- Messages
- 67
- Reaction score
- 37
- Points
- 18
NYD-79
முகம்,கை, கால் கழுவிக் கொண்டு வந்தவன், பூ போல உறங்கும் மனையாளின் முகத்தை பார்த்தான். பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது. யாருக்கும் கிடைக்காத பெரிய புதையல் எனக்கு கிடைச்சிருக்கு. யாருக்குத்தான் இத்தனை அன்பான அழகான மனைவி கிடைப்பாள்? என்னை மாதிரி படிக்காத ஆளுக்கு ? அவனுக்கு வியப்புதான், அதிலும் அவள் , ஒன்றுமே இல்லாத நான் கட்டாயமாக தாலி கட்டிய பின்னும் என்னை நீ எப்படி ஏத்துக்கிட்டிங்க ? உங்களுக்கும் எனக்கும் ஏணி வச்சா இல்ல, ஏரோ ப்ளேன் வச்சா கூட எட்டாது, நீங்க என்ன எப்படி ஏத்துக்கிட்டிங்க? பணம், குணம், படிப்பு எதுவுமே இல்லாத நான் எங்க, எல்லாமே இருக்கற நீங்க எங்க ?
அவளருகில் அவளின் வந்து உட்கார்ந்து கொண்டு அவளின் தலையை லேசாக கோதினான். அவளின் மென்மையான உதடுகளை பார்த்தான், அழகான கன்னங்களைப் பார்த்தான். லேசாக தொட்டான். குழந்தையின் ஸ்பரிசம் போலவே இருந்தது. கூரான மூக்கு , கண்ணுக்கு கீழே தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் மச்சம், ஓரத்தில் இருந்தாலும் அதற்காக இருக்கும் காது என்று பார்த்துக் கொண்டே இருந்தான். அவளை பார்த்துக் கொண்டே இருந்தவனுக்கு, உன் தேவி தரிசனம் போதும், இப்போது நான் இருக்கிறேன் என்று நித்ரா தேவி அவனை உறங்கச் சொன்னாள், லேசாக கண்ணை இழுத்தது போல இருந்தவனுக்கு அவனை அறியாமலேயே ஆழந்த உறக்கத்திற்கு சென்று விட்டான்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு இடது கை வலிப்பது போல இருந்தது சத்யாவுக்கு, ஆனால் கையை அசைக்க முடியவில்லை. லேசாக கண் விழித்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி. ஆம்!அவள் கை மேல்தான் இத்தனை நேரம் படுத்து உறங்கி கொண்டிருந்தான் முத்து. அவனை அசைக்காமலே மெதுவாக கையை இழுத்துக் கொண்டாள் . அவனுக்கு தலைக்கு தலையணை வைத்தவள் சத்தமின்றி எப்போதும் போல தன்னை சுத்தம் செய்துக்க கொண்டு வந்தாள் . அன்னை வைத்திருந்த பாலை மெதுவாக நிலவின் வெளிச்சத்தில், குடித்து முடித்தாள் . மீண்டும் வந்து படுக்க போகுமுன் அவன் முகத்தை பார்த்தாள் . சிறு பிள்ளை போல தூங்கும் கணவனின் முகத்தை பார்த்தவளுக்கு அவனை பார்த்துக் கொண்டே வேண்டும் போல இருந்தது. அவனிடம் அவளுக்கு கேட்க நிறைய கேள்விகள் இருந்தது. அவன் தூங்கிக் கொண்டிருந்தாலும், அவள் கேட்டாள் .
ஏன்டா என்ன இப்படி படுத்தற ? எதை வச்சு என்ன நீ மயக்கின ? இந்த கோபக்கார பார்வையா ? என்ன திட்டடிகிட்டே இருக்கற இந்த உதடா !! என்ன திட்டறதுக்கு பதில் ஒரே ஒரு கிஸ் குடுத்தா ஏதேதோ நினைத்தாள் எண்ணங்கள் கட்டுப்பாடில்லாமல் போவது அவளுக்கே தெரிந்தது. தன்னை தானே நெற்றியில் லேசாக அடித்துக் கொண்டாள் . அவள் ரசிக்கும் இதே முத்து கொஞ்ச நாளைக்காவது என் மூஞ்சில முழிக்காதே என்று சொல்லி விட்டால்? அவளால் தாங்க முடியாது.அவன் சொல்லாமலே இருக்கட்டும். இப்போது அவள் சந்தோஷமாகவே இருக்கிறாள் . எத்தனைதான் அவன் இவளை வேண்டாம் என்று ஒதுக்கினாலும், அவளுக்கு அவன் மீது எனோ வெறுப்பு வரவில்லை. அதற்கு பதில், வேண்டாம் என்று கோபித்துக் கொள்ளும் முரட்டு சிறுவனாகவேதான் தெரிந்தான். அதற்கு காரணம், எப்போதுமே அவன் இவளை உறங்கும் நேரத்தில் அன்னையாகவே நினைப்பதினாலா ? (அவன் உன்ன பொண்டாட்டியா நடத்தினா எப்படி தங்கப்போற சத்யா 💕-----ஒரே மீனிங்😜 )
இவளுக்கு முன்பாகவே எழுந்து கொண்டவன், வேகமாக தனது காலைக் கடன்களை முடித்துக் கொண்டான். அதற்குள் இவளும் எழுந்து விட்டாள் . குளியறையில் தண்ணீர் சத்தம் கேட்கவும் இவள் மற்றொரு அறைக்கு சென்று தனது வேலைகளை முடித்துக் கொண்டாள் . அவன் திருமணத்திற்கு கிளம்ப வேண்டுமே என்று வேகமாக தனது வேலைகளை முடித்துக் கொண்டு இருவருக்கும் காபி கலக்கினாள் . அவர் என்ன கல்யாணதுக்கு ஏன் கூப்பிடவே இல்ல? கூப்பிடுவாரா ? யோசனையா, இல்ல ஏக்கமா கண்ணு ?
அதற்குள் சிமியும் வந்து விட்டார்.
என்ன மாப்பிள்ளை நீங்க எத்தனை மணிக்கு கிளம்பனும் ?
9-10.30தான் முஹூர்த்தம். அதான் காபி குடிச்சுட்டு கிளம்பலான்னு .
மணி இப்பதானே 6 ஆகுது. நீங்க இங்கையே குளிச்சுட்டு நிதானமாவே கிளம்பலாமே !!!
என்ன சத்யா ? உனக்கு ஓகே வா ??
ம்ம்!! எனக்கு ஓகே.
புது துணி இருக்கா ? இல்ல இவங்க அப்போவோடது தரவா ???
அதெல்லாம் இருக்குங்க... பை வண்டிலதான் இருக்கு.
நீ எப்ப கிளம்பனும் ?
நோ மா , ஈவினிங் வந்தா போதுன்னு சார் சொல்லிட்டார்..
அப்புறம் என்ன ???
மாப்பிள்ளை கிளம்பியதும் நீ கொஞ்சம் தூங்கு,. நான் போய் குளிச்சுட்டு, மாப்பிள்ளைக்கு டிபன் பண்ணறேன்.
அவசரமாக காபியை குடித்துவிட்டு குளிக்க சென்றார். நாம இவ்ளோ சொல்லறோம், இவரு சத்யாவையும் கூட்டிட்டு போனா என்ன ?? என்ற இயல்பான கேள்வி அவர் மூளையை குடைந்தது. இருப்பினும், தான் ஏதாவது சொல்லி ஏதாவது பிரச்னை வந்து விடுமோ என்று வாயை மூடிக் கொண்டார். மூளையை குடைந்த கேள்விக்கு பதில் கிடைத்தது போல கௌசிக் வாங்கி தந்த புடவையை கட்டிக் கொண்டு வந்தவளை அவள் தாயே கண்ணை விரித்து பார்த்தார். மகள் ஏற்கனவே பேரழகிதான், இருப்பினும், மகளும் மருமகனும் சேர்ந்து வரும்போது இன்னும் முகத்தில் மகிழ்ச்சியும், பூரிப்பும், கூடி இருந்தது.
மாப்பிள்ளையின் முகத்தில் ஏதோ ஒன்று... சின்ன புன் முறுவல்.
மார்னிங் பா ,
ஹாப்பி மார்னிங் சத்யா... காதருகில் மெதுவாக கிசுகிசுத்தார் . இவள் முகம் சிவந்தது. மகளை சந்தோசமாக பார்க்க பார்க்க அவர்களுக்கு திகட்டவில்லை .
என்னதான் நடந்தது? தெரிந்து கொள்ளவில்லை என்றால் சிமிக்கு தலை வெடித்து விடும்.
மகளை தனியே அழைத்து சென்று கேட்டார்., நீங்க கொஞ்ச நேரம் சஸ்பென்ஸோடையே இருங்க, நான் போயிட்டு வந்து சொல்லறேன் மை டியர் மம்மி..
நீயும் போகறியா சத்யா . இயல்பாக கேட்டார் தந்தை .
ம்ம்!! ஆமாம்பா.
ஒகே டா!! கண்ணா, ரெண்டு பேரும் ஜாக்கிரதை.
எஸ் பா , மாப்பிள்ளை உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்ல.. பார்த்து போங்க.
சரிங்க மாமா..
இருவரும் கிளம்பினர் . சிமிக்கு இப்போதுதான் மூச்சே வந்தது.
எந்த பிரச்சனையும் வராம நீங்கதான் பார்த்துக்கணும் கடவுளே !! என்று முத்துவின் மேல் இருந்த பயத்தினால், பய பக்தியுடனே வேண்டிக் கொண்டார்.
அதற்கு ஓரளவு பலனும் கிடைத்தது.
இருவரையும் ஜோடியாக பார்த்த செல்விக்கும் சரவணனுக்கு ஏக அதிர்(மகிழ்)ச்சி. வாடா வா வா , வாங்க அண்ணி...கை கூப்பி அழைத்தனர். அதற்குள் பெண்ணின் அம்மாவும் அப்பாவும், வாசலுக்கு வந்தனர். வா முத்து , இவங்க...
இவங்கதான், அண்ணி... சத்யா.. செல்வி முந்திக் கொண்டாள் .
மற்ற பெண்களும் ஒவ்வொருவராக அங்கே சேர்ந்தனர். அடியாத்தி எம்புட்டு அழகு ?! அதான் யாருக்கும் சொல்லாம இந்த கருவாயன் டபக்குனு தாலிய கட்டிட்டானா ? என்றார் ஒருவர்,
மற்றொருவர், உங்கள பார்த்தா பொண்ணுங்களுக்கே ஆசை வரும். முத்துவுக்கு வராதா என்ன ?
இவர்கள் பேச பேச அவளுக்கு கன்னம் சிவந்தது. அதையும் அவர்கள் புகழ்ந்தார்கள்.
கல்யாணத்துக்கே யாருக்கும் கன்னம் சிவக்கறதில்ல. உங்களுக்கு என்ன இதுக்கே இப்படி சிவப்பாயிட்டுது??
உங்கள பார்த்தா பார்த்துகிட்டே இருக்கணும் போல இருக்கு, வேல கிடக்கு என்று சொல்லி நகர்ந்தவர், அடுத்த சில நொடிகளிலேயே கையில் பெரிய மல்லிகை சேர்த்துதான் வந்தார். இந்தம்மா பூ வச்சுக்கோ. இந்த முத்து , அவன் கையில் திணித்து விட்டு போனார்.
இவை அனைத்தையும் இரு விழிகள் கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தன . இத்தனை நாட்களாக தன்னை பேரழகி என்று கொண்டாடியவர்கள் இப்போது வேறு ஒருத்தியை புகழ்வது அவளுக்கு பொறுக்க வில்லை . ஆம்! அது கயல் விழிதான் . மற்றவர் முன்பு பூ வைக்க கூச்சம் கொண்டவன்,
டாக்டரு நீங்களே வச்சுக்கோங்களேன். ம்ம் ,அதெல்லாம் முடியாது நீங்க தான் வைக்கணும் செல்வி அடம் பிடித்தாள் . இருவருக்குமே ஏதோ சொல்ல முடியாத உணர்வு...
சரி, திரும்புங்க... சத்யாவுக்கு மூச்சடைத்தது . அவன் பூ வைத்தது தலையில்தான் என்றாலும், ஏனோ காதுகள் குறுகுறுத்தன.கன்னங்கள் தானே சிவப்பை பூசிக் கொண்டன.. பின்னிருந்து செல்விதான் சொல்லிக் கொடுத்தாள் .எப்படி பூ வைக்க வேண்டுமென்று!!! மற்றவர்களை பார்க்க சென்ற சரவணன், தூரத்தில் இருந்து அவன் மனையாளையே கவனித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இப்போது இந்த சில நாட்களாக அவன் மனைவி சில நாட்களாக இன்னும் அழகாக இருப்பது போல தெரிந்தது. அதான் ரீசன் தெரிஞ்சுருச்சே சரவணா, இன்னும் என்ன சைட் அடிச்சுகிட்டு?
அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தவன், என்ன இது அவங்கள தனியா விடாம இதுவே பேசிக்கிட்டுருக்கு?
பார்த்தீங்களா ? சும்மாவே என் பின்னாடி சுத்தறேன்னு சொல்லுவிங்களே ? இப்ப இவங்களும் சொன்னாங்க பார்த்தீங்களா ??? தலையை ஆட்டி ஆட்டி அவள் சொன்ன விதம், இவளுக்கு சிரிப்பாகத்தான் இருந்தது. அவள் இவளுக்கு ஒரு வளர்ந்த குழந்தையாகத்தான் தெரிந்தாள் . அதிலும் அவள் பிள்ளை உண்டாகி இருப்பதில் மகிழ்ச்சியும் குதூகலமும் அப்பட்டமாகவே அவள் முகத்தில் தெரிந்தது .
ப்ச்! செல்வி சும்மா ஏதாவது சொல்லாத, காற்றில் கையை பறக்க விட்டாள். என்ன விட நீதான் அழகு !!
என்ன சரவணன், நான் சொல்லறது சரிதானா ?
சட்டென்று கணவனை பார்த்தவளுக்கு , முகத்தில் சட்டென வெட்கம் வந்தாலும்,அவன் என்ன சொல்லி திட்டுவானோ என்று பயமும் சேர்ந்தே வந்தது.அதை மறைத்தவள் , அவசரமாக அண்ணி வாங்க சாப்பிடலாம்.
எங்க இப்பதானே இட்லி கேசரி எல்லாம் முழுங்கின , நீ எங்க போற ? என்று அவளின் கையை பிடித்துக் கொண்டான்...
இருங்க சரவணன், நான் எதுக்கு உங்களுக்கு இடைஞ்சலா நான் போய்டறேன், நீங்களாச்சு உங்க பொண்டாட்டி ஆச்சு , சிரித்துக் கொண்டே நகர்ந்து விட்டாள் .
பின்ன என்ன ? செல்வியை முழுங்குபவன் போல பார்த்துக் கொண்டிருந்ததை அவளும் அறிவாள் தானே??
இப்போது காலை சிற்றுண்டிக்கு கணவனுடன் செல்ல போகிறாள் தேவதை..........
முகம்,கை, கால் கழுவிக் கொண்டு வந்தவன், பூ போல உறங்கும் மனையாளின் முகத்தை பார்த்தான். பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது. யாருக்கும் கிடைக்காத பெரிய புதையல் எனக்கு கிடைச்சிருக்கு. யாருக்குத்தான் இத்தனை அன்பான அழகான மனைவி கிடைப்பாள்? என்னை மாதிரி படிக்காத ஆளுக்கு ? அவனுக்கு வியப்புதான், அதிலும் அவள் , ஒன்றுமே இல்லாத நான் கட்டாயமாக தாலி கட்டிய பின்னும் என்னை நீ எப்படி ஏத்துக்கிட்டிங்க ? உங்களுக்கும் எனக்கும் ஏணி வச்சா இல்ல, ஏரோ ப்ளேன் வச்சா கூட எட்டாது, நீங்க என்ன எப்படி ஏத்துக்கிட்டிங்க? பணம், குணம், படிப்பு எதுவுமே இல்லாத நான் எங்க, எல்லாமே இருக்கற நீங்க எங்க ?
அவளருகில் அவளின் வந்து உட்கார்ந்து கொண்டு அவளின் தலையை லேசாக கோதினான். அவளின் மென்மையான உதடுகளை பார்த்தான், அழகான கன்னங்களைப் பார்த்தான். லேசாக தொட்டான். குழந்தையின் ஸ்பரிசம் போலவே இருந்தது. கூரான மூக்கு , கண்ணுக்கு கீழே தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் மச்சம், ஓரத்தில் இருந்தாலும் அதற்காக இருக்கும் காது என்று பார்த்துக் கொண்டே இருந்தான். அவளை பார்த்துக் கொண்டே இருந்தவனுக்கு, உன் தேவி தரிசனம் போதும், இப்போது நான் இருக்கிறேன் என்று நித்ரா தேவி அவனை உறங்கச் சொன்னாள், லேசாக கண்ணை இழுத்தது போல இருந்தவனுக்கு அவனை அறியாமலேயே ஆழந்த உறக்கத்திற்கு சென்று விட்டான்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு இடது கை வலிப்பது போல இருந்தது சத்யாவுக்கு, ஆனால் கையை அசைக்க முடியவில்லை. லேசாக கண் விழித்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி. ஆம்!அவள் கை மேல்தான் இத்தனை நேரம் படுத்து உறங்கி கொண்டிருந்தான் முத்து. அவனை அசைக்காமலே மெதுவாக கையை இழுத்துக் கொண்டாள் . அவனுக்கு தலைக்கு தலையணை வைத்தவள் சத்தமின்றி எப்போதும் போல தன்னை சுத்தம் செய்துக்க கொண்டு வந்தாள் . அன்னை வைத்திருந்த பாலை மெதுவாக நிலவின் வெளிச்சத்தில், குடித்து முடித்தாள் . மீண்டும் வந்து படுக்க போகுமுன் அவன் முகத்தை பார்த்தாள் . சிறு பிள்ளை போல தூங்கும் கணவனின் முகத்தை பார்த்தவளுக்கு அவனை பார்த்துக் கொண்டே வேண்டும் போல இருந்தது. அவனிடம் அவளுக்கு கேட்க நிறைய கேள்விகள் இருந்தது. அவன் தூங்கிக் கொண்டிருந்தாலும், அவள் கேட்டாள் .
ஏன்டா என்ன இப்படி படுத்தற ? எதை வச்சு என்ன நீ மயக்கின ? இந்த கோபக்கார பார்வையா ? என்ன திட்டடிகிட்டே இருக்கற இந்த உதடா !! என்ன திட்டறதுக்கு பதில் ஒரே ஒரு கிஸ் குடுத்தா ஏதேதோ நினைத்தாள் எண்ணங்கள் கட்டுப்பாடில்லாமல் போவது அவளுக்கே தெரிந்தது. தன்னை தானே நெற்றியில் லேசாக அடித்துக் கொண்டாள் . அவள் ரசிக்கும் இதே முத்து கொஞ்ச நாளைக்காவது என் மூஞ்சில முழிக்காதே என்று சொல்லி விட்டால்? அவளால் தாங்க முடியாது.அவன் சொல்லாமலே இருக்கட்டும். இப்போது அவள் சந்தோஷமாகவே இருக்கிறாள் . எத்தனைதான் அவன் இவளை வேண்டாம் என்று ஒதுக்கினாலும், அவளுக்கு அவன் மீது எனோ வெறுப்பு வரவில்லை. அதற்கு பதில், வேண்டாம் என்று கோபித்துக் கொள்ளும் முரட்டு சிறுவனாகவேதான் தெரிந்தான். அதற்கு காரணம், எப்போதுமே அவன் இவளை உறங்கும் நேரத்தில் அன்னையாகவே நினைப்பதினாலா ? (அவன் உன்ன பொண்டாட்டியா நடத்தினா எப்படி தங்கப்போற சத்யா 💕-----ஒரே மீனிங்😜 )
இவளுக்கு முன்பாகவே எழுந்து கொண்டவன், வேகமாக தனது காலைக் கடன்களை முடித்துக் கொண்டான். அதற்குள் இவளும் எழுந்து விட்டாள் . குளியறையில் தண்ணீர் சத்தம் கேட்கவும் இவள் மற்றொரு அறைக்கு சென்று தனது வேலைகளை முடித்துக் கொண்டாள் . அவன் திருமணத்திற்கு கிளம்ப வேண்டுமே என்று வேகமாக தனது வேலைகளை முடித்துக் கொண்டு இருவருக்கும் காபி கலக்கினாள் . அவர் என்ன கல்யாணதுக்கு ஏன் கூப்பிடவே இல்ல? கூப்பிடுவாரா ? யோசனையா, இல்ல ஏக்கமா கண்ணு ?
அதற்குள் சிமியும் வந்து விட்டார்.
என்ன மாப்பிள்ளை நீங்க எத்தனை மணிக்கு கிளம்பனும் ?
9-10.30தான் முஹூர்த்தம். அதான் காபி குடிச்சுட்டு கிளம்பலான்னு .
மணி இப்பதானே 6 ஆகுது. நீங்க இங்கையே குளிச்சுட்டு நிதானமாவே கிளம்பலாமே !!!
என்ன சத்யா ? உனக்கு ஓகே வா ??
ம்ம்!! எனக்கு ஓகே.
புது துணி இருக்கா ? இல்ல இவங்க அப்போவோடது தரவா ???
அதெல்லாம் இருக்குங்க... பை வண்டிலதான் இருக்கு.
நீ எப்ப கிளம்பனும் ?
நோ மா , ஈவினிங் வந்தா போதுன்னு சார் சொல்லிட்டார்..
அப்புறம் என்ன ???
மாப்பிள்ளை கிளம்பியதும் நீ கொஞ்சம் தூங்கு,. நான் போய் குளிச்சுட்டு, மாப்பிள்ளைக்கு டிபன் பண்ணறேன்.
அவசரமாக காபியை குடித்துவிட்டு குளிக்க சென்றார். நாம இவ்ளோ சொல்லறோம், இவரு சத்யாவையும் கூட்டிட்டு போனா என்ன ?? என்ற இயல்பான கேள்வி அவர் மூளையை குடைந்தது. இருப்பினும், தான் ஏதாவது சொல்லி ஏதாவது பிரச்னை வந்து விடுமோ என்று வாயை மூடிக் கொண்டார். மூளையை குடைந்த கேள்விக்கு பதில் கிடைத்தது போல கௌசிக் வாங்கி தந்த புடவையை கட்டிக் கொண்டு வந்தவளை அவள் தாயே கண்ணை விரித்து பார்த்தார். மகள் ஏற்கனவே பேரழகிதான், இருப்பினும், மகளும் மருமகனும் சேர்ந்து வரும்போது இன்னும் முகத்தில் மகிழ்ச்சியும், பூரிப்பும், கூடி இருந்தது.
மாப்பிள்ளையின் முகத்தில் ஏதோ ஒன்று... சின்ன புன் முறுவல்.
மார்னிங் பா ,
ஹாப்பி மார்னிங் சத்யா... காதருகில் மெதுவாக கிசுகிசுத்தார் . இவள் முகம் சிவந்தது. மகளை சந்தோசமாக பார்க்க பார்க்க அவர்களுக்கு திகட்டவில்லை .
என்னதான் நடந்தது? தெரிந்து கொள்ளவில்லை என்றால் சிமிக்கு தலை வெடித்து விடும்.
மகளை தனியே அழைத்து சென்று கேட்டார்., நீங்க கொஞ்ச நேரம் சஸ்பென்ஸோடையே இருங்க, நான் போயிட்டு வந்து சொல்லறேன் மை டியர் மம்மி..
நீயும் போகறியா சத்யா . இயல்பாக கேட்டார் தந்தை .
ம்ம்!! ஆமாம்பா.
ஒகே டா!! கண்ணா, ரெண்டு பேரும் ஜாக்கிரதை.
எஸ் பா , மாப்பிள்ளை உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்ல.. பார்த்து போங்க.
சரிங்க மாமா..
இருவரும் கிளம்பினர் . சிமிக்கு இப்போதுதான் மூச்சே வந்தது.
எந்த பிரச்சனையும் வராம நீங்கதான் பார்த்துக்கணும் கடவுளே !! என்று முத்துவின் மேல் இருந்த பயத்தினால், பய பக்தியுடனே வேண்டிக் கொண்டார்.
அதற்கு ஓரளவு பலனும் கிடைத்தது.
இருவரையும் ஜோடியாக பார்த்த செல்விக்கும் சரவணனுக்கு ஏக அதிர்(மகிழ்)ச்சி. வாடா வா வா , வாங்க அண்ணி...கை கூப்பி அழைத்தனர். அதற்குள் பெண்ணின் அம்மாவும் அப்பாவும், வாசலுக்கு வந்தனர். வா முத்து , இவங்க...
இவங்கதான், அண்ணி... சத்யா.. செல்வி முந்திக் கொண்டாள் .
மற்ற பெண்களும் ஒவ்வொருவராக அங்கே சேர்ந்தனர். அடியாத்தி எம்புட்டு அழகு ?! அதான் யாருக்கும் சொல்லாம இந்த கருவாயன் டபக்குனு தாலிய கட்டிட்டானா ? என்றார் ஒருவர்,
மற்றொருவர், உங்கள பார்த்தா பொண்ணுங்களுக்கே ஆசை வரும். முத்துவுக்கு வராதா என்ன ?
இவர்கள் பேச பேச அவளுக்கு கன்னம் சிவந்தது. அதையும் அவர்கள் புகழ்ந்தார்கள்.
கல்யாணத்துக்கே யாருக்கும் கன்னம் சிவக்கறதில்ல. உங்களுக்கு என்ன இதுக்கே இப்படி சிவப்பாயிட்டுது??
உங்கள பார்த்தா பார்த்துகிட்டே இருக்கணும் போல இருக்கு, வேல கிடக்கு என்று சொல்லி நகர்ந்தவர், அடுத்த சில நொடிகளிலேயே கையில் பெரிய மல்லிகை சேர்த்துதான் வந்தார். இந்தம்மா பூ வச்சுக்கோ. இந்த முத்து , அவன் கையில் திணித்து விட்டு போனார்.
இவை அனைத்தையும் இரு விழிகள் கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தன . இத்தனை நாட்களாக தன்னை பேரழகி என்று கொண்டாடியவர்கள் இப்போது வேறு ஒருத்தியை புகழ்வது அவளுக்கு பொறுக்க வில்லை . ஆம்! அது கயல் விழிதான் . மற்றவர் முன்பு பூ வைக்க கூச்சம் கொண்டவன்,
டாக்டரு நீங்களே வச்சுக்கோங்களேன். ம்ம் ,அதெல்லாம் முடியாது நீங்க தான் வைக்கணும் செல்வி அடம் பிடித்தாள் . இருவருக்குமே ஏதோ சொல்ல முடியாத உணர்வு...
சரி, திரும்புங்க... சத்யாவுக்கு மூச்சடைத்தது . அவன் பூ வைத்தது தலையில்தான் என்றாலும், ஏனோ காதுகள் குறுகுறுத்தன.கன்னங்கள் தானே சிவப்பை பூசிக் கொண்டன.. பின்னிருந்து செல்விதான் சொல்லிக் கொடுத்தாள் .எப்படி பூ வைக்க வேண்டுமென்று!!! மற்றவர்களை பார்க்க சென்ற சரவணன், தூரத்தில் இருந்து அவன் மனையாளையே கவனித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இப்போது இந்த சில நாட்களாக அவன் மனைவி சில நாட்களாக இன்னும் அழகாக இருப்பது போல தெரிந்தது. அதான் ரீசன் தெரிஞ்சுருச்சே சரவணா, இன்னும் என்ன சைட் அடிச்சுகிட்டு?
அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தவன், என்ன இது அவங்கள தனியா விடாம இதுவே பேசிக்கிட்டுருக்கு?
பார்த்தீங்களா ? சும்மாவே என் பின்னாடி சுத்தறேன்னு சொல்லுவிங்களே ? இப்ப இவங்களும் சொன்னாங்க பார்த்தீங்களா ??? தலையை ஆட்டி ஆட்டி அவள் சொன்ன விதம், இவளுக்கு சிரிப்பாகத்தான் இருந்தது. அவள் இவளுக்கு ஒரு வளர்ந்த குழந்தையாகத்தான் தெரிந்தாள் . அதிலும் அவள் பிள்ளை உண்டாகி இருப்பதில் மகிழ்ச்சியும் குதூகலமும் அப்பட்டமாகவே அவள் முகத்தில் தெரிந்தது .
ப்ச்! செல்வி சும்மா ஏதாவது சொல்லாத, காற்றில் கையை பறக்க விட்டாள். என்ன விட நீதான் அழகு !!
என்ன சரவணன், நான் சொல்லறது சரிதானா ?
சட்டென்று கணவனை பார்த்தவளுக்கு , முகத்தில் சட்டென வெட்கம் வந்தாலும்,அவன் என்ன சொல்லி திட்டுவானோ என்று பயமும் சேர்ந்தே வந்தது.அதை மறைத்தவள் , அவசரமாக அண்ணி வாங்க சாப்பிடலாம்.
எங்க இப்பதானே இட்லி கேசரி எல்லாம் முழுங்கின , நீ எங்க போற ? என்று அவளின் கையை பிடித்துக் கொண்டான்...
இருங்க சரவணன், நான் எதுக்கு உங்களுக்கு இடைஞ்சலா நான் போய்டறேன், நீங்களாச்சு உங்க பொண்டாட்டி ஆச்சு , சிரித்துக் கொண்டே நகர்ந்து விட்டாள் .
பின்ன என்ன ? செல்வியை முழுங்குபவன் போல பார்த்துக் கொண்டிருந்ததை அவளும் அறிவாள் தானே??
இப்போது காலை சிற்றுண்டிக்கு கணவனுடன் செல்ல போகிறாள் தேவதை..........