Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Nee en devadhai

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-82

எது எப்படியோ தான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டான். கௌசிக். அதன் எதிர் வினையை அவன் அறியவில்லை. பரவாயில்லை. பெரியதாக ஒன்றும் ஆகி விடாது. மறு நாள் காலையில் எழுந்து, தான் சொந்த ஊருக்கு செல்ல வேண்டியதை எல்லாம் பாக் செய்தவள், தனியாகவே கிளப்பினாள் . ஆனால் இவன் விடவில்லை.


ரெடியா மாம்?

வாங்க , உங்களோட நானும் வர்றேன்.

நோ கௌசிக். எனக்கு ஒரு கால் டாக்ஸி புக் பண்ணு . நான் தனியாவே போய்க்கறேன் . அவள் சொல்வதை கேட்பவனா அவன் ! பிடிவாதமாக தானும் கிளம்பினான். ஏனோ அவனின் புது மகிழுந்து இப்போது அவர்கள் இருவருக்குமே சந்தோசத்தை தரவில்லை.
நீ இருந்து வேலைய முடிச்சுட்டு வா என்று அன்னை சொல்லமாட்டாளா என்ற ஏக்கம் அவனிடம், மாம் எனக்கு எல்லாத்தையும் விட நீங்கதான் முக்கியம், நான் சீக்கிரம் வந்துடறேன் என்று அவன் சொல்ல மாட்டானா என்ற ஏக்கம் அவளிடம். அந்தோ பரிதாபம், இருவருமே வாயை திறக்கவே இல்லை .
இருவருக்குமிடையில் இருக்கும் மௌனத்திற்கு ஒரு முடிவு வந்தது, வஸந்தியால்.
நான் கொஞ்ச நாளைக்கு அக்கா வீட்டுல இருக்க போறேன்.
என்ன திடீர்னு ?
..........மௌனம். அதிலிருந்தே அவனுக்கு பல செய்திகள் கிடைத்தது.

இவனும் ஊமையாகி போனான். வசந்தி எதுவும் சொல்லவில்லை. என்றாலும் அவள் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டாள் என்ற செய்தி கிடைத்ததும்தான் கௌசிக்கிற்கு,மூச்சே வந்தது.

இத்தனை தூரம் வந்தவள் சொல்லாமலே போனது சிமிக்கும் மற்றவர்களுக்கும் வருத்தம்தான். ஆனால் ஊருக்கு சென்றதும் அவள் இவர்களிடம் போனில் செய்தி சொன்னதில், அதுவும் தீர்ந்தது.

என்னதான் திருமணம் அது இது என்றிருந்தாலும், வசந்தியை பற்றி தினமும் சத்யா விசாரித்தாள் . அதனால் தான் முன்றைய தினம் அவள் வரவேண்டாமேயென்று சொல்லி இருந்தான் கௌசிக். இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு அவளை தனியாக விட்டது போல இருந்தது, என்பதை சத்யாவால் ஊகிக்க முடிந்தது. அருணுக்கு என்னவோ அதே தான் வசந்திக்கும் . ஆனால் ஆரா, ரிஷி இருவரும் சேர்ந்து அருணுக்கு புரிய வைக்க முடிந்தது. அதற்கு இன்னொரு முக்கிய காரணம், அருணுக்கு குடும்பம், அதன் மதிப்பு எல்லாம் தெரிந்திருந்தது.

வசந்தி பிடிவாதக்காரி. யார் சொல்வதையும் கேட்டுக் கொள்ள மாட்டாள். மனதில் இருப்பதை தெளிவாக யாரிடமும் கூறவும் மாட்டாள். அவள் இப்படிதானேயென்று யாராலும் சொல்ல முடியாது. அவள் என்ன நினைக்கிறாளோ அதுதான் என்ற பிடிவாதம்தான், இன்று அவளால் யாருடனும் ஒத்து போகவில்லை. தனக்கு எது நல்லது என்பதை கூட அவளால் அறிந்து கொள்ள முடியவில்லை. தன்னால் சிந்திக்க முடியாத போது, தன் குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையே இவளின் மனோ பாவம் இப்போது காட்டுகிறது. அவள் ஒளிவு மறைவின்றி கௌசிக்கிடம் பேசி இருக்கலாம். அதற்கு அவள் ஈகோ ஒத்துக் கொள்ள வில்லை. தன்னை விட அந்த சத்யா தான் முக்கியமா என்ற கோபமும் அதற்க்கு காரணம். நல்ல வேளையாக அவள் சத்யாவை பழையபடி வெறுக்கவில்லை என்பதே பெரிய மாற்றம்தான்.

இதற்கு மேல் வசந்தியை பற்றி நான் பேச விரும்பவில்லை. எனக்கு பேச சத்யா இருக்கிறாள். அவர்களுக்கும் அவள் கணவனுக்கும் இடையில் மொட்டு விட ஆரம்பித்திருக்கும் காதல் இருக்கிறது. அவர்களை பற்றி நினைத்தாலே ஏனோ மனம் லேசாகிறது. அதை என்னுடன் சேர்ந்து நீங்களும் அனுபவிக்க வாருங்கள்.

......................................................



சாப்பிட சென்றவர்கள் அருகருகே அமர்ந்து கொண்டனர். எப்போதுமே சத்யா அள்ளி சாப்பிடுபவள் அல்ல. இருந்தாலும், தனக்கு தேவையானதை நன்றாகவே உண்பவள். இருவருமே பிடிக்காததை வேண்டாம் என்றனர். அதில் ஆச்சர்யப்பட்டது பரிமாறுபவர்கள் தான். சொல்லி வைத்தது போல இருவ்ருக்குமே ஒன்றாக பிடித்தது பல, சிலது ஒன்றாக பிடிக்கவில்லை. அதை நினைத்து சத்யா மனதுக்குள் சிரித்துக் கொண்டாள . முத்து ரசித்துக் கொண்டான்.

நீங்க பீடா போடுவீங்களா ?

ம்ம்.,அது உடம்புக்கு நல்லதில்லைதான். ஆனா என்னிக்காவது இந்த மாதிரி அதிகமா சாப்டா போட்டுக்குவேன். அவள் நாக்கு சிவப்பதை இவன் ரசித்தான். அதில் நாக்குடன் சேர்ந்து கன்னமும் சிவந்தது போட்டி போட்டுக் கொண்டு. அவனை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தவள், அங்கும் இங்கும் பார்வையை அலைய விட்டாள் .


சில நிமிடங்களில் வாட்சை பார்த்தவள், நான் கிளம்பட்டுமா முத்து ?போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு நான் ஹாஸ்பிடல் போகணும்.

வாங்க நானே உங்கள வீட்டுல விடறேன்.

இருவரும் அவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினர் . இங்க பாரு கண்ணு சீக்கிரமா சீமந்தத்துக்கு சொல்லி அனுப்பனும். நாங்க எல்லாரும் வந்துடுவோம். சரியா ?

இவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் பார்வை தானாகவே முத்துவை பார்த்தது. மெ(பொ) துவாக சிரித்து வைத்தாள் .

பூ நசுங்காமல், புடவை அலுங்காமல், பதவிசாக வண்டியில் ஏறி அமர்ந்தவள் பின்னலையும் நகர்த்திக் கொண்டாள் . அந்த மெல்லிய சரிகையில் அவள் அணிந்திருந்த புடவை, பூ, சிவந்த நாக்கு, கன்னங்கள், உதடு, அவளின் இயற்கையான அழகு, செயற்கையான வாசனை மனம் என்று ஒவ்வொன்றும் அவனுக்கு பார்க்க பார்க்க திகட்டவில்லை . வண்டியில் கவனம் இருந்தாலும், மனம் அவளிடமே லயித்திருந்தது. (டேய் நீ புத்திசாலிடா ! மூளையை ரோட்டுக்கும் மனச பொண்டாட்டிய ரூட்டு போடறதுக்கும் யூஸ் பண்ணரீயே?அப்படியே அந்த சீமந்த மேட்டரையும் கவனிச்சா ரொம்ப நல்லாருக்கும். பாத்து செய்ப்பா )

ஏதோ சட்டென்று நினைவு வந்தவளாக ருக்கு எப்படி இருக்கா முத்து ?

சிக்கனலில் இவனுக்கு தூக்கி வாரி போட்டது.

இப்ப எதுக்கு அவளை பத்தி ?

இல்ல சும்மாதான்.அவளுக்கு கல்யாணம் நிச்சயம் அண்ணா போறங்களாமே ?

யாரு சொன்னா ?

அவதான். இப்போது இவனுக்கு இன்னும் அதிர்ச்சி.

அவளை எப்ப பார்த்தீங்க ?

அப்புறம் சொல்லறேன் என்றவள், வீட்டின் வாசலில் இறங்கிக் கொண்டாள் .நீங்களும் வாங்களேன்.
அவனுக்கு ருக்குவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதை தவிரவும் மனையாளின் ஓர் அணைப்பும், இதழ் ஒற்றலும் வேண்டும். அவளிடம் எப்படி கேட்பது ? கூச்சமாக இருந்தது.
சரி டாக்டரு நான் வரேன், அப்புறம் பாக்கலாம்.
அவன் உள்ளே வராதது அவளுக்கு பெருத்த ஏமாற்றம். அரைகுறையாய் மண்டையை ஆட்டினாள்.

என்ன டாக்டரு? ஒன்னும் பிரச்சனை இல்லையே ?

இல்ல கொஞ்சம் உள்ள வந்துட்டு அப்பா கிட்ட சொல்லிட்டு போங்களேன். உண்மையில் அவன் மனம் அவனிடம் இல்லை.அதனாலேயே வீட்டிற்குள் வருவதை தவிர்த்தான். இப்போ மட்டும் அவன் அவ ரூமுக்குள்ள போனான்... சீக்கிரமே சீமந்தம் வந்து விடும். மனம் அதற்கு ஒப்புக் கொண்டாலும், மூளை ஒத்துக் கொள்ளவில்லை. முதலில் தன்னுடைய பண வசதியை பெருக்கிக் கொள்ள வேண்டும். அவள் தன் வீடிற்கு வருமுன், அவளுக்கென்று ஒரு ஏசி அறை , ஒரு பாத் ரூம், வசதியான அடுப்படி இதுவாவது செய்து தர வேண்டும். அதற்க்கு பின்தான் ஏதும் என்ற முடிவில் இருந்தான். அவள் இதையெல்லாம் எதிர்பார்க்காதவள் தான். என்றாலும், இவற்றை அவன் கட்டாயம் செய்து தர வேண்டும்.

ஒரு நொடி பொழுதில் மனம் எங்கெங்கோ பறந்து விட்டது. வண்டி சத்தம் கேட்ட அன்னை,

வாங்க மாப்பிள வாங்க வாங்க, கல்யாணமெல்லாம் நல்ல முடிஞ்சுதா ? என்று கேட்டுக் கொண்டே வெளியில் வந்தாள் .வாங்களேன் ஒரு காபி, ஜுஸ் ஏதாவது சாப்பிட்டு போகலாம்.

இல்லங்க, பரவால்ல, அப்புறம் இன்னொரு நாள் வரேன். சார் இருக்காரா ? சொல்லிட்டு போறேன்.

அவங்க கொஞ்சம் வெளில போயிருக்காங்க. இதோ கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க. நீங்க உள்ள வாங்களேன்.

இல்ல பரவால்ல, தப்பா எடுத்துக்காதீங்க. அப்புறமா வேற ஒரு நாள் வரேன்.

சரிங்க தம்பி.

வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

பெரு மூச்சு விட்டு உள்ளே வந்தவளுக்கு அவன் நினைவாகவே இருந்தது.

அவன் தோளோடு தோள் உரசி அமர்ந்து வருவது அவளுக்கு மகிழ்ச்சியை தந்தது. இருவரின் மனதிலும் மற்றவரே இருந்தனர். இது ஒரு மாதிரி புது விதமான உணர்வு. அவனின் கருப்பு கைகள், அவ்வபோது ஸ்டியரிங்கை மாற்றுவதும், கம்பீரமாக மீசையை முறுக்குவதும் இவளுக்கு பிடித்திருந்தது. அவனை அவள் பார்க்கும்போது, ரசிக்கும்போது, சடக்கென இவன் பார்த்ததும் வெடுக்கென மூஞ்சியை திருப்பிக் கொண்டாள் . அவளுக்கு மூச்சு முட்டுவது இவனுக்கு தெரிந்தது. மீசையை முறுக்கியவனின் உதட்டில் சின்ன முறுவல் வந்தது.

ஒரு ஆண் மகனுக்கு தான் விரும்பும் பெண் தன்னை ரசிப்பதை தவிர வேறு என்னதான் வேண்டும்? இந்த உலகத்தையே ஜெயித்தாலும் ஒரு பெண்ணின் மனதை கவர்வதும், ஜெயிப்பதும் மிக கடினமே. அதிலும் தன்னை போன்ற கருங்குரங்கை, அடங்கா காளையை , சத்யா போன்ற மெல்லிய மலர் விரும்புவது அதிசயமே. அதை நினைத்தவனுக்கு இப்போது அவளை எப்படியாவது சந்தோசமாக கையில் ஏந்தி கொள்ளவே மனம் விரும்பியது. இப்போது அவனுக்கு மனதில் எந்த விதமான குழப்பங்களும் இல்லை . அடுத்து நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல், இருவரின் மனமும் காற்றில் பறந்து கொண்டிருந்தது. இப்போது யாரை நினைத்து நினைத்து இவள் மனம் பறக்கிறதோ அவனையே அவள் சாட போகிறாள் மிக கடுமையாக.......

மீண்டும் வருவாள் தேவதை ..........































 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-83
வசந்தி தன் இருப்பிடத்திற்கு சென்றவுடன் கௌசிக்கின் வாழ்க்கை சற்று அமைதியாகவேதான் சென்று கொண்டிருந்தது.அன்று கடையில் பார்த்த அழகியை அவன் அநேகமாக தினமும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனுக்கு புரியாதது ஒன்று. அன்று கடையில் அவனுக்கு நன்றி உரைத்து சிரித்து பேசியவள் அடுத்த சில நாட்களில் பேருந்து நிறுத்தத்தில் சந்தித்த போது முழுவதுமே அவனை அறியாதவள் போல நடந்து கொண்டது ஏன் ? அவனுக்கு தெரியவில்லை. இருப்பினும் ஏனோ அவளை அப்படியே விடவும் விரும்பவில்லை. சரி என்னதான் நடந்தது ?
கார்த்திக் அதோ பறப்பது வெள்ளை நிற காக்கை என்றாலும் இவள்தான், ஆமாமா! என்று சொல்பவள் ஆயிற்றே ! அதேபோல் தான் அன்று இவர்கள் இருவரையும் நகரும் படிக்கட்டில் பார்த்தவன் அதற்க்கு பல தப்பு அர்த்தங்களைக் கூறினான்.
எனக்கு தெரியும், உன் மேல எந்த தப்பும் கிடையாது. ஆனா நாம ஜாக்ரதையா இருக்கணும். உனக்கு தெரியலைன்னாலும் அத நாந்தான் சொல்லி தரணும். இங்க எத்தனையோ பேர் இருக்கும்போது அவன் மட்டும் உனக்கு எதுக்கு உதவிக்கு வர்ரான்? உனக்கு ஏன் சந்தேகமே வரல ?
இவன் அபாண்டமாக பேசுகிறான் என்று முதலில் மூளை சொன்னாலும், இறுதியில் வழக்கம்போலவே, அவள் முகம் சுருங்குவதை பார்த்தவன், வழக்கம்போலவே தன்னுடைய குரலை மாற்றிக் கொண்டு மெதுவாக மிக மெதுவாக பேசிய வார்த்தைகள் அவளின் மனதை நன்றாகவே மாற்றியது. விதி வலியது என்பதை இருவருமே அறிய மாட்டார்கள். இன்று கார்த்திக்கின் பேச்சை கேட்டுக் கொண்டு நிற்கும் இந்த பேதை ஒரு நாள், என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கௌசிக்கிடம் கேட்கப்போகிறாள்.
அப்போது இதே கார்த்திக் என்ன செய்து கொண்டிருப்பான்? இன்னும் கொஞ்சம் வசதி படைத்த பெண்ணிடம் வழிந்து கொண்டிருப்பான் என்பதை பாவம் இந்த சின்னப்பெண் அறிய மாட்டாள் .
அதற்க்கு அடுத்த சில நாட்களில்தான் அந்த திருமணம் நடந்தது. அந்த மணப் பெண் இவளுக்கு தோழி, என்றால் கார்த்திக்கிற்கு உறவுப் பெண். கார்த்திக்கின் உறவுகளும் இவளுக்கு பரிச்சயம் என்பதால் இவளால் அந்த திருமணத்தில் வெகு இயல்பாக இருக்க முடிந்தது. ஆனால் அதுவரை இவளை அழகாக இருக்கிறாள் என்று சொன்னவர்கள் சத்யாவை புகழ்ந்தது சற்றே பொறாமையை உண்டு பண்ணியது. ஆனால் கார்த்திக் எதை பற்றியும் கவலை படவில்லை. தன் தோழர்களுடன் இருந்தாலும் அவ்வபோது இவளையும் கண்களால் கபளீகரம் செய்து கொண்டிருந்தான், மற்றவர்களுக்கு தெரியாமல்.
இவளும் ஒரு மாதிரி வானத்தில் இருக்கும் தேவதை போலவே உணர்ந்தாள். எப்போது மற்றவர்கள் சத்யாவை பார்க்க ஆரம்பித்தனரோ அப்போதுதான் இவள் தரைக்கு வந்தாள் , வெறுப்புடன். இதை பற்றி எதுவும் தெரியாமல் சத்யா தன் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.
முத்துவை வழி அனுப்பியவள் தன் அறைக்குள் வந்து உடல் கழுவி தனது மொபைலை எடுத்து பார்க்கலானாள் . மனம் அதில் ஈடுபடவில்லை. மாறாக அவள் மனம் முத்துவையே நினைத்துக் கொண்டிருந்தது. அவன் கன்னத்தில் முத்தம் வைக்கும் அளவுக்கு தனக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? அவளுக்கே சிரிப்பு வந்தது. அதற்க்கு காரணம் அவன் சொல்லவில்லை என்றாலும் ருக்கு தான் சொல்லிவிட்டாளே ?
ஒரு நாள் மதிய வேளையில் மருத்துவமனைக்கு எதிரில் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு வாட்டசாட்டமாக இருந்த ஒருவன் ஒரு பெண்ணை கையில் ஏந்திக் கொண்டு பதட்டத்துடன் வந்தான். வருண் தான் வந்து அவளுக்கு மருத்துவம் பார்த்தான். காலில் பெருத்த காயம் ஏற்பட்டிருந்தது. அவள் சுடிதார் போட்டிருந்தாள். நர்ஸின் உதவியுடன் அதை எடுக்க முற்பட்ட போது அவள் வருணை அனுமதிக்க வில்லை . அப்போது சாப்பிட போகலாம் என்று அழைக்க வந்த சத்யாதான் அவளுக்கு மருத்துவம் பார்த்தாள் . அது வேறு யாரும் இல்லை ருக்குதான். ருக்குவும் அவள் அத்தை மகனும் வண்டியில் வந்தபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்தது. ருக்குவின் அண்ணனுக்கும் திருமணம் நடந்து விட்டது. அண்ணி வந்ததும் அண்ணனுக்கு தங்கையின் நினைவே சுத்தமாக இல்லாமல் போனது அவளின் கெட்ட நேரம்தான். திருமணமாகிய நாத்தனாருக்கு அண்ணி தந்த மரியாதை வேறு. இவளுக்கு தந்த மரியாதை வேறு. அவள் சொல்லும் அனைத்து வேலைகளையும் இவள் செய்தாள் தான். ஆனால் வீட்டு பெண் போல இல்லாமல், வேலைக்காரியாக. அதை அன்னையிடம் கூறியபோது அவளாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. பெரிய இடத்து பெண் என்பதால் தந்தையாலும் வாயை திறக்க முடியவில்லை. அண்ணிக்கு பெரியதாக எதுவும் தெரியாது என்றாலும் இவள் முத்துவை நினைத்துக் கொண்டு திருமணம் வேண்டாம் என்று சொல்வது எந்த விதத்தில் சரி என்பதே அவள் அண்ணனின் வாதம். இவள் ஒரு பாரம் என்பதை அவன் மனைவி அவனுக்கு விளக்கி இருந்தாள் , அவனுக்கு புரியும்படி மிக நன்றாகவே. இப்போது இத்தனை நல்லவனாக தங்கை வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று அக்கறையாக கூறும் இதே அண்ணன்தான் அன்று அவளை முத்துவுடன் சேர்க்க திட்டம் தீட்டினான். அதற்கென்று பெரிய காரணம் இல்லை. இப்போது அவன் அறிவுரை கூறுவதற்கும் பெரிய காரணம் எதுவும் இல்லை. சில பேர் அப்படித்தான். எந்த விஷயத்தையும் பெரியதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அந்தந்த நேரத்திற்கு ஏற்றபடி மாறிக் கொள்வார்கள். நல்லது தீயது பற்றி எல்லாம் பெரியதாக கவலை இல்லை. ஆனால் அவன் மனைவி எல்லாவற்றையும் சிந்தித்து முடிவெடுக்கும் புத்திசாலி. இல்லை என்றால் இன்று ருக்கு தன்னை மாற்றிக் கொண்டிருக்க மாட்டாள். ஆனால் என்னதான் புத்திசாலியாக இருந்தாலும் எல்லா எண்ணங்களும் எல்லா நேரங்களிலும் வெற்றி அடைவதில்லை . எத்தனை புத்தி சொல்லியும் திருந்தாதவள், மற்றவரின் ஒதுக்கலினால் திருந்துவாளோ என்றுதான் எண்ணினாள் . ஆனால் நினைத்தது வேறு நடந்தது வேறு. இவர்கள் அனைவரும் சொந்தக்காரரின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றனர். வழக்கம்போல இவள் வர வேண்டாம் என்று அண்ணி கூட சொல்லவில்லை. அண்ணனே சொல்லி விட்டான். அவமானமாக உணர்ந்த அவள் எப்பாடு பட்டாவது முத்துவிடம் இருந்து தாலியை வாங்கி விட வேண்டும் என்று அவன் வீட்டை அடைந்தவளுக்கு அதிர்ச்சி. ஏனெனில் அவன் சத்யாவின் புகைப்படத்தை வைத்து பேசிக் கொண்டிருந்தான், அதுவும் கொஞ்சும் மொழிகளில்.

அந்த நொடியே அவனுக்கென்று அவள் தந்த இதயம் சுக்கு நூறாக நொறுங்கியது. அதை தாங்காதவள் அப்படியே ஓடி சென்று அங்கிருந்த கிணற்றில் விழ போனவளை அங்கிருந்தவர்கள் தான் காப்பாற்றினார்கள். அதன் பின் அங்கிருந்த வள்ளிதான் இவளுக்கு அறிவுரை கூறினாள் .
வள்ளியின் கணவன் அவளை விட்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டான். அப்போதும் ஊர் முழுவதும் அவளைத்தான் தவறாக பேசியது. யாரையும் அவள் மதித்ததில்லை. அவள் உயிர் அவளின் மகளுக்காகவே. எப்பாடு பட்டாவது மகளை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும். மற்றவர்களுக்காக தன்னுடைய உயிரை அவள் விட தயாராக இல்லை . அப்படி விட்டால் தன்னை ஏமாற்றியவனுக்கே அது கொடுத்ததாக ஆகி விடும். அதற்க்கு பதிலாக ஒவ்வொரு அவமானத்தையும் ஒவ்வொரு படி கல்லாக மாற்றி வாழ்க்கையில் முன்னேறவே அவள் துடித்தாள். தன் மகளையும் முன்னேற்றவே அவள் விரும்பினாள். தன் உயிரை கொடுத்து, ரத்தத்தை கொடுத்து பெற்ற மகளை அவளே அழிக்க விரும்பவில்லை. தாய்மை அடைவது எத்தனை பெரிய விஷயம் என்பது அவளுக்கு தெரியும். தாய்மை என்பது வெறும் பெற்று போடுவதில் மட்டும் அல்ல. பொறுப்பாக வளர்பதிலும்தான் இருக்கிறது என்பதை அவள் நன்றாகவே அவள் அறிவாள் . சொந்த தந்தையுடனே சிறிது நேரத்திற்கு கூட பெற்ற மகளை விட்டு விட்டு போக முடியாத இந்த காலத்தில் அவளால் எப்படி பெற்ற மகளை பற்றி கவலை கொள்ளாமல் தன் உயிரை விட முடியும்? உயிரை கையில் பிடித்துக் கொண்டாள் . இதில் வியப்பு என்னவென்றால் மொத்த தப்பையும் செய்தவன் நன்றாகவே வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். ஏனென்றால் அவன் ஆண் பிள்ளை. அவன் அப்படித்தான் இருப்பான். சொன்னது வேறு யாரும் இல்லை, அவனை பெற்ற பெண்மணி யேதான். அவளேதான் அவனோட ஒழுங்கா குடித்தனம் பண்ண தெரியல. புருசனை முந்தானைல புடிச்சு வச்சுக்க தெரியல.. இன்னும் எத்தனையோ தெரியல....
சில நேரங்களில் சில மனிதர்களின் வார்த்தைகள்தான் நம்மை வாழ வைக்கும். வள்ளியின் வார்த்தைகள் இன்று ருக்குவை வாழ வைக்கிறது.

இங்க பாரு ருக்கு, பொம்பளைங்களுக்கு என்னதான் இருந்தாலும் அவவ புருசனோட இருந்தாதான் மதிப்பு. நீ இப்படியே அந்த முத்து பின்னாடியே சுத்திகிட்டு இருந்தீனா உனக்கு மருவாத இல்ல. அதுக்காக சாகறதுதான் எல்லாத்துக்கும் முடிவுன்னா இந்த உலகத்துல ஒரு உசுரு கூட நிக்காது. திங்க சோறு கூட கிடைக்காத நாயி நரி கூட வாழுதுங்க. நமக்கென்ன ? இவன் இல்லாட்டி உன்னால சந்தோசமா இருக்கவே முடியாதா ? வாழ்ந்துதான் பாரு!
மரியாதையா வீட்டுல பாக்கறவன கட்டிக்கோ. கட்டிக்க பிடிக்கலையா, வேற ஏதாவது படி. அந்த டாக்டருக்கும் முத்துவுக்கும்தான் பொருத்தம். உன்னைய தங்கச்சியாதான் பாக்கறேன், வேற விதத்துல பாக்க முடியலன்னு அவன்தான் சொல்லறான் . உனக்கு ஏன் புரியல? சரி, ஒரு வேளை அவன் உனக்கு தாலி கட்டினாலும் உன்ன பொண்டாட்டியா ஏத்துக்குவானா ? எல்லாத்தையும் யோசி ருக்கு. உனக்கு எதுன்னாலும் நானிருக்கேன். கவலை படாத . வீட்டுக்கு போ .
எதையெதையோ யோசித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி. அவள் அத்தையும் அத்தைமகனும் வந்திருந்தனர். விருந்திற்கு சென்றவர்கள், சிறிது நேரத்திலேயே வந்து விட்டனர். அத்தை அண்ணனை பார்த்து வெகு நாட்கள் ஆனதால் பார்க்க வந்திருந்தாள் . அப்படியே தன் மகன் வாங்கி இருந்த புது காரையும் காட்ட வந்தாள் . கிளம்பும் நேரத்தில், ருக்குவ கூட அனுப்பேன் . நாலு நாள்ல இவனும் ஊருக்கு போறான். எனக்கும் கூட ஒத்தாசையா இருப்பா . இவன் ஊருலேர்ந்து வந்ததுக்கப்புறம் கொண்டாந்து விடுவான்.
தந்தை இவள் முகத்தை பார்த்தார். இவளுக்கும் அந்த சிறு மாற்றம் தேவையாக இருந்ததால் சரி என்று சென்னைக்கு வந்தவள்தான்.
அவள் அத்தைக்கு பெண் குழந்தைகள் இல்லையென்பதால் இவளை கொஞ்சாத குறைதான். அதற்க்கு இன்னொரு காரணம், மகனுக்கு ருக்குவை கட்டி வைக்க ஆசை. அவளுக்கு மட்டுமா ? மகனுக்கும்தான். அவளும் ருக்கு இங்கு வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள் . மகன் அவளுக்கு தினமும் பூ வாங்கி வந்தான். அருகில் இருக்கும் கடையில் கை நிறைய கண்ணாடி வளையல் வாங்கி தந்தான். இன்னும் பட்டணத்து பெண்கள் போட்டுக் கொள்ளும் அழகு சாதனங்களை வாங்கி தந்தான். அன்னை இருக்கும்போதும் அவளை கள்ள பார்வை பார்த்தான்.
மகனின் மனம் அன்னைக்கு தெரியாதா? மகனிடம் நேரடியாகவே கேட்டு விட்டாள் .
உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே தாம்மா.
அது இருக்கட்டும் அவ ஒன்னும் பெரிசா படிக்கலையே ? ஒனக்கு பரவல்லையா தம்பி!
படிப்பு இருக்கட்டும்மா. உங்கள, என்ன, எங்களோட குழந்தைங்களை அன்பா ஆசையா பார்த்துக்கணும். அதுக்கப்புறம்தான் எல்லாமே. இவ நல்லா பார்த்துக்குவான்னு எனக்கு தோணுது. உங்களுக்கு அந்த நம்பிக்கை இருந்ததுன்னா அவ கிட்ட பேசுங்க.
ருக்குவிடம் கேட்டதற்கு, எனக்கு கொஞ்ச நாள் டைம் வேணும் அத்த.
அத்தைக்கு சப்பென்று ஆகி விட்டது. அண்ணன் மகள் என்பதை விட வேறு ஒன்றும் அவளிடம் பெரியதாக இல்லை. சரி பாப்போம் என்று ஊருக்கு சென்ற மகனுக்காக காத்து கொண்டிருந்தாள் . ஊருக்கு சென்றவன் அவன் கை பையுடன் சேர்த்து ருக்குவின் மனதையும் எடுத்து சென்று விட்டான். அது அவளுக்கே தெரியவில்லை. ஆச்சர்யமாக அவன் சென்ற அடுத்த சில தினங்களிலேயே அவன் எப்போது திரும்பி வருவான் என்று எதிர் பார்க்க தொடங்கினாள். அதுதான் காதல் என்பது அவளுக்கு புரியவில்லை. அதிசயமாக அவள் முத்துவை பற்றி சிந்திப்பதை கூட மறந்து விட்டாள் . அதுவும் அவளுக்கு மறந்தே போனது. அந்த அளவுக்கு அத்தை மகன் அவளை மனதில் ஆக்ரமித்திருந்தான். முத்து என்ன தன்னை ஒதுக்குவது? நானே அவனை நிராகரிக்கிறேன் என்று நினைத்தவளுக்கு, முத்துவின் இடத்தை சத்தமில்லாமல் அவன் நிரப்பினான். அதற்க்கு அத்தையும் ஒரு காரணம். அவளின் அன்பும் அரவணைப்பும்தான் அவளுக்கு வாழ்க்கை என்பது ஒரு சுவர்க்கம் என்று புரியவைத்தது. மறுநாள் தான் பிறந்தகத்திற்கு செல்ல வேண்டும் இவள். தம்பி, ருக்கு பாவம்டா எங்கியாவது வெளில கூட்டிட்டு போயா . வந்ததுலேர்ந்து வீட்டிலையே அடைஞ்சு கிடக்குது.
சரிம்மா,என்றவன் அன்று அவள் போட்டுக் கொள்ள சில சுடிதார்களை வாங்கி வந்தான்.
இது எதுக்கு ?
இந்த மாதிரி துணியெல்லாம் வண்டில ஏறும்போது மாட்டிக்கும், இல்ல கீழ விழுந்துருவ அதுக்குதான்.
அத்தனையும் அவளுக்கு பொருத்தமான அளவில் பொருத்தமான கலரில் இருந்தது. புடிக்கலன்னா சொல்லு வேற மாத்திக்கலாம்.
இல்ல பரவால்ல.
மேகத்தின் நிறத்தில் ரோஜா வண்ண பூக்கள் வரைந்த சுடிதாரை போட்டுக் கொண்டு வந்தாள். அது அவளுக்கு மிக பாந்தமாக இருந்தது. இருவரும் சேர்ந்து அருங்காட்சியகத்திற்கு சென்று வந்தார்கள். வரும் வழியில் தான் புதியதாக பாலம் கட்டிக் கொண்டிருக்கும் இடத்தில், வண்டி சறுக்கி இருவரும் கீழே விழுந்தனர். இவன் மிகவும் கவனமாகத்தான் வந்தான். எதிரில் ஒரு குழந்தை வரவும் இவனால் பாலன்ஸ் செய்ய முடியாமல் போயிற்று. அவளும் முதல் முறையாக வண்டியில் வருவதால், டக்கென பாலன்ஸ் செய்ய முடியவில்லை. அதில் வண்டி இவள் காலில் விழுந்தது. காலில் சதை பேந்து விட்டது. இவள் காலில் ரத்தத்தை பார்த்தவுடன் அவன் மிகவும் பதட்டமானான். அவன் அவளை கையில் ஏந்தி ஓடும் நேரத்தில் ஆணின் இதய படபடப்பை உணர முடிந்தது. இவள் பயத்தில் அரை மயக்கத்தில் இருந்தாள். ஆனால் அவனின் பதட்டம் அவளுக்கு புரிந்தது. தன் கையிலும் நெற்றியிலும் வரும் ரத்தத்தையும் அவன் கவனிக்கவில்லை. அவன் நெற்றியின் வியர்வையும், ரத்தமும் அவன்தான் தனக்கானவன் என்பதை புரிய வைத்தது. இவளுக்கு மருத்துவம் பார்த்தவள் அவனுக்கு கையிலும் நெற்றியிலும் மருந்திட்டாள். இவங்க இங்கையே இருக்கட்டும். போய் ஏதாவது பிரெஷ் ஜுஸ் வாங்கிட்டு வாங்க. ஆ!மிஸ்டர், நீங்களும் ஏதாவது குடிங்க. ரொம்ப சோர்வா இருக்கீங்க. இப்போது அவள் நார்மலாக இருந்தாள் . மெதுவாக தானே பாண்டை மாட்டிக் கொண்டாள், சத்யாவின் உதவியுடன். முத்து ஏன் இவளை இத்தனை விரும்புகிறான் என்பது ருக்குவுக்கு இப்போது புரிந்தது. அதிலும் அவளை அருகில் இருந்து பார்த்த போதுதான் அவளின் அக அழகும் புற அழகும் சேர்ந்து தெரிந்தது. அப்போதுதான் அவள் தன்னை பற்றிய விவரங்களைச் சொன்னாள் .

அது தவிர அவள் இன்னொன்றும் சொன்னாள் . முத்துவின் காதல். ருக்குவின் வார்த்தைகள் சத்யாவுக்கு இன்பத்தை தந்தது. மகிழ்ச்சியின் வெளிப்பாடு முகத்திலும் பிரகாசித்தது. ருக்குவின் அத்தை மகன் வந்ததும் மெதுவாக அவளுக்கு ஜூஸை ஊட்டினான் . பின்னர் இருவரும் விடை பெற்றனர். டூ வீலர் வேண்டாம் ஏதாவது ஆட்டோ புடிச்சு போங்க.
ஒகே டாக்டர். மறுபடியும் அவளை அலேக்காக கையில் தூக்கிக் கொண்டான். இப்போது சொல்லாமல் எப்போது காதலை சொல்லுவாள் ருக்கு? தூக்கியவனின் கன்னத்தில் நச்சென இதழ் பதித்தாள். இப்போது புரிந்திருக்குமே இதெல்லாம் யார் சொல்லிக் கொடுத்தது என்று ?
மீண்டும் வருவாள் தேவதை.................






 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-84

அன்றைய தினம் சத்யாவுக்கு மகிழ்ச்சியான தினமாகவே இருந்தது. உமாவுக்கு ஆசைக்கு இருந்தாலும் சத்யாவுக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைத்தது, ஆம் ! இன்று அவள் ருத்ராவை பார்க்க போகிறாள். அவளுக்கே தெரியாமல்.....அவளின் வாழ்க்கையின் பாதையை மாற்றி அமைக்க போகிறான் ருத்ரா , அவர்களின் சந்திப்பிற்கு நாமும் செல்வோம்............

அன்று பாஷ்யம் மதியத்திற்கு மேல்தான் வந்தார். அவர் வருவதற்குள் அனைத்தையும் ஒழுங்கு படுத்தி, நோயாளிகளின் பெயர்கள் அவர்களின் கோளாறுகள், டெஸ்ட் ரிப்போர்ட் எல்லாவற்றையும் அவருக்கு ஏற்றாற்போல் தயார் செய்து வைத்திருந்தாள். அவர் வருவதற்கு நேரமானாலும் வந்தவுடன் வேலைகள் விரைவாகவே நிகழும். அவர் கிளம்ப இரவு நேரமானதால் அவர் மகன் ருத்ராவே அழைத்து செல்ல வந்திருந்தான். அதை சத்யா சற்றும் எதிர் பார்க்கவில்லை. நடுவில் சிறிது ஆசுவாச படுத்திக் கொண்ட போது சத்யா உமாவுக்காக ருத்ராவுடன் ஒரு சிறு தேனீர் விருந்துக்கு சம்மதம் சொல்ல முடியுமா என்று கேட்டிருந்தாள் . அதை கேட்டவுடன் பாஷ்யத்திடமிருந்து அவளுக்கு ஒரு ஆழமான முறைப்பே பதிலாக கிடைத்தது. பட்டென்று வாயை மூடிக் கொண்டாள் . அவர் அவளை முறைத்தாலும் அதற்குத்தான் அவர் ருத்ரனை வர சொன்னதே. ஆனால் அதுதான் சத்யாவுக்கு தெரியாதே. அவரிடம் வேறு எதுவும் பேசாமல் வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்தாள். அவள் மூஞ்சியை உம்மென்று வைத்திருந்ததை பார்த்தவருக்கு சிரிப்புதான் வந்தது. இருப்பினும் அதே முறைப்பையே அவர் தொடர்ந்தார். மற்றவர்கள் இருந்தாலும் சத்யா மட்டுமே அவரிடம் உரிமையாக பேச முடியும். அவர் மிக சாதாரணமாக பழகுவது போல இருந்தாலும் மற்றவர்களால் அவ்வளவு சுலபத்தில் அவரிடம் பழகி விட முடயாது. மருத்துவர் பிரகாஷின் பரிந்துரையால்தான் தனக்கு மட்டும் இந்த சலுகை என்று நினைத்தாள் . அதற்கான காரணம் அவள் தந்தைதான் என்பதை அவளுக்கு யார் சொல்லுவார்கள்? பார்க்கலாம்.........

அன்று பாஷ்யத்தை பார்க்க அனுமதி பெறாமல் யாரோ ஒரு ஆண் மகன் வந்து நின்றதும் இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவன் ஒரு மருத்துவன் என்பது மட்டும் அவன் உடையில் இருந்தே அவள் நன்றாகவே தெரிந்து கொண்டாள் . அவன் மிக உயரமாகவே இருந்தாலும், இவளும் நல்ல உயரமானவள் என்பதால் அவன் கண்ணை நேராகவே பார்க்க முடிந்தது.

நீங்க?

ஐ ஆம் ருத்ரா , அங்கிருந்த பெண்களும் ஆண்களும் அவனையே பார்ப்பது போல முதலில் இவளுக்கு தோன்றியது. பின்னர்தான் அவர்களை போலவே தானும் வாயை பிளந்து நிற்பது புரிந்தது.

நான் எங்க அப்பாவை பாக்கலாமா ?

ப்ளீஸ் வெயிட் பண்ணுங்க, உள்ள ஒரு பேஷண்ட் இருக்காங்க. கேட்டுட்டு வரேன்.

ஓகே !

ப்ளீஸ் உள்ள வாங்க...டாக்டர் கூப்பிடறாரு. இவளுக்கு தான் பிரமிப்பு தாங்க முடியவில்லை. இருப்பினும் தந்தை மகனுக்கு நடுவில் அவள் வர விரும்பவில்லை.

பாஷ்யமே உமா இப்போ ப்ரீயான்னு கேட்டு சொல்லு. அவரின் கள்ள சிரிப்பில் இருந்து அவர் வேண்டுமென்றே தன்னிடம் பொய் கோபம் கொண்டார் என்பதை அவள் புரிந்து கொண்டாள் .

எஸ் டாக்டர் .

உமா எங்க டாக்டர் உன்கிட்ட ஏதோ பேசணுமாம். கொஞ்சம் இங்க காபின் வரைக்கும் வர முடியுமா ? இதோ லாஸ்ட் ஒரே ஒருத்தங்க மட்டும் இருக்காங்க. பார்த்துட்டு வந்துடறேன்.

ஓகே உமா .

அவளுக்கு தான் ருத்ரா யார் என்று தெரியுமே !!! அவள் குதிக்காத குறைதான். நான் உங்ககிட்ட குலுக்கலாமா ? ஆச்சர்யமாக பார்த்தவன் கையை நீட்டினான். என்னோட தம்பி விவேக் உங்க மருத்துவமனைலதான் வேல பாக்கறான் . உங்கள பத்தி பேசாத நாளே இல்ல . நான் உங்கள பார்த்துட்டேன் பேசிட்டேன் , எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. இன்னிக்கி உங்க கிட்ட கை குலுக்கினதை சொல்லி அவனை நான் வெறுப்பேத்துவேன். அவள் தன் நிலையில் இல்லாமல் பேசிக் கொண்டே போனாள் . பாஷ்யத்திற்கும் சத்யாவுக்கும் சிரிப்புதான் வந்தது. ஏதோ சினிமா ஹீரோவை போல அவள் ருத்திராவை பெருமை பேசிக் கொண்டிருந்தாள்.

அவளின் குழந்தை தனத்தை அவன் ரசித்தான். அவள் மட்டுமே பேசிக் கொண்டிருந்தாள். இவர்கள் இருவரும் ரவுண்ட்ஸுக்கு சென்றனர். பேசிக் கொண்டே இருந்தவளுக்கு அவனின் அமைதி அப்போதுதான் உறைத்தது . சட்டென நாக்கை கடித்துக் கொண்டவள்,

சாரி சாரி நானே பேசிக்கிட்டு இருக்கேன். நீங்க உங்க அப்பாவை பாருங்க என்று மெல்ல நழுவினாள் .

நாம ஒரு செல்பி எடுத்துக்கலாமா ?

அமைதியாக அவளுக்கு இன்ப அதிர்ச்சியை தந்தான்.

இருவரும் போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.

ரொம்ப ரொம்ப தாங்ஸ் டாக்டர்,...

தன் காபினுக்கு ஓடினாள். அவனுக்கு இது மிகவும் வியப்பாகவே இருந்தது. மனதில் சிரித்துக் கொண்டான்.

இவர்களும் வந்து விட்டார்கள்.

உமா எங்க ? அவங்க அப்பவே போய்ட்டாங்க.

ஓ ! அவ ஏதாவது தப்ப பேசி இருந்தா ரொம்ப சாரி டாக்டர்.

வாட் டாட் ? சத்யா என்ன பாக்க ஆசபடறதா சொன்னீங்க , நான் வேற பயங்கர ட்ரீம்ஸுல வந்தா. இங்க வேற ஏதோ போகுது?

இவள் ஆச்சர்யமாக பாஷ்யத்தை பார்த்தாள் .

அதனால என்ன? ஒனக்கு என்ன கேட்கணுமா அத கேளு !

என் கூட ஒரு கப் டீ ? கண்ணை விரித்து அவன் கேட்டதில் இவளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

ம்ம் பதில் தானாக வந்தது.

அவன் தந்தையை பார்த்தான். அவர் ஆமோதிப்பாக தலை அசைத்தார்.

ஓகே! வேற ஒருநாள் மீட் பண்ணிக்கோ ருத்ரா . இப்போ வில் லீவ்.

எஸ்...இருவரும் கிளம்பினர் . அவர்கள் சென்றவுடன், பின்னோடே முத்து வந்தான். ருத்திராவின் தோற்றம், இவளின் கன்ன சிகப்பை கண்டவனுக்கு மனம் ஏதேதோ தவறானவற்றை உணர்த்தியது.

டாக்டர் நான் ஊருக்கு கிளம்பறேன்.

ம்ம் சரி,, அவள் வேறு ஏதாவது சொல்லுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமே!

மறுபடியும் எப்ப வருவீங்க ?

தெரியல. சரி வரும்போது சொல்லுங்க. அவ்வளவே!கனத்த இதயத்துடன் ஊருக்கு புறப்பட்டான் முத்து.

புன்னகையுடன் அங்கு இவளுக்காக காத்திருந்த கௌசிக்குடன் இவள் செல்ல எத்தனிக்கும் போது , பார்க்கிங்கில் ருத்ரனை இவள் மறுபடியும் சந்தித்தாள். இருவருக்கும் ஒரு சிறு அறிமுகம் செய்து வைத்தாள் . கௌசிக்கின் தொழில் மூளையும், ருத்ரனின் மருத்துவ மூளையும் மிகவேகமாக வேலை செய்தது.

இந்த சமயத்துல இந்த பிரேக் வேண்ணுன்னு தோணிச்சு. அதனாலதான் பெரிய UD தரல . அதனால யாரும் கோபப்படாதீங்க. சீக்கிரமா அடுத்த எபிசொட் வரும்.

மீண்டும் வருவாள் தேவதை .........













 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-85

கௌசிக்கும், சத்யாவும், ருத்ராவின் அழைப்பை ஏற்றுக் கொண்டனர். அவர்கள் தனது அழைப்பை ஏற்று வீட்டிற்கு வர சம்மதித்தது அவனுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. உண்மையான நட்பை விரும்பியவனுக்கு அது வெகு விரைவில் கிடைக்க போகிறது. நாமும் அவனுடன் அவனது வீட்டிற்கு பயணப்படுவோம் நிம்மதியாக, பாஷ்யத்தை போலவே. அவருக்கும் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் பல மன பாரங்கள் இறங்க போகிறதல்லவா?

நாம் சிவாவை சந்தித்து வெகு நாட்கள் ஆகி விட்டதே?
கங்காவும் பாவம்தான். இன்று அவர்கள் இருவரும் சந்தித்தே ஆக வேண்டும். காதலும் செய்யவேண்டும். வாருங்கள் சிவாவுடன் சேர்ந்தே நாம் கங்காவை சந்திக்கலாம்.

கங்காவுக்கு இன்று ஏனோ தான் சிவாவை சந்திக்க போகிறோம் என்று உள் மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. போன் செய்து பார்க்கலாமா ? அத்தைக்கு தெரிந்தால் பிரச்னையாகிவிடும் என்று தன்னை அடக்கிக் கொண்டாள் . அவள் சனிக்கிழமை என்பதால் எந்த பரபப்பும் இல்லாமல் அமைதியாக இருந்தாள் .அவள் தோழியோ தன் குடும்பம் பள்ளி தோழிகளிடத்தில் பேசுவதிலேயே பயங்கர பிசியாக இருந்தாள் . எத்தனை நேரம்தான் போனையே பார்த்துக் கொண்டிருப்பது ? ஏதாவது தைத்து பார்க்கலாம் என்று தான் வாங்கி வைத்திருந்த துணிகளை பெட்டியில் இருந்து துணிகளை எடுத்தவள், தான் வரைந்து வைத்திருந்த நோட்டையும் எடுத்து எப்படி செய்வது என்று தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
உனக்கு எப்பையுமே படிப்புத்தாண்டி ! வெளில கடைக்கு போறேன் ஒனக்கு ஏதாவது வேணுமா ?
ம்ம்... வேண்டாம்.
வாயிலில் நிலா சிவாவை எதிர் கொண்டாள் . நீங்க போன்ங்கண்ணா , அவ ரூமூலதான் இருக்கா ,
தேங்க்ஸ்,
அங்கே இன்சார்ஜிடம் சொல்லிவிட்டு இவர்கள் அறைக்கு வந்தவனுக்கு, பாவாடை தாவணியில் இருந்தவளை அப்படியே பின்னிருந்து அள்ளிக் கொள்ள வேணுமாய் இருந்தது. இருந்தாலும் அவன் சிவா. அந்த அளவுக்கெல்லாம் துணிந்தவன் இல்லையே! அதனால் மெதுவாக சத்தம் இல்லாமல் அங்கிருந்த சாரில் அமர்ந்தான். சில நிமிடங்களில் தன்னிலை திரும்பியவளுக்கு அங்கே சிவாவை பார்த்தவுடன் ஆனந்தம் தான். இரு வாரங்களுக்கு முன்பு பார்த்தவர்கள் தான். இருப்பினும் எத்தனையோ ஜென்மங்களாக அவனை பிரிந்தவள் போல அவன் முதுகை கட்டிக் கொண்டாள் . ஓடி வந்து கட்டிக் கொண்டவளை பார்த்தவனுக்கு இனிமேல் தன்னை அடக்கி கொள்ள முடியாமல் போயிற்று. சில நிமிடங்கள் அவள் கையை பிடித்துக் கொண்டவன், அவளின் அணைப்பை ரசித்தான்.
அவன் முதுகின் மீது அவள் கன்னம் வைத்திருந்தது அவனுக்கு பிடித்திருந்தது. இருப்பினும் அவளின் முகத்தை பார்க்க வேண்டும்.
அதுவரை கங்கா , கங்கா என்று அவன் அழைத்தான். அதற்க்கு அவள் ம்ம் என்று மட்டுமே சொன்னாள் . சில நிமிடங்கள் தாமதித்தவன், சட்டென அவள் புறம் முகத்தை திருப்பினான். அதை எதிர் பார்க்காதவள் அவன் நெஞ்சின் மேல் மோதி நின்றாள் அவள் தாடையை தூக்கி மெல்ல அவள் முகத்தை பார்த்தான். அவளின் முக கலவரம் அவனையும் வேதனை படுத்தியது, இன்பமாக.
ரொம்ப மிஸ் பண்ணியா ??
ம்ம். தலை மட்டுமே ஆடியது.
சாரி .
பதில் வரவில்லை. அவளை எப்படியாவது சமாதான படுத்தவேண்டும் என்று தோன்றியது. நெற்றியில் மெதுவாக இதழ் பதித்து சாரி சொன்னான். பதில் இல்லை. ஆனால் அதை ரசிப்பது போல கண்களை மூடிக் கொண்டாள் .அடுத்து கண்கள்,கன்னங்கள் என்று முத்த ஊர்வலம் ஆரம்பமானது. அவளின் கண்களின் கண்ணீரை தனது உதடுகளால் சுத்த படுத்தினான். அவளின் உதட்டிற்கு வரும்போது, சட்டென தன் நிலை உணர்ந்தவன் அவளிடமிருந்து தன்னை பிரித்துக் கொண்டான். அவளுக்கும் அப்போதுதான் தன் நிலை புரிந்தது.
அவளிடமிருந்து தன்னை பிரித்துக் கொண்டவன் கண்ணில் அந்த திருமண பத்திரிக்கை தெரிந்தது.
யாரு இது ? அவளும் அந்த நிமிடம் தறிகெட்டு ஓடும் மனதை கட்டு படுத்த நினைத்தாள் .
அதற்குள் நிலவே வந்து விட்டாள் , அதுவா எங்க வகுப்பு பிள்ளைதான்னா . அதுக்கு தான் அடுத்த வாரம் கல்யாணம்.
நீங்க ரெண்டு எப்ப போறீங்க? கல்யாணத்துக்குத்தானே ? என்ன பரிசு குடுக்க போறீங்க ?
நான் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன். இவதான் வரமாட்டேங்குறா . நீங்களாவது சொல்லுங்க.நான் போய் முகம் கழுவிட்டு வரேன்.
நாசுக்காக அவர்கள் பேச இடம் தந்தாள். தன்னிடம் சொல்ல முடியாத விஷயங்களையும் அவளால் சிவா விடம்தான் சொல்ல முடியும் என்பதை நிலா நன்கு அறிந்திருந்தாள் .
என்ன என்ன ஆச்சு ? ஒனக்கு நல்ல தோழிதானே ?
ம்ம்ம். அவ எனக்கு கொஞ்சம் க்ளோஸ் தான்.
அப்புறம் என்ன ?
குனிந்து தன் உடுப்பை பார்த்தாள் . அப்போதுதான் அவனுக்கு தன் தவறே புரிந்தது. அவளுக்கோ தன் இல்லாமையும் இயலாமையும் போட்டி போட்டுக் கொண்டு கண்களில் மாலையாகி பூமியில் விழுந்திருந்தது.மெதுவாக கண்களை துடைத்து விட்டான்.அப்போதே அவளுக்கு ஒரு கிரெடிட் கார்டு வாங்கி தர வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
நிலாவும் வந்து விட்டாள் . நிலா வறியா? நாம போய் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்துக்கு போட துணியும் அவளுக்கு ஏதாவது கிப்டும் வாங்கிட்டு அப்பிடியே நைட் டின்னர் முடிச்சுட்டு வந்துடலாம்.
எனக்கு எல்லாம் இருக்கு அண்ணா . நீங்க அவளோட போயிட்டு வாங்க .
என்னோட அவளை தனியா அனுப்ப மாட்டங்களே ?
கலெக்டரை யாரு தடுக்க போறாங்க ?
ஹே! நிலா ப்ளீஸ் நீயும் வாடி .
ஓகே! கூப்பிட்டு சோறு போட்டு துணி வாங்கித்தரங்கன்னா யாருதான் வேண்டான்னு சொல்லுவாங்க. மூவரும் சேர்ந்தே ஷாப்பிங் செய்தார்கள். ஒவ்வொரு துணியும் சிவாவுக்கு ஓகேவா என்று அவனின் கண்ணசைவைக் கொண்டே தேர்ந்தெடுத்தாள் . இதை எல்லாம் பார்த்த நிலா வாய்குள்ளேயே சிரித்துக் கொண்டாள். பில் தரும்போது தன் பர்ஸை எடுத்தவளை சிவா தடுத்து விட்டான். அவள் எத்தனை சொல்லியும், அவன் கேட்பதாகவே இல்லை.
நீங்க கங்காவுக்கு வாங்கறது ஓகே, ஆனா நான் செலவு வைக்கறது தப்பு .
நீயும் எனக்கு சத்யா போலத்தான். அது மட்டும் இல்லாம, அவளோட பாதுகாப்பு, சந்தோஷம் எல்லாமே உன்னாலதான் நடக்குது. அவளோட சிரிப்புக்கு நான் எவ்ளோவேனா தரலாம்.
அவன் உள் மனதின் வார்த்தைகள் அவள் மறுப்பை அடக்கி விட்டது. மறுக்காமல் அவனின் பரிசுகளை வாங்கி கொண்டாள் . ஆனால், மணப்பெண்ணுக்கான பரிசை இருவரும் சேர்ந்தே வாங்கினர் .பெண்கள் இருவருமே மிகவும் சந்தோஷமாகவே இருந்தார்கள், என்றாலும் தந்தையிடம் கிடைக்காத அன்பும் சலுகையும் கங்காவிற்கு சிவாவிடம் கிடைப்பது, இன்னும் சந்தோசங்களை வாரிக் கொட்டியது. மழையாக கிடைத்த அவனின் அன்பும் காதலும் அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அதிலும் அவனின் இதழ் ஒற்றல்கள் அவளுக்கு கன்னங்களை சிகப்பாக்கியது. மீண்டும் மீண்டும் அதற்காக மனம் ஏங்கியது. தன்னுடைய திருமண நாளை அவள் வெகுவாகவே எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டாள் . அவளின் வெட்கத்தை தோழி அறிந்து விடாதபடி பெட்ஷீட்டால் முகத்தை இழுத்து மூடிக் கொண்டாள்.
சிவாவுக்கும் அதேதான். எப்படியாவது அன்னையிடமிருந்து விரைவிலேயே ஒப்புதல் வாங்கி விட வேண்டும் என்று தோன்றியது. அதற்க்கு முன் முத்துவையும் சத்யாவையும் ஒன்றாக சேர்த்து விட வேண்டும். சத்யாவின் மன நிலை அவனுக்கு தெரியும். ஆனால் முத்துவும் அதே போல்தானா ? தான் வெளி ஊர்களில் இருப்பதனால் தனக்கும் குடும்பத்திற்கும் இடையே பெரிய இடைவெளி வந்தது விட்டதோ என்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டான் முதன்முதலாக. அதுவும் நன்மையில்தான் முடியப்போகிறது சத்யாவுக்கு. பார்க்கலாம்....................................................

திருமணத்திற்கு பிறகு, ஊருக்கு திரும்பிய சரவணனை பார்க்க அவன் அவன் அன்னையும், தந்தையும் வந்திருந்தார்கள்.

நீங்கதான் பெத்தவங்கள பாக்கணும். ஆனா இப்பல்லாம் நாங்கதான் பிள்ளைங்க பின்னாடியே வர வேண்டி இருக்கு. பிள்ளை மனசு கல்லுன்னு சும்மாவா சொன்னாங்க ?

இந்தாங்க மாமா தண்ணீர் சொம்பை நீட்டினாள் செல்வி. அதை அவர் கையாலும் தொடவில்லை.மன தாங்கலை மனதிலேயே மறைத்துக் கொண்டவள்.
மதியத்துக்கு என்ன செய்யட்டும் அத்தை ?
உன் வீட்டுல விருந்துக்கா வந்துருக்கேன் ? அவன் தங்கச்சிக்கு வளைகாப்பு வச்சிருக்கோம். ஊரு உலகத்துல எல்லாருக்கும் பத்திரிக்கை வைக்கும்போது அவன்தான் அண்ணன். அவன்தான் முன்ன நின்னு செய்யணும். உன்ன கட்டிக்கிட்டதுல பாவம் அவனுக்குத்தான் எந்த சொந்தமும் நினைப்பிலேயே இல்லையே ?
அவங்க வெளில போயிருக்காங்க.
பெத்த புள்ளய கண்ணுல கூட காட்ட மாட்டேங்கறே ....ம்ம்.. திமிராக பேசினார், மாமனார்.
அவரை வீட்டுக்கு வர சொல்லவா?
மகாராணி அனுமதி வாங்கிட்டுதான் எங்க பையன் எங்களை பார்க்க வருவானோ ?
பத்திரிகையை வெளியில் எடுத்தவள், அவன் இல்லை என்றதும் டபக்கென உள்ளே வைத்துவிட்டாள் .
வாடி போகலாம். துண்டை உதறி தோளில் போட்டவர் இவளிடம் சொல்லிக் கொள்ளாமலே புறப்பட்டு விட்டனர்.
பெருமூச்சு விட்டு உள்ளே வந்தவளுக்கு வாந்தியும் சேர்ந்து கொண்டது. சொந்தங்கள் எத்தனைதான் இருந்தாலும் தான் மட்டும் அனாதையாகவே இருப்பதை போல உணர்ந்தாள். மசக்கைக்கு ஏற்றபடி, திண்பண்டங்களை சரவணன் வாங்கி வந்தான். அதை எந்த ரசனையும் இல்லாமல் உண்பவளை பார்த்ததுமே , தனது பெற்றோர் தான் இவளை வார்த்தைகளால் குதறி இருப்பார்கள் என்று தெரிந்து கொண்டான். அவன்தான் அவர்களை வழியிலேயே பார்த்து விட்டானே? ஆனால் பத்திரிக்கையை வாங்கவில்லை. அண்ணனாக இருந்து தங்கையை கவனிக்க வேண்டும் என்ற ஆசை மனதில் கொட்டிக் கிடந்தாலும், மனைவிக்கு பின்தான் எல்லாம் என்பதை மனதில் வைத்திருப்பவன் அவன், உடன் பிறந்தவளுக்கு அன்னை, தந்தை, புகுந்தவீட்டு உறவு என்று பலபேர் இருக்கிறார்கள். ஆனால் செல்விக்கு தான் மட்டும்தான்.வெறும் பிள்ளை பெரும் இயந்திரம் அல்ல தன் மனைவி. அவள் உள்ளமும் உயிரும் இருக்கும் பெண் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று நினைத்தான். அதனால் தான் அவன் தன் மனைவி உண்டாகி இருப்பதை யாரிடமும் சொல்ல விரும்பவில்லை.
அவன் நினைப்பதையே செல்வியும் ஒத்துக் கொள்வாளா ?


மீண்டும் வருவாள் தேவதை...............
 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-86


தன் மனையாளை வீடு தேடி வந்து அவமானப்படுத்தியது பெற்றோராகவே இருந்தாலும் சரவணனால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் செல்வியை அப்படி காதலித்தான்.
காதலுக்கு கண்ணும் இல்லை, பணம் காசும் தேவை இல்லை. மனம் தான் முக்கியம். கணவன் திருமண நாளைக்கு தங்க வளையும், பெரிய ஹோட்டலில் ட்ரீட்டும் தான் தர வேண்டுமா என்ன? ஒரு முழம் மல்லிகையும் கண்ணாடி வளையலும் இன்பம் தராதா? மனைவியை யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அவர்கள் என்னை பெற்றவர்கள், அவர்கள் என்ன சொன்னாலும் நீ பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவன் சரவணன் அல்ல. அவனை பொறுத்தவரை யாராக இருந்தாலும் செல்வியை தவறாக நடத்த கூடாது. அவள் ஏற்கனவே யாரும் இல்லாதவள். அவளுக்கு அப்பாவாக, அண்ணாவாக , கணவனாக எல்லாமாகவும் இருக்கவே அவன் விரும்பினான். அவனின் முதல் செல்ல குழந்தையும் அவள்தான். அவள் மீது தன் உயிரையே வைத்திருந்தான். தன் குடும்பத்தில் இருந்து அவளுக்கு அளவில்லா அன்பும் பாசமும் கிடைக்கும் என்று நினைத்தவனுக்கு பெரிய ஏமாற்றமே. தன்னை மகனாக பார்த்தவர்களுக்கு தானே ஒரு பண மிஷினாக்கி பெண் வீட்டாரிடம் பணம் புடுங்க பெற்றவர்கள் நினைதிருந்தது அவனுக்கு தெரியாமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.
ஒனக்கு குழந்தை இல்லன்னுதானே அவங்க இத்தனை நாளா கரிச்சாங்க! இப்ப நீ புள்ள பெக்க போற! அவங்க சொன்ன வார்த்தையை திரும்பி வாங்க முடியுமா ? ஏதேதோ அவன் கத்தி கொண்டிருந்தான். இவள் எதுவும் பேசவில்லை.

நான் போய் நறுக்குன்னு நாலு வார்த்தை அவங்கள கேட்டுபுட்டு வாரேன் . அப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கும்.
அப்ப நான் உண்டாகினத சொல்ல போறதில்லையா ?
இல்ல.
அவள் முகம் சுருங்கியது. அதை பார்த்த இவன் மனம் சுருங்கியது.
ஏய்! என்ன பாருடி!!! முகம் தூக்கி பார்த்தாள் .
இது நம்மளோட சந்தோஷம்டி. இதை ஒனக்கு யாரு நல்லது நினைக்கறாங்களோ அவங்ககிட்டத்தாண்டி சொல்லணும்.
அவங்க உன்னைய பெத்தவங்கடா .
அதனால?
அவங்ககிட்ட சொன்னா சந்தோசப்படுவாங்கடா !
அப்படியா ?
இல்லையா!
இல்ல.
நீ ஏண்டா அப்படி நினைக்கற ?
சரி, அவங்க சந்தோசப்படறவங்களாவே இருக்கட்டும். ஆனா எனக்கு வேணாம்.
என்னடா இப்படி பேசற ?
வேற எப்படி பேசறது? குழந்தையல்லாம் அப்புறம்தான். எனக்கு முதல்ல நீதான். அவங்களுக்கு நீ வேணாம், ஆனா நீ பெக்க போற புள்ள வேணும். அப்படிப்பட்டவங்க எனக்கு வேணாம்.
நான்தான் உன்னைய அவங்ககிட்டேர்ந்து பிரிச்சுட்டேன். அவங்க சொல்லறது கரெக்ட்டுதான்.
சீ! நான் ஒன்னும் அவங்களுக்கு எதிரி இல்ல. நீ இப்படிலாம் யோசிக்காத.
சரி , நீ என்னவேணா செய். அவங்களுக்கு நான் வேணும் வேணாங்கறது பத்தி எனக்கு கவலை இல்ல. என் குழந்தைக்கு எல்லாரும் வேணும். தாத்தா, பாட்டி அத்தை , சித்தப்பா, எல்லாரும். எல்லாரும் வேணும். ப்ளீஸ் டா..
தீர்மானமாக ஆரம்பித்தவள் கெஞ்சலில் நிறுத்தினாள் .
சரி, இப்ப வேணாம், முதல்ல தங்கட்டும். அஞ்சு மாசமாவது ஆகட்டும். அப்புறமா சொல்லிக்கலாம்.
சரி, உதட்டை கடித்தவள்,
எப்படியும் முத்தண்ணனுக்கு தெரியுமே ?
அவன் நம்மள மீறி யாருகிட்டயும் எதுவும் சொல்ல மாட்டான்.
என்னடி? மண்டைய ஆட்டறதே சரி இல்ல. நான் போய் அவனை பார்த்துட்டு , ஏதாவது காசு கிடைக்குமான்னு பார்த்துட்டு வரேன்.
அரைகுறையாக தலையை ஆட்டினாள்.
ஒன்னும் இல்ல. ஏற்கனவே நம்ம நிலைமை சரி இல்ல, இதுல இது வேற, குனிந்து வயிற்றை தொட்டு பார்த்தாள் .
அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ நல்லா சாப்பிடணும், தூங்கணும், சந்தோசமா இரு. சரியா ?
பதில் இல்லை .
சரியா? அழுத்தி கேட்டான்.
சரி .
சத்து மாத்திரை போட்டுக்கிட்டியா ?
இல்ல .
நீ முதல்ல அத போடு.
நீங்க அத்தை மாமாவை பாக்க போகலியா ?
நாளைக்கு போகிறேன். இப்ப நான் இருக்கற நிலமைல அங்க போனா ஏதாவது பிரச்னை ஆகிடும்.
சரி,
நீ முதல்ல மாத்திரையை போடு.
போன் அழைத்தது ,
என்ன முத்து ?
டேய் சரவணா இங்க அப்பாவுக்கு ரத்த வாந்தியாம். ஒடனே வாடா,
இதோ வரேண்டா
செல்வி! முத்து அப்பாவுக்கு ரத்த வாந்தியாம் . நான் போகிறேன். நீங கதவ சாத்திட்டு பத்திரமா இரு. பக்கத்து வீட்டு அக்காவை துணைக்கு கூப்பிட்டுக்கோ சொல்லிக் கொண்டே சைக்கிளில் பறந்தான்.
முத்து இவன் வந்ததும், இருவருமாக சேர்ந்து அவசரமாக ஜீப்பில் அவரை அள்ளி போட்டு கொண்டு ஓடினர். அவர் மனைவியும், பின்னாலே ஓடி வந்தார்.
அவரை கண்ணாடியில் பார்த்த சரவணன்,
டேய் , அவங்கள வண்டில ஏத்திக்கோ , நான் சைக்கிள்ல வரேன்.
முத்து சற்று தயங்கியபடியே தன் பாட்டியை பார்த்தான், பயத்துடன்.
டேய் இதெல்லாம் யோசிக்க இது நேரமில்லடா. அவங்கதான் முக்கியம்.
சரி.
அம்மா நீங்க வண்டில ஏறுங்க, நான் பின்னாலேயே வரேன்.
கண்ணீருடன் வண்டியில் ஏறினாள். பிள்ளையை பற்றிக் கூட கவலைப்படாமல், இவர்களையே வயிறு எரிய பார்த்துக் கொண்டிருந்தாள், அந்த கிழவி.
ஆச்சியும் மருத்துவமனைக்கு வந்தார்,
காலையில் இருந்து ஏதேதோ டெஸ்டுகளை எடுத்தனர். யாரும் எதுவும் சொல்லவில்லை. படபடப்புடனே இருந்தார்கள். அவன் சித்தியோ ஒன்றும் சொல்ல முடியவில்லை . கணவனை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தவர்,
சட்டென,
சரவணா புள்ளைய அங்கேயே விட்டுட்டு வந்துட்டேனே . நீ போய் கொஞ்சம் கூட்டிட்டு வந்துடுப்பா .
மூத்த மகன் தானிருந்தும், சரவணனிடம் அவள் உரிமையாக கேட்பது இவனுக்கு சங்கடமாகத்தான் இருந்தது. தான் எதற்காக பயப்படுகிறோம் என்பதே தெரியாமல் பயந்து கொண்டிருந்தான் முத்து.
அவன் கிளம்பிய சிறிது நேரத்தில்,
சித்தி நீங்க எதையுமே சாப்பிடல. இந்த காப்பியாவது குடிங்க என்று காபியுடன் வந்தான்.
இல்லப்பா பரவால்ல. அவருக்கு என்ன ஏதுன்னு தெரிஞ்சாதான் என்னால எதையுமே சாப்பிட முடியும், மெதுவாக கண்ணீரை துடைத்துக் கொண்டார். முத்துவுக்கு என்ன சொல்வது என்பதே தெரியவில்லை. அவரிடம் அவனால் அன்னையை காண முடியவில்லை. இருந்தாலும் அப்பாவின் மனைவியாக பார்க்க முடிந்தது. அவர் மீது எந்த தவறும் இல்லை என்பதை பெரியவன் ஆனதும் புரிந்து கொள்ள முடிந்தது. தான் சகோதரன் இருந்தும் யாரும் இல்லாமல் வளர்ந்த தம்பியை பார்க்கும்போதுதான் சில சமயங்களில் சங்கடமாக இருக்கும்.இருந்தாலும் அவன் ஆச்சியை சங்கடபடுத்த விரும்பவில்லை. அதனால் தன் மன வருத்தத்தை தன்னுள்ளே மூடிக் கொண்டான்.
சற்று நேரத்தில்,
இங்க ஒக்கார கூட இடமில்லை. நீங்க வீடு போங்க ஆச்சி, நா எதுன்னாலும் போன் பண்ணறேன். இந்தாங்க என்னோடது,என்று தனது போனை அவளிடம் தந்தான்.
சரி, நான் வேணா ராவுக்கு சாப்பாடு கொண்டாறேன் என்று கிளம்பி விட்டார். அவருக்கு மருமகன் மீது எந்த பிடிப்பும் இல்லை என்றாலும் மனதுக்கு கேட்கவில்லை.
வீடு சென்றவர் அடுத்த சில மணி நேரங்களில் திருப்பி வந்தார், சாப்பாட்டு கூடையுடன்.
ஆனால் யாருமே சாப்பிடும் மூடில்தான் இல்லை .
சரவணன்தான் , முத்து நம்ம டாக்டருக்கு சொல்லலாமா ?
எதுக்குடா ?
இல்லடா ,அவங்க வந்து பார்த்தா சரியா இருக்குன்னு தோணுது, சொல்லிக் கொண்டே சத்யாவுக்கு அழைத்தான்.
முதல் ரிங்கிலேயே அவள் எடுத்து விட்டாள் .
ஏண்டா நாந்தான் அவளுக்கு சொல்ல வேண்டான்னு சொல்லறேன், நீ பாட்டுலும் அவளுக்கு போன போட்டா என்னடா அர்த்தம் என்று திட்டிக் கொண்டே காலை கட் செய்தான்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் வந்து நின்றாள் கௌசிக்குடன் சத்யா.
முத்து எதிர்பார்த்தபடியே.

மீண்டும் வருவாள் தேவதை.................
 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-87
அவளை பார்த்தவனுக்கு மனதில் ஒரு நிம்மதி. இனி எல்லாவற்றையும் அவள் பார்த்துக் கொள்வாள்.
முத்துவை முறைத்துக் கொண்டே சரவணனிடம், என்னாச்சு? இப்ப எப்படி இருக்காரு ?
என்னன்னே தெரியல டாக்டர், எதுவுமே சொல்ல மாட்டேங்கறாங்க. டாக்டரும் எதுவும் சொல்லல, நர்சம்மாவும் எதுவும் சொல்ல மாட்டேங்கறாங்க,
அதற்குள், நர்ஸ் வெளியே வந்தார்.
மேடம், நானும் டாக்டர்தான், என் பேரு சத்யா, மிஸ்டர் நல்ல சிவத்தோட மருமகள்,
அவளை ஏற இறங்க பார்த்தவள்,
அதுக்கு ?
இல்ல இப்போ அவரு எப்படி இருக்காரு தெரிஞ்சுக்கலாமா ?
உங்க இஷ்டத்துக்கு எல்லாம் இங்க பதில் சொல்ல முடியாது, எதுவா இருந்தாலும் டாக்டர் வருவாங்க அவங்க கிட்ட பேசுங்க.
எப்போ வருவாங்க?
வரும்போது வருவாங்க.
அவளின் திமிரான பதில் கௌசிக்கிற்கு ஆத்திரத்தை தந்தது. பல்லை கடித்தான். அவன் மூக்கு சிவப்பதை பார்த்த சத்யா ப்ளீஸ் காம் டௌன் கௌசிக்,
வாட் ஐஸ் திஸ் சத்யா ? இங்க எல்லாம் இப்படித்தான் இருக்குமா ?
இது கவர்மெண்ட் ஹாஸ்பிடல், இங்க எல்லாம் இப்படித்தான் .
அப்ப எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தாங்க?
பெரிய ஹாஸ்பிடல் போக பணம் வேணாமா ?
அதான் நீ இருக்கியே ?
அதெல்லாம் இப்ப பேச முடியாது. அப்புறமா சொல்லறேன் என்றாள் சத்யா.
நீண்ட பெரிய மூச்சுகள் வெளி வந்தது. மிகவும் கடினப்பட்டு தன்னை அடக்கி கொண்டான்.
ஓகே , நீ கொஞ்ச நேரம் கார்ல இரு. டாக்டர் வந்ததும் நான் கூப்பிடறேன்.
கோபத்தை அடக்கி கொண்டு வெளி வந்தான். இருந்தும் வெகு நேரமாகியும் டாக்டர் வந்தபாடில்லை. அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். அவர் மனைவியும் அழுதுகொண்டே தான் இருந்தார்.
நீங்க எதுக்கு இப்ப அழறீங்க ? தைரியமா இருங்க. நாங்க எல்லாம் இருக்கோம்.
இல்லங்க உங்களுக்கு அவரை பத்தி தெரியாது. அவரு ஒரு அப்பாவி. எதுக்கும் யாருகிட்டயும் அதிர்ந்து கூட பேச மாட்டாரு. அவங்க அம்மா என்ன சொன்னாலும் வாய கூட திறக்க மாட்டாரு. எங்க அவங்க அம்மாவுக்கு புடிக்காதோன்னு சாப்பாடு போடக் கூட என்ன கிட்ட நெருங்க விட்டதில்லை. அதனாலதான் இன்னிக்கு இப்படி ரத்த வாந்தி எடுத்து...... புடவையால் வாயை பொத்தி அழுதார்.

அவங்க அம்மா நாளெல்லாம் என்ன திட்டுவாங்க, வேல வாங்குவாங்க, ராவுல வந்து யாருக்கும் தெரியாம என்ன சமாதான படுத்தவாரு. நான் இவன் புள்ளையாண்டிருந்தப்போ , கால் வீங்கி கெடக்குன்னு வந்து எண்ணை தடவி புடிச்சுவிடுவாரு. பாவி தம்பி பண்ண தப்புக்கு தண்டனையா என்ன கட்டிக்கிட்டாரு. எந்த சொகத்தையுமே மனுஷன் அனுபவிக்கவே இல்ல. எந்த தப்புமே பண்ணாதவருக்கு எதுக்கு இந்த கஷ்டம். அழுதுகொண்டே இருந்தார். பாவம் இவர் சொன்ன எதுவுமே ஆச்சிக்கு காதில் விழவே இல்லை. மாறாக தன் மருமகனை மயக்கி திருமணம் செய்து கொண்டவள் மீது அவருக்கு ஆத்திரமே வந்தது. இவள் இருக்க வேண்டிய இடத்தில தன் மகள் இருந்திருந்தால் இந்த நிலையே வந்திருக்காது என்று எண்ணினார். அதுவே ஆத்திரமாக வெளி வந்தது .

நல்ல சிவத்தை மயக்கி கல்யாணம் பண்ணியே, அவரை சந்தோசமாவா வச்சிருந்த ? உன்னோட படுக்க சொ கத்துக்கு காலம் கெட்ட காலத்துல ஒரு பையனை பெத்துக்கிட்ட. என் மருமவனுக்கு என்னடி சொகத்தை தந்த ? இப்ப வந்து நீலிக்கண்ணீர் விடற. அப்பனையும் புள்ளையையும் பிரிச்சவளுக்கு, இப்ப மட்டும் என் பேரன் வேணுமா ? ஆச்சி பேசிய பேச்சுக்களை எல்லாம் பொறுமையாகத்தான் கேட்டுக் கொண்டிருந்தார் அவர். அவருக்கு பல பேச்சுக்களை கேட்டு கேட்டு பழக்கம் போலும். எப்படித்தான் அவரால் எதுவுமே பேச முடியாமல் இருக்க முடிகிறதோ ? ஆனால் இதை எல்லாம் சத்யவால்தான் கேட்க முடியவில்லை.
போதும் நிறுத்துங்க ஆச்சி. இது ஆஸ்பத்திரி, எதுவும் பேச வேணாம்.
இப்ப பேசாம ? வேற எப்ப பேசறது? இத்தனை வருசமா என் நெஞ்சுல பூட்டி வச்சிருந்தேன் . இப்பயாவது நான் பேசியே ஆகணும்.
இல்ல , இல்ல ஆச்சி நீங்க அவங்கள ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க. வேணாம். எதுவும் பேச வேணாம்.
அவளும் அமைதியாகத்தான் சொல்லி பார்த்தாள் . அவள் கணவனோ ஏதோ தனக்கும் இதற்கும் எதுவுமே சம்மந்தம் இல்லாதது போல நடந்து கொண்டான். அதுதான் அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
நான் சொல்லறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. உங்க மருமகன், சாரி இவங்க வீட்டுக்காரர் அப்படி என்னதான் தப்பு பண்ணிட்டார் ? இவங்க மேல என்னதான் தப்பு ?
டாக்டர் நீங்க எதுவும் பேசாதீங்க சரவணன் கெஞ்சினான்.
இல்ல சரவணன், நானும் இப்ப பேசித்தான் ஆகணும். அது இவங்க சம்மந்த பட்ட விஷயம் மட்டும் இல்ல. இதுல எங்க அம்மாவும் சம்மந்த பட்டிருக்காங்க . ஏதோ ஒரு விதத்துல நாங்க எல்லாருமே இதுல சம்மந்த பட்டிருக்கோம். எங்கையோ யாரையோ கல்யாணம் பண்ணிருக்க வேண்டிய நான் இன்னிக்கு இங்க இவருக்கு மனைவியா நிக்கறேன். ஆனா அது கூட இவருக்கு தெரியல. நானு, எங்க அம்மா, இவங்க எல்லாருமே இவங்க குடும்பத்தால் பாதிக்க பட்டிருக்கோம் . கண்களில் வழிந்த நீரை உள்ளிழுத்தவள்,
சொல்லுங்க உங்களுக்கு என்னதான் பிரச்னை ? இவங்களோட கல்யாணமா, இல்ல இந்த புள்ளையா ? எது ?
ஆச்சி வாயடைத்து நின்றாள் .
இவங்க கல்யாணம் அதுக்கும் இவங்களுக்கும் சம்பந்தம் இல்ல. அவரோட தம்பி பண்ண தப்ப, சிலுவைய தன் மேல ஏத்துக்கிட்டாரு என் மாமனார். அதுவும் ஒண்ணுமே தெரியாத அந்த சின்ன பொண்ணு செத்துடக் கூடாதுன்னு. அதுல இவங்க தப்பு என்ன ? இவரோட சித்தப்பா பண்ண பொறுக்கி தனத்துக்கு என்னோட மாமனார், எங்க அப்பா ரெண்டு பேரும் ப்ரைஸ் பே பண்ணிருக்காங்க. நல்லவேளை எங்கப்பா , இந்த ஊருல இல்லாம அங்க வந்துட்டார். அதனால் அவரால சந்தோசமா தன்னோட துணையோட இருக்க முடிஞ்சது. ஆனா பாவம் என் மாமனார், உங்க கிட்ட , அந்த கிழவிகிட்டன்னு மாட்டிகிட்டு, இன்னிக்கு இந்த நிலமைல இருக்காரு. அடுத்து இந்த பையன். தாலி கட்டின பொண்டாட்டிக்கிட்ட ஒரு புருஷன் போக கூடாது, புள்ள பெத்துக்க கூடாது, இல்ல ? ஒரு பொண்டாட்டிக்கு என்ன தேவைன்னு உங்க பேரனுக்கு தெரியாது , உங்களுக்குமா தெரியாது ? உடல் புணர்தல் கணவன் மனைவிக்குள்ள இருக்கறதுக்காகத்தான் கல்யாணமே. அதுல என்ன தப்பு உங்களுக்கு தெரிஞ்சது ?
யாரோ என்ன பேத்தியா , மருமகளா பாக்க முடிஞ்ச உங்களால, இவங்கள ஏன் உங்களோட மகளா பாக்க முடியல ? உங்க மகளோட இடத்தை இவங்க பிடிச்சுட்டதா நீங்க நினைக்கறீங்க அதனால தான் உங்களுக்கு இவங்க மேல இவ்ளோ கோவம்.ஏற்கனவே அப்பாவும் பையனும் பிரிஞ்சு இருகாங்க. இனிமே வேணாம்.
முத்து எதையும் புரிஞ்சுக்க மாட்டாரு. ஆனா நீங்க பெரியவங்க. நான் ஏதாவது தப்பா சொல்லி இருந்தா என்ன மன்னிச்சுடுங்க, கை கூப்பினாள் .
ஆச்சி இடிந்து பொய் அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து கொண்டாள் .
ஆச்சி, என்ன என்ன ஆச்சு முதலில் பதரியது, நல்ல சிவத்தின் மனைவி, தேவி தான்.
இந்தாங்க தண்ணி குடிங்க என்று எடுத்துக் கொடுத்தாள் . நான் என்னலாம் சொல்லிட்டேன்?
இவர்கள் யாரும் பேசுமுன் டாக்டர் வந்தார். சரவணன் கால் கௌசிக்,
மருத்துவரின் பின்னோடே ஓடினாள், சத்யா.
டாக்டர்,
ஐ அம் டாக்டர் சத்யா, வர்கிங் இந்*** ஹாஸ்பிடல். அசிஸ்டன்ட் ஆப் டாக்டர் பாஷ்யம் தி கிரேட் நியூரோ .
ஓ ! டாக்டர் பாஷ்யத்துகிட்டய்யா இருக்கீங்க ?
இவரு உங்களுக்கு ?
மாமனார்.
ஓகே . மருத்துவ பாஷையில் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டார்கள். அதில் கௌசிக்கிற்கும் அனுபவம் இருந்ததால் அவனுக்கு சில விஷயங்கள் புரிந்தது.
எக்ஸ்கியூ ஸ்மீ டாக்டர் என்றவன்,
சத்யா நாம ருத்ரா கிட்ட கேட்கலாமா ? அவன் காஸ்ட்ரோ தானே? அவன் கூறியது மருத்துவரின் காதில் விழுந்திருக்க வேண்டும்.
இங்க பெரிசா வசதி எதுவும் இல்ல. நீங்க வேண்ணா வர எங்கையாவது கூட மருத்துவம் பார்த்துக்கலாம்.
ஓகே டாக்டர், எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்களேன். நான் பேசிட்டு சொல்லறேன். அதுக்கு முன்னாடி அவரோட கேஸ் ஹிஸ்டரி நான் ஒரு தடவ பாக்கலாமா ?
ஷியூர் . மருத்துவர் இவர்களுக்கு தந்த மரியாதையில் பெட்டி பாம்பாக மாறினாள் அந்த நர்ஸ். இதுதான் கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதோ ? முத்துவும் இவளது வேகமான நடவடிக்கையில் பிரமித்துதான் போனான்.
அவசரமாக ஒரு தனியார் ஆம்புலன்ஸை கூகிளில் பார்த்து அழைத்தான் கௌசிக். அதற்குள் சத்யா ருத்திராவிடம் பேசிவிட்டாள் . மருத்துவரும் இவர்கள் கிளம்புவதற்கு தேவையானதை செய்து கொடுக்க சொல்லி விட்டார்.
ஆனால் பாவம் டிஸ்சார்ஜ் சம்மரி எப்படி தயார் செய்ய வேண்டும் என்பது தான் தெரியவில்லை அங்கிருந்த பெண்ணுக்கு. அதை பார்த்த கௌசிக்கிற்கு தலை சுற்றியது.
ப்ளீஸ் நீங்க கொஞ்சம் எழுந்துக்கறீங்க ப்ளீஸ். இவன் தமிழும் அந்த பெண்ணிற்கு புரியவில்லை. ஆனால் பயந்து கொண்டு தானே எழுந்து நின்றது. அடுத்த இரண்டாவது நிமிடம் அவனே தயார் செய்து விட்டான். அவன் நீட்டியதும் பயத்தில் கையில் இருந்து பிடுங்கி கொண்டு ஓடியது அந்த பெண். அதை பார்த்த சத்யாவுக்கு அந்த நிலையிலும் சிரிப்பு வந்தது.
பாவன்டா அந்த பொண்ணு!!
ஆம்புலன்சில் சிவத்தின் மனைவி தேவி , வந்தார். ஜீப்பில் முத்துவும் அவன் தம்பியும் வந்தனர். கௌசிக்கும் சத்யாவும் அவர்களை பின் தொடர்ந்து வந்தனர்.
வாட் ஐஸ் திஸ் சத்யா ? அவரு யாரு? பெரியப்பா எதுக்கு இப்படி பட்ட ஆளுக்கு உன்ன கல்யாணம் பண்ணி வச்சார் ? ஏமாத்திட்டாங்களா ? உன்னோட லெவல் என்ன அவங்க? என்னால எதுவுமே யோசிக்க முடியல, சிவா ரிஷி எல்லாரும் எப்படி சும்மா இருந்தாங்க ?
கௌசிக் நீ பயப்படற அளவுக்கெல்லாம் ஒன்னும் இல்ல. என்னோடது கட்டாய கல்யாணம். கோவில்ல இருக்கும்போது திடீர்னு அவரு எனக்கு தாலி கட்டிட்டாரு. பட் எனக்கு அவரை புடிச்சிருக்கு. நீ ரொம்ப யோசிக்காத ஓகே, நாம முதல்ல என்னோட மாமனாரை அட்மிட் பண்ணனும். ஸ்கேன் எடுக்கணும். எதுவும் பயப்படற அளவுக்கு இருக்காதுன்னுதான் தோணுது.
பாத்தியா இருக்கற டென்ஷன்ல வீட்டுக்கும் சொல்லல, பாஷ்யம் சாருக்கும் சொல்லல.
இருவருக்கும் போனில் அழைத்து விஷயத்தை சொன்னாள் . உடனடியாக ருத்திரா இருக்கும் மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லபட்டார். காலையில் இருந்து எந்த மருத்துவமும் பார்க்கப்படாத நிலையில் அவருக்கு, இங்கு எல்லாமே வேகமாகவே நடந்தது என்றே கூறலாம்.
முத்துவுக்கும், தேவிக்கும் அத்தனை பெரிய மருத்துவமனையும் அவர்களின் பேச்சும், பிரமிப்பை தந்தது.
சத்யா தனியாக இருக்கும்போது, தேவி தன் பயத்தை வெளிபடுத்தினாள் .
டாக்டர் இங்க ரொம்ப செலவாகுமே , எங்கிட்ட அவ்வளவு ரூவா இருக்காதே! இந்த தாலியும் கம்மலும் குடுத்தாலும் பத்தாதே .எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர்.
ப்ச், சித்தி, நீங்க எதுக்கு கவலை படறீங்க? அவர் என்னோட புருசனோட அப்பா. நீங்க சித்தி. இது எல்லாம் செய்ய வேண்டியது என்னோட கடமை. பொறுப்பு. நீங்க எதை பத்தியும் கவலை பட கூடாது. புரிஞ்சுதா?
அந்த கடவுள்தான் உங்கள கொண்டு வந்து நிறுத்தி இருக்கு. கை கூப்பினாள் .
கௌசிக் என்னோட கொளுந்தனார கூட்டிட்டு போய் சாப்பிட ஏதாவது வாங்கி குடு. இப்ப அம்மா அப்பா வரும்போது கூட்டிட்டு போவாங்களாம் ஓகேவா மிஸ்டர் கொளுந்தனாரே ?
அவனுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் அவள் சொல்லிய விதத்தில் சந்தோசமாக தலையை ஆட்டினான்.

மீண்டும் வருவாள் தேவதை...............






 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18


NYD-88

முத்துவின் தம்பியை சிமி வீட்டிற்கு அழைத்து சென்றாள். சத்யா எதிர் பார்த்தது போலவே நல்ல சிவத்திற்கு பெரியாதாக ஒன்றும் இல்லை . ஆனால் ஈரலில் மட்டும் சிறிய கட்டி ஒன்று இருந்தது. அதையும் மறுநாளே தேதி குறித்து ருத்ராவே ஆபரேஷன் செய்து விட்டான்.
ருத்ரா நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்லபோறேன்னே தெரியல. நீங்க எனக்கு பண்ணி இருக்கறது ரொம்ப பெரிய விஷயம்.
தாராளமா நன்றி சொல்லலாம் சத்யா, ஒரு கப் தேனீரோட. அதுவும் நீங்க போட்டு தரணும்.
வை நாட் ?
நீங்க எப்ப வீட்டுக்கு வரீங்க ?
இப்படியே சிறிது நேரம் பேசி கொண்டிருந்துவிட்டு இருவரும் விடை பெற்றனர்.
மாமனாரின் அறையில் தேவி இருந்தார். முத்துவும் இருந்தான். சித்தி நீங்க எங்க வீட்டுக்கு போங்க, குளிச்சு துணி மாத்திக்கோங்க. பையனும் உங்கள பார்த்து ரெண்டு நாளாச்சு. சரியா ?
சரிங்க டாக்டர்.
டாக்டர் இல்ல , சத்யானுதான் சொல்லணும் சரியா ?
மண்டையை ஆட்டினாள்.
எல்லாரையும் கண்ணசைவுல ஓகே சொல்ல வைக்கறாளே ! ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் முத்து .
அதுக்காக என்ன பண்ணறது முத்து என்னால உங்கள தான் ஒன்னும் பண்ண முடியலையே !
இவ எப்ப என் மனச படிக்க ஆரம்பிச்சா ?
ம்ம்ம்!! உங்க வீட்டுல வந்து பத்து நாள் தங்கி இருந்தப்ப .
அம்மா தாயே நான் எதுவும் சொல்லவும் இல்ல, மனசுல நினைக்கவும் இல்ல, என்று கையெடுத்து கும்பிட்டு வெளியே சென்று விட்டான்.
இவளிடமிருந்து ஒரு பெரு மூச்சு வந்தது.
அடுத்த வாரத்திலேயே புதுப்பெண் மீண்டும் கல்லூரிக்கு வந்தாள் . அவள் சொன்ன செய்தி கங்காவுக்கு நன்மையாகவே இருந்தது. ஆம் ! அடுத்த சில வாரங்களில் அவள் மாமியார் வீட்டில் அவளுக்கு புதியதாக கடை வைத்து தர போகிறார்கள். இன்னும் சில மாதங்களில் இவளுக்கும் படிப்பு முடிந்துவிடும். அதற்கு பிறகு இவளே பார்த்துக் கொள்வாள். அதுவரை அவள் அதையே பார்த்துக் கொள்வதாக ஏற்பாடு.

உமாவோ ,
ஏ !கங்கா நீதான் வேலை தேடிக்கிட்டு இருக்கியே பேசாம வந்து என்னோடவே ஜாயின் பன்னிக்கோடி . எனக்கும் கொஞ்சம் உதவியா இருக்கும். கொஞ்சம் தைரியமாவும் இருக்கும். ப்ளீஸ் டி .
அது சரிதான் உமா! இதுவே உங்க அம்மா வீடுன்னா வேற, ஆனா இது உங்க மாமியார் வீடு. இப்பதான் புதுசாகல்யாணம் ஆகியிருக்கு, என்ன சொல்லுவாங்களோன்னு தான். அது மட்டுமில்லாம எனக்காக நீ கேட்டு ஒனக்கு எதுவும் பிரச்சனை வந்துடக் கூடாதுல்ல. அதான். ப்ளீஸ் என்ன தப்பா எடுத்துக்காத.

அவங்கயென்ன வேற யாரோவா? சொந்த அத்தை தானே? அதெல்லாம் தப்பா எடுத்துக்க மாட்டாங்க. எதுக்கும் அவங்க கிட்ட நான் கேட்டுக்கறேன். ஒனக்கு ஓகேவா? நீ ஓகே சொன்னாதான் என்னால அவங்ககிட்ட பேசமுடியும்.

எனக்கு ஓகே, தினமும் காலேஜ் முடிஞ்சதுக்கப்புறம் வரேன். லீவு நாளல்ல வரேன்.
அப்போ எப்படி படிப்ப ?
அதான் நைட், விடியல் நிறைய இருக்கே .
இருந்தாலும்,
என்ன மாதிரி ஆளுங்க ஓய்வில்லாமல் வேல செய்ஞ்சு தான் ஆகணும். அது மட்டுமில்லாம, நான் என்னோட சொந்த கால்ல நிக்கறதுதான் கலெக்டருக்கு பெருமை. எங்க அப்பா என்ன விட்டுட்டு போனப்ப அவருதான் எனக்கு தைரியம் சொல்லி அவங்க வீட்டுக்கு அனுப்பினார், எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் நானே தைரியமா என்னோட சொந்த கால்ல நிக்கணும். யாரையும் நம்பி இருக்க கூடாதுங்கறதுக்காகவே இந்த படிப்புல சேர்த்து விட்டாங்க. அவங்க எல்லாரும் என் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காங்க. நான் அதை நிறைவேத்தனுண்ணா நான் கஷ்டப்பட்டுதான் ஆகணும். நிலா அவள் தோளை நம்பிக்கையூட்டும் விதமாக அழுத்தினாள்.
உமாவோ, சரி நான் வீட்டுல பேசிட்டு ஒனக்கு கன்பார்ம் பண்ணறேன். சாலரி பத்தியும் கேட்டுக்கறேன்.
உமா ! இருந்தாலும் நீ எனக்காக பேசி வீட்டுல எதுவும் பிரச்சனை வராம பாத்துக்கோ. நான் வெளில கூட வேலை தேடிப்பேன் .
நீ ஒன்னும் கவலை படாத. அப்படி ஒன்னும் பிரச்சனை வர்ற அளவுக்கு எங்க அத்தான் விட்டுட மாட்டாரு. சரியா ?
மதிய உணவை முடித்தவர்கள் வேகமாக அடுத்த வகுப்புக்குச் சென்றனர்.
இந்த ஏற்பாடு நல்ல விதமாக கங்காவுக்கு அமையுமா ?
********************************************************************************************
நல்லசிவத்திற்கு வேகமாகவே உடல் தேறியது . நல்ல சிகிச்சை, நல்ல உணவு நல்ல கவனிப்பு அனைத்திற்கும் மேலாக மகன் தன் அருகில் இருப்பதும் ஒரு முக்கிய காரணம். இத்தனை வருடங்களாக மூத்த மகனை பிரிந்திருந்ததை எல்லாம் , ஒரு தந்தையாக , ஏக்கங்களுக்கும் ஆசைகளுக்கும் வடிகாலாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார் . அதுவும் இல்லாமல் மனைவியுடனான தனிமையும் அவருக்கு நிம்மதியை தந்தது. மூத்த மனைவி, மகன்கள், இளைய மனைவி என்று தன்னால் யாருக்குமே உண்மையாக இருக்க முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சி இருந்து கொண்டே தான் இருந்தது. இப்போது எல்லாமே சரியானது போல அவருக்கு மனதில் ஒரு நிம்மதி. அதுவும் நிலைக்க போவதில்லை என்பது அவருக்கு தெரியவில்லை பாவம்.
பெரியதாக ஒன்றும் பிரச்சனை இல்லை என்பதால் அடுத்த வாரத்திலேயே அவரை வீட்டிற்க்கு செல்லலாமேயென்று விட்டான் ருத்ரா .
மாமா நீக்க ரொம்ப லக்கி, இல்லாட்டி சென்னையிலேயே பெரிய டாக்டர் ருத்திரா உங்களுக்கு சிகிச்சை குடுக்க கிடைச்சுருக்க மாட்டாரு.
சத்யா ப்ளீஸ்..
டாக்டர் நான் உங்கள மாதிரி படிச்சவன் இல்ல.எனக்கு பக்குவமால்லாம் பேச வராது. ரொம்ப நன்றிங்க. எஎன்ன சொல்லணுன்னு தெரியல.எனக்கு எனக்கு ஏதாவது ஆகியிருந்தா இவதான் பாவம். வெளி உலகம் தெரியாதவ . புள்ளய வளக்க ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா.

அதனால என்ன? கிராமத்து மக்கள் கிட்டேர்ந்து வர்ற வார்த்தைகள் வாயிலேர்ந்து இல்லங்க, மனசுலேர்ந்து வர்றது. உங்கள மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம் இருந்தாலே போதும். அதிலையும் இன்னிக்கு நாங்க இங்க இருக்கோன்னா அதுக்கு காரணமே சத்யாவோட அப்பதான். அவரு இல்லாட்டி நான் என்ன? எங்க அப்பவே ஒன்னும் இல்ல. நீங்க அவளோட மாமனார், உங்களுக்கு செய்ய நாங்க கடமை பட்டிருக்கோம்.
ஆ! சத்யா! டயட் ஷீட் தருவாங்க. அது என்னனு பாத்துக்கோ. அதே மாதிரி டாப்லட்ஸும் பாத்துக்கோ. ஓகே !
ஐயா நீங்க இவங்க சொல்லறததான் சாப்பிடணும். அத தவிர வேற எதுவும் சாப்பிட கூடாது, அட்லீஸ்ட் மூணு மாசத்துக்காவது, நீக்க பத்தியம் சாப்பிட்டுதான் ஆகணும். நல்ல வேளை , உங்களுக்கு பிபி சர்க்கரை எதுவும் இல்ல. கண்டிப்பா காரம் கொஞ்சம் கூட சாப்பிட கூடாது. உங்களுக்கு அடுத்த செக்கப்புக்கு தேதி தருவாங்க.அப்ப வந்து பாருங்க. வேற ஏதாவது சந்தேகம் இருந்தா சத்யாகிட்ட கேட்டுக்கோங்க.
வரேங்க. அனைவருக்கும் கை கூப்பி சொல்லி விட்டு போனான் .
நல்லதுங்க. இவரும் கை கூப்பி விடை பெற்றுக் கொண்டார்.
முத்துவின் தோள் தொட்டு விடை பெற்றுக் கொண்டான் மருத்துவன்.

கௌசிக், அனைவரையும் தனது வண்டியிலேயே அழைத்து சென்றான். நடக்க போகும் விபரீதம் தெரியாமல் அனைவரையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டது அந்த வண்டி.
சத்யாவும் முத்துவும் மட்டும் தனியாக ஜீப்பில் பயணித்தனர்.
அந்த சிறு பையனுக்கு தான் அங்கிருந்து செல்லவே மனமில்லை. சிறு குழந்தையாக தேம்பி தேம்பி அழுதான். சிமிக்கும் அவனை அனுப்பவே மிகவும் சங்கடமாக இருந்தது. அவனுக்காக அவளும் அவனும் சென்று நிறைய பொருட்கள் வாங்கி வந்தனர். நிறைய துணிகளும், விதவிதமாக அவன் அறியாத வகை பொம்மைகளும், பல விதமான பதார்த்தங்களும், எல்லாவற்றிற்கும் மேலாக அன்னையிடம் மட்டுமே கிடைத்திருந்த அன்பு அதை தாண்டியும் கிடைத்தது என்று அவனால் இதை விட்டு போகவே முடியவில்லை.
வாயில் வரை சென்றவன் மீண்டும் ஓடி வந்து சிமியை கட்டிக் கொண்டான். எப்பல்லாம் ஸ்கூல் லீவு விடறாங்களோ அப்பல்லாம் இங்க வந்துடு. உனக்கு இங்க படிக்க நிறைய புக்ஸ் இருக்கு. நாம ஜாலியா படிக்கலாம், விளையாடலாம், வெளில போகலாம் சரியா? நீ இந்த தடவ என்ன மார்க் வாங்கினேன்னு சொல்லணும் சரியா ? எப்ப முடியுமோ அப்ப, அண்ணாகிட்டேர்ந்து போன் வாங்கி பண்ணு . நம்பர் இருக்கில்ல?அழக் கூடாது. அம்மாவை பத்திரமா பார்த்துக்கணும் சரியா?
பல அறிவுரைகளை வழங்கி அவனை தேற்றி அனுப்பினாள் . பெருமூச்சு விட்டு திரும்பியவளை , தியாகுவின் குரல் ஸ்தம்பிக்க வைத்தது.

மீண்டும் வருவாள் தேவதை.................
 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-89
எனக்கென்னமோ இந்த பையன விடவே மனசில்லேங்க. பாவம் சின்ன பையன். அப்பா அம்மா எல்லாரும் இருந்தும் எதுவுமே சரியா அனுபவிக்க முடியல.
அது சரி! இவனுக்காவது பெத்தவங்க இருக்காங்க. கங்காவுக்கு ? அத பத்தி நமக்கென்ன? நீ போம்மா , போய் ரெஸ்ட் எடு .பாவம் ஒரு வாரமா உனக்குதான் நிறைய வேலை. அவர் சாதாரணமாக சொன்னாலும் வார்த்தைகள் முள்ளாக குத்தியது.
தலையை உலுக்கி உள்ளே சென்றவருக்கு அன்று முழுவதுமே மனஸு சரியில்லை . மனதை மாற்ற எத்தனையோ முயன்றும் முடியவில்லை. நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா ? மனம் தவித்தது. இருப்பினும் கணவனிடம் பேசத் தயக்கமாக இருந்தது. இன்று சத்யாவிடம் இதை பத்தி பேச வேண்டும். அது சரி தியாகுவும் சிவாவும்தான் தன்னிடம் இதை பற்றி பேசினார்கள். சத்யா ஏன் வாயே திறக்கவில்லை. என்னிடம் பேச வேண்டாம் என்று நினைத்தாளா ? ஏன் ஏன் என்று மனம் பரிதவித்தது .
அவள் மாமனார் வீட்டிற்கு செல்வதால் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அமைதியாகவே இருந்து கொண்டார். அல்லது அவரது முற்சியை தியாகுவிடம் மறைத்துக் கொண்டார். அவள் கணவனுக்கு தெரியாதா என்ன ? குட்டையை குழப்பியர் அல்லவா !! அவரை போலவே நாமும் சத்யாவின் வருகைக்கு காத்திருப்போம்...........................................................................................................................................................................
மீண்டும் முத்துவும் சத்யாவும் ஜீப்பில் தனியாக சென்றார்கள். அப்போது அன்று திருமணத்திற்கு செல்லும் போது இருந்த இனிமையான மனநிலையில் இல்லை என்றாலும் அவர்களுக்கு அந்த நினைவு வரத்தான் செய்தது. அது இருவருக்குமே மனதில் இருந்த வலிகளுக்கும், பாரங்களுக்கும் மயில் இறகால் தடவியது போல இருந்தது.
நல்ல சிவத்தை வீட்டில் விடும்போது சத்யாவுக்கு மனதில் பயம்தான். என்னதான் படித்திருந்தாலும், பெரியவர்களுக்கு தர வேண்டிய மரியாதையை விடக் கூடாது என்பதில் அவள் பெற்றோர் மிக கவனமாகவே இருந்தனர். அதனால் இப்போது அவளுக்கு நல்லசிவத்தின் அன்னையை எதிர் கொள்ளவே நடுக்கமாகவே இருந்தது. வீட்டின் அருகில் வரும்போதே அவளுக்கு வியர்க்க தொடங்கியது. தன்னையும் அறியாமல் முத்துவின் கையை அழுத்தி பிடித்துக் கொண்டாள் . அவன் புரிந்து கொண்டான்.
என்ன டாக்டரு ஆயாவை நினச்சு பயமா ?
மெதுவாக தலை மட்டும் ஆடியது.
எனக்கே நீங்க இருக்கற தைரியம்தான். வாங்க என்ன ஆனாலும் சேர்ந்தே ஒரு கை பாத்துடுவோம்.
அது சரிதான் முத்து, இருந்தாலும் அவங்க பெரியவங்க இல்லையா ? அதனாலதான் அவங்ககிட்ட என்னால எதுவும் பேச முடியல.
அது சரிதான் டாக்டரே ! நாமளா எதுவும் பேச வேணாம்.
நல்ல வேளையாக இவர்கள் பயந்தது போல அல்லாமல், இவர்களை அவர் கண்ணாலேயே முறைத்தாரேத் தவிர வேறொன்றும் பேசவே இல்லை. மாறாக மகனை பார்த்ததும், பதறியடித்து ஓடி வந்தார். என்னதான் இருந்தாலும் அவர் பெற்ற மகனாயிற்றே. அதில் சிறிதளவு மருமகளிடம் காட்டி இருந்தால் வர போகும் விபரீதத்தை தடுத்திருக்கலாம்.
ராசா எப்படியா இருக்க ? என்னய்யா இப்படி இளச்சு போயிட்ட ?
முகம் எங்கும் தடவினார்.
அம்மா கவலை படாதீங்க, எனக்கு ஒன்னும் இல்ல. எனக்கு ரொம்ப தூரம் வண்டில வந்தது அசதியா இருக்கு. நான் போய் கொஞ்சம் கண்ணசறேன் .
இரு ராசா ஒரு நிமிஷம் என்று அவர் போவதற்குள்ளே, தேவி ஆரத்தி கரைத்து கொண்டு வந்தார். மற்றவர்கள் அமைதி காத்து நின்றனர். ஆர்த்தி முடிந்ததும்
வாங்க என்று மனைவி கையை பிடிப்பதற்குள், மாமியார் அவசரமாக கையை பிடித்து இழுக்காத குறையாக மகனை படுக்கை அறைக்கு அழைத்து சென்றார்.
தேவி உள்ளே போகாமல்வெளியே வந்தார். சூழ்நிலை இறுக்கமாக இருக்கவே முத்துவும் சத்யாவும் அமைதியாக நின்று கொண்டனர். அன்னையின் கண்களில் வந்த கண்ணீரை பார்த்த சிறுவனுக்கும் அழுகை வந்தது. அம்மா அழாதீங்கம்மா, வாங்கம்மா உள்ள போகலாம்.
அதை பார்த்ததும் சத்யாவும் ஓடி வந்து சித்தி அழாதீங்க. இது உங்க வீடு தான, வாங்க போகலாம்.
முத்து தேவியினிடத்தில் அதிகம் பேசாததால் அவனுக்கு தயக்கமாகவே இருந்தது.
சட்டென்று சூழ்நிலையை மாற்ற, கண்ணை துடைத்துக் கொண்டு லேசான புன்னகையுடன் ,
டாக்டர் நான் உங்களுக்கு சித்தி இல்ல, சின்னத்தை.
இல்ல நீங்க அவருக்கு சித்தி தான அதான் நானும்(அசடு வழியுது டாக்டரே)
சட்டென சிவந்த முகத்தை பார்த்து பார்க்காதது போல இருந்தான் முத்து. சிவந்திருந்த கண்ண குழியில் தொட்டு பார்க்க வேண்டும் போல இருந்த ஆர்வத்தை இரண்டு கைகளையும் கட்டி அடக்கிக் கொண்டான்.
நீங்க என்ன சின்னத்தைனுதான் கூப்பிடனும் சரியா ?
நீங்களும் என்ன மருமகளேன்னுதான் கூப்பிடனும்.
சரி... சிறிய சிரிப்பலை அங்கே வந்தது.
அடியே புருஷன் இப்படி உடம்புக்கு முடியாம இருக்கான் என்னடி அங்க க்கே க்கே கேனு கேனு சிரிப்பு? நீங்கல்லாம் குடும்பத்து பொம்பளைங்களா? சீ தூ.... இங்க இது பத்தாதுன்னு இன்னும் நாலு எச்சிக்கைல நாயிங்க வேற ?
நாங்க அப்புறமா வரோம் சின்னம்மா...
என்று சத்யாவின் கையை இழுக்க கொண்டு வெளியில் வந்துவிட்டான் முத்து.
டாக்டர் ரொம்ப சாரி டாக்டர்... அவங்கள பத்திதான் உங்களுக்கு தெரியுமே !! நீங்க ஒன்னும் தப்ப எடுத்துக்காதீங்க...
ம்ம்... அப்புறம்!! அவள் மிடுக்காக தலையை ஆட்டி கேட்ட விதத்திலேயே அவள் அவனை கலாய்ப்பது புரிந்தது.
என்ன டாக்டரே ?? அப்புறம்.,
வாங்க போலாம்.
எங்க உங்க வீட்டுக்கு !
அங்க ...
இல்ல முத்து நான் ஆச்சியை பாக்கணும்.
சரி வாங்க போகலாம். நீங்க அவரோட வாங்க.
ம்ம் சரி..
அதற்குள் தேவி உள்ளிருந்து ஓடி வந்தார். சத்யா நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க. மன்னிச்சிருங்க, முத்து நீயும்தான்ம்பா .
ப்ச் அதெல்லாம் பரவால்ல அத்தை . நீங்க உள்ள போங்க, போய் மாமாக்கு கஞ்சி வச்சுக் குடுங்க. பையனும் பசியோட இருப்பான். நீங்க போங்க.
அதில்ல சத்யா. போன முறையும் என்னோட பையனுக்காக வந்த, அப்படியும் பெரிய அவமானம் ஆகிடுச்சு. இந்த முறையும் இப்படி, ஆரத்தி வச்சு சந்தோசமா கூப்பிட வேண்டிய வீட்டு மருமகளை இப்படி அவமானப்படுத்தி அனுப்பறேன். என்னால ஒன்னும் செய்ய முடியலையே...
நீக்க எதைப்பத்தியும் யோசிக்காதீங்க. அன்னைக்கு அப்படி நடந்திருக்கலேனா இன்னிக்கு நான் இங்க நின்னுட்டிருந்திருக்க மாட்டேன்.பழைய நினைவுகள் மனதில் பாரமாக அழுத்தியது. என்ன தப்பா எடுக்காதீங்க, நான் கிளம்பறேன். கூப்பிய கைகளை பிடித்து முகம் திருப்பி சென்றவளை பார்த்ததும் தேவியின் கண்கள் கடலை கடன் வாங்கியது. இயலாமையை எத்தனையோ விம்மி அழுதும் அடுக்களைக்குள் அடக்க முடியவில்லை.
தேவிக்கு மட்டுமா ?
கண்ணீரை இழுத்து அடக்கியவள் ,
முத்து நான் செல்வியை பாக்கணும்.
ம்ம் போலாம். நீங்க அவரோட வாங்க, நான் முன்னாடி போறேன்.கௌசிக், இங்க ஒரு ப்ரண்ட் இருக்காங்க. 5 மினிட்ஸ் பார்த்துட்டு போலாம்டா !
ஷியூர் .
இவர்கள் அவர்கள் வீட்டை நெருங்கும் சமயம் ,
"என்ன செல்வி, முகமெல்லாம் வாட்டமா இருக்கு"
"ஒன்னும் இல்ல மாமா"
என்னம்மா சொல்லு மெதுவாக முகத்தை தூக்கி பார்த்தான். அவனுக்கு ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. வயிற்று பசியை எத்தனை நேரம்தான் அடக்குவது. இதனை நாளாக அடக்கிக் கொண்டவளுக்கு இப்போது முடிவதில்லை. கண்ணை இருட்டிக் கொண்டு வருகிறது. எத்தனை முறைதான் அந்த கஞ்சியையும் சோற்றையும் உண்பது?வாய்க்கு விதவிதமாக சாப்பிட வேண்டும் போல இருந்தது. முன்பெல்லாம் பக்கத்துக்கு வீட்டு பெட்டிக்கு கடையில் இருந்து கிடைக்கும் சில்லறைக்கு ஏதாவது வாங்கி உண்பாள் . இப்பொது அதையும் சேமித்து வைக்கவே தோன்றியது. இருப்பினும் தன் கஷ்டத்தை கூறி கணவனை அவள் கஷ்டப்படுத்த விரும்பவில்லை.
அதற்குள் சத்யா வந்தாள் . பின்னோடே முத்து வந்தான்.
என்ன சரவணன் தப்பான நேரத்துல வந்துட்டேனா ?
இல்ல டாக்டர், சரியான நேரத்துக்குத்தான் வந்திருக்கீங்க. லுங்கியை இறக்கி விட்டவன் அவர்கள் அமர பெஞ்சை கொண்டு வந்து போட்டான்.
ப்ச்! பரவால்ல விடுங்க நம்ம வீடுதானே .
அதோ வெளில ஒருத்தர் இருக்காரே அவருக்கு குடுங்க.
சார், உக்காருங்க.
டீ வாங்கிட்டு வரேங்க . பவ்யமாக சொன்னான் சரவணன்.
அவரிடம் எப்படி பேச வேண்டும் என்று கௌசிக்கிற்கு தெரியவில்லை. எத்தனையோ பெரிய மனிதர்களை மட்டுமே சந்தித்திருந்தவனுக்கு இந்த சாதாரண மனதனிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரியவில்லை.
சென்னைக்கு வந்ததிலிருந்து சிறிது தமிழ் பழகி இருந்தான்.
அண்ணா வேண்டாம்., அவ்வளவே.
சரிங்க , கொஞ்சம் தண்ணியாவது ?
நோ.. அதற்கு மேல் அவனுக்கு பேச தெரியாமல் திரு திருவென முழித்தான். இதோ வந்திடறேனுங்க சரவணன் வீட்டிற்குள் சென்றான்.
அந்த சிறிய குடிசை வீட்டில் சாணம் போட்டு மெழுகி இருந்த தரையில் சர்வ சாதாரணமாக அமர்ந்திருந்த அக்காவை அவன் கண் விரித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் செல்வியை பார்த்துக் கொண்டிருந்தாள் .
சரவணன், ரொம்ப வீக்கா இருக்கா . இவளை பார்த்து பார்த்து கவனிச்சாகனும் . உங்க ஒருத்தரால முடியாது. நீங்க கூட வேற யாராவது இருக்கறாப்ல பார்த்துக்கணும். உங்க வீட்டுலேர்ந்து யாரவது வந்து தான் ஆகணும். இங்க பாருங்க இவை மூஞ்சிய. சரியாவே சாப்பிடறதில்ல. கண்ணெல்லாம் பாருங்க, வெளுத்து போய் இருக்கு. உங்களால முடியலைன்னா சொல்லுங்க இப்பவே இவளை நான் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகிறேன்.
அவங்க வீட்டுல எனக்கு புள்ள இல்லன்னுதான் ஏத்துக்கிட மாட்டேங்கறாங்க. நான் இப்ப உண்டாகிற விஷயம் தெரிஞ்சா ஏத்துக்கிடுவாங்க. இவங்கதான் எனக்கு யாரும் வேணாம் வேணாமின்னு சொல்லிகிட்டே இருக்காங்க. எனக்கு எல்லாரும் வேணுக்கா. என் புள்ளைங்களுக்கு வேணும். சொன்னா கேக்கவே மாட்டேங்கறாங்க.
நேரம்பாத்து போட்டுகுடுக்கற கழுதை நாலு போட்டேனா பாத்துக்க!
பயந்து போனவள் சத்யாவின் பின்னே ஒதுங்கினாள் .
ஏன்டா தங்கச்சி சொல்லறதும் சரிதானே! அதுக்குன்னு ஆசா பாசம் இருக்காதா ?
அது சரி உன் பொண்டாட்டிய பத்தி யோசிக்கறதே இல்ல. இதுல இவளை பத்தி பேசறியா?
மனதில் நினைத்ததை வாயில் முனுமுனுத்தான்.
சரவணன் உங்களால அவங்ககிட்ட பேச முடியலைன்னா பரவால்ல, நான் போய் பேசறேன். உங்களோட ஈகோவை விட இப்போ இவளோட உடம்பும், மனசும்தான் ரொம்ப முக்கியம். நீங்க இவள ஒழுங்கா பார்த்துக்க முடியலைன்னா எங்க வீட்டுக்காவது அனுப்புங்க, சத்தமாக ஆரம்பித்தவள்,சாதாரணமாகவே முடித்தாள் .
இந்தாங்க சரவணன் இதுல கொஞ்சம் பணம் இருக்கு. இவளுக்கு தேவையானது வாங்க யூஸ் பண்ணிக்கோங்க.
டாக்டர் இதெல்லாம் வேண்டாம். எங்கிட்ட இருக்கு, நான் பாத்துக்கறேன்.
இப்பதானே சொன்னேன், உங்களோட ஈகோவை விட இவதான் நமக்கு முக்கியம். இவள் புள்ள பெத்து வர்றது எவ்ளோ முக்கியம்னு உங்களுக்கு தெரியுமில்ல. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க. இவ நார்மலா சாப்பிடறத விட நாலு மடங்கு சாப்பிடணும். எப்பயுமே பசிச்சுகிட்டே இருக்கும். மூனு உசுரு. என்னோட தங்கச்சிக்கு நான் தரேன். ப்ளீஸ்.
அவன் முகம் தெளியவில்லை.
இப்போ பணமெல்லாம் ஒரு விஷயமே இல்ல சரவணன். இதுக்கு மேலே எனக்கு என்ன சொல்லறதுன்னு தெரியல. என்ன நீங்க அந்நியமா பாக்கிறது மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு. நான் கிளம்பறேன்.
வாடிய முகத்துடன் அவளை அனுப்ப விரும்பாதவன்
"டாக்டர் என்ன மன்னிச்சுடுங்க", நீங்க அதா அவ கிட்டையே குடுங்க. ஆனா ஒன்னு, எனக்கு பணம் வந்ததும் நான் ஆரம்பித்தவனை செல்வி நிறுத்தி, நீங்க புள்ள உண்டானதும் நாங்க சீர் செய்யணும்., என்றாள் . ஒரு விரக்தியான புன்னகையுடன், முதல்ல நீ உன்ன பார்த்துக்கோ செல்வி, வாராவாரம் எனக்கு போன் பண்ணு .
சரிங்க. சத்யாவின் தோளில் சாய்ந்து கொண்டாள் சலுகையாக.
நெற்றியில் முத்தமிட்டாள் ,
"வரேன் செல்வி"
ஏழை பணக்காரன் வேறுபாடின்றி அனைவரிடமும் நல்ல விதமாக பழகும் அக்காவை நினைத்து பெருமை பட்டுக் கொண்டான் கௌசிக், எல்லாரையும் ஈஸியா கைகுள்ள போட்டுக்கறியே! ஏஞ்சலு !அவன் மனதில் நினைத்தவுடன், ம்ம் கூப்பிட்டீங்களா முத்து.
இவனுக்கு தூக்கி வாரி போட்டது.
இல்ல, இல்லையே!தடுமாறினான்.
வாயில் வரை வந்து அவர்களை வழி அனுப்பினர்.
அருகில் இருந்த கணவனையும் அவன் வீட்டையும் பார்த்தாள். அங்கே ஆச்சி இருப்பார் என்று ஆவலுடன் பார்த்தவளுக்கு ஏமாற்றமே!
ஆச்சி சந்தைக்கு போய் இருக்கு. வர்ரதுக்கு நேரமாகும். செல்வி சொன்னாள் .
ப்ச், வாய மூடிக்கிட்டு இரு புள்ள. அவங்க பாத்துக்குவாங்க . அதான் அவங்க வீட்டுக்காரர் இருக்காருல்ல. பூடகமாக சொன்னான்.
வீட்டுக்குள்ள கூப்பிட மாட்டிங்களா?
வாயில் வந்த வார்த்தைல அன்று அவன் வீட்டை விட்டு துரத்திய நினைவில் அடங்கி போயிற்று. அதே நினைவில் உதட்டை கடித்தவளுக்கு அங்கே சதை பிய்ந்து லேசாக ரத்தம் வந்தது.
அதை தன நாவால் சுத்தப்படுத்த தோன்றினாலும் வெளியில் சொல்லாமல் முழுங்கிக் கொண்டான் கணவன். இவளது இந்த துன்பத்திற்க்கே காரணம் நான்தானே. மனம் குத்தியது. அவளுடன் சேரவும் முடியாமல், தள்ளி இருக்கவும் முடியாமல் அவன் படும் வேதனை என்றுதான் முடியும்?

மறு நாளே தான் இங்கே ஓடி ஓடி வரப்போவது தெரியாமல் கனத்த இதயத்துடன் சென்றாள் தேவதை.

மீண்டும் வருவாள்............
 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-90
இல்லத்திற்கு வந்தவர்கள் மிகவும் சோர்ந்து போயிருந்தார்கள்,
வா கௌசிக் , வா சத்யா ரெண்டு டயர்டா இருக்கீங்களே, போய் குளிச்சுட்டு சாப்பிட வாங்க,
இல்லப்பா ரொம்ப பசியா இருந்ததுன்னு வர்ற வழிலேயே சாப்ட்டுட்டோம்.
சரி, குளிச்சுட்டு ரெஸ்ட் எடுங்க, எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்.
குட் நைட் அங்கிள், குட் நைட் ஆன்டி, விட்டால் போதுமென்று ஓடியே விட்டான். வெண்ணீரில் குளித்து விட்டு வந்தவளுக்கு ஏதேதோ நினைவுகள். அதனூடே எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியாது. ஆழ்ந்த உறக்கம் அவளை தழுவியது. மறு நாள் காலை கதிரவன் ஒளி முகத்தை மெல்ல தழுவியது. அதன் ஒளியில் லேசாக கண் விழித்தவள், வழக்கம்போலவே உள்ளங் கைகளை விரித்து இஷ்ட தெய்வத்தின் பெயர்களை சொல்லியவள், இன்றைய பொழுது நல்லதாக இருக்க வேண்டும் என்று கடவுளை பிரார்தித்து கொண்டாள் . மெதுவாக எழுந்து பூமலர் பாதங்களை வைத்து குளியல் அறைக்கு சென்றவள், கீழே சென்று தனக்கும் மற்றவர்களுக்கு காபி கலங்கினாள் . அதற்குள் சிமி வந்துவிடவே இவள் அமைதியாக சென்று அமர்ந்து கொண்டாள் . அன்னையும், மகளும் சிறிது ஓய்வாக பேசிக் கொண்டே காபி அருந்தினர்.
சிமிக்கு மனதில் அரித்து கொண்டிருந்த விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்து நிதானமாக ஆரம்பித்தார். வீட்டுல சிவா இல்லாதது ஒரு மாதிரி இருக்குல்ல.
ம்ம் ஆமாம்மா, ஆனா இது ஒன்னும் புதுசு இல்லையே. அவன் எப்பையோ வெளிஊருக்கு வேலைக்கு போனவர்தானே?
ம்ம் அவனுக்குன்னு ஒரு கல்யாணத்த பண்ணி வக்கனுன்னு பார்த்தா எதுவுமே சரியாஅமைய மாட்டேங்குது.
அம்மா நான் ஒன்னு சொல்லட்டுமா?
நீங்க எப்பேர்ப்பட்ட பொண்ண பார்த்தாலும் அண்ணன் கல்யாணம் பண்ண மாட்டாரு. உங்களுக்கு தெரியாதா ?
அங்கே பேரமைதி நிலவியது.
நீங்க கங்காவை வேண்டான்னு சொல்லறதுக்கு என்ன காரணம்? எதுவா இருந்தாலும் மனசுல இருக்கறத சொல்லுங்கம்மா.
மகள் அன்னையின் கரங்களை பிடித்து வினவினாள்.
அது நிறைய காரணங்கள் இருக்கு, இவனுக்கும் அவளுக்கும் எந்த விதத்துல பொருத்தம் ? அழகு, பணம், படிப்பு, அந்தஸ்து, எல்லாத்துக்கும் மேல வயசு ? பதிமூணு வருஷம். சின்ன இடைவெளியா என்ன ?
நீங்க சொல்லறது எல்லாமே சரிதாம்மா. ஆனா அவங்க ரெண்டு பேரும் உருக்குயிரா காதலிக்கறாங்க. நாம ஒன்னும் அண்ணனுக்கு ஏமாத்தி சின்ன பொண்ண கட்டி வைக்க பாக்கலியே ? அது அவளுக்கும் தெரியும் அண்ணனுக்கும் தெரியும். நீங்க உங்களுக்கு புடிச்ச பொண்ண அண்ணனுக்கு ஏதாவது பண்ணி மிரட்டி கட்டி வைக்க பார்த்தாலும் அது நடக்காது. நீங்க அப்படியே கல்யாணம் பண்ணி வச்சாலும் அண்ணாவோட வாழ்க்கைல சந்தோஷம் இருக்காது. கங்காவும் அண்ணனும் விரும்பறாங்கன்னு சொன்னா அது சாதாரணம்தான். அவ அண்ணனோட உயிரணு சொல்லறதவிட அவதான்மா அண்ணனோட உயிர்ப்பு. அவ இருந்தாதான் அண்ணாவால் சிரிக்க முடியும். வாழ்க்கையை ரசிக்க முடியும். நீங்களே யோசிச்சு பாருங்கம்மா. எனக்கு தெரிஞ்சதை நான் சொல்லிட்டேன், இதுக்கு மேல உங்க இஷ்டம்.நான் மருத்துவமனைக்கு கிளம்பறேன்.

இவங்க எல்லாருமே என்னோட குடும்பம்தானே ? எதுக்கு எல்லாருமே சிவாவுக்கு சப்போர்ட் பண்ணறாங்க? எல்லாருக்குமே கங்காவை புடிச்சிருக்கா? என்னை தவிர? இல்ல சில விஷயங்கள்ல நமக்கு ஆப்ஷனே இல்லையா ? சத்யாவ கூடத்தான் நம்ம பொண்ணா வளர்த்தோம். ஆனா எங்கையோ போய் யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டு. ஏன் இந்த வீட்டுல இப்படி?
குளித்துவிட்டு வந்தவர் வேகமாக சமையலை முடித்துவிட்டு, தன்னுடைய மன குழப்பங்களுக்கு என்னதான் தீர்வு ? கோவிலுக்கு சென்றால் மனம் அமைதி அடையும் என்று நினைத்தார். அதன்படியே கணவனுடன் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்றார். அங்கே இருந்த கற்பகாம்பாள், கற்பகமே அல்லவா ? வா வா இப்பதான் ஒனக்கு பெத்தவளை பார்க்க தோன்றியதா ? என்று அன்னை அழைப்பது போலவே எப்போதும் தோன்றும். இந்த முறையும் தோன்றியது. தன் துன்பங்களே கண்ணில் நிறைந்திருந்தது,கண்ணில் குளமாக. குழந்தைகள் பெற்றத் தாயிடம்தானே தன் மனக் குறைகளை சொல்லி அழ முடியும்.
ஏம்மா என்னோட குழந்தைகளுக்குனு கல்யாண வாழ்க்கை சரியாய் அமைய மாட்டேங்குது? சிவாவுக்கும் நிச்சயம் ஆகி நின்னு போச்சு. இந்த பொண்ணுக்கும் அவனுக்கும் எத்தனை வயசு வித்தியாசம்? அவளை
போய் விரும்பறதா சொல்லறான் . சத்யாவுக்கு அவளுக்கு தெரியாமலே கல்யாணம் யாரோ ஒரு படிக்காத வனோட, முரடனோட நடந்திருக்கு. எதுக்கும் எதுக்கும் சம்மந்தம்? ஏன் இப்படி? நீதான்மா எல்லாத்துக்கும் வழி காட்டணும். கற்பூரத்தை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டு, குங்கும பிரசாத்தை வாங்கி கொண்டு, கபாலியையும் தரிசித்து வீடு திரும்பியவருக்கு உண்மையிலேயே மனம் லேசானது போல இருந்தது.
மனைவியின் முகத்தில் நேற்று முதல் இருந்த குழப்பங்கள் தீர்ந்தது போல இருந்தது தியாகுவுக்கு.
இருவரும் அமைதியாகவே உண்டு முடித்தனர். அப்போது சத்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
என்ன சத்யா இந்த நேரத்துல கூப்பிட்டுருக்க ?
அம்மா அப்பா கிட்ட குடுங்க,
ம்ம் , அவள் குரலில் இருந்த பதட்டம் இவரை கலக்கமடைய செய்தது.
சரிம்மா, நாங்க இப்பவே வரோம்.
என்னங்க ? நீ நாம மூணு பேருக்கு ஒரு செட் டிரஸ் எடுத்துக்கிட்டு உடனே புறப்படு . முத்துவோட பாட்டி இறந்துட்டாங்களாம்.
ஆச்சியா !
இல்ல அவங்க இல்ல. அப்பாவோட அம்மா.
என்ன என்ன ஆச்சு ?
அதெல்லாம் தெரியாது. உடனே கிளம்பு, நாம சத்யாவை கூட்டிட்டு கிளம்பனும்.
என்னதான் நடந்தது?
அன்று காலை கணவனுக்கு கஞ்சியும், வேக வைத்த பயறும் கொடுத்து விட்டு மகனை கிளப்பி பள்ளியில் விடுவதற்காக சென்ற போது , அவசர அவசரமாக காரமாய் மட்டன் குளம்பு வைத்து, மகனுக்கு தயார் செய்தார் அன்னை.
எங்கையாவது புருசனுக்கு ஆக்கி போடணுன்னு இந்த பொட்டச்சிக்கு நினைப்பு இருக்கா ? மேக்கப்பை போட்டுக்கினு கிளம்பி போய்ட்டா எவனையோ பாக்க. கூறு கெட்டவ என்று திட்டி கொண்டே மகனை மெதுவாக எழுப்பினார்.

என்னம்மா, உங்களுக்கு ஏதாவது வேணுமா ?
இல்ல ராசா, இத்தனை நாளு ஆஸ்பத்திரிலேயே இருந்து இருந்து நாக்கு செத்து போய் இருக்கும். ஆத்தா உனக்கு ஆசையா மட்டன் குழம்பு காரசாரமா செய்ஞ்சு வச்சுருக்கேன், ஒருவா சாப்பிடு ராசா,
வேண்டாம் என்று சொல்ல மனமில்லாதவர், இல்ல ஆத்தா இப்பதான் அவ எனக்கு கஞ்சியும் சுண்டலும் குடுத்துட்டு போனா. நான் அப்புறமா சாப்பிடறேனே ,
சரி,
மீண்டும் அடுத்த சில நிமிடங்களிலேயே திரும்பி வந்தார் இதையே வேறு விதமாக கூறினார். இப்படியே மூன்று முறை ஆனதும், கண்ணீர் சிந்தி தனது நாடகத்தை ஆரம்பித்தார்.

எப்போதுமே நல்ல சிவத்திற்கு அன்னையிடம் பயம்தான். அதையும் தாண்டி பாசமும் அதிகம். அதனாலேயே அன்னை தான் நினைத்ததை எல்லாம் மூத்த மகன் மூலம் சாதித்துக் கொண்டார். இயல்பிலேயே நல்ல சிவம் நல்லவராக இருந்ததால் இப்படி இருக்கிறார். இல்லையெனில் அவரும் தம்பி போலவே நாசமாகி இருப்பார் . அன்னையின் கண்ணில் கண்ணீரை கண்டதும், அவரால் தாங்க முடியவில்லை.
சரிம்மா, நான் சாப்பிடறேன், என்று மெதுவாக எழுந்து அமர்ந்து கொண்டார். நல்ல நேரத்தில் அவர் வாயில் வைப்பதற்குள் தேவி வந்து விட்டார். இவர் உண்ண போவதை ஜன்னல் வழியே பார்த்தவள், அவசரமாக ஓடி வந்தாள் .
அயோ அயோ இதென்ன அநியாயம்! என்னங்க இது இப்படி கார சாப்பாட்டை சாப்பிடறீங்க ? என்னங்க இது ?
வாடி போக்கத்தவளே, தாலி கட்டியவனுக்கு ஒழுங்கா பொங்கி போடாம ஊர் சுத்திட்டு வர்ற, நீ என்னடி இவனை கேள்வி கேட்கறது? என்று கொத்தாக அவள் தலையை பிடித்து ஆட்டினார்.
தன் மூத்த மனைவிக்கும் நடந்ததே இப்போது இவளுக்கும் ஆகி விடுமோ? பயம் மனதில் தொற்றிக் கொண்டது. என்னதான் அன்னையிடம் பயம் இருந்தாலும், இது வேறு மாதிரியான பயம்,. தன்னை அறியாமலே அவர் விடுங்கம்மா, அவளை தொடாதீங்க. எடுங்க கையை, அதட்டியேவிட்டார்.
தலையை திருப்பி விசித்திரமாக மகனை பார்த்தவர் நீயா என்னை மிரட்டியது என்பது போல கண்களை விரித்துபார்த்தார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட தேவி,
இவரை புழக்க வைப்பேன்னான்னு பயந்த பயம், எனக்குதான் தெரியும். இவரு என் புருசன் . என்ன ஆக்கி போடணும் எனக்கு தெரியும். நீங்க இதுக்கு வராதீங்க .
பளீரென்று கன்னத்தில் அறை விழுந்தது, இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை கணவனிடமிருந்து. என் மேல் என்ன தப்பு? வார்த்தைகள் கண்களில் இருந்து வந்தது. வாய் விம்மி அழுதது. புடவையை வாயில் பொத்தி அழுது கொண்டே சமையல் அறைக்கு ஓடினாள் ,
மகனின் இந்த புது நடவடிக்கை அன்னையால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
போடா போ, அதான பார்த்தேன்.
ஆஸ்பத்திரிக்கு போறேன் ஆஸ்பத்திரிக்கு போறேன்னு இவ உம் பின்னாடியே ஓடி வந்த போதே எனக்கு தெரியும், புருஷனுக்கும் முந்தானை விரிச்சு, புள்ள ..........அட சீ! இதெல்லாம் ஒரு பொழப்பு , காரி துப்பியவள்
இன்னும் காதில் கேட்க முடியாதபடி அசிங்கமான வார்தைகைளை நெருப்பாக அள்ளிக் கொட்டினார், வார்த்தைகளாக விழும் நெருப்பை விட உண்மையானதே தேவலாம் என்று க்ஷண நேரத்தில் முடிவெடுத்து அடுப்பை பற்ற வைத்து அதில் புடவையைப்பற்ற வைத்து விட்டார்,தேவி
மனைவியை அடித்தது மனம் தாங்காமல் சமாதான படுத்த வந்தவருக்கு அதிர்ச்சி, நெருப்பை அனைத்து மனைவியிடம் மனமார மன்னிப்பு வேண்டினார்.
அதே சமயம் இவர்களை திட்டிக் கொண்டே கடையில் புகையிலை வாங்க மெயின் ரோட்டிற்கு சென்ற கிழவி எதிரில் வந்த லாரியை கவனிக்கவில்லை, எதிர்பாராமல் நடுவில் வந்த கிழவியை அடித்து தூக்கி போட்ட லாரி நிற்காமல் போனது............
வாழ்க்கையில் கௌரவம் என்ற பெயரில் ஜாதி வெறி பிடித்த,பார்த்தவர்கள் அனைவரையும் தவறாக பேசி, நோகடித்தவரின் உயிரும் கண் மூடி திறப்பதற்குள் முடிந்து விட்டது. அந்த கிழவியால் ஆரம்பித்த நல்ல சிவம், தேவி , சத்யா,முத்து உறவு இனியாவது மேம்படட்டும் . ஆனால் இந்த குற்ற உணர்ச்சியில் இருந்து நல்ல சிவம் எப்படி மீளப் போகிறார்?

இதை பற்றி எதுவுமே தெரியாத கௌசிக், காலையிலே கிளம்பி மருத்துவமனைக் கட்டுவதற்ககு ஒரு கம்பனியிடம் பேச வேண்டி இருந்தது. அவர்கள் வந்து சந்திக்கிறேன் என்று சொன்ன போதும் இவன் மறுத்து அவனே நேரில் சென்றான். எப்போதுமே சரியான நேரத்திற்கு செல்பவன், அந்த அழகியால் சில நிமிடங்கள்ச் தாமதமாக சென்றான்,
சரியான நேரத்திற்கு வந்தவன் அந்த பெரிய காம்ப்ளெக்ஸில் உள்ளே நுழையும்போது எதிர்பாராதவிதமாக ஒரு மங்கையின் மேல் இடித்து விட்டான், அவள் கையில் இருந்த சான்றிதழ்கள் எல்லாம் கீழே விழுந்தது. அவள் இவன் முகத்தை பார்க்கவே இல்லை. ஆனால் அவன் பார்த்தான்.அதே பழைய தேவதைதான் என்று கண்டு கொண்டான், ப்ச், சாரி சாரி சார், என்று சொல்லிக் கொண்டே அனைத்தையும் அடுக்கிக் கொண்டாள் , நேரமானதால் இவனும் டென்ஷனாகவே இருந்தான். இருவரும் வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் அவன் அவள் பெயரை மட்டும் அறிந்துகொண்டான் சான்றிதழில் இருந்து..கயல் கயல் விழி .....


மீண்டும் வருவாள் தேவதை................
 

Latest Episodes

New Threads

Top Bottom