Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
721
Reaction score
1,123
Points
93
அத்தியாயம் ஆறிற்கு தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ். தற்போது ஏழாவது அத்தியாயத்துடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
721
Reaction score
1,123
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 7


மறுநாள் காலை அந்த பிரம்மாண்ட பால்கனியில் நின்று சூரிய உதயத்தைப் பார்த்துவிட்டு மதுரை கிளம்பினார்கள் இருவரும்.

தன் மகள் வீட்டிற்கு திரும்பியதிலிருந்தே தங்கள் உறவினர் ஒருவர் வைத்துச் சென்ற திருமண அழைப்பிதழைக் காண்பித்து அதற்கு நீ செல்ல வேண்டும் என்றே அடம்பிடித்துக் கொண்டிருந்தார் பானுமதி.

“உங்கப் புருசன் எறந்ததுக்கப்பறம் யாரும் உங்களுக்கு உதவிக்கு வரல. நந்திதா விசயத்துலயும் நமக்கு ஆதரவா இல்ல. என் கல்யாணம் எப்ப நடக்கும்னே கேட்ட எரிச்சல்ல நானும் மூஞ்சக் காமிச்சிட்டேன். இப்போ எந்த அர்த்தத்துல இவங்கலாம் வீடு தேடி வர்றாங்க?” என்றாள் மகள்.

“சொந்தக்காரங்கன்னா கொஞ்சம் முன்ன பின்ன தான் இருப்பாங்க உதி. நாம தான் கொஞ்சம் அனுசரிச்சுப் போகனும். நானே அப்பவோ இப்பவோன்னு இருக்கேன். நாளைக்கு நான் செத்தா தூக்கிப்போட நாலு பேரு வேணாமாம்மா?” என்று கண்களைக் கசக்கினார்.

“உங்களுக்கு அந்த நாலு பேர் தான் பிரச்சனையா? நான், லயா, கவின், அப்பறம் இந்த விக்கி. அதான் நாலு பேர் இருக்கோமே ம்மா? நீங்க சாகறதுக்கு லேட்டாச்சின்னா இந்த விக்கி கூட தேவையில்ல. அமிகா ஒரு கைக்கு வந்துருவா.” என்று சொல்லவும்,

“பாத்தியாப்பா எப்படி பேசறான்னு?” மூக்கை உறிஞ்சினார் பானுமதி.

விக்கி அவருக்கு ஆதரவாகப் பேசினான்.

“ஆன்ட்டியோட சந்தோசத்துக்கு தான் ஒரு தடவ போயிட்டு வருவோமே உதி. நானும் கல்யாண சாப்பாடு சாப்ட்டு ரொம்ப நாளாச்சு” என்றவன் சப்புக்கொட்டவும், அவனை காங்கிரஸ் சின்னம் காட்டி அடக்கியவள் போக விருப்பமில்லை என்றாலும் தன் அன்னைக்காக அங்கு செல்ல சம்மதித்தாள்.

மறுநாள் காலை அவள் காலர் வைத்த வெங்காய நிற மேக்சி உடையணிந்து கிளம்பியபோது, “உதிமா நம்ம சொந்தக்காரங்க பத்தி தான் உனக்கு தெரியுமே. அவங்க பேசுறதல்லாம் பெருசு படுத்தாதடா” என்று பம்மியபடியே சொன்னார் பானுமதி.

‘மொத நீங்கப் பேசுறதையே பெருசு படுத்தமாட்டா உங்கப்பொண்ணு. அவங்கப் பேசுறதையா கண்டுக்கப்போறா?’ என்று மனதிற்குள் அவரை கிண்டலடித்தான் விக்கி.

சொன்னது போலவே தன் தாயை கண்டுகொள்ளவில்லை அவள்.

அவளுடன் திருமண மண்டபத்திற்குள் நுழைந்த போதிலிருந்தே விக்கியின் கண்களிரண்டும் அலை பாய்ந்த வண்ணமிருந்தன. அவை ஓரிடத்தில் நிலைத்தது கண்டு தானும் அப்புறம் பார்த்தாள். அங்கு தன் குடும்பத்துடன் போஸ் கொடுத்து கொண்டிருந்தான்‌ உதய்கிருஷ்ணா. அவர்களின் படை தான் தற்போது மேடையை ஆக்கிரமித்திருந்தது. க்ரூப் போட்டோ எடுத்தவுடன் கட்டைவிரலை உயர்த்திக் காண்பித்தார் புகைப்பட நிபுணர். மணமக்களிடம் பேசி சிரித்தபடி இறங்கினர் அனைவரும்.

அவனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் கண்களால் அளவிட்டபடி இருந்தாள் உத்ரா. விக்கி அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன்‌‌ அதிலிருந்து எதையோ கண்டுகொண்டவனாக கேலிப்புன்னகை செய்தான். உத்ராவோ அதை கவனிக்கும் நிலையில் இல்லை. அவர்களை பார்த்துக்கொண்டே அவள் மேடையேற, தடுக்கி விழப்பார்த்தாள். உதய்கிருஷ்ணா அவளை தாங்கிக்கொண்டான்.

மொத்தக் குடும்பத்தின் பார்வையும் அவர்கள் மேல் விழவும் உடனே விலகினாள் உத்ரா.

மணமக்களுக்கு வாழ்த்து சொல்லி புகைப்படமெடுத்துக் கொண்டவள் கீழே வந்தபோது, “நீ பானுமதி பொண்ணு தானம்மா? உன் அம்மாவ சின்ன வயசுல பாத்த மாதிரியே இருக்கு. அம்மா வரலயா? ஆமா பத்திரிக்கை வைக்க வந்தப்பவே ரொம்ப முடியாம இருந்தாங்க. இது யாரு உன் தம்பியா?” என உறவுக்காரர் ஒருவர் கேட்கவும், அனைத்து கேள்விகளுக்கும் மழுப்பலாக ஆமாம் என்று சொல்லி வந்தவள் அதற்கும் ஆமாம் என்று சொல்லிவிட்டாள்.

விக்கியோ அவளை முறைத்தான். அவனை பார்த்து சிரித்தவள், உதய்கிருஷ்ணாவின் அக்கா ரஞ்சனி அவளது கணவன் அகிலனிடம் தன்னை காண்பித்து ஏதோ சொல்ல பக்கென்று உணர்ந்தாள். அத்தோடு உதய்கிருஷ்ணாவை உரசிக்கொண்டு அமர்ந்திருந்த பெண்ணையும் அவளுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவளை அவனது அக்கா மகளென்று சரியாக ஊகித்துக்கொண்டாள். ஆனால், உதய்கிருஷ்ணாவின் கருவிழிகள் தன்னையே‌ வண்டாய் மொய்த்ததும் அவஸ்தையாயிருந்தது.

அவள் அங்கிருந்து தப்பிக்கும் நோக்கில், “வா விக்கி! நம்ம பந்தில போய் உக்காரலாம்.” என்று அவனை வம்படியாய் சாப்பிடுமிடம் அழைத்துச் சென்றாள்.

அவர்களின் பின்னேயே உதய்கிருஷ்ணாவின் குடும்பமும் வர, எதிரெதிர் பந்தியில் அமர்ந்திருந்தார்கள் இருபிரிவினரும். உதய்கிருஷ்ணாவின் குடும்பம் தன்னையே வைத்தக்கண் வாங்காமல் பார்ப்பது கண்டு கூச்சத்தில் நெளிந்தாள் உத்ரா.

பக்கத்தில் இருந்த விக்கியிடம் மெதுவாக காது கடித்தாள்.

“இலைல அவ்ளோ ஐட்டம் இருக்கு. இதுக ஏன்டா என்ன சாப்பிடற மாதிரி பாக்குதுங்க?”

“புது ஐட்ட... இல்ல.. வெரைட்டியா இருக்கியேன்னு பாத்திருப்பாங்க”

“என்ன‌ சொன்ன?‌ உன்ன ஆஃபிஸ்ல போய் வச்சிக்குறேன்”

அவள் அடிக்குரலில் மிரட்டியபோது அருகில் வந்த பெண்மணி, “நீ பானுமதி பொண்ணு தானம்மா? என்ன‌ உன் அம்மா வரலயா?” என்று கேட்க, இல்லையென்று தலையாட்டினாள்.

அவரோ எதிர்பார்த்தது போல் வம்பு வளர்க்கத் துவங்கிவிட்டார். “அதான எப்படி வருவா? நாலு எடத்துக்கு வந்து போற மாதிரியா ஆண்டவன் அவள வச்சிருக்கான்? கட்டுனவனும் சரியில்ல. பிள்ளைகளும் சரியில்ல. இந்த ஒழுங்குல தலைய எப்படி வெளிய நீட்டுவா?” என்றவர் தன்போக்கில் பேச, உத்ராவின் கோபம் எல்லை மீறியது.

“யார் நீங்க? சின்ன வயசுல எங்களுக்கு ஒரு வேள சாப்பாடு போட்ட அன்னபூரணியா? இல்ல ஸ்கூல் ஃபீஸ் கட்டின சரஸ்வதியா? எங்கம்மா ஒடம்பு முடியாம கெடந்த நாளுல ஒரு நாளாவது வந்து எட்டிப்பாத்துருப்பீங்களா? யார் நீங்க சொல்லுங்க? எனக்கு நெனவு தெரிஞ்சு எவளும் எவனும் என் வீட்டுக்கு வந்ததில்ல. இப்போ என்ன தைரியத்துல எங்கள கிரிட்டிசைஸ் பண்றீங்க? ஆங்?” என்று விடைத்ததும்,

“நீயென்னமா இப்படி பேசுற?” என்று அங்கலாய்த்த பெண்மணி அக்கம் பக்கம் பார்த்துவிட்டு ஓடியேவிட்டார்.

அத்துடனே இலையை‌ மூடிவிட்டு கைக்கழுவச் சென்றுவிட்டாள் உத்ரா. அவளின் பின்னேயே உதய்கிருஷ்ணாவும் அவனின் அக்காவும் ஓடிவந்தனர்.​
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
721
Reaction score
1,123
Points
93
அவர்களை தாண்டிச் செல்ல அவள் எத்தனித்தபோது உதய்கிருஷ்ணாவின் அக்கா ரஞ்சனி, “ம்மா கொஞ்சம் நில்லு. நீ பானுமதியம்மா பொண்ணு தான?” என்று ஆரம்பித்ததும், நொந்துவிட்டாள்.

இவள் என்ன கேட்கப்போகிறாள் என்றவள் பார்த்திருக்க, “அம்மா நல்லாருக்காங்களா? இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி நாங்கலாம் ஒரே காலணில தான் இருந்தோம். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கோவில்ல பாத்தப்போக்கூட அம்மா உனக்கு வரன் பாக்கறதா உன் போட்டோ ஒன்ன காமிச்சாங்க. உன்ன எங்களுக்குப் பிடிச்சிருந்தாலும் நாங்க கொஞ்சம் வசதியான எடமா பாக்கறதால அம்மாக்கிட்ட நாசுக்கா வேண்டாம்னு சொல்லிட்டோம்.” எனவும்,

‘அம்மா’ என்று பல்லைக் கடித்தாள் உத்ரா.

“அம்மாவ கேட்டதா சொல்லும்மா” என்றுவிட்டு ரஞ்சனி நகர,

ஜங்ஜங்கென்று வந்த உத்ரா பாயாசத்தை நக்கிக் கொண்டிருந்த விக்கியின் இலையை மூடிவிட்டு, “எந்திரி கெளம்பலாம்” என்றாள்.

விக்கியும் புறங்கையை நக்கிக்கொண்டே கைக்கழுவச் சென்றான்.

செல்லும் வழியில் சற்றுமுன் நடந்ததை பற்றி அவள் சொல்ல, “அப்போ உங்க அம்மாக்கிட்டயே உதய்கிருஷ்ணா குடும்பத்தப் பத்தி விசாரிக்கலாம்னு சொல்லு” என்று ஒருவித குதூகலம் அவனிடம்.

ஆனால், அவள் மனமோ ‘கொஞ்சம் வசதியான எடம்’ என்பதிலேயே உழன்று கொண்டிருந்தது.

ரஞ்சனி ஏதோ ஞாபகம் வந்தவளாக அவர்களை நெருங்கி, “நீ ஏதோ டிடெக்டிவ் ஏஜென்சில வொர்க் பண்றதா உங்கம்மா சொன்னாங்களேம்மா. இன்னும் அங்க தான் வொர்க் பண்றியா?” என்றதும்‌, சப்தநாடியும் அடங்கியது உத்ராவிற்குள்.

அவளுடன் வந்த உதய்கிருஷ்ணாவின் பார்வையிலோ ஆர்வம் கூடியது.

ரஞ்சனிக்கு இது இப்போதா ஞாபகம் வந்து தொலைய வேண்டும் என்று நொந்துகொண்டாலும், வேறு வழியின்றி ஆமென்றாள்.

“அப்போ எங்களுக்கும் ஒரு பொண்ணப் பத்தி விசாரிச்சு சொல்லனுமே. பொண்ணு வேற யாருமில்ல. என் தம்பிக்கு பாத்துருக்கவ தான். நாங்க அவ ‌வீட்டுக்குப் போனப்ப அவ மூஞ்சில ஒரு கலையே இல்ல. அதான் கொஞ்சம் டவுட்டாருக்கு.” என்றதும், விக்கியின் முகம் மாறியது.

“ஆமா இந்தப் பையன் உண்மையாவே உன் தம்பி தானா? ஏன்னா அவனுக்கு மொகத்துல ஒருப்பக்கம் உள்ளங்கை அளவுக்கு மச்சம் இருக்குமேன்னு கேட்டேன்?” எனவும், விக்கியே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

“இல்ல நான் உத்ராவோட தம்பியில்ல. நான் விக்கிரம பூபதி. விக்டரி சாஃப்ட்வேர் சொலுஷன்ஸ் சிஇஓ அண்ட் உத்ராவோட பாஸ்” என்று கம்பீரமாகச் சொன்னான்.

வாயைப் பிளந்தாள் ரஞ்சனி. உத்ராவும் தான். இவ்வளவு நாள் தான் படித்த படிப்பு, பார்த்த வேலை என்று அனைத்தையும் மறந்திருந்தவன் இன்று அதிசயமாக அதனைச் சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதை, உதய்கிருஷ்ணாவின் மேல் அவனுக்கு உள்ள பொறாமை தான் காரணம் என்று சரியாக கணித்தாள் உத்ரா.

“ஓ!” என்று உதய்கிருஷ்ணாவும் ஒருநொடி வியந்துபோனவன் உத்ராவிடம், “நான் உங்க ஆஃபிஸுக்கு வரலாமா? ஐ மீன் எனக்கு பாத்துருக்கப் பொண்ணு பத்தி எங்களுக்கு தெரிஞ்ச டீட்டைல்ஸ் குடுக்க” என்றதும்,

“தாராளமா” என்றவாறே தங்களது டிடெக்டிவ் ஏஜென்சி விசிட்டிங் கார்டை தந்தான் விக்கி.

உதய்கிருஷ்ணா அதனை வாங்கிக்கொண்டவன், “சீக்கிரமே பாக்கலாம்” என்று உத்ராவைப் பார்த்தவாறே சொல்ல, அவளும் சரியென்று தலையாட்டினாள் தன்னையறியாமலேயே.

இருவரும் பார்வையாலேயே பேசிக்கொண்டிருக்க, “ஹுக்கும்” என்று செருமிய விக்கி உத்ராவிடம், “கெளம்பலாமா?” என்றான்.

தன்னிலை மீண்டவள் அவனோடு புறப்பட்டாள்.

செல்லும் வழியில் காரில் விக்கிக்கு பிடித்த பாடலொன்று ஓடிக்கொண்டிருக்க அவனை சீண்டும் வகையில், “மிஸ்டர் விக்கிரம பூபதி சாங்க மாத்துறீங்களா ப்ளீஸ்?” என்றாள்.

அவனோ அவளை முறைத்துப் பார்த்தான். இது போன்ற சந்தர்ப்பத்திற்குத்தானே அவள் காத்திருந்தாள். சும்மா விடுவாளா?

“உன்ன விக்கி விக்கின்னு கூப்ட்டு உன் முழுப்பேரே எனக்கு மறந்துப்போச்சி விக்கி. பைதவே அத இன்னைக்கு ஞாபகப்படுத்தினதுக்கு தாங்க்ஸ்.” என்று வம்பிழுத்தாள்.

“உதி ப்ளீஸ்”

“இல்ல எனக்கு ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு விக்கி. நீ இன்னும் அந்த அனன்யாவ லவ் பண்ற தான?”

“சத்தியமா இல்ல. நீ தான் இப்போ அந்த‌ உதய்கிருஷ்ணாவ லவ் பண்ற”

“என்ன? நீ என்ன சொன்ன விக்கி? நான்.. நான்.. நான் போயி உதய்கிருஷ்ணாவ லவ் பண்றேனா? உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு.”

அவன் போதையில் இருப்பதாக நினைத்தல்லவா வால்பாறையில் அவள் தன் மனதை திறந்து கொட்டினாள். அது அவனுக்கு நினைவு வந்து விட்டதோ என்று உள்ளூரப்பயம் அவளுக்கு.

“ஓஹோ! ஏழே நாளுல ஒருத்தன பத்தின ஃபுல் டீட்டைல்ஸ் எதுக்காக கலெக்ட் பண்ணி வச்சிருக்க உதி? வெயிட்! அவன் ப்ளட் சாம்பிள் மொதக்கொண்டு கலெக்ட் பண்ணி எய்ட்ஸ் டெஸ்ட் வர எடுக்கச் சொல்லியிருக்க நம்ம அண்டர்கவர் டிடெக்டிவ்ஸ்கிட்ட. இதெல்லாம் ரிஸ்க்கான விசயம். யார் வற்புறுத்தி கேட்டாலும் நாம செய்யத்துணியாத காரியம் இது.”

“ஓ! அத வச்சு தான் நான் அவன லவ் பண்றேனு முடிவு பண்ணிட்டியா நீ? அறிவாளி தான்.”

“அவன் இங்க வரப்போறான்னு இன்ஃபர்மேஷன் கெடச்சு தான நீயே இந்த கல்யாணத்துக்கு வந்த?”

“கற்பனைக்கும் ஒரு அளவிருக்கு விக்கி. என் வீட்ல என்ன நடந்ததுனு உனக்கே தெரியும்.”

“ஹே! நீ அவன லவ் பண்ற இடியட்!”

“இல்ல.. நிச்சயமா இல்ல..”

“உன்ன எப்படி ஒத்துக்க வைக்கனும்னு எனக்கு நல்லா தெரியும்”

அவளை சவாலாகப் பார்த்தவன் மேற்கொண்டு தொந்தரவு செய்யவில்லை.

உத்ரா தனது அலைபேசியிலிருந்து அனன்யாவின் பெரியப்பா நந்தகோபனுக்கு அழைப்பு விடுத்து நாளையே உதய்கிருஷ்ணாவின் கேரக்டர் ரிபோர்ட்டினை வாங்கிச் செல்லுமாறு கூறினாள்.

அதற்குள்ளாகவா என்று ஆச்சரியப்பட்டவரும் சரியென்றார்.



கலைடாஸ்கோப் திரும்பும்…​
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
721
Reaction score
1,123
Points
93
அத்தியாயம் ஏழிற்கு முகநூலிலும் தளத்திலும் தங்களது பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ். உங்களுக்கான எட்டாவது அத்தியாயம் இதோ!
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
721
Reaction score
1,123
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்


அத்தியாயம் 8


உத்ரா கேட்டபோது சரியென்ற நந்தகோபனால் மறுநாள் தவிர்க்க முடியாத ஒரு இரங்கல் கூட்டத்திற்கு செல்லும்படி ஆகிவிட்டதால் உத்ராவை சந்திக்க முடியவில்லை.

பதிலுக்கு அனன்யாவிடம், “நீ போய் வாங்கிட்டு வாம்மா” என்றார்.

அவளும் மாலை சென்று வாங்கிக்கொள்ளலாம் என்று புறப்பட, மழை குறுக்கிட்டது. இருப்பினும், நனைந்தபடியே ஆட்டோ பிடித்து டிடெக்டிவ் ஏஜென்சிக்குச் சென்றாள். அங்கு உத்ராவிற்கு பதில் விக்கி இருக்க, வாசலிலேயே நின்றாள் ஆடைகளில் நீர் சொட்டியபடி.

நிமிர்ந்து பார்த்தவன் அவளை கண்டவுடன் இயல்பாய், “உள்ள வாங்க” என்றான்.

அவளும் தயங்கியபடியே வந்து அமர்ந்தாள். அவளிடம் எதுவும் கேட்காமலே மேசையின் மேல் உறை ஒன்றை தூக்கி வைத்தான். எடுத்துக்கொண்டவள் அப்படியே அமர்ந்திருக்க, தனது வேலையிலேயே கவனமாக இருந்தவன் சில நிமிடங்களுக்குப் பிறகு தான் நிமிர்ந்துப் பார்த்தான்.

தன்னையே அவள் இமைகள் தட்டாமல்‌ பார்ப்பதைக் கண்டு அவன் கேள்வியாக‌ப் புருவங்களை ஏற்றி இறக்க, அதுவொரு குளிரூட்டப்பட்ட அறையென்பதால் நடுங்கிக் கொண்டிருந்தவள் உதடு துடிக்க ஒன்றுமில்லையென்று தலையாட்டினாள். அவன் மெதுவாக இருக்கையைவிட்டு எழுந்தான்.

என்ன தான் உத்ரா கோபத்தில் அனன்யாவின் பெரியப்பாவை வரச்சொல்லியிருந்தாலும், அந்நாளில் அமிகாவின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் இருந்ததை மறந்தேவிட்டாள். அக்கடமையினால் பொறுப்பை விக்கியிடம் ஒப்படைத்தவள் பள்ளியைவிட்டு வெளியே வந்தபோது அங்கேயும் மழை வெளுத்து வாங்கியது. தன் இருசக்கர வாகனத்தில் கவனமாக டிடெக்டிவ் ஏஜென்சியை நெருங்கியதும் அனன்யா தங்கள் அலுவலகத்திற்குள் செல்வதை பார்த்தவள், வாகனத்தை ஓரங்கட்டி சாளரம் வழியாக அவர்களை கண்காணித்தாள்.

சந்திப்பதாக பேசிக்கொண்டது இருவர். ஆனால், சந்தித்துக் கொண்டதோ வேறு இருவர்.

விக்கி மழையில் நனைந்து வந்த அனன்யா இடத்தில் வேறு யாராவதாக இருந்திருந்தால் மனிதாபிமான அடிப்படையில் நிச்சயம் அவர்களுக்கு உதவியிருப்பான். ஆனால், அவள் அனன்யாவாகிப் போனதால் அவன் தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்தான். இருப்பினும் அவளது பார்வை அவனையே துளைத்ததில் எரிச்சல்பட்டான். அனன்யாவிற்கோ அன்றொரு நாள் இதே மழை தானே தங்களை சேர்த்துவைத்தது என்ற மயக்கம்.

எழுந்து சாளரத்தை எட்டிப்பார்த்தவன் பழைய ஞாபகத்தில் மூழ்கியவளை, “மழ நின்னுடுச்சி. நீங்க கெளம்பலாம்” என்று கலைத்தான்.

அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களிலோ நீர் பெருக்கெடுத்தது.

“சா.. சாரி… நான் பண்ணது பெரிய தப்பு தான். அத நெனச்சு நான் ஃபீல் பண்ணாத நாளே இல்ல. என் மேலயே எனக்கு இப்ப வெறுப்பாயிருக்கு விபூ. உங்க மூஞ்சில முழிக்க சங்கடப்பட்டு தான் நான் இவ்வளவு நாள் ஒதுங்கியிருந்ததே.” என்றவள் தேம்பி தேம்பி சொல்ல,

இறுகிய முகத்துடன் அவளைப் பார்த்திருந்தவனோ, “நீ இப்ப போகலாம்னு சொன்னேன்.” என்றான் தனது உடல் மொழியை மாற்றாமல்.

“நீங்க என்ன மன்னிக்கவே மாட்டீங்களா?”

“உன்னால நான் பட்ட அவமானம், வலி எதையும் என்னால மறக்க முடியாது. அண்ட் உன்ன காதலிச்சது தான் நான் என் வாழ்க்கைல பண்ண பெரிய முட்டாள்தனம்.”

“அன்னைக்கு என் நெலம அப்படியிருந்…”

“ஐ செட் கெட் அவுட்! உன்னோட எந்த வெளக்கத்தையும் நான் கேட்க தயாரா இல்ல. அது எனக்கு தேவையும் இல்ல. இங்கயிருந்து போயிடு.”

“இல்ல அன்னைக்கு என் சிட்ஷுவேஷன் என்னன்னு கேட்டீங்கன்னா நீங்க இப்படி பேசவே மாட்டீங்க.” என்றவள் ஆரம்பிக்க,

எழுந்து‌ வலுக்கட்டாயமாக அவளது கன்னங்களைப் பிடித்து முகத்தை நோக்கி குனிந்தவன் இருவருக்கும் ஒரு இன்ச் இடைவெளியே இருந்த நிலையில் அகன்ற அவளது விழிகளைப் பார்த்து, “வெளியப் போன்னு சொன்னேன்” என்று மெதுவாக ஆனால், உறுதியாகச் சொன்னான்.

அக்குரலில் உள்ளடங்கியிருந்த கோபத்தைக் கண்டவளும் அரண்டுபோனவளாய் அங்கிருந்து கிளம்பினாள். ஆனால், வாசலில் நின்றிருந்த உத்ராவைப் பார்த்ததும் ஒரு கணம் ஸ்தம்பித்துப்போனாள். பின், விக்கியை திரும்பிப் பார்த்தவளாய் வேகவேகமாய் அவ்விடத்தை விட்டு வெளியேறினாள்.

விக்கியோ திரும்பி நின்று தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருந்தான்.

ஏற்கனவே அவன் அனன்யாவை நெருங்கியது வரை தள்ளியிருந்து பார்த்த உத்ரா, அவன் முணுமுணுத்த வார்த்தைகள் எதுவும் தனக்கு கேட்காததால் அவளுக்கு அவன் முத்தம் கொடுத்து விட்டதாகவே கருதினாள்.

அதில் அவனை திட்டவே விறுவிறுவென உள்ளே வந்தவள் அவனது தோளைப் பற்றி திருப்ப, அவனோ மறுபடியும் அனன்யா தான் வந்துவிட்டதாக நினைத்து, “சொல்ல சொல்ல கேட்க மாட்டியா?” என சொல்லிக்கொண்டே அவளது கழுத்தைப் பிடித்தான்.

இப்போதும் உத்ரா அவன் தனக்கு முத்தம் கொடுக்க முயல்வதாகவே தவறாகக் கருதினாள். அவளை அவன் அரண்டு பார்க்க, உத்ரா கத்தினாளே ஒரு கத்தல்.

“எரும மாடே! கருங்கொரங்கே! எவ்ளோ தைரியம் இருந்தா எனக்கே நீ முத்தம் கொடுக்க வருவ?” என்று அவன் கழுத்தை தான் நெரிக்க முயன்றாள்.

அச்சமயம், “எஸ் க்யூஸ் மி!” என்றொரு குரல் இருவரையுமே கலைத்தது.

இருவரும் திரும்பிப் பார்க்க உதய்கிருஷ்ணா அங்கு நின்றிருந்தான்.

‘இவன் எப்போ வந்தான்? அனன்யாவ பாத்திருப்பானோ? ஒருவேள பாத்திருந்தா?’ என்று பல கேள்விகள் உள்ளே ஓடினாலும், “வாங்க! உக்காருங்க!” என்று வரவேற்றாள் உத்ரா.

உள்ளே வந்தவன், “தப்பான நேரத்துல வந்துட்டனோ?” என்று கேட்க, வேணி போலவே ஏதேனும் உள்ளர்த்தத்தில் கேட்கிறானோ என்று அவன் முகம் பார்த்தாள்.​
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
721
Reaction score
1,123
Points
93
ஆனால், அப்படியொன்றும் புலப்படவில்லை.

“இது பொண்ணு பத்தி எங்களுக்கு தெரிஞ்ச டீட்டைல்ஸ். மத்தத நீங்க தான் வெரிஃபை பண்ணி சொல்லனும்.” என்றொரு தாளை அவன் அவளிடம் நீட்ட, விக்கி அதை பிடுங்காத குறையாக வாங்கி கிழித்துப்போட்டான்.

அவனது அதிகபிரசங்கித்தனம் சுத்தமாகப் பிடிக்கவில்லை இருவருக்கும். விக்கி சிரித்துக்கொண்டே தங்களின் வழக்கமான படிவம் ஒன்றை கொடுத்து உதய்கிருஷ்ணாவை நிரப்பச் சொல்ல, அவனும் கர்மசிரத்தையோடு நிரப்பித் தந்தான். உத்ரா அவனை பார்ப்பதும் இமை தாழ்த்துவதுமாக இருந்தாள்.

அதை கவனித்த விக்கி தொண்டையைச் செருமி, “வெளிய நல்ல மழைல? காபி, டீ ஏதாவது குடிக்கிறீங்களா?” என்றதும்,

“இல்லங்க, இப்ப எதுவும் வேண்டாம். உங்கக்கிட்ட ஒரு விசயம் கேட்டா நீங்க தப்பா நெனைக்க மாட்டீங்களே?” என்று பீடிகை போட்டான்.

“என்ன சொல்லுங்க?” ஊக்கினாள் உத்ரா.

“நீங்க ஏன் என்ன நான் போற எடத்துக்கெல்லாம் வந்து ஃபாலோவ் பண்ணீங்க? எங்கள மாதிரியே அனன்யா வீட்லயும் என் கேரக்டர் ரிபோர்ட் கேட்டாங்களா?” எனவும், பகீரென்றது விக்கிக்கும் உத்ராவுக்கும்.

விக்கி உத்ராவுக்கு முன் மறுத்தான்.

“அய்யோ! அப்படியெல்லாம் இல்லங்க. ஆக்சுவலி நீங்க நாங்க உங்கள தான் ஃபாலோவ் பண்ணோம்னு தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க. நாங்க ஃபாலோவ் பண்ணின ஆளே வேற. உங்க ஃப்ரெண்ட் பிரகாஷ் இல்லங்க? அவரத் தான் நாங்க ஃபாலோவ் பண்ணோம்.” எனவும், ‘உஃப்’பென்றான்.

உத்ராவும் அதே வேலையை அவனறியாமல் செய்தாள். ஏனெனில், அவன் சற்று முன் வெளியேறிய அனன்யாவை பார்த்திருப்பானோ என்று அவள் பதறிய பதற்றம் அவளுக்கு தானே தெரியும்.

“நான் நீங்க என்னை தான் ஃபாலோவ் பண்ணீங்களோன்னு கன்ஃபியூஸ் ஆயிட்டேன். ஆமா எப்போ எங்களுக்கு ஃபுல் டீடைல்ஸ் கெடைக்கும்?”

“ஒரு டூ த்ரீ வீக்ஸ் ஆகுங்க.”

“ஓ! ஆமா அவ்ளோ பெரிய ஐ.டி கம்பெனிக்கு சிஇஓ-வா இருந்துட்டு இங்க எப்படி?”

“எல்லாத்துக்கும் காரணம் லவ் தான்” பொதுவாய் சொன்னான் விக்கி.

உதய்கிருஷ்ணா கேள்வியாய் உத்ராவைப் பார்க்க, “ஐ மீன் ஐ லவ் திஸ் ஜாப்” என்று முடித்தான்.

உதய்கிருஷ்ணா மீண்டும் ‘உஃப்’பென்றவன் விக்கியிடம் கலகலக்க துவங்கிவிட, அவனும் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தான். உத்ரா இருவரையும் வேடிக்கை பார்ப்பவளானாள்.

விக்கி அவனிடம் கொஞ்சம் கொஞ்சமாய் பேச்சின் மூலம் நெருங்கி, “பொண்ணு போட்டோவப் பாத்தீங்களா? பொண்ண உங்களுக்கு புடிச்சிருக்கா?” என்று கேட்டதும்,

“அஃப்கோர்ஸ் புடிக்காமயா உங்கக்கிட்ட வருவோம்? ஆமா ஏன் இப்படி கேக்குறீங்க?” என்றான் சந்தேகமாக.

“இல்ல சிலர் அம்மா அப்பா சொன்னாங்களேன்னு விருப்பமே இல்லாம பிடிக்காதப் பொண்ண கல்யாணம் பண்ணிப்பாங்க. அதான் நீங்களும் அந்த மாதிரி கேஸோன்னு சும்மா செக் பண்ணேன். உங்களுக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம் தான?” எனவும்,

“பரிபூரண சம்மதங்க” என்றவன் உத்ராவைப் பார்த்துக்கொண்டே சொல்ல, குழப்பமான மனநிலையில் அவள்.

விக்கி தன் இருக்கையை விட்டு எழுந்து, “அப்ப ஓகேங்க. சீக்கிரமே பாக்கலாம்“ என்றதும்,

“சரிங்க” என்ற உதய்கிருஷ்ணாவும் அங்கிருந்து கிளம்பினான்.

அவன் வெளியேறியதும், “இவன் பார்வையே சரியில்லையே” என்று விக்கி முணுமுணுக்க,

“நீதான் சரியில்ல” என்ற உத்ரா, “அந்த அனன்யாவ என்னடா பண்ணின? நீயும் நானும் ஒரசிக்கிட்டு நின்னத வேற அவர் பாத்துட்டாரு. என்ன நெனச்சிருப்பாரோ தெரியல?” என்று கவலைகொண்டாள்.

“ஆமா அவன் என்ன நெனச்சா உனக்கென்ன? அவன் நெனைக்கிறதுக்கெல்லாம் நீ ஏன் இவ்வளவு இம்பார்ட்டன்ஸ் குடுக்குற?”

“பேச்ச மாத்தாத விக்கி. உண்மைய சொல்லு”

“அதுக்கு முன்னாடி நீ எனக்கு ஒரு உண்மைய சொல்லு. உனக்கு அந்த உதய்கிருஷ்ணாவப் புடிச்சிருக்கு தான? அவன கல்யாணம் பண்ண சொன்னா பண்ணிப்ப தான?”

“யூ க்ரேஸி! அவன் நம்ம கிளையண்ட்.”

“அப்போ உனக்கு அவன புடிக்கல. அப்படி தான?”

அவனது அனத்தல் தாங்காமல், “எங்களுக்குள்ள நீ நெனைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்ல. எனக்கு அவன புடிக்கல. போதுமா?” என்று பல்லைக் கடித்தபடி சொன்னாள்.

“அதான் புடிக்கலைன்னு சொல்லிட்டா இல்ல? இன்னும் ஏன் இங்க நிக்கிறீங்க மிஸ்டர்?” என்று அவளுக்கு பின்னால் பார்த்து விக்கி சொல்ல, பதறியடித்து திரும்பிப் பார்த்தாள்.

“ஏப்ரல் ஃபூல்” என்று தன் ஆட்காட்டி விரலை மேலும் கீழும் ஆட்டிக்காட்டி வெறுப்பேத்தினான்.

உத்ராவுக்கோ சொல்ல முடியாத உணர்வு. அது கோபமா, அதிர்ச்சியா, கவலையா என்று வகைப்படுத்த முடியவில்லை. அவனை எதிர்கொள்ள பயந்து அவனுக்கு முதுகு காட்டியபடியே தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் அனுப்பும் வேலையை செய்துகொண்டிருந்தாள்.

ஆனாலும், விக்கி அவளை விடுவதாய் இல்லை. அவளின் முன்னால் வந்து நின்றான்.

அவள் தன் பொறுமையை இழந்து, “விக்கி அந்த அனன்யாவப் பத்தி எல்லாரையும் விட உனக்கு தான் நல்…லா தெரியும். ஸோ, நீயே இந்த அசைன்மெண்ட ஹேண்டில் பண்ணு.” என்று ‘நல்லா’வில் மட்டும் சற்று அழுத்தம் கொடுத்துச் சொன்னாள்.

கடுப்பானவனோ எதுவும் சொல்லாமல் தனது நாற்காலியில் சென்று அமர்ந்தான். இப்போது தான் திருப்தியாக இருந்தது உத்ராவுக்கு. அலுவலகத்தை மூடி பூட்டுப்போடும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

வீட்டிற்கு கிளம்பும் நேரத்தில் உத்ரா மீண்டும் கவலைபட்டாள்.

“ஆமா மதியம் அந்த அனன்யாவுக்குப்போய் முத்தம் குடுத்து வச்சிருக்கியே, நாளப்பின்ன அவ பெரியப்பா மூஞ்சில எப்படிடா நான் முழிப்பேன்?” என்று மறுகினாள்.

“இவங்க மாப்பிளையையே கரெக்ட் பண்ணுவாங்களாம். நாங்க பொண்ண கரெக்ட் பண்ணா மட்டும் தப்பாம். எந்த ஊரு நியாயம்டா இது?” என்று திருப்பிக் கொடுத்த விக்கி காரின் சாவியை திருகினான்.

பதில் பேசாமல் தனது ஸ்கூட்டியை முடுக்கினாள் உத்ரா. இரண்டு வாகனங்களும் வெவ்வேறு திசைகளில் சென்றன.


கலைடாஸ்கோப் திரும்பும்…


 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
721
Reaction score
1,123
Points
93
அத்தியாயம் எட்டு பற்றிய உங்கள் விமர்சனங்களை கீழே உள்ள கருத்துப்பெட்டியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்.

கருத்துத்திரி,
கருத்துப்பெட்டி


 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
721
Reaction score
1,123
Points
93
அத்தியாயம் எட்டு சற்று சிறியது தான். அதை ஈடுகட்டும் விதமாய் நாளை இரண்டு அத்தியாயங்கள் பதிவிடுகிறேன் ப்ரெண்ட்ஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
721
Reaction score
1,123
Points
93
சென்ற அத்தியாயத்திற்கு தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ்🙂
 
Status
Not open for further replies.
Top Bottom