11
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பறந்து விரிந்த நிலம், 50 ஏக்கர் நிலம் என்றால் வேறு எப்படியிருக்கும். ஆங்காங்கே தென்னை, பனை, மா என்று மரங்களும் இருந்தன. மேடும் பள்ளமுமாகத்தான் இருந்தது நிலம். வழிகாட்டியாக இருந்தவர் பேசிக்கொண்டே வந்தார்
‘இங்கே நிலத்தடி நீர் ரொம்ப அதிகம். ரொம்ப டேஸ்ட்டாகவும் இருக்கும். அதுக்குத்தான் இங்க ஒரு கிணறு எடுத்திருக்கிறோம். வாங்க பார்க்கலாம்.
அங்கிருந்த கிணற்றில் தண்ணீர் அதிக தூரத்தில் இல்லை. தண்ணீரை எடுத்து அனைவருக்கும் அருந்த கொடுத்தார்கள்.
‘ம்..மினரல் வாட்டர் மாதிரி இருக்கே...’ சங்கர் அதிசயித்தான்.
‘நாம் இருக்கிறது கோவையாக்கும். இங்க தண்ணீர் எப்படி நல்லாயில்லாம இருக்கும்’’ விளக்கமளித்தான் செல்வா.
‘இங்கே ஒரு ஹைவே வரப்போகுது.. அதையொட்டின மாதிரி நம்ம நிலம் இருக்கிறதால, பிற்காலத்துல நிச்சயமா விலை கூடும். இதுதான் அந்த ஹைவே பிளான்...; ஒரு பிரிண்ட் அவுட்டை எல்லோருக்கும் கொடுத்தார், விளக்கமளித்தவர்.
ஓவியா அதை கவனமாக பார்த்தாள்.
‘அதுவுமில்லாம இந்த 50 ஏக்கர் நிலத்தை ஒவ்வொரு ஏக்கரா பிரிச்சி கொடுத்திடுவோம். உங்களுக்கு எந்த ஏக்கர் வேணுமோ, நீங்களே முடிவு செய்யலாம்’
‘ரோட்டோரத்துல வாங்கினா நல்ல ரேட் போகும்தானே ஓவியா?’ ஆர்வமாக கேட்டான் செல்வா.
‘உங்க கணக்கு தப்பு செல்வா. எப்பவுமே எந்த நிலத்தையும் ரோட்டோரத்துல வாங்கக் கூடாது. அதுவும் இது ஹைவே. அதனால நிச்சயமா வாங்கக் கூடாது. பிற்காலத்துல இந்த ஹைவேயை எக்ச்டேன்ட் பண்ணுவாங்க. அப்ப கவர்மென்ட் நம்ம நிலத்தை எடுத்துப்பாங்க. அதுக்கு கவர்மென்ட் ரேட்டுதான் கிடைக்கும்.. போட்ட காசைக் கூட எடுக்க முடியாது. அதனால ரோட்டை விட்டு ஒரு ஏக்கர் தள்ளி வாங்கலாம்...’
‘இந்த டாக்குமெண்ட்ஸ் பவர்ஆப் தானே போட்டிருக்கு. அதனால எதுவும் பிரச்சனை வராதே? கேள்வி எழுப்பினான் சங்கர்.
‘பவர்ஆப்ங்கிறது ஒருத்தரோட நிலத்தை முன் பணம் மாதிரி கொடுத்து வாங்கி, அதை மத்தவங்களுக்கு வித்து, அதுல நிலத்துக்கு சொந்தக்காரர்கிட்டே பேசின பணம் கொடுத்துட்டு மீதி பணத்தை இவங்க எடுத்துக்குவாங்க’
‘செம பிசினஸ் இல்ல?’ அதிசயித்தான் செல்வா
‘ம்..இப்போ அதிக லாபம் இந்த பிசினஸ்தான்’
கண்கள் விரிய ஆர்வமாய் விளக்கியவளை கண் கொட்டாமல் பார்த்தான் செல்வா. தன் வேலையில் அவளுக்கிருந்த ஆர்வத்தை தன் மனதிற்குள் பாராட்டிக் கொண்டான். இப்படி ஒரு பி.ஏ கிடைக்க குரு கொடுத்து வைத்திருக்கனும்.
எல்லா பார்மாலிட்டீசும் முடிந்து அவரவர்களுக்கு தேவையான இடங்களை தேர்வு செய்து, முன்பணம் கொடுத்தனர். ஓவியா டாக்குமெண்ட்சை பற்றி நிறைய சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொண்ட பின்னரே, 5 ஏக்கர் நிலப் பரப்பிற்கு முன் பணம் கொடுத்தாள். உடனே அதை குருவுக்கு தெரியப்படுத்தினாள்.
‘நீங்க செஞ்சா எல்லாம் சரியாகத்தான் இருக்கும் ஓவியா... போனை செல்வாவிடம் கொடுங்க. என்ன சார்.. போனையே காணோம் ... ரொம்ப பிஸியா?’
‘இல்லடா.. இங்க டவரேயில்ல. மொதல்ல அப்பா எப்படி இருக்காருன்னு சொல்லு?’
‘பரவாயில்லடா. ரொம்ப பயமுறுத்திட்டாரு...’
‘டாக்டர் என்ன சொன்னாங்க?’
‘வயசாயிட்டா இப்படித்தான்னு அசால்ட்டா சொல்றாங்க’
‘நல்லா பார்த்துக்கோடா...’
‘நான் நல்லா பாத்துக்கிறது இருக்கட்டும். என்ன ஓவியாகிட்ட ஏதாவது வாலாட்டினியா?’
‘அட நீ வேற.. நான் ஜென்டில்மேன்னு சொல்லிட்டியே.. அப்புறம் எப்படி உன் வார்த்தையை காப்பாத்தத்தான் சும்மா இருக்கேன்’
‘ச்சே.. ச்சே.. ச்சே.. நெஞ்ச தொட்டுட்ட சகல. முடியல. ஆனால் காரணம் அதுவா இருக்காது. நீ வாலாட்டினா ஓவியா ஓட்ட நறுக்கிடுவா. அந்த பயம்தான் உனக்கு. ஆனால் மறைக்கிற, சரி விடு எப்போ கிளம்புறீங்க?’
‘நாளைக்கு ரெஜிஸ்ட்ரேஷன் முடிச்சிட்டு நைட் கிளம்பிடுவோம்’
‘ஓகே டா டேக் கேர்.. பை..’ வைத்துவிட்டான்.
முன் பணம் கொடுத்ததும் அனைவரும் அந்த அடுக்குமாடி வீட்டிற்கு சென்றனர்.
கான்பரன்ஸ் ரூமில் அனைவரும் சேர்ந்துவிட்டனர். மேடையில் ஒருவன் மைக்கை பிடித்தான்.
‘ஹலோ பிரண்ட்ஸ்.... எல்லோரும் நிலம் வாங்கின சந்தோஷத்தை கொண்டாட வேண்டாமா?’
“ஆமா..’ கூட்டத்தில் சத்தம் எழுந்தது.
‘இட்ஸ் பார்ட்டி டைம்.. எல்லா வகை இன்பங்களும் இங்கு உங்களுக்காக.. என்ஜாய்...’ என்றவர் ஒரு பீர் பாட்டிலை குலுக்கிப் பீயிச்சினார்.
கூட்டத்தில் ஆரவாரம் அதிகமாகியது
‘ஆனா அதுக்கு முன்னாடி சின்ன கல்சுரல் புரோகிராம். பாடுறவங்க, ஆடுறவங்க, ஜோக்ஸ், கவிதை இப்படி உங்களோட டேலண்ட் எதுவாயிருந்தாலும் இந்த மேடை வரவேற்கிறது.
நிறைய பேர் ஆர்வமாக பங்கேற்றனர். சங்கர் சென்று ஒரு பாட்டிற்கு ஆட்டம் போட்டுவிட்டு வந்தான்.
‘நீங்களும் போய் ஏதாவது பண்ணுங்களேன் செல்வா.. ஆசையாக கேட்டாள் ஓவியா.
‘மேடம் உத்தரவுக்குதானே காத்திருக்கிறேன்’ மேடையை நோக்கி விரைந்தான்.
‘ஹலோ பிரண்ட்ஸ்.. பர்ஸ்ட் ஒரு ஜோக் பெத்த பொண்ணுக்கும், எக்ஸாம் பேப்பருக்கும் ஒரு ஒற்றுமையிருக்கு தெரியுமா?’
நிறுத்தினான் கூட்டத்தில் கேள்விக்குறி தொடர்ந்தான்.
‘ரெண்டையும் கட்டிக் கொடுக்கிற வரைக்கும் தலைவலித்தான்.
கூட்டம் ’கொல்’ என்று சிரித்தது.
அதே மாதிரி பெத்த பிள்ளைக்கும், எக்ஸாம் பேப்பருக்கும் ஒற்றுமை இருக்குது.. நிறுத்தினான்.
‘ரெண்டுமே வெண்மையா இருக்குமா பாஸ்...?’
கூட்டத்தில் ஒரு ஆண் குரல் ஓங்கியது.
சிரித்தான் செல்வா. ‘அதான் இல்ல ரெண்டையும் திருத்தவே முடியாது’
கூட்டத்தில் சிரிப்போலியோடு கரவொலியும் சேர்ந்து கொண்டது.
‘நன்றி இப்போ ஒரு கவிதை’
‘இமய மலையில் உள்ள பனிக்கட்டியும், தன் தோல்வியை ஒப்புக் கொள்ளும்.நான் உன்னைக் கண்டு உருகுவதைப் பார்த்தால்’
கூட்டத்தில் பாதி பேர் கை தட்டினார்கள். பாதி பேர் உச்சு கொட்டினார்கள். ஆனால் அவனது கண்களோ ஓவியாவை அர்த்தமுடன் நோக்கிக் கொண்டிருந்தன.
அவன் பார்வையின் கூர்மை தாங்காமல் அவளது விழிகள் பூமியை வருடியது. கன்னங்கள் சிவப்பேறின. இவர்கள் கண்கள் பேசும் பாஷையை சங்கர் பார்த்துவிட்டான்.
ஒரு ஆண் மகனின் கவிதை தன்னை வெட்கப்பட வைப்பது ஆச்சரியமாக இருந்தது ஓவியாவிற்கு. இதயத்துடிப்பு ஸ்வரம் மாறி துடிப்பதை நன்றாக உணர்ந்தாள்.
அவன் தொடர்ந்தான்.
‘இப்போ உங்களுக்காக ஒரு மெட்லி...’
கூட்டம் ‘ஓ..ஹோ..’என்று அலறியது.
புதிதான கானா பாடல்கள், குத்துப் பாடல்கள் என்று கலந்து பாடிய செல்வா, கடைசியாக மெலடிக்கு மாறினான். இறுதிப் பாட்டாக,’ஒரு பொய்யாவது சொல் கண்ணே, உன் காதல் நான்தான் என்று.. அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்...’
பாடல் முடியும்போது அவன் கண்கள் சிவந்திருந்தது. அத்தனை நேரம் ஆரவாரமாக இருந்த கூட்டம் இப்போது அமைதி காத்தது.
செல்வாவின் மனதில் உள்ள சோகம் பாடலாக வெளிவந்தது. அத்தனை முகங்களிலும் அந்த சோகம் தென்பட்டது. ஓவியாவால் அழுகையைக் கட்டுபடுத்த முடியாமல் உதட்டைக் கடித்து கொண்டாள். அதற்கு மேல் அவளால் அங்கு இருக்க முடியவில்லை. இருந்தால் தனது குட்டு வெளிப்பட்டு விடுமென்று நன்றாகவே தெரிந்தது வெளியேறிவிட்டாள்.
சங்கருக்கு அங்கு நடப்பது எதுவுமே முழுமையாகப் புரியவில்லை. இருப்பினும் இருவருக்குமிடையே ஏதோவொரு மௌன யுத்தம் நடப்பது மட்டும் நன்றாகப் புரிந்தது. பார்ட்டி முடிந்து அனைவரும் பீர் பாட்டில்களுடன் உறவாடத் தொடங்கி விட்டார்கள். சங்கர் எவ்வளவோ வற்புறுத்தியும் செல்வா குடிக்கவில்லை. அதனால் சங்கரும் ஒரு பெக்குடன் நிறுத்திக் கொண்டான்.
இரவு உணவு அமைதியாகவே முடிந்தது. இருவர் மனதிலும் அதிகமான பாரம் இருந்ததால் மனம் தனிமையை நாடியது. அவர்களின் அமைதியைக் கலைக்க சங்கர் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
கார் சீரான வேகத்தில் ஹோட்டலை நோக்கி சென்று கொண்டிருந்தது. காரிலுள்ள அமைதி பொறுக்காமல் டிரைவரே ரேடியோவை இயக்கினார்.
‘ஆறும் அது ஆழமில்லை, அது சேரும் கடலும் ஆழமில்லை ஆழம் எது அய்யா இந்த பொம்பள மனசு தான்யா..’ என்ற இளையராஜாவின் குரலில் பாடல் ஒலித்தது. அந்தப் பட்டு முடியும் வரை கண்களை மூடி ரசித்த செல்வா. பின் சங்கரை பார்த்து, ’ரொம்ப அர்த்தமுள்ள பாட்டு இல்ல சங்கர்..’ என்றான்.
அவன் இருவரையும் மாறி மாறி பார்த்து, யாருக்கு சொல்வதென்று புரியாமல் ஒருவாறு ’ஆமாம்’ என்பது போல் தலையசைத்தான்.
‘எவ்வளவு அழகா சொல்லியிருக்காங்க பாரு பெண்கள் மனசுல இருக்கிறதை வெளியே சொல்ல மாட்டாங்கன்னு...’ அவன் குரலில் வெறுமை தெரிந்தது.
‘இப்போ எதுக்கு செல்வா பெண்களைப் பத்தி.. வேற பேசலாமே..’ பேச்சை மாற்ற ஆசைப்பட்டான்.
‘இல்ல சங்கர்.. அதுலயும் ‘கண்ணுல மின்னும் மையு ,அது மையுமில்ல பொய்யுன்னு’ பாடினவரை கண்டிப்பா மனசார பாராட்டனும். அவ்வளவும் உண்மை. எதுக்கு மனசுல இருக்கிறதை மறைக்கணும்...? ஏன் வெளியே பொய் சொல்லனும்?’ அவன் கண்கள் நேராக ஓவியாவை பார்த்தது.
அவன் பேசுவது யாரையோ என்பது போல் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.
இதைப் பார்த்த செல்வாவிற்கு அதிகமாக கோபம் வந்தது.
‘ச்சே..சே.. இந்த பொண்ணுங்களுக்கு பசங்கள அழவெச்சு பார்க்கிறதுல அப்படி என்னதான் விருப்பமோ..’ வெறுப்போடு திரும்பி சாலையைப் பார்த்தான்.
தலையும் புரியாமல் வாலும் புரியாமல் சங்கர் விழித்துக் கொண்டிருந்தான்.
இதைப் பார்த்து ஓவியா தனக்குள் சிரித்துக் கொண்டாள். மீண்டும் அமைதி நிலவியது.