- Messages
- 67
- Reaction score
- 37
- Points
- 18
NYD-91
அவன் இருந்த அவசரத்தில் அவன் அவள் முகத்தை பார்த்தான், அவ்வளவுதான் . அதற்கு மேல் அவன் கருத்தில்ஒன்றும் பதியவில்லை. அதேதான் அவளுக்கும். இருவருமே அவரவர் விஷயத்தில் ஓடிக் கொண்டிருந்தனர்.
அவள் அதே கட்டிடத்தில் நேர்முக தேர்வில் பங்கேற்ற போது அவன் அந்த பெரிய ரியல் எஸ்டேட் கம்பெனியில் மருத்துவமனை கட்டுவதை பற்றி பேசிக் கொண்டிருந்தான். அப்போது எதாச்சையாக அவன் சந்தித்தது அவன் பள்ளி தோழி, பவித்ராவை, இருவருக்குமே அளவில்லா மகிழ்ச்சி. இருப்பினும் பேச்சு மும்மரத்தில் அவன் அந்த md இடம் கட்டிக் கொள்ளவில்லை.
அவள் அவரின் பீஏவாக இருந்தாள். மீட்டிங்கில் இறுதியில் கௌசிக் அந்த கம்பெனியுடன் நல்ல புரிதல் இருப்பதை உணர்ந்து கொண்டான். இறுதியில் அவர்கள் இவன் எதிர்பார்ப்பதுபோல சில இடங்களை தேர்வு செய்து பிறகு சொல்வதாக கூறினார். இன்னும் சில விஷயங்களை பேசி முடித்தவனுக்கு திருப்தியாகவே இருந்தது. இறுதியில், நான் என்னோட பள்ளி தோழி பவித்ராவோட கொஞ்சம் பேசலாமா? என்று பகிரங்கமாகவே அவரிடம் பெர்மிசன் கேட்டு அழைத்து சென்றான். அவரும் ஓகே சொன்னார், ஆச்சர்யபார்வையுடன்.
வெளியில் வந்ததும் குதூகளித்தாள் பவித்ரா. இருவருமே ஹிந்தியில் உரையாட ஆரம்பித்தனர். பவித்ராவின் கணவர் கப்பலில் வேலை செய்பவர். திருமணத்திற்கு பிறகு பவித்ராவுக்கு இந்த கம்பெனியில் இங்கு வேலை கிடைத்தது. நல்ல சம்பளம், நல்ல இடம், எந்த தொந்தரவும் கிடையாது என்று இங்கேயே தங்கிவிட்டாள் . குழந்தை பெற்று கொள்ள இருவருமே சற்று தயங்கினார்கள். அதை புரிந்து கொள்ளாத புகுந்தவீட்டாரின் பேச்க்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் இது ஒரு நல்ல இடமாக இருந்தது. அவளுக்கு ஓகேதான் என்றாலும் அவள் கணவன் இன்னும் சில வருடங்கள் வேண்டாம் என்றான். நாமளே பல நாள் கழிச்சுத்தான் மீட் பண்ணறோம். ஒவ்வொவொரு தடவையும் நான் ஹனிமூனாதான் பாக்கறேன். இப்ப ஒடனே எந்த கமிட்மெண்டும் வேண்டாம்.
பட் உங்க ப்ரேண்ட்ஸ் ?
அவங்க புரிஞ்சுக்க மாட்டாங்க, நீயுமா? ப்ளீஸ் பவி , நானே ரொம்ப காஞ்சு பொய் வந்துருக்கேன். புருசனுக்கு என்ன தேவையோ அதை குடுக்க வேண்டியது நீதானே? ப்ளீஸ் என்று மேலே அவள் பேச இடம் தராமல், லிப் லாக் செய்தான். அவனின் உரசல், தீண்டல், முத்தங்கள், கொஞ்சல்கள், இதிலேயே அவன் வரும் சில நாட்கள் முடிந்துவிடும். அவன் நிலைமை அவளுக்கும் புரிந்தது. பல நாட்கள் அங்கே கப்பலில் வேலை பார்த்தாலும் எந்த பெண்ணையும் அவன் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. பல தரப்பட்ட பெண்களை பார்த்தாலும், தாகம் தீர்த்துக் கொள்ளவும் சரி, பசி தீர்த்துக்கொள்ளவும் சரி மனைவி மட்டுமே. அவனோடு கப்பலில் சென்று வந்த சில நாட்களில் அவன் தன்னை கட்டுப்பாடாக வைத்திருப்பது அவளுக்கே ஆச்சர்யம்தான். அப்படிப்பட்ட கணவனுக்காக என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்றே அவளுக்குத் தோன்றியது. குழந்தை பெற்று கொள்ளவில்லை என்றாலும் இருவருக்குமே காதலும் புரிதலும் இருந்தது. அதை பற்றி மற்றவர்களுக்கு தெரியாதே ? இருவரும் தங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தனர், மாலை அவளுக்கு வேலை முடிந்தவுடன். நீதான் எல்லாரையும் ஈஸியா இம்ப்ரெஸ் பண்ணிடுவீயே ? அதெல்லாம் இங்லாஸ்கிட்ட வர்க் ஆகாதுப்பா . நீயாவது உன்னோட மனைவிய உங்க பேரான்ஸ்கிட்ட விட்டுக் கொடுத்துடாத.
ஏன் உன்னோட ஹப்பி ஒனக்கு சப்போர்ட் பண்ண மாட்டாரா ?
எனக்கு சப்போர்ட் பண்ணாம நான் எப்படி இங்க தனியா இருக்க முடியும்? பட்
குழந்தை பத்தி பேச்சு வந்தா என்ன மாட்டி விட்டுடுவாரு.
இப்படியே வெகு நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பினர்...........................................................................................................................................................................................
கயலோ கார்த்திக்கின் பேச்சைக் கேட்டு ஒவ்வொரு இடமாக வேலையை விட்டுக் கொண்டிருந்தாள். அவனின் சந்தேக பார்வையை அவள் மீது திணித்தான். இதற்கு முன் அவள் வேலை பார்த்தஇடத்திலும் அவள் கௌசிக்கின் உதவியுடன் மின் படிக்கட்டுகளில் இறங்கி வந்தது அவனுக்கு பிடிக்கவில்லை. அவன் சந்தேகக்காரனாக இருக்கவில்லை. அதற்கு அர்த்தமாக இருந்தான். முதலில் எல்லாம் அவன் சொல்லுவதை கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு,தகுதி இருந்தும் ஒவ்வொரு இடத்திலும் நிராகரிக்கப்படுவதற்கு எந்த வேலையிலும் நிரந்தரமாக தான் இல்லாததுதான் என்பது புரியும்போது எரிச்சலாக வந்தது, முதல் முறையாக. இப்போதெல்லாம் அவளிடம் சில பல மாற்றங்கள் வர தொடங்கி இருந்தது. கார்த்திக்கின் எதிர்பார்ப்பு என்ன எனபதை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் ஏன் தன்னால் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை. அதற்கு காரணம் பாவம் அவள் அல்லவே. மிகச் சாதுர்யமாக அவன் அவளை கட்டுபடுத்தி வைத்திருந்தான். இப்போதுதான் அவளுக்கு அவன் மேல் இருந்த மாயை விலகத் தொடங்கி உள்ளதோ!...
காலம்(தான்) பதில் சொல்லும்.
அவள் பல இடங்களில் வேலைத் தேட தொடங்கி இருந்தாள் . யாருமே இவளை நம்ப தயாராக இல்லை. இவள் தோழிகளும்தான். யாரும் இவளுக்கு சிபாரிசு செய்து மேலிடத்திலிருந்து வாங்கி கட்டிக் கொள்ள தயாராக இல்லை. முதலில் அவள் உற்சாகமாக வேலை தேட தொடங்கினாலும் இப்போதெல்லாம் அவளிடம் ஏனோ அந்த உற்சாகம் இல்லை . அதே சமயம் அப்பாவின் பென்ஷன் பணமும் அந்த அளவுக்கு போதவில்லை. இவளுக்கும் வேலை இல்லாமல் போகவே,அன்னை தெரிந்தவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு சமைக்க உதவிக்கு செல்ல ஆரம்பித்தாள். அதுவும் சேர்ந்து இவளுக்கு மனம் வெதும்ப ஆரம்பித்தது.
கார்த்திக்கோ இவர்களின் கஷ்டங்களை பற்றி எதுவும் கவலை படாமல், இவளை வெளியில் செல்ல அழைத்தான். அதுவும் எப்போதுமே அவள் அழகாகவே டிரஸ் செய்து கொண்டு வர வேண்டும்,சிரித்துப் பேச வேண்டும், வெட்கப்பட வேண்டும். அவனை மயக்க வேண்டும். அவளுக்குஎன்று ஒரு இதயமோ , மனசோ இருப்பதை பற்றி அவன் கவலை பட்டதே இல்ல. இவளாக ஏதாவது பேச ஆரம்பித்தாலும், மிக கவனமாக அவன் பேச்சை மாற்றி விடுவான். முன்பானால் அவன் பேச்சில் மயங்கினாள் தான். ஆனால் இப்போது அன்னை மயக்கமாக வந்து சாப்பாடு கூட உண்ண முடியாமல் சோர்வாக வந்து படுக்கும்போது இவள் மனசாட்சி இவளை எப்படி சும்மா விடும்? இப்படி வீட்டில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அவளுக்கு மனதிற்கு இதமாக இருந்தது கௌசிக்கின் சந்திப்புகள்தான். அவன் அவளை எங்கும் அழைத்து சென்றதில்லை எதுவும் வாங்கித் தந்தது இல்லை. ஆனல் ஏனோ அவனுடன் வாயடிப்பதும், அவன் காரில் ஏறி செல்வதும் அவளுக்கு மகிழ்ச்சியை தந்தது என்றே சொல்லலாம். முதலில் கார்த்திக்கின் தவறான போதனைகளால் அவள் கௌசிக்கை சந்தேகத்தோடுதான் பார்த்தாள் . அதனால் தான் அவனை தெரிந்திருந்தும் தெரியாதது போலநடந்து கொண்டாள் . அதுவும் கார்த்திக்கின் சீரிய சிந்தனையே! கார்த்திக்கின் பேச்சு போகட்டும், இவர்களுக்குள் என்னதான் நடந்தது?
ஒரு ஊர்ல, ஒருநாள் என்ன நடந்துச்சாம்? குழந்தைங்களுக்கு கத சொல்லற மாதிரி இருக்கோ?
பேருந்து நிறுத்தத்தில் அந்த உயர்ரக மகிழுந்து வந்து நின்றது, அதிலிருந்து அந்த கந்தர்வன் ச! ச! நம்ம கௌசிக் வந்து
ஹாய்! மிஸ் ... கயல்விழி, வாங்களேன் நானே உங்களை டிராப் பண்ணறேன். அவனின் பேச்சும் பந்தாவும் மற்றவர்களுக்கு இவளை குறுகுறுவென பார்க்க தோன்றியது(பேஸ் புக்)
சுற்றி இருந்தவர்கள் ஒரு மாதிரி பார்த்தனர். இவளுக்கு கூச்சமாக இருந்தது. அவனிடம் பேச விருப்பம் இல்லாதவளாக முகத்தை திருப்பி கொண்டாள் .
அவளை நெருங்கி அவளில் காதோரமாக இப்ப எங்கூட கார்ல ஏறு, நான் உன்கிட்ட அப்புறமா விஷயத்தை சொல்லறேன் என்றான்,மிக அருகில் வந்தாலும் அவள் மேல் அவன் இடிக்கவில்லை.
இவளுக்கு விருப்பம் இல்லை என்றாலும் அவன் மீது நம்பிக்கை வைத்து அவனின் ஊர்தியில் ஏறியது அவளுக்கே வியப்புதான்.
யாரோ முன் பின் தெரியாத பெண்ணிடம் இத்தனை இறங்கி பேசுபவனா இந்த கௌசிக் என்ற வியப்பு அவனுக்கும் இருந்தது(அப்படியா கௌசிக், ஒனக்கு அவளை முன்னாடி தெரியாது?)
சிறிது தூரம் சென்றதும்,
ஹலோ மிஸ்டர் கார நிறுத்துங்க. எதுக்கு என்ன கார்ல ஏற சொன்னீங்க?(எம்மா நீங்கல்லாம் இப்படித்தான் யாரவது பெரிய காருல வந்து கூப்புட்டா போயிருவீங்களா?)
வெயிட் வெயிட் காயல்(கயலதான் நம்ம ஆளு அப்படி சொல்லறான் 🤭) எதுக்கு இந்த அவசரம்?
உங்களுக்கு எப்படி என்னோட பேர் தெரியும்?
நீயே யோசி🤔
சரி!அதெல்லாம் இருக்கட்டும் முதல்ல விஷயத்தை சொல்லுங்க. என்னோட பஸ் வந்துடும்.
அதான் சொன்னேனே நானே உங்களை டிராப் பண்ணறேன்னு? அவன் தமிழ் பேசுவது ஹிந்திடப்பிங் சீரியல்பார்ப்பது போல இருந்தது😊
மற்றதை நினைக்காமல்,
சாரி! நான் உங்களை கார நிறுத்த சொன்னேன். சொல்லுங்க எதுக்கு என்ன கார்ல ஏத்துனீங்க ?
உனக்கு என்ன பார்த்தா தப்பா தெரியுதா?
நான் உங்களோட பதிலுக்கு காத்திருக்கேன்😤
நீ ஒரு பொண்ணுதானே ?
யே ! இது என்ன கேள்வி ?🤦♀️
ம்ம்., ஒரு எடதுல நிக்கும்போது யாரூ எப்படி பாக்ராங்கோன்னு ஒனக்கு தெரியாதா?
மௌனமே பதிலாக இருந்தது.
சரி, நான் உன்ன மறுபடியும் அங்கையே விடறேன். அந்த எல்லோ டீ ஷர்ட் உன்ன எப்படி பாக்கறானு சொல்லு.
வேண்டாம், நீங்களே என்ன அடுத்த பஸ் ஸ்டாப்புல விட்டுடுங்க, அவன் சொன்ன விஷயத்தில் குரல் தானே இறங்கியது.
நோ ப்ராப்ளம், நீ உன்னோட டவுட் கிளீயர் பண்ணிட்டு வா,
பரவால்ல. நான்.. என்ன அடுத்த பஸ் ஸ்டாப்புலையே விட்டுடுங்க.
சரி. சாரி.
சரியா? சாரியா? ஒழுங்கா சொல்லு.
சாரி உங்கள தப்பா நினச்சு திட்டினதுக்கு. முதல்ல நீங்க சொன்னதுக்கு சரி.
ஒகே! ஆனா நீ பஸ்சுல ஏறினதுக்கப்புறம்தான் நான் போவேன்.
ஒரே ஒரு சந்தேகம். அவன் என்ன எப்படி பார்த்தான்?
இவன் ஒரு மாதிரியாக பார்த்தான்.
இல்ல நான் போட்டுருக்கறது எல்லாமே சும்மா நகைத்தான்.ஐ மீன் டூப்ளிகேட் , அதான்.
இப்படி லட்டு மாதிரி நீ இருக்கும்போது எவனாவது நகைய பாப்பானாடி லூசு. மனதில் நினைத்ததை நல்ல வேளை சொல்லவில்லை .
ப்ளீஸ் சொல்லுங்க .
நீ உன்னோட மூஞ்சிய கண்ணாடில பாக்கறதே இல்லையா ? வீட்டுக்கு போனதும் கண்ணாடியை பாரு . அவன் எப்படி பார்த்தான்னு உனக்கு புரியும். உன்னோட பஸ் ஸ்டாப் .
வீட்டில்,
ஏண்டி! இந்த மாதிரி கலரு போடாத உன்னோட கலருக்கு திருஷ்டி படுதுன்னு எத்தனை தடவ சொல்லறது. போறவன் வரவனெல்லாம் உன்னையே பாக்காரனுங்க . போ போய் கைய கால கழுவிட்டு வா சாப்பாடு எடுத்து வைக்கறேன் . முகம் கழுவிக் கொண்டவளுக்கு, கார் அழகனின் குரலும் காதில் வந்தது. ஓடி சென்று கண்ணாடி பார்த்தாள். அப்போது பெரியதாக ஒன்றும் தெரியவில்லை. ஆனால் முகத்தில் ஏதோ ஒரு ஒளி வந்ததுபோல இருந்தது.அதற்கு இந்த ஸ்டிக்கர்தான் காரணம்,என்று நினைத்தவள் சாதாரணமானது பார்த்து வைத்துக் கொண்டாள் .
அடுத்த நாள், காலை கண்ணாடி பார்க்கும்போது, இன்னிக்கு அவன் வருவானா ?(ஏம்மா கார்த்திக்கை லவ் பண்ணும்போது என்னிக்காவது இவ்ளோ எதிர்பார்த்திருக்கியா ?) மனம் குத்தியது. ம்ம் கார்த்திக், கார்த்திக் அவராவேதான் நான் என்ன டிரஸ் போடணுன்னு சொல்லிடுவாரே, நினைக்கும்போதுதான் அவளுக்கே அதில் சுதந்திரம் இல்லை என்று தெரிந்தது.
மறுபடியும், இவர்களின் சந்திப்பு, வேறு ஒரு பேருந்து நிலையத்தில் .
இருவருக்குமே ஆச்சர்யம்.
வாங்க, இப்போ எங்க போகணும் ?
ஹே நீங்க என்ன பாலோவ் பண்ணறீங்களா?
காருல ஏறுங்க பதில் சொல்லறேன்.
பதில் கேட்பதற்காக ஏறி கொண்டாள் .
எங்க போகணும்?
ம்ம் பம்பாய் போகணும், கோபம் போல பேசினாள்.
இப்போ இல்ல வேண்ணா நாளைக்கு போகலாம்.
மிஸ்டர். முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.
ஏன் நீ என்ன பாலோவ் பண்ண கூடாதா ?
நான் நான் ஏன் பண்ணனும் ? நான் எதுக்கு உங்க பின்னாடி வரணும்.
தென் வை மீ ?
நான்னா சின்ன பொண்ணு. பாக்க கொஞ்சம் அழகாவும் இருக்கேன். அதான். கழுத்தையும் முகத்தையும் ஆட்டி ஆட்டி சொன்னாள் .குரலில் பெருமிதம் தெரிந்தது.
அதோட எப்பையும் பசங்கதான பொண்ணுங்கள பாலோவ் பண்ணுவாங்க.
அவள் கண்களை குறுகுறுவென பார்த்து, நேத்து கண்ணாடிய பார்த்தியா?
பதில் வரவில்லை. அவளின் கன்ன சிகப்பையே பதிலாக எடுத்துக் கொண்டான். ஏனோ அவளிடம் வாயாட வேண்டும் என்று தோன்றியது.
உன்ன விட நிறைய காரணங்கள் எனக்கு இருக்கு . ஸ்ட்ரைட்டா? லெப்டா?
நேரா போங்க. அவனிடம் பேசிக் கொண்டே வீட்டிற்கு வழி சொல்லிக் கொண்டிருந்தாள்.
நானும்தான் பணக்கார பையன், அழகா கம்பீரமா இருக்கேன்😎😎😍 எந்த பெண்ணும் என் பின்னாடியே வருவா நல்ல படிச்சிருக்கேன் நல்ல பிசினெஸ் பண்ணறேன், சம்பாதிக்கறேன். அதனால நீயும் என்ன பாலோவ் பண்ணலாமில்ல ? ம்ம் உதடு சுழித்து புருவங்களை ஏற்றி இறக்கி கூறினான்.
எங்க நீங்க அழகா இருக்கீங்க? எல்லா பொண்ணுங்களும் உங்க கூடவே வந்துடுவாங்க கொஞ்சம் ஓவரா இல்ல? நீங்களும் இன்னிக்கு உங்க மூஞ்சிய கண்ணாடில பாருங்க சார். குழந்தை போல சொன்ன அவள் பாவனையை அவன் ரசித்தான்😁
அப்போது அவள் வீடே வந்து விட்டது.
சார் சார் இங்கையே நிறுத்துங்க. உள்ள சந்துக்குள்ள உங்க கார் வராது. நான் இறங்கி நடந்து போய்க்கறேன் .
ரொம்ப தாங்க்ஸ் சார். சொல்லி விட்டு அவள் வேகமாக நடந்து சென்றாள். அவளை விட்டு செல்ல மனம் இல்லாதவனாக இவன் அவள் உருவம் மறையும் வரையில் இருந்து விட்டு சென்றான்.
இன்று கண்ணாடி பார்ப்பது இவன் முறையானது.
வீட்டிற்கு சென்றவளுக்கு ஏனோ மனம் காற்றில் பறந்தது,
இவனுக்கும்தான், பக்கத்துக்கு வீட்டு ரேடியோவில்,
எகிறி குதித்தேன் வானம் இடித்தது,
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது,
புருவங்கள் இறங்கி மீசையானது .......
பாடல் வரிகள் சரியாக அர்த்தம் புரியவில்லை என்றாலும், அந்த பாடல் அப்போது அவனுக்கான சிடுயேசன் சாங்கத்தாம்பா.
இதனால் மக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்..........
ஒன்றுமில்லை
ஒன்றுமில்லை
யப்பா மீண்டும் வருவாள் தேவதையே காணோமே..............😁😁😉
அவன் இருந்த அவசரத்தில் அவன் அவள் முகத்தை பார்த்தான், அவ்வளவுதான் . அதற்கு மேல் அவன் கருத்தில்ஒன்றும் பதியவில்லை. அதேதான் அவளுக்கும். இருவருமே அவரவர் விஷயத்தில் ஓடிக் கொண்டிருந்தனர்.
அவள் அதே கட்டிடத்தில் நேர்முக தேர்வில் பங்கேற்ற போது அவன் அந்த பெரிய ரியல் எஸ்டேட் கம்பெனியில் மருத்துவமனை கட்டுவதை பற்றி பேசிக் கொண்டிருந்தான். அப்போது எதாச்சையாக அவன் சந்தித்தது அவன் பள்ளி தோழி, பவித்ராவை, இருவருக்குமே அளவில்லா மகிழ்ச்சி. இருப்பினும் பேச்சு மும்மரத்தில் அவன் அந்த md இடம் கட்டிக் கொள்ளவில்லை.
அவள் அவரின் பீஏவாக இருந்தாள். மீட்டிங்கில் இறுதியில் கௌசிக் அந்த கம்பெனியுடன் நல்ல புரிதல் இருப்பதை உணர்ந்து கொண்டான். இறுதியில் அவர்கள் இவன் எதிர்பார்ப்பதுபோல சில இடங்களை தேர்வு செய்து பிறகு சொல்வதாக கூறினார். இன்னும் சில விஷயங்களை பேசி முடித்தவனுக்கு திருப்தியாகவே இருந்தது. இறுதியில், நான் என்னோட பள்ளி தோழி பவித்ராவோட கொஞ்சம் பேசலாமா? என்று பகிரங்கமாகவே அவரிடம் பெர்மிசன் கேட்டு அழைத்து சென்றான். அவரும் ஓகே சொன்னார், ஆச்சர்யபார்வையுடன்.
வெளியில் வந்ததும் குதூகளித்தாள் பவித்ரா. இருவருமே ஹிந்தியில் உரையாட ஆரம்பித்தனர். பவித்ராவின் கணவர் கப்பலில் வேலை செய்பவர். திருமணத்திற்கு பிறகு பவித்ராவுக்கு இந்த கம்பெனியில் இங்கு வேலை கிடைத்தது. நல்ல சம்பளம், நல்ல இடம், எந்த தொந்தரவும் கிடையாது என்று இங்கேயே தங்கிவிட்டாள் . குழந்தை பெற்று கொள்ள இருவருமே சற்று தயங்கினார்கள். அதை புரிந்து கொள்ளாத புகுந்தவீட்டாரின் பேச்க்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் இது ஒரு நல்ல இடமாக இருந்தது. அவளுக்கு ஓகேதான் என்றாலும் அவள் கணவன் இன்னும் சில வருடங்கள் வேண்டாம் என்றான். நாமளே பல நாள் கழிச்சுத்தான் மீட் பண்ணறோம். ஒவ்வொவொரு தடவையும் நான் ஹனிமூனாதான் பாக்கறேன். இப்ப ஒடனே எந்த கமிட்மெண்டும் வேண்டாம்.
பட் உங்க ப்ரேண்ட்ஸ் ?
அவங்க புரிஞ்சுக்க மாட்டாங்க, நீயுமா? ப்ளீஸ் பவி , நானே ரொம்ப காஞ்சு பொய் வந்துருக்கேன். புருசனுக்கு என்ன தேவையோ அதை குடுக்க வேண்டியது நீதானே? ப்ளீஸ் என்று மேலே அவள் பேச இடம் தராமல், லிப் லாக் செய்தான். அவனின் உரசல், தீண்டல், முத்தங்கள், கொஞ்சல்கள், இதிலேயே அவன் வரும் சில நாட்கள் முடிந்துவிடும். அவன் நிலைமை அவளுக்கும் புரிந்தது. பல நாட்கள் அங்கே கப்பலில் வேலை பார்த்தாலும் எந்த பெண்ணையும் அவன் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. பல தரப்பட்ட பெண்களை பார்த்தாலும், தாகம் தீர்த்துக் கொள்ளவும் சரி, பசி தீர்த்துக்கொள்ளவும் சரி மனைவி மட்டுமே. அவனோடு கப்பலில் சென்று வந்த சில நாட்களில் அவன் தன்னை கட்டுப்பாடாக வைத்திருப்பது அவளுக்கே ஆச்சர்யம்தான். அப்படிப்பட்ட கணவனுக்காக என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்றே அவளுக்குத் தோன்றியது. குழந்தை பெற்று கொள்ளவில்லை என்றாலும் இருவருக்குமே காதலும் புரிதலும் இருந்தது. அதை பற்றி மற்றவர்களுக்கு தெரியாதே ? இருவரும் தங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தனர், மாலை அவளுக்கு வேலை முடிந்தவுடன். நீதான் எல்லாரையும் ஈஸியா இம்ப்ரெஸ் பண்ணிடுவீயே ? அதெல்லாம் இங்லாஸ்கிட்ட வர்க் ஆகாதுப்பா . நீயாவது உன்னோட மனைவிய உங்க பேரான்ஸ்கிட்ட விட்டுக் கொடுத்துடாத.
ஏன் உன்னோட ஹப்பி ஒனக்கு சப்போர்ட் பண்ண மாட்டாரா ?
எனக்கு சப்போர்ட் பண்ணாம நான் எப்படி இங்க தனியா இருக்க முடியும்? பட்
குழந்தை பத்தி பேச்சு வந்தா என்ன மாட்டி விட்டுடுவாரு.
இப்படியே வெகு நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பினர்...........................................................................................................................................................................................
கயலோ கார்த்திக்கின் பேச்சைக் கேட்டு ஒவ்வொரு இடமாக வேலையை விட்டுக் கொண்டிருந்தாள். அவனின் சந்தேக பார்வையை அவள் மீது திணித்தான். இதற்கு முன் அவள் வேலை பார்த்தஇடத்திலும் அவள் கௌசிக்கின் உதவியுடன் மின் படிக்கட்டுகளில் இறங்கி வந்தது அவனுக்கு பிடிக்கவில்லை. அவன் சந்தேகக்காரனாக இருக்கவில்லை. அதற்கு அர்த்தமாக இருந்தான். முதலில் எல்லாம் அவன் சொல்லுவதை கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு,தகுதி இருந்தும் ஒவ்வொரு இடத்திலும் நிராகரிக்கப்படுவதற்கு எந்த வேலையிலும் நிரந்தரமாக தான் இல்லாததுதான் என்பது புரியும்போது எரிச்சலாக வந்தது, முதல் முறையாக. இப்போதெல்லாம் அவளிடம் சில பல மாற்றங்கள் வர தொடங்கி இருந்தது. கார்த்திக்கின் எதிர்பார்ப்பு என்ன எனபதை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் ஏன் தன்னால் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை. அதற்கு காரணம் பாவம் அவள் அல்லவே. மிகச் சாதுர்யமாக அவன் அவளை கட்டுபடுத்தி வைத்திருந்தான். இப்போதுதான் அவளுக்கு அவன் மேல் இருந்த மாயை விலகத் தொடங்கி உள்ளதோ!...
காலம்(தான்) பதில் சொல்லும்.
அவள் பல இடங்களில் வேலைத் தேட தொடங்கி இருந்தாள் . யாருமே இவளை நம்ப தயாராக இல்லை. இவள் தோழிகளும்தான். யாரும் இவளுக்கு சிபாரிசு செய்து மேலிடத்திலிருந்து வாங்கி கட்டிக் கொள்ள தயாராக இல்லை. முதலில் அவள் உற்சாகமாக வேலை தேட தொடங்கினாலும் இப்போதெல்லாம் அவளிடம் ஏனோ அந்த உற்சாகம் இல்லை . அதே சமயம் அப்பாவின் பென்ஷன் பணமும் அந்த அளவுக்கு போதவில்லை. இவளுக்கும் வேலை இல்லாமல் போகவே,அன்னை தெரிந்தவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு சமைக்க உதவிக்கு செல்ல ஆரம்பித்தாள். அதுவும் சேர்ந்து இவளுக்கு மனம் வெதும்ப ஆரம்பித்தது.
கார்த்திக்கோ இவர்களின் கஷ்டங்களை பற்றி எதுவும் கவலை படாமல், இவளை வெளியில் செல்ல அழைத்தான். அதுவும் எப்போதுமே அவள் அழகாகவே டிரஸ் செய்து கொண்டு வர வேண்டும்,சிரித்துப் பேச வேண்டும், வெட்கப்பட வேண்டும். அவனை மயக்க வேண்டும். அவளுக்குஎன்று ஒரு இதயமோ , மனசோ இருப்பதை பற்றி அவன் கவலை பட்டதே இல்ல. இவளாக ஏதாவது பேச ஆரம்பித்தாலும், மிக கவனமாக அவன் பேச்சை மாற்றி விடுவான். முன்பானால் அவன் பேச்சில் மயங்கினாள் தான். ஆனால் இப்போது அன்னை மயக்கமாக வந்து சாப்பாடு கூட உண்ண முடியாமல் சோர்வாக வந்து படுக்கும்போது இவள் மனசாட்சி இவளை எப்படி சும்மா விடும்? இப்படி வீட்டில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அவளுக்கு மனதிற்கு இதமாக இருந்தது கௌசிக்கின் சந்திப்புகள்தான். அவன் அவளை எங்கும் அழைத்து சென்றதில்லை எதுவும் வாங்கித் தந்தது இல்லை. ஆனல் ஏனோ அவனுடன் வாயடிப்பதும், அவன் காரில் ஏறி செல்வதும் அவளுக்கு மகிழ்ச்சியை தந்தது என்றே சொல்லலாம். முதலில் கார்த்திக்கின் தவறான போதனைகளால் அவள் கௌசிக்கை சந்தேகத்தோடுதான் பார்த்தாள் . அதனால் தான் அவனை தெரிந்திருந்தும் தெரியாதது போலநடந்து கொண்டாள் . அதுவும் கார்த்திக்கின் சீரிய சிந்தனையே! கார்த்திக்கின் பேச்சு போகட்டும், இவர்களுக்குள் என்னதான் நடந்தது?
ஒரு ஊர்ல, ஒருநாள் என்ன நடந்துச்சாம்? குழந்தைங்களுக்கு கத சொல்லற மாதிரி இருக்கோ?
பேருந்து நிறுத்தத்தில் அந்த உயர்ரக மகிழுந்து வந்து நின்றது, அதிலிருந்து அந்த கந்தர்வன் ச! ச! நம்ம கௌசிக் வந்து
ஹாய்! மிஸ் ... கயல்விழி, வாங்களேன் நானே உங்களை டிராப் பண்ணறேன். அவனின் பேச்சும் பந்தாவும் மற்றவர்களுக்கு இவளை குறுகுறுவென பார்க்க தோன்றியது(பேஸ் புக்)
சுற்றி இருந்தவர்கள் ஒரு மாதிரி பார்த்தனர். இவளுக்கு கூச்சமாக இருந்தது. அவனிடம் பேச விருப்பம் இல்லாதவளாக முகத்தை திருப்பி கொண்டாள் .
அவளை நெருங்கி அவளில் காதோரமாக இப்ப எங்கூட கார்ல ஏறு, நான் உன்கிட்ட அப்புறமா விஷயத்தை சொல்லறேன் என்றான்,மிக அருகில் வந்தாலும் அவள் மேல் அவன் இடிக்கவில்லை.
இவளுக்கு விருப்பம் இல்லை என்றாலும் அவன் மீது நம்பிக்கை வைத்து அவனின் ஊர்தியில் ஏறியது அவளுக்கே வியப்புதான்.
யாரோ முன் பின் தெரியாத பெண்ணிடம் இத்தனை இறங்கி பேசுபவனா இந்த கௌசிக் என்ற வியப்பு அவனுக்கும் இருந்தது(அப்படியா கௌசிக், ஒனக்கு அவளை முன்னாடி தெரியாது?)
சிறிது தூரம் சென்றதும்,
ஹலோ மிஸ்டர் கார நிறுத்துங்க. எதுக்கு என்ன கார்ல ஏற சொன்னீங்க?(எம்மா நீங்கல்லாம் இப்படித்தான் யாரவது பெரிய காருல வந்து கூப்புட்டா போயிருவீங்களா?)
வெயிட் வெயிட் காயல்(கயலதான் நம்ம ஆளு அப்படி சொல்லறான் 🤭) எதுக்கு இந்த அவசரம்?
உங்களுக்கு எப்படி என்னோட பேர் தெரியும்?
நீயே யோசி🤔
சரி!அதெல்லாம் இருக்கட்டும் முதல்ல விஷயத்தை சொல்லுங்க. என்னோட பஸ் வந்துடும்.
அதான் சொன்னேனே நானே உங்களை டிராப் பண்ணறேன்னு? அவன் தமிழ் பேசுவது ஹிந்திடப்பிங் சீரியல்பார்ப்பது போல இருந்தது😊
மற்றதை நினைக்காமல்,
சாரி! நான் உங்களை கார நிறுத்த சொன்னேன். சொல்லுங்க எதுக்கு என்ன கார்ல ஏத்துனீங்க ?
உனக்கு என்ன பார்த்தா தப்பா தெரியுதா?
நான் உங்களோட பதிலுக்கு காத்திருக்கேன்😤
நீ ஒரு பொண்ணுதானே ?
யே ! இது என்ன கேள்வி ?🤦♀️
ம்ம்., ஒரு எடதுல நிக்கும்போது யாரூ எப்படி பாக்ராங்கோன்னு ஒனக்கு தெரியாதா?
மௌனமே பதிலாக இருந்தது.
சரி, நான் உன்ன மறுபடியும் அங்கையே விடறேன். அந்த எல்லோ டீ ஷர்ட் உன்ன எப்படி பாக்கறானு சொல்லு.
வேண்டாம், நீங்களே என்ன அடுத்த பஸ் ஸ்டாப்புல விட்டுடுங்க, அவன் சொன்ன விஷயத்தில் குரல் தானே இறங்கியது.
நோ ப்ராப்ளம், நீ உன்னோட டவுட் கிளீயர் பண்ணிட்டு வா,
பரவால்ல. நான்.. என்ன அடுத்த பஸ் ஸ்டாப்புலையே விட்டுடுங்க.
சரி. சாரி.
சரியா? சாரியா? ஒழுங்கா சொல்லு.
சாரி உங்கள தப்பா நினச்சு திட்டினதுக்கு. முதல்ல நீங்க சொன்னதுக்கு சரி.
ஒகே! ஆனா நீ பஸ்சுல ஏறினதுக்கப்புறம்தான் நான் போவேன்.
ஒரே ஒரு சந்தேகம். அவன் என்ன எப்படி பார்த்தான்?
இவன் ஒரு மாதிரியாக பார்த்தான்.
இல்ல நான் போட்டுருக்கறது எல்லாமே சும்மா நகைத்தான்.ஐ மீன் டூப்ளிகேட் , அதான்.
இப்படி லட்டு மாதிரி நீ இருக்கும்போது எவனாவது நகைய பாப்பானாடி லூசு. மனதில் நினைத்ததை நல்ல வேளை சொல்லவில்லை .
ப்ளீஸ் சொல்லுங்க .
நீ உன்னோட மூஞ்சிய கண்ணாடில பாக்கறதே இல்லையா ? வீட்டுக்கு போனதும் கண்ணாடியை பாரு . அவன் எப்படி பார்த்தான்னு உனக்கு புரியும். உன்னோட பஸ் ஸ்டாப் .
வீட்டில்,
ஏண்டி! இந்த மாதிரி கலரு போடாத உன்னோட கலருக்கு திருஷ்டி படுதுன்னு எத்தனை தடவ சொல்லறது. போறவன் வரவனெல்லாம் உன்னையே பாக்காரனுங்க . போ போய் கைய கால கழுவிட்டு வா சாப்பாடு எடுத்து வைக்கறேன் . முகம் கழுவிக் கொண்டவளுக்கு, கார் அழகனின் குரலும் காதில் வந்தது. ஓடி சென்று கண்ணாடி பார்த்தாள். அப்போது பெரியதாக ஒன்றும் தெரியவில்லை. ஆனால் முகத்தில் ஏதோ ஒரு ஒளி வந்ததுபோல இருந்தது.அதற்கு இந்த ஸ்டிக்கர்தான் காரணம்,என்று நினைத்தவள் சாதாரணமானது பார்த்து வைத்துக் கொண்டாள் .
அடுத்த நாள், காலை கண்ணாடி பார்க்கும்போது, இன்னிக்கு அவன் வருவானா ?(ஏம்மா கார்த்திக்கை லவ் பண்ணும்போது என்னிக்காவது இவ்ளோ எதிர்பார்த்திருக்கியா ?) மனம் குத்தியது. ம்ம் கார்த்திக், கார்த்திக் அவராவேதான் நான் என்ன டிரஸ் போடணுன்னு சொல்லிடுவாரே, நினைக்கும்போதுதான் அவளுக்கே அதில் சுதந்திரம் இல்லை என்று தெரிந்தது.
மறுபடியும், இவர்களின் சந்திப்பு, வேறு ஒரு பேருந்து நிலையத்தில் .
இருவருக்குமே ஆச்சர்யம்.
வாங்க, இப்போ எங்க போகணும் ?
ஹே நீங்க என்ன பாலோவ் பண்ணறீங்களா?
காருல ஏறுங்க பதில் சொல்லறேன்.
பதில் கேட்பதற்காக ஏறி கொண்டாள் .
எங்க போகணும்?
ம்ம் பம்பாய் போகணும், கோபம் போல பேசினாள்.
இப்போ இல்ல வேண்ணா நாளைக்கு போகலாம்.
மிஸ்டர். முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.
ஏன் நீ என்ன பாலோவ் பண்ண கூடாதா ?
நான் நான் ஏன் பண்ணனும் ? நான் எதுக்கு உங்க பின்னாடி வரணும்.
தென் வை மீ ?
நான்னா சின்ன பொண்ணு. பாக்க கொஞ்சம் அழகாவும் இருக்கேன். அதான். கழுத்தையும் முகத்தையும் ஆட்டி ஆட்டி சொன்னாள் .குரலில் பெருமிதம் தெரிந்தது.
அதோட எப்பையும் பசங்கதான பொண்ணுங்கள பாலோவ் பண்ணுவாங்க.
அவள் கண்களை குறுகுறுவென பார்த்து, நேத்து கண்ணாடிய பார்த்தியா?
பதில் வரவில்லை. அவளின் கன்ன சிகப்பையே பதிலாக எடுத்துக் கொண்டான். ஏனோ அவளிடம் வாயாட வேண்டும் என்று தோன்றியது.
உன்ன விட நிறைய காரணங்கள் எனக்கு இருக்கு . ஸ்ட்ரைட்டா? லெப்டா?
நேரா போங்க. அவனிடம் பேசிக் கொண்டே வீட்டிற்கு வழி சொல்லிக் கொண்டிருந்தாள்.
நானும்தான் பணக்கார பையன், அழகா கம்பீரமா இருக்கேன்😎😎😍 எந்த பெண்ணும் என் பின்னாடியே வருவா நல்ல படிச்சிருக்கேன் நல்ல பிசினெஸ் பண்ணறேன், சம்பாதிக்கறேன். அதனால நீயும் என்ன பாலோவ் பண்ணலாமில்ல ? ம்ம் உதடு சுழித்து புருவங்களை ஏற்றி இறக்கி கூறினான்.
எங்க நீங்க அழகா இருக்கீங்க? எல்லா பொண்ணுங்களும் உங்க கூடவே வந்துடுவாங்க கொஞ்சம் ஓவரா இல்ல? நீங்களும் இன்னிக்கு உங்க மூஞ்சிய கண்ணாடில பாருங்க சார். குழந்தை போல சொன்ன அவள் பாவனையை அவன் ரசித்தான்😁
அப்போது அவள் வீடே வந்து விட்டது.
சார் சார் இங்கையே நிறுத்துங்க. உள்ள சந்துக்குள்ள உங்க கார் வராது. நான் இறங்கி நடந்து போய்க்கறேன் .
ரொம்ப தாங்க்ஸ் சார். சொல்லி விட்டு அவள் வேகமாக நடந்து சென்றாள். அவளை விட்டு செல்ல மனம் இல்லாதவனாக இவன் அவள் உருவம் மறையும் வரையில் இருந்து விட்டு சென்றான்.
இன்று கண்ணாடி பார்ப்பது இவன் முறையானது.
வீட்டிற்கு சென்றவளுக்கு ஏனோ மனம் காற்றில் பறந்தது,
இவனுக்கும்தான், பக்கத்துக்கு வீட்டு ரேடியோவில்,
எகிறி குதித்தேன் வானம் இடித்தது,
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது,
புருவங்கள் இறங்கி மீசையானது .......
பாடல் வரிகள் சரியாக அர்த்தம் புரியவில்லை என்றாலும், அந்த பாடல் அப்போது அவனுக்கான சிடுயேசன் சாங்கத்தாம்பா.
இதனால் மக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்..........
ஒன்றுமில்லை
ஒன்றுமில்லை
யப்பா மீண்டும் வருவாள் தேவதையே காணோமே..............😁😁😉