Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
ஒரு நிமிஷம் ஃப்ரெண்ட்ஸ்! அடுத்தப் பதிவு அனைவருக்கும் உவப்பானதாக இருக்குமா என்று தெரியவில்லை. சற்று காமகேளிக்கை கூடிய பதிவு. நாட்டமில்லாதவர்கள் அத்தியாயம் முப்பத்து நான்கிற்கு செல்லவும். அதன் ஆரம்பத்தில் முந்தைய பதிவின் கதைச்சுருக்கம் இருக்கும். புரிதலுக்கு நன்றி!
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
அவள் அவற்றை விலக்கப் பார்க்க,
சட்டென்று அவள் இதழ்களை தன் வசமாக்கினான் விக்கி. அதிர்ச்சியில் முதலில் எதிர்ப்புக் காட்டிய உத்ரா அவன் வன்மையிலிருந்து மென்மைக்கு மாறவும் அவன் இதழணைப்புக்குக் கட்டுப்பட்டாள்.

அவள் கீழிதழை ஐஸ்குச்சியில் ஒட்டப்பட்ட புளிப்புமிட்டாயைப் போல் அவன் சுவைத்து சுவைத்து மீள, கிறங்கி நின்றாள். அணைத்துத்தூக்கி கட்டிலில் கிடத்திய தருணமோ உடைகள் சரிந்து அழகிய ஓவியமாய் இன்னும் போதையூட்டினாள்.

பீனட் பட்டர் ஜெல்லிகளிலிருந்து நீர் கசியும் நுங்கு வரை அணுவணுவாய் ரசித்தவன் இருவருக்கும் மோகம் உச்சத்தை தொட்ட வேளையில் மிக மென்மையாக இன்பவாசலைத் திறக்கப் போராடினான்.

“ரொம்ப டைட் பண்ணி வச்சிருக்க உதி. லூஸ் விடு.”

“லூஸ் விட்டு அடிக்க இது என்ன மஞ்ஞுமல் பாய்ஸ் படமாடா? எனக்கு வலிக்குது. முடியல.”

அவனுக்கு ஒரு கணம் கொடைக்கானல், கூக்கால், அதனுள் குடில் என்று அனைத்தும் ஞாபகம் வந்து போனது.

தலையை உதறி, “இப்படி நீ டைட் பண்ணி வச்சிருக்கதால எனக்கும் ரொம்ப வலிக்குது உதி.”‌ என்றான்.

“என்ன உனக்கும் வலிக்குதா? ஏன்டா‌ அப்ப இதுல என்ன சுகம் இருக்குன்னு டஜன்‌ டஜன்னா அந்தக் காலத்துல கொழந்தப் பெத்துக்கிட்டானுக?”

“ஃபர்ஸ்ட் தான் அப்படியிருக்கும். அப்பறம் நீ எஞ்சாய் பண்ண ஆரம்பிச்சிருவ.”

“விக்கி டூ யூ லவ் மீ?”

“இந்த மாதிரி நேரத்துலலாம் பேசக்கூடாது உதி. மூடு போயிரும். அமைதியாயிரு!”

அவளுக்கு உணர்ச்சிகள் அனைத்தும் வடிந்துபோய் வெறும் வலி மட்டுமே மிஞ்சியது. அவனும் முயற்சித்துப் பார்த்து சலித்துவிட்டான்.

“இன்னைக்கு இது வேண்டாம் உதி. இன்னொரு நாளைக்கு பாத்துக்கலாம்” என்று எழுந்தபோது அவளுக்கு ‘ஷப்பா’ என்றிருந்தது.

ஏனோ அவனின் மனதை அறிய முதலில் இந்த உடலறிதல் முக்கியமாய்பட்டது அவளுக்கு.


கலைடாஸ்கோப் திரும்பும்…
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
சென்ற அத்தியாயத்திற்கு தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
இன்னும் ஆறு அத்தியாயங்களில் கதை நிறைவுபெறவிருக்கிறது ப்ரெண்ட்ஸ். கதை உங்களுக்கு பிடித்திருப்பின் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரைப்பீர்களாக!
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
முந்தைய பதிவின் சுருக்கம்:

உத்ராவும் விக்கியும் உடலளவிலான எல்லைகளைக் கடக்க முயற்சித்தார்கள். ஆனால், உச்சத்தை நெருங்கும் வேளையில் உத்ராவின் உணர்ச்சிகள் அதற்கு இடமளிக்கவில்லை.

அவள் அவனின் மனதை அறிய முதலில் இந்த உடலறிதலை முக்கியமாய் கருதியதின் விளைவே இது!

*************​
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

நாவலாசிரியர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 34


மறுநாள் அனைத்து செய்தித்தாள்களிலும் தங்கள் டிடெக்டிவ் ஏஜென்சி பற்றிய‌ செய்திகள் சொன்னபடியே கவனிப்பை பெறும் வகையில் அச்சடிக்கப்பட்டிருந்தது‌ திருப்தியாய் இருந்தது வேணிக்கு.

மகனும் மருமகளும் சிரித்த முகத்துடன் மின்தூக்கியிலிருந்து இறங்க, முகத்தைக் கோணினார்.

தன்னை கடந்துபோனவர்களை குறுக்கே சென்று நிறுத்தியவர் செய்தித்தாள் விசயத்திற்கு மகிழ்ச்சி தெரிவித்ததோடு தனது தோழிகள் அவர்களுக்கு திருமண விருந்து கொடுக்க விரும்புவதாகவும் கூறினார்.

நேற்று தன்னை விக்கியை விட்டு விலகுமாறு கூறியவர் இவர் தானா என்று பார்த்தாள் உத்ரா. தன்னிடம் ஒரு பேச்சு, மகனிடம் ஒரு பேச்சு என்றும் உள்ளுக்குள் பொருமினாள்.

விக்கி யோசித்துக் கூறுவதாகச் சொல்லிவிட்டு சாப்பாட்டு மேசைக்குச் சென்றான். அங்கு வேணி எந்த பிரச்சனையும் கிளப்பாமல் இருப்பது கண்டு உத்ரா குழம்பினாள். கீழே அவள் தன் கால்விரலால் விக்கியின் காலைத் தடவ, அவனின் கைவிரல் அவளின் பெப்லம் டாப்பை விலக்கி‌ இடையில் கோடு கிழித்து விளையாடியது.

அவள் கூச்சத்தில் நெளிந்துகொண்டே அவனின் தொடையில் நறுக்கென்று கிள்ளி அவதியுறச்செய்தாள்.

திடீரென அவர்களுக்கருகில் வந்த பாக்கியத்தைக் கண்டதும் கைகளை இழுத்துக்கொண்டார்கள் இருவரும்.

அவர்,‌ “இந்தாங்க தம்பி பாயாசம்” என்றொரு பாத்திரத்தை அவன் பக்கம் நகர்த்தி வைத்து ஒரு கிண்ணத்தில் அதை எடுத்து வைக்க,

“இன்னைக்கு என்ன விசேஷம்?” என்றான்.

“அம்மாவுக்கும் ஐயாவுக்கும் இன்னைக்கு கல்யாணநாள் தம்பி” என்று நினைவுபடுத்த, தனது அன்னையின் முகத்தை வேதனையுடன் பார்த்தான்.

அவர் உணவில் கவனமாயிருந்தார். அவரின் இன்றைய சாந்தத்திற்கு காரணம் அப்போது தான் தெரிந்தது உத்ராவுக்கு.

மாலையில் குடும்பமாக தங்கள் தந்தையின் கல்லறைக்குச் சென்று மாலை சார்த்திவிட்டு வரலாம் என்றவன் சொல்ல, வேணி உடனே சரியென்றார்.

வேணி தனது சோப்புத் தொழிற்சாலைக்குச் சென்றதும், விக்கியும் உத்ராவும் டிடெக்டிவ் ஏஜென்சிக்குச் சென்றார்கள்.

அனைத்து கோப்புகளையும் ஒருமுறை சரி பார்க்கும் பெரும்வேலை உத்ராவின் தலையில் விழுந்தது. அவள் ஒவ்வொரு அலமாரியாகச் சென்று கோப்புகளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்க, விக்கி அவளை தொல்லை செய்ய ஆரம்பித்தான்.

கையில் கோப்போடு நின்றிருப்பவளின் முதுகில் மீசையால் கூசுவது, இடையில் கிள்ளுவது, முகத்தில் முத்தம் கொடுப்பதென்று சில்மிசம் செய்து கொண்டிருந்தான்.

அப்போது டிடெக்டிவ் ஏஜென்சியின் எண்ணிற்கு அழைப்பொன்று வர, ஏற்றுப் பேசினான். யாரோ திருநகரிலிருந்து பேசுகிறார்களாம். அவர்களின் நாயொன்று சமீபத்தில் காணாமல் போய்விட்டதாம். காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்திருந்தாலும் அதில் நம்பிக்கையின்றி அவனிடம் அதைக் கண்டுபிடித்துத் தரச்சொல்லி கேட்கிறார்களாம்.

விக்கி இதைக் கேட்டதும் அசட்டையாக, “இங்க நாங்க கொஞ்சம் பிஸியா இருக்கோம். நீங்க வேற டிடெக்டிவ் ஏஜென்சிய கான்டாக்ட் பண்ணுங்க ப்ளீஸ்!” என்று அழைப்பை கத்தரித்தான்.

உத்ரா அவனின் பதிலில் கடுப்பானது தெரியாமல் கழுத்தில் அவன் முகம் புதைக்க, “விக்கி ப்ளீஸ் என் வேலைய என்ன செய்ய விடுறியா? எல்லாத்துக்கும் ஒரு நேரமிருக்கு. இப்படி நீ தொந்தரவு செஞ்சுக்கிட்டே இருப்பனா நாளைலயிருந்து நம்ம இங்க வரவேணாம். நம்ம பெட்ரூம்லயே இருந்துக்கலாம். இது தொழில் பண்ற எடம். இதுக்குனு ஒரு மரியாத இருக்கு, தர்மம் இருக்கு. நீயும் ஒரு கம்பெனிக்கு சிஇஓவா இருந்தவன் தான?” என்று எரிச்சலாகக் கேட்டதில்‌, அவனுக்கு கோபம் சுர்ரென்று ஏறியது.

“இப்படி தான் ஒவ்வொரு தடவயும் என் செல்ஃப் ரெஸ்பெக்ட்ட சீண்டிப் பாத்து என்ன எல்ல மீற வச்சிடுற உதி. ஆமா உன் பிரச்சன தான் என்ன? நேத்து தொடவே மாட்டிக்கிறேனு குதிச்ச. இன்னைக்கு தொடுறேனு குதிக்கிற.”

“என் பிரச்சன தான? சொல்றேன். எனக்கு என் புருஷன் இப்படி என் டாப்ஸப் பிடிச்சிட்டு மாலா மாலானு சுத்துறது சுத்தமாப் பிடிக்கல போதுமா? அவன் அவனோட தொழில்ல தனித்துவமாத் தெரியனும். இப்ப உன்னால என் பிரச்சனைய தீத்து வைக்க முடியுமா விக்கி?”

“ஏன்டா உன்ன கல்யாணம் பண்ணோம்னு இருக்கு. அன்னைக்கு நீ என்ன ஒதவாக்கர, சட்டைய உரிக்கறதனால பல்லி பாம்பாகாது, இவன் வாசன் சார் மாதிரி கெடையாதுனு பட்டியல் போட்டு வெறுப்பேத்திருக்க வேணாம்.” என்று துயரமாக சொன்னவன் வேகமாக‌ வெளியேறினான்.

உத்ராவுக்கு அவனின் போக்கு எதுவும் சரியாய் படவில்லை. அவன் செய்வதனைத்தையும் நல்ல முறையில் அணுக நினைத்தாலும் அவனே அதற்கு முட்டுக்கட்டைப் போடுவது அயர்வைத் தந்தது.

அவள் வேலைப்பளுவில் சற்று விக்கியை மறந்திருந்த சமயம் அவனின் சித்துவேலையொன்று தட்டுப்பட்டது. மகேஷை தனது நிறுவனத்தில் சந்திக்கச் செல்லும்முன் அவன் தங்கள் தொழிற்நுட்ப வல்லுநர் குழுவிடம் கேட்டிருந்த, மகேஷின் அலைபேசித் தொடர்புகள் பற்றிய தரவுகளின் நகலொன்று சம்பந்தமே இல்லாமல் ஒரு கோப்பிற்குள் மடக்கி வைக்கப்பட்டிருந்தது. விரித்துப் பார்த்தவள் விக்கியைக் கழுவி ஊற்றினாள்.

“ஓ! இதுக்கு தான் சார் ஐ.டி கம்பெனிக்குப் போனீங்களா? சீக்கிரமே உன்ன சிஇஓவா பொறுப்பேக்கவும் போக வைக்கிறேன்டா” என்று சபதமெடுத்தாள்.

ஆனால், அதற்கு மேல் அவளால் அந்த வேலைகளைத் தொடர முடியவில்லை. தனது அன்னையைப் பார்க்கச் சென்றாள்.

மகள் வீட்டிற்கு வந்ததும் விழுந்து விழுந்து கவனித்த பானுமதி அவளிடம் தற்போது உதய்கிருஷ்ணாவின் நிலை என்னவென்று விசாரிக்க, “நீங்க இப்டில்லாம் விசாரிப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் என் ஆஃபிஸ்லயே கவுந்தடிச்சி படுத்திருப்பேம்மா. என் தலவலிய இன்னும் அதிகப்படுத்தாதீங்க ப்ளீஸ்” என்று முகத்தைச் சுண்டினாள்.

“சரிம்மா, சரிம்மா. அப்பறம் நீ கோவிச்சிக்க மாட்டேன்னா அம்மா ஒன்னு சொல்லுவேன் உதி. அது வந்து உனக்கு இப்பவே வயசு முப்பதாகுது. இன்னும் நீ நாள் தள்ளிப் போட்டீன்னா உனக்கு தாம்மா பின்னாடி கஷ்டம்” என்றதும்,

அவர் குழந்தையைப் பற்றி தான் சுற்றி வளைக்கிறார் என புரிந்துகொண்டவள் ‘கொழந்த என்ன பின்னாடியா பொறக்கப்போகுது. முன்னாடி தான பொறக்கும்?’ என்று வேடிக்கையாக நினைத்தாள்.

“என்ன உதி அம்மா சொல்றது புரியுதா?” என்று ரகசியக்குரலில் கேட்கவும்,

“இன்புட்டே குடுக்கலையாம். இதுல எங்கயிருந்து நான் அவுட்புட் பிரச்சன பத்தி யோசிக்குறது?” என்று சலித்தாள்.

“என்னது இன்புட்? அவுட்புட்?” என்றவர் கேள்வியெழுப்ப, அவசரப்பட்டு பதிலளித்த தன் முட்டாள்தனத்தை நொந்தாள்.

“எனக்குத் தெரியும்மா.” என்று சமையலறையிலிருந்து சத்தமாகக் கத்தினாள் கவிலயா.

“அப்டினா என்னடி?” என்றவர் விசாரிக்கும்போது நல்லவேளையாக கவின் வந்து அவளைக் காப்பாற்றினான்.​
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93

வேலை முடிந்து வீட்டிற்குள் நுழைந்தவனிடம் மகேஷைப் பற்றி தூண்டித் துருவினாள் உத்ரா. அவனோ பல திடுக்கிடும் தகவல்களைக் கூறினான்.

“நானே உன்கிட்ட சொல்லனும்னு இருந்தேன் க்கா. அந்த மகேஷ் இருக்காரே? அவர் அவ்வளவு நல்லவர் கெடையாது போல தெரியுது. இங்க எல்லாம் அவர் ராஜ்ஜியம் தாங்கிறனால நெறைய கோல்மால் வேல பண்றார் போல. வொர்க்கர்ஸையும் வேலைல போட்டுக் கொல்றாராம். ஆனா, போனஸ், அப்ரைஸல், ஹைக், பார்ட்டினு ஒன்னும் கெடையாதாம். விக்கி இருந்த வர கம்பெனி இவ்ளோ கெடுபிடி இல்லனு வொர்க் ப்ரஸர்ல தெணறுறாங்க. மறுபடியும் விக்கி வந்து கம்பெனிய டேக்கோவர் பண்ண மாட்டாரான்னு ஏங்குறாங்க.”

“உண்மையாவா சொல்ற? நஷ்டத்துல ஓடுற கம்பெனில என்னடா வொர்க் ப்ரஸர் இருக்கப்போகுது?”

“நஷ்டமா? யார் சொன்னது?”

“நேத்து அந்த மகேஷ் தான் சொன்னான்.”

“போக்கா! எங்க கம்பெனில இருந்து போன மாசம் கூட புதுசா அம்பது கம்ப்யூட்டர்ஸ் ஆர்டர் பண்ணாரு. அதெல்லாம் திருமங்கலம் பிராஞ்சுக்குனு சொன்னாரு. இவரு அங்கவொரு ஸ்டார்ட்-அப் கம்பெனி ஆரம்பிச்சிருக்காருன்னு நெனைக்கிறேன் க்கா.”

“என்னடா சொல்ற? இதெல்லாம் இந்த விக்கிக்கு தெரியுமானு தெரியலயே? சரி, எது எப்டினாலும் இனி நீ இந்த விசயத்தப் பத்தி யார்கிட்டயும் பேசிக்காத சரியா? உன் வேலைக்கு உலையாக்கூட முடியலாம்.” என எச்சரிக்கவும், புரிந்துகொண்டவன் போல் தலையாட்டினான் கவின்.

அப்போது விக்கியிடமிருந்து தனக்கு வந்த தவறிய அழைப்பைப்‌‌ பார்த்துவிட்டு, அவனை எளிதில் வழிக்குக் கொண்டுவந்து விடலாம் என்ற நம்பிக்கையில் வெட்கப்புன்னகை சிந்தினாள்.

அப்படியே வாட்சப்பில் அவனுக்கு ‘சாரி’ என்று தகவலையும் அனுப்பினாள். அவன் பார்த்தானேயொழிய பதிலளிக்கவில்லை.

கவின் தனது இருசக்கர வாகனத்தில் அவளை அவளின் புகுந்தவீட்டில் வந்து இறக்கிவிடவும் தயாராக நின்றிருந்த வேணியும் விக்கியும் வாசனின் கல்லறைக்கு‌ அவளை காரில் அழைத்துச் சென்றார்கள்.

உர்ரென்றே இருந்த விக்கி அங்கு கிரானைட் கல்லில் செதுக்கப்பட்டிருந்த வாசனின் முகத்தைப் பார்த்ததும் நெகிழ்ந்தான். பெரிய ரோஜாப்பூ மாலையை அவர் கல்லறைக்கு சார்த்தியவன் கைக்கட்டி மௌன அஞ்சலி செலுத்தினான்.

அதே நேரம் உத்ரா மனதிற்குள் உருக்கமாய் வேண்டினாள். ‘உங்கப்புள்ளைய எந்த நம்பிக்கைல என் தலைல கட்டனும்னு நெனச்சீங்களோ தெரியாது. ஆனா உங்க அளவுக்கு எனக்கு தெறமையும் பலமும் கெடையாது வாசன் சார். என் முன்னாடி இப்ப நெறைய முடிச்சுக விழுந்து கெடக்கு. அத நான் ஒன்னொன்னா அவுக்கறதுக்கான வழிய நீங்க தான் காட்டனும்” என்று மனதார வேண்டிவிட்டு அருகில் பார்த்தாள். வேணி தனது கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தார்.

உத்ராவுக்கு விக்கி ஏன் தன் அன்னையிடம் இவ்வளவு ஒதுக்கம் காண்பிக்கிறான் என்று மட்டும் குழப்பமாகவே இருந்தது.

அவர்கள் இடுகாட்டிலிருந்து வீட்டிற்கு வந்ததும் இரவு உணவை முடித்து விட்டு தங்களது அறைகளுக்குச் செல்ல, விக்கி விறைப்பாக இரவு உடையை மாற்றிக்கொண்டு வந்து படுத்தான்.

உத்ரா அன்று தான் கழற்றிப் போட்டிருந்த சாட்டின் இரவு உடையை அணிந்துகொண்டு ஒயிலாக நடந்து வந்தாள்.

படுத்த வாக்கிலேயே அலைபேசியை நோண்டிக்கொண்டிருந்தவன் அவளின் திட்டத்தைப் புரிந்தவனாய் முறுக்கினான். அவளோ கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தாள். அவனுக்கு தான் தன் கட்டுப்பாட்டை இழப்பது போல் தோன்றியது.

அவள் அவனை கிறக்கமாகப் பார்த்துக்கொண்டே தனது வலத்தோளிலிருந்த மெல்லிய பின்னற்பட்டியை அவிழ்த்துவிட கண்களை மூடிக்கொண்டான்.

சிரித்துக்கொண்டே கட்டிலில் வந்து விழுந்தவள் எக்கி அவனின் மூக்கைக் கடித்தாள், “பேட் பாய்” என்று.

“பேட் பாய் இல்ல, பிளே பாய்!” என்று கண்களை திறந்தவன் தன் விளையாட்டுகளை ஆரம்பித்தான்.

அவளின் மாதுளை முத்துக்களையொத்த இதழ்களிலிருந்து சாறு பொங்கி வழிந்தது. அப்படியே வழவழத்த உடை தன்னைவிட்டு நழுவுவதையும் அவளால் உணரமுடிந்தது.

“நேத்து மாதிரியே பண்ணப்போறியா விக்கி? வலிக்குமா இன்னைக்கும்?”

“உன்ன நேத்தே நான் என்ன சொன்னேன் உதி? இந்த மாதிரி நேரத்துல பேசக்கூடாதுனு சொன்னேனா இல்லயா?”

“ஆமா ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர் இவரு? போடா!”

அவன் நேற்றுபோல் அவளுக்குள் புக முயல, இன்றும் அவளின் பயம் இடம் கொடுக்கவில்லை. பெரும் ஏமாற்றத்துடன் அவளை விட்டான்.

ஆனால், உத்ராவுக்கு அவனின் அணைப்பின் சுகம் தேவைப்பட்டதால் அவனை‌ கட்டிக்கொண்டு கிடந்தாள்.


கலைடாஸ்கோப் திரும்பும்…

 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
உங்களுக்கான அத்தியாயம் முப்பத்தைந்து இதோ....
 
Status
Not open for further replies.

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom