Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

Status
Not open for further replies.

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 6

அன்று கோடை விடுமுறை முடிந்து அனைவரும் பள்ளிக்கு திரும்பவும் வரும் நாள். தமிழினி இரண்டு வருடங்களாக உற்சாகமாய் சென்றாள். ஆனால், இன்றோ அவளுக்கு பள்ளிக்கு செல்வதற்க்கு ஏனோ மனம் ஒப்பவில்லை.

காரணம் தெரிந்தது தானே, அமுதன் இனிமேல் வரமாட்டான் என்பதால் சோகமாகவே இருந்தாள். பள்ளிக்கு கிளம்பி நடந்து செல்லும் வழியில், அன்று அமுதன் அவளிடம் வந்து கேட்டது அவளுக்கு திரும்பவும் நினைவுக்கு வந்தது.

அப்பொழுது தமிழினி மாடுகளுக்கு கழனித் தண்ணீரை குடிக்க கலந்து கொண்டிருந்தாள். அமுதன் ஓடி வருவதைப் பார்த்தாள்.

மூச்சிரைக்க ஓடி வந்தவன், “தமிழு.. தமிழு..” என்றான்.

“ஏண்டா நண்பா, இப்படி ஓடி வர.? என்ன விஷயம்.?” என்று அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“உன்கிட்ட.... கொஞ்சம்... பேசணும்..” என்று அவனுக்கு இன்னும் மூச்சு வாங்கிக்கொண்டிருக்க.

“இரு.. நீ முதல்ல தண்ணி குடி வா..” என்று சொன்னவள், கைகளைக் கழுவிக்கொண்டு அவனை அழைத்துக்கொண்டு போய் திண்ணையில் அமர வைத்தாள்.

உள்ளே சென்றவள், அவன் குடிக்க தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து தந்தாள். அதை வாங்கி மடக், மடக்கென்று குடித்தவன், தன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தான். அவனிடம் சொம்பை வாங்கி வைத்தவள்,

“இப்போ சொல்லு டா நண்பா..” என்றாள்.

“தமிழு.. எங்க அத்த ஊர்ல இருந்து வந்திருக்காங்க. என்னை அவங்க கூட கூட்டிட்டு போறாங்களாம். அங்கயே என்னை பள்ளிக்கூடத்துல சேர்த்து விடறாங்கன்னு அப்பாகிட்ட சொல்லியிருக்காங்க. அப்பாகிட்ட கேட்டேன், அவர் உன் இஷ்டம். நீயே முடிவெடுன்னு சொல்றார். நான் இப்போ என்ன பண்றது தமிழு.? எனக்கு உன்னை, அப்பாவ, நம்ம ஊர விட்டுட்டு போக மனசே இல்ல. எனக்கு இங்க இருக்கறதுதான் பிடிச்சிருக்கு. ஆனா, அத்த கேட்க மாட்டங்க. அப்பாதான் நீ அங்க போய் இருந்துட்டு அப்பறமா அவங்க கிட்ட பேசுன்னு சொல்றார். நான் என்ன பண்ணட்டும்.?” என்றான் பாவமாக.

அமுதனை நினைக்கையில் பாவமாய் இருந்தது தமிழினிக்கு. சிறிது நேரம் யோசித்தவள், “அய்யா சொல்றதுதான் சரி. நீ அங்க போயிட்டு உனக்கு என்ன தோணுதோ அதையே செய். நீ எந்த முடிவெடுத்தாலும் எனக்கு சரிதான் நண்பா.” என்றாள் சிரித்துக்கொண்டே.

“எனக்கு உன்னை நினைச்சா தான் பாவமா இருக்கு தமிழு. நான் மட்டும் தான் உனக்கு ஃப்ரெண்டா இருக்கேன். வேற யாருமே உன்கிட்ட பேசமாட்டிங்கறாங்க. நானும் அங்க போயிட்டா, நீ என்ன பண்ணுவ.?” என்று வெள்ளந்தியாய் கேட்ட அமுதனை நினைத்து அவளுக்கு உள்ளுக்குள் அழுகையே வந்தது. ஆனால், அதை வெளிப்படுத்தினால் எங்கே அவன் செல்ல மாட்டானோ என்று நினைத்தவள்,

“இல்லடா நண்பா. இப்போ கொஞ்சம் பேரு என்கிட்ட நல்லா தான் பேசறாங்க. விளையாடறாங்க. நான் சமாளிச்சுக்குவேன். நீ நல்லபடியா போயிட்டு வா. நீ இங்க வந்தா நாம் ரெண்டு பேரும் பார்க்கலாம். சரியா.?” என்று அவனை சமாதானப்படுத்தும் நோக்கில் பேசினாள்.

“சரி, தமிழு. நான் அங்க போயிட்டு சொல்றேன். நீ பார்த்து இரு. அம்மா, அப்பாவப் பார்த்துக்கோ. எங்க அப்பாவையும் பார்த்துக்கோ. அப்பா, நான் இல்லைன்னா ரொம்ப கஷ்டப்படுவார்.” என்று கண்கள் கலங்கினான்.

“டேய்.. எதுக்கு டா அழுகுற. நான் அய்யாவ பார்த்துக்கறேன். நீ பத்திரமா போயிட்டு வா.. நல்லா படி. என்னை மறந்துடாத டா நண்பா..” என்று அவளும் சற்று கண்கள் கலங்க,

“அப்படியெல்லாம் சொல்லாத தமிழு. என்னோட சிறந்த தோழி நீதான். உன்னை எப்படி நான் மறப்பேன். நான் இங்க வந்தா கண்டிப்பா உன்னைப் பார்க்க வரேன்.” என்றான்.

“சரிடா நண்பா..” என்று முதன் முறை பேசிய போது செய்தவாறே, தலையை ஒருபுறமாய் ஆட்டிச் சிரித்தாள் தமிழினி.

அதைப் பார்த்ததும் அமுதன் சிரித்துவிட்டான். அவளும் சிரித்து அவனை வழியனுப்பினாள். அதை நினைத்துப் பார்த்துக்கொண்டே பள்ளிக்கு வந்து சேர்ந்தாள்.

மூன்றாம் வகுப்பில் இருந்த அனைவரும், இப்போது அப்படியே நான்காம் வகுப்புக்கு சென்றிருந்தனர். அனைத்து பிள்ளைகளும் அவர்வர் இடத்திலேயே மாறாமல் அமர்ந்திருக்க, அவள் எப்போதும் அமரும் கடைசி பென்ச்சில் சென்று அமருவதற்க்காக குனிந்து கொண்டே வந்தவள், அங்கே இன்னொரு பை இருப்பதைப் பார்த்தாள்.

நிமிர்ந்தவளுக்கு ஆச்சர்யம், அமுதன் அங்கே சிரித்துக்கொண்டே அமர்ந்திருந்தான். “தமிழு..” என்றான். தமிழினிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

தான் அணிந்திருந்த பள்ளிப்பையை அவசரமாகக் கழட்டியவள், “டேய் நண்பா.. வந்துட்டியா.? எப்போ வந்த.? அங்கயே பள்ளிக்கூடத்துல சேர்ந்துடுவேன்னு சொன்ன.?” என்றாள்.

“ஆமா, தமிழு..” என்று அவன் சொல்ல ஆரம்பிக்கும் போதே, “டிங்டிங்டிங்டிங்டிங்...” என்று மணி ஒலிக்க, அனைவரும் காலை பிரார்த்தனைக்கு ஓடினர்.

“சரி வா போலாம். மணி அடிச்சிடுச்சு. நான் உனக்கு சாயங்காலம் சொல்றேன்.” என்று சொல்ல, இருவரும் சேர்ந்து சென்றனர். எப்படியோ அவன் வந்துவிட்டான் என்ற உற்சாகமும், சந்தோஷமும் அவள் முகத்தில் நன்றாகவே தெரிந்தது.

அன்று உற்சாகமாய் முதல் நாள் பள்ளி வகுப்பை ஆரம்பித்தனர். புதிதாய் ஒரு ஆசிரியை வந்திருந்தார் வகுப்புக்கு.

“வணக்கம் பசங்களா, நான் தான் உங்களோட வகுப்பு ஆசிரியை வடிவுக்கரசி. நான் இப்போதான் புதுசா உங்க பள்ளியில் சேர்ந்திருக்கேன். உங்களுக்கு பாட்த்துல ஏதாவது சந்தேகம் இருந்தா கண்டிப்பா என்கிட்ட தைரியமா கேட்கலாம். நான் எதுவும் சொல்ல மாட்டேன். நீங்க என்னப் பார்த்து பயப்படத் தேவையில்ல. உங்களுக்கு நிறைய விஷயங்கள தினமும் கத்துக் கொடுப்பேன். நீங்க எல்லாரும் என்ன பண்ணனும்னா அதை தினமும், வீட்டுக்குப் போய் படிக்கணும். சரியா..” என்று அவர் சொல்ல,

அனைத்து பிள்ளைகளும் ஒன்று சேர, “சரிங்க டீச்சர்..” என்று கத்தினர்.

“சரி.. எனக்கு ஒவ்வொருத்தரா உங்கள அறிமுகப்படுத்திக்கோங்க. அப்போதான, நான் உங்கள பேர் சொல்லிக் கூப்பிட முடியும்.” என்று அவர் சொல்ல, அவர் பேசும் விதம் அனைவருக்கும் பிடித்துப் போனது.

ஒவ்வொருவராய் ஆரம்பித்து சொல்லி முடிக்க, கடைசி பென்ச்சில் இருந்த அமுதனும், தமிழினியும் அவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

“நீங்க ரெண்டு பேர் மட்டும் ஏன் தனியா உட்கார்ந்து இருக்கீங்க.? நீ பொண்ணுங்க இருக்கற இடத்துலயும், நீ பசங்க இருக்கற இடத்துலயும் தான உட்காரணும்.?” என்று தன் கேள்வியை முன் வைத்தார் அவர்களிடம்.

அமுதன் எழுந்து நின்று, “இல்ல டீச்சர். இவ கிட்ட யாருமே பேசமாட்டாங்க, உட்காரமாட்டாங்க. அவ பாவம் தானே டீச்சர். எங்க அப்பாதான் இனிமேல் நீ அவகூட தான் உட்காரணும்னு சொன்னார். அதானால தான் டீச்சர் அவ கூட உட்கார்ந்திருக்கேன்.” என்றான்.

அப்போதுதான், அழகேசன் அவரிடம் தமிழினியைப் பற்றி கூறியது நினைவுக்கு வந்தது. “நீ தான் அழகேசன் வாத்தியாரோட பையனா.?” என்றார் அவர்.

“ஆமாங்க டீச்சர்.” என்றான் அமுதன் கைகளைக் கட்டிக்கொண்டு பவ்யமாக.

“இங்க பாருங்க, பள்ளிக்கூடத்துக்கு வந்துட்டா, நீங்க எல்லாரும் ஒண்ணுன்னு நினைக்கனும். கூட படிக்கற எல்லா பிள்ளைங்களையும் ஒண்ணாதான் பார்க்கணும். அப்பா, அம்மா சொல்றாங்கன்னு யாரையும் ஒதுக்கி வைக்கக் கூடாது. சில சமயம் அம்மா, அப்பா கூட தப்பு பண்ணுவாங்க. அதனால, நீங்க எல்லாருமே தமிழினி கூட நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆ இருக்கணும். சரியா.. நீங்க யார் யாரெல்லாம் அவ கூட ஃப்ரெண்ட் ஆகறீங்களோ அவங்களுக்கு ஒரு பரிசு குடுப்பேன். இப்போ பாருங்க, அமுதன் தான் முதல்ல என்கிட்ட இருந்து பரிசு வாங்கப் போறான். இங்க வா அமுதன். நீயும் வா தமிழினி.” என்று அவர்களை அழைத்தவர் இருவரையும் கைகள் கொடுத்து குலுக்கச் சொன்னார். பிறகு, இருவருக்கும் தன் பையில் வைத்திருந்த ஒவ்வொரு லெட் பேனாவை அளித்தார்.

“எல்லாரும் இப்போ அமுதனுக்கு கைத்தட்டுங்க.” என்று சொல்ல, அனைவரும் கைத்தட்டினர்.

“அவன் தான் தமிழினியோட முதல் ஃப்ரெண்ட். இதே போல யாரு யாரெல்லாம் தமிழினிகிட்ட தினமும் கைக்கொடுத்து ஃப்ரெண்ட் ஆகறீங்களோ அவங்களுக்கும் இதே மாதிரி பரிசு கொடுப்பேன்.” என்று சொன்னதும், இந்த முறை பிள்ளைகள் அனைவரும் சொல்லாமலேயே கைத்தட்டினர். அவர் சிரித்தார். தமிழினியின் மனதில் அன்று முதல் வடிவுக்கரசி டீச்சர், எவரெஸ்ட் சிகரத்தைப் போல் உச்சியில் அமர்ந்து கொண்டார். தெய்வமாக நினைத்தாள் அவரை.

அவரிடம், “ரொம்ப நன்றி டீச்சர்..” என்று கண்கள் கலங்க சொன்னவளின் கண்களைத் துடைத்து விட்டு, அவளைத் தழுவிக் கொண்டார். இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவளும், எந்தப் பிள்ளைகளும். அதே போல், அனைத்தையும் வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தார் அழகேசன்.

இது அனைத்துமே, அவர் சொல்லியே வடிவுக்கரசி செய்தார். தமிழினியை இன்றும் அனைவரும் ஒதுக்கி வைப்பதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றே இந்த ஆண்டு முடிவெடுத்திருந்தார். புதிதாக வந்த வடிவுக்கரசியோ மிக எளிமையாகவும், நன்றாகவும் பேசவே இவர்களைப் பற்றி அவர் சொன்னார். அப்போதே, அவரும் கண்டிப்பாக அவளுக்கு உறுதுணையாய் நிற்பேன் என்று வாக்களித்தார். அதன் படி இன்று பிள்ளையார் சுழி போடப்பட்டது.

மதிய உணவு வேளை முடிந்து வந்த போது, சில மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வந்து ஓரமாய் வைத்தபடி இருந்தனர். அனைவருக்கும் புதிய புத்தகங்கள் அளிக்கப்பட்டது. அனைவரும் புதிய புத்தகத்தின் வாசனையை உணர்ந்தவாறே, ஆவலுடன் ஒவ்வொரு பக்கங்களாய் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அனைவரின் பெயரையும் அவர் எழுதிக்கொள்ளச் சொல்ல, பென்சிலில் பெயரை எழுதிக்கொண்டனர். என்னென்ன நோட்டுகள் வாங்க வேண்டுமென்று போர்டில் எழுதினார் வடிவுக்கரசி. வழக்கம் போல் அமுதன் மட்டுமே எழுதிக்கொண்டான். ஏனென்றால், அதை எப்பொழுதுமே வாங்கிக்கொடுப்பது அழகேசன் தான்.

முதல் வகுப்பில் ஆரம்பித்து, இப்போது வரை அழகேசன் தான் தமிழினிக்கு நோட்டுகள் வாங்கிக் கொடுத்தது. அதனால், அமுதன் தான் அனைத்தையும் எழுதிக்கொள்வான். அதை முன்னரே ரங்காவிடமும், கோகிலாவிடமும் சொல்லிவிட்டார்.

அவர்கள் ஒத்துக்கொண்ட பிறகே, அவர் அவளுக்கு எல்லாம் செய்தார். பள்ளிக்கு அவள் போடும் சீருடை முதற் கொண்டு, பள்ளிக்குத் தேவையான பொருட்கள், பள்ளிக்கு கொண்டு செல்லும் பை, என்று அனைத்தையுமே இரண்டாகவே வாங்கி விடுவார் அழகேசன்.

தன்னால் முடிந்தது என்று அவரால் இயன்ற உதவிகளை அவளுக்கென்று செய்து வந்தார். இப்போது, வடிவுக்கரசியும் அவளுக்கென்று உதவி செய்ய முன் வந்ததைக் கண்டு அவள் மிகவும் சந்தோஷப்பட்டாள்.

இருவரும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, இருவரும் அன்று நடந்தவைகளை இருவரும் அசை போட்டபடி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போதுதான் நினைவு வந்தவளாய் தமிழினி கேட்டாள், “டேய் நண்பா என்னதான் ஆச்சு.? அத்தை எப்படி உன்னை அனுப்பினாங்க.?” என்று கேட்க,

அமுதனோ, “நான் வீட்டுக்குப் போயிட்டு துணி மாத்திட்டு தோப்புக்கு வரேன். அங்க உட்கார்ந்து நாம் ஜாலியா பேசலாம். சரியா.?” என்றான் ரகசியத்துடன்.

“ஹூம்ம். ஏண்டா, இப்பவே சொன்னா ஆகாதா.? தோப்புக்கு போய் தான் சொல்லுவியா.?” என்று அவனைத் திட்டிக் கொண்டே அடிக்க வர, அவன் ஓடியே விட்டான்.

“டேய்ய்.. நில்லுடா எருமை..” என்று கோபத்தில் விடும் மிருக வார்த்தைகளை உபயோகித்தாள்.

அவன் தயாராகி தோப்புக்கு வந்து விட்டான். அவளும் ஒரு கரும்பு கட்டையை எடுத்துக்கொண்டே தயாராக வந்தாள்.

“எதுக்கு தமிழு, இந்தக் காஞ்ச கரும்பு கட்டை.? ஏதாவது புலியோ, நரியோ வந்துடும்னு எடுத்துட்டு வந்தியா.?” என்றான்.

“ம்ம்.. வாடா. உனக்காகத்தான் எடுத்துட்டு வந்தேன். அப்போ ஓடிட்ட இல்ல. அதான் எடுத்து வந்தேன் உன்னை அடிக்க.” என்று அவள் அதை வைத்து ஓங்க, அவன் அதை பிடுங்கிக் கொண்டான்.

“டேய். குடுத்துடு. இல்ல, அய்யாகிட்ட சொல்லிடுவேன்.” என்றாள் மிரட்டலாக.

அவனோ சிரித்துக்கொண்டே சென்று ஒரு பக்கமாய் அமர்ந்து கொண்டு கொக்கனித்தான். அவள் அவனை முறைத்தாள்.

“தமிழு நான் அங்க நடந்தத சொல்லட்டுமா.?” என்றதும், அவள் சிலுப்பிக்கொண்டே திரும்பினாள்.

“ஏய்.. கோச்சுக்காத தமிழு. நான் உனக்காகத்தான் வந்துட்டேன் தெரியுமா.? ஆனா, நீ கோவிச்சுக்கற.?” என்றான் பாவமாக.

கொஞ்சம் சமாதானமாய், “சரிடா சொல்லு.” என்றாள்.

அமுதன் நடந்ததை விவரித்தான். அங்கே சென்று இருந்த மூன்று நாட்கள் மட்டுமே அவனுக்கு எப்பொழுதும் போல் இருந்தன. அதன் பிறகு ஒவ்வொருவரும் ஒவ்வொரு தடவை அவனிடம் நடந்து கொண்டவை அவனுக்குப் புதிதாய் தெரிந்தன.

அத்தை அவரது வேலையாக இருப்பார். அமுதனும், கோலாவும் இதுவரை பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோடு விளையாடுவர். குமாரசாமியோ, பெரிய பசங்களோடு கிரிக்கெட் விளையாடக் கிளம்பி விடுவான்.

இந்த முறை அமுதன் அங்கே உள்ள பெண் பிள்ளைகளோடு விளையாடுவதைப் பார்த்தால், கோலாகலம் அந்தப் பிள்ளைகளை அடித்து விடுவது, கிள்ளி விடுவது, என்று ஒரே ரகளையானது. அமுதனுக்கு வெளியே போய் விளையாட முடியாமல் போனது.

கோலாவோ, அவளோடு மட்டுமே விளையாட வேண்டும் என்று சொல்ல, அவனுக்கு அவளைப் பிடிக்கமலே போனது. அவளோடு பேசவே இல்லை. அவள் அழுது, ஆர்ப்பாட்டம் செய்து வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்ல, பெரியவர்களோ நன்றாகவே அமுதனைத் திட்டி விட்டனர்.

“எங்க கோலாவையே நீ வேணாம்னு சொல்றியா. உனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.? உன்னையெல்லாம் வைச்சிருக்க வேண்டிய இடத்துல வைச்சிருக்கனும். உன்னைக் கூட்டிட்டு வந்தாள்ல அவள சொல்லணும்.” என்று நடேசனின் அம்மா சொல்ல அமுதன் அழுதே விட்டான்.

விசாலாட்சி சமாதானம் செய்தும் அவன் அதை கண்டுகொள்ளவே இல்லை. அவனுக்கு உடனே ஊருக்கு வந்து விட வேண்டும் போல் இருந்தது. அன்று முழுக்க, யாருடனும் பேசாமல், சாப்பிடாமல் இருந்தான்.

(தொடரும்...)

வார்த்தைகளின் எண்ணிக்கை : 1280

உங்களின் விமர்சனங்களை கீழே உள்ள லிங்கில் தரவும் நட்புக்களே,


 

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 7

அமுதன், இப்படி யாருடனும் பேசாமல், சாப்பிடாமல் இருந்ததைக் கண்டு விசாலாட்சிக்கு மிகுந்த வேதனையானது. அவள் தன் கணவன் நடேசனிடம் சொன்னாள்.

“என்னங்க இது.? அமுதா இப்படியே இருந்தான்னா என்ன பண்றது.? அண்ணாகிட்ட அவ்வளவு வாய் கொடுத்து பேசிட்டு வந்ததெல்லாம் வீணாகிடும் போல இருக்குதே.” என்று புலம்பினாள்.

“விசாலம், அவன் அப்படி இருந்தா அதுக்கு நாமென்ன பண்ண முடியும்.? நீ தான் அவனையும், உங்க அண்ணனையும் புடிச்சு தொங்கற. ஆனா, எனக்கு ஒண்ணும் நம்ம பொண்ண, பின்னால இவனுக்குக் கொடுக்கணும்னு எந்த ஆசையும் இல்ல. அவள வேற ஒரு நல்ல இடத்துல கட்டிக் கொடுக்கணும்னு தான் என்னோட ஆசை. அப்போதான் அவ நல்லா இருப்பா. நீதான் தேவையில்லாம இவனைப் புடிச்சிட்டு ஆடற. நானும், சரி இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம்னு இருந்தேன். ஆனா, இன்னைக்கு சொல்லிட்டேன். வீண் ஆசையை மனசுல போட்டு வைக்காத. அதுவும் இல்லாம, நமக்கு இருக்கற கடன்ல நீ இவன வேற கூட்டிக்கிட்டு வந்து பள்ளிக்கூடத்துல சேர்த்து படிக்க வைக்கப் போறன்னு சொல்ற. சோத்துக்கு காசு யாரு கொடுப்பா.? நான் தான் கூத்து, பாட்டுன்னு போயி சம்பாதிக்கறேன். அத வைச்சு உனக்கும், எம்புள்ளைகளுக்கும், என் அப்பன், ஆத்தாளுக்கும், சோறு போடறதே அதிகம். எங்க அண்ண, தம்பிங்க மாதிரி உஷாரா இவங்கள வேண்டாம்னு சொல்லிருந்தா பரவால்ல. பெத்த கடனுக்கு இருந்துட்டு போகட்டும்னு அவங்களையும் பாத்துக்கறேனே ஏன் தெரியுமா.? அவங்க மனசு நொந்தா நாமளும், நம்ம புள்ளைங்களும் நல்லாவே வாழ முடியாது. அதனாலதான். நான் இதையெல்லாம் பார்த்துட்டிருந்தா, நீ உன் அண்ண பையனக் கூட்டி வந்து என்ன இன்னும் கடன்காரனாக்கப் பார்க்கற.?” என்றார் கோபமாக.

“அட நீங்க வேற, காரணம் இல்லாமலா நான் எங்க அண்ணனப் புடிச்சுத் தொங்கறேன்.? எங்க அப்பா, அம்மாவோட வீடு, நிலம், அப்பறம் பத்து ஏக்கரா நிலம் இதுக்கெல்லாம் ஒரே வாரிசு யாரு.? அமுதன் தான.? எங்க பெரிய அண்ணன் எப்போவே செத்துட்டாரு. சின்ன அண்ணந்தான் எல்லாமே பார்த்துட்டிருக்கு. எங்க அப்பா எப்போவே அமுதன் பேருல சொத்த எழுதி வைச்சுட்டாரு. அவங்க ரெண்டு பேரோட உசுரு போச்சுன்னா, அது முறைப்படி அவங்க கைக்கு வந்துடும். எங்க அண்ண எனக்கு எல்லாத்தையும் விட்டுக்கொடுக்காம செய்வாரு. ஆனா, அமுதனுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னா, வரவ எப்படி இருப்பாளோ, என்ன செய்வாளோ, யாருக்குத் தெரியும். அதனாலதான், இப்போவே நம்ம கோலாவ அவனுக்குன்னு சொல்லி வைச்சுட்டா, பின்னால எந்தப் பிரச்சினையும் வராது. அவளுக்கும் எல்லா உரிமையும் இருக்கும். எங்க அண்ண ஒருத்தர் தான, அதனால அவங்கள இங்கயே வரச் சொல்லிட்டு, நம்ம கூடவே நம்ம பொண்ணையும் வைச்சுக்கலாம். அதுக்கு தான் நான் இப்படி திட்டம் போட்டேன். ஆனா, இவன் யாரோ அந்த பொண்ணு கூடவே தான் சுத்தறான்னு சொன்னதும், அதை முளையிலே கிள்ளி விடணும்னு தான் இவன் இங்க கூட்டிட்டு வந்தேன். நீங்க என்னடான்னா இப்படி சொல்றீங்க.?” என்று விசாலாட்சி சலித்துக்கொண்டாள்.

“ஹூம்ம். நீ ஒரு கணக்கு போடற. ஆனா, ஆண்டவன் என்ன கணக்கு பண்ணி வைச்சிருக்கான்னு தெரியலையே.? சரி, நீ சொல்ற மாதிரி நடந்ததுன்னா சந்தோஷம் தான். நம்ம பொண்ணு நம்ம கூடவே இருப்பா. ஆனா, ஒருவேளை நீ சொன்னது நடக்காம போச்சுன்னா, நான் சொன்ன மாதிரி அவள ஒரு பெரிய இடத்துல தான் கட்டிக் கொடுப்பேன். சரியா.?” என்றார் நடேசன்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நான் சொன்னதுதான் நடக்கும் பாருங்க.” என்றவாறே மீண்டும் ஒருமுறை அமுதனை சமாதானப்படுத்தும் நோக்கில் அவனிடம் சென்றாள் விசாலாட்சி. அவளின் எண்ணத்தை நினைத்து பெருமூச்சொன்றை விட்டபடி முகம் கழுவ துண்டை எடுத்துக்கொண்டு கிணத்தடிக்குச் சென்றார் நடேசன்.

“டேய்.. அமுதா, தங்கம். கொஞ்சம் எழுந்திரி டா. உன்னைக் கெஞ்சிக் கேட்கறேன் டா. அத்தைகிட்ட பேசமாட்டியா. நான் உனக்கு பிடிச்சதெல்லாம் வாங்கித் தரேன் தான, கொஞ்சம் சாப்பிடு டா. நான் வேணும்னா ஊட்டி விடறேன்.” என்றாள்.

அவன் அவளை முறைத்துக்கொண்டே கண்களை உருட்டிப் பார்த்தான். “சரி, இனிமேல் கோலா உன்கூட சண்டை போட மாட்டா. நான் அவகிட்ட சொல்லி வைக்கறேன். நீ யாருகூட போய் விளையாடனுமோ விளையாடு. சரியா.?” என்றதும் தான் கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு கேட்டான்.

“நிஜமா தான் சொல்றீங்களா.? நான் போய் விளையாண்டா, கோலா எல்லாத்தையும், அடிக்கிறா. யாருமே என்கூட விளையாட வரமாட்டிங்கறாங்க. இதுக்கு பேசாம நான் எங்க ஊர்லயே இருந்திருப்பேன்.” என்று திரும்பவும் கண்ணீர் விட்டான்.

“டேய்... ராசா.. அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. நான் தான் சொல்லிட்டேன்ல. நீ போய் யாருகூட வேணும்னா விளையாடு. சரியா. இப்போ சாப்பிடு. இந்தா...” என்று ஒரு வாயை ஊட்டினாள்.

குமரேசன், “அம்மா.. அம்மா..” என்று அழைத்துக்கொண்டே வந்தான். “ஏண்டா குமாரு.. இங்க தான் இருக்கேன்..” என்று சத்தமாகச் சொல்ல அங்கே வந்த குமரேசன், அவனது அன்னை அமுதனுக்கு ஊட்டி விடுவதைப் பார்த்தான். அவனுக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது.

“ம்மா.. எழுந்திருச்சு வா.. எனக்கும், அப்பாவுக்கும் சாப்பாடு போடு.” என்று சற்று அதட்டலாகச் சொன்னான்.

“டேய்.. அங்கதானடா இருக்கு. தட்டு எடுத்துக் குடுத்து பாட்டிய சாப்பாடு போடச்சொல்லி சாப்பிடுங்க ரெண்டு பேரும். நான், அமுதனுக்கு சாப்பிட வைச்சுட்டுத்தான் வருவேன்.” என்று சொல்ல, கோபத்தின் உச்சிக்கே சென்றான் குமரேசன்.

“ம்மா... ஏன் இவனே சாப்பிட மாட்டானா.? நீயே தான் ஊட்டி விடணுமா.? எனக்கு ஒரு நாளாவது பாசமா இப்படி ஊட்டி விட்டிருப்பியா.? இவன் வந்ததுல இருந்து எப்பப்பாரு நீ இவனையே தான் கவனிக்கற. நாங்கள்லாம் என்ன ரோட்ல போறதா.?” என்று சொல்ல, அதுவரை பொறுமையாய் இருந்தவள்,

“டேய்... வாய மூடுடா.. எதுக்கு இப்போ இப்படி கத்திட்டிருக்க.? சோத்தப் போட்டு உனக்கு திங்கத் தெரியாதா.? நான் வேற வந்து உனக்கு ஊட்டி விடணுமா.? அவன் தான் சின்னப் பையன் அதனால அவனுக்கு ஊட்டி விட்டுட்டிருக்கேன். இதெல்லாம் போய் பெருசுபடுத்துவியா.?” என்று திட்டினாள்.

“இப்போ, நீ வரப் போறியா, இல்லையா.?” என்று அவன் வீம்பாய்க் கேட்க, “போ.. வந்து தொலையறேன்..” என்று வெறுப்புடன் அவனை அங்கிருந்து அனுப்பி வைத்தாள்.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த அமுதன், “அத்தை, நானே சாப்பிட்டுக்கறேன். நீங்க போய், மாமாவுக்கும், அண்ணாவுக்கும் சாப்பாடு போடுங்க.” என்று அவள் கையில் இருந்த தட்டை வாங்கி சாப்பிட ஆரம்பித்தான். அவளுக்கே அவனைப் பார்த்து பாவமாய் இருந்தது.

கோபத்தோடே வந்த விசாலாட்சி அவர்களுக்கு சாப்பாடு எடுத்து வைத்துக்கொண்டே, “எல்லாம் என்ன சொல்லி என்ன பண்றது.? நல்லா எருமை மாடு மாதிரி வளர்ந்து இருக்கானே, அவனே எல்லாத்தையும் பண்ணிக்குவான்னு நினைச்சேன் பாருங்க, என்ன சொல்லணும்.” என்று முணகியபடி தலையில் அடித்துக்கொண்டே சோற்றை இருவருக்கும் போட்டாள்.

அன்னையின் தகாத வார்த்தைகளைக் கேட்ட குமரேசன், கோபத்தோடு தட்டை தூரமாக தள்ளி விட்டுவிட்டு, எழுந்து சென்றான்.

“டேய்.. சோத்தையா தட்டி விட்டுட்டுப் போற. ஒரு நாள் இல்ல, ஒரு நாள் சோறில்லாம அலையும் போதுதான் அதோட அருமை தெரியும். பட்டினியோடயே கிட. எனக்கென்ன.?” என்று நடேசனுக்கு குழம்பை எடுத்து ஊற்றினாள்.

“நீ ஏன் அவனத் திட்டற.? அவன் என்ன பண்ணான்.?” என்று நடேசன் கேட்க.

“வேற என்ன, திமிரு. கொழுப்பெடுத்து அலையறான். கண்ட கண்ட பசங்களோட திரியறான்ல அதான், அவங்களோட குணமும் சேர்ந்து வருது. வாய் ரொம்ப நீளுது.” என்று அவனை வசை பாடினாள்.

இதற்க்கு மேல் பேசினால், தனக்கு இதுவும் கிடைக்காமல் போய் விடுமோ என்று அதன் பிறகு எதுவும் பேசாமல் அமைதியாகச் சாப்பிட்டார் நடேசன்.

குமரேசனுக்கு, அமுதனை சிறிய வயதில் இருந்தே பிடிக்காது. விசாலாட்சி, அமுதன் இங்கே வந்ததிலிருந்து அவனை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்ததால், குமரேசனை சரியாக கவனிக்காமல் பெரியவர்கள் பொறுப்பில் விட்டுவிட்டாள். ஆனால், எதுவும் அறியாத வயதில் அம்மாவின் பாசத்திற்க்காக ஏங்கினான் குமரேசன். அதனால், அமுதனைப் பார்க்கும் போதெல்லாம் இவனால் தான் அம்மா தன்னைக் கண்டுகொள்ளவில்லை என்ற எண்ணம் அவன் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது.

கோலாகலம் அவனது தங்கை என்பதால் அவள் மேல் கொஞ்சம் பாசம் இருந்தது. ஆனால், அமுதன் தனக்கு என்ன வேண்டும்.? அவன் மேல் தன்க்கு எதற்க்கு அக்கறை.? என்று நினைப்பான். இதை நடேசன் மட்டுமே உணர்ந்திருந்தார். விசாலாட்சியிடம் சொன்னால், அதை அவள் ஏற்றுக்கொள்ளவே இல்லை.

அதனால் தான், அவன் இங்கே வருகிறான் என்றால் அவனுக்கு எரிச்சலாக இருக்கும். அவன் அன்னை அமுதனை மட்டுமே தங்கத்தட்டில் தாங்குவாள் என்ற எண்ணத்தில் கோபமாகவே இருப்பான். அவன் மீதுள்ள வெறுப்பு காயம் உண்டாக்கிய தழும்பைப் போல் ஆழமாய் அவன் மனதில் தங்கிவிட்டது. அதில் இன்னும், காயத்தை ஏற்படுத்துவது போல் விசாலாட்சி நடந்துகொள்வது தான் அவனால், ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சாப்பிட்டு முடித்த பிறகுதான் நடேசன் அவனுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு போய் தந்தார். கோபத்தில் இருந்தவன், முதலில் மறுத்தான். பிறகுதான், தந்தையின் வற்புறுத்தலில் சாப்பிட்டான்.

இப்படியாக நாட்கள் போய்க்கொண்டிருந்தன. ஒரு நாள், கோலா பொறுமை இழந்து பக்கத்து வீட்டுப் பெண்ணை கடித்தே வைத்து விட்டாள் என்று பக்கத்து விட்டுப் பெண்மனி வந்து சத்தம் போட்டு விட்டுச் சென்றார்.

அமுதனின் கையைப் பிடித்ததால் அவளின் கையைக் கடித்தேன் என்று அவள் சொல்ல, அமுதனுக்கு அவள் மேல் கோபம் வந்து அடித்து விட்டான். அழுதுகொண்டே நின்ற கோலாவை குமரேசன் கேட்க, அவள் அமுதன் அடித்ததாய்ச் சொல்ல, அதுவரை அவன் மேல் வைத்திருந்த கோபமும், வெறுப்பும் ஒன்று சேர, அமுதனை நன்றாகவே அடித்து உதைத்து விட்டான் குமரேசன். பாவம் அமுதன், வலி தாங்க முடியாமல் கத்த வீதியே கூடிவிட்டது. அவர்களைத் தடுத்து வீட்டிற்க்குள் கூட்டி வர விசாலாட்சி பட்ட பாடு அவளுக்கு மட்டுமே தெரியும்.

உள்ளே வந்ததும், குமரேசனுக்கு அடிகள் சராமாரியாக விழுந்தன. ஆனால், அவனோ எந்த ஒரு அசைவும் இன்றி விரைப்பாக நின்று கொண்டிருந்தான். அடித்து, அடித்து அவளுக்குத்தான் கைகள் வலித்தன.

இதைப் பார்த்த பெரியவர்கள், விசாலாட்சியிடம் சண்டைக்கு வந்தனர். அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லி ஓய்ந்தது இல்லாமல், அடுத்து இரவு நடேசன் வந்ததும் அவனிடம் மேலும் சண்டை. அன்று இரவு யாருமே நிம்மதியாக உறங்கவில்லை.

அடுத்த நாள் காலையில் நடேசன் எழுந்ததுமே, “இதப்பாரு விசாலம், முதல் பஸ்ஸூக்கே அவனைக் கூட்டிட்டுப் போய் உன் அண்ண வீட்டுல விட்டுட்டு வா. அவன இங்கயே வைச்சு வளர்க்கணும், படிக்க வைக்கணும்னு கனவு கானாத. உன் கனவெல்லாம் அவங்க பெரிசானதுக்கப்பறம் பார்க்கலாம். இதுக்கு மேல எதுவும் பேசாத.” என்று அவள் பேச ஆரம்பிக்கும் போதே நடேசன் அவளின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

வேறு வழியில்லாமல் அவனைக் கூட்டிக்கொண்டு பஸ் ஏறினாள் விசாலாட்சி. அவனிடம் எதுவும் பேசாமல் வந்தாள். அவன் வரும் வழியெல்லாம் கேட்டுக்கொண்டே வந்தான். அவள் எதுவும் பேசவில்லை.

வீடு வந்து சேர்ந்ததும், அழகேசனை ஓடி வந்து கட்டிக்கொண்டான் அமுதன். “டேய்.. அமுதா. என்ன திடீர் விஜயம்.? உங்க அத்தை உன்னைக் கூட்டிட்டே வர மாட்டேன்னு சொன்னா. இப்போ என்னடான்னா பள்ளிக்கூடம் திறக்கறதுக்கு முன்னாடியே வந்துட்டியே. உங்க அத்தை முகமும் சரியில்லையே.? என்னதான் நடந்தது.?” என்று அவர் விசாலாட்சியைப் பார்த்துக்கொண்டே கேட்க, அவளோ முறைத்தாள்.

“அப்பா, அத்தை என்கூட பேசவே மாட்டிங்கறாங்க. நீங்களே கேளுங்க.” என்று சொல்லிக்கொண்டு தண்ணீரைக் குடிக்கச் சென்று விட்டான்.

“என்னாச்சு விசாலம்.? ஏதோ அவன அங்கயே பள்ளிக்கூடத்துல சேர்த்து விடறேன்னு சொல்லிட்டிருந்த, இப்போ என்னாச்சு.?” என்றார்.

“அண்ண, நானே பயங்கர கோபத்துல இருக்கேன். இந்தச் சின்னப் பசங்க சண்டைல என் தலை உருண்டது தான் மிச்சம்.” என்று சொல்ல ஆரம்பித்தவள், நடந்தவை அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

“சின்னப் பசங்க சண்டை போட்டது இவ்ளோ பெரிய விஷயம் ஆயிடுச்சா.?” என்றார் அழகேசன்.

“என்னத்த சொல்ல..?” என்று சலித்துக்கொண்டாள் விசாலாட்சி.

“சரி, விடு. எல்லாம் வளர்ந்து பெரியவங்களா ஆனா, சரியாகிடும்.” என்று சமாதானம் சொன்னார். அவளும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். அதன் பிறகு தான், அழகேசனுக்கு நிம்மதியாக இருந்தது. எங்கே தன் பிள்ளையைப் பிரிந்து இருக்க நேருமோ.? என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. இப்போதுதான் அந்த மனக்கவலை தீர்ந்தது. திரும்பவும் அவனை தோப்பிற்க்கு அழைத்துச் சென்றார்.

“என்னாச்சு அமுதா, உங்க அத்தை என்னென்னமோ சொன்னா.? நடந்ததெல்லாம் உண்மையா.?” என்று கேட்க,

அமுதனோ, “அப்பா, எனக்கு அங்க போய் இருக்கவே பிடிக்கல பா. அங்க அத்தனை பேரு இருந்தாலும், எனக்கு யாரும் இல்லாத மாதிரியே தோணுது பா. இங்க நாம ரெண்டு பேர் தான் இருக்கோம். ஆனா, எனக்கு ஒரு நாள் கூட நாம தனியா இருக்கோமேன்னு நினைச்சதே இல்லப்பா. நீங்க சுதந்திரம் கொடுக்கற மாதிரி அங்க யாருமே இருக்கறதில்லப்பா. நான் எது பண்ணாலும் அவங்களக் கேட்டுட்டு தான் பண்ணனும்னு சொல்றாங்க. அதே மாதிரி, தமிழு கூட எத்தனை தடவை விளையாண்டிருக்கேன், மத்த பசங்களோட விளையாண்டாலும் அவ எதுவுமே சொல்லமாட்டா பா. ஆனா, இந்த கோலா இருக்காள்ல, அவ கூட மட்டுமே தான் நான் விளையாடணும்னு சொல்றா. வேற எந்தப் பசங்களோ, பொண்ணுகளோ விளையாண்டா, அவங்களப் புடிச்சு அடிக்கறா, நேத்து ஒரு பொண்ண கடிச்சே வைச்சுட்டாப்பா. அவங்க அம்மா எப்படித் திட்டினாங்க தெரியுமா.? எனக்கு வந்த கோபத்துக்கு அவள அடிச்சுட்டேன். அதுக்கு இந்த குமார் அண்ணா, என்னை பயங்கரமா அடிச்சிட்டாங்க பா. என்னால வலியே தாங்க முடியல. எப்பவும் இப்படியே தான் பண்றாங்க. அந்த தாத்தா, பாட்டி எப்பப் பாரு என்னை ஏதாவது சொல்லிட்டே இருக்காங்க, திட்டிக்கிட்டே இருக்காங்க. மாமா என்கூட பேசறதே இல்ல. எனக்கு எப்போ உங்ககிட்ட அத்தை கூட்டிட்டு வருவாங்கன்னு இருந்தது. எனக்கு இங்க இருக்கிற சந்தோஷம், சுதந்திரம் வேற எங்கயுமே இருக்காதுன்னு தோணுது பா. இனிமேல் யார் வந்து கூப்பிட்டாலும், நான் உங்களை விட்டுப் போக மாட்டேன் பா.” என்று அவன் பேசி முடிக்கும் வரை பொறுமையாய்க் கேட்டுக்கொண்டிருந்த அழகேசன் சிரித்தார்.

“சரிப்பா, நீ என்னை விட்டு எங்கயும் போக வேண்டாம். இங்கயே இரு.” என்று அவனை அணைத்துக்கொண்டது வரை தமிழினியிடம் சொல்லி முடித்தான் அமுதன். ஆனால், அவன் அத்தையும், மாமாவும் பேசிக்கொண்டது மட்டுமே அவனுக்குத் தெரியவில்லை. மீதி அனைத்தையும் தமிழினியோடு அவன் பகிர்ந்து கொண்டான்.

“நீ மொதல்லயே வந்துட்ட தானே, அப்பறம் ஏண்டா என்னைப் பார்க்க வரல.?” என்றாள் தமிழினி.

“அதுவா, அப்பாதான் சொன்னாரு, நீ இப்போவே போய் பார்க்காதே. பள்ளிக்கூடம் திறந்ததும் போய்ப் பாருன்னு. கொஞ்சம் ஆச்சர்யமாய் இருக்கும்னு. அதனால தான் உன்னோட சந்தோஷத்தை இன்னிக்கு பார்க்க முடிஞ்சது.” என்று சொல்லி சிரிக்க,

“ஏண்டா, நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு தெரியுமா.? நீ என்னடான்னா எனக்கு ஆச்சர்யம் கொடுக்கறியா.? உன்ன..” என்றபடி, அந்தக் கரும்புக் குச்சியை அவனிடமிருந்து பிடுங்கி அவனை அடிப்பதற்க்குச் செல்ல, அவன் தப்பிக்க முயல, நண்பர்களின் உற்சாகம் மீண்டும் பிறந்தது.

(தொடரும்...)

வார்த்தைகளின் எண்ணிக்கை : 1478


உங்கள் விமர்சனங்களை கீழே உள்ள கமெண்ட்ஸ் லிங்கில் பதிவிடவும் நட்புக்களே...

 

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 8

ஆகஸ்டு 15 சுதந்திர விழா மெட்ராஸில் உள்ள கோட்டையில் கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது தான் முதலமைச்சர் கொடியேற்றி வைத்தார். நம் தேசியக் கொடியின் பாடல் பாடப்பட்டது. கம்பீரமாக நின்று வீரவணக்கம் செலுத்திக்கொண்டிருந்தார்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து, பல மாவட்டங்களில் இருந்து வந்த நடனக் கலைஞர்கள் அனைவரும் அவர்களது திறமையை முதலமைச்சர் முன்பாக வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர்.

அதே போல், பலதரப்பட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அனைத்தையும் கண்டுகளித்த முதலமைச்சர் அடுத்து பல்வேறு சாதனைகள் புரிந்ததற்க்கான விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு தயாரானார்.

விருது வாங்குவதற்க்குத் தயாராக அமர்ந்திருப்பவர்கள் வரிசையில் காத்திருந்தாள் தமிழினி. கூடவே அவளுடன், அமுதனும், அழகேசனும் இருந்தனர். இப்போது பதினைந்து வயது பருவப் பெண் தமிழினி. அதே பதினைந்து வயது இளம் வாலிபனாக அமுதன்.

ஏற்கனவே ஒருமுறை தமிழினி இதே போல் விருதை வாங்கியுள்ளாள். இப்போது எதற்க்காக இங்கே வந்திருக்கிறாள்.? அதே போல், அமுதனும், அழகேசனும் எதற்க்காக வந்திருக்கிறார்கள் என்ற கேள்விக்கான பதில் பின்வருமாறு..

நன்றாக வளர்ந்து விட்டார்கள் தமிழினியும், அமுதனும்.. பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கின்றனர். பருவமடைந்த பெண்ணாய் ஆனாள் தமிழினி. இந்த வயதில் தான் பல பெண் பிள்ளைகள் ஆண்களிடமிருந்து, ஏன் தன் அப்பாவிடமிருந்தும் கூட சற்று விலகியே இருப்பர். அது இயல்பாக நடக்கும் விஷயம் தான் என்றாலும், தமிழினி அதற்க்கு நேர்மாறாகவே இருந்தாள்.

வயதுக்கு வந்த பிறகும் கூட, அவள் அமுதனிடமும் சரி, அழகேசனிடமும் சரி எந்த் ஒரு பாரபட்சமும் பார்க்காமல் பழகி வந்தாள். அவர்களுக்கும் அது ஒன்றும் பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. எப்பொழுதும் போலவே இருந்தனர்.

ஆனால், ஊர் வாயை அடக்க முடியாதே. ஒன்று பேச ஆரம்பித்து, ஒவ்வொரு நபராக சென்று கடைசியில் கோகிலாவின் காதுகளில் விழுந்தது. அவளுக்கு தமிழினி மேல் நம்பிக்கை இருந்தாலும், ஊர் பேசும் போது அதை அவளிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

அன்று மாலை எப்பொழுதும் போல பள்ளி முடிந்து வீடு திரும்பியவளை அழைத்தாள் கோகிலா. “தமிழு இங்க வா..” என்றாள்.

முகம் கை, கால் கழுவிக்கொண்டு வந்து நின்றபடி, “சொல்லும்மா..” என்றாள்.

“இப்படி உட்காரு..” என்று திண்ணையில் தன் பக்கத்தில் அமர வைத்தவள் கேட்டாள்.

“இப்பவும் நீ அமுதனோட தான் வந்தியா.?” என்றாள்.

“இதென்னமா கேள்வி, நானும், அவனும் எப்பவும் ஸ்கூலுக்கு ஒண்ணாதான் போவோம், ஒண்ணாதான் வருவோம். என்னமோ புதுசா கேட்கற.?” என்றாள் சிரித்துக்கொண்டே..

“அதெல்லாம் சரிதான். இனிமேல் அப்படி அவன் கூட சேர்ந்து போகாத. நீ இப்போ சாதாரண பொண்ணு இல்ல. நீ வயசுக்கு வந்துட்ட. அது நியாபகம் இருக்குல்ல.?” என்றாள் கோகிலா.

அம்மா எதற்க்காக சொல்கிறாள் என்று புரிந்தது. “ஏம்மா.. யாராவது, ஏதாவது சொன்னாங்களா.?” என்றாள் தமிழினி.

“ஆமா, தமிழு.. எல்லாரும் அதென்ன பொம்பளப் புள்ள, எப்பப்பாரு ஆம்பளப் பையனோடயே சுத்திட்டு திரியறான்னு பேசறாங்க. அவன் ஆம்பளப் பையன் தமிழு. ஆனா, நாம அப்படிக் கிடையாது. மத்தவங்க சொல்ற மாதிரி நாம ஏன் நடந்துக்கணும்.? பத்தாததுக்கு நாம ஏழைங்க. நம்ம தகுதிக்கு ஏத்த மாதிரி தான் இருக்கணும். ரொம்ப ஆசைப்படக்கூடாது. என்ன நான் சொல்றது புரியுதா.?” என்று கோகிலா சொல்லிக்கொண்டிருக்க,

அப்போதுதான் கேட்டைத் திறந்து கொண்டு வந்தார் ரங்கராஜன். வரும் போதே இருவரையும் பார்த்தவர், ஏதோ ஒரு விஷயம் முக்கியமாய் போய்க்கொண்டிருப்பதாய் உணர்ந்தார்.

“என்ன, ஆத்தாளும், மகளும் ரொம்ப மும்முரமா பேசிட்டிருக்கீங்க.? என்ன விஷயம்.?” என்றார். அவர் கேட்டதும், கோகிலா அனைத்தையும் சொல்ல,

ரங்கனோ, “அதுக்கு நீ என்ன சொல்லிட்டிருக்க புள்ளைகிட்ட.?” என்றார்.

“எதுக்குங்க வீண் வம்பு. ஏற்கனவே நாமன்னா, இந்த ஊருக்கு ஆகாதவங்களா இருக்கோம். எந்த உதவியும் பண்ண மாட்டிங்கறாங்க. அப்படி இருக்கும் போது இந்தப் பேச்சுக்கும் நாம ஆளாகணுமான்னு தான் அவள கொஞ்சம் அடக்க, ஒடுக்கமா நடந்துக்க சொல்றேன்.” என்றாள் கோகிலா.

“ஆமா, நம்ம பொண்ணு அப்படிப் பண்ணா நமக்கு என்ன சிலை வைச்சிடப் போறாங்களா, இல்ல நம்மள மதிக்கத் தான் போறாங்களா. அடிப்போடி இங்க எதுவுமே மாறாது. நம்மள மாதிரி அடித்தட்டு மக்கள் எல்லாரும் சாகறவரைக்கும் இந்த மாதிரி பேச்சுக்கு ஆளாகிட்டு தான் இருக்கணும். ஹூம்ம்.. ஊர் வாய அடக்க முடியுமா.? தினமும் ஏதாவது பேசிட்டுத்தான் இருப்பாங்க. நாம நமக்கு என்ன தோணுதோ அதைப் பண்ணிட்டுப் போகணும். நமக்கு இந்த ஊருலயே உதவி பண்ற ஒரே மனுஷன் அந்த அழகேசன் வாத்தியாரு தான். அந்தப் பையன் அமுதனும் ரொம்ப தங்கமான பையன். அவங்களோட ஆதரவு இல்லைன்னா நம்ம பொண்ணு இன்னைக்கு பள்ளிக்கூடத்துக்கு தான் போயிருக்க முடியுமா.? இல்ல, இந்தளவுக்கு பரிசும், பேரும் தான் வாங்கிருக்க முடியுமா.? எல்லாம் பொறாமை தான். அப்படி, இப்படி பேசி, அவளோட படிப்பையும், வாழ்க்கையையும் வீணாக்க நினைக்கறாங்க. நம்ம நிலைமை நம்ம பொண்ணுக்கும் வந்துடக் கூடாது கோகி. நாம் பட்ட அவமானம் கொஞ்ச, நஞ்சமில்ல. அவளாவது படிச்சு ஒரு நல்ல நிலைமைக்கு வந்து அவளுக்கான மரியாதைய அவளாவே தேடிக்கட்டும். நீ எல்லாத்தையும் போட்டு குழப்பிட்டு, வீணா அவ மனசையும் நோகடிக்காத. எனக்கு என்னோட தமிழ் மேல நிறைய நம்பிக்கை இருக்கு. எத்தனை பேர் வந்து சொன்னாலும், என் பொண்ணு எப்படிப்பட்டவன்னு எனக்குத் தெரியும். நீ போய் உன் வேலையைப் பாரு.” என்று சொல்லிவிட்டு துண்டை எடுத்துக்கொண்டு வாய்க்காலுக்கு குளிக்கச் சென்றார் ரங்கன்.

“என்னமோ பண்ணுங்க. செல்லம் கொடுத்து கெடுக்கறீங்க.” என்றபடி புலம்பிக்கொண்டே உள்ளே சென்றாள் கோகிலா.

அப்பா தன்னை இந்தளவுக்கு புரிந்து வைத்துள்ளார் என்று நினைக்கும் போது தமிழினிக்கு ஒருபுறம் சந்தோஷமாக இருந்தது. ஆனால், அம்மாவை என்ன சொல்லி சமாதானம் செய்வது. அவளையும் தப்பு சொல்ல முடியாது. அவள் தினமும் வேலை செய்யும் இடத்தில் உள்ள பெண்கள் ஜாடை, மாடையாக பேசும் போது அவளும் பாவம் என்ன செய்வாள்.? அதைப் புரிந்து கொண்டாள் தமிழினி.

ஆனால், இத்தனை வருட நட்பை எப்படி திடீரென்று மாற்ற முடியும். நாங்கள் இருவரும் சாதாரணமாகத் தானே இருக்கிறோம். எங்களுக்குள் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அவன் எப்படி சின்ன வயதிலிருந்து எந்த ஒரு எண்ணத்தில் என்னிடம் இருக்கிறானோ, அதே எண்ணம் தான் எனக்கும் உண்டு. எங்களுக்கிடையில் இருப்பது நட்பு மட்டும் தான் என்று இந்த ஊருக்கு எப்படி புரிய வைப்பது.? என்று அந்த இரவு முழுவதும் இதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தாள்.

அடுத்த நாள் பள்ளிக்கு அவள் மட்டுமே சென்று கொண்டிருந்தாள். அமுதன் நீண்ட நேரம் காத்திருந்து பின்னர் பொறுமை இழந்தவனாய் பள்ளி வந்து சேர்ந்த போது, அவள் முன்னரே வந்துவிட்டதை அறிந்தவன், கோபத்தோடு அவளிடம் வந்தான்.

“ஏய்... தமிழு.. எப்போ வந்த..? சொல்லிட்டு வரமாட்டியா.? நான் நீ வருவன்னு பார்த்திட்டிருந்தா., நீ முன்னாடியே வந்து உட்கார்ந்துட்டிருக்க.?” என்றான் அமுதன் கோபமாக.

அவள் எதுவும் பேசவில்லை. அவளுடன் இப்போது அனைவரும் சகஜமாக பேசிக்கொள்கின்றனர். தமிழினி என்றால் அந்தப் பள்ளிக்கே தெரியும். அத்தனை பிரபலமானவள். பாட்டு, நடனம், படிப்பு, விளையாட்டு என்று அனைத்திலும் ஒன்று விடாமல் பரிசுகளை அள்ளிச் செல்வதால் அவளிடம் பழகுவதற்க்கென்றே அனைவரும் போட்டி போட்டனர்.

அவள் தான் வகுப்பில் முதல் ரேங்க் எடுக்கும் மாணவி. அதே போல், அமுதனும் சலித்தவனில்லை. பேச்சு, கவிதை, கட்டுரை, விளையாட்டு என்று அவனும் பரிசுகள் வாங்குபவன் தான். இருந்தாலும் தமிழினிக்கு அடுத்தது தான் அவன் என்று சொல்ல வேண்டும்.

இப்போது அவள் முதல் பென்ச்சில் பெண் பிள்ளைகளுடன் தான் இப்போது அமர்ந்திருக்கிறாள். அமர வைத்தவர் வடிவுக்கரசி டீச்சர். முதல் ரேங்க் எடுத்ததற்க்கான பரிசு அவள் முதல் இருக்கையில் அமர வேண்டும் என்பது.

அவளுடன் சேர்ந்து அனைவரும் இப்போது நன்றாக படிக்க ஆரம்பித்தனர். அனைவருக்கும் எந்த ஒரு தயக்கமும் இன்றி அனைத்தையும் சொல்லிக்கொடுப்பாள். டீச்சரிடம் கேள்வி கேட்க பயமாய் இருக்கும் அனைவரும் இவளிடம் தான் தங்களின் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வர்.

அதே போல், அமுதனும் இரண்டாம் ரேங்க் எடுப்பவன் என்பதால், ஆண் பிள்ளைகளின் வரிசையில் முதல் இருக்கையில் அமர்ந்திருப்பான். எனவே, இருவரும் பக்கமாகவே அமர்ந்திருப்பதைப் போல் ஒரு உணர்வு இருக்கும். இவருவரும் தான் வகுப்பினுடைய லீடர்ஸ். இருவரும் சேர்ந்தே டீச்சர் சொல்லும் அனைத்தையும் செய்வர்.

எப்பொழுதும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பர். மதிய உணவை பறிமாறிக்கொள்வர். ஒன்றாகவே சைக்கிளில் போகவும், வரவும் இருப்பர். சில சமயங்களில் நடந்து கொண்டே சைக்கிளைத் தள்ளிக்கொண்டு அவளுக்காக வருவான் அமுதன்.

இப்படியெல்லாம் இருந்து கொண்டு திடீரென்று தன்னுடன் வராமல் இருந்தால் எப்படி இருக்கும்.? அவன் கோபத்தில் பேசிக்கொண்டிருக்க, இவளோ அமைதியாகவே இருந்தாள்.

“நான் பேசிட்டே இருக்கேன். நீ என்ன அமைதியா இருக்க.? ஏன்னு சொல்லப்போறியா இல்லையா.?” என்றான்.

“ஏய்.. அவன் தான் கேட்கறான் இல்ல. என்னன்னு சொல்லேன். அவ்ளோ ஃப்ரெண்ட்ஸா இருந்துட்டு இப்போ என்னவாம்.?” என்றாள் பக்கத்திலிருந்த தோழி பரமேஸ்வரி.

அப்பொழுதும், அமைதியாகவே இருந்தாள். அவனுக்கு கோபம் தலைக்கேறியது. அதற்க்குள் பள்ளியின் மணி ஒலிக்க, அனைவரும் எழுந்து பிரேயருக்கு சென்றனர். அவன் எதுவும் பேசாமல் சென்று விட, அவளோ அப்படி இருக்க மிகவும் சிரமப்பட்டு தன்னைத் தானே வருத்திக்கொண்டாள்.

பிரேயர் முடிந்ததும், எப்பொழுதும் போல வகுப்புகள் ஆரம்பித்தன. ஏனோ, இன்று எந்த ஒரு பாடத்தையும் கவனிக்காமல் ஒரு சோக முகத்துடனேயே காணப்பட்டாள் தமிழினி. இவள் ஏன், எதற்க்காக இப்படி இருக்கிறாள் என்ற குழப்பத்தில் இருந்ததால் அமுதனாலும் சரியாக பாடத்தை கவனிக்க முடியவில்லை.

அன்று முழுவதும் அப்படியே நாள் சென்று விட்டது. பள்ளியில் இருந்து திரும்பும் போது கூட அவன் பேச முயற்சி செய்தும் அவள் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் கிளம்பி விட்டாள். அவனுக்கு இதை யாரிடம் போய் கேட்பது என்று தெரியவில்லை. அப்போது தான் நினைத்தான், ஒரே வழி அவனது அப்பா அழகேசன் தான் என்று தோன்றியது.

மாலை வீடு திரும்பியதும் அவரது வரவிற்க்காகக் காத்திருந்தான். அவர் வந்து முகம், கை, கால்களை கழுவி வந்த பிறகே சொல்ல ஆரம்பித்தான்.

“என்னாச்சு டா தம்பி. வந்ததில இருந்து என் பின்னாடியே சுத்திட்டிருக்க.? என்ன விஷயம்.?” என்று பாலை அடுப்பில் வைத்தபடியே கேட்டார்.

“அப்பா, தமிழுக்கு என்னாச்சுன்னு தெரியல. இன்னைக்கு முழுக்க அவ என்கிட்டா பேசவே இல்ல. எவ்ளவோ கேட்டுப் பார்த்துட்டேன். சுத்தமாவே பேசல.” என்று தன் வருத்தத்தை முன் வைத்தான்.

“ஏன்.? என்னாச்சு.? ரெண்டு பேருக்கும் ஏதாவது சண்டையா.?” என்றார் அவர் டீத்தூளை பாத்திரத்தில் போட்டவாறே.

“அய்யோ.. இல்லப்பா. நாங்க சாதாரண ஃப்ரெண்ட்ஸ் மாதிரி சண்டை போட்டுக்க மாட்டோம். எத்தனை தான் சண்டை போட்டாலும், உடனே பேசிக்குவோம். இப்படியெல்லாம் இருந்த்தே இல்ல. இத்தனை வருஷத்துல அவ என்கூட பேசாம இருக்கறது இதுதான் முதல் முறை.” என்றான்.

“ஹூம்ம்.. சரி இப்போ நான் என்ன டா தம்பி பண்றது.?” என்றார் டீயை வடித்துக்கொண்டே.

“நீங்க தான் அவ கிட்ட என்னன்னு கேட்டு பேசி, சொல்லணும். அவ உங்ககிட்டன்னா பேசுவா.” என்றான்.

“ம்ம்ம்.. உன் நட்புக்கு தூது நானா.? சரி இந்தா டீயைக் குடி. அவகிட்ட போய் பேசிட்டு வரலாம்.” என்று ஒரு டம்ளரை அவனிடம் நீட்டினார்.

இருவரும் டீயைக் குடித்து முடித்துவிட்டு தமிழினியைப் பார்க்கக் கிளம்பினர். அவள் வீட்டிற்க்கு சென்றபோது, அவள் மாடுகளுக்கு கழனித் தண்ணியை கலந்து கொண்டிருந்தாள். இவர்களைப் பார்த்ததும் “வாங்க அய்யா..” என்றபடி “அம்மா.. அம்மா..” என்று உள்ளே ஓடினாள்.

“பாருங்கப்பா.. உங்கள மட்டும் தான் வர சொல்றா. என்னை கண்டுக்கவே இல்ல பாத்தீங்களா..?” என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்தான் அமுதன்.

“சரி, விடுடா தம்பி.. பாத்துக்கலாம்.” என்று அவனை சமாதானம் செய்தார்.

தமிழினி வெளியே வரும் போது, உடன் கோகிலாவும் வந்தபடி வணக்கம் வைத்தாள்.

“உட்காருங்க அய்யா..” என்று திண்ணையைக் காண்பித்து உட்காரச் சொன்னாள்.

அவர் அமர்ந்ததும், “நான் ஒரு முக்கியமான பஞ்சாயத்த தீர்ந்து வைச்சிட்டுப் போலாம்னு வந்தேன். எங்க ரங்காவ இன்னும் காணோம்.?” என்றார்.

“அவர் இனிமேல் தானுங்கய்யா வருவார். என்ன பஞ்சாயத்துங்கய்யா.? யாருக்குங்க.?” என்றார் தெரியாமல்.

“அட, நம்ம தமிழுக்கும், அமுதனுக்கும் தான்.” என்றார் சிரித்துக்கொண்டே..

கோகிலாவின் கண்கள் பெரிதாகி தமிழினியைப் பார்த்தது. அவளோ, முகத்தை தொங்கப்போட்டவாறே நின்று கொண்டிருந்தாள்.

“என்னாச்சு தமிழ் மா.. நீயும், அமுதனும் நல்ல நண்பர்கள் தானே.? திடீர்னு ஏன் நீ அவனோட பேச மாட்டிங்கற.? அவன் வந்ததுல இருந்து என்கிட்ட புலம்பித் தள்ளிட்டான். நீதான் ஏன், எதுக்குன்னு சொல்லணும்.” என்றார் அழகேசன்.

தமிழினி, கோகிலாவைப் பார்த்தாள். கோகிலாவுக்கு எப்படி இவரிடம் சொல்வது என்று தெரியவில்லை. திணறிக்கொண்டிருந்தாள்.

“அட, ஏன் எதுவுமே பேசாம நிக்கற.? சொல்லும்மா. உனக்கு என்ன பிரச்சினை இவனோட.?” என்று திரும்பவும் கேட்க,

“அத நான் சொல்றேனுங்கய்யா..” என்றபடி கேட்டினை திறந்து கொண்டு உள்ளே வந்தார் ரங்கராஜன்.

எல்லோரும் அவரைப் பார்த்தபடியே இருந்தனர்...

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை: 1274

உங்களின் விமர்சனங்களை கீழே உள்ள லின்க்கில் பதிவிடவும் நட்புக்களே...

 

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 9

கேட்டைத் திறந்து கொண்டு வந்த ரங்கனை அனைவரும் என்ன சொல்லப் போகிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

“வணக்கங்கய்யா. நீங்க இது மாதிரி அப்பப்போ வந்து போனா ரொம்ப சந்தோஷமா இருக்குமுங்க. எங்களுக்கு இந்த ஊர்ல ஆதரவு தரவரு நீங்க மட்டும் தான். அந்த ஒரு ஆறுதல்ல தான் நாங்க வாழ்ந்துட்டிருக்கோம்.” என்று பணிவுடன் பேச.

அழகேசன் சிரித்துக்கொண்டே, “உங்களுக்கு என்னைக்கும் என்னோட ஆதரவு நிச்சயம் இருக்கும். நீங்க அதைப் பத்தியெல்லாம் கவலைப்பட வேண்டாம். சரியா.? சரி ரங்கா. உனக்குத் தெரியுமா தமிழ் ஏன் அமுதன் கிட்ட பேச மாட்டிங்கறான்னு.? என்ன காரணம்னு கோகிலாகிட்டயும், தமிழ் கிட்டயும் கேட்டுப் பார்த்துட்டேன். அவங்க ரெண்டு பேருமே சொல்லாம ஒருத்தர் முகத்த ஒருத்தர் பார்த்துக்கிட்டே நிக்கறாங்க.” என்று அவரிடம் சொன்னார்.

“அது ஒண்ணும் இல்லைங்கய்யா, அதுக ரெண்டும் சின்னப் பசங்க. சின்ன வயசுல இருந்தே ஒண்ணுக்கொண்ணா பழகறாங்க. ஆனா, வயசு ஏற ஏற சில கண்ணுக எல்லாம் அதை தப்பாதானுங்க பார்க்குது. நம்ம மனசிலயும், அந்த சின்னஞ்சிறுசுக மனசிலயும் எதுவும் இல்லன்னு நமக்குத் தெரியுதுங்க. ஆனா, சில மனுஷங்க அதையெல்லாம் பார்க்கறாங்களா.? வேணும்னே இவகிட்ட பேசிருக்காங்க. அதை அவ தமிழுகிட்ட சொல்லிருக்கா. நான் நேத்தே அதெல்லாம் ஒண்ணுமில்ல. அவளை எதுவும் சொல்லாதன்னு இவகிட்ட படிச்சுப் படிச்சு சொன்னேங்கய்யா. ஆனா, அது பாவம் புள்ள மனச வேதனைப்படுத்திடுச்சு. அதனால தான் பாவம் அவளும் என்ன பண்றதுன்னு தெரியாம, யார்கிட்டயும் சொல்லவும் முடியாம பேசாம இருந்துட்டா. இதுல தமிழோட தப்பு எதுவும் இல்லைங்க. என் பொண்டாட்டியோட தப்புதாங்க. நீங்க ஒண்ணும் தப்பா நினைக்காதீங்கய்யா. அதெல்லாம் போகப்போக சரியாப் போயிடும். நான் அவகிட்ட சொல்றேனுங்க.” என்று சொல்லிமுடித்தார் ரங்கா.

“ஓ.. இதுதான் விஷயமா.? நான் கூட என்னவோ, ஏதோன்னு நினைச்சேன். இதப்பாரு ரங்கா. நீ சொல்ற மாதிரி, இது கோகிலாவோட தப்பும் இல்ல. இது ஒட்டுமொத்த சமுதாயத்தோட தப்புன்னு தான் நான் சொல்வேன். ஏன்னா, இந்த சமுதாயத்தப் பொறுத்த வரைக்கும் பொதுவா ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல இருக்கற ஆணும், பெண்ணும் சிரிச்சிப் பேசினாலே அதுக்கு ஏதேதோ பேர் வைச்சுப் பேச ஆரம்பிச்சிடுது. அது இயல்பா நடக்கற விஷயம் தான். ஒருத்தர் நம்ம பொண்ணப் பத்தி தப்பா பேசினா யாரா இருந்தாலும், ஏன் அது நானாக் கூட இருந்தாலும் கஷ்டமாத்தான் இருக்கும். அதுவும் இல்லாம, கோகிலா வயக்காட்டுல வேலை செய்யும் போது அங்க இருக்கற பொம்பளைங்க வாயெல்லாம் ஒண்ணு மாத்தி ஒண்ணு எதையாவது பேசிட்டுத்தான் இருக்கும். அதைக் கேட்கறப்போ கண்டிப்பா ஒரு மாதிரியாகத்தான் இருக்கும். அதனால தான் கோகிலா தமிழ் கிட்ட பேசிருக்காலே தவிர அவ மேல நம்பிக்கை இல்லாம இல்ல. முதல்ல ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கோங்க. பசங்க ரெண்டு பேரும் தெளிவா இருக்காங்க, நாம அவங்க மேல நம்பிக்கை வைச்சிருக்கோம். அதே போதும் நமக்கு. ரங்கா சொல்ற மாதிரி ஊர் வாய அடக்க முடியாது. இப்போதைக்கு எத ரொம்பப் பெரிய விஷயமா பேசறாங்களோ, அது அடுத்த விஷயம் வரும் போது வந்த தடம் தெரியாம மறைஞ்சு போகும். அதனால இதை நாம பெரிய விஷயமா எடுத்துக்காம, அவங்கள எப்பவும் போல பழக அனுமதிக்கனும். ஒண்ணும் அறியாத பிள்ளைங்க மனச நாமளே நோகடிக்கக்கூடாது. நம்ம மாணிக்கம் மாதிரி என்ன நாஞ்சொல்றது சரிதான.?” என்று சொல்லி சிரித்தார்.

அதனை ஆமோதிக்கும் விதமாக அனைவரும் தலையாட்டிச் சிரித்தனர். “இதோ பாரு கோகிலா, அப்படியே உன் முன்னாடி நம்ம பசங்களப் பத்தி யார் பேசினாலும், நீயும் உன்னால அவங்க வாய மூடும் படியா பேசிவிடு. இல்ல, வேற யார் வீட்டுலயும், எங்கயும் நடக்காத கதையா, அதுல ஒண்ணு, ரெண்டு அவுத்து விடு. எல்லா நாக்கும் தன்னால அடங்கிடும். அப்பறம் பாரு உன் பக்கமே வரமாட்டாங்க.” என்றார் அழகேசன்.

“சரிங்கய்யா..” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் கோகிலா.

“என்ன தமிழ், அம்மா இனிமேல் எதுவும் சொல்ல மாட்டாங்க. இனியாவது அமுதன்கிட்ட பேசறியா.?” என்றார்.

“என்ன மன்னிச்சிடுங்க அய்யா. இதை எப்படி அவன் கிட்ட சொல்றதுன்னு தெரியாம தான் அப்படி பேசாம இருந்தேன். மத்தபடி அவன் கிட்ட பேசாம நான் வேற யார்கிட்ட போய் பேசுவேன். என்னுடைய நண்பனாச்சே.” என்று சொல்ல, அப்பொழுது தான் கோகிலாவுக்கு அவன் எத்தகைய இடத்தை தமிழின் மனதில் பிடித்திருக்கிறான் என்று புரிந்தது.

“சரி ரெண்டு பேரும் இனிமேல் எப்பொழுதும் போல நல்ல நண்பர்களா இருக்கணும். யார் என்ன சொன்னாலும் அதை நீங்க பெரிதுபடுத்தாம, ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுக்காம இருக்கணும். புரிஞ்சுதா.?” என்றார் அழகேசன்.

“நிச்சயமா இருப்போம் பா..” என்று அமுதன் சொல்ல, “நிச்சயமா இருப்போம் அய்யா..” என்று தமிழினியும் ஒன்று சேர கூறினர்.

ஊர் பஞ்சாயத்தை நியாயமான முறையில் தீர்த்து வைக்க முடியவில்லை என்றாலும், நண்பர்களுக்கு இடையில் நடந்த இந்தப் பஞ்சாயத்தை அவரால் தீர்த்து வைக்க முடிந்ததே என்று நினைத்து சந்தோஷப்பட்டார்.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை இருவரும் தோட்டம், வாய்க்கால் என்று சுற்றியபடியே பேசிக்கொண்டிருந்தனர்.

“மன்னிச்சுக்கோடா நண்பா.. எனக்கு அம்மா இப்படி சொன்னதும், என்ன பண்றதுன்னு தெரியாம தான் உன்கூட நேத்து பேசாம இருந்துட்டேன். நல்ல வேளையா அய்யா வந்துதான் இத சரிபண்ணியிருக்கார். அய்யாவுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் பத்தாது.” என்று அழகேசனைப் புகழ்ந்தாள் தமிழினி.

“ம்ம்.. எனக்கு அப்பாவைத் தவிர இந்தப் பிரச்சினைய வேற யாராலும் தீர்த்து வைக்க முடியாதுன்னு தோணுச்சு. அதனால தான் அப்பா வந்தவுடனேயே கையோட கூட்டிட்டு வந்துட்டேன்.” என்றான் அமுதன்.

“ஏன் அய்யாவால, என்கூட பேசாம இருக்க முடியாதோ.?” என்றாள்.

“கிட்டத்தட்ட அப்படி தான் தமிழு. நீ நேத்து பேசாதப்போ எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. நேத்து வகுப்புல நடத்துன பாடம் எதையுமே கவனிக்கல. நீ ஏன் பேச மாட்டிங்கற.? நான் ஏதாவது தப்பு பண்ணீட்டனா.? இப்படியெல்லாம் யோசிச்சு யோசிச்சே எனக்கு தலையே வலிக்க ஆரம்பிச்சிடுச்சு. நீ ஒரு நாள் பேசலன்னாலும் எனக்கு ஒரு மாதிரி தான் இருக்கும்.” என்றான் அமுதன்.

“என் மேல அத்தனை பாசமாடா உனக்கு.?” என்றாள் தமிழினி.

“ம்ம். ஆமா, நீ தான் என் உயிர்த் தோழியாச்சே.?” என்றான் அமுதன் அவளைப் பார்த்தவாறே.

அவளும் சிரித்துக்கொண்டே “ம்ம்ம்..” என்று தலையாட்டிச் சிரித்தாள். பேசிக்கொண்டே அப்படியே வாய்க்கால் பக்கமாகச் சென்று கொண்டிருந்தனர்.

வழக்கத்தை விட வேகமாகவே தண்ணீர் போய்க்கொண்டிருந்தது. இரண்டு வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் தண்ணீரின் அளவு சிறிது அதிகமாகவே காணப்பட்டது. அதைப்பார்த்துக்கொண்டே வந்தவர்கள், இரு சிறுவர்கள் மேலே நின்று கொண்டு பார்த்துக்கொண்டிருந்தவாறே அங்கே விளையாடிக்கொண்டிருந்தனர்.

திடீரென்று கால் இடறி தவறி இருவரும் வாய்க்காலில் விழுந்தனர். பாவம் நீச்சல் தெரியாத சிறுவர்கள் போலும், நீரில் மூழ்கி மூழ்கி எழ முடியாமல் தவித்தனர். கண நேரத்தில் நடந்த அந்த சம்பவத்தைப் பார்த்த அமுதனும், தமிழினியும் பதறினர்.

“டேய்.. அமுதா, அங்க பாரு.. அய்யோ அந்தப் பசங்களக் காப்பாத்தனும். நீ போய்.. ஏதாவது கயிறு இருந்தா கொண்டு வா.. சீக்கிரம் போ..” என்று அவனை துரத்த, தோட்டத்தில் உள்ள மோட்டார் ரூமில் ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்க ஓடினான்.

அதற்க்குள் தமிழினி தன்னால் முயன்று அவர்களை மூழ்க விடாமல் செய்ய வேண்டும் என்று வாய்க்காலில் குதித்தாள். நீரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாவிட்டாலும், முயற்சி செய்து அவர்கள் இருக்கும் இடத்துக்கு சென்றாள்.

அதற்க்குள் அமுதன் மரம் ஏற உதவியாக இருந்த ஒரு பெரிய கயிறுடன் ஓடி வந்தான். தமிழினியும் நீரில் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

“அய்யோ. தமிழு நீ எதுக்கு அதுக்குள்ள அவசரப்பட்டு குதிச்ச.? நானும் வரேன்.” என்று குதிக்க முயன்றவனை,

“வேண்டாம் டா. நீ அந்தக் கயிற ஒரு என்னோட அளவுக்கு கட்டி முடிச்சு போட்டு என்கிட்ட தூக்கிப் போடு, அப்பறம் அந்த மரத்த சுத்தி நின்னுக்கோ, நான் சொல்லும் போது பலம் முழுக்க சேர்த்து இழு. அதுக்கப்பறம் உன்னால முடிஞ்ச அளவுக்கு சத்தம் போட்டு கத்தி ஊரக் கூட்டு. அதே போதும்.” என்றபடி, அவன் தூக்கிப் போட்ட கயிறை தன்னுடன் கட்டிக் கொண்டு உள்ளே மூழ்கினாள்.

அதற்க்குள் அமுதன், அவள் சொன்னதைப் போல் ஒரு பெரிய மரத்தை சுற்றியபடி தயாராக இருந்தான். அதே போல், “யாராவது வாங்க.. யாராவது வாங்க.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க..” என்று குரலை உயர்த்தி கத்தியபடி இருந்தான்.

உள்ளே மூழ்கிய தமிழினி, மேலே அந்த இரு சிறுவர்களையும் தன் இரு கையால் தன் அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி இழுத்தபடி, “டேய்.. அமுதா இப்போ இழுடா..” என்று கத்தினாள்.

அவனும் முயன்ற அளவு அந்தக் கயிற்றை பிடித்தபடி இழுத்தான். அவன் ஒருவனால் மட்டுமே அது சாத்தியப்படவில்லை. கத்திக்கொண்டே இருந்தவன் குரல் கேட்டு அங்கு வந்த இரு ஆட்கள் ஓடி வந்தனர்.

அவர்களில் ஒருவர் வாய்க்காலில் குதிக்க, ஒருவர் அமுதனோடு சேர்ந்து கயிற்றைப் பிடித்து இழுத்தார். வாய்க்காலில் குதித்தவர், ஒரு சிறுவனைப் பிடித்துக்கொள்ள, தமிழினியை அவர்கள் இருவரும் இழுத்தனர்.

அதற்க்குள் இன்னும் சில ஆட்கள் வந்துவிட்டனர். ஒட்டுமொத்தமாக சேர்ந்து அந்த சிறுவர்களையும், தமிழினியையும் கரை சேர்த்தனர். அந்த சிறுவர்களை கயிற்றுக்கட்டிலில் படுக்க வைத்து நன்றாக வயிற்றை அமுக்கி தண்ணீரை வெளியே தள்ளினர்.

சிறிது நேரம் கழித்தே, அந்த சிறுவர்கள் இருமியபடி மூச்சு விட்டனர். அப்போதுதான் அவர்களுக்கு நிம்மதியானது. தமிழினிக்கும், அமுதனுக்கும் அப்போது தான் உயிரே திரும்ப வந்தது.

“டேய் பசங்களா.. நீங்க பொழச்சிட்டீங்க டா..” என்று அவர்கள் இருவர் முதுகில் தட்டி விட்டனர். அதே போல், தமிழினியையும், அமுதனையும் வெகுவாக பாராட்டினர்.

“ரொம்ப அருமையான விஷயம் பண்ணிருக்கீங்க கண்ணுகளா. நீங்க ரெண்டு பேரும் இல்லன்னா இந்தப் பசங்கள இன்னைக்கு பொணமாத்தான் பார்த்திருக்கணும். தமிழு உன்னோட தைரியத்துக்கு எவ்ளோ பாராட்டினாலும் பத்தாது.” என்று ஆளாளுக்கு பாராட்டு மழை பொழிந்து கொண்டிருக்க..

அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடி வந்தனர் அந்தப் பையன்களின் பெற்றோர்கள் இருவரும். “டேய்.. ஏண்டா இப்படிப் பண்றீங்க. விளையாட வாய்க்கா பக்கம் போகாதீங்கன்னு அடிச்சிக்கிட்டோமே.? கேட்டீங்களா.? ஏதாவது ஆயிருந்தா நாங்க என்னடா பண்றது.?” என்றபடி அந்தப் பையன்களைப் பிடித்துக்கொண்டே அழுதுகொண்டிருந்தனர்.

“அட, அதான் காப்பாத்திட்டாங்கள்ல. அப்பறமும் ஏன் அழுதுட்டிருக்கீங்க. போய் அந்தப் பசங்க்கிட்ட நன்றி சொல்லுங்க. அதுவும் தமிழ் தான் ரொம்பப் போராடி காப்பாத்தினா. அவள தெய்வமாத்தான் நீங்க கும்பிடணும்.” என்று பலரும் சொல்லிக்கொண்டிருந்தனர்.

தமிழினியை ஓடி வந்து கட்டிப்பிடித்தபடி, “என்ன மன்னிச்சிரு கண்ணு. நீதான் காப்பாத்துனதா சொல்றாங்க. நீ மட்டும் காப்பாத்தலன்னா எங்க உயிரே போயிருக்கும்.” என்று ஒரு சிறுவனின் பெற்றோர் கண்ணீர் மல்க அவளிடம் நன்றி தெரிவித்தனர்.

மற்றொரு சிறுவனின் பெற்றோருக்கோ, மிகவும் சங்கடமாக இருந்தது. எப்படி இவளின் முகத்தில் முழிப்பது.? எத்தனையோ முறை தாங்களே அவளை இகழ்ந்து பேசியிருக்கிறோம். அதே போல், ஒரு முறை அவள் அவர்களின் மகளுடன் பேசியதைக் கண்டு அவளை அழைத்து கண்டித்திருக்கிறோம்.

ஆனால், இன்று அவள் தான் அவர்களின் நீண்ட நாள் பலனைத் திருப்பித் தந்துள்ளாள். இரண்டாவது ஆண் குழந்தை வேண்டும் என்பதற்க்காக ஏறாத கோயிலில்லை, வேண்டாத தெய்வமில்லை. அத்தனை வேண்டுதலுக்கும் பலனாகக் கிடைத்த செல்வத்தை இன்று ஒரு நொடியில் இழக்க நேரிட்ட தருணத்தில் தெய்வமாய் வந்து காப்பற்றியவளுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்தனர்.

அதற்க்குள் விஷயம் கேள்விப்பட்டு பஞ்சாயத்திலிருந்து ஓடி வந்தார் சாத்தப்பன். இவர் எதற்க்காக ஓடி வந்தார் என்பது தானே, சந்தேகம். அவரின் மகள் வயிற்றுப் பேரன் தான் அந்தச் சிறுவன்.

“என்னாச்சு..? என்னாச்சு..? ஏம்மா என்னாச்சு மா தம்பிக்கு..?” என்று பதறியபடியே வந்தவர் சட்டையெல்லாம் நனைந்தபடி, அவன் சாதாரணமாக உட்கார்ந்திருந்ததைப் பார்த்தவர், “டேய் தம்பி உனக்கு ஒண்ணும் ஆகலையே..? பையனக் குடு.” என்றபடி தோள்களில் தூக்கி வைத்தபடி அவனைப் பார்த்து அழுதார் சாத்தப்பன்.

“எப்படி மா ஆச்சு.? இவன் எப்படி தனியா வந்தான்.? யாரு இவனக் காப்பாத்தினாங்க.?” என்று அவர் அவர்களிடம் கேட்க, அவர்களோ தமிழினியைக் காட்டினர்.

அவனின் பெற்றோர்கள் ஒரு பக்கம் திணற, தமிழினி தான் காப்பாற்றியது என்று தெரிந்த சாத்தப்பனோ அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தார்.

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1214

உங்களின் விமர்சனங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பதிவிடவும் தோழமைகளே...


 

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 10

ஊரே அந்த இடத்தில் கூடி விட்ட நிலையில், தமிழினியை ஏறெடுத்துப் பார்க்க சாத்தப்பனுக்கு வெட்கமாய் இருந்தது. அவளைப் பெற்றவர்களை, எத்தனை பேச்சு பேசியிருப்பார்கள், எத்தனை தடவை அவர்களுக்கு எதிராக நடந்திருப்பார்கள். கொஞ்ச, நஞ்சமல்ல அவர்களுக்கு இழைத்த அநீதிகள்.

ஆனால், இன்றோ அதையெதையும் அறியாத சிறு உள்ளம் தான் அவர்களை தலை நிமிரச் செய்திருக்கிறது. அவர்கள் நினைத்திருந்தால் எவரையும் கண்டுகொள்ளாமல் இருந்திருக்க முடியும். ஆனால், அவர்கள் பொறுமையாய் இருந்ததோடு, அவர்களின் மகளையும் நன்றாக வளர்த்திருப்பது ஊருக்கே எடுத்துக்காட்டு. இன்று அதை நிரூபித்து விட்டாள் தமிழினி.

தலைகுனிந்தவாறே இருந்தவர்களைப் பார்த்து, “அய்யா.. எதுக்கு எல்லாரும் இப்போ அழுதுட்டிருக்கீங்க.? தம்பி பொழச்சுட்டான் தானே. எல்லாரும் சந்தோஷப்படுங்க.” என்று எதார்த்தமாய்ச் சொல்ல,

அவர்கள் அனைவரும் அவளை கையெடுத்து கும்பிட்டனர். “எங்கள மன்னிச்சிரு கண்ணு. நாங்க எத்தனையோ தடவை உன்னத் திட்டியிருக்கோம், உன் மனச நோகடிக்கற மாதிரி தேவையில்லாததெல்லாம் பேசிருக்கோம். ஆனா, நீ இன்னைக்கு எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாம எங்க பையனக் காப்பத்திக் குடுத்திருக்க. அவனுக்கு மட்டும் ஏதாவது ஆயிருந்தா, நாங்க என்ன பண்ணிருப்போம்னே தெரியல. நீ தான் எங்க குலதெய்வம். உனக்கு கோயில் கட்டி கும்பிட்டாலும் தப்பில்ல.” என்று உணர்ச்சி பொங்கக் கூறினர்.

“அதெல்லாம் நான் எப்பவும் மனசில வைச்சுக்கிட்டது இல்லைங்கம்மா. நீங்க தம்பிய கவனமா பாத்துக்கங்க. நீச்சல் கத்துக்குடுங்க. அது போதும்.” என்றாள் தமிழினி பெருந்தன்மையாய்.

அவளின் கள்ளம் கபடமில்லாத பேச்சில் யாராக இருந்தாலும், மனம் இறங்குவர். சாத்தப்பனும் மனம் இளகினார்.

“என்னையும் மன்னிச்சிரு கண்ணு, நானும் நிறைய தப்பு பண்ணிருக்கேன். உங்க குடும்பத்துக்கு நிறைய பாவங்கள் செஞ்சிருக்கேன். அதுதான் இன்னைக்கு என் பேரனோட உயிர காவு வாங்கப் பாத்திருக்கு. ஆனா, நீ தான் தெய்வமா வந்து காப்பாத்திக் கொடுத்திருக்க. உனக்கு நன்றி சொல்றதுக்குக் கூட எனக்கு அருகதை இல்ல. என்ன நினைச்சா எனக்கே வெட்கமா இருக்கு.” என்று அவளிடம் கையெடுத்து கும்பிட்டு வெட்கித் தலைகுனிந்தார்.

“அதெல்லாம் இல்லைங்கய்யா. எனக்கும் அந்த தெய்வம் தான் உறுதுணையா இருந்துச்சு. அமுதனும் இல்லைன்னா என்னாலயும் இதைப் பண்ணிருக்க முடியாது. நீங்க அவனுக்கும் நன்றி சொல்லுங்க.” என்றாள் தன் நண்பனை விட்டுக்கொடுக்காமல்.

“நன்றி தம்பி..” என்று அவனின் கைகளைப் பிடித்து நன்றி கூறியபடி சென்றனர்.

அவர்கள் சென்றவுடன், “ஏய்.. தமிழு. உயிரப் பணயம் வைச்சு காப்பாத்துனது நீ. என்னை எதுக்கு சொல்லிட்டிருக்க.?” என்றான் அமுதன்.

“டேய்.. நண்பா.. நீ இல்லைன்னா என்னால எப்படி இதை செஞ்சிருக்க முடியும் சொல்லு. நீ மட்டும் கயித்தப் போட்டு காப்பாத்தலன்னா, அந்தத் தண்ணி என்னையும் அடிச்சிட்டுப் போயிருக்கும். அப்பறம் நானும் என்னாகியிருப்பேன்னு தெரியல. அதனால தான் உன்னையும் சொன்னேன்.” என்றாள்.

“எப்படிப் பார்த்தாலும், நீ தான் அந்த நேரத்துல அதப் பண்ண சொன்னது. இல்லன்னா எனக்கு இந்த மாதிரி யோசனையெல்லாம் எங்க வரப் போகுது.?” என்றான் அமுதன்.

“நான் யோசனை சொன்னாலும், அதை செயல்படுத்த ஒரு தனி தைரியமும், பலமும் வேணும் தானே. அது உன்கிட்ட இருந்ததால தான் இது சாத்தியமாச்சு.” என்றாள் தமிழினி.

“ம்ஹூம்ம்... அதெல்லாம் இல்ல, உன்னாலதான்..” என்றான் அவன் ஒத்துக்கொள்ளாமல்.

“ம்ஹூம்ம்.. இல்ல உன்னாலதான்..” என்றாள் அவளும் பிடிவாதமாக.

“சரி, சரி.. நீங்க ரெண்டு பேரும் ஒற்றுமையா இருந்ததால தான் இது நடந்துச்சு சரியா..” என்று சொல்லிக்கொண்டே சிரித்தபடி வந்தார் அழகேசன்.

“அப்பா.. பாருங்க.. என்ன நடந்துச்சு தெரியுமா.?” என்று அவன் நடந்ததைச் சொல்ல வர,

“நீ எதுவும் சொல்ல வேண்டாம். அதுதான் ஊர் முழுக்க பேசிட்டிருக்கே. உங்கள நினைச்சு எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு பசங்களா. என்ன ஒரு தைரியம், என்ன ஒரு வேகம். அதுவும், தமிழ் நீ மறுபடியும் நம்ம ஊருக்கு இன்னொரு பெருமையத் தேடித் தந்திருக்க. இந்தத் தடவையும் உனக்கு விருது நிச்சயம். மறுபடியும் முதல்வர் கையால விருது வாங்க ரெடியா இரு..” என்றார் அழகேசன்.

“ம்ம்ம்.. அப்படிச் சொல்லுங்கப்பா..” என்று அவளிடம் “பார்த்தியா.?” என்பதைப் போல் பார்த்தான் அமுதன்.

“அய்யா.. இப்பவும் சொல்றேன். அமுதா இல்லைன்னா இது சாத்தியமே இல்ல. அதனால அவனுக்கும் இந்த விருது போய்ச் சேரணும்.” என்றாள் தீர்க்கமாக.

“அது முடியாதே தமிழ். மாவட்டத்துல ஒருத்தருக்குத் தான் அந்த விருது. ரொம்ப ரிஸ்க் எடுத்தது நீதான். அந்த ரெண்டு பசங்களையும் காப்பாத்திருக்க. அதனால உனக்குத்தான் கிடைக்கும்.” என்றார் அழகேசன்.

“ஆனா, நான் அமுதனுக்கும் வாங்கித் தருவேன்.” என்று சபதம் எடுத்தாள்.

“ம்ம்.. சரி அத நாம் அப்போ பார்க்கலாம்.” என்றார் அழகேசன்.

வீர, தீர செயல்கள் புரிந்தவர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதோ, இப்போது விருது வாங்குவதற்க்குத் தயார் நிலையில் அவளது பெயரைச் சொன்னதும் தமிழினி சென்றாள்.

அவளைக் கண்டதும் அப்போது அவள் விருது வாங்கிய முதல்வரே இருக்க, “இதே பெயரை நான் ஏற்கனவே கேட்டிருக்கேனே.” என்றார்.

“ஆமாங்கய்யா. நான் சின்ன வயசுல உங்க கையால தான் இதே விருத வாங்கினேன். இப்பவும் வாங்கறேன்.” என்றாள் புன்னகையுடன்.

“ஓ.. அப்படியா ரொம்ப சந்தோஷம், ரொம்ப பெருமையா இருக்கு மா.” என்று அவளிடம் சொன்னவர், இவள் எந்த செயலுக்காக விருதை வாங்குகிறாள் என்பதையும் கேட்டறிந்தார்.

“என்னுடைய நண்பன் இல்லைன்னா, என்னால அன்னைக்கு அந்தப் பசங்களக் காப்பாத்திருக்க முடியாது. அவனும் என்கூட தான் வந்திருக்கான். நீங்க அவனுக்கு இந்த விருதத் தரணும்.” என்று தன் கோரிக்கையை வைக்க, அவனையும் அழைக்கச் சொல்லி, அவனுக்கு ஒரு விருதை வழங்கினார்.

“உனக்கு பெருந்தன்மை ரொம்ப அதிகம் மா. உனக்கு என்னவாகனும்னு ஆசை.?” என்று கேட்டார்.

“எனக்கு ஒரு ஆசிரியர் ஆகணுங்க அய்யா. ஆனா, மேல படிக்கணும்னா எங்க அப்பா, அம்மானால முடியுமான்னு தான் தெரியல.” என்றாள்.

அப்போதே அவர், “நீ கவலைப்படாத மா. உன்னுடைய மேல் படிப்புக்கு உண்டான செலவை அரசே ஏத்துக்கும். நீ நல்லா படிச்சா போதும்.” என்றார்.

அவளுக்கு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. அவரின் கால்களின் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள். அவர் உடனே தனது பி.ஏ விடம் சொல்லி அவளுக்கான எல்லா விவரங்கள் அடங்கிய பேப்பரில் முதல்வரின் கையொப்பமிட்டு அவளிடம் தரச் சொன்னார்.

அவரிடமிருந்து நன்றி சொல்லி விடைபெற்று, அழகேசனிடம் வந்தவர்கள், “அய்யா., நான் தான் சொன்னேனே அவனுக்கும் நிச்சயம் இந்த விருதை வாங்கிக் கொடுப்பேன்னு. பார்த்தீங்களா.?” என்றாள் சந்தோஷத்தில்.

அவள் விருது வாங்கியதை விட, அவனுக்கு அந்த விருதை சிபாரிசு செய்து வாங்கிக் கொடுத்தது தான் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை அழகேசன் அறிந்து தமிழினியை நினைத்து பெருமைப்பட்டார்.

நிகழ்ச்சி முடிந்ததும், தலைமையகம் வந்து காத்திருந்து, அனைத்தையும் பெற்றவர்கள் திரும்பி ரயிலில் பயணித்து, இரவு ஊர் வந்து சேர்ந்தனர்.

அடுத்த நாள் ஊரே அவர்களுக்கு பாராட்டு விழா கொண்டாட பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தது. எல்லா பெருமையையும் தேடித் தந்த பெண்ணைப் பெற்றதற்க்கு ரங்கராஜனும், கோகிலாவும் பெருமைப்பட்டனர்.

ஊருக்கே அழைப்பு விடுத்திருந்தார் அழகேசன். அதில் விருப்பமில்லாமல் கலந்து கொண்டவர்கள் இருவர். ஒன்று பஞ்சாயத்து தலைவர் மாணிக்கம். மற்றொன்று அவரின் வலது கை பெரியசாமி.

சாத்தப்பனோ இப்போது அடியோடு மாறிவிட்டார். நடந்த அந்த நிகழ்வுக்குப் பிறகு அவர்கள் இருவரோடு பழகுவதையும், பேசுவதையும் குறைத்துக்கொண்டார்.

பெரியசாமி கூட, அடிக்கடி கிண்டல் செய்தபடி, “தலைவரே, சாத்தப்பன் திருந்திட்டானாம். அதனால நம்ம கூட இனிமேல் சேர மாட்டாராம். பாவம் பண்ணதுக்கு பிராய்ச்சித்தமா இனிமேல் நியாயத்துக்கு பக்கமா தான் நிப்பானாம். இதெல்லாம் நடக்கற கதையா சொல்லுங்க.?” என்று மாணிக்கத்திடம் சொல்வார்.

அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும் என்று அமைதியாக அங்கிருந்து நகர்ந்து விடுவார் சாத்தப்பன். இப்போது அவரின் வழக்கம் அதிகமாக அழகேசனுடன் இருப்பதாயிற்று. பஞ்சாயத்தானாலும், அழகேசனிடம் பேசிவிட்டு நியாயத்துக்கு சிறிது பரிந்து பேசி, எப்படியோ ஒன்றிரண்டு நியாயங்களை வழங்கினர்.

அழகேசனும் அவருடைய மனமாற்றத்தை பெரிதும் வரவேற்றார். இதெல்லாவற்றுக்கும் காரணம் தமிழினி. அதனால், அவளைப் பார்த்தாலே அவர் அவ்வப்போது சிரிப்பார். அக்கறையுடன் பேசுவார். அவள் பள்ளி செல்வதற்க்காக புதிதாக சைக்கிள் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால், அழகேசன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு அவரும் உறுதுணையாய் வந்து அவரால் இயன்ற உதவிகளைச் செய்தார். அனைவரும் கூடிவிட்ட நிலையில் தமிழினியையும், அமுதனையும் முன்னே நிற்க வைத்தபடி, பேச ஆரம்பித்தார் அழகேசன்.

“நம்ம ஊரு பொண்ணு இன்னைக்கு நம்ம ஊருக்கு மறுபடியும் பெருமை தேடித் தந்திருக்கா. அவளோட தைரியத்தையும், பெருமையையும் சொல்லத்தான் நான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணேன். ஏன்னா, யாருக்கும் ஒண்ணும் புதுசா சொல்லித் தெரிய வேண்டியது இல்ல. ஒரு காலத்துல நம்ம ரங்கனையும், கோகிலாவையும் யாருமே மதிக்காம இருந்தாங்க. ஏன், சில பேரு அவங்கள ஏமாத்தவும் செஞ்சிருக்காங்க.” என்றபடி அவர் பெரியசாமியைப் பார்க்க, அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

“தலைவரே.. இதெல்லாம் ரொம்ப அதிகம். என்னைத்தான் சொல்லாம சொல்லிட்டிருக்கான் அழகேசன்.” என்றார் மாணிக்கத்திடம் முணுமுணுத்தபடி.

“யோவ்.. விடுய்யா. அதுக்காக நீ போய் அவன்கிட்ட சண்டை போடப் போறியாக்கும். இப்போ, ஊருல அதிக சப்போர்ட் அவனுக்குத்தான். பத்தாததுக்கு சாத்தப்பனும் இப்போ அவன்கூட சேர்ந்துட்டான். நம்ம பாடு திண்டாட்டமா இருக்கு. இங்க வந்தது கூட, அவனுங்க நம்மள எதுவும் பேசிடக்கூடாது பாரு அதுக்குத்தான். இல்லைன்னா, இந்தக் கன்றாவியையெல்லாம் பார்க்கணும்னு எனக்கு என்ன தலையெழுத்தா.? வாய மூடிட்டு பேசாம உட்காருய்யா..” என்று அவர் கடுப்புடன் முணுமுணுத்தபடி சொல்ல, வந்த கோபத்தையும் அடக்கிக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டியதாயிற்று பெரியசாமிக்கு.

அங்கே அழகேசன் இன்னும் தொடர்ந்தபடி இருந்தார். ஆனா, அவங்க ரெண்டு பேரும் அதுக்காக ஒண்ணும் துவண்டு போகல. பொறுமையா இந்த ஊருலயே எல்லா சவால்களோடையும் வாழ்ந்தாங்க. அதே மாதிரி, அவங்க பொண்ண பள்ளிக்கூடத்துலயே சேர்த்துக்கக் கூடாதுன்னு சிலர் சொன்னாங்க. ஆனா, அந்தப் பொண்ணோட குணத்துக்கு அந்தக் கடவுளே முதலமைச்சர் ரூபத்துல படிக்க ஏற்பாடு பண்ணாங்க. இப்போ பாருங்க, அவளோட தைரியத்தால இதோட மூணு உயிர்களக் காப்பாத்தி இருக்கா. அதுல, என் பையன் அமுதனும் ஒருத்தன். இந்த முறை அவனும் அவளுக்கு உதவியா இருந்து மற்ற ரெண்டு பசங்களையும் காப்பாத்தி இருக்காங்க. அந்த நல்லெண்ணத்தப் பாராட்டி அவங்களுக்கு விருதும் கிடைச்சிருக்கு. அதோட, தமிழோட மேற்படிப்புக்கான செலவை அரசே ஏத்துக்கும்னு முதலமைச்சரே சொல்லிட்டார். இதுக்கு மேல என்ன வேணும். ஒரு நல்ல நண்பர்களா இருக்கற அவங்களப் பாராட்டி, எல்லாரும் அவங்க ரெண்டு பேரையும் வாழ்த்தணும்னு நான் தாழ்மையுடன் எல்லாரையும் கேட்டுக்கறேன்.” என்று தனது உரையை முடித்தார் அழகேசன்.

அவர் பேசி முடித்ததும், கைத்தட்டல்களால் அந்தப் பள்ளியே அதிர்ந்தது. “பாருங்க தலைவரே இந்தப் புள்ளைக்கு நேரத்த. படிக்கவே விடக்கூடாதுன்னு பார்த்தா, இப்போ அரசு செலவுல இலவசமா படிக்கப் போகுது. ஹூம்ம்..” என்று சலித்துக்கொண்டார் பெரியசாமி.

“விடுய்யா.. நீ வேற சும்மா, எதுக்கெடுத்தாலும் எதையோ ஒண்ண சொல்லிக்கிட்டு. அந்தப் புள்ளைக்கு நேரம் நல்லா தான் இருக்கு. நமக்கு தான் நேரமே சரியில்ல. இவனுக எப்படா இந்த நிகழ்ச்சிய முடிப்பாணுகன்னு இருக்கு. சட்டு, புட்டுன்னு கிளம்பலான்னு பார்த்தா விட மாட்டானுக போலிருக்கே.?” என்று எரிச்சலில் பெரியசாமியிடம் முணுமுணுத்தார்.

நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது. அனைவரும் அவர்களை வெகுவாகப் பாராட்டினர். ஆனால், சில கண்கள் எப்பொழுதும் போல அவர்களுக்கு இடையில் என்ன இருக்கிறது என்பதைப் போல் ஜாடையாக பேசிக்கொண்டிருக்க, அது அழகேசனின் காதில் விழுந்தது.

அப்போதே, அழகேசன் உடனே சென்று மைக்கில் சொன்னார். “ஊருக்கு ஒண்ணு சொல்லிக்க விருப்பப்படறேன். ஒரு பொண்ணும், பையணும் சேர்ந்து பழகினா அதத் தப்பா பார்க்கறதே எல்லாருடைய வாடிக்கையா போச்சு. ஆனா, இந்தப் பசங்க அதுக்கு நேர்மறையானவங்க. அவங்களுக்கு இடையில் இருப்பது ஒரு நல்ல நட்பு மட்டும் தான். நீங்க அத மதிக்காட்டியும் பரவால்ல. அதை கொச்சைப்படுத்தி பேசாதீங்க. அவங்களப் பார்த்தாவது எல்லா பெண் பிள்ளைகளும், ஆண் பிள்ளைகளும் ஒரு நல்ல நட்பு வட்டாரத்தோட பழகட்டும். அதுக்கு பெத்தவங்க முதல்ல பிள்ளைங்கள நம்பணும். அப்போதான் பிள்ளைங்க அதுக்குத் தகுந்த மாதிரி நடந்துக்குவாங்க. எல்லாரும் வந்து இந்த நிகழ்ச்சிய சிறப்பா நடத்திக் கொடுத்ததுக்காக நன்றி.” என்று சொன்னார்.

அது பலருக்கு புத்தியில் உரைத்தது. சிலர் காது கொடுத்துக் கேட்பதாய் தெரியவில்லை. சிலரோ, “எல்லாம் இந்தக் கல்யாணம் ஆகற வரைக்கும் தான். அதுக்கப்பறம் வரப் போறவங்க சொல்றதத் தான, இந்தப் பசங்க ரெண்டும் கேட்டாகணும்.” என்றபடி பேசிக்கொண்டே சென்றனர்.

பேசுபவர்கள் பேசிக்கொண்டே தான் இருப்பர். அவர்களை குற்றம் சொல்ல முடியுமா.? ஆனால், இதை அமுதனும், தமிழினியும் கேட்டு விட்டனர். அப்போதே அவர்களின் முகம் மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கள்ளம், கபடமில்லா நண்பர்களின் உள்ளம் உடைந்து விட்டது. என்னாகுமோ.?

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1261

உங்களுடைய விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விமர்சனங்களை கீழே உள்ள
கமெண்ட் லிங்கில் பதிவிடவும் தோழமைகளே...

 

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 11

இருவர் எண்ணங்களை இப்போது ஆராய்ந்தால், ஒரே மனரீதியில் இருந்தனர். தமிழினியும், அமுதனும் இருவரும் எப்பொழுதும் நண்பர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்பினாலும், இடையில் வருபவர்கள் ஏதேனும் செய்தால் என்ன செய்வது.? என்ற மனப்போராட்டத்தில் இருந்தனர்.

அதே வாய்க்கால் பக்கம் தோட்டத்தில் அமர்ந்து, இருவரும் நீண்ட நேரமாக எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தனர். ஆனால், அவர்களின் மனம் இப்போது அமைதியாக இல்லை. ஓயாமல் எதையாவது பேசிக்கொண்டே இருக்கும் நண்பர்களுக்கு, நெடுநேரமாக பேசாமல் இருப்பது பிடிக்காமல் போகவே, இருவரும் பேச ஆரம்பித்தனர்.

“ஏண்டா நண்பா, நாம கடைசி வரைக்கும் ஃப்ரெண்ட்ஸ் ஆ இருக்கவே முடியாதா.? நம்மள பிரிச்சிடுவாங்களா.?” என்றாள் தமிழினி.

“தெரியல தமிழு. எனக்கு மட்டும் என்ன தெரியும்.? நாம இப்போதான் ஸ்கூல் படிச்சிட்டிருக்கோம். இன்னும் மேல பதினொண்ணாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பு படிக்கணும். அப்பறம் காலேஜெல்லாம் போக வேண்டி இருக்கு. அதுக்கும் அப்பறம் வேலைக்குப் போகணும். இத்தனையும் இருக்கு. அதுக்கப்பறம் தான, கல்யாணமெல்லாம் பண்ணுவாங்க.” என்றான் அமுதன்.

“டேய். எனக்கு என்ன தெரியும்னு சொல்லிட்டு, இப்போ கல்யாணம் வரைக்கும் போயிட்ட.? ஹூம்ம்.. திருட்டுப் பையன் டா நீ.” என்று அவன் தலையில் ஒரு குட்டு குட்டினாள்.

“ஸ்ஸ்ஸ்... ஆஆஆ.. வலிக்குது தமிழு. நீ அடிச்சாலும், என்ன பண்ணாலும் எனக்கு வலிக்குது.” என்று தலையைத் தேய்த்துக்கொண்டே சொன்னான் அமுதன்.

“ஹூம்ம்ம்.. ஒழுங்கா திண்ணா தான உடம்புல சத்து இருக்கும். என்ன தான் சாப்பிடறியோ.?” என்றான்.

“ம்ம்.. சரி, இனிமேல் நீ அடிச்சா வலி தாங்கிக்க வேண்டியாவது நான் கொஞ்சம் அதிகமா சாப்பிடறேன். சரியா.?” என்று முகத்தைப் பாவமாய் வைத்துக்கொண்டே சொன்ன அமுதனைப் பார்த்தவள் சிரித்தாள்.

“அப்பா, இவ்ளோ நேரம் அமைதியா இருந்தது நல்லாவே இல்ல. இப்போ பாரு, எவ்ளோ அழகா கலகலன்னு சிரிக்கற. இப்போதான் நல்லா இருக்கு.” என்று அவனும் சொல்லிக்கொண்டே சிரித்தான்.

நண்பர்கள் இருவரும் சிரித்தது அங்கிருந்த மரம், செடி கொடிகளுக்குப் பிடித்ததோ, என்னவோ அவைகளும் அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதாய் அனைத்தும் மெல்லிய தென்றல் காற்றை வீசின. அந்தக் குலுகுலு காற்றை ரசித்தவாறே இருவரும் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

“இப்போ, நாம என்ன பண்ணுவோம் தமிழு.? எல்லாரும் சொல்ற மாதிரி நம்மள கல்யாணம் பண்ணிக்கறவங்க நம்ம ரெண்டு பேரையும் பிரிச்சிடுவாங்களா.? அப்போ நாம கடைசி வரைக்கும் நண்பர்களா இருக்கவே முடியாதா.?” என்று தமிழினி சொன்னதையே திருப்பி அவன் கேட்க,

“ஹூம்ம். இதைத்தானடா நானும் கேட்டேன். நமக்கு அதெல்லாம் எப்படிடா தெரியும்.? அதுக்கெல்லாம் நமக்கு இன்னும் வயசு இருக்கு டா. அதுக்குள்ள நாம அதைப்பத்தி முடிவு பண்ண முடியாதே.?” என்றாள்.

“ஏன் முடியாது தமிழு.? நாம ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் இதே மாதிரி இருக்கணும்னா, அதுக்கு நம்மளக் கல்யாணம் பண்ணிக்க போறவங்க சம்மதிச்சா தான முடியும்.?” என்று அமுதன் சொல்ல, அவள் ஆமோதிப்பதைப் போல் தலையாட்டினாள்.

“ஒரு வேளை சம்மதிக்கலன்னா என்ன பண்றது.? அதுக்குப் பேசாம நாம கல்யாணம் பண்ணிக்காமலே இருந்துட்டா என்ன.?” என்று அவன் சொன்னதும், ஒரு மாதிரியான யோசனையில் இருந்தாள் தமிழினி.

“ஏய்.. என்ன தமிழு யோசிக்கற.?” என்றான் அமுதன்.

“இல்லடா நண்பா. அது சரிவருமான்னு தெரியல. ஏன்னா, அதுக்கு நம்ம அப்பா, அம்மா ஒத்துக்கணுமே. அவங்க நிச்சயமா ஒத்துக்க மாட்டாங்க. எவ்வளவு தான் நாம ரெண்டு பேரும் நண்பர்களா இருந்தாலும், நமக்கு கடைசி வரைக்கும் துணையா வர ஒருத்தர் வேணும்டா.” என்றாள்.

“நீ என்ன தமிழு, இப்படிச் சொல்ற.?” என்றான்.

“ஆமாடா, நாம இப்போதைக்கு அப்படிப் பேசிக்கலாம். ஆனா, இன்னும் கொஞ்ச நாள் போனா நம்ம மனசு மாறும். அப்போ, வேற ஒரு முடிவு எடுப்போம். அதனால, இப்போதைக்கு நாம இதைப்பத்தி எந்த ஒரு முடிவும் பண்ணாம இருக்கறதுதான் சரி. நம்ம அய்யாகிட்ட சொல்லிப் பாரு. அவரும் இதையே தான் சொல்வாரு.” என்றாள்.

“ஹூம்ம். சரி, நீ சொன்ன மாதிரி, நம்ம மனசு மாறிக்கிட்டே தான் இருக்கும். நாம் இன்னும் கொஞ்சம் பெரிசானதும், முடிவு பண்ணிக்கலாம்.” என்று அவனும் அவளின் பேச்சுக்கு சம்மதம் தெரிவித்தான்.

“அமுதா, டேய்.. அமுதா.. எங்க இருக்கப்பா.?” என்று தூரத்தில் இருந்தவாறே, அழகேசனின் குரல் கேட்டது. அவரின் குரல் கேட்ட மாத்திரமே இருவரும் எழுந்து ஓடினர்.

“அப்பா, நாங்க இங்க இருக்கோம்..” என்று கைகளைக் காட்டியவாறே, ஓடினான் அமுதன், கூடவே தமிழினியும் ஓடினாள்.

ஒருவழியாக இவர்களே அவரிடம் சென்று விட்டனர்.

“உன்ன எங்கெல்லாம் தேடறது பா.?” என்றார் அழகேசன்.

“ஏம்பா.. என்னாச்சு.. எதுக்கு நீங்க தேடிட்டு வறீங்க.? நாங்க எப்பவும் இங்க தானப்பா இருப்போம்.?” என்றான் அமுதன் மூச்சு வாங்கியவாறே.

“அவசரத்துல ஞாபகம் இல்லப்பா. சரி விடு. முதல்ல வா. உடனே நாம ஊருக்குக் கிளம்பணும். கோலாகலம் பெரிய மனுஷி ஆயிட்டா. உங்க அத்தை இப்போதான் தகவல் சொன்னா, இப்போ போனா தான் சரியா இருக்கும். நான் தான் குடிசை கட்டணும். அதுக்குத்தான் ஓடி வந்தேன் உன்னக் கூட்டிட்டுப் போகணும்னு. தமிழ் மா. நாங்க அவசரமா ஊருக்குப் போறோம். உன்ன வீட்டுல விட்டுட்டுப் போறோம். சரியா.” என்றார்.

“பரவால்லைங்க அய்யா. நான் போய்க்கறேன். எனக்கு எதுவும் அவசரமில்ல. நீங்க ரெண்டு பேரும் பார்த்துப் போயிட்டு வாங்க.” என்று நிதானமாய்ச் சொன்னாள் தமிழினி.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க, அமுதன் மட்டும் அமைதியாக இருந்தான். அவனுக்கு அத்தை வீட்டுக்கு போக வேண்டும் என்றதுமே, மனதில் பல எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன. சிறு வயதிலேயே அவனுக்கு அங்கே போக விருப்பம் இருக்காது. நடந்த அந்த சம்பவத்திற்க்குப் பிறகு அமுதன் அங்கே போகவே இல்லை. நிம்மதியாக இருந்தான்.

அவ்வப்போது விசாலாட்சி மட்டுமே அங்கே வந்து அவர்களைப் பார்த்து விட்டுச் செல்வாள். கூடவே, கோலாவும் வருவாள். வந்தால், அவன் அதிகமாகப் பேச மாட்டான். அவளோ, இவன் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருப்பான். அவர்கள் கிளம்பி விட்டால் போதும் என்று இருக்கும் அவனுக்கு.

அதனால் தான், இன்று கூட கிளம்புவதற்க்கு அவனுக்கு விருப்பமே இல்லை. ஆனால் வேறு வழியில்லாமல் இன்று போக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் அமுதன்.

இவன் யோசித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தனர் தமிழினியும், அழகேசனும்.

“என்னாச்சு பா.?” என்றார் அழகேசன்.

“அப்பா, அங்க நானும் கட்டாயம் வரணுமா.?” என்றான் அமுதன் என்றான் பாவமாக.

அவனின் மனநிலையை உணர்ந்தவராய், “வேற வழியில்ல டா தம்பி. நீ வரலன்னா உங்க அத்தை என்னை வார்த்தைகளிலேயே கொன்னுடுவா. உனக்குத்தான் அவளப் பத்தி தெரியுமே.? அதுவும் இல்லாம, நான் தாய் மாமன்னால நிறைய சடங்குகள், சம்பிரதாயங்கள் பண்ணனும், முறைப்படி சீர் செய்யணும். அதனால, கட்டாயம் போய்த்தான் ஆகணும் அமுதா.” என்றார் அழகேசன்.

“சரிப்பா, போகலாம். வாங்க.. நான் போயிட்டு வரேன் தமிழு.” என்று வார்த்தைகளில் ஒரு உயிரே இல்லாமல் சொல்லிக்கொண்டு போகும் தன் நண்பனைப் பாவம் என நினைத்தாள் தமிழினி.

இருவரும் உடனே பேருந்தில் ஏறிவிட்டனர். இரண்டு மணி நேரப் பயணம். இவர்களுக்காகவே காத்திருந்ததைப் போல் உறவுக்காரர் ஒருவர், அவர்கள் ஊரின் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அவர்கள் வந்து இறங்கியதும், தனது பைக்கில் இருவரையும் அழைத்துச் சென்றார். வீடு அருகில், வர வர அமுதனுக்கு படபடப்பு அதிகமானது. பிடிக்காத ஊருக்கு வந்துவிட்டோம் என்று அவன் பேருந்திலிருந்து இறங்கும் போது நினைத்தபடியே வந்தான்.

அங்கே எல்லாம் தயாராய் இருந்தனர். கோலாவுக்கு நாட்டுக்கோழி முட்டையும், நல்லெண்ணையும் தரப்பட்டது. கஷ்டப்பட்டு அதைக் குட்டித்தாள் அவள். அதே போல், அவளை அவளின் அம்மா விசாலாட்சியின் வழி அத்தை முறைப் பெண் ஒருவர், தண்ணீர் ஊற்றி குளிக்க வைத்தார்.

அடுத்து சடங்குக்கான ஏற்பாடெல்லாம் செய்து கொண்டிருக்கும் போது இவர்களும் வந்து விட, குடிசை கட்டுவதற்க்கான நேரமும் வர, அழகேசன் முறைப்படி குடிசை கட்டினார்.

அழகேசனின் பெற்றோர்கள் முன்னரே வந்து அமர்ந்திருந்தனர். அதற்க்குள், கோலாவை பாவாடை தாவணி உடுத்திவிட்டு, நகைகள் இருந்தவற்றைப் போட்டு விட்டு, அவளுக்கு அலங்காரம் செய்து குடிசைக்குள் விட நேரம் பார்த்து அழைத்து வந்தனர்.

அழகேசன் குடிசை கட்டும் போதே, உறவுக்காரர் ஒருவர் சும்மா இருக்காமல், “ஏம்பா அமுதா நீயும் போய் அப்பாவோட குடிசை கட்டு, நீயும் முறைப்பையன் தான.?” என்று வம்பிழுக்க.

அழகேசனோ அவரை ஒரு பார்வை பார்த்தார். அதற்க்குள் நடேசன் வந்து, “ஏங்க, அதான் பெரியவர் தாய் மாமா குடிசை கட்டறார் இல்ல. அப்பறம் எதுக்கு சின்னப் பையனக் கட்ட சொல்லிட்டு.? இருக்கட்டும். நீங்க கொஞ்சம் சும்மா இருங்க.” என்று சொன்னதும் தான், “அப்பாடா... தப்பித்தேன்..” என்று நிம்மதியாக அமர்ந்தான் அமுதன்.

கோலாவைக் கூட்டி வந்து அவளை முறைப்படி பெரியவர்கள் காலில் விழச் சொல்லி ஆசிர்வாதம் வாங்கிய பிறகு குடிசைக்குள்ளே விட்டனர். அமுதன் அதைப் பார்த்துக்கொண்டிருந்தான். சாதாரணமாகப் பார்த்துக்கொண்டிருந்தவனிடம், வம்பிழுத்த உறவுக்காரர் சும்மா இருக்காமல்,

“ம்ம்.. கோலாகலம் எவ்ளோ அழகா இருக்கால்லா டா மாப்பிள்ளை பையா.? அவள என்ன அப்படிப் பார்த்துட்டிருக்க.? இப்போவே அப்படிப் பார்க்கற.? இன்னும் கல்யாண வயசு வந்தா எப்படிப் பார்ப்பியோ.?” என்று சொல்ல, அதைக் கேட்கப் பிடிக்காதவன் அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு விருட்டென்று எழுந்து அழகேசன் இருக்கும் இடம் தேடிப் போனான்.

அவர் குடிசை கட்டிய இடத்தில் இருக்க, அங்கே சென்று அவருடன் நின்று கொள்ள, “என்னாச்சு டா தம்பி. ஏன், இங்க வந்து நின்னுட்டிருக்க.?” என்றார்.

“இல்லப்பா, அந்த மாமா சும்மா சும்மா என்னை வம்பிழுத்துப் பேசிட்டே இருக்கார். அதனால அங்க இருக்க முடியாம இங்க வந்துட்டேன்.” என்று சொன்னான்.

அதற்க்குள் அவனைப் பார்த்த விசாலாட்சி, “டேய். அமுதா.. வந்துட்டியா. நான் இருந்த நிலையில உன்னைப் பார்க்கவே இல்ல. பாரு, உன் வருங்காலம் பெரிய மனுஷி ஆயிட்டா. சந்தோஷமா.?” என்று கேட்க, அவனுக்கோ ஒரு மாதிரி ஆனது. இதில் கோலா வேறு குடிசையில் அமர்ந்து கொண்டு அவனைப் பார்த்தபடி வெட்கச் சிரிப்பொன்றை உதிர்த்துக்கொண்டிருந்தாள்.

அழகேசனுக்கே சிறு பிள்ளைகளிடம் ஏன் தான் இப்படியெல்லாம் பேசி மனதைக் கெடுக்கிறார்களோ என்று எரிச்சலாக இருந்தது.

அங்கே தான் அவரின் தொல்லை தாங்க முடியாமல் எழுந்து இங்கே வந்தால், இங்கு அதற்க்கும் மேல் அல்லவா இருக்கிறது. ம்ஹூம்ம். பேசாமல் வெளியே சென்று விடலாம் என்று நினைத்து வெளியே சென்று நின்று கொண்டிருந்தான் அமுதன்.

அங்கே அதற்க்கும் மேல் பெரிய தொல்லையாக குமரேசன் நின்று கொண்டிருக்க, இப்போது அவனுக்கு ஏன் வெளியே வந்தோம் என்றும் ஆனது. குமரேசன் அவனை முறைத்தவாறே நின்று கொண்டிருந்தான்.

அதற்க்குள் நடேசன் வந்து குமரேசனிடம், “டேய்.. குமாரு போய் சாப்பாடு சொல்லிருந்தவங்க கிட்ட போய் சாப்பாடு வாங்கிட்டு வந்துடு. கூட யாரையாவது கூட்டிக்கிட்டுப் போ.” என்றார்.

அவர் சொன்னதுமே, குமரேசன் அமுதனைப் பார்த்தான். “இங்க வா அமுதா. போய் சாப்பாடு எடுத்துட்டு வந்துடலாம்.” என்று கூப்பிட, அவனோ முழித்தான். அவனுக்கு அவனிடம் கொஞ்சம் பயம் இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தவனை,

“என்ன யோசிச்சிட்டு இருக்க, வா.. போயிட்டு வரலாம்.” என்றான்.

அதற்க்குள் அழகேசன் வர, அவரிடம் சொல்லிவிட்டுச் சென்றான் அமுதன். ஒரு தயக்கம் அவனிடம் இருந்து கொண்டேதான் இருந்தது. வேறு வழியில்லாமல் அவனுடன் சென்றான் அமுதன்.

போகும் போதே அவன் பேச்சுக் கொடுத்தபடி வந்தான் அமுதனிடம், “அப்பறம் எப்படி இருக்க.? பத்தாவதா படிக்கற.?” என்று சாதாரணமாகத்தான் பேசிக்கொண்டிருந்தான்.

“ம்ம்.. ஆமா அண்ணா.” என்று ஒரே வார்த்தையில் முடித்தான் பேச்சை.

“ஓ.. நல்லா படிக்கிறியா.?” என்றான்.

“ம்ம்ம்..” என்றான் அமுதன்.

“ஏன். எங்கிட்ட பேச மாட்டியா.? இன்னும் சின்ன வயசுல நடந்ததையே நினைச்சிட்டு இருக்கியா.?” என்றான் குமரேசன்.

“இல்ல அண்ணா, அப்படியெல்லாம் எதுவும் இல்ல.” என்றான்.

அதற்க்குள் சாப்பாடு எடுக்கும் இடம் வந்து விட்டது. அவர்களிடம் ஒரு பெரிய டிபன் காரியரை வாங்கிக்கொண்டு கிளம்பினர்.

திரும்பவும் பேச்சை ஆரம்பித்தான் குமரேசன். “என்னை என்னன்னு கூப்பிட்ட.? அண்ணான்னு தான. முறைப்படி நான் உனக்கு மச்சான். இனிமேல் அப்படித்தான் கூப்பிடணும். நீ நாளைக்கு கோலாவக் கல்யாணம் பண்ணா, அப்படித்தான ஆகும்.” என்றான்.

அய்யய்யோ.. இவன் என்ன இப்பொழுதே இதைப்பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறான். என்னதான் செய்வது.? இங்கே வந்ததிலிருந்து ஒவ்வொருவரும் என்னை நோகடிக்கிறார்களே என்று இருந்தது அமுதனுக்கு.

அவன் எதுவும் பேசாமல் வருவதைக் கண்டு, “என்ன எதுவுமே பேசாம வர.? ஆமா, இன்னும் அந்தப் பொண்ணோட தான் சுத்திட்டு இருக்கியா.? அவள நினைச்சுட்டு நீ கோலாவ எங்கயாவது ஏமாத்தின.? நான் உன்னை என்ன பண்ணுவேன்னே தெரியாது.” என்று திடீரென மிரட்டலாகப் பேசினான்.

வீடு வந்துவிட இறங்கியவனை, “என்ன சொன்னதெல்லாம் மனசுல வைச்சுக்கோ. சரியா.?” என்றபடி ஆட்களைக் கூப்பிட்டு டிபன் கேரியரை எடுத்துக்கொண்டு போனான். அமுதனுக்கு பயமும், பதட்டமும் அதிகரித்தது.

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1267

உங்களின் விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விமர்சனங்களை கீழே உள்ள
கமெண்ட்ஸ் லிங்கில் பதிவிடவும் தோழமைகளே...

https://www.sahaptham.com/community/threads/தமிழுக்கு-அமுதென்று-பேர்-comments.580/
 

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 12


சடங்கு
முடிந்து திரும்பி வந்த போதும் அங்கே நடந்த எவையுமே அமுதனுக்கும், அழகேசனுக்கும் மறக்கவில்லை.

கோலாவிற்க்கு உடனே உறவினர்களை அழைத்து சீர் சடங்கு செய்ய ஏற்பாடு செய்தனர். அழகேசனுக்கும், அவரின் பெற்றோருக்கும் எத்தனை நகை போட வேண்டும், எவ்வளவு ரொக்கம் அளிக்க வேண்டும் என்று குழப்பமாக இருந்தது.

அதற்க்காக அவர்கள் மூவரும் கலந்து பேசிக்கொண்டிருக்கும் போது, அது நடேசனின் அம்மாவின் காதுகளுக்கு எட்ட, அவரோ ஜாடை, மாடையாய் பேச ஆரம்பித்தார்.

“ஹூம்ம்.. சொந்த மக பேத்திக்கும், தங்கச்சிக்கும் செய்யறதுக்கே இந்த அளவுக்கு யோசிக்கறாங்க. இவங்க யோசிக்கறதப் பார்த்தா எதுவும் செய்ய மாட்டாங்க போலிருக்கே.” என்று பேச, அதை விசாலாட்சி கேட்டுவிட்டாள்.

“அத்தை, நீங்க பாட்டுக்கு உங்க வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசாதீங்க. அதெல்லாம் எங்க வீட்டுல என்னை யாரும் விட்டுக்கொடுக்க மாட்டாங்க. அதுவும், எங்க அண்ணன் எனக்கு எல்லாமே செய்வாரு.” என்றாள் கோபத்தில்.

“ஹூம்ம்.. நீதான் அப்படி சொல்லிட்டிருக்க, உங்க வீட்டுல அதப் பத்தி எதுவுமே பேச மாட்டிங்கறாங்களே. ரொம்ப யோசிக்கற மாதிரிதான் தெரியுது.” என்றார் அவர் திரும்பவும்.

கோபத்தில் எழுந்து அவர்களிடம் சென்றாள் விசாலாட்சி, “அம்மா, அப்பா, அண்ணா எனக்கு என்ன பண்ணுவீங்களோ தெரியாது. நீங்க கோலாவுக்கு 5 பவுனுக்கு நகையும், அப்பறம் ரொக்கமும், குடுங்க. அது போக பட்டுப்புடவை, சீர் அது இதுன்னு சபையவே அமர்க்களப்படுத்தற மாதிரி இருக்கணும். என்னால இவ்ளோ தான் சொல்ல முடியும். அதுக்கு மேல உங்க இஷ்டம்.” என்று தனக்கு என்ன வேண்டும் என்று சொல்லியே விட்டாள்.

“என்னடா அழகு இவ இப்படி சொல்லிட்டுப் போறா.? அவ்ளோ பணமும், நகையும், சீரும் எப்படி உடனே ஏற்பாடு பண்ண முடியும். இதெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காம பேசிட்டுப் போறாளே உன் தங்கச்சி.” என்று வருத்தப்பட்டார் அவரின் தந்தை.

“விடுங்கப்பா. அவளா அதையெல்லாம் பேசல, வேற பக்கம் கொளுத்துன திரி, இவ இங்க வந்து பட்டாசா வெடிச்சிட்டுப் போறா.? நம்ம கடமை என்ன செய்யணுமோ அதை செஞ்சிட்டுப் போலாம். எனக்கு இது மாதிரி நடக்கும்னு தெரியும். அதனால தான், நான் முன்னேற்பாடா பணம் கொண்டு வந்திருக்கேன். நானும், அம்மாவும் கடைத் தெருவுக்குப் போய் நகையும், பட்டுப்புடவையும் வாங்கிட்டு வந்திடறோம். மீதியெல்லாம் செஞ்சிடலாம்.” என்று வேறு வழியில்லாமல் சொன்னார்.

“ஆமாண்டா. அழகு. நமக்கு வேற வழியில்ல. அவ வாயைத் தொறந்து கேட்டதுக்கப்பறமும், நாம செய்யலன்னா அது நமக்குத்தான் அசிங்கம். நாம செய்யற கடமைய செஞ்சிடலாம் விடுங்க.” என்றார் அழகேசனின் அம்மா.

மூவருக்கும் சங்கடமாய் இருந்தாலும், கடமையைச் செய்தாக வேண்டுமே என்று அமைதியாய் கடைத் தெருவுக்கு கிளம்பினர். அங்கே இருந்தால் எவரேனும் தன்னை ஏதாவது சொல்வார்கள் என்று அமுதனும் அவர்கள் கூடவே கடைத் தெருவுக்குக் கிளம்பினான்.

இரண்டு நாட்களில் சடங்கு சீர் அவர்கள் வீட்டிற்க்குப் பக்கத்திலேயே இருந்த சிறிய அளவிலான மண்டபத்தில் நடைபெற்றது. உறவினர்கள் அனைவர் முன்னிலையிலும், சபையே ஆச்சர்யப்படுவது போல், அழகேசனும், அவரது பெற்றோரும் கோலாவுக்கு நகை, பணம், புடவை மற்றும் சில சீர் வரிசைகள் என்று செய்தனர்.

அப்போதுதான் விசாலாட்சிக்கு நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. அதே சந்தோஷத்தோடு அவளின் அத்தையைப் பார்த்தாள். அவரின் முகத்தில் ஈயாடவில்லை. என்ன சொல்ல முடியும். குறையே சொல்ல முடியாத அளவிற்க்கு அனைத்தையும் செய்து விட்டனர்.

ஆனாலும், அவர் அதை பெரிதாக சொல்லாமல், “ம்ம்.. இன்னும் 5 பவுன் சேர்த்தே போட்டிருக்கலாம். சரி, இன்னும் கல்யாணத்துக்கு செய்ய வேண்டி இருக்கே.? செய்யட்டும்.” என்றார் அனைவர் முன்னிலையிலும்.

எப்படி இது போல் ஒருவர் மனது சங்கடப்படும்படி பேச முடிகிறது.? அவர்கள் இவ்வளவு செய்ததை பெரிதாகப் பேசாவிட்டாலும், குறை சொல்லாமலாவது இருந்தால் பரவாயில்லை. ஆனால், அதிலும் குற்றம் கண்டுபிடித்து சொல்லத்தான் சில பேர் இருக்கிறார்கள் இதுபோல்.

அப்போதே விசாலாட்சி, “ஹூம்ம். அதெல்லாம் எங்கண்ணன் சிறப்பா செஞ்சிடுவாரு. யாருக்கு செய்யறாரு.? நாளைக்கு அவர் வீட்டுக்கு வரப் போற மருமகளுத்தான செய்யறாரு.” என்று அவர்களை விட்டுக்கொடுக்காமல் பேசுவதைப் போல் பேசினாள்.

நடேசனும், அவரது பெற்றோரும் அவளது நினைப்பை நினைத்து சலித்துக்கொண்டனர். இவள் வீணாக மனதில் கோட்டை கட்டுவது மட்டுமல்லாமல் கோலாவின் மனதிலும் ஆசையை வளர்த்துக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்தார்கள். அவர்களுக்கு அதில் துளியும் விருப்பமில்லை என்பதை இவள் எப்பொழுது தான் புரிந்து கொள்வாளோ என்று தெரியவில்லை.

அழகேசன் இதுவரை சேமித்து வைத்திருந்த மொத்தப் பணத்தையும் தங்கை மகளின் சீருக்கே செலவழித்து விட்டார். அவர் என்ன செய்வாரோ என்ற கவலை அவரின் பெற்றோர்களை ஆட்கொண்டது. அனைவரும் ஊருக்கு செல்வதற்க்காக பேருந்திற்க்காக காத்திருந்தனர்.

அப்போது, அவரின் தந்தை கவலையுடன் சொன்னார், “ஏம்பா அழகு. நீ வைச்சிருந்த மொத்த பணத்தையும் இதுக்கே செலவழிச்சிட்டியே.? இனி செலவுக்கு என்ன பண்ணுவ.?” என்றார் கவலையுடன்.

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லப்பா. மாசம் பொறந்தா சம்பளம் வந்துடும். அதை வைச்சு சமாளிச்சுக்கறேன். நீங்க அதை நினைச்சு கவலைப்பட்டு உங்க உடம்ப கெடுத்துக்காதீங்க. சரியா.?” என்றார் அக்கறையுடன்.

“அடுத்த மாசம் அறுவடை இருக்குப்பா. அதனால அதுக்குப் பணம் எடுத்து வைச்சுட்டுத்தான் மீதி கொஞ்சம் பணத்த எடுத்துட்டு வந்தேன். ஆனா, அது பத்தாம போயிடுச்சு. நல்ல வேளை நீ வைச்சிருந்த. இல்லன்னா இவ்ளோவும் நம்மால பண்ணிருக்கவே முடியாது.” என்றார் அவர்.

“ஹூம்ம்.. நாம என்ன பண்ணி என்ன பிரயோஜனம். விசாலம் நம்மள விட்டுக்கொடுக்கலன்னாலும், அவளும் அவங்க பேசறாங்கன்னுதான இதெல்லாம் பண்ண சொல்லிக் கேட்டா. நாமளும் நம்மால முடிஞ்சதுக்கு மேலயே பண்ணியாச்சு. ஆனா, அதுக்கும் திருப்தி ஆகாம தான அந்த சம்பந்தி அம்மா பேசினாங்க.” என்று ஆற்றாமையில் பேசினார் அழகேசனின் அம்மா.

“சரி, விடும்மா. என்ன பண்றது. பொம்பளப் பிள்ளைகள நாம எதுவும் சொல்ல முடியாது. போற இடத்துல அவங்க வீட்டுல என்ன சொல்றாங்களோ அதைத் தான கேட்க வேண்டியிருக்கு. அதுக்கு அவ மட்டும் என்ன விதி விலக்கா. அதான் கேட்டிருக்கா. விடு, அவள எதுவும் சொல்லாத. நான் எப்படியும் சமாளிச்சுக்குவேன். நானும், அமுதனும் தான். எங்களுக்கு என்ன பெரிய செலவு இருக்கப் போகுது.? நீங்க வீணா மனசப் போட்டு குழப்பிட்டு இருக்காம போயிட்டு வாங்க. நான் வேற ஒரு நாள் லீவப்போ ஊருக்கு வரேன்.” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவரின் பெற்றோர்கள் செல்லும் பேருந்து வந்துவிட அவர்கள் அதில் ஏறி கிளம்பி விட்டனர்.

சிறிது நேரம் கழித்து அவர்கள் செல்லும் பேருந்தும் வந்துவிட அவர்களும் கிளம்பினர். பேருந்தில் வரும் போதுதான் தன்னுடைய மனதில் இருந்தவற்றை சொன்னான் அமுதன்.

“ஓ.. இப்படியெல்லாம் பேசறானா அந்தக் குமரேசன். சரி, விடுடா தம்பி. இப்போதான் அப்படியெல்லாம் பேசுவாங்க. நாளைக்கே நீங்க எல்லாரும் பெரியவங்களா ஆனதுக்கப்பறம் இந்தப் பேச்செல்லாம் எங்க போச்சுன்னே தெரியாத மாதிரி போயிடும். எல்லாரும் காலத்துக்கு தகுந்த மாதிரி மாறிடுவாங்க. அதனால நீ இதெல்லாம் பெரிய விஷயமா எடுத்துக்காத. சரியா. அப்பா இருக்கும் போது நீ எதுக்குடா கவலைப்படற.?” என்றார் அழகேசன் அவனைப் பிடித்துக்கொண்டே.

அமுதனுக்கு அழகேசனை நினைத்து மிகவும் சந்தோஷமாக இருந்தது. உலகில் யாருக்கேனும் இப்படி ஒரு அப்பா கிடைத்திருப்பார்களா.? என்று தோன்றும். அம்மாவின் பாசத்தையும், அப்பாவின் அறிவுரையும் ஒன்று சேர்த்த தாயுமானவராய் இருக்கும் தனது அப்பா கிடைக்க தான் என்ன பேறு செய்தோம் என்று நினைத்தான்.

அதே போல், அங்கு நடந்த விஷயத்திலும் எத்தனை பொறுமையாய் அனைத்தையும் செய்தார் என்பதை கூடவே இருந்து அவன் பார்த்திருந்தான். அதே போல், பேருந்து நிறுத்தத்தில் அவர் பெற்றோருடன் பேசும் போதும் சரி, யாருடைய கையையும் நம்பாமல் தனது சொந்த உழைப்பை மட்டுமே நம்பும் அவரது குணம் அவனை ஆச்சர்யப்பட வைத்தது.

இதுவரை ஒருமுறை கூட அவனிடம் கடிந்து கொண்டதோ, கோபப்பட்டதோ, ஒரு சிறு முறைப்போ கூட செய்ததில்லை அழகேசன். பாசமாகவும், பண்பாகவும், விளக்கமாகவும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை எடுத்துச் சொல்வார். தங்கத்துக்கு இணையான குணம் கொண்டவரை நினைத்து பெருமைப்பட்டான் அமுதன்.

அவரைப் பற்றி யோசித்துக்கொண்டே வந்ததில் தூங்கியபடியே ஊர் வந்து சேந்தனர். அடுத்த நாள் இருவரும் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

நான்கு நாட்கள் பள்ளிக்கு விடுமுறை எடுத்ததால் அழகேசன் அன்று பள்ளிக்கு சிறிது முன்னரே கிளம்பி விட்டிருந்தார். இப்போது அவர் தான் பள்ளியின் துணை முதன்மை ஆசிரியர். அதனால், அனைவருக்கும் முன்னோடியாய் இருந்து வழி நடத்த வேண்டும் என்பது அவரது எண்ணம்.

பழையபடி இப்போது அமுதன் சைக்கிளில் செல்வதோடு, தமிழினியும் சாத்தப்பன் அவளுக்காக வாங்கிக் கொடுத்த சைக்கிளில் அவனோடு செல்கிறாள். இருவரும் பொதுத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். மணிக்கணக்காய் பள்ளியிலேயே அமர்ந்து படித்தனர். அதற்க்கான ஏற்பாடுகளையும் பள்ளி நிர்வாகமே செய்தது.

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே, அந்தப் பள்ளியில் மாணவர்கள் படிக்க முடியும். அடுத்து பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பொள்ளாச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர முடியும். அதற்க்காகவே பத்தாம் வகுப்பு மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டு படித்தனர்.

யாருக்கு எந்த சந்தேகமாய் இருந்தாலும் அதை தீர்த்து வைத்தாள் தமிழினி. சில சமயம் வகுப்புக்கு பாடமே எடுப்பாள். அதில் அவளும் படித்துக்கொள்வாள். ஆசிரியராகும் எண்ணம் அவளுக்குள் ஊறிப் போனது.

பொதுத் தேர்வுக்காக படிப்பதற்க்கு விடுமுறை விட்டிருந்த நேரம், இருவரும் அமுதனின் வீட்டில் அமர்ந்து கலந்துரையாடி படித்துக்கொண்டிருந்தனர். அப்போது அழகேசன் கையில் இரண்டு டம்ளர்களுடன் அவர்களிடம் வந்தார்.

“டேய் பசங்களா, இந்தாங்க டீ. குடிச்சிட்டு அப்பறமா படிங்க.” என்று டம்ளர்களை நீட்டினார். இருவரும் வாங்கிக் குடித்தனர்.

“அய்யா. நீங்க டீ ரொம்ப அருமையா போடறீங்க.” என்று அவரைப் பாராட்டினாள் தமிழினி.

“ஓ.. அப்படியா. நன்றி தமிழ்.” என்றார்.

“சரி, கொஞ்ச நேரம் படிக்காம ஒரு விஷயத்தைப் பத்தி கலந்துரையாடுவோமா.?” என்றார் அவர்களிடம்.

“ம்ம்.. சரி பா..” என்றபடி இருவரும் புத்தகத்தை கீழே வைத்து விட்டு அவர் என்ன சொல்வார் என்று பார்த்தனர்.

“இப்போ, பொதுத் தேர்வுக்காக படிக்கறீங்க. சரி. ஆனா, இது எதுக்காகன்னு தெரியுமா.?” என்று ஒரு கேள்வியை அவர்களிடம் வைத்தார் அழகேசன்.

“தெரியாது பா. எல்லாரும் பப்ளிக் எக்ஸாம் தான் நம்ம மாநிலத்துல பெரிய எக்ஸாம்னு சொல்வாங்க.” என்றான் அமுதன்.

“ஆமா, அய்யா. அப்படித்தான் எல்லாரும் சொல்றாங்க.” என்றாள் தமிழினியும்.

அவர்கள் சொன்னதைக் கேட்டு சிரித்தவாறே, “அப்படிக் கிடையாது பா. இந்த எக்ஸாம் நீங்க எழுதி மார்க் எடுத்தா தான் மேல ப்ளஸ் ஒன் அப்பறம் ப்ளஸ் டூ படிக்க, ஒரு குரூப் எடுக்க முடியும். அந்த குரூப் படிச்சா தான் அடுத்து ப்ளஸ் டூ முடிச்சதும் நீங்க மேல கல்லூரியில எந்தப் படிப்பு படிக்க நீங்க விருப்ப்ப்படறீங்களோ அதைத் தேர்வு செய்ய முடியும். அதுக்குத்தான் இந்த பொதுத் தேர்வு. ஆக மொத்தம் இந்த இரண்டு பொதுத் தேர்வு தான் நீங்க என்னவா ஆவீங்கன்னு முடிவு பண்ற எக்ஸாம்ஸ்.” என்று விளக்கமாய்ச் சொன்னார் அழகேசன்.

“ஓஓ.. இவ்வளவு விஷயம் இருக்காப்பா இதுல.?” என்று ஆச்சர்யமாய்க் கேட்டான் அமுதன்.

“ஆமாடா அமுதா. இந்த எக்ஸாம் எதுக்கு எழுதறோம்னே இத்தனை நாள் தெரியாம இருந்திருக்கோம் பாரேன்.” என்றாள் தமிழினி.

“சரி விடுங்க. அதான் இப்போ நான் சொல்லிட்டேன் இல்ல.? இன்னும் ஒரு கேள்வி உங்க்கிட்ட கேட்கணும். நீங்க மொதல்ல என்னவாகணும்னு நினைக்கறீங்க.? தமிழ் ஏற்கனவே முதலமைச்சர் கிட்டயே டீச்சர் ஆகணும்னு சொல்லிட்டா. ஆனா, அது ஏன்னு தான் இன்னும் கேட்கல. நீ சொல்லு தமிழ் ஏன்.? எதுக்காகா.?” என்று அவளிடம் கேட்டார் அழகேசன்.

“அது அய்யா. எனக்கு மொதல்ல என்னவா ஆகணும்னு கனவு எதுவும் இருந்தது கிடையாது. ஆனா, எப்போ வடிவு டீச்சரப் பார்த்தேனோ, அப்போவே அவங்கள மாதிரி டீச்சரா தான் ஆகணும்னு முடிவு பண்ணினேன். ஏன்னா, ஸ்கூல்ல இப்போ என்கூட எல்லாரும் சகஜமா பேசறதுக்கு முக்கியக் காரணமே வடிவு டீச்சர் தான். அவங்க சொன்னதுனால தான் தினமும் பரிசுப் பொருள் வாங்க எல்லாரும் என்கிட்ட பேசினாங்க. இதுவே வேற யார் சொல்லியிருந்தாலும் எல்லாரும் கேட்டிருப்பாங்களான்னு தெரியல. ஆனா, ஒரு டீச்சர் சொன்னா எல்லாருக்குமே ஒரு நம்பிக்கை வருது. ஒரு விஷயம் கேட்கணும்னு தோணுது. அதனால தான் நானும் உங்கள மாதிரி, வடிவு டீச்சர் மாதிரி டீச்சராகி எல்லா மாணவர்களுக்கும் பாடத்தோட சேர்த்து நல்ல விஷயங்களையும் அவங்களுக்கு கத்துக் கொடுக்கணும்னு நினைக்கிறேன்.” என்றாள் தமிழ்.

“ம்ம்ம்.... சபாஷ்...” என்று அழகேசன் கைத்தட்ட, அமுதனும், “ஏஏஏ... சூப்பர் தமிழு..” என்று கைத்தட்டினான்.

அதைப் பார்த்து சிரித்தவாறே அம்ர்ந்திருந்தாள் தமிழினி.

“அதுமட்டுமில்ல தமிழ். நீ என்னாவா ஆனாலும், அதாவது இப்போ டாக்டர், இன்ஞ்சினியர், போலீஸ், கலெக்டர் எதுவா இருக்கட்டும், எல்லாத்துக்குமே ஒரு ஆசிரியரோட உறுதுணை இல்லைன்னா எதுவும் சாதிக்க முடியாது. அவங்க கத்துக்கொடுக்கற விஷயங்கள் தான், அவர்களை பின்னாடி ஒரு நல்ல துறையைத் தேர்ந்தெடுத்து முன்னேறுவதற்க்கு உதவியா இருக்கு.” என்றார் அழகேசன்.

“அப்பா... சூப்பர் பா.. அதானால தான் குருவை கடவுளுக்கு நிகரா சொல்றாங்களா.?” என்றான் அமுதன்.

“ஆமாண்டா தம்பி. சரி, தமிழ் சொல்லிட்டா. நீ இன்னும் என்னன்னு சொல்லலையே.” என்றார்.

“நானா..” என்று இழுத்தவனை என்ன சொல்லப் போகிறான் என்ற ஆவலில் பார்த்தனர் தமிழினியும், அழகேசனும்.

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1314

உங்களின் விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விமர்சனங்களை கீழே உள்ள கமெண்ட்ஸ் லிங்கில் தரவும் தோழமைகளே...


 

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 13

தமிழ் அவளின் விருப்பத்தை சொன்ன நிலையில், அமுதன் என்ன சொல்லப் போகிறான் என்ற ஆவலில் இருந்தனர் இருவரும்.

“சரி ரெண்டு பேருக்கும் ஒரு சின்ன விளையாட்டு காட்டட்டுமா. நீங்களே கண்டுபிடிங்க. யாரு சரியா சொல்றீங்கன்னு பார்க்கலாம்.” என்று அவர்களிடம் விளையாட்டாகச் சொன்னான் அமுதன்.

“ம்ம்ம்.. உனக்கு கலெக்டர் ஆகணும்னு ஆசை. சரியா.? ஏன்னா, எப்பவும் நிறைய பேருக்கு உதவி பண்ணனும். அதுக்கு ஒரு நல்ல துறைல இருந்தா தான் முடியும்னு சொல்லுவியே. அதனால அதுதான் சரின்னு நினைக்கிறேன்.” என்றாள் தமிழினி.

“சரி, அப்பா நீங்க சொல்லுங்க.” என்று அழகேசனிடம் கேட்க,

“போலீஸ் ஆகணும்னு நினைக்கறியோ. ஒரு தடவை இந்தப் பஞ்சாயத்துல நடக்கற அநியாயத்தப் பத்தி உன்கிட்ட பேசும் போது, உன்னை அறியாமலேயே நீ கோபமா, இவங்கள எல்லாம் போலீஸ் கிட்ட புடிச்சுக் குடுக்கணும். அப்பாதான் திருந்துவாங்கன்னு சொல்லுவியே. சரியா.?” என்றார் அவர்.

இருவரையும் பார்த்து சிரித்தவன், “பரவால்லா ரெண்டு பேரும் ஓரளவுக்கு சொன்னீங்க. ஆனா, எனக்கு இந்த ரெண்டையும் விட இன்னொரு துறைல தான் போகணும்னு விருப்பப்படறேன்.” என்றான்.

“ஓ.. அப்போ ரெண்டுமே இல்லையா.? அப்பறம் வேற என்னவா இருக்கும்.? ம்ஹூம்ம் கண்டுபிடிக்கவே முடியல. நீயே சொல்லு.” என்றாள்.

“நான் வக்கீல் ஆகணும்னு விருப்பப்படறேன்.” என்றான்.

“ஓ.. சூப்பர் டா நண்பா. அந்தத் துறைய அவ்வளவு சீக்கிரம் யாரும் தேர்ந்தெடுக்க மாட்டாங்க. ஆனா, நீ அதை தேர்ந்தெடுத்திருக்கறத நினைச்சா, ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்றாள் தமிழ்.

“ஓஓஓ.. பரவால்லையே தம்பி, ரொம்ப நல்ல துறையத்தான் தேந்தெடுத்திருக்க. ம்ம் உனக்கு சரியான துறை தான். நீ தான் பேச்சுப் போட்டில வல்லவன் ஆச்சே. நான் கூட இதை எதிர்பார்க்கல. சரி காரணம் என்ன.?” என்றார் அழகேசன்.

“அப்பா, நீங்க என்கிட்ட பஞ்சாயத்துல நடக்கற விஷயங்களப் பத்தி பேசும் போது நீங்க சொன்ன மாதிரி கோபம் வரும். அநியாயம் பண்றவங்களப் பார்த்தா, அவங்கள தண்டிக்கணும்னு தோணும். ஆனா, அதுக்கு போலீஸானா மட்டும் பத்தாது. ஏன்னா, போலீஸோட கடமை தப்பு பண்றவங்களத் தூக்கி ஜெயில்ல போடறதோட முடிஞ்சிடும். அவங்க மேல கேஸ் மட்டும் தான் போடுவாங்க. ஆனா, வக்கீல்களால மட்டும் தான் அந்தக் கேஸை எடுத்து வாதாடி அவங்களுக்கு உரிய தண்டனையை வாங்கித் தர முடியும். அதனால தான் நான் அந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க முடிவு பண்ணேன்.” என்று சொன்னான் அமுதன்.

“சபாஷ் டா தம்பி.. பலே.. பலே.. என்ன அருமையா ஒரு விஷயம் சொன்ன. சரி இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்.? நானும் இதைப் பத்தி சொன்னதில்லையே.” என்று அழகேசன் சந்தேகமாகக் கேட்க,

“ம்ம்.. அதுவாப்பா.. நான் பேச்சுப் போட்டிக்காக நிறைய விஷயங்களப் பத்தி வடிவு டீச்சர் கிட்ட கலந்து பேசுவேன். அப்போ தான் ஒரு சமயம் இந்த விஷயங்களத் தெரிஞ்சுக்கிட்டேன். வடிவு டீச்சர் எனக்கு ரொம்பவே உதவியா இருப்பாங்க.” என்றான் அமுதன்.

“ஆக மொத்தம், நீங்க ரெண்டு பேரும் உங்க கனவ தேர்ந்தெடுக்க உதவியது வடிவுக்கரசி டீச்சர் தான் காரணம்னு சொல்றீங்க சரியா.?” என்றார் அழகேசன்.

“ஆமாம் பா. சரியா சொன்னீங்க.” என்றான் அமுதன்.

“ஆமாங்கய்யா. அவங்களால தான் நான் இந்த அளவுக்கு வந்திருக்கேன்.” என்றாள் தமிழினியும்.

“இதை ஒரு நாளாவது வடிவு டீச்சர்கிட்ட சொல்லிருக்கீங்களா.?” என்றார் அழகேசன்.

“ம்ஹூம்ம். ஆனா, இந்தப் பள்ளிக்கூடத்த விட்டு போறதுக்குள்ள கண்டிப்பா சொல்லணும்னு தோணுது பா.” என்றான் அமுதன்.

“ஆமாங்கய்யா. கண்டிப்பா தேர்வு முடிஞ்சதும் அவங்ககிட்ட சொல்லிடறோம்.” என்றாள் தமிழினி.

அதே போல் பொதுத்தேர்வை நல்லபடியாக எழுதி முடித்தனர். எழுதி முடித்த கையோடு, வடிவுக்கரசி டீச்சரிடம் சென்றனர்.

“டீச்சர், உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தப் பகிர்ந்துக்கணும்னு நினைக்கிறோம். முதல்ல நன்றி டீச்சர்.” என்றனர் இருவரும்.

சிரித்த வடிவு டீச்சர், “முதல்ல எதுக்கு நன்றி சொல்றீங்க.?” என்றார்.

“டீச்சர் இன்னைக்கு நான் இந்த பள்ளிக்கூடத்துல எல்லாப் பசங்களோடையும் சகஜமா இருக்கறதுக்குக் காரணமே நீங்கதான். எல்லாருமே என்கிட்ட பேசினதுக்குக் காரணமும் நீங்கதான். அதுக்கு முதல் நன்றி டீச்சர். அப்பறம், நான் டீச்சராகணும்னு இருக்கேன். அதுவும் உங்களைப் பார்த்துதான். என்னுடைய கனவுக்கும் நீங்க தான் அடித்தளமா இருந்திருக்கீங்க டீச்சர். இனிமேல் நாங்க இந்தப் பள்ளியில இருக்க முடியாது. அதனால தான், உங்ககிட்ட சொல்லணும்னு வந்தோம்.” என்று தமிழினி உணர்ச்சி பொங்க கூறிக்கொண்டிருந்தாள்.

“ஆமா டீச்சர். நீங்க அன்னைக்கு பேச்சுப் போட்டிக்காக சொன்ன சில விஷயங்களால தான், நான் என்னோட கனவைத் தேர்ந்தெடுக்க முடிஞ்சது. உங்களுக்கு என்னுடைய நன்றிகள் டீச்சர்.” என்றான் அமுதனும்.

அவருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. “உங்கள மாதிரி மாணவர்களைப் பார்க்கும் போது எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க ரெண்டு பேரும் இன்னும் நிறைய விஷயங்களைக் கத்துக்க வேண்டி இருக்கும். ஏன்னா, கனவை மட்டுமே தேர்ந்தெடுக்கறது பெரிய விஷயம் கிடையாது. அதுக்கு நீங்க உங்களைத் தகுதியானவங்களா மாத்திக்கணும். அதுதான் நாம் அடையற கனவுக்கு செய்யும் ஒரு மரியாதை. எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு விஷயங்களைத் தெரிஞ்சுக்க முயற்சி செய்யுங்க. லைப்ரரி அதாவது நூலகம் இதுக்கு ரொம்ப உதவியா இருக்கும். அங்கே நிறைய புத்தகங்கள் இருக்கும். நிறைய விஷயங்கள தெரிஞ்சுக்க முடியும். சரியா.?” என்றார் வடிவுக்கரசி.

“கண்டிப்பா டீச்சர். ஆனா, நம்ம ஊருல நூலகமே கிடையாதே. அப்பறம் எப்படி டீச்சர் தெரிஞ்சுக்கறது.?” என்று தமிழினி கேட்க, அந்தக் கேள்வி வடிவு டீச்சரை மிகவும் யோசிக்க வைத்தது.

“சரி, பசங்களா நாம் எல்லாரும் சேர்ந்து இந்த ஊருல லைப்ரரி திறக்க ஏற்பாடு பண்ணலாம். சரியா. அதுக்கப்பறம் நீங்க எல்லாரும் சேர்ந்து போய் படிக்கலாம்.” என்றார் வடிவு.

“அப்படியா டீச்சர்.? அந்த மாதிரி நாமளே பண்ண முடியுமா டீச்சர்.? அதுக்கு யார் கிட்ட கேட்கணும் டீச்சர்.?” என்றார்கள் இருவரும்.

“நாம் அரசுத் துறையில இருக்கறவங்களக் கேட்டுப் பார்க்கலாம். அதோட நம்மால முடிஞ்சதையும் பண்ணலாம்.” என்றார்.

“ம்ம். டீச்சர். எனக்கு முதலமைச்சரோட பி.ஏ வத் தெரியும். அவங்க எந்த உதவின்னாலும் கேட்கச் சொல்லி இருக்காங்க. முதலமைச்சர் கண்டிப்பா பண்ணுவாருன்னு அன்னைக்கு நாங்க விருது வாங்கும் போது சொன்னார்.” என்றாள் தமிழினி.

“பரவாலையே. அப்போ நம்ம வேலை இன்னும் எளிதா முடிஞ்சிடும். அவருக்கு நாம ஒரு கடிதம் எழுதி அதை அவங்களுக்கு அனுப்பி வைக்கலாம். அவங்க பார்த்தால் கண்டிப்பா நமக்கு அதுக்கான ஏற்பாடு பண்ணுவாங்க.” என்றார் வடிவுக்கரசி.

“சரிங்க டீச்சர்..” என்று சொன்னவர்களைப் பார்த்து சிரித்தவர், “சரி வாங்க, அதை உடனே பண்ணிடலாம். நீங்க நான் கொடுக்கற கடிதத்தைப் போய் தபால் பெட்டியில போட்டா போதும். கண்டிப்பா ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் நமக்கு பதில் தெரிஞ்சிடும்.” என்று அவர்களை அழைத்துக்கொண்டு போய்க் கடிதம் எழுதி அவர்களை தபால் பெட்டியில் போட்டு விடச் சொன்னார்.

அவர்களும் அதே போல் போஸ்ட் பாக்ஸில் போட்டு விட்டு அவரவர் வீட்டுக்குத் திரும்பினர். அடுத்த நாளில் இருந்து விடுமுறையை பயனுள்ளதாகக் கழிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்தனர் இருவரும். அதை அழகேசனுடன் கலந்து பேசினர்.

“அப்பா, நேத்து வடிவு டீச்சர் நம்ம ஊருலயே லைப்ரரி வைக்கறதப் பத்தி சொன்னாங்க. அதுக்கு கடிதம் ஒன்னை முதலமைச்சருக்கு எழுதி எங்களை போஸ்ட் செய்யச் சொன்னாங்க. இந்த லீவுல முதல் படியா அந்த வேலையைச் செய்துட்டோம் பா. ஆனாலும், வேற பயனுள்ளதா எப்படி இந்த லீவ செய்யறதுன்னு யோசிச்சுட்டிருக்கோம். நீங்களும் எங்களுக்கு கொஞ்சம் உதவுங்களேன்.”

“ம்ம். நல்ல விஷயம் தான். நாங்க எல்லாம், லீவு விட்டா ஊருல இருக்கற தாத்தா, பாட்டி வீட்டுக்கும், அத்தை, மாமா வீட்டுக்கும் போய் வருவோம். அதுக்கே ஒரு மாசம் பத்தாது. ஆனா, நீங்க தேர்வு முடிஞ்ச கலைப்பு கூட இல்லாம, ஏதாவது பயனுள்ளதா பண்ணனும்னு நினைக்கிறீங்களே அதுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.” என்று இருவரையும் பார்த்து சொன்னார்.

“எங்களுக்கும் அந்த ஆசை இருக்குப்பா. ஆனா, ஊருக்குப் போறத நினைச்சாலே பயமா இருக்கு.” என்றான் அமுதன்.

“தாத்தா, பாட்டி ஊருக்கு போகலாம் தானே தம்பி. அவங்களும் உன்னை எப்போதிலிருந்து கேட்டுட்டே தான் இருக்காங்க. ஆனா, நீ தான் போக மாட்டேங்கிற. அங்கயும் போய் அவங்க பண்ற விவசாயத்தைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமே. அதுவும் ஒரு நல்ல விஷயம் தானே.” என்றார் அழகேசன்.

“விவசாயம் பண்றது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. ஏன்னா, அது ரொம்ப அற்புதமானவங்களால மட்டும் தான் உண்மையா பண்ண முடியும். மண்ணை உயிராய் நேசிக்கறவங்க அந்த பூமிய என்னைக்கும் விட்டு வரமாட்டாங்க, யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டாங்க. அப்படிப்பட்ட விஷயத்தை நீ ஒரு முறையாவது வாழ்நாள்ல தெரிஞ்சுக்க வேண்டாமா.? வாழ்க்கைல உனக்கு வாய்ப்பு கிடைக்குதுன்னா, அது எந்த விஷயமா இருந்தாலும் நீ அதை கத்துக்க முயற்சி செய்யணும். இனி தான் ஊருல அறுவடை நாள் வரும். அதெல்லாம் நீ கண்டிப்பா பார்க்கணும். எனக்கு விவசாயம் தெரியும். எனக்கு அது பிடிச்ச விஷயம் தான். ஆனா, அதை விட எனக்கு ஒரு ஆசிரியரா இருக்கறது ரொம்பப் பிடிச்சதால, என்னால அதைத் தொடர முடியல. ஆனா, நீ அதை தெரிஞ்சுக்காமயே போயிடக் கூடாது. இதோ, தமிழினி கூட சில சமயம் அவளோட அம்மா, அப்பாக்கு உதவியா வயல்ல இறங்கி வேலை செய்யறத நீயே பார்த்திருக்க தானே.? அவளுக்கு அந்த விஷயம் கொஞ்சமாவது தெரியும். ஆனா, உனக்கு அது தெரியாமலேயே போயிடக் கூடாது. அதே மாதிரி, தாத்தா, பாட்டிகள் கூட இருக்கற நிமிஷங்கள் ரொம்ப அலாதியானது. அது ரொம்ப அற்புதமா இருக்கும். அவங்களோட அக்கறையாகட்டும், சமையலாகட்டும், பேச்சாகட்டும், ஊர் சுத்திக் காட்டறதாகட்டும் எல்லாமே நீ இதுவரைக்கும் தெரிஞ்சுக்காமயே போயிட்ட. இன்னும் அவங்களோட காலங்கள் எத்தனை நாளுக்குன்னு தெரியாது. அதனால, நீ இந்த முறை கண்டிப்பா தாத்தா, பாட்டி வீட்டுக்குப் போய் இருந்துட்டு வா.” என்றார் அழகேசன்.

அமுதன் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தான். அவனின் மனதில் இருக்கும் எண்ணத்தை அழகேசனால் முழுமையாய்ப் படிக்க முடிந்தது.

“நீ எதுக்காக இப்படி அமைதியா இருக்கேன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. அங்க போனா, அத்தையும் உன்னை அவ வீட்டுக்குக் கூப்பிடுவா. அதுக்குத் தான பயப்படற.” என்றார்.

“ம்ம்ம்..” என்று தலையாட்டினான்.

“டேய்.. நண்பா. நீ வக்கீலா ஆகணும்னு சொல்லிட்டு இந்த சின்ன விஷயத்துக்கே பயந்தா எப்படி.? உன் மனசுல என்ன தோணுதோ அதை அப்படியே தைரியமா அவங்ககிட்ட பேசிடு. இப்போவே நீ எதையும் சொல்லாம அவங்களைக் கண்டு பயந்தா அதுவே அவங்களுக்கு சாதகமா எடுத்துட்டு உன்னைப் பேசுவாங்க. ஒரு தடவை நீ நிமிர்ந்து பேசினா தான் அதுக்கப்பறம் உன்கிட்ட அப்படி நடந்துக்க மாட்டாங்க. பேச்சுப் போட்டில பேசும் போது மட்டும் எப்படி நெஞ்ச நிமிர்த்தி உன்னால பேச முடியுது.? அதே மாதிரி நீ வாழ்க்கைலயும் நெஞ்ச நிமிர்த்தி தைரியமா பேசு. அப்போதான், உன்னை யாரும் குறைவா எடை போட மாட்டாங்க. இந்த முறை நீ கண்டிப்பா பாட்டி ஊருக்குப் போயிட்டு வா.” என்று தமிழினி தைரியமாகப் பேச அழகேசனே அசந்து போனார்.

“அருமை தமிழ். ம்ம். பாரு அமுதா உன் தோழியே எத்தனை தைரியமா உனக்கு ஊக்கம் கொடுத்து உன்னை வழிநடத்தறா. நீ தாராளமா போயிட்டு வா. அப்படியே அத்தை கேட்டாலும், உனக்கு என்ன தோணுதோ அதை அப்படியே சொல்லிடு. ஏன்னா, அவ அறுவடை நேரத்தில் அங்க வருவா. அதனால தான் சொல்றேன்.” என்றார் அழகேசன்.

“நான் போறேன் பா. ஆனா, எனக்கு ஒரு சின்ன ஆசை. கூடவே நீங்களும், தமிழினியும் வரணும்னு எனக்கு ஆசை. அப்படி வந்தா நான் கண்டிப்பா போறேன்.” என்று அமுதன் சொல்ல, தமிழினி அதிர்ச்சியானாள்.

“டேய்.. நண்பா. அய்யோ.. என்னால முடியாது. அப்பா, அம்மாவை விட்டு இதுவரைக்கும் நான் எங்கயுமே வந்தது இல்ல. எனக்குன்னு இருக்கறது அவங்களும், நீங்களும் தான். ஆனாலும், என்னால வர முடியாது. நீ என்னை தப்பா நினைக்காத. நான் கிளம்பறேன். ஊருக்குக் கிளம்பற மாதிரி இருந்தா சொல்லு, நான் வந்து உன்னைப் பார்த்துட்டுப் போறேன். ” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள் தமிழினி.

அவளின் பதில் ஏமாற்றத்தைத் தரவே, அமுதனின் முகம் வாடியது. அதை உணர்ந்தவராய் அழகேசன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1223

உங்களின் விமர்சனங்களை கீழே உள்ள கமென்ட்ஸ் லிங்கில் தரவும்...

 

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 14

அழகேசன் வழக்கம் போல் அமுதனின் மனம் வருத்தப்படாமல் இருக்க, தமிழின் வீட்டிற்க்குச் சென்று எப்படியோ ரங்கனையும், கோகிலாவையும் சம்மதிக்க வைத்து அவர்கள் மூலம் தமிழையும் சம்மதிக்க வைத்து, இப்போது அமுதனையும், தமிழினியையும் அழைத்துக்கொண்டு அவரின் சொந்த ஊரான உடுமைலைப்பேட்டை அருகில் உள்ள ருத்ரா பாளையம் எனும் கிராமத்திற்க்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்.

மூவரும் பேருந்தை விட்டு இறங்கியதும், அமராவதி ஆறு கரை புரண்டோடும் அந்தக் கிராமம் அவர்களை அன்புடன் வரவேற்றது. கொள்ளை அழகாய் ஓடும் அமராவதி ஆற்றைப் பார்த்து ரசித்தபடி நின்றனர் இருவரும்.

“என்ன பசங்களா, எப்படி இருக்கு எங்க ஊரு.? இதுதான் நான் பிறந்து வளர்ந்த கிராமம். இந்த ஆத்துல தான் நாங்க எப்பவும் குளிப்போம், துவைப்போம், நீச்சலடிப்போம்.” என்று தன் பழைய ஞாபகங்களை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார் அழகேசன்.

“ரொம்ப அருமையா இருக்கு ஐயா.. இந்த ஆத்தைப் பாத்தவுடனே போய் அப்படியே குதிச்சு நீச்சலடிக்கணும் போல இருக்கு.” என்றாள் தமிழினி.

“ஆமா, தமிழு. எனக்கும் அப்படித்தான் இருக்கு.” என்றான் அமுதனும்.

மூவரும் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க, அவர்கள் பின்னால் டிவிஎஸ் வண்டியின் சத்தம் கேட்டது. யாரென்று திரும்பிப் பார்த்தனர். அழகேசனின் அப்பாதான் வண்டி ஓட்டிக்கொண்டு வந்திருந்தார்.

“இதோ தாத்தா வந்துட்டாரே.!” என்று அவரைப் பார்த்து சிரித்தார்.

“எப்பப்பா வந்தீங்க.? ரொம்ப நேரமா காத்திட்டிருக்கீங்களா.? நான் பெட்ரோல் போட்டுட்டு வர நேரம் ஆயிடுச்சு.” என்று கேட்டார் தாத்தா.

“அதெல்லாம் இல்ல பா. பசங்க ஆத்தைப் பாத்துட்டு நின்னுட்டு இருந்தாங்க. அவங்களுக்கு பழைய விஷயங்களை சொல்லிட்டு இருந்தேன்.” என்றார் அழகேசன்.

அவருக்குப் பின்னாலேயே இன்னொரு வண்டியில் தாவணி அணிந்த ஒரு பெண் வந்து அவர் பக்கமாக நின்றாள். இவர்களோ யாரென்று தெரியாமல் பார்த்துக்கொண்டு நிற்க, அழகேசன் கண்டுபிடித்து விட்டார்.

“ஏய்.. மாரியம்மா.. எப்படி இருக்க.? நல்லா பெரிய பொண்ணா வளர்ந்துட்ட. சின்னப் பொண்ணா இருக்கும் போது பாவாடை, சட்டைல பார்த்தது. இப்போ பாரு, அடையாளமே தெரியல.” என்று அவளை ஆச்சர்யமாய்ப் பார்த்தபடி கேட்டுக்கொண்டு நின்றார் அழகேசன்.

“ஆமா, மாமா. நல்லா இருக்கேன். நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க. வாத்தியார் வேலையெல்லாம் எப்படிப் போகுது.?” என்று படபடவென்று பேசினாள்.

“நானும் நல்லா தான் இருக்கேன். அதோட, பிடிச்ச வேலைன்றதனால ரொம்ப சிறப்பா போயிட்டிருக்கு வேலை.” என்றார் அழகேசன்.

“ம்ம்.. உங்கள மாதிரி எல்லாரும் மேல படிச்சிட்டு நிலத்தையெல்லாம் அம்போன்னு விட்டுட்டுப் போனா, எப்படி சோறு கிடைக்கும்.?” என்றாள் மாரி.

“அதுக்கென்ன பண்றது மாரி. நான் எதுவும் வேணும்ட்டு பண்ணலையே. அதுவும் சிறந்த பணி தானே.?” என்றார் சமாளித்தவாறே அவளுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல்.

“ம்ம்.. சரி, சரி.. அமுதனா இது.? நானும், இவன சின்னப் பையனா இருக்கும் போது பார்த்தது. நல்லா வளர்ந்துட்டான். இப்போ என்ன படிக்கற.?” என்று அமுதனைப் பார்த்துக் கேட்டாள்.

அவனும், “10-வது படிக்கிறேன்.” என்றான் பணிவுடன்.

அவனுக்கு அருகில் நின்றிருந்த தமிழினியைப் பார்த்தாள். “இது யாரு மாமா.? உங்களுக்கு ஒரே பையன் தான.? புதுசா இருக்கு பொண்ணு.?” என்றாள் மாரி.

“இது அமுதனோட தோழி, இவளும் எனக்கு பொண்ணு மாதிரி தான். பேரு தமிழினி. ரெண்டு பேரும் ஒரே பள்ளிக்கூடத்துல, ஒரே வகுப்புல தான் படிக்கிறாங்க.” என்றார் அழகேசன்.

“சரி, சரி கிளம்பலாமா.? தமிழ் வா. என்கூட வண்டில வந்து ஏறிக்க.” என்று உரிமையுடன் கூப்பிட்டாள் மாரி.

அதற்க்குள் அமுதனின் தாத்தா, “ஏன் மாரி. உனக்கு அப்பறம் கிளம்பின நானே முன்னாடி வந்துட்டேன். நீ ஏன் இவ்ளோ நேரம் கழிச்சு வர.?” என்று கேள்வி கேட்ட தாத்தாவைப் பார்த்து,

“வழில வம்பு பண்றதுக்குன்னே சில எருமைக நின்னுட்டு இருந்துச்சு தாத்தா. அதுகளை எல்லாம் அடிச்சு விரட்டிட்டு வர வேண்டாமா.? அதுல தான் லேட் ஆயிடுச்சு.” என்றபடி வண்டியைக் கிளப்பினாள் மாரி.

அவள் சொன்னது அவருக்கு ஜாடையாய்ப் புரிந்தது. “ஓ.. சரி, சரி..” என்றபடி, “டேய்.. அழகேசா, இந்தா வண்டில நீயும், அமுதனும் போங்க. நான் நடந்து வரேன்.” என்றார்.

“அப்பா, நீங்க அமுதனக் கூட்டிட்டு கிளம்புங்க. நான் அப்படியே காலார வரேன். வழில எனக்கு ரெண்டு, மூணு வேளை இருக்கு.” என்றபடி நடக்கத் துவங்கினார்.

“ஏண்டா பேராண்டி. போலாமா.?” என்று வண்டியைக் கிளப்ப,

“ம்ம்.. போலாம் ரைட்.. தாத்தா..” என்றான் அமுதன்.

“என்ன பேராண்டி, சுத்தி முத்தியும் பாத்துட்டே வர, எப்போ நீ சின்ன வயசுல ஊருக்கு வந்தது. அதுக்கப்பறம் வரவே இல்ல. ஏன், இங்கல்லாம் வர மாட்டியா.? தாத்தா, பாட்டியப் பாக்கணும்னு எண்ணமே வராதா.?” என்று தாத்தா வண்டியை ஓட்டிக் கொண்டே கேள்விகேட்டுக் கொண்டு வந்தார்.

“அப்படியெல்லாம் இல்ல தாத்தா. எனக்கு வரணும்னு தான் ஆசை. ஆனா, உங்க மகளப் பார்த்தா தான் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கும்.” என்றான்.

“யாரு, விசாலத்தைப் பார்த்து பயப்படறியா.? அவ என்ன பண்ணா உன்ன.? நீ தாயில்லாப் புள்ளையா இருக்கும் போது, அவதாண்டா உன்ன எடுத்து வளர்த்துனா. அவளப் பார்த்தா பயப்படற.?” என்றார்.

“அதெல்லாம் சின்ன வயசோட போச்சு தாத்தா. கோலாவோட சீரப்போ பாத்தீங்கள்ல எப்படியெல்லாம் பேசறாங்க. என்னை அவங்க மாப்ளன்னு சொல்றாங்க. எனக்கு என்ன வயசாகுது, இப்போ போய் கல்யாணத்தப் பத்தி பேசறாங்க. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு தாத்தா. எப்பவும் இதே பேச்சு தான். கோலாவையும் அப்படி சொல்லி சொல்லியே, அவ என்கிட்ட நடந்துக்கற முறையும், பேசற முறையும் சரியில்ல. அதனாலயே, எந்த ஊருக்கும் போகக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். இந்தத் தடவை அப்பா தான் என்னை வற்புறுத்திக் கூட்டிட்டு வந்தார். அத்தையும் அறுவடைக்கு வருவாங்கன்னு சொன்னாரு. ஆனா, ஏதோ ஒரு தைரியத்துல வந்துட்டேன்.” என்று சொல்லி முடிக்கும் போது வீடு வந்து சேர்ந்தார்கள்.

அவன் சொன்ன கதையைக் கேட்டபடியே வந்தவர், “சரி விடு பேராண்டி. பார்த்துக்கலாம்.” என்று அவன் தோள்களைத் தட்டிக் கொடுத்தவாறே சிரித்தார். அது அவனுக்கு அழகேசன் செய்வதைப் போலவே இருந்தது.

அதற்க்குள் உள்ளிருந்து வெளியே வந்த அவனது பாட்டி, “கண்ணு, வாடா ராசா.. வா.. வா..” என்று அவனை உச்சி முகர்ந்து முத்தமிட்டார்.

“நல்லா இருக்கியா கண்ணு. ஏன் அன்னைக்குப் பார்த்தத விட, இன்னைக்கு இளச்சிப் போயிட்ட. ஒழுங்கா சாப்பிடறதில்லையா.? உங்கப்பன் சோத்த ஒழுங்கா ஆக்கிப் போடறானா இல்லையா.? இதுக்குத்தான், இன்னொரு கல்யாணம் பண்ணிக்கடான்னு அன்னைக்கே தலப்பாடா அடிச்சிக்கிட்டேன். கேட்டாதான.? இப்போ பாரு அவனும் கஷ்டப்பட்டுட்டு, உன்னையும் சரியா கவனிக்காம கஷ்டப்படுத்தறான்.” என்று வந்தவுடனேயே அவனிடம் தன் புலம்பலை ஆரம்பித்தார் பாட்டி.

“ஏய், கமலம்.. எத்தனை வருஷம் கழிச்சுப் பேரன் நம்ம வீட்டுக்கு வந்திருக்கான். நீ இப்படித்தான் சதா புலம்பிட்டே இருப்பியா.? அப்பறம், அவன் ஏண்டா இங்க வந்தோம்னு நினைக்கப் போறான்.?” என்றார் தாத்தா.

“சரி, சரி.. நீங்களே போதும், அவனுக்கு சொல்லிக் கொடுத்துடுவீங்க போலிருக்கே. விடுங்க. நீ வாடா ராசா. போய் முகம், கை, காலெல்லாம் கழுவிட்டு வருவியாம். உனக்காக பாட்டி என்னென்னவெல்லாம் செஞ்சு வைச்சிருக்கேன் பாரு.” என்றபடியே அவனை அழைத்துக் கொண்டு உள்ளே போனார்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர், எங்கே இந்த மாரியை இன்னும் காணவில்லை என்றபடி திண்ணையில் அமர்ந்தபடி வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அவர் பார்த்துக்கொண்டே அமர்ந்த ஐந்து நிமிடங்கள் கழித்து, உள்ளே வண்டியில் நுழைந்தாள் மாரி. கூடவே அவள் வண்டி முழுக்க, நுங்கு மரத்தில் இருந்து ஒரு முழு நுங்கு குலையையே எடுத்து வந்திருந்தாள். அதுமட்டுமல்லாமல் தமிழினியின் கையில் ஒரு பெரிய தர்பூசணிப் பழம் இருந்தது.

அதோடு ஒரு பெரிய வயர் கூடையில் பனம் பழங்கள் இருந்தன. அனைத்தையும் எடுத்துக்கொண்டு தமிழினியையும் கூட்டிக் கொண்டு உள்ளே வந்த மாரியை அழைத்தார் தாத்தா.

“ஏன் மாரி நம்ம தோட்டத்துக்காரர் கிட்ட சொன்னா எல்லாத்தையும் வந்து குடுத்துட்டுப் போறார். நீ எதுக்கு இத்தனையும் எடுத்துக்கிட்டு, அந்தப் புள்ளையையும் சுத்த வைச்சுக் கூட்டிட்டு வர.?” என்றார்.

“தாத்தா, நீங்க தோட்டத்துக்காரர் கிட்ட சொன்னா, வியாபாரத்துக்கு கொடுத்தது போக, எது மிச்சமிருக்கோ அதைத்தான் நமக்கு கொடுத்து விடுவார். ஆனா, நாம நேர்ல போய் வாங்கும் போது, நமக்கு எது நல்லா இருக்குமோ அதை நாமலே தேர்ந்தெடுத்து வாங்கிக்கலாம். அதனால தான் இந்தப் பொண்ணையும் கூட்டிட்டு, தோட்டத்துக்குப் போயிட்டு அப்படியே நம்ம ஊரையும் சுத்திக் காட்டிட்டு வந்தேன். அந்தப் பொண்ணுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு நம்ம ஊர.” என்றபடி அனைத்தையும் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.

அவர்கள் நுழையும் வாசலுக்கு முன்பாக அனைத்தையும் வைத்து அடுக்கி விட்டு, அப்படியே வராண்டாவில் அமர்ந்தாள் மாரி. அதற்க்குள் அமுதனும், கமலம் பாட்டியும் வந்து விட்டனர்.

“அம்மாடி ஆத்தா மாரியம்மா, என்ன பனை மரத்தையே வெட்டி எடுத்துட்டு வந்துட்டியா.? குலை, குலையா எடுத்துட்டு வந்திருக்க.?” என்று அவளை கேலி செய்தார் பாட்டி.

“இங்க பாருங்க பாட்டி. இது தான் வேணாங்கறது. நம்ம வீட்டுக்கு ஒரம்பரைங்க வராங்கன்னு தெரிஞ்சா இதெல்லாம் பண்றது வழக்கம் தானே.? அதுவும் வந்திருக்கிறது சின்னப் பசங்க. அவங்க அப்பப்போ சாப்பிட ஏதாவது வேணும் இல்ல. அதனால தான் எல்லாம் வாங்கிட்டு வந்தேன். நீங்க பாரு கேலி பண்றீங்க.” என்றாள் மாரி.

அவளின் பேச்சை சட்டை செய்யாத பாட்டி, தமிழினியைப் பார்த்தார். “இதுதான் உன் சிநேகிதியா. உங்கப்பன் சொல்லிருக்கான். இந்தப் பொண்ணு தான சின்ன வயசா இருக்கும் போது உன்னை தீயிலிருந்து காப்பாத்தினது.?” என்று கேட்டார்.

“ஆமா பாட்டி. இன்னைக்கு நான் உயிரோட இருக்கறதுக்கு காரணமே அவ தான். அதே மாதிரி போன வருஷம் கூட, வாய்க்கால்ல வெள்ளம் போனப்போ, அதுக்குள்ள குதிச்சு ரெண்டு பசங்களோட உசுரக் காப்பாத்துனா. நிறைய நல்ல விஷயங்கள் பண்ணிருக்கா பாட்டி. அதுக்குத்தான் ரெண்டு முறை முதலமைச்சர் கையால விருது வாங்கிருக்கா. அவளோட மேல் படிப்புக்கான செலவையும் அரசே ஏத்துக்கும்னு சொல்லிட்டாங்க.” என்று தன் தோழியின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே சென்றான் அமுதன்.

“ம்ம்ம்.. அப்படியா.. இங்க வாடா கண்ணு. உனக்கு சுத்தி தான் போடணும்.” என்று அவளைத் தன் கைகளால் அளந்து த்ருஷ்டி சுத்தினார் கமலம் பாட்டி.

“இங்க பாருடா.!! இந்தக் கதைய.! எனக்குத் தெரியாம போச்சே. பார்க்கறதுக்கு ரொம்ப சாதாரணமா இருக்க. ஆனா, எவ்வளவு பெரிய விஷயங்கள் பண்ணிருக்க. நீயும் என்னை மாதிரி தான் போல.” என்றாள் மாரி.

எதையுமே பேசாமல் அமைதியாய் சிரித்துக்கொண்டே நின்றிருந்தாள் தமிழினி. “மாரி, நீ உன்னை மாதிரின்னு சொல்லி அந்தப் பொண்ண சிறுசாக்கிடாத. அந்தப் பொண்ணு பண்ணிருக்கறதெல்லாம் ரொம்பப் பெரிய விஷயம்.” என்றார் தாத்தா உள்ளே வந்தவாறே.

“ம்ம்.. தாத்தா நீங்களுமா.?” என்று அவரை செல்லமாக முறைத்தாள் மாரி.

“ஏண்டா மா. இந்தச் சின்ன வயசுலயே எப்படி இவ்வளவு தெளிவா, யோசிச்சு உன்னால அந்த கடினமான சமயத்துல சமயோஜிதமா அமுதனையும், அந்தப் பசங்களையும் காப்பாத்த முடிஞ்சது.?” என்றார் தாத்தா.

“தெரியல தாத்தா. கடவுளோட அருள்ன்னு தான் சொல்லணும். ஆனா, ஒரு விஷயத்த மட்டும் நான் மனசில நினைச்சுப்பேன். எந்த ஒரு கடினமான சமயத்திலும், பதட்டப்படாம யோசிச்சு என்ன செய்யணுமோ, அதை சரியா செய்யணும்னு ஒரு எண்ணம் எப்பவும் மனசுக்குள்ள ஓடிட்டே இருக்கும். அப்படி தான் சின்ன வயசுல செஞ்சு அமுதனக் காப்பாத்தினேன். ஆனா, இந்த முறை அவனோட உதவியால தான் அந்த ரெண்டு பசங்களையும் என்னால காப்பாத்த முடிஞ்சது.” என்று அந்தக் கதையையும் சொன்னாள் தமிழினி.

“எப்படியோ, ஒரு நல்ல விஷயத்த நீ பண்ணதும் இல்லாம, எங்க அமுதனையும் அதுல இருந்து மீட்டு, அவனை உதவி செய்யற அளவுக்கு நீ தான் பண்ணிருக்க. அந்தப் பெருமை உன்னைத்தான் சேரும்.” என்றார் கமலம்.

“சரி, சரி பாட்டி. விருந்தாளியா வந்த பொண்ண, இப்படித்தான் நிக்க வைச்சு பேசிட்டே இருப்பீங்களா.? கூட்டிட்டுப் போய் அவள உங்க கவனிப்பால அசர வையுங்க.” என்றாள் மாரி.

“ஏய்.. அப்படி சொல்லாத மாரி. தமிழ் விருந்தாளி இல்ல. இனிமேல் இவளும் எனக்குப் பேத்தி தான்.” என்றவர் அமுதனை ஒரு பக்கமும், தமிழினியை இன்னொரு பக்கமும் தன் தோள்களில் சாய்த்துக் கொண்டு, இருவர் நெற்றியிலும் முத்தமிட்டார்.

அந்த அணைப்பின் உண்மையான அன்பை உணர்ந்தாள் தமிழினி. அவளுக்கு இது போன்ற அன்பு புதியது. ஏனென்றால், சிறு வயது முதலே அப்பா, அம்மா, இவர்கள் இரண்டு பேரின் அன்பைத் தவிர வேறு யாருடைய அன்பையும் உணராதவள் தமிழினி.

யாரென்று தெரியாத தன்னை இவர்கள் அரவணைத்து அன்பு செலுத்துவது கடவுளின் பரிபூரண அருளால் மட்டுமே நடந்தது என்று நினைத்தவள் அவருக்கு நன்றி சொன்னாள். ஆனால், இந்த அன்பு நிலைக்குமா.? என்பது தான் கேள்விக்குறி.??

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1262

உங்களின் விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன...
விமர்சனங்களை கீழே உள்ள கமெண்ட்ஸ் லிங்கில் தரவும் நட்புக்களே...

 

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 15

அழகேசன் நீண்ட நேரம் கழித்தே வீடு வந்து சேர்ந்தார். ஆனால், வரும் போது மிகவும் யோசனையுடனும், அதே போல் கவலையுடனும் வருவது போல் இருந்தது. அதை அவரின் தந்தை கவனித்து விட்டார்.

அதுவரை அவரைக் காணவில்லை என்று தேடியபடி திண்ணையில் அமர்ந்திருந்தவர். அவரை அழைத்தார். “என்னாச்சு அழகு, ஏன் ஒரு மாதிரி இருக்க.? வந்ததும் வீட்டுக்கு வராம உனக்கு என்ன முக்கியமான வேலை வந்துடுச்சு.?”

“ஒண்ணும் இல்ல பா. என்னோட பால்ய சிநேகிதனப் பார்க்கலாம்னு போயிருந்தேன். பாவம் அவன் படற கஷ்டத்தப் பார்த்து ரொம்ப மனசு கஷ்டமாயிடுச்சு. அதப்பத்தி யோசிச்சுட்டே வந்தேனா.? அதான்.” என்றார் அழகேசன்.

“யாரைச் சொல்ற.?” என்றார் அவர்.

“அதான் பா. ஜம்புலிங்கம். நாங்கள்லாம் ஜம்புன்னு கூப்பிடுவோமே.?” என்றார் அழகேசன்.

“அட ஜம்புவா.? ஹூம்ம். அவனோட நிலைமைக்கு அவன் தான் காரணம். யாராவது சொன்னா கேட்டாத்தானே.? தேவையில்லாதவங்க சொன்னதக் கேட்டுட்டு இப்போ அவஸ்தைப்படறான்.” என்றார்.

அதற்க்குள் மாரி அங்கே காஃபியை கொண்டு வந்து தாத்தாவிற்க்கு கொடுத்தபடி இவர்களது பேச்சையும் கேட்டுக்கொண்டு நின்றாள்.

“என்னப்பா சொல்றீங்க.? என்ன அவன் கேட்காம போயிட்டான்.?” என்றார் அழகேசன்.

“யாரைப்பத்தி மாமா கேக்கறார் தாத்தா.?” என்றாள் மாரி.

“அதான். அந்த ஜம்புவப் பத்தி கேட்டுட்டிருக்கான்.” என்று அவர் சலித்தபடி சொல்ல,

“ஓ.. அதுவா.? ஹூம்ம். மாமா, அவரோட கதை இப்போ ஊருக்கே தெரியும். சாதாரணமா இருந்த நிலத்துல கண்ட, கண்ட வேதியியல் பொருட்களை சேர்த்துப் போட்டாரு. மண்ணு நிறைய விளைச்சலக் கொடுக்குதுன்னு ஆசைப்பட்டு அதையே வருஷக்கணக்கா உபயோகப்படுத்தி, மண்ணை அதுக்கு ஏத்த மாதிரி பழக்கிட்டாரு. அந்த பொருட்களை வாங்கறதுக்கு பணம் அதிகமா செலவாச்சு. அதுக்கப்பறம் பேங்க்ல கடன் வாங்கினாரு. விளைச்சல முதல்ல அதிகமா கொடுத்தாலும், அதோட இயற்கையான ருசி தெரியாமயா போயிடும்.? அதுலயே அவர்கிட்ட உற்பத்தியாகற எந்த ஒரு பொருளையும், யாரும் வாங்க முன்வரல. கடனும் அதிகமாகிப் போச்சு. நாங்க எல்லாருமே சொன்னோம். மண்ண அதோட இயற்கையாவே இருக்க விடுங்க. அது நேரம் அதிகம் எடுத்துக்கிட்டாலும், கொடுக்கற விளைச்சல நிறைவா கொடுக்கும். அதே மாதிரி, ருசியும் மாறாம இருக்கும்னு. ஆனா, அவர் எங்களையும், இந்த மண்ணையும் நம்பல. வேற யாரோ சொன்னதைத் தான் நம்பினார். அதான், இப்போ கஷ்டப்படறார். இப்போ புலம்பியும், யோசிச்சும் என்ன பிரயோஜனம். இயற்கையை யார் மாத்தணும்னு நினைச்சாலும் இதுதான் கதி.” என்று அந்தக் கதையை சொன்னாள் மாரி.

அப்போதுதான் என்ன விவரம் என்று முழுவதுமாய்ப் புரிந்தது அழகேசனுக்கு. “இப்போ, அந்த மண்ல எது இயற்கையா விளைவிச்சாலும் விளையாதா.?” என்றார் அழகேசன்.

“ம்ஹூம்ம்.. மாமா, ரெண்டு வருஷமா அவர் அந்த மருந்துகளைப் போட்டு நிலத்த நல்லா பழக்கி வைச்சுட்டார். அதுவும் அதோட இயல்ப விட்டு இதுக்கு மாறிடுச்சு. அதுல இருக்கற மருந்தும் சேர்ந்து தான் அந்த மண்ல விளைவிக்கிற உணவுப் பொருட்களுக்குப் போகும். அதையெல்லாம் சாப்பிடறது யாரு.? நாமளும், அடுத்த தலைமுறையும் தானே.? அதனால எவ்வளவு பாதிப்புகள் ஏற்படும்னு தெரியுமா.? எதிர்ப்பு சக்தி குறைஞ்சிடும். சும்மா காச்சல், சளின்னு வந்தாலே ஆஸ்பத்திரிக்கு ஓட வேண்டியதாப் போயிடும். இதெல்லாம் சொன்னா எங்க கேட்கப் போறாங்க. இவர மாதிரியே கொஞ்சம் பேரு, இதே தப்பப் பண்ணப் பார்த்தாங்க. ஆனா, நாங்க தான் அப்படி, இப்படிப் பேசி, அதைத் தடுத்தோம். மருந்தெல்லாம் தெளிச்சு, பூச்சிக்கொல்லி மாதிரி ஏதேதோ அடிச்சு, அவரோட நிலத்துப் பக்கம் போனாலே, ஒரு மாதிரியா மருந்து வாசம் அடிக்கும். கிட்டத்தட்ட மூணு ஏக்கர் அப்படியே ஆயிடுச்சு. அந்த மூணு ஏக்கர் நிலத்துக்கும் மருந்தத் தெளிச்சு அதோட நச்சுத்தன்மையெல்லாம் அதுல இறங்கிடுச்சு. இப்போ புலம்பினா என்ன பண்ண முடியும். இனி அது அவ்வளவுதான்.” என்றாள் மாரி.

“இத்தனை விஷயம் நடந்திருக்கா.? யார்கிட்ட இவன் இதெல்லாம் வாங்கிப் போட்டான். நீங்க எல்லாரும் அதை எப்படி தெரிஞ்சுக்கிட்டீங்க.?” என்றார் அழகேசன்.

“அதுவா, பக்கத்து ஊருல இருந்து ஒரு ஆளுதான் வந்து எல்லாத்தையும் கொடுத்து, இதெல்லாம் உபயோகிச்சா நல்லா விளைச்சலக் கொடுக்கும்னு சொல்லி, அவர் தலைல நல்லா மிளகா அரைச்சிட்டான். நம்மளோட, பாட்டன், பூட்டன் காலத்துல இருந்து நம்ம தாத்தா காலம் வரைக்கும் எல்லாருமே இயற்கையான வழிமுறைகளைப் பின்பற்றித்தான் எல்லாத்தையுமே செஞ்சாங்க.? அதை ஏன் மாத்தனும்.? அப்போவெல்லாம் நாம என்ன கொறைச்சலா விளைச்சலப் பார்த்துட்டோம். இத்தனை வருஷமா, நாம என்ன வழிமுறையப் பின்பற்றினோமோ, அதுவே சரியான வழிதான்னு தெரியாம போயிடுச்சு அந்த மனுஷனுக்கு. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காராம் பண்ற கதையாதான் ஆச்சு.” என்று எல்லாக் கதையையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள் மாரி.

“விவசாயம் பண்றது முக்கியமில்ல. இந்த மண் எத விரும்புதுன்னு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு ஏத்த மாதிரி நாமளும் அதை செஞ்சா தான் அதுவும் நமக்கு நல்லதப் பண்ணும்னு அவனுக்குத் தெரியாம போச்சு.” என்றார் தாத்தா.

இவர்கள் அனைவரும் வெளியே உள்ள திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த தமிழினியும், அமுதனும் வாசலுக்கு வந்தனர்.

“அப்பா, வந்துட்டீங்களா.? எங்க போனீங்க.? பாட்டி நீங்க எப்போ வருவீங்கன்னு பார்த்துட்டு இருக்காங்க. வாங்க..” என்றபடி அவரை அழைத்துக்கொண்டு சென்றனர்.

சமையல் கட்டுக்கு முன்னே இருக்கும் பெரிய திண்ணையில் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டே மதிய உணவை சாப்பிட்டனர். கமலம் பாட்டியின் கைமணத்தில், மீன் குழம்பும், நெத்திலி மீன் கார வறுவலும், நாட்டுக்கோழி ரசமும் வாயும், வயிறும் வேண்டாம் என்று சொன்னாலும் மனம் கேட்காது என்று தோன்றியது. அத்தனை ருசி. பாட்டியின் கைமணம் என்றால் சும்மாவா.?

“பாட்டி, ரொம்ப அருமையா இருக்கு. அப்பாவோட கைமணம் உங்களது மாதிரின்னு இப்போதான் தோணுது. உங்க சமையலோட ருசி இன்னும் கொஞ்சம் சிறப்பா இருக்கு.” என்றான் அமுதன்.

பாவம், அம்மாவின் கைமணத்தில் இதுவரை சாப்பிடக் கொடுத்து வைக்காதவன், பாட்டியின் கைமணத்தை ருசித்து சாப்பிட்ட போது, அதைப் பார்த்த அழகேசனுக்கு கண்களில் இருந்து தானாக கண்ணீர் வந்தது. அதை யாரும் கவனிக்காதபடி துடைத்தார் அழகேசன்.

சாப்பிட்டு முடித்த இரண்டு மணி நேரத்திற்க்குப் பிறகு, பனம்பழத்தை சுட்டுக் கொண்டிருந்தாள் மாரி. இருவரும் அதைப் பார்த்து அவளிடம் வந்தனர்.

“அக்கா, இதை சுட்டு தான் சாப்பிடணுமா.? நிறைய நாள் பார்த்திருக்கேன், சாப்பிடணும்னு ஆசைப்பட்டிருக்கேன். ஆனா, சாப்பிட்டது கிடையாது.” என்று தமிழினி சொல்ல,

“ஆமாமா, நானும் தான் சாப்பிட்டது இல்ல.” என்றான் அமுதன்.

“டேய்.. பயலே, பொய் சொல்லாத. நீ நாலு வயசா இருக்கும் போது இங்க வந்தப்போ, இதே மாதிரி பாட்டி சுட்டுக் கொடுத்தாங்க. முதல்ல எனக்குக் கொடுத்துட்டாங்கன்னு எத்தனை அடம் பண்ண தெரியுமா.? ஹூம்ம். அத நீ கொஞ்சம் கூட ருசி பார்க்காம கோவத்துல வேண்டாம்னு சொல்லிட்ட. அப்பறம் எப்படி இதோட அருமை உனக்குத் தெரியும்.? இது நெய்யும், தேனும் கலந்த மாதிரி தித்திப்பா இருக்கும். இதெல்லாம் வாழ்க்கைல சாப்பிடாதவங்க துரதிருஷ்டசாலிக தெரியுமா.?” என்று மாரி சொல்லிக்கொண்டிருக்க, அமுதனும், தமிழினியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

அவளின் ஒவ்வொரு பேச்சும், செயலும், வித்தியாசமாய்த் தெரிய இவள் இங்கே யார் என்ற எண்ணம் அமுதனுக்கு மேலோங்கியது. அழகேசனைத் தேடினான்.

அழகேசன் பின்னாலிருக்கும் தென்ன்ந்தோப்பில் கயித்துக் கட்டிலைப் போட்டு படுத்துக்கொண்டிருந்தார். ரம்மியமாய்க் காற்று வீசிக் கொண்டிருக்க, அதன் அரவணைப்பில் மதிய நேர வானொலி நிகழ்ச்சியை ஒலிக்க விட்டவாறு, அவர் படுத்திருந்தார்.

வானொலியில் 80-களின் இளையராஜா பாடல்கள். அமுதன் மட்டும் அவரிடம் சென்றான். தமிழினியோ, மாரி செய்வதை அப்படியே பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.

“அப்பா, அப்பா..” என்று இவனின் சத்தம் கேட்டவுடனேயே அவர் எழுந்து அமர்ந்தார். “என்னாச்சு டா தம்பி.?” என்றார் அவனை பக்கத்தில் அமர வைத்தபடி.

“அப்பா இந்த மாரி அக்கா யாரு.? இங்கயே இருக்காங்க. வித்தியாசமா பேசறாங்க, நடந்துக்கறாங்க. அதான், உங்ககிட்ட கேட்கலாம்னு வந்தேன்.” என்றான் அமுதன்.

அவன் கேட்டவுடனேயே சிரித்த அழகேசன், “ம்ம்.. உனக்கு மாரியப் பத்தி தெரிஞ்சுக்கணுமா.? அவளப் பத்தி உனக்கு சொல்லணும்னா ஒரு நாளே பத்தாது. அவ்வளவு இருக்கு அவகிட்ட விஷயங்கள்.” என்றார்.

“சரி, சொல்லுங்கப்பா நான் கேக்கறேன்.” என்றான் அமுதன் ஆவலுடன்.

“மாரி, என்னுடைய பெரியப்பாவோட அதாவது, எங்கப்பாவுடைய அண்ணனுக்கு மகள் வயித்துப் பேத்தி. அதாவது, எனக்கு அக்காவோட பொண்ணும். அதுவும், ஒரே பொண்ணு. ரொம்ப செல்லமா வளர்ந்தவ. அவளுக்கு பயம்னா என்னன்னே தெரியாது. அவ மூணு வயசு இருக்கும் போது, எல்லாரும் வயல்ல வேலை பார்த்துட்டிருக்கும் போது, இவளும் வயல்ல அவங்க கூட விளையாடிட்டு இருந்தா. யாரும் பார்க்காத நேரத்துலு, ஒரு தண்ணி பாம்பு வயல்ல இருந்திருக்கு. அத ஏதோ பொம்மைன்னு நினைச்சு அத கையில் புடிச்சு ஆட்டி ஆட்டி விளையாடிருக்கா. எங்க அக்காவும், மத்தவங்களும் பார்த்து பதறி, அவகிட்ட இருந்து அந்தப் பாம்ப வாங்கி தூரப் போட்டாங்க. நல்ல வேளை, அது தண்ணிப் பாம்புன்னால பரவால்ல. இதுவே விஷப் பாம்பா இருந்தா என்ன பண்றது.? அப்போவே அவ அவ்வளவு தைரியம். எல்லா விஷயத்தையும் சீக்கிரம் கத்துக்கணும்னு ஒரு வைராக்கியம் அவளுக்குள்ள இருக்கு. அதனால, படிப்பு, கிராமத்துல பாடற நாட்டுப்புறப் பாட்டு, மத்தவங்களுக்கு ஒரு விஷயத்த தெரிஞ்சுக்கிட்டு அதைக் கத்துக்குடுக்குறது, இதெல்லாம் அவளோட சிறப்பு. அப்பறம், இப்போதான் டிகிரி முடிச்சிருக்கா. அதுவும், பி.எஸ்.ஸி அக்ரிகல்ச்சர் கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்துல மெரிட் சீட்ல கிடைச்சு படிச்சா. முதல் வகுப்புலயே தேறினா. அவளோட திறமைக்கு அவளுக்கு எங்கெங்கயோ இருந்து வேலை வாய்ப்பு கிடைச்சது. ஆனா, அதையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு இந்த ஊர்ல தான் விவசாயம் பண்ணுவேன்னு இருந்துட்டா. ரொம்பத் திறமையான பொண்ணு. படிப்பு முடிச்சு இப்போ, நம்ம வயக்காட்டையும், எல்லா நிலத்தையும் பாத்துக்கறா. அப்பறம் நம்ம விவசாயிக எந்த மாதிரியான சந்தேகமா இருந்தாலும், அதை அவகிட்ட தான் கேட்பாங்க. ஏன்னா, இந்த ஊர்லயே அந்தப் படிப்ப முடிச்ச ஒரே ஆள் அவ தான். அதுவும், இல்லாம எல்லாமே இயற்கையா இருக்கணும்னு அவளுக்கு ஒரு மனப்பான்மை. வயல்ல இறங்கி வேலை செஞ்சா ரெண்டு ஆளுக்கு சமமா வேலை செய்வா. அதுக்குத் தகுந்த மாதிரி நல்லா சாப்பிடுவா, ஊட்டச்சத்துள்ள உணவா எடுத்துக்குவா. எப்பவும் திடமா இருப்பா. ஆனா, அவ மனசு ரொம்ப இளகுன மனசு. உண்மையா பழகுறவங்களுக்காக உயிரையே கொடுப்பா. நீயே அவளப் போகப் போக தெரிஞ்சுக்குவ.” என்று அவளின் அனைத்து சிறப்புகளையும் சொன்னார் அழகேசன்.

“ம்ம்.. ஓ.. சரி பா.. ஆனா, ஏன் அந்த அக்கா இங்கயே இருக்காங்க. அவங்களுக்கு வீடு இல்லையா.? அவங்க அப்பா, அம்மா எங்க.?” என்றான் அமுதன்.

அவனின் இந்தக் கேள்வியை எதிர்பார்க்காதவர் சில நிமிட மௌனத்திற்க்குப் பிறகு பதிலளித்தார். “அவளுக்குன்னு யாருமே இல்ல தம்பி. உனக்காவது அப்பா நான் இருக்கேன். ஆனா, அவளுக்கு அம்மா, அப்பா, கூடப்பிறந்தவங்கன்னு யாருமே இல்ல.” என்றார்.

“ஏன் பா.? என்னாச்சு.? அவங்கள்லாம் எங்க.?” என்றான் அமுதன் அழகேசனின் பதிலை எதிர்பார்த்தவாறே.

“ஹூம்ம்.. அவளோட, அப்பா மிலிட்டரில இருந்தார். அவரோட சிபாரிசுல தான், எங்க அண்ணனும் மிலிட்டரில சேர்ந்தான். ஆனா, ரெண்டு பேருமே அங்க நடந்த போர்ல ஒரே சமயத்துல இறந்துட்டாங்க. அப்போ, அவளுக்கு வயசு அஞ்சு. அக்காக்கு மாமா போன துக்கம் தாங்கல. தினம் அழுது, அழுது சரியா சாப்பிடாம, தூங்காம இவளையும் சரியா கவனிக்காம இருந்தா. அப்போவெல்லாம் தாத்தாவும், பாட்டியும் தான் அவள வீட்டுக்கு எடுத்துட்டு வந்து பார்த்துட்டாங்க. எங்க பெரியப்பா, பெரியம்மா கூட அந்த அளவுக்கு பார்த்துட்டது கிடையாது. அக்கா வீடு, அதோ அங்க இருக்கே அதுதான். ஆனா, அவங்க வீடு கொஞ்ச தூரம் போகணும். அதனால, தான் எங்க அப்பா, அம்மா கூடவே இருந்தாங்க. ஆனா, என்ன பிரயோஜனம், அவர் இறந்து சரியா ரெண்டே மாசம். அக்காவும், நெஞ்சு வலி வந்து இறந்துட்டா. விவரம் தெரிஞ்சு அவளோட, அம்மாவும், அப்பாவும் இறந்தப்போ அவளப் பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதுக்கப்பறம், பெரியப்பாவோட ரெண்டு பசங்களும் சொத்து கேட்டு தகராறு பண்ண ஆரம்பிச்சாங்க. அவர் மகளுக்கும் உரிமை இருக்குன்னு சொல்லி, அக்காக்கு சேர வேண்டிய மூணு ஏக்கர் நிலத்த மாரி பேருக்கு மாத்தி அதுக்கு காவலா உங்க தாத்தாவோட பெயரையும் போட்டு உயில் எழுதி வைச்சுட்டாரு. அதுல அந்த அண்ணன்களுக்கு உடன்பாடு இல்ல. இருந்தாலும், சொத்து அதிகமா அவங்களுக்குத்தான் போய் சேர்ந்ததால சரின்னு விட்டுட்டாங்க. அதுக்கப்பறம் அவங்களோட பேச்சு வார்த்தையே இல்லாம போயிடுச்சு. அப்ப இருந்து அவ இங்க தாத்தா, பாட்டியோட தான் இருக்கா. அவங்களையும் இவதான் பார்த்துக்கறா.” என்று அவளின் முழுக்கதையையும் சொல்லி முடித்தார் அழகேசன்.

“என்ன மாமா, என்னோட கதையைச் சொல்லிட்டிருக்கீங்களா.?” என்று கேட்டபடியே பின்னால் வந்து நின்ற மாரியை இருவரும் விழித்தபடி பார்த்தனர்.

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1262

உங்கள் விமர்சனங்களை கீழே உள்ள கமெண்ட்ஸ் லிங்கில் தரவும் தோழமைகளே,




 
Status
Not open for further replies.

Latest Episodes

New Threads

Top Bottom