- Messages
- 299
- Reaction score
- 220
- Points
- 43
கரையும் காதலன் 49
அறையின் கதவு முடியிருக்க, சன்னலின் வழியே சில்லென்று காற்று ஷிரவின் முகத்தை வருடுவது போல் இருந்தது தன்னவளின் குரலை தன்னக்குள் கேட்டபின்.
"ஷ்ரவன்!" என்று தேனாய் அவளின் குரல் இனிமையாய் மீண்டும் ஒலிக்க.
"மதிம்மா! எப்டி டா இருக்க? நீ எங்க இருக்க? ஏன் என்கிட்ட பேசலை? நீ நல்லா இருக்கல்ல? அவ உன்னை அடிச்சாளா?" என்று தொடர்ந்து பதட்டமாய் விழிகள் மூடி மனதினுல் கேள்விகளை அடுக்க.
"நில்லு! ஷிரவ்! நான் நல்லா இருக்கேன். இல்ல அவ என்னை எதுவும் செயலை. ஹூம் அவ இங்க இல்ல. என் கையை மட்டும் கட்டி வச்சுருக்காங்க. ரெண்டு தடி பசங்க இருக்கா மாதிரி தெரியுது." என்றாள் மதி மெதுவாய்.
"மதி உன்னை எங்க வச்சிருக்காங்க ஏதாவது சொல்லமுடியுமா?" என்றான் ஏதோ ஒரு நப்பாசையில்.
"இல்ல ஷிரவ் இந்த ரூம் ரொம்ப இருட்டா இருக்கு. முதல்ல நீ என்கிட்ட பேசும்போது அவ வந்திருந்தா. அதான் என்னால கான்சென்ட்ரேட் பண்ண முடியலை. " என்றாள் மதி.
"நீ ஏதாவது சாப்பிட்டியா? " என்றான் கவலையாய்.
"ஹேய் ஷ்ரவன். நான் இங்க என்ன பிக்னிக்கா வதுருக்கேன். என்னை கடத்திட்டு வந்துருக்காங்க. என்னால சாப்பிட முடியலை. இங்க இருந்து எப்போ வெளிய வருவோம். உன்னை பார்ப்போம்னு உயிரை கைல புடிச்சிட்டு வச்சிருக்கேன்." என்றாள் மதி.
அவளின் வார்த்தைகளில் உயிர் ஒரு நிமிடம் தெறித்து ஓட, தொண்டைக்குழியில் வார்த்தைகள் வர மறுக்க.
மெல்ல, "மதிம்மா! எனக்கு உன்னை பார்க்கணும். ரஞ்சனி உன்கிட்ட என்ன சொன்னா?" என்றான் வார்தைகளை மென்று விழுங்கி.
"அவ உன் புருஷன்கிட்ட ஒரு விசயம் கேட்ருக்கேன். அதை செய்த உடனே உன்னை விடுட்றேன். அதுவரிக்கும் தப்பிக்க எதுவும் பண்ணாதன்னு சொன்னா?" என்றாள் மதி.
"ஹூம் " என்றான் ஷ்ரவன்.
"அவ உன்கிட்ட என்ன கேட்டா?" என்றாள் மதி.
'என்னை தான் கேக்குறான்னு எப்படி சொல்றது?' என்று தெரியாமல் முழித்த ஷ்ரவன்.
"மதி. முதல்ல நான் சொல்றதை புரிஞ்சிக்கோ. என்னைக்கும் நீ மட்டும் தான் என் உயிர்." என்றான் மெல்ல.
"ஷ்ரவன் இதை நீ சொல்லனும்னு அவசியமில்லை." என்றாள் மதி.
"மதிம்மா. நான் இப்போ எப்பவுமே உனக்கு மட்டும் சொந்தம் அதை யாராலும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மாத்த முடியாது." என்றான் ஷ்ரவன்.
"அவ என்ன சொன்னா?" என்றாள் நேரடியாக.
"ஹூம் அவ உன்னை விடனும்னா... என்னை ... அவ கல்யாணம் பன்னிக்கணும்னு சொல்றா" என்றான் நிதானமாக ஷ்ரவன்.
"என்ன?" என்றாள் மதி அதிர்ச்சியாக.
"ஆமா" என்றான் மெதுவாக.
"இல்ல... அதுமாதிரி எதுவும் நடக்க கூடாது ஷ்ரவன். அப்புறம் நான் உயிரோட இருக்கிறது நடக்காது." என்றாள் ஷன்மதி திட்டவட்டமாக.
"இல்ல மதி நீ எனக்கு நல்லபடியா இருக்கணும் அதுக்கு நான் இதை செய்யனும்" என்றான் ஷ்ரவன் வேகமாக.
மதியின் குரல் கேட்காததால் கலவரம் அடைந்த ஷ்ரவன் "மதி... மதி... ஏன் பேசமாட்ற பிளீஸ் பேசுடா" என்றான் கலக்கமாய்.
அதன்பிறகு மதியின் குரல் கேட்கவில்லை.
என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்க, விழிகள் மூடி அவனின் உயிரை இரண்டு முறை காத்த ஆபத்பாந்தவனை அழைக்க தயாரானான்.
"கருவா... என் நண்பா... எனக்கு உன்னோட உதவி தேவை. எங்க இருந்தாலும் என்கூட பேசு " என்றான் ஆர்வமாய்.
மறுநொடியே அவனின் குரல் கேட்டது.
"நண்பா! எப்படி இருக்க?" கருவா.
இதழில் ஒரு குறுநகை ஓட, "கருவா! " என்றான் ஷ்ரவன்.
"நானே தான் என் நண்பனுக்கு உதவி செய்றது தான் என் பிறப்பின் நோக்கம் தெரியுமே? இப்போ சொல்லு என்ன உதவி இல்ல என்ன செய்யணும்னு உத்தரவு போடு" என்றான் கருவன்.
"அதுவந்து ... மதியை அந்த ரஞ்சனி கடத்திட்டா" என்றான் மெதுவாய்....
"என்ன சொல்ற நண்பா? இது எப்படி நடந்தது" என்றான் அதிர்ச்சியாய்.
நடந்த அனைத்தையும் கேட்ட கருவன்.
"நண்பா நான் தங்கச்சிகிட்ட பேசணும்." என்றான் கருவன்.
"கருவா! நான் அவ்கிட்ட முழுசா சொல்றதுக்குள்ள பேசாமறுத்துட்டா" என்றான் வேதனையாய்."
"சரி நண்பா. அவங்க இடத்துல இருந்தாலும் நான் இருந்தாலும் அப்படி தான் இருப்பேன். நான் முதல்ல பேசுறேன்." என்றான் கருவன்.
"சரிடா. பேசிட்டு. என்கிட்ட உடனே பேசு. உன்கிட்ட முக்கியமா நான் கொஞ்சம் பேசணும்" என்றான் ஷ்ரவன்.
"சரி நண்பா" என்றான் கருவன்.
******************
மறுநாள் காலை ஷ்ரவன் ஏர்போர்டில் நின்றிருக்க, அவனை பார்த்து சிரித்தபடி வந்து கொண்டிருந்தாள் ரஞ்சனி.
முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் அவளை பார்த்து கொண்டிருந்தான் ஷ்ரவன்.
"பரவால்லையே மாமா. வந்துட்டீங்க" என்றாள் ரஞ்சனி.
"என் உயிர் உங்கிட்டல்ல இருக்கு " என்றான் ஒற்றை வரியில்.
"சரி புரிஞ்சி வச்சிருக்கீங்க. போலாமா? பிளைட் அனனவ்ன்ஸ் பண்ணிட்டாங்க." என்றாள் ரஞ்சனி.
"ம்ம்" என்று அவள் பின்னே செல்ல மனமில்லாமல் சென்றான்.
விமானம் ஏறாமல் நிற்கும் ஷ்ரவனை கேள்வியாய் நோக்கினாள் ரஞ்சனி.
"என்ன?" என்றாள்.
"நான் இங்க இருந்து உன்கூட வரணும்னா என் மதியோட குரலை கேட்கணும்" என்றான் முடிவாய்.
எழும் சீற்றத்தை கட்டுபடுத்தி "இப்போ என்ன அவகிட்ட பேசணும் அவ்ளோ தான? சரி பேசு. ஆனா இதுதான் கடைசியா இருக்கணும்" என்றாள் முறைத்து.
"சரி" என்றான் ஷ்ரவன் மதியின் குரலை கேட்க ஏங்கியவனாய்.
"ஹெலோ! அவளை பேச வைங்க " என்றாள் ரஞ்சனி காட்டமாய்.
"இந்தா " என்று ஷ்ரவனிடம் போனை தர ஆவலாய் அவளின் குரல் தேடி மனம் ஓடியது.
"ஹலோ!" என்றான்.
"ஹலோ" அவளின் குரல் கீச்சு குரலாய்.
"ஹலோ மதிம்மா" என்றான் தன் பிறவியின் பயன் அடைந்ததாய். மகிழ்ச்சிக்கொண்டு.
"ஷ்ரவன்" அவளின் குரல் ஆனந்தத்தின் பெருக்கில் கண்ணீரோடு கேட்டது.
"மதிம்மா" என்றான் அவனின் விழிகளும் கண்ணீரை சுரக்க, அவனிடமிருந்து போனை வெடுக்கென்று பிடுங்கினாள் ரஞ்சனி.
"போதும். குரலை கேட்டாச்சு இல்ல. இப்போ போலாம். இல்ல அப்புறம் நடக்கிற எடுக்கும் நான் பொறுப்பில்ல" என்றாள்.
எதுவும் பேசாமல் அவளின் சென்றான் தன்னவளின் நெஞ்சினில் சுமந்தபடி.
'வரேன் வரேன்... மதிக்குட்டி. சீக்கிரமா உனக்காக' மனதினில் நினைத்தபடி.
அறையின் கதவு முடியிருக்க, சன்னலின் வழியே சில்லென்று காற்று ஷிரவின் முகத்தை வருடுவது போல் இருந்தது தன்னவளின் குரலை தன்னக்குள் கேட்டபின்.
"ஷ்ரவன்!" என்று தேனாய் அவளின் குரல் இனிமையாய் மீண்டும் ஒலிக்க.
"மதிம்மா! எப்டி டா இருக்க? நீ எங்க இருக்க? ஏன் என்கிட்ட பேசலை? நீ நல்லா இருக்கல்ல? அவ உன்னை அடிச்சாளா?" என்று தொடர்ந்து பதட்டமாய் விழிகள் மூடி மனதினுல் கேள்விகளை அடுக்க.
"நில்லு! ஷிரவ்! நான் நல்லா இருக்கேன். இல்ல அவ என்னை எதுவும் செயலை. ஹூம் அவ இங்க இல்ல. என் கையை மட்டும் கட்டி வச்சுருக்காங்க. ரெண்டு தடி பசங்க இருக்கா மாதிரி தெரியுது." என்றாள் மதி மெதுவாய்.
"மதி உன்னை எங்க வச்சிருக்காங்க ஏதாவது சொல்லமுடியுமா?" என்றான் ஏதோ ஒரு நப்பாசையில்.
"இல்ல ஷிரவ் இந்த ரூம் ரொம்ப இருட்டா இருக்கு. முதல்ல நீ என்கிட்ட பேசும்போது அவ வந்திருந்தா. அதான் என்னால கான்சென்ட்ரேட் பண்ண முடியலை. " என்றாள் மதி.
"நீ ஏதாவது சாப்பிட்டியா? " என்றான் கவலையாய்.
"ஹேய் ஷ்ரவன். நான் இங்க என்ன பிக்னிக்கா வதுருக்கேன். என்னை கடத்திட்டு வந்துருக்காங்க. என்னால சாப்பிட முடியலை. இங்க இருந்து எப்போ வெளிய வருவோம். உன்னை பார்ப்போம்னு உயிரை கைல புடிச்சிட்டு வச்சிருக்கேன்." என்றாள் மதி.
அவளின் வார்த்தைகளில் உயிர் ஒரு நிமிடம் தெறித்து ஓட, தொண்டைக்குழியில் வார்த்தைகள் வர மறுக்க.
மெல்ல, "மதிம்மா! எனக்கு உன்னை பார்க்கணும். ரஞ்சனி உன்கிட்ட என்ன சொன்னா?" என்றான் வார்தைகளை மென்று விழுங்கி.
"அவ உன் புருஷன்கிட்ட ஒரு விசயம் கேட்ருக்கேன். அதை செய்த உடனே உன்னை விடுட்றேன். அதுவரிக்கும் தப்பிக்க எதுவும் பண்ணாதன்னு சொன்னா?" என்றாள் மதி.
"ஹூம் " என்றான் ஷ்ரவன்.
"அவ உன்கிட்ட என்ன கேட்டா?" என்றாள் மதி.
'என்னை தான் கேக்குறான்னு எப்படி சொல்றது?' என்று தெரியாமல் முழித்த ஷ்ரவன்.
"மதி. முதல்ல நான் சொல்றதை புரிஞ்சிக்கோ. என்னைக்கும் நீ மட்டும் தான் என் உயிர்." என்றான் மெல்ல.
"ஷ்ரவன் இதை நீ சொல்லனும்னு அவசியமில்லை." என்றாள் மதி.
"மதிம்மா. நான் இப்போ எப்பவுமே உனக்கு மட்டும் சொந்தம் அதை யாராலும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மாத்த முடியாது." என்றான் ஷ்ரவன்.
"அவ என்ன சொன்னா?" என்றாள் நேரடியாக.
"ஹூம் அவ உன்னை விடனும்னா... என்னை ... அவ கல்யாணம் பன்னிக்கணும்னு சொல்றா" என்றான் நிதானமாக ஷ்ரவன்.
"என்ன?" என்றாள் மதி அதிர்ச்சியாக.
"ஆமா" என்றான் மெதுவாக.
"இல்ல... அதுமாதிரி எதுவும் நடக்க கூடாது ஷ்ரவன். அப்புறம் நான் உயிரோட இருக்கிறது நடக்காது." என்றாள் ஷன்மதி திட்டவட்டமாக.
"இல்ல மதி நீ எனக்கு நல்லபடியா இருக்கணும் அதுக்கு நான் இதை செய்யனும்" என்றான் ஷ்ரவன் வேகமாக.
மதியின் குரல் கேட்காததால் கலவரம் அடைந்த ஷ்ரவன் "மதி... மதி... ஏன் பேசமாட்ற பிளீஸ் பேசுடா" என்றான் கலக்கமாய்.
அதன்பிறகு மதியின் குரல் கேட்கவில்லை.
என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்க, விழிகள் மூடி அவனின் உயிரை இரண்டு முறை காத்த ஆபத்பாந்தவனை அழைக்க தயாரானான்.
"கருவா... என் நண்பா... எனக்கு உன்னோட உதவி தேவை. எங்க இருந்தாலும் என்கூட பேசு " என்றான் ஆர்வமாய்.
மறுநொடியே அவனின் குரல் கேட்டது.
"நண்பா! எப்படி இருக்க?" கருவா.
இதழில் ஒரு குறுநகை ஓட, "கருவா! " என்றான் ஷ்ரவன்.
"நானே தான் என் நண்பனுக்கு உதவி செய்றது தான் என் பிறப்பின் நோக்கம் தெரியுமே? இப்போ சொல்லு என்ன உதவி இல்ல என்ன செய்யணும்னு உத்தரவு போடு" என்றான் கருவன்.
"அதுவந்து ... மதியை அந்த ரஞ்சனி கடத்திட்டா" என்றான் மெதுவாய்....
"என்ன சொல்ற நண்பா? இது எப்படி நடந்தது" என்றான் அதிர்ச்சியாய்.
நடந்த அனைத்தையும் கேட்ட கருவன்.
"நண்பா நான் தங்கச்சிகிட்ட பேசணும்." என்றான் கருவன்.
"கருவா! நான் அவ்கிட்ட முழுசா சொல்றதுக்குள்ள பேசாமறுத்துட்டா" என்றான் வேதனையாய்."
"சரி நண்பா. அவங்க இடத்துல இருந்தாலும் நான் இருந்தாலும் அப்படி தான் இருப்பேன். நான் முதல்ல பேசுறேன்." என்றான் கருவன்.
"சரிடா. பேசிட்டு. என்கிட்ட உடனே பேசு. உன்கிட்ட முக்கியமா நான் கொஞ்சம் பேசணும்" என்றான் ஷ்ரவன்.
"சரி நண்பா" என்றான் கருவன்.
******************
மறுநாள் காலை ஷ்ரவன் ஏர்போர்டில் நின்றிருக்க, அவனை பார்த்து சிரித்தபடி வந்து கொண்டிருந்தாள் ரஞ்சனி.
முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் அவளை பார்த்து கொண்டிருந்தான் ஷ்ரவன்.
"பரவால்லையே மாமா. வந்துட்டீங்க" என்றாள் ரஞ்சனி.
"என் உயிர் உங்கிட்டல்ல இருக்கு " என்றான் ஒற்றை வரியில்.
"சரி புரிஞ்சி வச்சிருக்கீங்க. போலாமா? பிளைட் அனனவ்ன்ஸ் பண்ணிட்டாங்க." என்றாள் ரஞ்சனி.
"ம்ம்" என்று அவள் பின்னே செல்ல மனமில்லாமல் சென்றான்.
விமானம் ஏறாமல் நிற்கும் ஷ்ரவனை கேள்வியாய் நோக்கினாள் ரஞ்சனி.
"என்ன?" என்றாள்.
"நான் இங்க இருந்து உன்கூட வரணும்னா என் மதியோட குரலை கேட்கணும்" என்றான் முடிவாய்.
எழும் சீற்றத்தை கட்டுபடுத்தி "இப்போ என்ன அவகிட்ட பேசணும் அவ்ளோ தான? சரி பேசு. ஆனா இதுதான் கடைசியா இருக்கணும்" என்றாள் முறைத்து.
"சரி" என்றான் ஷ்ரவன் மதியின் குரலை கேட்க ஏங்கியவனாய்.
"ஹெலோ! அவளை பேச வைங்க " என்றாள் ரஞ்சனி காட்டமாய்.
"இந்தா " என்று ஷ்ரவனிடம் போனை தர ஆவலாய் அவளின் குரல் தேடி மனம் ஓடியது.
"ஹலோ!" என்றான்.
"ஹலோ" அவளின் குரல் கீச்சு குரலாய்.
"ஹலோ மதிம்மா" என்றான் தன் பிறவியின் பயன் அடைந்ததாய். மகிழ்ச்சிக்கொண்டு.
"ஷ்ரவன்" அவளின் குரல் ஆனந்தத்தின் பெருக்கில் கண்ணீரோடு கேட்டது.
"மதிம்மா" என்றான் அவனின் விழிகளும் கண்ணீரை சுரக்க, அவனிடமிருந்து போனை வெடுக்கென்று பிடுங்கினாள் ரஞ்சனி.
"போதும். குரலை கேட்டாச்சு இல்ல. இப்போ போலாம். இல்ல அப்புறம் நடக்கிற எடுக்கும் நான் பொறுப்பில்ல" என்றாள்.
எதுவும் பேசாமல் அவளின் சென்றான் தன்னவளின் நெஞ்சினில் சுமந்தபடி.
'வரேன் வரேன்... மதிக்குட்டி. சீக்கிரமா உனக்காக' மனதினில் நினைத்தபடி.