- Messages
- 65
- Reaction score
- 86
- Points
- 18
அத்தியாயம் -19
“நான் வேற ஒரு பொண்ணை லவ் பன்றேன். இதுதான் காரணம். அவளைத் தவிர என் மனசுல யாருக்கும் இடம் கிடையாது.”
இந்தப் பதிலைக் கேட்டதும் மறுமுனையில் அழைப்புத் துண்டிக்கப்பட்டது.
ஆயாசத்துடன் இவனும் அழைப்பைத் துண்டித்தான்.
‘நாளைக்கு வரப் போறப் பிரச்சினையைச் சமாளிக்கனும். ஃபேஸ் பன்னுவோம். உண்மை இதுதான்.’
மீண்டும் ஒரு காபியை கலந்து அருந்தினான். காபியின் கசப்புச் சுவை அவன் மனதிலிருந்த கசப்பை மறக்க முடிந்ததா என்பதுதான் தெரியவில்லை.
சிறிது நேரம் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக அமர்ந்தான். பின்பு எதையோ யோசித்தவன் மீண்டும் டைரியை எடுத்தான். விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தான்.
நமக்கு வர எந்த ஒரு பிரச்சினையையும் இழுத்து அடிக்காமல் எதிர்கொள்வது சிறந்தது. நாட்கள் ஆக ஆக நம் மனமே நரகமாக மாறிவிடும். இதுதான் எனக்கும் நடந்தது. என்னுடைய பாஸ்ட் பத்தி உனக்குத் தெரியும். அதில் பிரசண்ட் லைஃப்பிலும் நிறைய பிரச்சினைகள் வந்தால் அது ஒன்று நம்மை வலிமையாக்கும். இல்லை பர்ன் அவுட் என்று நம்மை உடைக்கத் தொடங்கிவிடும். மூன்றாவது வருடம் படிக்கும் போது மனச்சோர்வு அதிகமாகியது. ஆனால் வெளியில் யாருக்கும் தெரியாது. என்னுடைய குடும்பத்திற்குத் தெரியாது. நண்பர்கள் அனைவருக்கும் என் எதிரி என்று ஒருவனை அடையாளப் படுத்தி அவன் தான் என் பிரச்சினைகளுக்குக் காரணம் என்று கூறிவிட்டிருந்தேன்.
சொல்லப் போனால் நான் சாக நினைத்த நாட்கள் அதிகம். எனக்கு மனித வாழ்க்கைப் பிடிக்கவில்லை. அப்போது என் லைஃப்பில் ஒருவன் குறுக்கிட்டான். தற்காலிகமாக என் கோபத்தை அவன் மீது செலுத்த உதவினான்.
அவன் என் பக்கத்து டிப்பார்மெண்ட் ஜீனியர். என் தோழி ஒருவள் மூலம் அறிமுகம் ஆனான். முதல் பார்வையிலே அவன் என்னை சீனியராக நினைக்க வில்லை என்பதைத் தெளிவாக உணர வைத்தது. அன்று மாலையே போன் நம்பர் கேட்டதாக தோழி சொன்னாள்.
அப்பவும் சரி, இப்பவும் சரி என்னுடைய போன் நம்பர் அதிகம் வெளியில் தர மாட்டேன். எவ்வளவு நபர்களை தெரிந்தாலும் ஏன் பக்கத்து வீட்டில் இருந்தாலும் கூட நான் போன் நம்பர் வாங்க மாட்டேன். இது என் வழக்கம். அப்படி இருக்கும் போது இவனுக்கு என் போன் நம்பர் கொடுத்து விடுவேனா? அதற்கு வாய்ப்பே இல்லை.
‘குட் அப்படித்தான் இருக்கனும்.’ தேவ் பாராட்டினான்.
ஆனால் நான் எங்காவது வழியில் அவனைச் கிராஸ் செய்யும் படி நேர்ந்தால் நண்பர்களுக்குக் காட்டி ஏதோ சொல்லுவான். பொதுவாக எவன் எக்கேடு கெட்டால் என்று நடைபாதையில் செல்லும் எனக்கே அவன் அப்படிப் பேசுவது மிகவும் உறுத்தியது. எனக்கு தெரியமாலாவது பேசியிருக்கலாம்.
இவற்றை எல்லாம் விட்டு விடலாம். என் சித்தி வீடும் கோவையில் இருப்பதால் நான் அவர்கள் வீட்டுக்கு அவ்வப்போது வெள்ளிக்கிழமை மாலை சென்று ஞாயிறு திரும்பவும் விடுதிக்குத் திரும்புவேன்.
இப்படி ஒரு நாள் சித்தி வீட்டுக்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினேன். அன்று பார்த்து அவனும் அவன் நண்பர்களும் அதே பேருந்தில் பின்னாடி ஏறியிருப்பர் போலும்.
இதையெல்லாம் நான் கவனித்தால் தானே. பேருந்தில் பயங்கரக் கூட்டம் வேறு. ஒரு வழியாக பேருந்தை விட்டு இறங்கினேன். சித்தி ஊர் வரும் போது கூட்டம் குறைந்து விட்டது. நான் இறங்கியதும் பேருந்தில் பின் பக்கம் இருந்த அவனும் அவன் நண்பர்களும் கைகாட்டி ஏதோ சிரித்தனர். கிட்டதட்ட பேருந்தில் இருந்த அனைவரும் திரும்பி பார்த்துவிட்டனர். ஐ வாஸ் சோ எம்பராஸ்ட்டு.
வீட்டிலும் சொன்னேன். அதற்குப் பிறகு அவனைத் திரும்ப கல்லூரியில் பார்க்கவில்லை. சில நாட்கள் கழித்து ஒரு நாள் மாலைப் பார்த்தேன். நானும் ஜெய் அண்ணாவும் கேண்டின் சென்று திரும்பவும் வந்துக் கொண்டிருக்கும் வழியில் அவன் நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தான். ஜெய் அண்ணாவிடம் “அண்ணா இவனை இந்த மாதிரி பிகேவ் பன்ன வேண்டாம்னு சொல்லுங்கனு” சொன்னேன்.
அவரும் பொறுமையாக எடுத்துச் சொன்னார். ஆனால் அவன் கேட்கவில்லை. கூட்டத்துடன் இருந்ததால் எகிற ஆரம்பித்தான். சீனியர் என்றும் பார்க்கவில்லை. அதிகப்படியாகப் பேச ஆரம்பித்தான்.
ஒரு கட்டத்தில் “ரோட்டுல போற பொண்ணை நாங்க என்ன வேணா செய்வோம்” என்றான். அதுதான் என்னோட பிரேக்கிங்க் பாயிண்ட். ஜெய் அண்ணாவை இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்பி வந்துவிட்டேன். பிறகு பன்னிரெண்டாம் வகுப்பில் நான் சிலரை வச்சு செஞ்சதின் விளைவு எனக்கு கல்லூரியில் பொறுமையாக இருக்கும்படி வீட்டினர் அறிவுரை வழங்கியிருந்தனர். அத அப்புறம் சொல்றேன்.
நானும் அண்ணாவும் , ராஜ் இருக்குமிடம் சென்றோம். நடந்த விஷயங்களைச் அவனிடமும் கூறினோம்.
இறுதியில் ஜெய் அண்ணாவின் அறிவுரை படி அவனைப் பற்றி கல்லூரி முதல்வருக்கு ஒரு புகார் எழுதிக் கொடுத்தோம். முதலில் எனக்கு புகார் கொடுக்கத் தயக்கம். சின்னப் பையனின் வாழ்க்கையை வீணடிக்க விருப்பமில்லை. ஆனால் ரோட்டுல போற பொண்ணை என்ன வேணா செய்வோம் என்ற மனநிலை ஆபத்தானது. அவனை விட வயதில் பெரிய எனக்கே இந்த நிலை என்றால் சிறியவர்களின் நிலை என்ன?
அந்த வாக்கியம் மட்டுமே புகார் கொடுக்க வைத்தது.
அதற்குப் பிறகு வரும் விஷயங்களை நான் நினைத்துப் பார்க்கவில்லை. அடுத்த நாள் காலையிலே விஷயம் என் டிபார்ட்மெண்ட் முழுக்கப் பரவி விட்டது. துறைத்தலைவர் , பேராசிரியர்கள் என அனைவரும் ஆதரவு கொடுத்தனர்.
ஒவ்வொரு காலேஜிலும் கேங்க்ஸ் இருக்கும். அப்படித்தான் என் கல்லூரியிலும் உள்ளது. அந்தப் பையன் எங்கள் வகுப்பு மாணவர்கள் இருக்கும் கேங்குக்கு எதிரி கேங்கைச் சேர்ந்தவன். என்னைக் காரணமாக வைத்து இரு கேங்க்குகள் மோதிக் கொண்டன. இது வெளியில் நடந்தது. கல்லூரியில் நடக்கவில்லை. இதற்கு என்னுடன் படித்த மாணவனும் காரணம். அவனால் என் விஷயம் வெளிப்பட்டு கேங்க் வாராக மாறியது.
கல்லூரி முதல்வர் என்னை நேரில் அழைத்தார். நானும் சென்று நடந்தவை அனைத்தையும் விலாவாரியாகக் கூறினேன்.
அடுத்த நாளே அவன் என் தோழியின் உதவியின் மூலம் போன் செய்து சாரி கேட்டான். நீங்க ஏத்துகலனா எனக்கு டிசி கொடுத்துடுவாங்க என்று கெஞ்சினான். எனக்கு குழப்பம். போன் செய்து ஜெய் அண்ணாவிடம் ஆலோசனை கேட்டேன்.
“எனக்கு எதாவது இதுக்கு மேல பிரச்சினை வந்தா போலீஸ்கிட்ட கம்பிளெய்ண்ட் செஞ்சுருவேன். இப்படி சொல்லிட்டு அவனை மன்னிச்சு விட்டுரு.”
எனக்கும் அதுதான் சரி என்று தோன்றியது. இந்தப் பிரச்சினை முடிந்து சில நாட்கள் ஆன பின்னரும் ஜெய் அண்ணா என்னுடன் ஹாஸ்டல் வரை மாலை நேரத்தில் துணைக்கு வருவார். எனக்கு பாடிகார்டு மாதிரி. ஆனால் எனக்கு என் துறையில் ஆசிரியர்கள் அளித்த ஆதரவுதான். விக்டம் பிளேமிங்க் இல்லை. இப்படி பாதிக்கபடற அனைவருக்கும் ஆதரவு இருந்தால் ஒரு பலம் தானே.
எங்கள் துறைத்தலைவர் “நீ குட்டியா இருக்க யாழரசி அதனால்தான் அவன் உன்னை சின்ன பொண்ணுனு நினைச்சுட்டான். “ என்று கலாய்த்தார்.
அவனுக்கு நான் சீனியர் என்பது தெரியும். அப்புறம் என் வீட்டினரும் எனக்குதான் சப்போர்ட். என் வீட்டு ஆளுங்கதான் எனக்கு பலமே.
நான் பன்னிரெண்டாம் வகுப்பில் என்ன செய்தேன் என்று உனக்குத் தெரியாது இல்லையா?.
பதினொன்று , பனிரெண்டாம் வகுப்பு ஒரு தனியார் பள்ளியில் படித்தேன். டென்த் மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு சைக்கிள் டெஸ்ட் , சிலிப் டெஸ்ட் நடக்கும். வீட்டுக்கும் தாமதமாக விடுவர். எனக்கு டென்த் படிக்கும் போது ஒரு பொண்ணு பிரண்ட். நாங்கள் பேருந்தில் ஒன்றாகச் வீட்டுக்குச் செல்வோம்.
பேருந்தில் அமர்ந்திருந்தோம். ஐந்து மணிக்கு மேலாவதால் எல்லாருக்குமே பசி எடுக்கும். எங்களுக்கு தான். நான் சாப்பிடலாம் என்று அவளிடம் கூறினேன்.
“அக்கா வேணாம். ரொம்ப நேரமா அந்த காலேஜ் பசங்க நம்மள கிண்டல் செய்திட்டு இருக்காங்க. இப்ப சாப்பிட்டா அதுக்கும் எதாவது சொல்லுவாங்க. “
நானும் கவனித்தேன். அவளுடைய அசகவுரியத்தால் நான் “சரி மா. நாம டெஸ்ட் பேப்பர்ஸ் பார்ப்போம்.”
என்றதும் அவளும் சரி என்றாள். அவளும் நன்றாகப் படிப்பாள். அவள் அறிவியலில் ஐம்பது நாற்பத்தி எட்டு எடுத்திருந்தாள்.
நானும் எனக்கு கொடுத்திருந்த கெமிஸ்ட்ரிப் பேப்பரை எடுத்து அவளிடம் காண்பித்தேன். எழுபத்து ஐந்துக்கு எழுபத்தி நான்கு மார்க் எடுத்திருந்தேன்.
எங்களைக் கவனித்துக் கொண்டிருந்த அந்த இடியட்ஸ்ம் “ எங்களுக்கு கொஞ்சம் காட்டறது ?” என்று கமெண்ட் அடித்தார்கள்.
நான் எதுவும் செய்யவில்லை. எழுந்து அவர்களின் அருகில் சென்று “இந்தாங்க. பார்த்துக்கங்க” என்று எங்களது ஆன்சர் சீட்டை நீட்டி விட்டேன்.
அவர்களின் முகத்தில் தெரிந்த அதிர்வு …பிரைஸ்லஸ். அதை என்றுமே என்னால் மறக்க முடியாது. அவர்கள் பேசாமல் பேப்பரைப் பார்த்துவிட்டு “நல்லா படிங்க” என்று திருப்பிக் கொடுத்துவிட்டனர்.
பெண்களின் பயம் தான் அவர்களை சீண்ட தூபம் போடுகிறது.
அதற்குப் பிறகு அவர்கள் வாலாட்டவில்லை.
இதெல்லாத்தையும் விட இன்னொரு சம்பவம் எனக்கு ரொம்ப பிடிச்சது. ரிவெஞ்ச் மாதிரினு சொல்லலாம்.
பிளஸ் டூ மாணவர்களுக்கு பொதுத்தேர்வின் செய்முறைத் தேர்வு நடந்தது. எனக்கு இயற்பியல் செய்முறைத் தேர்வு. என் தோழிகளுடன் முடித்துவிட்டு
பேருந்தில் அமர்ந்திருந்தோம். நாங்க அனைவரும் மிகவும் களைப்பாக இருந்தோம். சில கல்லூரி மாணவர்களும் , வேறு ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் எங்களை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.
என் தோழிகள் பேருந்து எடுத்த பத்து நிமிடங்களில் வீடு வந்து விடும் என்பதால் இறங்கி விட்டனர். அதற்குப் பிறகு அரை மணி நேரம் நான் பயணம் செய்ய வேண்டும். அவனுங்க நிறுத்தவே இல்லை. ஷீ வைக் கூட கழற்றி காண்பித்து விட்டேன். அடங்கவில்லை . ஊர் வந்ததும் நான் இறங்கும் போது முறைத்துக் கொண்டே இருந்தேன்.
கல்லூரி மாணவன் ஒருவன் “ என்னடா இறங்கும் போது முறைச்சுட்டு போகுது? எதாவது பன்னிருமோ?” என்று சந்தேகத்துடன் வினவினான்.
அதற்கு மற்றொருவனோ “நாம என்ன இனிமே இந்த பஸ்ல வரவா போறோம்டா?” என்று அலட்சியத்துடன் சிரித்தான்.
நானும் ‘ இந்த பஸ்ல வந்தாதான?’ என்று நினைத்துவிட்டு அவர்களின் முகங்களை மனதில் பதிய வைத்தேன். அன்று முழுக்க எனக்கு கோபம். வீட்டிலும் வந்து நடந்ததை எல்லாம் கூறிவிட்டேன்.
ஆனாலும் மனதில் கோபம் மறையவில்லை. அவர்கள் என்றாவது என் கண்ணில் சிக்குவார்கள் என்று நம்பினேன்.
அதற்குப் பலன் அடுத்த வாரமே கிடைத்தது. காலையில் நான் பள்ளி செல்ல ஏறிய பேருந்தில் பின் புறத்தில் அவன் இருந்தான். நான் மற்ற பெண்கள் மாதிரி பேருந்தில் கூட்டத்தில் தொங்கிச் செத்தாலும் முன்னால்தான் நிற்பேன் என்ற ரகத்தைச் சேர்ந்தவள் பேருந்தின் நடுப்பகுதிக்குச் சென்றேன். அங்கு எனது தோழி இருந்தாள். ஜீனியர் தான். அவளுக்கு அடுத்த சீட்டில் அவன் அமர்ந்திருந்தான்.
‘யெஸ் இன்னிக்கு நீ காலி’ என்ற உறுதியுடன் ஜீனியரிடம் “என்ன சொன்னாலும் கண்டுக்காத” என்று கூறிவிட்டு அவளருகில் அமர்ந்தேன். அடுத்த அரைமணி நேரத்தில் அவனை டிசைன் டிசைனாக கலாய்த்து எடுத்துவிட்டேன்.
“காக்கா மாதிரி குரலை வச்சுகிட்டு நீ எல்லாம் என்னை கலாய்க்கிறியா?” ஆரம்பித்து ……………………………………………………………………………………………………………………………………… முடித்தேன்.
கெட்டவார்த்தை எல்லாம் பேசவில்லை. என்னால மூச்சு விடாமல் கெட்ட வார்த்தை பேசாமல் அருமையாகத் திட்ட முடியும்.
அதற்குப் பிறகு அவன் என்னை கலாய்த்த பேருந்து மற்றும் அவனை நான் கலாய்த்த பேருந்து இரண்டிலும் பார்க்கவில்லை. இறங்கும் போது அவன் முகத்தைப் பார்க்க வேண்டுமே….அடடா…
ஒரு வாரமாக இருந்த கோபம் அப்போது தான் தணிந்தது. பரம திருப்தியுடன் பள்ளிக்குச் சென்றேன்.
எனக்கு யாரா இருந்தாலும் ஒரு விஷயம் பிடிக்காது. முன்ன பின்ன தெரியாத பெண்களை வேண்டுமென்றே கேலி செய்வது. என்ன பத்தி பேச உரிமை இருக்கு?
உடனே ஒரு கேலி செஞ்சா கூட சீரியஸா எடுத்துக்குவியா? அப்படி இல்ல. எனக்கு நல்லா தெரிஞ்சவங்க என்னை செமையா கலாய்ப்பாங்க. அவங்களை எதுவும் சொல்ல மாட்டேன். அதுவும் வருந்துபடி சொல்லாமல் இருக்கும் வரை மட்டுமே.
“ரைட் இவள மட்டும் நான் முன்னாடி கலாய்ச்ச மாதிரி நேர்ல கலாய்ச்சா தொவைச்சு தொங்க விட்டுருவா. வொய் பிளட்? சேம் பிளட் ? கதையாகிடும். மண்டை பத்தரம் அப்படிங்கற மாதிரி காது பத்திரம் டா தேவ். “ நெஞ்சைத் தடவி விட்டுக் கொண்டவன் இப்போது தண்ணீர் குடித்தான்.
சரி இப்ப நான் மூன்றாம் வருடம் முடித்துவிட்டேன். இருபது வயது முடிவதற்குள் இளங்கலை முடித்துவிட்டேன். அடுத்தது பி.ஜி.
அலைவான்.....................
“நான் வேற ஒரு பொண்ணை லவ் பன்றேன். இதுதான் காரணம். அவளைத் தவிர என் மனசுல யாருக்கும் இடம் கிடையாது.”
இந்தப் பதிலைக் கேட்டதும் மறுமுனையில் அழைப்புத் துண்டிக்கப்பட்டது.
ஆயாசத்துடன் இவனும் அழைப்பைத் துண்டித்தான்.
‘நாளைக்கு வரப் போறப் பிரச்சினையைச் சமாளிக்கனும். ஃபேஸ் பன்னுவோம். உண்மை இதுதான்.’
மீண்டும் ஒரு காபியை கலந்து அருந்தினான். காபியின் கசப்புச் சுவை அவன் மனதிலிருந்த கசப்பை மறக்க முடிந்ததா என்பதுதான் தெரியவில்லை.
சிறிது நேரம் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக அமர்ந்தான். பின்பு எதையோ யோசித்தவன் மீண்டும் டைரியை எடுத்தான். விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தான்.
நமக்கு வர எந்த ஒரு பிரச்சினையையும் இழுத்து அடிக்காமல் எதிர்கொள்வது சிறந்தது. நாட்கள் ஆக ஆக நம் மனமே நரகமாக மாறிவிடும். இதுதான் எனக்கும் நடந்தது. என்னுடைய பாஸ்ட் பத்தி உனக்குத் தெரியும். அதில் பிரசண்ட் லைஃப்பிலும் நிறைய பிரச்சினைகள் வந்தால் அது ஒன்று நம்மை வலிமையாக்கும். இல்லை பர்ன் அவுட் என்று நம்மை உடைக்கத் தொடங்கிவிடும். மூன்றாவது வருடம் படிக்கும் போது மனச்சோர்வு அதிகமாகியது. ஆனால் வெளியில் யாருக்கும் தெரியாது. என்னுடைய குடும்பத்திற்குத் தெரியாது. நண்பர்கள் அனைவருக்கும் என் எதிரி என்று ஒருவனை அடையாளப் படுத்தி அவன் தான் என் பிரச்சினைகளுக்குக் காரணம் என்று கூறிவிட்டிருந்தேன்.
சொல்லப் போனால் நான் சாக நினைத்த நாட்கள் அதிகம். எனக்கு மனித வாழ்க்கைப் பிடிக்கவில்லை. அப்போது என் லைஃப்பில் ஒருவன் குறுக்கிட்டான். தற்காலிகமாக என் கோபத்தை அவன் மீது செலுத்த உதவினான்.
அவன் என் பக்கத்து டிப்பார்மெண்ட் ஜீனியர். என் தோழி ஒருவள் மூலம் அறிமுகம் ஆனான். முதல் பார்வையிலே அவன் என்னை சீனியராக நினைக்க வில்லை என்பதைத் தெளிவாக உணர வைத்தது. அன்று மாலையே போன் நம்பர் கேட்டதாக தோழி சொன்னாள்.
அப்பவும் சரி, இப்பவும் சரி என்னுடைய போன் நம்பர் அதிகம் வெளியில் தர மாட்டேன். எவ்வளவு நபர்களை தெரிந்தாலும் ஏன் பக்கத்து வீட்டில் இருந்தாலும் கூட நான் போன் நம்பர் வாங்க மாட்டேன். இது என் வழக்கம். அப்படி இருக்கும் போது இவனுக்கு என் போன் நம்பர் கொடுத்து விடுவேனா? அதற்கு வாய்ப்பே இல்லை.
‘குட் அப்படித்தான் இருக்கனும்.’ தேவ் பாராட்டினான்.
ஆனால் நான் எங்காவது வழியில் அவனைச் கிராஸ் செய்யும் படி நேர்ந்தால் நண்பர்களுக்குக் காட்டி ஏதோ சொல்லுவான். பொதுவாக எவன் எக்கேடு கெட்டால் என்று நடைபாதையில் செல்லும் எனக்கே அவன் அப்படிப் பேசுவது மிகவும் உறுத்தியது. எனக்கு தெரியமாலாவது பேசியிருக்கலாம்.
இவற்றை எல்லாம் விட்டு விடலாம். என் சித்தி வீடும் கோவையில் இருப்பதால் நான் அவர்கள் வீட்டுக்கு அவ்வப்போது வெள்ளிக்கிழமை மாலை சென்று ஞாயிறு திரும்பவும் விடுதிக்குத் திரும்புவேன்.
இப்படி ஒரு நாள் சித்தி வீட்டுக்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினேன். அன்று பார்த்து அவனும் அவன் நண்பர்களும் அதே பேருந்தில் பின்னாடி ஏறியிருப்பர் போலும்.
இதையெல்லாம் நான் கவனித்தால் தானே. பேருந்தில் பயங்கரக் கூட்டம் வேறு. ஒரு வழியாக பேருந்தை விட்டு இறங்கினேன். சித்தி ஊர் வரும் போது கூட்டம் குறைந்து விட்டது. நான் இறங்கியதும் பேருந்தில் பின் பக்கம் இருந்த அவனும் அவன் நண்பர்களும் கைகாட்டி ஏதோ சிரித்தனர். கிட்டதட்ட பேருந்தில் இருந்த அனைவரும் திரும்பி பார்த்துவிட்டனர். ஐ வாஸ் சோ எம்பராஸ்ட்டு.
வீட்டிலும் சொன்னேன். அதற்குப் பிறகு அவனைத் திரும்ப கல்லூரியில் பார்க்கவில்லை. சில நாட்கள் கழித்து ஒரு நாள் மாலைப் பார்த்தேன். நானும் ஜெய் அண்ணாவும் கேண்டின் சென்று திரும்பவும் வந்துக் கொண்டிருக்கும் வழியில் அவன் நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தான். ஜெய் அண்ணாவிடம் “அண்ணா இவனை இந்த மாதிரி பிகேவ் பன்ன வேண்டாம்னு சொல்லுங்கனு” சொன்னேன்.
அவரும் பொறுமையாக எடுத்துச் சொன்னார். ஆனால் அவன் கேட்கவில்லை. கூட்டத்துடன் இருந்ததால் எகிற ஆரம்பித்தான். சீனியர் என்றும் பார்க்கவில்லை. அதிகப்படியாகப் பேச ஆரம்பித்தான்.
ஒரு கட்டத்தில் “ரோட்டுல போற பொண்ணை நாங்க என்ன வேணா செய்வோம்” என்றான். அதுதான் என்னோட பிரேக்கிங்க் பாயிண்ட். ஜெய் அண்ணாவை இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்பி வந்துவிட்டேன். பிறகு பன்னிரெண்டாம் வகுப்பில் நான் சிலரை வச்சு செஞ்சதின் விளைவு எனக்கு கல்லூரியில் பொறுமையாக இருக்கும்படி வீட்டினர் அறிவுரை வழங்கியிருந்தனர். அத அப்புறம் சொல்றேன்.
நானும் அண்ணாவும் , ராஜ் இருக்குமிடம் சென்றோம். நடந்த விஷயங்களைச் அவனிடமும் கூறினோம்.
இறுதியில் ஜெய் அண்ணாவின் அறிவுரை படி அவனைப் பற்றி கல்லூரி முதல்வருக்கு ஒரு புகார் எழுதிக் கொடுத்தோம். முதலில் எனக்கு புகார் கொடுக்கத் தயக்கம். சின்னப் பையனின் வாழ்க்கையை வீணடிக்க விருப்பமில்லை. ஆனால் ரோட்டுல போற பொண்ணை என்ன வேணா செய்வோம் என்ற மனநிலை ஆபத்தானது. அவனை விட வயதில் பெரிய எனக்கே இந்த நிலை என்றால் சிறியவர்களின் நிலை என்ன?
அந்த வாக்கியம் மட்டுமே புகார் கொடுக்க வைத்தது.
அதற்குப் பிறகு வரும் விஷயங்களை நான் நினைத்துப் பார்க்கவில்லை. அடுத்த நாள் காலையிலே விஷயம் என் டிபார்ட்மெண்ட் முழுக்கப் பரவி விட்டது. துறைத்தலைவர் , பேராசிரியர்கள் என அனைவரும் ஆதரவு கொடுத்தனர்.
ஒவ்வொரு காலேஜிலும் கேங்க்ஸ் இருக்கும். அப்படித்தான் என் கல்லூரியிலும் உள்ளது. அந்தப் பையன் எங்கள் வகுப்பு மாணவர்கள் இருக்கும் கேங்குக்கு எதிரி கேங்கைச் சேர்ந்தவன். என்னைக் காரணமாக வைத்து இரு கேங்க்குகள் மோதிக் கொண்டன. இது வெளியில் நடந்தது. கல்லூரியில் நடக்கவில்லை. இதற்கு என்னுடன் படித்த மாணவனும் காரணம். அவனால் என் விஷயம் வெளிப்பட்டு கேங்க் வாராக மாறியது.
கல்லூரி முதல்வர் என்னை நேரில் அழைத்தார். நானும் சென்று நடந்தவை அனைத்தையும் விலாவாரியாகக் கூறினேன்.
அடுத்த நாளே அவன் என் தோழியின் உதவியின் மூலம் போன் செய்து சாரி கேட்டான். நீங்க ஏத்துகலனா எனக்கு டிசி கொடுத்துடுவாங்க என்று கெஞ்சினான். எனக்கு குழப்பம். போன் செய்து ஜெய் அண்ணாவிடம் ஆலோசனை கேட்டேன்.
“எனக்கு எதாவது இதுக்கு மேல பிரச்சினை வந்தா போலீஸ்கிட்ட கம்பிளெய்ண்ட் செஞ்சுருவேன். இப்படி சொல்லிட்டு அவனை மன்னிச்சு விட்டுரு.”
எனக்கும் அதுதான் சரி என்று தோன்றியது. இந்தப் பிரச்சினை முடிந்து சில நாட்கள் ஆன பின்னரும் ஜெய் அண்ணா என்னுடன் ஹாஸ்டல் வரை மாலை நேரத்தில் துணைக்கு வருவார். எனக்கு பாடிகார்டு மாதிரி. ஆனால் எனக்கு என் துறையில் ஆசிரியர்கள் அளித்த ஆதரவுதான். விக்டம் பிளேமிங்க் இல்லை. இப்படி பாதிக்கபடற அனைவருக்கும் ஆதரவு இருந்தால் ஒரு பலம் தானே.
எங்கள் துறைத்தலைவர் “நீ குட்டியா இருக்க யாழரசி அதனால்தான் அவன் உன்னை சின்ன பொண்ணுனு நினைச்சுட்டான். “ என்று கலாய்த்தார்.
அவனுக்கு நான் சீனியர் என்பது தெரியும். அப்புறம் என் வீட்டினரும் எனக்குதான் சப்போர்ட். என் வீட்டு ஆளுங்கதான் எனக்கு பலமே.
நான் பன்னிரெண்டாம் வகுப்பில் என்ன செய்தேன் என்று உனக்குத் தெரியாது இல்லையா?.
பதினொன்று , பனிரெண்டாம் வகுப்பு ஒரு தனியார் பள்ளியில் படித்தேன். டென்த் மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு சைக்கிள் டெஸ்ட் , சிலிப் டெஸ்ட் நடக்கும். வீட்டுக்கும் தாமதமாக விடுவர். எனக்கு டென்த் படிக்கும் போது ஒரு பொண்ணு பிரண்ட். நாங்கள் பேருந்தில் ஒன்றாகச் வீட்டுக்குச் செல்வோம்.
பேருந்தில் அமர்ந்திருந்தோம். ஐந்து மணிக்கு மேலாவதால் எல்லாருக்குமே பசி எடுக்கும். எங்களுக்கு தான். நான் சாப்பிடலாம் என்று அவளிடம் கூறினேன்.
“அக்கா வேணாம். ரொம்ப நேரமா அந்த காலேஜ் பசங்க நம்மள கிண்டல் செய்திட்டு இருக்காங்க. இப்ப சாப்பிட்டா அதுக்கும் எதாவது சொல்லுவாங்க. “
நானும் கவனித்தேன். அவளுடைய அசகவுரியத்தால் நான் “சரி மா. நாம டெஸ்ட் பேப்பர்ஸ் பார்ப்போம்.”
என்றதும் அவளும் சரி என்றாள். அவளும் நன்றாகப் படிப்பாள். அவள் அறிவியலில் ஐம்பது நாற்பத்தி எட்டு எடுத்திருந்தாள்.
நானும் எனக்கு கொடுத்திருந்த கெமிஸ்ட்ரிப் பேப்பரை எடுத்து அவளிடம் காண்பித்தேன். எழுபத்து ஐந்துக்கு எழுபத்தி நான்கு மார்க் எடுத்திருந்தேன்.
எங்களைக் கவனித்துக் கொண்டிருந்த அந்த இடியட்ஸ்ம் “ எங்களுக்கு கொஞ்சம் காட்டறது ?” என்று கமெண்ட் அடித்தார்கள்.
நான் எதுவும் செய்யவில்லை. எழுந்து அவர்களின் அருகில் சென்று “இந்தாங்க. பார்த்துக்கங்க” என்று எங்களது ஆன்சர் சீட்டை நீட்டி விட்டேன்.
அவர்களின் முகத்தில் தெரிந்த அதிர்வு …பிரைஸ்லஸ். அதை என்றுமே என்னால் மறக்க முடியாது. அவர்கள் பேசாமல் பேப்பரைப் பார்த்துவிட்டு “நல்லா படிங்க” என்று திருப்பிக் கொடுத்துவிட்டனர்.
பெண்களின் பயம் தான் அவர்களை சீண்ட தூபம் போடுகிறது.
அதற்குப் பிறகு அவர்கள் வாலாட்டவில்லை.
இதெல்லாத்தையும் விட இன்னொரு சம்பவம் எனக்கு ரொம்ப பிடிச்சது. ரிவெஞ்ச் மாதிரினு சொல்லலாம்.
பிளஸ் டூ மாணவர்களுக்கு பொதுத்தேர்வின் செய்முறைத் தேர்வு நடந்தது. எனக்கு இயற்பியல் செய்முறைத் தேர்வு. என் தோழிகளுடன் முடித்துவிட்டு
பேருந்தில் அமர்ந்திருந்தோம். நாங்க அனைவரும் மிகவும் களைப்பாக இருந்தோம். சில கல்லூரி மாணவர்களும் , வேறு ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் எங்களை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.
என் தோழிகள் பேருந்து எடுத்த பத்து நிமிடங்களில் வீடு வந்து விடும் என்பதால் இறங்கி விட்டனர். அதற்குப் பிறகு அரை மணி நேரம் நான் பயணம் செய்ய வேண்டும். அவனுங்க நிறுத்தவே இல்லை. ஷீ வைக் கூட கழற்றி காண்பித்து விட்டேன். அடங்கவில்லை . ஊர் வந்ததும் நான் இறங்கும் போது முறைத்துக் கொண்டே இருந்தேன்.
கல்லூரி மாணவன் ஒருவன் “ என்னடா இறங்கும் போது முறைச்சுட்டு போகுது? எதாவது பன்னிருமோ?” என்று சந்தேகத்துடன் வினவினான்.
அதற்கு மற்றொருவனோ “நாம என்ன இனிமே இந்த பஸ்ல வரவா போறோம்டா?” என்று அலட்சியத்துடன் சிரித்தான்.
நானும் ‘ இந்த பஸ்ல வந்தாதான?’ என்று நினைத்துவிட்டு அவர்களின் முகங்களை மனதில் பதிய வைத்தேன். அன்று முழுக்க எனக்கு கோபம். வீட்டிலும் வந்து நடந்ததை எல்லாம் கூறிவிட்டேன்.
ஆனாலும் மனதில் கோபம் மறையவில்லை. அவர்கள் என்றாவது என் கண்ணில் சிக்குவார்கள் என்று நம்பினேன்.
அதற்குப் பலன் அடுத்த வாரமே கிடைத்தது. காலையில் நான் பள்ளி செல்ல ஏறிய பேருந்தில் பின் புறத்தில் அவன் இருந்தான். நான் மற்ற பெண்கள் மாதிரி பேருந்தில் கூட்டத்தில் தொங்கிச் செத்தாலும் முன்னால்தான் நிற்பேன் என்ற ரகத்தைச் சேர்ந்தவள் பேருந்தின் நடுப்பகுதிக்குச் சென்றேன். அங்கு எனது தோழி இருந்தாள். ஜீனியர் தான். அவளுக்கு அடுத்த சீட்டில் அவன் அமர்ந்திருந்தான்.
‘யெஸ் இன்னிக்கு நீ காலி’ என்ற உறுதியுடன் ஜீனியரிடம் “என்ன சொன்னாலும் கண்டுக்காத” என்று கூறிவிட்டு அவளருகில் அமர்ந்தேன். அடுத்த அரைமணி நேரத்தில் அவனை டிசைன் டிசைனாக கலாய்த்து எடுத்துவிட்டேன்.
“காக்கா மாதிரி குரலை வச்சுகிட்டு நீ எல்லாம் என்னை கலாய்க்கிறியா?” ஆரம்பித்து ……………………………………………………………………………………………………………………………………… முடித்தேன்.
கெட்டவார்த்தை எல்லாம் பேசவில்லை. என்னால மூச்சு விடாமல் கெட்ட வார்த்தை பேசாமல் அருமையாகத் திட்ட முடியும்.
அதற்குப் பிறகு அவன் என்னை கலாய்த்த பேருந்து மற்றும் அவனை நான் கலாய்த்த பேருந்து இரண்டிலும் பார்க்கவில்லை. இறங்கும் போது அவன் முகத்தைப் பார்க்க வேண்டுமே….அடடா…
ஒரு வாரமாக இருந்த கோபம் அப்போது தான் தணிந்தது. பரம திருப்தியுடன் பள்ளிக்குச் சென்றேன்.
எனக்கு யாரா இருந்தாலும் ஒரு விஷயம் பிடிக்காது. முன்ன பின்ன தெரியாத பெண்களை வேண்டுமென்றே கேலி செய்வது. என்ன பத்தி பேச உரிமை இருக்கு?
உடனே ஒரு கேலி செஞ்சா கூட சீரியஸா எடுத்துக்குவியா? அப்படி இல்ல. எனக்கு நல்லா தெரிஞ்சவங்க என்னை செமையா கலாய்ப்பாங்க. அவங்களை எதுவும் சொல்ல மாட்டேன். அதுவும் வருந்துபடி சொல்லாமல் இருக்கும் வரை மட்டுமே.
“ரைட் இவள மட்டும் நான் முன்னாடி கலாய்ச்ச மாதிரி நேர்ல கலாய்ச்சா தொவைச்சு தொங்க விட்டுருவா. வொய் பிளட்? சேம் பிளட் ? கதையாகிடும். மண்டை பத்தரம் அப்படிங்கற மாதிரி காது பத்திரம் டா தேவ். “ நெஞ்சைத் தடவி விட்டுக் கொண்டவன் இப்போது தண்ணீர் குடித்தான்.
சரி இப்ப நான் மூன்றாம் வருடம் முடித்துவிட்டேன். இருபது வயது முடிவதற்குள் இளங்கலை முடித்துவிட்டேன். அடுத்தது பி.ஜி.
அலைவான்.....................