அத்தியாயம் - 12.2
வாமனனுக்கு தயாரிப்பாளராக வேண்டும் என்பது அவன் கனவு. சீனிவாசன் நிதானமாய் யோசித்து, பின் வாமனனிடம், ‘உன் புதுப்படத்தை நீயே தயாரித்து இயக்கு’ என்றார்.
‘அவன் தயங்கி அதற்கு பணம் வேண்டும். இப்போது அவ்வளவு பணத்திற்கு நான் எங்கே போவேன் சார்!’
‘பணம் வேண்டுமானால் நான் தருகிறேன்.’
தன் கனவே, பெரிய கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்பது தான். மிகவும் மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டான். சீனீவாசன் வெற்றுத் தாளில் கை எழுத்து வாங்கிக் கொண்டு, பெட்டி நிறைய பணத்தைக் கொடுத்தார்.
வித்யாபாரதிக்கு நெஞ்சமெல்லாம் பயம். அவள் அவனிடம் அமர்ந்து பேசினாள். ‘வேண்டாம். இவ்வளவு கடன் நமக்கெதுக்கு...? உங்களுக்கு கடமைகள் நிறைய இருக்கு. இவ்வளவு கடன் வாங்கினால் நம்மால் எழுந்திருக்க முடியவே முடியாது.’
தன் கனவிற்கு குறுக்கே வந்தவள் எதிரியாய் தெரிய, பளார் என்று அறைந்து, இதில் நீ தலையிடாதே என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான்.
வாமனன் பணத்தை வாங்கி புது படத்தை இயக்க, தினம் தினம் பிரச்சனை. சீனிவாசனால் மறைமுகமாய் படத்தை எடுக்கவிடாமல், தன்னால் என்ன பண்ண முடியுமோ அத்தனையும் பண்ணி தொல்லைகள் கொடுத்து பணத்தை வீணாக்க வைத்தார். முடிவில் படம் தயாராகி திரைக்கு வந்த போது, பயங்கரமான தோல்வி. லட்சங்களில் கடன் வாங்கிப் பழகியவனுக்கு, இப்போது கோடிகளில் கடன். வீட்டிற்குள் துவண்டு கிடந்தவனை, வித்யாபாரதி தான் தேற்றினாள். அவன் தோள்களைத் தட்டிக் கொடுத்து எழுப்பி ‘பயப்படாதீங்க. அந்தக் கடனை நான் அடைக்கிறேன்’ என்றாள்.
நக்கலாய் சிரித்தான். வாங்கப்பட்ட கடனை அடைக்க ஆயுள் முழுவதும் உழைத்தாலும், இருவராலும் கட்ட முடியாது என்று.
சீனிவாசன் வாமனனைத் தனியாய் அழைத்து, “பணத்திற்கு என்ன வழி? உங்களை நம்பி வெற்றுத்தாளில் கையெழுத்து போட்டுக் கொடுத்து இருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு சொத்து எதுவும் இல்லை என்று எனக்குத் தெரியும்.”
வாமனன், துவண்டு போய் அவரைப் பார்க்க, “இதற்கு நான் ஒரு வழி சொல்லட்டுமா...?”
அவன் அவரையே பார்க்க, சீனிவாசன், “என் மகளை நீங்க கட்டிக்கிறீங்களா...?”
வாமனனுக்கு தூக்கிவாரிப் போட்டது. “சார் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.”
“அவளோட திருமணம் நடந்தது யாருக்குத் தெரியும். சொல்லப் போனால் 15 வயதுப் பெண்ணை கல்யாணம் பண்ணது, சட்டப்படி குற்றம். அப்புறம் என் மகனால் உங்க தங்கச்சி வாழ்க்கையிலும் பல கஷ்டங்கள். பற்றாக்குறைக்கு கோடிகளில் கடன். அதற்கு மாதா மாதம் வட்டி என்று யோசித்தால், ஒரு வருடத்திற்குள் நீங்கள் குடும்பத்தோடு சிறைக்குத்தான் செல்ல வேண்டி வரும். ஆனால், நான் உங்களையும் உங்கள் திறமையும் மதித்து, என் சினிமா தயாரிப்பு கம்பெனியை உங்களிடம் ஒப்படைக்கலாம் என்று இருக்கிறேன். நீங்கள் நினைத்தால் எல்லாம் சரி பண்ணலாம்.”
‘குடும்பத்துடன் அனைவரும் அசிங்கப்பட்டு சிறை செய்வதைக் காட்டிலும், ஸ்ரீனிவாசன் பெண்ணைத் திருமணம் செய்வதே மேல். தன் வாழ்நாளெல்லாம் உழைத்தாலும், இப்போது கடனை அடைக்க முடியாது’ என்று நினைத்தவர் திருமணத்திற்கு சம்மதித்தார்.
நேராய் வீட்டிற்கு வந்த வாமனன், அங்கே தனக்காய் மிகவும் மகிழ்ச்சியாய் காத்திருந்த மனைவியின் அருகே வந்து அமர்ந்தார்.
ஸ்பெஷல் சாப்பாடு எல்லாம் போட சாப்பிட்டவர், “வித்யாவிடம் இன்னைக்கு என்ன விசேஷம்?”
அவரின் கையை எடுத்து தன் வயற்றில் வைத்து, “உங்கள் குழந்தை என் வயிற்றில் உருவாகி இருக்கு.”
அவருக்கு அந்த விஷயம் சந்தோஷம் இல்லை என்பது அவரின் முகத்தில் தெரிந்தது. மெல்ல அவளை கைப்பிடித்து, “உனக்கு இது குழந்தை பெற்றுக்கொள்ளும் வயசில்லை. குழந்தையைக் கலைத்து விடலாம்.”
தன் வாழ்க்கையில் சந்தோஷத்தை மட்டுமே காட்டிய ஒருவர், முதல் முறையாக வருத்தத்தை இன்று தான் கொடுக்கிறார். யோசித்தாள், தனக்காய் தான் தன் கணவர் சொல்கிறார் என்று நினைத்தாள். இரண்டு மாதம் கழித்து பொறுமையாய் சொல்லிக் கொள்ளலாம் என்றவள், அவரை வருத்த இயலாமல் சரி, என்று தலை ஆட்டினாள்.
சுடும்...!
Comment pls
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
www.sahaptham.com
.
.