Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
Superb..these episodes giving positive twist..more interesting... waiting for next episode..story writing also too good..keep going
Thank you so much dear sister...ur words are encouraging me a lott...🙏😍😘
 

Kalijana

Member
Messages
31
Reaction score
32
Points
18
எண்ணங்களே வண்ணங்களாய்...

அத்தியாயம் 22


பா்கவியும் அவளது பெற்றோரும் பரத் வீட்டிற்கு காரில் வந்து இறங்கினார்கள்.முதலில் பார்கவியின் பெற்றோர் மட்டும் பரத்தின் வீட்டிற்கு சென்றனர்.


வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து பேப்பர் வாசித்து கொண்டிருந்த கனகராஜ், பார்கவியின் பெற்றோரைப் பார்த்ததும் வணக்கம் சம்பந்தி...வாங்க...வாங்க...என்று பார்கவியுடைய பெற்றோரை வீட்டிற்குள் வரவேற்றார் கனகராஜ்.


தூரத்தில் காரின் அருகிலேயே பார்கவி தயங்கி நின்று கொண்டிருந்ததைப் பார்த்த பரத்தின் அப்பா, ஏன்ம்மா பார்கவி அங்கேயே நிக்கிற? இங்கே வாமா... என்று தனது மருமகளை அழைத்தார்.


கனகராஜ் வாசலில் யாரிடமோ பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டு பங்கஜமும் பரத்தும் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தனர்.


தனது வீட்டை நோக்கி பார்கவி நடந்து வருவதை பார்த்த பரத், ஏன் அங்கேயே நில்லுடி! இங்க எதுக்குடி வந்த? என்று கோபமாக கேட்டான்.


நீ எதுவும் பேசாமல் முதலில் வீட்டுக்குள்ள போ பரத்! என்று சத்தம் போட்டார் பரத்தின் அப்பா.ஆனால் பரத் வீட்டிற்குள் போகாமல் பார்கவியை சீறிப் பாயந்து கவ்வும் சிங்கம் போல அக்ரோசமாக பார்த்தான்.


அப்பா சொல்லுறாங்கள பரத்.உள்ள வாடா! என்று பரத்தின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் பங்கஜம்.


மன்னிக்கனும் சம்பந்தி! பரத் ஏதோ கோபத்துல தெரியாமல் பேசிட்டான்.
அதெல்லாம் நீங்க பெருச எடுத்துக்காதீங்க என்று கூறினார் கனகராஜ்.


மாப்பிள்ள கோபப்படுறதுல அர்த்தம் இருக்கு சம்பந்தி.நீங்க போய் எதுக்கு எங்கக்கிட்ட மன்னிப்பு கேட்கிறீங்க.முறைப்படி பார்த்தால் நாங்க தான் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்கனும் என்று கூறினார் சோமசுந்தரம்.


ஐயையோ! என்ன சம்பந்தி நீங்க போய் மன்னிப்பு அது இதுனு சொல்லி பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க.
முதலில் நீங்கள் வீட்டுக்குள்ள வாங்க பிறகு மற்றதைப் பத்தி பேசிக்கலாம் என்று கூறி வந்தவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் கனகராஜ்.


வீட்டிற்குள் நுழைந்ததும் பார்கவி வேகமாக மாமனார் மாமியார் காலில் விழுந்து அழுது மன்னிப்பு கேட்டாள்.


எழுந்திரும்மா பார்கவி! என்னம்மா இதெல்லாம் என்று பார்கவியின் மாமனார் கேட்டார்.நீங்க இரண்டு பேரும் என்னை மன்னிச்சுட்டேனு சொல்லுற வரைக்கும் நான் எழுந்திருக்க மாட்டேன் என்று கூறிக்கொண்டே அழுது புலம்பினாள் பார்கவி.


பார்கவியின் மாமியார் அவளைப் பிடித்து தூக்கிவிட்டு அழாதம்மா பார்கவி! நீயும் எங்க பொண்ணு மாதிரிதாம்மா.எங்களுக்கு உன் மேல எந்த வருத்தமும் இல்ல என்று கூறிக் பார்கவயின் கண்ணீரைத் துடைத்து விட்டதும், மாமியாரைக் கட்டிப்பிடித்து தேம்பி தேம்பி அழுதாள் பார்கவி.


என்னங்க! என்னை மன்னிச்சுருங்க... என்று பார்கவி பரத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதும், காலை உதறிவிட்டு ஏன் அப்பா அம்மா வேணும்னா உன்னை மன்னிக்கலாம்.
அது அவுங்களோட பெருந்தன்மை.
ஆனால் நான் இந்த ஜென்மத்துக்குள்ள உன்ன மன்னிக்கவே மாட்டேன்.
இனிமேல் உன்னோட வாழ நான் தயாராக இல்ல.என் முகத்துலையே நீ முழிக்காத! என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான் பரத்.


பார்கவி கதவை தட்டிக் கொண்டு என்னங்க! என்னங்க! ப்ளீஸ்ங்க...நான் பண்ணதெல்லாம் மிகப்பெரிய தப்பு தாங்க.என் கன்னத்துல நாலு அறை வேணும்னாலும் அறைஞ்சுக்கோங்க.
ஆனால்என்னோட வாழ மாட்டேன்! பார்க்க மாட்டேனு மட்டும் சொல்லாதீங்க.ப்ளீஸ்ங்க... என்று சொல்லிக் கொண்டே கதறி அழுதாள் பார்கவி.


பரத்! பரத்! கதவை திறப்பா பரத் என்று கனகராஜ் கூப்பிட, அப்பா தயவு பண்ணி அவளை அவுங்க வீட்டுக்கு அனுப்பி வைங்கப்பா என்று கதவை திறக்காமல் ரூமில் இருந்தவாரே கூறினான் பரத்.


பார்கவி அழுவதை பார்த்துக் கொண்டிருந்த சரோஜா, எல்லாத்துக்கும் நான் தான் மாப்பிள காரணம்.நீங்க என்ன தண்டனை கொடுக்கனும்னாலும் எனக்கு கொடுங்க மாப்பிள.போலீஸ் ஸ்டேஷன்ல கூட கம்ப்ளைன்ட் கொடுங்க.பார்கவியை மட்டும் தண்டுச்சுடாதீங்க! என்று கூறினார் சரோஜா.ஆனால் பரத்திடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.



ஐயோ! சம்பந்திம்மா அழுறத நிறுத்துங்க.சின்னஞ்சிறுசுங்க அவுங்க இன்னைக்கு சண்டை போடுவாங்க நாளைக்கு கூடிக்குவாங்க.அவன் கோபத்துல இருக்குறதால நிதானம் இல்லாமல் பேசுறான்.நீங்கள் எதை நினைத்து கவலைப்படாமல் பார்கவியை இப்போ உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க.நாளைக்கு காலையிலே பார்கவியை கூப்பிட பரத் கண்டிப்பாக வருவான் என்று கூறினார் பங்கஜம்.


சரிங்க சம்பந்தி…என்றார் சரோஜா.


சிவானி எங்க அத்தை? என்று கேட்டாள் பார்கவி.


பானு, சிவானியை கூட்டிக்கிட்டு கோவில் வரைக்கும் போயிருக்காமா.நீ குழந்தையை பத்தி எதுவும் நினைச்சு கவலைப்பட வேண்டாம்மா.அவள் அழாமல் விளையாடிக்கிட்டு தான் இருக்கா.இன்னைக்கு ஒரு நாள் மட்டும் பொறுத்துக்கோ பார்கவி என்று கூறினார் பங்கஜம்.


அப்போ நாங்க கிளம்புறோம் சம்பந்தி என்று கூறிவிட்டு அங்கிருந்து விடைப்பெற்றனர்.


என்னம்மா வீடு புஃல்லா பலூனால டெக்ரேட் பண்ணிருக்கீங்க? வீட்ல எதுவும் பங்சன் ப்ளான் பண்ணிருக்கீங்களா? என்று ஜானகி அம்மாவிடம் கேட்டான் சந்துரு.
இன்னைக்கு என்ன நாளுங்கிறதே நீ மறந்துட்டியாடா சந்துரு? அப்போ நேத்து நைட் பேர்த் டே கிப்டா நீ எடுத்து வச்சிருந்த சேலைய சாருக்கிட்ட கொடுக்கலையா சந்துரு? என்று கேட்டார் ஜானகி அம்மா.


ஸாரிம்மா...நேத்து நைட் விஸ் பண்ணிட்டு தூங்கனும் நினைச்சுதாமா நான் தூங்கிடாம இருக்க லேப்டாப்ல சாங்ஸ் கேட்டுக்கிட்டு இருந்தேன்.நேத்து கடைக்கு அலைஞ்சுட்டு வந்த அலுப்புல அப்படியே அசந்து தூங்கிட்டேன்ம்மா.
தூங்கி எழுந்தும் நியாபகமே வரலம்மா.இன்னைக்கு சாரு பிறந்தநாளுங்கிறத சுத்தமா மறந்துட்டேன் என்று கூறினான் சந்துரு.


எல்லா பொண்ணுங்களும் ஆசைப்படுறது மாதிரி சாருவும் ரொம்ப ஆசையோட நம்ம வீட்டுகாரர் தான் பஸ்ட் விஸ் பண்ணணும் ஆவலா இருந்திருப்பாள்.இப்படி பண்ணிட்டியேடா சந்துரு என்று சத்தம் போட்டார்.


இப்போவாது போய் அவளுக்கு விஸ் பண்ணுடா என்று ஜானகி அம்மா கூறியதும் தன் அறைக்கு சென்றான் சந்துரு.


கிப்ட் பாக்ஸை எடுத்துக்கொண்டு சாருவின் அருகில் சென்றான்.சாரு பால்கனியில் நின்று போன் பேசிக்கொண்டிருந்தாள்.போன் பேசி முடித்துவிட்டு திரும்பியதும் சந்துரு கையில் கிப்ட் பாக்ஸோடு நின்று கொண்டிருப்பதை பார்த்தவள் தன்னிலை மறந்தாள்.


"இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சாரு" என்று சந்துரு கூறிவிட்டு பிறந்தநாள் பரிசைக் கொடுத்தான்.


சந்துரு பிறந்தநாள் வாழ்த்தோடு பிறந்தநாள் பரிசை சேர்த்து தந்ததும் சாருவின் மனவேதனையும் தவிப்பும் மாயமாய் மறைந்து போய்விட்டது.


'தாங்க் யூ சோ மச்ங்க' என்று சந்துருவிடம் கூறினாள் சாரு.கிப்ட் ஓபன் பண்ணி பாருங்க என்று சந்துரு கூறியதும் மிகவும் ஆவலுடன் கிப்ட் பாக்ஸை ஓபன் செய்து பார்த்தாள் சாரு.


சாருவிற்கு பிடித்த நீல நிறத்தில் கண்ணை கவரும் டிசைனில் பட்டுச்சேலை இருந்ததை பார்த்ததும் சாருவின் மனதில் ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை.


சேலை ரொம்ப அழகா இருக்குங்க என்று முகத்தில் மகிழ்ச்சியுடன் சாரு கூறியதும் சரிங்க...சீக்கிரமா கிளம்பி கீழே வாங்க என்று கூறிவிட்டு சென்றான் சந்துரு.


பார்கவியின் கார் சென்றதும் பானு ஸ்கூட்டியில் வந்து இறங்கினாள்.
யாருப்பா வந்துட்டு போறாங்க? என்று தன்னுடைய அப்பாவிடம் கேட்டாள் பானு.


பார்கவி மற்றும் அவளுடைய பெற்றோர்கள் வந்ததையும் அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் பானுவிடம் கூறினார் கனகராஜ்.


ரூமிலிருந்து பரத் வெளியே வந்ததும், படிச்ச பையன் மாதிரியாடா நீ நடந்துக்கிற? வீட்டு வாசல்ல வச்சே பார்கவியை கண்ட படி திட்டுற.அக்கம் பக்கத்துல இருக்குறவுங்க எல்லாம் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்குறாங்க.அதைக்கூட கவனிக்காமல் உன் இஷ்டத்துக்கு பேசிக்கிட்டே இருக்க.வீட்டுக்கு வந்தவுங்கள இப்படியாடா வாசல்ல நிக்க வச்சு பேசுவாங்க.அவளே மனசு திருந்தி வந்து மன்னிப்பு கேக்குறாலடா பரத்.அவளை மன்னிச்சு ஏத்துக்கலாம்ல பரத் என்று பங்கஜம் கூறினார்.


பரத் அவர்கள் பேசுவதை காதில் எதையும் வாங்கி கொள்ளாமல், எனக்கு ரொம்ப பசிக்குதும்மா சாப்பாடு போடுங்கள் என்று கூறினான்.


நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன்.நீ என்னடானா... என்று பங்கஜம் கூறும் போது பரத்துக்கு முதல்ல சாப்பாடு வைம்மா என்று கனகராஜ் சொல்லியதும் ஏதும் பேசாமல் சாப்பாடு பரிமாறினார் பங்கஜம்.


தன் கணவர் தனக்கு பிறந்தநாள் பரிசாக எடுத்து தந்த பட்டுச்சேலையை உடுத்திக்கொண்டு, சேலைக்கு எடுப்பாக காதில் வெள்ளை நிற கற்கள் பதித்த சிமிக்கி கம்மல் அணிந்து, கழுத்தில் ஜொலிக்கும் வைர நெக்லஸும், கையில் கிலுகிலுக்கும் வளையல் ஓசையுடன் காலில் மெல்லிய சலங்கை சத்தம் கொண்ட கொலுசும் அணிந்து மனதை கவர்ந்திழுக்கும் மல்லிகை பூச்சூடி தங்க தாரகையாக மாடியிலிருந்து இறங்கி வருபவளை பார்த்த சந்துரு, சாருவின் அழகில் மயங்கி அவனையே அறியாது அவளின் அருகில் நெருங்கிச் சென்றான்.


சந்துருவை பார்த்து புன்னகை பூவை அவன் மீது தூவி விட்டு பூஜை அறைக்குள் சென்றாள் சாரு.


அங்கு வந்த ஜானகி அம்மாவிடம் ஆசிர்வாதம் பெற்றாள் சாரு.உன் மேல என் கண்ணே பட்டிரும் போலம்மா சாரு.
சாட்சாத் அந்த மகாலெஷ்மியையே நேர்ல பார்த்தது போல அவ்வளவு அழகாக இருக்கும்மா சாரு.ஒரு நிமிஷம் இரும்மா சாரு என்று கூறிவிட்டு தனது அறைக்குள் சென்று கண்மையை எடுத்து வந்தார் ஜானகி அம்மா.யாரு கண்ணும் உன் மேலே பட்டுற கூடாதும்மா சாரு என்று கூறி தனது மருமகளிற்கு திருஷ்டி பொட்டு வைத்து விட்டார் ஜானகி அம்மா.


என்னடா சந்துரு மசமசனு இங்கேயே நின்னுக்கிட்டு இருக்க.சீக்கிரம் போய் நீ கிளம்பிட்டு மனோஜையும் கிளப்பி கூட்டிட்டு வா.சாருக்கு பேர்த் டே கேக் கட் பண்ணணும் என்று ஜானகி அம்மா கூறிய பின்னர் தான் சுயநினைவுக்கு வந்தான் சந்துரு.


சரிங்கம்மா என்று கூறியவன் சாருவை பார்த்துக் கொண்டே படிகளில் ஏறிச் சென்றான்.


சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த கண்ணம்மா வேகமாக ஹாலிற்கு வந்து சாருவிற்கு வாழ்த்து தெரிவித்து வாழ்க வளமுடன் என்று கூறினார்.


சந்துருவும் மனோஜூம் கீழே இறங்கி வந்ததும் கேக் கட் செய்ய சாருவை அழைத்தனர்.வீட்டடிலுள்ள அனைவரும் ஹேப்பி பேர்த் டே டூ யூ என்று பாட ஆரம்பிக்கும் போது


"லால லால லாலா

நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்

வானம் தீண்டும் தூரம்
நீ வளர்ந்து வாழ வேண்டும்

அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
பண்பு வேண்டும் பணிவுவேண்டும்

எட்டு திக்கும் புகழ வேண்டும்
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்

உலகம் பார்க்க உனது பெயரை
நிலவுத்தாளில் எழுத வேண்டும்

சர்க்கரை தமிழள்ளி தாலாட்டு நாள்சொல்லி

வாழ்த்துகிறோம்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்…"




என்று கோராசுடன் குழந்தைகள் பாடும் சத்தம் வீட்டிற்கு வெளியே கேட்டது.சாரு கேக் கட் செய்யாமல் வேகமாக வெளியே சென்று பார்த்தாள்.


பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து பானுவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பாடிக்கொண்டிருப்பதை பார்த்து உற்சாகம் அடைந்தாள் சாரு.


மாணவர்கள் அனைவரும் வரிசையாக வந்து பூங்கொத்தை கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் டீச்சர் என்று சாருவிற்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.


அவர்களை வீட்டிற்குள்ளே அழைத்து சென்று பிறந்தநாள் கேக் கட் செய்தாள் சாரு.


முதலில் கேக் எடுத்து அங்கிருந்த குழந்தைகளுக்கு ஊட்டினாள்.அதன் பின்னர் ஜானகி அம்மாவிற்கு கொடுக்க அவரும் திருப்பி ஊட்டிவிட்டார்.


அடுத்ததாக சந்துருவிற்கு ஊட்டுவதற்காக அவனது வாயின் அருகே கேக்கை கொண்டு போனாள் சாரு.சந்துரு அதை வாயில் வாங்கிக் கொள்ளாமல் கையில் பெற்றுக் கொண்டான்.ஜானகி அம்மா வாயைத் திறந்து பேசாமல் கண் ஜாடையிலே சந்துருவை பார்த்து கேக் எடுத்து சாருக்கு ஊட்டு என்று சைகை காமித்தார்.சாருவிற்கு பின்புறம் ஜானகி அம்மா இருந்ததால் அவர் சைகையில் கூறியது சாருவிற்கு தெரியாது.ஆனால் பானு அதைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.அதற்கு பிறகு சாருவிற்கு கேக்கை எடுத்து ஊட்டிவிட்டான் சந்துரு.


பசங்கள கூட்டிட்டு வந்து சர்ப்ரைஸ் கொடுப்பனு எதிர்ப்பார்க்கவே இல்ல பானு.'தாங்க் யூ சோ மச் பானு' என்று கூறினாள் சாரு.


குழந்தைகள் திடீரென வந்ததால் அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க ஹோட்டலில் ஆர்டர் கொடுத்து சாப்பாடை வீட்டிற்கு வரவழைத்தார் ஜானகி அம்மா.


அனைவரும் அமர்ந்து சாப்பிடும் போது கண்ணம்மா மட்டும் பரிமாறிக் கொண்டிருந்தார்.


அம்மா! நீங்கள் இதெல்லாம் வச்சிட்டு இங்க வந்து உட்காருங்க என்று கண்ணம்மாவை உட்கார வைத்து சாப்பாடு பரிமாறினாள் சாரு.


எப்பொழுதும் வீட்டில் எல்லோரும் சாப்பிட்ட பின் சாப்பிடும் கண்ணம்மா, முதன் முறையாக அனைவருடனும் சேர்ந்து சாப்பிட வைத்த சாருவை நினைத்து மனதில் சந்தோஷப்பட்டு ஆனந்த கண்ணீர் சிந்தினார்.


குழந்தைகளும் மற்றவர்களும் சாப்பிடும் கேப்பில் பானுவும் மனோஜூம் தனியாக சென்று பேசிக் கொண்டிருக்கும் போது இடையே ஜானகி அம்மா வந்து பானுவின குடும்பத்தினரைப் பற்றி நலம் விசாரித்தார்.


சரிங்க சார்... எனக்கு டைமாச்சு. பசங்கள கொண்டு போய் ஸ்கூல்ல விட்டுட்டு, அப்படியே நான் வீட்டுக்கு கிளம்புறேன் என்று மனோஜிடம் கூறிவிட்டு சென்றாள் பானு.


நானும் பானு வீட்டு வரைக்கும் போய்ட்டு வர்றேன் அத்தை.பானுக்கு நிச்சயதார்த்த ப்ளவுஸ் தைக்க அவளுடைய அளவு ப்ளவுஸ் வாங்கிட்டு வந்திர்றேன் அத்தை என்று கூறினாள் சாரு.


சரிம்மா... பார்த்து கவனமாக போய்ட்டு வாமா என்று கூறினார் ஜானகி அம்மா.


சந்துருவிடமும் கூறிவிட்டு பானுவுடன் சேர்ந்து மினி வேனில் கிளம்பிச் சென்றாள் சாரு.


நீ பசங்கள கொண்டு போய் விட்டு வா பானு! நான் வெளியே வெயிட் பண்ணுறேன் என்று கூறினாள் சாரு.


நீயும் வா சாரு! எல்லா டீச்சர்ஸையும் பார்த்து ரொம்ப நாள் ஆச்சுல என்று பானு கூறினாள்.


நிச்சயதார்த்த ஒர்க் நிறைய இருக்கு பானு.இப்போ நான் உள்ள வந்தேனா உடனே கிளம்ப முடியாது பானு என்று கூறியதும், சரி...சரி...பத்து நிமிஷத்தில் நான் வந்திர்றேன் என்று கூறிவிட்டு பள்ளியின் உள்ளே சென்றாள் பானு.


பானு குழந்தைகளை விட்டுட்டு பள்ளியில் நிறுத்தி வைத்திருந்த தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.பானு வந்ததும் இருவரும் ஸ்கூட்டியில் பேசிக்கொண்டே பானுவின் வீட்டிற்கு சென்றனர்.



பானு வீட்டில் நடந்த அனைத்தையும் சாருவிடம் கூறிக் கொண்டே வந்தாள்.அண்ணா ரொம்ப அடம்பிடிக்கிறாங்க சாரு.அண்ணி பாவம் சாரு! ரொம்ப வந்து அழுது மன்னிப்பு கேட்டாங்கலாம்.ஆனால் அண்ணன் கொஞ்சம் கூட முகம் கொடுத்தே பேசலையாம் சாரு.டைவர்ஸ் பண்ணியே தீருவேனு ஒத்த காலில் நிக்கிறாங்க.அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டாங்க.அண்ணா எதையுமே காதுல வாங்குற மாதிரியே தெரியல என்று தன்னுடைய அண்ணனின் வாழ்க்கையை குறித்து கவலையுடன் கூறிக் கொண்டே வந்தாள் பானு.


பானுவின் வீட்டிற்கு வந்ததும் பானுவின் அப்பா, அம்மா, அண்ணன் எல்லோரும் சாருவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.


சிறிது நேரம் கழித்து நீ பேசிக்கிட்டு இரும்மா சாரு.எனக்கு வெளில கொஞ்சம் வேலை இருக்கு போய்ட்டு வர்றேன் என்று கூறிவிட்டு சென்றார் கனகராஜ்.


பங்கஜம் அம்மாவும் சாருவிற்கு காபி போட்டு கொடுக்க சமையலறைக்கு சென்றுவிட்டார்.பானுவோ! அளவு ப்ளவுஸ் எடுப்பதற்கு தன்னுடைய ரூமிற்கு சென்றுவிட்டாள்.சிவானி விளையாடிக் கொண்டிருந்தாள்.
பரத்தும் சாருவும் மட்டும் தான் ஹாலில் இருந்தனர்.


யாருமில்லா நேரம் பார்த்து சாரு பரத்திடம் பேசத் தொடங்கினாள்.
அண்ணா! தப்பா எடுத்துக்காட்டி நான் உங்கக்கிட்ட ஒன்னு கேட்கலாமா? என்று சாரு கேட்டதும், நீயும் என் தங்கச்சி மாதிரி தான்ம்மா.எதுனாலும் தாரளமாக கேளும்மா என்று பரத் கூறினான்.


அண்ணா! உங்க குடும்ப விஷயத்துல தலையிடுறேனு தப்பா நினைக்காதீங்க.
பானு வீட்ல நடந்த எல்லாத்தையும் ஏங்கிட்ட சொன்னாள்.


முப்பதிரெண்டு வருஷமா உங்களைப் பார்த்து பார்த்து பெத்து வளர்த்து ஆளாக்கிய உங்க அப்பா அம்மாவோட குணமும் அவுங்களோட எல்லா அருமை பெருமை நல்லா தெரிஞ்ச நீங்களே! குடும்பத்தில் ஒரு சின்ன பிரச்சனை வந்ததும் அவுங்கள பத்தி சரியா புருஞ்சுக்காத போது, உங்களுக்கு கல்யாணமாகி நாலு வருஷத்தும்தான் ஆகுது.அதுக்குள்ள பார்கவி அண்ணிதான் யாரையும் சரியா புருஞ்சுக்கல, எல்லா பிரச்சனைக்கு அவுங்க தான் காரணம்னு நீங்க எப்படினா சொல்லலாம்?


நல்லா யோசிச்சு பாருங்கனா! மத்தவுங்கள குறை சொல்லுறதுக்கு முன்னாடி நம்ம சரியா நடந்துக்கிட்டோமானு யோசிச்சு பார்த்தால் பல குடும்பங்களில் இந்த மாதிரி பிரச்சனையே வர்றாது.


என்னை பொறுத்தவரை நம்முடைய சிரிப்புக்கும் அழுகைக்கும் நாம் மட்டும் தான் மூலக்காரணம்.நம் எண்ணங்கள் சரியாக இருந்தால் நம்முடைய வாழ்க்கையும் சரியாக அமையும் என்று கூறினாள் சாரு.


நான் பேசுனதுல ஏதாவது தப்பு இருந்தாலோ, நீங்க சங்கடப்படுவது மாதிரி நான் பேசியிருந்தாலோ என்னை மன்னிச்சிருங்கனா.


வயசுக்கு மீறி அட்வைஸ் பண்ணுறேனு தப்பா நினைக்க வேண்டாம்னா.எனக்கு உங்கக்கிட்ட சொல்லனும் தோணுச்சுனா என்று சாரு கூறியதும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் பரத்.


சாரு பேசி முடித்ததும் பானுவும் ப்ளவுஸை எடுத்து வந்து சாருவிடம் கொடுத்தாள்.பங்கஜம் அம்மாவும் காபியும் ஸ்நாக்ஸும் எடுத்து வந்து சாருவிடம் கொடுத்தார்.


காபி குடித்ததும் சரிம்மா. எனக்கு நேரமாச்சு! நான் கிளம்புறேன் என்று கூறினாள் சாரு.


கொஞ்சம் வெயிட் பண்ணு சாரு.நான் ஐந்து நிமிஷத்தில் கிளம்பி வர்றேன்.உன்னை உங்க வீட்டுல ட்ராப் பண்ணுறேன் என்று கூறினாள் பானு.


அதெல்லாம் வேண்டாம் பானு! நான் ஆட்டோ பிடிச்சு போயிக்கிறேன் என்று கூறிவிட்டு வீட்டிற்கு கிளம்பிச் சென்றாள் சாரு.


சாரு பேசியதைக் கேட்டு பரத்தின் மனதில் மாற்றம் வந்ததா? பார்கவியை மன்னித்து ஏற்று கொள்வானா பரத்? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்...

- தொடரும் -

* * * * * * * * * * * * * *

இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
நல்ல முன்னேற்றம் சந்துரு birthday gift மட்டும் கொடுக்கலான audience கொதிச்சு இருப்பாங்க 😄 சாரு நீ வேற லெவல் மா 👌 sis good going 👌
 

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
நல்ல முன்னேற்றம் சந்துரு birthday gift மட்டும் கொடுக்கலான audience கொதிச்சு இருப்பாங்க 😄 சாரு நீ வேற லெவல் மா 👌 sis good going 👌
Thank you so much dear 😍🙏🙏🙏
 
Messages
30
Reaction score
29
Points
18
எண்ணங்களே வண்ணங்களாய்...

அத்தியாயம் 22


பா்கவியும் அவளது பெற்றோரும் பரத் வீட்டிற்கு காரில் வந்து இறங்கினார்கள்.முதலில் பார்கவியின் பெற்றோர் மட்டும் பரத்தின் வீட்டிற்கு சென்றனர்.


வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து பேப்பர் வாசித்து கொண்டிருந்த கனகராஜ், பார்கவியின் பெற்றோரைப் பார்த்ததும் வணக்கம் சம்பந்தி...வாங்க...வாங்க...என்று பார்கவியுடைய பெற்றோரை வீட்டிற்குள் வரவேற்றார் கனகராஜ்.


தூரத்தில் காரின் அருகிலேயே பார்கவி தயங்கி நின்று கொண்டிருந்ததைப் பார்த்த பரத்தின் அப்பா, ஏன்ம்மா பார்கவி அங்கேயே நிக்கிற? இங்கே வாமா... என்று தனது மருமகளை அழைத்தார்.


கனகராஜ் வாசலில் யாரிடமோ பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டு பங்கஜமும் பரத்தும் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தனர்.


தனது வீட்டை நோக்கி பார்கவி நடந்து வருவதை பார்த்த பரத், ஏன் அங்கேயே நில்லுடி! இங்க எதுக்குடி வந்த? என்று கோபமாக கேட்டான்.


நீ எதுவும் பேசாமல் முதலில் வீட்டுக்குள்ள போ பரத்! என்று சத்தம் போட்டார் பரத்தின் அப்பா.ஆனால் பரத் வீட்டிற்குள் போகாமல் பார்கவியை சீறிப் பாயந்து கவ்வும் சிங்கம் போல அக்ரோசமாக பார்த்தான்.


அப்பா சொல்லுறாங்கள பரத்.உள்ள வாடா! என்று பரத்தின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் பங்கஜம்.


மன்னிக்கனும் சம்பந்தி! பரத் ஏதோ கோபத்துல தெரியாமல் பேசிட்டான்.
அதெல்லாம் நீங்க பெருச எடுத்துக்காதீங்க என்று கூறினார் கனகராஜ்.


மாப்பிள்ள கோபப்படுறதுல அர்த்தம் இருக்கு சம்பந்தி.நீங்க போய் எதுக்கு எங்கக்கிட்ட மன்னிப்பு கேட்கிறீங்க.முறைப்படி பார்த்தால் நாங்க தான் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்கனும் என்று கூறினார் சோமசுந்தரம்.


ஐயையோ! என்ன சம்பந்தி நீங்க போய் மன்னிப்பு அது இதுனு சொல்லி பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க.
முதலில் நீங்கள் வீட்டுக்குள்ள வாங்க பிறகு மற்றதைப் பத்தி பேசிக்கலாம் என்று கூறி வந்தவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் கனகராஜ்.


வீட்டிற்குள் நுழைந்ததும் பார்கவி வேகமாக மாமனார் மாமியார் காலில் விழுந்து அழுது மன்னிப்பு கேட்டாள்.


எழுந்திரும்மா பார்கவி! என்னம்மா இதெல்லாம் என்று பார்கவியின் மாமனார் கேட்டார்.நீங்க இரண்டு பேரும் என்னை மன்னிச்சுட்டேனு சொல்லுற வரைக்கும் நான் எழுந்திருக்க மாட்டேன் என்று கூறிக்கொண்டே அழுது புலம்பினாள் பார்கவி.


பார்கவியின் மாமியார் அவளைப் பிடித்து தூக்கிவிட்டு அழாதம்மா பார்கவி! நீயும் எங்க பொண்ணு மாதிரிதாம்மா.எங்களுக்கு உன் மேல எந்த வருத்தமும் இல்ல என்று கூறிக் பார்கவயின் கண்ணீரைத் துடைத்து விட்டதும், மாமியாரைக் கட்டிப்பிடித்து தேம்பி தேம்பி அழுதாள் பார்கவி.


என்னங்க! என்னை மன்னிச்சுருங்க... என்று பார்கவி பரத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதும், காலை உதறிவிட்டு ஏன் அப்பா அம்மா வேணும்னா உன்னை மன்னிக்கலாம்.
அது அவுங்களோட பெருந்தன்மை.
ஆனால் நான் இந்த ஜென்மத்துக்குள்ள உன்ன மன்னிக்கவே மாட்டேன்.
இனிமேல் உன்னோட வாழ நான் தயாராக இல்ல.என் முகத்துலையே நீ முழிக்காத! என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான் பரத்.


பார்கவி கதவை தட்டிக் கொண்டு என்னங்க! என்னங்க! ப்ளீஸ்ங்க...நான் பண்ணதெல்லாம் மிகப்பெரிய தப்பு தாங்க.என் கன்னத்துல நாலு அறை வேணும்னாலும் அறைஞ்சுக்கோங்க.
ஆனால்என்னோட வாழ மாட்டேன்! பார்க்க மாட்டேனு மட்டும் சொல்லாதீங்க.ப்ளீஸ்ங்க... என்று சொல்லிக் கொண்டே கதறி அழுதாள் பார்கவி.


பரத்! பரத்! கதவை திறப்பா பரத் என்று கனகராஜ் கூப்பிட, அப்பா தயவு பண்ணி அவளை அவுங்க வீட்டுக்கு அனுப்பி வைங்கப்பா என்று கதவை திறக்காமல் ரூமில் இருந்தவாரே கூறினான் பரத்.


பார்கவி அழுவதை பார்த்துக் கொண்டிருந்த சரோஜா, எல்லாத்துக்கும் நான் தான் மாப்பிள காரணம்.நீங்க என்ன தண்டனை கொடுக்கனும்னாலும் எனக்கு கொடுங்க மாப்பிள.போலீஸ் ஸ்டேஷன்ல கூட கம்ப்ளைன்ட் கொடுங்க.பார்கவியை மட்டும் தண்டுச்சுடாதீங்க! என்று கூறினார் சரோஜா.ஆனால் பரத்திடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.



ஐயோ! சம்பந்திம்மா அழுறத நிறுத்துங்க.சின்னஞ்சிறுசுங்க அவுங்க இன்னைக்கு சண்டை போடுவாங்க நாளைக்கு கூடிக்குவாங்க.அவன் கோபத்துல இருக்குறதால நிதானம் இல்லாமல் பேசுறான்.நீங்கள் எதை நினைத்து கவலைப்படாமல் பார்கவியை இப்போ உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க.நாளைக்கு காலையிலே பார்கவியை கூப்பிட பரத் கண்டிப்பாக வருவான் என்று கூறினார் பங்கஜம்.


சரிங்க சம்பந்தி…என்றார் சரோஜா.


சிவானி எங்க அத்தை? என்று கேட்டாள் பார்கவி.


பானு, சிவானியை கூட்டிக்கிட்டு கோவில் வரைக்கும் போயிருக்காமா.நீ குழந்தையை பத்தி எதுவும் நினைச்சு கவலைப்பட வேண்டாம்மா.அவள் அழாமல் விளையாடிக்கிட்டு தான் இருக்கா.இன்னைக்கு ஒரு நாள் மட்டும் பொறுத்துக்கோ பார்கவி என்று கூறினார் பங்கஜம்.


அப்போ நாங்க கிளம்புறோம் சம்பந்தி என்று கூறிவிட்டு அங்கிருந்து விடைப்பெற்றனர்.


என்னம்மா வீடு புஃல்லா பலூனால டெக்ரேட் பண்ணிருக்கீங்க? வீட்ல எதுவும் பங்சன் ப்ளான் பண்ணிருக்கீங்களா? என்று ஜானகி அம்மாவிடம் கேட்டான் சந்துரு.
இன்னைக்கு என்ன நாளுங்கிறதே நீ மறந்துட்டியாடா சந்துரு? அப்போ நேத்து நைட் பேர்த் டே கிப்டா நீ எடுத்து வச்சிருந்த சேலைய சாருக்கிட்ட கொடுக்கலையா சந்துரு? என்று கேட்டார் ஜானகி அம்மா.


ஸாரிம்மா...நேத்து நைட் விஸ் பண்ணிட்டு தூங்கனும் நினைச்சுதாமா நான் தூங்கிடாம இருக்க லேப்டாப்ல சாங்ஸ் கேட்டுக்கிட்டு இருந்தேன்.நேத்து கடைக்கு அலைஞ்சுட்டு வந்த அலுப்புல அப்படியே அசந்து தூங்கிட்டேன்ம்மா.
தூங்கி எழுந்தும் நியாபகமே வரலம்மா.இன்னைக்கு சாரு பிறந்தநாளுங்கிறத சுத்தமா மறந்துட்டேன் என்று கூறினான் சந்துரு.


எல்லா பொண்ணுங்களும் ஆசைப்படுறது மாதிரி சாருவும் ரொம்ப ஆசையோட நம்ம வீட்டுகாரர் தான் பஸ்ட் விஸ் பண்ணணும் ஆவலா இருந்திருப்பாள்.இப்படி பண்ணிட்டியேடா சந்துரு என்று சத்தம் போட்டார்.


இப்போவாது போய் அவளுக்கு விஸ் பண்ணுடா என்று ஜானகி அம்மா கூறியதும் தன் அறைக்கு சென்றான் சந்துரு.


கிப்ட் பாக்ஸை எடுத்துக்கொண்டு சாருவின் அருகில் சென்றான்.சாரு பால்கனியில் நின்று போன் பேசிக்கொண்டிருந்தாள்.போன் பேசி முடித்துவிட்டு திரும்பியதும் சந்துரு கையில் கிப்ட் பாக்ஸோடு நின்று கொண்டிருப்பதை பார்த்தவள் தன்னிலை மறந்தாள்.


"இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சாரு" என்று சந்துரு கூறிவிட்டு பிறந்தநாள் பரிசைக் கொடுத்தான்.


சந்துரு பிறந்தநாள் வாழ்த்தோடு பிறந்தநாள் பரிசை சேர்த்து தந்ததும் சாருவின் மனவேதனையும் தவிப்பும் மாயமாய் மறைந்து போய்விட்டது.


'தாங்க் யூ சோ மச்ங்க' என்று சந்துருவிடம் கூறினாள் சாரு.கிப்ட் ஓபன் பண்ணி பாருங்க என்று சந்துரு கூறியதும் மிகவும் ஆவலுடன் கிப்ட் பாக்ஸை ஓபன் செய்து பார்த்தாள் சாரு.


சாருவிற்கு பிடித்த நீல நிறத்தில் கண்ணை கவரும் டிசைனில் பட்டுச்சேலை இருந்ததை பார்த்ததும் சாருவின் மனதில் ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை.


சேலை ரொம்ப அழகா இருக்குங்க என்று முகத்தில் மகிழ்ச்சியுடன் சாரு கூறியதும் சரிங்க...சீக்கிரமா கிளம்பி கீழே வாங்க என்று கூறிவிட்டு சென்றான் சந்துரு.


பார்கவியின் கார் சென்றதும் பானு ஸ்கூட்டியில் வந்து இறங்கினாள்.
யாருப்பா வந்துட்டு போறாங்க? என்று தன்னுடைய அப்பாவிடம் கேட்டாள் பானு.


பார்கவி மற்றும் அவளுடைய பெற்றோர்கள் வந்ததையும் அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் பானுவிடம் கூறினார் கனகராஜ்.


ரூமிலிருந்து பரத் வெளியே வந்ததும், படிச்ச பையன் மாதிரியாடா நீ நடந்துக்கிற? வீட்டு வாசல்ல வச்சே பார்கவியை கண்ட படி திட்டுற.அக்கம் பக்கத்துல இருக்குறவுங்க எல்லாம் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்குறாங்க.அதைக்கூட கவனிக்காமல் உன் இஷ்டத்துக்கு பேசிக்கிட்டே இருக்க.வீட்டுக்கு வந்தவுங்கள இப்படியாடா வாசல்ல நிக்க வச்சு பேசுவாங்க.அவளே மனசு திருந்தி வந்து மன்னிப்பு கேக்குறாலடா பரத்.அவளை மன்னிச்சு ஏத்துக்கலாம்ல பரத் என்று பங்கஜம் கூறினார்.


பரத் அவர்கள் பேசுவதை காதில் எதையும் வாங்கி கொள்ளாமல், எனக்கு ரொம்ப பசிக்குதும்மா சாப்பாடு போடுங்கள் என்று கூறினான்.


நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன்.நீ என்னடானா... என்று பங்கஜம் கூறும் போது பரத்துக்கு முதல்ல சாப்பாடு வைம்மா என்று கனகராஜ் சொல்லியதும் ஏதும் பேசாமல் சாப்பாடு பரிமாறினார் பங்கஜம்.


தன் கணவர் தனக்கு பிறந்தநாள் பரிசாக எடுத்து தந்த பட்டுச்சேலையை உடுத்திக்கொண்டு, சேலைக்கு எடுப்பாக காதில் வெள்ளை நிற கற்கள் பதித்த சிமிக்கி கம்மல் அணிந்து, கழுத்தில் ஜொலிக்கும் வைர நெக்லஸும், கையில் கிலுகிலுக்கும் வளையல் ஓசையுடன் காலில் மெல்லிய சலங்கை சத்தம் கொண்ட கொலுசும் அணிந்து மனதை கவர்ந்திழுக்கும் மல்லிகை பூச்சூடி தங்க தாரகையாக மாடியிலிருந்து இறங்கி வருபவளை பார்த்த சந்துரு, சாருவின் அழகில் மயங்கி அவனையே அறியாது அவளின் அருகில் நெருங்கிச் சென்றான்.


சந்துருவை பார்த்து புன்னகை பூவை அவன் மீது தூவி விட்டு பூஜை அறைக்குள் சென்றாள் சாரு.


அங்கு வந்த ஜானகி அம்மாவிடம் ஆசிர்வாதம் பெற்றாள் சாரு.உன் மேல என் கண்ணே பட்டிரும் போலம்மா சாரு.
சாட்சாத் அந்த மகாலெஷ்மியையே நேர்ல பார்த்தது போல அவ்வளவு அழகாக இருக்கும்மா சாரு.ஒரு நிமிஷம் இரும்மா சாரு என்று கூறிவிட்டு தனது அறைக்குள் சென்று கண்மையை எடுத்து வந்தார் ஜானகி அம்மா.யாரு கண்ணும் உன் மேலே பட்டுற கூடாதும்மா சாரு என்று கூறி தனது மருமகளிற்கு திருஷ்டி பொட்டு வைத்து விட்டார் ஜானகி அம்மா.


என்னடா சந்துரு மசமசனு இங்கேயே நின்னுக்கிட்டு இருக்க.சீக்கிரம் போய் நீ கிளம்பிட்டு மனோஜையும் கிளப்பி கூட்டிட்டு வா.சாருக்கு பேர்த் டே கேக் கட் பண்ணணும் என்று ஜானகி அம்மா கூறிய பின்னர் தான் சுயநினைவுக்கு வந்தான் சந்துரு.


சரிங்கம்மா என்று கூறியவன் சாருவை பார்த்துக் கொண்டே படிகளில் ஏறிச் சென்றான்.


சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த கண்ணம்மா வேகமாக ஹாலிற்கு வந்து சாருவிற்கு வாழ்த்து தெரிவித்து வாழ்க வளமுடன் என்று கூறினார்.


சந்துருவும் மனோஜூம் கீழே இறங்கி வந்ததும் கேக் கட் செய்ய சாருவை அழைத்தனர்.வீட்டடிலுள்ள அனைவரும் ஹேப்பி பேர்த் டே டூ யூ என்று பாட ஆரம்பிக்கும் போது


"லால லால லாலா

நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்

வானம் தீண்டும் தூரம்
நீ வளர்ந்து வாழ வேண்டும்

அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
பண்பு வேண்டும் பணிவுவேண்டும்

எட்டு திக்கும் புகழ வேண்டும்
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்

உலகம் பார்க்க உனது பெயரை
நிலவுத்தாளில் எழுத வேண்டும்

சர்க்கரை தமிழள்ளி தாலாட்டு நாள்சொல்லி

வாழ்த்துகிறோம்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்…"




என்று கோராசுடன் குழந்தைகள் பாடும் சத்தம் வீட்டிற்கு வெளியே கேட்டது.சாரு கேக் கட் செய்யாமல் வேகமாக வெளியே சென்று பார்த்தாள்.


பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து பானுவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பாடிக்கொண்டிருப்பதை பார்த்து உற்சாகம் அடைந்தாள் சாரு.


மாணவர்கள் அனைவரும் வரிசையாக வந்து பூங்கொத்தை கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் டீச்சர் என்று சாருவிற்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.


அவர்களை வீட்டிற்குள்ளே அழைத்து சென்று பிறந்தநாள் கேக் கட் செய்தாள் சாரு.


முதலில் கேக் எடுத்து அங்கிருந்த குழந்தைகளுக்கு ஊட்டினாள்.அதன் பின்னர் ஜானகி அம்மாவிற்கு கொடுக்க அவரும் திருப்பி ஊட்டிவிட்டார்.


அடுத்ததாக சந்துருவிற்கு ஊட்டுவதற்காக அவனது வாயின் அருகே கேக்கை கொண்டு போனாள் சாரு.சந்துரு அதை வாயில் வாங்கிக் கொள்ளாமல் கையில் பெற்றுக் கொண்டான்.ஜானகி அம்மா வாயைத் திறந்து பேசாமல் கண் ஜாடையிலே சந்துருவை பார்த்து கேக் எடுத்து சாருக்கு ஊட்டு என்று சைகை காமித்தார்.சாருவிற்கு பின்புறம் ஜானகி அம்மா இருந்ததால் அவர் சைகையில் கூறியது சாருவிற்கு தெரியாது.ஆனால் பானு அதைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.அதற்கு பிறகு சாருவிற்கு கேக்கை எடுத்து ஊட்டிவிட்டான் சந்துரு.


பசங்கள கூட்டிட்டு வந்து சர்ப்ரைஸ் கொடுப்பனு எதிர்ப்பார்க்கவே இல்ல பானு.'தாங்க் யூ சோ மச் பானு' என்று கூறினாள் சாரு.


குழந்தைகள் திடீரென வந்ததால் அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க ஹோட்டலில் ஆர்டர் கொடுத்து சாப்பாடை வீட்டிற்கு வரவழைத்தார் ஜானகி அம்மா.


அனைவரும் அமர்ந்து சாப்பிடும் போது கண்ணம்மா மட்டும் பரிமாறிக் கொண்டிருந்தார்.


அம்மா! நீங்கள் இதெல்லாம் வச்சிட்டு இங்க வந்து உட்காருங்க என்று கண்ணம்மாவை உட்கார வைத்து சாப்பாடு பரிமாறினாள் சாரு.


எப்பொழுதும் வீட்டில் எல்லோரும் சாப்பிட்ட பின் சாப்பிடும் கண்ணம்மா, முதன் முறையாக அனைவருடனும் சேர்ந்து சாப்பிட வைத்த சாருவை நினைத்து மனதில் சந்தோஷப்பட்டு ஆனந்த கண்ணீர் சிந்தினார்.


குழந்தைகளும் மற்றவர்களும் சாப்பிடும் கேப்பில் பானுவும் மனோஜூம் தனியாக சென்று பேசிக் கொண்டிருக்கும் போது இடையே ஜானகி அம்மா வந்து பானுவின குடும்பத்தினரைப் பற்றி நலம் விசாரித்தார்.


சரிங்க சார்... எனக்கு டைமாச்சு. பசங்கள கொண்டு போய் ஸ்கூல்ல விட்டுட்டு, அப்படியே நான் வீட்டுக்கு கிளம்புறேன் என்று மனோஜிடம் கூறிவிட்டு சென்றாள் பானு.


நானும் பானு வீட்டு வரைக்கும் போய்ட்டு வர்றேன் அத்தை.பானுக்கு நிச்சயதார்த்த ப்ளவுஸ் தைக்க அவளுடைய அளவு ப்ளவுஸ் வாங்கிட்டு வந்திர்றேன் அத்தை என்று கூறினாள் சாரு.


சரிம்மா... பார்த்து கவனமாக போய்ட்டு வாமா என்று கூறினார் ஜானகி அம்மா.


சந்துருவிடமும் கூறிவிட்டு பானுவுடன் சேர்ந்து மினி வேனில் கிளம்பிச் சென்றாள் சாரு.


நீ பசங்கள கொண்டு போய் விட்டு வா பானு! நான் வெளியே வெயிட் பண்ணுறேன் என்று கூறினாள் சாரு.


நீயும் வா சாரு! எல்லா டீச்சர்ஸையும் பார்த்து ரொம்ப நாள் ஆச்சுல என்று பானு கூறினாள்.


நிச்சயதார்த்த ஒர்க் நிறைய இருக்கு பானு.இப்போ நான் உள்ள வந்தேனா உடனே கிளம்ப முடியாது பானு என்று கூறியதும், சரி...சரி...பத்து நிமிஷத்தில் நான் வந்திர்றேன் என்று கூறிவிட்டு பள்ளியின் உள்ளே சென்றாள் பானு.


பானு குழந்தைகளை விட்டுட்டு பள்ளியில் நிறுத்தி வைத்திருந்த தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.பானு வந்ததும் இருவரும் ஸ்கூட்டியில் பேசிக்கொண்டே பானுவின் வீட்டிற்கு சென்றனர்.



பானு வீட்டில் நடந்த அனைத்தையும் சாருவிடம் கூறிக் கொண்டே வந்தாள்.அண்ணா ரொம்ப அடம்பிடிக்கிறாங்க சாரு.அண்ணி பாவம் சாரு! ரொம்ப வந்து அழுது மன்னிப்பு கேட்டாங்கலாம்.ஆனால் அண்ணன் கொஞ்சம் கூட முகம் கொடுத்தே பேசலையாம் சாரு.டைவர்ஸ் பண்ணியே தீருவேனு ஒத்த காலில் நிக்கிறாங்க.அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டாங்க.அண்ணா எதையுமே காதுல வாங்குற மாதிரியே தெரியல என்று தன்னுடைய அண்ணனின் வாழ்க்கையை குறித்து கவலையுடன் கூறிக் கொண்டே வந்தாள் பானு.


பானுவின் வீட்டிற்கு வந்ததும் பானுவின் அப்பா, அம்மா, அண்ணன் எல்லோரும் சாருவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.


சிறிது நேரம் கழித்து நீ பேசிக்கிட்டு இரும்மா சாரு.எனக்கு வெளில கொஞ்சம் வேலை இருக்கு போய்ட்டு வர்றேன் என்று கூறிவிட்டு சென்றார் கனகராஜ்.


பங்கஜம் அம்மாவும் சாருவிற்கு காபி போட்டு கொடுக்க சமையலறைக்கு சென்றுவிட்டார்.பானுவோ! அளவு ப்ளவுஸ் எடுப்பதற்கு தன்னுடைய ரூமிற்கு சென்றுவிட்டாள்.சிவானி விளையாடிக் கொண்டிருந்தாள்.
பரத்தும் சாருவும் மட்டும் தான் ஹாலில் இருந்தனர்.


யாருமில்லா நேரம் பார்த்து சாரு பரத்திடம் பேசத் தொடங்கினாள்.
அண்ணா! தப்பா எடுத்துக்காட்டி நான் உங்கக்கிட்ட ஒன்னு கேட்கலாமா? என்று சாரு கேட்டதும், நீயும் என் தங்கச்சி மாதிரி தான்ம்மா.எதுனாலும் தாரளமாக கேளும்மா என்று பரத் கூறினான்.


அண்ணா! உங்க குடும்ப விஷயத்துல தலையிடுறேனு தப்பா நினைக்காதீங்க.
பானு வீட்ல நடந்த எல்லாத்தையும் ஏங்கிட்ட சொன்னாள்.


முப்பதிரெண்டு வருஷமா உங்களைப் பார்த்து பார்த்து பெத்து வளர்த்து ஆளாக்கிய உங்க அப்பா அம்மாவோட குணமும் அவுங்களோட எல்லா அருமை பெருமை நல்லா தெரிஞ்ச நீங்களே! குடும்பத்தில் ஒரு சின்ன பிரச்சனை வந்ததும் அவுங்கள பத்தி சரியா புருஞ்சுக்காத போது, உங்களுக்கு கல்யாணமாகி நாலு வருஷத்தும்தான் ஆகுது.அதுக்குள்ள பார்கவி அண்ணிதான் யாரையும் சரியா புருஞ்சுக்கல, எல்லா பிரச்சனைக்கு அவுங்க தான் காரணம்னு நீங்க எப்படினா சொல்லலாம்?


நல்லா யோசிச்சு பாருங்கனா! மத்தவுங்கள குறை சொல்லுறதுக்கு முன்னாடி நம்ம சரியா நடந்துக்கிட்டோமானு யோசிச்சு பார்த்தால் பல குடும்பங்களில் இந்த மாதிரி பிரச்சனையே வர்றாது.


என்னை பொறுத்தவரை நம்முடைய சிரிப்புக்கும் அழுகைக்கும் நாம் மட்டும் தான் மூலக்காரணம்.நம் எண்ணங்கள் சரியாக இருந்தால் நம்முடைய வாழ்க்கையும் சரியாக அமையும் என்று கூறினாள் சாரு.


நான் பேசுனதுல ஏதாவது தப்பு இருந்தாலோ, நீங்க சங்கடப்படுவது மாதிரி நான் பேசியிருந்தாலோ என்னை மன்னிச்சிருங்கனா.


வயசுக்கு மீறி அட்வைஸ் பண்ணுறேனு தப்பா நினைக்க வேண்டாம்னா.எனக்கு உங்கக்கிட்ட சொல்லனும் தோணுச்சுனா என்று சாரு கூறியதும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் பரத்.


சாரு பேசி முடித்ததும் பானுவும் ப்ளவுஸை எடுத்து வந்து சாருவிடம் கொடுத்தாள்.பங்கஜம் அம்மாவும் காபியும் ஸ்நாக்ஸும் எடுத்து வந்து சாருவிடம் கொடுத்தார்.


காபி குடித்ததும் சரிம்மா. எனக்கு நேரமாச்சு! நான் கிளம்புறேன் என்று கூறினாள் சாரு.


கொஞ்சம் வெயிட் பண்ணு சாரு.நான் ஐந்து நிமிஷத்தில் கிளம்பி வர்றேன்.உன்னை உங்க வீட்டுல ட்ராப் பண்ணுறேன் என்று கூறினாள் பானு.


அதெல்லாம் வேண்டாம் பானு! நான் ஆட்டோ பிடிச்சு போயிக்கிறேன் என்று கூறிவிட்டு வீட்டிற்கு கிளம்பிச் சென்றாள் சாரு.


சாரு பேசியதைக் கேட்டு பரத்தின் மனதில் மாற்றம் வந்ததா? பார்கவியை மன்னித்து ஏற்று கொள்வானா பரத்? என்று அடுத்து வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்...

- தொடரும் -

* * * * * * * * * * * * * *

இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
நல்ல கதாபாத்திரங்களுடன் நெஞ்சைத்தொட்டுச் செல்கிறது கதை. விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை. அருமைம்மா
 

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
நல்ல கதாபாத்திரங்களுடன் நெஞ்சைத்தொட்டுச் செல்கிறது கதை. விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை. அருமைம்மா
தங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி அம்மா...🙏😍
 

vaishnaviselva@

Well-known member
Messages
312
Reaction score
248
Points
63
sandru wish pannitaanee semma :love: :love: :love: :love: :love:semma ya poguthu ka ..........very interesting saaru so spr paanu and school students wish panna tamil song so spr very nice🥰🥰🥰🤩🤩🤩🤩...........ippala athigama tamil la wish pandrathu illa sandru wish pannathu semma:love::love::love:................
 

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
sandru wish pannitaanee semma :love: :love: :love: :love: :love:semma ya poguthu ka ..........very interesting saaru so spr paanu and school students wish panna tamil song so spr very nice🥰🥰🥰🤩🤩🤩🤩...........ippala athigama tamil la wish pandrathu illa sandru wish pannathu semma:love::love::love:................
Thank you so much da...unka commentsah pathathum enaku romba santhosam dear😍🙏🙏🙏🙏
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
சந்துரு எதனால பிடிக்கல சொல்றான். சாருவோட எதிர்பார்ப்பு என்னாகும் 🙄🙄 இன்ட்ரெஸ்டிங் சகோ 😍
 

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
சந்துரு எதனால பிடிக்கல சொல்றான். சாருவோட எதிர்பார்ப்பு என்னாகும் 🙄🙄 இன்ட்ரெஸ்டிங் சகோ 😍
மிக்க நன்றி சகோ🙏😍
 

New Threads

Top Bottom