20
குழந்தையின் கையில் இருந்த நீடிலை அவனுக்கு வலிக்காதவாறு உருவி எடுத்த விஜி வெளியே வந்த ரத்தத்தை சுத்தப்படுத்தி அதன் மீது பஞ்சினை வைத்து மிதமாக ஒரு சிறிய கட்டினை போட்டுவிட்டாள்.
அவனை அழாத வாறு பார்த்தும் கொண்டார்…
ஆனால் ஆதி அவ்வப்போது தாயை நினைத்து கதற ஆரம்பித்தான்…
குழந்தை தாய்க்காக ஏங்குவதை ரிஷியிடம் கூறினால் ரிஷியின் மனம் மாறிவிடும் என்று நினைத்த பெண்கள் ரிஷியிடம் மறைந்தனர்.
முடிந்த அளவு குழந்தையை மேனகாவே பார்த்துக்கொள்ள ஆரம்பித்தார்.
அவரின் பிள்ளைகளைக் கூட இந்த அளவிற்கு பார்த்தது கிடையாது ஆனால் ஆதியை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டார்...குழந்தை எக்காரணத்தைக் கொண்டும் தாயை தேடக் கூடாது என்று…..
அவர் வழக்கமாக செல்லும் எல்லா இடங்களுக்கும் செல்வதை தவிர்த்தார் வீட்டிலேயே இருக்கிறார்.
ரிஷியும் முக்கியமான வேலைகளுக்கு மட்டும் அலுவலகம் செல்வது மீதி நேரங்கள் குழந்தையுடன் அமர்ந்தபடியே வேலைகளை வீட்டிலிருந்து பார்க்கத் தொடங்கினான்.
இப்பொழுது ரிஷிக்கு உதவியாக ராகவ்வும் இருக்க பிரச்சினை எதுவும் இல்லாமலே ஆதி மெல்லமெல்ல தாயை மறக்கத் தொடங்கியிருந்தான்.
பிள்ளையே மறக்க முடியாத பவித்ரா உணவை மறந்து உறக்கம் இல்லாமல் மெல்ல மெல்ல உருக்குலைய ஆரம்பித்தாள்.
நாராயணன் உடல் நலம் நன்கு தேறி டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு வந்தவுடன் மேனகா அவரை விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறார் இருவருக்குமே அரசு வேலை என்பதினால் பெரியதாக பணப்பற்றாக்குறை வரவில்லை…
ஆனால் மனதில் மகள் வந்து பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகி விட்டது ஏன் அவள் இன்னும் புகுந்த வீட்டிற்குச் செல்வதை பற்றி யோசிக்கவில்லை கைக்குழந்தை வேறு இருக்கிறான் அவனை விட்டுவிட்டு இவள் எப்படி இங்கே இருக்கிறாள்.
குழந்தை எப்படி இவளைப் பிரிந்து இருக்கிறது... அங்கிருந்தும் இவளுக்கு யாரும் போன் செய்து பேசியது போல் தெரியவில்லை... இவளும் யாரையும் அழைப்பது போல் தெரியவில்லை என்ன நடக்கிறது அவளது வாழ்வில் என்று பலவிதமான மனக்குறை அவருக்கு வந்தது .
மெதுவாக மகளிடம் விசாரிக்க உண்மையை மறையாது கூறிவிட்டாள். தந்தையைப் பார்க்க வந்த அன்று வீடு செல்ல நேரமானதால் தனக்கு ஏற்பட்ட உடல் உபாதைக்கு மருந்து எடுத்துக் கொண்டதற்காக வீட்டில் பிரச்சனை வர வாக்குவாதம் முற்றி ரிஷி அவளை வீட்டைவிட்டு அனுப்பி விட்ட விஷயத்தை முழுவதும் கூறியவள் மருத்துவமனையில் அப்பாவிற்காக செலவு செய்த எல்லாப் பணத்தையும் கொடுத்து பின்புதான் தனது குழந்தையை பற்றி அவர்களிடம் பேசி வாங்க வேண்டும் என்று கூறினாள்.
அந்த நேரத்துல உன்னை அனுப்பும் பொழுது உங்க வீட்டில இருந்த யாருமே உனக்காக பேசலையா பவித்ரா…
ம்ம்... இல்லம்மா எல்லாருமே வேஷதாரிகள் ரிஷிக்காக மட்டுமே என் கிட்ட பேசி பழகி இருக்காங்க அதனால ரிஷி என்னை வெளியே அனுப்புறேன்னு சொன்னதும் சந்தோஷமா அனுப்பி வெச்சுட்டாங்க எனக்கும் இனிமே அந்த வீட்டுக்கு போறத பத்தி சுத்தமா எந்த ஐடியாவுமில்ல ஆனா என் பையன் இருக்கான்... அவனை மட்டும் எப்படியாவது அங்கிருந்து வாங்கனுமா…
எதையும் அவசரப்பட்டு முடிவு எடுத்தடாத பவித்ரா இது உன்னோட வாழ்க்கை பிடித்தாலும் பிடிக்கலனாலும் அனுசரிச்சு போனா மட்டும் தான் குடும்ப வாழ்க்கையில் வெற்றியடைய முடியும் அதனால பொறுமையா இரு முதல்ல அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை நான் ஏற்பாடு செய்கிறேன் என்றவர்
மருத்துவமனை காப்பியினை கொண்டு இன்சுரன்ஸ் ஆபீஸில் அப்ளை செய்து விட்டார் ஆனால் பணம் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை அது வரை காத்திருக்க முடியாது என்று நினைத்த பவித்ரா தாயிடம் தயங்கித் தயங்கி அவரின் நகைகளை கேட்டாள்…
ஏன் எதற்கு என்று கேட்காமல் அவர் அணிந்துகொள்ள சில நகைகளை மட்டும் வைத்துக்கொண்டு மீதி நகைகளை மகளிடம் கொடுத்தவர்...
உனது திருமணத்திற்காக எடுத்து வைத்த சில நகைகளும் இங்கு இருக்கிறது… தேவைப்பட்டா எடுத்துக்கோ என்றும் சொன்னார்.
தேங்க்ஸ்மா என்று தாயிடம் நன்றி கூறிவிட்டு தம்பியை அழைத்துக்கொண்டு ஒரு தனியார் விற்பனை நிலையத்திற்கு சென்று நகையின் மதிப்பீட்டை அறிந்து கொண்டவள் அங்கேயே நகையை விற்றாள்…
தந்தைக்கு கடைசியாக வந்த சம்மரி பில்லோடு ஒப்பிட்டு பார்த்து... அதிலிருந்து பத்து சதவிகித பணம் அதிகமாக எடுத்துச்சென்று ரிஷியின் வங்கிக் கணக்கில் போட்டு விட்டாள்.
இங்கே பணம் போட்ட உடனேயே ரிஷிக்கு மெசேஜ் செல்ல முதலில் அவனுக்கு புரியவில்லை உடனே சம்பந்தப்பட்ட வங்கிக்கு அழைத்து என்ன என்று விசாரிக்க பணத்தைப் போட்டவரின் பெயர் பவித்ரா என்று இருக்கிறது என்று கூறவும் புரிந்து விட்டது…
அன்று பவித்ரா அவனுடைய கார்டிலிருந்த பணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் சரியாக பத்து சதவீதம் அதிகமாக இருப்பதை அறிந்தவனுக்கு குபீரென்று சிரிப்பு வந்தது.
மனைவி தன்னிடம் வாங்கிய பணத்திற்கு வட்டி போட்டு திருப்பிக் கொடுத்திருக்கிறாளா அப்படி என்றால் அவள் தனக்கு ஏற்படுத்திவிட்டுப் போன மன காயங்களுக்கும் நானும் வட்டி போட்டு கொடுக்க வேண்டுமா பவித்ரா …?என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டு இருக்கும்போதே அவனுடைய அலைபேசிக்கு வெங்கட்டின் எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது.
ஆதி பிறக்கும் ஒரு நாளுக்கு முன்பு வரை வெங்கட் உடன் அடிக்கடி எதையாவது பேசி இருக்கிறான் ஆதி பிறந்த அன்று ஏற்பட்ட சில கசப்பான நிகழ்விற்கு பிறகு தான் வெங்கட் ரிஷியுடன் பேசுவதை குறைத்து கொண்டான்.
ஆனால் ரிஷியோ அப்படியெல்லாம் இல்லை எப்பொழுதும் போல ஏதாவது ஒரு பார்வேர்ட் மெசேஜாவது அவனுக்கு திருப்பி விடுவான் ஆனால் வெங்கட்டிடம் இருந்துதான் எந்த ஒரு எதிர்வினையும் வந்தது கிடையாது.
ஆனால் இன்று அவனிடத்தில் இருந்து அழைத்து வந்திருக்கிறது புதிதாக ஏதோ ஒரு வில்லங்கத்தை பவித்ரா இழுத்து வைக்கிறாள் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.
அந்த வீட்டிலேயே வெங்கட்டிடம் மட்டும்தான் இன்னும் ரிஷி முறைத்துக் கொள்ளவில்லை இனி பவித்ராவால் அதுவும் நடக்கப்போகிறது என்று புரியவும் ரிஷிக்கு வேதனையில் முகம் சுருங்கியது…
கண்டிப்பாக குழந்தை பற்றிய பேச்சைத்தான் பேசப் போகிறான் இவனிடம் எப்படி முகத்தில் அடித்தது போல் மகனைக் கொடுக்க மாட்டேன் என்று கூறுவது என்று யோசிக்க தொடங்கியிருந்தான்.
அதற்குள்ளாக முழுவதுமாக அழைப்பு முடிந்து கால் கட் ஆனது மீண்டும் வெங்கட்டிடம் இருந்து அழைப்பு வந்தது இதற்குமேல் எடுக்கவில்லை என்றால் நன்றாக இருக்காது என்று யோசித்தவன் காலை அட்டென்ட் செய்ய
இப்பொழுது வெங்கட்டுக்கு புதுவிதமான குழப்பம் இவனை எப்படி அழைப்பது முதலில் மாமா என்று முறை வைத்து அழைத்தது போல அழைக்கவா... இல்லை மரியாதையாக வேறு வார்த்தை போட்டு அழைப்பதா என்று குழம்பியவன்
அது வந்து…. நான் வெங்கட் பேசுறன்...ம்ம்... உங்கள கொஞ்ச நான் சந்தித்து பேசனும்…
வெங்கட்னா...எந்த வெங்கட்…?
எனக்கு பர்சனலா ஒரு வெங்கட்டை தெரியும் அவன் என்னோட மச்சான் நாலு வார்த்தை பேசினா அதுல மூணு வார்த்தை பாசமா மாமாங்கற வார்த்தை தான் இருக்கும் அந்த வெங்கட்டா இருந்தா இப்ப கூட நீ என்னோட ஆபீஸ்க்கு வரலாம் நான் இப்போ ஆபீஸ்ல தான் இருக்கேன்
என்ன மாமானு கூப்பிடவே விரும்பாத வெங்கட்டா இருந்தா என்னோட ஆபீஸ் ப்ரண்ட் கேட்ல இருக்கற செக்யூரிட்டி கிட்ட என்னோட பர்சனல் செக்கரட்ரி நம்பர் இருக்கும் அதை வாங்கி அவர்ட்ட பேசி நான் எப்போ ஃப்ரீனு கேட்டு அப்பாயிண்ட்மெண்ட் அவர் தந்தா வாங்கிட்டு சொல்ற டைம்க்கு வந்து பாருங்க…
சா..சாரி மாமா... நான் எப்போ வர்றதுன்னு நீங்களே சொல்லிடுங்க கூட அக்காவும் வர்றா….
ஆதியை பத்தின பேச்சா இருந்தா உன் அக்கா இங்க வர்றது வேஸ்ட் கண்டிப்பாக குழந்தையை நான் அவளுக்குக் கொடுக்க மாட்டேன் வேற எதைப் பத்தியாவது பேசுறதா இருந்தாலோ இல்லை என்கிட்ட மன்னிப்பு கேட்கறதா இருந்தா, தாராளமா அவள கூட்டிட்டு இப்பவே கூட வரலாம் இன்னும் ஒரு மணி நேரம் நான் ஃப்ரீ தான் என்று கூறியபடி ஃமொபைல் போனை வைத்து விட்டான்.
என்னடா சொன்னாரு என்ற பவித்ரா தம்பியின் அருகில் நின்றபடியே அவனின் முகத்தை பார்க்க
அக்கா ஆதியை பத்தி பேசறதுன்னா நீ வர வேண்டாமாம்.. அவர் கிட்ட மன்னிப்பு கேட்கிற மாதிரி இருந்தா மட்டும் உன்னை வரச் சொல்றாரு…
எதுக்குடா நான் அவர் கிட்ட மன்னிப்பு கேட்கனும்... பண்ணின தப்பு எல்லாமே அவர்தான்... ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு போன உடனே என்ன ஆச்சு பவி உன் அப்பா எப்படி இருக்கிறாரு அவருக்கு திடீர்னு உடம்புக்கு என்ன வந்ததுனு...ஒரு வார்த்தை கூட கேட்காம என்கிட்ட பிரச்சனை பண்ணினது அவர்...அவரா ஆரம்பிப்பாரு….
அவரா என்னை அடிப்பாரு அவரா என்னை வெளியே துரத்துவாரு... ஆனா மன்னிப்பு மட்டும் நான் போய் கேட்கணுமா நல்லா இருக்கு கதை எப்படி அவர் ஆதியை எனக்கு கொடுக்க மாட்டேன்னு சொல்லுவாரு
முதல்ல என்னை அவர் கிட்ட கூட்டிட்டு போ யார் யார் கிட்ட மன்னிப்பு கேட்கிறாங்கனு இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும்...
ப்ளீஸ் பவி அங்க போய் இந்த மாதிரி எதுவும் உளறி வைக்காதே நமக்கு முதல்ல குழந்தை முக்கியம் அதுக்கு அப்புறம் சமாதானமாகி அவரோடு சேர்ந்து வாழற வழியை பாரு ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கும்போது ஒருத்தர் மாற்றி ஒருத்தர் குறை சொல்லறது சரி கிடையாது முடிஞ்ச அளவுக்கு காம்ளிகேட் பண்ணாத...ஈஸி கோ அவே வா பண்ணு….
சரி வண்டியில உட்காரு அவரை போய் பார்த்துட்டு வந்திடலாம்…
ஒரு நிமிஷம் இரு அவருக்குத் தர வேண்டிய பொருள் எல்லாத்தையும் பூஜை ரூம்ல வைத்திருக்கேன் எடுத்துட்டு வரேன் என்று உள்ளே சென்றாள்... திரும்பி வரும்பொழுது தாயின் ஹேன்ட் பேக்கை கையில் வைத்திருந்தாள்…
பவி இப்போ இதெல்லாம் குடுக்குறதுக்கு என்ன அவசியம் வந்தது இப்போ இதை குடுத்தா அவருக்கு இன்னும் கோபம் வரும் என்ற தம்பியிடம்
கண்டிப்பா வராது இதை கொடுக்கலைன்னா தான் அவங்க வீட்டு நகையெல்லாம் நான் திருடிட்டு ஓடி வந்துட்டேன்னு கூட வாய் கூசாம பேசுவாங்க அதான் எல்லாத்தையும் அவர் கையிலேயே குடுத்துட்டு அவருக்கும் எனக்கும் ஒத்துவராதுனு முகத்துக்கு நேரா சொல்லிட்டு என் பையனையும் கையோட கூட்டிட்டு வரலாம் என்று பட்டென பேசி முடித்தாள் .
என்னவோ போ பிரச்சினையை தேவையே இல்லாம பெருசு பண்ணறியோனு தோணுது சரி நல்லா பிடிச்சுக்கோ என்று ரிஷியின் அலுவலகம் வந்து அடைந்தனர் இவர்கள் வருவதை ஏற்கனவே சொல்லியிருந்ததால் நேராக ரிஷியிடமே அனுப்பி வைத்தார்கள்.
ரிஷியும் இவர்களை எதிர்பார்த்து தான் காத்து இருந்தான் இவர்களை பார்த்ததுமே எதிர்ப்புறமாக அமர வைத்தவன் சொல்லு வெங்கட் திடீர்னு ரெண்டு பேரும் இவ்வளவு தூரம் தேடி வந்திருக்கறீங்க... அப்பாவோட உடம்பு இப்போ சரியாயிடுச்சா உன்னோட காலேஜ் கூட இது ஃபைனல் இயர்ல அரியர்ஸ் ஏதாவது இருக்குதா என்று ஜெனரலாக பேசினான்.
வெங்கட்டும் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு இருக்க பவித்ராவும் கோபத்தில் ரெண்டு பேரும் மாறி மாறி முறைத்தாள்
அவள் கோபத்தை புரிந்துகொண்ட வெங்கட் மாமா நாங்க வந்து விஷயம் என்னனு சொல்லிடுறேன் என்று அவன் பேச்சை ஆரம்பிக்கும் பொழுது ரிஷி இடைமறித்து தடுத்தவன்
ஆதி,பவி சம்மந்தப்பட்ட விஷயம்னா சாரி வெங்கட் இது எனக்கும் பவிக்கும் நடுவுல இருக்கிற பிரச்சினை மூன்றாவதா ஒருத்தர் உள்ள வர்றதை நான் விரும்பல சோ நீ கொஞ்ச நேரம் வெளிய வெயிட் பண்ணு நான் பவித்ரா கூட கொஞ்சம் பர்சனலா பேசனும் என்று சொல்ல…
அப்பாடா விட்டால் போதும் என்று நினைத்த வெங்கட் உடனடியாக வெளியே சென்றான்.
அவன் வெளியே செல்லும் வரை பொறுமை காத்துக்கொண்டிருந்த ரிஷி இப்போ சொல்லு பவித்ரா என்ன விஷயமா என்னை பார்க்க வந்த என்று நேரடியாகக் கேட்டான்.
அதற்கு கோபத்தோடு இப்போ எதுக்கு வெங்கட்டை வெளியே அனுப்புனீங்க உள்ள இருந்தா உங்களோட லட்சணமெல்லாம் என் தம்பிக்கு தெரிஞ்சிடும்னு பயப்படுறீங்களா…? என்று சாடினாள்.
பவி ப்ளீஸ் கத்தாத இது ஆபீஸ் ரூம் கொஞ்சம் சத்தமாகப் பேசினாலும் அப்படியே வெளிய கேட்கும் எதுவாயிருந்தாலும் மெதுவா பேசு நான் உன்னோட கொஞ்சம் தனியா பேசணும்னு நினைச்சேன் எனக்கு பிரைவசி தேவைப்பட்டிச்சி அதனால உன் தம்பியும் வெளிய அனுப்பினேன் யாரையும் பார்த்து பயந்து இல்லை…
தெளிவா எனக்கு புரிஞ்சு போச்சு நீ என்கிட்ட இப்போ சண்டை போடுறதுக்கு மட்டும் தான் வந்திருக்கற இப்போ நான் என்ன சொன்னாலும் உன் மண்டையில ஏற போறது இல்ல அதனால என்ன விஷயமா வந்தியோ அதை மட்டும் சொல்லிட்டு உடனே கிளம்பி போ இப்போ ரெண்டு பேருக்குமே வேவ்ஸ் சரி இல்ல என்ன பேசினாலும் அது சண்டையில் தான் போய் முடியும் என்று ரிஷி சமாதான கொடியை வீசினான் .
எனக்கு ஆதியை பாக்கணும் போல இருக்கு அவனை பாக்காம இருக்க முடியல...அவனை என்கிட்ட குடுத்திடுங்க…
எதுக்காக உன்கிட்ட கொடுக்கனும்...ஆதியை பாக்கணும் போல இருந்தா அவன் நம்ம வீட்டுல தான் இருக்கான் போய் பாரு... அவன் இல்லாம உன்னால இருக்க முடியலனா உன்னை யாரு தடுக்கப் போறா நீ அங்கேயே இரு அதுக்கு எதுக்கு ஆபீஸ்க்கு வந்த... வீட்டுக்கு தானே போய் இருக்கணும் என்று நெற்றியை சுருக்கியபடி கூற
என்ன விளையாடுறீங்களா வீட்டை விட்டு வெளியே போனு அடிச்சி தொறத்துவீங்க...எல்லாத்தையும் துடைச்சி போட்டுட்டு நான் அங்க என் பையனை பாக்க வரனுமா... என்னால இனிமே அந்த வீட்டு வாசற்படியை மிதிக்கவே முடியாது
அங்க வந்தா ஒவ்வொரு நிமிஷமும் நீங்க என்ன வெளியே தள்ளிவிட்டதும் உங்க வீட்டு ஆளுக சுத்தி நின்னு வேடிக்கை பார்த்ததும் தான் ஞாபகத்துக்கு வரும் நா இனி அங்க வர மாட்டேன் என்று
சத்தமாகப் பேசியபடி இருக்கையை விட்டு எழுந்தாள்.
பவி மறுபடியும் நான் சொல்லறேன் கத்தி பேசாதே எனக்கு காது நல்லாவே கேட்கும் அன்னைக்கு நடந்த விஷயத்துக்காக நான் உன்கிட்ட மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்குறேன்.
தயவு செஞ்சு வீட்டுக்கு வர மாட்டேன்னு அடம் பிடிக்காத உன் பிரச்சனை என்ன…? நான் உன்னை வெளியே தள்ளி விடும் போது எல்லாரும் சுத்தி நின்னு வேடிக்கை பார்த்தாங்க அது உனக்கு அவமானமா போச்சு அதுதானே
அதே மாதிரி எல்லாரையும் நிக்க வெச்சு கூட உன்கிட்ட நான் மன்னிப்பு கேட்கிறேன் அதுக்கப்புறம் உன் அவமானம் காணாம போயிடும்ல...
எனக்காக இல்லனாலும் நம்மளோட குழந்தைக்காகவாவது நீ கண்டிப்பா அங்க வந்து தான் ஆகணும்...நீ இல்லாம அவன் ரொம்பவே ஏங்கறான்...அடிக்கடி உன்னைத்தேடி அழறான்...அவனை விட உன் ஈகோ உனக்கு பெருசா போச்சா…
இங்க பாரு பவி அங்கிருக்கிற யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க நான் அதுக்கு கேரண்டி தரேன் தயவு செஞ்சு வா...ஆதி பாவம்
என்று கூற கோபத்தில் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
மகனைப் பற்றிக் கூறும் போது மட்டும் மனதிற்குள் பதறியபடி கேட்டவள் அவன் வீட்டு ஆளுகளை பற்றிப் பேசியதும் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டாள் நீ எவ்வளவு வேணாலும் பேசிக்கோ உன்னோட பேச்சை நான் காதுகொடுத்துக் கேட்க மாட்டேன் என்பது போல...
பொறுமையை இழுத்து கையில் பிடித்துக் கொண்டு அவள் அருகில் வந்து அவள் எதிர்ப்புறம் ஒரு ஸ்டூலை எடுத்து போட்டவன் அவள் கைகளைப் பிடித்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டான் அவளோ பட்டென்று உருகிக் கொள்ள தலையை கலைத்து விட்டு மீண்டும் தன் பொறுமையை இழுத்து கட்டுக்குள் கொண்டு வந்தான்.
பவி தப்பு யாரோடதுனு மறுபடியும் அந்த விஷயத்துக்கு உள்ளே நாம போகவே வேண்டாம் நீயும் நானும் மாறி மாறி பேசி பிரச்சினை பெருசாக்கிடுவோம்... அதனால என்ன மன்னிச்சிடு...அன்னைக்கு நடந்ததை மறந்துட்டு வீட்டுக்கு வா…
முடியாதுங்க உங்களுக்கு வேணாம்னா அடிச்சி விரட்டுவீங்க வேணும்னு நினைச்சா யோசிக்காம நாலு சுவத்துக்குள்ள யாருக்கும் தெரியாம மன்னிப்பு கேட்டுட்டு கூப்பிடுவீங்க என்னால அப்படி தன்மானம் இல்லாமல் வாழ முடியாது.
அன்னைக்கு பணத்தைப் பற்றி அவ்வளவு பேசனீங்களே இன்னிக்கு உங்க பணத்துக்கு வட்டி போட்டு கொடுத்துட்டேன் ..
ஆனா அன்னைக்கு பேசின அந்த வார்த்தை எல்லாம் உங்களால திருப்பி வாங்க முடியுமா…
முடியாதுல்ல அதே மாதிரி தான் நான் திரும்பி வர்ற விஷயமும்... நடந்து முடிஞ்சதுக்கு அப்புறம் மாத்தணும் நினைச்சா அது முடியாது…கொஞ்ச நேரம் முன்னாடி நீங்கதான் சொன்னீங்க ஆதி என்னை தேடறான், ஏங்கறானு...உன்மையிலேயே அவன் மேல அக்கறை இருந்தா என்கிட்டயே கொடுத்துடுங்க…
நீங்க சொன்னீங்க இல்ல உங்க வாழ்க்கை விட்டு வெளியே போக சொல்லி …
இப்போ நான் சொல்றேன் என் பிள்ளையை என் கைல கொடுத்துட்டு என் வாழ்க்கைல இருந்து நீங்க முதல்ல வெளிய போங்க..என்றவள் கைப்பையில் இருந்த கவரை அவன் கையில் திணித்தவள்...
இந்தாங்க நீங்க எனக்கு கல்யாணத்துக்காக போட்ட உங்கள் குடும்பத்து நகை... இது எல்லாத்தையும் கட்டிப்புடிச்சு குடும்பம் நடத்துங்க என்னையும் என் பிள்ளையையும் விட்டுடுங்க என்று மிக நீளமாக பேசி முடித்தாள்.
என்ன பவித்ரா இது என்று கவரைப் பிரித்துப் பார்க்காமல் டேபிளின் மீது வைத்தவன் யோசிக்காமல் பேங்க் அக்கவுண்ட்ல பணம் போட்டு விடுற இன்னிக்கு போட்டிருந்த நகைகளை எல்லாம் கழட்டி கொடுக்கிற இது எல்லாமே என்னோட அம்மா உனக்காக பாசமா கொடுத்தது இப்போ இதை அவங்க பார்த்த எவ்வளவு வருத்தப்படுவாங்க யோசிச்சு பார்த்தியா…
உங்க அம்மா தானே நல்லாவே வருத்தப்படுவாங்க எப்படி தெரியுமா வீட்டை விட்டே துரத்தியாச்சு அப்புறம் என்ன நாம போட்ட நகைகளையும் போட்டுட்டு சுத்தறா…
இங்கிதம் இல்லாதவ... அவளோட நகைகளும் போயிடுச்சேனு வருத்தப்படுவாங்க…
பவி ப்ளீஸ் நீ என்னோட அம்மாவை பத்தி ஒவ்வொரு முறையும் தப்பாவே என் கிட்ட பேசிக்கிட்டு இருக்கிற பேசுறது நீ என்கிறதால நான் பொறுமையாய் இருக்கிறன் இல்லன்னா பாத்துக்கோ…
என்ன பண்ணுவீங்க அன்னைக்கு அடித்து வீட்டை விட்டு துரத்தின மாதிரி... இன்னைக்கி இங்கிருந்து துரத்த போறீங்க அவ்வளவுதானே நான் உங்ககிட்ட நாகரீகமான நடத்தையை எதிர்பார்த்து வரல எனக்கு என் பையன் வேணும் எப்போ வந்து கொடுக்குறீங்கன்னு சொல்லுங்க இல்ல நான் எங்க வரணும்னு சொல்லுங்க வந்து வாங்கிக்கிறேன்…
ஆதி என் பையன் அவனை என்னைக்கும் நான் உனக்கு கொடுக்க மாட்டேன் அவன் உனக்கு வேணும்னா தாராளமா வீட்டுக்கு வரலாம் இவ்வளவு நேரம் நீ பேசினதை கூட நான் காதில போட்டுக்கல எப்போ வர்றனு சொல்லு நான் வந்து உன்னை கூட்டிட்டு போறேன்…
நானும் அதை தான் சொல்றேன் இனிமே நான் அந்த வீட்டுக்குள்ள வரதா இல்ல உங்க வாழ்க்கைகுள்ளயும் சேர்த்துதான் எனக்கு என் பையன் மட்டும் போதும் என் பையனை குடுத்துடுங்க நானும் என் பையனும் உங்க கண்ணுல படாத ஏதாவது ஒரு தேசமா போய் வாழ்ந்துக்கறோம்…
நடக்காத விஷயத்தைப் பற்றிப் பேசி எனர்ஜி வேஸ்ட் பண்ணாத பவித்ரா இந்த உலகத்தில் எந்த மூலைக்குப் போனாலும் என் கண்ணிலிருந்து நீயோ என் பையனோ என் கண்ணை விட்டு தப்பி போக முடியாது ஒழுங்கா எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு என்னோட வந்து குடும்பம் நடத்துற வழியை பாரு இல்லன்னா தேவையில்லாத பிரச்சினையை சந்திக்க வேண்டியதிருக்கும்…
அதையே தான் சொல்றேன் மிஸ்டர் ரிஷிகேஷ் அவர்களே ஒழுங்கா என் பையன என்கிட்ட கொடுத்துடுங்க தேவையில்லாம பிரச்சினையில மாட்டிக்காதீங்க அப்புறம் கோர்ட் கேஸ்னு அலைய வேண்டியதிருக்கும்..
ஹேஹேஹே...நிஜமாவே பயந்துட்டேன் மிஸஸ் பவித்ரா அவர்களே... நிஜமாவே
எங்க பரம்பரையில யாருமே இதுவரைக்கும் கோர்ட் கேஸ் எல்லாம் பார்த்ததே கிடையாது முதல் முறையா உங்க புண்ணியத்துல தான் நாங்க அத பாக்க போறேன் அதனால தயவு செஞ்சு சீக்கிரமா என்ன பண்ணணுமோ அதை பண்றீங்க ப்ளீஸ் என்று அவளை நக்கல் செய்ய
டேபிளில் இருந்த பேப்பர் வெயிட்டை தூக்கி அவளின் மீது தூக்கி வீச மேலே படாதவாறு பிடித்துக் கொண்டவனைப் பார்த்து இன்னொரு தடவை நக்கல் செஞ்சிங்க பல்லை உடைச்சிடுவேன் என்றாள்.
இந்த மாதிரி ரொமாண்டிக் டயலாக்லாம் லவ் பண்ணும் போதுதான் காதலி காதலனை பார்த்து சொல்லுவா... ஆனா நாம காதலிக்கும் போது நீ சொல்லலையேனு நிறையா தடவை கவலை பட்டிருக்கேன்...பரவால்ல கல்யாணம் பண்ணி குழந்தை பிறந்த பிறகாவது பல்லை உடைப்பேன்னு சொல்றியே என்று மீண்டும் கேலி செய்ய…
ச்சே... உங்ககிட்ட வந்து சமாதானம் பேச வந்தேன் பாருங்க என்ன சொல்லணும் நியாயமா கேட்டா நீங்க எனக்கு புள்ளைய கொடுக்க மாட்டீங்கன்னா கண்டிப்பா நான் கோர்ட் படி ஏறுவேன்…
அம்மாவும் அப்பாவும் சேர்ந்திருக்கும் பொழுது எந்த கோர்ட்டும் ஒரே குழந்தையை அம்மாவுக்கு தனியாகவும் அப்பாக்கு தனியாகவும் பிரிச்சி கொடுக்க மாட்டாங்க பவித்ரா மொதல்ல சட்டத்தை பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்க சட்டப்படி நீயும் நானும் கணவன் மனைவி புரிஞ்சிக்கோ அதனால ஒழுங்கா இந்த நகைகளை எல்லாம் எடுத்து போட்டுக்கோ நானே நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்…
அப்போ உங்களை நான் சட்டப்படி டிவோர்ஸ் பண்ணிட்டா அந்த குழந்தையை எனக்கு கொடுத்துடுவாங்கல்ல என்று தரையைப் பார்த்தபடியே கேட்க
அதிர்ச்சியில் எழுந்து நின்றான் ரிஷி பவித்ரா என்ன பேச்சு பேசுற நான் உன்ன சமாதானப்படுத்துவதற்காக அந்த வார்த்தை சொன்னேன் நீ அதை இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிட்டு பேசற…
இப்போ நீங்க தானே சொன்னீங்க...
சரியா தான சொல்லுறீங்க…. நீங்களும் நானும் சட்டபடி பிரியலனா
எல்லாருமே உங்களையும் என்னையும் புருஷன் பொண்டாட்டின்னு தானே சொல்லுவாங்க எப்படி இருந்தாலும் எப்பவுமே நான் உங்ககிட்ட வரப்போவதில்லை நான் வரலைன்னா ஆதியை நீங்க என்கிட்ட கொடுக்க போறதில்லை அப்போ சட்டப்படி பிரிஞ்சா தானே கைக்குழந்தையான ஆதியை என்கிட்ட தருவாங்க... நான் உங்களுக்கு டிவோர்ஸ் கொடுத்துட்டே என் பையன் வாங்கிக்கிறேன்…
நான் உனக்கு டிவோர்ஸ் கொடுக்க மாட்டேன்னு சொன்னா….
அப்போ உங்களுக்கு என்ன பார்த்து பயமா இருக்கு இல்லையா….
உளறாத…
உளறல் இல்ல நீஜம்... நான் உன்கிட்ட டிவோஸ் கேட்டு நீங்க எனக்கு கொடுக்க மாட்டீங்கன்னா என்ன அர்த்தம் உங்களுக்கு பயம் அப்படி டிவோஸ் வாங்கிட்டா குழந்தை என்கிட்ட கொடுத்துடுவாங்கனு பயம் அதானே…
கடவுளே...பைத்தியம் மாதிரி உளறாத…. நான் உனக்கு
டிவோர்ஸ் கொடுத்தா கூட எந்த ஜென்மத்திலேயும் ஆதியை என்கிட்ட இருந்து வாங்கவே முடியாது அது முதலில் புரிஞ்சுக்கோ பவித்ரா... தேவையே இல்லாமல் என்னை சீண்டி விட்டு டிவோஸ் வாங்கிட்டு தனியா இருந்து கஷ்டப்பட போற உனக்கு இது தேவையா….
அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம் மிஸ்டர் ரிஷிகேஷ் உண்மையிலேயே உங்களுக்கு என்ன பார்த்து பயம் இல்லனா ஆதியை உங்ககிட்டயே வச்சிக்க முடியும்ங்கற தைரியம் இருந்தா எனக்கு டிவோர்ஸ் கொடுங்க அதுக்கப்புறமா ஆதியை எப்படி உங்ககிட்ட இருந்து வாங்கனுங்கறது எனக்கு தெரியும் நீங்களா நானா நானே பாத்துக்கலாம்…
பவித்ரா என்கிட்ட சேலஞ்ச் வைக்காத அசிங்கமா தோத்திடுவ... உன்னோட வாழ்க்கையோட கடைசி நாள் வரைக்கும் போராடினா கூட ஆதியை கண்ணுல கூட பாக்க விட மாட்டேன் இப்ப கூட சொல்றேன் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு என்னோட வா நீ நான் ஆதி மூணு பேரும் சந்தோஷமான வாழ்க்கை வாழலாம் அதை விட்டுட்டு விவாகரத்து, கோர்ட், சவால்னு உன் நேரத்தையும் நிம்மதியையும் வேஸ்ட் பண்ணாத….
சவால்னு வந்ததுக்கப்புறம் இங்கே யார் தோற்க்கறா யார் ஜெயிக்கிறாங்கறது மட்டும்தான் விஷயம்... விவாகரத்து கொடுத்ததற்கு அப்புறம் ஆதியை உங்களோடவே வச்சுக்க முடியும்ங்கற தைரியம் இருந்தா இந்த சவாலை ஏத்துக்கோங்க…
இல்லையா
உங்க தோல்வியை ஓத்துக்கிட்டு ஆதியை என்கிட்ட கொண்டுவந்து கொடுங்க அதுக்கப்புறம் உங்க கூட வரலாமா வேணாமான்னு நான் கொஞ்ச நாள் கழிச்சு முடிவெடுத்து சொல்றேன்…
சரி பவித்ரா உன் சேலஞ்ச் எடுத்துக்கிறேன் டிவோர்ஸ் நோட்டிஸ் நீ அனுப்பறியா இல்ல நான் அனுப்பவா...
எதுக்காக மாத்தி மாத்தி டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பி டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு ஒரு நல்ல லாயரா பாருங்க…ஒரு நல்ல நாள்ல ரெண்டு பேருமே மியூச்சுவலா அப்ளை பண்ணலாம் எப்படியும் மூணு மாசத்துல வாங்கிடலாம் இல்ல…
சில சமயம் ஒரு வருஷம் வரைக்கும் ஆகும்….
அது ஒண்ணும் இல்லாத மக்களுக்கு உங்கள மாதிரி ஆளுங்களுக்கு இல்ல என்ன பண்ணுவீங்கன்னு தெரியாது மூணு மாசத்துல எனக்கு டிவோர்ஸ் கொடுக்கனும்... அதுக்கப்புறமா குழந்தையை உங்ககிட்ட இருந்து எப்படி வாங்கனும்னு எனக்கு தெரிகிறது முக்கியமான விஷயம் டிவோர்ஸ் அப்பிளிகேஷன் பார்ம் குழந்தை எனக்கு சாதகமா வரணும்னு மென்ஷன் பண்ணனும்…
அப்படி மென்ஷன் பண்ணினா குழந்தையை உன் கிட்ட குடுக்க மாட்டேன்னு எதிரா நானும் ஃபைட் பண்ணுவேன்…
தொடரும்...
குழந்தையின் கையில் இருந்த நீடிலை அவனுக்கு வலிக்காதவாறு உருவி எடுத்த விஜி வெளியே வந்த ரத்தத்தை சுத்தப்படுத்தி அதன் மீது பஞ்சினை வைத்து மிதமாக ஒரு சிறிய கட்டினை போட்டுவிட்டாள்.
அவனை அழாத வாறு பார்த்தும் கொண்டார்…
ஆனால் ஆதி அவ்வப்போது தாயை நினைத்து கதற ஆரம்பித்தான்…
குழந்தை தாய்க்காக ஏங்குவதை ரிஷியிடம் கூறினால் ரிஷியின் மனம் மாறிவிடும் என்று நினைத்த பெண்கள் ரிஷியிடம் மறைந்தனர்.
முடிந்த அளவு குழந்தையை மேனகாவே பார்த்துக்கொள்ள ஆரம்பித்தார்.
அவரின் பிள்ளைகளைக் கூட இந்த அளவிற்கு பார்த்தது கிடையாது ஆனால் ஆதியை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டார்...குழந்தை எக்காரணத்தைக் கொண்டும் தாயை தேடக் கூடாது என்று…..
அவர் வழக்கமாக செல்லும் எல்லா இடங்களுக்கும் செல்வதை தவிர்த்தார் வீட்டிலேயே இருக்கிறார்.
ரிஷியும் முக்கியமான வேலைகளுக்கு மட்டும் அலுவலகம் செல்வது மீதி நேரங்கள் குழந்தையுடன் அமர்ந்தபடியே வேலைகளை வீட்டிலிருந்து பார்க்கத் தொடங்கினான்.
இப்பொழுது ரிஷிக்கு உதவியாக ராகவ்வும் இருக்க பிரச்சினை எதுவும் இல்லாமலே ஆதி மெல்லமெல்ல தாயை மறக்கத் தொடங்கியிருந்தான்.
பிள்ளையே மறக்க முடியாத பவித்ரா உணவை மறந்து உறக்கம் இல்லாமல் மெல்ல மெல்ல உருக்குலைய ஆரம்பித்தாள்.
நாராயணன் உடல் நலம் நன்கு தேறி டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு வந்தவுடன் மேனகா அவரை விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறார் இருவருக்குமே அரசு வேலை என்பதினால் பெரியதாக பணப்பற்றாக்குறை வரவில்லை…
ஆனால் மனதில் மகள் வந்து பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகி விட்டது ஏன் அவள் இன்னும் புகுந்த வீட்டிற்குச் செல்வதை பற்றி யோசிக்கவில்லை கைக்குழந்தை வேறு இருக்கிறான் அவனை விட்டுவிட்டு இவள் எப்படி இங்கே இருக்கிறாள்.
குழந்தை எப்படி இவளைப் பிரிந்து இருக்கிறது... அங்கிருந்தும் இவளுக்கு யாரும் போன் செய்து பேசியது போல் தெரியவில்லை... இவளும் யாரையும் அழைப்பது போல் தெரியவில்லை என்ன நடக்கிறது அவளது வாழ்வில் என்று பலவிதமான மனக்குறை அவருக்கு வந்தது .
மெதுவாக மகளிடம் விசாரிக்க உண்மையை மறையாது கூறிவிட்டாள். தந்தையைப் பார்க்க வந்த அன்று வீடு செல்ல நேரமானதால் தனக்கு ஏற்பட்ட உடல் உபாதைக்கு மருந்து எடுத்துக் கொண்டதற்காக வீட்டில் பிரச்சனை வர வாக்குவாதம் முற்றி ரிஷி அவளை வீட்டைவிட்டு அனுப்பி விட்ட விஷயத்தை முழுவதும் கூறியவள் மருத்துவமனையில் அப்பாவிற்காக செலவு செய்த எல்லாப் பணத்தையும் கொடுத்து பின்புதான் தனது குழந்தையை பற்றி அவர்களிடம் பேசி வாங்க வேண்டும் என்று கூறினாள்.
அந்த நேரத்துல உன்னை அனுப்பும் பொழுது உங்க வீட்டில இருந்த யாருமே உனக்காக பேசலையா பவித்ரா…
ம்ம்... இல்லம்மா எல்லாருமே வேஷதாரிகள் ரிஷிக்காக மட்டுமே என் கிட்ட பேசி பழகி இருக்காங்க அதனால ரிஷி என்னை வெளியே அனுப்புறேன்னு சொன்னதும் சந்தோஷமா அனுப்பி வெச்சுட்டாங்க எனக்கும் இனிமே அந்த வீட்டுக்கு போறத பத்தி சுத்தமா எந்த ஐடியாவுமில்ல ஆனா என் பையன் இருக்கான்... அவனை மட்டும் எப்படியாவது அங்கிருந்து வாங்கனுமா…
எதையும் அவசரப்பட்டு முடிவு எடுத்தடாத பவித்ரா இது உன்னோட வாழ்க்கை பிடித்தாலும் பிடிக்கலனாலும் அனுசரிச்சு போனா மட்டும் தான் குடும்ப வாழ்க்கையில் வெற்றியடைய முடியும் அதனால பொறுமையா இரு முதல்ல அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை நான் ஏற்பாடு செய்கிறேன் என்றவர்
மருத்துவமனை காப்பியினை கொண்டு இன்சுரன்ஸ் ஆபீஸில் அப்ளை செய்து விட்டார் ஆனால் பணம் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை அது வரை காத்திருக்க முடியாது என்று நினைத்த பவித்ரா தாயிடம் தயங்கித் தயங்கி அவரின் நகைகளை கேட்டாள்…
ஏன் எதற்கு என்று கேட்காமல் அவர் அணிந்துகொள்ள சில நகைகளை மட்டும் வைத்துக்கொண்டு மீதி நகைகளை மகளிடம் கொடுத்தவர்...
உனது திருமணத்திற்காக எடுத்து வைத்த சில நகைகளும் இங்கு இருக்கிறது… தேவைப்பட்டா எடுத்துக்கோ என்றும் சொன்னார்.
தேங்க்ஸ்மா என்று தாயிடம் நன்றி கூறிவிட்டு தம்பியை அழைத்துக்கொண்டு ஒரு தனியார் விற்பனை நிலையத்திற்கு சென்று நகையின் மதிப்பீட்டை அறிந்து கொண்டவள் அங்கேயே நகையை விற்றாள்…
தந்தைக்கு கடைசியாக வந்த சம்மரி பில்லோடு ஒப்பிட்டு பார்த்து... அதிலிருந்து பத்து சதவிகித பணம் அதிகமாக எடுத்துச்சென்று ரிஷியின் வங்கிக் கணக்கில் போட்டு விட்டாள்.
இங்கே பணம் போட்ட உடனேயே ரிஷிக்கு மெசேஜ் செல்ல முதலில் அவனுக்கு புரியவில்லை உடனே சம்பந்தப்பட்ட வங்கிக்கு அழைத்து என்ன என்று விசாரிக்க பணத்தைப் போட்டவரின் பெயர் பவித்ரா என்று இருக்கிறது என்று கூறவும் புரிந்து விட்டது…
அன்று பவித்ரா அவனுடைய கார்டிலிருந்த பணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் சரியாக பத்து சதவீதம் அதிகமாக இருப்பதை அறிந்தவனுக்கு குபீரென்று சிரிப்பு வந்தது.
மனைவி தன்னிடம் வாங்கிய பணத்திற்கு வட்டி போட்டு திருப்பிக் கொடுத்திருக்கிறாளா அப்படி என்றால் அவள் தனக்கு ஏற்படுத்திவிட்டுப் போன மன காயங்களுக்கும் நானும் வட்டி போட்டு கொடுக்க வேண்டுமா பவித்ரா …?என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டு இருக்கும்போதே அவனுடைய அலைபேசிக்கு வெங்கட்டின் எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது.
ஆதி பிறக்கும் ஒரு நாளுக்கு முன்பு வரை வெங்கட் உடன் அடிக்கடி எதையாவது பேசி இருக்கிறான் ஆதி பிறந்த அன்று ஏற்பட்ட சில கசப்பான நிகழ்விற்கு பிறகு தான் வெங்கட் ரிஷியுடன் பேசுவதை குறைத்து கொண்டான்.
ஆனால் ரிஷியோ அப்படியெல்லாம் இல்லை எப்பொழுதும் போல ஏதாவது ஒரு பார்வேர்ட் மெசேஜாவது அவனுக்கு திருப்பி விடுவான் ஆனால் வெங்கட்டிடம் இருந்துதான் எந்த ஒரு எதிர்வினையும் வந்தது கிடையாது.
ஆனால் இன்று அவனிடத்தில் இருந்து அழைத்து வந்திருக்கிறது புதிதாக ஏதோ ஒரு வில்லங்கத்தை பவித்ரா இழுத்து வைக்கிறாள் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.
அந்த வீட்டிலேயே வெங்கட்டிடம் மட்டும்தான் இன்னும் ரிஷி முறைத்துக் கொள்ளவில்லை இனி பவித்ராவால் அதுவும் நடக்கப்போகிறது என்று புரியவும் ரிஷிக்கு வேதனையில் முகம் சுருங்கியது…
கண்டிப்பாக குழந்தை பற்றிய பேச்சைத்தான் பேசப் போகிறான் இவனிடம் எப்படி முகத்தில் அடித்தது போல் மகனைக் கொடுக்க மாட்டேன் என்று கூறுவது என்று யோசிக்க தொடங்கியிருந்தான்.
அதற்குள்ளாக முழுவதுமாக அழைப்பு முடிந்து கால் கட் ஆனது மீண்டும் வெங்கட்டிடம் இருந்து அழைப்பு வந்தது இதற்குமேல் எடுக்கவில்லை என்றால் நன்றாக இருக்காது என்று யோசித்தவன் காலை அட்டென்ட் செய்ய
இப்பொழுது வெங்கட்டுக்கு புதுவிதமான குழப்பம் இவனை எப்படி அழைப்பது முதலில் மாமா என்று முறை வைத்து அழைத்தது போல அழைக்கவா... இல்லை மரியாதையாக வேறு வார்த்தை போட்டு அழைப்பதா என்று குழம்பியவன்
அது வந்து…. நான் வெங்கட் பேசுறன்...ம்ம்... உங்கள கொஞ்ச நான் சந்தித்து பேசனும்…
வெங்கட்னா...எந்த வெங்கட்…?
எனக்கு பர்சனலா ஒரு வெங்கட்டை தெரியும் அவன் என்னோட மச்சான் நாலு வார்த்தை பேசினா அதுல மூணு வார்த்தை பாசமா மாமாங்கற வார்த்தை தான் இருக்கும் அந்த வெங்கட்டா இருந்தா இப்ப கூட நீ என்னோட ஆபீஸ்க்கு வரலாம் நான் இப்போ ஆபீஸ்ல தான் இருக்கேன்
என்ன மாமானு கூப்பிடவே விரும்பாத வெங்கட்டா இருந்தா என்னோட ஆபீஸ் ப்ரண்ட் கேட்ல இருக்கற செக்யூரிட்டி கிட்ட என்னோட பர்சனல் செக்கரட்ரி நம்பர் இருக்கும் அதை வாங்கி அவர்ட்ட பேசி நான் எப்போ ஃப்ரீனு கேட்டு அப்பாயிண்ட்மெண்ட் அவர் தந்தா வாங்கிட்டு சொல்ற டைம்க்கு வந்து பாருங்க…
சா..சாரி மாமா... நான் எப்போ வர்றதுன்னு நீங்களே சொல்லிடுங்க கூட அக்காவும் வர்றா….
ஆதியை பத்தின பேச்சா இருந்தா உன் அக்கா இங்க வர்றது வேஸ்ட் கண்டிப்பாக குழந்தையை நான் அவளுக்குக் கொடுக்க மாட்டேன் வேற எதைப் பத்தியாவது பேசுறதா இருந்தாலோ இல்லை என்கிட்ட மன்னிப்பு கேட்கறதா இருந்தா, தாராளமா அவள கூட்டிட்டு இப்பவே கூட வரலாம் இன்னும் ஒரு மணி நேரம் நான் ஃப்ரீ தான் என்று கூறியபடி ஃமொபைல் போனை வைத்து விட்டான்.
என்னடா சொன்னாரு என்ற பவித்ரா தம்பியின் அருகில் நின்றபடியே அவனின் முகத்தை பார்க்க
அக்கா ஆதியை பத்தி பேசறதுன்னா நீ வர வேண்டாமாம்.. அவர் கிட்ட மன்னிப்பு கேட்கிற மாதிரி இருந்தா மட்டும் உன்னை வரச் சொல்றாரு…
எதுக்குடா நான் அவர் கிட்ட மன்னிப்பு கேட்கனும்... பண்ணின தப்பு எல்லாமே அவர்தான்... ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு போன உடனே என்ன ஆச்சு பவி உன் அப்பா எப்படி இருக்கிறாரு அவருக்கு திடீர்னு உடம்புக்கு என்ன வந்ததுனு...ஒரு வார்த்தை கூட கேட்காம என்கிட்ட பிரச்சனை பண்ணினது அவர்...அவரா ஆரம்பிப்பாரு….
அவரா என்னை அடிப்பாரு அவரா என்னை வெளியே துரத்துவாரு... ஆனா மன்னிப்பு மட்டும் நான் போய் கேட்கணுமா நல்லா இருக்கு கதை எப்படி அவர் ஆதியை எனக்கு கொடுக்க மாட்டேன்னு சொல்லுவாரு
முதல்ல என்னை அவர் கிட்ட கூட்டிட்டு போ யார் யார் கிட்ட மன்னிப்பு கேட்கிறாங்கனு இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும்...
ப்ளீஸ் பவி அங்க போய் இந்த மாதிரி எதுவும் உளறி வைக்காதே நமக்கு முதல்ல குழந்தை முக்கியம் அதுக்கு அப்புறம் சமாதானமாகி அவரோடு சேர்ந்து வாழற வழியை பாரு ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கும்போது ஒருத்தர் மாற்றி ஒருத்தர் குறை சொல்லறது சரி கிடையாது முடிஞ்ச அளவுக்கு காம்ளிகேட் பண்ணாத...ஈஸி கோ அவே வா பண்ணு….
சரி வண்டியில உட்காரு அவரை போய் பார்த்துட்டு வந்திடலாம்…
ஒரு நிமிஷம் இரு அவருக்குத் தர வேண்டிய பொருள் எல்லாத்தையும் பூஜை ரூம்ல வைத்திருக்கேன் எடுத்துட்டு வரேன் என்று உள்ளே சென்றாள்... திரும்பி வரும்பொழுது தாயின் ஹேன்ட் பேக்கை கையில் வைத்திருந்தாள்…
பவி இப்போ இதெல்லாம் குடுக்குறதுக்கு என்ன அவசியம் வந்தது இப்போ இதை குடுத்தா அவருக்கு இன்னும் கோபம் வரும் என்ற தம்பியிடம்
கண்டிப்பா வராது இதை கொடுக்கலைன்னா தான் அவங்க வீட்டு நகையெல்லாம் நான் திருடிட்டு ஓடி வந்துட்டேன்னு கூட வாய் கூசாம பேசுவாங்க அதான் எல்லாத்தையும் அவர் கையிலேயே குடுத்துட்டு அவருக்கும் எனக்கும் ஒத்துவராதுனு முகத்துக்கு நேரா சொல்லிட்டு என் பையனையும் கையோட கூட்டிட்டு வரலாம் என்று பட்டென பேசி முடித்தாள் .
என்னவோ போ பிரச்சினையை தேவையே இல்லாம பெருசு பண்ணறியோனு தோணுது சரி நல்லா பிடிச்சுக்கோ என்று ரிஷியின் அலுவலகம் வந்து அடைந்தனர் இவர்கள் வருவதை ஏற்கனவே சொல்லியிருந்ததால் நேராக ரிஷியிடமே அனுப்பி வைத்தார்கள்.
ரிஷியும் இவர்களை எதிர்பார்த்து தான் காத்து இருந்தான் இவர்களை பார்த்ததுமே எதிர்ப்புறமாக அமர வைத்தவன் சொல்லு வெங்கட் திடீர்னு ரெண்டு பேரும் இவ்வளவு தூரம் தேடி வந்திருக்கறீங்க... அப்பாவோட உடம்பு இப்போ சரியாயிடுச்சா உன்னோட காலேஜ் கூட இது ஃபைனல் இயர்ல அரியர்ஸ் ஏதாவது இருக்குதா என்று ஜெனரலாக பேசினான்.
வெங்கட்டும் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு இருக்க பவித்ராவும் கோபத்தில் ரெண்டு பேரும் மாறி மாறி முறைத்தாள்
அவள் கோபத்தை புரிந்துகொண்ட வெங்கட் மாமா நாங்க வந்து விஷயம் என்னனு சொல்லிடுறேன் என்று அவன் பேச்சை ஆரம்பிக்கும் பொழுது ரிஷி இடைமறித்து தடுத்தவன்
ஆதி,பவி சம்மந்தப்பட்ட விஷயம்னா சாரி வெங்கட் இது எனக்கும் பவிக்கும் நடுவுல இருக்கிற பிரச்சினை மூன்றாவதா ஒருத்தர் உள்ள வர்றதை நான் விரும்பல சோ நீ கொஞ்ச நேரம் வெளிய வெயிட் பண்ணு நான் பவித்ரா கூட கொஞ்சம் பர்சனலா பேசனும் என்று சொல்ல…
அப்பாடா விட்டால் போதும் என்று நினைத்த வெங்கட் உடனடியாக வெளியே சென்றான்.
அவன் வெளியே செல்லும் வரை பொறுமை காத்துக்கொண்டிருந்த ரிஷி இப்போ சொல்லு பவித்ரா என்ன விஷயமா என்னை பார்க்க வந்த என்று நேரடியாகக் கேட்டான்.
அதற்கு கோபத்தோடு இப்போ எதுக்கு வெங்கட்டை வெளியே அனுப்புனீங்க உள்ள இருந்தா உங்களோட லட்சணமெல்லாம் என் தம்பிக்கு தெரிஞ்சிடும்னு பயப்படுறீங்களா…? என்று சாடினாள்.
பவி ப்ளீஸ் கத்தாத இது ஆபீஸ் ரூம் கொஞ்சம் சத்தமாகப் பேசினாலும் அப்படியே வெளிய கேட்கும் எதுவாயிருந்தாலும் மெதுவா பேசு நான் உன்னோட கொஞ்சம் தனியா பேசணும்னு நினைச்சேன் எனக்கு பிரைவசி தேவைப்பட்டிச்சி அதனால உன் தம்பியும் வெளிய அனுப்பினேன் யாரையும் பார்த்து பயந்து இல்லை…
தெளிவா எனக்கு புரிஞ்சு போச்சு நீ என்கிட்ட இப்போ சண்டை போடுறதுக்கு மட்டும் தான் வந்திருக்கற இப்போ நான் என்ன சொன்னாலும் உன் மண்டையில ஏற போறது இல்ல அதனால என்ன விஷயமா வந்தியோ அதை மட்டும் சொல்லிட்டு உடனே கிளம்பி போ இப்போ ரெண்டு பேருக்குமே வேவ்ஸ் சரி இல்ல என்ன பேசினாலும் அது சண்டையில் தான் போய் முடியும் என்று ரிஷி சமாதான கொடியை வீசினான் .
எனக்கு ஆதியை பாக்கணும் போல இருக்கு அவனை பாக்காம இருக்க முடியல...அவனை என்கிட்ட குடுத்திடுங்க…
எதுக்காக உன்கிட்ட கொடுக்கனும்...ஆதியை பாக்கணும் போல இருந்தா அவன் நம்ம வீட்டுல தான் இருக்கான் போய் பாரு... அவன் இல்லாம உன்னால இருக்க முடியலனா உன்னை யாரு தடுக்கப் போறா நீ அங்கேயே இரு அதுக்கு எதுக்கு ஆபீஸ்க்கு வந்த... வீட்டுக்கு தானே போய் இருக்கணும் என்று நெற்றியை சுருக்கியபடி கூற
என்ன விளையாடுறீங்களா வீட்டை விட்டு வெளியே போனு அடிச்சி தொறத்துவீங்க...எல்லாத்தையும் துடைச்சி போட்டுட்டு நான் அங்க என் பையனை பாக்க வரனுமா... என்னால இனிமே அந்த வீட்டு வாசற்படியை மிதிக்கவே முடியாது
அங்க வந்தா ஒவ்வொரு நிமிஷமும் நீங்க என்ன வெளியே தள்ளிவிட்டதும் உங்க வீட்டு ஆளுக சுத்தி நின்னு வேடிக்கை பார்த்ததும் தான் ஞாபகத்துக்கு வரும் நா இனி அங்க வர மாட்டேன் என்று
சத்தமாகப் பேசியபடி இருக்கையை விட்டு எழுந்தாள்.
பவி மறுபடியும் நான் சொல்லறேன் கத்தி பேசாதே எனக்கு காது நல்லாவே கேட்கும் அன்னைக்கு நடந்த விஷயத்துக்காக நான் உன்கிட்ட மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்குறேன்.
தயவு செஞ்சு வீட்டுக்கு வர மாட்டேன்னு அடம் பிடிக்காத உன் பிரச்சனை என்ன…? நான் உன்னை வெளியே தள்ளி விடும் போது எல்லாரும் சுத்தி நின்னு வேடிக்கை பார்த்தாங்க அது உனக்கு அவமானமா போச்சு அதுதானே
அதே மாதிரி எல்லாரையும் நிக்க வெச்சு கூட உன்கிட்ட நான் மன்னிப்பு கேட்கிறேன் அதுக்கப்புறம் உன் அவமானம் காணாம போயிடும்ல...
எனக்காக இல்லனாலும் நம்மளோட குழந்தைக்காகவாவது நீ கண்டிப்பா அங்க வந்து தான் ஆகணும்...நீ இல்லாம அவன் ரொம்பவே ஏங்கறான்...அடிக்கடி உன்னைத்தேடி அழறான்...அவனை விட உன் ஈகோ உனக்கு பெருசா போச்சா…
இங்க பாரு பவி அங்கிருக்கிற யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க நான் அதுக்கு கேரண்டி தரேன் தயவு செஞ்சு வா...ஆதி பாவம்
என்று கூற கோபத்தில் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
மகனைப் பற்றிக் கூறும் போது மட்டும் மனதிற்குள் பதறியபடி கேட்டவள் அவன் வீட்டு ஆளுகளை பற்றிப் பேசியதும் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டாள் நீ எவ்வளவு வேணாலும் பேசிக்கோ உன்னோட பேச்சை நான் காதுகொடுத்துக் கேட்க மாட்டேன் என்பது போல...
பொறுமையை இழுத்து கையில் பிடித்துக் கொண்டு அவள் அருகில் வந்து அவள் எதிர்ப்புறம் ஒரு ஸ்டூலை எடுத்து போட்டவன் அவள் கைகளைப் பிடித்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டான் அவளோ பட்டென்று உருகிக் கொள்ள தலையை கலைத்து விட்டு மீண்டும் தன் பொறுமையை இழுத்து கட்டுக்குள் கொண்டு வந்தான்.
பவி தப்பு யாரோடதுனு மறுபடியும் அந்த விஷயத்துக்கு உள்ளே நாம போகவே வேண்டாம் நீயும் நானும் மாறி மாறி பேசி பிரச்சினை பெருசாக்கிடுவோம்... அதனால என்ன மன்னிச்சிடு...அன்னைக்கு நடந்ததை மறந்துட்டு வீட்டுக்கு வா…
முடியாதுங்க உங்களுக்கு வேணாம்னா அடிச்சி விரட்டுவீங்க வேணும்னு நினைச்சா யோசிக்காம நாலு சுவத்துக்குள்ள யாருக்கும் தெரியாம மன்னிப்பு கேட்டுட்டு கூப்பிடுவீங்க என்னால அப்படி தன்மானம் இல்லாமல் வாழ முடியாது.
அன்னைக்கு பணத்தைப் பற்றி அவ்வளவு பேசனீங்களே இன்னிக்கு உங்க பணத்துக்கு வட்டி போட்டு கொடுத்துட்டேன் ..
ஆனா அன்னைக்கு பேசின அந்த வார்த்தை எல்லாம் உங்களால திருப்பி வாங்க முடியுமா…
முடியாதுல்ல அதே மாதிரி தான் நான் திரும்பி வர்ற விஷயமும்... நடந்து முடிஞ்சதுக்கு அப்புறம் மாத்தணும் நினைச்சா அது முடியாது…கொஞ்ச நேரம் முன்னாடி நீங்கதான் சொன்னீங்க ஆதி என்னை தேடறான், ஏங்கறானு...உன்மையிலேயே அவன் மேல அக்கறை இருந்தா என்கிட்டயே கொடுத்துடுங்க…
நீங்க சொன்னீங்க இல்ல உங்க வாழ்க்கை விட்டு வெளியே போக சொல்லி …
இப்போ நான் சொல்றேன் என் பிள்ளையை என் கைல கொடுத்துட்டு என் வாழ்க்கைல இருந்து நீங்க முதல்ல வெளிய போங்க..என்றவள் கைப்பையில் இருந்த கவரை அவன் கையில் திணித்தவள்...
இந்தாங்க நீங்க எனக்கு கல்யாணத்துக்காக போட்ட உங்கள் குடும்பத்து நகை... இது எல்லாத்தையும் கட்டிப்புடிச்சு குடும்பம் நடத்துங்க என்னையும் என் பிள்ளையையும் விட்டுடுங்க என்று மிக நீளமாக பேசி முடித்தாள்.
என்ன பவித்ரா இது என்று கவரைப் பிரித்துப் பார்க்காமல் டேபிளின் மீது வைத்தவன் யோசிக்காமல் பேங்க் அக்கவுண்ட்ல பணம் போட்டு விடுற இன்னிக்கு போட்டிருந்த நகைகளை எல்லாம் கழட்டி கொடுக்கிற இது எல்லாமே என்னோட அம்மா உனக்காக பாசமா கொடுத்தது இப்போ இதை அவங்க பார்த்த எவ்வளவு வருத்தப்படுவாங்க யோசிச்சு பார்த்தியா…
உங்க அம்மா தானே நல்லாவே வருத்தப்படுவாங்க எப்படி தெரியுமா வீட்டை விட்டே துரத்தியாச்சு அப்புறம் என்ன நாம போட்ட நகைகளையும் போட்டுட்டு சுத்தறா…
இங்கிதம் இல்லாதவ... அவளோட நகைகளும் போயிடுச்சேனு வருத்தப்படுவாங்க…
பவி ப்ளீஸ் நீ என்னோட அம்மாவை பத்தி ஒவ்வொரு முறையும் தப்பாவே என் கிட்ட பேசிக்கிட்டு இருக்கிற பேசுறது நீ என்கிறதால நான் பொறுமையாய் இருக்கிறன் இல்லன்னா பாத்துக்கோ…
என்ன பண்ணுவீங்க அன்னைக்கு அடித்து வீட்டை விட்டு துரத்தின மாதிரி... இன்னைக்கி இங்கிருந்து துரத்த போறீங்க அவ்வளவுதானே நான் உங்ககிட்ட நாகரீகமான நடத்தையை எதிர்பார்த்து வரல எனக்கு என் பையன் வேணும் எப்போ வந்து கொடுக்குறீங்கன்னு சொல்லுங்க இல்ல நான் எங்க வரணும்னு சொல்லுங்க வந்து வாங்கிக்கிறேன்…
ஆதி என் பையன் அவனை என்னைக்கும் நான் உனக்கு கொடுக்க மாட்டேன் அவன் உனக்கு வேணும்னா தாராளமா வீட்டுக்கு வரலாம் இவ்வளவு நேரம் நீ பேசினதை கூட நான் காதில போட்டுக்கல எப்போ வர்றனு சொல்லு நான் வந்து உன்னை கூட்டிட்டு போறேன்…
நானும் அதை தான் சொல்றேன் இனிமே நான் அந்த வீட்டுக்குள்ள வரதா இல்ல உங்க வாழ்க்கைகுள்ளயும் சேர்த்துதான் எனக்கு என் பையன் மட்டும் போதும் என் பையனை குடுத்துடுங்க நானும் என் பையனும் உங்க கண்ணுல படாத ஏதாவது ஒரு தேசமா போய் வாழ்ந்துக்கறோம்…
நடக்காத விஷயத்தைப் பற்றிப் பேசி எனர்ஜி வேஸ்ட் பண்ணாத பவித்ரா இந்த உலகத்தில் எந்த மூலைக்குப் போனாலும் என் கண்ணிலிருந்து நீயோ என் பையனோ என் கண்ணை விட்டு தப்பி போக முடியாது ஒழுங்கா எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு என்னோட வந்து குடும்பம் நடத்துற வழியை பாரு இல்லன்னா தேவையில்லாத பிரச்சினையை சந்திக்க வேண்டியதிருக்கும்…
அதையே தான் சொல்றேன் மிஸ்டர் ரிஷிகேஷ் அவர்களே ஒழுங்கா என் பையன என்கிட்ட கொடுத்துடுங்க தேவையில்லாம பிரச்சினையில மாட்டிக்காதீங்க அப்புறம் கோர்ட் கேஸ்னு அலைய வேண்டியதிருக்கும்..
ஹேஹேஹே...நிஜமாவே பயந்துட்டேன் மிஸஸ் பவித்ரா அவர்களே... நிஜமாவே
எங்க பரம்பரையில யாருமே இதுவரைக்கும் கோர்ட் கேஸ் எல்லாம் பார்த்ததே கிடையாது முதல் முறையா உங்க புண்ணியத்துல தான் நாங்க அத பாக்க போறேன் அதனால தயவு செஞ்சு சீக்கிரமா என்ன பண்ணணுமோ அதை பண்றீங்க ப்ளீஸ் என்று அவளை நக்கல் செய்ய
டேபிளில் இருந்த பேப்பர் வெயிட்டை தூக்கி அவளின் மீது தூக்கி வீச மேலே படாதவாறு பிடித்துக் கொண்டவனைப் பார்த்து இன்னொரு தடவை நக்கல் செஞ்சிங்க பல்லை உடைச்சிடுவேன் என்றாள்.
இந்த மாதிரி ரொமாண்டிக் டயலாக்லாம் லவ் பண்ணும் போதுதான் காதலி காதலனை பார்த்து சொல்லுவா... ஆனா நாம காதலிக்கும் போது நீ சொல்லலையேனு நிறையா தடவை கவலை பட்டிருக்கேன்...பரவால்ல கல்யாணம் பண்ணி குழந்தை பிறந்த பிறகாவது பல்லை உடைப்பேன்னு சொல்றியே என்று மீண்டும் கேலி செய்ய…
ச்சே... உங்ககிட்ட வந்து சமாதானம் பேச வந்தேன் பாருங்க என்ன சொல்லணும் நியாயமா கேட்டா நீங்க எனக்கு புள்ளைய கொடுக்க மாட்டீங்கன்னா கண்டிப்பா நான் கோர்ட் படி ஏறுவேன்…
அம்மாவும் அப்பாவும் சேர்ந்திருக்கும் பொழுது எந்த கோர்ட்டும் ஒரே குழந்தையை அம்மாவுக்கு தனியாகவும் அப்பாக்கு தனியாகவும் பிரிச்சி கொடுக்க மாட்டாங்க பவித்ரா மொதல்ல சட்டத்தை பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்க சட்டப்படி நீயும் நானும் கணவன் மனைவி புரிஞ்சிக்கோ அதனால ஒழுங்கா இந்த நகைகளை எல்லாம் எடுத்து போட்டுக்கோ நானே நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்…
அப்போ உங்களை நான் சட்டப்படி டிவோர்ஸ் பண்ணிட்டா அந்த குழந்தையை எனக்கு கொடுத்துடுவாங்கல்ல என்று தரையைப் பார்த்தபடியே கேட்க
அதிர்ச்சியில் எழுந்து நின்றான் ரிஷி பவித்ரா என்ன பேச்சு பேசுற நான் உன்ன சமாதானப்படுத்துவதற்காக அந்த வார்த்தை சொன்னேன் நீ அதை இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிட்டு பேசற…
இப்போ நீங்க தானே சொன்னீங்க...
சரியா தான சொல்லுறீங்க…. நீங்களும் நானும் சட்டபடி பிரியலனா
எல்லாருமே உங்களையும் என்னையும் புருஷன் பொண்டாட்டின்னு தானே சொல்லுவாங்க எப்படி இருந்தாலும் எப்பவுமே நான் உங்ககிட்ட வரப்போவதில்லை நான் வரலைன்னா ஆதியை நீங்க என்கிட்ட கொடுக்க போறதில்லை அப்போ சட்டப்படி பிரிஞ்சா தானே கைக்குழந்தையான ஆதியை என்கிட்ட தருவாங்க... நான் உங்களுக்கு டிவோர்ஸ் கொடுத்துட்டே என் பையன் வாங்கிக்கிறேன்…
நான் உனக்கு டிவோர்ஸ் கொடுக்க மாட்டேன்னு சொன்னா….
அப்போ உங்களுக்கு என்ன பார்த்து பயமா இருக்கு இல்லையா….
உளறாத…
உளறல் இல்ல நீஜம்... நான் உன்கிட்ட டிவோஸ் கேட்டு நீங்க எனக்கு கொடுக்க மாட்டீங்கன்னா என்ன அர்த்தம் உங்களுக்கு பயம் அப்படி டிவோஸ் வாங்கிட்டா குழந்தை என்கிட்ட கொடுத்துடுவாங்கனு பயம் அதானே…
கடவுளே...பைத்தியம் மாதிரி உளறாத…. நான் உனக்கு
டிவோர்ஸ் கொடுத்தா கூட எந்த ஜென்மத்திலேயும் ஆதியை என்கிட்ட இருந்து வாங்கவே முடியாது அது முதலில் புரிஞ்சுக்கோ பவித்ரா... தேவையே இல்லாமல் என்னை சீண்டி விட்டு டிவோஸ் வாங்கிட்டு தனியா இருந்து கஷ்டப்பட போற உனக்கு இது தேவையா….
அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம் மிஸ்டர் ரிஷிகேஷ் உண்மையிலேயே உங்களுக்கு என்ன பார்த்து பயம் இல்லனா ஆதியை உங்ககிட்டயே வச்சிக்க முடியும்ங்கற தைரியம் இருந்தா எனக்கு டிவோர்ஸ் கொடுங்க அதுக்கப்புறமா ஆதியை எப்படி உங்ககிட்ட இருந்து வாங்கனுங்கறது எனக்கு தெரியும் நீங்களா நானா நானே பாத்துக்கலாம்…
பவித்ரா என்கிட்ட சேலஞ்ச் வைக்காத அசிங்கமா தோத்திடுவ... உன்னோட வாழ்க்கையோட கடைசி நாள் வரைக்கும் போராடினா கூட ஆதியை கண்ணுல கூட பாக்க விட மாட்டேன் இப்ப கூட சொல்றேன் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு என்னோட வா நீ நான் ஆதி மூணு பேரும் சந்தோஷமான வாழ்க்கை வாழலாம் அதை விட்டுட்டு விவாகரத்து, கோர்ட், சவால்னு உன் நேரத்தையும் நிம்மதியையும் வேஸ்ட் பண்ணாத….
சவால்னு வந்ததுக்கப்புறம் இங்கே யார் தோற்க்கறா யார் ஜெயிக்கிறாங்கறது மட்டும்தான் விஷயம்... விவாகரத்து கொடுத்ததற்கு அப்புறம் ஆதியை உங்களோடவே வச்சுக்க முடியும்ங்கற தைரியம் இருந்தா இந்த சவாலை ஏத்துக்கோங்க…
இல்லையா
உங்க தோல்வியை ஓத்துக்கிட்டு ஆதியை என்கிட்ட கொண்டுவந்து கொடுங்க அதுக்கப்புறம் உங்க கூட வரலாமா வேணாமான்னு நான் கொஞ்ச நாள் கழிச்சு முடிவெடுத்து சொல்றேன்…
சரி பவித்ரா உன் சேலஞ்ச் எடுத்துக்கிறேன் டிவோர்ஸ் நோட்டிஸ் நீ அனுப்பறியா இல்ல நான் அனுப்பவா...
எதுக்காக மாத்தி மாத்தி டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பி டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு ஒரு நல்ல லாயரா பாருங்க…ஒரு நல்ல நாள்ல ரெண்டு பேருமே மியூச்சுவலா அப்ளை பண்ணலாம் எப்படியும் மூணு மாசத்துல வாங்கிடலாம் இல்ல…
சில சமயம் ஒரு வருஷம் வரைக்கும் ஆகும்….
அது ஒண்ணும் இல்லாத மக்களுக்கு உங்கள மாதிரி ஆளுங்களுக்கு இல்ல என்ன பண்ணுவீங்கன்னு தெரியாது மூணு மாசத்துல எனக்கு டிவோர்ஸ் கொடுக்கனும்... அதுக்கப்புறமா குழந்தையை உங்ககிட்ட இருந்து எப்படி வாங்கனும்னு எனக்கு தெரிகிறது முக்கியமான விஷயம் டிவோர்ஸ் அப்பிளிகேஷன் பார்ம் குழந்தை எனக்கு சாதகமா வரணும்னு மென்ஷன் பண்ணனும்…
அப்படி மென்ஷன் பண்ணினா குழந்தையை உன் கிட்ட குடுக்க மாட்டேன்னு எதிரா நானும் ஃபைட் பண்ணுவேன்…
தொடரும்...
Last edited: