- Messages
- 845
- Reaction score
- 1,132
- Points
- 93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 35
விக்கி படுத்ததும் குறட்டைவிட அதிர்ச்சியாகப் பார்த்தாள் உத்ரா. இவ்வளவு நாள் தனக்குப் பின்பு தான் அவன் தூங்குவான் என்பதால் இந்த குறட்டை விசயம் அவளுக்கு தெரியாமல் போயிருந்தது. இன்றோ அது தனக்கு தெரிந்ததும் விடுவதாய் இல்லை.
உடனே தனது அலைபேசியில் காணொளியாக பதிவு செய்தாள். எப்போதும் கவிலயா செய்யும் வேலையை இன்று அவள் கையிலெடுத்தாள்.
“ஏன்டா இவ்வளவு நாளா தூக்கத்துல என் கால் லேசா உன் மேல பட்டதுக்கே என்ன குதி குதிச்ச? இனி நீ எப்படி என்ன கேலி பண்றனு பாக்குறேன்டா” என்று குதூகலித்தாள்.
வெகுநேரம் தூக்கம் வராமல் இருக்கவும் புரண்டு புரண்டு படுத்தவள் அலைபேசியில் ஃபேஸ்புக் சென்று பார்க்க, அவளின் நட்புப் பட்டியலில் இருந்த விக்கி தனது அன்னை தந்தையரின் பழைய திருமணப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தான். தனது தந்தையை தான் மிஸ் செய்வதாகவும் அந்த வாழ்த்தில் குறிப்பிட்டிருந்தான்.
அவன் அந்தப் பதிவில் வாசனையும், வேணியையும் டேக் செய்திருக்க, வாசனின் பெயரைத் தொட்டு அவரின் முகப்புப்பக்கத்திற்கு சென்றாள்.
அவரின் இறப்பின்போது இரங்கல் நல்கிய பலரும் அவரின் அருமைபெருமைகளை பதிவுகளாயிட்டு அவரை டேக் செய்திருந்தார்கள்.
அவற்றை வாசித்துக்கொண்டிருந்த உத்ராவுக்கு திடீரென ஒருப்பொறி தட்டியது. அனன்யாவின் அன்னை ஒருவேளை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருந்திருந்தால் அவர் ஆசிரியை என்பதால் அவருக்கும் அவரின் முன்னாள், இந்நாள் மாணவர்கள் இரங்கல் பதிவு எழுதியிருப்பார்கள் தானே என்ற எண்ணம் எழுந்ததும், முதலில் அனன்யாவின் அலைபேசி எண்ணை வைத்து ‘பீப்பிள் யூ மே க்னோவ்’வில் அவளின் முகப்புப்பக்கத்தை கண்டுபிடித்தாள்.
அவளை வால் பிடித்து சென்றதில் கங்காவின் முகப்புப்பக்கம் சிக்கியது. தங்கள் தொழில்நுட்ப வல்லுநரை தொடர்புகொண்டு அவரின் உதவியோடு பூட்டுப் போட்டிருந்த அந்தப் பக்கத்திற்குள் அவசரமாய் நுழைந்தாள்.
கடைசியாய் கங்காவுடன் வேலைப் பார்த்தவர்களும், அவரின் மாணவர்களில் சிலரும் அவருக்கு இரங்கல் பதிவிட்டிருந்தார்கள். அந்தப்பதிவுகளின் கருத்துப்பெட்டிகளில் அச்சமயம் ஊரிலில்லாத மாணவர்கள் சிலர் எப்படி அவர் இறந்தார் என அதிர்ச்சி தெரிவிக்க, அந்த அசம்பாவிதத்தை தங்களுக்கு தெரிந்த வகையில் விவரித்தார்கள் சிலர்.
அதை வாசித்ததும் உத்ரா சிலையானாள். அவள் என்னென்னவோ கற்பனை செய்திருக்க, நடந்ததென்னவோ வேறு.
இருப்பினும், அதை ஆதாரங்களுடன் அறிய முதலில் அவர் வேலைப் பார்த்த பள்ளியின் பெயரை கண்டுபிடித்தாள். அங்கு சென்று விசாரிப்பது இரண்டாவது வேலை தான். முதல் வேலையாக இருந்தது அவர் இறந்த தேதியை வைத்து அதற்கு மறுநாள் வெளியான செய்தித்தாள்களில் எல்லாம் அவர் பற்றிய செய்தியைத் தேடுவது.
மறுநாள் காலை எழுந்ததுமே உத்ரா கங்கா தொடர்பான விவரங்களை சேகரிக்க உற்சாகமாக டிடெக்டிவ் ஏஜென்சிக்கு கிளம்ப, படுக்கையில் தனது நாயை கொஞ்சிக் கொண்டிருந்தான் விக்கி.
“விக்கி இப்ப ஏன் நீ இப்டி கெளம்பாமக் கொள்ளாமப் படுத்திருக்க? மொதல்ல அந்த நாயக் கொண்டுபோய் கட்டி வச்சிட்டு வாடா. நான் தூங்குற எடத்துல இது என்ன பகுமானமா படுத்திருக்கு பாரு.” என்று அதட்டினாள்.
“சும்மா இரு உதி. என் பேச்சக் கேட்டு தான் என் தம்பி அமைதியா படுத்திருக்கான். இல்ல உன் மேல பாய்ஞ்சிருவான்.”
“உன்ன மாதிரியா விக்கி?” என்றவள் கண்ணடிக்க,
“நீ ரொம்ப மாறிட்ட உதி. தப்பு தப்பா பேசுற.” என்று கன்னங்களில் போட்டுக்கொண்டான்.
“அடேங்கப்பா! அல்வாக்கடக்காரனுக்கு ஜீனின்னா அலர்ஜியாம். நம்புற மாதிரியா இருக்கு? ச்சை! அத உன் மூஞ்சில நக்கச் சொல்லாதடா. இனி நான் எப்படிடா உன் மூஞ்சில முத்தம் குடுப்பேன்?”
“நீ செய்ய வேண்டியத தான் என் தம்பி செய்யுறான். நீ ஒழுங்கு மரியாதையா ஆஃபிஸுக்கு கெளம்புற வழியப் பாரு.”
“அப்போ நீ இன்னைக்கு என் கூட வர்றதா இல்லயா?”
“ஆமா, எனக்கும் வெக்கம், மானம், சூடு, சொரனையெல்லாம் இருக்கு”
“ஆமா! ஆமா! நேத்து ராத்திரி நீ என்ன இழுத்த வேகத்துல தான் எல்லாம் தெரிஞ்சதே. தயவுசெஞ்சு நம்புற மாதிரி ஏதாவது சொல்லு?”
“இன்னைக்கு நான் விக்டரி டெக் சொலுஷனுக்கு போகலாம்னு இருக்கேன்.”
“இப்ப தான சொன்னேன்? நம்புற மாதிரி ஏதாவது சொல்லுனு?”
“நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம்”
“விக்கி உண்மையாவா சொல்ற? அட! அட! என் புருஷனுக்கு ரோசத்தப் பாரேன். நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக உருப்படலாம்னு முடிவு பண்ணிட்டான்.”
“போறியா? இல்ல என் ஜான்சீனாவ விட்டு உன் வாயில கடிக்க சொல்லவா?”
“நீ கடிக்கிற கடிக்கு ஜான்சீனாவே மேல்டா”
“அப்போ இனி நம்ம ரெண்டு பேருக்கு நடுவுலயும் ஜான்சீனாவையே படுக்க வச்சிடுறேன். அப்பறம் இதுல இன்னொரு ப்ளஸ் பாயிண்ட் என்ன தெரியுமா? உன் ஒதையில இருந்தும் நான் தப்பிக்கலாம்.”
“ஓஹோ! நீங்க மட்டும் உங்க இரவுகள தியாகம் பண்ணல தம்பி. நாங்களும் தான். இத மொதல்ல பாரு” என்று அவன் குறட்டை விடும் காணொளியைக் காண்பித்தாள்.
அதைப் பார்த்ததும் அவன் அதை பிடுங்குவதற்காக, “ஜான்சீனா அட்டாக் ஹெர்!” என்று உத்தரவிட, பாய்ந்து மின்தூக்கிக்குள் நுழைந்தாள் உத்ரா.
அவளின் முகத்தில் விக்கியின் மாற்றத்தை நினைத்து சந்தோஷக்கீற்று. மாலை அதை அவன் சுத்தமாக துடைத்தெறியப்போவதை அவள் அறியவில்லை.
தங்களின் அலுவலகத்திற்கு வந்ததும் ரகசிய உளவாளி ஒருவரின் மூலமாக அந்த குறிபிட்டத் தேதியுள்ள செய்தித்தாள்களையெல்லாம் வரவழைத்தவள் அந்தப் பள்ளிக்குச் சென்று கங்காவைப் பற்றியும் விசாரிக்கச் சொன்னாள்.
விசாரித்துக் கிடைத்த தகவலில் ஃபேஸ்புக்கில் அந்த முன்னாள் மாணவர்கள் சொன்னதனைத்தும் உண்மை தான் என புலனாகவும், கங்காவுக்காக இரக்கப்பட்டாள்.
உண்மையில் அந்த தலைமையாசிரியர் தான் கங்காவை கொன்றிருப்பார் என்று தப்புக்கணக்கு போட்டாள் உத்ரா. ஆனால், அவரைக் கொன்றதோ அவர் ஒன்றரை வருடம் பாடம் கற்பித்த மாணவன் ஒருவன்.
விக்கி படுத்ததும் குறட்டைவிட அதிர்ச்சியாகப் பார்த்தாள் உத்ரா. இவ்வளவு நாள் தனக்குப் பின்பு தான் அவன் தூங்குவான் என்பதால் இந்த குறட்டை விசயம் அவளுக்கு தெரியாமல் போயிருந்தது. இன்றோ அது தனக்கு தெரிந்ததும் விடுவதாய் இல்லை.
உடனே தனது அலைபேசியில் காணொளியாக பதிவு செய்தாள். எப்போதும் கவிலயா செய்யும் வேலையை இன்று அவள் கையிலெடுத்தாள்.
“ஏன்டா இவ்வளவு நாளா தூக்கத்துல என் கால் லேசா உன் மேல பட்டதுக்கே என்ன குதி குதிச்ச? இனி நீ எப்படி என்ன கேலி பண்றனு பாக்குறேன்டா” என்று குதூகலித்தாள்.
வெகுநேரம் தூக்கம் வராமல் இருக்கவும் புரண்டு புரண்டு படுத்தவள் அலைபேசியில் ஃபேஸ்புக் சென்று பார்க்க, அவளின் நட்புப் பட்டியலில் இருந்த விக்கி தனது அன்னை தந்தையரின் பழைய திருமணப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தான். தனது தந்தையை தான் மிஸ் செய்வதாகவும் அந்த வாழ்த்தில் குறிப்பிட்டிருந்தான்.
அவன் அந்தப் பதிவில் வாசனையும், வேணியையும் டேக் செய்திருக்க, வாசனின் பெயரைத் தொட்டு அவரின் முகப்புப்பக்கத்திற்கு சென்றாள்.
அவரின் இறப்பின்போது இரங்கல் நல்கிய பலரும் அவரின் அருமைபெருமைகளை பதிவுகளாயிட்டு அவரை டேக் செய்திருந்தார்கள்.
அவற்றை வாசித்துக்கொண்டிருந்த உத்ராவுக்கு திடீரென ஒருப்பொறி தட்டியது. அனன்யாவின் அன்னை ஒருவேளை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருந்திருந்தால் அவர் ஆசிரியை என்பதால் அவருக்கும் அவரின் முன்னாள், இந்நாள் மாணவர்கள் இரங்கல் பதிவு எழுதியிருப்பார்கள் தானே என்ற எண்ணம் எழுந்ததும், முதலில் அனன்யாவின் அலைபேசி எண்ணை வைத்து ‘பீப்பிள் யூ மே க்னோவ்’வில் அவளின் முகப்புப்பக்கத்தை கண்டுபிடித்தாள்.
அவளை வால் பிடித்து சென்றதில் கங்காவின் முகப்புப்பக்கம் சிக்கியது. தங்கள் தொழில்நுட்ப வல்லுநரை தொடர்புகொண்டு அவரின் உதவியோடு பூட்டுப் போட்டிருந்த அந்தப் பக்கத்திற்குள் அவசரமாய் நுழைந்தாள்.
கடைசியாய் கங்காவுடன் வேலைப் பார்த்தவர்களும், அவரின் மாணவர்களில் சிலரும் அவருக்கு இரங்கல் பதிவிட்டிருந்தார்கள். அந்தப்பதிவுகளின் கருத்துப்பெட்டிகளில் அச்சமயம் ஊரிலில்லாத மாணவர்கள் சிலர் எப்படி அவர் இறந்தார் என அதிர்ச்சி தெரிவிக்க, அந்த அசம்பாவிதத்தை தங்களுக்கு தெரிந்த வகையில் விவரித்தார்கள் சிலர்.
அதை வாசித்ததும் உத்ரா சிலையானாள். அவள் என்னென்னவோ கற்பனை செய்திருக்க, நடந்ததென்னவோ வேறு.
இருப்பினும், அதை ஆதாரங்களுடன் அறிய முதலில் அவர் வேலைப் பார்த்த பள்ளியின் பெயரை கண்டுபிடித்தாள். அங்கு சென்று விசாரிப்பது இரண்டாவது வேலை தான். முதல் வேலையாக இருந்தது அவர் இறந்த தேதியை வைத்து அதற்கு மறுநாள் வெளியான செய்தித்தாள்களில் எல்லாம் அவர் பற்றிய செய்தியைத் தேடுவது.
மறுநாள் காலை எழுந்ததுமே உத்ரா கங்கா தொடர்பான விவரங்களை சேகரிக்க உற்சாகமாக டிடெக்டிவ் ஏஜென்சிக்கு கிளம்ப, படுக்கையில் தனது நாயை கொஞ்சிக் கொண்டிருந்தான் விக்கி.
“விக்கி இப்ப ஏன் நீ இப்டி கெளம்பாமக் கொள்ளாமப் படுத்திருக்க? மொதல்ல அந்த நாயக் கொண்டுபோய் கட்டி வச்சிட்டு வாடா. நான் தூங்குற எடத்துல இது என்ன பகுமானமா படுத்திருக்கு பாரு.” என்று அதட்டினாள்.
“சும்மா இரு உதி. என் பேச்சக் கேட்டு தான் என் தம்பி அமைதியா படுத்திருக்கான். இல்ல உன் மேல பாய்ஞ்சிருவான்.”
“உன்ன மாதிரியா விக்கி?” என்றவள் கண்ணடிக்க,
“நீ ரொம்ப மாறிட்ட உதி. தப்பு தப்பா பேசுற.” என்று கன்னங்களில் போட்டுக்கொண்டான்.
“அடேங்கப்பா! அல்வாக்கடக்காரனுக்கு ஜீனின்னா அலர்ஜியாம். நம்புற மாதிரியா இருக்கு? ச்சை! அத உன் மூஞ்சில நக்கச் சொல்லாதடா. இனி நான் எப்படிடா உன் மூஞ்சில முத்தம் குடுப்பேன்?”
“நீ செய்ய வேண்டியத தான் என் தம்பி செய்யுறான். நீ ஒழுங்கு மரியாதையா ஆஃபிஸுக்கு கெளம்புற வழியப் பாரு.”
“அப்போ நீ இன்னைக்கு என் கூட வர்றதா இல்லயா?”
“ஆமா, எனக்கும் வெக்கம், மானம், சூடு, சொரனையெல்லாம் இருக்கு”
“ஆமா! ஆமா! நேத்து ராத்திரி நீ என்ன இழுத்த வேகத்துல தான் எல்லாம் தெரிஞ்சதே. தயவுசெஞ்சு நம்புற மாதிரி ஏதாவது சொல்லு?”
“இன்னைக்கு நான் விக்டரி டெக் சொலுஷனுக்கு போகலாம்னு இருக்கேன்.”
“இப்ப தான சொன்னேன்? நம்புற மாதிரி ஏதாவது சொல்லுனு?”
“நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம்”
“விக்கி உண்மையாவா சொல்ற? அட! அட! என் புருஷனுக்கு ரோசத்தப் பாரேன். நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக உருப்படலாம்னு முடிவு பண்ணிட்டான்.”
“போறியா? இல்ல என் ஜான்சீனாவ விட்டு உன் வாயில கடிக்க சொல்லவா?”
“நீ கடிக்கிற கடிக்கு ஜான்சீனாவே மேல்டா”
“அப்போ இனி நம்ம ரெண்டு பேருக்கு நடுவுலயும் ஜான்சீனாவையே படுக்க வச்சிடுறேன். அப்பறம் இதுல இன்னொரு ப்ளஸ் பாயிண்ட் என்ன தெரியுமா? உன் ஒதையில இருந்தும் நான் தப்பிக்கலாம்.”
“ஓஹோ! நீங்க மட்டும் உங்க இரவுகள தியாகம் பண்ணல தம்பி. நாங்களும் தான். இத மொதல்ல பாரு” என்று அவன் குறட்டை விடும் காணொளியைக் காண்பித்தாள்.
அதைப் பார்த்ததும் அவன் அதை பிடுங்குவதற்காக, “ஜான்சீனா அட்டாக் ஹெர்!” என்று உத்தரவிட, பாய்ந்து மின்தூக்கிக்குள் நுழைந்தாள் உத்ரா.
அவளின் முகத்தில் விக்கியின் மாற்றத்தை நினைத்து சந்தோஷக்கீற்று. மாலை அதை அவன் சுத்தமாக துடைத்தெறியப்போவதை அவள் அறியவில்லை.
தங்களின் அலுவலகத்திற்கு வந்ததும் ரகசிய உளவாளி ஒருவரின் மூலமாக அந்த குறிபிட்டத் தேதியுள்ள செய்தித்தாள்களையெல்லாம் வரவழைத்தவள் அந்தப் பள்ளிக்குச் சென்று கங்காவைப் பற்றியும் விசாரிக்கச் சொன்னாள்.
விசாரித்துக் கிடைத்த தகவலில் ஃபேஸ்புக்கில் அந்த முன்னாள் மாணவர்கள் சொன்னதனைத்தும் உண்மை தான் என புலனாகவும், கங்காவுக்காக இரக்கப்பட்டாள்.
உண்மையில் அந்த தலைமையாசிரியர் தான் கங்காவை கொன்றிருப்பார் என்று தப்புக்கணக்கு போட்டாள் உத்ரா. ஆனால், அவரைக் கொன்றதோ அவர் ஒன்றரை வருடம் பாடம் கற்பித்த மாணவன் ஒருவன்.