Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தீயாய் சுடும் என் நிலவு!

dharshini chimba

Saha Writer
Team
Messages
299
Reaction score
220
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 38

மேலும் சிறிதுநேரம் காத்திருந்தவள் 'இப்போ வேற வழியே இல்லை. நானே தான் போய் பார்க்கணும்' என்று மெதுவாய் தயங்கியபடி உள்ளே சென்றாள்.

வீடு தாழிடாமல் சாத்தியிருக்க கதவை தட்டாமல் லேசாக திறக்க அது நன்கு திறந்துகொண்டது.

அந்த வீடே யாரும் இல்லாதது போல் நிசப்தமாய் இருக்கவும், 'எங்க இவரை காணமே?' என்று ஒவ்வொரு இடமாக தேடியபடி நடந்தாள்.

கடைசியாக இருந்த அறையை பதட்டத்துடன் திறக்க, அங்கே எதுவுமே தெரியாமல் சுயநினைவு இல்லாமல் படுத்திருந்தான் தீரன்.

"ஐயையோ! என்னாச்சு இவருக்கு?" என்று பதட்டத்துடன் தீரனிடம் ஓடியவள் அவனின் நெற்றியில் கரம் வைத்து பார்க்க, மிகவும் காய்ச்சலில் கொதித்தது.

"என்ன இப்படி கொதிக்குதே?" என்று வேகமாக காட்டன் கர்ச்சீப்பை ஈரத்தில் நனைத்து அவனின் நெற்றியில் பத்து போட்டாள்.

ஸ்ரீஷாவிற்கு போன் செய்து, "ஸ்ரீ உங்க மாமாக்கு ரொம்ப ஜுரம் அடிக்குது. நீ சீக்கிரம் கொஞ்சம் கிளம்பி வாயேன்" என்றாள் விழிகளில் நீரோடு.

"அய்யய்யோ! மாமாக்கு என்னக்கா ஆச்சு?" என்றாள் ஸ்ரீஷா பதட்டமாக.

"உடம்பு ரொம்ப அனலா கொதிக்குதய. அதான் நீ கொஞ்சம் வா" என்றாள்.

"அக்கா நிச்சயமா நான் ஓடி வந்துருவேன். ஆனா எங்களுக்கு ஹாஸ்ப்பிட்டல் டீனோட ரொம்ப முக்கியமான மீட்டிங். எல்லோரும் கான்பிரன்ஸ் ரூமுக்கு தான் போய்ட்டு இருக்கோம். இப்போ போன் சுவிட்ச் ஆப் பண்ண போறேன். அதான் அட்டெண்ட் பண்ணேன். மீட்டிங் முடிஞ்சு வெளிய வர வரைக்கும் பேச முடியாது. சரிக்கா. நீங்க மாமாவை பார்த்துக்கோங்க. நான் அப்புறம் பேசுறேன். ஆஹ்ன். சொல்ல மறந்துட்டேன் அமுதன் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தான் பேசினான். திஷாகுட்டி அவன்கிட்ட தான் இருக்காளாம்கா. சரி வரேன்கா. கூப்பிடறாங்க" என்று அவளின் பதிலுக்கு காத்திராமல் வைத்துவிட்டாள் ஸ்ரீஷா.

"பிசாசு! பிசாசு! நேரம் பார்த்து காலை வாறுதுங்க பாரு." கோபத்தில் முனகியபடி அமுதனுக்கு போன் செய்தாள்.

அவனுடைய போன் ஸ்விச் ஆப் ஆகியிருந்தது.

'இவனும் நேரம் பார்த்து ஸ்விச் ஆப் பண்ணி வச்சிருக்கானே? இவங்க ரெண்டு பேரும் இப்போ கிடைச்சாங்க அவளோ தான். ' என்று மீண்டும் முயற்சித்தாள்.

********

சிறிது நேரத்திற்குமுன்,

"ஏன்டி இந்த மிரட்டு மிரட்டுற?" என்றான் பாவமாக அமுதன்.

"அடேய்! சும்மா பாவமா மூஞ்சை வச்சிக்கிட்டு இப்போ அக்கா போன் பண்ணும்போது அங்க போன தொலைச்சிருவேன்." என்றாள் ஸ்ரீஷா.

"அவ எதுக்கு போன் பண்ணி வர சொல்லுவா? அது எப்படி உனக்கு தெரியும்? அவ கூப்பிட்டா நான் ஏன் போக கூடாது? முதலில் என்ன விஷயம்னு சொல்லு? எனக்கு தலையும் புரியலை காலும் புரியலை." என்றான் அமுதன்.

"எதுக்குடா இத்தனை கேள்வி அடுக்கிற? அயோ உன்னையெல்லாம் வச்சிக்கிட்டு..." என்றாள் ஸ்ரீஷா.

"இன்னும் நான் கேட்டதுக்கு பதில் சொல்லலை நீ" என்றான் அமுதன் சற்று கடுப்பாகி.

"டேய் மாமா நேத்து மழைல நனைஞ்சிருக்காங்க..." என்று நடந்த அனைத்தையும் கூறி முடித்தாள்.

"அய்யய்யோ! தி பாவம். தனியா என்ன பண்ணுவா? நான் உடனே போறேன்" என்றான் அமுதன் பரபரப்பாய்.

"அடேய் முட்டாள் இவ்ளோ நேரம் கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்றேன். எல்லாத்தையும் கேட்டுட்டு திரும்பி போறென்ற? டேய் நீ போக கூடாது. நாமளும் என்னென்னவோ செஞ்சு பார்த்துட்டோம். அக்கா மாமாகூட சேர்ந்து வாழாம சும்மா ஒன்னுமில்லாத தண்ட கோவத்தை தூக்கிட்டு சுத்திட்டு இருக்காங்க. ஆனா, மாமா இப்போ கொஞ்ச நாளா அக்காவ மாத்த முயற்சி செய்றார். அதுக்கு நல்ல பலனும் கிடைக்குது. மாமா எதிர்வீட்டுக்கு வந்ததே அக்காக்கு அதிர்ச்சி. இதுல மாமாவும் பாப்பாவுக்கு அவங்களை கண்டுக்காம அவங்க பார்வைல பட்ரமாதிரியே இருக்கிறது அக்காக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துது." என்றாள் ஸ்ரீஷா.

"எதுக்கு இந்த தீரன் இப்படி செய்றான். அவனை மண்டை மேலே போடறேன்" என்று கூறிய அமுதனை, "அவரை இல்ல... உன் தலைய கழுட்டி மூளையை கொஞ்சம் சுத்தம் செஞ்சுருவேன் பார்த்துக்கோ. மாமா செய்றது கரெக்ட் பக்கி. இப்போ தான் அக்கா அவங்க ரெண்டு பேரை அதிகமா தேட ஆரம்பிச்சிருக்காங்க. என்ன நடந்தாலும் நம்ம ரெண்டு பேரும் நடுவில போக கூடாதுனு மாமா சொல்லிருக்கார். அதனால அதை செய்றேன் இதை செய்றேன்னு எதையாவதய செஞ்ச... உன் தோலை உரிச்சு உப்பு கண்டம் போட்ருவேன் பார்த்துக்க. நான் ஏற்கனவே டாக்டர் அனுப்பிட்டேன். " என்றாள் ஸ்ரீஷா.

"ரொம்ப பேசுறடி. இப்போ நான் என்ன பண்ணனும்?" என்றான் அமுதன் அப்பாவியாய்.

"நீ எதுவுமே பண்ணாத. அக்கா போன் பண்ணா எடுக்காத. எடுத்தாலும் போகாத. அக்கா தான் மாமாவை பார்த்துக்கணும். இது ஒரு நல்ல சான்ஸ். நீ உன் டார்லிங் கூட நல்லா என்ஜாய் பண்ணு" என்று வைத்துவிட்டாள்.

"என்ன பேச்சு பேசுறா? இவங்க அக்காளுக்குன்னா உடனே பொங்கிடறா. அவளுக்கு ஒன்னு மறந்து போச்சு. தி முதல்ல எனக்கு தான் பிரென்ட்" என்று தலையில் அடித்துக்கொண்டு.

'இப்போ தி போன் பண்ணா என்னால எடுக்காம இருக்க முடியாது. எடுத்தா போகாம இருக்க முடியாது. போனா இந்த பிசாசை சமாளிக்க முடியாது. பேசாம போனை ஸ்விச் ஆப் செஞ்சுச்சுட்டு நாமும் என் டார்லிங் கூட படுத்து தூங்கிடுவோம்" என்று ஸ்விச் ஆப் செய்து வைத்தவன் திஷாவுடன் மீண்டும் தூங்கிப்போனான்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
299
Reaction score
220
Points
43
தீயாய் சுடும் நிலவு -39

"இந்த பிசாசுங்க என் உயிரை இப்படி எடுக்குதுங்களே? என்ன பண்றது?" என்று கவலையாய் தீரனின் நெற்றி முடியை கோதியவள் தன் கணவனின் தோற்றத்தை ஒரு சில நிமிடங்கள் தன் விழிகளுக்குள் படம் பிடித்துக்கொண்டாள்.

காலிங் பெல் சத்தம் கேட்கவும் தீரனுக்கு நன்றாக போர்த்திவிட்டு வாசலுக்கு சென்றாள்.

"ஸ்ரீஷா போன் பண்ணிருந்தா. அவங்க மாமாக்கு ரொம்ப காய்ச்சல்னு வீட்டுக்கு வர சொன்னா" என்றாள் ஒரு இளம்பெண்.

நிம்மதி பெருமூச்சுவிட, "வாங்க!" என்று தீரன் இருந்த அறைக்கு அழைத்து சென்று காண்பித்தாள்.

"இவருக்கு நீங்க என்ன வேணும்?" என்ற மருத்துவரை ஒரு முறை பார்த்துவிட்டு, ' இப்போ இது தேவையா?' என்று மனதிற்குள் திட்டினாலும், "இவர் என் ஹஸ்பண்ட்." என்றாள் தெளிவாக.

"ஒஹ் ஓகே. மாமா தனியா இருக்காங்க. யாரும் பார்த்துகிறதுக்கு இல்லன்னு ஸ்ரீ சொன்னா அதான் கேட்டேன்." என்று தீரனை பரிசோதித்துவிட்டு, "பீவர் ரொம்ப அதிகமா இருக்கு. மழைல நனைஞ்சாரா?" என்று கேட்டார்.

"ஆமா.. நேத்து நைட் மழைல நனைஞ்சாரு." என்றாள் மிருதி.

"கொஞ்சம் இல்ல... ரொம்ப நேரம் மழைல நனைஞ்சிருக்காரு. ட்ரிப்ஸ் போடணும். இன்னைக்கு முழுக்க கூட இருந்து ரொம்ப கவனமா கவனிச்சுகனும். முடியுமா இல்ல ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போய்டலாமா?" என்றார் டாக்டர்.

பதறியவள், "இல்ல கூட இருந்து நானே பார்த்துக்குறேன். இங்கயே போடுங்க" என்றாள் மிருதி.

"ஹ்ம். நீங்க பார்த்துப்பிங்க. ஆனா என்னால இங்க ரொம்ப நேரம் இருக்க முடியாது. ஒன்னு செய்யலாம். அதுவும் ஸ்ரீ என்னோட பிரென்ட் அதான். ட்ரிப்ஸ் முடிய போறதுக்கு கொஞ்ச நேரம் முன்ன போன் பண்ணுங்க. சின்ஹா பக்கத்துல தான் என் ஹாஸ்ப்பிட்டல் இருக்கு. நான் நர்ஸ் ஒருத்தங்களை அனுப்புறேன். அவங்க செக் பண்ணிட்டு எனக்கு சொல்லுவாங்க. " என்றாள்.

"சரி டாக்டர். ரொம்ப நன்றி"

"இருக்கட்டும். " என்று தீரனுக்கு ட்ரிப்ஸ் போட்டு பின், "இவருக்கு கஞ்சி, பால், இட்லி கொடுங்க. காரம் வேண்டாம்" என்று சென்றுவிட்டாள்.

யோசனையாக தீரனின் அருகில் அமர்ந்து நெற்றியை தொட்டு பார்த்தவள், "இன்னும் குறையல. அப்படி என்ன அவ்ளோ பிடிவாதம். நேத்து டவல் கொடுத்தா வாங்கி துடைக்கவேண்டியது தானே? என் மேல இருக்க கோவத்துல மறுபடியும் மழைல வண்டில வீட்டுக்கு வந்துருக்கிங்க. இப்போ பாருங்க இப்படி முடியாம படுத்திருக்கிங்க. அப்பா பொண்ணு ரெண்டு பேரும் ஒரே மாதிரி தான். அவளுக்கும் இதது பிடிவாதம்" என்று திட்டிக்கொண்டிருந்தவள் ஒரு நொடி தீரனின் முகத்தை உற்று பார்த்தவள் மெல்ல குனிந்து அவனின் நெற்றியில் இதழ் பதித்தாள்.

"சீக்கிரம் குணமாகிடும். இப்படி படுத்திருந்தா நல்லாவே இல்ல. என்னை முறைச்சாக்கூட அந்த தீரனை தான் பிடிக்கும்." என்றாள் லேசாக புன்னகைத்து.

'இவருக்கு கொஞ்சம் அரிசி வறுத்து கஞ்சாவது செய்துவைப்போம்.' என்று எழுந்து சமையலறை நோக்கி நடந்தாள்.

விழிகளை மெதுவாக திறந்த தீரன்.

முடியவில்லை என்றாலும் லேசாக முறுவலித்தான்.

'என்கிட்ட நீ வந்து தான் ஆகணும். அதுக்காக என்ன வேணாலும் செய்வேன் மிரு.' என்று நினைத்தவன் தலை கோத கரத்தை இழுக்க ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்ததால் வலிக்க ஆரம்பித்தது.

'ஆஹ்' என்று தலைதிருப்பி பார்க்க, "ட்ரிப்ஸா எதுக்கு? எப்போ போட்டது. ஆஹ்... வலிக்குது" என்று மெல்ல முனகியதில் சமையலறையில் இருந்து ஓடி வந்தாள் மிருதி.

"எந்திரிச்சிட்டீங்களா? " என்று அவன் அருகில் வர, மனம் உருகினாலும்... முகத்தில் உணர்வுகளை கட்டுப்படுத்தி அருகில் வரவேண்டாம் என்று கையமர்த்தினான்.

பொறுமையாக எழ முயற்சி செய்ய முடியாமல் தடுமாறி மீண்டும் கட்டிலில் சாய்ந்தான்.

"அயோ" என்று நெருங்கினாள் மிருதி.

மீண்டும் கையமர்த்தி படுத்தபடியே அவளை நோக்காமல், "நீ இங்க என்ன பண்ற? எனக்கு யார் ட்ரிப்ஸ் போட்டது" என்றான்.

அவனின் கேள்வியில் ஒரு நொடி ஆடிபோனாலும் "உங்களுக்கு ரொம்ப ஜுரம் காயுது. நா வரும்போது. மூச்சு பேசில்லாம மயக்கத்துல இருந்திங்க. அதான் டாக்டர் வந்து பார்த்துட்டு உங்களுக்கு ட்ரிப்ஸ் போட்டுட்டு போயிருக்காங்க." என்றாள்.

எதுவும் பேசாமல் விழிகளை அழுந்த மூடியவன்.

" என்னை பத்தி எப்போலர்ந்து கவலை உனக்கு? நான் யார் உனக்கு? எனக்கு யாரோட உதவியும் தேவையில்லை. இருந்தாலும் நீ... சாரி... நீங்க செஞ்ச உதவிக்கு நன்றி. நீங்க போகலாம்". என்றான்.

அவனின் வார்த்தைகள் மிகவும் கூர்மையான ஆயுதமாய் அவளை தாக்க, என்ன சொல்வதென்று தெரியாமல் விழிகளில் நீர் சுரக்க அங்கேயே நின்றாள்.

சில நொடிகள் கடந்த பின் கண்ணீரை துடைத்துக்கொண்டு சமையலறை சென்று தஞ்சை ஒரு பாத்திரத்தில் எடுத்து வந்தவள். "இந்தாங்க இந்த கஞ்சிய குடிச்சா உடம்பு கொஞ்சம் தேரும்." என்றாள் கஞ்சியை நீட்டியபடி.

விழிகளை திறந்து அவளையும் கஞ்சியையும் மாறி மாறி பார்த்த தீரன்.

வேகமாக வாங்கி அவளின் சமையலை ருசிக்க ஆசையிருந்தாலும்

"எனக்கு எதுவும் வேண்டாம். நீங்க இங்க இருக்கிறதை பார்த்தா யாராவது எதாவது சொல்லுவாங்க. நீங்க கிளம்புங்க" என்றான்.

"ஹ்க்கும் இது வேலைக்கு ஆகாது." என்று தனக்குள் முணுமுணுத்தவள்.

"இங்க பாருங்க டாக்டர் என்னை நம்பி தான் இங்கே வச்சு ட்ரிப்ஸ் போட்ருக்காங்க. அதனால நான் இங்கே தான் இருப்பேன். வேணாம்னா சொல்லுங்க ஹாஸ்ப்பிட்டல்ல சேர்த்துவிட்டுட்டு போறேன்" என்றாள் மிரட்டலாக.

அவளின் மிரட்டலும் அவனுக்கு ரசிக்க தோன்ற, எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

'அப்படி வா வழிக்கு. உனக்கு ஊசினாலே பயம். அதைவிட ஹாஸ்பிட்டல்லனா அலர்ஜி' என்று உள்ளுக்குள் புன்னகைத்தாள் மிருதி.

"இந்தாங்க இந்த கஞ்சிய குடிங்க" என்று நீட்டவும் எழ முயற்சித்தான்.

"இருங்க" என்று அவனை மெல்ல எழுப்பி அமர வைத்தாள்.

சற்று தள்ளி கட்டிலில் அமர்ந்தவள் மெல்ல கஞ்சியை ஸ்பூனால் புகட்ட ஆரம்பித்தாள்.

உள்ளுக்குள் குதுகளித்தாலும் எந்த உணர்வையும் முகத்தில் காட்டாது அமைதியாய் உண்டான்.

மாத்திரையை போட்டுகொண்டு அசதியில் கண்மூடினான்.

"உடம்புக்கு முடியலைன்னாலும் இந்த கோபத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல." என்று சிரித்தாள்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
299
Reaction score
220
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 40:

உறங்கியவன் கண் விழித்ததும் தேடியது மிருதியை தான். அவனை ஏமாற்றாமல் எதிரில் வந்து நின்றாள்.

"இப்போ எப்படி இருக்கு?" என்றாள் மெதுவாய்.

பதில் கூற மனம் விழைந்தாலும் எதுவும் பேசாமல் எழுந்து நின்றான், ஆனால் களைப்பில் மீண்டும் தள்ளாடியபடி மெத்தையில் அமர,

"என்னாச்சுங்க பார்த்து?" என்று நெருங்கியவளை தடுத்தது அவனின் வார்த்தைகள்.

"எனக்கு இப்போ பரவால்ல. நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி. இனி உங்க உதவி வேண்டாம். நீங்க போகலாம்." என்றான் குனிந்த தலை நிமிராமல்.

அவனின் வார்த்தையில் சம்மட்டியடித்தாற்போல் மிருதி நின்றுவிட விழிகள் லேசாய் கலங்கியது.

"இன்னும் முழுசா நீங்க குணமாகல... பார்த்துக்கோங்க" என்று திரும்பிப் பாராமல் வேகமாய் வெளியேறினாள்.

அவள் சென்றவுடன் மனம் தவிக்க ஆரம்பித்தது.

'அவ பார்க்க மாட்டாளான்னு ஏங்க வேண்டியது. இப்போ உனக்காக இங்க இருந்தா போ போன்னு துரத்த வேண்டியது.' என்று மனம் கடிந்து கொள்ள.

'எனக்கு மட்டும் ஆசையா என்ன? மிருவை என் உள்ளங்கைல பொத்தி வச்சுக்கணும்னு மனசு கிடந்து அல்லாடுது... ஆனா என்ன செய்ய? அதுக்கு இன்னும் நேரம் வரலை. எங்ககூட இருக்க முடியலைன்னு அவ வருந்தனும். அப்போ தான் இதெல்லாம் சரியாகும்.' என்று தனக்குள் தர்க்கம் நடந்து கொண்டிருக்க அவனுக்கு வந்த அலைபேசியின் செய்தி அதை தலைகீழாக்கி நிலைகுலைய செய்தது.

"நல்லா செக் பண்ணிட்டீயா? உண்மை தானே?" என்றான் முக இறுக்கத்துடன்.

"ஆமா. நான் உங்கிட்ட கொஞ்சம் பேசணும். எவ்ளோ சீக்கிரம் முடியமோ அவ்ளோ சீக்கிரம்." என்ற எதிர்முனையின் பரபரப்பில் இவன் ஆட்டம் கண்டு தான் போனான்.

"சரி. இன்னைக்கு ஈவ்னிங் அஞ்சு மணிக்கு பார்க்கிறேன். எனக்கு இப்போவே எல்லாத்தையும் மெயில் பண்ணு" என்றான்.

"ஸ்ரீஷா" என்றவனின் குரலில் தெரிந்த மாற்றம் அவளை கவலை கொள்ள செய்தது.

"மாமா! என்ன மாமா உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு அக்கா அழாத குறையா டென்ஷனா பேசினா? நீங்க இப்போ திடீர்னு போன் பண்றிங்க? அக்கா எங்க?" என்றாள் ஸ்ரீஷா.

"எனக்கு என்ன நான் நல்லா தான் இருக்கேன். நான் உன்கிட்டயும் அமுதன்கிட்டயும் பேசணும். இன்னும் ரெண்டு மணி நேரத்துக்குள்ள நீ அமுதன் வீட்டுக்கு வந்துடும்மா." என்றான் தீரன்.

தூக்கி வாரி போட்டது ஸ்ரீஷாவிற்கு.

"என்ன மாமா? ஏதாவது முக்கியமான விஷயமா? நீங்க இவளோ சீரியசா பேசி நான் பார்த்தது இல்லையே." என்றாள் பதட்டமாக.

"அதெல்லாம் ஒன்னுமில்லைடா. ஆமா ரொம்ப முக்கியமான விஷயம் தான். நேர்ல சொல்றேன் வா. உங்க அக்காக்கு எதுவும் தெரியக்கூடாது இப்போ வைக்கிறேன்." என்று வைத்தான்.

அடுத்து அமுதனுக்கு போன் செய்தவன்.

"அமுதா! ரொம்ப முக்கியமான விஷயம். ஸ்ரீஷாவும் வரா. உன் பிரெண்டுக்கு எதுவும் சொல்லாத. நானும் வரேன்." என்று வைத்தான்.

அமுதனும் ஸ்ரீஷாவும் தான் என்னவாக இருக்கும் என்று குழம்பி போயினர்.

******

'அவருக்கு எப்படி இருக்கு தெரியலையே?' என்று வீட்டுக்குள் நடை நடந்து கொண்டிருந்தாள் மிருதி.

"ஹலோ! ஸ்ரீ. உன் மீட்டிங் முடிஞ்சுதா?" என்றாள் மிருதி.

"முடிஞ்சுதுக்கா. மாமாக்கு எப்படி இருக்கு? சாப்பிட்டாரா? நீங்கி சாப்பிட்டீங்களா?" என்றாள் ஸ்ரீஷா அங்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள.

"ஹம். கொஞ்சம் குறைஞ்சிருக்கு. சாப்பிட்டார். ஆனா.." என்று முடிக்காமல் இழுத்தபடி நிற்க.

"ஆனா என்னக்கா?" என்றாள் எதுவோ நடந்திருக்கு என்பதை.

"ஹ்ம்ம்.. கொஞ்ச தேறினவுடன் உன் மாமனுக்கு திமிர். எனக்கு உடம்பு சரியாகிடுச்சு. நீ போடின்னு சொல்லிட்டாரு." என்றாள் மிருதி சிறுகுழந்தை குற்றம் சாட்டுவது போல்.

"அப்படியா சொன்னாரு?" என்று சிரித்தாள் ஸ்ரீஷா.

"என்னடி சிரிக்கிற? உன்கிட்ட போய் சொன்னேன் பாரு. நீ உன் மாமனுக்கு தான சப்போர்ட் பண்ணுவ." என்றாள் வெடுக்கென்று.

"ஆமா ஆமா. சரி அமுதன் வீட்டுக்கு போறேன். வர லேட் ஆகும்கா. அதை சொல்லத்தான் போன் பண்ணேன்." என்றாள்.

"சரி போய்ட்டுவா. பத்திரம்" என்று வைத்தாள் மிருதி.

*******

அஞ்சு மணி தீரன் அமுதன் வீட்டில் ஸ்ரீஷாவிற்காக காத்திருந்தான்.

"சாரி மாமா கொஞ்சம் லேட் ஆகிடுச்சு." என்று உள்ளே நுழைந்தாள் ஸ்ரீஷா.

"எப்படி மா இருக்க?" என்று புன்னகைத்தான் தீரன்.

"நல்லா இருக்கேன் மாமா. எங்க இவங்க ரெண்டு பேரையும் காணமே?" என்றாள் விழிகளை சுழலவிட்டபடி அமுதனை தேடிக்கொண்டே.

"அவங்க ரெண்டு பேரும் கிச்சன்ல என்னவோ பண்றாங்க." என்றான் மகளை பற்றி நினைத்து லேசாக புன்னகைத்து.

அவன் வீட்டிற்கு வந்ததும், "அப்பா!" என்று ஓடி வந்து கட்டிக்கொண்ட மகளை கண்டதும் கவலைகள் சிலநொடி ஒட்டமெடுத்தது.

"உங்களுக்கு இப்போ பீவர் எப்படி இருக்கு தீரன்?" என்று அமுதன் கேட்கவும், "அப்பா! உங்க... ளுக்கு என்ன... பா?" என்று தந்தையின் நெற்றியையும் கழுத்தையும் மாற்றி மாற்றி தொட்டு பார்த்த மகளின் அன்பில் விழிகள் கலங்க உள்ளம் குளிர்ந்தது தீரனுக்கு.

"எனக்கு இப்போ பரவால்ல டா." என்று கூறினாலும் தீரனின் லேசான தள்ளாட்டத்திலும் முக சோர்வையும் கண்டு கொண்ட அமுதன். வெந்நீர் வைத்து குடிக்க வைத்தான்.

"இவ்ளோ உடம்பு முடியல உங்களுக்கு. ரெஸ்ட் எடுத்துருக்கலாம்ல? நாளைக்கு பேசியிருக்கலாமே? என்ன அவ்ளோ அவசரம் தீரன்? இல்ல கண்டிப்பா பேசியே ஆகணும்னா நான் வந்திருப்பேன்ல?" என்றான் தீரன்.

வறட்சி புன்னகை ஒன்றை உதிர்த்த தீரன்.

"ரெஸ்ட்டா? நான் இப்போ இருக்க மன நிலைமைக்கு எதுவும் சொல்றதுகில்ல அமுதன். நாளைக்கு இல்ல.. இந்த ரெண்டு மணி நேரம் நான் தள்ளி போட்டதே தப்பு. அவ்ளோ சீரியஸான விஷயம். அங்கயே வர சொல்லிருக்கலாம். ஆனா, அங்க பேச வேண்டாம்னு தான் இங்கே வரசொன்னேன்." என்ற தீரனை ஆழமாய் நோக்கினான் அமுதன்.

"என்ன விஷயம் தீரன்?" என்றான் ஒருவித புரிதலுடன்.

"ஸ்ரீயும் வரட்டும்." என்றான் பார்வையில் முடிவுடன்.

"அப்பா சாப்...பிட்டியா?" என்ற மகளை உச்சி முகர்ந்தவன்.

"நான் சாப்பிட்டேன் டா தங்கம்" என்று புன்னகைத்தான்.

"சரி. நீங்க இருங்க நாங்க ஏதாவது சாப்பிட செய்றோம்" என்று திஷாவை பார்த்த அமுதன்.

"பேபி! நாம அப்பாக்கு ஏதாவது சாப்பிட செய்லாமா?" என்று கண்ணடித்து கேட்டான்.

"ஓகே பேபி" என்று மழலையில் புன்னகைத்து அமுதனிடம் தாவியது குழந்தை.

"உட்காருங்க தீரன்" என்று சமையலறைக்குள் நுழைந்தனர் இருவரும்.

பத்து நிமிடம் கழிந்திருக்கும் உள்ளே நுழைந்தாள் ஸ்ரீஷா.

"மாமா எப்படி இருக்கு உங்களுக்கு?" என்றபடி உள்ளே நுழைந்தாள்.

"ஹம் நல்லா இருக்கேன்டா" என்று புன்னகைத்தான்.

வேண்டாம் என்று தீரன் எவ்வளவு மறுத்தும் கேட்காமல் சாப்பிட வைத்து அனைவரும் சாப்பிட்டு முடித்து அமர்ந்தனர்.

"என்ன விஷயம் இப்போ சொல்லுங்க?" என்றான் அமுதன்.

"திஷா குட்டி! போங்க உங்களுக்கு பிடிச்ச டிவில சேனல் பாருங்க. நாங்க கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசணும்" என்றான் தீரன்.

"ஓகே பா" என்று உள்ளே ஓடியது குழந்தை.

இருவரையும் ஒருமுறை பார்த்தவன். தன் கைப்பையில் இருந்த ஒரு பைலை எடுத்து முன்னிருந்த மேசையின் முன் வீசினான்.

"எடுத்து பாருங்க" என்றான்.
 

govarthani

Member
Messages
44
Reaction score
27
Points
18
super sister . na full story update panidinganu parthen.it's ok .next episode eppo update panuvinga sollunga sister. dheeranum muruthiyum eppo onna seruvanga sister . please konjam fasta story update panunga sister .
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
299
Reaction score
220
Points
43
super sister . na full story update panidinganu parthen.it's ok .next episode eppo update panuvinga sollunga sister. dheeranum muruthiyum eppo onna seruvanga sister . please konjam fasta story update panunga sister .
Okma seekirama mudichuruvom. Please read and comment my other story also. Thank you
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
299
Reaction score
220
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 41:

'என்னது இது?' என்று நினைத்துக்கொண்டே அதில் இருந்தவற்றை பிரித்து பார்த்தவன் ஒரு நொடி அதிர்ந்து தான் போனான்.

"என்ன தீரன் இது? எப்படி நமக்கு தெரியாம போச்சு?" என்று எழுந்தே விட்டான்.

"உட்காருங்க அமுதன். ஸ்ரீ நீயும் பாரு" என்று அவளை பார்த்தான்.

சரியென்று தலையசைத்து விட்டு எடுத்து பார்த்தவளும் அதிர்ந்து போனாள்.

"மாமா" என்று பார்க்க வேதனை புன்னகை ஒன்றை உதிர்த்தவன் மீண்டும் வேறு ஒரு பைலை எடுத்து நீட்டி.

"இதைவிட சுவாரசியமான விஷயம் ஒன்னு இருக்கு. பார்க்குறிங்களா?" என்று அங்கிருந்த மேசையின் மேல் வைத்தான்.

நடுங்கும் கரத்தோடு மேலும் குழப்பத்துடன் அந்த பைலை எடுத்து பார்த்தவன் விழிகள் அதில் நிலைகுத்தி நின்றன.

"தீரன் இது..? " என்று அதிர்ச்சியாய் விழிகளில் நீர் ஊற்றெடுக்க அவனை நோக்கினான்.

"100% உண்மை. நல்லா விசாரிச்சுட்டேன்." என்றான் தீரனும் கலங்கி.

"எப்படி நாம எல்லோருமே கூட தானே இருக்கோம். நமக்கு எப்படி தெரியாம போனது." என்றான் இரு கரங்களிலும் முகத்தை பதிந்து கொண்டு.

"அமுதா" என்று பதறியபடி அவன் தோளில் கரம் வைத்து, "என்னாச்சு அமுதா? அதுல என்ன இருக்கு?" என்றாள் ஸ்ரீஷா.

சிலநொடிகள் எதுவும் பேசாமல் இருந்தவன் நிமிர்ந்து அவளை நோக்கி, "ஹ்ம்! உங்க அக்காவோட மரணஓலை" என்றான் விழிகளில் கோபம் தெறிக்க

"என்ன சொல்றிங்க? அக்காக்கு என்ன? " என்று அவனருகில் இருந்த பைலை எடுத்து பார்த்வள்,

"மாமா! " என்று அதிர்ச்சியில் எழுந்தே விட்டாள்.

"எனக்கும் அப்படி தான் இருந்துச்சு ஸ்ரீ. உங்க அக்கா என்னை வேலை செஞ்சுருக்கா பார்த்தியா?" என்றான் விழிகளில் நீரோடு.

"இப்பயே போய் ரெண்டு அரை பளார் கண்ணத்துல கொடுக்கணும் போல இருக்கு. ஆனா நமக்கு தெரிஞ்சிருச்சுன்னு அவளுக்கு தெரிஞ்சுதுன்னா நிச்சயமா யோசிக்காம யாருக்கும் சொல்லாம இங்கிருந்து கிளம்பிடுவா" என்றான் தீரன்.

"உங்களுக்கு எப்போ தெரிஞ்சுது?" என்று கேட்டான் அமுதன்.

"எனக்கு டைவர்ஸ் வாங்கிட்டு கோர்ட்லர்ந்து வெளிய வந்தப்போ அவன் கண்ல தெரிஞ்ச ஏதோ ஒன்னு அவளை தொடர்ந்து போக சொல்லியது. அவளுக்கு தெரியாம பின் தொடர்ந்து போனப்ப தான் தெரிஞ்சுது" என்றான் தீரன்.

"மாமா! ப்ளீஸ் கொஞ்சம் விவரமா சொல்லுங்க" என்றாள் ஸ்ரீஷா.

"சொல்றேன் டா." என்று இருவரையும் சிலநொடிகள் பார்த்த தீரன் பின் மெல்ல தொடர்ந்தான்.

"நான் பின்தொடர்ந்து போனப்ப உங்கக்கா போன இடம் ஒரு வக்கீலோட வீடு. எதுக்கு இவ திடீர்னு வக்கீல் வீட்டுக்கு போறான்னு யோசனையா இருந்தது. டைவர்ஸ்காகன்னா ஏற்கனவே வாங்கியாச்சு. அதுவுமில்லாம அந்த வக்கீல் வேற ஒருத்தர். இவர் வேற ஆளா இருக்காரேன்னு சந்தேகம் வந்து விசாரிச்சப்ப அந்த வக்கீல் வாயே திறக்கலை. எனக்கு என்ன செய்றதுன்னு புரியாம குழம்பிட்டு இருந்தப்ப என் நெருங்கிய நண்பனோட அண்ணன் வக்கீல் தான்னு ஞாபகம் வந்து அவரிடம் இதுபற்றி கேட்டப்ப மிருதி பார்த்த வக்கீல் இவருக்கு தெரிஞ்சவர்னு அவர்தான் உங்க அக்காக்கு தெரியாம எல்லாவற்றையும் விசாரிச்சு சொன்னார்." என்று நிறுத்தினான்.

"என்ன சொன்னார்?" என்று புருவம் சுருக்கி கேட்டான் அமுதன்.

"எனக்கு தெரியாம எங்க ரெண்டு பேருக்கும் அவளுக்கு சேர வேண்டிய எல்லா சொத்தையும் மாற்ற முடியுமான்னு கேட்டு முடியும்னு தெரிஞ்சு உயில் எழுதி வச்சிருக்கா. ஒருவேளை அவள் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து இறந்துட்டா அவளுக்கு சேரவேண்டிய எல்லா சொத்துமே எனக்கும் திஷாவுக்கும் தான் போய் சேரணும்னு எழுதி வச்சிருக்கா." என்றான் அழுது அழுது முகம் வீங்கி.

"எதுக்காக தி உங்க பேர்ல எல்லாவற்றையும் எழுதி வைக்கணும்?" என்ற அமுதனை பார்த்து சிரித்தவன்.

"அதான் பார்த்திங்களே ரிப்போர்ட்ல? அவளுக்கு ப்ரைன்ல பிளட் களாட்ஸ் இருக்கு." என்றவன் ஸ்ரீஷாவை பார்த்து, "நம்ம வீட்டுக்கு நான் வந்தப்ப அவளுக்கு எதுவும் தெரியாது. ஆனால் இடையில் நான் சென்னை வந்திருந்தப்ப ரொம்ப தலைவலிக்குதுன்னு டெஸ்ட் எடுத்து பார்த்துருக்கா. அப்போ தான் தெரிஞ்சுருக்கு. ஆபரேஷன் செஞ்சா பிழைக்க 50% தான் சான்ஸ் இருக்குன்னும் பத்து முதல் பன்னிரெண்டு லட்சம் செலவு ஆகும்னு சொல்லிருக்காங்க. டாக்டர்ஸ் இப்படி சொன்னதும் இவங்க தான் பெரிய தியாகியாச்சே அதான் பிழைக்கும்வோம்னு உத்திரவாதம் இல்ல. பிறகு எதற்கு ட்ரீட்மெண்ட்னு முடிவு செஞ்சு என்னையும் பக்கத்துல நெருங்க விடாம இவ்ளோ வேலை செஞ்சுருக்கா. அவ இல்லாம நாங்க எப்படி இருப்போம்?" என்று கண்கள் கலங்க குலுங்கினான்.

"இப்ப என்ன செய்யலாம் தீரன்?" என்றான் அமுதன்.

"நீங்க ரெண்டு பேரும் எனக்கு உதவி செஞ்சா இதை சரிசெய்ய முயற்சிக்கலாம்." என்றான் தீரன்.

"என்ன செய்யணும் சொல்லுங்க? கண்டிப்பா செய்கிறோம்" என்றனர் இருவரும் சேர்ந்து.

"மிருதி பார்க்கின்ற டாக்டரை பார்த்து அவளுக்கு தெரியாம எல்லாவற்றையும் பற்றி பேசிட்டேன். இப்போ நாம செய்யவேண்டியது மிருதியை ஹாஸ்ப்பிடலில் ஆப்ரேஷன் செய்ய கொண்டு சேர்க்கனும்" என்றான்.

"அப்போ ஆப்ரேஷன் செய்ய தேவையான தொகை?" என்றான் அமுதன் அதிர்ச்சியாய்.

"நான் இவ்ளோ நாள் எதுக்கு சென்னைல இருந்தேன்னு நினைச்சீங்க? இதுக்கு தான். ஊர்ல இருந்த சொத்துல கொஞ்சம் சொத்தை விற்றுவிட்டு பணத்தோடு வந்திருக்கிறேன்." என்றான் தீரன்.

இதை கேட்டதும் அமுதனுக்கும் ஸ்ரீஷாவிற்கும் விழிகள் கலங்கினர்.

"சரி. அடுத்து என்ன செய்யணும்னு சொல்லுங்க?" என்றான் அமுதன்.

"என்னோட பிளான்படி பதினைந்து நாளுக்கு முன் மிருதி செக் அப் போனப்ப ஆப்ரேஷனுக்கு தயாராகுற மாத்திரைகள் கொடுத்தாச்சு" என்றவுடன் விழிகளை விரித்து அவனை பார்த்தாள் ஸ்ரீஷா.

"மாமா டாக்டர் எப்படி சம்மதிச்சாங்க?" என்று ஸ்ரீஷா கேட்கவும் லேசான புன்னகையை உதிர்த்து, "முதல்ல முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாரு. பிறகு எல்லாவற்றையும் எடுத்து கூறி இரண்டு நாள் அவரிடம் மிகவும் கெஞ்சி தான் சம்மதிக்க வைத்தேன்." என்றான் தீரன்.

"அக்காவை நல்லபடியா அந்த கடவுள் தான் காப்பாற்றி தரனும்" என்றாள் ஸ்ரீஷா.

"நிச்சயமா எதுவும் மிருதியை என் உயிரை கொடுத்தாவது காப்பாற்றுவேன். அவளுக்கு எதுவும் ஆகாது." என்றான் தீரன்.

"தி ஏன் இப்படி செஞ்சா? யாருகிட்டயுமே எதுவும் சொல்லாம இருந்திருக்கிறாளே?" என்றான் அமுதன் வேதனையாய்.

"நம்ம யாருக்குமே தொந்தரவு கொடுக்க கூடாதுன்னு தான் அவளே நம்மளை விட்டு விலகி இருந்தா" என்றான் தீரன்.

"சரி மாமா டாக்டர்ஸ் எப்போ டேட் கொடுத்திருக்கங்க? எப்படி இதை நடத்தபோறோம்?" என்றாள் ஸ்ரீஷா.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
299
Reaction score
220
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 42:

"இன்னும் ரெண்டு நாள்ல அவளுக்கு ஆப்ரேஷன். அதுக்கு நீ தான் அவளை ரெடி பண்ணனும்." என்று தன் பாக்கெட்டில் இருந்து சீட்டை எடுத்து தந்தான்.

"இந்த ரெண்டு நாளும் அவ சாப்பிட வேண்டியது. அப்புறம் அவளுக்கு என்ன தரலாம் எது தரக்கூடாது எல்லாம் எழுதி கொடுத்திருக்காங்க. பார்த்துக்கோ " என்றான்.

"சரி ஸ்ரீ இதெல்லாம் செஞ்சுடுவா. அடுத்து என்ன தீரன்?" என்றான் அமுதன்.

"நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை நீ பத்து மணிக்கு மிருவை ஹாஸ்ப்பிட்டல்கு கூட்டிட்டு வரணும்" என்றான் தீரன்.

"நானா?" என்றாள் விக்கித்து.

"ஆமா நீயே தான்" என்று ஆழமாய் நோக்கினான் தீரன்.

"மாமா நான் எப்படி அக்காவை கூட்டிட்டு வரது? நான் கூப்பிட்டா உடனே வந்துடுவாங்களா? ஏன் எதுக்குன்னு என்னை போட்டு ஒரு வழி செஞ்சுடுவா. போங்க மாமா" என்றாள் நம்பாமல்.

"அதெல்லாம் கூட்டிட்டு வரலாம். உன் பிரென்ட் வலை பார்க்கிற ஹாஸ்ப்பிட்டல்ல பிளட் டோனேட் கேம்ப் போகணும். கண்டிப்பா நீங்களும் வாங்க. ரெண்டு பேரும் போலாம்னு சொல்லு. நிச்சயம் வருவா. அவளுக்கு பிளட் டோனேட் பண்ற பழக்கம் இருக்கு." என்று லேசாய் புன்னகைத்தான்.

"சரி மாமா. ட்ரை பண்றேன்" என்றாள் ஸ்ரீ.

"இந்த ட்ரை எல்லாம் வேண்டாம். கண்டிப்பா உன்னால முடியும்" என்றான் லேசாக புன்னகைத்து.

"அங்க வந்த பிறகு அவளுக்கு தேவையான எல்லா டெஸ்டும் எடுப்பாங்க. மயக்க ஊசியும் போடுவாங்க. அதுவரைக்கும் நீ தான் கூட இருக்கணும்." என்றான் கண்டிப்பாக.

"ஹ்ம்ம்" என்று தலையசைத்தாள் ஸ்ரீ.

வாசலில் அழைப்புமணி கேட்கவும் ஸ்ரீ யாரென யோசிப்பதற்குள்.
"போம்மா! உங்க அக்கா இல்ல. என்னை பார்க்க தான் வந்துருக்காங்க" என்றான் தீரன்.

"என்னை மட்டும் இல்ல.. உங்களையும் தான். சரி இரு நானே கதவை திறக்கிறேன்" என்று வாயிற் கதவை திறந்தான்.

"ஹாய் டா!" என்றான் வாசலில் இருந்தவன்.

"வாடா" என்று உள்ளே அழைக்க.

வந்தவனும் புன்னகைத்தான்.

"எப்படிடா இருக்கு உடம்பு?" என்று கேட்டதும், "எனக்கென்ன? நல்லா தான் இருக்கேன்" என்றான் தீரன் சுரத்தே இல்லாமல்.

"என்னடா இவ்ளோ விரக்தியா பேசுற?" என்றதும் நண்பனை முறைத்த பின், "எல்லாம் என் நேரம் டா?" என்றான் தலையில் அடித்துக்கொண்டு.

"ஸ்ரீ, அமுதன் இவன் என் பிரென்ட் பரசு. இங்க தான் சைபர் க்ரைம் ல இருக்கான்." என்று "டேய் நல்லவனே! இவர் அமுதன் இவங்க ஸ்ரீஷா." என்றான்.

"வணக்கம்!" பரஸ்பர அறிமுகம் முடிந்ததும், "அமுதன் ஏன் இன்னைக்கு இவ்ளோ அவசரமா பேசனும்னு கேட்டிங்கள்ல?" என்றான் தீரன்.

எதுவும் பேசாமல் அமுதனும் தலையசைக்க.

"இப்போ சொல்றேன் அதுக்கான காரணத்தை. பரசு தான் எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணாரு. இப்போவும் ஹெல்ப் பண்ணிருக்காரு" என்று பரசுவிடம் கைநீட்ட ஒரு வெள்ளை கவரை கொடுத்தான்.

"இந்தாங்க. இதையும் அப்டியே கொஞ்சம் பாருங்க" என்று அந்த கவரை அமுதனிடம் கொடுத்தான் சிறிய தயக்கத்தோடு பிரித்து பார்த்தவனின் விழிகள் அப்பட்டமான அதிர்ச்சியை வெளிப்படுத்தின.

"தீரன்" என்று அவனை பார்க்க, "சொல்லுங்க. சத்தியமா எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உங்க அருமை தீ தான் இந்த முடிவு எடுத்திருக்கா" என்றான் தீரன் முகம் மிகவும் கடினமாக.

"என்ன பண்ணிருக்காங்க அக்கா." என்றாள் ஸ்ரீ தீரனை நோக்கி.

"ஹ்ம்ம் நீ கூட தான இருக்க ஆனா ஒன்னும் தெரியல உனக்கு... இந்தா பாரு உங்க பாசக்கார அக்கா என்ன செஞ்சு வச்சிருக்கான்னு" என்று ஸ்ரீயை முறைத்தபடி தாளை நீட்டினான்.

"ஸ்ரீ மேல எந்த தப்பும் இல்ல அமுதன். மிருதி எல்லாமே ஸ்ரீ இல்லாத நேரமா தான் செஞ்சுருக்கா." என்றான் தீரன்.

"நான் என்ன செஞ்சேன். எனக்கு எதுவும் தெரியலை. அக்கா என் முன்னாடி எதுவும் செய்றதில்லை. இப்போ அப்படி என்ன தான் செஞ்சு வச்சிருக்கா?" என்று அந்த தாளை பிடித்து படித்தவள் கண்கள் கலங்கி நாற்காலியில் அப்படியே அமர்ந்துவிட்டாள்.

"ஸ்ரீ" என்றான் மென்மையாய் அமுதன்.

"ஏன் அக்கா இப்படி ஒரு முடிவு எடுத்திருக்காங்க?" என்று முகத்தை முடிகொண்டு அழ தொடங்கினாள்.

தன் நிலையே இங்கு இவ்வாறு இருக்க, இவர்களை காண மேலும் வருத்தமாய் இருந்தது.

இப்படி தங்களை பாடாய் படுத்தும் மிருதியின் மேல் ஒரு நொடி பெரும் கோபம் உருவானது.

'இவளுக்கு எப்பவும் தான் செய்றது தான் கரக்ட்ன்னு நினைப்பு. நாங்களாம் மனுஷங்களா தெரியலையா அவளுக்கு? இருக்கட்டும் இருக்கட்டும்.. இந்த ஆப்ரேஷன் நல்லபடியா முடியட்டும். அப்புறம் இருக்கு அவளுக்கு' என்று மிருதியை மனத்திற்குள்ளேயே திட்டி கொண்டிருந்தான் தீரன்.

"டேய் தீரா!" என்று நண்பன் தன் தோளை பற்றி உலுக்க சுய நினைவுக்கு வந்தவன் எதுவும் பேசாமல் 'என்ன?' என்பது போல் பார்த்தான்.

"டேய். எவ்ளோ நேரமா கூப்பிட்டுட்டு இருக்கோம். என்ன கனவு கான்றியா? உன் பொண்டாட்டி கூட டூயட் எல்லாம் அப்புறம் பாடிக்கலாம். இப்போ இங்க கவனி" என்று கிண்டல் செய்யவும் நண்பனை கொலைவெறியோடு கோபமாய் முறைத்தான் தீரன்.

"சரி சரி.. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். அப்படி முறைக்காத" என்று பேசிக்கொண்டே வேறெங்கோ வேடிக்கை பார்த்தான் அவனின் நண்பன்.

சரியாக அந்நேரம் ஸ்ரீயின் போன் அடிக்கவும் எடுத்து பார்த்த அமுதன் ஸ்ரீயிடம் நீட்டினான்.

"யாரு?" என்று கேட்டபடி வாங்கியவள் மிருதியின் எண்ணை கண்டதும் எதிரே இருக்கும் மூவரின் முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்தாள்.

"என்ன அப்படி முழிக்கிற? உங்க பாசக்கார அக்கா தான? எடுத்து பேசு" என்றான் அமுதன் நக்கலாய் புன்னகைத்து.

"ஹுக்கும்.. முதல்ல யாருக்கு உயிரோட ஒட்டியிருக்க பிரெண்ட்னு மறந்து போச்சோ?" என்று இவளும் நக்கலாக கேட்க...

இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு முகத்தை திருப்பி கொண்டனர்.

இவர்களின் சண்டையை கண்ட தீரன் தலையில் அடித்து கொண்டு அவர்கள் இருவர் தலையிலும் தட்டினான்.

"என்ன இங்க யார் அதிகமா முறைக்கிறாங்கன்னா போட்டி வச்சிருக்காங்க? முதல்ல போன் அட்டெண்ட் செஞ்சு பேசு" என்றான் ஸ்ரீயிடம்.

"சரி மாமா" என்று அட்டெண்ட் செய்ய சரியாக அலைபேசியின் ஒலி நின்றது.

"அதானே பார்த்தேன்" என்று சிரித்தான் அமுதன்.

"நீ வேற ஏன்டா?" என்று முறைத்தான் தீரன்.

மீண்டும் அலைபேசி ஒலிக்க, எடுத்து " ஹலோ!" என்றாள்.

"எங்க இருக்க?" என்றாள் மிருதி.

"ஏன்கா இங்க தான் அமுதன் வீட்ல. என்னாச்சு?" என்றாள் ஸ்ரீ.

"ஹ்ம்ம். எதுவும் ஆகலை." கோபமாக.

"அப்போ சரி போன் வைக்கட்டுமா?" என்றாள் ஸ்ரீ வேண்டுமென்று.

"அடியே நக்கலா உனக்கு?"

"இல்லையே" என்றாள் ஸ்ரீ பாவமாக.

"ஏன் சொல்லமாட்ட? எனக்குன்னு வந்து வாய்க்கிறது எல்லாம் அப்டி தானே இருக்கு" என்று மிருதி புலம்பினாள்.

புன்னகையை அடக்கி கொண்டே, "அக்கா நான் என்ன பண்ணேன்?" என்று ஸ்பீக்கரில் போட.

"நீ எதுவும் பண்ணலை. உங்க மாமாக்கு உடம்பு சரி இல்லை. எங்க போனார்ன்னே தெரியலை. நீயோ இல்ல அந்த தடி மாடோ இங்க இருந்தா கூட இருந்திருக்கலாம்ல" என்றாள் லேசான வருத்தமான குரலில்.

"அக்கா உனக்கு தான் மாமா வேணாம்னு டைவோர்ஸ் வாங்கிடல்ல? அப்புறம் எதுக்கு இந்த அக்கறை? மாமா எப்படி இருந்தா உனக்கென்ன? அவரை பார்த்துக்க அவருக்கு தெரியும்" என்றாள் ஸ்ரீ வெடுக்கென்று.

"அயோ! உனக்கு போய் போன் பண்ணேன் பாரு. எல்லாமென் தலை எழுத்து" என்று வைத்தாள் மிருதி.

எல்லோரையும் பார்த்து பெரு மூச்சு விட்டவன்.

'மனசுக்குள்ள இவ்ளோ காதலை வச்சுக்கிட்டு எல்லாத்தையும் மறைக்கிறது? உன்னை..' என்று பொருமினான்.

"சரி ஸ்ரீ. நான் சொன்ன மாதிரி கரெக்ட்டா செஞ்சுடு" என்றான்.

"மாமா! அக்கா.." என்று இழுக்க.

"கவலையே படாத ஸ்ரீ. அந்த எமலோகத்துக்கே அனுப்ப முடியாதுன்னு ஒற்றை கால்ல நிக்கிறேன். இதுல வெளிநாட்டுக்கா போகவிடுவேன். அவ எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் நான் கவனிச்சிட்டு தான் இருக்கேன். அதனால திங்கள் தான் அவளுக்கு பிளைட். ஆனா ஆப்ரேஷன் வெள்ளியே முடிஞ்சிரும். பார்ப்போம். எல்லாம் நல்லத்துக்கே. நான் கிளம்புறேன். கொஞ்சம் வேலை இருக்கு. திஷாவை நீ கூட்டிட்டு போய்டு. " என்றான்.

"அய்யய்யோ திஷா எல்லோரும் இங்க தான் இருந்தோம்னு சொல்லிட்டா" என்றாள் ஸ்ரீ.

"இல்லடா. அவளுக்கு நீ வந்ததும் இப்போ இங்க நடந்தது எதுவும் தெரியாது. நான் பாரக்க வந்தேன்னு மட்டும் சொல்லி சாமளிச்சுக்க"என்று நண்பனுடன் கிளம்பி சென்றான் தீரன்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
299
Reaction score
220
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 43:

திஷாவை கூட்டி கொண்டு வீட்டினுள் நுழைய, குழந்தையை கண்ட மிருதி ஓடி சென்று அனைத்து கொண்டாள்.

சிலநொடிகளில் தான் தான் குழந்தையை அணைத்திருக்கிறோம் அவள் சிலை போல் நிற்பதை கண்டு அதிர்ச்சியாகி, "பாப்பா! என்னடா?" என்று கேட்க எதுவும் பேசாமல் விலகிய திஷா.

"ஸ்ரீ மா. வாங்க அங்க நம்ம வீட்டுக்கு போகலாம்" என்று ஸ்ரீஷாவின் கரத்தை பற்றி அழைக்க அவளே ஒரு நொடி அதிர்ந்து தான் போனாள்.

"ஏன்டா தங்கம். அப்பா உங்களை இங்க என்கூட தான் இருக்க சொன்னார். அப்பா வாட்டும் ங்க கூட்டிட்டு போய் விடறேன் சரியா?" என்று கேட்டாள்.

மிருதியை ஒரு நொடி திரும்பி பார்த்த திஷா, " சரி ஸ்ரீ மா. அப்போ உன் ரூம்ல நான் இருக்கேன்" என்று அவள் அறைக்குள் சென்று விட்டது.

குழந்தையின் நிராகரிப்பு மிருதியின் மனதை வெகுவாய் பாதித்தது.

அதே இடத்தில் தரையில் மடங்கி அமர்ந்து அழ தொடங்க, வேகமாக அவளை அணைத்து கொண்டு" விடுங்கக்கா.. சின்ன குழந்தை அவளுக்கு என்ன தெரியும்?" என்று தேற்றினாள்.

"இல்ல ஸ்ரீ. அவ சின்ன குழந்தையில்ல. என் மேல எவ்ளோ வெறுப்பு இருந்தா என்னை பார்த்து பேசாம போவா" என்று கண்ணீர் சிந்த.

"அதெல்லாம் ஒன்னுமில்ல. அவளுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். " என்று சமாதானம் செய்தபின் திஷாவிடம் சென்றாள்.

நோட்டில் ஏதோ ஒரு படத்தை வரைந்து வண்ணங்கள் அடித்து கொண்டிருந்த திஷா, இவளை கண்டதும் "அப்பா வந்துட்டாரா ஸ்ரீ மா. போலாமா?" என்று கேட்டாள்.

"இல்லடா இன்னும் அப்பா வரலை. சரி நீ ஏன் அம்மாகிட்ட பேசலை? அம்மாவை பிடிக்காதா உனக்கு?" என்றாள்.

"எனக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும் ஸ்ரீ மா. அதான் பேசலை" என்றால் திஷா.

"என்னடா சொல்ற?" என்று கேட்கவும்.

"உங்களுக்கு தெரியுமா ஸ்ரீ மா. தினமும் நைட் அப்பா அம்மாவை நினைச்சு அழறாங்க. அம்மா ஏன் என்னை வேணாம்னு சொல்லிட்டாங்க" என்று கண் கலங்கியது.

"அழக்கூடாது. எல்லாம் சரி ஆகிடும்" என்று அவளுக்கு உணவளித்து உறங்க வைத்தாள்.

பின் தீரன் திஷா வை கூடி வருமாறு கூற, தூங்கும் குழந்தையை உறக்கம் கலையாமல் கொண்டு கிடத்தி வந்தாள்.

மறுநாள்,

"அக்கா! எங்க டாக்டர் கிட்ட கேட்டு உங்களுக்கு பத்து நாளைக்கு டையட் சார்ட் வாங்கிட்டு வந்துருக்கேன். இன்னைலர்ந்து நான் தான் தருவேன். நீங்க என்ன சாப்பிடனும்னு" என்றாள் ஸ்ரீ.

"எனக்கு எதுக்குடா?" என்று கேட்க.

"அதெல்லாம் எனக்கு தெரியாது நம்ம ரெண்டு பேருக்கும் இதே டையட் தான்" என்று இரண்டு நாளும் மறுத்துவர் கூறியவற்றை மிருதிக்கு சந்தேகம் வராத வண்ணம் செயல் படுத்தினாள்.

"அக்கா நாளைக்கு காலைல என் பிரென்ட் ஹாஸ்ப்பிட்டல்ல ப்ளட் டொனேட் பண்றாங்க. நான் போய்ட்டு வந்திடறேன்" என்றாள் ஸ்ரீஷா.

"பிளட் கேம்ப் பா. நானும் பிளட் கொடுப்பேன். நாணும் வரேன் ஸ்ரீ" என்றாள் மிருதி.

"சரிக்கா" என்று உள்ளே சென்றவள்.

"என் வேலை முடிந்தது" என்று குறுந்செய்தி அனுப்பினாள் தீரனுக்கு.

"சரி பார்ப்போம்" என்றான் அவனும்.

மறுநாள், இருவரும் தயாராகி மருத்துவமனை சென்றனர்.

"என்ன யாரையும் காணோம்" என்றாள் மிருதி.

"இந்த டைம் ல ஒரே இடத்துல கூட்டம் ஸ்ரேயா மாட்டாங்க. தனி தனியா தான் எடுக்கிறாங்க." என்று தீரன் கூறிய அறையில் மிருதியை கொண்டு சேர்த்தாள்.

அங்கு மருத்துவர் பொதுவான கேள்விகளை கேட்டு பின் ஊசியை போடவர, "எதுக்கு ஊசி?" என்றாள்.

"பிளட் கொடுக்கிற எல்லாருக்கும் ஊசி போட்டுடி தான் எடுக்க சொல்லிருக்காங்க" என்று ஸ்ரீயின் தோழி நர்ஸ் கூற ஊசியை அமைதியாய் போட்டு கொண்டாள்.

சற்று நேரம் கழித்து கண்கள் ஏனோ சுழவது போல் இருக்க, "ஏன் எனக்கு தலை சுத்தற மாதிரி இருக்கு?" என்றாள் அரை மயக்கத்தில்.
அந்நேரம் உள்ளே நுழைந்தால் அமுதன்.

"என்ன அமு நீ இங்க?" என்றாள் ஆச்சரியமாய்.

"பிளட் கேம்ப் இல்ல. அதான் பிளட் கொடுக்க வந்தேன்" என்றான். அவனின் பேச்சை கேட்கும் முன்னே மயக்க நிலைக்கு சென்றாள் மிருதி.

அடுத்த சில நிமிடங்கள் அனைவரும் வேகமாய் செயல் பட, தீரனும் சேர்ந்து கொண்டான்.

"மாமா பாப்பா!" என்றாள் ஸ்ரீஷா.

"அம்மா வந்துருக்காங்க. அவங்ககிட்ட இருக்கா." என்றான் லேசான பதட்டத்துடன்.

"எதுவும் ஆகாது தீ நல்லா இருப்பா. டென்சன் ஆகாதிங்க" என்று அமுதன் தோளை தட்டி கொடுத்தான்.

அனைத்து இறைவனையும் வேண்டி கொண்டு அமர்ந்திருந்தார்கள்.

நான்கு மணி நேரம் கடந்துருக்க, எவருமே வெளிவராத நிலையில் தீரனுக்கு உயிரே போய் விடுவது இருந்தது.

மருத்துவரின் வரவுக்காக காத்துக் கொண்டிருந்தான்.

அரைமணி நேரம் சென்ற பின் வெளி வந்த மருத்துவர்.

"ஆப்ரேஷன் நல்லபடியா முடிஞ்சுது.. இருந்தாலும் ஆனா இன்னும் அபாயகட்டத்தை தாண்டலை. அவங்க இன்னும் ஐ.சி.யூ ல தான் இருக்கணும். மூணு மணி நேரத்துக்குள்ள அவங்க ரெஸ்பான்ஸ் பண்ணலைன்னா கோமாவுக்கு போறதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு. எங்களால முடிஞ்ச எல்லாத்தையும் செஞ்சிருக்கோம். இதுக்கு மேல கடவுள் விட்ட வழி" என்று சென்றுவிட்டார்.

தீரனுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு பக்கம் பயமாக இருந்தது.

மிருதியின் முகத்தை கையில் ஏந்தி எழுப்ப வேண்டும் போல் தோன்றியது.

"நான் கொஞ்ச நேரம் வெளிய போய்ட்டு வரேன்." என்று கீழே இருந்த கோவிலில் வந்து கண்மூடி அமர்ந்து கொண்டான்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
299
Reaction score
220
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 44


இரு கரம் கூப்பி இறைவனை உள்ளத்தில் உள்வாங்கி கண்ணீர் வழிய விழிமூடாது மனமுருகி வேண்டி கொண்டிருந்தான் தீரன்.

அருகிருந்த தூணில் சாய்ந்து விழிமூடி அமர்ந்தவன் மனம் முழுவதும் மிருதியின் உடல், நலம் பெற வேண்டுமென்று வேண்டுவதில் மட்டுமே இருந்தது.

"கடவுளே யாருக்குமே தீங்கு நினைக்காத நல்ல பொண்ணு என் மிருதி. அவ எந்த பாவமும் செய்யாத பொழுது எதுக்கு இந்த தண்டனை. என் திஷா அவ அம்மா இல்லாம எப்படி இருப்பா. என் ஆயுளை எடுத்துக்கோ என் மிருதி நல்லபடியா குணமாகி வரனும். நான் செஞ்ச தப்புக்கு தான் அவ என் மேல கோபமா இருக்காளே தவிர வேற எதுவுமே இல்ல. என் மேல உயிரையே வச்சிருக்கா. எனக்கு கடவுள் கொடுத்த பொக்கிஷத்தை வச்கு காக்க தெரியாத ஜடமா இருந்திருக்கேன் இத்தனை நாள். அவளை என் உள்ளங்களில வச்சு தாங்கணும்னு ஆசையா இருக்கு. ஒரே ஒரு முறை எனக்கு அந்த வாய்பை கொடுங்களேன்." என்று மனமார மன்றாடி கொண்டிருந்தான்.

இவனின் வேண்டுதல் அங்கே இறைவனுக்கு கேட்டு விட்டதோ என்னவோ? அவனை மேலும் சோதிக்க நினைத்து சிரித்தாரோ என்னவோ யார் அறிவார்???

அங்கே மிருதியின் பூ உடல் பூகம்பமாய் தூக்கி போட ஆரம்பித்தது.

மருத்துவர்களும் பதறி போய் அவளுக்கு தேவையான சிகிச்சைகளை அவசரகதியில் பதட்டமாய் செய்து கொண்டிருந்தனர்.

நீண்ட நேரம் போராடியும் அவளின் உடல் சமாதானம் அடைந்த பாடில்லை.

மிருதியின் அறை வாசலில் நின்று கொண்டிருந்த அமுதனுக்கும் ஸ்ரீஷாவிற்கும் என்ன நடக்கிறது என்றே யூகிக்க முடியவில்லை.

மருத்துவர்களும் செவிலியர்களும் மாற்றி மாற்றி அறைக்கு உள்ளேயும் வெளியேவும் பரபரப்பாய் இயங்கி கொண்டிருந்ததை கண்டு மிகவும் பயந்திருந்தனர்.

"அமுதா. மாமாக்கு போன் பண்ணு." என்றாள் ஸ்ரீஷா.

"எதுக்குடா?" என்றான் அவனும் கவலையான குரலில்.

"என்ன எதுக்கு? இங்க அக்காக்கு திடீர்னு என்ன நடக்குதுன்னே தெரியலை. மாமா இங்க இருக்க வேண்டாமா?" என்றாள் கோபமாய் ஸ்ரீஷா.

"இல்லடா. மிருதிக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு ஏற்கனவே அவரே ஏற்கனவே ரொம்ப பயந்து போயிருக்காரு. இதுல நாம இப்போ போன் பண்ணனுமா?" என்றான் தயக்கமாக.

தெய்வத்தின் முன் மண்டியிட்டு மனதால் கதறிக்கொண்டிருந்த தீரனுக்கு மனதில் சிறு நெருடலும் அதை தொடர்ந்து படபடப்பும் தோன்ற வேகமாய் எழுந்து மின்னலென மருத்துவமனை நோக்கி ஓடினான்.

"இருந்தாலும் மாமாக்கு சொல்லனும். நீங்க முதல்ல போன் பண்ணுங்க.." என்று முடிக்கும் முன்னரே மூச்சு வாங்கியபடி அவர்களின் முன் வந்து நின்றான்.

"என்னாச்சு ஸ்ரீ? மிருதி நல்லா இருக்காள்ல?" என்று கேட்டுக்கொண்டே வியர்வையில் நனைந்திருந்த முகத்தை துடைத்தான்.

"இல்ல மாமா. அதுவந்து அக்காக்கு..." என்று முடிக்காமல் பதட்டமாய் இழுக்க, தீரனுக்குள் பூகம்பமே வெடிப்பது போல் இருந்தது.

"என்ன ஏன் தயங்குற? மிருதிக்கு என்ன?" என்று கேட்டுக்கொண்டே மிருதியின் அறைமுன் நின்றான்.

அறை கதவின் கண்ணாடி வழியே எட்டி பார்க்க அவனுக்கு தூக்கிவாரி போட்டது.

"அய்யய்யோ எதுக்கு மிருதிக்கு இப்படி ஆகுது? அமுதா ஏன் டாக்டர்ஸ் எதுவும் பண்ணாம இருக்காங்க?" என்று கதற, "மிருதிக்கு எதுவும் இல்லை தீரன். நீங்க இப்படி அழுதா அவளுக்கு எப்படி சரியாகும்?" என்று ஆறுதல் கூறினான் அமுதன்.

இருபது நிமிடங்கள் கடந்திருக்க மிருதியின் உடல்நிலையோ தொடர்ந்து அவ்வாறே இருக்க, பொறுக்க முடியாமல் தடுப்புகளையும் மீறி உள்ளே நுழைந்தான்.

"சார் நீங்க உள்ள வரக்க கூடாது. ப்ளீஸ் வெளியே இருங்க" என்று நர்ஸ் கூறுவதை காதில வாங்காமல் உள்ளே சென்றான்.

"நர்ஸ்" என்று டாக்டர் கத்த,

"டாக்டர் ... ப்ளீஸ் ஒரே ஒரு முறை நான் அவகிட்ட பேசுறேன்" என்று அவரின் முன் மண்டியிட, "என்ன சார் நிலவரம் புரியாம பேசறீங்க? ப்ளீஸ் முதல்ல வெளிய போங்க. அவங்களை காப்பதணும்ல எங்களை ட்ரீட்மெண்ட் செய்ய விடுங்க" என்றார் கடுமையாக.

"ப்ளீஸ் டாக்டர். ரெண்டே ரெண்டு நிமிஷம். நானும் அவளுக்காக தான் கேட்கிறேன். அதுக்கு பிறகு நான் வெளிய போய்டறேன்" என்று காலை பிடித்துக்கொண்டு கெஞ்சும் தீரனை பார்க்க மருத்துவருக்கே பாவமாய் இருக்க தாமதிக்காமல், "சரி ரெண்டே ரெண்டு நிமிஷம் மட்டும் தான்" என்று மருத்துவரும் செவிலியர்களும் விலகி நின்றனர்.

அவளின் முன் மண்டியிட்டு கரங்களை பற்றி இதழ் பதித்து அவளின் காதருகே பேச தொடங்கினான்.

"மிரு..." என்ற அவனின் குரலுக்கே அவளின் மூடிய விழிகளில் கண்ணீர் வழிய, "மிரு.. எனக்கு தெரியும் நான் பேசுறது உன் காதுல விழுகுது.நீ கேட்டுட்டு இருக்க.

அம்மு. உனக்கு என் மேல தான கோபம். ஆனா உன்னையே நம்பி ஒரு உயிர் காதோடு இருக்கே. அதுக்கு நான் என்ன பதில் சொல்வேன். அம்மா எங்கப்பா ன்னு என்கிட்ட கேட்கிறாளே என்ன சொல்லட்டும்.

நீ என்னை மன்னிக்க வேண்டாம். தப்பு தான் உனக்கு தெரியாம இந்த ஏற்பாடு பண்ணது. நீ இல்லன்னா நாங்களும் இல்ல மிரு.

உனக்கு பிடிக்கலைன்னா இனி நீ இருக்க பக்கம் கூட நான் வரமாட்டேன். தயவு செஞ்சு வந்துரு மிரு. உன்னோட பொண்ணுக்காகவாது இதிலர்ந்து சீக்கிரம் மீண்டு வந்துருடி. உன்னால முடியும்.." மீண்டும் அவளின் கரத்தில் இதழ் பதிக்க அவளின் சொற்கள் அவளுக்கு கேட்டது போல அவளின் உடல் மெல்ல அமைதியடைந்தது.

இதை கண்ட தீரனுக்கு நிம்மதி பெரு மூச்சு வர எழுந்து மருத்துவரை பார்த்து கண்ணீருடன் கரம் கூப்பினான்.

"ரொம்ப நன்றி டாக்டர்" என்று வெளியே சென்று நாற்காலியில் விழிமூடி அமர்ந்து கொண்டான்.

அங்கிருந்த அனைவரும் அவனையும் மிருதியையும் ஆச்சரியமாய் பார்த்து கொண்டிருந்தனர்.

"இன்னும் ரெண்டு நாள் ஐ. சி.யூ ல தான் இருக்கணும். இன்னும் அபாய கட்டத்தை தாண்டலை. எதுவும் ஆகாதுன்னு கடவுளை வேண்டிப்போம். கண் திறக்கலைன்னா அடுத்து கோமா தான் " என்று சென்று விட்டார்.

அமுதனும் ஸ்ரீஷாவும் அதிர்ச்சியாக ஒருவரை பார்த்துக்கொண்டனர்.

அதன் பின்னர் மிருதியின் அரை வாசலிலேயே இருந்தான் தீரன்.

"நீங்க மட்டும் எப்படி இருப்பீங்க? நாங்க போகலை. இங்கயே இருக்கோம்." என்றான் அமுதன்

"ஆமா மாமா. நான் போகமாட்டேன்" என்று ஆடம் பிடித்து கொண்டிருந்தாள் ஸ்ரீஷா.

"ஸ்ரீ மா. பாப்பா வீட்ல இருக்கா. அம்மாவால நான் இல்லாம சமாளிக்குறது கஷ்டம்டா. நீங்க இருந்திங்கன்னா அமைதியா இருப்பா. அதுவுமில்லாம காலைலர்ந்து இங்கயே இருக்கிறது டையர்ட்டா இருக்கும். வீட்டுக்கு போய் குளிச்சு சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. காலைல வாங்க" என்று இரவு அமுதனையும் ஸ்ரீரிஷாவையும் வற்புறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.

அவர்களும் அவனை சாப்பிட வைத்த பின்னரே வீட்டிற்கு சென்றனர்.

அவ்வப்பொழுது கண்ணாடி வழியே மிருதியை பார்த்து கொண்டே இருந்தான் தீரன்.

இரவு முழுவதும் உறங்காமல் அதிகாலையில் அமர்ந்தபடியே உறங்கி போனான்.

இரண்டு நாட்களுக்கு இப்படியே கடந்து போக டாக்டர் விதித்த கெடு படி இன்று மிரு கண் விழித்தாக வேண்டும்.

நார்மல் அறைக்கு மாற்றியிருந்தார்கள் மிருதியை.

எல்லோரும் அவள் கண்விழிக்க வேண்டுமென்ற தவிப்பிலும் பயத்திலும் அமர்ந்திருக்க தீரன் மட்டும் அமைதியாய் இருந்தது இருவருக்கும் வினோதமாய் இருந்தது.

மாலையும் வந்தது.

மருத்துவரும் வந்தார்.
 
Top Bottom