என்ன சொல்றது.... சத்தியமா சொல்ற மனசு பதட்டமா இருக்கா, சந்தோஷமா இருக்கா, ஆச்சரியமா இருக்கா, கவலையா இருக்கா ன்னு சொல்ல முடியாத நிலைமையில இருக்கு. நீங்க சொன்னது உண்மைதான். மதுரவனோட தம்பி தான் இவன். இவங்கள மாதிரி ஒரு வாழ்க்கை சாத்தியமே இல்லை.... ஒருவேளை இருந்தா வாழ்க்கை எப்படி இருக்கும். என்னமோ இவங்களோட பின்னாடி ரகசியமா நானும் போற மாதிரி ஒரு பீல். அடுத்து என்ன நடக்கும்னு படிச்சதை விட அடுத்த லைன்ல என்ன இருக்கும்னு படிச்சது தான் அதிகம். ஏன்னா.... சின்ன வார்த்தையில தான் ஒரு பூகம்பத்தையே கொடுக்குறீங்க. அதனாலேயே ஒவ்வொரு வார்த்தையும் கவனமா படிக்கிறேன். ஒவ்வொரு பதிவா படிக்கிற பொறுமையும் நிதானமும் எனக்கு இல்லை. மகேன் மரணம் நான் எதிர்பார்த்ததுதான்.... ஆனா என்ன மனசு தான் ஏத்துக்கல. தனிமை தான் உலகத்திலேயே முதல் கொடுமையான மரணம். அதை அனுபவிக்கிற ஆட்கள் கிட்ட கேட்டா தெரியும்.....
இவன் மாயவன் தான் கதை முடியிறதுக்குள்ள என் மனசுல இருக்க மொத்த பேரையும் துரத்தி விட்டுட்டு இவன் ஒருத்தனே உட்கார்ந்துடுவான் போல. இந்த மாதிரி மாயக்காரனே..... தொடர்ந்து படிக்கவே பயமா இருக்கு. இவனைப் பத்தி படிச்சதும் இனி விடவும் வாய்ப்பே இல்லை..
குணத்துல அப்படி ஒரு அழுத்தம்..... எதிர்ல இருக்குறவங்களை கூறுபோட்டு கொன்னுடாதா. ஒரு மனுஷனோட மனசையும் எண்ணங்களும் எப்படி இவ்ளோ கண்ட்ரோல்ல வைக்க முடியும். சிதம்பர ரகசியமே இவன் முன்னாடி தோத்துடும்.
சந்தனா... கேரக்டர் எந்த மாதிரின்னு யூகிக்கவே முடியவில்லை.. ஆனா ஒரே ஒரு கோரிக்கை மட்டும்.. இன்னும் சில அத்தியாயங்களுக்கு பிறகு.. முதல் பதிவில் அவ சொன்ன எந்த விஷயங்களும் மாறாம... அவருடைய இயல்பை அப்படியே காட்டினா ரொம்ப நல்லா இருக்கும். குடிச்சிட்டு வண்டி ஓட்டுனது எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா... அவ மேல இருந்த சில பிம்பங்கள் அது மாறாமலே கொண்டு போனா அவளும் மாயவன் மாதிரி திணறடிக்க நிறைய வாய்ப்பு இருக்கு.
என்ன சொல்ல..... சந்தனா மாதிரி இன்னும் சில பேரோட வாழ்க்கை இருக்கு. அந்த ஹோட்டல்ல வேலை பார்க்கிறவங்க பேசினது என்ன பொறுத்த வரைக்கும் தப்பு இல்ல. ஏன்னா அவங்களோட கண்களுக்கு அது தானே தெரிஞ்சிருக்கு. இதுவே அந்த இடத்தில சராசரியா நீங்களும் நானும் யாரா இருந்தாலும் அந்த பிம்பங்களை மட்டும்தான் வைச்சி பேசுவோம். ஆனா ஒவ்வொருத்தரோட வாழ்க்கைக்கு பின்னாடியும் தெரிஞ்சுக்க முடியாத, தெரிஞ்சுக்க கூடாத ரகசியங்கள் நிறைய இருக்குன்னு சந்தனாவை பார்த்தா புரியும். இனி இவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்க்க போறதை நெனச்சாலே அப்படி ஒரு எக்சைட்மென்ட் மனசுக்குள்ள. கூடவே பயமும்.
சிலபேர் நேரடியா குத்து கிழிக்கிற மனச... நீங்க பதமா வருடிக்கொடுத்து....... குத்த போறேன்னு கூட சொல்லாம்... செஞ்சி முடிச்சிடுறிங்க. அதுல வலியை விட சுகம் தான் அதிகம். ஒரு வாசகரா..... வாசிப்பு தீனக்கு போதல போதல.... ஒரு நாளைக்கு 10 யூ டி குடுங்க. இன்னைக்கு நான் படிக்கும்போது உணர்ந்தது ஒரு விஷயம்தான்.
சில பேருடைய எழுத்தைப் பார்த்ததும், படித்ததும் நம்மளும் அந்த மாதிரி எழுதணும்னு ஆசை வரும். வெகு சிலரோட எழுத்து மட்டும்தான்.... என்ன தவம் செஞ்சாலும்.. அதை பின்பற்ற முடியாது. அப்படி நான் வியந்து ரசிச்சி.... இவங்கள மாதிரி எழுதவே முடியாதுன்னு நினைச்சு இரண்டாவது ஆள் நீங்கதான்.
ஒரு நாள்.... எந்த தொந்தரவும் இல்லாம உங்க கதைகளை படிச்சா அந்த நாளை அதைவிட சிறப்பாக வேறு எதாலையும் மாற்ற முடியாது. நிச்சயமா எந்த குணத்தை சார்ந்த ஆட்களை இருந்தாலும்..... ஒருநொடி அவங்களோட சாயல் உங்க கதைகள்ல இருக்கும். அவங்க பண்றது சரியோ தப்போ எதுவோ ஒன்னு இது நம்ம தான்ன்னு உணரவக்கும்.
மகேன் கிட்ட மாயவன் சொன்ன ஒரு டயலாக் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு....... உண்மைதானே எதுக்கு வெளிக்காட்டனும். ஆனா காட்டணும்... இல்லனா நம்ம மனசுல நிறைந்திருக்க சந்தோஷத்தை அதை கொடுத்தவங்க அனுபவிக்காம போயிடுவாங்க. நான் கொஞ்சம் கொடுத்துட்டேன்னு நினைக்கிற ... அந்த கவிதை அல்டிமேட்...