- Messages
- 709
- Reaction score
- 1,111
- Points
- 93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுத்தாளர்: ஷிவானி செல்வம்
எழுத்தாளர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 4
“என்ன சோஷியல் ட்ரிங்கரா? ஏன் சைன்ஸ் ட்ரிங்கர்னு சொல்லேன். ஓசில சைடிஷ் திங்கறவனெல்லாம் குடிகாரன்னு சொல்லி எங்க இனத்த அசிங்கப்படுத்தாத உதி”
“அப்போ அவன் குடிக்கலையா நேத்து?”
விக்கி அவளின் ஆர்வத்தை அவதானித்துக்கொண்டே எரிச்சல்பட்டான்.
“காலைல எந்திரிச்சவுடனே வேலையப் பத்தி பேசனுமா? கொஞ்சம் குளிச்சி சாப்ட்டு ஆற அமர ஆஃபிஸ்ல போய் பேசக்கூடாதா? டேய் மட்டபந்து மண்டயா! யாரோடதுடா இந்த வேட்டி? உனக்கு போட்டுவிட வேற ட்ரெஸ்ஸே கெடைக்கலையா? ஆன்ட்டி உங்க நைட்டி ஏதாவது இருந்தா குடுங்க. இதுக்கு அதுவே பெட்டர்” எனவும், அவர் சிரித்துக்கொண்டே உத்ராவைப் பார்த்தார்.
தன் சிரிப்பை மறைத்தவளோ, “அவன் ட்ரெஸ் அந்த பால்கனில காயுது. அத எடுத்து மொத அவன் கையில குடுங்க” என்று சொல்லிவிட்டு அலுவலத்திற்கு கிளம்பத் துவங்கினாள்.
காரில் செல்லும் போது, “இவ்ளோ நாள் நீ நல்லா தான இருந்த விக்கி? இப்போ ஏன் திடீருன்னு குடிச்ச?” என்று கனிவாகக் கேட்டாள்.
அவன், “உன் ஸ்கூட்டி மெக்கானிக் ஷாப்ல தான கெடக்குது? இன்னைக்கு போய் வாங்கிரு.” என்றான் அவள் கேள்வியை தவிர்த்து சாலையிலேயே கவனமாக.
உத்ரா மெதுவாக, “அந்தப்பொண்ணு அனன்யா தான் இதுக்கு காரணமா?” என்றாள்.
அவன் அதற்கு விடை சொல்லவில்லை. உத்ராவும் சலித்துப்போய் மேற்கொண்டு பேசவில்லை.
ஆனால், தங்கள் சத்யம் டிடெக்டிவ் ஏஜென்சி வந்ததும், “சொல்லு நேத்து என்ன நடந்தது?” என்று விக்கியிடம் தீவிர விசாரணையில் இறங்கினாள்.
“நீ என்னை இப்படி குற்றவாளி மாதிரி பாக்கறது சுத்தமா சரியில்ல உதி. நேத்து நைட் நான் மகேஷுக்கு கம்பெனி குடுக்கத் தான் பாருக்கே போனேன். அவன் கம்பல் பண்ணினதால லைட்டா குடிக்கவும் செஞ்சேன். அப்பறம் என்னாச்சின்னு எனக்கே தெரியல. ஆங்! சொல்ல மறந்துட்டேன் பாரு. நேத்து ஈவ்னிங் நான் உதய்கிருஷ்ணாவ சுகுனா ஸ்டோர்ஸ் சிக்னல்கிட்ட வச்சுப் பாத்தேன். பைக்ல அவன் பின்னாடி உக்கார்ந்திருந்த பொண்ணு அவன ரொம்ப ஒட்டி ஒரசிட்டு இருந்தா.”
“நீ சொல்றது உண்மையா விக்கி? இல்ல அந்த அனன்யா மேல உனக்கிருக்க தனிப்பட்ட அக்கறைல இப்படி சொல்றியா?”
“ச்சீ! ச்சீ! என்னை என்ன இப்படி நினைச்சிட்ட உதி? அவ ஒரு ராட்சசி. அவ மேலப்போய் எனக்கு அக்கறைனு சொல்ற பாத்தியா? இப்படி பேசுறதுக்கு நீ என்ன உன் செருப்பக் கழட்டி அடிச்சிருக்கலாம். இந்த போன்ல இருக்கு உனக்கு தேவையான ஆதாரமெல்லாம்.” என்று புகைப்படம் ஒன்றை காண்பித்தான்.
அதைப் பார்த்தவளோ ஏமாற்றமாக உணர்ந்தாள்.
மேலும், “உதி, உனக்கு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா? உன் நண்பனை பற்றி சொல், உன்னைப் பற்றி சொல்கிறேனு. அவன் ஃப்ரெண்ட் பிரகாஷ் ஒரு போதைபொருள் ஆசாமி. அப்படியிருக்க நம்ம இவன மட்டும் எப்படி நம்ப முடியும் சொல்லு?” என்று வெடிகுண்டொன்றை பற்ற வைத்தான்.
உத்ராவின் மனமோ அவன் கூறியது எதையும் ஏற்க மறுத்தது.
“ஒருவேள இந்தப்பொண்ணு அவன் தங்கச்சி முறைல இருக்க யாராவதா இருந்தா?”
“ஆமா நீ ஏன் அந்த உதய்கிருஷ்ணா மேல இவ்ளோ ஆர்வம் காட்டுற?” திருப்பிக் கேட்டான் விக்கி.
அவள் சுதாரித்துக்கொண்டாள்.
“என்ன பேசுறோம்னு புரிஞ்சு தான் பேசுறியா விக்கி? இது ஒரு அசைன்மெண்ட். அவன் ஒரு சப்ஜெக்ட். அவ்ளோ தான். அவன் எடத்துல யார் இருந்தாலும் அவங்க கேரக்டர் பத்தி தெரிஞ்சிக்க நான் இப்படித்தான் கேட்டிருப்பேன். நீ உன் தப்ப மறைக்க என்ன பதம் பாக்காத!” என்று எச்சரித்தாள் மூச்சு வாங்க.
அவளின் பதற்றத்தை இனம் கண்டவனோ, “ஹே கூல்! கூல்! நீ கேட்டதுக்கும் நான் கேட்டதுக்கும் சரியாப் போச்சு. ஓகேவா?” என்று சமரசம் பேசினான்.
அதன் பின் தான் இயல்பானாள் உத்ரா. ஆனால், விக்கியால் அவ்வாறு இருக்க முடியவில்லை. அவளின் கண்கள் கணினியில் இல்லாமல் வேறொன்றை வெறிப்பதைக் கண்டு அவளை சீண்ட விரும்பினான்.
“அவன் இப்படி அடிக்கடி தன் மச்சானுக்காக பாருக்கு வர்றதெல்லாம் வழக்கம் தானாம் உதி. பார்ல வொர்க் பண்றவரு சொன்னாரு. நேத்து அவன் மச்சான் மேட்ரிமோனில பாத்ததா சொல்லி நாம போன் பண்ணத பத்தி சொல்றதயும் கேட்டேன்.” என்றதும்,
“அதுக்கு உதய்கிருஷ்ணா என்ன சொன்னான்?” என்று முகத்தை முன்னுக்கு நகர்த்தினாள்.
“அதுக்கு அவன் எதுவாயிருந்தாலும் உங்க இஷ்டம்னு சொல்லிட்டான். நீ சொன்னது கரெக்ட் தான். அவன் அவன் அக்காவோட தலையாட்டி பொம்மையா இருக்கான்.” என்றதும் உத்ராவின் முகம் வாடியதை அவன் கண்கள் குறித்துக்கொண்டன.
அதை கிரகித்தவள் தன் முகத்தை மாற்ற சிரமப்பட்டாள். பின், அவன் கவனத்தை திசை திருப்ப நேற்று அவன் மதுபானவிடுதியில் சுயநினைவின்றி கிடந்தது பற்றியும், தனது வீட்டிற்கு அவள் அழைத்து வந்தது பற்றியும் ஒன்றுவிடாமல் சொன்னாள். அதைக்கேட்டவனோ சகஜமாக தோள்களைக் குலுக்கினான்.
உத்ரா இவனுக்கு வெக்கம், சூடு, சுரணை என்று ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்று குமுறிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத நிகழ்வொன்று நடந்தது. தன் கறுஞ்சிவப்பு நிற கோடுகள் ஓடிய பொன்னிற ஆர்கன்ஸா துப்பட்டாவை சரி செய்தபடியே உள்ளே வந்து கொண்டிருந்தாள் அனன்யா.
உத்ரா, விக்கி இருவரின் முகத்திலும் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிய, உத்ரா தான் முதலில் சுதாரித்தவளாய், "வாங்க அனன்யா, உட்காருங்க" என்றாள்.
அவள் பவ்யமாக அமரவும், உத்ராவின் அருகில் முறுக்கிக்கொண்டே அமர்ந்தான் விக்கி. உத்ரா தான் மேசைக்கு கீழே அவனது கையைப் பிடித்து சமாதானம் செய்ய வேண்டியிருந்தது. அனன்யாவுக்கும் முள் மேல் உட்கார்ந்திருக்கும் நிலை தான்.
உத்ரா சுற்றிவளைக்காமல் கேட்டாள், “சொல்லுங்க? என்ன விசயமா நீங்க இங்க வந்திருக்கீங்க?” என்று.
முதலில் தயங்கியவள் பின்னர், “ஒன்னுமில்ல. எனக்குப் பாத்திருக்க மாப்பிளையப் பத்தி நீங்க என் பெரியப்பாக்கிட்ட நல்ல விதமா சொல்லனும். அதான்…” என்று இழுத்தாள்.
உத்ரா விக்கியைப் பார்க்க அவன் முகம் நிச்சலனமாக இருந்தது.
“ஏன் நீங்க அவர லவ் பண்றீங்களா?”
இதைக் கேட்கும்போது அவள்புறம் இதயத்துடிப்பு எகிறியது.
“இல்ல. பட் எனக்கு அவர பிடிச்சிருக்கு.” என்றதும், உத்ராவால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
“பிடிச்சிருக்குன்றதுக்காக ஒருத்தன் கெட்டவனா இருந்தாலும் அவன் கூட வாழலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா மிஸ் அனன்யா?”
அவள் நிதானமாக பதிலளித்தாள்.
“என்ன பொறுத்த வர இந்த ஒலகத்துல யாரும் நல்லவனும் கெடையாது; கெட்டவனும் கெடையாது. இப்போ நீங்க நல்லவன்னு சர்ட்டிஃபிகேட் குடுக்குறவன் நாளைக்கே கெட்டவனா மாறிட்டா என்ன பண்ணுவீங்க?”
“யெஸ், அதுக்கு காரணம் நீங்களா கூட இருக்கலாம்.” சீறினான் விக்கி.
உத்ரா, “விக்கி” என்று அதட்டியவள், “ஒரு விபத்துக்கும், தற்கொலைக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு மிஸ் அனன்யா. அதோட மிஸ்டர் உதய்கிருஷ்ணாவுக்கும், உங்களுக்கும் பத்து வயசு வித்தியாசமிருக்கு.” என்று நினைவு படுத்தினாள்.
அனன்யா அசரவில்லை.
“இந்த மாதிரி ஆட்கள் தான் பொண்டாட்டிய தன் கொழந்த மாதிரி பாத்துப்பாங்க.” என்றபோது அவளின் தொண்டை அடைத்தது.
ஒன்றரை வருடங்களுக்கு முன் இறந்துபோன அவளின் தாயின் ஞாபகம் வந்ததோ என்னவோ?
விக்கி மேசையை குத்தியவன் உடனே அங்கிருந்து எழுந்து சென்று விட்டான்.
அனன்யா அவளிடம் மெதுவாக, “உங்கள யாராவது ஃபோர்ஸ் பண்ணி இப்படியெல்லாம் பேசுறீங்களா மிஸ் அனன்யா?” என்றாள்.
கண்கள் குளமாக நிமிர்ந்து பார்த்தவள், “இல்லங்க. அப்படியெல்லாம் இல்ல. நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்.” என்றுவிட்டு உத்ராவின் பதிலை எதிர்பார்த்தாள்.
ஆனால், உத்ரா கறாராய் இருந்தாள்.
“சாரி மிஸ் அனன்யா. என்னால உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாது. என் தொழில் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. முக்கியமா லைஃப் சம்பந்தப்பட்டது. எனக்கு என் தொழிலுக்கு துரோகம் பண்ண முடியாது. சாரி, நாங்க குடுக்கப்போற ஸ்டேட்மெண்ட் உங்களுக்கு சாதகமாவும் வரலாம்; பாதகமாவும் வரலாம்” என்று உறுதியாய் பேசினாள்.
அவளின் உறுதியை குலைக்க முடியாது என்றுணர்ந்த அனன்யாவின் முகத்திலோ எந்தவொரு கவலையும் தென்படவில்லை. மாறாக அமைதியாயிருந்தது. உத்ரா அவளை சந்தேகமாய் பார்த்துக் கொண்டிருந்தபோதே விடைபெற்றாள்.
அவள் சென்றபின் அறை நிசப்தமாய் இருக்க, விக்கி தன் வீட்டிற்கு சென்றிருப்பான் என்று கணக்கு போட்ட உத்ராவும் தனது மற்ற வேலைகளை கவனித்தாள்.
அப்போது அவளது அலுவலக எண்ணிற்கு அழைப்பு ஒன்று வர, எடுத்துப் பேசினாள்.
“ஹலோ! நான் பிடூ போலீஸ் ஸ்டேசன் எஸ்.ஐ ஜீவானந்தம் பேசுறேம்மா. நாங்க நீங்க கொடுத்த இன்ஃபர்மேசன்ல அந்த போதைபொருள் சப்ளையர் பெட்டிக்கடை முருகேசன ஆதாரத்தோட அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கோம்மா. உங்க ஏஜென்சியோட இந்த உதவிக்கு ரொம்ப நன்றிம்மா.” என்றார்.
அதை ஏற்றுக் கொண்டவளும், “யூ ஆர் வெல்கம் சார்” என்றுவிட்டு, புன்னகையோடு அலைபேசியைப் பார்த்தாள்.
பின், இந்த நல்ல விஷயத்தை விக்கியிடம் சொல்லியே ஆக வேண்டும் என்ற உந்துதலில் அவனுக்கு அழைப்பு விடுத்தாள். ஆனால், ‘நாட் ரீச்சபிள்’ என்ற பதிவுக்குரலே பதிலாக வந்தது.
அன்றிரவும் உத்ரா தன் வீட்டிலிருந்து அவன் எண்ணிற்கு அழைப்பு விடுக்க, அவன் அழைப்பை ஏற்றானே தவிர பேசவில்லை.
“டேய் எங்கடா இருக்க? நீ இன்னைக்கும் வீட்டுக்குப் போகலையா? அதிசயமா உங்கம்மா கால் பண்ணி நீ எங்க இருக்கன்னு கேக்குறாங்க. நான் அவங்களுக்கு என்ன சொல்ல?” என்று கடுப்பில் காய்ந்தாள்.
“ஆமா எனக்கும் கால் பண்ணாங்க. நான் எடுக்கல.” என்றான் உளறலாக.
“அப்போ நீ இன்னைக்கும் குடிச்சிருக்கியா விக்கி?” உச்சஸ்தாயில் கத்தினாள் உத்ரா.
அவனோ அக்கேள்வியை புறந்தள்ளிவிட்டு மீண்டும் உளறினான்.
“அந்த உதய்கிருஷ்ணாகிட்ட சொல்லிடனும் உதி. எத்தன பொண்ண வேணா வச்சிக்கோ. ஆனா, என் அனியையும் நல்லா வச்சிக்கோன்னு.”
“பைத்தியக்காரா! பைத்தியக்காரா! அந்த அனன்யா ஒரு ராட்சசிடா” என்று காலையில் அவன் சொன்னதை அவனுக்கே நினைவூட்டினாள் மறவாமல்.
அவனோ அலட்டிக் கொள்ளாமல், “ச்சீ! ச்சீ! என்ன பேசுற நீ? ராட்சசியா? என் அனி ஒரு ரத்தினம். நான் தான் அவள மிஸ் பண்ணிட்டேன்.” என்றான்.
“இப்ப உன்ன எங்க பாக்க முடியும் விக்கி?”
“ஏன் கேக்கற?”
“ம்? உன்ன செருப்பால அடிக்கிறதுக்கு தான்டா. காலைல நான் அவ்ளோ சொல்லியும் நீ திருந்தறதா இல்லைல? அனி சனினு அவ மேல ஏன்டா இவ்ளோ பைத்தியமா இருக்க? அவளப் பாத்துக்க அவ பெரியப்பா இருக்காரு. நீ உன் வாழ்க்கைய மொதல்ல பாருடா” என்று ஆத்திரமாகக் கத்தினாள்.
“உனக்கென்ன நீ யாரையாவது லவ் பண்ணியிருந்தா தான? அட்லீஸ்ட் உங்கிட்ட யாராச்சும் ப்ரொபோஸாவது பண்ணிருக்காங்களா உதி? உனக்கு உன் குடும்பத்துல இருக்கவங்கள அடிமைப்படுத்தி வச்சிக்கனும். தியாகத்தலைவினு பட்டம் சுமக்கனும். அதுலயே உன் ஈகோ சாடிஸ்ஃபைடு ஆகிரும். பட், எனக்கு அப்படியில்ல. மனசுன்னு ஒன்னு இருக்கு. அதுல லவ் ஃபெயிலியர்னு ஒன்னு கெடந்து டார்ச்சர் பண்ணுது. யூ நோ வாட்? இவ்வளவு சுயநலத்தோட இருக்கற உன்னால யாரையுமே லவ் பண்ண முடியாது. ஏன் உன்னையுமே யாராலயும் லவ் பண்ண முடியாது. ஐ சேலெஞ்ச் இட்!” என்று அவளை வார்த்தைகளால் ஒரேடியாய் வெட்டி வீழ்த்தினான்.
உத்ரா சளைக்கவில்லை.
“உன்ன நீயே அழிச்சிக்க காரணமா இருக்கற இந்தக்காதல் ஒன்னும் எனக்கு தேவையில்லடா” என்று தானும் ஆங்காரமாய் கத்தி உடனே இணைப்பை துண்டித்தாள்.
பால்கனியில் நின்றிருந்தவளின் கால்கள் தானாக நடுங்க, மிக பதட்டமாக உணர்ந்தாள். விக்கி குடித்துவிட்டு தன்னிலை இழந்தே இவ்வாறு பேசியிருந்தாலும் உத்ராவால் அவன் பேசியதை தாங்க முடியவில்லை.
ஏனெனில் எதைச்சொல்லி மறுத்தாலும் அவள் மீது சுமத்தப்பட்ட மிகப்பெரிய பழியல்லவா அது. தங்களை தள்ளியிருந்து பார்ப்பவன் கேட்பதையே தாங்க முடியவில்லையே. நாளைக்கு இதே கேள்வியை தன் வீட்டிலிருப்பவர்கள் கேட்டால் எனும் கேள்வி தான் அவளை வாட்டிவதைத்துக் கொண்டிருந்தது. மெதுவாக படுக்கையறைக்கு வந்து உட்கார்ந்தாள்.
எப்போதும் போல் அவளின் அம்மாவும், அவருக்கு இடப்புறம் கவிலயாவும் என ஒரு மெத்தையில் படுத்துக் கிடந்தார்கள். பெரிய மெத்தை தான் அது. கடந்த நான்கு வருடங்களாக அவளின் அம்மாவின் அருகில்கூட படுக்கத் தோன்றியதில்லை உத்ராவுக்கு. இன்றென்னவோ விக்கியின் வார்த்தைகளால் உருக்குலைந்து போன அவளின் மனம் தனக்கொரு ஆறுதலை வேண்டியது. அதற்காய் தன் தாயிடம் சென்று சரணடைந்தாள். அவரின் வலப்பக்கம் சென்று அவரை அணைத்தபடி படுத்தாள். அவரின் கையும் அவளை ஆதுரமாக தழுவிக் கொண்டது.
கலைடாஸ்கோப் திரும்பும்...
“என்ன சோஷியல் ட்ரிங்கரா? ஏன் சைன்ஸ் ட்ரிங்கர்னு சொல்லேன். ஓசில சைடிஷ் திங்கறவனெல்லாம் குடிகாரன்னு சொல்லி எங்க இனத்த அசிங்கப்படுத்தாத உதி”
“அப்போ அவன் குடிக்கலையா நேத்து?”
விக்கி அவளின் ஆர்வத்தை அவதானித்துக்கொண்டே எரிச்சல்பட்டான்.
“காலைல எந்திரிச்சவுடனே வேலையப் பத்தி பேசனுமா? கொஞ்சம் குளிச்சி சாப்ட்டு ஆற அமர ஆஃபிஸ்ல போய் பேசக்கூடாதா? டேய் மட்டபந்து மண்டயா! யாரோடதுடா இந்த வேட்டி? உனக்கு போட்டுவிட வேற ட்ரெஸ்ஸே கெடைக்கலையா? ஆன்ட்டி உங்க நைட்டி ஏதாவது இருந்தா குடுங்க. இதுக்கு அதுவே பெட்டர்” எனவும், அவர் சிரித்துக்கொண்டே உத்ராவைப் பார்த்தார்.
தன் சிரிப்பை மறைத்தவளோ, “அவன் ட்ரெஸ் அந்த பால்கனில காயுது. அத எடுத்து மொத அவன் கையில குடுங்க” என்று சொல்லிவிட்டு அலுவலத்திற்கு கிளம்பத் துவங்கினாள்.
காரில் செல்லும் போது, “இவ்ளோ நாள் நீ நல்லா தான இருந்த விக்கி? இப்போ ஏன் திடீருன்னு குடிச்ச?” என்று கனிவாகக் கேட்டாள்.
அவன், “உன் ஸ்கூட்டி மெக்கானிக் ஷாப்ல தான கெடக்குது? இன்னைக்கு போய் வாங்கிரு.” என்றான் அவள் கேள்வியை தவிர்த்து சாலையிலேயே கவனமாக.
உத்ரா மெதுவாக, “அந்தப்பொண்ணு அனன்யா தான் இதுக்கு காரணமா?” என்றாள்.
அவன் அதற்கு விடை சொல்லவில்லை. உத்ராவும் சலித்துப்போய் மேற்கொண்டு பேசவில்லை.
ஆனால், தங்கள் சத்யம் டிடெக்டிவ் ஏஜென்சி வந்ததும், “சொல்லு நேத்து என்ன நடந்தது?” என்று விக்கியிடம் தீவிர விசாரணையில் இறங்கினாள்.
“நீ என்னை இப்படி குற்றவாளி மாதிரி பாக்கறது சுத்தமா சரியில்ல உதி. நேத்து நைட் நான் மகேஷுக்கு கம்பெனி குடுக்கத் தான் பாருக்கே போனேன். அவன் கம்பல் பண்ணினதால லைட்டா குடிக்கவும் செஞ்சேன். அப்பறம் என்னாச்சின்னு எனக்கே தெரியல. ஆங்! சொல்ல மறந்துட்டேன் பாரு. நேத்து ஈவ்னிங் நான் உதய்கிருஷ்ணாவ சுகுனா ஸ்டோர்ஸ் சிக்னல்கிட்ட வச்சுப் பாத்தேன். பைக்ல அவன் பின்னாடி உக்கார்ந்திருந்த பொண்ணு அவன ரொம்ப ஒட்டி ஒரசிட்டு இருந்தா.”
“நீ சொல்றது உண்மையா விக்கி? இல்ல அந்த அனன்யா மேல உனக்கிருக்க தனிப்பட்ட அக்கறைல இப்படி சொல்றியா?”
“ச்சீ! ச்சீ! என்னை என்ன இப்படி நினைச்சிட்ட உதி? அவ ஒரு ராட்சசி. அவ மேலப்போய் எனக்கு அக்கறைனு சொல்ற பாத்தியா? இப்படி பேசுறதுக்கு நீ என்ன உன் செருப்பக் கழட்டி அடிச்சிருக்கலாம். இந்த போன்ல இருக்கு உனக்கு தேவையான ஆதாரமெல்லாம்.” என்று புகைப்படம் ஒன்றை காண்பித்தான்.
அதைப் பார்த்தவளோ ஏமாற்றமாக உணர்ந்தாள்.
மேலும், “உதி, உனக்கு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா? உன் நண்பனை பற்றி சொல், உன்னைப் பற்றி சொல்கிறேனு. அவன் ஃப்ரெண்ட் பிரகாஷ் ஒரு போதைபொருள் ஆசாமி. அப்படியிருக்க நம்ம இவன மட்டும் எப்படி நம்ப முடியும் சொல்லு?” என்று வெடிகுண்டொன்றை பற்ற வைத்தான்.
உத்ராவின் மனமோ அவன் கூறியது எதையும் ஏற்க மறுத்தது.
“ஒருவேள இந்தப்பொண்ணு அவன் தங்கச்சி முறைல இருக்க யாராவதா இருந்தா?”
“ஆமா நீ ஏன் அந்த உதய்கிருஷ்ணா மேல இவ்ளோ ஆர்வம் காட்டுற?” திருப்பிக் கேட்டான் விக்கி.
அவள் சுதாரித்துக்கொண்டாள்.
“என்ன பேசுறோம்னு புரிஞ்சு தான் பேசுறியா விக்கி? இது ஒரு அசைன்மெண்ட். அவன் ஒரு சப்ஜெக்ட். அவ்ளோ தான். அவன் எடத்துல யார் இருந்தாலும் அவங்க கேரக்டர் பத்தி தெரிஞ்சிக்க நான் இப்படித்தான் கேட்டிருப்பேன். நீ உன் தப்ப மறைக்க என்ன பதம் பாக்காத!” என்று எச்சரித்தாள் மூச்சு வாங்க.
அவளின் பதற்றத்தை இனம் கண்டவனோ, “ஹே கூல்! கூல்! நீ கேட்டதுக்கும் நான் கேட்டதுக்கும் சரியாப் போச்சு. ஓகேவா?” என்று சமரசம் பேசினான்.
அதன் பின் தான் இயல்பானாள் உத்ரா. ஆனால், விக்கியால் அவ்வாறு இருக்க முடியவில்லை. அவளின் கண்கள் கணினியில் இல்லாமல் வேறொன்றை வெறிப்பதைக் கண்டு அவளை சீண்ட விரும்பினான்.
“அவன் இப்படி அடிக்கடி தன் மச்சானுக்காக பாருக்கு வர்றதெல்லாம் வழக்கம் தானாம் உதி. பார்ல வொர்க் பண்றவரு சொன்னாரு. நேத்து அவன் மச்சான் மேட்ரிமோனில பாத்ததா சொல்லி நாம போன் பண்ணத பத்தி சொல்றதயும் கேட்டேன்.” என்றதும்,
“அதுக்கு உதய்கிருஷ்ணா என்ன சொன்னான்?” என்று முகத்தை முன்னுக்கு நகர்த்தினாள்.
“அதுக்கு அவன் எதுவாயிருந்தாலும் உங்க இஷ்டம்னு சொல்லிட்டான். நீ சொன்னது கரெக்ட் தான். அவன் அவன் அக்காவோட தலையாட்டி பொம்மையா இருக்கான்.” என்றதும் உத்ராவின் முகம் வாடியதை அவன் கண்கள் குறித்துக்கொண்டன.
அதை கிரகித்தவள் தன் முகத்தை மாற்ற சிரமப்பட்டாள். பின், அவன் கவனத்தை திசை திருப்ப நேற்று அவன் மதுபானவிடுதியில் சுயநினைவின்றி கிடந்தது பற்றியும், தனது வீட்டிற்கு அவள் அழைத்து வந்தது பற்றியும் ஒன்றுவிடாமல் சொன்னாள். அதைக்கேட்டவனோ சகஜமாக தோள்களைக் குலுக்கினான்.
உத்ரா இவனுக்கு வெக்கம், சூடு, சுரணை என்று ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்று குமுறிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத நிகழ்வொன்று நடந்தது. தன் கறுஞ்சிவப்பு நிற கோடுகள் ஓடிய பொன்னிற ஆர்கன்ஸா துப்பட்டாவை சரி செய்தபடியே உள்ளே வந்து கொண்டிருந்தாள் அனன்யா.
உத்ரா, விக்கி இருவரின் முகத்திலும் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிய, உத்ரா தான் முதலில் சுதாரித்தவளாய், "வாங்க அனன்யா, உட்காருங்க" என்றாள்.
அவள் பவ்யமாக அமரவும், உத்ராவின் அருகில் முறுக்கிக்கொண்டே அமர்ந்தான் விக்கி. உத்ரா தான் மேசைக்கு கீழே அவனது கையைப் பிடித்து சமாதானம் செய்ய வேண்டியிருந்தது. அனன்யாவுக்கும் முள் மேல் உட்கார்ந்திருக்கும் நிலை தான்.
உத்ரா சுற்றிவளைக்காமல் கேட்டாள், “சொல்லுங்க? என்ன விசயமா நீங்க இங்க வந்திருக்கீங்க?” என்று.
முதலில் தயங்கியவள் பின்னர், “ஒன்னுமில்ல. எனக்குப் பாத்திருக்க மாப்பிளையப் பத்தி நீங்க என் பெரியப்பாக்கிட்ட நல்ல விதமா சொல்லனும். அதான்…” என்று இழுத்தாள்.
உத்ரா விக்கியைப் பார்க்க அவன் முகம் நிச்சலனமாக இருந்தது.
“ஏன் நீங்க அவர லவ் பண்றீங்களா?”
இதைக் கேட்கும்போது அவள்புறம் இதயத்துடிப்பு எகிறியது.
“இல்ல. பட் எனக்கு அவர பிடிச்சிருக்கு.” என்றதும், உத்ராவால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
“பிடிச்சிருக்குன்றதுக்காக ஒருத்தன் கெட்டவனா இருந்தாலும் அவன் கூட வாழலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா மிஸ் அனன்யா?”
அவள் நிதானமாக பதிலளித்தாள்.
“என்ன பொறுத்த வர இந்த ஒலகத்துல யாரும் நல்லவனும் கெடையாது; கெட்டவனும் கெடையாது. இப்போ நீங்க நல்லவன்னு சர்ட்டிஃபிகேட் குடுக்குறவன் நாளைக்கே கெட்டவனா மாறிட்டா என்ன பண்ணுவீங்க?”
“யெஸ், அதுக்கு காரணம் நீங்களா கூட இருக்கலாம்.” சீறினான் விக்கி.
உத்ரா, “விக்கி” என்று அதட்டியவள், “ஒரு விபத்துக்கும், தற்கொலைக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு மிஸ் அனன்யா. அதோட மிஸ்டர் உதய்கிருஷ்ணாவுக்கும், உங்களுக்கும் பத்து வயசு வித்தியாசமிருக்கு.” என்று நினைவு படுத்தினாள்.
அனன்யா அசரவில்லை.
“இந்த மாதிரி ஆட்கள் தான் பொண்டாட்டிய தன் கொழந்த மாதிரி பாத்துப்பாங்க.” என்றபோது அவளின் தொண்டை அடைத்தது.
ஒன்றரை வருடங்களுக்கு முன் இறந்துபோன அவளின் தாயின் ஞாபகம் வந்ததோ என்னவோ?
விக்கி மேசையை குத்தியவன் உடனே அங்கிருந்து எழுந்து சென்று விட்டான்.
அனன்யா அவளிடம் மெதுவாக, “உங்கள யாராவது ஃபோர்ஸ் பண்ணி இப்படியெல்லாம் பேசுறீங்களா மிஸ் அனன்யா?” என்றாள்.
கண்கள் குளமாக நிமிர்ந்து பார்த்தவள், “இல்லங்க. அப்படியெல்லாம் இல்ல. நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்.” என்றுவிட்டு உத்ராவின் பதிலை எதிர்பார்த்தாள்.
ஆனால், உத்ரா கறாராய் இருந்தாள்.
“சாரி மிஸ் அனன்யா. என்னால உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாது. என் தொழில் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. முக்கியமா லைஃப் சம்பந்தப்பட்டது. எனக்கு என் தொழிலுக்கு துரோகம் பண்ண முடியாது. சாரி, நாங்க குடுக்கப்போற ஸ்டேட்மெண்ட் உங்களுக்கு சாதகமாவும் வரலாம்; பாதகமாவும் வரலாம்” என்று உறுதியாய் பேசினாள்.
அவளின் உறுதியை குலைக்க முடியாது என்றுணர்ந்த அனன்யாவின் முகத்திலோ எந்தவொரு கவலையும் தென்படவில்லை. மாறாக அமைதியாயிருந்தது. உத்ரா அவளை சந்தேகமாய் பார்த்துக் கொண்டிருந்தபோதே விடைபெற்றாள்.
அவள் சென்றபின் அறை நிசப்தமாய் இருக்க, விக்கி தன் வீட்டிற்கு சென்றிருப்பான் என்று கணக்கு போட்ட உத்ராவும் தனது மற்ற வேலைகளை கவனித்தாள்.
அப்போது அவளது அலுவலக எண்ணிற்கு அழைப்பு ஒன்று வர, எடுத்துப் பேசினாள்.
“ஹலோ! நான் பிடூ போலீஸ் ஸ்டேசன் எஸ்.ஐ ஜீவானந்தம் பேசுறேம்மா. நாங்க நீங்க கொடுத்த இன்ஃபர்மேசன்ல அந்த போதைபொருள் சப்ளையர் பெட்டிக்கடை முருகேசன ஆதாரத்தோட அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கோம்மா. உங்க ஏஜென்சியோட இந்த உதவிக்கு ரொம்ப நன்றிம்மா.” என்றார்.
அதை ஏற்றுக் கொண்டவளும், “யூ ஆர் வெல்கம் சார்” என்றுவிட்டு, புன்னகையோடு அலைபேசியைப் பார்த்தாள்.
பின், இந்த நல்ல விஷயத்தை விக்கியிடம் சொல்லியே ஆக வேண்டும் என்ற உந்துதலில் அவனுக்கு அழைப்பு விடுத்தாள். ஆனால், ‘நாட் ரீச்சபிள்’ என்ற பதிவுக்குரலே பதிலாக வந்தது.
அன்றிரவும் உத்ரா தன் வீட்டிலிருந்து அவன் எண்ணிற்கு அழைப்பு விடுக்க, அவன் அழைப்பை ஏற்றானே தவிர பேசவில்லை.
“டேய் எங்கடா இருக்க? நீ இன்னைக்கும் வீட்டுக்குப் போகலையா? அதிசயமா உங்கம்மா கால் பண்ணி நீ எங்க இருக்கன்னு கேக்குறாங்க. நான் அவங்களுக்கு என்ன சொல்ல?” என்று கடுப்பில் காய்ந்தாள்.
“ஆமா எனக்கும் கால் பண்ணாங்க. நான் எடுக்கல.” என்றான் உளறலாக.
“அப்போ நீ இன்னைக்கும் குடிச்சிருக்கியா விக்கி?” உச்சஸ்தாயில் கத்தினாள் உத்ரா.
அவனோ அக்கேள்வியை புறந்தள்ளிவிட்டு மீண்டும் உளறினான்.
“அந்த உதய்கிருஷ்ணாகிட்ட சொல்லிடனும் உதி. எத்தன பொண்ண வேணா வச்சிக்கோ. ஆனா, என் அனியையும் நல்லா வச்சிக்கோன்னு.”
“பைத்தியக்காரா! பைத்தியக்காரா! அந்த அனன்யா ஒரு ராட்சசிடா” என்று காலையில் அவன் சொன்னதை அவனுக்கே நினைவூட்டினாள் மறவாமல்.
அவனோ அலட்டிக் கொள்ளாமல், “ச்சீ! ச்சீ! என்ன பேசுற நீ? ராட்சசியா? என் அனி ஒரு ரத்தினம். நான் தான் அவள மிஸ் பண்ணிட்டேன்.” என்றான்.
“இப்ப உன்ன எங்க பாக்க முடியும் விக்கி?”
“ஏன் கேக்கற?”
“ம்? உன்ன செருப்பால அடிக்கிறதுக்கு தான்டா. காலைல நான் அவ்ளோ சொல்லியும் நீ திருந்தறதா இல்லைல? அனி சனினு அவ மேல ஏன்டா இவ்ளோ பைத்தியமா இருக்க? அவளப் பாத்துக்க அவ பெரியப்பா இருக்காரு. நீ உன் வாழ்க்கைய மொதல்ல பாருடா” என்று ஆத்திரமாகக் கத்தினாள்.
“உனக்கென்ன நீ யாரையாவது லவ் பண்ணியிருந்தா தான? அட்லீஸ்ட் உங்கிட்ட யாராச்சும் ப்ரொபோஸாவது பண்ணிருக்காங்களா உதி? உனக்கு உன் குடும்பத்துல இருக்கவங்கள அடிமைப்படுத்தி வச்சிக்கனும். தியாகத்தலைவினு பட்டம் சுமக்கனும். அதுலயே உன் ஈகோ சாடிஸ்ஃபைடு ஆகிரும். பட், எனக்கு அப்படியில்ல. மனசுன்னு ஒன்னு இருக்கு. அதுல லவ் ஃபெயிலியர்னு ஒன்னு கெடந்து டார்ச்சர் பண்ணுது. யூ நோ வாட்? இவ்வளவு சுயநலத்தோட இருக்கற உன்னால யாரையுமே லவ் பண்ண முடியாது. ஏன் உன்னையுமே யாராலயும் லவ் பண்ண முடியாது. ஐ சேலெஞ்ச் இட்!” என்று அவளை வார்த்தைகளால் ஒரேடியாய் வெட்டி வீழ்த்தினான்.
உத்ரா சளைக்கவில்லை.
“உன்ன நீயே அழிச்சிக்க காரணமா இருக்கற இந்தக்காதல் ஒன்னும் எனக்கு தேவையில்லடா” என்று தானும் ஆங்காரமாய் கத்தி உடனே இணைப்பை துண்டித்தாள்.
பால்கனியில் நின்றிருந்தவளின் கால்கள் தானாக நடுங்க, மிக பதட்டமாக உணர்ந்தாள். விக்கி குடித்துவிட்டு தன்னிலை இழந்தே இவ்வாறு பேசியிருந்தாலும் உத்ராவால் அவன் பேசியதை தாங்க முடியவில்லை.
ஏனெனில் எதைச்சொல்லி மறுத்தாலும் அவள் மீது சுமத்தப்பட்ட மிகப்பெரிய பழியல்லவா அது. தங்களை தள்ளியிருந்து பார்ப்பவன் கேட்பதையே தாங்க முடியவில்லையே. நாளைக்கு இதே கேள்வியை தன் வீட்டிலிருப்பவர்கள் கேட்டால் எனும் கேள்வி தான் அவளை வாட்டிவதைத்துக் கொண்டிருந்தது. மெதுவாக படுக்கையறைக்கு வந்து உட்கார்ந்தாள்.
எப்போதும் போல் அவளின் அம்மாவும், அவருக்கு இடப்புறம் கவிலயாவும் என ஒரு மெத்தையில் படுத்துக் கிடந்தார்கள். பெரிய மெத்தை தான் அது. கடந்த நான்கு வருடங்களாக அவளின் அம்மாவின் அருகில்கூட படுக்கத் தோன்றியதில்லை உத்ராவுக்கு. இன்றென்னவோ விக்கியின் வார்த்தைகளால் உருக்குலைந்து போன அவளின் மனம் தனக்கொரு ஆறுதலை வேண்டியது. அதற்காய் தன் தாயிடம் சென்று சரணடைந்தாள். அவரின் வலப்பக்கம் சென்று அவரை அணைத்தபடி படுத்தாள். அவரின் கையும் அவளை ஆதுரமாக தழுவிக் கொண்டது.
கலைடாஸ்கோப் திரும்பும்...