- Messages
- 60
- Reaction score
- 123
- Points
- 18
அத்தியாயம் 8:
கோயிலுக்கு நல்லபடியாகவே போய்ச் சேர்ந்தார்கள். ஒரே கூட்டம். குட முழுக்கு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆங்காங்கே பந்தல்கள் போட்டு பலர் அதில் அமர்ந்திருந்தனர். பக்கத்தில் இருந்த டீக்கடைகளில் டீ, காப்பி வியாபாரம் வெகு வேகமாக நடந்து கொண்டிருந்தது. மதிய உணவுக்கான பந்தல்கள் அங்காங்கே காணப்பட்டன. வரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும் போலத் தெரிந்தது. அந்த இடமே தெய்வீகமான அதிர்வுகளோடு காணப்பட்டது.
"இந்தக் கூட்டத்துல கரிய மாணிக்கத்தை எங்கே தேடுறது?' என்றான் பாலா.
மிகச் சரியாக அந்த நேரம் ஃபோன் வரவே எடுத்தான்.
"தம்பி! நாங்க உங்களைப் பார்த்துட்டோம். நீங்க அப்படியே இடது பக்கம் திரும்பி ஒரு மண்டபம் இருக்கு இல்ல? அங்க வாங்க" என்றார் கரிய மாணிக்கம்.
"அதோ அங்க இருக்காரு" என்றான் பாலாவும்.
இருவரும் சென்றனர். அங்கே நீண்ட ஜடாமுடியோடு ஒரு மனிதர் இவர்களை விழித்துப் பார்த்தபடி இருந்தார். கண்கள் இரண்டும் செக்கச் செவேலெனத் தெரிந்தன. நெற்றியில் பட்டையாகக் குங்குமம். அதுவும் ரத்தச் சிவப்பு நிறத்தில். ஒரே ஒரு வேட்டி மட்டும் அணிந்திருந்தார். அதுவும் காவி நிறம் தான். மேலே ஏதோ ஒரு துண்டைப் போர்த்தியிருந்தார்.
"சார்! இவரு ஏன் எங்களை இப்படிப் பார்க்குறாரு?' என்றான் வெங்கி.
"என்ன தம்பி நீங்க? இவரு தான் சாமிக்கண்ணு சித்தர். உங்களை இங்கே வர வெச்சதே இவரு தான்." என்றார்.
இந்த மனிதரை எவ்வளவு தூரம் நம்ப முடியும்? இவரும் ஏன் நித்யமல்லியின் ஆளாக இருக்கக் கூடாது? என எண்ணினான்.
"கும்பிடுறேன் சாமி" என்றான் பாலா.
"நல்லா இருப்பா தம்பி! உன் மேலயும் நித்யமல்லியோட ஆதிக்கம் இருக்குப்பா" என்றார்.
"சாமி! நாங்க வந்து...." என்று இழுத்தான் வெங்கி.
"தம்பி! இது உங்களுக்கு ரொம்ப சோதனையான கால கட்டம். உங்க முன்னால ரெண்டு வழி இருக்கு. ஒண்ணு ரொம்ப சுலபம் ஆனா தவறு. இன்னொண்ணு ரொம்ப ரொம்பக் கடினம் ஆனா அது தான் நல்லது" என்றார்.
அவரது குரல் ஏனோ வெங்கியைக் கவர்ந்தது.
"சாமி! எங்க வாழ்க்கையில என்ன நடக்குதுன்னே தெரியல்ல சாமி! கொஞ்ச நாள் முன்னால வரையில நாங்க சாதாரண இளைஞர்கள். எங்களுக்கு காதல், கல்யாணம் இதெல்லாம் தான் கனவா இருந்தது. ஆனா ஒரே நாள்ல எங்க வாழ்க்கையே மாறிடிச்சு சாமி! உயிர் வாழுறதே கனவா இருக்கு" என்றான் வெங்கி.
"எல்லாத்துக்கும் விளக்கம் மே நான் சொல்றேன்ப்பா! ஆனா முதல்ல நீங்க வனப்பேச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை தரிசியுங்க. அப்ப எனக்கு சில நிமித்தங்கள் கிடைக்கும். அதை வெச்சு உன் பாதை எது? நீ எந்தப் பாதையில போவேன்னு நான் முடிவு செஞ்சிருவேன். பிறகு தான் நான் பேசுறதும் பேசாததும்." என்றார்.
"நீங்க பேசுறது எதுவுமே எனக்குப் புரியல்ல சாமி" என்றான் வெங்கி.
"அப்படித்தான் இருக்கும். கரிய மாணிக்கம். நீ இவங்களைக் கூட்டிக்கிட்டு கோயிலுக்குள்ள போ! முக்கியமா கும்பாஷிகேத்தின் போது மந்திர நீர் தெளிப்பாங்க. அது இவங்க மேல படுறா மாதிரி நிக்க வையி" என்றார்.
"நீங்க வரலியா சாமி?" என்றான் பாலா.
"கட்டாயம் வருவேன். முதல்ல நீங்க போங்க" என்று அவர்களை அனுப்பி வைத்தார்.
மூவரும் கூட்டத்தில் கலந்தனர். கோயில் சிறியது தான் ஆனால் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. விலக்கிக் கொண்டு நடந்தனர். கர்ப்பகிரகம் எதிரே வந்த போது வெங்கியின் உடல் குலுங்கியது. குமட்டல் வேறு எடுத்தது.
"என்னப்பா?"
"என்னன்னு தெரியல்ல! என்னவோ பண்ணுது. வாந்தி வரா மாதிரி இருக்கு" என்றான்.
கவலையுடன் அவனைப் பார்த்தார் கரியமாணிக்கம்.
"தயவு செஞ்சு கொஞ்சம் பொறுத்துக்கோப்பா! உன்னால எவ்வளவு சமாளிக்க முடியுமோ சமாளி." என்றார்.
பாவம் வெங்கி அவன் தலை சுற்றியது. இருந்தும் பாலாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு கர்ப்பகிரகத்துக்கு நேரே வந்தான். அம்மனின் நெற்றியில் இருந்த பொட்டு ஒளி வீசியது. அடி வயிற்றில் என்னென்னவோ உணர்வுகள். வலி வேறு.
"வெங்கி! கண்ணை நல்லா மூடிக்கிட்டு என் கையைப் பிடிச்சுக்கோ. வனப்பேச்சி இது வரைக்கும் நமக்கு நல்லது தான் செஞ்சிருக்கா. மனசார கும்பிட்டுக்கோடா! நம்ம கஷ்டமெல்லாம் பறந்து போயிரும்" என்றான் பாலா.
நண்பனது குரல் மிகவும் ஆறுதலாக இருக்க கண்களை இறுக மூடினான். அவனால் பிரார்த்தனை செய்யவே முடியவில்லை. தேவையில்லாத பல உணர்வுகள், காட்சிகள் வந்து போயின. மனதை ஒருமுகப்படுத்தினான். தலை விண் விண் எனத் தெறித்தது. தலையே இரண்டாகப் பிளந்து விடும் போன்ற வலி. தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை வெங்கிக்கு.
கஷ்டப்பட்டு மீண்டும் மனதை ஒரு முகப்படுத்தினான்.
"தாயே! வனப்பேச்சியம்மா! நான் என்ன தவறு செஞ்சிருந்தாலும் என்னை மன்னிச்சுக் காப்பாத்தும்மா! என்னைச் சுற்றி ஏதோ தீய சக்திகள் இருக்கா மாதிரி தெரியுது. ஆனா நான் உங்கிட்ட வந்துட்டேன். என்னை நல்ல வழியில நடத்த வேண்டியது உன் பொறுப்பும்மா" என்றான்.
சில நொடிகள் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஒரே இருட்டு. பிறகு மெல்ல மெல்ல வெளிச்சம் வந்தது. பட்டுப் போன்ற இதமளிக்கும் தங்க வெளிச்சம். மெல்லக் கண்களைப் பிரித்தான்.
"இப்ப எப்படி இருக்கு வெங்கி?"
பாலாவின் குரல் தான் நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்தது அவனை.
"என்ன? எனக்கு என்ன ஆச்சு?" என்றான் வெங்கி. அவன் குரலில் கவலை.
"இப்ப உனக்கு தலை சுத்தல், வாந்தி ஏதாவது இருக்கா?" என்றார் கரியமாணிக்கம்.
அப்போது தான் உணர்ந்தான். உடலில் எங்கும் வலியே இல்லை. இன்னும் சொல்லப் போனால் புத்துணர்ச்சியாக இருந்தது. புதிய வலுவும் தெம்பும் பிறந்தது.
"இல்ல சார்! எதுவும் இல்ல! சொல்லப் போனா ரொம்ப தெம்பா இருக்கு" என்றான்.
முகம் மலர்ந்தது கரியமாணிக்கத்துக்கு.
"முதல்ல வா! வெளிய கும்பாபிஷேகம் நடக்குது. அந்த மந்திர நீரை இப்ப தெளிப்பாங்க. அது உன்மேல பட்டாகணும்" என்று அவனை அழைத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தார் கரியமாணிக்கம்.
அவரை விட வேகமாக நடந்தான் வெங்கி. பின் தொடர்ந்தான் பாலா. அவர்கள் வெளியே செல்லவும் மந்திர நீர் தெளிக்கப்படவும் சரியாக இருந்தது. அந்த நீர்த்துளிகள் மேலே விழ விழ மனம் நிம்மதியானது. அம்மனின் அருள் நம்மைக் காக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது.
"இது போதும்! வாங்க! உங்க கூடப் பேசணும்" என்ற குரலில் திரும்பினான்.
சாமிக்கண்ணு சித்தர் சிரித்தபடி நின்றிருந்தார். மூவரும் அவரைத் தொடர்ந்தனர். இப்போது நேரே ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்றான். அது ஒரு அரச மரம். குளுமையான நிழலை பரப்பியபடி நின்றிருந்தது. அதன் கீழே வட்டமான திட்டு போல அமைக்கப்பட்டிருந்தது. யாரோ ஒரு புண்ணியவான் நிழலுக்கு ஒதுங்கும் மக்கள் அமர வசதியாகக் கட்டி வைத்திருந்தார். கூட்டம் அத்தனையும் கோயிலுக்குள்ளேயும் வெளியேயும் இருக்க அங்கே ஆள் நடமாட்டமே இல்லை.
மூவரும் அமர்ந்தனர்.
"தம்பி! நீ நல்ல பாதையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கே! ஆனா அதுல பயணம் செய்யுறது அத்தனை சுலபம் இல்ல! நிறைய சோதனைகளை சந்திக்க வேண்டி வரலாம். தெரியும் இல்ல?" என்றார் சித்தர் சாமிக்கண்ணு வெங்கியை நோக்கி.
"நீங்க பேசுறது எனக்கு இன்னமும் புரியல்ல. நான் நல்ல பாதையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கேன்னா, தவறான பாதையை நான் தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு இருந்ததா? அது என்ன நல்ல பாதை? தவறான பாதை? என்னன்னே தெரியாம நான் எப்படி நல்ல பாதையைத் தேர்ந்தெடுத்தேன்னு சொல்றீங்க?" என்று அடுக்கினான் வெங்கி.
"சபாஷ் தம்பி! இதைத்தான் நான் உங்கிட்ட எதிர்பார்த்தேன். எல்லாமே உங்களுக்கு விளக்கமா சொல்ல நான் கடமைப்பட்டிருக்கேன். கரியமாணிக்கம் நீங்க நித்யமல்லியை விடுவிச்சதா சொன்னான். அதை உங்க வாயால கேக்க நான் விரும்புறேன். சொல்றீங்களா?" என்றார்.
வெங்கி கொஞ்சமும் பாலா கொஞ்சமுமாக சொல்லி முடித்தனர். அவர்கள் பேசப் பேசவே "தாயே! வனப்பேச்சி" என்று அவ்வப்போது சொல்லி வந்தார் சாமிக்கண்ணு சித்தர்.
"இப்ப சொல்லுங்க சாமி! நாங்க என்ன தப்பு செஞ்சோம்?" என்றான் பாலா.
சற்று நேரம் எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தார் சித்தர். காலை வித்தியாசமாக சம்மணமிட்டு கைகளை உயரத்தூக்கி வணங்கினார்.
"தம்பிங்களா! நீங்க இப்ப வரைக்கும் உயிரோட இருக்கீங்கன்னா அதுக்கு வனப்பேச்சி தான் காரணம். அது மட்டுமில்ல, நித்யமல்லி ஆதித்தனை அடையாளம் கண்டுக்கிட்டா, அதனால அவ வேலை முடியுற வரைக்கும் அவ உங்களை விட்டு வெச்சிருப்பா." என்றார்.
"நாங்க ஆதித்தன்னு யாரையும் கூட்டிக்கிட்டுப் போகலையே சாமி? பாலாவும் நானும் மட்டும் தான் போனோம். மைக்கேலும், இன்னொருத்தனும் வரல்ல" என்றான்.
"உம்! சரி! உன் கண்ணுக்குத் தட்டுப்பட்ட குடிசை புகை இதெல்லாம் மைக்கேலுக்கும் தெரியல்ல, பாலாவுக்கும் தெரியல்ல இல்லியா?"
"ஆமா"
"அதைப் பத்தி நீ யோசிச்சிருக்கியா?"
"என் கண்ணு ரொம்ப கூர்மையானது. அவ்வளவு தானே?"
"சரி! அப்படியே வெச்சுப்போம். ஆனா நீங்க தேக்கு மர எல்லையைக் கடந்ததும் அந்த பங்களாவும், மதில் சுவரும் பாலா கண்ணுக்கும் தெரிஞ்சது இல்ல?"
"என்ன சாமி நீங்க? அங்க இருக்குறது பக்கத்துல வந்து கூடத் தெரியல்லேன்னா எப்படி?" என்றான் பாலா.
"நீ நினைக்குறது தப்பு பாலா. தேக்கு மர எல்லையோட வெளிப்பக்கம் இருந்து நீ பார்த்திருந்தா அது உனக்குத் தெரிஞ்சிருக்காது."
"என்ன சாமி சொல்றீங்க?"
"ஆதித்தன் பாவநாச மலைக்காட்டுக்குள்ள நுழைஞ்சதுமே நித்யமல்லி அவனை கட்டுக்குள்ள கொண்டு வந்துட்டாப்பா! அதனால தான் அவன் கண்ணுக்கு குடிசை, அதுல வர புகை எல்லாமே தெரிஞ்சது. அவனும் விதி வசத்தால தேக்கு எல்லையைத் தாண்டிப் போயிட்டான். நல்ல நேரத்துல அம்மா வந்து உன்னைக் காப்பாத்தினாங்க" என்றார் சித்தர்.
"நீங்க சொல்றது எங்களுக்கு தலையும் புரியல்ல! வாலும் புரியல்ல! ஆதித்தன் யாரு? அவனை ஏன் நித்யமல்லி கட்டுக்குள்ள கொண்டு வரணும்? அவனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? விளக்கமா சொல்லுங்க சாமி ப்ளீஸ்" என்றான் வெங்கி.
"நீ நினைக்குறா மாதிரி மறு ஜென்மம் தான் இது. ஆனா சில தொடர்புகள் இருக்கு."
என்று சொல்லி விட்டு மரத்தின் மேல் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.
"இது நடந்து கிட்டத்தட்ட ஐநூறு வருசம் இருக்கும். அப்ப பாவநாச மலைப்பக்கம் எல்லாம் ஒரே காடு" என்று ஆரம்பித்துச் சொல்லத் தொடங்கினார்.
கோயிலுக்கு நல்லபடியாகவே போய்ச் சேர்ந்தார்கள். ஒரே கூட்டம். குட முழுக்கு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆங்காங்கே பந்தல்கள் போட்டு பலர் அதில் அமர்ந்திருந்தனர். பக்கத்தில் இருந்த டீக்கடைகளில் டீ, காப்பி வியாபாரம் வெகு வேகமாக நடந்து கொண்டிருந்தது. மதிய உணவுக்கான பந்தல்கள் அங்காங்கே காணப்பட்டன. வரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும் போலத் தெரிந்தது. அந்த இடமே தெய்வீகமான அதிர்வுகளோடு காணப்பட்டது.
"இந்தக் கூட்டத்துல கரிய மாணிக்கத்தை எங்கே தேடுறது?' என்றான் பாலா.
மிகச் சரியாக அந்த நேரம் ஃபோன் வரவே எடுத்தான்.
"தம்பி! நாங்க உங்களைப் பார்த்துட்டோம். நீங்க அப்படியே இடது பக்கம் திரும்பி ஒரு மண்டபம் இருக்கு இல்ல? அங்க வாங்க" என்றார் கரிய மாணிக்கம்.
"அதோ அங்க இருக்காரு" என்றான் பாலாவும்.
இருவரும் சென்றனர். அங்கே நீண்ட ஜடாமுடியோடு ஒரு மனிதர் இவர்களை விழித்துப் பார்த்தபடி இருந்தார். கண்கள் இரண்டும் செக்கச் செவேலெனத் தெரிந்தன. நெற்றியில் பட்டையாகக் குங்குமம். அதுவும் ரத்தச் சிவப்பு நிறத்தில். ஒரே ஒரு வேட்டி மட்டும் அணிந்திருந்தார். அதுவும் காவி நிறம் தான். மேலே ஏதோ ஒரு துண்டைப் போர்த்தியிருந்தார்.
"சார்! இவரு ஏன் எங்களை இப்படிப் பார்க்குறாரு?' என்றான் வெங்கி.
"என்ன தம்பி நீங்க? இவரு தான் சாமிக்கண்ணு சித்தர். உங்களை இங்கே வர வெச்சதே இவரு தான்." என்றார்.
இந்த மனிதரை எவ்வளவு தூரம் நம்ப முடியும்? இவரும் ஏன் நித்யமல்லியின் ஆளாக இருக்கக் கூடாது? என எண்ணினான்.
"கும்பிடுறேன் சாமி" என்றான் பாலா.
"நல்லா இருப்பா தம்பி! உன் மேலயும் நித்யமல்லியோட ஆதிக்கம் இருக்குப்பா" என்றார்.
"சாமி! நாங்க வந்து...." என்று இழுத்தான் வெங்கி.
"தம்பி! இது உங்களுக்கு ரொம்ப சோதனையான கால கட்டம். உங்க முன்னால ரெண்டு வழி இருக்கு. ஒண்ணு ரொம்ப சுலபம் ஆனா தவறு. இன்னொண்ணு ரொம்ப ரொம்பக் கடினம் ஆனா அது தான் நல்லது" என்றார்.
அவரது குரல் ஏனோ வெங்கியைக் கவர்ந்தது.
"சாமி! எங்க வாழ்க்கையில என்ன நடக்குதுன்னே தெரியல்ல சாமி! கொஞ்ச நாள் முன்னால வரையில நாங்க சாதாரண இளைஞர்கள். எங்களுக்கு காதல், கல்யாணம் இதெல்லாம் தான் கனவா இருந்தது. ஆனா ஒரே நாள்ல எங்க வாழ்க்கையே மாறிடிச்சு சாமி! உயிர் வாழுறதே கனவா இருக்கு" என்றான் வெங்கி.
"எல்லாத்துக்கும் விளக்கம் மே நான் சொல்றேன்ப்பா! ஆனா முதல்ல நீங்க வனப்பேச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை தரிசியுங்க. அப்ப எனக்கு சில நிமித்தங்கள் கிடைக்கும். அதை வெச்சு உன் பாதை எது? நீ எந்தப் பாதையில போவேன்னு நான் முடிவு செஞ்சிருவேன். பிறகு தான் நான் பேசுறதும் பேசாததும்." என்றார்.
"நீங்க பேசுறது எதுவுமே எனக்குப் புரியல்ல சாமி" என்றான் வெங்கி.
"அப்படித்தான் இருக்கும். கரிய மாணிக்கம். நீ இவங்களைக் கூட்டிக்கிட்டு கோயிலுக்குள்ள போ! முக்கியமா கும்பாஷிகேத்தின் போது மந்திர நீர் தெளிப்பாங்க. அது இவங்க மேல படுறா மாதிரி நிக்க வையி" என்றார்.
"நீங்க வரலியா சாமி?" என்றான் பாலா.
"கட்டாயம் வருவேன். முதல்ல நீங்க போங்க" என்று அவர்களை அனுப்பி வைத்தார்.
மூவரும் கூட்டத்தில் கலந்தனர். கோயில் சிறியது தான் ஆனால் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. விலக்கிக் கொண்டு நடந்தனர். கர்ப்பகிரகம் எதிரே வந்த போது வெங்கியின் உடல் குலுங்கியது. குமட்டல் வேறு எடுத்தது.
"என்னப்பா?"
"என்னன்னு தெரியல்ல! என்னவோ பண்ணுது. வாந்தி வரா மாதிரி இருக்கு" என்றான்.
கவலையுடன் அவனைப் பார்த்தார் கரியமாணிக்கம்.
"தயவு செஞ்சு கொஞ்சம் பொறுத்துக்கோப்பா! உன்னால எவ்வளவு சமாளிக்க முடியுமோ சமாளி." என்றார்.
பாவம் வெங்கி அவன் தலை சுற்றியது. இருந்தும் பாலாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு கர்ப்பகிரகத்துக்கு நேரே வந்தான். அம்மனின் நெற்றியில் இருந்த பொட்டு ஒளி வீசியது. அடி வயிற்றில் என்னென்னவோ உணர்வுகள். வலி வேறு.
"வெங்கி! கண்ணை நல்லா மூடிக்கிட்டு என் கையைப் பிடிச்சுக்கோ. வனப்பேச்சி இது வரைக்கும் நமக்கு நல்லது தான் செஞ்சிருக்கா. மனசார கும்பிட்டுக்கோடா! நம்ம கஷ்டமெல்லாம் பறந்து போயிரும்" என்றான் பாலா.
நண்பனது குரல் மிகவும் ஆறுதலாக இருக்க கண்களை இறுக மூடினான். அவனால் பிரார்த்தனை செய்யவே முடியவில்லை. தேவையில்லாத பல உணர்வுகள், காட்சிகள் வந்து போயின. மனதை ஒருமுகப்படுத்தினான். தலை விண் விண் எனத் தெறித்தது. தலையே இரண்டாகப் பிளந்து விடும் போன்ற வலி. தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை வெங்கிக்கு.
கஷ்டப்பட்டு மீண்டும் மனதை ஒரு முகப்படுத்தினான்.
"தாயே! வனப்பேச்சியம்மா! நான் என்ன தவறு செஞ்சிருந்தாலும் என்னை மன்னிச்சுக் காப்பாத்தும்மா! என்னைச் சுற்றி ஏதோ தீய சக்திகள் இருக்கா மாதிரி தெரியுது. ஆனா நான் உங்கிட்ட வந்துட்டேன். என்னை நல்ல வழியில நடத்த வேண்டியது உன் பொறுப்பும்மா" என்றான்.
சில நொடிகள் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஒரே இருட்டு. பிறகு மெல்ல மெல்ல வெளிச்சம் வந்தது. பட்டுப் போன்ற இதமளிக்கும் தங்க வெளிச்சம். மெல்லக் கண்களைப் பிரித்தான்.
"இப்ப எப்படி இருக்கு வெங்கி?"
பாலாவின் குரல் தான் நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்தது அவனை.
"என்ன? எனக்கு என்ன ஆச்சு?" என்றான் வெங்கி. அவன் குரலில் கவலை.
"இப்ப உனக்கு தலை சுத்தல், வாந்தி ஏதாவது இருக்கா?" என்றார் கரியமாணிக்கம்.
அப்போது தான் உணர்ந்தான். உடலில் எங்கும் வலியே இல்லை. இன்னும் சொல்லப் போனால் புத்துணர்ச்சியாக இருந்தது. புதிய வலுவும் தெம்பும் பிறந்தது.
"இல்ல சார்! எதுவும் இல்ல! சொல்லப் போனா ரொம்ப தெம்பா இருக்கு" என்றான்.
முகம் மலர்ந்தது கரியமாணிக்கத்துக்கு.
"முதல்ல வா! வெளிய கும்பாபிஷேகம் நடக்குது. அந்த மந்திர நீரை இப்ப தெளிப்பாங்க. அது உன்மேல பட்டாகணும்" என்று அவனை அழைத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தார் கரியமாணிக்கம்.
அவரை விட வேகமாக நடந்தான் வெங்கி. பின் தொடர்ந்தான் பாலா. அவர்கள் வெளியே செல்லவும் மந்திர நீர் தெளிக்கப்படவும் சரியாக இருந்தது. அந்த நீர்த்துளிகள் மேலே விழ விழ மனம் நிம்மதியானது. அம்மனின் அருள் நம்மைக் காக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது.
"இது போதும்! வாங்க! உங்க கூடப் பேசணும்" என்ற குரலில் திரும்பினான்.
சாமிக்கண்ணு சித்தர் சிரித்தபடி நின்றிருந்தார். மூவரும் அவரைத் தொடர்ந்தனர். இப்போது நேரே ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்றான். அது ஒரு அரச மரம். குளுமையான நிழலை பரப்பியபடி நின்றிருந்தது. அதன் கீழே வட்டமான திட்டு போல அமைக்கப்பட்டிருந்தது. யாரோ ஒரு புண்ணியவான் நிழலுக்கு ஒதுங்கும் மக்கள் அமர வசதியாகக் கட்டி வைத்திருந்தார். கூட்டம் அத்தனையும் கோயிலுக்குள்ளேயும் வெளியேயும் இருக்க அங்கே ஆள் நடமாட்டமே இல்லை.
மூவரும் அமர்ந்தனர்.
"தம்பி! நீ நல்ல பாதையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கே! ஆனா அதுல பயணம் செய்யுறது அத்தனை சுலபம் இல்ல! நிறைய சோதனைகளை சந்திக்க வேண்டி வரலாம். தெரியும் இல்ல?" என்றார் சித்தர் சாமிக்கண்ணு வெங்கியை நோக்கி.
"நீங்க பேசுறது எனக்கு இன்னமும் புரியல்ல. நான் நல்ல பாதையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கேன்னா, தவறான பாதையை நான் தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு இருந்ததா? அது என்ன நல்ல பாதை? தவறான பாதை? என்னன்னே தெரியாம நான் எப்படி நல்ல பாதையைத் தேர்ந்தெடுத்தேன்னு சொல்றீங்க?" என்று அடுக்கினான் வெங்கி.
"சபாஷ் தம்பி! இதைத்தான் நான் உங்கிட்ட எதிர்பார்த்தேன். எல்லாமே உங்களுக்கு விளக்கமா சொல்ல நான் கடமைப்பட்டிருக்கேன். கரியமாணிக்கம் நீங்க நித்யமல்லியை விடுவிச்சதா சொன்னான். அதை உங்க வாயால கேக்க நான் விரும்புறேன். சொல்றீங்களா?" என்றார்.
வெங்கி கொஞ்சமும் பாலா கொஞ்சமுமாக சொல்லி முடித்தனர். அவர்கள் பேசப் பேசவே "தாயே! வனப்பேச்சி" என்று அவ்வப்போது சொல்லி வந்தார் சாமிக்கண்ணு சித்தர்.
"இப்ப சொல்லுங்க சாமி! நாங்க என்ன தப்பு செஞ்சோம்?" என்றான் பாலா.
சற்று நேரம் எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தார் சித்தர். காலை வித்தியாசமாக சம்மணமிட்டு கைகளை உயரத்தூக்கி வணங்கினார்.
"தம்பிங்களா! நீங்க இப்ப வரைக்கும் உயிரோட இருக்கீங்கன்னா அதுக்கு வனப்பேச்சி தான் காரணம். அது மட்டுமில்ல, நித்யமல்லி ஆதித்தனை அடையாளம் கண்டுக்கிட்டா, அதனால அவ வேலை முடியுற வரைக்கும் அவ உங்களை விட்டு வெச்சிருப்பா." என்றார்.
"நாங்க ஆதித்தன்னு யாரையும் கூட்டிக்கிட்டுப் போகலையே சாமி? பாலாவும் நானும் மட்டும் தான் போனோம். மைக்கேலும், இன்னொருத்தனும் வரல்ல" என்றான்.
"உம்! சரி! உன் கண்ணுக்குத் தட்டுப்பட்ட குடிசை புகை இதெல்லாம் மைக்கேலுக்கும் தெரியல்ல, பாலாவுக்கும் தெரியல்ல இல்லியா?"
"ஆமா"
"அதைப் பத்தி நீ யோசிச்சிருக்கியா?"
"என் கண்ணு ரொம்ப கூர்மையானது. அவ்வளவு தானே?"
"சரி! அப்படியே வெச்சுப்போம். ஆனா நீங்க தேக்கு மர எல்லையைக் கடந்ததும் அந்த பங்களாவும், மதில் சுவரும் பாலா கண்ணுக்கும் தெரிஞ்சது இல்ல?"
"என்ன சாமி நீங்க? அங்க இருக்குறது பக்கத்துல வந்து கூடத் தெரியல்லேன்னா எப்படி?" என்றான் பாலா.
"நீ நினைக்குறது தப்பு பாலா. தேக்கு மர எல்லையோட வெளிப்பக்கம் இருந்து நீ பார்த்திருந்தா அது உனக்குத் தெரிஞ்சிருக்காது."
"என்ன சாமி சொல்றீங்க?"
"ஆதித்தன் பாவநாச மலைக்காட்டுக்குள்ள நுழைஞ்சதுமே நித்யமல்லி அவனை கட்டுக்குள்ள கொண்டு வந்துட்டாப்பா! அதனால தான் அவன் கண்ணுக்கு குடிசை, அதுல வர புகை எல்லாமே தெரிஞ்சது. அவனும் விதி வசத்தால தேக்கு எல்லையைத் தாண்டிப் போயிட்டான். நல்ல நேரத்துல அம்மா வந்து உன்னைக் காப்பாத்தினாங்க" என்றார் சித்தர்.
"நீங்க சொல்றது எங்களுக்கு தலையும் புரியல்ல! வாலும் புரியல்ல! ஆதித்தன் யாரு? அவனை ஏன் நித்யமல்லி கட்டுக்குள்ள கொண்டு வரணும்? அவனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? விளக்கமா சொல்லுங்க சாமி ப்ளீஸ்" என்றான் வெங்கி.
"நீ நினைக்குறா மாதிரி மறு ஜென்மம் தான் இது. ஆனா சில தொடர்புகள் இருக்கு."
என்று சொல்லி விட்டு மரத்தின் மேல் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.
"இது நடந்து கிட்டத்தட்ட ஐநூறு வருசம் இருக்கும். அப்ப பாவநாச மலைப்பக்கம் எல்லாம் ஒரே காடு" என்று ஆரம்பித்துச் சொல்லத் தொடங்கினார்.