அத்தியாயம் 15
துர்கா, அன்று இரவு சுஹேல் கூறியபடி வேலைகளை விரைவாக முடித்துக் கொண்டு மொட்டை மாடி சென்றாள் அங்கு அவளுக்காக சுஹேல் காத்திருந்தான். என்ன விஷயம் சுஹேல்? எதற்காக என்னை இங்கு வரச் சொன்னீர்கள் ? சீக்கிரமாக சொல்லுங்கள், கீழே என்னை தேடுவார்கள், யாராவது நம்மை இந்த நேரத்தில் பார்த்தால் தவறாக நினைப்பார்கள் என்று மருண்ட விழியில் கேட்கவே, சுஹேல் நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன், பயப்படாதே! உன்னிடத்தில் முக்கியமான விஷயம் பேசலாம் என்று தான் கூப்பிட்டேன், துர்கா, நீ, நான் மருத்துவர், பணக்காரன் என்றதால் தானே என்னை வேண்டாம் என்று மறுக்கிறாய்? நீ ஏன் உன் நிலையை வளர்த்துக்கொள்ள கூடாது? நீ ஏன்மேற்படிப்பு படிக்க கூடாது? எனக்கு அலுவலகம், வீடு என்று சரியாக இருக்கிறது. நான் எப்படி மேற்படிப்பு படிக்க முடியும்? என்று அவள் கேட்க, நீ கண்டிப்பாக படிக்கவேண்டும் துர்கா. நீ வணிகவியலில் பட்டம் பெற்றிருப்பதால் நீ தணிக்கையாளர் பதவிக்கு படிக்கலாம். உனக்கு ஆர்வம் இருந்தால் நன்றாக படித்து இரண்டு அல்லது மூன்று வருடங்களில் முடித்து விடலாம். அது மட்டும் இல்லாமல் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டால் ஒரு வருடத்திலேயே உன் படிப்பு சம்பந்தப்பட்ட வேலையும் செய்துக் கொண்டே படிக்கலாம். நீ கடினமாக உழைத்தால் கண்டிப்பாக மூன்று வருடத்திலேயே CA முடித்து விடலாம். நீ CA தேர்ச்சி பெற்றுவிட்டால் உன்னுடைய தகுதியும் உயரும், உனக்குள் இருக்கிற தாழ்வு மனப்பான்மையும் மறையும். நான் உனக்கு நாளை அதற்கான விண்ணப்ப படிவம் வாங்கி தருகிறேன். எனக்காக நீ கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று கூற, துர்காவிற்கு அவனுடைய பேச்சுக்கள் எல்லாம் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளவேண்டும் என்பதற்காக எப்படி எல்லாம் யோசிக்கிறான், இவனுக்கு தான் என் மீது எவ்வளவு அக்கறை, அன்பு. ஆனால் நான் அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்கிறேனா? என்று மனதில் நினைத்துக் கொண்டு, நான் கண்டிப்பாக படிக்கிறேன், ஆனால் நான் படித்தால் மட்டும் நம் கல்யாணம் நடந்து விடுமா? மற்ற விஷயங்கள் எல்லாம் தடையாக இருக்கிறதே? அதை எப்படி சமாளிக்க போகிறீர்கள்? என்று கேட்க, நீ சொல்லுவது எனக்கு புரிகிறது துர்கா, காலம் கண்டிப்பாக பதில் சொல்லும். என்ன ஆனாலும் நான் உன்னை கை விட மாட்டேன், உன்னை மணம் செய்வது உறுதி! என்று கூறி விடுவிடுவென அந்த இடத்தை விட்டு அகன்றான். இவ்வளவு நமக்காக யோசிக்கும் சுஹேலின் மனம் மகிழுமாறு நாம் கண்டிப்பாக படித்து வெற்றி அடைய வேண்டும். அவனை திருமணம் செய்கிறோமோ இல்லையோ குறைந்தது அவனது ஆசையாவது நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணியவளாக கீழே வந்தாள்.
கீழே வந்ததும் அதே நினைவாக இருந்ததை பார்த்த பார்வதி, என்னம்மா? சாப்பிட வரலியா? என்ன ஒரே யோசனையாக இருக்க? அண்ணி, நான் CA படிப்பு படிக்கலாம்னு இருக்கேன், ஆடிட்டர்கிட்டே வேலை செஞ்சுக்கிட்டே படிக்கலாம், என்ன ரொம்ப கடுமையாக உழைக்கணும், கஷ்டப்பட்டு படிச்சா மூன்று வருடத்தில் CA தேர்ச்சி பெறலாம். நல்ல நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைக்கும், நன் தனியாக கூட நிறுவனம் அமைத்து பிறருக்கும் வேலை கொடுக்கலாம் று கூறிக்கொண்டே இருக்கையில், அவளுடைய அண்ணன் வாசுதேவன் அங்கே வர, நான் உன்னை படிக்கவைக்கிறேன், நல்லா படிம்மா! கண்டிப்பாக உன் எதிர்காலம் நல்ல இருக்கும் என்று ஊக்குவிக்க துர்காவிற்கு நிம்மதியாய் இருந்தது.
சாம்சன் மருத்துவமனையில் இருந்து வந்து ஒரு மாதம் ஆகிருந்தது. இப்போது அவனுடைய கை தூக்க முடிந்தது. இருந்தாலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கும்படி மருத்துவர் கூறியதை நினைவில் கொண்டு மெதுவாகவே தன் கையை இயக்கினான். அவன் தன் நிறுவனத்திற்கும் செல்ல தொடங்கி இருந்தான். அது மட்டும் இல்லாமல் புது புது ஆர்டர்களையும் பிடித்து, வேலைகளை செய்ய தொடங்கி இருந்தான்.
ஒரு நாள் சாம்சன் தன் அறையில் கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்த போது, பணியாள் வந்து வெளியே ஒரு பெண் அவனைப் பார்க்க காத்திருப்பதாக கூற, "வர சொல்" என்று கூறிவிட்டு நம்மை பார்க்க எந்த பெண் வந்திருக்கிறாள்,
நமக்கு பெண் தோழிகள் யாரும் இல்லையே, யார் பார்க்க வந்திருப்பார்கள்? என்று சிந்தித்து கொண்டிருக்கையிலேயே, கதவை தள்ளிக் கொண்டு, உள்ளே வரலாமா? என்று அனுமதி கேட்டுக் கொண்டு கயல் அங்கு வந்தாள். அவளை பார்த்ததும், அவன் மிகுந்த ஆச்சரியத்தோடு, என்ன டாக்டர், என்னை பார்க்க இவ்வளவு தூரம் வந்து உள்ளீர்கள்? என்று கேட்க, எதாவது முக்கியமான விஷயமா? என்று கேட்க, கயல் தயங்கியவாறே, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, இங்கு என்னுடன் படித்த தோழி ஒருத்தியை பார்க்க வந்தேன், அப்படியே உங்கள் ஞாபகம் வந்தது, உங்கள் அன்னை, ஒரு முறை உங்களுடைய நிறுவனம் இங்கு இருப்பதாக சொன்னார்கள், அதுதான் அப்படியே பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன் என்று அவள் கூறியதைக் கேட்ட சாம்சனுக்கு புன்னகை அரும்பியது.என்ன டாக்டர், ஒவ்வொரு நோயாளியையும் அவர்கள் வெளியே சென்றவுடன், அவர்கள் வீடு தேடி நலம் விசாரிப்பது உங்கள் வழக்கமா? என்று கேட்க, கயலுக்குள் உள்ளுக்குள் கோபம் பொங்கியது. "கூமுட்டை, கூமுட்டை", இவன் என்ன தெரியாமல் கேக்கிறானா?அல்லது தெரிந்தே நடிக்கிறானா? ஒரு பெண் வேலை மெனக்கெட்டு இவனை பார்க்க வந்தால், இப்படியா பேசுவான்? அவனவன் தனக்கு ஒரு பெண் தோழி கூட அமையவில்லையே, என்று ஏக்கமாக திரிகிறார்கள், இவன் என்னவென்றால் ஏன் வந்தாய்? எதற்கு வந்தாய்? என்று கேட்பது போல் உள்ளதே ! இவனுக்கு ரொம்ப தான் ஏத்தம்! என்று மனதிற்குள் கருவியவளாக, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, அன்று உங்கள் அன்னை வேதனைப்பட்டது இன்றும் என் கண் முன்னே நிற்கிறது! அவருக்காகத்தான் நீங்கள் எப்படி உள்ளீர்கள் என்றுபார்க்க வந்தேன். ஏன் நான் வந்தது உங்கள் வேலைக்கு தொந்தரவாக உள்ளதா ? அல்லது நான் வந்தது உங்களுக்கு பிடிக்கவில்லையா? அப்படி என்றால் சொல்லிவிடுங்கள்! நான் இப்போதே கிளம்புகிறேன், என்று எழப்போக, உடனே அவன் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, வானத்து தேவதையே இங்கு வந்து இறங்கினால் நான் வரவேற்காமல் இருப்பேனா ? அல்லது வேண்டாம் என்றுதான் சொல்லுவேனா? சரி ! என்ன அருந்துகிறீர்கள்? சூடான தேனீர் வேண்டுமா? அல்லது குளிர்பானம் கொண்டு வரச் சொல்லட்டுமா? என்று கேட்க, அவள் தேவதை என்ற சொல்லிலே மயங்கி, கோபம் எல்லாம் பறந்தோட, குளிர்பானம் போதும் என்று கூறினாள். அவன் பணியாளரை அழைத்து இரண்டு குளிர்பானங்கள் கொண்டு வரும்படி கூறிவிட்டு அவளிடம் திரும்பினான். அப்போது தான் அவளை கவனித்தான், நீல நிற மேல் டாப்ஸும் அதற்கேற்ற பேண்டும் வெள்ளை நிற துப்பட்டாவும், அவன் சொன்னதற்கேட்ப உண்மையிலேயே தேவதை போல் தான் மின்னினாள். அவன் அவளுடைய குடும்பத்தை பற்றி விசாரிக்கவும், அவளும் அவன் கேட்கின்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறிக் கொண்டே வந்தாள். " அவன் அனைத்தையும் கேட்டுவிட்டு, "உங்கள் தந்தையின் உழைப்பை பாராட்டியே ஆகவேண்டும். தன்னால் முடியாவிட்டாலும் தன் மகளை மருத்துவராக உருவாக்கி இருக்கிறார். பாராட்டுக்குரியதுதான் என்று அவன் அவளின் தந்தையின் புகழ் பாட, அவள் என்னை பற்றியே கேட்டுக் கொண்டேருக்கிறீர்களே, உங்களை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே? என்னைப்பற்றி சொல்லுவதுக்கு ஒன்றும் இல்லை. என் அம்மா, அப்பாவை மருத்துவமனையிலேயே பார்த்திருப்பீர்கள், எனக்கு பியூலா என்ற ஒரு தங்கை இருக்கிறாள். அவளை நீ சந்திக்கவில்லை என்று நினைக்கிறேன், என் மேல் ரொம்ப பாசம் அவளுக்கு, மற்றபடி என்னுடைய சிறிய நிறுவனம் இது. இதனை பெரிய அளவில் கொண்டு செல்வதுதான் என்னுடைய லட்சியம் என்று அவன் கம்பீரமாய் கூற கேட்டு அவள் வியந்து தான் போனாள். சிறிது நேரம் கழித்து அவள் நேரம் ஆகிவிட்டது. அம்மா வீட்டில் எனக்காக காத்திருப்பார்கள் என்று அவள் எழுந்த பின், உங்கள் தங்கையை எனக்கு அறிமுகம் படுத்தி வையுங்கள், என்று கூற, கண்டிப்பாக செய்கிறேன், நீங்கள் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்று அழைக்கவும், அப்பாடா! இப்போதாவது என்னை உங்கள் வீட்டிற்கு அழைக்கவேண்டும் என்று தோன்றியதே! என்று அவனை கேலி செய்ய, நீங்கள் மருத்துவர், எங்கள் வீட்டிக்கெல்லாம் வருவீர்களா ! என்று தான்! என அவன் பேச்சை இழுக்கவும், ஏன்? மருத்துவர் என்றால் உங்கள் வீட்டிற்கெல்லாம் வரக்கூடாது என்ற விதிகள் ஏதாவது உள்ளனவா என்ன? என்று அவள் கூறி சிரிக்கவும், அவனும் சேர்ந்து சிரித்தான்.
அவனும் அவளுடன் நடந்து வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தான். அவள் சென்ற பின் சாம்சன், இந்த பெண் ஏன் இப்போது நம்மை தேடி வந்தாள்? கேட்டால் உங்கள் ஞாபகம் வந்தது, ன் தோழி வீடு இங்கு இருக்கிறது என்று ஏதேதோ கூறுகிறாள். அவள் வேலை செய்யும் மருத்துவமனையில் எத்தனையோ நோயாளிகளை பார்த்திருப்பாள், அத்துணை பேரிலும் என்னை ஞாபகம் வைத்துக் கொண்டு என்னை பார்க்க வருகிறாள் என்றால் நான் அவளுக்கு அவ்வளவு முக்கியமானவனாக இருக்கிறேனா? என்று தனக்குள் வியந்துக் கொண்டான். அன்று மதியம் சாப்பாட்டிற்கு வீட்டிற்கு சென்றபோது, அன்று நடந்தவைகள் எல்லாம் தன் அம்மாவிடம் சொன்னான்.
உன்னை ஒன்றும் செய்யமாட்டேன், பயப்படாதே! உன்னிடத்தில் முக்கியமான விஷயம் பேசலாம் என்று தான் கூப்பிட்டேன், துர்கா, நீ, நான் மருத்துவர், பணக்காரன் என்றதால் தானே என்னை வேண்டாம் என்று மறுக்கிறாய்? நீ ஏன் உன் நிலையை வளர்த்துக்கொள்ள கூடாது? நீ ஏன்மேற்படிப்பு படிக்க கூடாது? எனக்கு அலுவலகம், வீடு என்று சரியாக இருக்கிறது. நான் எப்படி மேற்படிப்பு படிக்க முடியும்? என்று அவள் கேட்க, நீ கண்டிப்பாக படிக்கவேண்டும் துர்கா. நீ வணிகவியலில் பட்டம் பெற்றிருப்பதால் நீ தணிக்கையாளர் பதவிக்கு படிக்கலாம். உனக்கு ஆர்வம் இருந்தால் நன்றாக படித்து இரண்டு அல்லது மூன்று வருடங்களில் முடித்து விடலாம். அது மட்டும் இல்லாமல் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டால் ஒரு வருடத்திலேயே உன் படிப்பு சம்பந்தப்பட்ட வேலையும் செய்துக் கொண்டே படிக்கலாம். நீ கடினமாக உழைத்தால் கண்டிப்பாக மூன்று வருடத்திலேயே CA முடித்து விடலாம். நீ CA தேர்ச்சி பெற்றுவிட்டால் உன்னுடைய தகுதியும் உயரும், உனக்குள் இருக்கிற தாழ்வு மனப்பான்மையும் மறையும். நான் உனக்கு நாளை அதற்கான விண்ணப்ப படிவம் வாங்கி தருகிறேன். எனக்காக நீ கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று கூற, துர்காவிற்கு அவனுடைய பேச்சுக்கள் எல்லாம் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளவேண்டும் என்பதற்காக எப்படி எல்லாம் யோசிக்கிறான், இவனுக்கு தான் என் மீது எவ்வளவு அக்கறை, அன்பு. ஆனால் நான் அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்கிறேனா? என்று மனதில் நினைத்துக் கொண்டு, நான் கண்டிப்பாக படிக்கிறேன், ஆனால் நான் படித்தால் மட்டும் நம் கல்யாணம் நடந்து விடுமா? மற்ற விஷயங்கள் எல்லாம் தடையாக இருக்கிறதே? அதை எப்படி சமாளிக்க போகிறீர்கள்? என்று கேட்க, நீ சொல்லுவது எனக்கு புரிகிறது துர்கா, காலம் கண்டிப்பாக பதில் சொல்லும். என்ன ஆனாலும் நான் உன்னை கை விட மாட்டேன், உன்னை மணம் செய்வது உறுதி! என்று கூறி விடுவிடுவென அந்த இடத்தை விட்டு அகன்றான். இவ்வளவு நமக்காக யோசிக்கும் சுஹேலின் மனம் மகிழுமாறு நாம் கண்டிப்பாக படித்து வெற்றி அடைய வேண்டும். அவனை திருமணம் செய்கிறோமோ இல்லையோ குறைந்தது அவனது ஆசையாவது நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணியவளாக கீழே வந்தாள்.
கீழே வந்ததும் அதே நினைவாக இருந்ததை பார்த்த பார்வதி, என்னம்மா? சாப்பிட வரலியா? என்ன ஒரே யோசனையாக இருக்க? அண்ணி, நான் CA படிப்பு படிக்கலாம்னு இருக்கேன், ஆடிட்டர்கிட்டே வேலை செஞ்சுக்கிட்டே படிக்கலாம், என்ன ரொம்ப கடுமையாக உழைக்கணும், கஷ்டப்பட்டு படிச்சா மூன்று வருடத்தில் CA தேர்ச்சி பெறலாம். நல்ல நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைக்கும், நன் தனியாக கூட நிறுவனம் அமைத்து பிறருக்கும் வேலை கொடுக்கலாம் று கூறிக்கொண்டே இருக்கையில், அவளுடைய அண்ணன் வாசுதேவன் அங்கே வர, நான் உன்னை படிக்கவைக்கிறேன், நல்லா படிம்மா! கண்டிப்பாக உன் எதிர்காலம் நல்ல இருக்கும் என்று ஊக்குவிக்க துர்காவிற்கு நிம்மதியாய் இருந்தது.
சாம்சன் மருத்துவமனையில் இருந்து வந்து ஒரு மாதம் ஆகிருந்தது. இப்போது அவனுடைய கை தூக்க முடிந்தது. இருந்தாலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கும்படி மருத்துவர் கூறியதை நினைவில் கொண்டு மெதுவாகவே தன் கையை இயக்கினான். அவன் தன் நிறுவனத்திற்கும் செல்ல தொடங்கி இருந்தான். அது மட்டும் இல்லாமல் புது புது ஆர்டர்களையும் பிடித்து, வேலைகளை செய்ய தொடங்கி இருந்தான்.
ஒரு நாள் சாம்சன் தன் அறையில் கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்த போது, பணியாள் வந்து வெளியே ஒரு பெண் அவனைப் பார்க்க காத்திருப்பதாக கூற, "வர சொல்" என்று கூறிவிட்டு நம்மை பார்க்க எந்த பெண் வந்திருக்கிறாள்,
நமக்கு பெண் தோழிகள் யாரும் இல்லையே, யார் பார்க்க வந்திருப்பார்கள்? என்று சிந்தித்து கொண்டிருக்கையிலேயே, கதவை தள்ளிக் கொண்டு, உள்ளே வரலாமா? என்று அனுமதி கேட்டுக் கொண்டு கயல் அங்கு வந்தாள். அவளை பார்த்ததும், அவன் மிகுந்த ஆச்சரியத்தோடு, என்ன டாக்டர், என்னை பார்க்க இவ்வளவு தூரம் வந்து உள்ளீர்கள்? என்று கேட்க, எதாவது முக்கியமான விஷயமா? என்று கேட்க, கயல் தயங்கியவாறே, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, இங்கு என்னுடன் படித்த தோழி ஒருத்தியை பார்க்க வந்தேன், அப்படியே உங்கள் ஞாபகம் வந்தது, உங்கள் அன்னை, ஒரு முறை உங்களுடைய நிறுவனம் இங்கு இருப்பதாக சொன்னார்கள், அதுதான் அப்படியே பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன் என்று அவள் கூறியதைக் கேட்ட சாம்சனுக்கு புன்னகை அரும்பியது.என்ன டாக்டர், ஒவ்வொரு நோயாளியையும் அவர்கள் வெளியே சென்றவுடன், அவர்கள் வீடு தேடி நலம் விசாரிப்பது உங்கள் வழக்கமா? என்று கேட்க, கயலுக்குள் உள்ளுக்குள் கோபம் பொங்கியது. "கூமுட்டை, கூமுட்டை", இவன் என்ன தெரியாமல் கேக்கிறானா?அல்லது தெரிந்தே நடிக்கிறானா? ஒரு பெண் வேலை மெனக்கெட்டு இவனை பார்க்க வந்தால், இப்படியா பேசுவான்? அவனவன் தனக்கு ஒரு பெண் தோழி கூட அமையவில்லையே, என்று ஏக்கமாக திரிகிறார்கள், இவன் என்னவென்றால் ஏன் வந்தாய்? எதற்கு வந்தாய்? என்று கேட்பது போல் உள்ளதே ! இவனுக்கு ரொம்ப தான் ஏத்தம்! என்று மனதிற்குள் கருவியவளாக, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, அன்று உங்கள் அன்னை வேதனைப்பட்டது இன்றும் என் கண் முன்னே நிற்கிறது! அவருக்காகத்தான் நீங்கள் எப்படி உள்ளீர்கள் என்றுபார்க்க வந்தேன். ஏன் நான் வந்தது உங்கள் வேலைக்கு தொந்தரவாக உள்ளதா ? அல்லது நான் வந்தது உங்களுக்கு பிடிக்கவில்லையா? அப்படி என்றால் சொல்லிவிடுங்கள்! நான் இப்போதே கிளம்புகிறேன், என்று எழப்போக, உடனே அவன் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, வானத்து தேவதையே இங்கு வந்து இறங்கினால் நான் வரவேற்காமல் இருப்பேனா ? அல்லது வேண்டாம் என்றுதான் சொல்லுவேனா? சரி ! என்ன அருந்துகிறீர்கள்? சூடான தேனீர் வேண்டுமா? அல்லது குளிர்பானம் கொண்டு வரச் சொல்லட்டுமா? என்று கேட்க, அவள் தேவதை என்ற சொல்லிலே மயங்கி, கோபம் எல்லாம் பறந்தோட, குளிர்பானம் போதும் என்று கூறினாள். அவன் பணியாளரை அழைத்து இரண்டு குளிர்பானங்கள் கொண்டு வரும்படி கூறிவிட்டு அவளிடம் திரும்பினான். அப்போது தான் அவளை கவனித்தான், நீல நிற மேல் டாப்ஸும் அதற்கேற்ற பேண்டும் வெள்ளை நிற துப்பட்டாவும், அவன் சொன்னதற்கேட்ப உண்மையிலேயே தேவதை போல் தான் மின்னினாள். அவன் அவளுடைய குடும்பத்தை பற்றி விசாரிக்கவும், அவளும் அவன் கேட்கின்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறிக் கொண்டே வந்தாள். " அவன் அனைத்தையும் கேட்டுவிட்டு, "உங்கள் தந்தையின் உழைப்பை பாராட்டியே ஆகவேண்டும். தன்னால் முடியாவிட்டாலும் தன் மகளை மருத்துவராக உருவாக்கி இருக்கிறார். பாராட்டுக்குரியதுதான் என்று அவன் அவளின் தந்தையின் புகழ் பாட, அவள் என்னை பற்றியே கேட்டுக் கொண்டேருக்கிறீர்களே, உங்களை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே? என்னைப்பற்றி சொல்லுவதுக்கு ஒன்றும் இல்லை. என் அம்மா, அப்பாவை மருத்துவமனையிலேயே பார்த்திருப்பீர்கள், எனக்கு பியூலா என்ற ஒரு தங்கை இருக்கிறாள். அவளை நீ சந்திக்கவில்லை என்று நினைக்கிறேன், என் மேல் ரொம்ப பாசம் அவளுக்கு, மற்றபடி என்னுடைய சிறிய நிறுவனம் இது. இதனை பெரிய அளவில் கொண்டு செல்வதுதான் என்னுடைய லட்சியம் என்று அவன் கம்பீரமாய் கூற கேட்டு அவள் வியந்து தான் போனாள். சிறிது நேரம் கழித்து அவள் நேரம் ஆகிவிட்டது. அம்மா வீட்டில் எனக்காக காத்திருப்பார்கள் என்று அவள் எழுந்த பின், உங்கள் தங்கையை எனக்கு அறிமுகம் படுத்தி வையுங்கள், என்று கூற, கண்டிப்பாக செய்கிறேன், நீங்கள் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்று அழைக்கவும், அப்பாடா! இப்போதாவது என்னை உங்கள் வீட்டிற்கு அழைக்கவேண்டும் என்று தோன்றியதே! என்று அவனை கேலி செய்ய, நீங்கள் மருத்துவர், எங்கள் வீட்டிக்கெல்லாம் வருவீர்களா ! என்று தான்! என அவன் பேச்சை இழுக்கவும், ஏன்? மருத்துவர் என்றால் உங்கள் வீட்டிற்கெல்லாம் வரக்கூடாது என்ற விதிகள் ஏதாவது உள்ளனவா என்ன? என்று அவள் கூறி சிரிக்கவும், அவனும் சேர்ந்து சிரித்தான்.
அவனும் அவளுடன் நடந்து வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தான். அவள் சென்ற பின் சாம்சன், இந்த பெண் ஏன் இப்போது நம்மை தேடி வந்தாள்? கேட்டால் உங்கள் ஞாபகம் வந்தது, ன் தோழி வீடு இங்கு இருக்கிறது என்று ஏதேதோ கூறுகிறாள். அவள் வேலை செய்யும் மருத்துவமனையில் எத்தனையோ நோயாளிகளை பார்த்திருப்பாள், அத்துணை பேரிலும் என்னை ஞாபகம் வைத்துக் கொண்டு என்னை பார்க்க வருகிறாள் என்றால் நான் அவளுக்கு அவ்வளவு முக்கியமானவனாக இருக்கிறேனா? என்று தனக்குள் வியந்துக் கொண்டான். அன்று மதியம் சாப்பாட்டிற்கு வீட்டிற்கு சென்றபோது, அன்று நடந்தவைகள் எல்லாம் தன் அம்மாவிடம் சொன்னான்.