- Messages
- 33
- Reaction score
- 6
- Points
- 8
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்- 20
மாறனும் விக்ரமனும், ருத்ராதேவியையும் யாழையும் சந்தித்துவிட்டு, விருப்பத்துக்குரியவளைப் பார்த்த சந்தோசமும், பிரிந்து வந்த துக்கமும் கலந்த மனநிலையோடு கானகத்திலிருந்து வெளியே வந்தனர்.
அங்கே, நண்பர்களிருவரும் கானகத்திற்குச் செல்லும் முன் விட்டுச் சென்ற அவர்களின் குதிரைகள் மிகவும் கவலையுடனும், சோர்வுடனும் நின்றபடி கானகத்தையே பார்த்துக் கொண்டிருந்தன...
குதிரைகளைக் கண்டு கவலையுற்ற மாறன், "இவைகளை மறந்து களித்து இருந்துவிட்டோமே நண்பா!" என்று விக்ரகமனிடம் கூற,
விக்கிரமன் குதிரையின் அருகில் சென்று, "என்னடா இப்படி இருக்கிறீர்கள்? எங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் குறிப்பு மூலமாகத் தெரியப்படுத்துகிறோம் என்று கூறிவிட்டுத் தானே சென்றோம்?" என்று கேட்டான்.
"எந்தக் குறிப்பும் வரவில்லை என்பதே, இவர்கள் சோகமாக நிற்பதற்கான காரணம் போலிருக்கே! அதோடு இவர்கள் சாப்பிடவுமில்லை போலிருக்கிறது நண்பா' என்று மாறன் கூற,
"ஏன்டா? இவ்வளவு புல்வெளிகள் இருக்கின்றன சாப்பிட்டு இருக்க வேண்டியதுதானே? என்று கேட்டவன், அருகில் இருந்த இலை தழைகளைப் பறித்துத் தங்களது குதிரைகள் முன் போட்டுவிட்டு, அவை சாப்பிட்டதும், இரு நண்பர்களும் குதிரைகளில் ஏறிப் பறந்தனர்.
மாறன் தன் அரண்மனைக்கு வந்ததும், பணியாளை அனுப்பித் தூதுவனை வரழைத்தான்.
"வணங்குகிறேன் இளவரசே!" என்று இடைவரை குனிந்து வணங்கினான் தூதுவன்.
"தொண்டைமண்டல பெருங்கிள்ளி பாண்டியரிடம் சென்று, நான் காஞ்சியை நோக்கிப் படை எடுக்கச் சம்மதிக்கிறேன் என்று இந்த ஓலையில் எழுதி இருக்கிறேன் இதைக் கொண்டு போய்க் கொடுத்து, அவருடைய ஆசீர்வாதத்தையும் கோரினேன் என்று கூறு." என்றான்.
"உத்தரவு இளவரசே!" என்று கூறி ஓலையை வாங்கிக்கொண்டு சென்றான் அந்தத் தூதுவன்.
பிறகு மதுரையில் உள்ள சிறந்த கட்டிடக் கலைஞரை வரவழைத்தான்.
"சிவகங்கைச்சீமை செல்லும் ராஜபாட்டையிலிருந்து வலது புறம் விலகிச் சென்றால் வரும், மாதவபுரத்திற்கு அடுத்து ஓர் அடர்ந்த வனம் இருக்கிறது. அந்த வனத்தின் நடுவில், வைகைக் கரை ஓரமாக எழில்மிகு வசந்தமண்டபம் கட்ட விரும்புகிறேன். நாளை நீங்கள் சென்று அந்தக் கானகத்தைப் பார்த்து வாருங்கள்" என்று கூறினான்.
"அந்தக் கானகம் மிகவும் இருளடைந்த தாயிற்றே இளவரசே! மேலும் அங்கு மனிதர்கள் நடமாடுவது கிடையாது அப்படியிருக்க அந்தக் கானகத்தில் ஏன் வசந்த மண்டபம் கட்ட வேண்டும்? தாங்கள் மிகச்சிறந்த ரசிகன். தாங்கள் விரும்பினால் வேறொரு நல்ல இடத்தைத் தேர்வு செய்யலாமே." என்று மிகவும் பணிவுடன் தன் எண்ணத்தைக் கட்டிடக்கலைஞர் கூறினான்.
அப்பொழுது அங்கே வந்த வேதநாயகிதேவி, "அந்தக் கானகத்தில் மிகப்பெரிய, அரிய பொக்கிஷம் ஒன்று மறைந்திருக்கிறது... அதெல்லாம் நம் கண்களுக்குப் புலப்படாது. எனவே வேறு எந்த ஓர் ஐயமும் இல்லாமல் தாங்கள் சென்று, அந்த இடத்தில் மிகவும் அழகான ஒரு வசந்த மண்டபத்தைக் கட்ட ஏற்பாடு செய்யுங்கள்!" என்று ஆணையிட்டார்.
வேதநாயகிதேவியார் என்ன சொல்கிறார் என்பது சரிவரப் புரியாவிட்டாலும், அவருடைய ஆணையை நிறைவேற்றும் பொருட்டு, "உத்தரவு மகாராணி!" என்று கூறி இடைவரை குனிந்து வணக்கம் சொல்லிவிட்டுக் கட்டிடக்கலைஞர் சென்றுவிட்டார்.
"என்ன அம்மா இவர்?!! அந்த இடத்தைப் பற்றி நான் முழுதாக விவரிக்கவில்லை... வசந்த மண்டபம் கட்டுவதற்கான எந்த ஒரு திட்டங்களும் கூறவில்லை... அவர் இஷ்டத்திற்கு, 'உத்தரவு மகாராணி!' என்று கூறி விட்டுப் போய் விட்டார்? என்று மாறன் தன் அன்னையிடம் கேட்டான்.
"இவர் மிகச் சிறந்த கட்டிடக் கலைஞர்! நம் தேசத்தில் பல குடைவரைக் கோயில்கள், ஆடலரங்குகள், உல்லாசக் கூடங்கள் போன்ற அழகிய கட்டிடங்கள் கட்டித் தந்தவர்... இவருடைய மூதாதையர் காஞ்சி மன்னர்களின் கீழ் பணிபுரிந்து கற்றளிகள் கட்டியவர்கள் என்று கூறுவார்கள்... இப்பொழுது காஞ்சிபுரம் சோழர்கள்வசம் ஆனதனால் இங்கே குடி பெயர்ந்திருக்கின்றனர்... இவர்களுக்கு நீ இடத்தைக் காட்டத் தேவையில்லை… வசந்த மண்டபத்திற்குத் தேவையான எந்தத் திட்டங்களும் தரத் தேவை இல்லை... அவர்களே அவ்விடத்திற்குச் சென்று இடத்திற்கேற்ப, மிக அழகான இரண்டு வரைபடத்தைக் கொண்டுவந்து காட்டுவார்கள்… வரைபடங்கள் நம் கற்பனையை மீறிய எழிலோடு இருக்கும்… இரண்டு வரைபடத்தில் எதைத் தேர்ந்தெடுப்பது? என்பது மிகவும் குழப்பமாக இருக்கும்… அதில் உனக்குப் பிடித்திருப்பதைக் கூறு. அவ்வளவுதான்!" என்று வேதநாயகிதேவியார் தன் மகனின் கன்னத்தில் வாஞ்சையுடன் தனது வலது கரத்தால் வருடியபடி கூறினார்.
"அம்மா தங்களிடம் முக்கியமான ஒரு விஷயம் கூற விழைகிறேன்... இன்று என்னைப் பெருங்கிள்ளிப் பாண்டியர் அழைத்து, காஞ்சியை நோக்கிப் படையெடுத்து, காஞ்சியை ஆளும் விஜயகந்த கோபாலன் என்ற சோழனுடன் போரிட்டு வெற்றிவாகை சூடி வா என்று கூறினார். அவ்வாறு படையெடுத்துச் சென்று நான் வெற்றி கண்டால், காஞ்சியை ஆளும் உரிமையை எனக்குத் தருவதாகக் கூறினார்." என்றான்.
"விஜயகந்த கோபாலன்!" என்று ஒரு முறை மிகவும் மென்மையாக உச்சரித்த வேதநாயகிதேவியார், சிறிது நேரம் கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்தார்.
பிறகு தன் மகனின் நீண்ட கரிய இமைகளால் சூழந்த ஒளிவீசும் கண்களைக் கூர்ந்து பார்த்தவாறு, "உன்னால்முடியும் குமாரா! விஜயகந்த கோபாலன் பெரிய வீரர்தான்! மிகச்சிறப்பாகப் படை நடத்தக்கூடிய திறமையும் மிக்கவர். இருப்பினும் எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. என் மகனால் அவரை வெல்ல முடியும் என்று. இது உனக்கு மிகப்பெரிய சவாலாகக் கூட இருக்கலாம்! அவரை வென்று, நீ வெற்றி ஈட்டி வந்தால் பெருங்கிள்ளிப் பாண்டியர் கூடத் தேவையில்லை, உன் தந்தையாரே உனக்குக் காஞ்சியை அரசாளும் உரிமையை மிகுந்த பெருமிதத்துடன் தருவார்..." என்று வெற்றி பெற ஊக்கப்படுத்தினார் வேதநாயகித் தேவியார்.
"நன்றி அம்மா! எங்கே காஞ்சியை நோக்கிப் போர் புரிய வேண்டாம்! என்று நீங்கள் தயங்குவீர்களோ என்று யோசித்தேன்." என்று மாறன் இளநகையுடன் கூற.
தன் மகனின் அழகிய வதனத்திற்கு எழிலூட்டும் அகன்ற நெற்றியில் விழுந்த சுருண்ட முடியைக் கோதிவிட்டவாறு, "ஒவ்வொரு இளவரசிக்கும், தான் பட்டத்தரசியாக வேண்டும் என்று கனவு இருப்பதுபோல், ஒவ்வொரு இளைய ராணிக்கும் தன் மகன் அரசாள வேண்டும்… தான் ஒரு ராஜமாதா ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும் குமாரா!" என்று புன்னகை தவழக் கூறினார்.
வேதநாயகிதேவியாரின் கண்களில் தெரிந்த ஏக்கம், மாறனின் இளம் இதயத்தைத் தாக்க, அச்சிறு வலியைப் பொறுக்கமாட்டாமல்,
"நிச்சயம் உங்கள் மகன், உங்கள் ஆசையை நிறைவேற்றுவான் அம்மா! எனக்கு ஆசி கூறி வழி அனுப்புங்கள். போருக்குத் தேவையானவற்றை ஆயத்தம் செய்ய வேண்டும்." என்று கூறி, தன் தாயின் பாதங்களில் பணிந்தான்.
தன் பாதங்களில் பணிந்த மாறனைத் தொட்டு தூக்கி, தன்னை விட உயரமான அவனை நிமிர்ந்து பெருமை பொங்க பார்த்து, "என்றும் வெற்றி உனதாகட்டும் மகனே! சென்று, வென்று வா! எதிர்காலக் காஞ்சியின் மன்னனை ஆவலுடன் வரவேற்க காத்திருக்கிறாள் இந்தத் தாய்" என்று மனமார தன் மகனை ஆசிர்வதித்து, நெற்றியில் இதழ் பதித்தாள்.
அடுத்த நாளே விக்ரமனும் மாறனும் சேர்ந்து போருக்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தனர்.
"இந்தப் போரை நான் மட்டும் நடத்துகிறேனே விக்கிரமா?" என்று மாறன் கேட்க,
"எப்போதிருந்து நீ வேறு, நான் வேறு என்று ஆனோம்? இந்த வெற்றியை நீ இளவரசி ருத்ராதேவிக்குப் பரிசளிக்கிறாய் என்றால், நான் என் சகோதரி ருத்ராதேவிக்குப் பரிசளிப்பதாக இருந்துவிட்டுப் போகட்டுமே!" என்று கூறினான் விக்ரமன்.
தன் நண்பனின் அன்பில் உள்ளம் பூரிக்க, ஓடிச்சென்று விக்ரமனைக் கட்டியணைத்தான் மாறன்.
"நண்பா! என்றுமே நீ வேறு, நான் வேறு அல்ல. ஓருயிர் ஈருடல் ஆவோம்… என் உடல் மரித்தே போனாலும், உனக்குள் உயிர்த்திருப்பேன்" என்று மாறன் நெகிழ,
"ஏன் இப்படியொரு வார்த்தையைக் கூறுகிறாய்? என்றுமே என் உயிர் உனக்குள்தான் சஞ்சரிக்கிறது... நாம் ஆத்மார்த்தமான நண்பர்கள் மாறா... …" என்று எதிர்காலத்தில் நடக்கப்போவது அறியாமல் நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துத் தங்களது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
அடுத்து ஒரு தூதுவனை வரவழைத்து, "காஞ்சிக்குச் சென்று, நெல்லைச் சோழன் விஜயகந்த கோபாலரைச் சந்தித்து, மதுரை பேரரசர் குலசேகரப் பாண்டியனின் தவப்புதல்வன் மாறன்பூபதி, காஞ்சி தேசத்தை நோக்கிப் படை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறு!" என்று கூறி ஓலையைத் தூதுவனிடம் கொடுத்து அனுப்பினான்.
இரு தினங்களிலேயே, நெல்லைச் சோழன் விஜயகந்த கோபாலனும் போருக்குத் தானும் தயாராவதாகத் தூதுவரிடம் கூறி அனுப்பினான்.
பிறகு தம்மிடமுள்ள பாண்டிய நாட்டுப் படைகளுடன், நெல்லை சிற்றரசரின் அருந்தவப் புதல்வனும் தனது நண்பனுமான விக்ரமனின் சேனைகளையும் சேர்த்துக்கொண்டு, தங்களது நட்புறவு அரசர்களிடமும் தேவையான படைபலங்களைப் பெற்றுப் போருக்கான நல்ல நாளைக் குறித்தனர்.
மாறன் காஞ்சியை நோக்கிப் படை நடத்திச் செல்லும் நாள் அறிந்ததும், பெருங்கிள்ளிப் பாண்டியரும் தன்னுடைய நால்வகைப் படைகளையும் அனுப்பி வைத்ததோடு, மாறன் வெற்றி பெற மனமார வாழ்த்தினார்.
அதை அறிந்த பட்டத்தரசியும், பட்டத்தரசியின் புதல்வரான இளவரசர் சுந்தரனும் அதிர்ச்சி அடைந்தனர்.
"சுந்தரா இது நமக்கு நல்ல செய்தி அல்ல. உன் மாமனே, மாறனை நம்பி, அவருடைய பெரும் சேனைகளை அனுப்பி வைக்கிறார் என்றால், என் தமையனார் பெருங்கிள்ளி பாண்டியருக்கும், மாறன் மேல் தனிப்பட்ட பிரியமும், நம்பிக்கையும் இருக்கிறது என்று அர்த்தம். ஏற்கனவே உன் தந்தையார், மதுரை பேரரசர் குலசேகரப் பாண்டியருக்கு, மாறன் மீது மாறாத அன்பும், நம்பிக்கையும் உண்டு என்பதை மறந்து விடாதே! இது உன் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. நீ உன் முரட்டுத்தனங்களையும், சல்லாபங்களையும் சற்று ஒதுக்கிவிட்டு, பொறுப்பாகவும் இந்த நாட்டுக்குரிய அரசனை போல் கனிவாகவும், பெரியோர்களிடம் மரியாதையாகவும் நடந்துகொண்டால் நல்லது!" என்று அறிவுறுத்தினார்.
பதிலேதும் உரைக்காமல் தனது அரண்மனையை நோக்கி நடந்த சுந்தரனின் கவனமோ வேறொரு யோசனைக்குச் சென்றது. மாறன் வெற்றி பெறக் கூடாது என்று எண்ணினான். அதற்காக எதையும் செய்யத் தயாரானான்.
அரண்மனை மேல்மாடத்தில் குறுக்கும் நொடுக்குமாக நீண்ட நேரம் உலாத்தியவன், பெருங்கிள்ளிப் பாண்டியரை வசைபாடினான். பிறகு
ஒரு முடிவுக்கு வந்து,
தன்னுடன் நட்புறவு கொண்ட சில நாடுகளின் சேனைகளையும், தன் தாய் வழி நாட்டின் சேனைகளையும் திரட்டினான்.
நேராகத் தென்காஞ்சிக்குச் சென்று, விஜயகந்த கோபாலனைச் சந்தித்து நட்பு பாராட்டி, அவரிடம், தான் அழைத்து வந்த சேனைகளை ஒப்படைத்து, விஜயகந்த கோபாலன் வெற்றிபெற ஆவன செய்வதாக உறுதியளித்துத் திரும்பினான்.
இதைக் கேள்விப்பட்ட பெருங்கிள்ளி பாண்டியர் வெகுண்டெழுந்தார். மதுரைக்கு ஒரு தூதுவனை அனுப்பிப் பட்டத்தரசியிடம் கொடுக்குமாறு ஓர் ஓலையைக் கொடுத்தனுப்பினார்.
அதில் "சுந்தரன் செய்வது மகா மூடத்தனம்... காஞ்சியை ஆளும் நெல்லைச் சோழன் விஜயகந்த கோபாலனை வென்று தென்காஞ்சியைப் பாண்டிய தேசத்தோடு இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற தீராத அவா, உனது கணவரும் பாண்டிய சக்ரவர்த்தியுமான குலசேகரபாண்டியருக்கு உண்டு என்பதை மறவாதே! அதை மனதில் கொண்டே நான் மாறனை காஞ்சியை நோக்கிப் படை நடத்தச் சொன்னேன். அவன் வெற்றி பெற நிறைய வாய்ப்பிருக்கிறது… அவன் வெற்றி நம் தேசத்திற்குப் பெருமை சேர்ப்பதாகும்… நானே மாறனுடன் சேர்ந்து போர் புரியத்தான் ஆவல் கொண்டிருந்தேன். ஆனால் மதுரை பேரரசர் நாட்டில் இல்லாத இச்சமயம் நானும் போர் நடத்தி வெளியே சென்று விட்டால், வேறு அந்நியர் மூலமாகப் பாண்டிய பேரரசிற்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற ஐயத்தினால் மட்டுமே என்னுடைய படைகளை மட்டும் மாறனுடன் அனுப்பி வைக்கிறேன். இவ்வேளையில் வருங்காலத்தில் பாண்டிய பேரரசை ஆளப்போகும் சுந்தரன் செய்யும் செயல் நம் தேசத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. காஞ்சி மன்னனை எதிர்த்துத் தம்பி படை எடுத்துச் செல்லும்பொழுது, மாறனின் தமயனே காஞ்சி மன்னனுக்குச் சேனைகளைக் கொடுத்து உதவுகிறான் என்பது எதை உணர்த்துகிறது? இது அருகில் உள்ள நம் பகைநாடுகளுக்குத் தெரிந்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். அரசர் இல்லாத இவ்வேளையில் பட்டத்தரசியாக நீ இருந்து, உன் மகனை வழிநடத்துவது இத்தேசத்திற்கும் உனக்கும் நல்லது! பாண்டிய தேசத்தின் கௌரவமா? தங்கையா? எது பெரிதென்று கேட்டால், என் தேசமே பெரிதென்று முடிவெடுப்பேன் என்பதையும் சுந்தரனிடம் கூறு." என்று அந்த ஓலையில் எழுதி இருந்தது.
அவ்வோலையில் எழுதியிருந்த எழுத்துக்களின் வடிவமே பெருங்கிள்ளி பாண்டியரின் மிதமிஞ்சிய கோபத்தை எடுத்துக்காட்டுவதாக இருந்தது.
அந்த ஓலையைப் படித்த பட்டத்தரசியாருக்கு, 'சுந்தரன் ஏன் இந்த மாதிரி நடந்து கொள்கிறான்?' என்ற அதிர்ச்சியும்,
'பெருங்கிள்ளிப் பாண்டியரின் நன்மதிப்பை தன் மகன் பெறவில்லையே?' என்ற கவலையும் ஒருங்கே இணைந்து மனதை வாட்டியது.
உடனே ஒரு பணியாளைத் தன் மகனிடம் அனுப்பி, நெல்லைச் சோழராம் விஜயகந்த கோபாலனுக்குச் சேனை கொடுத்து உதவி செய்வதை நிறுத்துமாறு பணித்தார்.
ஆனால் பட்டத்தரசியாரின் கூற்றை, சுந்தரன் சிறிதும் ஏற்கவில்லை…
இதை அறிந்த பட்டத்தரசி, தனது தாய் வழி நாட்டிற்குத் தூதனுப்பி, "விஜயகந்தச் சோழனுக்கு எதிராகச் சேனைகளை அனுப்ப வேண்டாம்!" என்று ஓலை அனுப்பினார்.
ஆனால் அதற்கு முன்பே சேனைகள் காஞ்சியை நோக்கிச் சென்றுவிட்டதாக அங்கிருந்து மறு ஓலை வந்து சேர்ந்தது.
செய்வதறியாது திகைத்த பட்டத்தரசி நேரடியாகச் சுந்தரனிடம் சென்று, "இந்த நோக்கத்தை நிறுத்து குமாரா… உன் செயல்கள், எம் தமையனாராம் பெருங்கிள்ளிப் பாண்டியருக்கு மட்டுமல்ல, உன் தந்தைக்குமே மிகுந்த வருத்தத்தை அளிக்கும். இவர்கள் இருவரையும் நீ பகைத்துக் கொள்வது உன்னுடைய எதிர்காலத்தைப் பாதிக்கும்!" என்று எடுத்துரைத்தார்.
எவ்வளவோ மன்றாடியும் சுந்தரனின் செவிகளில் பட்டத்தரசி கூறியது எதுவும் விழவில்லை…
"மாறன் தோல்வியைத்தான் தழுவுவான்… விஜயகந்த கோபாலரை அறியாதவராத் தாங்கள்? வீரத்திற்கே வீரத்தைக் கற்றுத்தரும் தீரராகிய என் தந்தையே நெல்லைச் சோழர் மீது போர் தொடுக்கக் காலநேரம் பார்க்கும்பொழுது, மாறனால் காஞ்சியைக் கைப்பற்றுவது இயலாத காரியமே… அவன் காஞ்சி மன்னனிடம் தோற்று அவமானத்தைப் பரிசாகக் கொண்டு வரட்டும். அதன் பிறகு இந்தப் பெருங்கிள்ளி பாண்டியரும் தந்தையாரும் அவனுக்கு எவ்வாறு ஆதரவு அளிப்பார்கள் என்று பார்க்கிறேன்!" என்று ஏளனமாகச் சிரித்தான்.
"நீ சொல்வதுபோல் நடந்தால் சந்தோஷம்… ஆனால் மாறன் வெற்றி பெறுவான் என்கிறாரே என் தமையனார்."
"அவர் உங்களுக்குத் தமையனாரா? அல்லது அந்த…"
"நிறுத்து குமாரா… தயைகூர்ந்து தரமற்ற வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம். ஆயிரம் இருந்தாலும் பெருங்கிள்ளிப் பாண்டியர் எனது மதிப்பிற்குரிய தமையனார்… அதோடு இத்தேசத்திற்காகப் பெரிதும் பாடுபடுபவர் என்பதை மறவாதே!"
"நீங்கள் சொல்வது உண்மையென்றால், பெருங்கிள்ளி பாண்டியர், வருங்காலத்தில் இந்தத் தேசத்தை ஆளப்போகும் எனக்கல்லவா ஆதரவாக இருக்க வேண்டும்."
"அதற்குத்தான் நான் அடிக்கடி கூறினேன். நீ பெரியோரை மதித்து நட, பெருங்கிள்ளி பாண்டியர் மற்றும் உன் தந்தையின் நன்மதிப்பைப் பெறு என்று ஆனால் நீ எப்பொழுது என் மொழிகளுக்குச் செவிமடுத்தாய்?"
"இவ்வேளையில் இந்தத் தர்க்கம் முக்கியமா? அல்லது மாறனின் தோல்வி முக்கியமா?" என்று தன் அன்னையைப் பார்த்துக் கேட்டான் சுந்தரன்.
"நான் ஒரு சாதாரணத் தாயாகவும், இத்தேசத்தின் பட்டத்தரசியாகவும் விரும்புவது, என் வயிற்றில் பிறந்த என் மகனே, வருங்காலத்தில் இப்பாண்டிய தேசத்தை ஆள வேண்டும் என்பது தானடா!"
"அப்படி என்றால் தாங்கள் சற்று ஓய்வு கொள்ளுங்கள்…என்றுமே மாறனால் விஜயகந்த சோழனை தோற்கடிக்க இயலாது. தோல்வியில் துவண்டு வருவான். அது ஒன்று போதும்… வருங்கால அரசரின், அதாவது என்னுடைய நட்பு நாட்டின் மீது போர்தொடுத்தது தேச துரோகம் என்று கூறி, மாறனையும் அவன் தாயையும் தேசாந்திரம் அனுப்பி விடுகிறேன்" என்று கொக்கரித்த தன் மைந்தனின் கொடூர முகத்தைப் பார்க்க சக்தியற்று தனது அரண்மனைக்குத் திரும்பினார்.
குறித்த நன்நாளில் காஞ்சியை நோக்கி படையெடுத்தான் மாறன்…
விசயமறிந்த பாண்டியநாட்டின் மக்கள், வழியெங்கும் மலர் தூவி, ஆரத்தி எடுத்து, மாறனை வாழ்த்தி வழியனுப்பினர்
இப்போரில் மாறன் வென்றால் மதுரையின் அடுத்தப் பேரரசர் இவரே! என்று உள்ளம் பூரித்தனர்.
ஜெய கோஷங்கள் முழங்க மதுரைக் கோட்டையில் கொலுவிருக்கும் கொற்கையை வணங்கி வெற்றி கிட்ட அந்தத்தாயின் ஆசி பெற்றுக் குதிரையில் ஏறினான் மாறன்.
தன்னைத் தன் தாய் அழைப்பதுபோல் உள்ளுணர்வு கூற, அரண்மனையின் மேல் மாடத்தைத் திரும்பிப் பார்த்தான்… அங்கே வேதநாயகிதேவியார், மீன் கொடியை அசைத்து வெற்றி எனும் திருமகளுடன் வா என்று வாழ்த்தி வழியனுப்பினார்.
ஆனால் மாறனை அழைத்தது அந்தத் தாயல்ல,
"நில் மகனே! மதுரை மண்ணின் மைந்தனே… வீரத்திருவுருவே கோட்டை வாயிலைக் காத்து நிற்கும் கொற்கை கூறுகிறேன்… நில்!" என்று வீரம் தெறிக்கும் விழிகளில் நீர் வடிய நின்றுகொண்டிருந்தாள் கொற்கை.
ஜெய கோஷங்களாலோ, மக்களின் வாழ்தொலியாலோ அல்லது விதி செய்த சதியோ தெரியவில்லை. கொற்கையின் குரல் மாறனின் செவிகளைத் தீண்டவே இல்லை…
மாறன் பூபதியாகிய மாறனின் சேனைகள் ஆர்ப்பரிக்கும் கடலாய் காஞ்சியை நோக்கிச் சென்றன...
யானைப்படைகள் கடந்து சென்ற பாதைகள் எல்லாம் பள்ளமாக மாறின…
குதிரைகளின் கனைப்பில் சுற்றுவட்டாரத்தில் இருந்த நகரங்கள அதிர்ந்தது…
ஒருகாத தூரம்வரை சேனைகள் வாழ்த்தொலி முழங்கியவாறு சென்றனர்.
படைநடத்திச் சென்ற மாறன்பூபதியையும், விக்ரமனையும் கண்ட சூரிய பகவான், 'தன்னை நோக்கித்தான் படைநடத்தி வருகிறார்களோ?' என்று ஐயுற்று ஏழுகுதிரைகள் பூட்டிய தனது தேரில் ஓடி மேகத்தினுள் மறைந்தார்.
மாறனின் படைகள் காஞ்சிமாநகரின் எல்லையைத் தொடும்போதே, விஜயகந்த சோழன் தனது சேனைகளுடன் எதிர்கொண்டான்.
அடுத்தநொடியே அவ்விடத்தில் இரத்த ஆறு ஓடியது…
மாறன் தலைமை சேனாதிபதியுடனும் விக்ரமன், காஞ்சி நகரத் தளபதியுடனும், பெருங்கிள்ளிப் பாண்யரின் சேனாதிபதி காஞ்சியின் யானைப்படைத் தலைவனோடும் நேருக்குநேர் போர் புரிந்தனர்.
மாறனின் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளைத் தடுப்பதற்கே தலைமை சேனாதிபதிக்கு திண்டாட்டமானது… அவரால் மாறனை நோக்கி ஓர் அம்புகூட எய்ய முடியவில்லை…
மாறனின் அம்புகள் அருவியாகக் கொட்டியது… வெகு விரைவிலேயே சேனாதிபதி, தளபதி, நால்வகைப் படைத்தளபதிகளை வீழ்த்திவிட்டு, மாறனும், விக்ரமனும், பெருங்கிள்ளிப் பாண்டியரின் சேனாதிபதியும் விஜயகந்த கோபாலரை நோக்கி நகர, குதிரைப்படைத்தலைவர் பெருங்கிள்ளிப் பாண்டியரின் சேனாதிபதியை மறித்துப் போரிட்டார்… அவர்கள் தனியாகப் பிரிந்து சென்றனர். விக்ரமனை சுந்தரனின் தாய்வழி நாட்டின் தளபதி மறித்துப் போரிட, மாறன் மறித்து வந்த சேனைகளை வீழ்த்தி விஜயகந்த கோபாலரை நோக்கி விரைவாக முன்னேறினான்.
மாறனின் படை மிக எளிதாகக் காஞ்சிப் படையை வீழ்த்தி முன்னேறியது…
இருதரப்புக் காலாட்படை வீரர்களும் போர்க்களத்தில் ஒன்றோடொன்று மோதியதைப் பார்தவர்களுக்கு வெறிகொண்ட காளைகள் மூர்க்கத்தனமாக மோதிக்கொண்டதைப் போலிருந்தது.
மறுபுறம் யானைப்படைகள் மோதிக்கொண்டதில் பூகம்பமே வந்துவிட்டதாக எண்ணி மருண்டு ஓடின குதிரைகள்…
குதிரைகள் தறிகெட்டு ஓடியதில் காலாட்படை வீரர்கள் அடிபட்டு வீழுந்தனர்.
இரு தரப்பிலுமே யார் வெற்றி பெறுவார் என்று கணிக்க முடியாததாக அன்றை நாளின் மாலை போர் முடிந்தது…
இருதரப்பிலுமே சேதங்கள் அதிகமாக இருந்தது.
இந்தச் செய்தியை ஒற்றர்மூலம் அறிந்த சுந்தரனோ மிகவும் மகிழ்தான்.
பட்டத்தரசியார், "இரு தரப்பிலும் வெற்றி யாருக்குச் சொந்தம் என்று தெரியவில்லை என்றுதானே செய்தி வந்திருக்கிறது? இதில் நீ குதூகலிக்க என்ன இருக்கிறது?" என்று கேட்டார்.
இன்னும் முக்கியமான நிகழ்வு நடைபெறவில்லை அம்மா! விஜயகந்த கோபாலரை மாறனால் இன்னும் நெருங்க முடியவில்லை… அவரிடம் நேருக்குநேர் போர்புரிந்து உயிர் தப்புவது மிகவும் கடினம். ஒரே அம்பில் எழுவரை சாய்க்க வல்லவர் நொல்லைச் சோழன்… அவரது வேலுக்கும் வாளுக்கும் பதில் கூற மாறனால் ஒருபோதும் முடியாது. பெருங்கிள்ளிப் பாண்டியரின் சேனைத்தலைவராலேயே நெல்லைச் சோழனை நெருங்க முடியவில்லையாம்…" என்று கெக்கலி கொட்டிச் சிரித்தான் சுந்தரன்.
அதையே வேறுவிதமாகக் கூறினார் பெருங்கிள்ளிப் பாண்டியர் தன் மனைவியிடம், "மாறனும் விஜயகந்த கோபாலனும் இன்னும் நேருநேர் போர் புரியவில்லை அது நடக்கும்போது இந்த உலகம் அறியும், மாறன் எப்படிப்பட்ட வீரன் என்று." என்று கூற,
"எல்லோரும் விஜயகந்த கோபாலர் தான் வெற்றி பெறுவார் என்கிறார்களே?" என்று பெருங்கிள்ளிப் பாண்டியரின் மகாராணி கேட்டார்.
'நான் அறிவேன்! நிச்சயமாக மாறன்தான் வெற்றி பெறுவான் என்று கூறினார்.
அடுத்த நாள் காலையில் போர் ஆரம்பித்தது... மீண்டும் மாறனுடன் காஞ்சியின் தலைமை சேனாதிபதி மோதினார்.
"மாறா! அவரை விட்டால், மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருப்பார்... அவருக்கு ஓர் அம்பைப் பரிசளித்து விட்டு, உன் இலக்கை நோக்கிப் போ!" என்று விக்ரமன் காஞ்சித் தளபதியுடன் போரிட்டுக் கொண்டே கூறினான்.
அதேவேளையில் விக்ரமனும் காஞ்சித் தளபதியை வாளால் வதம் செய்துவிட்டு, விஜயகந்த கோபாலரை நோக்கி முன்னேறினான்.
விக்ரமனை மற்றொரு சேனாதிபதி வந்து மறித்து அவனுடன் போரிட,
மாறன் விஜயகந்த கோபாலரை நோக்கி முன்னேறினான்.
மாறனுக்கும் விஜயகந்த கோபாலருக்கும் இடையே பலத்த போர் நடைபெற்றது.
இருவர் வாளும் உரசுகையில் மின்னல் வெட்டியது…
மிக நுண்ணிய இடைவெளியில் இருவரின் தலையும் அடுத்தவர் வாளுக்கு இரையாகாமல் தப்பின.
வாள் போரால் மாறனை வெல்ல முடியாது என்று அறிந்து கொண்ட விஜயகந்த கோபாலன், அவனது கதையை எடுத்தான்…
இருவர் கதைகளும் மோதுகையில், ஆலயமணி அடிக்கும்பொழுது, மணிக்குள் தலையை விட்டதுபோல் அருகிருந்தவர் செவிப்பறை கிழிந்தது.
மீண்டும் போர் வலுத்தது… ஒவ்வொரு முறையும் விஜயகந்த கோபாலரின் கதை வீச்சை மிக எளிதாக மாறன் தன் கதையால் தடுத்தான்…
வெகுநேரமாகியும் மாறன் உடலை விஜயகந்த கோபாலனின் கதையால் தீண்ட முடியவில்லை…
சற்றே சோர்வடைந்தது விஜயகந்த கோபாலனின் உடல், ஆனால் மாறனோ சற்றும் வேகம்குறையாமல் போரிட்டுக் கொண்டிருக்க,
'இன்னும் சிறிதுநேரத்தில் நாம் தோற்றுவிடுவோம்' என்று விஜயகந்த கோபாலர் நினைத்த கணத்தில் எங்கிருந்தோ வந்த ஈட்டி மாறனின் மார்பில் பாய, அப்படியே மல்லாந்து விழுந்தான்.
வார்த்தைகளின் எண்ணிக்கை-2043.
சிவதாசனின் கர்ஜனை தொடரும்…
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
மாறனும் விக்ரமனும், ருத்ராதேவியையும் யாழையும் சந்தித்துவிட்டு, விருப்பத்துக்குரியவளைப் பார்த்த சந்தோசமும், பிரிந்து வந்த துக்கமும் கலந்த மனநிலையோடு கானகத்திலிருந்து வெளியே வந்தனர்.
அங்கே, நண்பர்களிருவரும் கானகத்திற்குச் செல்லும் முன் விட்டுச் சென்ற அவர்களின் குதிரைகள் மிகவும் கவலையுடனும், சோர்வுடனும் நின்றபடி கானகத்தையே பார்த்துக் கொண்டிருந்தன...
குதிரைகளைக் கண்டு கவலையுற்ற மாறன், "இவைகளை மறந்து களித்து இருந்துவிட்டோமே நண்பா!" என்று விக்ரகமனிடம் கூற,
விக்கிரமன் குதிரையின் அருகில் சென்று, "என்னடா இப்படி இருக்கிறீர்கள்? எங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் குறிப்பு மூலமாகத் தெரியப்படுத்துகிறோம் என்று கூறிவிட்டுத் தானே சென்றோம்?" என்று கேட்டான்.
"எந்தக் குறிப்பும் வரவில்லை என்பதே, இவர்கள் சோகமாக நிற்பதற்கான காரணம் போலிருக்கே! அதோடு இவர்கள் சாப்பிடவுமில்லை போலிருக்கிறது நண்பா' என்று மாறன் கூற,
"ஏன்டா? இவ்வளவு புல்வெளிகள் இருக்கின்றன சாப்பிட்டு இருக்க வேண்டியதுதானே? என்று கேட்டவன், அருகில் இருந்த இலை தழைகளைப் பறித்துத் தங்களது குதிரைகள் முன் போட்டுவிட்டு, அவை சாப்பிட்டதும், இரு நண்பர்களும் குதிரைகளில் ஏறிப் பறந்தனர்.
மாறன் தன் அரண்மனைக்கு வந்ததும், பணியாளை அனுப்பித் தூதுவனை வரழைத்தான்.
"வணங்குகிறேன் இளவரசே!" என்று இடைவரை குனிந்து வணங்கினான் தூதுவன்.
"தொண்டைமண்டல பெருங்கிள்ளி பாண்டியரிடம் சென்று, நான் காஞ்சியை நோக்கிப் படை எடுக்கச் சம்மதிக்கிறேன் என்று இந்த ஓலையில் எழுதி இருக்கிறேன் இதைக் கொண்டு போய்க் கொடுத்து, அவருடைய ஆசீர்வாதத்தையும் கோரினேன் என்று கூறு." என்றான்.
"உத்தரவு இளவரசே!" என்று கூறி ஓலையை வாங்கிக்கொண்டு சென்றான் அந்தத் தூதுவன்.
பிறகு மதுரையில் உள்ள சிறந்த கட்டிடக் கலைஞரை வரவழைத்தான்.
"சிவகங்கைச்சீமை செல்லும் ராஜபாட்டையிலிருந்து வலது புறம் விலகிச் சென்றால் வரும், மாதவபுரத்திற்கு அடுத்து ஓர் அடர்ந்த வனம் இருக்கிறது. அந்த வனத்தின் நடுவில், வைகைக் கரை ஓரமாக எழில்மிகு வசந்தமண்டபம் கட்ட விரும்புகிறேன். நாளை நீங்கள் சென்று அந்தக் கானகத்தைப் பார்த்து வாருங்கள்" என்று கூறினான்.
"அந்தக் கானகம் மிகவும் இருளடைந்த தாயிற்றே இளவரசே! மேலும் அங்கு மனிதர்கள் நடமாடுவது கிடையாது அப்படியிருக்க அந்தக் கானகத்தில் ஏன் வசந்த மண்டபம் கட்ட வேண்டும்? தாங்கள் மிகச்சிறந்த ரசிகன். தாங்கள் விரும்பினால் வேறொரு நல்ல இடத்தைத் தேர்வு செய்யலாமே." என்று மிகவும் பணிவுடன் தன் எண்ணத்தைக் கட்டிடக்கலைஞர் கூறினான்.
அப்பொழுது அங்கே வந்த வேதநாயகிதேவி, "அந்தக் கானகத்தில் மிகப்பெரிய, அரிய பொக்கிஷம் ஒன்று மறைந்திருக்கிறது... அதெல்லாம் நம் கண்களுக்குப் புலப்படாது. எனவே வேறு எந்த ஓர் ஐயமும் இல்லாமல் தாங்கள் சென்று, அந்த இடத்தில் மிகவும் அழகான ஒரு வசந்த மண்டபத்தைக் கட்ட ஏற்பாடு செய்யுங்கள்!" என்று ஆணையிட்டார்.
வேதநாயகிதேவியார் என்ன சொல்கிறார் என்பது சரிவரப் புரியாவிட்டாலும், அவருடைய ஆணையை நிறைவேற்றும் பொருட்டு, "உத்தரவு மகாராணி!" என்று கூறி இடைவரை குனிந்து வணக்கம் சொல்லிவிட்டுக் கட்டிடக்கலைஞர் சென்றுவிட்டார்.
"என்ன அம்மா இவர்?!! அந்த இடத்தைப் பற்றி நான் முழுதாக விவரிக்கவில்லை... வசந்த மண்டபம் கட்டுவதற்கான எந்த ஒரு திட்டங்களும் கூறவில்லை... அவர் இஷ்டத்திற்கு, 'உத்தரவு மகாராணி!' என்று கூறி விட்டுப் போய் விட்டார்? என்று மாறன் தன் அன்னையிடம் கேட்டான்.
"இவர் மிகச் சிறந்த கட்டிடக் கலைஞர்! நம் தேசத்தில் பல குடைவரைக் கோயில்கள், ஆடலரங்குகள், உல்லாசக் கூடங்கள் போன்ற அழகிய கட்டிடங்கள் கட்டித் தந்தவர்... இவருடைய மூதாதையர் காஞ்சி மன்னர்களின் கீழ் பணிபுரிந்து கற்றளிகள் கட்டியவர்கள் என்று கூறுவார்கள்... இப்பொழுது காஞ்சிபுரம் சோழர்கள்வசம் ஆனதனால் இங்கே குடி பெயர்ந்திருக்கின்றனர்... இவர்களுக்கு நீ இடத்தைக் காட்டத் தேவையில்லை… வசந்த மண்டபத்திற்குத் தேவையான எந்தத் திட்டங்களும் தரத் தேவை இல்லை... அவர்களே அவ்விடத்திற்குச் சென்று இடத்திற்கேற்ப, மிக அழகான இரண்டு வரைபடத்தைக் கொண்டுவந்து காட்டுவார்கள்… வரைபடங்கள் நம் கற்பனையை மீறிய எழிலோடு இருக்கும்… இரண்டு வரைபடத்தில் எதைத் தேர்ந்தெடுப்பது? என்பது மிகவும் குழப்பமாக இருக்கும்… அதில் உனக்குப் பிடித்திருப்பதைக் கூறு. அவ்வளவுதான்!" என்று வேதநாயகிதேவியார் தன் மகனின் கன்னத்தில் வாஞ்சையுடன் தனது வலது கரத்தால் வருடியபடி கூறினார்.
"அம்மா தங்களிடம் முக்கியமான ஒரு விஷயம் கூற விழைகிறேன்... இன்று என்னைப் பெருங்கிள்ளிப் பாண்டியர் அழைத்து, காஞ்சியை நோக்கிப் படையெடுத்து, காஞ்சியை ஆளும் விஜயகந்த கோபாலன் என்ற சோழனுடன் போரிட்டு வெற்றிவாகை சூடி வா என்று கூறினார். அவ்வாறு படையெடுத்துச் சென்று நான் வெற்றி கண்டால், காஞ்சியை ஆளும் உரிமையை எனக்குத் தருவதாகக் கூறினார்." என்றான்.
"விஜயகந்த கோபாலன்!" என்று ஒரு முறை மிகவும் மென்மையாக உச்சரித்த வேதநாயகிதேவியார், சிறிது நேரம் கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்தார்.
பிறகு தன் மகனின் நீண்ட கரிய இமைகளால் சூழந்த ஒளிவீசும் கண்களைக் கூர்ந்து பார்த்தவாறு, "உன்னால்முடியும் குமாரா! விஜயகந்த கோபாலன் பெரிய வீரர்தான்! மிகச்சிறப்பாகப் படை நடத்தக்கூடிய திறமையும் மிக்கவர். இருப்பினும் எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. என் மகனால் அவரை வெல்ல முடியும் என்று. இது உனக்கு மிகப்பெரிய சவாலாகக் கூட இருக்கலாம்! அவரை வென்று, நீ வெற்றி ஈட்டி வந்தால் பெருங்கிள்ளிப் பாண்டியர் கூடத் தேவையில்லை, உன் தந்தையாரே உனக்குக் காஞ்சியை அரசாளும் உரிமையை மிகுந்த பெருமிதத்துடன் தருவார்..." என்று வெற்றி பெற ஊக்கப்படுத்தினார் வேதநாயகித் தேவியார்.
"நன்றி அம்மா! எங்கே காஞ்சியை நோக்கிப் போர் புரிய வேண்டாம்! என்று நீங்கள் தயங்குவீர்களோ என்று யோசித்தேன்." என்று மாறன் இளநகையுடன் கூற.
தன் மகனின் அழகிய வதனத்திற்கு எழிலூட்டும் அகன்ற நெற்றியில் விழுந்த சுருண்ட முடியைக் கோதிவிட்டவாறு, "ஒவ்வொரு இளவரசிக்கும், தான் பட்டத்தரசியாக வேண்டும் என்று கனவு இருப்பதுபோல், ஒவ்வொரு இளைய ராணிக்கும் தன் மகன் அரசாள வேண்டும்… தான் ஒரு ராஜமாதா ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும் குமாரா!" என்று புன்னகை தவழக் கூறினார்.
வேதநாயகிதேவியாரின் கண்களில் தெரிந்த ஏக்கம், மாறனின் இளம் இதயத்தைத் தாக்க, அச்சிறு வலியைப் பொறுக்கமாட்டாமல்,
"நிச்சயம் உங்கள் மகன், உங்கள் ஆசையை நிறைவேற்றுவான் அம்மா! எனக்கு ஆசி கூறி வழி அனுப்புங்கள். போருக்குத் தேவையானவற்றை ஆயத்தம் செய்ய வேண்டும்." என்று கூறி, தன் தாயின் பாதங்களில் பணிந்தான்.
தன் பாதங்களில் பணிந்த மாறனைத் தொட்டு தூக்கி, தன்னை விட உயரமான அவனை நிமிர்ந்து பெருமை பொங்க பார்த்து, "என்றும் வெற்றி உனதாகட்டும் மகனே! சென்று, வென்று வா! எதிர்காலக் காஞ்சியின் மன்னனை ஆவலுடன் வரவேற்க காத்திருக்கிறாள் இந்தத் தாய்" என்று மனமார தன் மகனை ஆசிர்வதித்து, நெற்றியில் இதழ் பதித்தாள்.
அடுத்த நாளே விக்ரமனும் மாறனும் சேர்ந்து போருக்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தனர்.
"இந்தப் போரை நான் மட்டும் நடத்துகிறேனே விக்கிரமா?" என்று மாறன் கேட்க,
"எப்போதிருந்து நீ வேறு, நான் வேறு என்று ஆனோம்? இந்த வெற்றியை நீ இளவரசி ருத்ராதேவிக்குப் பரிசளிக்கிறாய் என்றால், நான் என் சகோதரி ருத்ராதேவிக்குப் பரிசளிப்பதாக இருந்துவிட்டுப் போகட்டுமே!" என்று கூறினான் விக்ரமன்.
தன் நண்பனின் அன்பில் உள்ளம் பூரிக்க, ஓடிச்சென்று விக்ரமனைக் கட்டியணைத்தான் மாறன்.
"நண்பா! என்றுமே நீ வேறு, நான் வேறு அல்ல. ஓருயிர் ஈருடல் ஆவோம்… என் உடல் மரித்தே போனாலும், உனக்குள் உயிர்த்திருப்பேன்" என்று மாறன் நெகிழ,
"ஏன் இப்படியொரு வார்த்தையைக் கூறுகிறாய்? என்றுமே என் உயிர் உனக்குள்தான் சஞ்சரிக்கிறது... நாம் ஆத்மார்த்தமான நண்பர்கள் மாறா... …" என்று எதிர்காலத்தில் நடக்கப்போவது அறியாமல் நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துத் தங்களது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
அடுத்து ஒரு தூதுவனை வரவழைத்து, "காஞ்சிக்குச் சென்று, நெல்லைச் சோழன் விஜயகந்த கோபாலரைச் சந்தித்து, மதுரை பேரரசர் குலசேகரப் பாண்டியனின் தவப்புதல்வன் மாறன்பூபதி, காஞ்சி தேசத்தை நோக்கிப் படை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறு!" என்று கூறி ஓலையைத் தூதுவனிடம் கொடுத்து அனுப்பினான்.
இரு தினங்களிலேயே, நெல்லைச் சோழன் விஜயகந்த கோபாலனும் போருக்குத் தானும் தயாராவதாகத் தூதுவரிடம் கூறி அனுப்பினான்.
பிறகு தம்மிடமுள்ள பாண்டிய நாட்டுப் படைகளுடன், நெல்லை சிற்றரசரின் அருந்தவப் புதல்வனும் தனது நண்பனுமான விக்ரமனின் சேனைகளையும் சேர்த்துக்கொண்டு, தங்களது நட்புறவு அரசர்களிடமும் தேவையான படைபலங்களைப் பெற்றுப் போருக்கான நல்ல நாளைக் குறித்தனர்.
மாறன் காஞ்சியை நோக்கிப் படை நடத்திச் செல்லும் நாள் அறிந்ததும், பெருங்கிள்ளிப் பாண்டியரும் தன்னுடைய நால்வகைப் படைகளையும் அனுப்பி வைத்ததோடு, மாறன் வெற்றி பெற மனமார வாழ்த்தினார்.
அதை அறிந்த பட்டத்தரசியும், பட்டத்தரசியின் புதல்வரான இளவரசர் சுந்தரனும் அதிர்ச்சி அடைந்தனர்.
"சுந்தரா இது நமக்கு நல்ல செய்தி அல்ல. உன் மாமனே, மாறனை நம்பி, அவருடைய பெரும் சேனைகளை அனுப்பி வைக்கிறார் என்றால், என் தமையனார் பெருங்கிள்ளி பாண்டியருக்கும், மாறன் மேல் தனிப்பட்ட பிரியமும், நம்பிக்கையும் இருக்கிறது என்று அர்த்தம். ஏற்கனவே உன் தந்தையார், மதுரை பேரரசர் குலசேகரப் பாண்டியருக்கு, மாறன் மீது மாறாத அன்பும், நம்பிக்கையும் உண்டு என்பதை மறந்து விடாதே! இது உன் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. நீ உன் முரட்டுத்தனங்களையும், சல்லாபங்களையும் சற்று ஒதுக்கிவிட்டு, பொறுப்பாகவும் இந்த நாட்டுக்குரிய அரசனை போல் கனிவாகவும், பெரியோர்களிடம் மரியாதையாகவும் நடந்துகொண்டால் நல்லது!" என்று அறிவுறுத்தினார்.
பதிலேதும் உரைக்காமல் தனது அரண்மனையை நோக்கி நடந்த சுந்தரனின் கவனமோ வேறொரு யோசனைக்குச் சென்றது. மாறன் வெற்றி பெறக் கூடாது என்று எண்ணினான். அதற்காக எதையும் செய்யத் தயாரானான்.
அரண்மனை மேல்மாடத்தில் குறுக்கும் நொடுக்குமாக நீண்ட நேரம் உலாத்தியவன், பெருங்கிள்ளிப் பாண்டியரை வசைபாடினான். பிறகு
ஒரு முடிவுக்கு வந்து,
தன்னுடன் நட்புறவு கொண்ட சில நாடுகளின் சேனைகளையும், தன் தாய் வழி நாட்டின் சேனைகளையும் திரட்டினான்.
நேராகத் தென்காஞ்சிக்குச் சென்று, விஜயகந்த கோபாலனைச் சந்தித்து நட்பு பாராட்டி, அவரிடம், தான் அழைத்து வந்த சேனைகளை ஒப்படைத்து, விஜயகந்த கோபாலன் வெற்றிபெற ஆவன செய்வதாக உறுதியளித்துத் திரும்பினான்.
இதைக் கேள்விப்பட்ட பெருங்கிள்ளி பாண்டியர் வெகுண்டெழுந்தார். மதுரைக்கு ஒரு தூதுவனை அனுப்பிப் பட்டத்தரசியிடம் கொடுக்குமாறு ஓர் ஓலையைக் கொடுத்தனுப்பினார்.
அதில் "சுந்தரன் செய்வது மகா மூடத்தனம்... காஞ்சியை ஆளும் நெல்லைச் சோழன் விஜயகந்த கோபாலனை வென்று தென்காஞ்சியைப் பாண்டிய தேசத்தோடு இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற தீராத அவா, உனது கணவரும் பாண்டிய சக்ரவர்த்தியுமான குலசேகரபாண்டியருக்கு உண்டு என்பதை மறவாதே! அதை மனதில் கொண்டே நான் மாறனை காஞ்சியை நோக்கிப் படை நடத்தச் சொன்னேன். அவன் வெற்றி பெற நிறைய வாய்ப்பிருக்கிறது… அவன் வெற்றி நம் தேசத்திற்குப் பெருமை சேர்ப்பதாகும்… நானே மாறனுடன் சேர்ந்து போர் புரியத்தான் ஆவல் கொண்டிருந்தேன். ஆனால் மதுரை பேரரசர் நாட்டில் இல்லாத இச்சமயம் நானும் போர் நடத்தி வெளியே சென்று விட்டால், வேறு அந்நியர் மூலமாகப் பாண்டிய பேரரசிற்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற ஐயத்தினால் மட்டுமே என்னுடைய படைகளை மட்டும் மாறனுடன் அனுப்பி வைக்கிறேன். இவ்வேளையில் வருங்காலத்தில் பாண்டிய பேரரசை ஆளப்போகும் சுந்தரன் செய்யும் செயல் நம் தேசத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. காஞ்சி மன்னனை எதிர்த்துத் தம்பி படை எடுத்துச் செல்லும்பொழுது, மாறனின் தமயனே காஞ்சி மன்னனுக்குச் சேனைகளைக் கொடுத்து உதவுகிறான் என்பது எதை உணர்த்துகிறது? இது அருகில் உள்ள நம் பகைநாடுகளுக்குத் தெரிந்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். அரசர் இல்லாத இவ்வேளையில் பட்டத்தரசியாக நீ இருந்து, உன் மகனை வழிநடத்துவது இத்தேசத்திற்கும் உனக்கும் நல்லது! பாண்டிய தேசத்தின் கௌரவமா? தங்கையா? எது பெரிதென்று கேட்டால், என் தேசமே பெரிதென்று முடிவெடுப்பேன் என்பதையும் சுந்தரனிடம் கூறு." என்று அந்த ஓலையில் எழுதி இருந்தது.
அவ்வோலையில் எழுதியிருந்த எழுத்துக்களின் வடிவமே பெருங்கிள்ளி பாண்டியரின் மிதமிஞ்சிய கோபத்தை எடுத்துக்காட்டுவதாக இருந்தது.
அந்த ஓலையைப் படித்த பட்டத்தரசியாருக்கு, 'சுந்தரன் ஏன் இந்த மாதிரி நடந்து கொள்கிறான்?' என்ற அதிர்ச்சியும்,
'பெருங்கிள்ளிப் பாண்டியரின் நன்மதிப்பை தன் மகன் பெறவில்லையே?' என்ற கவலையும் ஒருங்கே இணைந்து மனதை வாட்டியது.
உடனே ஒரு பணியாளைத் தன் மகனிடம் அனுப்பி, நெல்லைச் சோழராம் விஜயகந்த கோபாலனுக்குச் சேனை கொடுத்து உதவி செய்வதை நிறுத்துமாறு பணித்தார்.
ஆனால் பட்டத்தரசியாரின் கூற்றை, சுந்தரன் சிறிதும் ஏற்கவில்லை…
இதை அறிந்த பட்டத்தரசி, தனது தாய் வழி நாட்டிற்குத் தூதனுப்பி, "விஜயகந்தச் சோழனுக்கு எதிராகச் சேனைகளை அனுப்ப வேண்டாம்!" என்று ஓலை அனுப்பினார்.
ஆனால் அதற்கு முன்பே சேனைகள் காஞ்சியை நோக்கிச் சென்றுவிட்டதாக அங்கிருந்து மறு ஓலை வந்து சேர்ந்தது.
செய்வதறியாது திகைத்த பட்டத்தரசி நேரடியாகச் சுந்தரனிடம் சென்று, "இந்த நோக்கத்தை நிறுத்து குமாரா… உன் செயல்கள், எம் தமையனாராம் பெருங்கிள்ளிப் பாண்டியருக்கு மட்டுமல்ல, உன் தந்தைக்குமே மிகுந்த வருத்தத்தை அளிக்கும். இவர்கள் இருவரையும் நீ பகைத்துக் கொள்வது உன்னுடைய எதிர்காலத்தைப் பாதிக்கும்!" என்று எடுத்துரைத்தார்.
எவ்வளவோ மன்றாடியும் சுந்தரனின் செவிகளில் பட்டத்தரசி கூறியது எதுவும் விழவில்லை…
"மாறன் தோல்வியைத்தான் தழுவுவான்… விஜயகந்த கோபாலரை அறியாதவராத் தாங்கள்? வீரத்திற்கே வீரத்தைக் கற்றுத்தரும் தீரராகிய என் தந்தையே நெல்லைச் சோழர் மீது போர் தொடுக்கக் காலநேரம் பார்க்கும்பொழுது, மாறனால் காஞ்சியைக் கைப்பற்றுவது இயலாத காரியமே… அவன் காஞ்சி மன்னனிடம் தோற்று அவமானத்தைப் பரிசாகக் கொண்டு வரட்டும். அதன் பிறகு இந்தப் பெருங்கிள்ளி பாண்டியரும் தந்தையாரும் அவனுக்கு எவ்வாறு ஆதரவு அளிப்பார்கள் என்று பார்க்கிறேன்!" என்று ஏளனமாகச் சிரித்தான்.
"நீ சொல்வதுபோல் நடந்தால் சந்தோஷம்… ஆனால் மாறன் வெற்றி பெறுவான் என்கிறாரே என் தமையனார்."
"அவர் உங்களுக்குத் தமையனாரா? அல்லது அந்த…"
"நிறுத்து குமாரா… தயைகூர்ந்து தரமற்ற வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம். ஆயிரம் இருந்தாலும் பெருங்கிள்ளிப் பாண்டியர் எனது மதிப்பிற்குரிய தமையனார்… அதோடு இத்தேசத்திற்காகப் பெரிதும் பாடுபடுபவர் என்பதை மறவாதே!"
"நீங்கள் சொல்வது உண்மையென்றால், பெருங்கிள்ளி பாண்டியர், வருங்காலத்தில் இந்தத் தேசத்தை ஆளப்போகும் எனக்கல்லவா ஆதரவாக இருக்க வேண்டும்."
"அதற்குத்தான் நான் அடிக்கடி கூறினேன். நீ பெரியோரை மதித்து நட, பெருங்கிள்ளி பாண்டியர் மற்றும் உன் தந்தையின் நன்மதிப்பைப் பெறு என்று ஆனால் நீ எப்பொழுது என் மொழிகளுக்குச் செவிமடுத்தாய்?"
"இவ்வேளையில் இந்தத் தர்க்கம் முக்கியமா? அல்லது மாறனின் தோல்வி முக்கியமா?" என்று தன் அன்னையைப் பார்த்துக் கேட்டான் சுந்தரன்.
"நான் ஒரு சாதாரணத் தாயாகவும், இத்தேசத்தின் பட்டத்தரசியாகவும் விரும்புவது, என் வயிற்றில் பிறந்த என் மகனே, வருங்காலத்தில் இப்பாண்டிய தேசத்தை ஆள வேண்டும் என்பது தானடா!"
"அப்படி என்றால் தாங்கள் சற்று ஓய்வு கொள்ளுங்கள்…என்றுமே மாறனால் விஜயகந்த சோழனை தோற்கடிக்க இயலாது. தோல்வியில் துவண்டு வருவான். அது ஒன்று போதும்… வருங்கால அரசரின், அதாவது என்னுடைய நட்பு நாட்டின் மீது போர்தொடுத்தது தேச துரோகம் என்று கூறி, மாறனையும் அவன் தாயையும் தேசாந்திரம் அனுப்பி விடுகிறேன்" என்று கொக்கரித்த தன் மைந்தனின் கொடூர முகத்தைப் பார்க்க சக்தியற்று தனது அரண்மனைக்குத் திரும்பினார்.
குறித்த நன்நாளில் காஞ்சியை நோக்கி படையெடுத்தான் மாறன்…
விசயமறிந்த பாண்டியநாட்டின் மக்கள், வழியெங்கும் மலர் தூவி, ஆரத்தி எடுத்து, மாறனை வாழ்த்தி வழியனுப்பினர்
இப்போரில் மாறன் வென்றால் மதுரையின் அடுத்தப் பேரரசர் இவரே! என்று உள்ளம் பூரித்தனர்.
ஜெய கோஷங்கள் முழங்க மதுரைக் கோட்டையில் கொலுவிருக்கும் கொற்கையை வணங்கி வெற்றி கிட்ட அந்தத்தாயின் ஆசி பெற்றுக் குதிரையில் ஏறினான் மாறன்.
தன்னைத் தன் தாய் அழைப்பதுபோல் உள்ளுணர்வு கூற, அரண்மனையின் மேல் மாடத்தைத் திரும்பிப் பார்த்தான்… அங்கே வேதநாயகிதேவியார், மீன் கொடியை அசைத்து வெற்றி எனும் திருமகளுடன் வா என்று வாழ்த்தி வழியனுப்பினார்.
ஆனால் மாறனை அழைத்தது அந்தத் தாயல்ல,
"நில் மகனே! மதுரை மண்ணின் மைந்தனே… வீரத்திருவுருவே கோட்டை வாயிலைக் காத்து நிற்கும் கொற்கை கூறுகிறேன்… நில்!" என்று வீரம் தெறிக்கும் விழிகளில் நீர் வடிய நின்றுகொண்டிருந்தாள் கொற்கை.
ஜெய கோஷங்களாலோ, மக்களின் வாழ்தொலியாலோ அல்லது விதி செய்த சதியோ தெரியவில்லை. கொற்கையின் குரல் மாறனின் செவிகளைத் தீண்டவே இல்லை…
மாறன் பூபதியாகிய மாறனின் சேனைகள் ஆர்ப்பரிக்கும் கடலாய் காஞ்சியை நோக்கிச் சென்றன...
யானைப்படைகள் கடந்து சென்ற பாதைகள் எல்லாம் பள்ளமாக மாறின…
குதிரைகளின் கனைப்பில் சுற்றுவட்டாரத்தில் இருந்த நகரங்கள அதிர்ந்தது…
ஒருகாத தூரம்வரை சேனைகள் வாழ்த்தொலி முழங்கியவாறு சென்றனர்.
படைநடத்திச் சென்ற மாறன்பூபதியையும், விக்ரமனையும் கண்ட சூரிய பகவான், 'தன்னை நோக்கித்தான் படைநடத்தி வருகிறார்களோ?' என்று ஐயுற்று ஏழுகுதிரைகள் பூட்டிய தனது தேரில் ஓடி மேகத்தினுள் மறைந்தார்.
மாறனின் படைகள் காஞ்சிமாநகரின் எல்லையைத் தொடும்போதே, விஜயகந்த சோழன் தனது சேனைகளுடன் எதிர்கொண்டான்.
அடுத்தநொடியே அவ்விடத்தில் இரத்த ஆறு ஓடியது…
மாறன் தலைமை சேனாதிபதியுடனும் விக்ரமன், காஞ்சி நகரத் தளபதியுடனும், பெருங்கிள்ளிப் பாண்யரின் சேனாதிபதி காஞ்சியின் யானைப்படைத் தலைவனோடும் நேருக்குநேர் போர் புரிந்தனர்.
மாறனின் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளைத் தடுப்பதற்கே தலைமை சேனாதிபதிக்கு திண்டாட்டமானது… அவரால் மாறனை நோக்கி ஓர் அம்புகூட எய்ய முடியவில்லை…
மாறனின் அம்புகள் அருவியாகக் கொட்டியது… வெகு விரைவிலேயே சேனாதிபதி, தளபதி, நால்வகைப் படைத்தளபதிகளை வீழ்த்திவிட்டு, மாறனும், விக்ரமனும், பெருங்கிள்ளிப் பாண்டியரின் சேனாதிபதியும் விஜயகந்த கோபாலரை நோக்கி நகர, குதிரைப்படைத்தலைவர் பெருங்கிள்ளிப் பாண்டியரின் சேனாதிபதியை மறித்துப் போரிட்டார்… அவர்கள் தனியாகப் பிரிந்து சென்றனர். விக்ரமனை சுந்தரனின் தாய்வழி நாட்டின் தளபதி மறித்துப் போரிட, மாறன் மறித்து வந்த சேனைகளை வீழ்த்தி விஜயகந்த கோபாலரை நோக்கி விரைவாக முன்னேறினான்.
மாறனின் படை மிக எளிதாகக் காஞ்சிப் படையை வீழ்த்தி முன்னேறியது…
இருதரப்புக் காலாட்படை வீரர்களும் போர்க்களத்தில் ஒன்றோடொன்று மோதியதைப் பார்தவர்களுக்கு வெறிகொண்ட காளைகள் மூர்க்கத்தனமாக மோதிக்கொண்டதைப் போலிருந்தது.
மறுபுறம் யானைப்படைகள் மோதிக்கொண்டதில் பூகம்பமே வந்துவிட்டதாக எண்ணி மருண்டு ஓடின குதிரைகள்…
குதிரைகள் தறிகெட்டு ஓடியதில் காலாட்படை வீரர்கள் அடிபட்டு வீழுந்தனர்.
இரு தரப்பிலுமே யார் வெற்றி பெறுவார் என்று கணிக்க முடியாததாக அன்றை நாளின் மாலை போர் முடிந்தது…
இருதரப்பிலுமே சேதங்கள் அதிகமாக இருந்தது.
இந்தச் செய்தியை ஒற்றர்மூலம் அறிந்த சுந்தரனோ மிகவும் மகிழ்தான்.
பட்டத்தரசியார், "இரு தரப்பிலும் வெற்றி யாருக்குச் சொந்தம் என்று தெரியவில்லை என்றுதானே செய்தி வந்திருக்கிறது? இதில் நீ குதூகலிக்க என்ன இருக்கிறது?" என்று கேட்டார்.
இன்னும் முக்கியமான நிகழ்வு நடைபெறவில்லை அம்மா! விஜயகந்த கோபாலரை மாறனால் இன்னும் நெருங்க முடியவில்லை… அவரிடம் நேருக்குநேர் போர்புரிந்து உயிர் தப்புவது மிகவும் கடினம். ஒரே அம்பில் எழுவரை சாய்க்க வல்லவர் நொல்லைச் சோழன்… அவரது வேலுக்கும் வாளுக்கும் பதில் கூற மாறனால் ஒருபோதும் முடியாது. பெருங்கிள்ளிப் பாண்டியரின் சேனைத்தலைவராலேயே நெல்லைச் சோழனை நெருங்க முடியவில்லையாம்…" என்று கெக்கலி கொட்டிச் சிரித்தான் சுந்தரன்.
அதையே வேறுவிதமாகக் கூறினார் பெருங்கிள்ளிப் பாண்டியர் தன் மனைவியிடம், "மாறனும் விஜயகந்த கோபாலனும் இன்னும் நேருநேர் போர் புரியவில்லை அது நடக்கும்போது இந்த உலகம் அறியும், மாறன் எப்படிப்பட்ட வீரன் என்று." என்று கூற,
"எல்லோரும் விஜயகந்த கோபாலர் தான் வெற்றி பெறுவார் என்கிறார்களே?" என்று பெருங்கிள்ளிப் பாண்டியரின் மகாராணி கேட்டார்.
'நான் அறிவேன்! நிச்சயமாக மாறன்தான் வெற்றி பெறுவான் என்று கூறினார்.
அடுத்த நாள் காலையில் போர் ஆரம்பித்தது... மீண்டும் மாறனுடன் காஞ்சியின் தலைமை சேனாதிபதி மோதினார்.
"மாறா! அவரை விட்டால், மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருப்பார்... அவருக்கு ஓர் அம்பைப் பரிசளித்து விட்டு, உன் இலக்கை நோக்கிப் போ!" என்று விக்ரமன் காஞ்சித் தளபதியுடன் போரிட்டுக் கொண்டே கூறினான்.
அதேவேளையில் விக்ரமனும் காஞ்சித் தளபதியை வாளால் வதம் செய்துவிட்டு, விஜயகந்த கோபாலரை நோக்கி முன்னேறினான்.
விக்ரமனை மற்றொரு சேனாதிபதி வந்து மறித்து அவனுடன் போரிட,
மாறன் விஜயகந்த கோபாலரை நோக்கி முன்னேறினான்.
மாறனுக்கும் விஜயகந்த கோபாலருக்கும் இடையே பலத்த போர் நடைபெற்றது.
இருவர் வாளும் உரசுகையில் மின்னல் வெட்டியது…
மிக நுண்ணிய இடைவெளியில் இருவரின் தலையும் அடுத்தவர் வாளுக்கு இரையாகாமல் தப்பின.
வாள் போரால் மாறனை வெல்ல முடியாது என்று அறிந்து கொண்ட விஜயகந்த கோபாலன், அவனது கதையை எடுத்தான்…
இருவர் கதைகளும் மோதுகையில், ஆலயமணி அடிக்கும்பொழுது, மணிக்குள் தலையை விட்டதுபோல் அருகிருந்தவர் செவிப்பறை கிழிந்தது.
மீண்டும் போர் வலுத்தது… ஒவ்வொரு முறையும் விஜயகந்த கோபாலரின் கதை வீச்சை மிக எளிதாக மாறன் தன் கதையால் தடுத்தான்…
வெகுநேரமாகியும் மாறன் உடலை விஜயகந்த கோபாலனின் கதையால் தீண்ட முடியவில்லை…
சற்றே சோர்வடைந்தது விஜயகந்த கோபாலனின் உடல், ஆனால் மாறனோ சற்றும் வேகம்குறையாமல் போரிட்டுக் கொண்டிருக்க,
'இன்னும் சிறிதுநேரத்தில் நாம் தோற்றுவிடுவோம்' என்று விஜயகந்த கோபாலர் நினைத்த கணத்தில் எங்கிருந்தோ வந்த ஈட்டி மாறனின் மார்பில் பாய, அப்படியே மல்லாந்து விழுந்தான்.
வார்த்தைகளின் எண்ணிக்கை-2043.
சிவதாசனின் கர்ஜனை தொடரும்…
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️