- Messages
- 908
- Reaction score
- 316
- Points
- 93
அச்சச்சோ என்ன வசனமுடா சாமி ... முடியலஏது தீக்ஷிதா வா! பார்த்தி கூடவா!இது எப்போதிலிருந்து. எம்மா திக்ஷிதா உன் தமிழ்ல தீய அள்ளி போட.
பார்த்திபன் மீது எந்த அளவிற்கு அன்பு இருந்தால் வராத தமிழை வா வா ன்னு கட்டிகிட்டு வந்து நிற்கிறாள். இருந்தாலும் என்ன பயன் அதான் அவன் அடுத்தவளுக்கு சொந்தமாகி விட்டானே.
நீ என்னதான் தவம் இருந்தாலும் இந்த ஜென்மத்தில் உனக்கு பார்த்திபன் கிடையாது வந்த வழியே பார்த்து விட்டு போயிடு திக்ஷி. அதான் உனக்கு நல்லது.
அடேய் பார்த்திபா உனக்கு ஓவர் திமிரு டா பாவம் திக்ஷிதா வை வெச்சி உன் பொண்டாட்டிய வெறுப்பேத்த ட்ரை பண்றியா.
பாவம் ஒன்னும் தெரியாத பச்ச மண்ணு டா தீக்ஷிதா.
அருள் ரூமில் இருந்து ஏன் இம்புட்டு கோபத்தோடு வர வேண்டும் திக்ஷிதா. அந்த அருள் என்ன பண்ணனும் தெரியலையே அருளே ஒழுங்கா இருந்துக்கோ, திக்ஷிதா கைல அடிவாங்கி தொலையாதே.
எது உன்னை திட்டின கன்னிகவை கட்டிப. உன் மேல உசுரையே வச்சு வராது தமிழை கத்துகிட்டு வந்த திக்ஷிதாவை வச்சிப்பியா. எப்படி உன்னால் இப்படி பேச முடிகிறது பார்த்தி.
என்ன வார்த்தை கூறிவிட்டாய் பார்த்திபா. அன்று கன்னிகா செய்த தவறு இன்று நீ விளையாட்டாக கூறினாலும் உதிர்த்த வார்த்தைகள் தவறுதானே.
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
(காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.)
பார்த்திபனின் சொல்லும் இப்போது இவ்வாறே அமைந்துவிட்டது.
அருமையான எபி க்கா
மிக்க நன்றி சிஸ்