#கதை_விமர்சனம்
இன்பா அலோஷியஸின் மாதும்மை.
சிக்கலான கரு,அதை சிறப்பாக எழுதியிருக்காங்க.தாம்பத்திய பிரச்சினைகளை லாவகமாக எழுதுவாங்க.இதிலும் சிறு வயதில் பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண் தன் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் மன சிக்கல்களை கடந்து வருவதுதான் கதை.
குழந்தைகளை சீண்டுவர்களுக்கு தெரியாது,அவர்கள் மனதில் படிந்து விடும் ஆண்கள் வெறுப்பு.
அதனால் அவளும் அவளின் குடும்பமும் அடையும் பாதிப்புகள்.தைரியமாக கடந்து விடுபவர்களுக்கு பிரச்சினையில்லை.மாதும்மை போன்றவர்கள் ஆணை பார்த்தாலே அலறியடித்து ஓடுபவள்.ஆணின் கரம் நீண்டால் அவள் நடுங்குவது ஒரு குழந்தையாக இருக்கும் போது அடைந்த வேதனையை நமக்கு அப்படியே கடத்துகிறது.
அபயன் போல் ஆண்கள் எல்லாம் நிஜத்தில் இருந்தால் அவர்கள் தெய்வம்.படிப்படியாக மாதும்மையை மாற்றுகிறான்.கொஞ்சம் கதை நீண்டு விட்டதாக எனக்கு தோன்றியது.குறைத்திருக்கலாம்.அந்த ஆட்டிஸம் குழந்தை பாத்திரம் மனதில் நின்றுவிட்டது.பூமிகா படம் பார்க்கும்போது எனக்கு அந்தக்குழந்தைதான் நினைவுக்கு வந்தாள்.மன நலம் பற்றிய தகவல்கள் நல்லா இருக்கு.