- Messages
- 60
- Reaction score
- 123
- Points
- 18
அத்தியாயம் 25:
இரவு நேரம் வந்ததும் மனதில் பயம் வந்து அமர்ந்து கொண்டது வெங்கியின் மனதில். ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் இங்கே தங்கி விட்டோம். சரியான காடு போலத் தெரிகிறது. ஏதேனும் வன விலங்குகள் வந்தால் என்ன செய்ய? அது கூடப் பரவாயில்லை கோயில் கதவை சாத்தி விட்டால் பாதுகாப்புத்தான். இது போன்ற காடுகளில் பல தீயவர்கள் தங்கி இருக்கலாம். அவர்களால் திவ்யாவுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் ...?தெய்வமே...எங்களைக் காப்பாற்று" என மனமார வேண்டினான். ஆனால் பாலாவுக்கோ இல்லை மற்ற இருக்குவருக்குமோ இது போன்ற கவலைகள் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் பாட்டுக்குப் பேசிக்கொண்டிருந்தனர்.
நாளை பௌர்ணமி என்பதை நிலவு சொல்லாமல் சொல்லியது. அது வேறு கவலையை அதிகரித்தது வெங்கிக்கு. நாளை முழு நிலவு வானத்தின் உச்சியில் வருவதற்குள் நாங்கள் என்னென்ன செய்ய வேண்டும்? வாளையும், குத்தீட்டியையும் கண்டு பிடிக்க வேண்டும். சிவகாமி அம்மாளும், கரியமாணிக்கமும் வர வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக வண்டி மறிச்சியம்மன் கொடுத்த அம்புகள். அவைகளைப் பற்றி இன்னமும் எதுவும் தெரியவில்லை. இது எல்லாமே நடந்து விட்டது என்று வைத்துக்கொண்டால் கூட நித்யமல்லியையும், பொன்வண்டையும் அந்தக் காட்டு பங்களாவுக்கு எப்படி வரவழைப்பது? யோசிக்க யோசிக்க குழப்பம் அதிகமானதே தவிரக் குறையவில்லை.
மெல்லிய வாசனை வருவது போலத் தோன்றியது. மனதுக்கு இதம் தரும் மணம் அது. அவனையும் அறியாமல் கண்கள் மூடி நீண்ட நித்திரைக்குப் போனான் வெங்கி. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்? என்பதைக் கூட அவனால் கவனிக்க முடியாத அளவு உறக்கம் அவனை ஆழ்த்தியது. கண்கள் திறந்த போது, கரிய நிறத்தில் ஒருவர் அழகே உருவாக நின்றிருந்தார். அவரது அருகில் திவ்யா, ஜோசியர், பாலா என மூவரும் நின்றிருந்தனர். புரியாமல் விழித்தான் வெங்கி.
"நீங்க தேடுற அம்புகள் இருக்குற இடமும், நித்யமல்லியை காட்டு பாங்களாவுக்கு வரவழைக்கிற வழியும் தானே உங்களுக்குத் தெரியணும்?" என்றார் அவர். அவரைப் பார்க்கவே பரவசமாக இருந்தது. அழகென்றால் அப்படி ஒரு அழகு.
"ஆமா சார்"
"சரி அப்ப என் பின்னாடி வாங்க" என்று சொல்லி விட்டு விடு விடுவென நடக்க ஆரம்பித்தார். இரவு நேரத்தில் இப்படிக் கூட்டிப் போகிறீர்களே? எனக் கேட்க நினைத்தான் ஆனால் எதுவும் பேசாமல் பின்னால் நடந்தான் வெங்கி. அவனை மற்றவர்கள் பின் தொடர்ந்தனர். கோயிலுக்கு வெளியே சற்று தூரம் மலை ஏற்றத்தில் ஏறினார்கள். அங்கே ஒரு மரம் தனியாகத் தெரிவது போலத் தோன்றியது. அதை நோக்கித்தான் அந்த நபரும் நடந்தார்.
"உம்! இதுல ஏறு" என்றார் பாலாவை நோக்கி. அவன் திகைத்துப் போனான்.
"நான் வேணும்னா ஏறவா சார்? அவனுக்கு மரம் ஏறத் தெரியாது" என்றான் வெங்கி. அவனை விழித்துப் பார்த்தார் அந்த மனிதர். அவரது நீண்ட பெரிய வ்ழிகளில் ஏளனம்.
"நான் சொன்னதை மட்டும் தான் நீங்க செய்யணும். உம் பாலா..." என்றார்.
தயங்கித்தயங்கி மரத்தின் அருகில் சென்றான் பாலா. என்ன தோன்றியதோ தெரியவில்லை, ஏற ஆரம்பித்தான். கிளைகள் எல்லாம் வாகாக வளைந்து கொடுப்பது போலத் தோன்றியது. ஒரு குறிப்பிட்ட உயரம் வந்ததும் போதும் என்றார் அந்த நபர்.
"நீ உக்காந்திருக்குற இடத்துக்குப் பக்கத்துல ஒரும் பொந்து இருக்கா பாரு"
இருந்தது.
"அதுல கையை விடு!"
தயங்கினான் பாலா. மரப்பொந்து, அதில் என்ன இருக்குமோ? ஏதேனும் பாம்பு இருந்து கடித்து விட்டால் என்ன செய்ய? என்று அவன் யோசிக்கும் போதே பாம்பு ஒன்று சரசரவென அந்தப் பொந்திலிருந்து வெளியே வந்தது. நடுங்கிப் போனான் பாலா. கத்தவும் வாய் வராமல் அப்படியே அமர்ந்திருந்தான். ஆனால் பாம்பு அவனை ஒன்றும் செய்யவில்லை. ஒரு முறை தலையைத் திருப்பிப் பார்த்து விட்டுப் போய் விட்டது.
"அவன் தான் போயிட்டானே? இப்ப கையை விடு" என்றார் கீழே நின்றிருந்தவர். மற்றவர்களுக்கு என்ன வந்தது? என்ன போய் விட்டது? எனச் சொல்கிறார் என எதுவும் புரியவில்லை. பாலா நடுங்கும் கரங்களை அந்தப் பொந்தில் நுழைத்தான். ஏதோ தட்டுப்பட சட்டெனக் கைகளை எடுத்து விட்டான். உடலெங்கும் வியர்வை.
"தேடி அலைவீங்க! கெடச்சா கையை உதறுவியா நீ? எடு! எடு!" என்றார் அந்த நபர். மீண்டும் கைகளை விட்டுத் துழாவ ஏதோ துணி போலத் தென்பட்டது. அதை அப்படியே எடுத்தான்.
"கெடச்சிருச்சு இல்ல! கீழே இறங்கு. அவன் தூங்கணும்." என்றார் அவர். பதிலே பேசாமல் ஒரு கையால் அந்தத் துணி மூட்டையைப் பிடித்துக்கொண்டு மெல்ல இறங்கினான். பாலா கீழே இறங்கியதும் மீண்டும் அந்தப் பாம்பு வந்து பொந்தில் புகுந்து கொண்டது. கீழே நின்றிருந்தவர்களில் வெங்கி கையை நீட்டினான்.
"நீ இல்ல! திவ்யா நீ வாங்கு" என்றார் அந்த நபர். அவருக்கு அதிகாரமாகத்தான் பேச வருமோ? என நினைத்தான் வெங்கி. திவ்யா முன்னால் வந்து அந்த துணி மூட்டையை வாங்கிக்கொண்டாள். அதைத் தொட்டதும் அவளது தொண்டையில் இருந்து அலறல் கிளம்பியது. அவளது தலையில் கை வைத்தார் அந்த நபர். சட்டென அமர்ந்து விட்டாள் திவ்யா.
"சார்! நீங்க என்ன மந்திரவாதியா? என்னென்னமோ சொல்றீங்க? என்னென்னமோ செய்யுறீங்க? நீங்க யாரு சார்?" என்றான் வெங்கி சற்றே கோபமாக.
"உனக்கு கோபம் மட்டும் அடங்கலியோ? நான் யாரா இருந்தா உனக்கென்ன? உதவி தானே செய்யுறேன். பேசாம இரு." என்றவர் பாலாவை நோக்கினார்.
"கோயிலுக்குள்ள தீர்த்தம் இருக்கும். போயி எடுத்து வந்து உன் தங்கச்சிக்குக் குடு" என்றார். அப்படியே செய்தான் பாலா. ஒரு வாய் தீர்த்தம் உள்ளே போனதும் தெளிந்தாள் திவ்யா. சட்டென அந்த நபரை வணங்கினாள்.
"நீங்க யாரு என்னன்னு தெரியல்ல! ஆனா இதுக்குள்ள என்ன இருக்குன்னு எனக்குத் தெரிஞ்சிரிச்சு. வண்டிமறிச்சியம்மன் கொடுத்த அம்புகளை நான் இந்த மரத்துல தான் மறைச்சு வெச்சேன். இது என்னோட புடவை முந்தானை. எனக்கு நல்லா நினைவு வந்துட்டுது. ஆனா இத்தனை வருஷம், காத்து, மழை எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு, எப்படி இந்த துணி மூட்டை அப்படியே பத்திரமா இருந்ததுன்னு தான் தெரியல்ல." என்றாள்.
"நாகன் காவலா இருந்தானே? அதனால தான். சரி சரி! அம்பு கெடச்சிருச்சு இல்ல. இனிமே அடுத்ததைப் பார்ப்போம்." என்றார். அது வரையில் அமைதியாக இருந்த ஜோசியர் வாயைத் திறந்தார்.
"அம்பு கெடச்சு என்ன பிரயோஜனம்? நித்யமல்லியை வரவழைக்கணும். அதுவும் போக காட்டு பங்களாவுல வாளும், குத்தீட்டியும் எங்கே இருக்குன்னு எப்படிக் கண்டு பிடிக்க? இன்னும் ஒரு நாள் கூட முழுசா இல்லியே? நாளை ராத்திரி இந்நேரத்துக்கு நித்யமல்லியை அழிச்சிருக்கணும். நெனச்சாலே கலக்கமா இருக்கு." என்றார். மற்றவர்களுக்கும் அதே கலக்கம் தான்.
"உங்களுக்கெல்லாம் நம்பிக்கை போதாது. கடவுள் மேல நம்பிக்கை வெச்சா முழுசா வெக்கணும். இது வரையில நடந்தது எல்லாம் நீங்களாவா செஞ்சீங்க? எல்லாம் கடவுள் அருளால தானே நடந்தது இல்ல? இனியும் ஏன் அப்படி நடக்காதுன்னு நினைக்கறீங்க?" என்றார் அவர்.
"சாரி சார்! தெரியாமப் பேசிட்டோம். அடுத்தது என்னன்னு சொல்லுங்களேன்" என்றான் வெங்கி பணிவாக.
"சரி! இப்ப என்ன? உங்களுக்கு நித்யமல்லியை வரவழைக்குற வழி தெரியணும். இல்லியா?" என்றார். ஆனால் பதிலுக்குக் காத்திராமல் அவரே பேச ஆரம்பித்தார்.
"வெங்கடேஷ்! இதுக்கு நீ தான் முக்கியத் தேவை. நித்யமல்லி நீ கூப்பிட்டா மட்டும் தான் வருவா. நாளைக்கு அவ உன்னோட சேரணும்னு திட்டம் போட்டுக்கிட்டு இருக்கா. அதுக்கான இடத்தையும் அவ தேர்ந்தெடுத்துட்டா. அவ தேர்ந்தெடுத்த இடமும் காட்டு பங்களா தான். ஆனா அவ உன்னை அழைக்கிறதுக்கு முன்னால நீ அவளை அழைக்கணும். நீ அழைக்குறது அவ கூட சேரத்தான்னு அவ நம்பணும். அப்படி அவ வந்ததும், நீங்க உங்க தாக்குதலை ஆரம்பிக்கலாம். ஆனா இதுல ஒரு விஷயம் நீங்க நல்லா கவனிக்கணும்."
"சொல்லுங்க சார்!"
"வெங்கடேஷ் அவளைக் கூப்பிட்டது அழிக்குறதுக்காகத்தான், கூடலுக்காக இல்லைன்னு நித்யமல்லிக்குத் தெரிஞ்சதுமே அவளுக்கு பயங்கரமா கோபம் வரும். அந்தக் கோபத்துல அவ அவன் உசிரை எடுக்க நினைப்பா. அதனால வெங்கடேஷ் நீ நாளைக்கு அவளைக் கூப்பிடும் போது நீ உயிர்த் தியாகம் செய்யவும் தயாரா இருக்கணும். அதுக்கு நீ தயாரா?" என்றார்.
சற்று யோசித்தான் வெங்கடேஷ்.
"அனைவரது வாழ்க்கைக்கும் ஏதாவது அர்த்தம் இருக்கும். நான் கடவுளால் இந்த நல்ல காரியத்துக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறேன். இதில் என் உயிர் போனால் தான் என்ன? மனித குலத்துக்கே நன்மை செய்யும் பெரும்பணியில் என் உயிர் போனால் அது எனக்குப் பெருமை தானே? ஒருவேளை நான் உயிர்த்தியாகம் செய்த பிறகும் நித்யமல்லியைக் கட்ட முடியவில்லையென்றால் என்ன செய்ய?"
"என்ன யோசிக்குற?"
"இல்ல ...வந்து.....நான் உயிர்த்தியாகம் செய்யத் தயார் தான். ஆனா....அதுக்குப் பிறகு நித்யமல்லியை அழிக்க முடியலைன்னா?"
"நல்ல கேள்வி தான். அதுக்கு திவ்யாவும், பாலாவும் தான் பதில் சொல்லணும்." என்றார் புதிராக.
"எங்களால என்ன பதில் சொல்ல முடியும் சார்? வெங்கி இல்லாத வாழ்க்கை எனக்குத் தேவையே இல்ல!" என்றாள் திவ்யா.
"சபாஷ்! இதை நீ எப்பவுமே மனசுல வெச்சிக்கோ. பாலா, திவ்யா ஒரு வேளை வெங்கி உயிர்த்தியாகம் செஞ்சுட்டான்னு வெச்சிக்குங்க. அப்ப திட சித்தத்தோட உங்களால நித்யமல்லியோட போராட முடியுமா?"
"நிச்சயமாப் போராடுவோம் சார்! ஏன்னா என் நண்பனோட தியாகம் வீண் போகக் கூடாது.! என்றான் பாலா உணர்ச்சியுடன். அவர்களை நோக்கி சிரித்தார் அவர்.
"நல்லது! இப்ப நான் வழிமுறையச் சொல்றேன். கோயிலுக்குள்ள போய் உக்காந்து பேசுவோம்" என்று அந்த நபர் அவர்களை முன்னால் போகச் சொல்லிவிட்டு தான் அடி எடுத்து வைத்தார். அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும் ஒரு பெரிய கிளை அப்படியே முறிந்து விழுந்தது. அவர்கள் அதன் கீழே நின்றிருந்தால் அவர்கள் கதி அதோ கதி தான்.
"ஊம்! திரும்பிப் பாக்காம போங்க" என்றார். அப்படியே செய்தனர். கோயிலுக்குள் அவரைச் சுற்றி வட்டமாக அமர்ந்து கொண்டனர்.
"நாளைக்கு மதியமே நீங்க காட்டு பங்களாவுக்குப் போயிருங்க. போகும் போது வனப்பேச்சியம்மன் கோயில்ல இருந்து பிடிமண் எடுத்துட்டுப் போங்க. அங்க உங்க கண்ணுல முதல்ல வாள் படும். வெங்கி நல்லா நினைவு படுத்திப் பாரு, நீயும் பாலாவும் முத முத கன்னிமார் துறைக்குப் போயி நித்யமல்லியோட வசியத்துக்கு ஆட்பட்டு அவ கட்டை அவுத்து விடும் போது ஒரு வாள் உங்க கண்ணுல பட்டது. அதை எடுக்கணுமான்னு கூட நீ அவளைக் கேட்ட! நல்லா நினைவு படுத்திக்கோ." என்றார்.
அவர் பேசப் பேசவே பாலாவுக்கும், வெங்கிக்கும் நன்றாக நினைவு வந்து விட்டது. அந்த பங்களாவின் கூடத்தில் மாடிப்படிக்கு எதிர்பக்கம் இருந்த சுவரில் ஒரு வாள் தொங்கிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.
"ஆமா சார்" என்றனர் இருவரும்.
"அது தான் சொரிமுத்தையன் உங்களுக்கு கொடுத்த வாள். அதை எடுத்துக்கப்பா வெங்கி நீ! நீ அதைத் தொட்டதுமே குத்தீட்டி இருக்குற இடம் உங்களுக்குத் தெரிய வரும். அதையும் எடுத்து வெச்சிக்குங்க. இப்ப அம்பும் கெடச்சிருச்சு. மூணையும் ஒண்ணா வெச்சு, கரியமாணிக்கமும் ஜோசியரும் பூஜை செய்யட்டும். வனப்பேச்சி கோயில்ல இருந்து எடுத்த பிடி மண்ணை அது மேல தடவுங்க. அப்ப அந்த ஆயுதங்களை உங்களால தடையில்லாம பயன் படுத்த முடியும். அதன் பிறகு தான் ஜோசியரே! உங்க வேலை" என்றார்.
திடுக்கிடார் ஜோசியர்.
"நானா? நான் என்ன செய்யணும்?"
"உங்க வீட்டுல பிரம்மராட்சசி அம்மன் சிலைக்குப் பின்னால ஒரு ஓலைக்கட்டு இருக்கு இல்ல?"
வியப்புக்கு மேல வியப்பு அனைவருக்கும்.
"இருக்கு! ஆனா அதை எடுக்கவே கூடாதுன்னு இல்ல, எங்கப்பா, அவருக்கு அப்பா, எல்லாரும் சொல்லி வெச்சிருக்காங்க?"
"அதே தான். அதைப் படிக்க வேண்டிய காலம் வந்தாச்சு. நீ அதைப் படி. அதுல சில குறிப்புக்கள் இருக்கும். அது படி நீ செய்யணும். அதன் பிறகு வெங்கடேஷ் கூடத்தோட நடு மையத்துல உக்காந்து நித்யமல்லியை மனதால நினைக்கணும். அதுவும் எப்படி? உன்னோட நான் சேருற நேரம் வந்தாச்சு. எனக்கு திவ்யா தேவையில்ல. நீ தான் வேணும்னு அவன் மெல்ல சொல்லிக்கிட்டே இருக்கணும். அப்ப அவ வருவா. அதன் பிறகு நடக்கப்போறது உங்களோட மன உறுதியில தான் இருக்கு." என்றார்.
மனதினுள் ஏராளமான பயம். இவர் சொல்வது எல்லாமே மிக எளிதாகத்தான் இருக்கிறது. ஆனால் செய்யும் போதல்லவா கஷ்டம் தெரியும். என யோசித்தனர்.
"எங்க எல்லாரைப் பத்தியும் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க. ஆனா உங்களைப் பத்தி எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்களே? சொல்லுங்க! நீங்க சித்தரா? மந்திரவாதியா?" என்றான் வெங்கி.
"எப்படி வேணும்னாலும் வெச்சுக்கோ! உலகத்துலயே பெரிய மாயக்காரன் நான்." என்றார் அந்த நபர்.
அவர்கள் பேசாமல் அவரைப் பார்த்த வண்ணம் இருந்தனர்.
"என்ன அப்படிப் பார்க்கறீங்க? இப்ப தூங்குங்க. நாளைக்கு உங்களுக்கு நிறைய வேலை இருக்கு. நானும் இப்படி ஓரமா சாஞ்சிக்கறேன்." என்று சொல்லி விட்டு படுத்து விட்டார்.
அதிகாலையிலேயே பறவைகளின் சத்தம், குரங்குகளின் கத்தல் இவைகள் எழுப்ப சட்டென எழுந்து அமர்ந்தான் வெங்கி. அவனைத் தொடர்ந்து பாலா, திவ்யா, ஜோசியர் எழுந்தனர். எழுந்ததுமே அவன் பார்வை இரவு நேரத்தில் வந்த நபரைத் தேடியது. அப்படி ஒருவர் வந்ததற்கான சுவடே இல்லை.
"பாலா! நேத்து ராத்திரி வந்தவர் எங்கே?"
"அவரைத் தான் நானும் தேடுறேன். காணலியே?"
"பாலா எடுத்தானே ஒரு துணிப்பொட்டலம். அதையும் காணோமே?" என்றாள் திவ்யா. அவர்கள் விழிகளில் குழப்பம்.
சட்டென அப்படியே அமர்ந்தார் ஜோசியர்.
"என்ன ஐயா? என்ன செய்யுது உங்களுக்கு?" என்றாள் திவ்யா பயத்தோடு.
"உங்களுக்குப் புரியலியாப்பா? நாம கண்டது அத்தனையுமே கனவு. அந்த அழகிய பெருமாளே நம்ம கனவுல வந்து, வழி காமிச்சிருக்காருப்பா. அதனால தான் நம்ம நாலு பேருக்கும் ஒரே விதமான கனவு வந்திருக்கு." என்றார். அவரது உடலே ஆடிக்கொண்டிருந்தது.
சிலிர்த்துப் போனார்கள். கண்களில் நீரோடு பெருமாளை வணங்கினார்கள். சுறுசுறுப்பானார் ஜோசியர்.
"சாமி சொன்னா மாதிரி, நமக்கு நிறைய வேலை இருக்குப்பா. முதல்ல பாலா போய் அந்த அம்புகளை எடுக்கட்டும், அதை திவ்யா வாங்கிக்கட்டும். நாம கீழே இறங்கி நேரே எங்க வீட்டுக்குப் போயி, சாமி சொன்ன சுவடிக்கட்டை எடுத்துப் படிக்கறேன். அப்புறம் என்ன செய்யலாம்னு யோசிப்போம். உம் புறப்படுங்க. பாலா முதல்ல போய் அந்த மரத்துல இருந்து அம்புகளை எடு. திவ்யா அதை வாங்கிக்கோ." என்றார்.
அப்படியே ஓடினார்கள் மூவரும். இரவு அவர்கள் பார்த்த மரம் நன்றாகவே அடையாளம் தெரிந்தது. அதில் பாலா ஏற ஏற கனவில் பார்த்தது போலவே மரம் வாகாக வளைந்து கொடுத்தது. பொந்தின் அருகே வந்ததும் தயங்கினான் பாலா. அவன் எதிர்பார்த்தது போலவே பெரிய நாகப்பாம்பு ஒன்று சரசரவென இறங்கிப் போனது. மனதைத் திடப்படுத்திக்கொண்டு கைகளை உள்ளே விட துணிம்மூட்டை தட்டுப்பட்டது. அதை எடுத்ததும் மெல்லிய அதிர்வு தோன்ற அப்படியே இறங்கினான் பாலா. அதை பணிவோடு தன் கைகளில் வாங்கிக்கொண்டாள் திவ்யா. அவள் உடல் நடுங்கியது.
"முதல்ல அவளோட கண்ணைத்தான் குத்தணும். அதைத்தான் நான் முதல்ல செய்யணும்.." என சொல்லிக்கொண்டே இருந்தாள். அவளைப் பார்த்தால் ஏதோ பித்துப் பிடித்தவள் போலத்தோன்றியது. ஜோசியர் சட்டென கோயிலுக்குள் சென்று அங்கே இருந்த தீர்த்ததை எடுத்து வந்து வாயில் புகட்டினார். சற்று நேரத்தில் சரியாகி விட்டாள். நிம்மதியானது அனைவருக்கும்.
"நமக்குக் கனவுல வந்தது வெறு காட்சியில்ல! பெருமாள் நமக்குக் காட்டிய வழி! அது படியே நாம செஞ்சுக்கிட்டே போக வேண்டியது தான். இப்ப அடுத்த படி நாம கீழே இறங்கணும். ஆனா எப்படி? நடந்து போனா மாலை ஆகிருமே?" என்று கவலைப்பட்டார் ஜோசியர். அவரது கேள்விக்கு பதிலே போல ஜீப்பின் ஹாரம் ஒலி கேட்டது. அவசரமாக துணி மூட்டையை தனது பைக்குள் பத்திரப்படுத்தினாள் திவ்யா. அவர்களை முந்தைய நாள் மலைக்கு மேல அழைத்து வந்த அதே ஜீப், அதே டிரைவர். கூடவே குருக்களும். இவர்களை உயிரோடு பார்த்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் ஜீப் டிரைவரும், குருக்களும்.
"தப்பா நினைக்காதீங்க சார்! நேத்து காத்து வீசுனப்போ, எங்களுக்கு என்ன ஆச்சுன்னே தெரியல்ல. வண்டியை எடுத்துட்டுக் கீழே போகணும்னு மட்டும் தான் தோணுச்சு. அதான்....நாங்க....போயிட்டோம். நல்லவேளை, உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே?" என்றார் ஜீப் டிரைவர்.
"ராத்திரியெல்லாம் எனக்குத் தூக்கமே இல்லை. இப்படி வந்தவாளை நிர்க்கதியா விட்டுட்டு வந்துட்டோமேன்னு மனசு உறுத்திண்டே இருந்தது. அதுவும் சின்னப் பொண்ணு வேற இருக்கா. அதான் காலையில விடிஞ்சதும் விடியாம ஜீப்பை எடுத்துண்டு வந்துட்டோம்." என்றார் குருக்கள்.
"எங்களுக்கு எதுவும் ஆகல. எல்லாமே அந்தப் பெருமாள் அருள் தான்."
"சரி ஜீப்புல ஏறுங்கோ. கீழே போயிடலாம்" என்றார் குருக்கள். அனைவரும் ஏறிக்கொள்ள ஜீப் விரைந்தது.
இரவு நேரம் வந்ததும் மனதில் பயம் வந்து அமர்ந்து கொண்டது வெங்கியின் மனதில். ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் இங்கே தங்கி விட்டோம். சரியான காடு போலத் தெரிகிறது. ஏதேனும் வன விலங்குகள் வந்தால் என்ன செய்ய? அது கூடப் பரவாயில்லை கோயில் கதவை சாத்தி விட்டால் பாதுகாப்புத்தான். இது போன்ற காடுகளில் பல தீயவர்கள் தங்கி இருக்கலாம். அவர்களால் திவ்யாவுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் ...?தெய்வமே...எங்களைக் காப்பாற்று" என மனமார வேண்டினான். ஆனால் பாலாவுக்கோ இல்லை மற்ற இருக்குவருக்குமோ இது போன்ற கவலைகள் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் பாட்டுக்குப் பேசிக்கொண்டிருந்தனர்.
நாளை பௌர்ணமி என்பதை நிலவு சொல்லாமல் சொல்லியது. அது வேறு கவலையை அதிகரித்தது வெங்கிக்கு. நாளை முழு நிலவு வானத்தின் உச்சியில் வருவதற்குள் நாங்கள் என்னென்ன செய்ய வேண்டும்? வாளையும், குத்தீட்டியையும் கண்டு பிடிக்க வேண்டும். சிவகாமி அம்மாளும், கரியமாணிக்கமும் வர வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக வண்டி மறிச்சியம்மன் கொடுத்த அம்புகள். அவைகளைப் பற்றி இன்னமும் எதுவும் தெரியவில்லை. இது எல்லாமே நடந்து விட்டது என்று வைத்துக்கொண்டால் கூட நித்யமல்லியையும், பொன்வண்டையும் அந்தக் காட்டு பங்களாவுக்கு எப்படி வரவழைப்பது? யோசிக்க யோசிக்க குழப்பம் அதிகமானதே தவிரக் குறையவில்லை.
மெல்லிய வாசனை வருவது போலத் தோன்றியது. மனதுக்கு இதம் தரும் மணம் அது. அவனையும் அறியாமல் கண்கள் மூடி நீண்ட நித்திரைக்குப் போனான் வெங்கி. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்? என்பதைக் கூட அவனால் கவனிக்க முடியாத அளவு உறக்கம் அவனை ஆழ்த்தியது. கண்கள் திறந்த போது, கரிய நிறத்தில் ஒருவர் அழகே உருவாக நின்றிருந்தார். அவரது அருகில் திவ்யா, ஜோசியர், பாலா என மூவரும் நின்றிருந்தனர். புரியாமல் விழித்தான் வெங்கி.
"நீங்க தேடுற அம்புகள் இருக்குற இடமும், நித்யமல்லியை காட்டு பாங்களாவுக்கு வரவழைக்கிற வழியும் தானே உங்களுக்குத் தெரியணும்?" என்றார் அவர். அவரைப் பார்க்கவே பரவசமாக இருந்தது. அழகென்றால் அப்படி ஒரு அழகு.
"ஆமா சார்"
"சரி அப்ப என் பின்னாடி வாங்க" என்று சொல்லி விட்டு விடு விடுவென நடக்க ஆரம்பித்தார். இரவு நேரத்தில் இப்படிக் கூட்டிப் போகிறீர்களே? எனக் கேட்க நினைத்தான் ஆனால் எதுவும் பேசாமல் பின்னால் நடந்தான் வெங்கி. அவனை மற்றவர்கள் பின் தொடர்ந்தனர். கோயிலுக்கு வெளியே சற்று தூரம் மலை ஏற்றத்தில் ஏறினார்கள். அங்கே ஒரு மரம் தனியாகத் தெரிவது போலத் தோன்றியது. அதை நோக்கித்தான் அந்த நபரும் நடந்தார்.
"உம்! இதுல ஏறு" என்றார் பாலாவை நோக்கி. அவன் திகைத்துப் போனான்.
"நான் வேணும்னா ஏறவா சார்? அவனுக்கு மரம் ஏறத் தெரியாது" என்றான் வெங்கி. அவனை விழித்துப் பார்த்தார் அந்த மனிதர். அவரது நீண்ட பெரிய வ்ழிகளில் ஏளனம்.
"நான் சொன்னதை மட்டும் தான் நீங்க செய்யணும். உம் பாலா..." என்றார்.
தயங்கித்தயங்கி மரத்தின் அருகில் சென்றான் பாலா. என்ன தோன்றியதோ தெரியவில்லை, ஏற ஆரம்பித்தான். கிளைகள் எல்லாம் வாகாக வளைந்து கொடுப்பது போலத் தோன்றியது. ஒரு குறிப்பிட்ட உயரம் வந்ததும் போதும் என்றார் அந்த நபர்.
"நீ உக்காந்திருக்குற இடத்துக்குப் பக்கத்துல ஒரும் பொந்து இருக்கா பாரு"
இருந்தது.
"அதுல கையை விடு!"
தயங்கினான் பாலா. மரப்பொந்து, அதில் என்ன இருக்குமோ? ஏதேனும் பாம்பு இருந்து கடித்து விட்டால் என்ன செய்ய? என்று அவன் யோசிக்கும் போதே பாம்பு ஒன்று சரசரவென அந்தப் பொந்திலிருந்து வெளியே வந்தது. நடுங்கிப் போனான் பாலா. கத்தவும் வாய் வராமல் அப்படியே அமர்ந்திருந்தான். ஆனால் பாம்பு அவனை ஒன்றும் செய்யவில்லை. ஒரு முறை தலையைத் திருப்பிப் பார்த்து விட்டுப் போய் விட்டது.
"அவன் தான் போயிட்டானே? இப்ப கையை விடு" என்றார் கீழே நின்றிருந்தவர். மற்றவர்களுக்கு என்ன வந்தது? என்ன போய் விட்டது? எனச் சொல்கிறார் என எதுவும் புரியவில்லை. பாலா நடுங்கும் கரங்களை அந்தப் பொந்தில் நுழைத்தான். ஏதோ தட்டுப்பட சட்டெனக் கைகளை எடுத்து விட்டான். உடலெங்கும் வியர்வை.
"தேடி அலைவீங்க! கெடச்சா கையை உதறுவியா நீ? எடு! எடு!" என்றார் அந்த நபர். மீண்டும் கைகளை விட்டுத் துழாவ ஏதோ துணி போலத் தென்பட்டது. அதை அப்படியே எடுத்தான்.
"கெடச்சிருச்சு இல்ல! கீழே இறங்கு. அவன் தூங்கணும்." என்றார் அவர். பதிலே பேசாமல் ஒரு கையால் அந்தத் துணி மூட்டையைப் பிடித்துக்கொண்டு மெல்ல இறங்கினான். பாலா கீழே இறங்கியதும் மீண்டும் அந்தப் பாம்பு வந்து பொந்தில் புகுந்து கொண்டது. கீழே நின்றிருந்தவர்களில் வெங்கி கையை நீட்டினான்.
"நீ இல்ல! திவ்யா நீ வாங்கு" என்றார் அந்த நபர். அவருக்கு அதிகாரமாகத்தான் பேச வருமோ? என நினைத்தான் வெங்கி. திவ்யா முன்னால் வந்து அந்த துணி மூட்டையை வாங்கிக்கொண்டாள். அதைத் தொட்டதும் அவளது தொண்டையில் இருந்து அலறல் கிளம்பியது. அவளது தலையில் கை வைத்தார் அந்த நபர். சட்டென அமர்ந்து விட்டாள் திவ்யா.
"சார்! நீங்க என்ன மந்திரவாதியா? என்னென்னமோ சொல்றீங்க? என்னென்னமோ செய்யுறீங்க? நீங்க யாரு சார்?" என்றான் வெங்கி சற்றே கோபமாக.
"உனக்கு கோபம் மட்டும் அடங்கலியோ? நான் யாரா இருந்தா உனக்கென்ன? உதவி தானே செய்யுறேன். பேசாம இரு." என்றவர் பாலாவை நோக்கினார்.
"கோயிலுக்குள்ள தீர்த்தம் இருக்கும். போயி எடுத்து வந்து உன் தங்கச்சிக்குக் குடு" என்றார். அப்படியே செய்தான் பாலா. ஒரு வாய் தீர்த்தம் உள்ளே போனதும் தெளிந்தாள் திவ்யா. சட்டென அந்த நபரை வணங்கினாள்.
"நீங்க யாரு என்னன்னு தெரியல்ல! ஆனா இதுக்குள்ள என்ன இருக்குன்னு எனக்குத் தெரிஞ்சிரிச்சு. வண்டிமறிச்சியம்மன் கொடுத்த அம்புகளை நான் இந்த மரத்துல தான் மறைச்சு வெச்சேன். இது என்னோட புடவை முந்தானை. எனக்கு நல்லா நினைவு வந்துட்டுது. ஆனா இத்தனை வருஷம், காத்து, மழை எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு, எப்படி இந்த துணி மூட்டை அப்படியே பத்திரமா இருந்ததுன்னு தான் தெரியல்ல." என்றாள்.
"நாகன் காவலா இருந்தானே? அதனால தான். சரி சரி! அம்பு கெடச்சிருச்சு இல்ல. இனிமே அடுத்ததைப் பார்ப்போம்." என்றார். அது வரையில் அமைதியாக இருந்த ஜோசியர் வாயைத் திறந்தார்.
"அம்பு கெடச்சு என்ன பிரயோஜனம்? நித்யமல்லியை வரவழைக்கணும். அதுவும் போக காட்டு பங்களாவுல வாளும், குத்தீட்டியும் எங்கே இருக்குன்னு எப்படிக் கண்டு பிடிக்க? இன்னும் ஒரு நாள் கூட முழுசா இல்லியே? நாளை ராத்திரி இந்நேரத்துக்கு நித்யமல்லியை அழிச்சிருக்கணும். நெனச்சாலே கலக்கமா இருக்கு." என்றார். மற்றவர்களுக்கும் அதே கலக்கம் தான்.
"உங்களுக்கெல்லாம் நம்பிக்கை போதாது. கடவுள் மேல நம்பிக்கை வெச்சா முழுசா வெக்கணும். இது வரையில நடந்தது எல்லாம் நீங்களாவா செஞ்சீங்க? எல்லாம் கடவுள் அருளால தானே நடந்தது இல்ல? இனியும் ஏன் அப்படி நடக்காதுன்னு நினைக்கறீங்க?" என்றார் அவர்.
"சாரி சார்! தெரியாமப் பேசிட்டோம். அடுத்தது என்னன்னு சொல்லுங்களேன்" என்றான் வெங்கி பணிவாக.
"சரி! இப்ப என்ன? உங்களுக்கு நித்யமல்லியை வரவழைக்குற வழி தெரியணும். இல்லியா?" என்றார். ஆனால் பதிலுக்குக் காத்திராமல் அவரே பேச ஆரம்பித்தார்.
"வெங்கடேஷ்! இதுக்கு நீ தான் முக்கியத் தேவை. நித்யமல்லி நீ கூப்பிட்டா மட்டும் தான் வருவா. நாளைக்கு அவ உன்னோட சேரணும்னு திட்டம் போட்டுக்கிட்டு இருக்கா. அதுக்கான இடத்தையும் அவ தேர்ந்தெடுத்துட்டா. அவ தேர்ந்தெடுத்த இடமும் காட்டு பங்களா தான். ஆனா அவ உன்னை அழைக்கிறதுக்கு முன்னால நீ அவளை அழைக்கணும். நீ அழைக்குறது அவ கூட சேரத்தான்னு அவ நம்பணும். அப்படி அவ வந்ததும், நீங்க உங்க தாக்குதலை ஆரம்பிக்கலாம். ஆனா இதுல ஒரு விஷயம் நீங்க நல்லா கவனிக்கணும்."
"சொல்லுங்க சார்!"
"வெங்கடேஷ் அவளைக் கூப்பிட்டது அழிக்குறதுக்காகத்தான், கூடலுக்காக இல்லைன்னு நித்யமல்லிக்குத் தெரிஞ்சதுமே அவளுக்கு பயங்கரமா கோபம் வரும். அந்தக் கோபத்துல அவ அவன் உசிரை எடுக்க நினைப்பா. அதனால வெங்கடேஷ் நீ நாளைக்கு அவளைக் கூப்பிடும் போது நீ உயிர்த் தியாகம் செய்யவும் தயாரா இருக்கணும். அதுக்கு நீ தயாரா?" என்றார்.
சற்று யோசித்தான் வெங்கடேஷ்.
"அனைவரது வாழ்க்கைக்கும் ஏதாவது அர்த்தம் இருக்கும். நான் கடவுளால் இந்த நல்ல காரியத்துக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறேன். இதில் என் உயிர் போனால் தான் என்ன? மனித குலத்துக்கே நன்மை செய்யும் பெரும்பணியில் என் உயிர் போனால் அது எனக்குப் பெருமை தானே? ஒருவேளை நான் உயிர்த்தியாகம் செய்த பிறகும் நித்யமல்லியைக் கட்ட முடியவில்லையென்றால் என்ன செய்ய?"
"என்ன யோசிக்குற?"
"இல்ல ...வந்து.....நான் உயிர்த்தியாகம் செய்யத் தயார் தான். ஆனா....அதுக்குப் பிறகு நித்யமல்லியை அழிக்க முடியலைன்னா?"
"நல்ல கேள்வி தான். அதுக்கு திவ்யாவும், பாலாவும் தான் பதில் சொல்லணும்." என்றார் புதிராக.
"எங்களால என்ன பதில் சொல்ல முடியும் சார்? வெங்கி இல்லாத வாழ்க்கை எனக்குத் தேவையே இல்ல!" என்றாள் திவ்யா.
"சபாஷ்! இதை நீ எப்பவுமே மனசுல வெச்சிக்கோ. பாலா, திவ்யா ஒரு வேளை வெங்கி உயிர்த்தியாகம் செஞ்சுட்டான்னு வெச்சிக்குங்க. அப்ப திட சித்தத்தோட உங்களால நித்யமல்லியோட போராட முடியுமா?"
"நிச்சயமாப் போராடுவோம் சார்! ஏன்னா என் நண்பனோட தியாகம் வீண் போகக் கூடாது.! என்றான் பாலா உணர்ச்சியுடன். அவர்களை நோக்கி சிரித்தார் அவர்.
"நல்லது! இப்ப நான் வழிமுறையச் சொல்றேன். கோயிலுக்குள்ள போய் உக்காந்து பேசுவோம்" என்று அந்த நபர் அவர்களை முன்னால் போகச் சொல்லிவிட்டு தான் அடி எடுத்து வைத்தார். அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும் ஒரு பெரிய கிளை அப்படியே முறிந்து விழுந்தது. அவர்கள் அதன் கீழே நின்றிருந்தால் அவர்கள் கதி அதோ கதி தான்.
"ஊம்! திரும்பிப் பாக்காம போங்க" என்றார். அப்படியே செய்தனர். கோயிலுக்குள் அவரைச் சுற்றி வட்டமாக அமர்ந்து கொண்டனர்.
"நாளைக்கு மதியமே நீங்க காட்டு பங்களாவுக்குப் போயிருங்க. போகும் போது வனப்பேச்சியம்மன் கோயில்ல இருந்து பிடிமண் எடுத்துட்டுப் போங்க. அங்க உங்க கண்ணுல முதல்ல வாள் படும். வெங்கி நல்லா நினைவு படுத்திப் பாரு, நீயும் பாலாவும் முத முத கன்னிமார் துறைக்குப் போயி நித்யமல்லியோட வசியத்துக்கு ஆட்பட்டு அவ கட்டை அவுத்து விடும் போது ஒரு வாள் உங்க கண்ணுல பட்டது. அதை எடுக்கணுமான்னு கூட நீ அவளைக் கேட்ட! நல்லா நினைவு படுத்திக்கோ." என்றார்.
அவர் பேசப் பேசவே பாலாவுக்கும், வெங்கிக்கும் நன்றாக நினைவு வந்து விட்டது. அந்த பங்களாவின் கூடத்தில் மாடிப்படிக்கு எதிர்பக்கம் இருந்த சுவரில் ஒரு வாள் தொங்கிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.
"ஆமா சார்" என்றனர் இருவரும்.
"அது தான் சொரிமுத்தையன் உங்களுக்கு கொடுத்த வாள். அதை எடுத்துக்கப்பா வெங்கி நீ! நீ அதைத் தொட்டதுமே குத்தீட்டி இருக்குற இடம் உங்களுக்குத் தெரிய வரும். அதையும் எடுத்து வெச்சிக்குங்க. இப்ப அம்பும் கெடச்சிருச்சு. மூணையும் ஒண்ணா வெச்சு, கரியமாணிக்கமும் ஜோசியரும் பூஜை செய்யட்டும். வனப்பேச்சி கோயில்ல இருந்து எடுத்த பிடி மண்ணை அது மேல தடவுங்க. அப்ப அந்த ஆயுதங்களை உங்களால தடையில்லாம பயன் படுத்த முடியும். அதன் பிறகு தான் ஜோசியரே! உங்க வேலை" என்றார்.
திடுக்கிடார் ஜோசியர்.
"நானா? நான் என்ன செய்யணும்?"
"உங்க வீட்டுல பிரம்மராட்சசி அம்மன் சிலைக்குப் பின்னால ஒரு ஓலைக்கட்டு இருக்கு இல்ல?"
வியப்புக்கு மேல வியப்பு அனைவருக்கும்.
"இருக்கு! ஆனா அதை எடுக்கவே கூடாதுன்னு இல்ல, எங்கப்பா, அவருக்கு அப்பா, எல்லாரும் சொல்லி வெச்சிருக்காங்க?"
"அதே தான். அதைப் படிக்க வேண்டிய காலம் வந்தாச்சு. நீ அதைப் படி. அதுல சில குறிப்புக்கள் இருக்கும். அது படி நீ செய்யணும். அதன் பிறகு வெங்கடேஷ் கூடத்தோட நடு மையத்துல உக்காந்து நித்யமல்லியை மனதால நினைக்கணும். அதுவும் எப்படி? உன்னோட நான் சேருற நேரம் வந்தாச்சு. எனக்கு திவ்யா தேவையில்ல. நீ தான் வேணும்னு அவன் மெல்ல சொல்லிக்கிட்டே இருக்கணும். அப்ப அவ வருவா. அதன் பிறகு நடக்கப்போறது உங்களோட மன உறுதியில தான் இருக்கு." என்றார்.
மனதினுள் ஏராளமான பயம். இவர் சொல்வது எல்லாமே மிக எளிதாகத்தான் இருக்கிறது. ஆனால் செய்யும் போதல்லவா கஷ்டம் தெரியும். என யோசித்தனர்.
"எங்க எல்லாரைப் பத்தியும் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க. ஆனா உங்களைப் பத்தி எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்களே? சொல்லுங்க! நீங்க சித்தரா? மந்திரவாதியா?" என்றான் வெங்கி.
"எப்படி வேணும்னாலும் வெச்சுக்கோ! உலகத்துலயே பெரிய மாயக்காரன் நான்." என்றார் அந்த நபர்.
அவர்கள் பேசாமல் அவரைப் பார்த்த வண்ணம் இருந்தனர்.
"என்ன அப்படிப் பார்க்கறீங்க? இப்ப தூங்குங்க. நாளைக்கு உங்களுக்கு நிறைய வேலை இருக்கு. நானும் இப்படி ஓரமா சாஞ்சிக்கறேன்." என்று சொல்லி விட்டு படுத்து விட்டார்.
அதிகாலையிலேயே பறவைகளின் சத்தம், குரங்குகளின் கத்தல் இவைகள் எழுப்ப சட்டென எழுந்து அமர்ந்தான் வெங்கி. அவனைத் தொடர்ந்து பாலா, திவ்யா, ஜோசியர் எழுந்தனர். எழுந்ததுமே அவன் பார்வை இரவு நேரத்தில் வந்த நபரைத் தேடியது. அப்படி ஒருவர் வந்ததற்கான சுவடே இல்லை.
"பாலா! நேத்து ராத்திரி வந்தவர் எங்கே?"
"அவரைத் தான் நானும் தேடுறேன். காணலியே?"
"பாலா எடுத்தானே ஒரு துணிப்பொட்டலம். அதையும் காணோமே?" என்றாள் திவ்யா. அவர்கள் விழிகளில் குழப்பம்.
சட்டென அப்படியே அமர்ந்தார் ஜோசியர்.
"என்ன ஐயா? என்ன செய்யுது உங்களுக்கு?" என்றாள் திவ்யா பயத்தோடு.
"உங்களுக்குப் புரியலியாப்பா? நாம கண்டது அத்தனையுமே கனவு. அந்த அழகிய பெருமாளே நம்ம கனவுல வந்து, வழி காமிச்சிருக்காருப்பா. அதனால தான் நம்ம நாலு பேருக்கும் ஒரே விதமான கனவு வந்திருக்கு." என்றார். அவரது உடலே ஆடிக்கொண்டிருந்தது.
சிலிர்த்துப் போனார்கள். கண்களில் நீரோடு பெருமாளை வணங்கினார்கள். சுறுசுறுப்பானார் ஜோசியர்.
"சாமி சொன்னா மாதிரி, நமக்கு நிறைய வேலை இருக்குப்பா. முதல்ல பாலா போய் அந்த அம்புகளை எடுக்கட்டும், அதை திவ்யா வாங்கிக்கட்டும். நாம கீழே இறங்கி நேரே எங்க வீட்டுக்குப் போயி, சாமி சொன்ன சுவடிக்கட்டை எடுத்துப் படிக்கறேன். அப்புறம் என்ன செய்யலாம்னு யோசிப்போம். உம் புறப்படுங்க. பாலா முதல்ல போய் அந்த மரத்துல இருந்து அம்புகளை எடு. திவ்யா அதை வாங்கிக்கோ." என்றார்.
அப்படியே ஓடினார்கள் மூவரும். இரவு அவர்கள் பார்த்த மரம் நன்றாகவே அடையாளம் தெரிந்தது. அதில் பாலா ஏற ஏற கனவில் பார்த்தது போலவே மரம் வாகாக வளைந்து கொடுத்தது. பொந்தின் அருகே வந்ததும் தயங்கினான் பாலா. அவன் எதிர்பார்த்தது போலவே பெரிய நாகப்பாம்பு ஒன்று சரசரவென இறங்கிப் போனது. மனதைத் திடப்படுத்திக்கொண்டு கைகளை உள்ளே விட துணிம்மூட்டை தட்டுப்பட்டது. அதை எடுத்ததும் மெல்லிய அதிர்வு தோன்ற அப்படியே இறங்கினான் பாலா. அதை பணிவோடு தன் கைகளில் வாங்கிக்கொண்டாள் திவ்யா. அவள் உடல் நடுங்கியது.
"முதல்ல அவளோட கண்ணைத்தான் குத்தணும். அதைத்தான் நான் முதல்ல செய்யணும்.." என சொல்லிக்கொண்டே இருந்தாள். அவளைப் பார்த்தால் ஏதோ பித்துப் பிடித்தவள் போலத்தோன்றியது. ஜோசியர் சட்டென கோயிலுக்குள் சென்று அங்கே இருந்த தீர்த்ததை எடுத்து வந்து வாயில் புகட்டினார். சற்று நேரத்தில் சரியாகி விட்டாள். நிம்மதியானது அனைவருக்கும்.
"நமக்குக் கனவுல வந்தது வெறு காட்சியில்ல! பெருமாள் நமக்குக் காட்டிய வழி! அது படியே நாம செஞ்சுக்கிட்டே போக வேண்டியது தான். இப்ப அடுத்த படி நாம கீழே இறங்கணும். ஆனா எப்படி? நடந்து போனா மாலை ஆகிருமே?" என்று கவலைப்பட்டார் ஜோசியர். அவரது கேள்விக்கு பதிலே போல ஜீப்பின் ஹாரம் ஒலி கேட்டது. அவசரமாக துணி மூட்டையை தனது பைக்குள் பத்திரப்படுத்தினாள் திவ்யா. அவர்களை முந்தைய நாள் மலைக்கு மேல அழைத்து வந்த அதே ஜீப், அதே டிரைவர். கூடவே குருக்களும். இவர்களை உயிரோடு பார்த்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் ஜீப் டிரைவரும், குருக்களும்.
"தப்பா நினைக்காதீங்க சார்! நேத்து காத்து வீசுனப்போ, எங்களுக்கு என்ன ஆச்சுன்னே தெரியல்ல. வண்டியை எடுத்துட்டுக் கீழே போகணும்னு மட்டும் தான் தோணுச்சு. அதான்....நாங்க....போயிட்டோம். நல்லவேளை, உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே?" என்றார் ஜீப் டிரைவர்.
"ராத்திரியெல்லாம் எனக்குத் தூக்கமே இல்லை. இப்படி வந்தவாளை நிர்க்கதியா விட்டுட்டு வந்துட்டோமேன்னு மனசு உறுத்திண்டே இருந்தது. அதுவும் சின்னப் பொண்ணு வேற இருக்கா. அதான் காலையில விடிஞ்சதும் விடியாம ஜீப்பை எடுத்துண்டு வந்துட்டோம்." என்றார் குருக்கள்.
"எங்களுக்கு எதுவும் ஆகல. எல்லாமே அந்தப் பெருமாள் அருள் தான்."
"சரி ஜீப்புல ஏறுங்கோ. கீழே போயிடலாம்" என்றார் குருக்கள். அனைவரும் ஏறிக்கொள்ள ஜீப் விரைந்தது.