Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Nee en devadhai

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-69


எத்தனையோ கவலைகள் மனதை அரித்தாலும் , அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளை தள்ளி போடுபவள் இல்லையே? அடுத்த நாளே சரவணனுக்கு போன் செய்தாள் . ஆச்சியிடம் பேசிவிட்டு, சரவணனிடம் பேசினாள் .
என்ன சரவணன் எப்படி இருக்கீங்க ?
நல்லாருக்கேன்கா .
ம்ம்., செல்வி ?
அவளும்தான் .,
உங்களுக்குள்ள ஏதோ பிரச்சனையா ?அன்னிக்கு முத்து தோட்டத்து விஷயமா வந்த போது சொன்னாரு .
எடுத்த எடுப்பில் அவள் இப்படி உடைத்து பேசுவாள் என அவன் எதிர் பார்க்கவில்லை.
அக்கா .....
இங்க பாருங்க சரவணன் நீங்க என்ன எப்படி நினைக்கீறீங்களோ தெரியாது. ஆனா உங்கள நான் என்னோட தம்பியாதான் பாக்கறேன். எனக்கு ரிஷி, கௌசிக், நீங்க எல்லாருமே ஒண்ணுதான். அதே மாதிரிதான் செல்வியும். என்ன புரிஞ்சுதா ?
எனக்கு எல்லாமே புரியுதுங்க. அந்த சிறுக்கிதான்...தினம் தெனம் என்ன வதைக்கறா .
புரியுது சரவணன். நான் அவகிட்டயும் பேசறேன். ஆனா நீங்க இனிமே எந்த விதமான காரணத்துக்காகவும் குடிக்கவே கூடாது . அது உங்களுக்கும் நல்லதில்லை. உங்களுக்கு பொறக்கற போகிற குழந்தைக்கும் நல்லதில்லை. நாம் குழந்தைங்களுக்கு ஆரோக்கியமான ஒடம்ப குடுக்க வேணாமா ? மிகவும் சாந்தமாக குழைவாக சொன்னாள் . அது அவனுக்கு நன்றாகவே உறைத்தது .
சரிங்கக்கா.... இனிமே நான் குடிக்கல.
ஆமா , புது பழக்கம்கறதுனால விடறதும் ரொம்ப சுலபம். செல்விக்கிட்ட குடுங்க.
அவளிடமும் பேசினாள் . அவளிடம் சில அந்தரங்க விஷயங்களையும் பேசினாள் . கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லிக் குடுத்தாள் . ஒரு மருத்துவராகவும் சொல்லி தந்தாள், ஒரு அக்காவை போல , அன்னையாகவும், கணவனை எப்படி அனுசரிக்க வேண்டும் என்றும் சொல்லிக் குடுத்தாள்.
செல்வி அனைத்தையும் கேட்டுக் கொண்டாள் . ஆனால் பதில் ஏதும் சொல்லவில்லை.
என்ன செல்வி ஒண்ணுமே சொல்லல ?
நீங்க சொல்லறது எல்லாமே புரியுது. ஆனா அண்ணன் ஏன் உங்கள ஏத்துக்கல ?நீங்க அண்ணனை ஏன் அனுசரித்து நடந்துக்கல ?
நீ எவ்ளோ ஷார்ப்பான கேள்வியை கேட்டிருக்க தெரியுமா ?
தெரியும்., ஆனா நானும் உங்க தங்கச்சி தானே? நீங்களும் அண்ணனும் சந்தோசமா இருக்கறத பாக்க எனக்கு மாட்டும் ஆசை இருக்காதா ?
இல்ல செல்வி, அவருக்கு என்ன புடிச்சிருக்கா , புடிக்கலையா ? புடிச்சுருக்குன்னா எதுக்கு என்கிட்ட இவ்ளோ கோவம் ? புடிக்கலன்னா எதுக்கு ஆசையா என்ன பாக்க வந்தாரு ? எதுவுமே எனக்கு தெரியல.நான் அவர்கிட்ட ஆசையாதான் இருக்கேன். அவரை மனசார ஏத்துக்கிட்டேன். ஆனா என்னால அவர் மனசுக்குஎனக்கு என்ன பண்ணணுன்னே ள்ள போக முடியல. என்னால அவரை புரிஞ்சுக்க முடியல.நான் என்ன பண்ணணுன்னு கூட என்னால யோசிக்க முடியல.அதனால இனிமே அதப்பத்தி யோசிக்க போகறதில்ல செல்வி. அவருக்கு எப்போ வேணுமோ அப்போ வரட்டும். வேண்டானா அதையும் அவரே சொல்லட்டும்.
அப்பறமா இன்னொன்னு கேட்கனும். இப்போ ரீசெண்டா டாக்டரை எப்போ பாத்தீங்க ?
கொஞ்சம் நாளாயிட்டுதே ? இன்னொரு தடவ போய் ஒருவாட்டி பார்த்துட்டு வந்துடுங்களேன். இல்ல உங்களால இங்க வர முடியுன்னா எங்க ஆஸ்பத்திரிக்கு வாங்க. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.
சரிங்கக்கா., அவங்ககிட்ட பேசிட்டு சொல்லறேன்.
இங்க பாரு செல்வி, சரவணன் உன் மேல உயிரையே வச்சிருக்கார் . அவரை போய் இன்னொரு கல்யாணம் அது இதுன்னு நோகடிக்காத. இப்போ குழந்தை பொறக்கலனா என்ன ? எத்தனையோ குழந்தைகள், அம்மா அப்பா இல்லாம இருக்காங்க. அவங்கள்ல யாரையாவது நீங்க உங்க குழந்தையா எடுத்துக்கலாம். அதுக்காக உங்களுக்கு குழந்தை பொறக்காதுன்னு நான் சொல்லல. இன்னொரு ஆப்ஷனும் இருக்குன்னு சொல்லறேன். அவரை விட்டு பிரயறத பத்தி இனிமே நீ பேசவே கூடாது புரிஞ்சுதா ? நம்ம மேல ஆசை வச்ருக்கற புருஷன் எல்லாருக்கும் அமையறதில்ல. குரல் தழுதழுத்தது.
நான் வச்சுடறேன்.
போனை அனைத்தவளுக்கு மனதில் இருந்தபாரம் இறங்கியது போல இருந்தது. இழுத்து பெரு மூச்சு விட்டாள். என்னால உங்க அன்பான மனைவி ஆகவே முடியாதா முத்து ? மனம் ஏங்கியது. ஒரு சாதாரண மனைவியாக அவன் மனம் கவர்ந்தவளாக அவள் மாற முடியுமா ?

வீட்டுக்குள் ஒன்றாக நுழைந்த சிவாவையும், கங்காவையும் பார்த்த சிமிக்கு, உள்ளுக்குள்ளே கறுவிக் கொண்டிருந்தது. சிவாவுக்கு, காபி கலந்து கொண்டு போய் மாடியில் அவன் அறையில் ஆத்தி கொடுத்தாள் .
எப்போதும், தாங்க்ஸ்மா என்று அம்மாவின் கை மனத்தை புகழ்ந்து கொண்டே குடிப்பவன், இன்றோ
எங்கிட்ட கேட்டுட்டு கலந்திருக்கலாமில்ல ? என்ற கேள்வியில் உள்ளே இருந்த ஆத்திரமெல்லாம் பொங்கி வந்தது.
ஏம்பா ?
இல்லமா , கங்கா ரொம்ப டயர்டா இருந்தாளேன்னு காபி கடைக்கு கூட்டிட்டு போனேன். அங்கையே நானும் காபி குடுச்சுட்டேன்.
ஓஹோ ! சரிப்பா . எங்கல்லாமோ போயிட்டு வந்துருக்க. டயர்டா இருப்ப . ரெஸ்ட் எடு . நாளைக்கு வேற ஊருக்கு கிளம்பனும். முதலில் சாதாரணமாக ஆரம்பித்தவள், பின்னர் சுய ரூபம் காட்டினாள்.
எங்கள பத்தி ஒனக்கு என்ன ? நாங்கல்லாம் எங்களை நாங்களே பாத்துக்கறோம். பாவம் ஒனக்கு நிறைய வேல இருக்குமே ?இது நான் போட்டது தானே ? கீழ ஊத்திடறேன். ஒனக்கு ஒரு வேளை காப்பி வேணுன்னா அவகிட்டையே கேளு.
அம்மா உங்க பேச்சே வேற மாதிரி இருக்கு. எதுவும் போடி வச்சு பேசாதீங்க.
என்னடா! என் பேச்சா வேற மாதிரி இருக்கு. நீதாண்டா வேற மாதிரி இருக்க ? நானும் உங்க அப்பாவும் எப்படி இருக்கோம்? ஒண்ணுமே தெரியாது. அந்த குழந்தை பாதி ராத்திரில வந்து எங்களை பாத்துட்டு போகுது. இத்தனைக்கும் அவளை நான் பெத்துக்கல . உன்ன தானடா பெத்தேன்? என்னோட தங்கச்சி, என்னோட தேவதை அது இதுன்னு கொஞ்சிக்கிட்டே இருப்ப. இப்போ அவ சாப்பிட்டாளா? தூங்கினாளா ? எங்கையோ போன எடத்துல வாழ்க்கையை தொலைச்சுட்டு நிக்கறாளே ? அவ மூஞ்சில சிரிப்பை காணுமே ? ஒண்ணாவது ஒனக்கு தெரியுமா ? நேத்து ராத்திரி வீட்டுக்கு மாப்பிள்ளை வந்தது கூட ஒனக்கு தெரியாது. ஊருலேர்ந்து வருவ., கண்ணு அவள தேடும், அவ ஒண்ணுமே தெரியாத பூனை மாதிரி வந்து ஜன்னல்ல ஒளிஞ்சு நின்னு உன்ன பார்ப்பா . ஓடி போய் ஒனக்கு டிபன் பண்ணுவா , எதுவுமே எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா ? நான் உன்ன பெத்தவடா ? ஏதோ பாவம் அனாதைன்னு கொண்டு வந்து வீட்டுல வச்சு படிப்பு தந்து சோறு போட்டா , உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணறா அவ.
சத்தம் கேட்டு, கங்கா தியாகுவும் ஓடி வந்தனர். கங்கா எதுவும் பேசவில்லை. அமைதியாக நின்றாள் .
பண்ணறத பண்ணிட்டு வாய மூடிக்கிட்டு நிக்குது பாரு அமுக்கினி,,,, கண்களை விரித்து முறைத்தாள்.
ஓகே மா ., நீங்க சொல்ல வேண்டியதை சொல்லி முடிச்சாச்சா இல்ல இன்னும் ஏதாவது மிச்சம் இருக்கா ?
மூச்சிரைக்க நின்றவளை பார்க்க சிவாவுக்கு பயமாக இருந்தது. ஏனெனில் இதுவரை அவன் பார்த்த அன்னை இவளல்லவே ?
இருப்பினும், கண்களை மூடி தன்னை நிதானப்படுத்திக் கொண்டு சொன்னான்.
நானும் கங்காவும் கல்யாணம் பண்ணிக்க ஆசை படறோம். அதுவும் உங்களோட முழு சம்மததோட. உங்களுக்கு ஓகேன்னா நாங்க கல்யாணம் பண்ணிக்குவோம், உங்களுக்கு வேண்டான்னா நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன் . யாரையுமே, எப்பையுமே . நான் இவளை காதலிக்கல. ஆனா என்னால ஒருத்திய காதலிக்க முடியுன்னா அது இவை மட்டும் தான். மிக அழுத்தமாக சொன்ன மகனை பார்த்த தியாகுவுக்கு முதலில் அதிர்ச்சி.பின்பு ஆச்சர்யம்.
வெடுக்கென்று மூஞ்சியை திருப்பிக் கொண்டு சிமி வெளியில் போனாள் . உங்களோட சம்மதத்துக்காக நீங்க உங்க வயத்துல பெத்த பையன் காத்துக்கிட்டிருக்கேன். சிமி அத்தனை பிடிவாதக்காரி இல்லையென்றே அவனுக்குத் தோன்றியது. நாமும் அப்படியே நம்புவோம்.

மீண்டும் வருவாள் தேவதை.......
 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-69


எத்தனையோ கவலைகள் மனதை அரித்தாலும் , அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளை தள்ளி போடுபவள் இல்லையே? அடுத்த நாளே சரவணனுக்கு போன் செய்தாள் . ஆச்சியிடம் பேசிவிட்டு, சரவணனிடம் பேசினாள் .
என்ன சரவணன் எப்படி இருக்கீங்க ?
நல்லாருக்கேன்கா .
ம்ம்., செல்வி ?
அவளும்தான் .,
உங்களுக்குள்ள ஏதோ பிரச்சனையா ?அன்னிக்கு முத்து தோட்டத்து விஷயமா வந்த போது சொன்னாரு .
எடுத்த எடுப்பில் அவள் இப்படி உடைத்து பேசுவாள் என அவன் எதிர் பார்க்கவில்லை.
அக்கா .....
இங்க பாருங்க சரவணன் நீங்க என்ன எப்படி நினைக்கீறீங்களோ தெரியாது. ஆனா உங்கள நான் என்னோட தம்பியாதான் பாக்கறேன். எனக்கு ரிஷி, கௌசிக், நீங்க எல்லாருமே ஒண்ணுதான். அதே மாதிரிதான் செல்வியும். என்ன புரிஞ்சுதா ?
எனக்கு எல்லாமே புரியுதுங்க. அந்த சிறுக்கிதான்...தினம் தெனம் என்ன வதைக்கறா .
புரியுது சரவணன். நான் அவகிட்டயும் பேசறேன். ஆனா நீங்க இனிமே எந்த விதமான காரணத்துக்காகவும் குடிக்கவே கூடாது . அது உங்களுக்கும் நல்லதில்லை. உங்களுக்கு பொறக்கற போகிற குழந்தைக்கும் நல்லதில்லை. நாம் குழந்தைங்களுக்கு ஆரோக்கியமான ஒடம்ப குடுக்க வேணாமா ? மிகவும் சாந்தமாக குழைவாக சொன்னாள் . அது அவனுக்கு நன்றாகவே உறைத்தது .
சரிங்கக்கா.... இனிமே நான் குடிக்கல.
ஆமா , புது பழக்கம்கறதுனால விடறதும் ரொம்ப சுலபம். செல்விக்கிட்ட குடுங்க.
அவளிடமும் பேசினாள் . அவளிடம் சில அந்தரங்க விஷயங்களையும் பேசினாள் . கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லிக் குடுத்தாள் . ஒரு மருத்துவராகவும் சொல்லி தந்தாள், ஒரு அக்காவை போல , அன்னையாகவும், கணவனை எப்படி அனுசரிக்க வேண்டும் என்றும் சொல்லிக் குடுத்தாள்.
செல்வி அனைத்தையும் கேட்டுக் கொண்டாள் . ஆனால் பதில் ஏதும் சொல்லவில்லை.
என்ன செல்வி ஒண்ணுமே சொல்லல ?
நீங்க சொல்லறது எல்லாமே புரியுது. ஆனா அண்ணன் ஏன் உங்கள ஏத்துக்கல ?நீங்க அண்ணனை ஏன் அனுசரித்து நடந்துக்கல ?
நீ எவ்ளோ ஷார்ப்பான கேள்வியை கேட்டிருக்க தெரியுமா ?
தெரியும்., ஆனா நானும் உங்க தங்கச்சி தானே? நீங்களும் அண்ணனும் சந்தோசமா இருக்கறத பாக்க எனக்கு மாட்டும் ஆசை இருக்காதா ?
இல்ல செல்வி, அவருக்கு என்ன புடிச்சிருக்கா , புடிக்கலையா ? புடிச்சுருக்குன்னா எதுக்கு என்கிட்ட இவ்ளோ கோவம் ? புடிக்கலன்னா எதுக்கு ஆசையா என்ன பாக்க வந்தாரு ? எதுவுமே எனக்கு தெரியல.நான் அவர்கிட்ட ஆசையாதான் இருக்கேன். அவரை மனசார ஏத்துக்கிட்டேன். ஆனா என்னால அவர் மனசுக்குஎனக்கு என்ன பண்ணணுன்னே ள்ள போக முடியல. என்னால அவரை புரிஞ்சுக்க முடியல.நான் என்ன பண்ணணுன்னு கூட என்னால யோசிக்க முடியல.அதனால இனிமே அதப்பத்தி யோசிக்க போகறதில்ல செல்வி. அவருக்கு எப்போ வேணுமோ அப்போ வரட்டும். வேண்டானா அதையும் அவரே சொல்லட்டும்.
அப்பறமா இன்னொன்னு கேட்கனும். இப்போ ரீசெண்டா டாக்டரை எப்போ பாத்தீங்க ?
கொஞ்சம் நாளாயிட்டுதே ? இன்னொரு தடவ போய் ஒருவாட்டி பார்த்துட்டு வந்துடுங்களேன். இல்ல உங்களால இங்க வர முடியுன்னா எங்க ஆஸ்பத்திரிக்கு வாங்க. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.
சரிங்கக்கா., அவங்ககிட்ட பேசிட்டு சொல்லறேன்.
இங்க பாரு செல்வி, சரவணன் உன் மேல உயிரையே வச்சிருக்கார் . அவரை போய் இன்னொரு கல்யாணம் அது இதுன்னு நோகடிக்காத. இப்போ குழந்தை பொறக்கலனா என்ன ? எத்தனையோ குழந்தைகள், அம்மா அப்பா இல்லாம இருக்காங்க. அவங்கள்ல யாரையாவது நீங்க உங்க குழந்தையா எடுத்துக்கலாம். அதுக்காக உங்களுக்கு குழந்தை பொறக்காதுன்னு நான் சொல்லல. இன்னொரு ஆப்ஷனும் இருக்குன்னு சொல்லறேன். அவரை விட்டு பிரயறத பத்தி இனிமே நீ பேசவே கூடாது புரிஞ்சுதா ? நம்ம மேல ஆசை வச்ருக்கற புருஷன் எல்லாருக்கும் அமையறதில்ல. குரல் தழுதழுத்தது.
நான் வச்சுடறேன்.
போனை அனைத்தவளுக்கு மனதில் இருந்தபாரம் இறங்கியது போல இருந்தது. இழுத்து பெரு மூச்சு விட்டாள். என்னால உங்க அன்பான மனைவி ஆகவே முடியாதா முத்து ? மனம் ஏங்கியது. ஒரு சாதாரண மனைவியாக அவன் மனம் கவர்ந்தவளாக அவள் மாற முடியுமா ?

வீட்டுக்குள் ஒன்றாக நுழைந்த சிவாவையும், கங்காவையும் பார்த்த சிமிக்கு, உள்ளுக்குள்ளே கறுவிக் கொண்டிருந்தது. சிவாவுக்கு, காபி கலந்து கொண்டு போய் மாடியில் அவன் அறையில் ஆத்தி கொடுத்தாள் .
எப்போதும், தாங்க்ஸ்மா என்று அம்மாவின் கை மனத்தை புகழ்ந்து கொண்டே குடிப்பவன், இன்றோ
எங்கிட்ட கேட்டுட்டு கலந்திருக்கலாமில்ல ? என்ற கேள்வியில் உள்ளே இருந்த ஆத்திரமெல்லாம் பொங்கி வந்தது.
ஏம்பா ?
இல்லமா , கங்கா ரொம்ப டயர்டா இருந்தாளேன்னு காபி கடைக்கு கூட்டிட்டு போனேன். அங்கையே நானும் காபி குடுச்சுட்டேன்.
ஓஹோ ! சரிப்பா . எங்கல்லாமோ போயிட்டு வந்துருக்க. டயர்டா இருப்ப . ரெஸ்ட் எடு . நாளைக்கு வேற ஊருக்கு கிளம்பனும். முதலில் சாதாரணமாக ஆரம்பித்தவள், பின்னர் சுய ரூபம் காட்டினாள்.
எங்கள பத்தி ஒனக்கு என்ன ? நாங்கல்லாம் எங்களை நாங்களே பாத்துக்கறோம். பாவம் ஒனக்கு நிறைய வேல இருக்குமே ?இது நான் போட்டது தானே ? கீழ ஊத்திடறேன். ஒனக்கு ஒரு வேளை காப்பி வேணுன்னா அவகிட்டையே கேளு.
அம்மா உங்க பேச்சே வேற மாதிரி இருக்கு. எதுவும் போடி வச்சு பேசாதீங்க.
என்னடா! என் பேச்சா வேற மாதிரி இருக்கு. நீதாண்டா வேற மாதிரி இருக்க ? நானும் உங்க அப்பாவும் எப்படி இருக்கோம்? ஒண்ணுமே தெரியாது. அந்த குழந்தை பாதி ராத்திரில வந்து எங்களை பாத்துட்டு போகுது. இத்தனைக்கும் அவளை நான் பெத்துக்கல . உன்ன தானடா பெத்தேன்? என்னோட தங்கச்சி, என்னோட தேவதை அது இதுன்னு கொஞ்சிக்கிட்டே இருப்ப. இப்போ அவ சாப்பிட்டாளா? தூங்கினாளா ? எங்கையோ போன எடத்துல வாழ்க்கையை தொலைச்சுட்டு நிக்கறாளே ? அவ மூஞ்சில சிரிப்பை காணுமே ? ஒண்ணாவது ஒனக்கு தெரியுமா ? நேத்து ராத்திரி வீட்டுக்கு மாப்பிள்ளை வந்தது கூட ஒனக்கு தெரியாது. ஊருலேர்ந்து வருவ., கண்ணு அவள தேடும், அவ ஒண்ணுமே தெரியாத பூனை மாதிரி வந்து ஜன்னல்ல ஒளிஞ்சு நின்னு உன்ன பார்ப்பா . ஓடி போய் ஒனக்கு டிபன் பண்ணுவா , எதுவுமே எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா ? நான் உன்ன பெத்தவடா ? ஏதோ பாவம் அனாதைன்னு கொண்டு வந்து வீட்டுல வச்சு படிப்பு தந்து சோறு போட்டா , உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணறா அவ.
சத்தம் கேட்டு, கங்கா தியாகுவும் ஓடி வந்தனர். கங்கா எதுவும் பேசவில்லை. அமைதியாக நின்றாள் .
பண்ணறத பண்ணிட்டு வாய மூடிக்கிட்டு நிக்குது பாரு அமுக்கினி,,,, கண்களை விரித்து முறைத்தாள்.
ஓகே மா ., நீங்க சொல்ல வேண்டியதை சொல்லி முடிச்சாச்சா இல்ல இன்னும் ஏதாவது மிச்சம் இருக்கா ?
மூச்சிரைக்க நின்றவளை பார்க்க சிவாவுக்கு பயமாக இருந்தது. ஏனெனில் இதுவரை அவன் பார்த்த அன்னை இவளல்லவே ?
இருப்பினும், கண்களை மூடி தன்னை நிதானப்படுத்திக் கொண்டு சொன்னான்.
நானும் கங்காவும் கல்யாணம் பண்ணிக்க ஆசை படறோம். அதுவும் உங்களோட முழு சம்மததோட. உங்களுக்கு ஓகேன்னா நாங்க கல்யாணம் பண்ணிக்குவோம், உங்களுக்கு வேண்டான்னா நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன் . யாரையுமே, எப்பையுமே . நான் இவளை காதலிக்கல. ஆனா என்னால ஒருத்திய காதலிக்க முடியுன்னா அது இவை மட்டும் தான். மிக அழுத்தமாக சொன்ன மகனை பார்த்த தியாகுவுக்கு முதலில் அதிர்ச்சி.பின்பு ஆச்சர்யம்.
வெடுக்கென்று மூஞ்சியை திருப்பிக் கொண்டு சிமி வெளியில் போனாள் . உங்களோட சம்மதத்துக்காக நீங்க உங்க வயத்துல பெத்த பையன் காத்துக்கிட்டிருக்கேன். சிமி அத்தனை பிடிவாதக்காரி இல்லையென்றே அவனுக்குத் தோன்றியது. நாமும் அப்படியே நம்புவோம்.

மீண்டும் வருவாள் தேவதை.......
 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-70


அன்னை சென்ற பின், சிவா நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.
கங்கா அறையை விட்டு வெளியில் சென்றாள் .
என்னப்பா இதெல்லாம்?இத்தனை நாளா ஏன் எங்ககிட்ட எதுவுமே சொல்லல ?
எனக்கே தெரியாததை நான் எப்படி உங்க கிட்ட சொல்ல முடியும்பா ?
எனக்கு ஒருத்தர பிடிச்சிருந்தா அது தப்பாப்பா?எனக்கு அவளை புடிச்சிருக்கு. நான் அவளை காதலிக்கல. ஆனா அவளை மட்டுமே காதலிக்க விரும்பறேன் மனைவியா ! அவளை தவிர என்னால வேற யாரையும் நினைக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது. அம்மாகிட்ட சொன்னதேதான்ப்பா . நீங்களும் அம்மாவும் முழு சம்மதத்தோட எங்களுக்கு ஆசிர்வாதம் பண்ணனும்.,அப்பதான் எங்க கல்யாணம். அவன் கண்களில் மட்டும் இல்லை, அவன் குரலிலும் இருந்த தீவிரத்தை அவரால் உணர முடிந்தது.
அதெல்லாம் சரி, உங்களோட வயசு வித்தியாசம்?
எனக்கும் அந்த யோசனை இருக்குப்பா. ஆனா அதையும் தாண்டி ஏதோ ஒன்னு இருக்குன்னு எனக்கு தோணுது. ஆனா இது உடல் கவர்ச்சி சார்ந்தது மட்டும் இல்லையேப்பா , இது அதையும் தாண்டி, மனசு, அது என்னனு என்னால புரிஞ்சுக்க முடியல. ஆனா உங்களுக்கும் அம்மாவுக்கும் நடுல ஏதோ ஒன்னு இருக்குல்ல , அதுதான்னு தோணுது. ப்ச், எனக்கு சொல்ல தெரியல. புரிஞ்சுக்கோங்கப்பா!
சொல்லத் தெரியாமல் அவன் சொல்லும்போது, அவருக்கு அவன் சிறுவனாகவே தெரிந்தான்.
என்னவோ சிவா, பெரியவங்க உங்களை குழந்தைகளாவே பாத்துடறோம் . இல்ல நாங்க பெரியவங்களாகிட்டோம்னு நீங்க காட்டும்போது எங்களால தாங்க முடியல.
நான் மத்தவங்க மாதிரி இல்லப்பா ., நான் என்னிக்குமே உங்களோட கைபிடில, அம்மாவோட முந்தானைல இருக்கதாம்பா ஆசை படறேன் . அதுல கங்காவையும் சேர்த்துக்கோங்கன்னுதான் சொல்லறேன்.
எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியல சிவா. அம்மா சொன்னது எது எப்படியோ, ஆனா சத்யா விஷயத்துல நீ பண்ணறது ரொம்ப தப்புன்னுதான் எனக்கும் தோணுது.
சத்யாவை பத்தி எனக்கும் கவலைகள் இருக்குப்பா. என்னிக்குமே அவ என்னோட தேவதைதான். முத்துவை தவிர அவளால வேற யாரோடையும் வாழ முடியாதுப்பா. கொஞ்ச நாள் விடுவோம், அப்புறமா பார்த்துக்கலான்னு நாம் எல்லாரும் சேர்ந்து தானே முடிவெடுத்தோம். நான் அவளை அப்படியே விட்டுடுவேனா ? நீங்களாவது என்ன நம்புங்கப்பா. நீங்க அம்மா, சத்யா நீங்கல்லாம் என்னோட உறவுகள். கங்கா என்னோட கடமை. நீங்க எல்லாரும் அவளை நல்லா பார்த்துக்குவீங்கன்னுதான் அவளை வேற ஹாஸ்டலுக்கு கூட அனுப்பல . பட் இப்ப அவளை இந்த வீட்டை விட்டு வெளில அனுப்பப் போறேன்.. எனக்கு நீங்கதான் முக்கியம். அதேசமயம் அவளை நோகடிக்கறத என்னால ஒதுக்க முடியாது. இப்ப இருக்கற நிலைமைல அம்மா அவளை நிச்சயமா நல்ல விதமா நடத்த மாட்டாங்க.பாவம் அந்த பொண்ணுக்கு என்னிக்குமே ஒரு நல்ல குடும்பம் அமையாது போல.
நீங்க ., உங்களுக்கு எங்க கல்யாணத்துல சம்மதமா?
அம்மாவுக்கு என்னவோ ., அதேதான் எனக்கும்.
எனக்கு யாரையாவது புடிச்சுருக்குன்னா, உங்களுக்கு யாருக்குமே என்ன புடிக்காதில்லை?
இல்ல சிவா., நான்.,
பரவால்லப்பா . நான் புரிஞ்சுக்கறேன்.
மாலையில் வீட்டுக்கு வந்த சத்யாவுக்கு வீட்டின் அசாரதான அமைதி ஏதோ சரியில்லை என்று சொல்லியது. இவள் வண்டி சத்தம் கேட்டதுமே, வா வா என்று வரவேற்கும் அன்னையை காணவில்லை . பதிலுக்கு தந்தைதான் வந்தார். காலையில் நடந்த பிரச்னையில் அவள் உடலும் மனமும் சோர்ந்திருந்தது . தந்தையை பார்த்தவள்,
ஹாய் பா ,

அம்மா எங்க ?
தலைவலியாம், உனக்கு காப்பிதானே , நான் கொண்டு வர்றேன்.
எஸ் பா, நீங்க காபி தாங்க, நான் போய் கை கால் கழுவிட்டு வர்றேன். அப்புறமா குளிச்சுக்கறேன்ப்பா,
பிளீஸ்,
ஒகே டா .
காபி குடித்துக் கொண்டே, மெதுவாக பேச ஆரம்பித்தார்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டவள்,
எனக்கும் ஓரளவு விஷயம் தெரியும்பா, ஆனா அண்ணன்னுக்கு ஆரம்பத்துலேர்ந்தே வயசு வித்தியாசம் உறு த்திக்கிட்டே தான் இருந்தது. அதனலாதான் அவரு சுவேதாவுக்கே ஓகே சொன்னாரு. ஆனா அத தாண்டி அவர்களுக்குள்ளே ஏதோ ஒன்னு இருக்கு. ஆனா அது காதல் இல்லை . அதை தாண்டி வேற ஏதோ., அவங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கு., அவங்க வாழ்க்கை நிச்சயமா சந்தோசமாதான் இருக்கும்.
அதே மாதிரி அம்மா நினைக்கிற மாதிரி கங்கா அமுக்குணி இல்லப்பா. அவ மனசுல உங்கள அப்பா அம்மாவாதான் பாக்கறா. அவ வந்து உங்ககிட்ட அண்ணனை லவ் பண்ணறேன். நீங்க எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு எப்படிப்பா சொல்ல முடியும்? எல்லாத்தைவிடவும், அண்ணன் இத்தனை வருசமா வயசு காலத்துல வரவேண்டிய ஆசைகளைக்கூட ஒதுக்கிட்டுதான் வாழ்ந்துகிட்டு இருக்காரு. அவரோட வாழ்க்கை சரியா அமையாததுக்கு நானும் ஒரு காரணம்.
நான் அம்மாகிட்ட இப்பவே போய் பேசறேன்.அதுக்கு முன்னாடி நீங்க என்ன யோசிக்கறீங்கன்னு எனக்கு தெரியணும்.
எனக்கே தெரியல சத்யா. அம்மா என்ன சொல்லறாளோ அதுதான் எனக்கும். எனக்கு அவளோட வார்த்தைதான் ரொம்ப முக்கியம். அவளுக்கு எதிரா நான் எதுவுமே பேச மாட்டேன்.
ஆனா அண்ணனும் உங்களோட கடமைதான்ப்பா. நீங்க உங்க வைப்ஹ எங்கையும் விட்டுக் கொடுக்கவேண்டாம். ஆனா அவங்களுக்கு சரியானதை சொல்ல வேண்டியதும் உங்களோட கடமை தான்பா .
அப்போ சிவாவுக்கு கங்காதான் சரியான ஜோடிங்கரியா ?
ஆமாம்பா. என்னோட வாழ்க்கைதான் வீணா போச்சு. அட்லீஸ்ட் அண்ணனோட வாழ்க்கையாவது சரியாய் இருக்கணும்பா.
ஏம்மா இப்படிலாம் பேசற?
ப்ச் விடுங்கப்பா., என்னோட வாழ்க்கையை பத்தி இனிமே நான் யோசிக்க போகறதில்ல.
சத்யா, உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா ?
உனக்கும் அவருக்கும் என்னதான் பிரச்னை ?
எனக்கே தெரியலாப்பா ! இந்த நிமிஷம் அவரு ஒரு மாதிரின்னா அடுத்த நிமிஷம் வேற மாதிரி இருக்காரு. சேர்ந்து வாழறவங்கன்னா ஒரு மனைவியால ஹஸ்பெண்ட புரிஞ்சுக்க முடியும். ஆனா அவரு என்ன கிட்ட நெருங்கவே விடறதில்ல. எது எப்படியோ, அவரோட வாழ்க்கை , அண்ணன் , கௌசிக், எல்லாரோட வாழ்க்கையும் பாழாக நான்தான் காரணம்., சொல்ல கூட முடியாமல் வாயை பொத்தி அறைக்குள் சென்று அழுதாள்.
அவளும் தனிமையில் சிறிது நேரம் அழுது ஓயட்டும் என்று தந்தை காத்திருந்தார். அவருக்கும் மனம் தாங்கவில்லை. சிவா அறைக்கு சென்ற அவ ரூமுல போய் அழுதுகிட்டு இருக்கா . போய் சமாதானபடுத்து.
என்னப்பா இது, முதல்லயே சொல்ல கூடாது?
தங்கையின் அறைக்குள்ளே, சென்றவன் அவளை பார்த்தவனுக்கு , முதலில் அதிர்ச்சி. அதை மறைத்தவன், மெதுவாக தோள் தொட்டான். அதற்காகவே காத்திருந்தவள் போல, நீண்ட நாட்களுக்கு பின் சகோதரனின் தோள் சாய்ந்து அழுதாள். அவளுக்கு திருமணம் முடிந்து வந்த போதும், இவன் ஊரில் இல்லை . அவளுக்கு தேவையான எந்த சந்தர்ப்பங்களிலும் இருப்பதே இல்லை. என்னதான் அவன் ஊரில் இல்லை என்று காரணம் சொன்னாலும், அவனும் இப்போதெல்லாம் ஏதோ கற்பனைகளிலேயே வாழத் துவங்கி விட்டான். இப்போது அவனுக்கு அன்னையின் கோபம் புரிந்தது. அவன் குற்ற உணர்ச்சி அவனைக் கொன்றது. அவளின் தலையை மெதுவாக தடவிக் கொடுத்தான். சிறிது நேரம் அழுதவள், தன்னை படுத்திக் கொண்டாள் .
எதுக்கு இந்த அழுகை சத்யா ?
எல்லாத்துக்கும்தான். பொறந்த ஒடனே அம்மாவை முழுங்கினதுலேர்ந்து, இதோ வாழ்க்கையை தொலைச்சுட்டு நிக்கறேனே ! அது வரைக்கும்...... எல்லாத்துக்கும்தான். நீ அழுதா எல்லா பிரச்சனையும் சரியாய்டுமா ? நீ அழு, என்னோட தோள் இருக்கு. ஆனா உன்னோட எல்லா பிரச்சனையும் சரியாய்டனும்.
வெட்கப்பட்டு தலை குனிந்தாள் .
சாரி சத்யா, உன்னோட எந்த கஷ்டத்திலையும் நான் உன் கூட இருக்கவே இல்ல. நான் என்ன காரணம் சொன்னாலும் எதுவுமே மன்னிக்கவே முடியாது. பட் இனிமே உன்ன இப்படி தனியா விட மாட்டேன்.
நீதான் எங்கையோ இருக்க? உன்னால என்ன பண்ண முடியும் ?
அதெல்லாம் காரணம் இல்ல. நான் ரொம்ப சுயநலமியா மாறிட்டேன்.
ப்ச் அதெல்லாம் விடு, அப்பா உன்னோட விஷயத்தை சொன்னாரு. என்ன அம்மா கங்காவை ஏத்துக்க மாட்டேன்னுட்டாங்களா ? குனிந்து அவன் முகத்தை பார்த்தாள் . அம்மா கிட்ட நான் பேசறேன், சரியா?
ம்ம்.,
அம்மா எதுக்காக ஒதுக்கலன்னு உனக்கு ஏதாவது தெரியுமா ?
தெரியல சத்யா, அவங்கள இதுக்கு முன்னாடி நான் இத்தனை கோபமா பார்த்ததே இல்ல . அவங்களுக்கு கங்கா மேலே கோபமா இல்ல வெறுப்பான்னு எனக்கு தெரியல. எது எப்படியோ அவங்க சம்மதிச்சா மட்டும் தான் எங்க கல்யாணம். அது மட்டும் நிச்சயம்.

அது சரி, இத்தனை வயசு வித்தியாசத்துல நீ எதுக்கு கங்காவ சூஸ் பண்ண ?
நீ, அம்மா அப்பா எல்லாருக்காகவுந்தான் . கங்காவுக்காகவும்தான். அவ அம்மாவுக்கு கால்ல பிரச்னை வந்தபோது எப்படி பார்த்துக்கிட்டா ? பல நாள் நான் இங்க இருக்கறதே இல்ல. உன்னையும் கங்காவையும்தான் நான் நம்பிருக்கேன். என்னுடைய ரோலை அவ செய்யறா . சப்போஸ் எனக்கு கல்யாணம் ஆகி வர்றவ உன்னையும், அம்மா அப்பாவையும் சரியாய் நடத்தலன்னா ? சுவேதகிட்டையும் எனக்கு அந்த பயம் இருந்தது. அவள் அப்படி இல்ல. ஆனா அவங்க அப்பா என்ன வீட்டோட மாப்பிள்ளையா வச்சுக்க பார்த்தார். உங்க எல்லாரையும் நான் எப்படி விட முடியும்? நம்ம அப்பா அம்மாவையும் கூட அவர் சரியா மதிக்கல. எல்லாத்தையும் யோசிச்சுதான் நான் கங்காவை தேர்ந்தெடுத்தேன். ஆனா அம்மா என்ன புரிஞ்சுக்கவே இல்ல. மறைந்திருந்து தாயும் தந்தையும் அனைத்தையும் கேட்கிறார்கள் என்று தெரிந்தே தான் அவன் தன் மனதில் இருந்த எல்லாவற்றையும் கொட்டி தீர்த்தான். அவனுக்கு தன் பக்கத்துக்கு நியாயத்தை எப்படி அவர்களுக்கு விளக்குவது என்று தெரியவில்லை. அவன் சொல்லாத இன்னொரு விஷயம் , கங்காவுக்காக அவன் யோசித்தது. ஆம்! தான் இல்லாமல் அவளால் இருக்க முடியாது, என்று அவனுக்கு தெரியும்.
அதெல்லாம் சரி, கங்காவ நீ சூஸ் பண்ணது உனக்காக இல்லையா ?
எனக்காகவும்தான் சத்யா. அவளை கிராமத்துலேர்ந்து நான் இங்க அனுப்பும்போது, அங்க உனக்கு ஒரு நல்ல குடும்பம் இருக்குன்னு சொல்லித்தான் அனுப்பினேன். ஏனோ அவ கூட பழகினதுக்கப்புறம் அவளை எந்த சமயத்துலையும் விட்டுட கூடாதுன்னு தோணுச்சு. அவ எனக்குதான்னு தோணிச்சு.
எங்கண்ணன் ஹீரோதான்,எனக்கும் சரி அவளுக்கும்சரி, சிரிப்பாய் அவன்தோளில் சாய்ந்தாள்.
சிரித்துக் கொண்டே வெளியில் வந்தவர்களை சிரித்த முகத்துடனே, தந்தையும் எனக்கும் நீ ஹீரோதான்டா .,
அம்மா கிட்ட நான் பேசறேன்.
தேங்க்ஸ் பா .,
அப்புறம் என்ன ஹீரா நீங்க கனவு காண போகலாம்......
பல பிரச்சனைகளுடன் விடிந்த காலை விடிந்தாலும் மகிழ்வுடனே இரவு முடிந்ததும்
மீண்டும் வருவாள் தேவதை ................








 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
ஹாய் மக்களே,

இந்த எபிசோடில் ஒரே நாள் நிகழ்வுங்கறதுனால, வேற எந்த கதாபாத்திரங்கள் பத்தியும் என்னால சொல்ல முடியல. இந்த வாரம் சிவாவுக்காக மட்டும்தான்...,
யாரும் கோச்சுக்க வேண்டாம்.....
உங்கள்
பரணி உஷா.
 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-71

மறு நாள் காலை,



கங்கா காபி கலந்தாள் . அதைக் கொண்டு வருவதற்குள், தியாகுவே வந்து வாங்கிச் சென்று விட்டார். அன்று காலை முதலே அனைவருமே, கங்காவும் சிமியும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளாமல், பார்த்துக் கொண்டனர். அன்று மதியம் கங்காவை அவளுடன் படிக்கும் வகுப்புத்தோழியுடன் ஒரு தங்கும் விடுதியில் விடுவதாக ஏற்பாடு.காலையில் வீடு வேலைகளை முடித்தவன் தனது பொருட்களை அடுக்க தொடங்கி இருந்தாள் . அவளால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவளை பார்த்துக் கொண்டிருந்த சத்யா , என்ன கங்கா ? மொத்தமா இங்கேர்ந்து போறியா ?

என்னவென்று புரியாமல் பார்த்தாள் கங்கா ,

இல்ல., ஒரு ஹேர்பின்னக் கூட விடாம எல்லாத்தையும் இங்கேர்ந்து காலி பண்றியே , என்னோட மனசுலேர்ந்தும் காலி பண்ண போறியா ?

சத்யா, என்று ஓடி வந்து அவளைக் கட்டிக்க கொண்டு கதறினாள். நீயும் சிவா சாரும் இல்லன்னா நான் இன்னிக்கு கேவி கேவி அழுதாள். நீ தான் எனக்கு அக்கா......

அம்மா இல்லாதவளுக்கு அக்காதான் அம்மாவும் தெரியுமா ?

ம்ம்ம்ம்.. புரிதலுடன் தலையாட்டினாள்.இதை நீ சொல்லனுமா சத்யா?

சீக்கிரமா இங்கையே வந்துடு ,, என்னோட அண்ணியா !!! அவள் கையை பிடித்து ஏக்கத்துடன் கேட்டாள் .

கண்ணை துடைத்தவள், இல்ல சத்யா.. அது சரிப்பட்டு வராது. ஆன்டி ஒத்துக்கணும் . இல்லன்னா எங்க கல்யாணம் நடக்காது. எல்லாமே என் தப்புதான். நான் கலெக்டர் ஐயா மேல ஆசை பட்டுருக்க கூடாது. நான் தான் தராதரம் தெரியாம ஆசை பட்டுட்டேன் .

எனக்கு நீ ஒரு உதவி செய்யணும். கண்ணை துடைத்து தெளிவாக பேசினாள் .

என்ன ?

எப்படியாவது அவரு மனச மாத்தி வேற ஒரு பொண்ணோட கல்யாணம் பண்ணி வைக்கணும்.

நீ என்ன சொல்லற ? ஏதாவது பைத்தியம் புடிச்சிருக்கா ஒனக்கு?

இல்ல இப்பதான் அவரு மேல இருந்த பைத்தியம் தெளிஞ்சுருக்கு. எனக்கும் அவருக்கும் எதுலயும் ஏணி வச்சா கூட எட்டாது. உங்கம்மாக்கு அவரு ஒரே பையன். இதனை தூரம் கஷ்டப்பட்டு படிக்க வச்சு ஆளாக்கி இருக்காங்க . அவங்களுக்கு ஒரே பையனோட கல்யாணத்த ஜாம் ஜாம்னு நடத்த ஆசை இருக்காது? தன்னோட மருமக, பெரிய இடத்துலேர்ந்து வரணுன்னு எத்தனையோ கனவுகள் ஆசைகள் இருக்கும். என்ன மாதிரி, பணம் காசு இல்லாம, சொந்த பந்தம் இல்லாம எதுவுமே இல்லாதவளை , வீட்டு வேலைக்காரியை அவங்காளல எப்படி எதுக்க முடியும் ? நீயே யோசிச்சு பாரு ?

நீ சொல்லறது சரிதான். ஆனா அதுக்கு பேரே மருமகள். இன்னொரு மகள் ! அதுக்கு பணம் காசு தேவையே இல்ல. அது இருக்கட்டும். எங்கண்ணனுக்கு கல்யாணம் நிச்சயம் ஆனப்புறம் தற்கொலைக்கு முயற்சி பண்ண பொண்ணா இன்னைக்கு இப்படி பேசறது ?

கை பிசைந்து கண்ணீர் சிந்தியவள் முகத்தை நிமிர்த்தினாள். அவரை விட்டுட்டு உன்னாலையும் இருக்க முடியாது. அவராலையும் இருக்க முடியாது கங்கா . இது ஏதோ ஒரு சின்ன பிரச்சனைதான். இதுவும் கடந்து போகும். படிப்புல கவனம் செலுத்து. நல்லா படிக்கணும் கங்கா . வேற எதை பத்தியும் யோசிக்காத. முடிஞ்சா ஏதாவது பார்ட் டைம் வேலைக்கு முயற்சி செய். அது உனக்குதன்னம்பிக்கை கொடுக்கும்.

நீயும் நல்லா படி சத்யா. நீ சீக்கிரமா அண்ணனோட சேர்ந்து வாழணும் . நீ என்னிக்குமே சிரிச்சிட்டே இருக்கணும். சந்தோசமா இருக்கணும் சத்யா. தோழிகளுக்குள் இப்போது சஹோதர பாசம் வந்திருந்தது. இருப்பினும் அந்த வீட்டை விட்டு போகும்போது அவளால் துயரத்தை தாங்கத்தான் முடியவில்லை. மனதை திடப்படுத்திக் கொண்டவள், சிமியின் அறைக்கு சென்றாள் . கால் பாதங்கள் ஒட்டிக் கொண்டதோ என்று அவளுக்கே சந்தேகம் வந்தது. அதற்குள் அவளுக்கு உதவ சத்யாவே வந்து விட்டாள் .

வா கங்கா ,

அம்மா, கங்கா வந்துருக்கா .

படுத்துக்க கொண்டிருந்தவள் முகத்தை திரும்பக் கூட விரும்பவில்லை. புத்தகம் படித்துக் கொண்டிருந்த தியாகு மட்டும் என்ன என்பது போல அவள் முகத்தை கூர்ந்து பார்த்தார்.

ஆன்டி ,அங்கிள் நீ எனக்கு எவ்வளவோ.....எங்க அப்பா பண்ணாததை கூட நீங்க பண்ணிருக்கீங்க... குரல் உடைந்தது. என்னிக்குமே நீங்கதான் எனக்கு கார்டியன், இல்ல அதுக்கும் மேல..ரொம்ப நன்றி.நான் இப்ப இங்கேர்ந்து ஒரு லேடீஸ் ஹாஸ்டலுக்கு போறேன். முடிஞ்சா என்ன மன்னிசுடுங்க......கேவிக் கொண்டே வெளியில் ஓடி விட்டாள் . அவளை பார்த்து தியாகுவுக்கே பரிதாபமாக இருந்தது.. சிமிக்கும்தான். நீ எங்கையும் போக வேணாம் இங்கையே இரு என்று சொல்ல மூளை ஒத்துக் கொண்டாலும், அவளது ஈகோ ஒத்துக் கொள்ளவில்லை. அமைதியாகவே இருந்தாள் . போகறதுதான் போற, என் பையன் வாழ்க்கைய விட்டே போய்டு, அவள் சொன்ன வார்த்தையை கங்கா கேட்கவில்லை. அவள் மகன்தான் கேட்டான்.

நீங்களா இப்படி ? அம்மா அவளை இங்க அனுப்பும்போது ஒனக்கு ஒரு நல்ல குடும்பம் கிடைக்கும், ரொம்ப நல்லா பார்த்துக்குவாங்கன்னு சொல்லி அனுப்பினேன். ஒரு பெரிய ஏக்க பெருமூச்சுடன் வேறுஒன்றும் சொல்லாமல் நகர்ந்தான்.

மகனிடம் பெரியதாக ஆத்திரத்தை எதிர்பார்த்தவள், அவனின் சுருக்கென்ற இந்த வார்த்தை அவள் மனதை மிகவும் குத்தி கிழித்தது. தான் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறோம் என்று அவளுக்கே புரியவில்லை. ஆனால் கங்காவுக்கும் அவளுக்குமான இந்த பிரிவு தற்சமயம் தேவைதான்.



கங்காவை விட்டு விட்டு சிவாவும் ஊருக்கு கிளம்பினான். அவனுக்கு தேவையானதை சத்யாவே செய்து கொடுத்தாள். வீட்டில் யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. ஏதோ பிரச்சனை என்று கௌசிக் புரிந்து கொண்டான். அதனால் அவனும் ஒதுங்கி கொண்டான். ஆனால் அடுத்த நாளும் இதே நிலைமைத் தொடரவே ரிஷிக்கு போன் செய்து வரச் சொன்னான்.

இ டோன்ட் நோ வாட் இஸ் ஹப்பனிங் ஹியர் . என்னால ரொம்ப தலையிட முடியாது. அதான் நீட் யுவர் ஹெல்ப். அவனின் உடல் அசைவே அவனது கவலையை ரிஷிக்கு சொன்னது. நிச்சயம் இவன் பம்பாயில் பார்த்த கௌசிக் இல்லை. யாராவது பேச வேண்டும் என்றால் கூட அவனின் திமிர் பார்வையும், புருவத்தின் ஏற்ற இறக்கங்களுமே பேச வந்தவருக்கு தொண்டை தண்ணியை வற்றடித்து விடும் . மிகுந்த தன்னம்பிக்கையும் சரியான பயிற்சியும் இருக்க வேண்டும், அல்லது இவனை மாதிரியே திமிர் பிடித்தவர்களால் மட்டுமே இவனை சமாளிக்க முடியும்.மனதில் இருந்த பல யோசனைகளை புறம் தள்ளியவன்,

தேங்க்ஸ் கௌசிக், அவனின் அக்கறை ரிஷிக்கு புரிந்தது.

பரவால்ல ரிஷி., இவங்க எல்லாரும் எப்படியும் சந்தோசமா இருக்கணும். அவ்வளவுதான் .

சரி நான் பெரியம்மா கிட்ட பேசறேன் .

கௌசிக் தனது அன்னைக்காக ஆர்டர் செய்திருந்த புது கார் இந்த வாரத்திலேயே வந்து விடும். இருப்பினும் இந்த இடம் புதியது என்பதால் அவன் சென்னையை பழக்கப் படுத்திக்கொள்ள நினைத்திருந்தான். அதனால் இப்போது சத்யாவை கொண்டு விட்டு கூட்டி வரும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். அப்போதுதான் அவன் கயல் விழியைக் கண்டான்.

ரிஷி, முதலில் சத்யாவை பார்த்து அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டான் ,

சத்யா நான் இந்த வாரம் பாம்பே போய்ட்டு அம்மா அப்பாவை கூட்டிட்டு வரல்லான்னு இருக்கேன்.

உங்கப்பா ஒத்துக்கிட்டாரா?

முதல்ல ஒதுக்கல . அப்புறம் அம்மாவுக்காக ஒத்துக்கிட்டார். அவங்க எப்போ வருவாங்கன்னு ரம்யாவும் ரொம்ப ஆவலா இருக்கா .

எத்தனை நாள் இங்க இருப்பாங்க?

முதல்ல பத்து நாள். அப்பா vrs க்கு எழுதி குடுத்துருக்கார். அது ப்ராசஸ் ஆகும்போது போயிட்டு அங்க எல்லாத்தையும் காலி பண்ணனும், அப்புறம் யாருக்காவது வாடைகைக்கு விட்டுடலானு யோசிக்கறோம்.

ஒகே! ரிஷி, எனக்கு லேட்டாயிடுச்சுடா, தப்பா எடுத்துக்காத. கங்காவும் இல்லையா எல்லாத்தையும் நானே பார்த்துக்க வேண்டியிருக்கு. நான் கிளம்பறேன்டா பை.

ஒகே! சத்யா அப்பா அம்மாவை பார்த்துட்டு நான் கிளம்பறேன்.

அவள் அவசரமாக ஓடி வருவதை பார்த்த கௌசிக் ,

சத்யா உன்ன நான் வேணா டிராப் பண்ணறேன்.

ஒகே! வாடா கம்மான் என்று ஓட்டமாய் ஓடினாள்.....

திரும்பி வந்து சாவியை அவனிடம் தூக்கி எறிந்தாள், அவனும் அதை டக்கென பிடித்தவன், கையாலேயே தலையை கோதிக் கொண்டு வந்தான்.

வண்டியை ஸ்டார்ட் செய்தவனுக்கு, வலப்பக்கமா இடதா சந்தேகம்,

ஏய்! அக்கா நீ தாண்டி ரூட் சொல்லணும்.

அக்கா என்ற சொல் அவளின் அதை தொட்டது. ஆச்சர்யமாய் விழி விரிய பார்த்தாள் .

முதல்ல ரூட்டை சொல்லு, அப்பறம் சைட் அடி .

அடுத்து அடுத்து வழிச் சொல்லிக் கொண்டு வந்தாள் . நேரத்திற்கு ஐந்து நிமிடங்கள் முன்பாகவே வந்தவளுக்கு இப்போது தான் மூச்சே வந்தது. ரொம்ப தேங்க்ஸ் டா .

இட்ஸ் ஒகே சத்யா.

திரும்பி போக GPS போட்டுக்கோ. ஜாக்கிரதை ரொம்ப வேகமால்லாம் போகாத. நீ யாரையும் சைட் அடிச்சுக்கிட்டு நிக்காதடா தம்பி.

ம்ம்!! இப்ப சைட் அடிக்காம வேற எப்ப அடிக்கறது ?

ஒதை விழும். பார்த்து ஜாக்கிரதையா போ. வீட்டுக்கு போய்ட்டு எனக்கு மெசேஜ் பண்ணு .

ஒகே! பை! சத்யா.

வண்டியை திருப்பிக் கொண்டு போனவன்,

எதிரில் பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஒருவரிடம் வழி கேட்டான் அவருக்கு வழி தெரியாததால், யோசனையுடன் மறுபடியும் GPS ஐ இயங்கினான் . அதற்குள் அங்கிருந்த ஒரு பெண் தானாகவே வந்து, நான் சொல்லட்டுமா? என்றாள் .

எஸ் ப்ளீஸ்.....

இவனின் அழகையும் கம்பீரத்தையும், வசதியையும் பார்த்து பல பெண்கள் இவனையே சுற்றி சுற்றி வருவார்கள். அதே போல இவளையும் எண்ணியவன், முதலில் அலட்சியமாகத்தான் பார்த்தான்.



தன்னுடைய சொப்பு இதழ்களை குவித்து அவள் பேசும் அழகில் ..........





மயங்கினான் என்று சொல்லவும் வேண்டுமா??????



அவன் மயங்கறது இருக்கட்டும்.,காலைலேர்ந்து வீட்டுல வேல செஞ்சுட்டு டைப்பிங்குல உட்கார்ந்தா எல்லாருக்கும் வருமே அதில்ல இவனுக்கு வந்துருக்கறது. இது வேற!!!

அவளின் வாய் வழி சொன்னாலும், அவளின் கண்களும் சேர்ந்து பேசியது. அவள் இவனுக்கு ஏற்றாற்போல சற்று குனிந்ததில் இடை வரை பின்னி இருந்த பின்னாலும் சற்று முன் வந்தது. அதில் இருந்த நித்யமல்லியின் வாசம் அவனை வேறு உலகத்திற்கு அழைத்து சென்றது.

இதற்குள் அன்னையிடமிருந்து அழைப்பு வந்தது.

ம்மா, சத்யாவுக்கு லேட்டானதுனால அவளை டிராப் பண்ண வந்தேன். வீட்டுக்கு போயிட்டு கூப்பிடறேன்.

இவன் வந்ததும், அவள் இவனுக்கு அட்ரஸ் சொன்னதும், சிறிது நேரத்தில் கிளம்பியதும், இரு விழிகள் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தது.





மீண்டும் வருவாள் தேவதை.......
 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-72
ஏய், அந்த ஆளு சூப்பரா இருக்காருல்ல ? அருகில் இருந்த தோழி வேண்டுமென்றே அவளை உசுப்பேற்றினாள்..
ம்ம் ., பரவால்ல..
அவ்வளவுதானா? என்னம்மா இருக்காரு ?
இருக்கட்டுமே !! என்னோட கார்த்திகை விடவா ?
ஏய்! உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல ? இவரோட கலரும் , ஸ்டைலும் சான்சே இல்ல. அவரை போய் , கார்த்திக்கோட முடியலடி.
அதுக்கு நான் என்ன பண்ணறது? நீ வேணா இந்த மாதிரி ஏதாவது ஒரு பணக்கார டக்கரான ஆளா பார்த்துக்கோ. எனக்கு ஏழைக்கேத்த எள்ளுருண்டையா கார்த்திக் போதும் . அதோ அவரே வந்துட்டாரே !!!
கார்த்திக்.... தூரத்தில் இருந்தே மிக எளிதாக கண்டுகொள்ளும்படியான வெளுத்த நிறம். ஒல்லி என்றும் கூற முடியாது, குண்டு என்றும் கூற முடியாது. நெடு நெடுவென உயரம்.ஓரளவு சரியான அளவில் இருப்பான்.அழகாய் சிரித்தால் நிச்சயம் அடுத்தவர் மயங்குவர். ஆனால் ஒருவிதமான அசட்டு சிரிப்பாகத்தான் அவன் பெரும்பாலும் சிரிப்பான். ஒரு ஐ டி கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு அவன் பெற்றோர் நிறையவே சொத்து சேர்த்து வைத்திருந்தனர். அது எப்படி வந்தது என்பது கயல் விழிக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் நன்றாகவே , மிக நன்றாகவே இருந்திருக்கும். அவனை பற்றி பெரியதாக எதுவும் தெரியாமலே அவனுடன் பழக ஆரம்பித்திருந்தாள் . அவள் ஏற்கனவே வேலை செய்து கொண்டிருந்த கடையில், இவன் சோனி கம்பெனி டீலர்ஷிப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அடிக்கடி கடைக்கு வரும்போதும், தொலைபேசியில் பேசும்போதும் இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. அதுவே இன்னும் தாண்டி அவள் அவன் வீட்டிற்கு சென்றபோதுதான், அவள் தந்தையும், அவன் தந்தையும் ஒன்றாக படித்தவர்கள் என்பது தெரிய வந்தது. நடுவில் அவர்களுக்குள் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தவர்களுக்கு இவர்களின் நட்பின் மூலம் மீண்டும் நட்பு தொடர்ந்தது. பின்னாளில் இவர்களின் கல்யாண சம்பந்தமும் பேசப் பட்டது. கயல்விழியின் தந்தை மிகவும் புத்திசாலி, ஆனால் பிழைக்கத் தெரியாதவர். கார்த்திக்கின் தந்தை பிழைக்கத் தெரிந்தவிதத்தில் புத்திசாலி.
கயல்விழி பேருக்கு ஏற்றாற்போல் விழிகளைக் கொண்டவள். அவள் அழகில் கார்த்திக் மயங்கியதினால்தான் அவன் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் சொன்னதே. இருப்பினும் அவர்கள் தங்கள் அளவிற்கு வசதி இல்லை என்பதையும் அவர்கள் மறக்காமல் இல்லை. இருப்பினும், மருமகள் மாதாமாதம் முழு சம்பளத்தையும் மாமியாரிடம் ஒண்டு வந்து கொடுத்துவிட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை., இல்லை இல்லை ஆணை. மேலும் இப்படியே சம்பந்தம் என்று கூறியே மீது, மெதுவாக குறைந்தது 50 சவரனாவது நகை போட்டு விடுங்கள், இதையாவது பண்ணி விடுங்கள் என்று அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதை ரி எல்லாம் கயல் விழிக்கு யாரும் சொல்லவில்லை. ஆனால் கார்த்திக் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டான் .கயலின் தாய்க்கு இந்த இடத்தில் தனது மகள் நன்றாக இருக்க மாட்டாள் என்றே தோன்றியது. நண்பன், அவனின் வசதி இதுவேதான் அவள் கணவனுக்கு கண்ணில் பட்டது. தன்னால் தான் மகளை வசதியாக வளர்க்க முடியவில்லை, புகுந்த இடத்திலாவது அவள் வசதியாக வாழ வேண்டும் என்பதே அவர் ஆசை. அதற்காக அவர் எத்தனை கஷ்டங்களையும் பொறுத்துப் போக தயார். எல்லாவற்றிக்கும் மேலாக அவர் தன் நண்பனை பள்ளியில் இருந்த, வெள்ளேந்தி மாணவனாகவே நினைத்தார். அவரின் இந்த குருட்டு நம்பிக்கையே அவர் உயிரை வாங்கிவிடும் என்பது பாவம் அவருக்கு தெரியவில்லை.
கயலை பற்றிச் சொல்லவே வேண்டாம். கார்த்திக் நின்றால் அழகு, சிரித்தால் அழகு, என்று நக்மாவின் பாடலில் வருவது போலவே நினைத்துக் கொண்டிருந்தாள்.
அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இன்னும் சில காலம் ஆகட்டும் என்று கூறி இருந்தார் கயலின் தந்தை. இருப்பினும் திருமணத்திற்கு முன்பாகவே தன்னை கயலின் கணவனாகவே நினைக்க துவங்கி விட்டான் கார்த்திக். அவள் யாருடனும் பேஸக் கூடாது, சத்தமாக வாய் விட்டு சிரிக்க கூடாது, தலை நிறைய பூ வைத்திருக்க கூடாது, கண்ணை அழகு படுத்திக் கொள்ள கூடாது இன்னும் நிறைய.. அதற்கு அவன் சொன்ன காரணங்கள், அவனுக்கு மட்டுமே அவள் உரித்தானவள். அவள் அழகு மற்றவர்க்கு எடுப்பாய் தெரியக் கூடாது. அவள் ஏதாவது முகம் சுணங்கினால் ,
ஒய் நீ அழகிடி, உன்ன நான் மட்டும்தான் பார்க்கணும், சைட் அடிக்கணும், முழுசா.... என்று அவர்களின் முதலிரவை பற்றி பேச ஆரம்பித்தாலே அவளுக்கு கன்னம் சிவந்து விடும். அவன் சொல்வதற்கெல்லாம் மண்டையை ஆட்டுவாள், எல்லா பக்கமும். அதை பார்த்து அவனும் மண்டையை ஆட்டுவான் எல்லா பக்கமும்(நக்கலாக).
ஏதோ ஒரு விதத்தில் கயல் விழியை தன் கைக்குள்ளே வைத்து, கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான் கார்த்திக். அது அவளுக்குத்தான் தெரியவில்லை. ஆனால் அவள் தோழி நன்றாகவே தெரிந்து கொண்டாள் . கார்த்திக்கிடமிருந்து கயலை எப்படியாவது அந்த இறைவன்தான் காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுக்கே வந்து விட்டாள் . இருப்பினும் அவ்வபோது அவள் கயல்விழியை எச்சரித்துக் கொண்டே இருந்தாள் . அது எதுவும் அவள் காதில் விழவே இல்லை. தந்தை முடிவு செய்த பையன், மனதிற்கு பிடித்தவன், அழகன், நல்ல வசதி வேறு என்ன வேண்டும்? எல்லாவற்றிற்கும் மேலாக அவளை, அவள் அழகை ஆராதிப்பவன் . ஒரு பெண்ணுக்கு வேறு என்னதான் தேவை ? எதையெதையோ பார்த்தவள் அவனால் தன்னை சந்தோசமாக இல்லாவிட்டாலும், நிம்மதியாக வாழ வைப்பானா என்பதையே மறந்துவிட்டாள் .

அவள் தோழி சுதா சொன்னதோ, வேறு.
அவன் ஒரு சந்தேகப்பிராணி. அவனை திருமணம் செய்துகொள்ளும் எந்த பெண்ணாலும் சந்தோசமாக வாழவே முடியாது என்பதுதான்.

உலகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் நம்பும் ஒரே நபர் அம்மாதான். இதோ வசந்தி வர போகிறாள். அவளை எப்படி எதிர் கொள்வது என்று கௌசிக் தவித்துக் கொண்டிருந்தான்.
அவனை பார்க்க வந்த சத்யா அவன் நிலைமையை நன்றாகவே புரிந்து கொண்டாள் .
இங்க பாரு கௌசிக், இப்போ நம்ப அப்பா நம்மளோட இல்ல. ஆனா உங்க அம்மா உன்னோட இருக்காங்க. அவர் உன்னோட ஆசையா இருக்க ஆசை பட்டார் . ஆனா என்னிக்கும் நீ உங்க அம்மாவை வெறுக்கனுன்னு நினைக்கல.
சிறு மௌனத்திற்கு பின்.....

உண்மையாவே நீ அவரை அப்பாவா ஏத்துக்கிட்டானா உங்க அம்மாவையும் நீ ஏத்துக்கணும் . அவங்க உனக்கு நல்ல அம்மாதான் என்னிக்குமே.புரிஞ்சுக்கோ.நாம பேச ஒரு நாள் பத்தாது. நீதான் யோசிச்சு முடிவெடுக்கணும்.
ஆதரவாய் தலையை கோதி விட்டு போனாள் .
சத்யா,, உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.
ம்ம்...
நீ என்னோட அசிங்கத்த யாருகிட்டயும் சொல்லலதானே ? ஐ மீன் உன்னோட பேமிலி ?
ம்ம்... என்னிக்குமே யாருகிட்டயும் சொல்ல மாட்டேன். நீ எதைப்பத்தியும் கவலை படாத....
வெளியில் சென்றவள், திடீரென திரும்பி,
ஆமா காலைல என்ன விட்டுட்டு அங்க பஸ் ஸ்டாப்புல ஏதோ ஒரு பொண்ணுகிட்ட பேசினாப்புல இருக்கு?
அம்மா தாயே ஒரு வயசானவருகிட்ட வழி கேட்டேன், அவருக்கு தெரியல. இந்த பொண்ணே தான் வந்து எனக்கு ரூட் சொல்லிச்சு.
ரூட் சொல்லிச்சா,,, இல்ல ரூட் போட்டுச்சா ???
சத்யா ப்ளீஸ்... அதெல்லாம் ஒன்னும் இல்ல.
அழகா வெட்கப்படற டா என்று கன்னத்தை கிள்ளினாள். ஏற்கனவே வெட்கத்தினால் சிவந்த முகம் இன்னும் சிவப்பேறியது.
ஸ்ஸ்ஸ் வலிக்குதுடி....
இங்க வந்து நல்ல தமிழ் வேற பேசற!! காந்த கண் அழகா இந்த ஒரு பொண்ணுங்கஉன்ன கடிச்சுடுவாங்க பார்த்துக்கோ.
ம்ம் அந்த பொண்ணு நம்ம மூஞ்சிய கூட ஒழுங்கா பார்க்கல, இவை வேற....என்று அந்த எண்ணங்களை ஓரம் கட்டி தன் அன்னையை பற்றி யோசிக்க ஆரம்பித்த
அப்போதே கௌசிக் முடிவெடுத்துவிட்டான் . இனி தன் வாழ்வில் வசந்தி மட்டும்தான். அவளைத் தவிர வேறு எதையும் யோசிக்க போவதில்லை. தன் அன்னையிடம் இது விஷயமாக எதை பற்றியும் பேசுவதில்லை.
எப்போது முடிவெடுத்துவிட்டானோ அப்போதே அன்னையின் வருகையை எதிர்பார்க்க துவங்கிவிட்டான் .
கௌசிக் யோசிப்பது தவறு என்று எடுத்துக் கூற சத்யா இருந்தாள் , ஆனால் வசந்திக்கு? யாருமில்லை . அவள்தான் கண்ணீர் சிந்தியாக வேண்டும்.

கௌசிக்கின் மனம் இப்போது லேசானது. எங்கிருந்தோ வந்த இதமான காற்று அவன் மனதை வருடியது. அதன் குளிர்ச்சியை அனுபவித்தவனுக்கு அந்த பெண்ணின் நினைவு ஏனோ வந்தது. எத்தனை பெண்களின் கனவு நாயகனோ இவன்!! அவனுக்கேத் தெரியாது . வாழ்க்கையில் முதன்முதலாக இவன் ஒரு பெண்ணை நினைத்துப் பார்க்கிறான். ஏனோ மறு நாளும் அவளை அதே இடத்தில் சந்திக்க முடியுமா என மூளை கேட்டது. சந்திக்க வேண்டுமே என்று மனம் ஏங்கியது.


மீண்டும் வருவாள் தேவதை.......

 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-73
கௌசிக்கின் மனம் லேசானது, அதில் அவள் அந்த பெயர் தெரியாத அழகி வந்திருந்தாள். பல நாட்களுக்கு பின் அவன் நன்றாய் தூங்கியதால் மறு நாளும் அவன் உற்சாகமாகவே இருந்தான்.அதனால் மறுநாள் காலை சத்யாவுக்கு முன்னே இவன் ரெடியாகி இருந்தான்,
ஹாய் சத்யா !
வாவ் என்னடா இவ்ளோ சீக்கிரம் ரெடியாய்ட்டே ?
யெஸ் !துள்ளலான பதில் வந்தது.
என்ன பஸ் ஸ்டாப்ல யாராவது வெய்ட்டிங்கா ? காரில் அமர்ந்து கதவை சாத்தியபடியே வினவினாள்.
நோ பா !
நீ இவ்ளோ அழகா வெட்கப்படுவியா ?
ஹே ப்ளீஸ், நா ஏதோ உன்கிட்ட கொஞ்சம் சீரியஸா பேசன்னுன்னுதான் வந்தேன். கொஞ்சம் சீரியஸான விஷயம்.

சரி சொல்லு, அம்மா நாளைக்கு வர்றாங்க.
ஓ குட்! வாய் ஏதோ சொன்னாலும், முகத்தில் ஒரு சிறு அதிர்வு இருந்தது.
சத்யா, இதை உன்கிட்ட எப்படி சொல்லறதுன்னு தெரியல..... பட் நீ தப்பா எடுத்துக்க கூடாது.....

சொல்லு கௌசிக்.
அம்மா வந்ததும், நாங்க ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு போய்க்கறோம் .
ஏன் கௌசிக்? நாங்க உங்கள நல்லா பார்த்துக்க மாட்டோமா ?
அதெல்லாம் இல்ல சத்யா, உண்மைய சொல்லணுன்னா எங்க அம்மா உங்க அப்பாவை சந்தோசமா வச்சுக்கலை . அதுதான் உண்மை. என்னதான் இருந்தாலும், தியாகு அங்கிளுக்கு அது உறுத்தலாகத்தான் இருக்கும். நான் ப்ச் அது வேற சத்யா, பட் அம்மா ப்ளீஸ் இதுக்கு நீ நோ சொல்லாத. புரிஞ்சுக்கோ... சொல்ல வந்ததை அவனது ஹிந்தி கலப்பில், ஆங்கிலத்திலும் தமிழும், கலந்து திக்கி திணறி ஒரு வழியாக சொல்லி முடித்தான்.
சரி, நான் அப்பா கிட்ட பேசறேன்.
மருத்துவனை வந்துவிட்டது. கௌசிக் உன்னால ஈவ்னிங் வரமுடியுமா ?
வரேனே !! தேங்க்ஸ் டா கண்ணா.....நீ எதையும் யோசிக்காத சத்யா... எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.
பை !
கிளம்பியதும், ஏனோ மனம் அவளை தேடியது.
ஆனால் அன்று கார்த்திக் இன்னும் சிறிது நேரத்திற்கு முன்பாகவே வந்து அவளை அழைத்துச் சென்று விட்டான்.
அன்று மாலையும் அவன் கண்கள் ஏனோ அவளை தேடியது. ஆனால் பார்க்க முடியவில்லை. மறுநாள் கண்ணுக்கு விருந்தாய் அவளை பார்க்கவும் போகிறான்... பேசவும் போகிறான்....
மறுநாள் அவனுக்கு நல்ல யோகம்தான்.


மீண்டும் வருவாள் தேவதை.
 

Latest Episodes

New Threads

Top Bottom