவில் இருப்பது யார்? அந்த போட்டோவைப் பார்த்து ஜானகி அம்மா திகைத்தற்கு காரணம் என்ன? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் பல திருப்பங்களோடு காண்போம்.
- தொடரும் -
* * * * * * * * * * * * * *
இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
Last edited: