10.
வயசு பொண்ணு ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிருந்தா யாருக்கு நஷ்டம் எங்களுக்கு தானே என்று கோபப்பட்டவர்... ...என் பிள்ளை வாழ்க்கை தப்பிச்சது ராஜாத்தி நீ புண்ணியம் பண்ணிருக்க இல்லனா இவனை கட்டிட்டு தினம் தினம் கஷ்டப் பட்டுருப்ப இப்படி பட்டவனை கட்டிகிட்டா கல்யாணத்துக்கு அப்புறம் கூட எங்கேயுமே அவனோட தனியா போக முடியாது போல பாதிலேயே விட்டுட்டு வந்திடுவான் அப்புறமா தனியா தான் என் பொண்ணு வீடு வரனும் நல்லா வளத்திருக்கீங்க பையனை என்று
அவரின் முன்பே கௌசிக்கை கரித்துக் கொட்டினார்.
மேகலா பேசியதை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கௌசிக்கின் பெற்றோர்கள் எதுவும் பேசாமல்
அனைவரையும் பார்த்து கைகூப்பி விட்டு மௌனமாக வெளியேறினர்.
அவர்கள் சென்றதும் மேகலாவும் நாராயணனும் பவித்ராவிடம் வந்தவர்கள் பவித்ரா எங்கள மன்னிச்சிடுங்க நாங்கதான் அவசரப்பட்டு கல்யாணம் அது இதுன்னு உன் மனசுல தேவையில்லாமல் ஆசையை வளர்த்தி விட்டுட்டோம்
அவன் உன்னை பார்-க்கு கூட்டிட்டு போன உடனே நீ எங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்லி இருக்கலாம் இல்லன்னா ஏதாவது ஒரு கால் டாக்சி பிடித்து வீட்டுக்கு வந்து இருக்கலாம் இல்ல
ஏன்மா அங்க பொறுமையாக உட்கார்ந்துட்டு இருந்த என்று அவளிடம் கேட்க
அவள் தயங்கியபடி அம்மா நீங்க தப்பா பேசுற அளவுக்கு கௌசிக் கெட்டவன்லாம் இல்லமா ...ஆக்சுலி அவர் ரொம்ப நல்லவர்
நான் தான் அவருக்கு ஏத்த பொண்ணு இல்லம்மா… எனக்கு என்னவோ பழியை அவர் ஏத்துகிட்டு என்னை காப்பாத்தி விடற மாதிரி தோணுது இதுக்கப்புறமும் நான் மௌனமா இருந்தேன்னா நான் பொண்ணே இல்லமா என்று கூற
என்ன பவித்ரா என்ன என்னமோ சொல்லிட்டு இருக்கற அப்போ நீ ஏதாவது தப்பு செஞ்சியா கவலையாக கேட்க
ம்ம்... தப்பா என்னன்னு தெரியலம்மா ஆனா கௌசிக்கை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்ம்மா…
அவங்க அப்பாகிட்ட பார்-க்கு கூட்டிட்டு போனேனு பொய் சொல்லி இருக்கறாரு அம்மா
அவருக்கு குடிக்கிற பழக்கம் இல்லை
என்னை ஒரு ஸ்டார் ஹோட்டல்லுக்கு தான் கூட்டிட்டு போனாரு அங்க ஒரு ஹால்ல அவர் பிரண்ட்ஸ்க்கு ட்ரிங்க்ஸ் பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருக்காரு
இவரு டிரிங்க்ஸ் எல்லாம் எடுத்துக்கல...ஆனா அவங்களோட நல்லா ஆடிப்பாடி என்ஜாய் பண்ணினாரு என்னையும் கூட சேர்த்து கிட்டாரு எனக்கு இது பிடிக்கல
என்னோட செல்பி எடுக்கும்போது மேல கைபட்டதுன்னு நான்தான் ஓவரா ரியாக்ட் பண்ணிட்டேன்..
அவர் கோபத்தில் கத்த பதிலுக்கு நான் கத்த பேச்சுவார்த்தை வாக்குவாதமா மாறி கடைசியில கோவத்துல என்னை விட்டுட்டு வந்துட்டாரு அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு வந்து தேடி இருக்காரு ஆனா...என்று தயங்கியவள் பிறகு
உண்மையை சொல்லப்போனா கௌசிக்கை கல்யாணம் பண்ற அளவுக்கு எனக்கு பிடிக்கல தனிப்பட்ட மனுஷனா ரொம்ப நல்லவரு ஆனா கல்யாணம்னு வரும்போது
என்னால அவரை ஏத்துக்க முடியல அதுக்கு காரணம் என் மனசுல வேற ஒருத்தர் இருக்காருமா என்று அவள் மனதில் இருப்பதை பட்டென்று போட்டு உடைத்தாள்.
என்னடி பவித்ரா என்னென்னமோ உளர்ற... அப்படின்னா இன்னிக்கு கௌசிக் உன்னை கூட்டிட்டு போகாம இருந்தாலும் இந்த கல்யாணத்தை நிறுத்தி இருப்ப அப்படித்தானே என்று கண்களை உருட்டியபடி மேகலா பவித்ராவை பார்த்து கேட்க
மௌனமாக தலைகுனிந்த பவித்ரா ஆமாம் என்று தலை அசைத்தாள்
உடனே அவளை அடிக்க பாய்ந்தவரை இடையில் புகுந்த தடுத்த நாராயணன் மேகலா பொறுமையாய் இரு பொண்ணு அவ மனசுல இருக்கறதை நம்ம கிட்ட பேசுறதுக்கு நாம அவளுக்கு சந்தர்ப்பமே கொடுக்காம நாமளா எல்லாத்தையும் முடிவு பண்ணினோம் இப்போ அவளை குற்றம் சொல்லியோ அடிச்சோ என்ன பிரயோஜனம் சொல்லு பொறுமையா விசாரிக்கலாம் என்றவர் பவித்ராவின் அருகில் வந்து
சரி சொல்லுமா உன் மனசுல இருக்கற அந்த பையன் யாரு...கூட படிச்ச பையனா எப்படி பழக்கம் காதலுக்கு நாங்க எதிரிகள் கிடையாது எங்களுக்கு உன்னோட சந்தோஷம் தான் முக்கியம் அதுக்கு முன்னாடி எங்களுக்கு வேற ஒன்னும் தேவையில்ல... யாருன்னு சொல்லு
விசாரிப்போம் எங்களுக்கு திருப்தின்னா உடனே பேசி கல்யாணம் பண்ணி வைக்கிறோம்..
ஒருவேளை எங்களுக்கு பிடிக்காமல் இருந்தாலோ இல்ல விசாரிக்கற இடத்தில திருப்தியான பதில் வரலனாலோ இந்த காதல் கத்திரிக்காய் எல்லாத்தையும் மூட்டை கட்டி வைச்சிட்டு மறுபேச்சு பேசாமல் நாங்க பார்க்கிற பையனை கல்யாணம் பண்ணிக்கணும்...
என்ற கண்டிப்புடன் பச்சைக்கொடி காட்டினர்.
மேகலா இடையில் புகுந்து அதான் அப்பா கேட்கறாங்கல்ல வாயைத் திறந்து பதில் சொல்லு பவித்ரா வாயில் என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கே என்று கேட்டார்
அவருக்குப் பின்புறமாக இருந்த வெங்கட்டோ அன்று கோவிலில் பார்த்தோமே அவரா என்று பவித்ராவிடம் ஜாடையாக கேட்டுக்கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்து முறைத்த பவித்ராவை எதுக்குடி அவனைப் பார்த்து முறைக்கிற என்று அடிக்க பாய்ந்த மேகலாவை தடுத்த நாராயணன் மேகலா கொஞ்சம் உள்ள போ அவகிட்ட நான் பேசிகிட்டு இருக்கேன்ல இப்படி பக்கத்துல இருந்து அவளை திட்டிகிட்டு இருந்தா பொண்ணு எப்படி மனசு விட்டு பேசுவா நீ இப்படி கடுமையாக நடந்துக்கறதால தான் அவ பயந்து எதையும் நம்ம கிட்ட சொல்லல... நீ சொல்லு பவி அப்பா நான் இருக்கறேன் என்று கூறவும்
கோபமாக அங்கிருந்து நகர்ந்த மேனகாவின் கையைப் பிடித்து தடுத்த பவித்ரா...ம்மா...சாரி ம்மா...நா வேணும்னு எதையும் செய்யல… அதுவா நடக்குது என் கூட இருங்கம்மா ப்ளீஸ் ... என்று மகள் கூறவும்
அதுவரை மகள் மீது இருந்த அத்தனை கோபத்தையும் மறந்த மேகலா பவியின் அருகில் அமர்ந்து அவளை தனது நெஞ்சினில் சாய்த்துக்கொண்டவள் ஆதுரமாக அவளின் தலையை தடவிக் கொடுக்க ஆரம்பித்தார் பவித்ராவும் மெதுவாக சொல்ல ஆரம்பித்தாள்.
நாம் முதன் முதலில கௌசிக் என்னை பார்க்க வந்தாரு இல்லையா அன்னைக்குதான் கௌசிக்கை பாக்குறது ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி தான் ரிஷியை பார்த்தேன் ப்பா...
அப்போ எனக்கு அவர் பேர் கூட தெரியாது நீங்க எனக்காக பார்த்த மாப்பிள்ளைனு நினைச்சு தான் அவரை பார்த்தேன்.
வெங்கட்டும் அவர்தான் மாப்பிள்ளைனு உறுதியா சொன்னாதால எனக்கு சந்தேகமே வரல…
அவரு பக்கத்துல உங்கள மாதிரி மிடில் ஏஜ்ல ஒரு கப்பிள் நின்னுகிட்டு இருந்தாங்க அது அவரோட அம்மா அப்பான்னு தப்பா நினைச்சு அவரு முன்னாடி போய் நின்னு அவர்கிட்ட எனக்கு உங்கள பிடிச்சிருக்கு ன்னு சொல்லிட்டோம்... என்று கூற பெற்றோர் இப்பொழுது வெங்கட்டை முறைக்க தொடங்கினர்.
மேகலா வெங்கட்டை திட்ட ஆரம்பித்தார் அவதான் மாப்பிள்ளை போட்டோ பாக்கல நீ பார்த்த இல்லடா ஆள் மாறி பாக்கற அளவுக்கா கண்ணு மங்கி போச்சு வேற யாரோ ஒருத்தனை போய் மாப்பிள்ளைனு இவளுக்கு காமிச்சி இருக்க என்று திட்டித் தீர்த்தவர் பிறகு நாராயணனை பார்த்து
எல்லாம் உங்களால வந்ததுங்க ஒன்னு பொண்ணு இருந்த கூட்டிட்டு போய் இருக்கணும் அப்படி இல்லையாம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கணும் ரெண்டும் இல்லாம நல்லா பண்ணி வெச்சிருக்கீங்க வேலை என்று கூற நாராயணனும் அவளை கண்களாலே அடக்கினார் பிறகு பவித்ராவை சொல் என்பது போல் ஜாடை செய்ய அவளோ மீண்டும் தொடர்ந்தாள்.
பாத்ததுமே அந்த முகம் என் மனசுல அப்படியே பதிஞ்சிருச்சி அப்பா... நீங்க அதுக்கப்புறம் வந்து என்னை கூட்டிட்டு போய் கௌசிக்கை காமிச்சிங்க ஆனா கௌசிக் முகம் என் மனசில பதியவே இல்லை ஆனா அவங்க எல்லாருக்கும் என்னை பிடிச்சு போய் அன்னைக்கே ஒரு இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்தை பண்ணிட்டு போய்ட்டாங்க இதுதான் விதினு நினைச்சி மனசை சமாதானப் படுத்திக்கிட்டேன்.
ஆனா முடியலப்பா
கண்ணை முடினாலே ரிஷியோட முகம் தான் ஞாபகத்துக்கு வந்தது அவரை மறக்க முடியாமல் நான் கஷ்டப்பட்டு இருக்கும் போது தான் ஒரு நாள் கோவில்ல வந்து அவரோட விசிட்டிங் கார்டை எனக்கு கொடுத்துட்டு போனாரு
அவருக்கு என்னை பிடிச்சிருக்கறதாவும்...எனக்கும் பிடிச்சிருந்தா கூப்பிட்டு சொல்லு உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்னு சொல்லிட்டு போயிட்டாரு அன்னைக்கு தான் எனக்கு அவர் பேரு கூட தெரியும் அவர் முழுபேரு ரிஷிகேஷ்பா...
எனக்கு ரொம்ப சந்தோஷம்... ஆனா உங்க கிட்ட சொல்ல பயம் அவர் யாரு என்ன எதுவுமே தெரியாது எப்படி திடுதிப்புனு வந்து உங்ககிட்ட சொல்றது அதனால கௌசிக் கிட்ட இத பத்தி சொல்லி அவர் வாயாலேயே என்ன வேணாம்னு சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்தனும்
அதுக்கப்புறமா ரிஷி பத்தி உங்ககிட்ட சொல்லலாம்னு நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்... அப்பகூட நான் ரிஷி கிட்ட என் மனசுல இருந்தது சொல்லல அப்பா உங்க சம்மதம் கேட்டு அதுக்கப்புறம்தான் ரிஷிக்கு என் சம்மதத்தை சொல்லனும்னு நினைச்சேன் என்ன தப்பா நினைக்காதீங்க ப்பா... என்று தாயின் தோளில் படுத்துக் கிடந்து அழ ஆரம்பித்தாள் தாய்க்கோ தனது மகளின் நிலையை புரிந்தவர் அழாதே என்பது போல் அவளின் கண்ணீரை துடைத்துக் விட்டார்...
கௌசிக் கிட்ட எப்படி பேச்சை ஆரம்பிக்கறதுன்னு யோசிச்சிட்டு இருக்கும் போதுதான் அவர் பிரண்ட்ஸ் இன்வெட் பண்ணனும்னு என்ன கூட்டிட்டு போனாரு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது அவர் கிட்ட தனியா எல்லாத்தையும் சொல்லலாம்னு
ஆனா அங்க பிரெண்ட்ஸ்க்கு ட்ரிங்க்ஸ் பார்ட்டி முடிஞ்சதும் கௌசிக் என்னோட க்ருப் போட்டோ எடுத்தது செல்ஃபி எடுத்தது எனக்கு புடிக்காம அவரோட சண்டை போட கோவத்துல அவர் என்னை அங்கேயே விட்டுட்டு போயிட்டாரு
என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கும் போது எதேச்சையாக அங்கு வந்து ரிஷியை பார்த்தது எதையும் யோசிக்காமல் அவர் பின்னாடி போயிட்டேன்... அவர் ஏதோ ஆபீஸ் மீட்டிங்காக வந்திருக்காரு... அவரை நான் தனியா சந்திச்சு பேசதான் அவர் வர்ற இடத்தை தெரிஞ்சுக்கிட்டு நான் முன்னாடியே போய் வெயிட் பண்றதா தப்பா புரிஞ்சுகிட்டு என்னை அந்த ஹால் வாசலில் நிற்க வெச்சிட்டு மீட்டிங் அட்டென்ட் பண்ணு போயிட்டாரு
அந்த கேப்ல கௌசிக் என்னை தேடிவந்திருக்காரு... என்னை காணலனதும் என்னை தேடிகிட்டே வீட்டுக்கு திரும்பி வந்துட்டார் போல…
ரிஷி மீட்டிங் முடிஞ்சி வெளிய வந்ததும் அவர் கிட்ட ஹெல்ப் கேட்டேன்…
அப்போ தான் அவருக்கே தெரிஞ்சது நான் அவரைத் தேடிப் போகலை வேற ஒருத்தரோட வந்த விஷயம்...என்னனு என்கிட்ட கேட்கவும்
நான் எல்லா விஷயத்தையும் சொன்னேன் உடனே புரிஞ்சுகிட்டு என்னை நம்ம வீட்டுகிட்ட கூட்டிட்டு வந்து விட்டுட்டு போனாரு அப்பா என்று எல்லாவற்றையும் கூறி முடிக்கவும்
மேகலா நாராயணன் தம்பதியினர் ஆச்சரியமாக என்ன …?அந்த பையனா உன்னை கொண்டு வந்து விட்டது...நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கலாம் இல்ல
என் பொண்ணுக்கு எவ்வளவு பெரிய உதவி பண்ணிருக்காரு அதுவுமில்லாம என் பொண்ணு மனசுல இடம் பிடிச்சவற நாங்களும் பார்த்திருப்போம்...அப்படியே ஒரு நன்றியும் சொல்லிருப்போம்ல.
என்று மேகலா சொல்ல
முகத்தை சுளித்துக் கொண்டு மீண்டும் அழ ஆரம்பித்த பவித்ரா அதுல தான் ஒரு பிரச்சினை அவரு வேற யாரும்மில்ல அன்னைக்கி நம்ம வீட்டுக்கு வந்தாங்கல்ல ஒரு பணக்கார குடும்பம் அவரோட பையன் தான் …
அவர் சொல்லி தான் அவங்க இங்க சம்மதம் பேச வந்து இருக்காங்க ஆனா அது தெரியாம நாம எல்லாருமே அவங்க திமிர்தனத்தை பார்த்து அவர்களை அவமானப்படுத்தி வெளியே அனுப்பிட்டோம்...இந்த விஷயம் ஹோட்டல்ல வச்சி அவர் சொல்லிதான் எனக்கே தெரியும்...ஆனா எதையும் மறைக்காம அன்னைக்கு நடந்த எல்லாத்தையும் ஒப்பனா அவர் கிட்ட சொல்லிட்டேன்
அது வரை என்னோட நல்லா பேசிட்டு இருந்தவரு நான் சொன்னதை கேட்ட பிறகு எதுவுமே பேசாமல் என்னை வீட்டுகிட்ட இறக்கி விட்டுட்டு போயிட்டாரு
இனி நீங்களே போய் என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டா கூட அவங்க குடும்பத்தை அவமானப் படுத்தினதுக்காக என்னை கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்க மாட்டாரு என்று கதறி கதறி அழ ஆரம்பித்த மகளை சமாதானப்படுத்த வழிதெரியாமல் பெற்றோர் இருவரும் முழிக்க ஆரம்பித்தனர்.
பவித்ராவை இருக்கிறது ரிஷி நேராக அவன் வீடு வந்தவன் வீட்டிற்குள் நுழையும் பொழுதே தாய் எங்கே என்றுதான் விசாரித்தான் அவர் ருமில் இருப்பதை அறிந்து கொண்டவன் நேராக மேனகாவை தேடிச் சென்றான்.
அவர் தங்கையுடன் சேர்ந்து
மொபைலில் குரூப் சாட்டிங்கில் இருக்க இவனைப் பார்த்ததும் மொபைலை அணைத்துவிட்டு என்ன ரிஷி இன்னைக்கு சீக்கிரமாகவே வந்துட்ட ஆபீஸ் மீட்டிங் எல்லாம் நல்லபடியா போச்சா என்று பொதுவாக விசாரித்தார்…
பதில் ஏதும் கூறாத ரிஷி கண்கலங்க தாயின் முன்பு மண்டியிட்டு அமர்ந்த படி ம்மா... என்ன மன்னிச்சிடுங்க என்றான்
சகோதரிகள் இருவருக்கும் புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு என்ன பண்ணின எதுக்காக மன்னிக்கணும் என்று ஆச்சரியத்துடன் ஒரு சேர கேட்டனர்
உடனே ரிஷி நான் சொன்னேனு தான பவித்ரா வீட்டுக்கு போனீங்க எனக்காகத் தானே நீங்க ரெண்டு பேரும் அவமானப்பட்டுட்டு திரும்பி வந்தீங்க என்று நேரடியாக கேட்க இருவருமே அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
சுதாரித்துக்கொண்ட மேனகா தான் அது எப்பவோ முடிந்து போன விஷயம்...நாங்க அதை மறந்துட்டோம்...ஆமா.. இதை யாரு உனக்கு சொன்னது என்று கேட்டவரிடம்
பவித்ரா தான் சொன்னா...ம்மா
என்றான்.
என்ன…? அந்த பொண்ணு சொல்லுச்சா என்று ஆச்சரியத்துடன் கேட்டார் மேனகா.
பவித்ராவை ஏதேர்ச்சையாக சந்திக்க நேர்ந்தது என்று கூறியவன் அவர்களின் உரையாடலை ரத்தின சுருக்கமாகக் கூறி முடித்தான்.
பிறகு நான் முடிவு பண்ணிட்டேன் அம்மா... உங்கள அவமானப் படுத்தியவங்களை நான் சும்மா விடப்போவதில்லை உங்ககிட்ட வந்து அவங்க மன்னிப்பு கேட்கணும் கண்டிப்பா கேட்க வைப்பேன்..
நான் தப்பு பண்ணிட்டேன் மா அன்னைக்கு உங்களோட நானும் வந்திருக்கணும் நான் வராதது தான் இத்தனை பிரச்சினைக்கு காரணம் ஆனாலும் அவங்க பண்ணது சரின்னு என்னால ஒத்துக்கவே முடியாது கண்டிப்பா உங்களுக்கு பதில் சொல்லியே தீரணும் என்று பற்களை கடித்துக் கொண்டு கோபமாகப் பேசியவனை பார்த்து சிரித்த மேனகா...
நானே சும்மா இருக்கேன் நீ எதுக்காக டென்ஷன் ஆகுற என்ற தாயை ஆச்சரியத்துடன் பார்த்த ரிஷி
எப்படிமா சாதாரணமாக ஒருத்தர் உங்களை எதாவது சொன்னாலே அவங்களை நீங்க சும்மா விட மாட்டிங்க பவித்ரா குடும்பம் உங்களை அவமானப்படுத்தியும் நீங்க எப்படி இவ்ளோ நாள் சும்மா இருக்கீங்க…
அது ஒண்ணும் இல்ல ரிஷி யாரோவா இருந்தா கண்டிப்பா பதிலுக்கு பதில் குடுக்கலாம் ஆனா இவங்க எனக்கு சம்மந்தி ஆக போறவங்க அவங்க பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்க போற அப்படி இருக்கும்போது
அவங்களை எப்படி நான் எதிரியாக பார்க்க முடியும் என் பையன் ஒரு பொண்ண ஆசைப்படும் போது அவங்ககிட்ட எல்லாவகையிலும் இறங்கி போறது ஒரு அம்மாவா எனக்கு சரினு தோணுச்சு அதான் விட்டுட்டேன்...அதான் இந்த விஷயத்துல நான் பெருசா எந்த ரியாக்ட்- டும் பண்ணல என்று கூறியவர்…
சரி இப்போ தான் அந்த பொண்ணு அவ மனசுல இருக்குறத உன்கிட்ட சொல்லிட்டா உனக்கும் அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு அப்புறம் என்ன மறுபடியும் நானும் உன் சித்தியும் போய் முறைப்படிப் பொண்ணு கேட்கட்டுமா என்று ரிஷியின் மனதை ஆளும் பார்த்தார் மேனகா.
இல்லம்மா இனி நீங்க அவங்கள தேடிப்போக வேண்டாம்... உண்மையிலேயே பவித்ரா என்னை காதலிக்கிறதா இருந்தா அவங்களே நம்மளை தேடி வரட்டும்
அதுக்கு முன்னாடி அன்னைக்கு நடந்ததற்காக அவங்க உங்ககிட்ட மனப்பூர்வமா மன்னிப்பு கேட்கணும் மத்ததெல்லாம் அதுக்கப்புறம் தான் யோசிக்கணும்…
என்ன ரிஷி ஒண்ணுமே இல்லாத காரணத்துக்காக அந்த பொண்ண வேணான்னு சொல்லறது தப்பில்லையா அவங்க மன்னிப்பு கேட்கிறது எல்லாம் சாதாரணமா நடக்கிற விஷயம் இல்லை அப்படியே அவங்க மன்னிப்பு கேட்டு நம்ம வீட்டுக்கு வந்து அவங்க பொண்ணுக்காக பேசி அப்புறம் கல்யாணம் பண்ணனும்னா
கண்டிப்பா இந்த ஜென்மத்துல எதுவுமே நடக்காது...
எதுக்குடா தேவையில்லாத பிரச்சனை எனக்கும் சித்திக்கும் எந்த பிரச்சினையும் இல்லை நாங்கள் மறுபடியும் போறோம் பொண்ணு வீட்ல பேசுறேன்...கல்யாணத்துக்கு ஒரு நல்ல நாளா பாத்து குறிச்சிட்டு வர்றோம்...சிம்பிள் விஷயம் அதை ஏன் காம்ளிகேட் ஆக்கும் சொல்லு….
மொதல்ல நாங்க யாருன்னு தெரியாது அதனால அவங்க அப்படி நடந்து இருக்கலாம் ஆனா இப்போ தான் நாங்க யாருன்னு தெரியும்ல... அதனால இனி அந்த மாதிரி நடக்க மாட்டாங்க …
அதனால நாளைக்கே நாங்க போய் பேசி கல்யாணத்த முடிவு பண்ணறோம்…
இல்லம்மா கண்டிப்பாக அது சரிவராது என் சார்பா நீங்க ஒரு முறை போய் பேசி அவமானப்பட்டு திரும்பி வந்துட்டிங்க
இனி அவங்க பொண்ணு சார்பா அவங்க தான் நம்மள தேடி வரணும் அதுக்கு அப்புறமா கல்யாணம் பண்றது பத்தி யோசிக்கலாம்
ஆனா அம்மா ஒருவேளை நான் பவித்ராவை கல்யாணம் பண்ணிக்கிட்டா பழசெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு அவளை கார்னர் பண்ண மாட்டீங்களே எனக்கு அது கொஞ்சம் பயமா இருக்கு அதனாலதான் இப்பவே எல்லாத்தையும் பேசி சரி பண்ணனும்னு நினைக்கிறேன் எதுவா இருந்தாலும் அன்னைக்கு நடந்ததுக்கு முழுக்க முழுக்க நான்தான் காரணமா நீங்க என்னை மன்னிக்கணும் என்ற ரிஷியிடம்
ரிஷி நீ அம்மாவ புரிஞ்சுகிட்டது இவ்வளவுதானா நான் அன்னைக்கு நடந்ததையே மனசுல வச்சிக்கலனு சொல்றேன் அப்படி இருக்கும்போது நான் எப்படி பவித்ராவை கார்னர் பண்ணுவேன்
அதை மனசுல வெச்சு இருந்தா மறுபடியும் அவங்க வீட்டிற்கு போய் பேசறேன்னு நான் சொல்லுவேனா சொல்லு உனக்கு பயமே வேண்டாம் நீ சொன்னது போலவே இருக்கட்டும் அவங்களா தேடி வந்து நம்ம கிட்ட பேசட்டும் அதுக்கப்புறமா நாம கல்யாணத்தை பத்தி யோசிப்போம்
உனக்கும் அதிகமா வயசு ஆகல அந்த பொண்ணுக்கும் அப்படிதான் அதனால பொறுமையாவே காத்திருப்போம் அவங்களா தேடி வந்து நம்ம கிட்ட பேசினா உனக்கும் பவித்ராவுக்கும் கல்யாணம் பண்ணலாம் இல்லையா அவங்க வசதிக்கு ஏத்த மாதிரி அவங்க வேற மாப்பிள்ளை பார்த்துட்டு போகட்டும் இப்போ ஒகேவா … என்று மகனைப் பார்த்து கேட்க அவனும் சந்தோஷமாக
டபுள் ஒகே... ஆனா அவங்க கண்டிப்பா தேடி வருவாங்க அம்மா...எனக்கு தெரியும் ஏன்னா பவி என்னை அவ்ளோ லவ் பண்ணறா...ஆனாலும் அவங்க உங்க கிட்ட சாரி கேக்கறவரை நோ பவித்ரா...நோ கல்யாணம்...
என்று தாயை கட்டிப் பிடித்து விட்டு சென்றான்.
அவன் சென்ற பிறகு அதுவரை இருந்து சிரிப்பைத் தொலைத்தார் மேனகா கோபத்தோடு முகத்தை வைத்து கொண்டு கையிலிருந்த மொபைல் போனை தூக்கி வீசினார்
அவளின் கோபத்தை அறிந்த ராதாவும் அக்கா அது தான் எல்லாமே நாம நினைக்கிற படி நடக்குதே அப்புறம் ஏன் இவ்ளோ கோபம் உனக்கு என்று கேட்க
நீ சொல்லறதும் சரி தான் ராதா அன்னைக்கு நடந்த அவமானத்தை வந்து அவன் கிட்ட சொல்லி இருந்தா உடனே போய் அங்க தாம் தூம் குதிச்சிட்டு அப்படியே விட்டு இருப்பான்
ஆனா இப்போ அவங்களா தேடி வந்து நம்ம கிட்ட மன்னிப்பு கேட்கணும்ங்கற அளவுக்கு யோசிச்சு வைச்சிருக்கான்... அது போதும் எனக்கு ஆனாலும் என்னதான் யோசிச்சு பார்த்தாலும் அந்த பவித்ரா இந்த வீட்டுக்கு மருமகளாக வர்றதை என்னால ஏத்துக்கவே முடியல…
அவ நம்ம பிள்ளைய பிச்சைக்காரனோட சேர்த்து வச்சி பேசியிருக்கா அந்த மாதிரி ஒருத்திய எப்படி நான் என் வீட்டுக்குள்ள விடறது…
அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவ சொன்ன வார்த்தை தான் என் காதுல விழுந்துகிட்டே இருக்கும் என்று கோபமாக கூற
அக்கா ப்ளீஸ் கோபப்பட்டு எல்லாத்தையும் கெடுத்துடாத
அவ முதல்ல இந்த வீட்டுக்கு வரட்டும் அப்புறமா அவ பேசினதுக்கு வட்டியும் முதலுமா நாம திருப்பி குடுத்துட்டு அவ வீட்டுக்கே தொறத்தி விடலாம் அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இரு அக்கா என்று ராதா மேனகாவை சமாதானப்படுத்தினார்
இவர்களின் சூது எதுவும் அறியாத பவித்ரா ரிஷியை மறக்க முடியாமல் தினம்தினம் தவிக்க ஆரம்பித்தாள் உணவை பாதியாக குறைத்துக் கொண்டவள் தூக்கமின்றி இரவு முழுவதும் அழுது தலையணையை ஈரமாக்கினாள்
ரிஷியை ஒவ்வொரு முறையும் சந்திக்க சென்றாலோ இல்லை பேச முயன்றாலோ அவன் இவளை முற்றிலுமாக புறக்கணிக்க அந்த புறக்கணிப்பு அவளை மேலும் மேலும் அவன் பால் ஈர்த்தது.
இங்கு பவித்ராவின் நிலையறிந்த பெற்றோர்கள் இருவருமே அவளுக்கு எவ்வளவோ சமாதானம் சொல்லியும் எடுபடவில்லை. அவர்கள் மிகப்பெரிய பணக்காரர்கள் அவர்களுக்கும் நமக்கும் என்றுமே ஒத்துவராது அவனை மறந்து விடு என்று என்ன கூறினாலும் பவித்ராவின் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
அவன் பணக்காரன் என்று தெரிவதற்கு முன்பே தன் மனதை பறிகொடுத்து விட்டேன் அவனும் தன்னுடைய நிலையை அறிந்து தானே அவர்களின் பெற்றோரை தங்கள் வீட்டிற்கு பெண் கேட்டு அனுப்பி வைத்தான் என்று அவளின் ஒரு மனம் அவளிடம் கூறுவதை அவளும் ஏற்றுக்கொள்கிறாள்..
கடைசியில் பெற்றோர்கள் இருவரும் ஒருசேர முடிவு ஒன்றை எடுத்தனர் அது ரிஷியை நேரில் சந்தித்து பவித்ராவை பற்றி பேசுவது என அதன் பிறகு இருவருமே ரிஷியின் அலுவலகம் சென்று அவனை சந்திப்பதற்காக காத்திருக்க அவன் இவர்களிடம் சம்பிரதாயமாக பேசி விட்டு சென்று விட்டான்.
அது இவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்
அதன் பிறகு மீண்டும் மீண்டும் ரிஷியை சந்திக்க முயற்சி செய்து தோற்றுப் போயினர்…
இங்கு பவித்ராவை ஒவ்வொரு முறையும் ரிஷியின் அலைபேசிக்கு
முயற்சி செய்ய ஒருமுறை கூட அவளின் அழைப்பே ரிஷிகேஷ் ஏற்றுக்கொள்ளவே இல்லை
இதனால் அவளை நேரில் சந்திக்கலாம் என்று தனது தந்தையிடம் பர்மிஷன் கேட்க தந்தையும் சரி என்று அவளை அழைத்துக் கொண்டு அவனின் அலுவலகம் சென்றார்
அங்கு இவர்களை கண்ட ரிஷி நாராயணன் மட்டும் வந்திருந்தால் கண்டும் காணாமல் சென்று இருப்பான் அழுது கலங்கிய விழிகளுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் நின்று கொண்டிருந்த பவித்ராவை பார்த்ததும் அவனால் அப்படி கடந்து செல்ல முடியவில்லை
சற்று மனமிரங்கி அவர்களுடன் பேச முன்வந்தான் பவியோ அவனைக் கண்டதும் மௌனமாக அழ ஆரம்பித்துவிட்டாள்
அவளின் நிலையை அறிந்தவனுக்கு மனது மிகுந்த வேதனையை கொடுத்தது ஆனாலும் தாய்க்கு நியாயம் வேண்டுமே என்று நினைத்துக்கொண்டு பொறுமை காத்தான்.
பவித்ராவின் தந்தையோ ரிஷியின் கைகளைப்பிடித்து இதை உங்க காலா நினைச்சு கெஞ்சி கேட்கிறேன் தயவு செஞ்சு என்னோட மகளுக்கு கொஞ்சம் புத்தி சொல்லுங்க உங்க வாயால அவளுக்கு சொன்னா தான் புரியும்.
நீங்க மிகப் பெரிய பணக்கார குடும்பம் நாங்க நடுத்தர வர்க்கமா எங்களுக்கும் உங்களுக்கும் என்னைக்குமே ஒத்து வராது அது எனக்கும் என் மனைவிக்கும் ரொம்ப நல்லா புரியுது
ஆனா பவித்ராவுக்கு புரியல நீங்க பணக்காரன்னு தெரியறதுக்கு முன்னாடியே உங்க மேல ஆசை வச்சுட்டாளாம் எங்களோட அந்தஸ்து தெரிஞ்சுதான் நீங்க உங்க குடும்பத்தாரை எங்க வீட்டுக்குப் பொண்ணு கேட்டு அனுப்பி வைச்சிங்கனு எங்ககிட்ட பதிலுக்கு பதில் வாதாடறா
அதனால உங்க வாயால அவன் முகத்தை பார்த்து சொல்லிருங்க உனக்கும் எங்களுக்கும் ஒத்துவராது பவித்ரா இதோட விட்டுடுனு அதுவும் இல்லாம நாங்க அன்னைக்கு உங்க அம்மாகிட்ட அந்தளவு நடந்தது அப்புறமா எங்க பொண்ணை அங்க அனுப்பி வைக்கிறது எங்களுக்கும் கொஞ்சம் பயமா இருக்கு அதனால இதோடு விட்டுவிடலாம் என்று ரிஷியிடம் கெஞ்ச அவனும் அவரிடமிருந்து கைகளை உதவி கொண்டவன்…
பவித்ரா ரொம்ப சரியா என்னை புரிஞ்சு வச்சிருக்கறா ஆனா அதுல ஒரு பர்சன்டேஜ் கூட நீங்க எங்களை புரிஞ்சுக்கலனு நினைக்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அங்கிள்
உங்களுக்காக இல்லனாலும் பவித்ராவோட இந்த புரிதலுக்காகவாவது நான் அவளைத் திருமணம் செஞ்சிக்கனும்னு நினைக்கிறேன்
உண்மையிலேயே உங்க பொண்ணு சந்தோஷமா இருக்கணும்னு நீங்க நினைச்சா நீங்களும் ஆண்டியும் என் அம்மா கிட்ட வந்து உங்க பொண்ணுக்காக பேசுங்க
கண்டிப்பா எங்க அம்மா கல்யாணத்துக்கு அப்புறம் பவித்ராவை எதுவுமே செய்ய மாட்டாங்க அதுக்கு நான் கேரண்டி கொடுக்கிறேன்
என் மேல நம்பிக்கை இருந்தா உங்க பொண்ணு மேல அக்கறை இருந்தா நீங்க தாராளமா என் வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட கல்யாண விஷயத்தை பத்தி பேசுங்க இதுக்கு அப்புறம் இதை பத்தி உங்ககிட்ட நான் பேச விரும்பல உங்க பொண்ணோட சந்தோஷம் இப்போ உங்க கையில இருக்கு என்று கூறியவன். அங்கிருந்து சென்றுவிட்டான்.
தொடரும்
வயசு பொண்ணு ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிருந்தா யாருக்கு நஷ்டம் எங்களுக்கு தானே என்று கோபப்பட்டவர்... ...என் பிள்ளை வாழ்க்கை தப்பிச்சது ராஜாத்தி நீ புண்ணியம் பண்ணிருக்க இல்லனா இவனை கட்டிட்டு தினம் தினம் கஷ்டப் பட்டுருப்ப இப்படி பட்டவனை கட்டிகிட்டா கல்யாணத்துக்கு அப்புறம் கூட எங்கேயுமே அவனோட தனியா போக முடியாது போல பாதிலேயே விட்டுட்டு வந்திடுவான் அப்புறமா தனியா தான் என் பொண்ணு வீடு வரனும் நல்லா வளத்திருக்கீங்க பையனை என்று
அவரின் முன்பே கௌசிக்கை கரித்துக் கொட்டினார்.
மேகலா பேசியதை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கௌசிக்கின் பெற்றோர்கள் எதுவும் பேசாமல்
அனைவரையும் பார்த்து கைகூப்பி விட்டு மௌனமாக வெளியேறினர்.
அவர்கள் சென்றதும் மேகலாவும் நாராயணனும் பவித்ராவிடம் வந்தவர்கள் பவித்ரா எங்கள மன்னிச்சிடுங்க நாங்கதான் அவசரப்பட்டு கல்யாணம் அது இதுன்னு உன் மனசுல தேவையில்லாமல் ஆசையை வளர்த்தி விட்டுட்டோம்
அவன் உன்னை பார்-க்கு கூட்டிட்டு போன உடனே நீ எங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்லி இருக்கலாம் இல்லன்னா ஏதாவது ஒரு கால் டாக்சி பிடித்து வீட்டுக்கு வந்து இருக்கலாம் இல்ல
ஏன்மா அங்க பொறுமையாக உட்கார்ந்துட்டு இருந்த என்று அவளிடம் கேட்க
அவள் தயங்கியபடி அம்மா நீங்க தப்பா பேசுற அளவுக்கு கௌசிக் கெட்டவன்லாம் இல்லமா ...ஆக்சுலி அவர் ரொம்ப நல்லவர்
நான் தான் அவருக்கு ஏத்த பொண்ணு இல்லம்மா… எனக்கு என்னவோ பழியை அவர் ஏத்துகிட்டு என்னை காப்பாத்தி விடற மாதிரி தோணுது இதுக்கப்புறமும் நான் மௌனமா இருந்தேன்னா நான் பொண்ணே இல்லமா என்று கூற
என்ன பவித்ரா என்ன என்னமோ சொல்லிட்டு இருக்கற அப்போ நீ ஏதாவது தப்பு செஞ்சியா கவலையாக கேட்க
ம்ம்... தப்பா என்னன்னு தெரியலம்மா ஆனா கௌசிக்கை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்ம்மா…
அவங்க அப்பாகிட்ட பார்-க்கு கூட்டிட்டு போனேனு பொய் சொல்லி இருக்கறாரு அம்மா
அவருக்கு குடிக்கிற பழக்கம் இல்லை
என்னை ஒரு ஸ்டார் ஹோட்டல்லுக்கு தான் கூட்டிட்டு போனாரு அங்க ஒரு ஹால்ல அவர் பிரண்ட்ஸ்க்கு ட்ரிங்க்ஸ் பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருக்காரு
இவரு டிரிங்க்ஸ் எல்லாம் எடுத்துக்கல...ஆனா அவங்களோட நல்லா ஆடிப்பாடி என்ஜாய் பண்ணினாரு என்னையும் கூட சேர்த்து கிட்டாரு எனக்கு இது பிடிக்கல
என்னோட செல்பி எடுக்கும்போது மேல கைபட்டதுன்னு நான்தான் ஓவரா ரியாக்ட் பண்ணிட்டேன்..
அவர் கோபத்தில் கத்த பதிலுக்கு நான் கத்த பேச்சுவார்த்தை வாக்குவாதமா மாறி கடைசியில கோவத்துல என்னை விட்டுட்டு வந்துட்டாரு அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு வந்து தேடி இருக்காரு ஆனா...என்று தயங்கியவள் பிறகு
உண்மையை சொல்லப்போனா கௌசிக்கை கல்யாணம் பண்ற அளவுக்கு எனக்கு பிடிக்கல தனிப்பட்ட மனுஷனா ரொம்ப நல்லவரு ஆனா கல்யாணம்னு வரும்போது
என்னால அவரை ஏத்துக்க முடியல அதுக்கு காரணம் என் மனசுல வேற ஒருத்தர் இருக்காருமா என்று அவள் மனதில் இருப்பதை பட்டென்று போட்டு உடைத்தாள்.
என்னடி பவித்ரா என்னென்னமோ உளர்ற... அப்படின்னா இன்னிக்கு கௌசிக் உன்னை கூட்டிட்டு போகாம இருந்தாலும் இந்த கல்யாணத்தை நிறுத்தி இருப்ப அப்படித்தானே என்று கண்களை உருட்டியபடி மேகலா பவித்ராவை பார்த்து கேட்க
மௌனமாக தலைகுனிந்த பவித்ரா ஆமாம் என்று தலை அசைத்தாள்
உடனே அவளை அடிக்க பாய்ந்தவரை இடையில் புகுந்த தடுத்த நாராயணன் மேகலா பொறுமையாய் இரு பொண்ணு அவ மனசுல இருக்கறதை நம்ம கிட்ட பேசுறதுக்கு நாம அவளுக்கு சந்தர்ப்பமே கொடுக்காம நாமளா எல்லாத்தையும் முடிவு பண்ணினோம் இப்போ அவளை குற்றம் சொல்லியோ அடிச்சோ என்ன பிரயோஜனம் சொல்லு பொறுமையா விசாரிக்கலாம் என்றவர் பவித்ராவின் அருகில் வந்து
சரி சொல்லுமா உன் மனசுல இருக்கற அந்த பையன் யாரு...கூட படிச்ச பையனா எப்படி பழக்கம் காதலுக்கு நாங்க எதிரிகள் கிடையாது எங்களுக்கு உன்னோட சந்தோஷம் தான் முக்கியம் அதுக்கு முன்னாடி எங்களுக்கு வேற ஒன்னும் தேவையில்ல... யாருன்னு சொல்லு
விசாரிப்போம் எங்களுக்கு திருப்தின்னா உடனே பேசி கல்யாணம் பண்ணி வைக்கிறோம்..
ஒருவேளை எங்களுக்கு பிடிக்காமல் இருந்தாலோ இல்ல விசாரிக்கற இடத்தில திருப்தியான பதில் வரலனாலோ இந்த காதல் கத்திரிக்காய் எல்லாத்தையும் மூட்டை கட்டி வைச்சிட்டு மறுபேச்சு பேசாமல் நாங்க பார்க்கிற பையனை கல்யாணம் பண்ணிக்கணும்...
என்ற கண்டிப்புடன் பச்சைக்கொடி காட்டினர்.
மேகலா இடையில் புகுந்து அதான் அப்பா கேட்கறாங்கல்ல வாயைத் திறந்து பதில் சொல்லு பவித்ரா வாயில் என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கே என்று கேட்டார்
அவருக்குப் பின்புறமாக இருந்த வெங்கட்டோ அன்று கோவிலில் பார்த்தோமே அவரா என்று பவித்ராவிடம் ஜாடையாக கேட்டுக்கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்து முறைத்த பவித்ராவை எதுக்குடி அவனைப் பார்த்து முறைக்கிற என்று அடிக்க பாய்ந்த மேகலாவை தடுத்த நாராயணன் மேகலா கொஞ்சம் உள்ள போ அவகிட்ட நான் பேசிகிட்டு இருக்கேன்ல இப்படி பக்கத்துல இருந்து அவளை திட்டிகிட்டு இருந்தா பொண்ணு எப்படி மனசு விட்டு பேசுவா நீ இப்படி கடுமையாக நடந்துக்கறதால தான் அவ பயந்து எதையும் நம்ம கிட்ட சொல்லல... நீ சொல்லு பவி அப்பா நான் இருக்கறேன் என்று கூறவும்
கோபமாக அங்கிருந்து நகர்ந்த மேனகாவின் கையைப் பிடித்து தடுத்த பவித்ரா...ம்மா...சாரி ம்மா...நா வேணும்னு எதையும் செய்யல… அதுவா நடக்குது என் கூட இருங்கம்மா ப்ளீஸ் ... என்று மகள் கூறவும்
அதுவரை மகள் மீது இருந்த அத்தனை கோபத்தையும் மறந்த மேகலா பவியின் அருகில் அமர்ந்து அவளை தனது நெஞ்சினில் சாய்த்துக்கொண்டவள் ஆதுரமாக அவளின் தலையை தடவிக் கொடுக்க ஆரம்பித்தார் பவித்ராவும் மெதுவாக சொல்ல ஆரம்பித்தாள்.
நாம் முதன் முதலில கௌசிக் என்னை பார்க்க வந்தாரு இல்லையா அன்னைக்குதான் கௌசிக்கை பாக்குறது ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி தான் ரிஷியை பார்த்தேன் ப்பா...
அப்போ எனக்கு அவர் பேர் கூட தெரியாது நீங்க எனக்காக பார்த்த மாப்பிள்ளைனு நினைச்சு தான் அவரை பார்த்தேன்.
வெங்கட்டும் அவர்தான் மாப்பிள்ளைனு உறுதியா சொன்னாதால எனக்கு சந்தேகமே வரல…
அவரு பக்கத்துல உங்கள மாதிரி மிடில் ஏஜ்ல ஒரு கப்பிள் நின்னுகிட்டு இருந்தாங்க அது அவரோட அம்மா அப்பான்னு தப்பா நினைச்சு அவரு முன்னாடி போய் நின்னு அவர்கிட்ட எனக்கு உங்கள பிடிச்சிருக்கு ன்னு சொல்லிட்டோம்... என்று கூற பெற்றோர் இப்பொழுது வெங்கட்டை முறைக்க தொடங்கினர்.
மேகலா வெங்கட்டை திட்ட ஆரம்பித்தார் அவதான் மாப்பிள்ளை போட்டோ பாக்கல நீ பார்த்த இல்லடா ஆள் மாறி பாக்கற அளவுக்கா கண்ணு மங்கி போச்சு வேற யாரோ ஒருத்தனை போய் மாப்பிள்ளைனு இவளுக்கு காமிச்சி இருக்க என்று திட்டித் தீர்த்தவர் பிறகு நாராயணனை பார்த்து
எல்லாம் உங்களால வந்ததுங்க ஒன்னு பொண்ணு இருந்த கூட்டிட்டு போய் இருக்கணும் அப்படி இல்லையாம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கணும் ரெண்டும் இல்லாம நல்லா பண்ணி வெச்சிருக்கீங்க வேலை என்று கூற நாராயணனும் அவளை கண்களாலே அடக்கினார் பிறகு பவித்ராவை சொல் என்பது போல் ஜாடை செய்ய அவளோ மீண்டும் தொடர்ந்தாள்.
பாத்ததுமே அந்த முகம் என் மனசுல அப்படியே பதிஞ்சிருச்சி அப்பா... நீங்க அதுக்கப்புறம் வந்து என்னை கூட்டிட்டு போய் கௌசிக்கை காமிச்சிங்க ஆனா கௌசிக் முகம் என் மனசில பதியவே இல்லை ஆனா அவங்க எல்லாருக்கும் என்னை பிடிச்சு போய் அன்னைக்கே ஒரு இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்தை பண்ணிட்டு போய்ட்டாங்க இதுதான் விதினு நினைச்சி மனசை சமாதானப் படுத்திக்கிட்டேன்.
ஆனா முடியலப்பா
கண்ணை முடினாலே ரிஷியோட முகம் தான் ஞாபகத்துக்கு வந்தது அவரை மறக்க முடியாமல் நான் கஷ்டப்பட்டு இருக்கும் போது தான் ஒரு நாள் கோவில்ல வந்து அவரோட விசிட்டிங் கார்டை எனக்கு கொடுத்துட்டு போனாரு
அவருக்கு என்னை பிடிச்சிருக்கறதாவும்...எனக்கும் பிடிச்சிருந்தா கூப்பிட்டு சொல்லு உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்னு சொல்லிட்டு போயிட்டாரு அன்னைக்கு தான் எனக்கு அவர் பேரு கூட தெரியும் அவர் முழுபேரு ரிஷிகேஷ்பா...
எனக்கு ரொம்ப சந்தோஷம்... ஆனா உங்க கிட்ட சொல்ல பயம் அவர் யாரு என்ன எதுவுமே தெரியாது எப்படி திடுதிப்புனு வந்து உங்ககிட்ட சொல்றது அதனால கௌசிக் கிட்ட இத பத்தி சொல்லி அவர் வாயாலேயே என்ன வேணாம்னு சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்தனும்
அதுக்கப்புறமா ரிஷி பத்தி உங்ககிட்ட சொல்லலாம்னு நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்... அப்பகூட நான் ரிஷி கிட்ட என் மனசுல இருந்தது சொல்லல அப்பா உங்க சம்மதம் கேட்டு அதுக்கப்புறம்தான் ரிஷிக்கு என் சம்மதத்தை சொல்லனும்னு நினைச்சேன் என்ன தப்பா நினைக்காதீங்க ப்பா... என்று தாயின் தோளில் படுத்துக் கிடந்து அழ ஆரம்பித்தாள் தாய்க்கோ தனது மகளின் நிலையை புரிந்தவர் அழாதே என்பது போல் அவளின் கண்ணீரை துடைத்துக் விட்டார்...
கௌசிக் கிட்ட எப்படி பேச்சை ஆரம்பிக்கறதுன்னு யோசிச்சிட்டு இருக்கும் போதுதான் அவர் பிரண்ட்ஸ் இன்வெட் பண்ணனும்னு என்ன கூட்டிட்டு போனாரு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது அவர் கிட்ட தனியா எல்லாத்தையும் சொல்லலாம்னு
ஆனா அங்க பிரெண்ட்ஸ்க்கு ட்ரிங்க்ஸ் பார்ட்டி முடிஞ்சதும் கௌசிக் என்னோட க்ருப் போட்டோ எடுத்தது செல்ஃபி எடுத்தது எனக்கு புடிக்காம அவரோட சண்டை போட கோவத்துல அவர் என்னை அங்கேயே விட்டுட்டு போயிட்டாரு
என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கும் போது எதேச்சையாக அங்கு வந்து ரிஷியை பார்த்தது எதையும் யோசிக்காமல் அவர் பின்னாடி போயிட்டேன்... அவர் ஏதோ ஆபீஸ் மீட்டிங்காக வந்திருக்காரு... அவரை நான் தனியா சந்திச்சு பேசதான் அவர் வர்ற இடத்தை தெரிஞ்சுக்கிட்டு நான் முன்னாடியே போய் வெயிட் பண்றதா தப்பா புரிஞ்சுகிட்டு என்னை அந்த ஹால் வாசலில் நிற்க வெச்சிட்டு மீட்டிங் அட்டென்ட் பண்ணு போயிட்டாரு
அந்த கேப்ல கௌசிக் என்னை தேடிவந்திருக்காரு... என்னை காணலனதும் என்னை தேடிகிட்டே வீட்டுக்கு திரும்பி வந்துட்டார் போல…
ரிஷி மீட்டிங் முடிஞ்சி வெளிய வந்ததும் அவர் கிட்ட ஹெல்ப் கேட்டேன்…
அப்போ தான் அவருக்கே தெரிஞ்சது நான் அவரைத் தேடிப் போகலை வேற ஒருத்தரோட வந்த விஷயம்...என்னனு என்கிட்ட கேட்கவும்
நான் எல்லா விஷயத்தையும் சொன்னேன் உடனே புரிஞ்சுகிட்டு என்னை நம்ம வீட்டுகிட்ட கூட்டிட்டு வந்து விட்டுட்டு போனாரு அப்பா என்று எல்லாவற்றையும் கூறி முடிக்கவும்
மேகலா நாராயணன் தம்பதியினர் ஆச்சரியமாக என்ன …?அந்த பையனா உன்னை கொண்டு வந்து விட்டது...நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கலாம் இல்ல
என் பொண்ணுக்கு எவ்வளவு பெரிய உதவி பண்ணிருக்காரு அதுவுமில்லாம என் பொண்ணு மனசுல இடம் பிடிச்சவற நாங்களும் பார்த்திருப்போம்...அப்படியே ஒரு நன்றியும் சொல்லிருப்போம்ல.
என்று மேகலா சொல்ல
முகத்தை சுளித்துக் கொண்டு மீண்டும் அழ ஆரம்பித்த பவித்ரா அதுல தான் ஒரு பிரச்சினை அவரு வேற யாரும்மில்ல அன்னைக்கி நம்ம வீட்டுக்கு வந்தாங்கல்ல ஒரு பணக்கார குடும்பம் அவரோட பையன் தான் …
அவர் சொல்லி தான் அவங்க இங்க சம்மதம் பேச வந்து இருக்காங்க ஆனா அது தெரியாம நாம எல்லாருமே அவங்க திமிர்தனத்தை பார்த்து அவர்களை அவமானப்படுத்தி வெளியே அனுப்பிட்டோம்...இந்த விஷயம் ஹோட்டல்ல வச்சி அவர் சொல்லிதான் எனக்கே தெரியும்...ஆனா எதையும் மறைக்காம அன்னைக்கு நடந்த எல்லாத்தையும் ஒப்பனா அவர் கிட்ட சொல்லிட்டேன்
அது வரை என்னோட நல்லா பேசிட்டு இருந்தவரு நான் சொன்னதை கேட்ட பிறகு எதுவுமே பேசாமல் என்னை வீட்டுகிட்ட இறக்கி விட்டுட்டு போயிட்டாரு
இனி நீங்களே போய் என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டா கூட அவங்க குடும்பத்தை அவமானப் படுத்தினதுக்காக என்னை கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்க மாட்டாரு என்று கதறி கதறி அழ ஆரம்பித்த மகளை சமாதானப்படுத்த வழிதெரியாமல் பெற்றோர் இருவரும் முழிக்க ஆரம்பித்தனர்.
பவித்ராவை இருக்கிறது ரிஷி நேராக அவன் வீடு வந்தவன் வீட்டிற்குள் நுழையும் பொழுதே தாய் எங்கே என்றுதான் விசாரித்தான் அவர் ருமில் இருப்பதை அறிந்து கொண்டவன் நேராக மேனகாவை தேடிச் சென்றான்.
அவர் தங்கையுடன் சேர்ந்து
மொபைலில் குரூப் சாட்டிங்கில் இருக்க இவனைப் பார்த்ததும் மொபைலை அணைத்துவிட்டு என்ன ரிஷி இன்னைக்கு சீக்கிரமாகவே வந்துட்ட ஆபீஸ் மீட்டிங் எல்லாம் நல்லபடியா போச்சா என்று பொதுவாக விசாரித்தார்…
பதில் ஏதும் கூறாத ரிஷி கண்கலங்க தாயின் முன்பு மண்டியிட்டு அமர்ந்த படி ம்மா... என்ன மன்னிச்சிடுங்க என்றான்
சகோதரிகள் இருவருக்கும் புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு என்ன பண்ணின எதுக்காக மன்னிக்கணும் என்று ஆச்சரியத்துடன் ஒரு சேர கேட்டனர்
உடனே ரிஷி நான் சொன்னேனு தான பவித்ரா வீட்டுக்கு போனீங்க எனக்காகத் தானே நீங்க ரெண்டு பேரும் அவமானப்பட்டுட்டு திரும்பி வந்தீங்க என்று நேரடியாக கேட்க இருவருமே அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
சுதாரித்துக்கொண்ட மேனகா தான் அது எப்பவோ முடிந்து போன விஷயம்...நாங்க அதை மறந்துட்டோம்...ஆமா.. இதை யாரு உனக்கு சொன்னது என்று கேட்டவரிடம்
பவித்ரா தான் சொன்னா...ம்மா
என்றான்.
என்ன…? அந்த பொண்ணு சொல்லுச்சா என்று ஆச்சரியத்துடன் கேட்டார் மேனகா.
பவித்ராவை ஏதேர்ச்சையாக சந்திக்க நேர்ந்தது என்று கூறியவன் அவர்களின் உரையாடலை ரத்தின சுருக்கமாகக் கூறி முடித்தான்.
பிறகு நான் முடிவு பண்ணிட்டேன் அம்மா... உங்கள அவமானப் படுத்தியவங்களை நான் சும்மா விடப்போவதில்லை உங்ககிட்ட வந்து அவங்க மன்னிப்பு கேட்கணும் கண்டிப்பா கேட்க வைப்பேன்..
நான் தப்பு பண்ணிட்டேன் மா அன்னைக்கு உங்களோட நானும் வந்திருக்கணும் நான் வராதது தான் இத்தனை பிரச்சினைக்கு காரணம் ஆனாலும் அவங்க பண்ணது சரின்னு என்னால ஒத்துக்கவே முடியாது கண்டிப்பா உங்களுக்கு பதில் சொல்லியே தீரணும் என்று பற்களை கடித்துக் கொண்டு கோபமாகப் பேசியவனை பார்த்து சிரித்த மேனகா...
நானே சும்மா இருக்கேன் நீ எதுக்காக டென்ஷன் ஆகுற என்ற தாயை ஆச்சரியத்துடன் பார்த்த ரிஷி
எப்படிமா சாதாரணமாக ஒருத்தர் உங்களை எதாவது சொன்னாலே அவங்களை நீங்க சும்மா விட மாட்டிங்க பவித்ரா குடும்பம் உங்களை அவமானப்படுத்தியும் நீங்க எப்படி இவ்ளோ நாள் சும்மா இருக்கீங்க…
அது ஒண்ணும் இல்ல ரிஷி யாரோவா இருந்தா கண்டிப்பா பதிலுக்கு பதில் குடுக்கலாம் ஆனா இவங்க எனக்கு சம்மந்தி ஆக போறவங்க அவங்க பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்க போற அப்படி இருக்கும்போது
அவங்களை எப்படி நான் எதிரியாக பார்க்க முடியும் என் பையன் ஒரு பொண்ண ஆசைப்படும் போது அவங்ககிட்ட எல்லாவகையிலும் இறங்கி போறது ஒரு அம்மாவா எனக்கு சரினு தோணுச்சு அதான் விட்டுட்டேன்...அதான் இந்த விஷயத்துல நான் பெருசா எந்த ரியாக்ட்- டும் பண்ணல என்று கூறியவர்…
சரி இப்போ தான் அந்த பொண்ணு அவ மனசுல இருக்குறத உன்கிட்ட சொல்லிட்டா உனக்கும் அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு அப்புறம் என்ன மறுபடியும் நானும் உன் சித்தியும் போய் முறைப்படிப் பொண்ணு கேட்கட்டுமா என்று ரிஷியின் மனதை ஆளும் பார்த்தார் மேனகா.
இல்லம்மா இனி நீங்க அவங்கள தேடிப்போக வேண்டாம்... உண்மையிலேயே பவித்ரா என்னை காதலிக்கிறதா இருந்தா அவங்களே நம்மளை தேடி வரட்டும்
அதுக்கு முன்னாடி அன்னைக்கு நடந்ததற்காக அவங்க உங்ககிட்ட மனப்பூர்வமா மன்னிப்பு கேட்கணும் மத்ததெல்லாம் அதுக்கப்புறம் தான் யோசிக்கணும்…
என்ன ரிஷி ஒண்ணுமே இல்லாத காரணத்துக்காக அந்த பொண்ண வேணான்னு சொல்லறது தப்பில்லையா அவங்க மன்னிப்பு கேட்கிறது எல்லாம் சாதாரணமா நடக்கிற விஷயம் இல்லை அப்படியே அவங்க மன்னிப்பு கேட்டு நம்ம வீட்டுக்கு வந்து அவங்க பொண்ணுக்காக பேசி அப்புறம் கல்யாணம் பண்ணனும்னா
கண்டிப்பா இந்த ஜென்மத்துல எதுவுமே நடக்காது...
எதுக்குடா தேவையில்லாத பிரச்சனை எனக்கும் சித்திக்கும் எந்த பிரச்சினையும் இல்லை நாங்கள் மறுபடியும் போறோம் பொண்ணு வீட்ல பேசுறேன்...கல்யாணத்துக்கு ஒரு நல்ல நாளா பாத்து குறிச்சிட்டு வர்றோம்...சிம்பிள் விஷயம் அதை ஏன் காம்ளிகேட் ஆக்கும் சொல்லு….
மொதல்ல நாங்க யாருன்னு தெரியாது அதனால அவங்க அப்படி நடந்து இருக்கலாம் ஆனா இப்போ தான் நாங்க யாருன்னு தெரியும்ல... அதனால இனி அந்த மாதிரி நடக்க மாட்டாங்க …
அதனால நாளைக்கே நாங்க போய் பேசி கல்யாணத்த முடிவு பண்ணறோம்…
இல்லம்மா கண்டிப்பாக அது சரிவராது என் சார்பா நீங்க ஒரு முறை போய் பேசி அவமானப்பட்டு திரும்பி வந்துட்டிங்க
இனி அவங்க பொண்ணு சார்பா அவங்க தான் நம்மள தேடி வரணும் அதுக்கு அப்புறமா கல்யாணம் பண்றது பத்தி யோசிக்கலாம்
ஆனா அம்மா ஒருவேளை நான் பவித்ராவை கல்யாணம் பண்ணிக்கிட்டா பழசெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு அவளை கார்னர் பண்ண மாட்டீங்களே எனக்கு அது கொஞ்சம் பயமா இருக்கு அதனாலதான் இப்பவே எல்லாத்தையும் பேசி சரி பண்ணனும்னு நினைக்கிறேன் எதுவா இருந்தாலும் அன்னைக்கு நடந்ததுக்கு முழுக்க முழுக்க நான்தான் காரணமா நீங்க என்னை மன்னிக்கணும் என்ற ரிஷியிடம்
ரிஷி நீ அம்மாவ புரிஞ்சுகிட்டது இவ்வளவுதானா நான் அன்னைக்கு நடந்ததையே மனசுல வச்சிக்கலனு சொல்றேன் அப்படி இருக்கும்போது நான் எப்படி பவித்ராவை கார்னர் பண்ணுவேன்
அதை மனசுல வெச்சு இருந்தா மறுபடியும் அவங்க வீட்டிற்கு போய் பேசறேன்னு நான் சொல்லுவேனா சொல்லு உனக்கு பயமே வேண்டாம் நீ சொன்னது போலவே இருக்கட்டும் அவங்களா தேடி வந்து நம்ம கிட்ட பேசட்டும் அதுக்கப்புறமா நாம கல்யாணத்தை பத்தி யோசிப்போம்
உனக்கும் அதிகமா வயசு ஆகல அந்த பொண்ணுக்கும் அப்படிதான் அதனால பொறுமையாவே காத்திருப்போம் அவங்களா தேடி வந்து நம்ம கிட்ட பேசினா உனக்கும் பவித்ராவுக்கும் கல்யாணம் பண்ணலாம் இல்லையா அவங்க வசதிக்கு ஏத்த மாதிரி அவங்க வேற மாப்பிள்ளை பார்த்துட்டு போகட்டும் இப்போ ஒகேவா … என்று மகனைப் பார்த்து கேட்க அவனும் சந்தோஷமாக
டபுள் ஒகே... ஆனா அவங்க கண்டிப்பா தேடி வருவாங்க அம்மா...எனக்கு தெரியும் ஏன்னா பவி என்னை அவ்ளோ லவ் பண்ணறா...ஆனாலும் அவங்க உங்க கிட்ட சாரி கேக்கறவரை நோ பவித்ரா...நோ கல்யாணம்...
என்று தாயை கட்டிப் பிடித்து விட்டு சென்றான்.
அவன் சென்ற பிறகு அதுவரை இருந்து சிரிப்பைத் தொலைத்தார் மேனகா கோபத்தோடு முகத்தை வைத்து கொண்டு கையிலிருந்த மொபைல் போனை தூக்கி வீசினார்
அவளின் கோபத்தை அறிந்த ராதாவும் அக்கா அது தான் எல்லாமே நாம நினைக்கிற படி நடக்குதே அப்புறம் ஏன் இவ்ளோ கோபம் உனக்கு என்று கேட்க
நீ சொல்லறதும் சரி தான் ராதா அன்னைக்கு நடந்த அவமானத்தை வந்து அவன் கிட்ட சொல்லி இருந்தா உடனே போய் அங்க தாம் தூம் குதிச்சிட்டு அப்படியே விட்டு இருப்பான்
ஆனா இப்போ அவங்களா தேடி வந்து நம்ம கிட்ட மன்னிப்பு கேட்கணும்ங்கற அளவுக்கு யோசிச்சு வைச்சிருக்கான்... அது போதும் எனக்கு ஆனாலும் என்னதான் யோசிச்சு பார்த்தாலும் அந்த பவித்ரா இந்த வீட்டுக்கு மருமகளாக வர்றதை என்னால ஏத்துக்கவே முடியல…
அவ நம்ம பிள்ளைய பிச்சைக்காரனோட சேர்த்து வச்சி பேசியிருக்கா அந்த மாதிரி ஒருத்திய எப்படி நான் என் வீட்டுக்குள்ள விடறது…
அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவ சொன்ன வார்த்தை தான் என் காதுல விழுந்துகிட்டே இருக்கும் என்று கோபமாக கூற
அக்கா ப்ளீஸ் கோபப்பட்டு எல்லாத்தையும் கெடுத்துடாத
அவ முதல்ல இந்த வீட்டுக்கு வரட்டும் அப்புறமா அவ பேசினதுக்கு வட்டியும் முதலுமா நாம திருப்பி குடுத்துட்டு அவ வீட்டுக்கே தொறத்தி விடலாம் அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இரு அக்கா என்று ராதா மேனகாவை சமாதானப்படுத்தினார்
இவர்களின் சூது எதுவும் அறியாத பவித்ரா ரிஷியை மறக்க முடியாமல் தினம்தினம் தவிக்க ஆரம்பித்தாள் உணவை பாதியாக குறைத்துக் கொண்டவள் தூக்கமின்றி இரவு முழுவதும் அழுது தலையணையை ஈரமாக்கினாள்
ரிஷியை ஒவ்வொரு முறையும் சந்திக்க சென்றாலோ இல்லை பேச முயன்றாலோ அவன் இவளை முற்றிலுமாக புறக்கணிக்க அந்த புறக்கணிப்பு அவளை மேலும் மேலும் அவன் பால் ஈர்த்தது.
இங்கு பவித்ராவின் நிலையறிந்த பெற்றோர்கள் இருவருமே அவளுக்கு எவ்வளவோ சமாதானம் சொல்லியும் எடுபடவில்லை. அவர்கள் மிகப்பெரிய பணக்காரர்கள் அவர்களுக்கும் நமக்கும் என்றுமே ஒத்துவராது அவனை மறந்து விடு என்று என்ன கூறினாலும் பவித்ராவின் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
அவன் பணக்காரன் என்று தெரிவதற்கு முன்பே தன் மனதை பறிகொடுத்து விட்டேன் அவனும் தன்னுடைய நிலையை அறிந்து தானே அவர்களின் பெற்றோரை தங்கள் வீட்டிற்கு பெண் கேட்டு அனுப்பி வைத்தான் என்று அவளின் ஒரு மனம் அவளிடம் கூறுவதை அவளும் ஏற்றுக்கொள்கிறாள்..
கடைசியில் பெற்றோர்கள் இருவரும் ஒருசேர முடிவு ஒன்றை எடுத்தனர் அது ரிஷியை நேரில் சந்தித்து பவித்ராவை பற்றி பேசுவது என அதன் பிறகு இருவருமே ரிஷியின் அலுவலகம் சென்று அவனை சந்திப்பதற்காக காத்திருக்க அவன் இவர்களிடம் சம்பிரதாயமாக பேசி விட்டு சென்று விட்டான்.
அது இவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்
அதன் பிறகு மீண்டும் மீண்டும் ரிஷியை சந்திக்க முயற்சி செய்து தோற்றுப் போயினர்…
இங்கு பவித்ராவை ஒவ்வொரு முறையும் ரிஷியின் அலைபேசிக்கு
முயற்சி செய்ய ஒருமுறை கூட அவளின் அழைப்பே ரிஷிகேஷ் ஏற்றுக்கொள்ளவே இல்லை
இதனால் அவளை நேரில் சந்திக்கலாம் என்று தனது தந்தையிடம் பர்மிஷன் கேட்க தந்தையும் சரி என்று அவளை அழைத்துக் கொண்டு அவனின் அலுவலகம் சென்றார்
அங்கு இவர்களை கண்ட ரிஷி நாராயணன் மட்டும் வந்திருந்தால் கண்டும் காணாமல் சென்று இருப்பான் அழுது கலங்கிய விழிகளுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் நின்று கொண்டிருந்த பவித்ராவை பார்த்ததும் அவனால் அப்படி கடந்து செல்ல முடியவில்லை
சற்று மனமிரங்கி அவர்களுடன் பேச முன்வந்தான் பவியோ அவனைக் கண்டதும் மௌனமாக அழ ஆரம்பித்துவிட்டாள்
அவளின் நிலையை அறிந்தவனுக்கு மனது மிகுந்த வேதனையை கொடுத்தது ஆனாலும் தாய்க்கு நியாயம் வேண்டுமே என்று நினைத்துக்கொண்டு பொறுமை காத்தான்.
பவித்ராவின் தந்தையோ ரிஷியின் கைகளைப்பிடித்து இதை உங்க காலா நினைச்சு கெஞ்சி கேட்கிறேன் தயவு செஞ்சு என்னோட மகளுக்கு கொஞ்சம் புத்தி சொல்லுங்க உங்க வாயால அவளுக்கு சொன்னா தான் புரியும்.
நீங்க மிகப் பெரிய பணக்கார குடும்பம் நாங்க நடுத்தர வர்க்கமா எங்களுக்கும் உங்களுக்கும் என்னைக்குமே ஒத்து வராது அது எனக்கும் என் மனைவிக்கும் ரொம்ப நல்லா புரியுது
ஆனா பவித்ராவுக்கு புரியல நீங்க பணக்காரன்னு தெரியறதுக்கு முன்னாடியே உங்க மேல ஆசை வச்சுட்டாளாம் எங்களோட அந்தஸ்து தெரிஞ்சுதான் நீங்க உங்க குடும்பத்தாரை எங்க வீட்டுக்குப் பொண்ணு கேட்டு அனுப்பி வைச்சிங்கனு எங்ககிட்ட பதிலுக்கு பதில் வாதாடறா
அதனால உங்க வாயால அவன் முகத்தை பார்த்து சொல்லிருங்க உனக்கும் எங்களுக்கும் ஒத்துவராது பவித்ரா இதோட விட்டுடுனு அதுவும் இல்லாம நாங்க அன்னைக்கு உங்க அம்மாகிட்ட அந்தளவு நடந்தது அப்புறமா எங்க பொண்ணை அங்க அனுப்பி வைக்கிறது எங்களுக்கும் கொஞ்சம் பயமா இருக்கு அதனால இதோடு விட்டுவிடலாம் என்று ரிஷியிடம் கெஞ்ச அவனும் அவரிடமிருந்து கைகளை உதவி கொண்டவன்…
பவித்ரா ரொம்ப சரியா என்னை புரிஞ்சு வச்சிருக்கறா ஆனா அதுல ஒரு பர்சன்டேஜ் கூட நீங்க எங்களை புரிஞ்சுக்கலனு நினைக்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அங்கிள்
உங்களுக்காக இல்லனாலும் பவித்ராவோட இந்த புரிதலுக்காகவாவது நான் அவளைத் திருமணம் செஞ்சிக்கனும்னு நினைக்கிறேன்
உண்மையிலேயே உங்க பொண்ணு சந்தோஷமா இருக்கணும்னு நீங்க நினைச்சா நீங்களும் ஆண்டியும் என் அம்மா கிட்ட வந்து உங்க பொண்ணுக்காக பேசுங்க
கண்டிப்பா எங்க அம்மா கல்யாணத்துக்கு அப்புறம் பவித்ராவை எதுவுமே செய்ய மாட்டாங்க அதுக்கு நான் கேரண்டி கொடுக்கிறேன்
என் மேல நம்பிக்கை இருந்தா உங்க பொண்ணு மேல அக்கறை இருந்தா நீங்க தாராளமா என் வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட கல்யாண விஷயத்தை பத்தி பேசுங்க இதுக்கு அப்புறம் இதை பத்தி உங்ககிட்ட நான் பேச விரும்பல உங்க பொண்ணோட சந்தோஷம் இப்போ உங்க கையில இருக்கு என்று கூறியவன். அங்கிருந்து சென்றுவிட்டான்.
தொடரும்