Prathaajini Ganesh
Member
- Messages
- 74
- Reaction score
- 72
- Points
- 18
வாவ் சந்தனாட வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை..அவ நடிப்ப பிரம்மிப்பை தருது சந்தனாட அடுத்த கட்டம் என்னவா இருக்கும்..அருமையான பதிவு அக்கா ❤
இன்னைக்கு எபில சொல்றேன். நன்றி டா மா..சந்தனா நடிப்பு கண்ண கலங்க வெச்சிடுச்சு எப்படினா தத்ரூபமா இருந்ததை நடிப்புன்னு சொன்னா நம்ப முடியாம நம்புற அளவுக்கு. வினய் அவள பார்த்துட்டே போனது எப்படி இருக்கும்னா மைண்ட் வாய்ஸ்ல "பின்றியே டா..... சிவாஜியைப் பார்த்திருக்கேன், எம்ஜிஆர பார்த்திருக்கேன்....
அந்நியன் பிரகாஷ் ராஜ் மாறி" நினைச்சிருப்பான் இதுக்கெல்லாம் காரணம் அவன் தான நல்லா வேணும் உயிருடன் உணர்வுகளை கொல்லுறதும் மரணத்தை விட ரணம் போல. சந்தனா அடுத்து என்ன செய்ய போறா?? மாயவனோட வேலை இதோட முடிஞ்சதா சீக்கிரம் சொல்லுங்க நந்து மா எவ்வளவு கியூரியாசிட்டியா இருக்கு.
Thank you so much da ma.வாவ் சந்தனாட வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை..அவ நடிப்ப பிரம்மிப்பை தருது சந்தனாட அடுத்த கட்டம் என்னவா இருக்கும்..அருமையான பதிவு அக்கா ❤
வாவ் ஒவ்வொரு கேரக்டரைப் பத்தின உங்களோட புரிதல் சூப்பர் மா. Thank you so much for your valuable words ma..இன்னைக்கு தான் sis முழுசா படிச்சேன்.... ஒரே மூச்சா படிச்சு mudichuttaen
சந்தனா@சாவித்ரி நடிப்பில் அந்த சாவித்ரியே தோற்று போயிடுவாங்க போலவே என்னா நடிப்பு என்னா நடிப்பு ப்பா சான்ஸ் eh இல்லை... அபார நடிப்பு திறமை யாருக்கும் கொஞ்சமும் சந்தேகம் வரவே இல்லை... அப்படியே தத்ரூபமாக இருக்கு... செம்ம தனா
சாவித்ரியா அவளோட வாழ்வில் ஆயிரம் துன்பங்கள் இருந்தாலும் அமைதியே இல்லனாலும், அம்மா அப்பா பாதுகாப்பில் அவளுக்கு என்று அவர்கள் அமைத்து கொடுக்க இருக்கும் வாழ்வில் வாழ்ந்து , மனதிற்குள் குறைகளை குமைந்து வாழ்ந்து இருக்க வேண்டிய பெண்... அறியாத வயதில் எல்லாவற்றின் மேலும் தோன்றும் வெறுப்பில் தோழியின் தூபமும் சேர்ந்து வெளிவந்து என்ன மாதிரியான ஒரு துன்பங்களை கடந்து வந்து இருக்கா
"சின்ன பிள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராது" என்று சொல்லுவாங்க... எஸ், இவங்க வாழ்விலும் அது தான் நடந்து இருக்கு
இதில் அவளுக்கு விருப்பமே இல்லாது, சதியால் விதிக்கப்பட்ட வாழ்விலும் விரிசல் வந்தது தான் பெண்ணுக்கு வலிமை கொடுத்து இருக்கும் போல...
வினய் இவன் எல்லாம் என்ன மாதிரி கேடு கெட்டவன் அப்போவே அவளை கல்யாணம் செய்து இருக்கலாமே.. என்ன மாதிரி பேசி அவளை ஏமாத்தி, ஆசைகளை தூண்டி, அதைவிட தப்பிக்க விடாது அடைத்து வைத்து, அவளை உபயோகித்து(நல்ல இயக்குனராம், ச்சசை கேவலமான பிறவி), இவனுக்கு அவார்டு கிடைக்க இன்னுமா அவளை இழக்கணும், பரதேசி அவள் செஞ்ச எல்லாமே தப்பு தான்.. அவளுக்கு இழைக்கப்பட்ட துரோகம், தப்பையே தெரிஞ்சு செய்ய வச்சு இருக்கு!!! ஆனால் அவளுக்கு மீண்டும் இவன் செய்தது துரோகம் தான் இவனுக்கு கேரியர் வேண்டும் என்றால் இவன் திறமையில் தான் முன்னுக்கு வரணும், இவன் தூக்கி எறிஞ்ச அவ ஏன் இவனுக்கு உதவனும்! பொண்டாட்டி இருக்கும் போதும் அடுத்தவங்க பக்கம் இவன் போனால் அதுக்கு தகுந்த தண்டனை கிடைக்கணும்
இதில் வதனிகா இவள் செஞ்சது எல்லாம் பெரிய பாவம்... இன்று மன்னிப்பு கேட்டா, அவளும் நட்பில் மன்னிக்கா விட்டாலும் மறந்து இருக்கா... ஆனால் இவளை நம்பி வந்த தோழியை அவள் ஏமாற்றியது பெரிய பாவம் தானே... அவளால் அவள் அத்தனையும் இழந்த போது கூட அவளின் கூர் வார்த்தைகள் எனக்கு செம்ம கோபம் வந்துச்சு.. கொஞ்ச நாள் முன்னாடி வரையும் அப்படி தான் இருந்து இருக்கா... நீ செஞ்ச தப்பில் அவ முன்னாடி வந்து இருக்கா! அதுக்கு அவ எவ்வளவு மனசை கல்லாக்கி இருக்கணும், புரியாமல் அவளுக்கு எதிராக எத்தனை.. இன்று இவளுக்கு நல் வாழ்வு கிடைத்து இருக்கு, அதனால் அவளுக்கு செஞ்சது தப்பு என்று மன்னிப்பு கேட்டா, அவளுக்காக அக்கறை காட்டுறா, இல்லனா
அவன் செதுக்கின பொண்ணு தான், ஆனால் இன்று அவனுக்கே ஆட்டம் காட்டுவது சூப்பர்ப் நல்லா கேம் பிளே பண்ணுறா... பக்கா பிளானிங் தோழியே சரி எது தெரியாமல் குழம்பி நிக்குறா wow
மாயவன் இவன் ஒரு அதிசய பிறவி தான் அவளுக்கு. அவள் பார்த்ததில் இவன் தானே வித்தியாசமான பிறவி... ரொம்ப நல்லவனா இருக்கான்... குறுகிய காலத்தில் ஆண்கள் என்றாலே இப்படிதான் என்ற பிம்பம் கொண்டவள் கூட அவனை நம்பி பேச்சு வாக்கில் என்றாலும் விசயங்கள் சொல்லுறா, அந்த அளவுக்கு அவன் மேல நம்பிக்கை, மதிப்பு கொடுத்து இருக்கு அவனின் செயலும், மறைக்காத பேச்சும், வாடாத புன்னகையும் ரெண்டும் யார் இருக்காங்க இல்லை என்று பார்க்காமல் என்ன பேச்சு பேசுதுங்க, கூட இருக்காங்க 'ங்கே' என முழிக்கும் போது நரேன் இவனெல்லாம் சைக்
மாயவன் ஜெ க்கு பண்ணும் அறிவுரையும், அவளுக்காக விலகி போவதும், மகேன் மேல கொண்ட நட்பும், அன்பும், சூப்பர்... யாரை கொலை பண்ணினான்? உண்மையில் இவன்தான் பண்ணுனானா? ஏன் வீட்டை விட்டு வந்து மறுபடி ஆறு வருடம் அங்கே போனான்? அவங்க கூட என்ன பிரச்சனை? இதெல்லாம் வேற தெரிஞ்சுக்கணும்...
இனி அடுத்து என்ன பண்ணுவா நம்ம சந்து பேபி, பார்க்க ஆவலுடன் வெயிட்டிங்...
Thank you so much ma..எபிசோட் 21
அடா அடா அடா என்னா நடிப்பு, பின்னிட்டா சந்து நான் கூட அவள் அழறான்னு தான் நினைச்சேன்... எல்லாம் நடிப்பு...
மாயன் சொல்லும் கவிதை பதில்கள் கேள்விகள் எல்லாம் நல்லா இருக்கு
வினைக்கு தேவை தான் அவன் செஞ்சதுக்கு... இனியாவது இவளுக்கு அமைதியான வாழ்வு கிட்டட்டும்... தெரிந்தே செய்த தவறுகளை இனி திருத்தி கொண்டால் நலம்... பார்ப்போம் என்ன செய்வா என்று...