Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
378
Reaction score
635
Points
93
உயிர் துடிப்பாய் நீ !


அத்தியாயம் 25


நமக்கு பிடித்த நிகழ்வுகள் எதிர்பார்க்காமல் நடக்கும் பொழுது அளவில்லா மகிழ்ச்சி நம் மனதை ஆட்கொள்ளும்.



அதே மனநிலையில் தான் திகழொளியும், மிகனும் இருந்தனர். இருவரும் சிறிது தூரம் செல்லும் வரை, எதுவும் பேசிக்கொள்ளவில்லை.



முதல் முதலாக மனதுக்கு பிடித்தவருடன் பயணம் செய்யும் போது ஏற்படும் மகிழ்ச்சியை மனம் அணுவணுவாக ரசிக்கும்.




திகழொளியும், மிகனும் அது போல் தான் தங்கள் மனதிற்குள் அந்த பயணத்தை ரசித்தனர்.



சிறிது தூரம் சென்றதும் மிகனே அவர்களின் மெளனத்தைக் கலைத்தான்.



"ஒளி எக்ஸாம்முக்கு நல்லா ப்ரீப்பேர் பண்ணிட்டீயா..?"என்று கேட்டான்.



"ம்..!"என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னவளிடம் , அவளை பேச வைக்கும் பொருட்டு "ஏன் எதுவும் பேசாமல் அமைதியா வரே.. பேசப் பிடிக்கலையா..?என்றவனிடம்.



"அச்சோ ! அப்படி எல்லாம் இல்லே... சும்மா எக்ஸாம் பத்தி யோசிச்சேன்.."



"ஓ..! அப்படியா! ஏன் ஒளி படிச்சு முடிச்சுட்டு என்ன செய்யப் போறே..?"



"ம்..! எனக்கு வேலைக்கு போகனும்.. அதனால், படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போவேன்.."



"ஓ ! சூப்பர் ! மேலே படிக்கலையா..?"



"இல்லே.. அப்பாவே ரொம்ப சிரமப்படுத்தகூடாது.. ! இனி அமுதனும் படிக்கனும் தானே..?"



"ஓ..!" என்றவன் அமைதியாகி விட..



"நீங்க ஏன் மேலே படிக்கலே.."என்றாள் இம்முறை அவள்..



"எனக்கும் வேலைக்கு போகனும்னு தோணுச்சு ..அது தான் படிக்கலே.. அப்புறம் உன்னை மாதிரி நானும் அப்பாவே அதிகம் கஷ்டபடுத்த விரும்பலே.."



"உங்களுக்கு என்ன? நீங்க ஒரு பையன் தானே! நீங்க படிக்க விரும்பினா ? அங்கிள் படிக்க வச்சுருப்பாரே.."



"ம்..படிக்க வச்சு இருப்பார் ! ஆனால் ,எனக்கு என்னமோ மேலே படிக்கத் தோணலே.."



"ஓ..! "என்றவள் சில நொடிகள் வேறு எதுவும் பேசாமல் மெளனமாகவே வந்தாள்.



மீண்டும் மிகனே அந்த மெளனத்தைக் கலைத்தான்.



"ஏன் ஒளி ! உங்க காலேஜ்லே சேலை எல்லாம் கட்டிட்டு வரச் சொல்லமாட்டாங்களா..?"



"ஏன்..கேட்கிறீங்க..?கட்டாயம் இல்லை..நம் விருப்பம் தான்..டிரஸ் கோடு எல்லாம் எதுவும் இல்லை.."



"ஓ..! உனக்கு சேலை கட்ட பிடிக்காதா?"


"அப்படி எல்லாம் இல்லை.."


"அப்புறம் நீ ஏன் சேலைகட்டறதே இல்லே..? உனக்கு சேலை ரொம்ப அழகா இருக்கும்..!"



"ம்..! இனி கட்டறேன்.. ! காலையில் அவசரமாக கிளம்புவதால் எனக்கு சுடிதார் தான் கொஞ்சம் வசதியாக இருந்துச்சு.."



"ம்..! "


"உங்களுக்கு சேலை தான் பிடிக்குமா..?"



"அப்படி இல்லை.. பொதுவா பெண்களுக்கு சேலை ரொம்ப அழகா இருக்கும் அதனால் கேட்டேன்.."



"ம்..! "என்றவளிடம் தொடர்ந்து பேச்சை வளர்க்கும் பொருட்டு, " காலேஜ் லைஃப் எப்படிப் போகுது..?"என்று கேட்டான்.



"ம்..! நல்லா போகுது.. "



"ப்ரெண்ட்ஸ் எல்லாம் நிறைய இருக்காங்களா..?"



"நிறைய இல்லை..பெஸ்ட் ப்ரெண்டுன்னா கமலி மட்டும் தான் ..அப்புறம் எல்லார் கூடவும் பேசுவேன்.."



"ஓ..! காலேஜ் கட் அடிச்சுட்டு எங்கேயாவது போய் இருக்கீயா..?"



"இல்லை..இல்லை.. அப்படி எல்லாம் போனது இல்லை.. அப்பாவுக்கு அது எல்லாம் பிடிக்காது.."



"ஓஹோ.. அப்பாவுக்கு பிடிக்காதுங்கிறதுக்காக செய்யறது இல்லையா..?"



"அப்படி இல்லை ..எனக்குமே கிளாஸ்சை கட் அடிச்சுட்டு போறது பிடிக்காது.."



"ம்..! "



"அது என்ன எல்லாத்துக்கும் "ம்.."ன்னு சொல்றே..'ம்'மை தவிர வேறு எதுவும் பேசத் தெரியாதா..?"



"இல்லே என்ன பேசறது..?"


"நான் உன்னை பத்தி எத்தனை கேட்டேன்..நீ என்னை பத்தி கேட்டீயா..?"


"ஓ..! "


"இப்ப' ம் 'ல்ல இருந்து 'ஓ 'வா .."என்று மெலிதாக சிரித்தான். அவள் 'ஓ' என்று சொன்னதை சுட்டிக் காட்டி...


அவன் அப்படி சொன்னதும்..உடனே அவள் "சரி நீங்க சொல்லுங்க உங்களுக்கு என்ன பிடிக்கும்.."என்று கேட்டாள்.


"ஹப்பா! இப்பவாவது கேடகனும்ன்னு தோணுச்சே.."என்றவனிடம் பதில் சொல்லாமல் மறுபடியும் பேசா மடந்தை ஆனாள்.



"என்ன பேச்சைக் காணோம்..?"



"நீங்க நான் கேட்டதற்கு பதிலே சொல்லே.."



"ம்..! சொல்லனுமா? சரி சொல்றேன்..அம்மா ரொம்ப பிடிக்கும் ..அப்புறம் அப்பா பிடிக்கும்.."



"அது எல்லாருக்குமே பிடிக்கும் தான்."



"அப்படியா.."என்றான் கேலியாக..



"ஆமாம் வேறே சொல்லுங்க.."



"எங்க வீட்டுக்கு எதிர்ப்புறம் ஒரு அழகான பொண்ணு இருக்கா! அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. "என்றான் குறும்பாக ..அத்துடன் அவள் என்னச் சொல்லப் போகிறாள் என்று அறிந்து கொள்ளவும் அப்படி சொன்னான்.



அவளோ , அவன் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியால் வாயடைத்து போனாள். அவளுள் வார்த்தையால் வர்ணிக்க முடியாத ஆனந்தம் குடிகொண்டது. அவள் அமைதியாக அந்த உணர்வை அனுபவித்தாள்.



அவனோ பதில் பேசாமல் வந்தவளிடம் "என்ன பேச்சைக் காணோம்..?" என்றான்.



"இல்லை இவ்வளவு மெதுவா போனா? எக்ஸாம் முடிந்த பின் தான் நான் காலேஜ் போய் சேருவேன்னு நினைத்தேன்.." என்று பேச்சை மாற்றினாள்.



"அப்படியா.. அப்ப வேகமாக போகட்டுமா..?அப்புறம் என்னை குறை சொல்லக் கூடாது.." என்றான்.



அவன் சொன்னதின் அர்த்தம் அடுத்த சில நிமிடங்களில் அவளுக்கு புரிந்தது. அவன் வண்டியின் வேகத்தை கூட்டியதும் , சாலையின் மேடு, பள்ளங்களில் இருவரின் பரிசங்கள் லேசாக உரசிக் கொண்டது. அது இருவருள்ளும் மின்சாரத்தைக் கடத்தியது.



திகழொளியோ , அந்த உணர்வின் தாக்கத்தை தாங்க முடியாமல் "அச்சோ இவ்வளவு வேகம் வேண்டாம்..! கொஞ்சம் மெதுவாகவே போங்களே.." என்றாள் பதற்றமாக..



அவனோ ,"நீ தானே வேகமாக போகச் சொன்னே.."



"அதுக்குன்னு இப்படியா போவீங்க.. ? நீங்க மெதுவாவே போங்க..ஆனால், எக்ஸாம் தொடங்கறதுக்குள்ளே கொண்டு போய் விட்டுடுங்க.."



"ஓகே..ஓகே .."என்றவன் வண்டியின் வேகத்தை மீண்டும் குறைத்துக் கொண்டான்.



மிகனுக்கு அவளுடன் வாயாடுவது மிகவும் பிடித்திருந்தது. ஆனால் ,எவ்வளவு மெதுவாக போனாலும் கல்லூரி வந்துவிட்டது.




ஒரு வழியாக கல்லூரி வாசலில் அவளை சரியான நேரத்திற்கு இறக்கி விட்டான்.



அவளோ ,"தேங்க்ஸ்.." என்று நன்றியுரைத்து விட்டு நகரப் போனவளிடம்..



"ஒளி நான் சொன்னதுக்கு பதிலே சொல்லலே.. ?சொல்லிட்டுப் போ ! " என்றவனிடம்..



அவளோ, புரியாமல் "என்ன கேடடீங்க..?" என்றாள்.



"எனக்கு எதிர்வீட்டு பொண்ணை ரொம்ப பிடிக்கும்ன்னு சொன்னேனே.. அந்த பொண்ணுக்கு என்ன பிடிக்குமா..?"



"ம்..! ரொம்ப ரொம்ப பிடிக்கும்.." என்றவள் அதற்குப்பின் நிற்காமல் ஒரே ஓட்டமாக கல்லூரிக்குள் ஓடினாள்..



மிகனோ, அவள் சொன்ன வார்த்தையை கேட்டு சில நொடிகள் மகிழ்ச்சியில் அசையாமல் நின்றான்.



உலகமே அவனுக்கு அந்த நொடி மிக அழகாக தெரிந்தது..நமக்கு பிடித்தவர்களுக்கும் நம்மை பிடிக்கும் என்று அறியும் போது அந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை..



அது போல் அவனும் அன்று அளவுகடந்த ஆனந்தத்தில் மிதந்தபடி தன் பணிக்குச் சென்றான்.



அன்றைய நாள் அவர்கள் இருவருக்குமே மறக்கமுடியாத நாளாக அமைந்தது.



நேசத்தின் விதை இருவர் மனதிற்குள்ளும் ஆலமரமாய் வளரத் தொடங்கியது.



நான் உன்னை விரும்புகிறேன் என்று சொல்லிக் கொள்ளவில்லை..ஆனால் உணர்த்திக் கொண்டார்கள்.




திகழொளி அதன் பின் வந்த நாட்களில் அதிகம் சேலை உடுத்தி தான் கல்லூரிக்குச் சென்றாள். "ஏன் சேலை கட்டறே.."? என்று கேட்ட தாயிடம் "காலேஜ்லே எல்லாரும் கட்டறாங்க மா ..அது தான் நானும் கட்டறேன் .."என்று பொய்யுரைத்தாள்.




அதுமட்டுமில்லாமல் சேலை கட்டும் நாளில் மிகன் கண்களில் படும்படி அடிக்கடி வெளியில் சென்று ஏதாவது வேலை செய்வாள்.




மிகனோ, தான் சொன்னத்தைக் கேட்டு தனக்காக சேலை கட்டி இருக்கிறாள் என்று நினைத்து பூரித்துப் போனான் . அவன் மகிழ்ச்சியை ஏதோ ஒரு வகையில் வார்த்தையால் சொல்லாவிட்டாலும், செயலால் உணர்த்தி விடுவான்.



அவள் பார்க்கும் போது கண்சிமிட்டி சிரிப்பான்.இல்லையெனறால் சூப்பர் எனறு யாருக்கும் தெரியாமல் கைகளால் செய்கை செய்வான்.



அவன் அப்படி சொல்லிவிட்டால் திகழொளி அன்று முழுவதும் அதை நினைத்து நினைத்து மகிழ்வாள்.தன்‌ தோழி கமலியிடம் சொல்லி ஆனந்தம் கொள்வாள்.



சும்மாவே அவனைப் பிடித்திருந்தவளுக்கு இன்னும் பிடிக்கும் அளவு ஒரு நிகழ்வு நடந்தது.




மிகனுக்கா சேலை உடுத்தி கல்லூரிக்குச் சென்றவளுக்கு புது பிரச்சினையாக அவளுடன் படிக்கும் சில வம்பு பிடித்த மாணவர்கள் அவளை வேண்டும் என்றே கேலி செய்தனர்.



அதுமட்டுமின்றி அதில் ஒருவன் "உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு.." என்று இவள் பின்னால் சுற்ற ஆரம்பித்தான்.




திகழொளிக்கு அவனின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிக்கவும் என்ன செய்வது ?யாரிடம் சொல்வது என்று தவித்தாள்.




தந்தையிடம் சொன்னால் தன் படிப்புக்கு ஏதாவது பிரச்சினை வந்துவிடுமோ ? என்று பயந்தாள். அவள் சதா அதே யோசனையிலேயே இருந்தாள்.




மிகனோ , அவளின் முகத்தில் தெளிவு இல்லாததைக் கண்டான்.ஏன் இப்படி இருக்கிறாள்! என்று அவனும் யோசித்தவன் அவளிடம் கேட்டே ஆக வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தான்.




சரியான நேரம் அமையவே இல்லை..ஒரு வாரம் பொறுத்தவன்.அவளுடன் தானாக பேச சந்தர்ப்பம் அமையாததால் தானே சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டான்.



தன்னிடம் இருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு திகழொளி வீட்டிற்கு சென்றவன் , "திகழி நீ அன்னைக்கு இந்த புக் கேட்டீயே ! இந்தா.. அதுவும் முப்பதாவது பக்கத்தில் நீ கேட்ட சந்தேகத்திற்கு விடை இருக்கு பாரு.." என்று அவளிடம் புத்தகத்தை கொடுத்தான்.



அருகில் பொன்னி வேறு இருந்தார்..திகழொளிக்கோ, அவன் சொல்லுவது ஒன்றும் புரியவில்லை.. இருந்தாலும் ஏதோ விஷயம் இருக்கு என்று நினைத்து புத்தகத்தை பெற்றுக் கொண்டாள்.





அவனோ, "இந்த புத்தகத்தை நீ சீக்கிரம் படிச்சுட்டு இவீனிங் தர‌முடிமா ?வேறு ஒருவர் கேட்டு இருக்காங்க.." என்றான்.




அவளும் தன் தாயார் முன் எதையும் காட்டிக் கொள்ளாமல் சரியென்று தலையை மட்டும் ஆட்டினாள்.




அவனோ, விழியாலேயே அவளிடம் படிக்கச் சொல்லி ஜாடை காட்டிச் சென்றான்.



திகழொளியோ, அவன் சென்றதும் அவசரமாக தன் அறைக்குச் சென்று அவன் சொன்ன பக்கத்தைப் புரட்டிப் பார்த்தாள்.



அந்த பக்கத்தில் ஒரு வெள்ளைத் தாளில் "ஒளி ஆர் யூ ஓகே..!ஏன் ஒரு வாரமாக உன் முகமே சரியில்லை..ஏதாவது பிரச்சினையா டா ..? எதுவாக இருந்தாலும் சொல்லு பார்த்துக்கலாம்..பதில் எழுதிக் கொடு..! " என்று அந்த லெட்டரில் எழுதி இருந்தான்.




திகழொளிக்கோ, அந்த கடித்தத்தைப் பார்த்ததும் கண்களில் நீர் தேங்கியது. தான் சொல்லாமலேயே தன்‌ முகத்தை வைத்து தன்னை கண்டு கொண்டானே‌ என்று‌ அவளுக்கு வியப்பாக இருந்தது!



இருவரிடமும் அலைபேசி இருந்தாலும், அதில் பேசிக் கொண்டது இல்லை..இவளிடம் பட்டன்‌ கைபேசி தான் இருந்தது.



அவளுடைய அலைபேசி பாதி நேரம் அமுதனிடம் தான் இருக்கும். அதனால் அவள் அதை அதிகமாக உபயோகிக்க மாட்டாள்.அவசரத்திற்கு மட்டும் தான் பயன்படுத்துவாள்.



மிகன் நம்பர் அவளிடம் இருந்தாலும், அதில் பேசும் அளவு அவளுக்கு தைரியம் இல்லை..எங்கே தன் தந்தைக்கு தெரிந்தால் தன்னிடம் கோவித்துக் கொள்வாரோ..? என்று பயந்து அதை பயன்படுத்த மாட்டாள்.



கல்லூரியிலும் அலைபேசி பயன்படுத்தக் கூடாது..அதனால் பெயருக்குத் தான் அவளிடம் அலைபேசி இருந்தது .



மிகனுக்கும் அவளிடம் அலைபேசி உள்ளது என்று தெரியும் .ஆனால், அவனும் அதில் அழைத்து இதுவரை பேசியதில்லை..அது அதிக நேரம் அமுதனிடம் தான் இருக்கும் என்று அவனுக்கும் தெரியும்.



நாம் பேசி அவளுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது எனறு யோசித்து அவனும் அவளிடம் அதை பயன்படுத்த மாட்டான்.



அதனாலேயே அவளின் அலைபேசிக்கு செய்தி அனுப்பாமல் கடிதத்தில் எழுதி புத்தகத்தில் வைத்துக் கொடுத்தான்.




திகழொளியோ, அவன் எழுதியதிற்கு கீழேயே "நாளை நீங்க என் கல்லூரிக்கு வர முடியுமா? ப்ளீஸ்! உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்.." என்று பதில் எழுதி அதே பக்கத்தில் கடிதத்தை பழைய படி மடித்து வைத்து ,அமுதனிடம் புத்தகத்தை கொடுத்து அனுப்பினாள்.



அமுதனும் தமக்கை கொடுத்த புத்தகத்தை மிகனிடம் கொண்டு கொடுத்தான். அமுதன் புத்தகத்தைக் கொடுத்து சென்ற அடுத்த நொடி அதை பிரித்துப் பார்த்தவன், அவள் எழுதிய பதிலை படித்ததும், என்ன பிரச்சினையாக இருக்கும்..? என்று யோசிக்க தொடங்கினான்.



அதே யோசனையில் இருந்தவன், அந்த கடிதத்தை அப்போதே கிழித்து போட்டு இருந்தால், பின்னால் வரப் போகும் பல பிரச்சினைகளை தவிர்த்து இருக்கலாம்.



ஆனால், அவள் சொன்னதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவன் கடிதத்தை திரும்ப புத்தகத்திற்குள் வைக்காமல், மேஜை மீது வைத்தவன் அதை பற்றி மறந்தே போய்விட்டான்.




ஆனால், அது கிடைக்க கூடாதவன்‌ கைகளில் கிடைத்தது ! விதியின் விளையாட்டு என்று தான் சொல்லனும்..



தொடரும்..
அடுத்த அத்தியாயம் உடனே வேண்டும் என்றால் சைட்டில் படிப்பவர்கள் காமெண்ட் போட்டால் விரைவில் அடுத்த அத்தியாயம் போடுவேன்..உங்கள் காமெண்ட்ஸ் என்னை விரைவாக எழுத தூண்டும்...அடுத்த அத்தியாயம் இப்போதைக்கு புதன்கிழமை..
அன்புடன்
இனிதா மோகன்..
 
Last edited:

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
378
Reaction score
635
Points
93
(Hi friends,
இன்று உங்களுக்காக சர்ப்ரைஸ் யூடி கொடுத்துள்ளேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கருத்து திரியில் பதிவிடவும்..)

உயிர் துடிப்பாய் நீ!


அத்தியாயம் 26


நமக்குள் ஏதோ ஒரு மூலையில் அன்பும் ,கருணையும், பிறருக்கு உதவும் நற்குணங்களும் குடி கொண்டிருப்பதால் தான் மனித குலம் தழைக்கிறது.



தெரியாதவர்களுக்கே உதவும் பொழுது நாம் உயிராய் நேசிப்பவர்களுக்காக உதவாமல் இருக்க முடியுமா..?



திகழொளி கேட்டது போல் மிகன் அடுத்த நாளே திகழொளியின் கல்லூரிக்குச் சென்றான்.



திகழொளியோ, தந்தை கல்லூரியில் இறக்கி விட்டுச் சென்றதும் ,மிகனுக்காக கல்லூரியின் நுழைவாயில் அருகிலேயே காத்து நின்றாள்.



மிகன் எப்படியும் வருவான் என்று நம்பினாள்.அவளை விட அவன் மீது அவளுக்கு அளவு கடந்த நம்பிக்கை இருந்தது.



மிகனோ, அவளின் நம்பிக்கை பொய்த்துப் போகாமல் , அறவாணன் சென்ற அடுத்த ஐந்தாவது நிமிடம் திகழொளியை காண வந்துவிட்டான்.



மிகனைக் கண்டதும் தாயைக் கண்ட சேய்யைப் போல் அவன் அருகில் மான்குட்டியாய் ஓடோடி வந்தாள்.



திகழொளியைக் கண்டதும் மிகனுமே மகிழ்ச்சியுடன் அவளை எதிர் கொண்டான்.


இருவரும் சில நிமிடங்கள் பொதுவான விஷயங்களை மட்டும் பேசியவர்கள் அதன் பிறகு மிகன் "என்ன விஷயம் ஒளி ..?" என்று கேட்டான்.


அவளோ ,அவன் கேட்டதும் ,மடை திறந்த வெள்ளமாக அனைத்ததையும் அவனிடம் கொட்டித் தீர்த்தாள்.




தன்னை கேலி செய்த மாணவர்களையும்,தன்னை நேசிப்பதாக தொந்தரவு செய்த மாணவனையும், மிகனிடம் அடையாளம் காட்டினாள்.


மிகனுக்கோ, அவள் சொன்னதைக் கேட்டதும் ! அவனுள் அளவு கடந்த ஆத்திரம் பொங்கியது. அதுவும் தான் நேசிக்கும் பெண்ணை கேலி செய்தது ஒரு புறம் ஆத்திரத்தைக் கொடுத்தாலும், இன்னொரு புறம் அவள் பின் சுற்றும் மாணவனை நினைத்து அவனின் கோபம் மேலும் கூடியது.



தன்னவளை அவன் எப்படி நேசிக்கலாம்? என்ற எண்ணம் அவனுள் எரிமலையாய் குமறியது. அவனை அப்போதே அடித்து நொறுக்க வேண்டும் என்ற வெறி அவனுள் கொழுந்து விட்டு எரிந்தது.




திகழொளியிடம் , தன் கோபத்தை காட்டிக் கொள்ளாமல் ,"ஒளி எங்கிட்ட சொல்லிட்டியில்லே? இனி நான் பார்த்துக்குறேன். நீ போ..! நிம்மதியா இரு! இனி அவனால் உனக்கு ஒரு பிரச்சனையும் வராது.." என்று அவளுக்கு உறுதி கொடுத்து, ஆறுதல் கூறி அனுப்பி வைத்தான்.



மிகன் என்ன செய்தானோ? ஏது செய்தானோ..? அதன் பிறகு அவளை கேலி செய்த மாணவர்களும் சரி! அவள் பின்னாடி சுற்றிய மாணவனும் சரி ! மிகனிடம் சொல்லிய நாளிலிருந்து அவள் இருக்கும் இடத்திற்கே வருவதில்லை..


அதுமட்டுமின்றி அவளைக் கண்டாலே பேயைக் கண்டதைப் போல் ஓடினார்கள்.


திகழொளிக்கு எப்போதுமே மிகனைப் பிடிக்கும். ஆனால் இப்போது, இன்னும்..இன்னும் , அவன் மேல் அளவுகடந்த நேசம் உண்டானது.


எந்த பெண்ணுக்குமே தனக்காக எதுவும் செய்யும் ஆண்மகனைக் கண்டால்! அவன் மீது அன்பும், மரியாதையும் கூடும்..திகழொளி மட்டும் அதற்கு என்ன விதிவிலக்கா..?



மிகன் அவள் மீது காட்டிய அக்கறை ! அவளுள் அவன் மீது பித்து கொள்ளச் செய்தது.



தனக்காக மிகன் இருக்கிறான் என்ற தைரியம் அவளுக்கு பெரும் நம்பிக்கையை விதைத்தது. நேசத்தின் சிறு துளி அவளின் நெஞ்சத்திற்குள் மகிழ்ச்சியை பெருக்கியது.நாளுக்கு நாள் உலகமே அவளுக்கு அழகா தோன்றியது.


மிகனின் நேசப் பார்வையும் அவள் மனதிற்குள் வசந்தத்தை வாரி வழங்கியது. மிகன் என்ன தான் செய்து, அந்த மாணவர்களை விரட்டினான் என்று அறிந்து கொள்ள வேண்டுமென்று பேராவல் அவளுள் எழுந்தது.



அவனுடன் பேசவேண்டும் என்று அவள் மனம் துடித்தது. ஆனால், அவனை எப்படி சந்தித்து பேசுவது என்று குழம்பியவளுக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது.



உடனே மிகனைப் போலவே கடிதம் எழுதி புத்தகத்திற்குள் மடித்து வைத்து அமுதனிடம் கொடுத்து அனுப்பினாள்.




தன் தமக்கையின் எண்ணம் தெரியாமல், அமுதனும் இருவருக்கும் தூதுவனாக செயல்பட்டான்.



இருவரும் அதன் பிறகு அடிக்கடி திகழொளியின் கல்லூரியில் சந்தித்துக் கொண்டார்கள். அப்படி சந்தித்துக் கொண்ட சமயத்தில் திகழொளி தன் சந்தேகத்தை அவனிடம் கேட்டாள்.



"நீங்க அந்த பசங்களிடம் என்ன சொன்னீங்க.. ?இப்பெல்லாம் என்னைப் பார்த்தாலே பேய்யைக் கண்டது போல் ஓடறாங்க.."



"ஓ..அப்படியா வெரிகுட்.."



"என்ன செய்தீங்கன்னு சொல்லுங்க..?என்று குரலில் செல்ல சினுங்கலுடன் கேட்டாள்.



" ம்..! நீ சின்னப் பெண் ! அதெல்லாம் சொன்னா உனக்குப் புரியாது.."


"நீங்க சொன்னால் தானே புரியுமா? புரியாதான்னு தெரியும்.."


"ம்..! உண்மையை சொன்னேன் .."


"உண்மையா? என்ன உண்மை.."


"அது தான் சொன்னேனே! உனக்கு சொன்னா புரியாதுன்னு.."


"ஒண்ணுமே சொல்லாமல் புரியாதுன்னு சொன்னா எப்படி..?"


"சரி அதை இன்னொரு நாள் சொல்றேன் ! இப்ப எனக்கு நேரமாச்சு கிளம்புறேன்..நீயும் போ..!"


"அப்ப சொல்லமாட்டீங்க அப்படித்தானே..?"


"அப்படி எல்லாம் இல்லை . உங்கிட்ட சொல்லாமல் வேறு யார்கிட்ட சொல்லப் போறேன். இப்ப கிளம்பட்டுமா..?" என்று கூறியபடி தன் இரு சக்கர வாகனத்தை கிளப்பினான்.


அவளோ, தொங்கிப் போன முகத்துடன் உம்மென்று நின்றாள்.


அவளின் முகத்தைப் பார்த்ததும் அவனுக்கு ஏதோ போல் இருந்தது.. உடனே வண்டியை ஒரு வட்டம் அடித்து அவள் அருகில் நிறுத்தியவன். "இப்படி முகத்தை தூக்கி வைச்சுட்டு நின்னா நான் எப்படி போவது..? அப்புறம் என்னால் இன்று முழுவதும் ஆஃபிஸில் வேலையே செய்ய முடியாது.." என்று அன்பொழுக அவன் சொன்னதும்..


அடுத்த நொடி முகத்தில் மென்புன்னகையுடன்" சரி போய்ட்டு வாங்க.. நான் நல்லாத் தான் இருக்கேன்.." என்றாள்.


அவனோ, "குட் கேர்ள் மை டியர்.." என்றவன், விழிகளை லேசாக சிமிட்டியவன்,அடுத்த நொடி மின்னலென வண்டியை கிளப்பிச் சென்றான்.



திகழொளியோ அவன் செய்கையில் உறைந்து போய் நின்றாள்.அவன் 'மை டியர்' என்று சொன்னதும், விழிகளை சிமிட்டி காட்டியதும் , அவளுள் இனம் புரியாத மகிழ்ச்சியை தந்தது. கரைபுரண்டோடும் வெள்ளம் போல் அவள் உள்ளம் ஆனந்தத்தில் ஆர்ப்பரித்தது.



அன்றைய நாள் முழுவதும் அவனின் வார்த்தைகள் அவளின் செவியில் இன்னிசையாக இனித்தது.



இதுவரை அவனும் சரி! அவளும் சரி! தங்கள் நேசத்தை பறிமாறிக் கொண்டதில்லை..ஆனால், கடத்திக் கொண்டார்கள்.



அதன் பிறகு வந்த நாள்கள் இன்னும் தேனாக அவர்களுக்கு இனித்தது.



இருவரும் ஒருவருக்கு ஒருவர் சந்திக்கும் பொழுது எல்லாம் சின்ன.. சின்ன, பரிசுகளை பறிமாறிக் கொண்டார்கள். நாளொரு வண்ணமும் ! பொழுதொரு வண்ணமுமாக ! அவர்களின் நேசம் அவரவர் மனதிற்குள் வளர்ந்து கொண்டே இருந்தது.



மிகனுமே அவளை உயிராக நேசித்தான்..அவள் இல்லாத வாழ்க்கையை அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை..


திகழொளியின் படிப்பு முடிந்த பின் அவளிடம் தன் விருப்பத்தை சொல்லனும்.அதன் பிறகு இருவீட்டாரிடமும் தன் விருப்பத்தைக் கூறி சம்மதம் பெற வேண்டும் என்று மனக்கோட்டை கட்டினான்.


தன் வீட்டு சாளரம் தான் எப்போதும் அவனுக்கு துணை.அங்கிருந்து தான் நாள்தோறும் அவளை‌ ரசிப்பான்.



திகழொளியின் படிப்பு முடியும் நாளுக்காக காத்திருந்தான்.


அவளுடைய இறுதி தேர்வு நாளை எதிர்நோக்கிக் கொண்டு இருந்தான்.




அமுதனுக்கோ ,தமக்கையின் வதனத்தில் தெரிந்த மலர்ச்சியும், மிகனைக் கண்டால் அவளின் விழிகளில் தெரிந்த ஒளியும் சிறு சந்தேகத்தைக் கொடுத்தது.



அவன் ஒன்றும் இப்போது சிறு பையன் இல்லையே..அவனும் விடலை பருவத்தில் இருந்தான்.


ஒரு நாள் தன் சந்தேகத்தை தமக்கையிடம் கேட்டே விட்டான். முதலில் திகழொளி மழுப்பினாலும், தம்பியிடம் மறைக்க முடியாமல் உண்மையை கூறிவிட்டாள்.


அமுதனோ, சிறிது நேரம் எதுவும்பேசவில்லை..அவனுக்கு தமக்கை சொன்ன விஷயத்தை ஜீரணிக்க சில நிமிடங்கள் தேவைப்பட்டது.



அமைதியாக இருந்த தம்பியின் நிலையைப் பொறுக்க முடியாமல் திகழொளி "அம்மு ஏன் டா எதுவும் பேச மாட்டீங்கிறே ! உனக்கு பிடிக்கலையா..? என்று தவிப்பாக கேட்டவளிடம்..



"அக்கா அப்படி எல்லாம் இல்லை.. நான் இதை எதிர்பார்க்கவில்லை..மிகன் அண்ணா உனக்கு நல்ல சாய்ஸ் தான்..நல்ல குணம் ! எனக்கும் அவரை ரொம்ப பிடிக்கும்.ஆனால் , அம்மா , அப்பா ஒத்துக்குவாங்களா ?"



"தெரியலை டா.. ஆனால், என் வாழ்க்கை அவரோடு தான் என்பதில் நான் உறுதியாக இருக்கேன்.."



"மிகன் அண்ணா என்ன சொல்றார்.."



"எதுக்கு..?"



"எதுக்கா? உங்க கல்யாணத்தைப் பற்றி தான்.."



"தெரியலே ! இதைப்பற்றியெல்லாம் நாங்க பேசிக் கொண்டதில்லை.."



"அப்புறம் என்ன தான் பேசுவீங்க..காதலிக்கறதை பற்றி மட்டும் தான் பேசிப்பீங்களா..?"


"அச்சோ! அதெல்லாம் சொல்லிக்கிட்டது இல்லை.."


"என்னக்கா சொல்றே ? காதலையும் சொன்னது இல்லையா..? அப்புறம் எப்படி அவர் கூட வாழ்க்கைன்னு முடிவு பண்ணுனே..?அந்த அண்ணாவாவது லவ்வ சொன்னாங்களா..?"



"இல்லை.."



"என்னது இல்லையா? இதுவரை இரண்டு பேரும் லவ் பண்றேன்னு சொல்லவே இல்லையா..?"



"ஆமாம்..!"



"அக்கா உனக்கு என்ன பைத்தியமா? அவர் உன்னை விரும்புறாரான்னு தெரியாமல் , அவர் மனசுலே என்ன இருக்குன்னு தெரியாமல் , நீ என்ன தைரியத்தில் உன் வாழ்க்கையை அவரோட தான்னு முடிவு பண்றே..?"



"சொன்னால் தான் காதலா? உணர்ந்தாலே காதல் தான்.!"



" நல்லா வியக்கானம் பேசு.. ! அந்த அண்ணா நான் அப்படி நினைக்கலேன்னு சொன்னா என்ன செய்வே..?"



"அப்படி எல்லாம் அவர் சொல்ல மாட்டார்..அவர் வார்த்தையால் அதை சொல்லாட்டீயும், செயலால் அவர் என்னை விரும்புவதை உணர்த்தி இருக்கார்.."



"அக்கா எனக்கு என்னமோ இது சரின்னு படலை.. அவர் சொல்லாட்டி, நீயாச்சும் சொல்லி உன் மனசுளே இருக்கிறதை சொல்லுக்கா .."



"போடா நான் எப்படி சொல்ல முடியும்.."



"நீ சொல்லாமே யார் சொல்லுவா..?



"அவர் சொல்லட்டும்..!"



"ஆமாம், இதில் தான் நீ ஈகோ பார்ப்பீயா ..?"



"போடா லூசு ! இது ஈகோ இல்லை.. அவர் வந்து சொல்லும் போது, அந்த பீல் வேற மாதிரி இருக்கும் . அது சொன்னால் உனக்கு புரியாது.."



"எனக்கு புரியாட்டி போது ! உன் மனசு அவருக்கும், அவர் மனசு உனக்கும் புரிஞ்சா போதும்.." என்றவன்.அதன் பிறகு தன் தமக்கையை மிகனிடம் தன் காதலைப் பற்றி சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தான்.






திகழொளியும் தம்பி பக்குவமாக சிந்தித்து தான் சொல்கிறான் என்பதை புரிந்து கொண்டாள்.தம்பி கூறியதிலிருந்த உண்மையை உணர்ந்தும் கொண்டாள்.



எதையும் அறிந்து கொள்ளாமல் , தானே ஒன்றை நினைத்துக் கொள்வது தவறு ! என்று யோசித்தாள்.



மிகனிடம் தன் மனதில் உள்ளதை சொல்வும் , அவன் மனதையும் அறிந்து கொள்ளும் நேரத்திற்காகவும் காத்திருந்தாள். ஆனால், அதற்கான நேரம் தான் அவளுக்கு கிடைக்கவே இல்லை..




சமீப காலமாக மிகன் அவள் கண்களிலேயே படாமல் இருந்தான்.



பொறுத்துப் பார்த்தவள் ,காத்திருக்க முடியாமல் , அமுதனிடம் "நான் மிகனைப் பார்க்க வேண்டும் ..! நீ போய் அவரை நாளைக்கு காலேஜ் வரச் சொல் ..!"என்று சொல்லி அனுப்பினாள்.



ஆனால் அமுதனோ, மிகன் வீட்டில் இல்லை என்றும், அலுவலக வேலையாக வெளியூர் சென்று இருப்பதாகவும், தமக்கையிடம் வந்து சொன்னான்.


திகழொளிக்கோ, மனம் மிகவும் குழம்பிப் போனது. தன்னிடம் கூடச் சொல்லாமல் வெளியூர் சென்று விட்டானே! என்று வருந்தினாள்.


அதுவும் திகழொளி அவனைப் பார்த்தே பதினைந்து நாள்களுக்கு மேல் இருக்கும்.


அமுதன் சொன்னது போல் மிகனுக்கு தன் மேல் எந்த விருப்பமும் இல்லையா? நாம் தான் தவறாக நினைத்து விட்டோமா? என்று தவியாய் தவித்தாள்.


ஆனால் அவள் மேலும் அதை நினைத்து வருந்த முடியாமல் , அவளுடைய கடைசி வருடத்தின் தேர்வுகள் வந்து அவளை எதைப் பற்றியும் சிந்திக்க முடியாமல் செய்தது.



நாள்களை எப்படியோ நெட்டி தள்ளிக் கொண்டிருந்தவளுக்கு, அன்றோடு கல்லூரியின் கடைசி தேர்வு நாளும் வந்தது.



கடைசி தேர்வை வெற்றிகரமாக முடித்து விட்டு ,வீட்டிற்கு கிளம்பினாள்.


ஆனால், அன்று அவளுக்கு வீட்டில் பெரிய அதிர்ச்சி காத்திருப்பதையும், தன் நம்பிக்கை ! சுக்கு, நூறாக உடையப் போவதையும் அப்போது அவள் அறியவில்லை..



தொடரும்..

அடுத்த யூடி புதன்கிழமை..
அடுத்த யூடி நாளை வேண்டுமென்றால் படிக்கிறவர்கள் ஒரு வார்த்தையாவது கருத்து திரியில் கருத்து பதியுங்கள்..உங்கள் காமெண்ட்ஸ் தான் நான் எழுதுவதற்கு மிகப் பெரிய ஊக்கம்..காமெண்ட்ஸ் சைட்டில் அதிகம் வந்தால் நாளையே அடுத்த யூடி போடுகிறேன்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்.
 
Last edited:

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
378
Reaction score
635
Points
93
Nalaike podunga sis..
Mukkiyamana idathula thodarum potingale...enna athirchiya irukum 🤔🤔🤔🤔

..
எழுதிட்டு இருக்கேன் முடிஞ்சதும் போடறேன் சிஸ்டர் ❤️..மிகக் நன்றி சிஸ்டர் 💞
 

Girija priya

New member
Messages
24
Reaction score
26
Points
3
Adai migan Yenga poyita....ippadi thaan sollama poratha 😈 oru vela neeran kaga ponnu ketu vandhu irrupangalo🤔nice intresting ud sis ❤️
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
378
Reaction score
635
Points
93



உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 27


நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் வாழ்க்கையில் சுவராஸ்யமே இருக்காது.நடப்பதை அதன் போக்கில் ஏற்றுக் கொள்வது தான் பக்குவம். எல்லாருக்கும் இங்கே நினைத்த வாழ்க்கை எப்போதும்‌ கிடைப்பதில்லை..


நாம் எதிர்பாராத நிகழ்வு நடக்கும் போது அது நம்மை மொத்தமாக நொறுக்கி விடும்..


அது போல் திகழொளி கல்லூரி படிப்பின் இறுதி தேர்வை எழுதி முடித்து விட்டு வீட்டுக்கு வந்தாள்.


தன் வீட்டு சுற்றுச் சுவர் அருகில் வரும் போதே மிகனின் குரல் அவள் செவியில் விழுந்தது.


அவனின் குரலைக் கேட்டதும் ! எல்லையில்லா மகிழ்ச்சியுடன் வாசல் கதவைத் திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.


ஆனால் மிகன் தங்கள் வீட்டு வராண்டாவில் நின்றிருந்த கோலமும், அவன் எதிரில் தன் பெற்றவர்கள் குனிக் கூறுகி நின்றிருந்த தோற்றமும், அமுதனின் கலங்கிய முகமும் அவளின் மகிழ்ச்சியை வடியச் செய்தது.


என்ன விஷயம்? ஏதோ சரியில்லை என்று நினைத்தவாறே திகழொளி மனம் படபடக்க அவர்கள் அருகில் சென்றாள்.


மிகனோ அவளைக் கண்டதும் , "இதோ உங்க பொண்ணு வந்துட்டா ! அவளையே கேளுங்க.." என்றான் கோபமாக..



எப்போதும் தன்னைக் கண்டால் அவன் விழிகளில் தென்படும் நேசமில்லை..மாறாக சொலில்லடங்கா வெறுப்பு தான் கொட்டிக் கிடந்தது.



அவனின் விழிகளைப்பார்த்ததுமே அவளின் மொத்த சக்தியும் வடிந்தது.


பொன்னியோ, "திகழி இந்த தம்பி சொல்லறது எல்லாம் உண்மையா ..?"என்று கேட்டார் அப்போதும் மகள் மீது நம்பிக்கையுடன்..



அறவாணனோ, மகளின் முகத்தையே பார்த்தார். அந்த பார்வையில் கவலை ,ஏக்கம் , ஏமாற்றம் வலி எல்லாமே தெரிந்தது.


திகழொளிக்கோ, ஏதோ பிரச்சினை என்று மட்டும் புரிந்தது. ஆனால், என்னவென்று தான் தெரியவில்லை..



ஒவ்வொருவரின் முகத்தை பார்த்து வந்தவள், கடைசியில் அமுதனை பார்த்தாள்.‌ஆனால், அவன் கண்களோ தமக்கைக்கு வெறுமையைத் தான் காட்டியது.


என்னவென்று தெரியாமல் குழப்பத்துடன் நின்ற மகளைப் பார்த்து "திகழி பதில் சொல்லு டீ .."என்ற தாய்யிடம்..


"என்ன பதில் மா ? எனக்கு எதுவுமே புரியலேயே..என்று தெம்பு இல்லாமல் சொன்னவளிடம்..


" உனக்கு எப்படி புரியும்.. செய்வதெல்லாம் செய்துட்டு என்னமா நடிக்கிறே..!"



" மிகன் என்ன சொல்றீங்க? எனக்கு நிஜமாவே புரியலே.."


'ம்..! உன்னால் அங்கே நீரன் சாகக்கிடக்கிறான்.."



"என்னாச்சு அவருக்கு? நான் என்ன செய்தேன்..?"


"என்ன செய்தீயா? அவனை காதலிக்கிறேன்னு சொல்லி அவன் மனசுலே ஆசையை வளர்த்துட்டு, இப்போ இது ஒத்து வராதுன்னு பிரிஞ்சுடலாம்ன்னு சொல்லியிருக்கே.. அதை தாங்க முடியாமல் அந்த படுபாவி விஷத்தை குடிச்சுட்டான்.இப்போ ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடிட்டு இருக்கான்.."



"அச்சோ! நான் அவரிடம் பேசியது கூட இல்லே..நான் எப்போ அவரை விரும்புறேன்னு சொன்னேன்! இது அப்பட்டமான பொய் மிகன்! என்னை நம்புங்க ..!"



"உன்னை தானே நம்புனேன்! ஆனால் இப்படி ஒரு வஞ்சகியாக நீ இருப்பின்னு எனக்கு தெரியாமல் போச்சே..!"


"மிகன் உண்மையாக சொல்றேன்..நான் உங்களைத் தான் நேசித்தேன் ..அவரை இல்லை..அவருடன் நான் சரியா பேசியது கூட இல்லை..தயவு செய்து நான் சொல்வதை நம்புங்க.."என்று கெஞ்சினாள்.


இது அவளுடைய மிகன் தானா? இவ்வளவு கடுமையாக கூட அவன் பேசுவானா? அவள் விரும்பிய மிகன் இது இல்லையே! இது கனவாக இருக்குமோ என்றெல்லாம் மனதிற்குள் நினைத்தாள்.


மகள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் பெற்றவர்கள் மனதில் இடியை இறக்கிக் கொண்டு இருந்தது.அதுவும் உங்களைத் தான் விரும்பினேன் என்று மகள் சொன்னதும் அவர்களுக்கு மகள் மீது கொண்ட நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்தது.



மிகனோ, "என்னால் இப்ப கூட இதை நம்பவும் முடியலே! நம்பாமல் இருக்கவும் முடியலே..நீ இவ்வளவு பெரிய ஏமாத்துக்காரியாக இருந்து இருக்கீயே..!"




மிகன் தன் தமக்கையை தவறாக சொல்லுவதைப் பொறுக்க முடியாமல் "என் அக்கா எந்த தப்பும் செய்யலே ! அந்த அண்ணா கூட அக்கா பேசியது கூட இல்லை.."என்று அதுவரை திகைப்பில் நின்றிருந்த அமுதன் கோவமாக பேசினான்.



"உன் அக்கா ஒன்னும் செய்யலையா? நீ சின்ன பையன் உங்கக்காவின் உண்மை முகம் உனக்கு தெரியலே.."என்றான் அளவுகடந்த கோவத்தில்..


"நீங்க ரொம்ப பேசறீங்க..எங்கக்கா தப்பு செய்தாங்கறதுக்கு என்ன ஆதாரம் .."


"ஆதாரமா கேட்கிறே ?இதோ காட்டறேன்.." என்றவன்.சட்டென்று தன் வீட்டுக்கு சென்று இரண்டு பைகளை எடுத்து வந்தவன் அக்கா தம்பி முன்னாடி அதில் ஒரு பையை தலைகீழாக கொட்டினான்.



திகழொளியோ ,அதைக் கண்டு இது எல்லாம் நாம் மிகனுக்கு வாங்கி கொடுத்ததே! இதை ஏன் கொட்டறான் ?என்று எண்ணிக்கொண்டே அவனிடம் 'இது உங்களுக்கு நான் கொடுத்தது தானே.." என்று அவள் கேட்டாள்..




"எனக்கு மட்டும் கொடுத்து இருந்தால்? நான் சந்தோஷப்பட்டு இருப்பேன் ..ஆனால், இது நீ நீரனுக்கும் கொடுத்து இருக்கிறேயே.."


"என்ன உளறறீங்க .."


"நான் பேசுவது உனக்கு உளறலாகத் தான் தெரியும்.. அவனை காதலிப்பதாக சொல்லி, அவனுக்கு எல்லாம் வாங்கி கொடுத்து, அவன் மனசில் ஆசையை வளர்த்துட்டு இப்போ கழற்றிவிட்டுட்டே.."



"போதும் நிறுத்துங்க..! வாய்யிருக்குன்னு என்ன வேணா பேசாதீங்க.. நான் எப்போதும் அவரை காதலித்தது இல்லை..நான் காதலித்தது உங்களை மட்டும் தான்.."


"ஆமாம் ! ஏன்னா ?அவனுக்கு சரியான வேலை இல்லை.. எனக்கு நல்ல வேலை ..!வசதி இருக்கு! அப்படி நினைச்சு இருப்பே.. இன்னும் என்னை விட பெட்ரா‌ எவனாவது கிடைச்சா! என்னை விட்டுட்டு அவன் பின்னாடி போவே..'என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பு..


அமுதன் பாய்ந்து சென்று அவன் சட்டையைப் பிடித்து, "இதுக்கு மேலே எங்கக்காவைப் பற்றி ஒரு வார்த்தை பேசுனீங்க! நடக்கிறதே வேறே ..!"என்று கண்கள் சிவக்க நின்றவனை பொன்னி தான் ஓடி வந்து அமுதனை பிடித்து தடுத்தாள்..



மிகனோ தன் கசங்கி இருந்த சட்டையை சரி செய்த படி .. "உங்க அக்கா குணம் தெரியாமல் ரொம்ப துள்ளாதே ..உன் வீரத்தை உங்க அக்கா கிட்ட காட்டு எங்கிட்ட காட்டாதே..!"என்றான் வெறுப்புடன்..



"நீங்க என்ன சொன்னாலும், எங்க அக்கா குணம் எனக்கு தெரியும்..! உங்களுக்கும் அது ஒரு நாள் தெரியும்! அப்போ உங்க தப்பை உணர்வீங்க.."



"ஓ..!கண்டிப்பா இப்பவே உணர்ந்துட்டேன்.இந்த மாதிரி ஒரு பொண்ணுகிட்ட இருந்து காலம் தான் என்னை காப்பாத்தி இருக்கு.."



"உங்களை மாதிரி ஒரு ஆளை நம்பின எங்க அக்காவுக்கும் காலம் தான் உங்க முகத்திரையை கிழித்து காட்டி இருக்கு.."என்று அவனும் பதிலுக்கு பதில் கோவத்துடன் பேசினான்.


"அமுதா !"என்று பொன்னி அவனை கட்டுப்படுத்த முயற்சி செய்தார்.


மிகனோ..தன் கையில்லிருந்த இன்னொரு பையையும் திகழொளி முன் வீசிவிட்டு "இதை பத்திரமா எடுத்து வச்சுக்கோ..இன்னும் என்னை மாதிரி வேறு எவனாச்சும் இளிச்சவாயன் கிடைத்தால் இதை கொடுக்க உதவும்.." என்றான் அவளை வெறுப்புடன் பார்த்தபடி..



திகழொளியயோ, உடைந்து போய் அவனை உயிரே இல்லாமல் பார்த்தாள்.


மிகனுக்கோ, அவள் முகத்தைப் பார்த்ததும் இவள் தப்பு செய்திருப்பாளா? இவள் முகத்தைப் பார்த்தால் தப்பு செய்வது போலே இல்லையே..ஆனாலும் அவளுக்கு எதிராக ஆதாரங்கள் இருக்கே..என்று தவித்தான்.

இப்படி அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு தான் தன்னை ஏமாற்றி இருக்கிறாள் என்று நினைத்தவனுக்கு ,அவள் மீது எல்லையில்லா கோபம் வந்தது..


அவனோ அவளின் பார்வையை தாங்கிய படி.."நீ இவ்வளவு வேஷக்காரியா இருப்பீன்னு நான் நினைச்சுக் கூட பார்க்கலையே..எப்படி என்னையும் ,அவனையும் ஏமாத்த உனக்கு மனசு வந்துச்சு..? என்ன பெண் நீ! உன்னை பார்க்கவே வெறுப்பா இருக்கு .."என்று வார்த்தைகளில் அனலைக் கக்கினான்.




"மிகன் உண்மையை தான் சொல்றேன் ..நான் அவர் கூட சரியா பேசியது கூட இல்லே.. நான் உங்களை மட்டும் தான் விரும்புனேன் என்னை நம்புங்க.!என்று மறுபடியும் மறுபடியும் அதையே சொல்லி கெஞ்சினாள்.



நானும் உன்னை நம்பினேனே! ஆனால், எல்லாம் போச்சு..நான் என் உயிரா உன்னை நினைத்தேனே! ஆனால் இப்படி கேவலமான புத்தி உன்னிடம் இருக்கும் .என்று தெரியலையே என்று வார்த்தைகளில் நெருப்பை அள்ளி வீசினான்.



"மிகன் ஏன் இப்படி என் மேல் அபாண்டமா பழி சொல்றீங்க..?"என்று பொறுக்க‌ முடியாமல் திகழொளி கேட்டாள்.


"நான் பழி சொல்றேன்னா? இப்ப கூட உனக்கு ஒரு சதவீதமாவது குற்றவுணர்வு இருக்கா? உன்னால் ஒருவன் சாவோடு போராடிட்டு இருக்கான்.."



"நான் செய்யாத தப்புக்கு எதுக்கு குற்றவுணர்வு கொள்ளனும்.."



"தப்பு செய்யலையா? இதோ இந்த கிப்ட் எல்லாம் எனக்கு கொடுக்கும் முன்னே அவனுக்கும் வாங்கி கொடுத்து இருக்கே.அவனுடன் பழகாமல் இது எப்படி சாத்தியம்.."


"மிகன் போதும் நிறுத்துங்க..உங்க வாய்க்கு வந்த படி பேசாதீங்க..காதலில் நம்பிக்கை தான் முக்கியம் அது உங்க கிட்ட சுத்தமா இல்லை.."



"நம்பிக்கை! அதன் அர்த்தம் உனக்கு தெரியுமா.. ?"


மிகன்..!


"உண்மை கசக்குதா..என் வாழ்க்கையிலேயே உன்னை மாதிரி ஒரு கேவலமான பொண்ணை பார்த்ததே இல்லை பாதகி .." என்று எல்லையில்லா கோபத்தில் கத்தினான்.


அதுவரை நடப்பதை நம்பமுடியாமல் அளவுகடந்த அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டு நின்றிருந்த அறவாணன் "மிகன் போதும் இதுக்கு மேலே ஒரு வார்த்தை பேசாதீங்க.. என் பொண்ணை இவ்வளவு மோசமா பேசாதீங்க..ஏதோ தப்பு நடந்திருக்குன்னு நினைக்கிறேன்.. இதற்கு மேல் அவளை பேசினால் எனக்கு கெட்ட கோவம் வரும்.."


ஓ..! உங்க மேலே எவ்வளவு மரியாதை வச்சு இருந்தேன்.இப்ப உங்க பொண்ணை சொன்னா உங்களுக்கு கோவம் வருதா..? அங்கே உங்க பொண்ணால் ஒரு உயிர் சாகக்கிடக்குதே அதற்கு என்ன பதில் சொல்றீங்க..? உங்க பொண்ணைக் கூப்பிட்டு விசாரிக்க துப்பில்லை என்னை பேச வந்துட்டார்..""என்றான் கட்டுக்கடங்காத கோவத்துடன்..



திகழொளியோ, தன் தந்தையை அவன் மரியாதை இல்லாமல் பேசுவதை பொறுக்க முடியாமல்.."மிகன் போதும் ! இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசுனீங்க..?"



"பேசுனா என்ன டீ செய்வே.. ?"என்று அவளின் பெற்றவர்கள்‌ முன்னே டீ போட்டு பேசியதுமில்லாமல் ,எகிறினான்.



"என்னால் என்ன செய்ய முடியும்..எதையும் புரிந்து கொள்ளாமல் !தீர விசாரிக்காமல் ! நீங்களே ஒன்றை நினைத்து! அது தான்‌ உண்மை என்று பேசுபவரிடம் நான் என்ன செய்ய முடியும்.."



"எல்லாம் புரிஞ்சு ! தீர விசாரித்து தான் பேசறேன்.."


"சரி புரிஞ்சுட்டீங்க தானே போதும் முதலில் வெளியில் போங்க.." என்று கை எடுத்து கும்பிட்டாள்.



"போகத்தான் போறேன்..போகாமல் இங்கே என்ன வாழை இலை போட்டு சாப்பிடவா போறேன். இச்சே உன்னைப் பார்த்தாலே அருவருப்பா இருக்கு..நீரனுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும் அப்புறம் உன்னை பேசிக்கிறேன்.." என்றான் பற்களை வெறுகியபடி.. அவனால் அவளை மன்னிக்கவே முடியலை..


அறவாணனோ, மிகன் பேசிய வார்த்தையின் வலியை பொறுக்க முடியாமல் " மிகன் போதும் அவள் தப்பு செய்ய மாட்டாள்..நாங்க அப்படி வளர்க்கலே..என்றார் அவரும் கோபத்துடன்.



"உங்க மகள் செய்யமாட்டான்னு சொல்றீங்களே..அவளைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு..? என்னையே எத்தனை முறை காலேஜ் வரச் சொல்லி கடிதம் எழுதி அமுதனிடம் கொடுத்து அனுப்பி இருக்கா தெரியுமா..?இவளின் உண்மை முகம் தெரியாமல் நானும் எத்தனை முறை காலேஜ் சென்று பேசி இருக்கேன் தெரியுமா? என்று அவன் எதுவுமே செய்யாத மாதிரியும்! கடிதம் அவள் மட்டுமே எழுதியது போலவும் ! என்ன பேசிகிறோம் என்று தெரியாமல் ஆத்திரத்தில் புத்தி கெட்டுப் போய் சொன்னான்.


அவள் இப்படி செய்துவிட்டாளே‌ என்ற ஆத்திரத்தில் தன்னை மறந்து பேசிவிட்டான்.




மிகன் சொன்ன வார்த்தையை கேட்டதும் பெற்றவருக்கு மகள் மீது வைத்திருந்த நம்பிக்கை சுக்கு நூறாக உடைந்தது. தன் மகளாக இப்படி செய்தாள் ? என்று அவரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் துடித்தார்..மகளின் செயல் ஒரு புறமும் , மிகன் பேசிய வார்த்தைகள் ஒரு புறமும் அவரை கொள்ளாமல் கொன்றது.



மிகன் சொன்ன வார்த்தைகளை தாங்க முடியாமல் தந்தையின் நிலையைக் கண்டு திகழொளி மனதிற்குள் அழுது கொண்டு சிலையாக நின்றாள்.



பொன்னியோ‌, மிகன் பேசியதைப் பொறுக்க‌ முடியாமல் திக்குபிரமை பிடித்தது போல் நின்றிந்த மகளிடம் " இப்படி குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வச்சுட்டீயே டீ.. ! என்னை விட உங்க அப்பா உன்னை நம்பினாரே ..அவரை இப்பிடி கண்டவனிடம் பேச்சு வாங்க வச்சுட்டீயே டீ..படிக்கிற வயதில் உனக்கு என்ன காதல் கேட்குது..?" என்றவர் தன் கோவம் தீர மகளை கன்னம் கன்னமாக அறைந்தார்.



திகழொளியோ, தாயின் அடியை வாங்கிக் கொண்டு அப்படியே அசையாமல் நின்றாள்.



அமுதன் தான் தன் தாய்யை தடுத்து, "அக்கா எந்த தப்பும் செய்யலை மா .. நான் சொல்றதை நம்புங்க மா.." என்று கெஞ்சினான்.



திகழொளியோ தன் சக்தி எல்லாம் வடிய தொய்ந்து போய் அமர்ந்தாள்.அவளால் அழுக கூட முடியவில்லை ..அளவு கடந்த அதிர்ச்சியால் அவளின் கண்ணீர் சுரப்பிகள் கூட வற்றிப் போய்விட்டது.



மிகனோ அவளை வெறுப்புடன் பார்த்து விட்டு "பொண்ணை ரொம்ப நல்லா வளர்த்து இருக்கீங்க..இச்சே!" என்றான் அளவுகடந்த வெறுப்புடன்.



அறவாணனோ "போதும் ..இதுக்கு மேல் பேசவேண்டாம் தயவு செய்து வெளியில் போங்க.." என்றார்.



மிகன் காட்டு கத்து கத்தியதில் அக்கம்பக்கத்து வீட்டுகாரர்கள் வேடிக்கை பார்த்தனர்.‌அறவாணனும், பொன்னியும் அவமானத்தில் நொறுங்கி போனார்கள்.




மிகனோ ,திகழொளியை கடைசியாக திரும்பி பார்த்தான்..அவளும் அவனைத் தான் பார்த்தாள்.



அவனின் விழிகளோ உன்னை எவ்வளவு நம்புனேன் என்னை இப்படி ஏமாற்றிவிட்டாயே..? என்று கேட்காமல் கேட்டது.



அவளின் விழிகளோ என்னை கடைசி‌ வரை நம்பாமல் பேசிகிறீர்களே.. யாரோ சொன்னதை நம்பி என் நேசத்தை சந்தேகப்பட்டுடீங்களே.. என்று குற்றம் சாட்டியது..



அது தான் இருவரும் கடைசியாக பார்த்துக் கொண்டது.


மிகன் சென்றதும் அமுதன் திகழொளியை கைத்தாங்கலாக வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.


அவளின் பெற்றோர்களோ , சில்லுசில்லாக உடைந்து போனார்கள்.மற்றவர்களின் பார்வையையும், விமர்சனங்களையும் தாங்க முடியாமல்வ வீட்டிற்குள் வந்து கதவடைத்தனர்.


யார் முகத்திலும் விழிக்கும் தெம்பு அவர்களுக்கு அப்போது இல்லை..


திகழொளியோ, தன் தந்தையிடம் "அப்பா என்னை நம்புங்கள் நான் எந்த தப்பும் செய்யலே.." என்று கண்ணீர் மல்க கதறினாள்.



பொன்னியோ," உன்னை நம்பியதுக்குத் தான் எங்களுக்கு நல்ல மரியாதை செய்துட்டேயே..உன்னை பெத்த கடனுக்
கு இன்னும் என்னென்ன பார்கனுமோ.."என்றார் கண்ணீர் மல்க..



அறவாணனோ, ஒரு வார்த்தை கூட மகளிடம் பேசலை..இடிந்து போய் அமர்ந்திருந்தார்..


மிகனோ, அங்கே‌ ருத்ரதாண்டவம் ஆடிவிட்டு வீட்டிற்குள் வந்து மனதிற்குள்‌ அழுது கொண்டிருந்தான்.


தொடரும்..

Hi friends,
உயிர் துடிப்பாய் நீ! அடுத்த அத்தியாயம் படித்துவிட்டேன்.. பிடித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.அடுத்த அத்தியாயம் சனிக்கிழமை..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்



























 

Girija priya

New member
Messages
24
Reaction score
26
Points
3
Migan unnudayadhu Yenna love 😈 ava mela yevvalavu nambikai 😈 gift items vachi avala thappa ninachiya 😈 neeran migan room ku poyi antha gift items ellam parthu athey pol gift items vangi irrukan...ippo neeran sucide drama panran...nice intresting ud sis ❤️
 

Latest Episodes

New Threads

Top Bottom