Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சது(ரங்கம் )

Status
Not open for further replies.

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
124
Reaction score
33
Points
63
எபி 10

ரத்னாவுக்கு திருமணத்திற்கு முன்னரே பெரிய அளவில் நிச்சயம் செய்ய வேண்டும் என்று திலகாவும் அவள் கணவரும் ஆசை பட்டதால், சிவனும் சரி சொல்லிவிட்டார். நிச்சயதார்த்தம் திருசூரில் நடந்தால் உறவினர் பலர் வர முடியும் என்று திலகா சொன்னதால் விட்டுபோன பல சொந்தங்களை தேடி சிவன் கிளம்பிவிட்டார். அவர்கள் தமிழ்நாடு வந்து பதினான்கு வருஷங்கள் ஓடிவிட்டது.
மொத்த குடும்பமும் சந்தோஷமாக கிளம்பிவிட்டது..தங்கள் உறவுகளை பார்க்கவென.

அன்னபூரணி-அருணாச்சலத்தை அழைக்க வந்த சிவனிடம் தாங்கள் இருவராலும் வர முடியாது என்றாலும், "ரத்னாவின் திருமண செலவு மொத்தமும் எங்களுடையது. கவலை படாதீர்கள்!சிவம்.மாப்பிள்ளை வீட்டில் கேட்கும் சீருக்கு தயங்க வேண்டாம்.."என்று சொல்லி அனுப்பி வைத்தாள் அந்த மகராசி .
வீட்டில் வந்து மனைவியிடம் சொல்லி சொல்லி மாஞ்சு போனார் சிவன். அவருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. தனது மூன்று பெண்களில் இருவருக்கு இவ்வளவு சீக்கிரம் திருமண நிகழ்வு கூடி வரும் என கனவிலும் அவர் நினைத்து பார்க்கவில்லை. மூன்றும் பெண்களாய் பிறந்தவுடன் சிவன் கொஞ்சம் பயந்துதான் போனார். மூவரையும் படிக்க வைத்து எப்படி கரையேற்ற போகிறோம், நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்கப் போகிறோம்?என்பது போன்ற கவலைகள் அவரையும் அவர் மனைவியையும் பயம் கொள்ள செய்த விஷயங்கள்.

இப்பொழுது இவ்வளவு சுலபமாய் ஒரு பெரிய விஷயம் நடக்கும் என்பது அவர் யோசிக்காத ஒன்று.

அன்னபூரணி சொன்னதாக கணவன் சொன்னவற்றை கேட்ட பாறு குட்டிக்கும் கூட மனதில்தான் தன் மூத்த பெண்ணின் வாழ்க்கையும் கூட நன்றாக அமைந்து விடும்! என்ற நம்பிக்கை இலேசாக துளிர்விடத் தொடங்கியது.
மருமகளாக வர இருக்கும் பெண்ணின் தங்கைக்கு இவ்வளவு செய்பவர்கள், மருமகளை எப்படி போற்றி வைத்துக் கொள்வார்கள் என்பது பற்றிய கற்பனை அவளின் கண் முன் படமாய் விரிந்தது. மனதை வாழ்த்திக் கொண்டிருக்கும் பாரம் இறங்குவது போன்ற உணர்வு சிவனின் மனைவிக்கு.

ஆனால் அவளும் கூட யோசிக்காமல் விட்ட ஒரு விஷயம் அருணாச்சலம் எந்த இடத்திலும் தன் வாயை திறக்கவே இல்லை என்பதை.

அருணாச்சலம் சொல்லிதான் அன்னபூரணி வர முடியாது என்று சொன்னாள்.
தனது நிலையில் இருந்து இறங்க அருணாச்சலத்தின் மனம் ஒப்பு கொள்ளவில்லை. அதையே மனைவியிடம் சொன்னார்.
'நாம வரணும்னு அவங்களுக்கு இருந்தா இங்கனயே வச்சிருக்க மாட்டாங்க?
நம்மோட பணம், அந்தஸ்து இதெல்லாம் விட்டு அங்க போயி நிக்க முடியுமா? அவங்க
இந்த கல்யாண செலவே நாமதான் செய்ய போறோம். அந்த மரியாதை இல்லயே!
நீயும் வர முடியாதுன்னு சொல்லிரு அன்னம்.'என்ற
கணவரை வைத்த கண் வாங்காமல் பார்த்த அன்னத்திற்கு இந்த அருணாச்சலம் புதிது. அவரது 'தான் 'எனும் அகங்காரம் இதுவரை அன்னம் அறியாதது.

அருணாச்சலம் ஒன்றை வசதியாக மறந்து போனார். அது, எப்படி இவர்கள் சிவனின் வீட்டிற்கு மூத்த பெண் வழியாக சம்மந்தி ஆக போகிறார்களோ, அதேபோல் ரத்னாவின் வழியாக சம்பந்தி ஆகப்போகும் திலகா குடும்பத்திற்கும் சிவன் மரியாதை கொடுத்து தான் ஆக வேண்டும்.
இதுதான் உலக வழக்காக கருதப்பட்டு வருகிறது.
மேலும் திலகா சிவனின் சொந்த தங்கை. சிவனின் பூர்வீகமும் கேரளம் தான். என்னதான் தமிழ்நாட்டில் அவர் வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டிருந்தாலும், அவரது பூர்வீக ஊர் பற்றிய பாசம் என்றுமே குறையப்போவதில்லை.
அப்படி இருக்கும் பொழுது அவரை தடுத்து நிறுத்துவதிலோ, இல்லை ...அருணாச்சலத்தின் மரியாதை காரணமாக தமிழ்நாட்டில்தான் சிவனின் இரண்டாவது பெண்ணின் நிச்சயத்தை நடத்த வேண்டும் என்று கூறுவது எந்த விதத்தில் சரியாகும்?

எப்போது இவர் இப்படி மாறினார்?முன்னெல்லாம் யாராவது தன்னை அழைத்தால் முடியாது என்றாலும் தன்மையாகவே கூறிவிடுவாரே...
இதுபோன்ற 'தான்' என்னும் அகங்காரம் இதற்கு முன்பு அவரிடம் இல்லை.
புதிது புதிதாய் வரும் பதவியும் அந்தஸ்தும் அவரை கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றிக் கொண்டு வருகிறது. அவரது பழக்க வழக்கங்கள் மாறிவிட்டது.
மது பாட்டில்களை கைகளால் தொட்டிராதவர் வாரத்தில் இரண்டு முறையாவது தள்ளாட்டத்துடன் வீட்டுக்கு வருகிறார். அதுவும் யாராவது கொண்டு வந்து விட்டால் உண்டு. இல்லையென்றால் எங்கு மது அருந்துகிறாரோ அங்கேயே அந்த இரவை கழித்து விடுவார். மறுநாள் காலையில் போதை தெளிந்த பின்தான் வீட்டிற்கு வரவு.

அருணாச்சலம் புது பணக்காரர் இல்லை. மிஞ்சிய சொத்து அவருக்கு தலைமுறைகளாக உண்டு. ஆனால் இவ்விதமான புது நடத்தை சரி இல்லையே? என்று யோசித்த அன்னத்திற்கு,
இவர் எப்படி தன் மகனை திருத்த முடியும் என்ற கேள்வியும் சேர்ந்து நொறுங்க செய்தது.
இன்று வரை அருணாச்சலத்திடம் மாறாதது அவர் தன் மனைவி மீது வைத்திருக்கும் அன்பும் காதலும்தான். அதுவும் என்றாவது மறைந்துவிட்டால் ஒருவேளை அது அன்னத்தின் இறுதி நாளாக இருக்கலாம்.

அன்னம் தன் எண்ணங்களை மனதிற்குள் வைத்துக்கொண்டு வேலைகளை பார்க்க சென்றுவிட்டாள்.

குருவை பொருத்தவரை அதற்கு லேசாக ஒரு சிறு நம்பிக்கை வெளிச்சமாக தெரிகிறது. அது உமா மீதான அவனது பார்வை. உமாவை பார்த்துவிட்டு வந்த நாளிலிருந்து குரு அவனாக இல்லை. முன்புபோல் அடிக்கடி வீட்டில் இல்லாமல்
எங்காவது காணப் போவதும் இல்லை. முன்புபோல் வசூலாகும் பணத்தை தன்னிடம் வைத்துக் கொண்டு கெட்ட பழக்கங்களில் வாரி விடவும் இல்லை.
உமாவின் அழகு அவன் கட்டிப்போட்டு இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சாட்சி எது வேண்டும்? த
ான் எடுத்த முடிவு சரிதான் என்று மனதை தேற்றிக்கொண்டு கல்யாணத்திற்கு தேவையான மற்ற ஏற்பாடுகளையும் செய்ய தொடங்கி விட்டாள் அன்னபூரணி.

தன் மருமகளுக்கு தேவையான வீட்டில்
உடுத்திக்கொள்ளும் வகையான புடவைகளை மட்டும் அன்னபூரணி தேர்ந்தெடுத்தாள். பணக்கார வீடுகளுக்குத் தேவையான ஆடம்பரமும் பவிசும் அணியும் ஆடை அணிகலன்களிலிருந்தே தொடங்குகிறத, என்பது இன்றுவரை அன்னத்தின் எண்ணமாக இருக்கிறது. அவளின் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே தலைமுறை தலைமுறையாக பணக்காரர்கள். இவ்வளவு கீழே இறங்கி உமாவை தேர்ந்தெடுத்திருப்பது குருவின் நடத்தை காரணமாகத்தான். இல்லாவிட்டால், தங்களுக்கு சம அந்தஸ்துடைய வீட்டிலிருந்து பெண் எடுத்திருப்பார்கள். ஆனால் தனது புத்திரசிகாமணியின் லட்சணம் தெரிந்தும் சிவன் பெண் தர ஒப்புக்கொண்டது பெரிய விஷயம் தான்.

வீட்டிற்கு ஜவுளி காரரை வரவழைத்து அன்னபூரணி புடவைகளை தேர்ந்தெடுக்க தொடங்க, அங்கு வந்த குருவும் தானே தன் வருங்கால மனைவிக்கு தேர்ந்தெடுப்பதாய் கூறி அவளை மனதில் காட்சியாய் கொண்டுவந்து அவளின் நிற அமைப்பிற்கும் உருவத்திற்கும் ஏற்றவாறு புடவைகளைத் தேர்ந்தெடுத்தான்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டே இருந்த அன்னபூரணிக்கு மனம் முழுவதும் மகிழ்ச்சி கொண்டாட்டம். ஒரே ஒரு நொடி தன் பிள்ளை திருந்தி விட்டான் நினைத்து விட்டாள்.
ஆனால் புடவை காரரின் முன்னேயே இந்த புடவைகளுக்கு ஏற்ற சரியான அளவில் ரவிக்கைகளையும் தானே வந்து எடுப்பதாக கூறிய குருவைப் பார்த்து ஒரு பெண்ணாக அன்னபூரணிக்கு கோவம் வந்துவிட்டது. அப்படி என்றால் குரு அந்தப் பெண்ணை பார்த்த பார்வை எத்தகையது என்று கூசிப் போனாள் அன்னம்.
ஆனால் ,வாய் திறந்து மகனிடம் ஏதாவது கேட்கப்போய் நீங்கள் தானே பார்த்து வைத்தீர்கள்! இந்த பெண்ணை எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டால்...? என்றுமே பாம்பு தன் குணத்தை மாற்றிக் கொள்வதில்லை என்ற எண்ணம் மனதில் ஓட எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு விட்டாள்.
அவளைப் பொறுத்தவரை உமா உடனான குருவின் வாழ்க்கை எந்த சிக்கலும் இல்லாமல் நன்றாக சென்றாலே போதும். மத்த எல்லாமே தானாகவே சரியாகிவிடும்.

குருவின் மனசு முழுதும் உமாவின் முகமே. அவளை விட்டு இன்னொரு விஷயம் அவன் புத்திக்கு ஏறவில்லை. அவளது இளம் முகமும் அதில் இருக்கும் ஒன்றிரண்டு பருக்களும் தந்தமும் சந்தனமும் சேர்ந்த நிறமும், அவளின் ஐந்தரை அடி உயரமும், இள ரோஜா நிற உதடுகளும் அவனது 'பகலின் தூக்கத்தையும் இரவின் வேலைகளையும் ' கெடுக்க போதுமானதாக இருந்தது.
இதுவரை அவன் அணுகும் பெண்கள் அவனின்
'வா 'எனும் ஒற்றை சொல்லில் அவன் மடியில் வந்து அமர்ந்து கொண்டு தான் பழக்கம். இவள் ஒருத்தி மட்டும் தான் விலகி நிற்கிறாள்.
விலகி நிற்பவளை என்னை விலக்கி வைப்பவளை என் இரு கரம் கொண்டு அணைக்கும் நாள் எந்நாளோ என்று அவன் தேகம் முழுவதும் பரபரப்பு.
அவளைப் பார்த்துவிட்டு வந்த அந்த நாளுக்கு பிறகு, அவன் மனது வேறு எந்த பெண்ணினிடமும் செல்லவில்லை.
ஆனால் ஒரே ஒரு முகம் மட்டும் மாறி மாறி அவன் கண்களின் மேல் நிழல் உருவாய் வந்து சென்றது. அந்த உருவத்தை நினைத்து லேசாக சிரித்துக் கொண்டான்.

தனது திருமணத்தை ஏன் நம் பெற்றோர் எவ்வளவு தள்ளி வைத்து இருக்கிறார்கள? என்று அவனுக்கு கோபமாய் வந்தது.

உமா தன் தங்கையின் திருமணத்திற்கு பிறகுதான் 'தான்'திருமணம் செய்து கொள்ளப்போவதாக சொன்னதுதான் காரணம் என்று தெரிந்து கொண்டவன் மனதில் நக்கலாய் நினைத்து கொண்டான்.

"நம்மள விட காசு பணம் எதிலுமே சரிசமம் இல்லாதவர்களுக்கு இவ்வளவு மானமும்
ரோசமும் எங்க இருந்துதான் வருதோ" என்று.
மாமனார் ஆகப்போகும் சிவன் மீது அவனுக்கு எந்த மரியாதையும் இல்லை. அதேபோல் உமாவின் அழகு மட்டும் தான் அவள் பால் அவனை சுண்டி இழுக்கிறது. வெறும் புற அழகை மட்டும் வைத்து தான் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டது.

ரத்னாவின் நிச்சயதார்த்தம் திருச்சூரில் என்பதால் மொத்த குடும்பமும் திருச்சூர் நோக்கி தங்களது பயணத்தை ஆரம்பித்தது. பயணத்தில்
இரண்டு மூன்று முறை சங்கரன் உமாவின் நம்பருக்கு அழைத்து, ரத்னாவிடம் பேசிக்கொண்டே வந்தான்.
இருவரும் சளைக்காமல் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து உமாவின் மனதிற்குள் லேசான ஏக்கமும், கூடவே 'ரத்னாவை சங்கரன் நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும்.
எந்தவித காரணம் கொண்டும் ரத்னா மீண்டும் குருவின் கண்களில் பட்டு விடக்கூடாது 'என்று தவிப்பாய் இருந்தது. தன்னை பார்க்க வந்த பொழுது குருவின் கண்களில் ரத்னா பட்டதையும் அவளை அவன் கண்கள் போதையாய் பார்த்ததையும் கண்டு கொண்டு இருந்தாள் உமா. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த ரத்னாவின் திருமணம் நடக்க வேண்டும். தெய்வமே என் தங்கையை காப்பாற்று... என்று அவள் மனம் முழுவதும் பிரார்த்தனைகள்.
சங்கரனுக்கு ரத்னாவின் மீதிருக்கும் பாசம் நேசம் அக்கறை போன்ற எந்த மென்மையான உணர்வுகளும்
குருபரனுக்கு தன்மீது கிடையாது என்பது உமாவுக்கு நிச்சயம்.

அவனுடன் வண்டியில் செல்லும்போது அவன் பார்வை தன் மீது படிந்த விதம் அவளுக்கு திரௌபதி துகிலுரிப்பு படலத்தை ஏற்படுத்தியது. இப்பொழுது நினைத்தாலும் உடம்பு முழுவதும் அருவருப்பு. அவனை திருமணம் செய்து கொண்டு இந்த உணர்வை வாழ்நாள் முழுவதும் எப்படி சகிக்க போகிறோம் என்ற ஆயாசம் அவளுக்குள். வேண்டாம்' என்று சொல்லிவிட்டு தப்பிக்க இயலாது. இந்த வாழ்வு என்னை ஏன் புரட்டிப் போடுகிறது. 'ரயிலில் இருந்து குதித்து விடலாமா' என்று கூட அவளுக்கு ஒரு முறை தோன்றியது தான்!அப்படித்தான் ஏதாவது செய்து கொண்டால் மணப்பெண்ணாக ரத்னாவை பலியிட்டு விடுவார்களோ என்ற பயம் வேறு. அதனாலேயே தன்னை அடக்கி கொண்டாள்.

அவர்களுக்கு சம்மதம் சொல்லியாகிவிட்டது. தந்தைக்கும் இதில் பூரண சம்மதம். முதலில் வேண்டாம் என்று சொன்ன அம்மா கூட இப்போது ஒப்புக் கொண்டார்கள்.

திருமணம் இப்போது வேண்டாம் என்று சண்டை போட்ட ரத்னாவுக்கு இப்போது சங்கரனிடம் முழு ஈடுபாடும் வந்தாயிற்று.
என் ஒருத்தியின் வாழ்க்கை எப்படி எழுதப்பட்டிருந்தாலும் வீட்டில் மற்றவர்கள் சந்தோஷமாய் இருப்பது போதும் எனக்கு என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள்.

ஆனால், குருபரன் இவ்வளவு காட்டுத்தனமாக வைத்திருக்கும் காம உணர்வு காதலாக மாறும் எனில் உமாவின் வாழ்க்கையில் நிச்சயம் தென்றல் வீசும்.

கண்டதும் காதல் எப்போதும், எல்லா நிலையிலும் வருவது இல்லை. "காம உணர்வு மட்டுமே கோடிக் கணக்கான திருமண உறவுகளை காதல் -நேசம் என்று கொண்டு செல்கிறது.
இன பெருக்கம் செய்து வாழ்க்கை சுழலில் இருவரும் ஒன்றாக நீந்தி ஒருவரான பின் முதிர்ந்த வயதில் நீயில்லா உலகில் நானில்லை எனும் நிலைக்கு கொண்டு செல்லும் முதல் படி காமம். இதில் தவறு ஒன்றும் இல்லை. உலகின் ஆதி மொழி காமம்."

இவை எல்லாம் சரிதான். உமா குருவின் மோகத்தை தூண்டிவிட்டு, காமத்திற்கு இரை போட்டு தன் காதலால் ஜயிப்பாளா...
இல்லை அவனது மோகத் தீயில் எரிந்து சாம்பல் ஆவாளா?

ஆட்டம் தொடரும்.
 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
124
Reaction score
33
Points
63
ரயில் பயணம் நீள்வது போல் உமாவின் பயமும் நீண்டுகொண்டே போகிறது. அவளுக்கு குருவை திருமண உறவில்
நினைத்து பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் ரத்னா சங்கரனை தவிர வேறொன்றும் நினைவில்லாமல் நிச்சய நாளுக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள். இதில் எதிலும் சிக்காமல் சந்தோஷ சிறகுகள் விரித்து பறப்பது இளைய தங்கை சாந்தா தான்.

சங்கரனின் அருகில் அமர வைக்கப்பட்டு கையில் நிச்சய புடவை கொடுக்கப்பட்டு, மாற்றிக்கொண்டு வர சொல்லப்பட்டதும் தான் நிஜமாகவே பதட்டத்தை உணர்ந்தாள் ரத்னா.
"நான் சிறு பெண் அல்ல...ஹாயாக பள்ளிக்கூடம் சென்று சந்தோஷமாய் துள்ளி குதிக்கும் மாணவி இல்லை இனி நான்.எனக்காக திருமணமும் அதைத் தொடர்ந்து கடமைகளும் காத்துக் கொண்டிருக்கின்றது ஒருவருக்கு மனைவியாக போகிறேன்" என்ற உண்மை புரிய லேசாக கண் கலங்கி ஜீரணித்துக்கொள்ள முயன்றாள். ஏமாற்றம் அவள் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. மிக நெருக்கத்தில் இவற்றையெல்லாம் அமர்ந்துகொண்டு பார்த்துக்கொண்டிருந்த சங்கரனுக்கு அவளை நினைத்து ரொம்பவும் பாவமாக இருந்தது. மிகவும் சிறிய பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டு விட்டோமே என்று கலங்கினான் . ஆனால் இவ்வளவு தூரம் வந்துவிட்டு பின்வாங்க முடியாது. அவர்கள் வீட்டில் திருமணத்திற்கு வேகமாக பார்க்கிறார்கள் எனும்போது நான் இல்லை என்றாலும் வேறு யாராவது அவளைத் திருமணம் செய்து கொண்டு தான் போக போகிறார்கள். இதில் என் தவறு என்ன என்று மனதிற்குள் சமாதானம் செய்து கொண்டான். ஆனாலும் அவள் முகம் காட்டிய வர்ணஜாலங்கள் அவன் மனதை உலுக்கியது.

மனதிற்குள் ஒரு விஷயத்தை இறுக முடிந்து கொண்டான் சங்கரன். திருமணம் முடிந்த பிறகு அவளது மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு ஏதாவது ஒரு கல்லூரியில் மாலை நேரத்திற்காவது படிப்பதற்கு அனுப்ப வேண்டும்.
"தாந்தான் வெறும் பத்தாம் கிளாசுடன் நிறுத்தி விட்டாயிற்று. மனைவியையாவது படிக்க வைக்க வேண்டும் ". அவர்கள் குடும்பத்தில் எல்லாம் இது சாதாரண விஷயமே கிடையாது. இன்னும் கேட்டால் சங்கரனின் அம்மா திலகா மருமகள் எப்போது வீட்டிற்கு வருவாள், குடும்ப பொறுப்புகளை அவளிடம் கொடுத்து விடலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறாள். அம்மாவை சமாளிக்க வேண்டும். சுற்றியுள்ளவர்கள் பேசும் வார்த்தைகளையும்,சுற்றத் தாரின் ஒப்பீடுகள் நிச்சயம் உண்டு, அவற்றை எல்லாம் தூர தள்ளி வைக்க வேண்டும் . அவர்கள் வீட்டிற்கு வந்து வத்தி வைப்பதையும் கடந்து வந்தாக வேணும்.ஆனால் எது எப்படி இருந்தாலும் நினைத்ததை மட்டும் பின்வாங்காமல் செய்தாக வேண்டும். அவள் குடும்பம் நடத்துவதை விட முக்கியம் இந்த வயதில் அவளது கல்வி என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தான்.

நிச்சயம் முடியும் தருவாயில் எவ்வளவு நகை எவ்வளவு தொகை என்றெல்லாம் பேச ஆரம்பித்தனர் திலகா வீட்டினர். அன்னபூரணி சொன்னதின் தைரியத்தில், ரத்னாவுக்கு 50 சவரன் நகையும், சங்கரனுக்கு பத்து
சவரத்தில் கைக்கு மோதிரம் கழுத்துக்கு செயின் மற்றும் பிரேஸ்லெட் என்று யோசித்து வைத்திருந்தார் சிவன். அது என்னவென்றால் , ராஜா ராணி கட்டில் அதற்கான மெத்தை, வீட்டிற்கு புதியதாக பிரிட்ஜ், வாஷிங் மெஷின், இவர்கள் இருவருக்குமான பிரத்தியேக பீரோ, சங்கரனுக்கு இரு சக்கர வாகனம், கையில் தொகையாக இரண்டு லகரங்கள் என்று ஒரு லிஸ்ட் நீண்டு கொண்டே செல்ல, இன்னொரு பக்கம் திருமண செலவு பாதி பாதி என்று இன்னொரு குண்டாய் போட்டார் திலகாவின் கணவர்.
முதல் பெண்ணிற்கு பெரிய இடம் என்றால் குறைவாக செய்ய முடியுமா... நம் பிள்ளை மட்டமா எனும் எண்ணம் தான் அவர்களை பட்டியல் இட்டு சீர் கேட்க தூண்டியது.
சிவம் தனக்குள்ளேயே திகைத்துப் போனார். சொந்த தங்கை இவ்வளவு வரதட்சணை கேட்பாள் என்று அவர் சிறிது கூட நினைத்து பார்க்கவில்லை. இதைத் தவிரவும் பித்தளை பாத்திரங்கள் வெள்ளி சாமான்கள்,என்று வரிசையாய் வரிசைகள்.
சொந்தகாரர்கள் என்று சொல்வதை விட கடன் கொடுத்தவர்கள் வசூல் செய்வதைப் போல இருந்தது அவர்கள் கேட்கும் வரதட்சணயும் சீரும்.
வேறு வழி இல்லை வெளியில் பெண் கொடுப்பதாய் இருந்து யார் கேட்டு இருந்தாலும் கூட இதை எல்லாம் செய்து தான் ஆகவேண்டும் . என்னதான் வரதட்சனை ஒழிப்பு என்ற ஒரு பக்கம் பதாகைகள் தொங்கிக்கொண்டு இருந்தாலும் இன்னொருபுறம் உங்க பொண்ணுக்கு நீங்க பண்ண போறீங்க... என்ற ஒரு வார்த்தையில் இவர்களது எதிர்பார்ப்பும் மொத்தத்தையும் தூக்கி அடைத்து விடுகிறார்கள், ஜாடியில் ஒரு வருடத்திற்கான ஊறுகாய்கள் போல. சிலர் வாய்விட்டு கேட்டு விடுகிறார்கள்.சிலர் வாய்விட்டு கேட்காமலே செய்ய வைக்கிறார்கள். எப்படி இருந்தாலும் ஒரு ரூபாய் கூட செலவழிக்க மாட்டேன் என்ற பெண்ணைக் கட்டிக் கொடுக்க முடியாது.
சில சமயங்களில் என்னதான் பெண்களுக்கு தன் பிறந்த வீட்டு நிலை தெரிந்திருந்தாலும் கூட மற்றவர்களுடன் ஒப்பிட்டோ,இல்லை தான் வருங்காலத்தில் அவர்கள் (புகுந்த)வீட்டில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று யோசித்தோ பெற்றவர்களை இவர்களே கூட நிறைய செய்ய வேண்டும் என்று வற்புறுத்தும் நிகழ்வுகள் கூட இந்த சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. எதை எப்படிப் பார்த்தாலும் பெண்ணை பெற்றவர்கள் ஏதாவது ஒரு வழியில் முடிகிறதோ முடியவில்லையோ மனநிறைவுடன் அளவுக்கு அதிகமாகவே சீர் செய்ய வேண்டி உள்ளது.

சங்கரனுக்கு இவற்றை பற்றி பெரியதாக ஒன்றும் தெரியாது.ரத்னா உலகம் தெரியா சிறு குழந்தை.
ஆனால் விவரங்கள் புரிந்த உமாவுக்கு உள்ளே விக்கித்து போயிற்று.
என்னதான் குரு வீட்டில் நம்பிக்கை கொடுத்திருந்தாலும் ஏறத்தாழ பத்து லகரங்கள்(1990 களில் என்று யோசித்தால் )... அம்மாடியோவ்!
அப்பாவால் எப்படி முடியும் என்று கலங்கினாள்.
அவளை, முன்னிறுத்தி பெறப்படும் தொகை. அவள் வாழ்நாள் முழுவதும் அங்கு அடிமைதான். மீட்சி பெற வழி இல்லை. பெற்றவர் அவளை விற்றுவிட்டார். அவளால் துக்கம் தாங்க இயலவில்லை.

யோசித்து சொல்வதாக சிவன் சொல்ல, தன் கணவரை தனியே கூட்டி சென்ற பாறு' இதுல யோசிக்க என்ன இருக்கு அதுதான் அன்னபூரணி அம்மா எல்லாத்தையும் தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி இருக்காங்களே... சரினு ஒத்துக்கோங்க' என்று இதோபதேசம் செய்ய அத்தனை பேரும் வெளியே வந்த சிவன் இவர்கள் சொல்லும் எல்லாவற்றுக்கும் சரிதான் என்று சொல்லிவிட்டார்.
அன்று இரவே அருணாசலத்திற்கு சிவன் போன் செய்ய, என்னய்யா நிச்சயம் எல்லாம் எப்படி நடந்தது ... மூத்த சம்பந்திக்கும் மரியாதை செய்யணுமின்னு தெரியாம போச்சு உமக்கு என்று நக்கல் அடித்தார். இப்படி பேசுபவரிடம் நகை கல்யாண செலவு என்று எவ்வாறு பேச முடியும் என்ற மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்தார் சிவன்.

வேறு வழியே இல்லை இவரிடம் பேசித்தான் ஆகவேண்டும் என்று முடிவு செய்தவராக சங்கரன் வீட்டில் கேட்டவற்றை பட்டியலிட, 'பரவாயில்லைய்யா, உம்ம ஒரு பொண்ணை காட்டி மூணு பொண்ணுகளுக்கும் வழிய பண்ணிட்ட... சரி எப்ப வர்ரியோ வந்து வாங்கிக்கோ எல்லாத்தையும் என்று முடித்துவிட்டார் அருணாச்சலம். கேட்ட சிவனுக்கு பூமிக்குள் புதைந்து விட மாட்டோமா என்று ஒரு கணம் தோன்றியது. பிறகு பெண்ணை பெற்றுவிட்டு மானம் மரியாதை என்று பேசிக்கொண்டு வெட்டியாய் திரிவதில் என்ன பயன் என்று தன்னையே தேற்றிக் கொண்டார்.

அருணாச்சலம் சிவனிடம் தொலைபேசியில் பேசியதை தன் அறையில் இருந்து கொண்டே கேட்டுக் கொண்டிருந்த குருபரன் முகம் சடுதியில் விகாரத்தில் மாறியது. அலட்சிய முறுவல் ஒன்று அவன் இதழ் கோடியில்.
என்னிக்குமே அன்ன காவடி... அன்னகாவடி தாண்டி என்று காற்றில் கூறிக் கொண்டிருந்தான்.
யாரிடம்?

**********************************************************
சாதுர்யா இன்றுடன் திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீரங்கம் வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அவளின் சந்தோஷம் கரையை உடைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அம்மா பக்கத்தில் இல்லை என்பது பெரிய வருத்தமாக இருந்தாலும் கூட கட்டவிழ்த்து விடப்பட்ட கன்றுக்குட்டி தான் அவள்.
யாராலும் அவளை கையில் பிடிக்க முடியவில்லை. முதலில் வந்த பொழுது தோழர்கள் யாரும் இல்லை என்ற வருத்தம் அவளுக்கு இருந்தது.. ஆனால் இப்பொழுது பழைய தோழமைகள் ஒன்றுகூட தன்னை ஒதுக்காமல் சேர்த்துக்கொள்ள ஜோதியில் ஐக்கியமாகி விட்டாள் அவள். சதாசர்வகாலமும் கையில் மட்டையை பிடித்துக்கொண்டு ஓட்டம்தான்.
ரங்கனும் வந்து சேர்ந்துவிட சொல்லவா வேண்டும் நிலையை.

தன் அம்மா மற்றும் பாட்டி தாத்தாவுடன் வயலூரில் விடுப்பின் முதல்வாரத்தில் இருந்துவிட்டு தான் ஸ்ரீரங்கம் கிளம்பி வந்தான் ரங்கன்.முதலில் தன்னைப் பார்க்க வரவில்லை என்று கோபப்பட்ட சாதுர்யா கூட தன் கோபத்தை மறந்துவிட்டு ரங்கனுடன் இணைந்து கொண்டு விட்டாள் .

இரண்டு மூன்று நாட்கள் ஸ்ரீரங்கத்தில் கழித்தவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.
தாத்தா பாட்டியிடம் சொல்லிவிட்டு
சாதுர்யாவையும் அழைத்துக்கொண்டு வயலூருக்கு பிரயாணம்.
தாமோதரன் இருவர் முகத்திலும் ஏதோ ஒரு அர்த்தம் உடைய புன்னகை.

லட்சுமியின் மனம் முழுவதும் தனது மருமகள் மாலதி, பேத்தி சாதுர்யா பற்றி சொன்னவைகளே ஓடிக்கொண்டிருந்தது. ஏனோ அவற்றை தாமோதரனுடன் பகிர்ந்துகொள்ள லக்ஷ்மிக்கு வாய் வரவில்லை.

சாதுர்யா கிளம்பிப் போய் மூன்று நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் லக்ஷ்மி தங்கம் இவற்றையெல்லாம் ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்..
லக்ஷ்மியின் மனம் முழுவதும் ஏதோ சந்தோஷ அலை. மாட்டுக் கொட்டகையில் அமர்ந்துகொண்டு அங்கு சாதுர்யா செய்த குறும்புகள் எல்லாம் ஞாபகம் வந்தது லக்ஷ்மிக்கு.
அன்று மதிய வேளையில் அவர்கள் வீட்டுப் பசு மகாலட்சுமி கன்று ஈன சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள் லக்ஷ்மி அம்மாள். வீட்டின் பசுக்கள் குட்டி ஈனும் பொழுது ஒவ்வொரு சமயமும் தனக்கு குழந்தை பிறந்தது போன்ற குதூகலம். அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் விடாதே!

வயலூரில்,
தனது மாமியார் மாமனாரை வருடாந்திர பரிசோதனை செய்யவென கூட்டிக்கொண்டு வழக்கமாக செல்லும் சென்னையில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தாள் ரேணு. வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகிவிடும். இருவரும் ஸ்ரீரங்கத்திற்கு செல்வதாக இருந்தால் செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றிருந்தாள் ரேணு.
ஆனால், இளம்பிராயத்தினர் இருவருக்கும் ஸ்ரீரங்கம் செல்ல மனது இல்லை. ரங்கன் எனக்கு சமைக்க தெரியும் என்று சொல்லிவிட, சமையல் தவிர வேறு ஒன்றும் பெரிய வேலை இல்லை என்று இருவரும் முடிவு செய்து வயலூரிலேயே தங்கி விட்டார்கள்.

மதியம்வரை பம்புசெட்டில் ஆட்டம் போட்டுவிட்டு, வீட்டிற்கு வந்த சாதுர்யா, ரங்கன் வீட்டு மாட்டு கொட்டகை அருகே வரும்போது, கீழே இருக்கும் சாணியை கவனிக்காமல் ஓடிவர, கால் வழுக்கி விட்டது. அந்த சமயம் தனது தலை துவட்டிய துவாலையை பின்கட்டில் உலர்த்தவென அந்த பக்கம் வந்த ரங்கன் அவள் கீழே விழுந்துவிடாமல் இருக்க அவள் இடுப்பை வலுவாக பற்றி இழுக்க, சுரீர் என்று அடிவயிறு கவ்வி பிடிக்க, வலி தாங்கமுடியாமல் முனகிக்கொண்டே தன் அறைக்கு செல்ல எத்தனி த்தவளால் சுத்தமாய் முடியவில்லை. பற்களை கடித்து பொறுத்துக்கொள்ள முயன்றவளால் முடியாமல் போக ரங்கானே அவளை உள்ளே சென்று கொண்டு விட்டான். வலியில் அவள் கண்கள் nerr பொழிய தவித்து போனான் ரங்கன். வலியின் தாக்கத்தில் வாந்தியும் மயக்கமுமாய் அவள் தவிக்க,என்ன செய்வதென்று புரியாமல் தன் அம்மாவுக்கு ரங்கன் போன் செய்தால், அவள் எடுக்கவில்லை.
அதற்குள் சாதுர்யா குளியலறை சென்று வந்தவள் முகம் எங்கும் புரியா உணர்வு குழப்பம்.ரங்கனை வெளியே இருக்க சொல்லிவிட்டு
தன்னிடம் தன் அம்மா கொடுத்து வைத்திருக்கும் நாப்கின் எடுத்துகொண்டு மீண்டும் டாய்லெட் சென்று வந்தவள், பாட்டி சொன்னபடி நேரத்தை தனது டைரியில் எழுதி வைத்துகொண்டு கதவு தாழ்ப்பாளை திறந்தவள் ரன்கனிடம் எப்படி சொல்வது என்று தயங்க, அவனோ 'குட் நியூசா சாது...'நீ வயிறு வலின்னு அழுத உடனே அப்படி இருக்குமோன்னு தோணிச்சு என்றான்.
பிறகு லட்சுமி பாட்டிக்கு அழைத்து விஷயத்தை சொன்னவன், வடித்திருந்த சாதத்தில் கொஞ்சம் எடுத்து பாயசம் செய்து, அம்மா அரைத்து வைத்து சென்ற உளுந்து மாவில் வடை பொரித்து சதுர்யா தட்டில் வைத்து அவள் அறைக்கு கொண்டு சென்றான்.

உணவு வேண்டாம்.. பிடிக்கல என்று அழுதவளை தேற்றி ஊட்டியும் விட்டான்.
வயிறு வலிக்கிறது என்பவளுக்கு எதை கொடுத்தால் வலி குறையும் என்றுதான் அவனுக்கு புரியவில்லை.
வேலை செய்யும் பெண்களை கேட்கலாம் என்றால், வீட்டுக்கு பெரியவர்கள் வராமல் விஷயம் வெளி செல்வது சரி இல்லை என்று யோசித்து தன் தோழிக்கு அழைத்து கேட்டு வெள்ளை வெங்காயம் எடுத்து நீரில் வேக வைத்து சாதுவுக்கு கொடுத்தான் ரங்கன்.
இருவர் மனங்களிலும் பெயர் சொல்ல முடியா விளங்கா உணர்வு.











.
 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
124
Reaction score
33
Points
63
ரங்கன் சொன்ன விஷயம் கேட்டு, முதலில் அதிர்ச்சி அடைந்த லட்சுமி அம்மாள் பிறகு தன்னை சுதாரித்தவராக, முதலில் ரங்கனை பெண்ணை கூட்டிக்கொண்டு ஸ்ரீரங்கம் வரச்சொல்லி, தானே அனைத்தையும் பார்க்கலாம் என்று நினைத்தவர், பின்னர் இந்த நிலையில் துணைக்கு வேறு பெரியவர்களும் யாருமில்லா சமயத்தில் பூப்பெய்தியிருக்கும் சாதுர்யாவை கூட்டிக் கொண்டு வருவது சாத்தியப்படாது என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவர், ரங்கனிடம் பெண்ணவள் என்ன சாப்பிட்டாள், அவள் உடல்நிலை எப்படி இருக்கிறது என்றெல்லாம் கேட்டு அறிந்து கொண்டார்.
ரங்கனின் பதில்களில் சற்றே அமைதியுற்றவர், மேலும் சில விஷயங்களை அரங்கனிடம் சொல்லிவிட்டு, எப்படியும் இங்கு ஏற்பாடுகளை பண்ணிவிட்டு மாலைக்குள் வயலூர் வந்துவிடுகிறோம் என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டார்.
வயலுக்கு சென்றிருந்த தாமோதரன் வீட்டிற்குள் அப்பொழுதுதான் நுழைய கையில் இனிப்பை வைத்துக்கொண்டு தாமுவிடம் வேக வேகமாய் ஓடி வரும் அந்த எழுபது வயது பாட்டி அங்கு நின்று வேலை செய்துகொண்டிருந்த எல்லோருக்குமே புதியவர் தான். பாட்டியின் நடையில் கூட இன்று ஒரு துள்ளல்.
இனிப்பை கணவரிடம் கொடுத்துவிட்டு, கணவர் உண்ணுவதை பார்த்து சந்தோஷப்பட்டவளாக மெல்ல தாமுவிடம் சாதுர்யாவின் விஷயத்தைச் சொல்ல கிழவருக்கும் மனைவிடம் இருந்து சந்தோசம் தொற்றிக்கொண்டது.
லட்சுமி பாட்டி தனது மருமகள் மாலதிக்கும் அழைத்து தகவலை சொல்ல மாலதிகோ கண்களில் இருந்து நீர் கோர்த்துக் கொண்டது.
வெகு காலமாய் மாலதி கவலைப்பட்டுக் கொண்டிருந்த விஷயம் இது. தன் வீட்டில் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நல்ல விஷயம், இன்றோ தன் பெற்றோர்கள் வீட்டில் நடக்காமல், தன் புகுந்த வீட்டிலும் நடக்காமல், நாத்தனார் வீட்டிற்கு சென்று இருக்கும்பொழுது அதுவும் பெரியவர்கள் கூட யாரும் இல்லாத நிலையில் நடந்திருக்கிறது என்றால் அந்த அம்மாவின் உணர்வுகள் எப்படி இருக்கும்?
இன்னொரு பக்கம் இத்தனையையும் தனியாய் சமாளித்துக் கொண்டிருக்கும் ரங்கனை
நினைத்தால் மிகவும் சந்தோஷமாக இருந்தது மாலதிக்கு.
கணவர் வெங்கடேசன் அடிக்கடி ரங்கனை பற்றிய உயர்ந்து புகழ்ந்து பேசும்போது சற்று மாலதிக்கு பொறாமை ஏறும். தன் நாத்தனார் மகனைப் போல தன் மகளும் தேர்ந்தவளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளூர மாலதிக்கு உண்டு.
அதனால் தான் ரங்கனை தூர நிறுத்தும் நோக்கில் அவனிடமே சாதுர்யாவின் வருங்கால முன்னேற்றம் பற்றி பேசியது. ஆனால் ரங்கன் எவ்வளவு பொறுப்பானவன் என்பது இந்த நிமிடம் மாலதிக்கு புரிந்து போயிற்று. அலுவலகத்தில் இருக்கும்
தன் கணவருக்கு அலைபேசியில் அழைத்து விஷயத்தை சொன்னவளுக்கு, இந்த நொடி ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும் என்று பரபரத்தது. லட்சுமி அம்மாள் மாலதியின் பெற்றவர்களுக்கும் சொல்ல அவர்கள் திருநெல்வேலியிலிருந்து தலைக்கு தண்ணீர் ஊற்றும் போது சீருடன் வருவதாக சொல்லிவிட்டார்கள்.

இங்கு வயலூரில் தன் அம்மா ரேணுவுக்கு மேலும் இரண்டு முறை முயற்சி செய்து பார்த்து விட்டு, அழைப்பை எடுக்காத காரணத்தால் குறுஞ்செய்தியை அனுப்பிவைத்தான் ரங்கன். அவன் மனம் முழுவதும் சொல்ல முடியாத பரவசம்.
தன் கைகளில் தூக்கி விளையாடிய சாதுர்யா இன்றோ தன் கைகளில் கீழே விழாமல் தாங்கும் பொழுது பெரியவள் ஆகிவிட்டது அவனுக்கு ஆச்சரியமும் சந்தோஷமும் ஆக உணர்வை பகிர்ந்து கொடுத்தது.
வலியில் சிறிது நேரம் அழுது கொண்டிருந்த சாதுர்யா, ரங்கன் தயாரித்துக் கொடுத்த வெள்ளை வெங்காயச் சாரின் உபயத்தால் வலி மட்டும் பட்டு தூங்கிவிட்டாள். முதலில் தரையில் படுக்கிறேன் என்றவளை பிடிவாதமாக 'இந்த மாதிரி நேரத்துல தான் உடம்ப பூ மாதிரி பார்த்துக்கணும். நீ தரையில் படுக்க வேண்டாம் மரியாதையா கட்டி மேல படு ' என்று நிர்பந்தப்படுத்தி கட்டிலில் படுக்க செய்திருந்தான் ரங்கன்.

புதியதாக கன்று போட்டிருந்த மகாலட்சுமியை விழுந்து ந்து வணங்கிவிட்டு கொட்டிலுள்ள மற்ற பசுக்களுக்கும், வீட்டுக்கும் தகுந்த ஏற்பாடுகளை செய்துவிட்டு ஸ்ரீரங்கத்திலிருந்து வயலூர் கிளம்புவதற்கு லட்சுமி தாமுவுக்கு மாலை ஆகி விட்டது.
இருவருக்கும் ரங்கன் எவ்வாறுதான் சமாளிக்கிறானோ என்ற தவிப்பு. தாமு டிரைவரை அழைக்க மறந்தவராக தானே காரை எடுத்து விட்டார்.

மாலதி வெங்கடேசன் இருவரும் வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகிவிடும் என்று வெங்கடேசன் தன் அப்பாவிற்கு போன் செய்து சொல்லி விட்டார்.
சென்னையில் மருத்துவமனையின் சில வழக்கமான சோதனைகள் முடிந்த பின்னர் தனது அலைபேசியை எடுத்து பார்த்த ரேணுகாவிற்கு இந்த க்ஷணம் தனது வீட்டிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றியது. தனது மாமனார் மாமியார் இடமும் விஷயத்தைப் பகிர்ந்து கொண்டவளிடம்,
' அத்தை சார்பாக சீருக்கு தேவையான துணி மணிகளை இவர் சென்னையில் உள்ள பிரபல கடைகளில் வாங்கிடலாம். அதையும் இங்கே இருந்து எடுத்துட்டு போய் விடலாம் ' என்ற மாமியாரின் கூற்று சரியாக பட மருத்துவமனையில் வேலை முடிந்தவுடன் மூவரும் தியாகராயநகரில் உள்ள கடைகளுக்கு செல்வதாக ஏற்பாடாகியது.

மாலை நேரத்தில் பல சேர்ந்த தனது தாத்தா பாட்டியிடம், ரங்கன் சாதுர்யாவை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, தானே நேராக திருச்சி சென்று சாதுவுக்கு தேவையான மூன்று செட் பாவாடை தாவணிகளும், இரண்டு பட்டு புடவைகளும், மெல்லியதாக கழுத்துக்கு செயினும், காதுக்கு ஜிமிக்கியும், கால்களுக்கு பொன்னிற முலாம் பூசப்பட்ட வெள்ளி கொலுசுகளும் வாங்கினான். ரங்கனின் கற்பனை முழுவதும் இவற்றை அணிந்து கொள்ளும்போது சது எப்படி இருப்பாள் என்று ஓடிக் கொண்டிருந்தது.

நேரே வயலூரில் வீட்டிற்கு வந்தவன் லக்ஷ்மியிடம் ' 'பாட்டி இது எல்லாம் நான் பார்ட் டைமா நம்ம ஆபீஸ்ல வேலை பார்த்து சம்பாதித்த பணத்தில் வாங்கினது. நீங்க எப்ப புது உடுப்பு அவளுக்கு போட்டு விடுவீங்களோ அப்போ இதெல்லாம் கட்டாயம் அவளுக்கு போட்டு விடுங்கள் ' என்று கொடுத்து விட்டுச் சென்று விட்டான்.

தாமு லட்சுமி இருவருக்கும் என்ன சொல்வது என்றே புரியவில்லை. இவ்வளவு விரைவாக ரங்கன் இத்தனை விஷயங்களையும் செய்துவிடுவான் என்பது அவர்களுக்கு வியப்பாக இருந்தது. அதேசமயம் ரங்கன் சாதுரியாவிடம் காண்பிக்கும் அக்கறை அவர்களை வேறு ஒரு முடிவிற்கு வர தூண்டியது.
அது சாதுர்யா - ரங்கன் இருவருக்குமான முடிச்சு. பெண் படித்து முடித்தவுடன் வெளியில் மாப்பிள்ளை தேடுவதை காட்டிலும் இவனே மாப்பிள்ளை ஆகிவிட்டால் பெண்ணைப் பற்றிய கவலைகள் குறையும் யோசித்தார்கள் அந்த முதிய தம்பதியினர்.
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பது ரங்கனுக்கு வேண்டுமானாலும் தெரியாது. ஆனால் தன் அறையில் படுத்துக் கொண்டிருக்கும் சாதுர்யா காதுகளில் அவர்களின் பேச்சு தெளிவாக கேட்டது.
ரங்கன் தனக்காக பாவாடை தாவணிகளும் நகைகளும் எடுத்து வந்திருக்கிறான் என்பது தெரிந்த உடனேயே அவள் மனதுக்குள் பட்டாம் பூச்சி பறக்கத் தொடங்கிவிட்டது.
தன் நண்பனை நினைத்து அவள் கர்வம் கொண்டாள்.
பெரியோர்களின் பேச்சு காதில் விழும்போது அவளால் தன் உணர்வுகளை பகுத்தறிய முடியவில்லை. ஆனால், திருமணம் என்று ஒன்று செய்துகொண்டால் மணமகன் கண்டிப்பாக ரங்கன்தான் என்று முடிவு எடுத்துக் கொண்டாள் பேதை.

எல்லோர் வாழ்விலும் திருமண உறவு முக்கிய அங்கம். மறுப்பதர்கில்லை. வாழ்க்கை துணை நன்றாக அமைந்து விட்டால் எல்லோரும் சாதனையாளர்களே.
அந்த வயதில் அவளின் மனதில் ஒரு வகையில் மெல்ல தன் தடத்தைப் பதித்தான் ரங்கன்.
இது சரியா தவறா என்பதற்கெல்லாம் என்னிடம் விடை இல்லை. ஆனால் மிக சிறிய வயதில் பிள்ளைகளின் காதுபட சில விஷயங்கள் பேசாது இருப்பது நன்று. அவை எந்தவிதமான எண்ணஅலைகளை விதைக்க கூடும் என்பது யாருக்கும் தெரியாது.

மாலதி வெங்கடேசன் ரங்கனின் பெற்றோர் ரங்கனின் பாட்டி தாத்தா சாதுவின் தாய்வழி உறவினர், அக்கம்பக்கம், வீட்டில் வேலை செய்பவர்கள்,என்று வெகு காலம் கழித்து வயலூர் வீடு வைபவம் காணுகிறது.
ரங்கனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து இப்போது சாதுர்யாவின் பூபெய்தல் விழா.
ரேணுவுக்கு கண்கள் லேசாக கலங்கிவிட்டது.

விழாவுக்கு முதல் நாள் வயலூருக்கு வந்து சேர்ந்த மாலதியின் பெற்றோரும் அண்ணனும் அவர்கள் கொண்டுவந்த சீர்வரிசைகளை மாலதியிடம் கொடுக்க விழா நாளன்று நீர் ஊற்றிய பிறகு, தன் அண்ணன் வாங்கி வந்த பட்டுப்புடவையை தன் மகள் உடுத்த வேண்டும் என்று தனியாக எடுத்து வைத்தாள் மாலதி.
ரேணுவுக்கு தான் வாங்கி வந்தது இல்லையென்றால் தன் மகன் வாங்கி கொடுத்தது இதில் எதையாவது பெண் உடுத்தினால் நன்றாக இருக்குமென்று தோன்றியது தான். ஆனால் அண்ணியிடம் எதுவும் சொல்ல இயலாது என தன் வார்த்தைகளை விழுங்கி கொண்டாள்.
ஏற்கனவே மாலதியின் பிறந்த வீட்டில், விழாவை வயலூரில் ஏன் வைக்க வேண்டும் ஸ்ரீரங்கம் வீட்டில் வைக்கலாமே என்று கேட்டதற்கு சாதுர்யாவை இந்த சமயத்தில் அலைக்கழிக்க வேண்டாம் என்ற யோசனையில் விழாவை இங்கேயே வைத்து விட்டோம் என்று தாமு பதில் சொல்லிவிட்டார்.
இன்னும் நிலைமையை சிக்கலாக்குவதில் ரேணுவுகும் ரேணுவின் கணவருக்கும் விருப்பமில்லை. ஏற்கனவே ரேணுவின் மாமனார் மாமியாருக்கு விழா இங்கு நடப்பது பற்றி யோசனைதான்.

தான் கொடுத்த புடவையை சாத்துர்யா கட்டிக் கொள்ளப் போவதில்லை என்றவுடன் ரங்கனின் முகமே விழுந்துவிட்டது. அவளின் நிறத்திற்கு ஏற்றவாறு வெகு ஆசையாய்
ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து வாங்கி இருந்தான் ரங்கன்.
சாதுர்யாவுக்கு பிடிக்க வேண்டுமே என்று ஆயிரம் முறை கடவுளிடம் வேண்டி இருப்பான். ஆனால் இப்பொழுதோ... நிலைமை அப்படியே வேறு ஆகிவிட்டது. அவள் என்று தான் வாங்கி கொடுத்ததை உடுத்துவாளோ... அதை நான் அருகிலிருந்த பார்ப்பேனோ மாட்டேனோ என்ற கவலை ரங்கனிடம் வந்துவிட்டது. ஆனால் எதையும் முகத்தில் காண்பித்துக் கொள்ளாமல் சாதாரணமாக தான் சுற்றிக் கொண்டு இருந்தான் ரங்கன். அவன் வீட்டில் விழா என்பதால் அவனுக்கு வேலையும் அதிகம் இருந்தது.

காலை விழாவிற்கு முன்னாடி சாதுர்யாவுக்கு மாலதி அவள் அறையில் டிபன் வைத்துவிட்டு, டேபிளில் அவள் அணிந்து கொள்ள வேண்டிய புடவையையும் வைத்துவிட்டு ' நீ சாப்பிடு சாது. நான் பத்து நிமிஷத்துல வரேன். பிறகு புடவையை கட்டிக்கலாம் என்றுவிட்டு சென்று விட்டாள் மாலதி.

ஆனால் எதிர்பாராதவிதமாக, டேபிளின் மீது சாதுர்யாவின் அலைபேசி அழைக்க, தட்டிலுள்ள சாம்பார் முழுவதும் புடவையில் கொட்டிவிட அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் சாதுரியா.

சிறிது நேரத்தில் அங்கு வந்த மாலதிக்கு சாதுவின் மேல் சொல்லோணா கோபம். தன்னை கட்டுப்படுத்திக்கொண்டவள் மாமியாரை அழைத்து திரு புது புடவையை எடுத்து தருமாறு கேட்க, லட்சுமி அம்மாள் நூறு மீட்டர்கள் இடைவெளி இருக்கலாம். ஆனாலும் அவன் பார்வை மாற்றத்தை உணர்ந்து கொண்டவள், அதுவரை பார்த்திருந்த பல்வேறு திரைப்படங்களில் உபயத்தால் அதற்கான அர்த்தத்தையும் தன் மனதிற்குள் வைத்துக் கொண்டாள்.
அவள் பூசியிருந்த சந்தனத்தையும் மீறி அவள் முகம் செம்மையை தத்து எடுத்துக் கொண்டது. அன்றுவரை வெட்கம் என்ற உணர்வை அறியாத சிறுமி முதன்முறையாக அதை அனுபவித்தாள்.
ரங்கனுக்கு தானும் அங்கு சென்று அவளுக்கு சந்தனம் பூச ஆசைதான். ஆனால், ஒரு ஆண் பிள்ளையாக அங்கே செல்வதற்கு கூச்சபட்டுகொண்டு அவன் அங்கே நின்ற இடத்திலேயே நின்றிருக்க, அருகில் வாயேன் என்று கண் ஜாடையில் அழைத்தாள் சாதுர்யா. அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தாலும் அங்கு செல்வது சரியில்லை என்று யோசித்தவனாக நின்று இருக்கையில், அவர்கள் ஆர்டர் செய்திருந்த ரோசாப்பூ மாலை சற்றே தாமதமாக வர, வாயிலில் அருகே நின்று கொண்டிருந்த ரங்கன் அத மாலை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்தப் பூ மாலையை சாதுர்யாவின் கழுத்தில் போட போக, அந்த நேரத்தில் சற்றே சுதாரித்த மாலதி அவன் கைகளில் இருந்த மாலையை வாங்கி தன் அண்ணனிடம் கொடுத்தாள்.சாதுர்யா மனம் முழுவதும் ரங்கனை நோக்கி செல்ல மீண்டும் வந்து ஒரு மவுன நாடகம்.
மாலதியின் அண்ணன் பெண்ணின் மாமனாக மாலை போட அவர் கண்களும் நனைந்தது, தான் தூக்கி வளர்த்த குழந்தை என்று பெரிய பெண்ணாகிவிட்டதை பார்த்து.

விழா முடிந்த பிறகு வந்திருந்த உறவினர்கள் எல்லோரும் ஒன்றாக நின்று குரூப் போட்டோ எடுத்துக் கொள்ள ரங்கனும் சாதுர்யாவும் அருகே நின்று கொள்ள தாமு -லட்சுமி அம்மாள் இருவருக்கும் இளைஞர்களின் திருமணதை பார்த்த சந்தோஷம்.
சாது ரங்கன் திருமண உறவு சரிவருமா என்று தெரிந்து கொள்ள நானும் காத்திருக்கிறேன்.
 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
124
Reaction score
33
Points
63
13

வீட்டில் சடங்குகள் எல்லாம் முடிந்து விட்டது. அவரவர் விழா முடிந்த பிறகு ரேணுவின் வீட்டிலிருந்து கிளம்பி விட்டார்கள். இப்பொழுது வீடு வழக்கம்போல் அமைதியாக இருந்தது. விழா முடிந்த அன்று அங்கு இருந்த பொருட்களை எல்லாம் சரி செய்து விட்டு அமர்கையில் எல்லோருக்குமே களைப்பு ஓங்கியிருந்தது. மறுநாள் வெங்கடேசன் மாலதி லக்ஷ்மி தாமோதரன் நால்வரும் ஸ்ரீரங்கம் திரும்புவதாக ஏற்பாடாகியிருந்தது. மாலதியின் பிறந்தக உறவினர்களும் திருநெல்வேலிக்கு கிளம்பிச் சென்றாயிற்று.
ரேணுகா விற்கு மனதில்சொல்ல முடியாத அளவிற்கு சந்தோஷம். அவளது பிறந்த வீட்டிலிருந்து இத்தனை வருஷங்களில் இப்படி யாரும் வந்து தங்கி இருந்தது எல்லாம் இல்லை. அவளுக்கு மனதில் அந்த சந்தோஷம்,சாதுர்யா உபயத்தில்.
பெண்களுக்கு எப்போதுமே பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் தனிதான். சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எத்தனை வயதானாலும் பிறந்த வீட்டினர் உசத்தி தான்.

சாதுர்யாவுக்கும் உடல்நிலை இப்போது நன்றாகி விட்டது. இப்போதெல்லாம் ரங்கனின் பார்வைக்கு அர்த்தம் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறாள். பாட்டியும் தாத்தாவும் பேசிக்கொண்டிருந்தது அவள் மனதில் ஒருவித எண்ண அலைகளை உண்டு பண்ணி இருந்தது. டீன் ஏஜ் எனும் விடலை பருவத்தில் காண்பதில் எல்லாம் அழகு தேடும் மனம். தன்னை யாராவது கொஞ்சம் தாங்கினால் கூட பெருமையாக உணரும் பருவம். தாங்குபவன் நானாக இருந்துவிட்டால் பெண் அவளுக்கு தலைக்கு மேலே பெருமை வட்டம் இருக்கும். ஆணாக இருந்தால், ஒரு பெண்ணின் கடைக்கண் பார்வை பட்டால் கூட ஏதோ இமயமலையை ஏறிச்சென்ற சந்தோஷம். ரங்கன் மனதிற்குள் யாரோ ஒருத்தி இருக்கிறாள் தான். அவள் யாரென்று ரங்கன் இப்பொழுது இருக்கும் நிலையில் யாரிடமும் சொல்ல போவதில்லை. அதேசமயம் சாதுர்யா மனதில் ரங்கன் இந்த ஒரு வாரத்தில் செய்தவைகள் அவன்மீது தனது அத்தான் என்ற உறவை மீறி, தனது தோழன் என்ற எல்லைக் கோட்டைத் தாண்டி அவளுக்குள் அவன் சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டான். இந்த விஷயங்கள் ரங்கனுக்கு தெரியுமோ தெரியாதோ அவன் மீதான பற்று பாவை அவளுக்கு வேற கோணத்தை நோக்கி பிரயாண படுவது எவ்வளவு தூரம் சரி? பொதுவாக இந்த வயதில் ஏற்படும் ஈர்ப்பு நிலைத்து நிற்பதில்லை. பப்பி லவ் என சொல்லப்படும் பாதையை சார்ந்ததாக இருக்கலாம். இவளது எத்தகையது என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அப்படியே எல்லாம் சரியாக வந்தாலும் கூட மாலதி ஒத்துக் கொள்வாளா என்பதும் தெரியவில்லை.
காலம் வைத்திருக்கும் பரீட்சைகளில் சாதுர்யா எவ்வளவு சாதுர்யமாய் காய்களை நகர்த்தி விதியை தன்பக்கம் வளைக்க போகிறாள் என்பது போகப்போகத்தான் தெரியும். விழா என்ற நண்பனின் பார்வை என்பதனை மீறிய ரங்கனின் பார்வையில் ரசனை மிகுந்த பார்வை, அவன் அவசர அவசரமாய் அவளுக்காக ஆடைகளும் நகைகளும் வாங்கி வந்தது, எல்லோருக்கும் முன்பாக விஷயம் தெரிந்தவுடன் அவளை அவன் கையாண்ட விதம், அவனது அக்கறை, பாசம் என்று அவன் மீதான இந்த உணர்வுபூர்வமான நேசத்திற்கு வித்திட்டு
இருக்கலாம். விடுமுறை முடிந்த பிறகு அந்தப் பெண் மீண்டும் தில்லிக்கு சென்றாக வேண்டும். அங்கு போன பிறகு மேற்படிப்பு அது இதுவென்று எவ்வளவு இருக்கிறது. அவற்றையெல்லாம் சரியாக செய்து பிறகுதான் இது போன்ற விஷயங்களை யோசிக்க முடியும். அதற்குமுன் எவ்வளவோ மாறுதல்கள் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
ரங்கன் இப்பொழுதே படித்துக் கொண்டே தனது தந்தையுடன் தொழிலில் ஈடுபட ஆரம்பித்து விட்டான். அவனை அவனது தந்தை மேற்படிப்புக்காக வெளிநாடு அனுப்புவதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறார். அவன் மனதில் உள்ளது வேறு யாருக்கும் தெரியாது. எல்லாவற்றையும் மீறி இருவருக்கும் திருமணம் முடியுமானால் அது தெய்வம் இட்ட முடிச்சு என்று தான் கொள்ள வேணும்.
சாதுர்யாவின் எண்ணம் மட்டுமல்ல...
எந்த பெண்ணுக்குமே ஆணின் அக்கறை, பிணவறை அவன்பால் சாய்க்க தான் செய்யும். இதில் மாற்றம் ஒன்றும் இல்லை.
சாதுர்யா, ஒருவேளை சாதிக்கப் பிறந்தவளாக இருக்கலாம். மற்ற பெண்களின் வாழ்க்கைக்கும் அவளது வாழ்க்கைக்கும் கூட நிறையவே வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பெண்களின் உணர்வு வரையறைக்குள் தான் அவளும் இருக்கிறாள். அவளுக்கும் இது போன்ற உணர்வுகள் வருவது இயல்புதான்.

ஆனால் அவளது இந்த உணர்வுகள், ஏதாவது ஒரு விதத்தில் ரங்கனை சுழற்றி அடிக்க போவது மட்டும் உறுதி. பெண்ணவள் ஆண் அவனை அன்பினால் கொல்ல போகிறாளா, இல்லை... கொல்ல போகிறாளா?
பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் இந்த சமயத்தில் இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைக்குமா என்ன?

விடுமுறை நாட்கள் முடிந்தது ரங்கன் சென்னை சென்று விட்டான். அவனுக்கு சி. ஏ தேர்வுக்கு அட்டவணை வந்துவிட்டது. அதனால் அவன் பரிட்சைக்கு முன்பாக வைக்கப்படும் சில கோச்சிங் வகுப்புகளுக்கு சென்றாக வேண்டும்.
'முதல்முறை எழுதும் தேர்விலேயே வெற்றி பெற்றாக வேண்டும். இதுவும் ஒருவகையில் முதலீடுதான்'என்று அவன் தந்தை பல முறை கூறிவிட்டார். அதற்கு என்ன அர்த்தம் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். தேவையில்லாமல் தனது வாய்ப்புகளை கெடுத்துக்கொள்ள அவனுக்கு எந்த பிடித்தமும் இல்லை.
புத்தக மூட்டையுடன் ரேணுகா சொல்லி அனுப்பியிருக்கும் நேரா நேரத்திற்கு சாப்பிடு,ஒழுங்காக தூங்கு போன்ற அறிவுரைகளையும் மூட்டை கட்டிக்கொண்டு சென்னை நோக்கி பிரயாண பட்டான் ரங்கன். கிளம்பும் முன் ஸ்ரீரங்கத்திற்கு சென்று பாட்டி தாத்தாவின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டவன் நேரே தனது மாமன் மகளிடமும் சென்று நான் கிளம்புகிறேன் என்று சொன்னதுதான் தாமதம். பெண் அவள் கண்கள் தனது வேலையை செய்ய ஆரம்பித்து விட்டது. பல வருடங்கள் கழித்து அவனை பார்த்ததும், அவன் தன்னுடனேயே இந்த விடுமுறை முழுவதும் இருப்பான் என்று நினைத்ததன் ஞாபகம் வந்தவளாக, இவ்வளவு சீக்கிரம் நீ போய் தான் ஆகணும் ரங்கா என்றவளை இமை கொட்டாமல் பார்த்தவன் தனது கைகள் கொண்டு அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.
நீ நல்லா படிக்கணும் சது... திருப்பியும் அடுத்த எக்ஸாம் லீவுல மீட் பண்ணலாம். கொஞ்சமாவது மெச்சூரிட்டிய வளர்த்துக் கோ. உடம்பை பாத்துக்கோ, கோபத்தையும் ரவுடி மாதிரி நடந்துக்கறதையும் குறைச்சுக்கோ என்றுவிட்டு கிளம்பிவிட்டான்.
'நான் உனக்காகத்தான் எங்க அப்பா அம்மா கூட ஊருக்கு போகலை' என்று சொன்னவளை வினோதமாக பார்த்தவன் அப்பா அம்மாவை விட நாம் முக்கியம் இல்ல சது என்றான். ஏனோ அவள் இவ்வாறு செய்தது அவனுக்கு பிடிக்கவில்லை.

மீதமிருந்த விடுமுறை நாட்கள் முழுவதும் அவள் ஸ்ரீரங்கத்தில் தான் இருந்தாள். ரங்கன் சொன்ன வார்த்தைகள் அவளுக்குள்ளே சில மாற்றங்களை கொண்டு வந்தது. அதிகம் வெளியே போவதையும், படபடவென்று எப்பொழுதும் பேசிக் கொண்டே இருப்பதையும் குறைத்து கொண்டு விட்டாள். லட்சுமி அம்மாளுக்கும் தாமோதரனுக்கும் அவள் நடத்திய ஆச்சரியத்தை உண்டு பண்ணாலும், வயதுக்கு வந்துவிட்ட பெண் இதற்கு மேலும் குழந்தை தனமாகவே நடந்துகொண்டால் சரிவராது என்று யோசித்ததால் மேற்கொண்ட அவளிடம் எதுவும் பேசவில்லை கேட்கவில்லை. இதோ அதோ என்று மூன்று மாத விடுப்பு காலம் முடிந்து விட்டது. அவள் மீண்டும் தில்லி கிளம்பிவிட்டாள். நடுவில் இரண்டு முறை ரங்கன் அழைத்திருந்தான். ஒரு முறை இவளை போன் செய்து பேசினாள் அவனுடன்.
தான் அதிகமாக வகுப்புகளுக்கு சென்று கொண்டிருப்பதால் நேரம் கிடைக்கும்போது நானே அழைக்கிறேன் நீ போன் செய்ய வேண்டாம் என்று விட்டான் ரங்கன். அவன் சொன்னது மனதிற்கு தைத்தாலும் அவன் சொல்வதில் இருக்கும் நியாயம் புரிந்ததால் அமைதியாகி விட்டாள். ஆனால் ரங்கனிடம் ஏதோ மாற்றங்கள் என்பது அவளுக்குத் தோன்றியது. வழக்கமான ரங்கன் இல்லை அவன். தனது அத்தான் ரங்கனுக்கு இவ்வளவு கூர்மையாக பேச தெரியுமா என்று சாத்துர்யா இந்த மூன்று மாதங்களில் ஆச்சரியப்பட்டு போனாள்.

பதினொன்றாம் வகுப்பில் கணிப்பொறி மற்றும் அறிவியல் பிரிவை எடுத்தாள். படிப்பு அவ்வளவு வைத்துக் கொண்டதால் வேறு எதைப்பற்றியும் அவளால் மேற்கொண்டு சிந்திக்க முடியவில்லை. தன் மனதில் விதைக்கப் பட்டு இருந்த விதை... அதன் நிலை என்ன?
**********************************************************

ரத்னாவின் நிச்சயதார்த்த விழா இனிமையாக முடிந்துவிட்டது.

மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் சீரையும் பணத்தையும் கொடுக்க பெண்வீட்டார் தயாராக இருக்கும்போது மனக்கசப்பு இருக்க இடம் ஏது? அவர்கள் கேட்கும் நகை தொகை பற்றி ஆழ்ந்த யோசனை ஒன்றும் ரத்னாவுக்கு இல்லை. பள்ளி சென்று கொண்டிருந்த சிறுமிக்கு அடுத்தது கல்லூரி படிப்பிற்கு மட்டும் தான் கனவு இருந்திருக்க முடியும். மற்றவற்றைப் பற்றி எல்லாம் அவளுக்கு ஒன்றும் யோசனையில்லை.
நான்கு மாதங்களுக்கு பிறகுதான் ரத்னாவின் ஜாதக அமைப்பின்படி திருமணம் செய்ய முடியும் என்று ஜோதிடர் சொல்லிவிட, சங்கரனுக்கு அந்த நான்கு மாதங்களும் நான்கு யுகங்களாய் தோன்றியது. ரத்னாவுக்கு அதுபோன்ற எந்த எண்ணங்களும் ஏனோ வரவில்லை. அவளைப் பொறுத்தவரை அத்தை மகனுடன் திருமணம் ஏற்பாடு ஆகி இருக்கிறது. இந்த ஏற்பாட்டில் அவளுக்கு பூரண சம்மதமே. அத்தை மகனையும் நிரம்பவே பிடித்திருக்கிறது. ஆனால் சங்கரன் போல் பிரிவுத்துயர் எல்லாம் அவளுக்கு இல்லை. இந்த நான்கு மாதங்களுக்குள் பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளும் வந்து விடும். குறைந்தபட்சம் திருமண சமயத்தில் அவள் பன்னிரண்டாவது வகுப்பு முடித்து இருப்பாள்.
எப்படியாவது அப்பாவிடம் கெஞ்சி, தபாலில் படித்தாவதுஏதாவது ஒரு டிகிரி வாங்குவதற்கு முயல வேண்டும் என்று மனதிற்குள் உறுதி செய்துகொண்டாள்.

ரத்னாவின் பெற்றோருக்கோ திருமணம் ஏற்பாடு செய்வதற்கு நான்கு மாதம் அவகாசம் இருக்கிறது என்ற ஆசுவாசம். திருமணமும் இங்கு திருச்சூரில் தான் என்று விட்டாள் திலகம். இப்பொழுதெல்லாம் திலகம் சிவனின் தங்கையாக நடந்து கொள்வது இல்லை. மணமகனின் அம்மா என்ற ரீதியில்தான் அவளது அதிகாரம் தூள் பறக்கிறது. முடிந்தவரை கெத்து காண்பித்து விட வேண்டும் என்று பையன் வீட்டார் என்ற கம்பீரத்துடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் திலகமும் அவள் கணவர் சேகரனும். சங்கரனின் தங்கை கூட அத்தை மகளிடம் பழகுவது போல் அல்லாமல் நாத்தனார் முறையில் பழக ஆரம்பித்து விட்டாள்.
திலகம் சொல்வதை வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார் சிவன். அவருக்கு அருணாச்சலம் பற்றிய கவலை எல்லாம் இப்போது இல்லை. அன்னபூரணி மீது அவருக்கு பூரண நம்பிக்கை உண்டு.
யார் என்ன சொன்னாலும் செய்தாலும் அன்னபூரணி நமது மகளை நல்லபடியாக வைத்துக் கொள்வாள் என்ற ஆணித்தரமான எண்ணம் அவருக்கு. ஆனால் ரத்னாவின் வாழ்க்கையை நினைத்து தான் சிவனுக்கு பயம் அதிகமாகி விட்டது. தனது சின்ன மகளை வேறு எங்காவது நல்ல இடம் பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கலாம். அவசரப்பட்டு விட்டோமோ என்ற எண்ணம் நிச்சயதார்த்தம் நடக்கும் இந்த நாட்களிலேயே அவருக்கு வந்துவிட்டது. ஆனால் இவ்வளவு நடந்த பிறகு வேற என்ன செய்ய முடியும் மேற்கொண்டு திருமணத்தை நடத்த வேண்டியது தான். அவர் மனதுக்குள் ஒரு சலிப்பும் ஆயாசமும். ஏற்கனவே பாறுவை கண்டால் திலகத்திற்கு ஆகாது. ரத்னா கொஞ்சம் கொஞ்சம் அம்மாவின் சாயலை கொண்டு இருந்தாள். அது வேறு திலகத்திற்கு ரத்னாவை மருமகளாக ஏற்க அவ்வளவு தூரம் பிரியமாக இல்லை. ஆனால் சங்கரனுக்கு ரத்னாவை பிடித்திருந்தது. சிவன் தனது மூத்த மகளுக்கு நல்ல பெரிய இடத்தில் திருமணம் நிச்சயம் செய்திருந்தார். ரத்னாவுக்கு அண்ணன் மணமகன் பார்த்துக்கொண்டிருக்கிறான், என்று இன்னும் ஏதேதோ கணக்குகள் போட்டு இந்த திருமணத்தை இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டாள் திலகம். ஆனால் தனது அண்ணியின் மீது உண்டான வெறுப்பு, ரத்னாவை தனது அண்ணன் மகளாக பார்க்கவிடாமல் வெறுப்பு என்னும் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்க்க வைத்துவிட்டது.
சங்கரன் ரத்னாவுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எவ்வளவுதான் யோசித்தாலும், திலகம் அதற்கெல்லாம் விடுவாளா என்பது எனக்கு சந்தேகம் தான்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் ஓடிக் கொண்டிருக்க உமாவின் மனதிலோ குருபரன் பற்றிய பயம்
ஆட்கொண்டது. அவனுக்காக பயந்துதான் ரத்னா விற்காக இவ்வளவு சீக்கிரம் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்யச்சொல்லி தந்தையை வற்புறுத்தியது . ஆனால் ஜாதகம் ஜோசியம் என்று ஏதேதோ காரணங்களால் ரத்னாவின் திருமணம் நான்கு மாதத்திற்கு தள்ளி போனது உமாவிற்கு பெருத்த ஏமாற்றத்தையும் பயத்தையும் கொடுத்தது. அவள் பயம் அர்த்தம் அற்றது அல்ல. அவன் வீட்டிற்கு வந்து இருந்தபோது ரத்னாவை பார்த்த பார்வை, இப்பொழுதும் உமாவிற்கு நடுங்குகிறது. அவன் ரத்னாவின் ஆடைகளை மீறி பார்த்துக் கொண்டிருந்தான். அந்த சிறுமியின் உடல் அழகை அந்த பொறுக்கியின் கண்கள் லேசர்பார்வை கொண்டு அளவிட்டு கொண்டிருந்தது. வீட்டில் இதைப்பற்றி எல்லாம் முழுமையாக உமா சொல்லவில்லை. சொன்னாலும், வீட்டில் உள்ளவர்கள் பயப்படுவார்கள் தவிர வேறு பயணம் ஏதும் கிடையாது. ரத்னாவின் மனதில் அச்சம் தலை தூக்கிவிடும். இதெல்லாம் நடைபெற விடாமல் அந்த பெண்ணிற்கு நல்ல சிறந்த ஒரு வழியை கொடுத்து அவளை நகர்த்தி விட வேண்டும் என்றுதானே உன்னை இவ்வளவு பிரயத்தன பட்டது.

இந்த நான்கு மாதங்களிலும் குருபரனின் கண்களில் தன் தங்கை விழாமல் இருக்க வேண்டுமே, அம்மே பகவதி, அவள் நல்லபடியாக திருமணம் செய்து கொண்டு செல்ல வேண்டுமே என்று அவள் மனதில் ஓயாமல் தங்கை பற்றிய பிரார்த்தனைகள்.
சொன்னாலும் சொல்லாவிட்டாலும், தன் தங்கையின் நல்வாழ்விற்காக இவ்வளவு யோசிக்கும் உமா , நல்லா அக்கா தான்! பெற்றோருக்காக, குடும்பத்துக்காக தன்னைத்தானே தியாகம் செய்யும் அந்தப் பெண் நல்ல மகளும் தான்.

இவள் போன்று பெண்களின் தியாகத்தில்தான் பல குடும்பங்கள் வாழ்கின்றன.
ராகாயியின் தியாகம் ஒரு வகை என்றால் உமாவின் தியாகம் இன்னொரு வகை. இவற்றுக்கு நிச்சயம் விலை இல்லை.
 
R

Ronaldvon

Guest
Greetings my name is Matt D'Agati.
Solar technology is now the most promising and sought-after types of clean, renewable energy in the past few years. That is due to its numerous benefits, including cost benefits, energy efficiency, while the positive impact this has from the environment. In this article, we shall talk about the advantages of choosing solar power in homes and businesses, the technology behind it, and exactly how it can be implemented to optimize its benefits.

One of many benefits of using solar power in homes could be the financial savings it provides. Solar power panels are capable of generating electricity for your house, reducing or eliminating the necessity for traditional resources of energy. This will result in significant savings on your own monthly energy bill, particularly in areas with a high energy costs. In addition, the price of solar power panels and associated equipment has decreased significantly through the years, which makes it more affordable for homeowners to purchase this technology.

Another advantageous asset of using solar power in homes could be the increased value it may provide towards the property. Homes that have solar power panels installed are usually valued greater than homes that don't, because they offer an energy-efficient and environmentally friendly replacement for traditional energy sources. This increased value may be an important benefit for homeowners who will be seeking to sell their house in the foreseeable future.

For businesses, some great benefits of using solar technology are wide ranging. Among the primary benefits is financial savings, as businesses can significantly reduce their energy costs by adopting solar technology. In addition, there are numerous government incentives and tax credits offered to companies that adopt solar technology, rendering it much more affordable and cost-effective. Furthermore, companies that adopt solar power will benefit from increased profitability and competitiveness, since they are regarded as environmentally conscious and energy-efficient.

The technology behind solar technology is simple and easy, yet highly effective. Solar energy panels are made up of photovoltaic (PV) cells, which convert sunlight into electricity. This electricity are able to be kept in batteries or fed straight into the electrical grid, with regards to the specific system design. So that you can maximize some great benefits of solar power, it is critical to design a custom system this is certainly tailored to your unique energy needs and requirements. This may make certain you have the proper components set up, such as the appropriate quantity of solar power panels plus the right kind of batteries, to maximize your power efficiency and value savings.

One of many important aspects in designing a custom solar power system is comprehending the various kinds of solar energy panels and their performance characteristics. There are two main main types of solar energy panels – monocrystalline and polycrystalline – each featuring its own benefits and drawbacks. Monocrystalline solar panels are manufactured from an individual, high-quality crystal, helping to make them more effective and sturdy. However, they're also more costly than polycrystalline panels, that are created from multiple, lower-quality crystals.

Along with solar power panels, a custom solar technology system will even include a battery system to keep excess energy, along with an inverter to convert the stored energy into usable electricity. You should choose a battery system this is certainly with the capacity of storing the quantity of energy you will need for the specific energy needs and requirements. This may ensure that you have a trusted supply of power in the case of power outages or any other disruptions to your power supply.

Another advantageous asset of using solar energy is the positive impact this has from the environment. Solar power is a clear and renewable power source, producing no emissions or pollutants. This makes it a perfect replacement for traditional sourced elements of energy, such as for example fossil fuels, that are a major contributor to air pollution and greenhouse gas emissions. By adopting solar power, homeowners and businesses can really help reduce their carbon footprint and subscribe to a cleaner, more sustainable future.

In summary, some great benefits of using solar energy both in homes and companies are numerous and cannot be overstated. From financial savings, energy efficiency, and increased property value to environmental impact and technological advancements, solar power provides a multitude of advantages. By knowing the technology behind solar technology and designing a custom system tailored to specific energy needs, you'll be able to maximize these benefits while making a positive effect on both personal finances together with environment. Overall, the adoption of solar energy is an intelligent investment for a sustainable and bright future.

if you'd like to know more more info on it subject matter check up simple url: https://spd-lsa.de/condolece/edwardawaks-platteville/matthew dagati
 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
124
Reaction score
33
Points
63
திருச்சூரில் இருந்து பூங்குவளை வந்ததில் இருந்து ரத்னாவுக்கு கல்யாணம் பற்றிய எண்ணங்களும் குழப்பங்களும் சுற்றி வளைத்தது.
அவளுக்கு சங்கரன் பற்றிய யோசனைகளும் தயக்கங்களும், பயமும் உண்டு.
விழா முடிந்து பத்து நாட்களில் சங்கரன் வந்தான். வந்தவன் ரத்னாவை கிணற்றடிக்கு அழைத்து சென்று, அவளுடன் தனியாக பேச முயற்சி செய்ய, ஐயோ பாவம், அவளுக்கு வார்த்தை தொண்டை குழியில் சிக்கிக்கொண்டது. அவளால் பதட்டமின்றி நிற்கவும் முடியாது தளர்ந்து அருகிருந்த துணி தோய்க்கும் கல்லில் தொய்ந்து அமர்ந்து கொண்டாள்.அவன் உயரத்திற்கு பள்ளிக்கூடம் முடித்திருந்த ரத்னா மிகவும் சிறியவளாக தெரிய, மீண்டும் திகைத்து நின்றான் சங்கரன். 'ச்சை, யோசிக்காமல் வீட்ல சொல்றாங்கன்னு சின்ன பிள்ளையை கல்யாணம் செய்ய ஒத்துகிட்டது தப்போ 'என மீண்டும் அவனுக்குள் அழுத்தம்.
ரத்னா சுரிதார் அணிந்திருந்தாள். ஒரு வேளை அதான் சின்ன பெண்ணா தெரியுறாளோ என்று யோசித்து 'இனி நீ சேலை காட்டுறியா 'என்றவனின் பார்வை கொண்டே புரிந்து கொண்டாள் ரத்னா. அவளுக்கு மனதில் சிரிப்பூ அலையாய் பொங்கியது.
சரி எனும் ஒற்றை வார்த்தை வெளி வர அவளிடம் தவித்து, பின்னர் அப்படியும் இப்படியுமாய் வெறும் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள். அவள் கைகள் சிலிர்த்து சில்லென காணப்பட்டது. லேசாக அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது. அவளின் நிலையை புரிந்துகொண்டு, அந்த சிறு பெண்ணின் தளிர் கைகளை தனது பிரம்மாண்ட கைகளுக்குள் பொத்தி தைரியம் ஊட்ட முயற்சித்தான் சங்கரன். ஆனால் அவன் உணர்ந்தது அவனுக்கு அவ்வளவு சந்தோசமாக இல்லை. நிச்சயதார்த்தம் கூட முடிந்து விட்டது இன்னும் இந்த பெண்ணுக்கு என் மேல் என்ன பயம்? என்ற
சிணுங்கியது அவன் மனம்.
ஒரு பக்கம் ரத்னா பற்றிய குழப்பங்கள் இருந்தாலும் இன்னொரு புறம் திருமணம் பற்றிய எதிர்பார்ப்புகளும் உனக்குள்ளே நிறையவே உண்டு. ரத்னாவின் பற்றிய கற்பனைகளும், அந்தரங்க எதிர்பார்ப்புக்களும் கூட இருக்கிறது. திருமணம் நிச்சயம் ஆன பிறகு எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் சராசரி எண்ணங்களும் கற்பனைகளும், திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணின் மீது நேசமும், பத்தே நாட்களில் அவனை ஏதோ காரணங்கள் சொல்லி கொண்டு, தானே சரக்கை திருச்சிவரை எடுத்துவந்து இறக்கிவிட்டு ரத்னாவின் வீட்டுக்கும் வந்து விட்டான்.
ஆனால் அவன் எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ளும் அளவில் அவை இன்னும் வளரவில்லை. பெரும்பாலும் இது போன்ற விஷயங்கள் நகரத்தில் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் பெண்கள், ரகசியமாய் சில சமயங்களில் பேசிக் கொள்வது உண்டு. ஆனால் கிராமத்தில் வளரும் இந்த பெண்ணுக்கு இவை பற்றியெல்லாம் இன்னும் விபரம் வளரவில்லை.
கொஞ்ச நேரம் பொறுத்திருந்து அவளையே பார்த்தவன் அவள் தலை நிமிர்ந்து தன்னை பார்க்க போவதில்லை என்பது தெளிவாக புரிய ஆழமாக ஒரு மூச்சு எடுத்துவிட்ட கொண்டு, தன்னை சமன்செய்தவனாக அவளுக்காக இவன் பிரத்தியேகமாக வாங்கி வைத்திருந்த ஆண்ட்ராய்டு போனை ரத்னாவின் கையில் வைத்துவிட்டு கிளம்பிவிட்டான்.
வீட்டினுள் பாறுக்குட்டி மாப்பிள்ளைக்காக வகையாக சமைத்து வைத்திருக்க சங்கரன் அவசரமாக கிளம்ப வேண்டுமென்று சொல்லிவிட்ட கிளம்பிவிட்டான். அவன் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாய் தெரிய அவன் எதிர்பார்ப்புகள் புரிந்தவளாக தனது அரை வாயிலிலிருந்து கூடத்தில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்துக்கொண்டிருந்த உமா நேரே கிணற்றடிக்குப் சென்று, கையில் இருந்த போனையே வெறித்து பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த தனது தங்கையிடம் 'அத்தான் கிளம்புறாரு பாரு, போயி அவரை சாப்பிட்டு போக சொல்லி கூப்பிடு' என்று மறைமுகமாக அவள் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்க தன்னிலை அடைந்தவளாக ரத்னா அவசரமாக எழுந்து வாயிலை நோக்கி ஓடினாள். அவர்கள் சொன்ன வேகத்தைப் பார்த்த உமாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அதேசமயம் அவசரம் அவசரமாக தன்னை நோக்கி ஓடிவரும் பெண்ணை பார்த்து திகைத்து நின்றான் சங்கரன். மெதுவாக தன் குரலை மீட்டெடுத்தவளாக ரத்னா,' இப்ப கிளம்ப அவசரமா அத்தான், சாப்பாடு சாப்பிட்டு போகலாமே ' என்றவளை பார்த்து அவனுக்கு மயக்கம் வராத குறைதான்.
ஆனாலும் தன் கெத்தை குறைக்கமாட்டாதாவனாக 'இல்ல ரத்னா, இன்னொரு நாள் வரேன் 'என்றான். அவன் வயிறோ, இந்த முறுக்கு தேவையா என்று காறித் துப்ப, மனமோ, என்னை எப்படியாவது கெஞ்சி கொஞ்சி கூட்டிட்டு போ பார்க்கலாம் என்று அவளிடம் செல்லம் கொஞ்சியது.
அதற்குள் வெளியில் விளையாடிவிட்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்த சாந்தாவோ வெகு அசால்டாக, அத்தான் போதும் பிகு பண்ணது... எனக்கும் பசி வயித்த கில்லுது. வாங்க சாப்பிட போகலாம் என்று அவள் கைகளை வைத்துக்கொண்டு உள்ளே சென்று விட்டாள். ரத்னாவுக்கு இப்போதுதான் மூச்சே வெளி வந்தது.
உமா அவளை தனியே அழைத்து 'அத்தானுக்கும் சாந்தாவுக்கும் நீயே போய் பரிமாறு ' என்று சொல்லிக்கொடுக்க, நேரே அடுக்களைக்குள் நுழைந்த ரத்னா அவர்கள் இருவருக்கும் தட்டை எடுத்து வைத்தாள். அதற்குள் பாறுவை அமர சொன்ன உமா தானே நேரே அடுக்களைக்குள் புகுந்து ரத்னாவுக்கு உதவுபவளாக, சாதம் இருக்கும் தட்டை எடுத்துக்கொண்டு சங்கரன் அருகில் செல்லும் போது ரத்னாவுக்கு கைகால்கள் உதறின.
சட்டென்று சாந்தா, நிலைமையை புரிந்து கொண்டு, ரத்னா கீழே போடுவதற்குள் தானே வாங்கி சங்கரனுக்கு போட்டுவிட்டு தனக்கும் போட்டுகொண்டாள். ரத்னாவுக்கு கண்கள் கலங்கி விட்டது. ஒரு வழியாக இருவரும் சாப்பிட்டு முடித்து, சங்கரன் கிளம்பும் பொழுது அவளது கலங்கிய பயந்த முகம் அவள் மனதை கூற, அவளிடம் சொல்லிக்கொள்ள பின் கட்டில் இருந்தவளை தேடிச் சென்று, இனிமேல் தினமும் ராத்திரி போன் பண்ணுவேன். தூங்கிடாதே என்றான். அவளுக்கும் தன்மீது இருக்கும் பய உணர்வை திருமணத்திற்கு முன் நீக்கியாக வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு வந்துவிட்டது. அவன் மீது திருமணத்திற்கு முன் காதல் வளரவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனால் இந்த ஒதுக்கமும் பயமும் ம்ஹும்... நிச்சயம் சரிப்படாது. திருமணம் செய்துகொண்டால் தனது சரிபாதியாக இருப்பவள் தன்னைக் கண்டு அஞ்சுவது அவனுக்கு பிடிக்கவில்லை. மெல்லமெல்ல எப்படியாவது அந்த சிறு பெண்ணின் மனதிற்குள் நுழைந்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டான். நிச்சயதார்த்த நாள் அன்று நிர்மலமான முகத்துடன் அழகு பதுமையாக தன் அருகில் அமர்ந்திருந்த ரத்னாவை அவன் மனம் தேடியது.
ஒருவழியாக ரத்னாவின் வீட்டிலுள்ளோர் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான் சங்கரன். சங்கரன் ஓடும் நேரம் சிவம் அருணாச்சலத்துடன் முக்கிய வேலைக்காக சென்னை சென்றிருந்தார்.
பாறு அவருடன் இரவில் தொலைபேசியில் பேசும்போது சங்கரன் வரவை தெரிவித்தார். கேட்டுக்கொண்டிருந்த சிவனுக்கும் மனதிற்கு சந்தோஷம் தான். சங்கரனுக்கு இந்த திருமணத்தின் மீதான பிடித்தம் நன்கு புரிகிறது. தன் மகள் அதிர்ஷ்டசாலிதான் என்று நினைத்துக் கொண்டார் சிவன்.ஆனால், மற்ற இரு மக்களுக்காக யோசித்தவர் தங்கள் முதல் மகளை பலியிடத் துணிந்தது பற்றி அவருக்கு அந்த சமயத்தில் எந்த ஞாபகமும் வரவில்லையே! எழுதிய எழுத்தை என்றுமே எவராலும் மாற்ற முடியாது என்பது இதுதானோ?

இரவு சாந்தா தூங்கி விட்டாளா என்று உறுதிப்படுத்திக் கொண்ட உமா, ரத்னாவிடம்,' அவரை கல்யாணம் பண்ணிக்க போறவர்னு நினைக்காதே ரத்னா, முதல்ல அவரை நம்முடைய திலகா அத்தையுடைய பையன். நீ அவரை பார்த்து நடுங்குவதை பார்த்தா எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு மா... இன்னிக்கு நீ சரியா பேசல அவர் சாப்பாடு கூட வேண்டாம்னு கிளம்பிட்டாரு. உன்ன பாக்குறதுக்கு தானே இவ்வளவு தூரம் வந்திருக்காரு. பிறகு எதுக்கு தயங்குற? கல்யாணத்துக்கு முன்னாடி பேசி பழகுறது...இதுல ஒண்ணும் தப்பு இல்ல. நீ சின்ன குழந்தையும் இல்லம்மா. அவர் உன்னை புரிஞ்சுக்கணும் நினைக்கிறாரு. நீயும் அவரோட பேசி பழகி அவரை புரிஞ்சுக்க முயற்சி செய்யு... என்று அறிவுரை கூற, சங்கரன் தன்னிடம் நடந்து கொள்வது , தனக்காக பேனா வாங்கி கொடுத்தது, நிச்சயதார்த்தம் அன்று அவங்கள் இருவரும் நின்றுகொண்டிருந்த தருணங்கள் என்று ஒவ்வொன்றாய் அசை போட்டவாறே தூங்கிவிட, தூங்கும்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் ரத்னாவின் முகம் உமாவின் மனதில் அழுந்த பதிந்தது.

ஏனோ, குரு பற்றிய நினைவுகள் அவளது இரவுத் தூக்கத்தை தூர எடுத்துச் சென்றுவிட்டது.
அவன் கடைசியாக உமாவை தனியா அழைத்துச் சென்றபோது, வேண்டும் என்றே அவள் தோள்களில் உராய்ந்ததும், அவள் தொடை மீது அழுத்தமாக தனது கைகளில் வைத்திருந்ததும், மறைமுகமாக அவளது ***பிடித்து பார்த்து இளித்த நொடிகளும் அவளுக்கு உள்ளுர அருவருத்தது. இருட்டில், அடித்து புரட்டிக்கொண்டு வரும் அழுகையை நிறுத்த வழிதெரியாமல் நெஞ்சம் முழுதும் வெடித்துச் சிதற உனக்கு ஏன் இப்படிப்பட்ட ஒருவன் கணவனாக வரவேண்டும் என்று எழுதி வைத்தாய் கடவுளே என தெய்வத்திடம் முறையிட்டாள். மனிதன் செய்யும் முளைகட்ட செயல்விளக்க கடவுள் என்ன செய்ய முடியும்?

அருணாச்சலம் அன்னபூரணி இருவரும் திருமணம் பற்றிய சிவனிடம் கேட்கும்போது சிவன் ஒன்று மறுத்திருக்க வேண்டும். இல்லை என்றால் தங்கள் தன்னுடன் தனியே பேசும்பொழுது உமாவாவது மிகத் தெளிவாய் முடியாது என்று சொல்லியிருக்க வேண்டும். இப்பொழுது அழுது புரண்டு என்ன பயன்?
சிவன் நினைத்துக் கொண்டிருக்கிறார் ஒரே திருமணத்தின் மூலம் மூன்று பெண்களுக்கு வாழ்க்கைக்கு வழி செய்துவிட்டதாக... உமா நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் ஒருத்தியின் திருமணம் சரியாக இல்லாவிட்டாலும் கூட மற்ற இருவரின் வாழ்க்கையை நிமிர்த்தி விடலாமென்று.
ஆனால், கரும் அரவு என்று தெரிந்த பிறகும், அத்திடம் கழுத்தை நீட்டினால், அது கொத்தாமல் தான் விடுமா, இல்லை சுற்றி இருப்போரை வளைக்காமல் விடுமா?
எப்பொழுதுமே மனித நினைக்கும் நிறைய விஷயங்களை கடவுள் நடத்திக் கொடுப்பதில்லை. அவரைச் சொல்லி குற்றமில்லை. மனிதன் நினைப்பது சரியானதாக இருக்கவேண்டும். புத்தியை பயன்படுத்துவதற்காக தானே, ஆறாவது அறிவு கொடுத்திருக்கிறார் கடவுள்.
மூன்று பெண்களை பெற்றுவிட்டால், அவர்களின் வாழ்வுக்கு வழி செய்ய வேண்டியது சிவனின் பொறுப்பு. அதை இவ்வாறாக குறுக்குவழியில் நிறைவேற்றுவது எந்த விதத்தில் சரி?

இன்று மட்டுமல்ல, உமா அவள் வாழ்நாளில் இனி தூக்கம் என்பதை யோசிக்க முடியாது.
***************************************************************************************
சாதுர்யா மீண்டும் தில்லி செல்ல, அவள் அப்பாவுக்கு இத்தாலி வேலையில் எம்பசியில் சேர்வதற்க்கு உத்தரவு வந்துவிட்டது. வெகு மாதங்களாகவே அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது என்பதுதான். வெளிநாட்டில் என்பசியில் வேலை மாற்றல் கிடைத்தால் பரவாயில்லை என்று அவர் யோசித்து வைத்திருந்தார். இதற்காக வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் நெருங்கிய முக்கிய நபர் மூலம் காய் நகர்த்த அவர் நினைத்தபடி மாற்றல் கிடைத்தது. இதற்காக, சிலபல பயிற்சிகளையும் கூட தனிப்பட்ட முறையில் அவர் எடுத்து இருந்தார். அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து இருக்க தகுதியின் அடிப்படையில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமாக இல்லை. அவர் எதிர்பார்த்திருந்த நாடு ஸ்பெயின். ஆனால் கிடைத்தது இத்தாலி. எப்படி இருந்தாலும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றுக்கு சொல்வது அவருக்கு மிகுந்த சந்தோஷமே!

சாதுர்யா பதினொன்றாம் வகுப்பு முடித்துவிட்டு பனிரெண்டாம் வகுப்பில் இப்போதுதான் காலெடுத்து வைத்திருக்கிறாள். இன்னும் சில மாதங்கள் மீதமிருக்கிறது . அதனால் மாலதி டெல்லியிலேயே இருப்பதாக சொல்லிவிட்டாள். தற்போதைக்கு மாற்றல் எடுத்துக்கொண்டு வெங்கடேசன் மட்டும் செல்வதாக ஏற்பாடு. மகளின் படிப்பு முடிந்ததும் அவர்கள் இருவரும் வருவதாக சொல்லிவிட வெங்கடேசன் கிளம்பிவிட்டார்.

சாது மனம் முழுவதும், இந்த வருட படிப்பு முடிந்ததும் இத்தாலி செல்வதா...இல்லை ஸ்ரீரங்கம் சென்றுவிடுவதா என்ற யோசனை தான் ஓடிக்கொண்டு இருந்தது. அவள் யோசனையில் ஸ்ரீ ரங்கம் மட்டுமில்லை, அவளது ரங்கன் அத்தானும் உண்டு. அவன் சி ஏ இன்டர் முடித்து, இளங்கலையில் பட்டம் பெற்று விட்டான். இதற்குமேல், ஒன்றிரண்டு வருஷங்கள் தொழிலையும் பார்த்துக்கொண்டு, மேல் படிப்பு படிப்பதற்காக வெளிநாடு செல்வதற்காக நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்யும்படி ரங்கனின் அப்பா சொல்லிவிட்டார். இப்போது ரங்கன் வயலூரில் தான் இருக்கிறான். அனேகமாக சென்னை செல்ல வாய்ப்பு உண்டு. எப்படியும் அடிக்கடி தொழில் நிமித்தமாக வாவது வயலூர் வருவான் என்றெல்லாம் பாவையின் மனது யோசித்துக் கொண்டிருந்தது. அவன் அவளை விட்டு நகர்ந்து சென்றாலும் கூட அவள் மனம் முழுவதும் அவனைப் பற்றிய சிந்தனைகள் மட்டுமே ஆக்கிரமித்துக் கொள்ள எப்பாடுபட்டாவது, வெளிநாடு செல்வதை தவிர்த்துவிட்டு ஸ்ரீரங்கம் சென்று விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டாள். இவளின் முடிவு அவன் அம்மாவுக்கு உவப்பாக இருக்கப்போவதில்லை. கண்டிப்பாக வீட்டில் பூகம்பம் தான். ஆனால் இவளின் இந்த முடிவினால் ரங்கன் இவளை புரிந்து கொள்வானா என்று எனக்கு தெரியவில்லை. இது உறவின் பாசமா, விடலை பருவ நேசமா?
விடை தெரியாமல் நானும் காத்துக்
கொண்டிருக்கிறேன்.
 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
124
Reaction score
33
Points
63
15

பண்ணிரண்டாம் வகுப்பின் வருஷம் முடியும் வரை பொறுமை காத்த சாதுர்யா கல்லூரி படிப்புக்கு ஸ்ரீ ரங்கம் செல்வதாக தேர்வு முடிந்த அன்றே தன் அம்மா மாலதியிடம் சொல்ல வீடு பூகம்பம் நடக்கும் இடமானது. இத்தனை வருஷங்களில் மன எண்ணங்களையும், புழுக்கங்களையும் மாலதியிடம் சாதுர்யா பகிர்ந்து கொண்டது இல்லை. எப்போதுமே மாலதியிடம் மற்ற குழந்தைகளுடன் தனது மகளை ஒப்பிட்டுப் பார்க்கும் குணமும், அதற்குத் தகுந்த மாதிரி அவளை செதுக்க வேண்டும் என்கின்ற பிடிவாதமும் உண்டு. மாலதியின் பிறந்த வீடும் பெரிய பணக்கார குடும்பம் தான். மாலதியின் ஒரு அண்ணன் திருநெல்வேலியில் பூர்வீக சொத்துக்களை பராமரிப்பதில் இருக்கிறார். இன்னொரு அண்ணனும் அமெரிக்காவில் நல்ல பெரிய பதவியில், நல்ல சம்பளத்தில் இருக்கிறார். புகுந்த வீட்டிலோ, ஏற்கனவே பெரிய அளவில் நிலம், சொத்து
என்று இருக்கும் போதே மாமனார் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்தார். தன் கணவரும் ஐஏஎஸ் அதிகாரி. இதுபோன்று, பெரிய குடும்பத்தில் பிறந்ததும், அதைவிட பெரிய குடும்பத்தில் திருமணம் செய்து வந்ததும், மாலதிக்கு தலையில் கிரீடம் தான். அதை வெளிப்படையாகவும் காண்பிக்கும் வழக்கம் உண்டு.
திருமணமான புதிதில் மாலதி, சற்று தன் அகங்காரத்தை லக்ஷ்மி அம்மாள் இடமும் காட்ட, தாமோதரன் சிரித்தபடியே லட்சுமி அம்மாளை பார்த்துக்கொண்டிருந்தார். லஷ்மி அம்மாள் மாலதியிடம் வீட்டு நிர்வாக பொறுப்பு முழுவதையும் கொடுத்துவிட்டு, தனது கணவரை கூட்டிக்கொண்டு கோவில்களுக்கு சென்று வர ஆரம்பித்து விட்டார். இரண்டு நாட்கள் கூட தாக்கு பிடிக்க முடியாது மாலதி, மாமியாரிடம் சரணாகதி அடைந்து விட்டாள். அதற்குப் பிறகு இலட்சுமி அம்மாளுக்கு பயந்து மாலதி தனது குணங்களை வெளியே காண்பதில்லை, ரங்கனை தவிர. ஏனோ ரங்கனின், பெருமைகள் மாலதிக்கு ஒரு வித ஒவ்வாமையை கூட்டியிருக்கிறது.
மாலதியின் எவ்வித குணங்களாலோ என்னமோ மகள் சாதுர்யா சொல்வதை, காதுகொடுத்துக் கேட்கும் பழக்கம் ஒரு அம்மாவாக என்றுமே அவளுக்கு இல்லை. அத்துடன் குழந்தை சொல்வதைக் கேட்பதற்கு பெரிய அளவில் அவளுக்கு பொறுமை இருந்ததில்லை. வெங்கடேசன் ஆகும் இதிலெல்லாம் தலையிடும் நேரமில்லை.
சமயங்களில் மாலதிக்கு வெங்கடேசனுடன் விழாக்களுக்கு செல்லவேண்டியது வந்துவிடும். அப்போதெல்லாம் சாதுர்யா வீட்டில் தனியாகவே இருந்து விடுவாள். அம்மா -அப்பா இருவரும் வருவதற்கு இரவு நடுநிசி ஆகிவிடும். அதற்குள் மகள் தூங்கி விடுவாள். அந்த வயதிலேயே தன்னை தானே கவனித்துக் கொள்ளவும், செதுக்கி கொள்ளவுமான நிலைமையில் இருந்தாள் பெண்.

வெங்கடேசனுக்கோ, அலுவலக பணிகள் அதிகம். மகளுடன் இரண்டு வார்த்தை சிரித்து பேசுவதற்குள் பத்து முறை அவரது அலைபேசி அழைக்கும். அதேபோல்,சாதுர்யா படிக்கும் இடமும் வேறுவகை.
கண்மூடித் திறப்பதற்குள், கொஞ்சம் அசந்து இருந்தால்,கூட படிப்பவர்கள் இவளை ஏதாவது விபரீதத்தில் மாட்டிவிடும் நிலைமை. போதை மருந்து நல்ல புழக்கத்தில் இருந்தது அவளது பள்ளியில்.ஆனாலும் அங்கு உடன் பயிலும் யாரும் இவற்றை கண்டுகொள்ளவில்லை. பள்ளி நிர்வாகத்திடம் சொல்லவும் இல்லை. சாதுர்யா உட்பட.

இவளுக்கும் நடப்பவையெல்லாம் தெரிந்திருந்தாலும் அப்பாவிடம் கூட சொல்ல முடியாது. சொன்னாலும் பெரிய அளவில் எதுவும் மாற்றம் இருக்காது. மாறாக அவள் அப்பா, இதிலிருந்தெல்லாம் ஒதுங்கியிருக்க பழகு என்று ஒருவேளை உபதேசம் செய்யக் கூடும். இங்கு இதெல்லாம் சகஜம் என்ற மனோ நிலைக்கு வந்து விட்டாள் சாதுர்யா.பெரிய பெரிய அரசியல்வாதிகளின் வாரிசுகள், ஐஏஎஸ் அதிகாரிகளின் குழந்தைகள் என்று அந்தப் பள்ளிக்கூட சூழ்நிலையே வேறு மாதிரி. வெளி நபர்களுக்கு அந்த நிலையை பற்றி சொன்னால்
புரிய போவதில்லை.
கல்லூரி வரை வந்துவிட்டோம்! இத்தனை வருஷங்களாக அப்பா அம்மாவிற்காக என்று இங்கு தில்லியில் இருந்தது போதும். இனியாவது எனது வாழ்க்கையை எனது இஷ்டப்படி வாழ்கிறேனே என்று அவள் மனம் அடம்பிடித்தது. இன்னொரு விஷயம்,ஏதோ அமெரிக்கா போன்ற நாடாக இருந்தாலும் தைரியமாக கிளம்பி விடுவாள். இத்தாலி என்பது அவளுக்கு வேற்று கிரகம் போல் தோன்றியது. சுத்தமாக அங்கு செல்ல அவளுக்கு இஷ்டமில்லை. அப்பா சென்றிருக்கிறார் என்றால் அது அவர் பதவியின் கட்டாயம். எனக்குத்தான் இங்கு ஸ்ரீரங்கத்தில் பாட்டி வீடு இருக்கிறதே என்னும் அவ்வளவு யோசனை ஓடியது. அந்த யோசனை நீண்டு வயலூரில் வீட்டில் ரேழியில் போய் நின்றது. அங்குத் தூணில் ரங்கன் சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.

மாலதியோ, 'உன்னை இங்கு விடவே மாட்டேன். நீ கட்டாயம் என்னுடனும் அப்பாவுடனும்தான் இருக்க வேண்டும். கடவுச் சீட்டை பெற்றுக் கொண்டு மரியாதையாக கிளம்பும் வேலையை பார் என்ற ஒற்றைக் காலில் நின்றாள்.

அன்று இரவே சாதுர்யா, தன் அப்பாவிடம் பேச அவரோ, இரண்டொறு நாளில் யோசித்து சொல்வதாக சொல்லி வைத்து விட்டார். அவருக்கு மகள் பக்க ஞாயங்கள் புரியாமல் இல்லை. ஆனால், ஒருமுறை மகளை இங்கே கூட்டி கொண்டு வந்து விட்டால், அவளை எப்படியாவது ஐரோப்பிய நாடுகள் எதிலாவது நிரந்தரமாக தங்க வைத்து விடலாம் என்ற மாலதியின் யோசனையையும் மறுப்பதற்கில்லை. இரண்டாம் நாள் தனது தந்தைக்கு அழைத்துப் பேசிய வெங்கடேசனிடம், தாமோதரன்,' உன் மகள் வளர்ந்து விட்டாள். அவள் கூற்றுக்கும் மதிப்பு கொடுக்க பழகு வெங்கடேசா' என்றார்.
சரி எப்படியாவது மாலதியை சமாளிக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் வெங்கடேசன். மூன்று வருடம் இங்கேயே இருந்து விட்டு, பிறகு பணி நீட்டிப்பு கிடைத்தால் தொடர்ந்து பணி செய்வது இல்லை என்றால், வேலையை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் ஸ்ரீரங்கம் சென்று விடலாம். இருக்கவே இருக்கிறது பூர்வீகத் தொழில் விவசாயம். அப்பாவுக்கு பிறகு, தம்பி விவசாயத்துறைக்கு வருவான் என்ற நம்பிக்கை வெங்கடேசனுக்கு இல்லை. வெங்கடேசன் படித்ததும் எம்எஸ்சி விவசாயம்தான். அவருக்கு அப்பா வழியில் தானும் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால் பரிட்சை எழுதி வெற்றி பெற்று இந்த வேலைக்கு வந்துவிட்டார். அன்று தாமோதரன் தன் மகனின் ஆசைகளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. அதே நிலையை இன்று உன் மகளிடம் நீ காட்டு என்கிறார் தாமோதரன். யோசித்து பார்த்தால் மகள் எங்கும் ஹாஸ்டல் செல்வதாக எல்லாம் சொல்லவில்லையே, தாத்தா பாட்டியுடன் இருக்கிறேன் என்றுதான் சொல்கிறாள் என்று, தன்னை தானே சமாதானம் செய்து கொண்டார் வெங்கடேசன். ஆனால் பின்னாளில் அவரது இந்த முடிவுக்காக, அவர் வருந்தி அழ வேண்டியது வரும் என்றோ, மாலதி வெங்கடேசனின்
சட்டையை பிடித்து கேள்வி கேட்பாள் என்றோ தெரிந்திருந்தால் நிச்சயம் அவர் தனது மகளின் பிடிவாதத்திற்கு செவிமடுத்து இருக்கமாட்டார். யார் எவ்வளவு சொன்னாலும் எழுதியது விதி. அதை அழித்து எழுதும் எவராலும் முடியாது.

ஒருவழியாக, மாலதி கிளம்பும் நாள் வரை சாதுர்யாவின் முடிவை எதிர்த்து பார்த்தாள். மாமியார் மாமனாரிடம் சாதுர்யாவுக்கு புத்தி சொல்லுமாறும் கேட்க அவர்கள் இருவரும் மறுத்து விட்டார்கள். பேத்தியின் முடிவுக்கு அவர்கள் இருவரின் ஆதரவு பரிபூரணமாக இருந்தது.
மாலதியின் அமெரிக்காவில் இருக்கும் அண்ணனும் சாதுர்யாவுக்கு அழைத்து,
வேண்டுமானால் அமெரிக்காவில் வந்து படிக்கிறாயா, ஏற்பாடுகள் செய்யவா என்றும் கேட்டு பார்த்து விட்டார். ஆனால்,சாதுர்யா எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. முதன்முதலில் பிடிவாதத்துடன், தான் நினைத்ததை சாதிக்க தனது முதல் அடி எடுத்து வைத்தாள் சாதுர்யா. இந்த அடிகள் அவளை எதுவரை கொண்டு சென்று அமர செய்யப்போகிறது என்பதெல்லாம் போகப்போக தெரியும். ரங்கனும் தனது அடுத்த நிலைகளுக்காக தன்னை தயார் செய்து கொண்டிருக்கிறான்.

பெண் நினைப்பதெல்லாம் நடக்குமா? இல்லை ஆண் மனதினை நம்மால் பூத கண்ணாடி வைத்துப் பார்க்க முடியுமா?
***************************************************************************************

உமா சொன்ன விஷயங்களை யோசித்து பார்த்த ரத்னாவுக்கு 'தான்'எப்படி சங்கரிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதும் ஷங்கர் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதும் தெளிவாகப் புரிந்தது.
நல்லவேளை இன்று உணவு பரிமாறும்போது சாந்தா கை கொடுத்து உதவினாள்.
இல்லாவிட்டால் சாப்பாட்டு பாத்திரத்தை கீழே போட்டு இருந்திருப்பேன். அத்தான் தான் என்ன நினைத்திருப்பார், என்று ஒவ்வொன்றாய் நினைத்து வருந்தினாள்.

கண் மூடி கிடந்தாள் உமா. ஆனால் அவளது மூளை உறங்கவில்லை. அவளது என்ன அலைகள் முழுவதும் குருபரன் மட்டுமே!

குரு திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்து கண்ட பழக்கவழக்கங்களையும் சற்றே தூர நிறுத்தியிருந்தான். அவனுக்கு உமா என்ற பெண்ணின் மீதான போதை இறங்கினால் தான் மற்றவை பற்றி யோசிக்கக் கூடும். ஆனால், அதிசயத்தக்க வகையில் அவன் நினைவு அடுக்குகளில் ரத்னா பற்றியோ சாந்தா பற்றியோ எந்த யோசனையும் ஓடவில்லை. அவன் உமா பக்தனாகி விட்டிருந்தான். அவளை உரசி பார்த்த தருணங்கள், அவள் ****அழகை லேசாக பட்டும் படாமலும் தடவிய பொழுது அவள் நெளிந்து நகர்ந்து அமர்ந்ததும் அவளின் முக கோவச் சிவப்பு அவளின் சந்தனநிறத்திற்கு இன்னும் நிறத்தைக் கூட்டி காட்டியதும், அவன் இரவுகள் முழுவதும் நரகமாக்கின. இரண்டு முறை வேறு பெண்களுடன் கூடி களித்திட முயன்ற போதும் உமாவின் கன்னத்தில் இவள் எனக்கே சொந்தம் என்று முத்தமிட்டு அமர்ந்திருக்கும் கன்னப் பருக்கள் அவனை பார்த்து கேலி செய்வது போல் தோன்றும் உணர்வு, அவனை கோபம் கொள்ளச் செய்ய, காம உணர்வுகள் வடிந்தவனாக
மீண்டும் வேறு பெண்களிடம் போவதை தவிர்த்தான். அவன் உடலின் அணுக்கள் ஒவ்வொரு நொடியும் உமாவை தேட,
வீட்டில் இன்று திருமணம் ஏன் இவ்வளவு தள்ளிப் போடுகிறீர்கள்? நீங்கள் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள சொன்னதனால் தானே ஒப்புக்கொண்டேன். அப்படி என்றால் உங்கள் பொறுப்பு என்ன, விரைந்து திருமணத்தை நடத்துவது தானே? என்று தன் அம்மாவிடம் சென்று சண்டை போட்டான்.
அருணாச்சலம் அந்த இடத்தைவிட்டு எழுந்து சென்றுவிட்டார். மகனுக்கு திருமணம் செய்து வைப்பது என்ற பேச்சு அவருக்கு உவப்பாக இல்லை. அன்னபூரணியின் பிடிவாதம் தானே அவனுக்கான இந்த திருமணம். மற்றபடி அருணாச்சலத்தை பொருத்தவரை, குருவுடன் செய்து கொள்ளும் திருமணமானது அந்த பெண்ணிற்கு நரக வாழ்வு தான். இதிலெல்லாம் அவருக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. இன்றுவரை அன்னபூரணியை தவிர அருணாச்சலம் வேறு ஒரு பெண்ணை ஏறெடுத்து பார்த்தது கிடையாது. ஆனால் மகனோ அதற்கு முற்றிலும் மாறாக இருக்கிறான்.
குருக்கு கல்யாண யோகம் கூடி வர இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்று ஜோசியர் சொன்னதாக சொன்னாள் அன்னபூரணி. இல்லாவிட்டால் திருமணம் முடிந்தவுடன் குருவின் உயிருக்கு ஆபத்தாம். அத்தோடு, 'வேறு பெண் சேர்க்கை வேண்டாம் குரு... ஏடாக்கூடமாய் ஏதாவது ஆகப்போகுது 'என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்று விட்டாள் அன்னபூரணி.

தாய் அறியா சூல் ஏது? மகனைப் பற்றி நன்கு அறிந்ததானால் தான் இப்படி சொல்ல வேண்டியதாயிற்று. குருவாக தன் தாய் இவ்வாறு சொன்னதிலிருந்து உயிர் பயம் வந்துவிட்டது. அதனாலும் வேறு பெண்களை நாடிச் செல்வதில்லை.
இன்னும் உமா வைத்திருக்கும் வேண்டுகோளா இல்லை நிர்பந்தமா என்று சொல்லத் தெரியவில்லை, ரத்னாவின் திருமணம் முடிந்தால் தான் என் திருமணம் என்று அவள் சொன்னதையோ ரத்னாவின் திருமணம் இன்னும் நான்கு மாதங்கள் கழித்துதான், என்றோ குருவிடம் வீட்டினர் யாரும் சொல்லவில்லை. சிவனும் கூட தினமும் வேலைக்கு வந்து சென்று கொண்டிருக்கிறார். அவரது நடத்தையில் கூட எந்த வித்தியாசமும் இல்லை. வழக்கம் போல அந்த வீட்டின் கணக்குப்பிள்ளைதான் அவர்.

அன்னபூரணி சிவனிடம் எவ்வளவோ முறை வேலையை விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டாலும் கூட, திருமணம் முடிந்து உமா இங்கு வந்துவிட்டால் தன் மகளை தினமும் பார்க்கலாமே, என்ற தவிப்பு சிவனின் மனதிற்குள்.
ஆனால் இவற்றையெல்லாம் அவர் வாய்விட்டு அன்னபூரணியிடம் கூட சொல்ல முடியாது. குருபரனோ, சிவனிடமே உமா பற்றி விசாரிக்கிறான். ஆனால் அவரிடம் அவனுக்கு எந்த மரியாதையும் இல்லை. ஆனாலும் சிவனுக்கு இதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. இதெல்லாம் அவருக்கு பல வருஷங்கள் பழகிப்போன ஒன்று தான்.ஒருவகையில் அவன் நடவடிக்கைகள் கொஞ்சம் ஒழுங்கு பட்டிருப்பதாக தான் சிவனுக்கும் தோன்றுகிறது.
உமா திருமணம் முடித்து விட்டு வந்து விட்டால் முழுமையாக திருந்தி விடுவான் என்றும் அவர் மனம் கணக்குப் போடுகிறது.
சென்னை சென்றுவிட்டு வந்த பிறகு அருணாச்சலத்தின் போக்கு இன்னும் சற்று மாறி இருக்கிறது. அவருக்கு இந்த முறை எம்எல்ஏ சீட்டு தருவதாக மேலிடம் வாக்குறுதி அளித்து இருக்கிறது. ஒருவேளை அவர் எம்எல்ஏ பதவியில் வென்றால் அவருக்கு அமைச்சர் பதவியும் உறுதி. அந்த அளவிற்கு செல்வாக்கான மனிதர் ஆகிவிட்டார் அருணாச்சலம். மிக குறுகிய காலத்தில் இத்தனை பெரிய நிலைக்கு வருவது அவ்வளவு சாதாரணம் அல்ல. இவருடன் நண்பராக பழகி வந்த ராமேஸ்வரத்திற்கு கூட இவரைப் பார்த்து சற்று பொறாமை வந்துவிட்டது. அதேபோல் அருணாச்சலம் தனது தொகுதியில் மட்டும் இல்லாமல், சுற்றியுள்ள தொகுதிகளிலும் செல்வாக்கானவராக இருக்கிறார். காரணம் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் அவருக்கு நிலங்கள் இருக்கிறது. தோப்புகளும் உண்டு. அவரது கை தாராளம். என்னதான் குரு தவறுகள் செய்து கொண்டிருந்தாலும் கூட, இப்போதெல்லாம் அந்த தவறுகளை மூடிமறைக்கும் விஷயங்களையும் அருணாச்சலம் சிவனை கொண்டே செய்கிறார். பெண்ணைப் பெற்றவறும் பணிந்து போகிறார்.
தனது மகள் வாழப்போகும் இடமென்று சிவனும் வாயை திறக்காமல் எல்லாவற்றுக்கும் உடன்படுகிறார். ஆனால் அவர் அறியாதது ஒன்று உண்டு. அவர் இன்று மூடி மறைக்கும் பல விஷயங்கள், பின்னாளில் அவருக்கு பூதாகாரமான ஒன்றாக முடியக் கூடும். இப்போது செய்யும் பாவ கணக்கை எப்போது அவர் நேர் செய்ய முடியும் என்று தெரியவில்லை.
கடவுள் மிகவும் கண்டிப்பானவர். சிவனுக்கு மட்டுமல்ல, இவ்வாறான செயல்களில் ஈடுபடும் எவருக்குமே கடுமையான தண்டனைகள் உண்டு. தவறுகள் செய்பவரை விட அதை மூடிமறைக்க பார்ப்பவர்க்கு தான் பங்கு அதிகம். இன்று குரு மூலம் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டிருக்-
-கிறார்கள். அவர்களுக்கு செட்டில்மெண்ட் செய்வது அதுவும் வெளி உலகத்திற்கு தெரியாமல், சிவனது பொறுப்பாகி விட்டது. நாளை இவரது சொந்த மகளே இவரது இந்த செய்கைகளை ஒப்புவாளா? என்றேனும் உமாவினால் தனது அப்பாவை மன்னிக்க இயலுமா?
 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
124
Reaction score
33
Points
63
16

சாதுர்யா ஒரு வழியாக ஸ்ரீ ரங்கம் வந்து சேர்ந்தாள். மாலதிக்கு அவளை எப்படியாவது தன்னுடன் அழைத்து செல்ல வேண்டும் இல்லை எனில் திருநெல்வேலியில் தன் பிறந்த வீட்டிலாவது விட வேண்டும் என்ற யோசனை. இதற்கெல்லாம் சாதுர்யா மசிந்தால்தானே!
யார் சொன்னாலும் கேட்டு நடக்கும் நிலையில் பெண் இல்லை. பரீட்சை முடிந்து இரு மாதங்கள் தில்லியில் இருந்த சாதுர்யா தனது அம்மா இத்தாலி கிளம்பும் வரை காத்திருந்தவள், மாலதி கிளம்பும் அதே நாளில் தானும் திருச்சிக்கு விமானம் ஏறி விட்டாள். மாலதியின் மனம் முழுவதும் வயது பெண்ணை இவ்வாறு தனியாக இந்தியாவில் விட்டுவிட்டு தான் மட்டும் வெளிநாடு செல்வது சரியா தவறா என்று மனதில் பட்டிமன்றம் நிகழ்ந்து கொண்டே இருந்தது. கணவன், மாமனார் -மாமியார் கொடுத்த தைரியத்தில் தான் அவள் ஒப்புக் கொண்டாள். ஆனாலும் இந்த பெண்ணிற்கு இவ்வளவு கர்வமும், பிடிவாதமும் திமிரும் ஆகாது என்ற எண்ணம் மாலதிக்கு ஒருபுறமிருந்தாலும், இதனால் இந்தப் பெண் ஏதாவது பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளக் கூடாதே என்ற பயமும்தான் இருந்தது.
ஒருவழியாக, சாது திருச்சி வந்தடைய இரவு எட்டு மணி ஆகிவிட, வயலூரிலிருந்து ரங்கன் தான் விமான நிலையம் வரை தனது காரை எடுத்துச் சென்று அவளை ஸ்ரீரங்கம் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்தான். வரும் வழியில் அவளிடம் ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை. பெண்ணிற்கு மனம் முழுவதும் வருத்தம்தான். ஆனால் என்ன,ஏது என்று எந்த காரணமும் தெரியாமல் அவனிடம் என்ன கேட்பது, சில விஷயங்களை விட்டுத்தான் பிடிக்க வேண்டுமென்ற எண்ணத்தை மனதில் மீண்டும் படித்தபடி எப்படியோ வாயை இறுக்க மூடிக்கொண்டு அவளும் தன் பிரயாணத்தைத் தொடர்ந்தாள். ரங்கனுக்கு உள்ளூர மனதில் ஒரு வருத்தம். இந்தப் பெண் எதற்காக இவ்வளவு தூரம் தன் அப்பா -அம்மாவை வெளிநாட்டில் விட்டுவிட்டு இங்கே தனியாக பாட்டி வீட்டிலிருந்து படிக்கிறேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். என்னதான் பொருளாதார ரீதியில் ரங்கனின் வீட்டில் வசதியாக இருந்தாலும், மாலதிக்கு பிடிக்காதது ரங்கன் மற்றும் ரங்கனின் குடும்பம். வெளியில் பொதுவாக யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அவன் நிறைய அனுபவ பாடம் படித்திருக்கிறான். அப்படி இருக்கும் பொழுது இந்தப் பெண் தன்னை நாடி வருவது ரங்கனது மனதிற்கு உவப்பாக இல்லை. மனதில் உள்ளவற்றை எல்லாம் வார்த்தைகளாக்கி அவளிடம் சொல்லவும் அவனுக்கு தயக்கம். அதைவிட அவளிடம் இருந்து தள்ளி நிற்பது இருவருக்குமே நல்லது என்ற முடிவுக்கு அவன் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. என்று மாலதி அவனிடம் தனியாக கூப்பிட்டு பேசினாளோ, அந்த வார்த்தைகள் வேண்டுமானால் அவளது பெண்ணின் வருங்காலம் பற்றியதாக இருக்கலாம் ஆனால் அதன் சாராம்சம் விலகி நில் என்பது மட்டுமே!
பல பெண்களுக்கு, திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆகியிருந்தாலும் கூட தனது புகுந்த வீட்டு குடும்பத்தினர் என்றால் ஏனோ பிடிப்பதில்லை. மாலதியும் அதற்கெல்லாம் விதிவிலக்கல்ல. மாமியார் மாமனாரிடம் மற்றும் கணவரிடம் இருக்கும் ஒருவித பயத்தினால் மட்டுமே அவள் புகுந்த வீட்டினரை அனுசரிப்பது போல் ஒரு நாடகம் நடத்தி வந்தாளே தவிர உண்மையில் அவளின் மனம் முழுவதும் திருநெல்வேலி தான். திருமணமான புதிதில் வெங்கடேசனை தன் குடும்பத்தாருடன் மட்டும் ஒட்ட வைத்துவிட்டு, தான் புகுந்த வீட்டின் சொந்தங்களை கழற்றி விட வேண்டும் என்றெல்லாம் அவள் மனதில் இருந்தது தான். ஆனால் திருமணமாகி வந்த பெண் தாமோதரனின் குடும்ப செழிப்பையும், அந்தஸ்தையும், தன் குடும்பத்தை விட பன்மடங்கு அவர்களது சொத்து மதிப்பையும் கண்டவளுக்கு தனது எண்ணத்தில் சிறிது மாற்றம் வந்தது. அதைப்போன்றே மாமியாரை தட்டி வைக்க எண்ணினால், லக்ஷ்மி அம்மாள் பலே கில்லாடியாக இருந்துவிட்டார். அதனால் தனது எண்ணங்களையும் சுருட்டி மனதிற்குள் வைத்துக் கொண்டவளுக்கு, ரங்கனும் சாதுரியாவும் நெருங்கிய நண்பர்களாக இருப்பது கொஞ்சமும் இஷ்டமில்லை. தனது மனதில் இருக்கும் விஷத்தை எங்கே கக்குவது என்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள் சிறுவனிடம் கக்கிவிட்டாள் . அந்த வயதில் அவனுக்கு அவள் சொல்லுவது தெளிவாக புரியவில்லைதான். ஆனால் வயது ஏற ஏற தெளிவாக புரிந்துவிட்டது, தான் என்ன செய்ய வேண்டும் என்று. ஆனால் அதை மாமன் மகளுக்கு புரிய வைக்கும் வழி தான் அவனுக்கு புலப்படவில்லை. எவ்வளவு ஒதுங்கி போனாலும் இந்த பெண் இப்போது இங்கேயே வந்து நிற்கிறதே என்று அவனுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. பிறந்த அன்றிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் அந்த பெண்ணை. அவளது ஒவ்வொரு அசைவும் அவனுக்கு நன்றாக அத்துபடி. அவள் பெரியவளான போதே அவளது கண்ணோட்டம் மாறிவிட்டதை அவன் அறிந்து கொண்டான். ஆனாலும் சில விஷயங்கள் சரிவராது. தன் போக்கில் யோசித்துக் கொண்டே, வீடுவரை வந்து சேர்ந்து விட்டான் ரங்கன். அவன் மனதில் அவள் மீண்டும் சிரித்துக் கொண்டிருந்தாள்.

அன்று இரவே இலேசாக பாட்டி வீட்டில் சாப்பிட்டுவிட்டு இரவு பதினோரு மணி அளவில் வயலூர் கிளம்பிவிட்டான். சாதுர்யா இன்று இல்லாவிட்டாலும் நாளை அத்தானுடன் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் எண்ணம் புரிந்ததானாலயே நஅவன்
கிளம்புவதில் அவ்வளவு அவசரம் காட்டினான்.

இந்த முறை நுழைவு தேர்வில் வெற்றி பெற்று, வெளிநாட்டுக்கு படிக்க சென்றுவிடவேண்டும், அப்போதுதான் இந்த பெண்ணிற்கும் படிப்பில் நாட்டம் செல்லும். காலம் மனிதனின் எண்ணங்களை மாற்றும் சக்தி கொண்டது. அவள் நினைப்பும் மாறிவிடும், என்று யோசித்தவனாக வீட்டிற்கு சென்று சேர்ந்தான்.

சாதுர்யாவின் மதிப்பெண்கள் நன்றாக இருக்கவே, அவளுக்கு பொறியியல் படிக்க திருச்சியிலேயே பெரிய கல்லூரியில் இருந்து வாய்ப்பு கிடைத்தும், சாதுர்யா அதில் சேர மறுத்துவிட்டாள். தாமோதரன் திரும்பத் திரும்ப அவளை வற்புறுத்தி பார்த்ததும் கூட, நான் பொருளாதாரமும், அரசியல் அறிவியலும்தான் எடுத்து படிக்க போகிறேன். தாத்தா அப்பா வழியில் நானும் ஐஏஎஸ் அதிகாரி ஆகப்போகிறேன் என்று பிடிவாதம் பிடித்தவளை என்ன சொல்லி மாற்றுவது என்பது வீட்டிலுள்ள யாருக்குமே புரியவில்லை. ரங்கனும் கூட சொல்லிப் பார்த்து களைத்து விட்டான். கடைசியில் அவள் எண்ணத்தை மாற்ற முடியாமல், வெங்கடேசனுக்கு அழைத்து பேச, அவரிடம் பெண் தீர்மானமாகச் சொல்லி விட்டாள்,'இதற்காகத்தான் நான் வெளிநாடு வராமல் இங்கேயே தங்கி விட்டேன் என்று'. அடிக்கடி வேலை மாற்றம் வந்தால் திருமண வாழ்விற்கு சரியாக வராது சாது என்று பாட்டி சொன்னதற்கு ' அப்படி என்றால் எனக்கு திருமண வாழ்வே வேண்டாமென்று விட்டாள் பெண்.

அங்குதான் ரங்கனும் தாமோதரனும் கூட அமர்ந்திருந்தார்கள். அவள் சொன்ன பதிலில் திடுக்கிட்டு நிமிர்ந்தான் ரங்கன். முதலில் இந்த பெண்ணிற்கு தன்னிடம் ஈடுபாடு இருக்கிறது என்று தான் நினைத்தது தவறாக இருக்குமோ என்று குழம்பினான் ரங்கன்.

இவ்வளவு தீர்மானமாக செயல்படுபவர்களை லேசில் மாற்ற முடியாது என்பது புரிந்தவர்களாக வீட்டினரும் அவள் போக்கில் விட்டுவிட்டார்கள்.

ஆனால் அவள் சொன்ன பதிலில், மனது தாளாமல், அவளது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அடுத்த நாளே ஜோதிடர் வீட்டிற்கு படையெடுத்தாள் லக்ஷ்மி அம்மாள். இந்தப் பெண்ணின் நடவடிக்கைகளை சிந்தித்தால் லக்ஷ்மி அம்மாவுக்கு எதுவும் சரியாகப் புலப்படவில்லை. எளிதாக , வீட்டினரின் சொல்லுக்கோ,
வெளியிலும் மற்றவர்களின் எண்ணங்களுக்குக்கோ வளைந்து கொடுக்கும் சாதாரண பெண்ணாக அவள் இல்லை. ஆரம்பத்திலிருந்தே அவளுக்கு விரோதிகளும் அதிகம். சண்டைகளும் அதிகம்.
நேற்று அவள் சொன்ன பதிலில், ரங்கனுடன் அவளை முடிச்சு போடும் எண்ணத்தைப் பற்றி லஷ்மி அம்மாள் சந்தேகம் வந்துவிட்டது.
பெண்ணின் ஜாதகத்தை பார்த்து ஜோசியர்,' அவளது ஜாதக அமைப்பு பரிபூரணமாக அமைந்துள்ளது என்றும், யாரும் கிட்டே நெருங்க முடியாத அளவிற்கு பெரிய நிலையில் இருக்கப் போகிறாள் என்றும் சொன்னவர், திருமண வாழ்வு அவளுக்கு சரியாக அமைய போவதில்லை என்ற பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். மேலும் நான்கு ஆண்டுகளுக்கு அவளது ஜாதக அமைப்பு அவ்வளவு சாதகமாக இல்லை. வெகு ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும். அதேசமயம், நான்காவது ஆண்டின் ஆரம்பத்தில் அவ்வளவு திருமணம் முடிவதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்று முடித்துவிட்டார். அவரது முகத்தில், இந்தப் பெண்ணின் ஜாதகத்தில் உள்ள ஒற்றை பற்றி அதிக குழப்பம். அதை லக்ஷ்மி அம்மாளிடம் சொல்வதற்கு அவருக்கு மனம் இல்லை. ஏற்கனவே சொன்ன விஷயங்களே லட்சுமி அம்மாளை புரட்டிப்போட போதுமானது என்பதாக அவர் யோசிப்பதும் இன்னொரு காரணம். ஆனாலும், அந்தப் பெண்ணின் நன்மைக்காக, லக்ஷ்மி அம்மாளிடம் வீட்டிலேயே வெள்ளிக்கிழமைகளில், லக்ஷ்மி பூஜை செய்யுமாறும், ராகு காலத்தில் துர்க்கைக்கு அகல் விளக்கில் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுமாறும் திரும்பத் திரும்ப சொன்னார்.
பெண்ணால் ஏற்ற முடியவில்லை என்றாலும் கூட நீங்கள் இதை விட்டு விடாதீர்கள், அவளுக்கான சக்தி வாய்ந்த பரிகாரம் இதுதான் என்று முடித்துவிட்டு தியானத்திற்கு சென்றுவிட்டார். மனம் முழுவதும் சஞ்சலங்கள் துடன் வீடு வந்து சேர்ந்தாள் அந்த முதியவள்.
***********************************************************
*சங்கரன் சென்றபிறகு இரவெல்லாம், ரத்னாவுக்கு மட்டுமல்ல உமாவுக்கும் கூட உறங்காத இரவாகி போயிற்று. குருவை பற்றிய சிந்தனைகள் ரத்னா, சாந்தா இருவரின் வாழ்க்கை நிலை பற்றி எல்லாம் அவளுக்கு கவலை அப்பிக் கொண்டது. ரத்னாவுக்கு திருமணம் ஆகிவிடும். அவள் திருச்சூர் சென்று விடுவாள்.
வளரும் பருவத்தில் இருக்கும் சாந்தாவின் நிலை என்ன... இப்போதுதான் அவள் எட்டாம் வகுப்பு படிக்கும் சிறு பெண். அவளை எப்படி அவன் பார்வையிலிருந்து காப்பாற்றுவது என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு விடியும் சமயம் தான் தூக்கமே வந்தது.

ரத்னாவின் திருமண நிகழ்வு இன்னும் நான்கு மாதங்கள் மீதம். பேசாமல் சங்கரன் அத்தானிடம் குரு பற்றி பேசிவிடலாம் என்று எண்ணியவள் மதிய நேரத்தில் சங்கரனுக்கு அலைபேசியில் அழைத்துவிட்டாள். முதலில் என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கியவள், பொதுவான விசாரிப்புகளுடன் ஆரம்பித்து தானாகவே பேச்சின்போக்கு உமாவுக்கும் - குருவுக்கு மான திருமணத்தில் வந்து நின்றது. இனி,சங்கரன் தான் ஏதாவது ஒரு வழியில் ரத்னாவை இந்த நான்கு மாதங்களும் கூட காபந்து பண்ண வேண்டும் என்று தீர்மானித்து குருவின் நடத்தைகள் குறித்து ஒன்று விடாமல் எல்லாவற்றையும் சொல்லி விட்டாள் .
அதிர்ந்த சங்கரன் முதலில் கேட்ட கேள்வி,பிறகு இவ்வளவும் தெரிந்தும் ஏன் உன்னை அவனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் உன் வீட்டில் என்று தான். அந்த கேள்வியை
கேட்டவளுக்கு கண்கள் நீரைப் பொழிந்தன.
'சில கேள்விகளுக்கு எல்லாம் எப்பொழுதுமே பதில் கிடையாது அத்தான்' என்று முடித்து விட்டாள். மறுமுனையில் கேட்டுக்கொண்டிருந்தவனுக்கோ இவளது மனோநிலை புரியாமல் இல்லை.

மனதில் ஒரு முடிவுக்கு வந்தவனாக தனது அம்மாவிடம் சென்று,
' உமாவுக்கு பாத்திருக்க இடம் ரொம்ப பெரிய இடமாம். சிவன் மாமாவும் அவங்ககிட்ட தான் வேலை செய்யுறாராமே... கல்யாணத்துக்கு முன்னாடியே திருச்சியில் சிவன் மாமாகிட்ட சொல்லி திருச்சியில் ஒரு பிரான்ச் ஆரம்பிக்கலாம்னு யோசிக்கிறேன்மா. அதனால ஒரு மூணு மாசம் நான் திருச்சியில் போயிருக்க போறேன். இப்பவே வேலையை ஆரம்பிச்சா தான் கல்யாணத்துக்கு சீரா இதையும் சேர்க்க முடியும் ' என்று திலகாவின் மனம் குளிரும்படி பேசியவன், திருச்சியில் சிவன் வீட்டிலேயே மூன்று மாதம் தங்கி கொள்வதற்கும் தன் அம்மா வாய் வழியாகவே வார்த்தைகளை வரவழைத்தான். திலகாவே சிவனுக்கு அழைத்து, 'அண்ணே உன் வீட்டிலேயே மூணு மாசமும் சங்கரன் தங்கிக்க மாடில ரூம் ரெடி பண்ணிடு. அவனுக்கு தொழிலுக்கு என்ன உதவி வேணும்னு பாத்து செய்யு... உங்க வருங்கால மாப்பிள்ளைக்கு நீங்கதான் பார்த்து செய்ய வேண்டும் என்று திலகா முடித்துவிட,
பாறுவோ, என்னதான் சிவனின் சொந்த தங்கையின் மகனாக இருந்தாலும் கூட எவ்வாறு திருமணத்திற்கு முன்னதாக இங்கே தங்க வைக்க முடியும்? என்று ஆட்சேபம் தெரிவிக்க, சங்கரனின் யோசனை புரிந்தவளாக உமாவோ எப்படியாவது சங்கரன் அத்தானை இங்கேயே தங்க வைப்பதில் உறுதியாக இருந்தாள். ரத்னாவின் முகத்தை பார்த்த சிவனும், 'திலகா சொல்றத மறுக்க முடியாது பாறு 'என்றுவிட்டார். உமாவுக்கும் ரத்னாவுக்க்கும் முகத்தில் நிம்மதி படர்ந்தது.

சங்கரன் மனதில் இன்னொரு திட்டம் உண்டு. தொலைவில் இருந்து கொண்டு
அலைபேசியில் பேசி ரத்னாவின் எண்ணங்களை தன்பால் ஈர்ப்பதைவிட மூன்று நான்கு மாதங்கள் திருமணத்திற்கு முன்னால் உடனேயே தங்கியிருக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது அவளது தன் மீதான பயம் குறைய வாய்ப்புண்டு என்றும் யோசித்திருந்தான்.
ரத்னாவுக்கும் மனதிற்குள் உற்சாக குமிழி தான். திருமணம் எனும் பயத்தை மீறி, அவள் இதயம் அவளது சங்கரன் அத்தானுக்காக துடிக்க தொடங்கியிருந்தது.

"சில சமயங்களில் போர்க்களத்திலும் காதல் பூக்கள் பூக்கும். அவை குறிஞ்சி மலரை விட உன்னதமானவை".
 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
124
Reaction score
33
Points
63
17

சங்கரனுக்கு உமா சொன்னவற்றைக் கேட்டபின்பு இரவு உறக்கம் வருவதாய் இல்லை. பணத்திற்கு ஆசைப்பட்டு பெற்று வளர்த்த பெண்ணை விற்பதை கூட அவன் கேள்வி பட்டு இருக்கிறான். சில இடங்களில் பெண்கள் இரண்டாம் தாரமாய் வசதியான வயது முதிர்ந்தவர்களுக்கு திருமணம் செய்து அனுப்பப்பட்டு இருக்கிறார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும். இன்னும் சில இடங்களில் வெளியூர்களுக்கு வேலைக்காக அனுப்பப்படும் பெண்கள் வேறு வழிகளில் கடத்தப்படுகிறார்கள் என்பதெல்லாம் அவனுக்கு கேள்வி ஞானமாய் தெரியும்.
ஆனால் தன் சொந்த மாமன், தன் மகளை வேறு ஏதோ மன கணக்கீடுகளை கொண்டு இது போன்ற ஒரு ஊரறிந்த பொறுக்கிக்கு அவர்களின் பணம், சமூக அந்தஸ்து முதலியவற்றை மனதில் கொண்டு, பணக்கார சம்பந்தம் என்ற பீற்றலோடு குருபரனுக்கு திருமணம் செய்து கொடுப்பது சங்கரனின் மனதில் பெரும் சங்கடத்தை உண்டு பண்ணியது. உமாவை விட சங்கரன் வெறும் மாதக்கணக்கில் தான் பெரியவன். ஒருவேளை, தனக்கு ரத்னாவை திருமணம் நிச்சயிக்கும் முன் உமா பற்றி கேட்டு இருந்தால் நிச்சயம் அவன் சரி என்றுதான் சொல்லி இருப்பான். பெரியவர்களாக பார்த்து இதுபோன்ற முடிவுகளை எடுத்து வைப்பதும், வயதில் சிறியவர்கள் இவர்களின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் எந்த விதத்திலும் சரி இல்லையே! உமா எவ்வாறு குருவை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டாள்? அவள் குரலிலேயே பிடித்த மின்மை தெளிவாக தெரியும் போது மேற்கொண்டு திருமணம் ஏற்பாடுகளை செய்யும் பெரியவர்களை என்னவென்று சொல்வது? உமாவின் மனம் என்னவென்று இத்தனை நாட்களுக்கு குருவுக்கும் கூட தெரிந்திருக்கும். இதுபோன்ற பெண்ணின் சம்மதமில்லாமல் நடக்கும் திருமணத்தில் அவனுக்கு என்ன பெரிய சந்தோஷம் கிடைத்துவிடும்?

வெறும் பணத்தைக் காட்டி பெண் வீட்டாரை விலைக்கு வாங்கி விட்ட அருணாச்சலம் குடும்பத்தினரை என்னவென்று சொல்லுவது?
இல்லை தன் பெண்ணின் வாழ்வு இது என்றும் பாராமல் வெறும் பணத்திற்காக தன் பெண்ணை விலை பேசும் தன் மாமனை என்னவென்று திட்டுவது... நினைக்க நினைக்க சங்கரனுக்கு மனது பொறுக்கவில்லை. அவனுக்கு உமாவின் தியாகத்தை எண்ணி அவள் மீது எந்த பரிதாபமும் வரவில்லை. மாறாக இந்தப் பெண் தன் வாழ்க்கை பற்றி எண்ணிப் பாராமல் குடும்பத்திற்காக இந்த தியாகங்களை செய்யவில்லை என்றால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கோபம் தான் நிலைத்து நின்றது. ரத்னா உடனான திருமணம் மட்டும் நிச்சயம் ஆகாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக உமாவை கட்டாயப்படுத்தி சங்கரன் தன்னுடன் கூட்டிச் சென்றிருந்திருப்பான். அவசரப்பட்டு, வீட்டில் ஒரு பெண்ணை விற்று கொண்டு வரும் சீர் பொருட்களை கொண்டு தன் திருமணம் நடப்பது என்றால் நான் எல்லாம் என்ன ஆண் பிள்ளை என்று அவன் மனம் அவனை எகத்தாளம் செய்ய இதில் தான் என்ன செய்ய முடியும் எவ்வாறு இந்த சீர் பொருட்களை வாங்காமல் மறுப்பது, இதனால் ரத்னாவுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்கள் என்ன, வரும் காலத்தில் தன் அம்மாவும் தங்கையும் ரத்னாவை எவ்வாறு நடத்தக்கூடும் என்றெல்லாம் எண்ணி அவனுக்கு தலைசுற்றல் வந்தது தான் மிச்சம். எப்படியும் திருச்சியில் ஒரு கிளை திறப்பதாக அவன் முடிவு செய்திருக்கிறான். அதற்கு மிகுந்த பணம் தேவைப்படுகிறது. அப்படி இருக்கும்போது ரத்னாவுக்கு கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு தேவைப்படும் திருமண சீர் பொருட்களை வாங்கும் நிலையில் அவன் இல்லை. அவர்கள் இனத்தில் பெண்ணுக்கு குறைந்தது ஐம்பது சவரன்களாவது நகைகள் வேண்டும். சிவன் தன் பெருமை காட்டுவதற்கு என்று 70 சவரன் போடுவதாக வேறு சொல்லிவிட்டார். இதைத் தவிர பெண்ணுக்கு ஆகும் இன்னபிற செலவுகள். திருமண செலவு பாதி பாதி என்று விட்டாள் திலகா. எப்படியும் நகை தவிர்த்தும் ஐந்து லட்சம் ரூபாய்கள் தேவைப்படும். யோசித்தவனுக்கு சட்டென்று ஒரு முடிவு புலப்பட சந்தோஷம் அவனைக் கட்டிக் கொண்டது. பிறகு நிம்மதியாக உறங்க தொடங்கிவிட்டான்.
மறுநாள் சங்கரன் திருச்சூரிலிருந்து திருச்சிக்கு கிளம்பிவிட்டான். இனி மூன்று மாதங்களுக்கு அவன் அங்குதான்.
உமா அவனிடம் இன்னொரு பெரிய பொறுப்பை கட்டியிருக்கிறாள்.எந்தவித காரணத்தைக் கொண்டும் திருமணம் முடிந்த பிறகு ரத்னாவை கூட்டி கொண்டு தமிழ்நாட்டுக்கு அவன் வந்துவிடக்கூடாது என்பது தான் அது. இந்த பெண்களுக்கு தான் பிறந்த வீட்டு பாசத்துடன் கூட பிறந்தவர்கள் மீதும், அவர்கள் நல்வாழ்க்கை மீதும் எவ்வளவு அக்கறை, பாதுகாப்பு உணர்வு வைத்திருக்கிறார்கள் என்று வெகுவாக வியந்தான்.

ராக்காயி தன் சதை விற்கும் தொழிலை விட்டு நான்கு வருஷங்கள் ஆகிவிட்டது. அவளை கர்ப்பவதியாக ஒரு முறை திருச்சியில் கண்ட சிவன், ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துச் சென்று, அவளிடம் விசாரித்தார். அவள் வயிற்றில் இருப்பது ஒருவேளை குருவின் குழந்தையாக இருக்குமோ என்ற சந்தேகமும் ஒரு காரணம். ஆனால் ராக்காயி இல்லை இது குருவின் குழந்தை இல்லை என்று மறுத்துவிட்டாள். வேறு யாருடைய குழந்தை இது என்று கேட்டதற்கு அது சிவனுக்கு தேவையில்லாத வேலை என்று மட்டும் சொல்லி முடித்துக்கொண்டாள். நிம்மதி பெருமூச்சு விட்ட சிவன் அவள் கைகளில் கொஞ்சம் பணத்தை மட்டும் திணித்து அனுப்பி வைத்தார். முதலில் மறுத்த ராக்காயி பின்னர் பணத்தை வாங்கிக் கொண்டாள். அவள் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்டதும் அவளது அண்ணன்கள் அவளை வீட்டை விட்டுத் துரத்தி விட்டார்கள். மேலூரிலிருந்து அவள் திருச்சிக்கு இடம் பெயர்ந்து மூன்று மாதங்கள் ஆகிறது. இங்கு அவள் பழைய தொழிலை பற்றி அறிந்தவர்கள் எவரும் இல்லை. இவளின் சதையையும் இரத்தத்தையும் உறிஞ்சிக்கொண்டு இவளை வெறும் கூடாக விட்டுவிட்ட உடன் பிறந்தோருக்க்கும் ராக்காயி உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது பற்றிய கவலை கூட இல்லை. ராக்காயியின் மூலம் அவர்கள் பெற்ற பணமும் சொத்தும் அளவில் அடங்காதவை. அவர்களது மிச்ச வாழ்நாளை கழிப்பதற்கு அது போதும். அத்துடன் இனி போலி பந்தாவுடன் சுற்றவும் தோது. காலப்போக்கில் ராகாயி இந்த குடும்பத்தை சேர்ந்தவள் என்பது பற்றி யாருக்கும் நினைவில் இருக்கப் போவதில்லை. என்னதான் அவள் குடும்பத்திற்காக என்று செய்த விஷயங்கள் மன தர்மத்தின் படி ஒப்புக் கொள்ளும் படியாக இருந்தாலும், சமூக நிலையில் அது ஒரு இழிந்த தொழில்தான்.

ராக்காயி அரசு மருத்துவமனையின் வாசலில் கையில் குழந்தையுடன் கண்ட சிவன், இனி அவள் வாழ்க்கையில் குழந்தையை வளர்ப்பது மட்டும்தான் அவளது முடிவான நோக்கமாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து, அவளுக்கு வாழையிலை மண்டி வைத்துக் கொடுத்தார். அருணாச்சலத்தின் வாழைத்தோப்பில் இருக்கும் வாழை மரங்கள் குத்தகை எடுப்பதற்கு வழியும் செய்து கொடுத்தார்.
இவற்றின் மூலம் அருணாச்சலம் குடும்பம் ஒரு உண்மை விசுவாசியை ஏற்படுத்திக்கொண்டது. சிவன் மீதும் ராக்காயிக்கு நன்றி உணர்ச்சி மிகுந்தது. நேர்மையான வழியில் வாழ்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த சிவன் அவள் கண்களுக்கு நிஜமாக சிவனாக தெரிந்தார்.

அருணாச்சலம் அரசியல் ரீதியில் இப்போது நன்றாக காலையும் ஊன்றி கொண்டு விட்டதால், சிவனின் வழிகாட்டலில் ராக்காயி அவரது கட்சியில் மகளிர் அணியில் சேர்ந்து கொண்டு விட்டாள். அவளுக்கும் அவளது பெண்ணுக்கும் இது ஒரு வழியில் பாதுகாப்பாக இருந்தது.

ராக்காயியின் பெண் குழந்தைக்கு இப்போது நான்கு வயது. முன் நாற்பதுகளில் நின்று கொண்டிருக்கிறாள் ராக்காயி. அவள் வாழ்வில் இந்த நொடி ஒரே பிடித்தம் என்றால் அவரது மகள் சௌமியா தான்.
பெற்ற பெண்ணை பாதுகாப்பதற்காக அவள் இப்போது 'சொர்ணாக்கா' போன்று தன்னை மாற்றிக்கொண்டாள். அவளின் அருகே வருவதற்கு மற்றவர்களுக்கு பயம் வந்துவிட்டது. ஒவ்வொரு முறை பிரச்சனைகளை சந்திக்கும் போதும் அவள் கை கால்கள் நடுங்குவதும், மனம் உதறல் எடுப்பதும் அவளுக்கு மட்டும்தான் தெரிந்த ரகசியம். ஆனால் அவளுக்கு வேறு வழி இல்லை. தன்னைப் பற்றி அவள் ஒன்றும் கவலைப்படவில்லை இன்றும் சரி நேற்றும் சரி. நாளை என்ற ஒன்று பற்றி தெளிவாக அவளுக்குப் தெரியாவிட்டாலும் குழந்தை, அவளின் பாதுகாப்பு முக்கியம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்திருந்தது. ஓரளவுக்கு வருமானமும் இருப்பதால் வாழ்க்கை கொஞ்சம் நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது. அருணாச்சலம் தான் கலந்து கொள்ளும் திருமண நிகழ்வுகளுக்கு, பொது விழாக்களுக்கு வாழை மரம்,தோரணங்கள் கட்டும் வேலையை சிவன் மூலம் ராக்காயிக்கு கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். ஒரு காலத்தில் அந்த பெண்ணை தன் மகனுடன் கண்டதாக வீரன் மூலம் அறிந்து கொண்டு இருந்தவர், இப்போது அந்தப் பெண்ணின் நிலை சரி இல்லாத சமயத்தில், நேர்மையாக ஒரு வாழ்க்கை வாழ என்னால் ஏதேனும் செய்ய முடிந்தால், அந்த புண்ணியம் குருபரனை சேரட்டும் என்று அவருக்கு சமாதனம் சொல்லியது அருணாச்சலத்தின் மனம்.

குருபரனின் திருமணத்திற்காக வாழைத் தோரணங்கள் கட்டும் காண்ட்ராக்ட் ரா க்காயிக்குதான் கொடுத்துள்ளார் அருணாச்சலம்.

சங்கரன் திருச்சி வந்த மூன்று மாதங்களுக்குள் தன் இல்லாமல் ரத்னா அவள் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்று நிலைக்கு கொண்டு வந்து விட்டான். அவன் காதல் ரத்னாவையும் தொற்றிக்கொண்டது. சங்கரனின் உயிருக்கும் மேலாக நேசிக்க தொடங்கிவிட்டாள் ரத்னா. பிறகு இருவருமாய் முடிவெடுத்து அவளை ரகசியமாய் பதிவு திருமணம் செய்து கொண்டு, அவள் கழுத்தில் தான் அணிந்திருக்கும் செயினை கழற்றி அணிவித்தான். அவள் தன்மான உணர்வு
அவனுக்கு நன்றி சொன்னது. ஒருவேளை குருபரன் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த சீருடன் இருவரின் திருமணமும் நடந்திருந்தால் காலம் முழுமைக்கும் அவர்களுக்கு சுமை யாகத்தான் இருந்திருக்குமே தவிர சுகமாக இருந்திருக்கபோவது வில்லை.
கையோடு கொண்டு வந்திருந்த கல்லூரியின் விண்ணப்ப படிவத்திலும் பூர்த்தி செய்து அவளது கையெழுத்துக்களை வாங்கியவன், யாருக்கும் இவை பற்றி எதுவும் சொல்ல வேண்டாம் என்று ரத்னாவை எச்சரித்துவிட்டு வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு அன்று இரவு திருச்சூருக்கு சென்றான். கல்லூரியில் விண்ணப்பத்தை சேர்த்தவன், அங்கே அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு தேர்ந்தெடுத்தான். ரத்னாவை கூட்டிக்கொண்டு வந்து கல்லூரியில் சேர்த்துவிட்டு, இருவரும் இங்கேயே தனிக்குடித்தனம் ஆரம்பிப்பதுதான் அவனது திட்டம். மற்றவர்களிடமிருந்து ரத்னாவை காக்கும் வழி அவனுக்கு வேறு புலப்படவில்லை.
வேலைகளை முடித்து விட்டு நேராக தன் வீட்டுக்கு சென்று இரண்டு நாட்கள் இருந்தவன் ஒரு வழியாக தன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டு வீட்டில் தனக்கும் ரத்னாவுக்குமான திருமண உறவைப் பற்றியும் சொல்லிவிட்டான்.
திலகாவிற்கோ பிரம்மாண்டமாய் நடக்க வேண்டிய திருமணத்தை தன் மகன் இப்படி செய்து விட்டானே என்ற ஆதங்கம்தான்.
ஆனால் அடுத்து ரத்னாவிடம் இருந்து எந்த சீரும் கேட்கக்கூடாது என்று சங்கரன் சொன்னதும் தான் அவளுக்கு ஆங்காரம் வந்தது. ரத்னாவின் மேல் படிப்பு பற்றியும் தனிக்குடித்தனம் பற்றியும் சங்கரன் சொல்லும்போது சங்கரனின் அப்பா அவனை அடிக்க வந்துவிட்டார். சங்கரனின் தங்கை சங்கரனின் மீது வெறுப்பு பார்வையை வீசினாள்.
இப்படி சங்கரன் -ரத்னா இருவரும் சங்கரன் வீட்டில் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டு விட்டார்கள். ஆனால் பின்விளைவுகளும் முழுவதும் ரத்னா மட்டுமே அனுபவிக்கப் போகிறாள் என்பது முன்னமே தெரிந்திருந்தால் வேறு ஏதாவது ஒரு வழியை தேர்ந்தெடுத்து வைத்திருப்பான் சங்கரன்... ஆனால் நிஜம் வேறு ஆயிற்றே!

தான் செய்வது சரிதான் என்ற நம்பிக்கை சங்கரனுக்கு இருந்ததால் அவன் யாரை பற்றியும் கவலை கொள்ளவில்லை. எப்படியும் அவன் வைத்திருக்கும் லாரிகளும் தொழிலும் அவனுடையதுதான். பொருளாதார நிலையிலும் அவன் யாரையும் சார்ந்து இருக்கவில்லை. இதுவே அவனுக்கு தனி கம்பீரத்தை சேர்த்தது. தான் சொல்லவேண்டியவற்றை வீட்டுல் சொல்லி முடித்தாயிற்று என்ற தோரணையில் சங்கரன் திருச்சிக்கு கிளம்பி வந்துவிட்டான்.

விஷயத்தை ஏற்கனவே அலைபேசியின் மூலம் திலகா சொல்ல கேட்டு இருந்த சிவனின் முகம் சிவந்துவிட்டது. வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்வாயா என்று ரத்னாவை அவர் புரட்டி எடுத்து விட்டார். என்னதான் தன் தங்கை மகன் என்றாலும் திருமணம் அவனுடன் தான் நிச்சயிக்கப் பட்டிருக்கிறது என்ற நிலையிலும் கூட இதுபோல் ரத்னா செய்தது திருட்டு கல்யாணம் தான் என்பது அவர் மனதில் ஆழப்பதிந்து விட்டது.
இந்தச் சின்ன குட்டி இன்னும் ஒரு மாதம் பொறுத்திருந்தால் ஊரறிய திருமணம் செய்து வைத்திருக்கலாமே என்று அவர் மனம் அடித்துக் கொண்டது. 'இதுக்குத்தான் முன்னமே சொன்னேனே அந்த பையன இங்க தங்க வைக்க வேணாம்னு' என்று பாறுக்குட்டி சமயம் பார்த்து சிவனிடம் கேள்வி கேட்டாள். தன் மகளின் திருமணத்தை தான் காண முடியவில்லையே என்ற ஏக்கம் அந்த தாயின் கேள்வியில் நிரம்ப காணப்பட்டது.
மறுநாள் காலை சங்கரனுக்கு சிவனுடன் பேச எந்த விருப்பமும் இல்லை. உமாவின் திருமணத்தை சிவன் நிச்சயித்திருந்ததன் மூலம் சங்கரனின் மதிப்பை இழந்து விட்டார் அவர். போதாத குறைக்கு ரத்னாவின் முகம் முழுவதும் அழுது வீக்கம் கண்டிருந்தது. அவள் கண்ணங்களில் சிவனின் கைகள் தடம். ரத்னாவின் கண்கள் சிவந்திருந்தது. இவற்றை எல்லாம் கண்டு சங்கரனின் மனம் ஊழிக்காலத்தில் இருக்கும் மஹா சிவனின் மனதை போல் கடுமையாக மாறிவிட்டது. அவன் உடம்பிலிருந்து ஏற்பட்ட உஷ்ணத்தில் அவன் அருகில் செல்வதற்கு கூட மற்றவர்களுக்கு பயம் வந்துவிட்டது. அறைக்குள்ளிருந்து உமா, சங்கரனின் நோக்கி தன் இரு கைகளையும் கூப்பி கொண்டாள். சங்கரன் இருந்த இந்த மூன்று மாதங்களில் குருபரன் ஒருமுறைகூட வீட்டு பக்கம் வரவில்லை. சங்கரனை பார்க்கும்போது ஒருவர் எனக்கு ஒரு விதகிலி பிடித்து கொண்டிருந்தது. அதனால் குருபரன் மூலம் உமாவுக்கும் கூட எந்த தொந்தரவும் இல்லை. தங்கையின் திருமணத்தின் மூலம் சங்கரனின் சுயமரியாதையை புரிந்து கொண்டாள் உமா.
மௌனமாக ஒரு சிறு பையில் ரத்னாவுக்கு தேவையானவற்றையும், அவளது பள்ளி சான்றிதழ்களையும் எடுத்து வைத்து இனி உன் வாழ்வு சங்கரனுடன் தான், இனிமேல் உனக்கு இங்கு திருச்சியில் வேலை இல்லை கிளம்பு என்று வேகமாக ரத்னாவை கிளப்பி விட்டாள் உமா. சந்தோஷமாகவே தன் அக்காவையும் சாந்தா வையும் கட்டிக்கொண்டு முத்தமிட்டு தன் அம்மாவின் கால்களில் பணிந்து வாழ்க்கை பிரயாணத்தின் முதல் அடியை எடுத்து வைத்தாள் ரத்னா.
வரும் காலம் நிஜமாகவே ரத்னாவுக்கு திருச்சூரில் செழிக்குமா?
இனி உமாவின் திருமண நிகழ்வில் சந்திப்போம்!
 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
124
Reaction score
33
Points
63
18

ஒருவழியாக ரத்னா திருமணம் முடிந்து திருச்சூர் சென்ற பிறகு, சிவனின் வீடு நடந்தவற்றை ஜீரணம் செய்து கொண்டு வழக்கத்திற்கு மாறியது. திருமணம் நடந்தது பற்றி அவர்கள் வீட்டில் யாருக்கும் வருத்தம் இல்லை. ஆனால் அது நடந்த விதம் சிவனுக்கும் அவரது தங்கை திலகா விற்கும் இடையே பெரிய மன பிளவை ஏற்படுத்தி விட்டது. தன் அண்ணன், சீர் செய்வதற்கு யோசனை கொண்டு தன் மகன் சங்கரனை வளைத்துப் போட்டு இந்த திருமணத்தை நடத்திவிட்டதாகவே எண்ணினாள். சங்கரன் திருமணத்திற்கு முன்பே ரத்னாவின் மீது கொண்டிருந்த காதல் திலகா விற்கு தூபம் போட்டிருந்தது. அவன் தானாகவே வந்து திருச்சி செல்கிறேன், அங்கு கிளை ஆரம்பிக்க போகிறேன் என்றெல்லாம் சொன்னது ரத்னாவின் மீதுள்ள ஈடுபாட்டினால் தான் என்பது திலகத்தை இப்பொழுது புரிந்தது. ஆனால் உமாவின் விஷயத்தைப் பற்றி யாரிடமும் சங்கரன் இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை. அதைப்போல் திருமணம் முடிந்து ரத்னா மையம் தனது வீட்டிற்கு நேராக கூட்டிச் செல்லாமல் தான் பார்த்து வைத்திருந்த வீட்டிற்குத்தான் கூட்டிச்சென்றான். இவையெல்லாம் திலகா மற்றும் அவள் குடும்பத்திற்கும் மாறாது எரிச்சலை கிளப்பி விட்டது. போறாத குறைக்கு திலகாவின் கணவர் அவளின் எரிச்சலை கிளப்பும் வகையில் ரத்னா எப்படி சங்கரனை மயக்கி கைக்குள் போட்டுக் கொண்டாள் என்றும் திலகாவின் பிறந்த வீட்டினர் எப்போதுமே இப்படித்தான் என்றெல்லாம் இத்தனை வருடங்களாக மனதிற்குள் வைத்திருந்த வஞ்சனைகளைத் திரட்டி வார்த்தைகளாக மாற்றி கூறாக திலகாவின் மேல் இறங்கினார். இன்னொரு பக்கம் ரத்னாவின் அழகின் மீது கிடந்த பொறாமையால் சங்கரனின் தங்கையும் ரத்னாவை ஆள் மயக்கி என்றும் அவள் எப்படி தனது அண்ணனை தன் அழகை காட்டி கைக்குள் போட்டுக் கொண்டு விட்டாள் என்றும், சங்கரனை குடும்பத்தைவிட்டு எப்படி கூட்டிச் சென்று விட்டாள் என்றும் விஷத்தை கக்கிக்கொண்டிருந்தாள். எல்லாமாக சேர்ந்து திலகத்திற்கு தன் அண்ணன் மகள் ரத்னா நிரந்தர பகையாளி ஆகிப் போனாள்.


அருணாச்சலத்தின் வீட்டில் குருபரனோ தனது அன்னையிடம் இன்னும் இரண்டு மாதங்கள் எல்லாம் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது உடனேயே திருமணம் செய்தாக வேண்டுமென்று ஒரே பிடிவாதம் செய்யலானான்.

அவனுக்கு திருமணத்தின் உமாவின் பிடித்தமின்மை பற்றி தெளிவாக தெரியும். ரத்னாவாவது திருமணம் நிச்சயம் இருந்த பையனை திருமணம் செய்து கொண்டாள். உமா எங்காவது வேறு யாரையாவது கூட்டிச் சென்று விட்டால் என்ன செய்வது என்று அவன் எண்ணம் கேவலமாக ஓடியது. திருமணத்திற்கு இதற்கு மேல் தாமதிக்க முடியாது என்று ஒரே ரகளை. அவனின் மனமும் சில மாதங்களாகவே பெண் சுகம் இன்றி தவித்துக்கொண்டிருந்தது. அவன் உமாவை நிஜமாகவே அவன் உடலும், மனமும் நாடியது. இதற்கு சத்தியமாய் காதல் என்ற பெயர் கொடுக்க முடியாது. காமம்தான்... வெறும் காமம் அல்ல. உமாவை விழுத்த கூடிய கொடும் தீ அது. அந்த தீயிலும் உமா தன்னை கொடுத்து தான் ஆக வேண்டும். அவனது காத்திருப்புக்கு அந்த பேதை பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம்.


அன்னபூரணி எவ்வளவோ எடுத்துச் சொல்லி விட்டாள் இன்னும் இரண்டு மாதங்கள் தான்... பிறகு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று. ஆனால் கேட்கும் நிலையில் அவன் இல்லை. உயிர் பற்றிய பயம் கொஞ்சம் கொஞ்சமாக அவனிடமிருந்து விலகி கொண்டிருந்தது. அன்னபூரணி ஒரு ஆறுமாதம் உனக்கு நேரம் சரியில்லை என்று சொன்னதிலிருந்து சற்று தன்னை அடக்கி வாசித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனது இயல்பான குணம் அவன் பயத்தை அடக்கி விட்டது. பெண் தன் கையை மீறி விடுமோ என்ற எண்ணம் அவனுக்குள் ஆழமாய். போதாத குறைக்கு சங்கரன் இருந்தபொழுது வேண்டுமென்றே உமா அந்த பொடிப்பயலை வைத்துக் கொண்டு தனக்கு ஆட்டம் காட்டி விட்டதாகவே குரு நம்பினான். சங்கரன் திருச்சியில் தங்கியிருந்த பொழுது அவனது வாட்டசாட்டமான உருவ அமைப்பும் நேர்கொண்ட பார்வையும் உறவுக்கு ஒருவித பயத்தை உண்டு பண்ணி இருந்ததால் சிவன் வீட்டில் பக்கமே அவன் செல்லவில்லை. 3மாதம் உண்மையில் உமா நிம்மதியாக உணர்ந்தாள். சங்கரனுக்கு

உமாவுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கக்கூடும் என்று கூட குருவுக்கு ஒரு சந்தேகம் உண்டு. ஒருவழியாக சங்கரன் கல்யாணம் செய்துகொண்டு சென்றுவிட்டான்.


சிவன் அடுத்த நாள் காலையில் வேலைக்கு வந்த உடன் முதல் காரியமாக அவரை தன் அறைக்குள் அழைத்துச் சென்ற குரு, 'உம்ம பொண்ணுக்கும் எனக்கும் கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம்' என்றுதான் கேட்டான். இதை சற்றும் சிவன் எதிர்பார்க்கவில்லை.

ஒரு வழியாக எச்சிலைக் கூட்டிக்கொண்டு இன்னும் இரண்டு மாதங்கள் மீதம் இருக்கிறது தம்பி என்றார் சிவன். அந்த பதிலைக் கேட்ட குருவின் கண்கள் ரத்தம் என சிவந்துவிட்டது. அன்னபூரணி அருணாச்சலம் இந்த திருமணத்திற்கு இன்னும் மாதங்கள் இருக்கிறது என்கிறார்கள். வருங்கால மாப்பிள்ளையிடம் பேசுகிறோம் என்ற மரியாதையும் இல்லாமல் சிவனும் இதுபோன்ற ஒரு பதிலையே சொல்லுகிறான். இந்த குருவை இவர்கள் எல்லாம் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவனுள் ஆத்திரம் பொங்கியது.

சட்டென்று, ஊர் கூட்டி செய்த கல்யாணத்த பத்தி பேசல சிவன், அதுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கு. உமாவை கூட்டிக்கிட்டு வந்து இங்கு வைங்க. முதல்ல குடும்பம் நடத்தி பார்க்கிறேன். அப்புறம் உங்க இஷ்டத்துக்கு கல்யாணத்த வச்சிக்கலாம் என்று ஒரு பெரிய குண்டை இறக்க சிவனின் கண்கள் முதன்முறையாக கலங்கியது. எப்பேர்பட்ட ஒருவனுக்கு தன் மகளை திருமணம் செய்து வைக்கும் முடிவெடுத்து விட்டோம். ஆழம் தெரியாமல் பாழும் கிணற்றில் தன் மகளை இறக்கிவிட்டு விட்டேனே என்று மருகினார். அவரிடமிருந்து பதில் வராமல் போகவே ஒரு கோணம் சிரிப்புடன், இதுல யோசிக்க ஒன்னும் இல்ல சிவன். ஒன்னு உங்களுக்கு வசதின்னா கல்யாணத்தை சீக்கிரம் வையுங்க. இல்ல ஏன் வசதிக்கு அவள் இங்கே கொண்டு வந்து விடுங்கள் என்று சிரித்துக்கொண்டே சொன்னவனை என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை. எந்த பதிலுமே சொல்லமுடியாமல் தலை கவிழ்ந்து கொண்டு கூடத்திற்கு வந்தவரை அன்னபூரணி தான் எதிர்கொண்டாள். குரு சொன்னதை அப்படியே சொன்ன சிவனுக்கு துக்கம் தாங்க முடியவில்லை. இதற்கு மேல் அவன் சொல்வதை கேட்க மாட்டான் என்று புரிந்து அன்னபூரணியும் கல்யாணத்திற்கு சீக்கிரம் ஏற்பாடு பண்ணிடலாம் சிவன் என்று விட்டாள். இந்த குடும்பத்திற்குள் வரப்போகும் பெண் மரியாதையாக நுழைய வேண்டும் என்பது நிச்சயம். குரு பொறுமை இல்லாதவன், ஆத்திரக் காரனும் கூட. யாரும் திருமணத்திற்கு இப்போது ஒப்புக்கொள்ளவில்லை என்று அவளை கடத்தி சென்று விட்டால் பெரிய ஆபத்து என்று யோசித்தவள் குடும்ப ஜோசியரை நாள் கொடுத்த தருமாறு கேட்டுக் கொண்டு சென்றாள்.


ஜோசியரோ இன்னும் 20 நாட்களில் முகூர்த்தம் உள்ளது என்று நாள் குறித்து கொடுக்க அன்னபூரணி நேரே குருவிடம் சென்று இன்னும் கல்யாணத்திற்கு 20 நாட்கள் தான். அது வரை வேறு எதையும் யோசிக்காதே என்று எச்சரித்து விட்டுச் சென்றாள்.


திருமணத்திற்காக திருச்சியில் பெரிய துணிக்கடையில் துணிகளும் முகூர்த்த பட்டும், நகைக்கடையில் எனக்காக நூறு சவரனுக்கு பெண்ணிற்கு நகைகளும் தாலிக்கொடியும் அருணாச்சலமும் அன்னபூரணியும் சென்று வாங்கினார்கள். அவர்களுடன் சென்ற சிவனுக்கும் அவர் மனைவிக்கும் இவர்கள் வாங்கும் வேகத்தைப் பார்த்து தலை சுற்றல் தான். பாறுக்குட்டி தன் மகள் பெரிய இடத்தில் கல்யாணம் ஆகி செல்ல போகிறாள் என்பதை நினைத்து ஆனந்தப் பட்டதுண்டு. இப்பொழுது தன் எண்ணம் சரிதான் என்று அவளுக்கு தோன்றியது.


என்னவானாலும் இந்த திருமணத்தை அன்னபூரணியும் அருணாசலமும் தோற்க விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை அவளுக்குள் வந்துவிட்டது. தனது அன்பினாலும்,நேசத்தினாலும் குருவை தன் மகள் தன் வழியில் மாற்றிக்கொண்டால் அவள் வாழ்க்கை சந்தோஷமாக அமையும் என்று நினைத்துக் கொண்டாள் அந்த தாய்.


ஆனால் என்றாவது புலிதான் மேல் தோலில் உள்ள வரிகளை மாற்றி கொள்ளுமா, இல்லை பாம்பால் தான் தன் விஷத்தை விட்டுவிட முடியுமா?


குரு மோகத்துடனும் உமா பயத்துடனும் எதிர்பார்த்திருந்த அந்த திருமண நாளும் விடிந்தது. திருச்சியிலேயே பெரிய கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு ஆகி இருந்தது அவர்களது திருமணம். சென்னையிலிருந்து கட்சித் தலைமை முதற்கொண்டு அடிமட்ட தொண்டன் வரை குருவின் திருமண நிகழ்வில் பங்கேற்றார்கள். இதை தனது அரசியல் செல்வாக்கிற்கு ஒரு பெரிய வாயிலாக அமைத்துக்கொண்டார் அருணாச்சலம். கட்சித் தலைமையே அவரது மகன் திருமணத்திற்கு வர சுற்று வட்டாரத்தில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட திருமண நிகழ்வில் பங்கேற்றார்கள். கூட்டம் அலைமோத எல்லோருக்கும் உணவு பந்தி பந்தியாக பரிமாறப்பட்ட கொண்டே இருந்தது.

வடக்கத்திய முறைப்படி முதல்நாள் மெஹந்தி, ஹால்தி முதலியவைகள் நடக்க அடுத்த நாள் திருமணம் தமிழக முறைப்படிதான் நடக்க வேண்டுமென்று அருணாச்சலம் தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.


ஐயர் மந்திரங்கள் சொல்ல, பாதி மந்திரங்கள் சொல்லியும் மீதியை விட்டும், வந்திருந்த இளம் குமரிகளின் பார்த்து ஜொல்லு விட்டுக் கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் அமர்ந்திருந்த குருவுக்கு சிவனுக்கு மனைவி

பாறுகுட்டி கண்ணில் பட தன் அன்னை வயதை உடையவர்கள் என்பதையும் மறந்து அளவிட்டு கொண்டிருந்தான் குரு. இவற்றையெல்லாம் பார்க்கும் நிலையில் நல்லவேளை பாறு இல்லை.


உமா ஏற்கனவே சொல்லி விட்டதால் சங்கரனும் ரத்னாவும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. திலகா வீட்டினர் கோவம் நிறைய இருந்தாலும் கூட அண்ணன் வீட்டு திருமணத்தை எப்படி நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக திலகா மட்டும் வந்திருந்தாள். அவளுக்கு பொறாமையில் அடிவயிறு எரிந்தது.


அரக்கு நிற பட்டு உடுத்தி அதே நேரத்தில் கையில் மருதாணி சிவந்து, புதுப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு அன்னபூரணி வாங்கிக்கொடுத்து இருந்த நகைகள் மொத்தத்தையும் அணிந்துகொண்டு அழகு சிலை என மெல்ல தன் பஞ்சு வண்ண பாதங்களால் நடந்து வந்த உமாவை விட்டு குருவின் கண்கள் அப்படி இப்படி நகர வில்லை. அவளை அவன் பார்த்த விதம் அவள் மனதினுள் நாணத்தை ஏற்படுத்துவதற்கு பதில் அச்சத்தையும் அருவருப்பையும் உண்டுபண்ணியது. உடல் முழுவதும் கம்பளிப்பூச்சி ஏறுவது போல் உணர்ந்தாள் பெண். இவனுடன் என் காலம் முழுவதுமா என்று உள்மனம் கதறியது.

'இறைவா எனது திருமண வாழ்க்கை சீக்கிரம் முடித்து விடு என்று உள்ளூர பிரார்த்தனைகள் செய்து கொண்டிருந்தாள் உமா'.


குருவுக்கு அவளது மெல்லிடையில் இருக்கும் ஒட்டியாணம் மீது கோபம் வந்தது அது மட்டும் அவளது இடையை ஒட்டி உறவாடுவது பார்த்து . கூடவே அவளது இடை அளவு என்ன என்றும் யோசித்துக்கொண்டிருந்தான்.


ஐயர் மந்திரங்களை சொல்லிக் கொண்டே இருப்பதில் பொறுமை இழந்தவனாக,' போதும் ஐரே! தாலி கட்டுற மந்திரத்தை மட்டும் சொல்லு ' என்று சத்தம் போட்டு அசட்டு சிரிப்புடன் சொல்ல அவன் தோழர்களும் பெரிய ஹாசியத்தை சிரிக்க, அருணாச்சலம் அன்னபூரணி இருவருக்கும் எரிச்சல் என்றால் சிவனுக்கும் அவரது மனைவிக்கும் தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது. உமாவுக்கு அவன் அருகில் அமர்ந்து இருப்பதே குமட்டிக் கொண்டு வர சிரிக்க முடியாமல் சிரிப்பது போல் பாவனையில் அவன் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.


மங்கலநாண் பூட்டும் நிகழ்வு வர, உமாவின் காதுகளில், குருவோ, ஃபர்ஸ்ட் நைட் எதுக்கு டி, ஃபர்ஸ்ட் டே கொண்டாடலாமா... சும்மா கும்முனு கொல்ற டி என்று அவன் அவள் காதுகளில் பிறருக்கு கேட்காமல் அவளுக்கு மட்டும் கேட்கும்படி கேட்டுக்கொண்டே மூன்று முடிச்சு களிட வெறுப்புடன் அவன் கருவிழிகளில் தனது விழிகளை கலக்க விட்டாள் பெண்.

அவள் வெறுப்புப் பார்வையை


அவனுக்குள் பிராந்தி போல் இறங்கியது. உள்ளே இறங்கும் போது எரிச்சலை கொடுத்தாலும், அதன் போதையே தனிதான் என்று எண்ணிக்கொண்டான் குரு.


அவனைப் பொறுத்தவரை எவ்வளவு தூரம் பெண் மறுக்கிறாளோ,

பிடித்த மின்மையை அவளது விருப்பமின்றி அவளை அனுபவிக்கும் போது கிடைக்கும் சுகமே தனிதான்!

பெண்களின் சிரிப்பை விட வெறுப்பும் கோபமும் அதிகம் போது போதையூட்டும் என்று தீர்மானமாக நம்பிக்கொண்டிருக்கிறான் குரு. இதுவரை அவன் சீரழித்த பெண்களின் கணக்கு வெளியே தெரியாவிட்டாலும் அதிகம்தான். இவற்றையெல்லாம் பெருமையாக தன் மனதில் என்னை கொண்டான் அவன். அவனது இதழ் கோடியில் புன்னகை.


அவள் கண்கள் கலங்கி சிவந்தன. ஹோமப்புகையிலா, இல்லை அவனது சொற்கலிலா?


இவை அனைத்தையும் திருமணத்திற்கு தனது மகளுடன் வந்திருந்த ராக்காயியும் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். குரு திருந்தும் நாள் வரவே வராதா என்ற அவள் மனம் கேள்வி கேட்டது.


இதே கேள்விதான் என் மனதில் ஓடுகிறது.
 
Status
Not open for further replies.

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom