- Messages
- 299
- Reaction score
- 220
- Points
- 43
9.
அவளுக்கு தான் மயில்வீரா உயிர் மூச்சு ஆனால் அவனுக்கு யாரோ தானே... யார் என்று புருவம் சுருக்கி பார்க்க, அவன் பார்வை எதற்கென்று பார்க்க சுதாரித்தவள், "பாட்டி இல்லையா?" என்றாள்.
அவளின் தேன்குரலில் ஒரு நொடி மயங்கி நின்றவன் தமிழ் பேசும் பெண்ணை ஆச்சர்யமாக பார்த்து கொண்டிருந்தான்.
"நீங்க?"
"நான் அன்பிற்கரசி உங்க எதிர் பிளாட்ல தான் இருக்கேன். உங்க வீட்டில இருக்க பாட்டி எனக்கும் சமைச்சு கொடுப்பாங்க இன்னைக்கு இன்னும் அவங்க சமைக்க வரல.. போன் பண்ணாலும் எடுக்கல.. அதான் என்னன்னு கேட்டுட்டு போலாம்னு வந்தேன். இருக்காங்களா?" என்றாள்.
பாட்டி எதிர் வீட்டு பெண்ணுக்கும் சமைத்துக் கொடுக்கிறார் என்பதே புதுமையான விஷயமாக இருந்தது அவனுக்கு. தனக்கு இதுவரை இது தெரியாமல் இருந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டவன், "பாட்டி இல்லை கிளம்பிட்டாங்கன்னு நினைக்கிறேன்." என்றான்.
தன் கை கடிகாரத்தை பார்த்தவள், "ஓ அப்படியா சரிங்க நான் வெளிய போய் சாப்டுக்கிறேன்." என்று செல்ல திரும்பினாள்.
"ஒரு நிமிஷம்." என்றான் அவசரமாய்.
"உங்களுக்கு பிரச்சனை இல்லன்னா எங்க வீட்டிலேயே சாப்பிடலாம். பாட்டி எனக்கு நிறைய தான் சமைச்சு வச்சுட்டு போய் இருக்காங்க." என்றான் தயங்கியபடி.
"இல்ல இருக்கட்டும் பரவாயில்லை எதுக்கு உங்களுக்கு சிரமம்.. நான் வெளியே போய் சாப்பிட்டுக்குறேனே.. " என்றாள் அவளும் தயங்கியபடி.
"அதெல்லாம் ஒரு சிரமும் இல்லைங்க எனக்கு எதிர் பிளாக்ல இருக்கேன்னு சொல்றீங்க ஆனா எனக்கு இதுவரைக்கும் தெரியாது. எனக்கு எந்த தொந்தரவும் இல்ல வந்து சாப்பிடுங்க வாங்க. " என்றான் வீரா.
அவளுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.. அவன் அனுமதியோடு அவன் வீட்டிற்குள் முதல் முதலாக வலது காலை எடுத்து வைத்து நுழைந்தாள்.
சோர்ந்தபடி மீண்டும் சமையலறைக்குள் செல்ல போக, "என்ன ஆச்சு உங்களுக்கு உடம்பு சரியில்லையா?" என்றாள்.
அவன் திரும்பி அவளை பார்க்க, "இல்ல பார்க்க ரொம்ப சோர்வா தெரியுறீங்க அதான் கேட்டேன்." என்றாள்.
"ஆமாங்க காலையிலிருந்து என்னவோ உடம்பு ஒரு மாதிரி இருக்கு ஃபீவர் வரப்போகுதுன்னு நினைக்கிறேன்." என்றான்.
"ஒரு நிமிஷம் இதோ வந்துடறேன்." என்று வேகமாய் எதிரில் இருந்த தன் வீட்டுக்கு சென்றாள். சில நொடிகள் கழித்து கையில் ஸ்டெதஸ்கோப்புடன் மருத்துவ கிட்டுடனும் வீட்டுக்குள் நுழைந்தாள்.
அவளை ஆச்சரியமாய் பார்த்தவன், "நீங்க மெடிக்கல் ஸ்டூடண்டா?" என்றான்.
"ஆமாங்க பீடியா இன்னும் 6 மாதத்தில் முடியுது." என்று உள்ளுக்குள் அவனுடன் பேசும் ஒவ்வொரு நொடியையும் அவள் இதயத்தில் தங்க எழுத்துகளில் பொறித்துக் கொண்டிருந்தாள்.
"அது சரி நான் என்ன குழந்தையா? பிடியா டாக்டர் நீங்க எனக்கு பார்க்க.." என்றான் கிண்டலாய்.
"நான் முதலில் ஒரு ஜெனரல் டாக்டர், அப்புறம் தான் பிடியா டாக்டர். இருந்தாலும் நான் வைத்தியம் பார்க்கிற எல்லோரும் என் கண்ணுக்கு குழந்தைங்க தான்." என்று புன்னகைத்து ஸ்டேதஸ்கோப்பை மாட்டிக் கொண்டு அவனை பரிசோதிக்கத் நெருங்கினாள்.
"எ... என்ன பண்றிங்க?" என்றான் மயில் வீரா.
"உங்களை டெஸ்ட் பண்ண போறேன்." என்று அவனுக்கு வைத்தியம் பார்த்தாள்.
"பிவர் ஹையா இருக்கு. மழைல நனைஞ்சிங்களா?" என்று கேட்டாள்.
"ஆமாங்க நேத்து மழைல கொஞ்சம் நனைஞ்சுட்டேன்." என்றான்.
"அதான் பீவர் வந்திருக்கு. என்ன சாப்டிங்க?"
"இப்போ இன்னும் சாப்பிடல. இனி தான் சாப்பிடணும்." என்று தன் முன்னால் இருந்த தட்டை காட்டினான்.
'அடடா இவருக்கு பீவர் னு தெரியாம இவருக்கு பிடிச்ச மீன் குழம்பு செஞ்சு வச்சுட்டேனே. சாப்டாம விட மாட்டாரே.' என்று உள்ளுக்குள் வருந்தியவள்.
"ஜுரம் அடிக்கும் போது இந்த மாதிரி புட் சாப்பிட கூடாது." என்றவளை பாவமாய் பார்த்தவன், "ஏங்க எனக்கு மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும். அதை போய் சாப்பிட கூடாதுன்னு சொல்றிங்க... அதுவும் பாட்டி எனக்காக பார்த்து பார்த்து செய்ற மீன் குழம்பு எவ்ளோ டேஸ்ட்டா இருக்கும் தெரியுமா? ஒன்னு செய்யலாம். இந்த சாப்பாட்டை நான் சாப்பிடுடறேன். அப்புறம் நீங்க மாத்திரை கொடுங்க போட்டுக்குறேன்." என்றவனை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள்.
'நம்ம சமைச்ச சாப்பாடு இவருக்கு இவ்ளோ பிடிக்கிது பரவால்ல நாம சமைக்க கத்துக்கிட்டது வேஸ்ட்டா போகல.' என்று நினைத்தவள், "சொன்னா கேட்கணும். நான் இந்த குழம்பை பிரிட்ஜ்ல வச்சுடறேன் உடம்பு சரியான பிறகு நீங்க சாப்பிடுங்க. இருங்க வரேன்." என்று சென்றவள் வெந்நீர் எடுத்து வந்து அவன் நெற்றியில் பத்து போட்டாள்.
“அப்படியே ரெண்டு நிமிஷம் படுத்திருங்க இதோ வரேன்." என்று சமையலறைக்குள் நுழைந்தவள் வேகமாக அவன் சாப்பிட அரிசி, சீரகம் வறுத்து பொடித்து கஞ்சி செய்தாள். புதினா துவையல் அரைத்து எடுத்து வந்து அவனை எழுப்பினாள்.
"என்னங்க இந்தாங்க எழுந்திருங்க சாப்பிட்டு டேப்லெட் போட்டு படுத்துக்கோங்க. ஜுரம் குறையும்." என்று கூறி கஞ்சியை கொடுத்தாள்.
கஞ்சியை குடிக்கக் கூட முடியாமல் அவன் கரம் நடுங்க தட்டை வாங்கி தானே ஊட்ட போக அவளை விழிகள் விரித்து அதிர்ச்சியாய் பார்த்தான்.
"என்ன பார்க்கிறிங்க? இப்போ நீங்க சாப்பிடலைன்னா ஹாஸ்பிட்டல் பெட்ல தான் நம்மளோட அடுத்த மீட் இருக்கும் எதையும் யோசிக்காம சாப்பிடுங்க." என்று அதட்டி கஞ்சி புகட்டி மாத்திரை கொடுத்து தூங்க சொன்னாள்.
"நீங்க முதல்ல சாப்பிடுங்க அப்போ தான் தூங்குவேன்." என்று அடமாய் கூறிவிட வேறு வழியில்லாமல் அவனுக்கு போட்டு வைத்திருந்த தட்டை எடுத்து சாப்பிட போக, "ஐயோ அது வேணாம்ங்க அது ஆறி போயிருக்கும் அதுவும் இல்லாம அதுல ஒரு வாய் நான் சாப்பிட்டேன்." என்றதும் புன்னகைத்தவள், "பிரெண்ட்ஸ்குள்ள இதெல்லாம் சகஜம்ங்க. அதுவும் இல்லாம இவ்ளோ சாப்பாட்டை வேஸ்ட் பண்ண முடியாது. அதனால நானே சாப்பிடறேன்." என்று சாப்பிட்டாள்.
மன்னவனின் கரம் பட்ட உணவை உண்ண கசக்குமா என்ன? அமிர்தம் போல் இனித்தது. உள்ளுக்குள் தான் பிறந்ததற்கான பலன் அடைந்துவிட்டது போல் அப்படி ஒரு பேரானந்தம்.
அவன் உறங்கவும் தனியே விட மனம் வராமல் அவளும் அங்கேயே அமர்ந்து படிக்கத் தொடங்கினாள்.
இரண்டு மணி நேரம் கழித்து கண் விழித்தவன் கண்டது எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தபடி புத்தகத்தை மார்பில் வைத்தபடி உறங்கும் அபியை தான்.
வீரா எழுந்து முகம் கழுவி வரவும் எழுந்து அமர்ந்திருந்தாள்.
"சாரி. உடம்பு சரி இல்லாதவரை தனியா விட்டுட்டு போக மனசு வரல அதான் இங்கயே உட்கார்ந்து படிச்சுட்டு இருந்தேன். எப்படி தூங்கனேன்னு தெரியல. இப்போ உங்களுக்கு எப்படி இருக்கு?" என்று கேட்டாள்.
"ஹ்ம் இப்போ பரவால்லங்க." என்று கூறியவன், "இங்க எவ்ளோ நாளா இருக்கீங்க?" என்றான்.
"கொஞ்ச நாளா தான். படிப்பு முடிஞ்சதும் இந்தியா போய்டுவேன்." என்றாள்.
"ஓஹ் சரிங்க."
"சரிங்க பால் காய்ச்சு வச்சுருக்கேன். நயிட் பால் பிரெட் மட்டும் சாப்பிட்டு மாத்திரை போடுங்க. நாளைக்கு எனக்கு ப்ராக்டிகல் இருக்கு. சோ, காலைலயே போய்டுவேன். உடம்பை பார்த்துக்கோங்க நாளைக்கு ரெஸ்ட் எடுத்துக்கோங்க அப்போ தான் நல்லா இருக்கும். நான் வரேன்." என்று கூறிவிட்டு வெளியேறினாள்.
அதில் இருந்து ஒரு மெல்லிய நட்பு இருவருக்கும் உருவாகி இருந்தது.
மறுநாள் காலை எழுந்து கண் விழித்து கதவை திறந்தவனின் முன் கீழே ஒரு கூடை இருந்தது.
உள்ளே எடுத்து சென்று பார்த்தால் மூன்று டிபன் பாக்ஸ் இருந்தது.
"இன்றும் பாட்டிக்கு உடல்நிலை முடியாததால் வர மாட்டாராம். அதனால காலை சாப்பிட கஞ்சி, மதயம் ரசம் சாதம் இருக்கின்றது. இரவு பால் பிரெட் சாப்பிடுங்கள். கட்டாயம் வெளி உணவை தவிர்க்கவும்." என்று இருந்தது ஒரு துண்டு காகிதத்தில். பார்த்ததும் புன்னகை மலர உள்ளே எடுத்து சென்று சாப்பிட்டான்.
அதோடு அடுத்த மூன்று மாதங்கள் மிக வேகமாக ஓடியது. அவ்வப்பொழுது இருவரும் பார்ப்பதும் புன்னகைப்பதும் ஒரு சில விசாரிப்புகளும் வாடிக்கையானது. அவனை பொறுத்தவரை அப்படி தான் நடந்து கொண்டிருந்தது. ஆனால் அபி எப்பொழுதும் போல் தன் பணிவிடைகளால் அவனுக்கே தெரியாமல் அவனுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.
ஒரு நாள், "பாட்டி நேத்து வச்சுக் கொடுத்த நண்டு ரசம் வேற லெவல். எங்க இருந்து தான் இவ்ளோ அருமையா சமைக்க கத்துக்கிட்டிங்களோ... தாத்தா உங்க சமையலுக்கு அடிமையா இருந்திருப்பாரே.. கொடுத்து வச்ச மனுஷன். சமைக்கும் உங்க கைக்கு ஒருநாள் தங்க காப்பு செஞ்சு போடறேன்."
இன்னொரு நாள், "இன்னைக்கு வச்சிருந்த புதினா மிளகு ரசம் அட்டகாசம். எனக்கு இருந்த ஜலதோஷம் எங்க போச்சுன்னே தெரியலை பாட்டி. ஐ லவ் யூ பாட்டிம்மா." என்று அவர் கன்னத்தில் முத்தமிடுவான்.
இன்னொரு நாள், "பாட்டி ஆனாலும் உங்க கைல மேஜிக் தான் இருக்கு. எப்படி என்னோட ரூமை இவ்ளோ அழகா மாத்தினீங்க? ஆனாலும் கலக்குறீங்க." என்று புகழுவான்.
"பாட்டி என் ரூம்ல மாட்டிருக்க பெயின்டிங்ஸ் எல்லாம் எங்க வாங்குனீங்க? இது எல்லாம் பார்க்கும் போது வெறும் ஓவியம் மாதிரி தெரியலை. ஒவ்வொரு படத்துலயும் உயிர் இருக்கு. அவ்ளோ அழகா இருக்கே.. அதுவும் இந்த பொண்ணோட கண்ணில இருக்க ஏக்கம் எனக்குள்ள ஏதோ சொல்ற மாதிரி இருக்கு." என்று கேட்டான்.
"நான் எங்க பா இதெல்லாம் வாங்குனேன். எதிரில் இருக்கா பாரு அன்பு அவ கிட்ட கேட்டேன். அவ தான் போன்ல வாங்கி கொடுத்தா." என்று சமாளித்தார்.
"ஓஹ் அவ செலக்ட் பண்ணதா ரொம்ப அருமையா இருக்கு." என்று பாராட்டி ஒவ்வொன்றையும் தினமும் தூங்கும் முன் ரசிப்பான். ஆனால் அதில் இருந்த பெயரை கவனிக்க தவறி விட்டிருந்தான் என்பது அவன் துரதிஷ்டம்.
இவனின் ஒவ்வொரு சேட்டையையும் அவன் அறியாமல் இவள் ரசிப்பாள். மொத்தத்தில் அவளின் முழு உலகமும் அவன் மட்டுமே... அதுவும் அவன் அறியா உயிர் காதல். எப்பொழுது இவனுக்கு தெரியப்படுத்த போகின்றாளோ?...
இன்னும் மூன்று மாதங்களில் அவளின் படிப்பு முடிய போகின்றது என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மூன்று மாதங்கள் முடிந்த பின் அவன் இல்லாமல் அவனை காணாமல் அவனுக்கென்று எதுவும் செய்யாமல் எப்படி இருக்க போகின்றேன் என்று எண்ணியே தினமும் மருகினாள்.
அதன்விளைவு அவனிடம் தன் நேசத்தை கூற வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாள்.
அவளுக்கு தான் மயில்வீரா உயிர் மூச்சு ஆனால் அவனுக்கு யாரோ தானே... யார் என்று புருவம் சுருக்கி பார்க்க, அவன் பார்வை எதற்கென்று பார்க்க சுதாரித்தவள், "பாட்டி இல்லையா?" என்றாள்.
அவளின் தேன்குரலில் ஒரு நொடி மயங்கி நின்றவன் தமிழ் பேசும் பெண்ணை ஆச்சர்யமாக பார்த்து கொண்டிருந்தான்.
"நீங்க?"
"நான் அன்பிற்கரசி உங்க எதிர் பிளாட்ல தான் இருக்கேன். உங்க வீட்டில இருக்க பாட்டி எனக்கும் சமைச்சு கொடுப்பாங்க இன்னைக்கு இன்னும் அவங்க சமைக்க வரல.. போன் பண்ணாலும் எடுக்கல.. அதான் என்னன்னு கேட்டுட்டு போலாம்னு வந்தேன். இருக்காங்களா?" என்றாள்.
பாட்டி எதிர் வீட்டு பெண்ணுக்கும் சமைத்துக் கொடுக்கிறார் என்பதே புதுமையான விஷயமாக இருந்தது அவனுக்கு. தனக்கு இதுவரை இது தெரியாமல் இருந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டவன், "பாட்டி இல்லை கிளம்பிட்டாங்கன்னு நினைக்கிறேன்." என்றான்.
தன் கை கடிகாரத்தை பார்த்தவள், "ஓ அப்படியா சரிங்க நான் வெளிய போய் சாப்டுக்கிறேன்." என்று செல்ல திரும்பினாள்.
"ஒரு நிமிஷம்." என்றான் அவசரமாய்.
"உங்களுக்கு பிரச்சனை இல்லன்னா எங்க வீட்டிலேயே சாப்பிடலாம். பாட்டி எனக்கு நிறைய தான் சமைச்சு வச்சுட்டு போய் இருக்காங்க." என்றான் தயங்கியபடி.
"இல்ல இருக்கட்டும் பரவாயில்லை எதுக்கு உங்களுக்கு சிரமம்.. நான் வெளியே போய் சாப்பிட்டுக்குறேனே.. " என்றாள் அவளும் தயங்கியபடி.
"அதெல்லாம் ஒரு சிரமும் இல்லைங்க எனக்கு எதிர் பிளாக்ல இருக்கேன்னு சொல்றீங்க ஆனா எனக்கு இதுவரைக்கும் தெரியாது. எனக்கு எந்த தொந்தரவும் இல்ல வந்து சாப்பிடுங்க வாங்க. " என்றான் வீரா.
அவளுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.. அவன் அனுமதியோடு அவன் வீட்டிற்குள் முதல் முதலாக வலது காலை எடுத்து வைத்து நுழைந்தாள்.
சோர்ந்தபடி மீண்டும் சமையலறைக்குள் செல்ல போக, "என்ன ஆச்சு உங்களுக்கு உடம்பு சரியில்லையா?" என்றாள்.
அவன் திரும்பி அவளை பார்க்க, "இல்ல பார்க்க ரொம்ப சோர்வா தெரியுறீங்க அதான் கேட்டேன்." என்றாள்.
"ஆமாங்க காலையிலிருந்து என்னவோ உடம்பு ஒரு மாதிரி இருக்கு ஃபீவர் வரப்போகுதுன்னு நினைக்கிறேன்." என்றான்.
"ஒரு நிமிஷம் இதோ வந்துடறேன்." என்று வேகமாய் எதிரில் இருந்த தன் வீட்டுக்கு சென்றாள். சில நொடிகள் கழித்து கையில் ஸ்டெதஸ்கோப்புடன் மருத்துவ கிட்டுடனும் வீட்டுக்குள் நுழைந்தாள்.
அவளை ஆச்சரியமாய் பார்த்தவன், "நீங்க மெடிக்கல் ஸ்டூடண்டா?" என்றான்.
"ஆமாங்க பீடியா இன்னும் 6 மாதத்தில் முடியுது." என்று உள்ளுக்குள் அவனுடன் பேசும் ஒவ்வொரு நொடியையும் அவள் இதயத்தில் தங்க எழுத்துகளில் பொறித்துக் கொண்டிருந்தாள்.
"அது சரி நான் என்ன குழந்தையா? பிடியா டாக்டர் நீங்க எனக்கு பார்க்க.." என்றான் கிண்டலாய்.
"நான் முதலில் ஒரு ஜெனரல் டாக்டர், அப்புறம் தான் பிடியா டாக்டர். இருந்தாலும் நான் வைத்தியம் பார்க்கிற எல்லோரும் என் கண்ணுக்கு குழந்தைங்க தான்." என்று புன்னகைத்து ஸ்டேதஸ்கோப்பை மாட்டிக் கொண்டு அவனை பரிசோதிக்கத் நெருங்கினாள்.
"எ... என்ன பண்றிங்க?" என்றான் மயில் வீரா.
"உங்களை டெஸ்ட் பண்ண போறேன்." என்று அவனுக்கு வைத்தியம் பார்த்தாள்.
"பிவர் ஹையா இருக்கு. மழைல நனைஞ்சிங்களா?" என்று கேட்டாள்.
"ஆமாங்க நேத்து மழைல கொஞ்சம் நனைஞ்சுட்டேன்." என்றான்.
"அதான் பீவர் வந்திருக்கு. என்ன சாப்டிங்க?"
"இப்போ இன்னும் சாப்பிடல. இனி தான் சாப்பிடணும்." என்று தன் முன்னால் இருந்த தட்டை காட்டினான்.
'அடடா இவருக்கு பீவர் னு தெரியாம இவருக்கு பிடிச்ச மீன் குழம்பு செஞ்சு வச்சுட்டேனே. சாப்டாம விட மாட்டாரே.' என்று உள்ளுக்குள் வருந்தியவள்.
"ஜுரம் அடிக்கும் போது இந்த மாதிரி புட் சாப்பிட கூடாது." என்றவளை பாவமாய் பார்த்தவன், "ஏங்க எனக்கு மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும். அதை போய் சாப்பிட கூடாதுன்னு சொல்றிங்க... அதுவும் பாட்டி எனக்காக பார்த்து பார்த்து செய்ற மீன் குழம்பு எவ்ளோ டேஸ்ட்டா இருக்கும் தெரியுமா? ஒன்னு செய்யலாம். இந்த சாப்பாட்டை நான் சாப்பிடுடறேன். அப்புறம் நீங்க மாத்திரை கொடுங்க போட்டுக்குறேன்." என்றவனை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள்.
'நம்ம சமைச்ச சாப்பாடு இவருக்கு இவ்ளோ பிடிக்கிது பரவால்ல நாம சமைக்க கத்துக்கிட்டது வேஸ்ட்டா போகல.' என்று நினைத்தவள், "சொன்னா கேட்கணும். நான் இந்த குழம்பை பிரிட்ஜ்ல வச்சுடறேன் உடம்பு சரியான பிறகு நீங்க சாப்பிடுங்க. இருங்க வரேன்." என்று சென்றவள் வெந்நீர் எடுத்து வந்து அவன் நெற்றியில் பத்து போட்டாள்.
“அப்படியே ரெண்டு நிமிஷம் படுத்திருங்க இதோ வரேன்." என்று சமையலறைக்குள் நுழைந்தவள் வேகமாக அவன் சாப்பிட அரிசி, சீரகம் வறுத்து பொடித்து கஞ்சி செய்தாள். புதினா துவையல் அரைத்து எடுத்து வந்து அவனை எழுப்பினாள்.
"என்னங்க இந்தாங்க எழுந்திருங்க சாப்பிட்டு டேப்லெட் போட்டு படுத்துக்கோங்க. ஜுரம் குறையும்." என்று கூறி கஞ்சியை கொடுத்தாள்.
கஞ்சியை குடிக்கக் கூட முடியாமல் அவன் கரம் நடுங்க தட்டை வாங்கி தானே ஊட்ட போக அவளை விழிகள் விரித்து அதிர்ச்சியாய் பார்த்தான்.
"என்ன பார்க்கிறிங்க? இப்போ நீங்க சாப்பிடலைன்னா ஹாஸ்பிட்டல் பெட்ல தான் நம்மளோட அடுத்த மீட் இருக்கும் எதையும் யோசிக்காம சாப்பிடுங்க." என்று அதட்டி கஞ்சி புகட்டி மாத்திரை கொடுத்து தூங்க சொன்னாள்.
"நீங்க முதல்ல சாப்பிடுங்க அப்போ தான் தூங்குவேன்." என்று அடமாய் கூறிவிட வேறு வழியில்லாமல் அவனுக்கு போட்டு வைத்திருந்த தட்டை எடுத்து சாப்பிட போக, "ஐயோ அது வேணாம்ங்க அது ஆறி போயிருக்கும் அதுவும் இல்லாம அதுல ஒரு வாய் நான் சாப்பிட்டேன்." என்றதும் புன்னகைத்தவள், "பிரெண்ட்ஸ்குள்ள இதெல்லாம் சகஜம்ங்க. அதுவும் இல்லாம இவ்ளோ சாப்பாட்டை வேஸ்ட் பண்ண முடியாது. அதனால நானே சாப்பிடறேன்." என்று சாப்பிட்டாள்.
மன்னவனின் கரம் பட்ட உணவை உண்ண கசக்குமா என்ன? அமிர்தம் போல் இனித்தது. உள்ளுக்குள் தான் பிறந்ததற்கான பலன் அடைந்துவிட்டது போல் அப்படி ஒரு பேரானந்தம்.
அவன் உறங்கவும் தனியே விட மனம் வராமல் அவளும் அங்கேயே அமர்ந்து படிக்கத் தொடங்கினாள்.
இரண்டு மணி நேரம் கழித்து கண் விழித்தவன் கண்டது எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தபடி புத்தகத்தை மார்பில் வைத்தபடி உறங்கும் அபியை தான்.
வீரா எழுந்து முகம் கழுவி வரவும் எழுந்து அமர்ந்திருந்தாள்.
"சாரி. உடம்பு சரி இல்லாதவரை தனியா விட்டுட்டு போக மனசு வரல அதான் இங்கயே உட்கார்ந்து படிச்சுட்டு இருந்தேன். எப்படி தூங்கனேன்னு தெரியல. இப்போ உங்களுக்கு எப்படி இருக்கு?" என்று கேட்டாள்.
"ஹ்ம் இப்போ பரவால்லங்க." என்று கூறியவன், "இங்க எவ்ளோ நாளா இருக்கீங்க?" என்றான்.
"கொஞ்ச நாளா தான். படிப்பு முடிஞ்சதும் இந்தியா போய்டுவேன்." என்றாள்.
"ஓஹ் சரிங்க."
"சரிங்க பால் காய்ச்சு வச்சுருக்கேன். நயிட் பால் பிரெட் மட்டும் சாப்பிட்டு மாத்திரை போடுங்க. நாளைக்கு எனக்கு ப்ராக்டிகல் இருக்கு. சோ, காலைலயே போய்டுவேன். உடம்பை பார்த்துக்கோங்க நாளைக்கு ரெஸ்ட் எடுத்துக்கோங்க அப்போ தான் நல்லா இருக்கும். நான் வரேன்." என்று கூறிவிட்டு வெளியேறினாள்.
அதில் இருந்து ஒரு மெல்லிய நட்பு இருவருக்கும் உருவாகி இருந்தது.
மறுநாள் காலை எழுந்து கண் விழித்து கதவை திறந்தவனின் முன் கீழே ஒரு கூடை இருந்தது.
உள்ளே எடுத்து சென்று பார்த்தால் மூன்று டிபன் பாக்ஸ் இருந்தது.
"இன்றும் பாட்டிக்கு உடல்நிலை முடியாததால் வர மாட்டாராம். அதனால காலை சாப்பிட கஞ்சி, மதயம் ரசம் சாதம் இருக்கின்றது. இரவு பால் பிரெட் சாப்பிடுங்கள். கட்டாயம் வெளி உணவை தவிர்க்கவும்." என்று இருந்தது ஒரு துண்டு காகிதத்தில். பார்த்ததும் புன்னகை மலர உள்ளே எடுத்து சென்று சாப்பிட்டான்.
அதோடு அடுத்த மூன்று மாதங்கள் மிக வேகமாக ஓடியது. அவ்வப்பொழுது இருவரும் பார்ப்பதும் புன்னகைப்பதும் ஒரு சில விசாரிப்புகளும் வாடிக்கையானது. அவனை பொறுத்தவரை அப்படி தான் நடந்து கொண்டிருந்தது. ஆனால் அபி எப்பொழுதும் போல் தன் பணிவிடைகளால் அவனுக்கே தெரியாமல் அவனுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.
ஒரு நாள், "பாட்டி நேத்து வச்சுக் கொடுத்த நண்டு ரசம் வேற லெவல். எங்க இருந்து தான் இவ்ளோ அருமையா சமைக்க கத்துக்கிட்டிங்களோ... தாத்தா உங்க சமையலுக்கு அடிமையா இருந்திருப்பாரே.. கொடுத்து வச்ச மனுஷன். சமைக்கும் உங்க கைக்கு ஒருநாள் தங்க காப்பு செஞ்சு போடறேன்."
இன்னொரு நாள், "இன்னைக்கு வச்சிருந்த புதினா மிளகு ரசம் அட்டகாசம். எனக்கு இருந்த ஜலதோஷம் எங்க போச்சுன்னே தெரியலை பாட்டி. ஐ லவ் யூ பாட்டிம்மா." என்று அவர் கன்னத்தில் முத்தமிடுவான்.
இன்னொரு நாள், "பாட்டி ஆனாலும் உங்க கைல மேஜிக் தான் இருக்கு. எப்படி என்னோட ரூமை இவ்ளோ அழகா மாத்தினீங்க? ஆனாலும் கலக்குறீங்க." என்று புகழுவான்.
"பாட்டி என் ரூம்ல மாட்டிருக்க பெயின்டிங்ஸ் எல்லாம் எங்க வாங்குனீங்க? இது எல்லாம் பார்க்கும் போது வெறும் ஓவியம் மாதிரி தெரியலை. ஒவ்வொரு படத்துலயும் உயிர் இருக்கு. அவ்ளோ அழகா இருக்கே.. அதுவும் இந்த பொண்ணோட கண்ணில இருக்க ஏக்கம் எனக்குள்ள ஏதோ சொல்ற மாதிரி இருக்கு." என்று கேட்டான்.
"நான் எங்க பா இதெல்லாம் வாங்குனேன். எதிரில் இருக்கா பாரு அன்பு அவ கிட்ட கேட்டேன். அவ தான் போன்ல வாங்கி கொடுத்தா." என்று சமாளித்தார்.
"ஓஹ் அவ செலக்ட் பண்ணதா ரொம்ப அருமையா இருக்கு." என்று பாராட்டி ஒவ்வொன்றையும் தினமும் தூங்கும் முன் ரசிப்பான். ஆனால் அதில் இருந்த பெயரை கவனிக்க தவறி விட்டிருந்தான் என்பது அவன் துரதிஷ்டம்.
இவனின் ஒவ்வொரு சேட்டையையும் அவன் அறியாமல் இவள் ரசிப்பாள். மொத்தத்தில் அவளின் முழு உலகமும் அவன் மட்டுமே... அதுவும் அவன் அறியா உயிர் காதல். எப்பொழுது இவனுக்கு தெரியப்படுத்த போகின்றாளோ?...
இன்னும் மூன்று மாதங்களில் அவளின் படிப்பு முடிய போகின்றது என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மூன்று மாதங்கள் முடிந்த பின் அவன் இல்லாமல் அவனை காணாமல் அவனுக்கென்று எதுவும் செய்யாமல் எப்படி இருக்க போகின்றேன் என்று எண்ணியே தினமும் மருகினாள்.
அதன்விளைவு அவனிடம் தன் நேசத்தை கூற வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாள்.