Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed பண்ணையார் தோட்டம் மர்மம்

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
111
Reaction score
52
Points
28
⬇️அத்தியாயம் ...30 👇


சங்கருக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி அவன் எதிர்பார்த்ததைவிட நல்ல தகவல் .... காணாமல் போனவர்களை பற்றி நல்ல தகவல் கிடைத்ததை நினைத்து சந்தோஷத்துடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான் கையில் மல்லிகைப்பூவும் சிறிது அல்வாவும் வாங்கிக்கொண்டு..

முதலில் இந்த சந்தோஷமான செய்தியை பண்ணையாரிடம் சொல்லிவிட்டு பிறகு ரேகாவிடம் சொல்லலாம் என்று யோசித்துக்கொண்டே வந்தான் சங்கர்..


நம்முடைய சந்திரன் திருமணத்தை நமது அம்மன் கோவிலிலே நடத்தலாம் என்று என் நண்பன் முத்தையாவும் ஊர் மக்களும் ஆசைப்படுகிறார்கள் . அவர்களின் விருப்பப்படியே நம் சந்திரனின் திருமணத்தை அம்மன் கோவிலிலே நடத்தலாம் நீ என்ன சொல்ற பரந்தாமா ..என்று பண்ணையார் கேட்டார்..

ஊர் மக்கள் ஆசைப்படியே அம்மன் கோவிலில் நடத்தலாம் அப்பா... ஆனால் கொஞ்ச நாள் போகட்டும் பிறகு திருமண வேலையை ஆரம்பித்துவிடலாம் என்று பரந்தாமன் சொன்னான்...

என்னங்க ..இன்னும் நாளெல்லாம் தள்ளிப்போட வேண்டாம் சீக்கிரமாகவே சந்திரன் திருமணத்தை முடிக்க வேண்டும் ஏனென்றால் ஏற்கனவே நிறைய நாள் தள்ளிப் போய்விட்டது இன்னும் நாட்களை தள்ளிப்போட வேண்டாம் அதனால் இன்னும் சில வாரங்களில் சந்திரன் திருமணத்தை முடிக்க வேண்டும் என்று சாந்தி சொன்னாள்...

பரந்தாமன் யோசித்துப் பார்த்தான்

காணாமல் போனவர்களை சங்கர் கண்டுபிடித்துவிட்டால் அப்போது தெரியும் உங்களுக்கு எங்களைப் பற்றி ... இது தெரியாமல் எப்ப பார்த்தாலும் கல்யாண பேச்சு பேசிக்கொண்டு இருக்கிறார்கள் இன்னும் கொஞ்ச நாள்ல எங்களுடைய சுயரூபத்தை தெரிஞ்சுக்கோவிங்க அந்த நாள் நெருங்கிக்கொண்டு வருது இந்த நிலைமையில எப்படி சந்திரன் திருமண வேலையை பார்க்க முடியும் என்று பரந்தாமன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான்..


சந்திரனுக்கும் தீனாவுக்கும் புரிந்தது.. அண்ணன் திருமணத்தை தள்ளிப்படுவது எதனால் என்பது...

சாந்தி சொல்வதைப்போல சந்திரன் திருமணத்தை இன்னும் தள்ளிப்போட வேண்டாம் பரந்தாமா என்று பண்ணையார் சொன்னார்..

கோவிலில் சில அலங்கார வேலைகள் செய்துவிட்டு பிறகு திருமணத்தை கோவிலில் நடத்தலாம் என்று நினைத்துதான் நான் அப்படி சொன்னேன் அப்பா...

எனக்குத் தெரியும் ....நீ ஏதாவது ஒரு முடிவு செய்தாள் அதற்கு சரியான காரணம் இருக்கும் என்பது எனக்கு தெரியும் பரந்தாமா ....கோவிலில் உள்ள வேலைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் முதலில் சந்திரன் திருமணத்தை நடத்தி விடலாம் என்று பண்ணையார் உறுதியாக சொன்னார்...

இப்படி குடும்பத்தோடு பண்ணையார்... சந்திரன் திருமணத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது வெளியில் ...ஐயா.. ஐயா என்ற குரல் கேட்டது..

இது சங்கர் குரல் மாதிரி இருக்கே என்று சொல்லிக்கொண்டே சாந்தி எழுந்து வந்து வெளியில் பார்த்தாள்... சங்கர் நின்றுகொண்டிருந்தான்..

வாப்பா உள்ளே... என்று சிரித்துக்கொண்டே சங்கரை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றால் சாந்தி..

சங்கரை பார்த்ததும்... பரந்தாமனுக்கும் சந்திரனுக்கும் தீனாவுக்கும் சற்று லேசான பயம் தோன்றியது..

வாப்பா சங்கர் ...என்ன இன்னைக்கு ரொம்ப சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்துட்ட. கையில பூவோடு ஏதாவது விசேஷமா என்று சிரித்துக்கொண்டே புன்னகையோடு கேட்டார் பண்ணையார்..

விசேஷமான செய்தி தான் ஐயா எனக்கு மட்டும் இல்ல நம்ம எல்லோருக்கும் தான் என்று சங்கர் சந்தோஷத்துடன் சொன்னாள்..

அப்படியா என்ன விஷயம்...

நம்ம கனகா குடும்பமும் .ஏற்கனவே காணாமல் போன பெரியவரின் மகனும் மருமகளும் உயிரோடுதான் இருக்கிறார்கள் ஐயா..


பண்ணையாரும் சாந்தியும் ஒரு கணம் ..சந்தோசத்தில் அப்படியே சங்கரை பார்த்தபடி நின்று விட்டார்கள்...

நீங்க சொல்றது உண்மையா என்று ஆச்சரியத்தோடு கேட்டால் சாந்தி..

ஆமாம் ...நான் அவர்களை பற்றின முழு தகவலும் இன்று எனக்கு கிடைத்துவிட்டது . கனகா குடும்பமும் அந்த பெரியவரின் மகன் குடும்பமும் ஒரே ஊரில் சந்தோஷமாக தான் வாழ்ந்து வருகிறார்கள் என்று சங்கர் சொன்னான்..

பரந்தாமன் சந்திரன் தீனா மூவருக்கும் பயத்தில் தலையே சுற்றியது . இனிமேல் நம்முடைய வாழ்க்கை முடிந்துவிட்டது என்று மூவரும் நினைத்து . என்ன செய்வது என்று தெரியாமல் வாயடைத்துப்போய் இருந்தார்கள்..

பண்ணையார் உடனே எழுந்து சங்கரின் அருகில் வந்து ..கட்டி அணைத்துக் கொண்டார் அப்போது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் கண்களில் முட்டிக்கொண்டு இருந்தது..

ஆரம்ப காலத்தில் முத்தையா என்னுடைய எத்தனையோ தீர்க்கமுடியாத பிரச்சனைகளை தீர்த்து வைத்து என்னை கௌரவமாக பார்த்துக்கொண்டான் அதேபோல நீயும் உன் அப்பனைப் போலவே என்னுடைய தீர்க்க முடியாமல் இருந்த இந்த காணாமல் போன குடும்பத்தை நீ கண்டுபிடித்து விட்டாய்.. உன் குடும்பத்திற்கு நான் ஏழேழு ஜென்மமும் சேவை செய்ய கடமைப்பட்டிருக்கிறேன் சங்கர் என்று உருக்கமாக சொன்னார் பண்ணையார்...

பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லாதீங்க ஐயா..

என் மூன்று மகன்களும் இவ்வளவு நாளா தேடியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை . ஆனால் நீ கொஞ்ச நாளிலே அவர்களை எப்படிப்பா கண்டுபிடித்தாய் என்று பண்ணையா சங்கரிடம் கேட்டார்..

எல்லாம் உங்களுடைய யோசனைப்படிதான் அவர்களை திட்டம்போட்டு தேடினேன் அவர்களும் கிடைத்து விட்டார்கள் ஐயா..

அவங்க எந்த ஊரில் இருக்கிறாங்க சங்கர் ..அவர்களை என்னைக்கு அழைத்துக் கொண்டு வர போறீங்க என்று சாந்தி கேட்டாள்..

அவர்களை பற்றின எந்த தகவலையும் கேட்க வேண்டாம்... ஏனென்றால்... ஐயா சொன்னது போல நம்முடைய எதிரி பக்கத்தில் தான் இருக்கிறான் இந்த தகவல் அவனுக்கு தெரிந்தால் ஆபத்து அந்த இரண்டு குடும்பங்களுக்கும் தான் ஏற்படும் அதனால் அவர்களைப் பற்றின தகவல் ரகசியமாகவே இருக்கட்டும் அவர்களை இன்னும் மூன்று நாட்களில் அவர்களை நம் ஊருக்கு அழைத்துக்கொண்டு வந்துவிடுவேன் என்று சங்கர் சொன்னான்..

நீ சொல்வதும் சரிதான் ... அவர்களை பாதுகாப்பாக நீதான் இந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும் அதனால் நீ அவர்களை பற்றிய தகவலை ரகசியமாகவே வைத்துக் கொள் ... அதேசமயம் இந்த இனிப்பான செய்தியை நம் ஊர் மக்களுக்கு.. நீயும் உன் மனைவியும் சொல்லுங்கள் அப்போதுதான் ஊர் மக்கள் எல்லோருக்கும் சந்தோஷமாக இருக்கும் ...அந்த பெரியவரிடமும் கனகாவின் சொந்தங்களிடம் இந்தத் தகவலை சொல்லுங்கள் அப்போதுதான் அவர்களுக்கு நிம்மதி பிறக்கும் என்று ஆனந்தத்தோடு சொன்னார் பண்ணையார்...

அப்போது பரந்தாமனுக்கு தன்னுடைய எதிர்காலம் முடிந்துவிட்டது என்று நினைத்து அவன் கண்களில் கண்ணீர் வழிய தொடங்கியது..

பரந்தாமா.. நம்முடைய குடும்ப கௌரவத்தை சங்கர் காப்பாற்றி விட்டான் அதே போல அவனுடைய குடும்பத்தையும் கௌரவமாக பார்த்துக்கொள்வது நம்முடைய பொறுப்பு. நான் இறந்து விட்டாலும் . நீங்கள் சங்கரை எந்த ஒரு பிரச்சனை இல்லாமல் அவனை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பண்ணையார் பரந்தாமனை பார்த்து சொன்னார்...

தன்னுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்து கண்கலங்கி கொண்டிருந்த பரந்தாமன் . பண்ணையார் சொன்ன வார்த்தையை கேட்டு என்ன சொல்வது என்று தெரியாமல் தலையை அசைத்தபடி நின்றான்..

சந்தோசத்தில் அழுகிறார் என்று நினைத்து ..சாந்தி பரந்தாமனை பார்த்து சொன்னாள்... என்னங்க இனிமேல் உங்கள் ஆசைப்படி உங்கள் தம்பியின் திருமணத்தை சிறப்பாக நடத்துங்கள் இனி உங்களுக்கு எந்த குறையும் வராது என்று சொல்லிக்கொண்டே பரந்தாமனின் கண்ணில் வடியும் நீரை துடைத்தால் சாந்தி...

நம்மீது உள்ள பாசத்தினால் இப்படிப்பட்ட தவறை செய்துவிட்டு நமக்காக இப்போது அண்ணன் கவலையில்
அழுது கொண்டிருக்கிறார் என்று நினைத்து சந்திரனும் தீனாவும் பெரும் சோகத்தில் தலை குனிந்து கொண்டார்கள்..

காணாமல் போன குடும்பத்தின் மீது இவ்வளவு பாசமாக இருக்கிறார்களே பண்ணையார் குடும்பம் . எல்லோரும் ஆனந்தத்தில் அழுகிறார்களே என்று நினைத்து பெருமைப் பட்டான் சங்கர்...

ஐயா ...நான் கிளம்புகிறேன்
இந்த செய்தியை நான் உடனே ஊருக்குள்ளே சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு சங்கர் அங்கிருந்து கிளம்பி விட்டான்..

சங்கர் கையில் பூவோடு வேகமாக நடந்து வருவதை பார்த்து ரேகாவுக்கு ஆச்சரியமாக இருந்தது என்ன இன்னைக்கு மாமா சீக்கிரமாகவே வந்துவிட்டார் .. அப்படி என்றால் ஏதாவது நல்ல செய்தியாக இருக்குமா என்ற எதிர்பார்ப்போடு சங்கரை பார்த்தபடி நின்றிருந்தாள் ரேகா..

சங்கர் வந்ததும் கையிலிருந்த பூவையும் அல்வாவையும் ரேகாவிடம் கொடுத்துவிட்டு உடனே ரேகாவை தூக்கிக்கொண்டு சிரித்தான் சங்கர்..

ஐயோ கீழே இறக்குங்கள் விழுந்திட போறேன் என்று சிரித்துக்கொண்டே ரேகா சங்கரின் தோளை பிடித்தபடி இறங்கினாள்..

ஏ புள்ள ..காணாமல் போன கனகா குடும்பத்தையும் ஏற்கனவே காணாமல் போன அந்த பெரியவரின் மகன் குடும்பத்தையும் கண்டுபிடித்துவிட்டேன் என்று சந்தோசமாக சொன்னான் சங்கர்..

எனக்கு தெரியும் இன்னைக்கு ஏதாவது ஒரு நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருந்தது மாமா..

இன்னும் கொஞ்ச நாள்ல அவங்கள இந்த ஊருக்கு கூட்டிட்டு வரேன்..

இந்த செய்தியை பண்ணையாரிடம் சொன்னீங்களா மாமா..

அங்கு சொல்லிவிட்டு தான் நேரா இங்கே வரேன் .. உடனே இந்த செய்தியை நம்ம ஊர் மக்களிடம் சொல்லணும் புள்ள..

கண்டிப்பா சொல்லலாம் மாமா வாங்க ஊருக்குள்ள போகலாம் என்று சொல்லிவிட்டு இருவரும் சென்றார்கள்...

🏚️🛖⛺🏘️ சங்கர் ரேகாவும் ஊருக்குள்ளே சென்று இந்த செய்தியை எல்லோரிடமும் சொன்னார்கள் ... அப்போது முத்தையாவுக்கு எல்லை இல்லா சந்தோஷம் ஏற்பட்டது ...
நம் மகனால் இந்த ஊர் மக்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கை உருவாகி விட்டது என்று நினைத்து சந்தோசத்தில் பூரித்துப் போனார் முத்தையா...

காணாமல்போன குடும்பமும் கிடைத்துவிட்டது.. பண்ணையாரின் மகன் சந்திரன் திருமணமும் நடக்கப்போகிறது . இனிமேல் நம்ம ஊருக்கு நல்ல காலம்தான் என்று நினைத்து . ஊர் மக்கள் அனைவரும் பாட்டுப் பாடியும் ஆட்டம் ஆடியும் மகிழ்ந்தார்கள்..


ஊர் மக்கள் சந்தோஷமாக பாட்டுப் பாடிக்கொண்டு ஆட்டம் ஆடுவதை பார்த்த சாட்டையடி சாமியாருக்கும் அவனது சிஷ்யர்களுக்கு எரிச்சலாக இருந்தது..

குருவே நாம இன்னும் பொறுமையாக இருந்தால் இந்த ஊர் மக்கள் நம் வார்த்தைக்கு பயப்பட மாட்டார்கள் ...
உடனே நம்ம ஏற்கனவே திட்டம் போட்டபடி பண்ணையாரின் தோட்டத்தில் உள்ள கரும்பு தோட்டத்தை தீ வச்சி கொளுத்த வேண்டும் . அப்போதுதான் இந்த ஊர் மக்கள் கவலையோடு இருப்பாங்க இல்லன்னா எல்லோரும் இப்படி சந்தோஷமாக தான் இருப்பானுங்க ...
அதுக்கு அப்புறம் நம்ம சொன்ன வார்த்தைக்கு மதிப்பு இருக்காது என்று சிஷ்யர்கள் சொன்னார்கள்..

ஆமாம் சிஷ்யா ...நீ சொல்வது சரிதான் இனியும் பொறுமையாக இருக்கக்கூடாது உடனே கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்து எரித்துவிட வேண்டும் அப்போதுதான் இந்த ஊர் மக்கள் வேலையில்லாமல் மறுபடியும் சோகத்தில் இருப்பார்கள் ..
நான் சொன்ன வார்த்தைக்கும் மதிப்பு இருக்கும் என்று சாட்டையடி சாமியார் சொன்னார்...


தொடரும்.....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
111
Reaction score
52
Points
28
⬇️அத்யாயம்-...31👇


இன்று நம் வாழ்வில் ஒரு முக்கியமான நாள் என்ற எண்ணத்தில் அதிகாலையில் எழுந்து கொண்டான் சங்கர்..

மாமா ..இன்னைக்கு காணாமல்போன இரண்டு குடும்பங்களையும் பத்திரமா அழைத்து வந்து .. முதலில் பண்ணையாரிடம் ஒப்படைத்து விடுங்கள் பிறகு அவர் அவர்களை விசாரித்து விட்டு
என்ன முடிவு செய்கிறாரோ செய்யட்டும் . என்று ரேகா சங்கரிடம் தெளிவாக சொன்னாள்..

முதலில் தேன் வியாபாரி அந்தப் பெரியவரின் ஊருக்கு சென்று கனகாவிடம்...ஏற்கனவே காணாமல் போன அந்தப் பெரியவரின் மகனிடமும் பேச வேண்டும் ..
என்ன நடந்தது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் பிறகுதான் அவர்களை இங்கு அழைத்து வர வேண்டும்..
இல்லை என்றால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் என்று சங்கர் சொன்னான்..

ஆமா மாமா ..இப்போ அந்த எதிரி நம்மை கவனிச்சுக்கிட்டுத்தான் இருப்பான் .. இவர்களை என்ன செய்யலாம் என்று
அதேபோல காணாமல் போனவர்களையும் இங்கு வர விடாமல் ஏதாவது சதியும் செய்திருப்பான் . அதனால் நீங்க கொஞ்சம் கவனமாகவே போயிட்டு வாங்க மாமா..

நீ சொல்றது ரொம்ப சரியான வார்த்தை ..அதேபோல நீயும் இங்கு பத்திரமா இரு புள்ள
நான் இங்கிருந்து கிளம்பியதும் நீயும் ஊருக்குள்ள போய்டு அதுதான் உனக்கு நல்லது யாரையுமே நம்ப முடியாது நம்முடைய எதிரி இதுவரைக்கும் யாருன்னு தெரியல ..அதனால நாம தான் உஷாரா இருக்கணும் புள்ள...


சரி மாமா நீங்க குளிச்சிட்டு கிளம்புங்க என்று ரேகா சொல்லிவிட்டு வேலையை ஆரம்பித்தாள்..

பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் அவரவர் அறையில் படுக்கையிலே படுத்துக்கொண்டு கவலையோடு இருந்தார்கள்..

காணாமல் போனவர்களை சங்கர் இன்று ..அல்லது நாளை .. அவர்களை அழைத்துக் கொண்டு அப்பாவிடம் நிறுத்திவிடுவான் கனகாவும் ஏற்கனவே காணாமல் போன குடும்பமும் சேர்ந்து அப்பாவிடம் நடந்ததை எல்லாம் சொல்லி நம்முடைய அசிங்கத்தை இந்த ஊருக்கு சொல்லிவிடுவார்கள் ...அதன்பிறகு ஊர் மக்கள் கேவலமாக பேசுவார்கள் .. நம்முடைய வருங்கால மனைவியும் நம்மை விரும்புவாளா. இல்லை திருமணத்தை நிறுத்தி விடுவாளா என்று தெரியவில்லையே ...
நாம் குடிபோதையில் தெரியாமல் தவறு செய்து விட்டோம் ஆனால் இப்போது திரிந்தி விட்டோம் இது ஊர் மக்களுக்கு புரியாது ...
இந்த ஒரு முறை நம்மை கடவுள் மன்னித்து விட்டால் இனிமேல் எந்த தவறையும் செய்யாமல் இருக்கலாம் .. ஆனால் இது நடக்காது... நிச்சயம் காணாமல் போனவர்கள் சங்கர் கண்டுபிடித்து எல்லா உண்மைகளையும் வெளியில் கொண்டு வந்துவிடுவான் இனிமேல் நம் வாழ்வில் எதிர் காலமே கிடையாது என்று கவலையோடு சந்திரன் யோசித்தபடியே படுத்திருந்தான்..

இதுவரைக்கும் கௌரவமாக மூவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம் ..ஆனால் இனிமேல் நம்முடைய வாழ்க்கையில் சந்தோஷம் என்பது கேள்விக்குறிதான் ... நம்மைவிட பெரிய அண்ணனும் சின்ன அண்ணனுக்கும்தான் அதிகமான பாதிப்பு ஏற்படும் .. ஊர் மக்கள் அண்ணன்களை அசிங்கமாக பேசினால் அவர்களால் தாங்கவே முடியாது ...அவர்களுக்கு ஏதாவது ஒரு குறை என்றால் என்னால் தாங்க முடியாது ...இனிமேல் மூன்று பேரும் இந்த ஊரில் எப்படி வாழப்போகிறோம் என்று தீனா கவலையோடு யோசித்தபடி அவனும் படுத்தபடியே இருந்தான்..


எப்படியும் காணாமல் போனவர்களை சங்கர் இன்று அல்லது நாளை கண்டுபிடித்துவிடுவான் .. நம்முடைய மானமும் போய்விடும் அதனால் நம் பம்புசெட்டில் சேர்த்து வைத்திருக்கும் பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு எங்கேயாவது போய்விடலாம் ... நம்முடைய குணத்தைப் பற்றி தெரிந்ததும் நம்முடன் மனைவியும் வரமாட்டாள் அதனால் நாம் மட்டும் இந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு எங்கேயாவது ஓடி விட வேண்டும் என்று யோசித்து இருந்தான் பரந்தாமன்...


இப்படி மூவரும் படுத்தபடியே யோசித்து இருந்தார்கள்..

என்னம்மா இவனுங்க இன்னுமா எழுந்திரிக்கவில்லை ஊரே சந்தோசத்துல 4:00 மணிக்கு எந்திரிச்சு எல்லோரும் பரபரப்பா பேசிகிட்டு இருக்காங்க இன்னைக்கு நிச்சயம் சங்கர் காணாமல் போனவர்களை கூட்டிக்கிட்டு வருவான் என்று..... ஆனால் எந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் உன் கணவனும் அவன் தம்பிகளும் இன்னும் படுத்து தூங்குறாங்களா என்று பண்ணையார் சாந்தியிடம் சொன்னார்..


என்னனு தெரியல மாமா உங்க மூன்று பிள்ளைகளும் நேற்றிலிருந்து ஒரு மாதிரியாகவே இருக்காங்க..


என்னம்மா சொல்ற அவனுஙகளுக்கு இனிமேல் என்ன குறை..

எனக்கும் அதுதான் ஒன்னும் புரியல மாமா..


அவனுங்களை உடனே எழுப்பி கல்யாண வேலைகளை பார்க்க சொல்லுமா..

சரி மாமா என்று சொல்லிவிட்டு சாந்தி பரந்தாமனிடம் சென்றள்...

என்னங்க உங்க அப்பா சத்தம் போடுகிறார் ..இன்னுமா தூங்குறாங்க என்று
கல்யாண வேலை அப்படியே இருக்குது சீக்கிரம் எழுப்பி வேலையை பார்க்கச் சொல்லு என்று கத்திக்கிட்டு இருக்காரு.. நீங்க முதல்ல எழுந்திரிங்க என்று சாந்தி பரந்தாமனிடம் சொன்னாள்..

இன்று எப்படியாவது பம்புசெட்டில் இருக்கும் பணத்தை யாருக்கும் தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்கு கொண்டுவந்து மறைத்து வைக்க வேண்டும் என்ற முடிவில் பரந்தாமன் இருந்தான்..


என்னங்க நான் கத்திககிட்டு இருக்கேன் . நீங்க எதையோ யோசித்துக்கொண்டு இருக்கீங்க என்று மறுபடியும் சாந்தி சொன்னாள்..

இன்னைக்கு தோட்டத்துல முக்கியமான வேலை இருக்குது அந்த வேலையை முடிச்சுட்டு தான் மற்ற வேலைகளை பார்க்கவேண்டும் தேவையில்லாமல் என்னை கோபப்படுத்தாதே என்று எரிச்சலோடு சாந்தியிடம் சொன்னான் பரந்தாமன்..

எந்த வேலையாவது செய்யுங்க இப்படி மூணு பேருமே படுத்துக்கொண்டு இருந்தா ஒரு வேலையும் நடக்காது.. என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் சாந்தி.


என்னப்பா ..இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துட்ட என்று தேன் வியாபாரி பெரியவர் சங்கரிடம் கேட்டார்..

ஆமாம் அப்பா ..இன்று என்னுடைய பெரிய பொறுப்பை நல்லபடியாக முடிக்க போகிறேன் என்ற சந்தோஷத்தில் கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துட்டேன் அப்பா என்று தேன் வியாபாரி இடம் சங்கர் சொன்னான்..

நாங்கள் மொத்தம் 16 பேர் இருக்கிறோம் நாங்கள் கொண்டுவந்துள்ள தேன் எல்லாவற்றையும் விற்ற பிறகுதான் எல்லோரும் ஒன்றாக ஊருக்கு செல்வோம் இதுதான் வழக்கம் இதில் வியாபாரம் இன்று சரியாக நடக்காமல் தேன் மிச்சம் இருந்தால் அதை நாளைக்கு வியாபாரம் செய்து முடித்துவிட்டு தன் இங்கிருந்து கிளம்புவோம் .. அதனால் நீ எங்களோடு என்று காத்திருக்க வேண்டும் என்று அந்தப் பெரியவர் சங்கரிடம் சொன்னார்..

நான் உங்களோடு காத்திருப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை அப்பா.. என்று சொல்லிவிட்டு சங்கர் தேன் வியாபாரிகளுக்கு உதவியாக குரல் கொடுத்தான்.. அம்மா தேன் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் காலியாகிவிடும் ...ஐயா தேன்வந்து வாங்கிக்குங்க இது உடலுக்கு ரொம்ப நல்லது என்று குரல் கொடுத்தபடியே சங்கர் தேன் வியாபாரிகளுக்கு உதவியாக வேலையை செய்தான்...


மாமாவுக்கு நண்டு குழம்பு என்றால் ரொம்ப பிடிக்கும் . அதனால் இன்று நண்டுபிடித்து குழம்பு வச்சு மாமாவை சந்தோஷப்படுத்தலாம் என்று நினைத்து .. ரேகா வயல் பகுதியில் சுற்றி சுற்றி🦀🦀 நண்டுபிடிக்க ஆரம்பித்தாள்..


பிறகு ருசியான நண்டு குழம்பை வைத்து முடித்தாள் ரேகா..

நேரம் கடந்தது...

பண்ணையார் தோட்டத்தில் விவசாய வேலைகளை முடித்துவிட்டு ரேகா பம்புசெட்டில் குளிக்க ஆரம்பித்தாள்..

அப்போது ரேகாவுக்கு சங்கர் மீது மேலும் பாசமும் ஆசையும் அதிகமானது நம்முடைய கணவரை ஊரே பெருமையாக பேசுகிறார்கள் அவருடைய சுறுசுறுப்பையும் தைரியத்தையும் நினைத்து ரேகா பெருமைப்பட்டாள் இப்படி சங்கரை நினைத்துக்கொண்டு பம்புசெட்டில் குளித்துக் கொண்டிருந்தாள் ரேகா..


பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் களத்துமேட்டில் பைக்கை நிறுத்திவிட்டு பம்பு செட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்கள்..

மூவரும் வருவதை ரேகா கவனித்தாள்...

ஐயோ பண்ணையார் மகன்கள் வராங்களே இப்ப என்ன செய்வது என்று ..உடனே குளித்து விட்டு பாவாடையை மாற்றிக்கொண்டு உடனே பம்புசெட்டில் சென்று கதவை சாத்திக் கொண்டு தாபால் போட்டுக்கொண்டால் ரேகா..

பரந்தாமனும் சந்திரனும் தீனாவும் மூவரும் பம்புசெட்டின் அருகில் வந்து நின்றார்கள் ..அப்போது பம்பு செட்டின் கதவு சாத்தி இருப்பதை மூவரும் கவனித்தார்கள் ...
ரேகா ஊருக்குள்ளே சென்று இருப்பாள் என்று நினைத்து மூவரும் அருகில் உள்ள கிணற்றின் தடுப்பு சுவர் மீது அமர்ந்தார்கள்..


பண்ணையார் மகன்கள் தோட்டத்தை சுற்றிப் பார்க்க கிளம்பி இருப்பார்கள் என்று நினைத்து பம்புசெட் உள்ளே ரேகா உடையை மாற்றுவதற்கு தயாரானாள்..


பரந்தாமனுக்கு கவலை அதிகமானதால் அவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது அவனால் தனது லட்சிய கனவு வீணாகிப் போய் விட்டது என்பதை தாங்க முடியவில்லை ..
இந்த எல்லாம் நிலங்களையும் நாம் இழக்கப் போகிறோம் .. நாம் யாருக்கும் தெரியாமல் சேர்த்து வைத்திருக்கும் பணத்தையும் இழக்க போகிறோம் என்ற எண்ணத்தில் அவன் மனம் தாங்க முடியாமல் அழுக ஆரம்பித்தான் பரந்தாமன்...

பம்புசெட்டில் ஜாக்கெட்டை அணிந்துகொண்டு இருந்த ரேகாவுக்கு பரந்தாமனின் அழுகை குரல் கேட்டது..

எதுக்காக பண்ணையார் மகள் அழுகிறார் என்ற சந்தேகத்தில் அமைதியாக கவனித்தாள் ரேகா பம்புசெட்டு குள்ளே..


அண்ணே அழுவாத என்னால நீங்க அழுவதை தாங்க முடியல என்று தீனா சொன்னான்..

அப்போதும் பரந்தாமனுக்கு மேலும் அழுகை அதிகமானது..

அண்ணே அழுவாதிங்க அண்ணே நிச்சயம் நமக்கு எந்த பிரச்சனையும் வராது ... நம்ம அம்மா நமக்கு துணையா இருப்பாங்க என்று சந்திரன் சொன்னான்..

அப்போதும் பரந்தாமனாள் அழுகையை நிறுத்த முடியவில்லை தேம்பித் தேம்பி அழுதுகொண்டே இருந்தான்.


என்ன பிரச்சனைக்காக இப்படி அழுகிறார் என்று ரேகா யோசித்தாள் .. ஏற்கனவே இதே போலதான் மூவரும் இதே இடத்தில் அழுதார்கள் அப்போது நாம் கேட்டதற்கு யாருமே இங்கே அழ வில்லையே என்று சொல்லிவிட்டு ஓடிட்டாங்க இன்னைக்கும் அதேபோல அழுகிறாரே என்ன பிரச்சினையாக இருக்கும் என்று உன்னி போடு கவனித்திருந்தால் ரேகா.. பம்புசெட்டு குள்ளே...

அண்ணே இந்த பிரச்சினையிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி சொல்லுங்க..
இப்படி அழுதுகொண்டிருந்தாள் நம்ம தப்பிக்க முடியாது அண்ணே என்று தீனா சொன்னான்..

அப்போது பரந்தாமன் கண்களை துடைத்துக்கொண்டு சிறிது நேரம் அமைதியாக தரையைப் பார்த்தபடி இருந்தான்..

அண்ணே நல்லா யோசித்து முடிவு சொல்லுங்க யாருக்கும் எந்த பிரச்சனை இல்லாமல் நம்ம தப்பிக்க வேண்டும் என்று சந்திரனும் சொன்னான்..

அப்போது பரந்தாமன் மெதுவாக தலை நிமிர்ந்து தம்பிகளிடம் சொன்னான்.

நிலைமை நம் கையை மீறி போய் விட்டது தம்பி இனிமேல் நாம இந்த ஊரில் கௌரவமாக வாழ முடியாது என்று உருக்கமாக சொன்னான் பரந்தாமன்..

அப்படின்னா நம்ம தப்பிக்கிறது க்கு வழியே இல்லையா அண்ணா.. என்று தீனா கேட்டான்..

ஒரே வழி தன் இருக்கிறது அது நம்மால் அதை செய்ய முடியாது..

என்ன வழி அண்ணா சொல்லுங்கள் அதை எப்படியாவது என் உயிரைக் கொடுத்து அந்த வேலையை செய்கிறேன் என்று தீனா சொன்னான்..

நம்முடைய பிரச்சனை காணாமல் போனவர்கள் கிடைக்கக்கூடாது அவர்கள் கிடைக்கக்கூடாது என்றால் முதலில் சங்கரை தீர்த்துக்கட்ட வேண்டும் அப்போதுதான் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியாது ..ஆனால் நம் மூன்று பேர் சேர்ந்தாலும் சங்கரை தீர்த்துக் கட்ட முடியாது அவன் பலசாலி தைரியமானவன் . அதனால் தான் சொன்னேன் நம்மால் இந்த வேலையை செய்யமுடியாது என்று..

இவர்கள் மூவரும் பேசுவதை பம்புசெட்டு குள்ளே கேட்டுக்கொண்டிருக்கும் ரேகாவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது..

அப்படியானால் இங்கு நடந்திருக்கும் எல்லாம் தவறுகளையும் இவர்கள்தான் செய்தார்களா என்று நினைத்து அதிர்ச்சியில் அப்படியே சிலை போல நின்றாள் ரேகா ..
பம்புசெட்டு குள்ளே...


உப்புத் தின்னவன் தண்ணி குடிப்பான் ... தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான்
என்ற பழமொழி பண்ணையார் மகன்களுக்கு பொருந்துமா ...
என்று பொறுத்திருந்து பார்க்கலாம்..



தொடரும்.....
 

vaishnaviselva@

Well-known member
Messages
317
Reaction score
256
Points
63
semma ya poguthu anna ippa tha start panna ..........pannayaar veetu la thirudana vachu kittu avagalaye theda soldrathu tha thiruda kaila saavi ga maari 😂🤩🤩🤩 😍😍
 

vaishnaviselva@

Well-known member
Messages
317
Reaction score
256
Points
63
paranthaman periya villan polayeeo_O........thambigalaye ippadi pandra 😖😖
saattaiyadi saamiyaar semma comedy poli saamiyaar easy ya yellaathaium yemathuraaga..:ROFLMAO:............
 

vaishnaviselva@

Well-known member
Messages
317
Reaction score
256
Points
63
sankar 😍reka conversation la semma ya irukku anna.......spr ra poguthu🤩🤩🤩🤩
 

vaishnaviselva@

Well-known member
Messages
317
Reaction score
256
Points
63
⬇️அத்தியாயம் ...10 👇


என்ன குருவே ஆரம்பத்துல இருந்த வருமானம் இப்போதைக்கு இல்லையே என்றான் சிஷ்யன்.

அவசரப்படாத டா கொஞ்சம் கொஞ்சமா தான் .பிடிக்கணும் ஒரேடியா இந்த ஊரை மிரட்டினாள் அப்புறம் ஊருல பேய் தொல்லை அதிகமாயிடுச்சு அதனால இதுக்கு ஒரு முடிவு கட்டணும் என்று ஊர் மக்கள் எல்லாம் ஒன்று கூடி பண்ணையார்றிடம் சொல்லிட்டா. அதுக்கப்புறம் அந்தப்
பண்ணையாரு உண்மையான மந்திரவாதியை அழைத்து வந்து பார்க்கச் சொல்வார் . உண்மையான மந்திரவாதி நம்முடைய செட்டப்பை கண்டுபிடித்துவிட்டால் அப்புறம் நம்மளால இந்த ஊர்ல இருக்க முடியாது .

பேயே இல்லாத ஊர்ல நம்ம செல்போன் வச்சுக்கிட்டு பேய் இருக்கிறதா மிரட்டி பணம் சம்பாதிக்கிறோம் இப்படிப்பட்ட விஷயத்தை எல்லாம் கொஞ்சம் பொறுமையா தான் கையாள னும் சிஷ்யா .

இதில் பணத்துக்கு ஆசைப்பட்டு அவசரப்படக்கூடாது . தங்க முட்டை போடும் வாத்து கதை போல நம்முடைய கதையும் ஆகிவிடும் என்றார் சாட்டையடி சாமியார்.

நீங்கள் சொல்வதும் சரிதான் குருவே . இதுக்கு முன்னாடி நம்ம இருந்த ஊருல அந்த ஊர் மக்கள் முட்டாளாக இருந்தாலும் .
கேள்வி கேட்பதில் வல்லவனாக இருக்கிறாங்க . ஆனா இந்த ஊருல அப்படி யாருமே இல்லை .
நம்ம பேய் இருக்குதுன்னு சொன்னதும் மறு பேச்சு பேசாமல் பணத்தை கொடுக்குறாங்க என்று மற்றொரு சிஷ்யன் சொன்னான்.

ஒரு குடும்பத்தில் குழந்தை பிறந்தால் . அந்த குழந்தை அவன் தாத்தா ஜாடையில் இருப்பான் இல்லை அவன் அப்பா ஜாடையில் இருப்பான் அப்படியும் இல்லை என்றால் . அவன் சொந்தங்களில் யாராவது ஒருவர் ஜாடையில் இருப்பான் இதுதான் வழக்கம் இதை மையமாக வைத்துதான் நான் அந்த ஊரில் பூஜை செய்து உன் அப்பா மீண்டும் உன் வயிற்றில் பிறப்பார் என்று சொல்லி பணம் சம்பாதித்து இருந்தோம் .
ஆனால் அந்த முட்டாள் பசங்கள் நம் பூஜையை நம்பி பணமும் கொடுத்தார்கள் . ஆனால் கேள்விகளும் அதிகமாக கேட்கிறாங்க .
அவர்கள் கேட்கும் கேள்விக்கு நம்மால் பதில் சொல்ல முடியவில்லை அந்த தொல்லையால் இங்கு இந்த ஊருக்கு ஓடி வந்து விட்டோம் ஆனால் இந்தப்
பண்ணையார்புறத்தில் யாரும் நம்மை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை அதனால் இந்த ஊர் மக்களை சாதாரணமாக நினைக்கக்கூடாது .
இந்த ஊர் மக்களுக்கு எல்லாம் தலைவன் .பண்ணையார் .அடுத்தது அவருடைய நண்பன் முத்தையா . இந்த இரண்டு பேரின் பேச்சுதன் இந்த ஊர் மக்கள் கேட்பாங்க . அதனால் நம்ம கொஞ்சம் உஷாராக இருக்கணும் இந்த பண்ணையாரும் இந்த முத்தையாவும் நம்மை மதிக்கிறது கிடையாது. எல்லோரும் நம்மளை பார்த்தால் கையெடுத்து கும்பிடுகிறார்கள் ஆனா இந்த பண்ணையாரும் . பண்ணையார் பசங்களும் நம்மள மதிக்கிறதே கிடையாது . அதேபோல இந்த முத்தையாவும் அவனுடைய மகன் சங்கரும் நம்மள மதிக்கிறதே கிடையாது அதனால இந்த ஊர் மக்களிடம் நம்ம உஷாரா இருக்கணும் . இன்னும் முழுசா இந்த ஊர் மக்கள் நம்மை நம்பள அப்படிதான் நம்ம எடுத்துக்கணும் என்னைக்கி பண்ணையார் பசங்களும் முத்தையாவின் மகன் நம்மள மதிக்கிறார்களோ அன்னைக்குத்தான் இந்த ஊரே நம்ம கைக்கு அடங்கிடாங்க என்று நினைச்சுகணும் .
அதுவரைக்கும் நம்ம இந்த ஊர் மக்களிடம் கொஞ்சம் உஷாராக தான் இருக்கணும் .
என்று சாட்டையடி சாமியார் தனது சிஷ்யர்களிடம் சொன்னார்.

ஆமாம் குருவே பண்ணையார் பசங்க பாக்குறதுக்கு தேவர் மகன் கமலைப் போலவே மூன்று பேரும் இருக்கானுங்க .அவனுங்க நம்மல ஒரு அடி அடிச்சா கூட நம்மால தாங்க முடியாது . அதேபோலத்தான் முத்தையாவின் மகன் நம்ம விஜயகாந்த் மாதிரி இருக்கான் அவன் அடிச்சாலும் நம்மள தாங்க முடியாது . அதனால இந்த ஊருல நம்ம கொஞ்சம் அடங்கித்தான் இருக்கணும் குருவே என்று அந்த சிஷ்யன் சொன்னான்.

சிறிது நாட்கள் போகட்டும் ஊர் மக்கள் எல்லோரும் பண்ணையார் மகன் திருமணத்தைப் பற்றியும் முத்தையாவின் மகன் திருமணத்தைப் பற்றியும் பேசிக்கொண்டு சந்தோஷமா இருக்காங்க .
இந்த நேரத்தில நம்ம பயமுறுத்தின அவ்வளவு நல்லா இருக்காது கொஞ்ச நாள் போகட்டும் என்றார் சாட்டையடி சாமியார்.


பம்புசெட்டில் ஏற்கனவே காணாமல் போன குடும்பத்தை தேடுவதற்காக பரந்தாமனும் அவனது தம்பிகளும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

மூன்று பேரும் ஒரே இடத்தில் தேடாமல் ஆளுக்கொரு திசையில் தேடுங்க . அப்பத்தான் ஏதாவது ஒரு தகவல் கிடைக்கும் என்றால் சாந்தி.

சற்று சோர்வாக இருந்த பரந்தாமன் சாந்தியின் பேச்சு மேலும் எரிச்சலை உண்டாக்கியது .இவளுக்கும் என் அப்பனுக்கும் வேற வேலையே இல்ல . எப்ப பார்த்தாலும் சீக்கிரம் கண்டுபிடிக்கணும் சீக்கிரம் கண்டுபிடிக்கணும் என்ற நெனப்பவே இருக்காங்க .
என்று மனதில் நினைத்துக்கொண்டு எரிச்சலோடு சாந்தியை பார்த்தான் பரந்தாமன்.


நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நாங்கள் மூன்று பேரும் ஆளுக்கு ஒரு திசையில் தான் தேடுகிறோம் நிச்சயம் சீக்கிரத்துல அவங்க கிடைத்திடுவாங்க என்று சாந்தியிடம் சொன்னான் பரந்தாமன்.

என் மகன்களுக்கு எல்லாமே தெரியும் . இருந்தாலும் நீங்கள் கொஞ்சம் நேரமானாலும் பரவாயில்லை அவர்களை தேடுவதை நிறுத்தாதீங்க என்று பண்ணையார் சொல்லிக்கொண்டே தனது அறையிலிருந்து வெளியே வந்தார்.

சந்திரனின் திருமணத்திற்குல் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து விட்டால் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் ஏனென்றால் ஊரே நம்ம வீட்டு திருமணத்தைப் பற்றியும் என் நண்பனோட மகன் திருமணத்தைப் பற்றியும் நினைத்து சந்தோஷப் படுகிறார்கள் . ஆனால் . பாவம் அந்த வயதான பெரியவரும் அவர் மனைவியும் நமது மகன் இல்லையே என்ற ஏக்கத்தில் அவர்கள் யாரிடமும் பேசுவதே இல்லையாம் . அதனால் நீங்கள் அந்தப் பெரியவரின் மகனையும் மருமகளையும் திருமணத்துக்கு முன் கண்டுபிடித்துவிட்டால்
இந்த ஊரே சந்தோஷமாக இருக்கும் எனக்கும் மன நிறைவாக இருக்கும் அப்படியில்லையென்றால்
என் மனசுக்கும் ஒரு வருத்தம்தான் நமது பம்புசெட்டில் தங்கி வேலை செய்த ஒரு குடும்பம் காணாமல் போய்விட்டது . அதைப்பற்றி கவலை இல்லாமல் பண்ணையார் அவருடைய மகன் திருமணத்தை சிறப்பாக நடத்துகிறார் என்று ஒரு சிலர் மனதுக்குள் நினைப்பார்கள் அவர்கள் நினைக்கிறார்களோ இல்லையோ . என் மனது அப்படிதான் நினைக்கும் என்று பண்ணையார் சற்று வருத்தமாக சொன்னார்.

நிச்சயம் தம்பி திருமணத்திற்குல் அவர்களை நாங்கள் கண்டுபிடித்து விடுவோம் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அப்பா என்று சொல்லிவிட்டு பரந்தாமனும் அவனது தம்பிகளும் புல்லட் பைக்கில் கிளம்பிவிட்டார்கள்.

பரந்தாமன் பைக்கை ஓட்டிக்கொண்டு சிறிது தூரம் சென்றதும் . அப்போது சந்திரனிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தான்.

தம்பி உனக்கு இந்த பெண்ணை பிடித்து இருக்கா என்றான் பரந்தாமன் மோட்டார் பைக்கை ஓட்டியபடி.

சந்திரன் சற்று கூச்சத்தோடு பிடிச்சிருக்கு நா என்று மெதுவாக சொன்னான்.

பயப்படாத சொல்லு தம்பி . உனக்கு இந்தப் பெண்ணை விட இன்னும் அழகான பெண்ணை பார்த்து நான் உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் . நீ உன் மனசுல பட்டதை என்னிடம் சொல்லு தம்பி என்றான் பரந்தாமன்.

அப்பாவுக்கும் . அன்னிக்கும் எல்லோருக்குமே இந்தப் பெண்ணை பிடித்து விட்டது அண்ணா என்றான் சந்திரன்.

அவர்களைப் பற்றி நீ கவலைப் படாதே . உனக்கு பிடித்திருக்கிறதா அதை மட்டும் சொல் . ஏனென்றால் உன் மனதில் நல்ல அழகான பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று நீ மனதில் நினைத்து இருப்பாய் அதனால் தான் கேட்கிறேன் உனக்கு அந்தப் பெண் பிடிக்கவில்லை என்றால் என்னிடம் சொல் .
நான் உனக்கு அடுத்த வாரத்திலேயே இவளைவிட அழகான பெண்ணை பார்க்கிறேன் என்று சொல்லி.
பரந்தாமன் .சந்திரனின் மனதை மாற்றுவதற்கு முயற்சி செய்தான்.


அண்ணே .....அண்ணன் எப்ப பார்த்தாலும் அந்த பெண்ணோட போட்டோவை வச்சுக்கிட்டு சிரிச்சுகிட்டே இருக்காரு .
அவருக்கு அந்தப் பெண்ணை ரொம்பவே பிடிச்சுப் போச்சு அண்ணே என்று தீனா பரந்தாமனிடம் சொன்னான்.

தீனா உனக்கு இதெல்லாம் புரியாது சந்திரன் சொல்லட்டும் அந்தப் பெண் அவனுக்கு பிடிச்சிருக்கு என்று சொன்னான் பரந்தாமன்.

எனக்கு இந்தப் பொண்ணு ரொம்பவே பிடிச்சிருக்கு அண்ணா அவள் முகத்தைப் பார்த்ததுமே எனக்கு அவளுடன் ஏற்கனவே பழகியது போல உணர்வு ஏற்பட்டுவிட்டது அண்ணா . எனக்கு இந்தப் பெண்ணை ரொம்பவே பிடிச்சுப் போச்சு அண்ணா என்று ஆணித்தரமாக பளிச்சென்று சொல்லிவிட்டான் சந்திரன்.

சந்திரனின் பேச்சைக் கேட்டதும் பரந்தாமனுக்கு மேலும் கோபம் தலைக்கேறியது . தம்பியிடம் ஏதாவது சொல்லி மனதை மாற்றி விடலாம் என்று நினைத்தாள் .இவன் அந்த பெண்மீது இவ்வளவு ஆசையோடு இருக்கிறானே என்று நினைத்து பரந்தாமனுக்கு எரிச்சலும் கோபமும் அதிகமானது அப்போது அவன் பைக்கின் வேகத்தை அதிகப்படுத்தினான் கோபத்தில்.

அப்போது பரந்தாமனின் கண்ணுக்கு ஒரு மதுக்கடை தெரிந்தது உடனே பைக்கை அந்த மதுக்கடை அருகில் பைக்கை நிறுத்தினான் பரந்தாமன்.

பைக்கை விட்டு இறங்கியதும் பரந்தாமன் காணாமல் போனவர்களை தேடுவது போல சுற்றுமுற்றும் திரும்பித் திரும்பி பார்த்தபடி நின்றான்.

சந்திரனும் தீனாவும் அவர்களும் சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்ததில் மதுக்கடை அவர்களின் கண்களில் பட்டது.

அண்ணன் குடிப்பதை நிறுத்திவிட வேண்டும் என்று சொல்லி இருக்காரே என்று தீனா மனதில் நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தான்.

இன்னும் கொஞ்ச நாளுல நமக்கு திருமணம் ஆகப்போகிறது இனிமேல் குடிப்பதை நிறுத்திவிட வேண்டும் . அப்போதுதான் நம் மீது நம் மனைவி பாசமாக இருப்பாள் என்று சந்திரன் நினைத்துக்கொண்டு அவனும் அமைதியாக இருந்தான்.

மதுக்கடையை பார்த்ததும் தம்பிகள் மது வேண்டும் என்று நம்மிடம் கேட்கவில்லையே . ஒருவேளை போனமுறை குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுங்கள் என்று திட்டி விட்டதால் .
அதனால் தயங்குகிறார்கள என்று நினைத்தான் பரந்தாமன்.


பரந்தாமன் சுற்றும்முற்றும் பார்ப்பதை தீனா கவனித்தான்.

உண்மையாகவே காணாமல்போனவர்களை தேட வேண்டுமா அண்ணா . என்றான் தீனா.

இல்லை இல்லை.. இங்கு அவர்கள் இருந்தாலும் நம்மால் அவர்களை அழைத்துச் செல்ல முடியாது ஏனென்றால் அவர்களுக்கு எதிரியே நம்ம மூணு பேரும் தான் . நம்மளை நமக்கே தெரியாமல் யாராவது கவனிப்பார்கள் .அதனால்தான் அவர்களை தேடுவது போல சுற்றும் முற்றும் பார்க்கிறேன் அப்போதுதான் நம் மீது யாருக்கும் சந்தேகம் வராது என்றான் பரந்தாமன்.

பரந்தாமனின் பேச்சைக் கேட்டதும் சந்திரனும் தீனாவும் அவர்களும் தேடுவதை போல சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் மது வேண்டும் என்று பரந்தாமனிடம் அவர்கள் கேட்கவே இல்லை.

தம்பிகள் நம்மிடம் மது வேண்டும் என்று கேட்க மாட்டாரகள். நம் திட்டியதை நினைத்து பயந்து விட்டார்கள் . அதனால் நாமே அவர்களுக்கு மது வாங்கிக் கொடுத்து இப்போதைக்கு குடிப்பழக்கத்திற்கு அவர்களை ஆளாக்கி விட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு .
பரந்தாமன் தீனாவிடம் பணத்தை கொடுத்து மது வாங்கிக் கொள் தம்பி என்று சொன்னான் பரந்தாமன்.

வேண்டாம் அண்ணா என்றான் தீனா.

பரவாயில்லை இருவரும் மது வாங்கிக் கொள்ளுங்கள் நான் திட்டியதை நினைத்து பயந்து விட்டீர்களா என்று பாசமாக சொன்னான் பரந்தாமன்.

பரவாயில்லை அண்ணா இன்னைக்கு வேண்டாம் என்றான் சந்திரன்.

இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கு திருமணம் நடக்கப் போகுது அதுக்கப்புறம் உன்னால குடிக்க முடியாது. அப்படி குடித்தாலும் சிறிதளவு தான் குடிக்க முடியும் அதுவும் உன் மனைவிக்குத் தெரியாமல் . அதனால்தான் சொல்கிறேன் இப்போது நன்றாக குடித்துவிடுங்கள் ஆசைதீர என்றான் பரந்தாமன்.

பரந்தாமனின் பேச்சு சந்திரனுக்கும் தீனாவுக்கும் சரியாகப்பட்டது அண்ணன் சொல்வதை போல் இப்போது குடித்து விடலாம் திருமணத்திற்கு பிறகு குடிப்பழக்கத்தை நிறுத்தி விடலாம் என்று இருவரும் நினைத்து மதுக்கடைக்கு சென்று மதுவை வாங்கிக் கொண்டார்கள் .

பிறகு மூவரும் வழக்கம்போல வீட்டுக்கு திரும்பினார்கள் அப்போது மது பாட்டில்களை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு கிளம்பினார்கள்.


பரந்தாமனுக்கு சற்று ஆறுதலாக இருந்தது சந்திரனும் தீனாவும்
மது குடிக்க சம்மதித்தது.

பிறகு மூவரும் வழக்கமாக பசுமையாக காணப்படும் வயல்பகுதியில் தண்ணீர் தொட்டி மேலே அமர்ந்தபடி மூவரும் தனிமையில் மது அருந்தினார்கள் அப்போது பரந்தாமன் மது அருந்தினான் . ஏனென்றால் அவன் மனம் சோகத்தில் இருந்ததால் .

பிறகு மூவரும் அந்த தண்ணீர் தொட்டி மேலே மல்லாக்காக படுத்துக் கொண்டார்கள் .
சந்திரன் மனதில் அவன் வருங்கால மனைவியே நினைத்தபடியே உளறிக்கொண்டு படுத்திருந்தான் போதையில் . பரந்தாமன் தம்பியின் திருமணத்தை இந்த முறை நம்மால் நிறுத்த முடியாது என்று நினைத்து வருத்தத்தில் புலம்பினான் . தீனாவின் மனதில் அழகாக நமது கட்டழகி கனகா தீனாவின் மனதில் நிரம்பி இருந்தால் கவர்ச்சியாக . இப்படி மூவரும் போதையில் படுத்திருந்தார்கள்.

முத்தையா ..லட்சுமி அம்மாள் ..ரேகா மூவரும் திண்ணை மீது அமர்ந்தபடி பேசினார்கள்.


கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் முன்னாடியே உன் அம்மா அப்பா உன் தம்பியை வர வச்சிடு என்று முத்தையா லட்சுமி அம்மாள் இடம் சொன்னார்.

ஆமாம் அப்பா முன்கூட்டியே வந்து ரேகாவுக்கு செய்யவேண்டிய முறையெல்லாம் என் தம்பி செய்யணும் . என்று லட்சுமி சொன்னாள்.

நம்ம ஊர் வழக்கப்படி எல்லோருடைய திருமணமும் நம்ம ஊர் அம்மன் கோவிலில் தான் நடக்கும் . இதை உன் அம்மா அப்பாவிடம் சொல்லிட்டியா.

நம்ம ஊரு பழக்கவழக்கம் எல்லாமே என் அப்பா அம்மாவுக்கு தெரியும் என்றால் லட்சுமி.

நம்ம ஊர் மக்களுக்கு கல்யாண சாப்பாடு ரொம்ப அற்புதமா செய்யணும் . எல்லோரும் வயிறார சாப்பிடணும் கல்யாணம் முடிந்த மறு நாளும் இந்த ஊர் மக்களுக்கு சாப்பாடு கொடுக்கணும் . இப்படி இரண்டு நாட்களுக்கு இந்த ஊர் மக்கள் வயிறார சாப்பிடனும் என்று முத்தையா சொன்னார்.


இப்படி முத்தையாவும் லட்சுமி அம்மாள் கல்யாணத்தைப் பற்றி சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தார்கள் .
ரேகா ஒன்றுமே பேசாமல் அமைதியாக அவர்களின் பேச்சை கவனிப்பது போல அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள் .ஆனால் உண்மையில் ரேகாவின் மனதுக்குள் சங்கரையே நினைத்துக் கொண்டிருந்தது எப்போது வேலை செஞ்சு முடித்துவிட்டு வருவாரோ என்ற ஏக்கத்தில் அவள் மனம் ஏங்கிக்கொண்டிருந்தது .

அப்போது சங்கர் சைக்கிளில் திடீரென்று வந்து நின்றான் .
உடனே ரேகாவுக்கு சங்கரை பார்த்ததும் சந்தோசத்தில் முகம் பளிச்சென்று ஆனது
கூடவே வெட்கம் அவளை கவ்விக்கொண்டது .
உடனே அங்கிருந்து எழுந்து எதிரே இருக்கும் தனது வீட்டுக்கு ஓடிவிட்டாள்.

ரேகா வெக்கப்பட்டு ஒடுவதை பார்த்த லட்சுமி அம்மாள் சிரித்தாள்.

இவ்வளவு நாளா இங்கதான் சுத்திகிட்டு வேலை செஞ்சுகிட்டு இருப்பா. கல்யாண பேச்சு ஆரம்பித்ததிலிருந்து . தம்பியை பார்த்தாலே வீட்டுக்குள்ள ஓடிப் போயிர வெட்கப்பட்டு கிட்டு என்று சொல்லிக்கொண்டு சிரித்தாள் லட்சுமி அம்மாள்.

சங்கர் சைக்கிளை வாசலில் நிறுத்திவிட்டு ரேகா அமர்ந்திருந்த இடத்தில் சங்கர் அமர்ந்துகொண்டான்.

அப்பா அடுத்த வாரம் பண்ணையார் குடும்பத்தோடு நம்ம வீட்டுக்கு வர போறாராம் சொல்லி அனுப்பினார் என்றான் சங்கர்.

அப்படியா வரட்டும் அவனை பார்த்து ரொம்ப நாளாச்சு .

எதுக்குப்பா குடும்பத்தோடு வரறு பண்ணையார்.

அவன் ஏற்கனவே சொல்லியிருந்தான் .
உன் மகனுக்கு திருமணம் முடிவு செய்தாள் . உன் மருமகளுக்கு நான்தான் சீர் செய்வேன்
இது என்னோட முடிவு இதற்கு நீ மறுப்புத் தெரிவிக்க கூடாது
அவள் உனக்கு மட்டும் மருமகள் அல்ல . எனக்கும் மருமகள்தான் அதனால் என் மருமகளுக்கு என் விருப்பம் போல நான் சீர் செய்வேன் என்று சொல்லியிருந்தான் அதனால் அவன் ரேகாவுக்கு சீர் கொண்டு வருவதற்குத்தான் அப்படி சொல்லியிருப்பான் என்று முத்தையா சொன்னார்.


அப்போது லட்சுமி அம்மாளுக்கு மனசு மேலும் சந்தோஷமானது பண்ணையார் குடும்பத்தோடு வந்து நம் மகளுக்கு சீர் செய்யப் போகிறார் . அதேசமயம் நமது மகள் திருமணம் இந்த ஊரே சந்தோசமாக கொண்டாடப் போகிறது என்று நினைத்து பெருமைப் பட்டாள்.


ஒரு நாள் ...கனகா ஏற்கனவே பம்புசட்டில் வேலை செய்து காணாமல் போனவர்களை பற்றி யோசித்திருந்தால் . எதனால் அவர்கள் இங்கிருந்து ஓடிவிட்டார்கள் என்று.

அப்படி என்ன அவர்களுக்கு இந்த இடத்தில் பிரச்சனை ஏற்பட்டிருக்கும் எதற்காக துணிமணிகளையும் பாத்திரங்களையும் குழிதோண்டி புதைக்க வேண்டும் . என்று யோசித்தாள்
இவர்கள் காணாமல் போனதாள் பண்ணையாரும் ரொம்ப வருத்தப்படுகிறார் . ஊர் மக்களும் வருத்தப்படுகிறார்கள் இப்படி எல்லோருமே அவர்கள் மீது அக்கறையோடு இருக்கிறார்கள் ஆனால் இவர்கள் எதற்காக பாத்திரங்களையும் துணி மணியும் புதைத்துவிட்டு இங்கிருந்து ஓடினார்கள் என்ற சந்தேகத்தில் அங்குமிங்குமாக ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா என்று சந்தேகப் பார்வையோடு பம்பு செட்டின் அறையில் எல்லாம் இடத்திலும் தேடிப்பார்த்தால்

அப்போது பக்கத்து அறையில் பண்ணையாரின் மனைவியின் படம் இருக்கும் பூஜை அறையிலும் சுற்றுமுற்றும் தேடிப்பார்த்தால் அப்போது அவளுக்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை .

பிறகு வெளியே வந்து குழப்பத்தோடு நின்றாள் .அப்போது அவள் கணவன் ஊமையன் இரண்டு கைகளில் மது பாட்டில்களை எடுத்துக் கொண்டு வருவதை கவனித்தாள் .
ஊமையன் கனகாவிடம் மது பாட்டில்களை காண்பித்தான்.

கனகாவுக்கு சந்தேகம் மேலும் அதிகமானது . வேலை செய்யும் இடத்தில் யாரும் குடிக்க மாட்டார்கள் இதை யார் குடித்துவிட்டு போட்டிருப்பார்கள் என்று யோசித்தாள் . ஒரே மர்மமாக இருக்கிறதே இங்கு நடப்பதெல்லாம் புதிராகவே தெரிகிறதே இனிமேல் எதையும் நம்ம சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று முடிவு செய்தாள் கனகா.


மர்மத்தை கண்டுபிடித்து விடுவாளா கனகா .....பொறுத்திருந்து பார்க்கலாம்.



தொடரும்.....
nalla anna yeppadila yemathura ...............avane yellaathaim yeduthuka pakkura
 

vaishnaviselva@

Well-known member
Messages
317
Reaction score
256
Points
63
ivaga thirunthave maattaaga🤧..............ippadi oru annan summa thanthaaku vendaanda saami :oops: :oops: ...........
yella unmaium therinja pannaiyaar tha romba paavam..........
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
111
Reaction score
52
Points
28
ivaga thirunthave maattaaga🤧..............ippadi oru annan summa thanthaaku vendaanda saami :oops: :oops: ...........
yella unmaium therinja pannaiyaar tha romba paavam..........
நீங்கள் சொல்லும் கருத்துக்களால் பண்ணையார் தோட்டம் மர்மம் தொடர்கதைக்கு. .. புதுப்பொலிவு கிடைத்திருக்கிறது ...
🙏 நன்றி.....vaishnaviselvam..👍🏽
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
111
Reaction score
52
Points
28
⬇️அத்தியாயம் ...32 👇


பரந்தாமன் சொன்ன வார்த்தை ரேகாவுக்கு தலையே வெடித்து சிதறும் அளவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது ...

நம்முடைய கணவரை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று நினைக்கிறார்களே என்பதை நினைத்து ரேகா அப்படியே புடவை கட்டிக் கொண்டு இருப்பதை நிறுத்திவிட்டு சிலை போல நின்றாள்..

அண்ணே ..சங்கரை தீர்த்து கட்டாமல் வேறு ஏதாவது வழி இருக்குதா அண்ணா என்று சந்திரன் பரந்தாமனிடம் கேட்டான்..

வேறு வழி எதுவுமே கிடையாது தம்பி ..நமக்கு எதிரியே இப்போது சங்கர் மட்டும் தான் .
சங்கர் இல்லை என்றால் . காணாமல் போனவர்களைப் பற்றி யாரும் கவலைப்பட போவதில்லை நம்முடைய அப்பா மட்டும் தன் இதைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார் ..அவரும் இன்னும் கொஞ்ச நாளில் தானாக அடங்கி விடுவார் ..அதனால்தான் சங்கரை தீர்த்துக்கட்டி விட்டால் நமக்கு எதிரியை கிடையாது ..
பிறகு மெல்ல மெல்ல நாம் நினைத்ததை நிறைவேற்றி விடலாம் ..

ஆனால் சங்கரை தீர்த்துக் கட்டுவது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது தம்பி .. அவன் பலசாலி புத்திசாலியும் கூட என்று பரந்தாமன் சொன்னான..

அப்படியென்றால் நம்ம தப்பிக்க முடியாதா அண்ணே..

நம்ம தப்பிக்கிறது க்கு வேறு வழியே இல்லை .இது ஒரு வழி மட்டும் தான் இருக்கிறது தம்பி..

ஒருவேளை நாம் தப்பிக்க வழி இல்லை என்றால்.. நாங்கள் இரண்டு பேரும் ..
எல்லா தவறுக்கும் நாங்கள் தான் பொறுப்பு என்று ஊர் மக்களிடமும் அப்பாவிடமும் ஒத்துக் கொள்கிறோம் .. நீங்கள் இதில் சம்பந்தப்பட்ட வேண்டாம் அண்ணா என்று தீனா பரந்தாமனிடம் சொன்னான்...

ஆமாம் அண்ணா எங்களால் தன் நீங்கள் தேவையில்லாமல் இந்த பிரச்சனையில் மாட்டிக் கொண்டீர்கள்.. அதனால் நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள்
எனக்கும் தம்பிக்கும் இந்த ஊர் மக்களும் அப்பாவும் என்ன தண்டனை வேணாலும் கொடுக்கட்டும் என்று சந்திரனும் சொன்னான்..

நீங்கள் இருவரும் என் மீது உள்ள பாசத்தினால் அப்படி சொன்னாலும் கனகாவும் அந்தப் பெரியவரின் மருமகளும் நடந்ததை ஊர் மக்களிடம் சொல்லி என்னையும் காட்டிக் கொடுப்பார்கள் ...
அதனால் தேவையில்லாமல் நீங்கள் பொய் சொல்ல வேண்டாம் விதிப்படி நடக்கட்டும் என்று வருத்தத்தோடு பரந்தாமன் சொன்னான்...

இப்படி மூவரும் செய்த தவறுகளை வெளிப்படையாக பேசிக்கொண்டு எப்படி தப்பிக்கலாம் என்பதை மூவரும் பேசிக்கொண்டிருப்பதை ரேகா பம்புசெட்டு குள்ளே இருந்தபடி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தாள்....

ரேகாவுக்கு பயம் உச்சத்திற்கே சென்றது .. இவ்வளவு நாளாக இப்படிப்பட்ட கெட்ட குணம் கொண்டவர்கள் உடன் வேலை செய்து கொண்டிருக்கிறோமே என்று நினைத்து பயந்து போனாள் இனிமேல் ஒருநாள்கூட பம்புசட்டில் இருக்கக்கூடாது நம் கணவர் வந்ததும் இவர்களைப் பற்றின உண்மையை சொல்லி இவர்களை ஊர் மக்களிடம் காட்டிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு பயத்தில் நடுங்கிக் கொண்டு அமைதியாக இருந்தாள் ரேகா...


இன்னும் ஓரிரு தினங்களில் சங்கர் நம்முடைய வேஷத்தை கலைத்து விடுவான் .. அதற்குள் பம்புசெட்டில் அம்மா படத்தின் பின்னால் மறைத்து வைத்திருக்கும் பணத்தை எப்படியாவது
யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு கொண்டு செல்லவேண்டும் என்று யோசித்தபடி பரந்தாமன் அமைதியாக இருந்தான்..

அண்ணே எனக்கு இன்னைக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு நம்ம வீட்டுக்கு போகலாம் அண்ணே என்று சந்திரன் சொன்னான்..

எனக்கும் மனசு சரியில்ல அண்ணே தோட்டத்தை சுற்றிப் பார்ப்பதற்கு மனம் விரும்பல அதனால வீட்டுக்கு போகலாம் அண்ணே என்று தீனாவும் சொன்னான்..

எனக்கும்தான் மனசு சரியில்ல தம்பி இருந்தாலும் நான் சிறிது நேரம் அம்மா படத்தின் முன்னால் நின்று வேண்டிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு பரந்தாமன் பம்பு செட்டின் மற்றொரு அறையில் இருக்கும் தனது தாய் படத்தின் முன்னால் நின்று மனதுக்குள் வேண்டினான்..


அப்போது சந்திரன் பெரும் கவலையோடு வயல் பகுதியை பார்த்தபடி யோசித்திருந்தான் நமக்கு திருமணமும் நடக்கப்பொவதில்லை ..
நம்முடைய வாழ்க்கையும் எதிர்பார்த்தபடி அமையப்பொவதில்லை
நம் உயிரோடு இருப்போமா என்ற சந்தேகமும் சந்திரனுக்கு ஏற்பட்டது இப்படி கவலையோடு யோசித்தபடி நின்றிருந்தான் சந்திரன்...

தாயே இனிமேல் என்னுடைய வாழ்க்கை எப்படி ஆகுமென்று எனக்கு தெரியாது அதனால் நான் இத்தனை நாட்களாக சேர்த்து வைத்திருந்த பணத்தை உன் அருகில்தான் மறைத்து வைத்திருக்கிறேன் நீயும் அதை இத்தனை நாட்களாக நல்லபடியாக பாதுகாத்து வந்தாய் இப்போது இந்த பணத்தை நான் இங்கிருந்து எடுத்துச் செல்ல வேண்டும் ..
அப்படி செய்தால்தன் எனக்கு இந்தப் பணம் கடைசி நேரத்தில் கைகொடுக்கும் . இல்லை என்றால் இது ஊர் மக்களுக்கு தான் அப்பா பிரித்துக் கொடுத்து விடுவார் அதனால் நாளை யாருக்கும் தெரியாமல் இந்தப் பணத்தை நான் எடுத்து செல்ல போகிறேன் தாயே என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டு இருந்தான் பரந்தாமன்..

குடிபோதையில் தெரியாமல் இரண்டு குடும்பத்தை கெடுத்து விட்டோம் . அதனால் நம்முடைய வாழ்க்கையும் அண்ணன்களின் வாழ்க்கையும் இப்படி வீணாகிப் போய் விட்டதே என்ற வருத்தத்தோடு தீனா யோசித்துக்கொண்டே பம்புசெட்டின் தண்ணீர் தொட்டியின் அருகில் சென்று சிறிது தண்ணீர் குடித்தான். அப்போது அவன் கண்களுக்கு ரேகா குளித்துவிட்டு வச்சிட்டுபோன சோப்பு தீணாவின் கண்களுக்கு தென்பட்டது...

தீணா சற்று சந்தேகத்தோடு அந்த சோப்பை நன்றாக கவனித்தான் சோப்பு நல்ல ஈரப்பதமாக இருந்தது..

சோப்பு ஈரமாக இருப்பதை பார்த்தாள் ரேகா இப்போதுதான் குளித்து இருக்க வேண்டும் ..
அப்படி என்றால் இவள் இங்கு எங்கேயாவது இருக்கிறாளா என்று சந்தேகத்தோடு தீனா பம்பு செட்டின் தண்ணீர் தொட்டியை சுற்றி பார்த்தான் . அப்போது ரேகா கழட்டிவிட்ட பாவாடையும் கீழே இருந்தது . இதை பார்த்ததும் தீனாவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது...

பாவாடை கூட இங்கேயே இருக்கு அப்படியென்றால் ரேகா பம்புசெட்டு குள்ளே இருக்கிறாளா என்ற சந்தேகம் தீனாவுக்கு ஏற்பட்டது..

தீனா பெரும் அதிர்ச்சியோடு மெதுவாக பம்புசெட்டின் கதவை கவனித்தான். கதவு சாத்தி இருந்ததே தவிர பூட்டு போடவில்லை இதை கவனித்த தீணாவுக்கு மேலும் சந்தேகம் அதிகரித்தது ...கூடவே பயமும் அதிகரித்தது . அப்போது தீனா மெதுவாக நடந்து சென்று கதவை தனது ஆள்காட்டி விரலால் மெதுவாக அழுத்தினான் அப்போது கதவு திறக்கவில்லை உள்ளே தாழ்ப்பாள் போட்டு இருப்பதை உணர்ந்தான் தீனா..

ஒருபக்கம் சந்திரன் கவலையில் கிழக்கே பார்த்தபடி அமைதியாக இருந்தான் ..ஒரு பக்கம் பரந்தாமன் தனது தாய் படத்தின் முன்னால் நின்று வேண்டிக்கொண்டு அமைதியாக இருந்தான் ..
தீனா உள்ளே ரேகா நம் மூன்று பேரும் பேசியதை கேட்டுக் கொண்டு இருக்கிறாள் என்ற பயத்தில் அவனுக்கு கை காள் நடுங்கியது என்ன செய்வது என்று புரியாமல் பயத்தில் நடுங்கினான் தீனா..


ரேகாவுக்கு சின்ன சந்தேகம் ஏற்பட்டது ... மூவரும் வீட்டுக்குப் போகலாம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள் ஒருவேளை கிளம்பி விட்டார்களோ என்று யோசித்தாள் ..
மூவரும் பேச்சுக் குரல் கேட்கவே இல்லையே கண்டிப்பா மூவரும் இங்கிருந்து கிளம்பி இருப்பார்கள் என்று நினைத்து சற்று நிதானம் ஆனாள் ரேகா..


தீனாவின் கண்களில் கண்ணீர் நிரம்பியது ...இப்படி தானாக வந்து மாட்டிக் கொண்டோமே ரேகாவிடம் என்று நினைத்து பயத்தில் கண் கலங்கி கொண்டே மெதுவாக சென்று பரந்தாமனிடம் சத்தமில்லாமல் மெதுவாக அழைத்து வந்தான் ..

அதேபோல சந்திரனையும் மெதுவாக அழைத்து வந்து இருவரிடமும் மெதுவாக ரகசியமாக ரேகா பம்பு செட்டுக்குள்ளே இருக்கிறாள் என்று மெதுவாக சொல்லிவிட்டு... இரு கைகளால் வாயை மூடிக்கொண்டு சத்தமில்லாமல் அழுதான் தீனா..

பரந்தாமனும் சந்திரனும் பம்பு செட்டின் கதவை பார்த்தபடியே அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டார்கள் ... இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் சிலை போல நின்றார்கள்...


ரேகா கதவைத் திறப்பதற்கு தயாரானாள்.. எந்த ஒரு சத்தமும் கேட்கவில்லையே மூவரும் வீட்டுக்கு கிளம்பி இருப்பார்கள் என்று நினைத்து கதவை திறப்பதற்கு தயாரானல் ..

அப்போது அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டது ....பண்ணையார் மகன்கள் வீட்டுக்கு கிளம்பி இருந்தால் மோட்டார் பைக் சத்தம் நமக்கு கேட்டு இருக்குமே ..
ஆனால் இதுவரைக்கும் மோட்டார் பைக் சத்தம் கேட்கவில்லையே அப்படி என்றால் மூன்று பேரும் இங்கே தன் இருக்கிறார்களா என்ற சந்தேகமும் அவள் மனதை குழப்பியது .. அதனால் ரேகா கதவைத் திறப்பதற்கு தயங்கினாள்..


அண்ணே இப்போ என்ன பண்றது நம்ம பேசி இருந்தது எல்லாம் ரேகா கேட்டுக் கொண்டு இருந்திருக்கிறாள் ...இனிமேல் நம்ம தப்பிக்கவே முடியாது அவள் இந்த விஷயத்தை ஊர் முழுக்க சொல்லிவிடுவாளோ அண்ணா... இப்போது என்ன செய்வது என்று சந்திரன் மெதுவாக பரந்தாமனிடம் சத்தமில்லாமல் அழுதபடியே கேட்டான்...

பித்து பிடித்தவன் போல பரந்தாமன் தரையில் உட்கார்ந்துகொண்டு தலையை சொறிந்தபடி என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் அவனுக்கு மூச்சு வேகமாக வாங்கியது... இதைப்பார்த்த சந்திரனுக்கும் தீனாவுக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களும் பதட்டமாய் நின்றார்கள்..

உடனே பரந்தாமன் தனது உண்மையான சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தான் ... இதுவரைக்கும் அமைதியாக தெரிந்த பரந்தாமன் திடீரென்று வெறி பிடித்தவன் போல எழுந்து நின்றான் .. சந்திரனுக்கும் தீனாவுக்கும் பரந்தாமனை பார்த்ததும் சற்று வியப்பாக இருந்தது..


இவ்வளவு நேரமாகியும் மோட்டார் பைக் சத்தம் கேட்கவே இல்லையே ஒருவேளை மூவரும் கிளம்பி இருப்பார்களோ ..
நம் காதில் மோட்டார் பைக் சத்தம் விழ வில்லையோ என்று நினைத்து ரேகா கதவை திறப்பதற்கு தயாரானாள் ..
மெதுவாக கதவின் அருகில் சென்று தாழ்ப்பாள் மீது கைவைத்து திறக்க ஆரம்பித்தாள்...

பரந்தாமன் வெறித்தனமாக ஆத்திரத்தோடு கதவின் அருகில் சென்று ... ரேகா கதவைத் திறப்பதற்கு தயாராகும் வேலையில் பரந்தாமன் கதவை ஓங்கி அடித்துக் கொண்டே. அடியே ரேகா கதவைத் திறடி என்று ஆவேசமாக குரல் கொடுத்தான் பரந்தாமன்..

உடனே ரேகா கதவைத் திறக்காமல் இரு கைகளால் தனது வாயை மூடிக்கொண்டு பயணத்தில் அழுதாள் .. அவளால் என்ன செய்வது என்று தெரியாமல் பதறிப் போனாள் . இன்னும் இவர்கள் போகவில்லையா .. நம் உள்ளே இருப்பதை கண்டுபிடித்து விட்டார்கள் என்று நினைத்து அவளுக்கு மரண பயம் ஏற்பட்டது ரேகாவுக்கு..

பரந்தாமன் ஆவேசமாக ஆத்திரத்தோடு வெறிபடித்தவன் போல கதவை தட்டிக்கொண்டே கத்தினான்...

இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ கதவை திறக்கவில்லை என்றால் கதவை உடைத்து விடுவேன் மரியாதையாக கதவை திரடி என்று ஆவேசமாக கத்தினான் பரந்தாமன்..


சந்திரனுக்கும் தீனாவுக்கும் பரந்தாமனின் செயல் ரொம்பவே வித்தியாசமாக தெரிந்தது .
இது வரைக்கும் அண்ணன் இப்படி கோபப்பட்டு நாம் பார்த்ததே கிடையாதே என்ற ஆச்சரியத்தோடு இருவரும் பரந்தாமனை பார்த்து நின்றார்கள்...


பரந்தாமனின் ஆவேசக் குரல் கேட்டு ரேகாவுக்கு பயம் மேலும் அதிகரித்தது ... இனி என்ன செய்வது என்று தெரியாமல் சத்தமில்லாமல் தேம்பித் தேம்பி அழுதாள் வாயை மூடிக்கொண்டு...

உடனே பரந்தாமன் தனது தம்பிகளை முறைத்தபடியே சொன்னான்...

இவள் கதவை திறக்க மாட்டாள் நீங்கள் இந்தக் கதவை உடைத்து உள்ளே சென்று அவளை கொன்று விடுங்கள் என்று ஆவேசத்துடன் சொன்னான் பரந்தாமன்...

பரந்தாமனின் பேச்சு ரேகாவுக்கு இதயமே நின்று விடும் போல அதிர்ச்சியாக இருந்தது ...
நம்மை கொள்ளப் போகிறார்களா என்று நினைத்து ஒருகணம் அப்படியே நின்றுவிட்டாள் ரேகா...

ரேகாவை கொலை செய்ய வேண்டுமா என்று நினைத்து.... சந்திரனும் தீனாவும் அதிர்ச்சியில் பரந்தாமனை. உற்றுப் பார்த்து நின்றார்கள்...



சங்கர் ...தேன் வியாபாரிகளுக்கு உதவியாக குரல் கொடுத்து தேன் வியாபாரத்தை நன்றாக செய்தான்

ஏனென்றால் தேன் வியாபாரம் முடிந்ததும் அவர்களின் ஊருக்கு சென்று கனகாவை நாளை அழைத்து வரவேண்டும் என்பதற்காக தேன் வியாபாரிகளுக்கு காலையிலிருந்தே உதவியாக இருந்தான் சங்கர்..


தேன் வியாபாரத்தில் சில பேர் வியாபாரம் முடிந்தது ..
சில பேர் பாதித்தேன் வியாபாரம் ஆகாமல் மிச்சமிருந்தது ..
அதனால் ஊருக்கு போவதை நாளைக்கு போகலாம் என்று முடிவு செய்தார்கள் தேன் வியாபாரிகளும் அந்தப் பெரியவரும...

அப்போது அந்தத் தேன் வியாபாரி பெரியவர் சங்கரை அழைத்து சொன்னார்...

தம்பி இன்று நாங்கள் ஊருக்கு போக முடியாது .. ஏன் என்றால் இன்னும் சில பேர் தேன் வியாபாரம் முடிக்கவில்லை அவர்களும் தேன் வியாபாரத்தை முடித்ததும் எல்லோரும் ஒன்றாகத்தான் ஊருக்கு செல்வது வழக்கம் அதனால் இன்று இரவு நாங்கள் இங்கேயே தங்க போகிறோம் நாளைக்கு வியாபாரத்தை முடித்துவிட்டு உன்னையும் அழைத்துக்கொண்டு செல்கிறோம் அதனால் இன்று நீ உன் ஊருக்கு சென்று விடு நாளைக்கு வழக்கம் போல காலையில் வந்து விடு
பிறகு தேன் வியாபாரம் முடிந்ததும் எல்லோரும் ஊருக்கு போகலாம் பிறகு உன்னுடைய தங்கச்சியை நீ நாளைமறுநாள் அழைத்துக்கொண்டு உன் ஊருக்கு சென்று விடு .. என்று அந்தப் பெரியவர் சங்கரிடம் பொறுமையாக எடுத்துச் சொன்னார்..

இன்று உங்களோடு வந்து என் தங்கச்சியை பார்த்து விடுவேன் என்ற ஆசையில் வந்தேன் ...
ஆனால் உங்கள் வியாபாரம் முடியவில்லை அதனால் என்னுடைய ஆசையும் நிறைவேறவில்லை ....
இருந்தாலும் பரவாயில்லை.. நாளைக்கு உங்கள் ஊருக்கு வந்து என் தங்கச்சியை பார்த்து விடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ஐயா ...
அதனால் நீங்கள் சொன்னபடி நான் இப்போது என் ஊருக்கு செல்கிறேன் .. நாளை காலையில் இங்கு வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு சங்கர் உற்சாகத்தோடு ரேகாவுக்கு மல்லிகைப் பூ வாங்கிக்கொண்டு ஊருக்கு திரும்பினான் சங்கர்...



பரந்தாமனின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் ரேகாவை சங்கர் காப்பாற்றுவான.... என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.....


தொடரும்......
 

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom