Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Nee en devadhai

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD -74
உலகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் நம்பும் ஒரே நபர் அம்மாதான். வயிற்றுக்குள் இருக்கும்போதே அம்மாவை உணர்ந்து கொள்கிறது குழந்தை.
கண்ணுக்கு தெரியாத கடவுளை நம்புவதில்லை, தான் வயிற்றுக்குள் இருக்கும் போது இருந்தே கேட்டுக் கொண்டிருக்கும் அந்த குரல், அதன் ஸ்பரிஸம், அந்த உடல் சூடு,தன்னை என்றென்றும் காக்கும் என்ற ஸ்திர நம்பிக்கையில்தான் குழந்தை பூமியில் ஜனிக்கிறது.
அம்மா யாரை இவர்தான் அப்பா என்று கை காட்டுகிறார்கள் அவரைத்தான் அப்பா என்று அழைக்கும் வினோதம், அம்மா குழந்தை இடையிலான பந்தத்தில் தான் நிகழக்கூடும்.அப்படி அடையாளம்(மட்டுமே) காட்டப்பட்டவர் தான் மாகாதேவன். வசந்தி இவரை அடையாளம் காட்டினாளா ? உண்மையைக் கூற வேண்டுமானால் இல்லை. அவனே அவரை டடா(டாடி) என்று அழைக்க ஆரம்பித்தான். இவர் மறுப்பேதும் கூறவில்லை. அவராகவேதான் அவனது பொறுப்புகளையும் எடுத்துக் கொண்டார். தனது சொந்த மகளை விட்டவருக்கு இவன் மீது ஏன் இந்த பாசம்?

மனித இனத்தைத் தவிர வேறு எந்த ஜீவராசிகளிலும் தந்தை என்ற ஒரு நபர் அடையாளம் காட்டப்படுவதில்லை. அம்மா என்ற உயிரை மட்டும் நம்பினால் போதுமானது. அந்த உயிர் குழந்தையைப் பேணி பாதுகாத்து வளர்த்து விடும். உயிர் வாழ கற்றுக் கொடுக்கும். ஆனால், மனிதப் பிறவியின் நாகரீகத்தின் உச்சம் என்று சொல்லப்படும் எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் ஒருவனுக்கு ஒருத்திதான் என்ற நிலைப்பாட்டை அழுந்த மனதில் பதிய வைக்க தான் அப்பா என்ற நபர் அடையாளம் காட்டப்படுகிறார்.
வசந்தி செய்தது இப்படிப்பட்ட தான ஒரு அத்துமீறல். கௌஷிக் இத்தனை வருடங்களாக எவர் ஒருவரை அப்பா என்று அழைத்துக் கொண்டு இருந்தானோ அந்த நபர் அவனது பிறப்புக்கு காரணமான சொந்தத் தந்தை இல்லை. சரி நிஜமான தந்தை யாரென்று கண்டு பிடிக்கலாம் என்றால் அது யார் என வசந்திக்கே தெரியாது!!!
மனிதனுக்கும் விலங்குகளுக்குமான வேறுபாடு சுய கடுப்பாட்டில்தான் தொடங்கும்.

யூடியூப் சேனலில் ஒரு பெரிய யானையை தொடர்ந்து அதன் சிறு குழந்தை யானை செல்கிறது, அந்த அம்மா யானை தன் குழந்தையை அவ்வளவு கருத்தோடு பார்த்துக் கொள்கிறது. நம்மைவிட ஒரு அறிவு குறைவு என்று சொல்லப்படும் ஐந்தறிவு உயிர் கூட தன் அம்மாவை நம்பும் போது தன்னால் ஏன் அவ்வாறு நம்ப முடியாமல் போனது, எந்த பாவத்திற்காக இந்த தண்டனை என்று தனக்குள்ளேயே
மருகிக்கொண்டிருந்தான் கவுசிக். பெற்றவளை நம்ப முடியாத கொடுமை அவனை வாளாய் அறுத்தது.

அன்று கௌசிக் மகாதேவனுக்கு ஆதாரவாக பேச வசந்திக்கோ தன் மகன் தனக்காக நில்லாமல் எதிராக பேசிய கோவம்.வசந்தியை நிலை இழக்க செய்தது.

இத்தனை வருடங்களில் மகாதேவன் இந்த வேற்றுமையைக் கௌஷிக்கிடம் காட்டியதில்லை தான். சிறு வயதில் எல்லாம் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் மனதளவில் ஏதோ வேறுபாடு என்றுதான் நினைத்திருந்தான் கௌசிக். ஒருவேளை அப்பாவிற்கு அம்மா இரண்டாம் தாரமாக இந்த மன வேறுபாடு வந்திருக்கலாம் என்ற ஊகம் அவனது விடலைப் பருவத்தில் ஏற்பட்டிருந்தது. ஆனால் விடயம் அதுவல்ல... எந்தஆணாலும் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் துரோகத்தை தனது அம்மா அப்பாவிற்கு செய்திருக்கிறாள். இல்லை இல்லை அப்பா என்று அடையாளம் காட்டப்பட்ட நபருக்கு செய்திருக்கிறாள். இதில் பாதிக்கப்படக்கூடிய நபர் தனது மகன் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. போதாகுறைக்கு தன் தாயின் எந்த கோலத்தில் தான் பார்க்கக் கூடாதோ அந்த கோலத்தையும் அவன் பார்த்துவிட்டான். குடிபோதையில் இன்னொரு ஆணுடன் தனது தாயின் அந்த கோலத்தை பார்த்தவனுக்கு அன்று அதன் அர்த்தம் புரியவில்லை. ஆனால், புரியும் வயதில் கண்ட காட்சி மனதில் அடி ஆழம் வரை நஞ்சு போல கோபமும் தன் அம்மா மீதான வெறுப்பும் இறங்கியிருந்தது. அவன் அதை பெரியதாக அன்னையிடம் காண்பிக்க இல்லை . ஆனால் எப்போது தனக்கு தந்தை யாரென்று கூட அன்னையால் அடையாளம் காண்பிக்க முடியவில்லையோ அதை அவனால் மன்னிக்க முடியவில்லை. இப்போதும் சத்யாவின் சொல்லுக்காக அவன் அன்னையை அன்னையாக மட்டுமே ஏற்றுக்கொள்வான். தந்தை யாரென்று அன்னையால் சொல்ல முடியவில்லை என்றாலும் மஹாதேவன்தான் தந்தை. இதை பற்றி அவன் இனி வசந்தியிடம் பேசக் கூடாது என்று நினைத்திருந்தான். நடக்குமா?
அப்போது வந்த ஆத்திரத்தில் வசந்தியை தாறுமாறாக திட்டி இருந்தால் கூட பரவாயில்லை. வெறுப்பை காண்பிக்கும் விதமாக அவளுடன் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டான்.மகனின் ஒதுக்கம் அவளுக்கு தெரிந்தாலும் காரணம் அவளுக்கு தெரியவில்லை.

இதோ அவளுக்கு காரணம் தெரிந்துவிட்டது. அவளுக்கு மகனிடம் நிறைய பேச வேண்டும், அவன் மடியில் தலை சாய வேண்டும், முக்கியமாக மன்னிப்பு கேட்கவேண்டும்.
விமானத்தில் பயணம் செய்து கொண்டு வசந்தி தன் மனதை புரட்டிப்பார்த்தாள். உண்மையில் அவளுக்கு தன் தவறுகளின் பாரதூரம் புரியவில்லை. தன் வாழ்க்கையை தான் அனுபவிப்பதில் தவறு என்ன, எங்கே என்றுதான் அவளுக்கு தோன்றியது.

வசந்திக்கும் கௌசிக்கும் சண்டையிட்ட பின் அவனே வந்து தன்னை சமாதான படுத்துவான் என்று நினைத்தாள் . அப்பா என்ற சொல் அவன் மனதை இந்த அளவுக்கு காயப்படுத்தும் என்று அவள் நினைக்கவே இல்லை. அவன் தன்னை விட்டு பிரிந்து போவான் என்றும் அவள் நினைக்கவில்லை. அவன் பிரிந்ததும் அவன் மேல் அவளுக்கு அப்படி ஒரு கோபம் ஆத்திரம் எல்லாம் சேர்ந்து வந்தது. ஆனால் அவன் எங்கே போயிருப்பான் என்ற கவலையும் இருந்தது.

கௌசிக் வயிற்றில் உண்டானதும் அவள், அப்பா, நண்பர் என்று அனைவருமே அவளை வெறுக்க தொடங்கினர், கால தாமதம் ஆனதால் அவளால் கருவை கலைக்க கூட முடியவில்லை. அவள் எத்தனைதான் முயன்று மகனை வெறுத்தாலும், அவனின் பிஞ்சு விரல்களும், தேன் முத்தங்களும் அவளை மயக்கியது., படுத்தியது. அவனின் காந்த விழிகளில் முதலில் மயங்கியதே அவள் தானே.
முதலில் பால் தர மாட்டேன் என்றாள் . பின்னர் பால் கட்டிக்கொள்வதால் பால் தர ஆரம்பித்தாள். பின்னர், அவனின் பிடிவாதம் தாங்காமல் பால் தந்தாள்.எல்லாவற்றிலும் அவனின் பிடிவாதமே முன் நின்றது. இப்போதும் அவன் பிடிவாதமே முன் நிற்கிறது.அவனுக்காக அவனுக்காகவே எல்லாவற்றிலும் விட்டுக் கொடுத்தாள் . அப்போதும் அவன் தனக்கு மட்டுமே என்றுதான் நினைத்தாள் . அதனால் தான் அவன் தந்தையை தாங்கி பேசவும் அவளால் பொறுக்க முடியவில்லை.
ஆனால், தன் அம்மா தான் கருவில் இருக்கும் பொழுதே தன்னை அழிக்க முயற்சி செய்தாள் என்றோ, தான் பசிக்காக ஏங்கிய சமயங்களில் பால் தராது தவிக்க விட்டாள், தன் அழகு பற்றி மட்டும் யோசித்தாள், அவள் தனது பசியாற்ற அவளுக்கு பால் கட்டியது தான் காரணம் அன்றி பாசம் அல்ல… முழு சுயநலம் கொண்டவள் தன் தாய் என்று தனயனுக்கு தெரியும் பொழுது அவன் எப்படி உணர்வான் என்று யோசிக்க மறந்தாள் வசந்தி. வயிற்றில் கருவை சுமக்கும் பொழுது அவள் காட்டிய குழந்தை மீதான வெறுப்பு இன்று புமராங் போல திரும்ப அவளை தாக்குகிறது. அவள் தாங்கதான் வேணும்.
என்னதான் அவள் தவறுகள் செய்திருந்தாலும், அவளுக்கு மகனின் மீது வந்தது பாச வெறி.எப்படியாவது மஹாதேவனிடம் இருந்து அவனை பிரித்துவிட வேண்டும் என்ற பழி வெறி. இப்போதும் அவளுக்கு அது போகவில்லை. மகாதேவனிடம் அவளுக்கு ஏற்பட்ட வெறுப்பை அவள் உயிருள்ளவரை விடப்போவதில்லை. பாச வெறிக்காகவே இதோ எல்லாவற்றையும் விட்டு விட்டு அவள் வந்து விட்டாள் . எப்படி சத்யாவை அல்லது அவளது குடும்பத்தை எதிர்கொள்வது என்பது பற்றி கூட யோசிக்கவில்லை. இதோ அவளுக்கு தேவை தன் மகன். வேறொன்றும் இல்லை .

கண்ணை மூடி தனது வாழ்க்கையை புரட்டி பார்த்தவளுக்கு , ங்க .....என்று சொல்லிய குழந்தையின் குரல் மீட்டெடுத்தது. வாழ்க்கையில் முதல் முறையாக அந்த குழந்தையை அள்ளி எடுத்து கொஞ்சினாள். அவளுக்கு இப்போது மகனை கொஞ்சியது போலவே இருந்தது. அவளின் மன வேதனைகளைத் தாண்டி, மனதில் ஒரு நிறைவு வந்தது. வேறு ஏதோ மகனிடம் பேச நினத்தவளோ இப்போது அவனுக்கு முதலில் திருமணம் செய்து பேரக் குழந்தைகளை கொஞ்சும் ஆவல் வந்தது, விநோதம்தான்.
மீண்டும் வருவாள் தேவதை...........
 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-75

அந்த ஞாயிறு சிவா அவளை அந்த பெண்கள் விடுதியில், விட்டு விட்டு சென்றான். அவளுக்கு மன பாரம் அழுத்தியது. தான் ஒரு அனாதை என்கிற உணர்வு அவளை மிகவும் தாக்கியது. அவள் அவனுடன் இருந்த நிமிடங்களை எண்ணி பார்த்தாள். ஒவ்வொரு நிலையிலும் அவன் அவளுக்கு காவலாகவே இருந்து வந்தான். இவள் என் மனையாள் என்று கூறித்தானே அழைத்து வந்தான். ஆனால் தன்னை ஏன் வேண்டாம் என்கிறான். வயது வித்தியாசம் அது இதுவென்று ஏதேதோ காரணங்களை சொன்னாலும், பணம் , பதவி படிப்பு இவைதானே மற்றவர்களுக்கு முக்கியம்.அந்த சுவேதா என்ன நிறம்? என்ன உயரம்? (என்ன கன்னம்? என்ன கன்னம்?தங்கம் பூசிய தாமரை.... நோ சாங்.. மேடம் இப்போ ரொம்ப கவலைல இருக்காங்கல்ல!!!)
எல்லாவற்றையும் விட மிக முக்கியம் வெள்ளை தோலும் மயக்கும் வசீகரமும்தானே . அதனால்தானே அவன் தன்னை விட்டு, வேறு ஒரு பெண்ணை மணக்க பார்த்தான். தனக்குத்தான் எதுவும் புரியவில்லை. அழுதாள். கண்கள் வீங்க அழுதாள். இவளை தேற்றுவார் இல்லாமல் அழுதாள். வெளியில் சென்ற தோழி வரும் வரை அழுதாள். அவள் வந்து திட்டி இரவு உணவு உன்ன கொடுத்தாள் . இல்லை என்றால் இன்னும் அழுது கொண்டே இருந்திருப்பாள்.சப்பாத்தியும் குர்மாவும் , வயதை நிரப்பியது. முதல் நாள் காலையில் இருந்தே அவள் சரியாகவே உண்ணவில்லை.
அவளுக்கு இந்த உணவு மிகவும் தேவையாகவே இருந்தது. உணவின் ருசி மட்டும் அல்ல, சமைப்பவரின் நல்ல மனதும் மிக முக்கியம் அல்லவா ? நல்ல எண்ணங்களுடன் சமைக்கும் போது அதன் பலன் உண்பவருக்குத்தானே ? அதனால்தானோ என்னவோ அந்த சமயத்தில் அவளுக்கு கிடைத்த உணவு மிக நல்ல பலனையே தந்தது. மனம் சற்று தெளிவானதுபோல தோன்றிற்று.
நல்லா சாப்பிட்டியா?
ம்ம். ,,
இன்னும் வேணுன்னா வாங்கிக்கலாம். அக்கா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. இங்க சாப்பாடு சூப்பரா இருக்கும். பாரு நா கூட கொஞ்சம் வெயிட் போட்டுருக்கேன்.நீயும் சீக்கிரம் குண்டாயிடுவ. அக்காவுக்கு ரொம்ப நல்ல மனசு . யாருக்கு எவ்ளோ வேண்ணாலும் போடுவாங்க. இன்னும் செய்யணுமேன்னு அலுத்துக்கவே மாட்டாங்க.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது ஒரு தமிழ்ப் பழமொழியாகும். பசியால் வாடுபவர் பல சிறப்புகளை இழக்க நேரிடும் என்பதை இப்பழமொழி குறிக்கிறது. அதாவது பசியால் சிவந்து அந்த பசியை தீர்க்க உணவு கிடைக்காத மனிதன் தன்னிடமுள்ள மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், முயற்சி, தாளாண்மை, காமம் ஆகியவற்றை இழந்துவிடுவர் என்பது பொருள்.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.
எங்களுக்கு இதெல்லாம் தெரியாது. பசி வந்தது. சப்பாத்தி சாப்பிட்டோம்,
அடுத்தது?? வேறென்ன? இன்னொரு சப்பாத்தி. .... இவ்வளவுதான் வாழ்க்கை என்ற ரீதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவளை பார்த்த கங்காவுக்கு மனம் சற்று இளகியது.
அன்றைய இரவு, சிவா போன் செய்தான்.
மீண்டும் ஆழ்ந்த அநத மயக்கும்குரல்,
எப்படி இருக்க கங்கா ?
பதில் வரவில்லை. என்ன இப்படி அனாதையா விட்டுட்டு போய்ட்டிங்களே என்று அவன் சட்டை காலரை பிடித்து உலுக்க வேண்டும் போல தான் இருந்ததது. மனதையும் வார்த்தையையும் அடக்கிக் கொண்டாள் . தந்தையே தன்னை விட்டு போனாலும் அவள் சிவா மீது ரொம்பதான் நம்பிக்கை வைத்திருந்தாள். அவளுக்கு அவன் மீது இருந்தது காதல் அல்ல. அதையும் தாண்டி வேறு ஏதோ. சிவாவுக்கும் அதேபோல் தானா ?
ஹலோ ஹலோ..
ம்ம்ம்.. பரவால்ல.
சாப்டியா ?
ம்ம்ம்..
நான் சாப்பிட்டேனான்னு கேட்க மாட்டியா கங்கா ?
பதில் வரவில்லை...
இட்ஸ் ஓகே...குட் நைட்..
போனை அனைத்தவளுக்கு மீண்டும் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
சப்பாத்தியை உண்டவள் எங்கே? எங்கே ???
அதோ கட்டிலில்
தூங்கவில்லை. மேடம் மறுநாள் வகுப்பு தேர்வுக்கு ரிவிசன் பண்ணறாங்கோ.... அட!! நீ இவ்வளவு சின்சியரா????
இவள் அழுவதை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு மனம் தாங்கவில்லை.
இங்க பாரு கங்கா இன்னும் எத்தனை நேரத்துக்கு அழுதுகிட்டே இருப்ப? போ எழுந்து முஞ்சியை கழுவிட்டு வா.
பிலீஸ் என்ன கொஞ்ச நேரம் தனியா விடு.
தனியா மொளகால்லாம் அப்புறம், முதல்ல இப்ப போய் மூஞ்சிய கழுவிட்டு வா....
அவள் சொன்ன விதத்தில் இவளுக்கு கிளுக்கென சிரிப்பு வந்துவிட்டது.
இதோ இந்த பாடம் புரியாம நான் படற கஷ்டத்தை விடவா ஒனக்கு பெரிய கஷ்டம் ?
கங்கா சட்டென முறைத்தாள்.
சரி சரி என்னோடதை விட ஒனக்கு கஷ்டம் கொஞ்சுண்டு பெருசுதான் நான் ஒத்துக்கறேன் என்று துளியூண்டு கையில் காண்பித்தாள். தன்னை சமாதான படுத்தவே அவள் இப்படி செய்கிறாள் என்பதை புரிந்து கொண்டவள், மேலும் அவளை சிரமபடுத்தாமல் எழுந்து முகம் கழுவப் போனாள் .
நாம் துன்பத்தில் இருக்கும்போது நம்மை தேற்றுபவர்கள் எத்தனை முக்கியமோ , நம்மை சிரிக்கவைப்பவர்களும்தான் அத்தனை முக்கியம். நிலாவின் முயற்சி வெற்றி. துப்பட்டாவில் முகத்தை துடைத்துக்கொண்டு வந்தவள் அவள் புத்தகத்தை வாங்கி என்னவென்று கேட்டாள் .
பின்னர் இருவருமே படிப்பில் மூழ்கி விட்டனர். விரைவில் உறங்கியும்விட்டனர். வயதில் இருப்பவர்களுக்கு இது ஒரு சாதகம். அவர்களால் தங்களை மிக எளிதாக வேறு செயல்களில் மாற்றிக் கொள்ள முடியும். இப்போது இங்கு வந்ததில் இருந்து கங்காவுக்கு படிப்பது மிக வசதியாக போனது. எந்த சந்தேகம் என்றாலும் நிலாவே தீர்த்து விடுவாள். பேசிக் கொண்டேஅவரவர் வேலைகளை இருவரும் செய்து விடுவார்கள். அங்கே சத்யா இருந்தாள் தான். ஆனால் அவள் இவளை போல வாயடித்துக் கொண்டே இருக்க மாட்டாள். தான் உண்டு தன் வேலை உண்டு என்றுதான் இருப்பாள். அவளுக்கு எப்போதுமே மருத்துவம் பற்றியே சிந்தனை ஓடிக் கொண்டேதான் இருக்கும்., அன்று வந்த நோயாளிகள், அவர்களின் மருந்துகள், நோயை பற்றியும் நோயாளியின் நிலை பற்றியும் பெரிய மருத்துவர் சொன்னது, அதற்கு தொடர்பான விஷயங்களை இவள் படித்தது, இப்படித்தான் பெரும்பாலும் அவளது சிந்தனைகள் இருக்கும். அதை தாண்டி என்றால் எப்போதாவது முத்துவை பற்றிய சிந்தனை வரும். ஆனால் பெரும்பாலும் அவன் சிந்தனைகளை இப்போதெல்லாம் ஒதுக்கி விடுகிறாள். அவன் ஒரு புரியாத புதிர். எது எப்படியோ அவன்தான் கணவன். இவள் அவனை விரும்புகிறாள். இந்த உடலும் மனமும் அவனுக்கு மட்டுமே. இனி தனது வாழ்வில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த விஷயத்தில் அவள் மிக தெளிவாக இருக்கிறாள். அவனாகவே வந்து எப்போது தன்னை ஏற்றுக் கொள்கிறானோ அப்போது அவள் செல்வதற்கு தயார். பணம் , பெரிய வீடு பகட்டு இது எதுவும் வேண்டாம் அவன்தான் வேண்டும் என்ற முடிவில் அவள் மிகத்தெளிவாகவே இருந்தாள் . என்னதான் அவனாகவே வரட்டும் என்ற முடிவில் இருந்தாலும் ஏனோ அவனை பார்க்கும் போது உள்ளிருந்து ஏதோ ஒரு ஏக்கம் வரத்தான் செய்கிறது. மற்றவர்களுக்கு தெரியும் தன்னுடைய நல்ல குணம் அவனுக்கும் மட்டும் தெரியாமல் போனது ஏன் ? ஆச்சியிடம் கூட சொல்லாமல் திருமணம் செய்தவன் இவன். இருப்பினும் அவர் தன்னை ஏற்றுக் கொள்ளவில்லையா ? கண்ணாடியை பார்க்கும்போதெல்லாம் தான் நன்றாகத்தானே இருக்கிறோம்? அவருக்கு ஏன் என்னை பிடிக்கவில்லை என்று கண் கலங்கும்...... குணம் தெரியலைன்னாலும் பரவால்ல. அழகு கூடவா தெரியாது? என்னோட மனசும் உடம்பும் உனக்காக ஏங்கறது ஒனக்கு ஏன்டா புரியல ? மனம் அவனை கண்டபடி திட்டும். ஆனால் அவனுக்கு போன் கூட செய்து பேச மாட்டாள்.எல்லாவற்றையும் மனதிலேயே வைத்துக் கொள்வாள். அவள்தான் சத்யா. நிலாவோ வேறு விதம். அவளுக்கு எல்லாமே நன்றாக இருக்க வேண்டும். சுத்தம் என்ற பைத்தியம் பிடித்தவள். பெட்ஷீட்டை வாரத்தில் இருமுறையாவது துவைத்து விடுவாள். அந்த சிறிய அறையை சுத்தம் செய்பவரை தவிர இவள் இருமுறையாவது பெருக்கி விடுவாள். அவர் செய்வது பத்தாது என்று இவள் ஒரு முறையாவது துடைத்து விடுவாள். வாரத்திற்கு ஒரு முறை நிச்சயம் துணி அலமாரி புத்தக அலமாரி எல்லாவற்றையும் சுத்தம் செய்துவிடுவாள் . அவளுக்கு வாழ்க்கையில் நிறைய குறிக்கோள்கள், இலட்சியங்கள்.. நன்றாக சாப்பிட வேண்டும் என்பதே முதல் லட்சியம். எப்போதும் சுத்தம் எதிலும் சுத்தம் எங்கும் சுத்தம். எல்லாவற்றிற்கும் மேலாக அவள் கனவு நாயகன் அதர்வா..தினமும் அவனது போட்டோவிற்கு ஐம்பது முத்தங்களையாவது தந்துவிட வேண்டும். எந்த ஆசிரியையிடமும் திட்டு வாங்கவே கூடாது. இவ்வளவுதான், அவள் இலட்சியங்கள்.
உன்னோட வாழ்க்கையின் இலட்சியங்கள் என்ன? அவள் கேள்விக்கு பதில் தெரியாமல் திரு திருவென முழித்தாள் கங்கா . நன்றக படிக்க வேண்டும். சிவாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும்.. இதை தவிர அவள் எதையுமே யோசித்ததே இல்லை. தன்னை பற்றி அவள் என்றுமே சிந்தித்ததே இல்லை. இனிமேலாவது சிந்திப்பாளா ???
---------------------------------------------------------------------------------------------------
இதோ வசந்தியும் வந்து விட்டாள் . அவள் இறங்கி வருவதை ரிஷி பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவளின் குணம் தெரிந்தவன், அவளிடம் தானே பேச தயங்கினான். தவிர்த்தான் . இருப்பினும், வசந்தியை பார்த்த ஆராவுக்குத்தான் எப்படி இருக்கீங்க என்று சும்மா ஒரு வார்த்தையாவது கேட்கலாமே என்று தோன்றியது. அவளும் தயங்கினாள்தான். ஆனால் அதற்குள் வசந்தியும் லக்கேஜ் எடுக்கும் இடத்தில் இவர்களை கண்டுக் கொண்டாள் .
உங்கள எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு. ஆனா ...
நீங்க கௌசிக் அம்மாதானே?
எஸ் எஸ் நீக்க அவனோட பிரண்டா ?
நான் சத்யாவோட கசின்....சார் டெத்துக்கு வந்திருந்தோம்.
ஓஒ !!!
அவள் அடுத்து ஏதேனும் சிடுசித்தால் பெற்றவர்களுக்கு தலை குனிவாகிவிடுமோ என்று,
ஓகே பார்க்கலாம் என்று லக்கேஜை எடுக்க கொண்டு கிளம்பி விட்டான்.
இருப்பினும் அவள் பையை எடுத்து கொடுத்தான்.
தேங்க்ஸ் பா ,
இட்ஸ் ஓகே.. கிளம்பிவிட்டான்.
டேய் என்னடா இது, அவங்கள அவப்படிய தனியா விட்டுட்டு எப்படி போகிறது ?
ம்ம் அங்கேர்ந்து தனியா வந்தவங்களுக்கு இங்க போக தெரியாதா?அவங்க என்ன நம்மள மாதிரி சாதாரணமா ??தி கிரேட் தன்வந்திரி ஹாஸ்பிடலோட ஓனர்... அவங்களுக்கு பல பேர் வருவாங்க. நீங்க வாங்க.
டேய் என்னதான் இருந்தாலும் , பாவண்டா தனியா நிக்கறாங்க. போய் யாராவது வரங்களான்னு மட்டும் கேட்டுடு அருணும் சொன்னார்.
சரி,
ஆன்டி யாராவது உங்கள பிக்கப் பண்ண வாரங்களா ?
கௌசிக் வரேன்னு சொன்னான். என்னனு தெரியல.போன் லைன் போகல.முகத்தில் தவிப்பு தெரிந்தது.
சரி நம்பர் குடுங்க. நான் என்னோட போன்ல பேசவா???
அவன் இங்க பக்கத்துலதான் இருக்கானாம் . இதோ 5 மினிட்ஸ்ல வந்துடுவேன்னு சொன்னான்.
அனைவரும் கௌசிக்கின் வருகைக்காக காத்திருந்தனர். அவனின் கனவு நாயகியோ கார்த்திக்கின் வருகைக்கு காத்திருந்தாள்.....

மீண்டும் வருவாள் தேவதை.....
 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-76
அவங்க உன்னோட ப்ரெண்ட்ஸா ?
ம்ம் ...
அவன் வர்ற வரைக்கும் நீ கொஞ்சம் இருக்க முடியுமா ?
இதோ அவங்ககிட்ட கேட்கறேன்.
அவர்களும் வந்து இருக்கையில் அமர்ந்து கொண்டனர். என்னதான் வசந்தி மனம் மாறி இருந்தாலும் ஏனோ அவளது ஈகோ அவளை சர்வசாதாரணமாக பேச விடவில்லை. இருப்பினும் ரிஷிக்கும் சத்யாவுக்கும் உள்ள உறவு பற்றி அவளுக்கு அறிந்து கொள்ள வேண்டி இருந்தது. கௌசிக்கை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. அதனால் மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.
உனக்கு கௌசிக்கை தெரியுமா ?
அருண் மெல்ல எழுந்து அங்கேயே நடக்க ஆரம்பித்தார் அவர் பார்வையை தொடர்ந்து ஆராவும் அவர் பின்னே சென்றாள் .
ம்ம் எஸ் ஆன்டி, சம் டைம்ஸ் சத்யா வீட்டுல பார்த்திருக்கேன்,
பேசிருக்கீங்களா?
ம்ம் எஸ் ஆன்டி,
ஓஒ !!
அவன் நல்லாருக்கானா ?
உங்களுக்கு என்ன வேணுமோ அதை டரெக்ட்டாவே கேட்கலாம்.
இல்ல கௌசிக் அங்க சந்தோசமா இருக்கானான்னு !!!
இதோ அவனே வந்துட்டானே ...
அவன் சந்தோசமாக இருக்கிறான் என்பது அவன் முக மலர்ச்சியிலே தெரிந்தது.
ஹாய் மாம், சாரி சாரி சரி என்று சொல்லிக் கொண்டே வந்தவனுக்கு பழைய சம்பவங்கள் எதுவுமே நினைவில்லாதது போலவே இருந்தது,
அன்னைக்காக வேகமாக அவன் வந்து கொண்டிருந்தபோது அவன் தேவதையை வழியில் பார்த்தான், பேருந்து நிறுத்தத்தில் அல்ல, வேறு ஒரு இடத்தில். ஆனால் யாரையும் கவனிக்கும் மன நிலையில் இப்போது அவன் இல்லை . அவள் அவன் மனதை பாதித்தவள் தான். இருந்தாலும் அவர்களின் உறவு முறையில் பெரியாதாக ஏதேனும் முன்னேற்றம் ஏற்படுமா என்பது போக போகத்தான் தெரியும். எது எப்படியோ அவளின் உதாசீனங்களை அவன் தாங்கி கொள்ளத்தான் வேண்டும்.

ஹாய் ரிஷி,

ஹாய் கௌசிக், இருவரும் மரியாதை நிமித்தம் கை குலுக்கி கொண்டனர்.
என்ன இந்த பக்கம் ?
பேரெண்ட்ஸ மும்பைலேர்ந்து இப்பதான் கூட்டிட்டு வரேன்.
ஓ ! அழகாய் தலையசைத்தான்.
யாராவது வர்ராங்களா ?
நோ, இப்பதான் கேப் புக் பண்ணனும்.
வாங்களேன் நானே டிராப் பண்ணறேன்.
நோ ப்ராப்லம் கௌசிக், நீங்க அம்மாவை பாருங்க. நாம வேறு ஒருநாள் மீட் பண்ணலாம்.
இவங்க என்னோட மாம்.
எஸ்! தெரியும். அதான் இத்தனை நேரம் பேசிட்டு இருந்தோமே ...
உடனே மரியாதைக்காக தன் பெற்றோரை அழைத்து அறிமுகபடுத்தினான் ரிஷி,
நீங்க எப்போ எங்க வீட்டுக்கு வரீங்க ?
ஆராவும் அருணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அம்மா அவன் பெரியம்மா வீட்டை பத்தி சொல்லறான் .
யா எஸ் எஸ்....
மே பீ டுமாரோ ...
ஓகே! வில் மீட் யூ பை ....
அவர்களுக்குள் பெரிய அளவில் பிணைப்பு இல்லை என்றாலும், பிணைப்பை உருவாக்க வசந்தி நினைத்தாள் . அவளுக்கு இப்போது தான் தன் தவறுகளை உணர முடிகிறது. இனியாவது தனது மகனுக்கு சொந்தங்களும் நட்புக்களும் தேவை என்று நினைக்க ஆரம்பித்தாள். அவனுக்கும் தனது மனக் கவலைகளையும் , சந்தோஷங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல துணை தேவை என்பதை புரிந்து கொண்டாள் . ஒருவேளை தனக்கு தாய் இருந்திருந்தால் தனது வாழ்க்கையும் நல்ல விதமாக மாறி இருக்குமோ ? பணத்தை தந்த தந்தையால், பாசத்தையும் , கவனிப்பையும் தர முடிந்ததே இல்லை .
வாட் மாம், அவங்கள பார்த்துட்டு வண்டில ஏறினதுலேர்ந்து எதுவுமே பேசல???
ம்ம்ம் ஒரு பெரு மூச்சுடன், இல்ல கௌசிக், இப்ப அவங்கள எப்படி மீட் பண்ணறதுன்னே தெரியல.
அதுவரை உற்சாகமாக இருந்தவன், மாம் உண்மையா சொல்லணுன்னா எனக்கும் அந்த பயம் இருக்கு. பட் சத்யா எல்லாத்தையும் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டா.. அதனாலதான் நான் உங்ககிட்ட ஒன்னும் சொல்லல. அதோட இன்னொரு விஷயம் உங்ககிட்ட சொல்லணும்.
முதல்ல நான் ஒன்னு சொல்லணும் கௌசிக், பேசிக்கிட்டே வேண்டிய ஓட்ட வேண்டாம்.. அப்படியே ஓரமா வண்டிய நிறுத்தேன்.
எஸ் மாம்...
வண்டிய ஓரமாக நிறுத்தியவன் நிதானமாக அன்னையிடம் பேசினான்.
எஸ் மாம்,
கௌசிக் நான் இன்னும் ரெண்டு நாளைக்கு இங்க இருக்கலான்னு பாக்கறேன், அவங்க வீட்டுல ஐ அம் நாட்
அவள் முடிப்பதற்குள்ளேயே எஸ் மாம், நாம தங்கறதுக்கு நான் ஹோட்டல் புக் பண்ணிட்டேன்மா.
ம்ம். இன்னும் என்னம்மா ?
இல்லடா நான் என்னிக்குமே அவங்கள நல்லவிதமான பார்த்ததுகூட கிடையாது. இப்போ எப்படி??? பேசாம நாம ஹோட்டலுக்கே ஓடி போய்டலானு தோணுது. ஆனாலும் நீ இத்தனை நாளா அங்க இருக்கியேன்னுதான்!!!!
நான் உங்கள ரொம்ப கஷ்ட படுத்தறேன்மா...ஐ அம் சாரி....
பெருமூச்சே பதிலாக வந்தது.
வீட்டை நெருங்க நெருங்க வசந்திக்கு பட படப்பு அதிகரித்தது. இருப்பினும் நெஞ்சை அழுத்தி பிடித்துக் கொண்டாள் .

வெறும் கை பையுடன் இறங்கி வந்தவளது பழைய பணக்காரத் தோரணையை காணவில்லை. மாடியில் இருந்து பார்த்த சிமிக்கும், அவளை வரவேற்க சென்றபோது கை கால் உதறல் எடுத்தது . துணைக்கு கணவனை அழைத்து கொண்டாள் .ஆனால் இவர்களுக்கு முன், அந்த சத்யா , அம்மா ,நான் வெல்கம் பண்ணிக்கறேன். நீங்க காம் மா இருங்க, என்று கையை பிடித்து சொல்லி விட்டு சென்றாள் . யாரையுமே ஸதம்பிக்க வைக்காமல், வா வா கௌசிக், ஆன்டி எங்கே என்றவள் ,
வாங்க வாங்க ஆன்டி, உண்மையான மகிழ்ச்சியுடனே வரவேற்றாள். ஏதோ ஒரு விதத்தில் இந்த விட்டு போன உறவும் சேர்ந்திருந்தால் அவளுக்கும் சந்தோசம்தான். அதிலும் சமீப காலமாக கௌசிக்கின் நடவடிக்கைகளி ல் தெரிந்த மாற்றம் அவளுக்கு ஒரு சஹோதர பிணைப்பை உருவாக்கி இருந்தது. இப்போது ரிஷியிடம் எந்த அளவு உரிமை கொண்டிருந்தாளோ அதே அளவு கௌசிக்கிடமும் உறவு கொண்டிருந்தாள். என்னதான் முத்துவை பற்றிய கவலைகள் இருந்தாலும் இந்த சகோதரர்களின் பாசத்தில் அவள் ஓரளவு மகிழ்வுடனே இருந்தாள் .
இவளின் வரவேற்பிலேயே வசந்திக்கும் ஓரளவு தைரியம் வந்தது. பணமும், பகட்டும் இருக்கையில் மற்றவர்களை துச்சமாக நினைப்பது வெகு சுலபம். அதுவே மற்றவர்களின் அன்பும் அரவணைப்பும் வேண்டும் என்று நினைத்து காலம் முழுவதும் மற்றவர்களை அனுசரித்து நடப்பது மிக கடினம். நம்மில் பெரும்பான்மையான பெண்கள் அதை எல்லாம் சர்வ சாதரணமாக திருமணத்திற்கு பின் பழகி கொள்கிறோம். ஆனால் வசந்தி அப்படி பட்டவள் அல்லவே. அதனால் அவளுக்கு என்ன பேச வேண்டும் என்பது கூட தெரியவில்லை. ஆனால் பெரியவர்களை சிறியவர்கள் மிக நன்றாகவே கையாண்டனர் என்பது தான் விந்தை.
வாம்மா வசந்தி வா, எப்படி இருக்க ?
குட்...
அண்ணன்னு சொல்ல அவள் தயக்கம் காட்டினாள் .
அதற்க்கு பின் அனைவரும் ஏனோ தானோவென்று பொது விஷயங்களை பற்றி மட்டும் பேசினார், அவளின் தொழிலை பற்றி முக்கியமாக விசாரித்துக் கொண்டார், தியாகு. யாரும் எவர் மனதையும் புண்படுத்த விரும்பவில்லை.
சரிங்க அவங்களே ரொம்ப டயர்டா வந்திருப்பாங்க. நீங்க குளிச்சுட்டு சாப்பிட வாங்க.
ஆன்டி உங்களுக்கு சவுத் இந்தியன் ஓகே தானே ? இல்ல நார்த் இண்டியன் வேண்ணுன்னா நீங்க என்ன வேண்ணுன்னு சொல்லுங்க, ஐ வில் மேக் .
எனிதிங் இஸ் ஒகே சத்யா.
சமையல் அறைக்கு சென்றவளை சத்யா என்ற அழைப்பு தடுத்து நிறுத்தியது.
எஸ் ஆண்டி ,
நீ அங்க தங்கி இருந்தபோது நான் ஒன்ன என்னோட வீட்டுல உள்ளகூட சேக்கல. பட் நீ என்னோட பையன எவ்ளோ நல்லா பார்த்துக்கற!!! தன்னுடைய உயரத்திற்கு ஏற்றதுபோல இரண்டு படிகளை தாண்டி ஓடி சென்றவன் மீது அவள் பார்வை படிந்தது. அவன் செயல் அவனுக்கு அந்த வீட்டில் இருந்த அவனது உரிமையை காட்டியது.
நீங்க அம்மா அப்பாக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும். எனக்காவது பரவால்ல அவன் தம்பி, ஆனா அவங்க. தே ஆர் கிரேட், அமைதியாக மனதில் நினைத்துக் கொண்டாள் வசந்தி.
ம்ம் ஆ உனக்காக நான் ஒரு கிப்ட் வாங்கி வந்துருக்கேன். இரு வரேன். தனது கை பையில்இருந்து அழகான ஒரு மரகத நெக்லசை எடுத்து தந்தாள்.
நோ ஆன்டி, இப்ப எனக்கு எதுக்கு இதெல்லாம்?
இல்ல சத்யா, நீ எனக்கு பண்ணிருக்கறத வாய்ல சொல்ல முடியாது. மாடியில் கை பேசியில் பேசிக் கொண்டிருந்த மகனின் முகத்தை அவள் பார்த்ததுமே இவளுக்கு புரிந்தது.
பரவால்ல ஆன்டி, நான் என்னோட தம்பிக்கு செய்யாம வேற யாருக்கு செய்வேன்? இதுக்கெல்லாம் போய் ....
சரி, இதை நான் சரியான சமயத்துல கொடுக்கறேன்.
நான் மார்னிங் குளிச்சுட்டுதான் வந்தேன். இப்ப எங்க ப்ரெஷ் ஆகறது ?
இங்க வாங்க ஆன்டி, உங்க வீடு அளவுக்கு ரொம்ப பெரிசால்லாம் இங்க வசதி இருக்காது. ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.
ம்ம்..
அனைவரும் ஒன்றாக சேர்ந்து உணவு உண்டனர். ஹாம் பெரியம்மா இன்னிக்கு ரிஷியை ஏர்போர்ட்ல பார்த்தேன், நான் போக கொஞ்சம் லேட்டாயிடுச்சு. அவர்தான் எங்கம்மாவை பார்த்துக்கிட்டார். அவங்க பேரன்ட்ஸ் வந்துருக்காங்க.
ஐ! சித்தி சித்தப்பா வந்துருக்காங்களா ? சிறு பெண் போல் கை தட்டி குதூகலித்தாள் . என்னதான் அவள் பெரிய பெண் போல இருந்தாலும் சிலரிடம் மட்டுமே அவளது இந்த சுபாவம் வெளி வரும். ரிஷி, ஆச்சி, இப்போது ஆரா ... ரிஷியிடம் அவள் பழகும்போது இவள் அக்காவை அவன் அண்ணனா என்று தெரியாமல் போகும், ஆச்சி சொல்லவே வேண்டாம். ஆராவும் பெண்ணில்லாத குறைக்கு இவளை ரொம்பதான் கொஞ்சுவாள்.. அதனால் தான் இதனை சொகுசு..
அப்பா நான் ஈவ்னிங் போய் அவங்களை பார்த்துட்டு வரவா??
இரு அவங்க இப்பதான் வந்துருக்காங்க, கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கட்டும், ஒடனே போய் தொந்தரவு பண்ணாத. சுள்ளென்று சிமி சொல்லவும், இவளுக்கு முகம் வாடி விட்டது.
தியாகுவின் அதட்டும் பார்வையில், சட்டென வாயை மூடிக் கொண்டாள் சிமி. இந்த கங்காவின் பிரச்சனை வந்ததில் இருந்தே அவளிடம் இந்த மாற்றம். இது அவளுக்கே தெரியாதது. ஆனால் இதை கௌசிக்கும், சத்யாவும் உணர தவறவில்லை. தியாகுவுக்கு தெரிந்திருந்தது. இருப்பினும் அதை நன்றாகவே தவிர்த்தார்.
-----------------------------------------------------------------------------
இங்கே ரிஷியின் வீட்டுக்கு வந்தவர்களுக்கு ராஜ உபச்சாரம்தான். அத்தை அத்தை என்று ஆராவின் முந்தானையை ( ஐ மீன் சுடி ஷால் ) பிடித்துக் கொண்டே சுற்றினாள் . தன் வீட்டு உறவுகளை எல்லாம் இத்தனை வருடம் பிரிந்து இருந்தவளுக்கு இந்த புது சொந்தம் மனதிற்கு தெம்பாகத்தான் இருந்தது. அதே சமயம் அருணுக்கு தனித்து விடப்பட்ட உணர்வு வராமலும் பார்த்துக் கொண்டாள் . மறு நாள் சிமியின் வீட்டுக்கு செல்வதாக இருந்தது. ஆனால் ராஜாவும் அவர் துணைவியும், சமந்தியை பார்க்க வருவதாக சொன்னார்கள். அதனால் அதற்கு மறு தினம் சிமியின் வீட்டுக்கு செல்வதாக திட்டத்தை மாற்றி இருந்தார்கள்.
---------------------------------------------------------
வசந்தியை அவர்கள் என்னதான் நன்றாகவே உபச்சாரம் செய்தாலும், இவளுக்குத்தான் ஒரு பிடி கூட உள்ளிறங்க மறுத்தது. அது மற்றவர்களுக்கும் புரிந்தது. சத்யா ஆராவை சித்தி என்று கொண்டாடியதும் வசந்திக்கு முகமே விழுந்து விட்டது. அதை புரிந்து கொண்ட சிமி, வசந்திக்கு ஆராவை பற்றி சொன்னாள் . அதுவும் பொதுவாகத்தான். மெதுவாக கேட்டுக் கொண்டே சிறிதளவு மட்டும் உணவு உண்டாள் .
என்ன ஆன்டி சாப்பாடு நல்லா இல்லையா ? இல்ல இவ்ளோ நானல்ல இருக்கறதுனால மத்தவங்களுக்கு வேண்ணுனு இவ்ளோ கம்மியா சாப்பிடுறீங்களா ? நிலைமையை இலகுவாக்க முயற்சித்தாள் .
யு ஆர் ரைட் . நானே சாப்டுட்டா உங்களுக்கு இல்லாம போயிடுமே ??? அதான்.
அவள் சாதாரணம் போல சொன்னாலும், நான் மிகவும் மாறி இருக்கிறேன் என்று தியாகுவுக்கு நன்றாகவே அடிக் கோட்டிட்டு காட்டினாள். அது சரி!! இத்தனை வருடங்களாக சுய நலமியாகவே இருந்தவளால் சட்டென எப்படி மாற முடிந்தது? வசந்தி நீயா இப்படி ??? நம்ப முடியலையே !!!! என்று யோசிப்பவர்கள் சிறிது காலம் காத்திருக்கவும்.

சிலர் காலத்தின் போக்கில் நல்லவர்களாகவும் மாறலாம் , தீயவர்களாகவும் மாறலாம். மாறியவளின் மாற்றத்தையும் வசந்தியின் வாழ்வில் உண்மையாகவே வீசப் போகும் வசந்தத்தையும் நாம் பார்க்கத்தான் போகிறோம். ஆனால் மாறாதவர்களின் வாழ்கை எங்கே எதில்தான் போய் முடியப்போகிறது ?

இந்த சஸ்பென்சுல யாரு வருவா.....

மீண்டும் வருவாள் தேவதை...
 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18


NYD-77

உணவு உண்டு முடித்ததும் அனைவரும் ஏதேதோ பேசினர் . அதில் பெரியதாக எதுவும் இல்லை.வசந்திக்கு அவர்களிடம் எப்படி மேற்கொண்டு பேசுவது என்பது தெரியாமல் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தாள் . அனைவருக்குமே அவளது தவிப்பும் இக்கட்டான சூழ்நிலையும் புரிந்தது. அவளிடம் மேற்கொண்டு பெரியதாக சண்டையோ சமாதானமோ செய்ய யாருமே விரும்பவில்லை. திடீரென யாருக்கும் எதுவும்பேச தெரியாமல் ஏதோ ஒரு பேரமைதி நிலவியது. அதில் அவளுக்கு மூச்சடைத்தது. அவளது முக பாவத்தை சட்டென கண்டு கொண்ட கௌசிக்,

ஓகே, பெரியப்பா நாங்க இப்ப கிளம்பறோம். நாம வேற ஒரு நாள் பாக்கலாம்.

கௌசிக்கும் அவன் அன்னையும் அந்த ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கி கொண்டனர்

நீ எப்போ அங்க வருவா கௌசிக்.

வசந்தி வெகு சுலபமாய் கேட்டு விட்டாள், அதற்கு அவளுக்குள் மிக நீண்ட யோசனை இருந்தது மகனுக்கு தெரியாது.,அவளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று இவனுக்கும் தெரியவில்லை. மகன் வார்த்தைகளை தேடி கொண்டிருப்பதிலேயே அவளுக்கு புரிந்தது.

ஒனக்கு என்ன பாக்க அங்க வரன்னுனு தோணிச்சுன்னா நீ வரலாம் கௌசிக்.

இல்லம்மா அப்படி இல்ல. எனக்கு கொஞ்சம் பிரேக் தேவை. ப்ளீஸ் என்ன தப்பா நினைக்காதீங்க.(இவர்களின் சம்பாஷைனை முழுவதும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கலந்தே இருந்தது, உங்களுக்காக தமிழில்)




நான் இன்னொன்று சொல்லணும். நம்ம ஹாஸ்பிடலோட பிராஞ்சு இங்க சௌத்தில ஸ்டார்ட் பண்ணலான்னு !!!!



ஓஓ !!! அத எதுக்குப்பா எங்கிட்ட சொல்லற? போர்டு மெம்பெர் அதனாலதான !! யூ வில் நாட் ஹாவ் எனி ப்ராப்ளேம் பிரம் மை சைட் , ஒகே !!

மாம் ப்ளீஸ்....

திடீரெனெ அவள் தேம்பி தேம்பி ஆழ ஆரம்பித்தாள் . அவளின் மன வேதனை அவனுக்கு தெரிந்தது. அவனுக்கும் அவளை ஏதோ விதத்தில் சாந்தபடுத்த வேணும்.

மாம்!!! நீங்க அழுங்க , நல்லா அழுங்க , பட் உங்களோட எல்லா கவலையும் இனி மறந்துடனும், என்று கூறிக் கொண்டே அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான். தோள் சாய உறவு வேண்டும் என்பதன் பொருள் அப்போது அவளுக்கு புரிந்தது. அவள் எதற்கும் கலங்காதவள் என்பதால் உடனே சமாதானமும் ஆகி விட்டாள்.

*********************


கங்கா சத்யாவுக்கு அழைத்திருந்தாள் . அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தாள் சிமி. ஏனோ சிறிது நாட்களாக அவள் இல்லாமல் இருப்பதுஅவளுக்குமே கஷ்டமாகத்தான் இருந்தது.தன் மகள் நன்றாக வாழ வேண்டும் என்று இவளும் நினைக்கிறாள் என்பது அவர்களின் பேச்சில் இருந்தே அவளுக்குப் புரிந்தது. அது மட்டுமில்லாமல், ஆராவும் இவளுக்கு நிறைய அறிவுரை வழங்கி இருந்தாள் . என்னதான் இருந்தாலும், பணம் அந்தஸ்து என்று எல்லாவற்றையும் ஒதுக்க முடிந்தவளால், வயது வித்தியாசத்தை மட்டும் ஏற்க முடியவில்லை. நினைக்க நினைக்க அவளுக்கு தலை சுற்றியதுதான் மிச்சம்.

************************


ஊருக்கு செல்வதற்கு முன் அன்னைக்கு ஏதாவது பரிசு வாங்கி தரலாம் என்று கௌசிக் நினைத்தான். அதற்கு அவளையும் அழைத்து சென்றான், அந்த மாலில் இருந்த சிறந்த உயர்ரக துணி கடைக்கு அழைத்துசென்றான். அங்கே அன்னைக்கு வாங்கி முடித்தவன் மற்றவர்களுக்கும் வாங்க வேண்டும் என்று நினைத்தான்.அவன் அன்னையுடன் சேர்ந்து மற்றவர்களுக்கும் வாங்கினான். ஆனால் சத்யாவுக்கு வாங்குவதற்குத்தான் மிகவும் சிரமப்பட்டான். அவள் மிக எளிதாகத்தான் கட்டுவாள் . அதிக விலையில் உள்ளதை கட்ட மாட்டாள். பட்டு கலந்தது நோ.. அடர் நிறங்கள் நோ இத்தியாதி இத்தியாதி... என்னடா இது அவளுக்கு அவளே கூட இப்படி பார்த்து பார்த்து வாங்க மாட்ட போல !!!நீ இப்படி பார்த்து பார்த்து வாங்கற? அவன் அன்னையே அவனை கேலி செய்தாள் .

மாம் ப்ளீஸ்....


இவர்களின் சம்பாஷணையை இரு விழிகள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தன. ஆம் அவள் கயல் விழிதான் . அவன் அன்னைக்கு வாங்குவதை வேலைக்கு நடுவில் பார்த்துக் கொண்டிருந்தவளால் ஏனோ ஏதோ ஒரு புது பெண்ணுக்கு அவன் வாங்குவதை பொறுக்க முடியவில்லை. இது இத்தனைக்கும் அவன் யாரென்றும் தெரியாது, இப்போதுதான் இரண்டாம் முறையாக பார்க்கிறாள். என்ன விந்தை இது ?

அவன் அன்னை அனைத்தையும் வாங்கி முடித்தவுடன், இவன் பில்லிற்கு பணம் செலுத்தச் சென்றான். அப்போது, இன்னும் மற்ற ஆடைகளை வசந்தி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்க்காத ஆடைகளா?அணியாத மாடல்களா? இதை பற்றி எல்லாம் பாவம் அந்த பெண்ணிற்கு என்ன தெரியும் அவள் நோக்கம் இவளிடம் இன்னும் ஏதாவது விற்க முடியுமா என்பதுதான்... தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அந்த விற்பனை பணிப் பெண்ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். வசந்தியும் இப்போது நல்ல மன நிலைமையில் இருந்ததால் அவள் தப்பித்தாள் ,இல்லையென்றால் அவள் பேசிய ஆங்கிலத்திற்கு ஒரு அறையாவது கிடைத்திருக்கும். நல்ல வேளை , தப்பித்தாள் , என்று மனதில் நினைத்தபடியே கடையை கவனித்துக் கொண்டிருந்தாள் கயல் விழி.

அப்படியே சுற்றி இருந்த துணிகளை பார்த்துக் கொண்டிருந்தவள் கைபேசியை மறந்து விட்டு விட்டாள் .

அது மிகவும் அதிக விலையாதலால் இவளே அவள் எங்கே இருக்கிறாள் என்று வெளியில் சுற்றி பார்த்தாள் அவள் மேல் தளத்தில் இருப்பதை இவள் கவனித்து விட்டாள் . அவசரமாக ஓடி சென்று அவளிடம் அதை ஒப்படைத்து விட்டாள் . தானியங்கி படிகளில் இவளுக்கு ஏற்றுவதில் எந்த சிரமும் இல்லை. ஆனால் இறங்குவதற்கு மிகவும் பயம். அதையே தயங்கி தயங்கி பார்த்தவளை பார்த்த கௌசிக்கிற்கு சிரிப்பு வந்து விட்டது. சிரிப்பை அடக்கி கொண்டான்.

என்ன பயமா என்ற ஆழந்த குரல் காதின் அருகில் கேட்டதும் அவளை அறியாமலேயே தலையை மேலும் கீழும் ஆட்டினாள். சரி,என் கையை புடுச்சுகோங்க, என்ற தனது கையை அவளிடம் நீட்டினான்.

அதில் எந்த தவறும் அவளுக்குத் தெரியவில்லை. அவன் கையில் தன் கையை வந்தவளுக்கு கீழே இறங்கியதேத் தெரியவில்லை.

ரொம்ப தாங்ஸ், என்றவள் ஓட்டமும் நடையுமாக தனது கடைக்கு ஓடினாள்.

சிரித்துக் கொண்டே கையை பார்த்தவனுக்கு கைகள் குறு குறுவென்று குழந்தையை தொட்டது போல இருந்தது. சிரித்துக் கொண்டே அன்னையிடம் வந்தவன் கிளம்பலாமா ? என்றான்.

ரொம்ப டயர்டா இருக்கு ஒரு காபி வாங்கி கொடேன்,

காபி ஷாப் போகலாம் பட் நீங்கதான் எனக்கு வாங்கி தரணும் என்று அளவளத்துக் கொண்டே சென்றனர்.

அங்கே இருவரும் எந்த அவசரமும் இல்லாமல் நிதானமாக காபியைக் குடித்தனர். இருவருக்கும் மாறி மாறி அழைப்புகள் வைத்துக் கொண்டே இருந்தது. இருப்பினும் அந்த சூடான பானம் அவர்கள தொண்டைக்கும் மனதிற்கும் இதமாகவே இருந்தது.
இவன் பேசிக் கொண்டிருந்தபோது அவன் அன்னைக்கு அங்கே ஒரு தம்பதி தனது இரட்டை குழந்தைகளுடன் படும் அவஸ்தையை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு மறுபடியும் மகனின் திருமணம் பற்றிய நினைவு வந்தது. சந்தர்ப்பமும் சரியாக இருப்பதால் அதை பற்றி அவனிடம் பேசியே விட்டாள் .

மாம் எனக்கு இன்னும் வயசே ஆகலையே !!!

அது சரி ஒனக்கு கல்யாணம் ஆகி இருந்தா நீயும் அந்த மாதிரி தான் இருந்திருப்ப!

நோ மாம்! புதுசா ஒரு பிரான்ச் திறக்க எத்தனை வேலைகள் இருக்குன்னு உங்களுக்கு தெரியாதா ?

நிறைய வேலைகள் இருக்கு மாம். ப்ளீஸ் அட்லீஸ்ட் ரெண்டு வருசத்துக்காவது என்ன தொந்தரவு பண்ணாதீங்க.

முன்பு என்றால் அவனிடம் உரிமையாக இருந்திருப்பாள். ஏனோ இப்போது அவனிடம் பேச வாய் திறக்க முடியவில்லை.

மறுபடியும் அதே இடம் அதே பெண், மறுபடியும் தயங்கி தயங்கி அவள் நின்றிந்தாள் . மீண்டும் அவனே வந்தான். அவனே சிரித்தபடியே கையை நீட்டினான். இவளும் சிரித்துக் கொண்டே அவன் கை பிடித்தபடியே கீழ் இறங்கினாள் .

ரொம்ப தாங்ஸ் சார் . நீங்க இல்லாட்டி இன்னும் கொஞ்ச நேரம் இப்படியேதான் நின்னுட்டு இருந்திருப்பேன்.

அதுக்கு அப்புறம் என்ன பண்ணி இருப்பீங்க ?

யாருக்கிட்டயாவது ஹெல்ப் கேட்க வேண்டியதுதான். முகத்தை சிறிது கூட பாவமாக வைத்துக் கொள்ளாமல் மிகவும் தைரியமாகவே சொன்னாள் .

இவங்க என்னோட அம்மா..

எனக்கேவா!! ஆச்சர்யமாக கேட்டாள் .

ஓ! சாரி,,,,

ஓகே, சார் அப்புறம் பாக்கலாம்.

ஓகே,


யாருடா இது?

அதான் அந்த கடைல பார்த்தோமே ?

அப்புறம் பாக்கலான்னு சொல்லறா ?

மாம் இட்ஸ் ஜஸ்ட் எ பார்மாலிட்டி வர்ட் .

ஓஒ! அதில் நிறைய அர்த்தம் இருந்தது.

அவன் கையில் தன் கையை வைத்தவளுக்கு மிகவும் பாதுகாப்பாய் இருப்பது போல தோன்றியது. என்னதான் அவள் கார்த்திக்கை விரும்பினாலும் என்றுமே அவனுடன் மனம் ஒட்டியதில்லை. அவனும் இத்தனை கவனமாக பார்த்துக் கொள்ள மாட்டான். இந்த புது மனிதன் இவள் மனதில் ஏதோ ஒரு உணர்வை ஏற்படுத்தி இருக்கிறான் . இதற்கு பெயர்தான் காதலா ....

மீண்டும் வருவாள் தேவதை ..................
 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-78

கௌசிக் வாங்கி தந்த அந்த புடவையை பார்த்தவளுக்கு மிக மகிழ்ச்சி. அவளுக்கு அந்த நிறம் மிகவும் பிடித்திருந்தது. ஒரு நல்ல நாளா பார்த்து கட்டிக்கறேன், தேங்க்ஸ் டா ! கண்ணா ! அன்பாக சொன்னாள் .

நீ எப்பையுமே இப்படியே ஹாப்பியா இரு சத்யா.

ம்ம்!! என்று சிரித்துக் கொண்டே தலையாட்டினாள் . லேசாக பல் தெரிய சிரித்தாள். அடுத்த ஒரு சில நாட்களிலேயே அவள் அதைக் கட்டிக்க கொள்ளப் போவது அவளுக்கு தெரியாது,

சரவணனின் தங்கை வீட்டு திருமணத்திற்கு அவர்கள் சென்னை வந்தனர். திருமணம் முடிந்ததும் சத்யாவை பார்க்கலாம் என்று சரவணனும் செல்வியும் நினைத்திருந்தனர். இத்திருமணத்தில் முத்துவுடன் சத்யாவும் ஜோடியாக நிற்க வேண்டும் என்று அவர்களுக்கும் ஆசைதான். ஆனால் அதற்க்கு முத்துவிடம் பேசினால் அவன் நான் வரமாட்டேன் என்று முருங்கை மரத்தில் ஏறிவிட்டால் அல்லது வேறு ஏதாவது பிரச்சனை வந்து விட்டால் என்ன செய்வது என்று இருவருமே அமைதியாகவே இருந்தனர். அவர்கள் அறியாதது வேறு ஒன்று உண்டு .

சரவணனும், செல்வியும் மண்டபத்திற்கு வெளியில் சும்மா வந்து நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கே யூ டர்ன் போட்டு வண்டியை திருப்பும் பொது இவர்களை கண்டு விட்டாள் . மருத்துவமனைக்கு செல்ல இன்னும் நேரம் இருந்தது. அதனால் சரவணன் என்று அழைத்தாள் . திரும்பி பார்த்தவர்களுக்கு அளவில்லா ஆனந்தம். செல்வி ஓடி வந்தாள் . அவள்தான் சத்யாவிடம் பைத்தியம் பிடித்தவள் ஆயிற்றே?

எப்படி இருக்க செல்வி ? இவளுக்கும் அவர்களை பார்த்ததில் அளவில்லா மகிழ்ச்சி.

நல்லாருக்கேங்க .

இவ்ளோ தூரம் வந்துருக்கீங்க? ஒரு போன் கூட பண்ணல ?

நாங்களே இப்பதான் வந்து இருங்கினோம். ஊருக்கு போகறதுக்கு முன்னாடி உங்கள பார்த்துட்டு போகலாமுன்னு ...

ஓ! இன்னும் எத்தனை நாள் இங்க இருப்பீங்க ?

இவரோட தங்கச்சி நாத்தனார் கல்யாணம். அதான் கொஞ்சம் முன்னாடியே வந்துடலான்னு வந்தோம்.நாளைக்கு கல்யாணம். எப்படியும் இன்னும் மூணு நாளாவது இங்க இருப்போம்.

எனக்குதான் உங்கள பாக்கலையேன்னு மனசு அடிச்சுகிச்சு. உங்கள பாக்க வரலான்னா முத்தண்ணன் என்ன சொல்லுவாங்களோன்னுதான் என்று அவள் உளர ஆரம்பித்தவுடன், நறுக்கென அவள் கையில் கிள்ளினான் அவள் கணவன்.

பரவால்ல விடுங்க சரவணனன். அவளை போய் அதை இவளும் கண்டு கொண்டாள் .

அவரு எங்க சரவணன்?

அவன் உள்ள இருக்கான் போல.... இருங்க நான் போய் கூப்பிடறேன் ,

இல்ல பரவால்ல இருக்கட்டும் சரவணன் நான் ..எனக்கு.. லேட்டாயிடுச்சு. நீங்க எப்ப ப்ரியா இருக்கீங்களோ அப்ப கூப்பிடுங்க......

நீங்க வேலை செய்யற இடம் எங்க இருக்கு ? செல்வி ஆர்வமாக கேட்டாள் . இரவு தான் அங்கே தான் இருக்க போகிறோம் என்பது அவளுக்குத் தெரியாது பாவம்.

அதோ அந்த பில்டிங்குதான் செல்வி என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர்களின் சொந்தங்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.

என்ன செல்வி, யாரிது ?

பிரண்டு, அதோ அங்கதான் வேல செய்யறாங்க. பெரிய டாக்டரு....

பிரண்டுங்கற! கல்யாணத்துக்கு வருவாங்கல்ல ?

இல்ல மா, என்னால கல்யாணதுக்கு வர முடியாது, எனக்கு டூட்டி இருக்கு, இப்பயும் லேட்டுதான் நாம் அப்புறம் பாக்கலாம், பாந்தமாக விடை பெற்றவளை அந்த அம்மாளுக்கு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது.

வரேன் செல்வி, வரேன் சரவணன்.

இவர்களின் சம்பாஷணையை முத்து கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தவன், வேண்டுமென்றே உள்ளே சென்று விட்டான். அது சத்யாவுக்கு யாரோ முகத்தில் ஓங்கி அடித்தது போல இருந்தது. சட்டென திரும்பி சென்று வண்டியில் ஏறி மருத்துவமனைக்கு சென்றவள், தனது அறையில் சென்று குளியல் அறையில் முகத்தை நன்றாக நீர் அடித்து கழுவிக் கொண்டாள் . அன்று மாலை மிக முக்கியமான ஒரு ஆபரேஷன் டாக்டர் பாஷ்யத்திற்கு இருந்தது. அதற்காக அவளும் அவளது டீமில் இருந்த இன்னும் இரு மருத்துவர்களும் சேர்ந்து நிறைய விஷயங்களை தயாரித்து வைத்திருக்கச் சொன்னார். அதற்காக அவர்கள் கடந்த ஒரு வாரமாக நிறைய ஆராய்ச்சி கட்டுரைகளை விரிவாக அலசி இருந்தார்கள். அதற்க்கு ஏற்ற பலன் அன்று கிடைத்தது.

ஆம்! அன்று காலையிலேயே அவரும் வந்து விட்டார், அவருக்காக தேநீர் கலக்க இவள் போனாள் . இவள் முகத்தை பார்த்தவருக்கு என்ன தோன்றியதோ அவரே இவளுக்கும் சேர்த்து தேநீர் கலந்து கொண்டு வந்தார். இவளுக்குத்தான் மிகவும் கூச்சமாக இருந்தது.

இட்ஸ் ஓகே மீ டியர் என்று தோளில் தட்டிக் கொடுத்தார்.

அவரும் நிறைய யோசனைகளுடனே இருந்தார் என்பது அவர் முகத்தை பார்த்தாலே தெரிந்து விடும். பொதுவாக எத்தனை பதட்டம் இருந்தாலும் அதை அவர் காண்பித்துக் கொள்ள மாட்டார். மருத்துவம் தவிரவும் பல விஷயங்கள் அவரிடம் இருந்து சத்யா நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. கற்றுக் கொண்டாலும் பல விஷயங்களை அனுபவம்தான் தரும் என்பது அவளுக்கும் தெரிந்ததிருந்தது. இருப்பினும் ஒவ்வொரு நிமிடமும் அவரது உடல் அசைவுகளைக் கொண்டே அவர் என்ன யோசிக்கிறார் என்பதை அவள் அறிந்து கொள்ள ஆரம்பித்திருந்தாள். அது அவளுக்கு உதவியாகவே இருந்தது.

அவளுக்கும் அந்த சிறு நிமிடங்களின் ஆசுவாசம் தேவைதான். அதனால்தானோ என்னவோ அன்று முழுவதுமே அவளால் அன்றைய தினத்தில் முழுவதுமாக ஈடுபட முடிந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இந்த உலகத்தில் என்ன நடந்தது என்று கேட்டிருந்தால் அவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்காது. இவர்கள் மூவரும் சொன்ன செய்திகள் பலதும் பாஷ்யம் அறிந்திருந்தார். எப்போதுமே தன்னை அப்டேட்டடாக வைத்து கொண்டிருப்பவர் அவர். அதனால் இவர்கள் கூறியது எல்லாம் ஏதோ பெரிய தொழிலதிபருக்கு அவர் குழந்தைகள் ஒரு ருபாய் இரண்டு ரூபாய் பற்றி சொல்லிக் கொடுப்பது போலத்தான் இருந்தது. இருந்தாலும் அவர்களுடைய பல சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தார். அவர்கள் வாயாலேயே பல பதில்களையும் வரவழைத்தார். ஒரு தொழில் முறையான உறவை தாண்டியும் ஒரு சிறந்த ஆசிரியராகவும் அவர் அவர்களுக்கு பாடம் நடத்தினார். இதற்க்கு மேலும், மதியம் அவர் செய்ய வேண்டிய மிக பெரிய அறுவை சிகிச்சைக்கும் தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். அவருடைய அறிவும் ஆற்றலும் இளையவர்களுக்கு ஆச்சர்யம்தான்.

மதியம் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போதே ஒரு அமைச்சரின் மகனுக்கு விபத்து ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் அட்மிட் செய்திருந்தார்கள். மற்ற மருத்துவர்களின் சிகிச்சைக்கு பின், பாஷயத்தின் க(வ)னிப்பு தேவை என்று தீர்மானித்தார்கள். அவர் அந்த அறுவை சிகிச்சையை முடித்தவுடன் இதற்க்கு ஓடி வந்தார். வந்திருப்பது பெரிய தலையாயிற்றே !!! உட்கார கூட முடியவில்லை, பாவம் அவர். நல்ல வேளையாக அடுத்த சில மணி நேரங்களில் அவனுக்கு மூச்சு சீராக வரத் தொடங்கியது. அன்று காலையிலேயே வந்தவர்களுக்கு இரவு வரை மூச்சு விடக் கூட நேரம் இல்லாமல் பறந்தது. அதனால் நல்ல வேளையாக இவளால் முத்துவை பற்றி யோசிக்க கூட முடியவில்லை . இல்லை என்றால் அவள் மிகவும் தவித்து போயிருப்பாள்.

பாஷ்யம் கிளம்பியவுடன் இவளும் மற்றவர்களும் வீட்டுக்கு கிளம்பினர் .எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு இவள் கிளம்பும் போது சரவணன் கால் செய்திருந்தான். செல்விக்கு திடீரென வாந்தி வந்து அதை தொடர்ந்து மயங்கி இருந்தாள் . அதற்காக இவன் அழைத்தான்.

ஓகே! சரவணன், ஒன்னும் பிரச்னை இல்லை. ஏதாவது சாப்பிட்டது ஒதுக்காம கூட இருக்கலாம். நீங்க பேசாம இங்க ஹாஸ்பிடல் வந்துடுங்களேன். நான் இங்க காத்திருக்கேன்.



சரிங்க டாக்டர், அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் வந்து விட்டார்கள், அதற்குள் செல்வியும் கண் விழித்திருந்தாள், ஆனால் மிகவும் சோர்வாக இருந்தாள்.

என்ன செல்வி என்னாச்சு ? பதட்டம் இருந்தாலும், சத்யா அதை காட்டிக் கொள்ளவில்லை.

ஒண்ணுமில்ல, ஏதோ திடீர்னு தல சுத்தல் வாந்தி அவளவுதான் . இவங்க தான் ஏதோ பயம் காட்டறாங்க.

என்ன சாப்பிட்ட ?நாடி பிடித்து பார்த்தாள் .

அவள் முகம் வெளிறி இருந்தது. சத்யாவுக்கு ஏதோ சந்தேகமாக இருந்தது.

எப்ப தீட்டு குளிச்ச ?

ஒரு நிமிஷம், யாருக்கோ போன் செய்தாள் ,

உமா நீங்க கிளம்பிடீங்களா ?

நோ சத்யா! வைட்டிங் பார் மை பிரதர் ,

உமா ஒரே ஒரு ஹெல்ப், பண்ண முடியுமா ?

சொல்லு சத்யா.

என்னோட சிஸ்டர் வந்துருக்காங்க , அவங்களுக்கு கொஞ்சம் செக் பண்ண முடியுமா ?

ஒகே வாங்களேன்,

உடனே உமாவின் அறைக்கு சென்றனர். இவளை பார்த்ததுமே என்னாச்சு என்ன சாப்டீங்க?? என்பது போன்ற கேள்விகளை கேட்டாள் , எப்போது கடைசியாக உடல் உறவு கொண்டார்கள், எத்தனை நாட்களுக்கு முன் தலைக்கு குளித்தாள் , இன்னும் சில விவரங்களை கேட்டவள் , மகப்பேறு அறிந்து கொள்ளும் கிட்டை கொடுத்து நர்ஸுடன் அனுப்பினாள் . அதற்குள் முத்துவும் அங்கே வந்து விட்டான். சரவணன் மிகவும் பதட்டமாக இருந்தான்.

கூல் மிஸ்டர்... சரவணன் . நான் பாத்துக்கறேன். பதட்டப்படாதீங்க. அமைதியாக சத்யா அவன் தோளில் கை வைத்து அழுத்தினாள் .

அவனின் பதட்டம் உமாவிற்கு புரிந்தது. பேச்சை மாற்றும் விதமாக, சத்யா எனக்கு என்ன பீஸ் தருவ ?

எதுவானாலும் தர்றேன் டாக்டர்,

என்னோட ஊகம் சரியா இருந்தா நீ எனக்கு ஸ்வீட் வாங்கி தரணும்.

கிருஷ்ணா சுவீட்ஸ் மைசூர் பா !!

எஸ்! என்று கையில் சொடக்கு போட்டு அவள் முகத்துக்கு நேரே ஆள் காட்டி விரலை காண்பித்தாள் .

அதற்குள் கையில் கிட்டுடன் செல்வி வந்தாள் ,

ஆனா ஸ்வீட்ஸ் உங்களுக்குத்தான் தேவையோ?

வாட் உமா ?

ஏசி ரூமுல அப்படி அந்த பொண்ணுக்கு வேர்க்கும்போதே நான் நினைச்சேன். எஸ், ஷி இஸ் பிரக்நண்ட் . எதுக்கும் ஒரு வாட்டி ஸ்கேன் பண்ணிடலாம், என்று தலையுடன் உடலையும் சேர்த்து ஆட்டிக் கொண்டே செல்வியை அழைத்துக் கொண்டு ஸ்கேனிற்கு சென்றாள் .

சரவணனுக்கு இன்னும் பதட்டம் அதிகமாகத் தான் இருந்தது. அவனுக்கு பிள்ளை பேறு வேண்டும்தான். ஆனால் அதையும் தாண்டி அவனுக்கு செல்விதான் இந்த உலகம். அவளுக்கு எதுவும் வந்து விடக் கூடாது என்பதில்தான் அவன் யோசனை முழுவதுமே இருந்தது.

டென்ஷன் ஆகாதீங்க சரவணன், மெதுவாக அவன் கைகளை பிடித்தபடி சொன்னாள் .

இல்ல மேடம், உங்களுக்கே தெரியும், எனக்கு அவதான் எல்லாம். அவளுக்கு ஒன்னும் வரக் கூடாது.

ம் ஆ!! ஒண்ணுமே வராம எப்படி புள்ள பெத்துக்கறது ?நிறைய சந்தோஷம் வேணும், ஆனா கொஞ்சம் கூட கஷ்டப்படக் கூடாதா ? பேசிக் கொண்டிருக்கும்போதே உமா வந்தாள் .

வாழ்த்துக்கள் சரவணன். நீங்க அப்பா ஆகப் போறீங்க !!! வாட் சத்யா ..நீயும் பெரியம்மா ஆகப் போற !!

தேங்க்ஸ் உமா! உண்மையிலயே இது ரொம்ப பெரிய சந்தோசம்தான்... வாய் நிறைய, நன்றி சொன்னாள் .

டேய் சரவணா! என்னடா இது சின்ன புள்ள மாதிரி.. அவனை பார்த்த செல்விக்கும் கண்களில் நீர் வரத் தொடங்கியது.

மெதுவாக கண்களை துடைத்துக் கொண்டான் .

இல்லடா இதுக்கு இந்த புள்ளைய எங்க ஆளுங்க எத்தனை பாடு படுத்தி......வாயில் வார்த்தை வர வில்லை.அந்த இன்பத்தை பார்க்கும்போது உமாவுக்கே ஆச்சர்யம்தான். எத்தனையோ பெண்களையும், பிரசவங்களையும் பார்த்தவள்தான். ஆனால் நகரத்தில் யாரும் இப்படி வெளிப்படையாக மகிழ்ச்சியை காட்டுவதில்லை. இவர்கள்தான் வித்தியாசமாக தெரிந்தார்கள்.



புன்னகையுடன், ஓகே சரவணன், நீங்க எங்க இருக்கீங்க, டெலிவரி எங்க பாக்கபோறீங்க , எல்லாத்தையும் வீட்டுல பேசிக்கோங்க, இந்த மருந்துகளை அவங்க கட்டாயம் சாப்பிடணும்..என்று மருந்துகளை எழுதிக் கொடுத்தாள் .

ரொம்ப தேங்க்ஸ் உமா இந்த நேரத்துலையும்....

ஏய்! எனக்கு இந்த தேங்க்ஸ்செல்லாம் வேண்டாம். இன்னொரு குட் நியூஸ் இருக்கு,

என்ன உமா ?

ஆ !அவ்ளோ ஈஸியா எங்கிட்ட விஷயத்தை வாங்க முடியாது . அதுக்கு வேற பீஸ் தரணும்.

என்ன ? எதுவா இருந்தாலும் ஓகே, முதல்ல விஷயத்தை சொல்லு.

எனிதிங் ?

எஸ்,

டாக்டர் ருத்திராவோட ஒரு டீ ன்னா கூடவா?

நோ உமா!! அது என்னால முடியாது.

ஓகே! என்னால அந்த குட் நியூஸ் சொல்ல முடியாது, கைகளை விரித்து தோளைக் குலுக்கினாள்.

உமா ப்ளீஸ்.....

நீ ஓகே சொல்லு.

நாட் ஓகே, பட் நான் சார்கிட்ட பேசறேன்.

நீ என்ன சொன்னாலும் சார்தான் ஓகே சொல்லிடுவாரே!!

உன்னோட கனவு கற்பனைல்லாம் நல்லாத்தான் இருக்கு, முதல்ல விஷயத்தை சொல்லு. அதான் சொன்னேனே! நீ முதல்ல ஓகே சொல்லு.

உனக்கேன் அவ்ளோ பிடிவாதம்!

அந்த வளந்தவன் அதன் என்னோட தம்பி, அவன் ரொம்ப ஓவரா பன்றான் , எப்பப்பாரு அந்த ருத்ராவை பத்தித்தான் பேச்சு. அதுக்குதான். அவன்கிட்ட போய் இன்னிக்கு நானும், ருத்ராவும் டி குடிச்சோன்னு சொல்லணும். அவ்வளவுதான் .

நான் சார்கிட்டதான் கேட்கணும்.

சரி, அந்த விஷயம், இவங்களுக்கு ஒன்னு இல்லை ரெண்டு குழந்தைங்க பொறக்கப் போறாங்க....அட்டகாசமாக சொன்னாள் . யாராலும் நம்ப முடியவில்லை.

இத்தனை நேரம் மனையாளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த முத்து,

டேய் என்னடா இது? எப்டிரா ? நண்பனை கட்டி கொண்டான். இவளும் செல்விக்கு வாழ்த்துக்கள் சொன்னாள். ஓகே!ஓகே! இதெல்லாம் அப்புறம். முதல்ல நீங்க இவளை நல்லா பாத்துக்கணும். ரொம்ப நல்லா பாத்துக்கணும். இவங்க ஆளு கொஞ்சம் சின்னதா ஐ மீன் ஹைட் கம்மியா இருக்கறதுனால, இது கொஞ்சம் கஷ்டம்தான். வீட்டுல யாரவது பெரியவங்க இருந்தா கூப்பிட்டு வச்சுக்கோங்க. இனிமே இவங்களுக்கு வாந்தி தல, சுத்தல் மயக்கம் எல்லாமே கொஞ்சம் அதிகமாவேதான் இருக்கும், மத்தவங்களை விட கூடுதலாவே இருக்கும். அவங்களோட மனசுக்கும் நிறைய கவனிப்பு தேவை . உடல் உபாதைனால மனசாலையும் ரொம்ப சோர்ந்து போய்டுவாங்க, இவங்கள ரொம்ப பத்திரமா பாத்துக்கணும். முதலில் ஹாஸ்யமாக பேசினாலும், இந்த விஷயங்களை தீவிரமாகவே சொன்னாள் . அதே மாதிரி எந்த விதமான காரணத்தை கொண்டும், இந்த மருந்துகளை நிறுத்தவே கூடாது. ஒரு நாள் மாத்திரை இல்ல கிடைக்கல எதுவும் சொல்ல கூடாது. உடல் உழைப்பு தேவை. சிட்டில இருக்கறவங்கன்னா நிச்சயம் நடை பயிற்சி தேவைன்னு சொல்லி இருப்பேன். நீங்க கிராமத்துல இருக்கறவங்க. சொல்லவே தேவை இல்லை . வாய்க்கு என்ன புடிக்குதோ சாப்பிடுங்க, ரொம்ப எண்ணெய், காரம், சேர்க்க வேண்டாம்... இன்னும் பல அறிவுரைகளை வழங்கி அனுப்பினாள் . அனைவரும் அவளுக்கு நன்றி உரைத்து கிளம்பினர் .

சத்யா மிகவும் சோர்ந்து காணப் பட்டாள். அங்கே ரிசெப்ஷனில், என்னோட வண்டி இங்கையே இருக்கட்டும் நான் நாளைக்கு எடுத்துக்கறேன், இப்போ நான் வண்டி புக் பண்ணி போய்க்கறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போது சரவணன், டேய் முத்து ஒன்னு நீ போய் அவங்கள வீட்டுல விடணும் இல்ல நான் போகிறேன். இப்படி தனியா ராத்திரில அனுப்ப கூடாது என்றான். அதுவும் முத்துவுக்கு சரியாகத்தான் பட்டது. சரி நான் அவங்க கிட்ட பேசிட்டு வரேன்.

டாக்டர் ஒரு நிமிஷம்,

நீங்க தனியா போக வேணாம். நான் உங்களை கொண்டு விடறேன். அவள் இருந்த இருப்புக்கு அவளால் மறுக்க கூட முடியவில்லை. தன்னுடைய ஜீப்பில் முதலில் அவர்களை மண்டபத்தில் விட்டவன், பின்னர், சத்யாவின் வீட்டுக்கு சென்றான். செல்லும் வழியில் சிக்னலில் வண்டியை நிறுத்தியவன் எதேச்சையாக மனைவியின் முகத்தை பார்த்தான். அவளோ தலையை சாய்த்து தூங்கிக் கொண்டிருந்தாள். அந்த மெல்லிய வெளிச்சத்தில் அவள் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது. அவள் தலையை மெதுவாக தனது தோளில் சாய்த்துக் கொண்டு அவர்கள் வீடு சென்றான்.

சத்யாவுக்காக அவள் அன்னையும் தந்தையும் காத்துக் கொண்டிருந்தனர். வருவதற்கு தாமதமாகும் என்று அவள் ஏற்கனவே குறுந் செய்தி அனுப்பி இருந்தாள் . வண்டி சத்தம் கேட்கவும் அன்னை மெதுவாக கதவை திறந்தார். வண்டியை நிறுத்தியவன் மெதுவாக ஒரு பூவாய் போல கையில் ஏந்திக் கொண்டான்.

ஒன்னும் இல்லங்க, ரொம்ப அசதி போல , அதான் தூங்கிட்டாங்க என்று சொல்லிக் கொண்டே அவளது அறைக்கு சென்று மெதுவாக கட்டிலில் கிடத்தினான்.

அதற்குள் வண்டியை பார்க்கிங்கில் நிறுத்தி சாவியை கொண்டுவந்து கொடுத்தார் தியாகு .

தம்பி, நீங்க இங்கையே இருந்துட்டு காலைல போகலாம். அந்த குரலில், தந்தையின் பரிவும், கண்டிப்பும் இருந்தது.

ஏனோ அவரின் வார்த்தையை இவனால் தட்ட முடியவில்லை.

நீங்க என்ன சாப்படறீங்க தம்பி என்று கேட்டுக் கொண்டே சிவகாமி வந்தார்,

இல்லங்க ஒன்னும் வேண்டாம்.

சரி பால் தரேன் என்று சற்று இளம்சூட்டில் பால் தந்தார். அவங்க இன்னும் ஒன்னும் சாப்பிடல,

அங்க அவளுக்கும் பால் வச்சுருக்கேன்.

சரிங்க,

அத்தைன்னு சொல்லுங்க.

சரிங்க அத்தை ..

நீங்களும் அங்க அவ ருமுலையே படுத்துக்கோங்க.

சரிங்க ...

அவளது அறைக்கு வந்தவன், மீண்டும் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த நிலவொளியில் அவள் பேரழகியாகத்தான் இருந்தாள் . அந்த முகத்தில் மயங்கியவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள்....

அதைத் தெரிந்து கொள்ள

மீண்டும் வருவாள் தேவதை............



















 

Latest Episodes

New Threads

Top Bottom