அத்தியாயம் – 4
‘என்னால் உனக்கு உதவ முடியாது’ என்று பட்டுக் கத்தரித்து போல் தம்பியிடம் வெட்டிப் பேசிவிட்டு வெளியே வந்த அபிமன்யு லிஃப்ட் மூலம் தரை தளத்திற்கு வந்து வரவேற்பு கூடத்தை அடைந்த போது திடீரென்று நெஞ்சுக்குள் ஏதோ ஒரு உணர்வு... அதீத இன்பம்.. அளவில்லா துன்பம்... எல்லாம் கலந்தது போல் ஏதோ ஒரு...
அத்தியாயம் 74
மீட்டிங் தொடங்கி பத்து நிமிடம் இருக்கும். இரு பக்கத்திலிருந்தும் பேச்சு வார்த்தை நாசுக்காக துவங்கியது. கேங் வார் ஆரம்பித்ததிலிருந்து தங்கள் பக்கம் ஏற்பட்ட இழப்புகளை எடுத்துக் கூறினார்கள். ராகேஷ் சுக்லாவை தங்களிடம் ஒப்படைக்கவில்லை என்றால் இந்த வார் முடிவிற்கு வர வாய்ப்பே இல்லை...
அத்தியாயம் 73
கண் மூடி கார் கதவில் சாய்ந்திருந்தாள் மிருதுளா. மூடிய இமைகளுக்குள் ஓய்வின்றி உருளும் விழிகள், அமைதியற்ற அவள் மனநிலையை உரக்கக் கூறியது. வாடிய முகமும், தளர்ந்த மேனியுமாக அவள் கிடப்பதைக் கண்டும் காணாதது போல் காரை ஒட்டிக் கொண்டிருந்த டேவிட், நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த ஒரு உணவகத்தைக்...
அத்தியாயம் 72
அதிர்ச்சி என்று ஒற்றை வார்த்தையில் அவளுடைய உணர்வுகளை சொல்லிவிட முடியாது. தற்போது அவள் உயிரோடு இருக்கிறாள் என்பதை நம்புவதற்கே அவள் போராடிக் கொண்டிருந்தாள். இருட்டிக் கொண்டு வரும் கண்களை மீறி, அடங்க மறுத்து எகிறிக் குதிக்கும் இதயத்துடிப்பை தாண்டி, துணி போல் துவண்டு கீழே விழ விழையும்...
அத்தியாயம் 71
இந்தியப் பெருங்கடலில், இந்தியாவின் எல்லையிலிருந்து வெகுதூரம் தள்ளி ஈக்வேடார் கோட்டுக்கு வெளியே, இந்தோனேஷியா எல்லையில் நங்கூரமிடப்பட்டிருந்தது ஒரு கார்கோ கப்பல். அதாவது சரக்குக் கப்பல்.
விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து புறப்படும் டேங்கர் கப்பல்களில் சில கப்பல்கள் நடுக்கடலில்...
அத்தியாயம் 70
அன்றைய விடியல் எதையோ பெரிதாக இழந்துவிட்டது போன்றதொரு உணர்வுடனே விடிந்திருந்தது மிருதுளாவுக்கு. காரணம் பெரிதாக ஒன்றும் இல்லை. அவள் கண் விழிக்கும் போது படுக்கையில் அவளுக்கு அருகில் அர்ஜுன் இல்லை.
‘விடியற்காலை மூன்று மணியாகிவிட்டது, ஓய்வெடுக்க வேண்டும் என்று சொன்னவன் எப்போது...
அத்தியாயம் 69
“பைத்தியம் பிடிச்சிடுச்சா உங்களுக்கு? என்ன நெனச்சுக்கிட்டு இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க? ஆர் யு கான் மேட்?” - ஆத்திரத்துடன் கத்தி கொண்டிருந்த ஷோபாவின் கோபமும் பதட்டமும் அவரை சற்றும் பாதிக்கவில்லை. மனைவிக்கு செவி சாய்க்கும் எண்ணம் கூட இல்லாதவராக, ஒரு வெள்ளை தாளில்...
அத்தியாயம் 68
அர்ஜுனின் கார் மகல்பாட்னா மளிகை வளாகத்திற்குள் நுழைந்த போது நேரம் நள்ளிரவை தாண்டியிருந்தது. பாதுகாவலர்களை தவிர மற்றவர்களின் நடமாட்டம் வெகுவாக அடங்கியிருந்தது. வாயிலுக்கு வெகு அருகில் காரை நிறுத்திவிட்டு மிருதுளா கீழே இறங்க உதவி செய்தான் அர்ஜுன். அவள் மிகவும் சிரமப்பட்டாள். வலது...
அத்தியாயம் 67
தெறித்து விழுந்த தோட்டாக்களும், அருவியாக பெருகிய குருதியும் அந்த அறையை போர்க்களமாக மாற்றியிருந்தது. வேட்டையாட வந்தவர்களை வேட்டையாடி வீழ்த்திவிட்ட வெற்றி களிப்போடு இரண்டாம் அணி நெஞ்சை நிமிர்த்த, அர்ஜுனின் ஆராய்ச்சி பார்வையோ அவர்களை சல்லடையாக துளைத்தது. உடனே முன்னே வந்த அந்த...
அத்தியாயம் 66
“நாம லவ் பண்ணினது உண்மை. ரிலேஷன்ஷிப்ல இருந்தது உண்மை. ஆனா இனி என்கிட்ட எந்த எமோஷன்ஸுக்கும் இடம் இல்ல. கோர்த்தால என்னோட பொசிஷன் எனக்கு திரும்ப வேணும். நா இழந்த மரியாதையை திரும்ப சம்பாதிக்கனும். அதுக்கு எனக்கு சுதந்திரம் வேணும். போயிடு.. என்னை விட்டு விலகிப் போயிடு” - அணிந்திருந்த...
அத்தியாயம் 65
அர்ஜுன், காலை உணவு சமைத்துக் கொண்டிருக்கும் போதே அவனுடைய பிரத்யேக அலைபேசிக்கு தொடர்பு கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அஞ்சனி லால். அதோடு அன்று மாலை ஹோட்டல் புகாரியில் ராகேஷ் சுக்லா அவனை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார்.
அவரிடம், ‘ஐ’ல் டேக் கேர்’ என்று கூறிவிட்டு...
அத்தியாயம் 64
மலையை உடைத்து மனிதனாய் செதுக்கியது போன்ற மகா ஆஜானுபாகுவான தோற்றத்தில் மல்லார்ந்து படுத்திருந்தான் அர்ஜுன். அகண்டு திரண்ட அவன் புஜத்தில் தலை சாய்த்திருந்தாள் மிருதுளா. சீரான மூச்சுக் காற்றோடு மெல்லிய குறட்டை ஒலியும் அவனிடமிருந்து வெளியேறியது. இதற்கு முன் அவன் இத்தனை நிம்மதியாக...
அத்தியாயம் 63
நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளது போல், நடந்து முடிந்த சம்பவத்திற்கும் இரண்டு நியாயங்கள் இருக்கக் கூடும் என்று நம்பிக் கொண்டிருந்தாள் மிருதுளா. தன் பெற்றோரின் நியாயத்தை அர்ஜுனிடம் எடுத்துரைத்து அவனை சமாதானம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். இப்போது அனைத்தும்...
அத்தியாயம் 62
குற்ற உணர்வும் பதட்டமும் சரிவிகிதத்தில் மிருதுளாவை ஆக்கிரமித்திருந்தது. கனத்த மனதுடன் ஒரு கணம் தயங்கி நின்றவள், முடிவெடுத்த பின் பின்வாங்குவது மூடத்தனம் என்பதை உணர்ந்து அங்கிருந்து வெளியேறினாள். அர்ஜுனின் சுயநினைவற்ற நிலை அவனுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடுமோ என்கிற அச்சம் அவளை...
அத்தியாயம் 61
காட்டுத்தீயின் கோரம் தெரிந்தது அவன் முகத்தில். மிருதுளா துணுக்குற்றாள். அவனுடைய மனநிலை விளிம்பிலிருப்பதை உணர்ந்துகொண்டாள். விலகி நில் என்று மனம் எச்சரித்தது. ஆனாலும் தைரியத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு அவனை ஏறிட்டாள். பளபளக்கும் அவன் கண்களை படிக்க முயன்றாள். கோபத்தையும்...
அத்தியாயம் 60
ஓநாய் மற்றும் அவருடைய கிடான்ஸ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் காட்டுத் தீயாக பரவிக் கொண்டிருந்தது. இதுவரை அவர் யார் என்கிற விபரம் ஊடகங்களில் வெளிப்படுத்தப்படவில்லை. வெளிப்பட்டுவிட்டால் பல விஷயங்கள் பொதுமேடைகளில் விவாதத்திற்குள்ளாகும். கோர்த்தாவை உள்ளே கொண்டுவர முடியாது என்றாலும்...
அத்தியாயம் 59
‘பறந்த தோட்டாக்கள்.. உருண்ட தலைகள். அனந்தபூர் படுகொலையில் தொடரும் மர்மங்கள்’ - கையில் மைக்கோடு கேமிராவை பார்த்து படபடவென்று மூச்சுவிடாமல் பேசினாள் அந்த ரிப்போர்ட்டர்.
பின்னணியில், சம்பவம் நடந்த இடம் மஞ்சள் நிற நாடா கயிற்றால் சுற்றிவளைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம்...
அத்தியாயம் 58
மழை பெய்து ஓய்ந்திருந்த மாலை நேரம். நீண்டு அகண்ட அந்த பெரிய சாலையின் இருபுறமும் வரிசையாக அணிவகுத்திருந்த கடைகளில் மழைக்காக ஒதுங்கியிருந்த மக்கள் சாலையில் இறங்கி நடக்க துவங்கியிருந்தார்கள். மிருதுளா மெடிக்கல் ஷாப்பிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். காரில் சாய்ந்து நின்றபடி...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.