Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update கர்வம் அழிந்ததடி - (நிழல் நிலவு - பாகம் 2)

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
662
Reaction score
812
Points
93
அத்தியாயம் - 14

'பீச் சைடு ரெஸ்டாரண்ட்' வேண்டும் என்று தான் அபிமன்யு சொல்லி இருந்தான். ஆனால் நஸீம் தேர்ந்தெடுத்துக் கொடுத்த பாதுகாப்பான உணவாக பட்டியலில் அபிமன்யுவின் கவனத்தை ஈர்த்தது அந்த மிதக்கும் உணவகம். பழைய கப்பலை ரீமடல் செய்து உணவகமாக மாற்றி இந்திய பெருங்கடலில் மிதக்க விட்டிருந்தார்கள்.

பரந்து விரிந்த சமுத்திரத்தின் அழகை ரசித்தபடி விருப்பமான உணவை சுவைக்கும் வண்ணம், கப்பலின் மேல் தளத்தில் அமைந்திருந்தது அந்த ஹால். கூட்டம் அதிகம் இல்லை. கார்னர் டேபிள் என்பதால் மற்றவர்களின் இடையூறும் இருக்காது. நரேன் ஒருபக்கம் அமர்ந்திருக்க மறுபக்கம் ரகோத்தமன் மிருதுளாவோடு அமர்ந்திருந்தார்.

ஆம், மிருதுளாவே தான். முதல்நாள் அவனை பார்த்த அதிர்ச்சியில் அவள் கலங்கி போனது என்னவோ உண்மைதான். நஸீம் வந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வரை அவளால் தன்னை நிலைப்படுத்துக்கொள்ள முடியவில்லை தான். ஆனால் அதன் பிறகு மீண்டுவிட்டாள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் கண் எதிரில் பார்த்த பெற்றோரின் மரணத்தையே கடந்து வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இன்று இவனை பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாதா என்ன! அவளுக்கு தேவை நேரம் மட்டும் தான். நேரம் செல்ல செல்ல மனதை திடப்படுத்திக் கொண்டாள்.

'உனக்கு உடம்பு சரியில்லை மிருதுளா. நாளைய மீட்டிங்கை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்க சொல்லி நான் நரேனிடம் பேசிவிடுகிறேன்' என்று ரகோத்தமன் கூறினார்.

ஆனால் மிருதுளா, "வேண்டாம்" என்றாள். அந்த சந்திப்பு நடந்தே ஆக வேண்டும். அவனுக்கு பயந்து ஓடி ஒளிய கூடாது என்று திடமாக நின்றாள். அதன் விளைவாகத்தான் இன்று… இப்போது… நரேனுக்கு எதிரில் அவள் அமர்ந்திருக்கிறாள்.

மிருதுளா எதிர்பார்க்காத தருணத்தில் தன்னை பார்த்துவிட்டாள் என்பதற்காக அபிமன்யுவின் பிளானில் எந்த மாற்றமும் இல்லை. அவன் அன்று காலையே வந்து அந்த கப்பலின் இரண்டாம் தளத்தில் அறை புக் செய்து தங்கிவிட்டான். தாடி தலைமுடி எல்லாம் ட்ரிம் செய்து, நல்ல உடை அணிந்து, மீண்டும் மீண்டும் தன்னை கண்ணாடியில் நூறு முறை பார்த்து சரி செய்து கொண்டு மேல்தளத்திற்கு சென்றான். தூரத்தில் இருந்தே பார்க்க முடிந்தது. வெண்ணிற உடையில், உயர்த்தி போடப்பட்ட போனிடெயிலில் கூந்தலை அடக்கி அழகு தேவதையாக அமர்ந்திருந்தாள் மிருதுளா.

மேல்தளத்திற்கு வரும் வரை... அவளை பார்க்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இப்போது பதட்டம் அவனை ஆட்கொண்டது. அவளிடம் செல்ல கால்கள் ஒத்துழைக்க மறுத்தன. ஒருமுறை மூச்சை ஆழமாக இழுத்துவிட்டு தன்னை சமன்படுத்திக் கொண்டு அவர்கள் அமர்ந்திருக்கும் டேபிளை நோக்கி சென்றான்.

அவனை பார்த்ததும், "ஹேய் அபி" என்று எழுந்து கைகொடுத்து அவனை வரவேற்ற நரேன், "ஹி இஸ் மை பிரதர் அபிமன்யு. இந்த ப்ராஜெக்ட்டை இவர் தான் ஹாண்டில் பண்ணிட்டு இருக்காரு" என்று அறிமுகப்படுத்தினான்.

"ஹலோ" என்று ராகோத்தமன் கைகொடுக்க, அவரை தொடர்ந்து மிருதுளாவும் கைநீட்டி, "ஹலோ” என்றாள்.

நெஞ்சு படபடக்க, அவள் நீட்டிய கையை பற்றி குலுக்கினான் அபிமன்யு. அவனை நேர் பார்வை பார்த்தவளிடம் எந்த சலனமும் இல்லை.

முதல் நாள் கேமிராவில் பார்த்த போது அவள் முகத்தில் தெரிந்த உணர்வுகளெல்லாம் தன்னுடைய கற்பனையோ என்று தோன்றும் அளவுக்கு அந்நிய பார்வை. அவன் அகம்பாவத்தை தலையில் தட்டி உசுப்பிவிட கூடிய பார்வை.

"ஹேய்... மிருதுளா... நலமா?" என்று மனதை மறைத்து முகத்தில் போலி புன்னகையை படரவிட்டான். அவனிடம் சிக்கியிருந்த தன் கையை விடுவிக்க முடியாமல் அவள் முகம் மாறியது. இப்போது அவன் மனதில் கொள்ளை திருப்தி - முகத்தில் மலர்ச்சி.

அவன் முகமாற்றம் அவளை இன்னும் இறுக செய்தது. "ஐ ஆம் கிரேட்..." என்றவள், "நீங்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்றாள் தொடர்ந்து. வாய்மொழி இனிமையாக தான் இருந்தது. ஆனால் விழிகள் கோபத்தில் ஜொலித்தன.

உணர்வற்று இருந்த அவள் முகத்தில் குறைந்தபட்சம் கோபம் என்னும் உணர்வை கொண்டு வந்து விட்ட திருப்தியில் தன்னிடம் சிக்கியிருந்த அவளுடைய கரத்திற்கு விடுதலை கொடுத்தான்.

அவன் பார்வை அவளிடமிருந்து விடுபட முடியாமல் அடிக்கடி திணறுவதை அங்கிருந்த மற்ற இருவரும் கவனித்தார் போல் தெரியவில்லை. அவர்கள் முழுக்க முழுக்க தொழில் சார்ந்த உரையாடல்களில் மூழ்கியிருந்தார்கள். மிருதுளாவுக்கும் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள அதிக நேரம் தேவைப்படவில்லை. இந்த சூழ்நிலையை எதிர்பார்த்துத்தானே அவள் அங்கு வந்திருந்தாள்! சமாளித்துக் கொண்டு பேச்சு வார்த்தையில் கவனம் செலுத்தினாள்.

மூன்று யானைகளுக்கு நடுவே முயல் குட்டி போல அமர்ந்து கொண்டு அவர்களை கவுண்டர் செய்து மிருதுளா பேசும் போதெல்லாம் அபிமனுவின் கண்கள் மிண்ணும். பயந்து ஒடுங்கி அழுது அவன் நிழலில் ஒண்டி கொண்டிருந்த அவனுடைய தேவதை இன்று தனித்து செயல்படுவதை காண பெருமகிழ்ச்சி அவனுக்குள்.

ஒருவழியாக பேச்சு வார்த்தை முடிந்து இரு தரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு உணவு ஆர்டர் செய்தார்கள்.

வெயிட்டர் மிருதுளாவின் விருப்பத்தை கேட்ட போது அவள் கண்ணில் பட்ட எதையோ ஆர்டர் செய்தாள். அவளுடைய விருப்பம் ரசனையெல்லாம் மடிந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இப்போது பிடித்த உணவை தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்வது, அதை ரசித்து உண்பதெல்லாம் அவளுக்கு சாத்தியமில்லாதது.

அபிமன்யுவின் உதடுகள் அழுந்த மூடின. "சார், ஆர் யு ரெடி ஃபார் யுவர் ஆர்டர்?" - வெயிட்டர் அவன் பக்கம் திரும்ப, பொரித்த பேபி ஷிரிம்ப் மற்றும் லாப்ஸ்டர் ஆர்டர் செய்தான் அவன்.

மிருதுளா, தான் ஆர்டர் செய்த உணவை உன்ன முடியாமல் திணறி கொண்டிருந்த போது, அபிமன்யு ஆர்டர் செய்த பொரித்த இறால் வந்து சேர்ந்தது. அதை அவள் பக்கம் தள்ளி, "ட்ரை திஸ்"என்றான்.

அவள் மறந்தால் என்ன! அவன் தான் அவளுடைய விருப்பங்கள் அனைத்தையும் மூளையில் பச்சைக்குத்தி வைத்திருக்கிறானே!

பழைய நியாபகத்தில் மிருதுளாவின் நெஞ்சுக்குள் ஆழமாய் ஏதோ பாய்ந்தது. முகம் இறுக, "ஐ ஆம் சாரி... நான் இறால் சாப்பிடறது இல்ல" என்று கூறி மறுத்துவிட்டு, பிடிக்கவில்லை என்றாலும் தான் ஆடர் செய்த உணவையே முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து உண்டாள்.

அடுத்து பெவரேஜ் அட்டண்டர் வந்து அவர்களுடைய கிளாஸை ஃபில் செய்த போது மிருதுளா தனக்கு ரெட் ஒயின் வாங்கி கொண்டாள். அபிமன்யுவின் முகம் இறுகியது. அவள் அழகிய இதழ்கள் குவிந்து அச்செந்நிற செந்நிற திரவத்தை தொண்டையில் இறக்கிய போது அவன் அடிவயிற்றுக்குள் என்னவோ செய்தது.

மிருதுளா இரண்டாம் முறை தன் கோப்பையை மீண்டும் நிரப்ப சொன்னாள். அவள் சொன்னதை செய்து முடித்த அட்டெண்டருக்கு "தேங்க் யு" சொல்லி, அழகிய புன்னகையை பரிசளித்தாள். அழுந்த மூடிய உதடுகளோடு அவளை கவனித்துக் கொண்டிருந்தான் அபிமன்யு.

அவள் இறுக்கம் தளர்ந்து நரேனிடம் கூட இயல்பாக பேச துவங்கினாள். ஐந்து நிமிடம் கூட கடந்திருக்காது. மீண்டும் அட்டண்டரை அழைத்து மூன்றாம் முறை தன்னுடைய கோப்பையை நிரப்ப சொன்னாள். அடுத்து ஒரு நொடி கூட யோசிக்கவில்லை அபிமன்யு. ஒரு சின்ன புஷ்... அவ்வளவு தான். டேபிள் மெலிதாக அசைந்தது. அவள் கையிலிருந்த கோப்பை நழுவி... அவளுடைய வெண்ணிற ஆடையை செந்நிறமாக மாற்றியது.

"ஓ! ஐ'ம் சாரி மேம்" - தன் மீது தான் தவறோ என்று எண்ணி அட்டெண்டர் மன்னிப்பு கேட்டான். மிருதுளா கூட தான் தான் கோப்பையை சரியாக பிடிக்கவில்லையோ என்று நினைத்தாள். மற்ற இருவருக்கும் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு கண்கட்டி வித்தை போல் அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் ஒரு குயிக் ஆக்ஷன் செய்து நினைத்ததை முடித்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் அமர்ந்திருந்தான் அபிமன்யு.

அவள் அப்பாவியாக, "எக்ஸ்கியூஸ் மீ" என்று எழுந்து வாஷ்ரூம் பக்கம் சென்றாள். ஏற்படுத்திக் கொண்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் அவனும் ஐந்து நிமிட இடைவெளியில் எழுந்து அவளை தேடி சென்றான்.

அது இரு பாலினத்தவரும் பயன்படுத்தும் வாஷ்ரூம். அவனுக்கு உள்ளே செல்ல எந்த தடையும் இல்லை. இல்லை என்றாலும் அவன் தயங்கி இருப்பானா என்பது சந்தேகம் தான்.

அருகில் நிழலாடுவதை கண்டு திரும்பிய மிருதுளா அங்கே அபிமன்யுவை பார்த்ததும் திடுக்கிட்டாள். அவள் சுதாரிக்கும் முன் அவளை இழுத்து சுவற்றோடு சாத்தி நிறுத்தினான். இருபுறமும் நீண்டு சுவற்றை தாங்கியிருந்த அவன் கரங்கள் அரணாக மாறி அவளை சிறை செய்திருந்தன.

"வாட் த ஹெல் ஆர் யு டூயிங்?" - சீறினாள்.

அவள் பார்வை நிதானமாக அவள் நெற்றியை... விழிகளை... இமைகளை... இதழ்களை... மெல்ல மெல்ல பருகின. கட்டுக்கடங்காத ஆத்திரத்தில் உடல் நடுங்க, "ஹௌ டேர் யு...!" என்று அவன் நெஞ்சில் கை வைத்து அவனை விளக்கித்தள்ள கடுமையாக முயன்றாள் அவள்.

மயிலிறகின் வருடல் போல் அவள் ஸ்பரிசத்தை கண்மூடி முழுமையாக உள்வாங்க முயன்றான். அவன் இதயம் வலியையும் சுகத்தையும் ஒருசேர உணர்ந்தது.

நெருப்பு பிழம்பில் நிற்பது போல் தவித்தவள், "லீவ் மீ யூ டாஷ் டாஷ்" என்று ஆபாச வார்த்தைகளை அனாயசமாக அள்ளி வீசினாள்.

இனிய கனவு கலைந்தது போல் சட்டென்று கண் திறந்தான் அவன். ஒரு நொடிதான் அந்த அதிர்ச்சி... மறுநொடி கண்ணோரம் சுருங்கியது. அவன் உள்ளுக்குள் நகைப்பதை உணர்ந்து கொதித்தாள் அவள்.

"லீவ் மீ யு ப்ளடி சிக் டாஷ்" என்றாள் மறுபடியும்.

அவள் பேசவில்லை. அவளுக்குள் இறங்கி இருக்கும் திரவத்தின் தாக்கம் என்று புரிந்துகொண்டு, "எவ்வளவு நாளா இந்த பழக்கம்?" என்றான். கேட்கும் போதே அவளும் நம்மை போலவே இப்படி கெட்ட பழக்கங்களுக்கு தன்னை அடிமையாக்கிக் கொண்டுவிட்டாளோ என்கிற எண்ணம் தோன்ற, இதயத்தை இறுக்கி பிடிப்பது போல் வலித்தது.

ஒரே நொடியில் அவன் கண்களில் இருந்த சிரிப்பு வலியாக மாறியதை கண்டு திகைத்தாள் மிருதுளா. இம்மி அளவும் உணர்வுகளை வெளிக்காட்டாமல் கற்சிலை போல் இருந்த அர்ஜுனா இவன்! - அவள் கோபத்தையும் பிடிவாதத்தையும் மீறி உள்ளே ஒரு ஓரத்தில் வலித்தது. உதட்டை கடித்துக் கொண்டு பார்வையை திருப்பிக் கொண்டாள்.

"ஒயின் மட்டும் தானா... இல்ல வேற வேதாவது பழக்கம் கூட இருக்கா?" - அவன் மீண்டும் கேட்க, அவனுடைய முந்தைய கேள்வியையே இப்போதுதான் அவள் ப்ராசஸ் செய்ய துவங்கினாள்.

'என்ன... என்ன கேட்டான்!' - மூளை மரத்துவிட்டது போல் எதுவும் யோசிக்க முடியவில்லை. அவன் இவ்வளவு நெருக்கத்தில் அவளோடு ஒட்டிக் கொண்டு நிற்கும் போது என்ன யோசிக்க முடியும் அவளால்!

"மிருது..." - மெல்ல அழைத்தான். குரல் குழைந்தது.

அந்த குரல் மிருதுளாவின் உயிரை தீண்டி அவளை நிலைகுலைய செய்ய, திறந்த வாய் மூட தோன்றாமல் அவள் அசைவற்று நின்றுவிட்டாள்.

"ரிட்டன் எப்படி போவ? ரெண்டு பேரும் ட்ரிங்க் பண்ணியிருக்கீங்களே! யார் ட்ரைவ் பண்ணுவா?" - அக்கறையாகத்தான் கேட்டான். ஆனால் அவனுடைய அக்கறையை ஏற்றுக்கொள்ள முடியுமா அவளால்! கொதித்துப் போய், "விடு... என்னை விடு" என்று பலம் கொண்ட மட்டும் அவனை தன்னிடமிருந்து விளக்கி தள்ளிவிட போராடினாள்.

கடோற்கஜன் போல உருன்டுதிரண்ட புஜங்களுடன் தன்னை சிறை செய்து வைத்திருப்பவனை ஒரு இம்மி கூட அசைக்க முடியவில்லை அவளால். ஆனால் ஆத்திரம் தீர தாக்க முடிந்தது.

அவள் மனநிலை புரிந்து அவனும் அவளுடைய கோபத்தை ஏற்றுக் கொண்டான். பிறகு அவள் சோர்ந்த போது கைகளை பிடித்து தடுத்தான். அவள் உதடு துடிக்க மேல்மூச்சு வாங்க அவனை வெறித்துப் பார்த்தாள்.

"ஐ'ம் சாரி… ஐ'ம் சாரி ஹனி " - கனத்த அவன் குரல் கரகரத்தது.

அவன் சொல்லும் எதையும் கேட்க கூட அவளுக்கு பிரியம் இல்லை. அவனிடம் சிக்கியிருக்கும் கைகளை பிடுங்கி, காதை மூடிக்கொள்ள வேண்டும் போல் தோன்றியது. ஆனால் அது முடியவில்லை. தோள்பட்டையை குறுக்கி... கண்களை இறுக மூடி அவன் சொல்லும் எதையும் கேட்காமல் தவிர்க்க முயன்றாள். அந்தோ பரிதாபம் கண்களை மூடிக் கொண்டால் காது கேட்காமல் போய்விடுமா என்ன! அவன் சொன்ன வார்த்தைகள் அட்சரசுத்தமாக அவள் செவியில் ஏறியது.

‘எத்தனை சுலபமாக சாரி சொல்கிறான்! ஹனியாமே! எவ்வளவு நெஞ்சழுத்தம்!' - தாங்க முடியாமல், "லீவ் மீ… யு… கிரேஸி அனிமல்... லீவ் மீ" என்று கத்தினாள்.

மூடி இருக்கும் கதவை தாண்டி நிச்சயமாக அவளுடைய குரல் வெளியே கேட்கும். வேலையாட்களோ அல்லது விருந்தினர்களோ கூட உள்ளே என்ன நடக்கிறது என்று செக் செய்ய வரலாம். அதைப் பற்றி கவலைப்படும் நிலையில் அவனும் இல்லை... எதையுமே யோசிக்கும் நிலையில் அவளும் இல்லை. ஓங்கி ஒலித்த அவள் குரலுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் போனது. அதில் இரிட்டேட் ஆனவனின் பிடி இறுகியது.

அவள் அவனை வெறித்துப் பார்த்தாள். அவன் கண்களில் கடுமை... முகத்தில் பிடிவாதம். உள்ளும் புறமும் வலித்தது அவளுக்கு. இன்னும் கொஞ்சம் அழுத்தி பிடித்தால் எலும்பு கூட உடைந்துவிட கூடும் என்று தோன்றியது. ஆனாலும் அவனிடம் பலவீனத்தைக் காட்டக்கூடாது, ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்திவிட கூடாது என்கிற பிடிவாதத்துடன் பல்லை கடித்துக் கொண்டு நின்றாள். குரல் மட்டும் தேய்ந்து மெலிந்துவிட்டது.

"லீ...வ்...! மீ...!" - முயன்று வார்த்தைகளை வெளியே துப்பினாள்.

"ஐ ஹேவ் நோ இன்டென்ஷன் டு லீவ் யு பேபி" என்றான் அவன்.

பழைய அர்ஜுனை பார்க்க முடிந்தது அப்போது அவளுக்கு. அதே நக்கல்.... அதே திமிர். அவ்வளவு நேரமும் முயன்று மறைத்துக் கொண்டிருந்த வலி அவள் முகத்தில் வெளிப்பட்டது. கூடவே அவன் பிடியில் சிக்கியிருந்த அவள் கைகளும் நடுங்கியது. நொடியில் நிதானத்திற்கு வந்து பிடியை தளர்த்தினான் அபிமன்யு.

அவள் முகத்தில் தெரிந்த வேதனை முள்ளாக இதயத்தை தைக்க, அவசரமாக அவள் கைகளை ஆராய்ந்து, "வலிக்குதா? டைட்டா பிடிச்சுட்டேனா?" என்றான் உணராமல் செய்துவிட்ட செயலால் தன்னையே நொந்து கொண்டபடி.

அதற்குள், "இஸ் எவரித்திங் ஓகே?" என்று சினிமா போலீஸ் போல் எல்லாம் முடிந்த பிறகு உள்ளே வந்தான் அந்த கப்பல் ஊழியன் ஒருவன்.

அந்த ஒரு நொடி டிஸ்டராக்ஷன் போதுமானதாக இருந்தது மிருதுளாவுக்கு. சட்டென்று அவனிடமிருந்து விலகி அங்கிருந்து வெளியேறினாள்.​
 

Girija priya

Member
Messages
30
Reaction score
31
Points
18
Abhi miruthu va samathanapadithuradhu romba kashtam pola...miru avana verupetha redwine kudichala....abhi miruva innum konjam soft ah handle panni irukalam....ullukulla irrukura antha muradan apappo yetti parkuran....nice intresting ud sis ❤️
 

vanitha_ammu

New member
Messages
23
Reaction score
21
Points
3
Wow......semmaya kondu poringa mam......😍
Indha kaataan enna paninalum avan mela evlo kovam irundhalum avan sonna "I have no intention to leave u baby "la vilundhuteney.....nan lam enna design ohhhhh 😂
 
Messages
12
Reaction score
15
Points
3
Excellent Nithiya, 🥰இருவருடைய மீற்றிங்கும் அந்த மாதிரி, நான் ரொம்ப engoy பண்ணி read பண்ணினான், அதோடு
அபி உரிமையாக மிருதுவை அணைபோட்டு கதைத்தது அருமை. அபியின் Sorry ஐ மிருது ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தது, மிருதுவின் கோபத்தை உணரமுடிந்தது, அதோடு எனக்கும் அபிமீது கோபம்தான் வந்தது, எல்வளவு கஸ்ரம் கொடுத்துவிட்டு,easy ஆக Sorry கேட்கிறான் என்று,ஆனால் அபியின் குணதியங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰 கதையை அருமையாககொண்டு போறிங்கள் நித்யா👍🥰❤️Thanks
 

Sindhudhee

New member
Messages
3
Reaction score
1
Points
3
Wow,romba days ah wait pani ipa than padikren part 2. Thanks Nithya mam for the continuous updates. Super ah poguthu. Loved their meet in the last episode. Waiting to read arjun's love chapters and next moves.
 

New Threads

Top Bottom