Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

தலைப்பின் விளக்கம்:

குழந்தைகள் விளையாடும் கலைடாஸ்கோப்புகளில் உடைந்த வளையல்கள் கண்ணாடிகளின் பன்முக எதிரொளிப்பில் ஒரு அழகான கோலத்தை உருவாக்கும். அதன் ஒவ்வொரு திருப்பத்திலும் வெவ்வேறு வளையல்கள் இணைந்து புதுவித கோலத்தை கட்டமைக்கும்.

காதலும் அதேபோல் தான். மனிதர்கள் உடைந்த வளையல்கள் என்றால் காலமும், சூழலும் கண்ணாடிகள்.

இக்கதைக்கு இத்தலைப்பு பொருத்தமென்று தான் எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கெப்படி ப்ரெண்ட்ஸ்?
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
நாளை இறுதி அத்தியாயம் பதிவிடப்படும் ப்ரெண்ட்ஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
சென்ற அத்தியாயத்திற்கு ஃபேஸ்புக்கில் தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ்.
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
உங்களுக்கான இறுதி அத்தியாயம் இதோ...
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

எழுதியவர்: ஷிவானி செல்வம்


இறுதி அத்தியாயம்


இரண்டு வருடங்களுக்குப் பிறகு…


குழந்தை வளர்ப்பினால் கடும் மனஉளைச்சலில் இருந்த அனன்யாவை அழைத்துக்கொண்டு கொடைக்கானல் வந்திருந்தான் உதய்கிருஷ்ணா. அவனுக்கு ஒரு குடிலை காண்பிப்பதாக கூக்கால் அழைத்து வந்திருந்தாள் அவள்.

ஆம், பள்ளத்தாக்கையொட்டிய அதே குடிலுக்கு தான். உதய்கிருஷ்ணா அங்கு தரையில் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருக்க, அவனின் முதலிரண்டு சட்டைப்பொத்தான்களை கழற்றி மார்பில் முகம் புதைத்திருந்தவள் மெதுவாக தன் மனதைத் திறந்தாள்.

“உதய் நான் இப்ப சொல்லப்போற விசயத்த‌க் கேட்டு நீங்க என்ன வெறுக்கக்கூட செய்யலாம். ஆனா, அத மறச்சி வைக்க முடியாம தான் உங்கக்கிட்ட கொட்றேன்.”

“என்ன பீடிகையெல்லாம் பலமா இருக்கு.” அவனின் விரல்கள் ஹூடி அணிந்திருந்தவளின் இடையை வருடிக் கொண்டிருந்தன.

அவர்களின் ஒரு வயதுக் குழந்தை கட்டிலில் லேசாக புரண்டு சிணுங்கிவிட்டு மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தது.

“உதய் அதுவந்து… நான்… என் அம்மா எறந்த சமயத்துல ஒரு மூனு மாசம் மனநெல சரியில்லாம மென்டல்ஹெல்த் ஹாஸ்பிடல்ல இருந்தேன்.”

“ச்சே! இதுக்கு தானா இந்த அக்கப்போரு? பழசையெல்லாம் மறந்துருனு சொன்னா நீ கேக்கமாட்டியா? உன்ன எப்படி மறக்க வைக்கிறது எனக்கு தெரியும்.” என்று அதட்டலாக ஆரம்பித்து கிசுகிசுப்பாக முடிக்க, அவளின் கன்னங்கள் ரூஜ் பூசின.

அந்த கடுமையான குளிரில் தாய்மையில் மிளிர்ந்தவளின் அபரிமிதமான அழகு அவனை கிறங்கடித்தது.‌ இருப்பினும் தங்களின் தங்கும்விடுதிக்குச் சென்று கச்சேரியை வைத்துக்கொள்ளலாமென மென்மையாக அவளின் நெற்றியில் தனது இதழ்களை ஒற்றியெடுத்தான்.

புகைமூட்டமான அந்த பகற்பொழுதில் உதய்கிருஷ்ணாவின் கைகளுக்குள் அடங்கியிருப்பது அவளுக்கு அவ்வளவு நிம்மதியைத் தந்தது.

அதேசமயம் பானுமதி, ரஞ்சனி, வேணி என்று மூவருமாகச் சேர்ந்து கோவாவிற்கு சுற்றுலா‌ச் சென்றிருந்தார்கள்.

கடற்கரையில் உடலில் சன் ஸ்க்ரீன் பூசிக்கொண்டு டூ பீஸ் உடைகளோடு வேணி குடைக்குக் கீழ் படுத்துக் கிடக்க, அவரின் பக்கத்தில் கெண்டைக்கால் வரையிலான கவுன் அணிந்திருந்த பானுமதியும், ரஞ்சனியும் ப்ரெட்டில் சீஸ் தடவி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அன்றைய இரவில் அவர்கள் கேம்ப் ஃபயர் சென்று காக்டைல் அருந்தி அடித்தக் கூத்திருக்கிறதே, பிள்ளைகள் பார்த்திருந்தால் விக்கியைத் தவிர்த்து அனைவரும் மயக்கம் போட்டு விழுந்திருப்பார்கள்.

அந்நேரம் பார்த்து செல்ல மகள் கவிலயா தன்‌ தாய்க்கு அழைப்பு விடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டாள்.

அவர் ஏற்றதுமே, “அம்மா நீங்க பண்றது‌ கொஞ்சம் கூட சரியில்லம்மா” என்று முதல் வாக்கியத்திலேயே பட்டாசாய் வெடித்தாள்.

அவர் தன்னைச் சுற்றி ஆராய்ந்துவிட்டு, “நீ என்ன சொல்றனே எனக்குப் புரியல லயா?” என்றார்.

“எனக்கு முப்பது வயசு ஆகுதே, ஒரு கல்யாணத்த பண்ணி வைப்போமேனு கொஞ்சமாவது உங்களுக்கு அக்கற இருக்காம்மா? இதே வயசுல அக்கா இருந்தப்ப மட்டும் அவளுக்கு எப்ப கல்யாணம் நடக்கும்னு கோவில் கோவிலாப்போய் வேண்டுனீங்க. இப்ப எனக்கு மட்டும் ஓரவஞ்சனையா கோவா‌ போயிருக்கீங்க. இது கொஞ்சம் கூட சரியில்லம்மா.

இந்தக்கவின் நான் வீடியோ அப்லோட் பண்ணப்ப மட்டும் சோசியல்‌ மீடியா ஒரு பொதகுழினு கிளாஸ் எடுத்தான். இப்ப அவன் பொண்டாட்டிக்கூட சேர்ந்து கபுள் விலாக் போட்டு எஞ்சாய் பண்றான்.” என்று வயிற்றெரிச்சலில் பொருமினாள்.

“இங்கப்பாரு லயா! பிரியங்கா‌ சோப்ரா, நயன்தாரா‌ எல்லாம் உனக்கு உதாரணப் புருஷிகள். ஒருப்பொண்ணுக்கு கல்யாணம், புருசன், கொழந்தைக மட்டுமே வாழ்க்கையில்ல. அதெல்லாம் லேட்டா கூட வரும். இப்ப உங்கிட்ட இருக்கு பாரு எளம? அதான் பொக்கிஷம். என் வயசுல உங்கிட்ட அது இருக்காது. இருக்கும்போதே அத வச்சு உருப்படியா என்ன செய்யமுடியுமோ செய்.” எனவும்,

“அதத்தான் நானும் சொல்றேன். எளமப்போனா வராது. நீங்க ஆலியாபட்ட எனக்கு உதாரணப்புருஷியா பாருங்க. சீக்கிரமே எனக்கொரு கல்யாணம் பண்ணி வைங்கம்மா. இத நான் நீங்க‌ என் பக்கத்துல இருக்கும்போதே சொல்லிருப்பேன். ஆனா, என்ன ரொம்ப அல்பமா பாப்பீங்களோனு தான் இப்ப சொல்றேன்.

எனக்கு குயிலி, தில்லையாடி வள்ளியம்ம, பட்டுக்கோட்ட கல்யாண சுந்தரம், விவேகானந்தர் மாதிரியெல்லாம் ஆக வேணாம்மா. எனக்கு ஒரு அக்மார்க் இல்லத்தரசியா என் புருஷன் புள்ளைகளோட சேர்ந்து விலாக் போட்டு சந்தோசமா இருக்கனும். அதான் என் ஆம்பிஷன். ஒழுங்கு மரியாதையா நீங்களே எனக்கொரு மாப்பிளையப் பாருங்க. இல்ல நண்பன் படத்துல வர்ற இலியானா மாதிரி எனக்கு பிடிச்சவனத் தேடி நானே ஓடிப்போயிருவேன்.” என்று மிரட்டவும்,

“ஓடிப்போ! சந்தோசமாயிரு!” என்று அழைப்பைத் துண்டித்தவர் தனது தோழிகளுடன் அதகளம் செய்தார்.

மறுநாள் காலையில் டிண்டர் செயலியில் தனக்கு பிடித்தமாதிரி ஒருவனை தேர்வு செய்துவிட்டதாக கவிலயா‌ வாட்சப்பில் தகவல் அனுப்ப, காளியாடி விட்டார்.

வீட்டிற்கு வந்ததும் அவளுக்கு விளக்குமாற்றில் பத்து அடி விழுமென அவர் எச்சரிக்க, அமிகா கவிலயாவின் அலைபேசியைப் பிடிங்கி, “பாட்டி எப்ப வருவீங்க? நீங்க வரும்போது எனக்கு..” என்று ஆரம்பித்தவள் ஒரு இருபது பொருள்களின் பெயரை பட்டியலிட்டு வாங்கிவரச் சொன்னாள்.

அவர் ஒப்புதல் அளித்ததும் முகம்கொள்ளா புன்னகையுடன் மீண்டும் அலைபேசியை கவிலயாவிடம் தந்தாள். மேலும், பல மண்டகப்படிகளைப் பெற்றுவிட்டு அலைபேசியை அணைத்த கவிலயாவுக்கோ தனது அன்னையின் ரெமோ, அம்பி மாற்றத்துக்கான காரணம் சுத்தமாக விளங்கவில்லை.

இன்னொருபக்கம் விக்கியும், உத்ராவும் இளம்பெண் ஒருத்தியை‌ பின்தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்பெண் தெப்பக்குளத்திண்டில் தனக்காக காத்திருந்த ஆண்மகன் ஒருவனைப் பார்த்ததும் தீவிர சண்டையில் இறங்கினாள்.​
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
அதேத்திண்டில்‌ அவர்களுக்கு சற்றுத்தள்ளி அவித்த வேர்க்கடலையை கொரித்துக் கொண்டிருந்தார்கள் விக்கியும், உத்ராவும்.

விக்கி அவளிடம் ஒரு கடலைப்பருப்பை எடுத்துக்காட்டியவன், “உதி இது என்ன கலர்ல இருக்குன்னு பாரு. இது மாதிரி தான் எனக்கும் வேணும். உன்கிட்டயும் இருக்கே காஞ்சுப்போன ப்ளூபெர்ரி மாதிரி” என்று அவளை சீண்டினான்.

“வீட்டுக்கு வா உனக்கு கடலபருப்பு தோள எப்படி பொடைக்கறதுனு சொல்லித்தாரேன்.” என்றதும் சுதாரித்தவன்,

“உஷ்! அவங்க பேசுறதக் கவனி உதி” என்றான்.

இறுதியாக தனது கோபத்தை விட்டு தன் காதலனின் கைப்பற்றி கெஞ்சிக்கொண்டிருந்தாள் அப்பெண்.

“முகில் ப்ளீஸ் என்ன புரிஞ்சிக்கோங்க. நான் எனக்கு பிடிச்சி ஒன்னும் இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லல. என் அப்பாவுக்கு பயந்து தான் ஓகே சொன்னேன். இப்பக்கூட நீ‌ங்க என்ன உங்கக்கூட வரச்சொன்னா நான் போட்டுருக்க‌ ட்ரெஸோட ஓடிவரத் தயார். உங்க முடிவு என்னனு சொல்லுங்க” என்று தீர்க்கமாகச் சொன்னாள்.

அவன் அவளை துன்புறுத்தும் நோக்கில் பேசினான்.

“இல்ல எனக்கு உம்மேல நம்பிக்கையில்ல பவி. நீ ஒரு பொய்காரி.‌ இப்ப நான் ஏதாவது பிரச்சன பண்ணிருவேனோனு பயந்து தான் என்ன சமாளிக்க இந்த மாதிரியெல்லாம் பேசுற. இவ்வளவு நடந்த பின்னாடியும் நான் உன்னவிட்டு வெலகலனா நீ கேரளால நடந்த மாதிரி எனக்கும் ஜீஸ்ல வெஷம் கலந்து குடுக்கக்கூட தயங்கமாட்ட.

உன்ன உருகி உருகி காதலிச்ச‌ நானே இப்ப சொல்றேன் பவி. நான்‌ உன்ன விட்டு வெலகுறேன். இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கெடையாது.” என்றதும், கண்கள் குளமாகின அப்பெண்ணுக்கு.

அச்சமயம், “தம்பி‌ பூ வாங்கிக் குடுப்பா தங்கச்சிக்கு” என்றார் ஒல்லியான கிளியோபாட்ரா ஒருவர்.

அவரிடம்,‌ “ஆமா இப்ப இது ஒன்னு தான் கொறச்சல்” என்று எரிந்து விழுந்தவன் அருகில் நிறுத்தியிருந்த தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுவிட்டான்.

அப்பெண் அழுவதைப் பார்த்து, “எதுக்கு தங்கச்சி அழுவுற? தம்பி எதுவும் திட்டிருச்சா?” எனவும்,

“ஒன்னுமில்லக்கா” என்று மேலும் தேம்பினாள்.

அவர், “அழாத தங்கச்சி” என்று சொல்லிக்கொண்டே விக்கியிடம் வந்தார்.

“அண்ணே! அக்காவுக்கு பூ வாங்கி குடுண்ணே” என்று பூவை முழங்கையில் அளந்தார்.

தாங்கள் கொடு என்பதற்கு முன்பாகவே பூவை அளப்பவரை வேடிக்கையாகப் பார்த்தாள் உத்ரா.

விக்கி தனது சட்டைப்பையிலிருந்து நூறுரூபாய் தாளை எடுத்துத் தர, பூவையும் மீதச்சில்லறையையும் கொடுத்துவிட்டு அடுத்த இணையிடம் தாவினார்.

உத்ரா அவனின் கையிலிருந்த பூவை வாங்கி முகர்ந்துப் பார்த்தவள் வாசனையில் கிறங்கினாள்.

“ம்ம்ம்ம்… மோந்ததுமே செம ஃபீலாகுதுடா விக்கி” என்றாள்.

அவன், “அய்யயோ! ராஷ்மிகா மந்தனா மாதிரி ‘வந்துச்சே ஃபீலிங்ஸு வந்துச்சே ஃபீலிங்ஸு’னு பப்ளிக் ப்ளேஸ்ல டான்ஸாடிறாத உதி‌. அப்பறம் இங்க சுத்திக்கிட்டிருக்க பிச்சக்காரங்கலாம் நமக்கு கெடைக்க வேண்டியத இன்னொருத்தி தட்டிட்டு போறாளேனு பொறாமைல சண்டைக்கு வந்துருவாங்க.” எனவும், அவனின் தோளில் குத்தினாள்.

அந்தப்பூவையும் தனது தலையிலிருந்த ஹேர்பின்னையும் எடுத்து அவனிடம் கொடுத்தவள், “எனக்கு இந்தப் பூவ வச்சிவிடு” என்று திரும்பி உட்கார்ந்துகொண்டாள்.

விக்கி அதை சூட்டிவிடத்தெரியாமல் விழித்தான்.

அவன் கையிலிருந்ததை பிடுங்கி தானே சூடிக்கொண்டவள், “மத்ததுல எல்லாம் சார் எக்ஸ்பெர்ட்டு! ஆனா பூக்குத்தி விடுறதுல மட்டும் ஜீரோ.” என்று அலுத்துக்கொண்டாள்.

“ஆமா தெனம்‌‌ நாலுபேருக்கு நான் குத்தி விடுறேன் பாரு.. பூவ” என்றதும், வாக்குவாதத்தில் ஈடுபட்டாள்.

அப்போது அப்பெண் அவள்போக்கில் அவர்களை கடந்து செல்ல, சுதாரித்து உடனே ஓடிப்போய் வழியை மறைத்தான் விக்கி.

தனக்கு யாரென்று தெரியாத மொட்டைத்தலையன் ஒருவன் திடீரென தனது வழியை மறைத்ததும் பயந்துபோய் பார்த்தாள் அப்பெண்.

“பயப்படாதம்மா நாங்க ரெண்டு பேரும் டிடெக்டிவ்ஸ். உன் வருங்கால மாமனார் வீட்டுல இருந்து உன் கேரக்டரப் பத்தி தெரிஞ்சிக்க எங்கள அப்பாயிண்ட் பண்ணிருக்காங்க.” என்றதும், மிரண்டு பின் வாங்கினாள்.

“நீ இப்ப பேசிக்கிட்டிருந்தியே ஒருத்தன்? அவனுக்கு ஒரு அத்தப்பொண்ணு சொத்துப்பத்தோட ரெடியா இருக்கும்மா. உனக்கு நல்ல நேரம், வேற ஒரு மாப்பிள கெடச்சிட்டான். இல்ல இந்த முகிலே உனக்கு ஜூஸ்ல வெசம் கலந்து குடுத்துருப்பாம்மா. நீ எங்கள நம்பலைல? உதி அவனும் அவன் அத்தப்பொண்ணும் எடுத்துக்கிட்ட போட்டோஸ், அப்பறம் அவனோட கால் ரெக்கார்டிங்ஸ் எல்லாத்தையும் பவிக்கு போட்டுக்காட்டு” எனவும், உத்ரா அவன் சொல்லுக்கு மரியாதை செய்தாள்.

அனைத்தையும் பார்த்துவிட்டு அந்தப்பெண் விக்கியை கையெடுத்துக் கும்பிட்டாள்.

“என் வாழ்க்கையையே காப்பாத்திக் குடுத்துட்டீங்க சார். உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்றதுனே தெரியல. ஆனா இப்டியொருத்தன காதலிச்ச அசிங்கத்த மட்டும் எனக்கு பாத்துருக்க மாப்பிள வீட்டுக்காரங்கக்கிட்ட சொல்லிறாதீங்க சார்” என்று வேண்டினாள்.

“அதெப்டிமா? அப்டி சொல்றதா இருந்தா நான் உன்கிட்ட மொத இந்த விசயத்த சொல்லிருக்கவே மாட்டேன்” என்றதும், புதிதாகப் பிறந்த தெளிவில் பிரகாசமானது அவள் முகம். ஆனந்தக் கண்ணீரோடு விடைபெற்றாள்.

உத்ராவோ அவனை கொலைவெறியுடன் பார்த்தாள்.

“பைத்தியக்காரா! அந்தப் பொண்ணுக்கிட்டப்போய் மாப்பிள வீட்டுக்காரங்கக்கிட்ட எதும் சொல்ல மாட்டோம்னு வாக்குறுதி குடுக்குறியே; எப்பவாவது ஒரு நாள்‌ அவ மாமனார் வீட்டுக்காரங்களுக்கு உண்ம தெரிஞ்சு ஆஃபிஸுக்கு வந்து சட்டையப் பிடிச்சாங்கன்னா என்னடா பண்றது? நீ ஹாயா உன் ஐ.டி கம்பெனிலப் போய் உக்கார்ந்துக்கிருவ. நானில்லடா மாட்டுவேன்? நீ என் ஆஃபிஸுக்கு வராதனாலும் கேக்குறதில்ல. சாயங்காலமானா கெஞ்சிக்கூத்தாடி என் கூட இப்படி நகர்வலம் வந்துடுற. மகேஷ வச்சு உன்ன ஆஃபிஸுல பிடிச்சி வைக்கலாம்னா அவனையும் திருமங்கல பிராஞ்சுக்கு அனுப்பி வச்சிட்ட. உன்ன என்ன தான்டா பண்றது?” எனவும்,

அயர்ச்சியாகப் பேசுபவளின் தோள்களைச் சுற்றி கரத்தைப் போட்டவன், “என்ன என்ன பண்றதுனு எனக்கு தெரியாது உதி. ஆனா உன்ன என்ன பண்ணனும்னு மட்டும் எனக்கு நல்லாத் தெரியும். அந்த ஒரு மாசக்கெடு முடிஞ்சதும் நான் கத்துக்குடுத்த வித்தையெல்லாம் ஞாபகமிருக்கா?” என்றதும், அவள் முகம் செங்கொழுந்தானது.

“அந்த மாதிரிலாம் நீ பண்ணச் சொல்லுவனு நான் நெனச்சிக்கூடப் பாக்கல விக்கி.” என்று சிணுங்கினாள்.

“நீ எஞ்சாய் பண்ணியா இல்லயா?” என்றதும், அவளின் தலை அனைத்து திசைகளிலும் ஆடியது.


சுபம்​
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
நாவலின் இறுதி வரை என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ். என்னையே அறியாமல் தைப்பூசத்தில் துவங்கி மகளிர் தினத்தில் நாவலை நிறைவு செய்திருக்கிறேன்.

பெண்களாகிய நாம் எப்போதும் நமது உடல்நலத்தில், மனநலத்தில் அக்கறைகொள்ள வேண்டும் ப்ரெண்ட்ஸ். நமக்கான 'மீ டைம்'முக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நமது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர்களை மட்டும் நம்மைச் சுற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆண்களுக்கான பிரச்சனையெல்லாம் வெளியிலிருந்து தான். நமக்கு தான் மாதா மாதம் ஹார்மோன் இம்பேலன்ஸுகளால் உடலிலிருந்தே பல பிரச்சினை.

யாரும் வீட்டிலில்லையா நமக்கு பிடித்த உணவுவகைகளை சமைத்து சாப்பிடவேண்டும். தயங்காமல் நம்மால் முடியாத விசயங்களுக்கு நோ சொல்லிவிட வேண்டும். அடிக்கடி கண்ணாடி பார்த்து நம்மை நாமே பாராட்டிக்கொள்ள வேண்டும். வீட்டில் கிடப்பதால் சோம்பிக்கிடக்காமல் நம்மை நாமே அலங்கரித்துக்கொண்டு செல்ஃபி எடுத்து லயிக்கலாம். இவையெல்லாம் என்னை பூஸ்ட்டப் பண்ணிக்கொள்ள நான் பின்பற்றுபவை ப்ரெண்ட்ஸ்.

உங்களுக்கு ஒத்து வருமானால் நீங்களும் பின்பற்றலாம்.

நான் முதலில் இந்நாவலுக்கு மூன்று அம்மாக்கள் என்று தான் தலைப்பு வைக்கலாம் என நினைத்தேன். வேணி, கங்கா, பானுமதி இம்மூவரைப் பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று மறக்காமல் கருத்துப்பெட்டியில் சொல்லுங்கள் ப்ரெண்ட்ஸ்.

எனக்கு பிளாக், கூகுள் டாக் போஸ்ட்டில் எல்லாம் அவ்வளவு நம்பிக்கை கிடையாது. சகாப்தம் என் மனதிற்கு நெருக்கமான தளங்களில் ஒன்று. இங்கு நான் எழுதக் கேட்டதும் திரியமைத்துக்கொடுத்த நித்யா கார்த்திகன் அக்காவிற்கு என் அன்புகள்❤️

மீண்டும் ஒரு புதிய கதைக்களத்துடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் ஷிவானி செல்வம்❤️

கருத்துத்திரி,

கண்மணி‌நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலைப் பாத்திருந்தேன்!
 
Status
Not open for further replies.

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom