- Messages
- 65
- Reaction score
- 86
- Points
- 18
அத்தியாயம் -39
கண்ணாடி ஜன்னல்களின் வழியே சூரியஒளி காட்டின் பசுமை வழியே ஊடுருவி கசிந்து கொண்டிருந்தது. ஜன்னல்களின் திரைச்சீலையை மூடாதபடியால் மெது மெதுவாக அது ஊடுருவி தேவ்வின் முகத்தில் விழ ஆரம்பித்தது.
சிறிது நேரம் கழித்து அவன் முகத்தை அது சூடாக்க மெதுவாக முகத்தைச் சுழிக்க ஆரம்பித்தான். தீடிரென்று கண்களைத் திறந்தான். கைப்பேசியை எடுத்து மணியைப் பார்த்தான். மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
நன்றாக விழிப்பு வந்ததும் இரவு படித்தவை அனைத்தும் நினைவுக்கு வந்தது. படித்து முடிக்கையில் இரவு மணி இரண்டாகிவிட்டிருந்தது. வாட்ஸ் அப்பை உடனே திறந்து குறுஞ்செய்திகளை வாசிக்க ஆரம்பித்தான்.
அவன் எதிர்பார்த்த எதுவும் வரவில்லை. ஏமாற்றை உணர்ந்தான். ‘ இன்வெஸ்டிகேட் செய்ய டைம் எடுக்கும் . போய் பிரஷ் ஆகிட்டு சாப்பிட வெளியில் போலாம்.’ என முடிவெடுத்தவன் கைப்பேசியை சார்ஜரில் போட்டுவிட்டு குளிக்கச் சென்றான்.
குளிக்கம் போதும் அவன் மனதில் ஆயிரம் கேள்விகள்.
‘அந்த நாலு பேரும் இப்ப வாழ்க்கையில் என்ன செஞ்சிட்டு இருப்பாங்க? அவங்க கனவை நிறைவேத்தினாங்களா? மீனினி வாழ்க்கையில் ஏதாவது முன்னேற்றம் இருக்குமா? சாருமதி அறிவை கல்யாணம் செஞ்சுருப்பாங்களா? யாழரசிக்கு கல்யாணம் ஆகிருக்குமா?....’ இப்படி நொடிக்கு நொடிக்கு அவன் மனம் கேள்விகளால் சுழன்று கொண்டிருந்தது. ஷவரின் நீர்த்துளிகள் வடிகாலில் வட்டமாக சுழன்று மறைவதைப் போல் அவனது மனத்தின் கேள்விகள் மறையவில்லை.
பாத் ரோபை அணிந்தபடி வெளியே வந்தவன் கருநிறச் சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்து கொண்டான். பார்க் அவன்யூ பர்ஃப்யூமைத் தெளித்தவன் தலையையும் வாரிக் கொண்டான்.
கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான். ‘ நீ எப்ப இருந்து ஒரு விஷத்திற்கு இப்படி எக்சைடடு ஆகற? நேத்து வரைக்கும் இப்படி இல்லையே ? ‘ என்றும் தோன்றியது.
அதற்கு அவனே மீண்டும் மனதில் காரணம் சொல்லிக் கொண்டான் .’ ஹூயுமன் மைண்ட் எப்பவும் டைனமிக்.’
தன்னுடைய பர்ஸ் , போன் , கேமரா பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான். முன்பே வாடகைக்கு வாகனம் ஏற்பாடு செய்துவிட்டதால் அது காத்திருந்தது. வெளியில் சென்று திருப்தியாக சாப்பிட்டு முடித்தவன் மீண்டும் திரும்பி வந்தான்.
இன்று எங்கும் வெளியில் செல்லப் பிடிக்கவில்லை. அறையில் ஓய்வெடுக்கலாம் என்று முடிவெடுத்தான்.
பன்னிரெண்டு மணிவாக்கில் அவன் எதிர்பார்த்த போன் கால் வந்தது. தேவ்வும் ஆர்வத்தோடு எடுத்து “ஹலோ.” என்றான்.
மறுமுனையில் “தேவ்..அந்த அகாடமி இருந்தது உண்மை. அங்க அந்த பொண்ணு படிச்சது உண்மை. ஆனால் அகாடமியில் அவங்க கொடுத்த அட்ரஸில் இல்லை. போன் நம்பரும் மாத்திட்டாங்க. என்ன செய்யறது? இன்னும் பர்தரா டிக் செய்யறதா? வேற எதாவது குளு இருக்கா?”
தேவ்வுக்கு சிறிது ஏமாற்றம்தான் . அதை மறைத்தவன்
“ இருக்கு. அந்த பொண்ணு கூட மீனினி , அறிவழகன் , வெற்றிவேள் இந்த மூணு பேர் படிச்சாங்க. அவர்களில் யாரைவது பிடிச்சா ஏதாவது இன்ஃபார்மேஷசன் கண்டிப்பாகக் கிடைக்கும். நான் டீடெய்ல்ஸ் வாட்ஸப் செய்யறேன். “
“ஓகே தேவ்.”
“தேங்க் யூ.”
“புரோ நமக்குள்ள என்ன?” என்று மறுமுனையில் இருந்தவன் சிரித்தான். “சரி நீ எதுக்கு இவங்களத் தேடறனு தெரிஞ்சுக்கலாமா?”
“அவங்க ஒரு பொருள் ஒன்னு எங்கிட்ட இருக்கு. அதைத் திருப்பிக் கொடுக்கனும்.”
“ஓகே..நீ செண்ட் பன்னு. நான் பார்த்துகறேன்.”
“ஓகே.”
அழைப்பு துண்டிக்கப்பட்டது.
பால்கனியில் அமர்ந்தான் தேவ்.
‘இந்த டைரி ரொம்ப சீக்கிரமாகவே முடிஞ்ச மாதிரி இருந்தது. டெலிபிரேட்டா கட் செய்த மாதிரி இருந்தது. ‘
அவன் எண்ணைத்தை இடையூறு செய்யும் விதமாக அலைபேசி ஒலித்தது.
அவனது அம்மா லைனில் வந்தார்.
“ மாம்..”
“தேவ்.. சாப்டியா?”
“இது என்ன ஸ்டாண்டர்டு புரசிட்சர் மாதிரி எப்பவும் இந்தக் கேள்வியை விட மாட்டிங்க போல?”
மறுமுனையில் அவனது அம்மா நகைக்க ஆரம்பித்தார்.
“தேவ்..பூமியில் ஒரு குழந்தை பிறந்ததும் ஒரு தாயோட முதல் கடமை என்ன தெரியுமா?”
“ நீங்களே சொல்லுங்க?”
“ குழந்தைக்கு பால் கொடுக்கறது. அதாவது சாப்பிட வைக்கிறது. மனுசங்க பெண்மையை போற்றுவோம் அப்படினு இதை பெண்கள் கடமையாய் மாற்றிவிடுவார்கள். ஆனால் பறவைகள் , விலங்குகளில் தந்தைப் பறவையும் தாய்ப் பறவையும் மாத்தி மாத்தி காவல் காத்து உணவு கொடுப்பாங்க. அதுவும் குட்டியோ குஞ்சோ தானா வாழக் கத்துக்கற வரை தொடரும். ஆனால் எப்பவும் உலகத்தில் எல்லாவற்றிற்கும் எக்சப்சன் இருக்கு. தாயால் கொல்லப்படும் உயிர்களும் இருக்கு. ஆனால் பேரண்டஸ்க்கு தன் குழந்தை சாப்பிடறது முக்கியம். “
“போதும் தாயே.. ரொம்பத் தெளிவா புரிய வச்சுட்டீங்க. எப்படிமா சன் டீவில ஆரம்பிச்சு டிஸ்கவரில முடிக்கிறீங்க. இப்பதான் புரியுது. எனக்கு எதனால் அவள புடிக்க ஆரம்பிச்சுருக்கும்.”
“டேய் என்னடா சொல்ற?”
“ஜஸ்ட் நத்திங்க். டீஸ் செஞ்சேன்.”
“அம்மா?”
“சொல்லு?”
“அதுவந்து… என் பிரண்ட் எப்படி இருக்கா?”
“அத நீயே கேட்க வேண்டியதுதான?”
“இல்லை மா. அது நல்லாருக்காது. நானே அவள ஹர்ட் செஞ்சுட்டு நானே சமாதானமும் செஞ்சா அது குரூயலா இருக்கும்.”
“ஓகே. ஆனால் அவ நல்லா இல்லைனு மட்டும் என்னால் சொல்ல முடியும்.”
அலைவான்....................
கண்ணாடி ஜன்னல்களின் வழியே சூரியஒளி காட்டின் பசுமை வழியே ஊடுருவி கசிந்து கொண்டிருந்தது. ஜன்னல்களின் திரைச்சீலையை மூடாதபடியால் மெது மெதுவாக அது ஊடுருவி தேவ்வின் முகத்தில் விழ ஆரம்பித்தது.
சிறிது நேரம் கழித்து அவன் முகத்தை அது சூடாக்க மெதுவாக முகத்தைச் சுழிக்க ஆரம்பித்தான். தீடிரென்று கண்களைத் திறந்தான். கைப்பேசியை எடுத்து மணியைப் பார்த்தான். மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
நன்றாக விழிப்பு வந்ததும் இரவு படித்தவை அனைத்தும் நினைவுக்கு வந்தது. படித்து முடிக்கையில் இரவு மணி இரண்டாகிவிட்டிருந்தது. வாட்ஸ் அப்பை உடனே திறந்து குறுஞ்செய்திகளை வாசிக்க ஆரம்பித்தான்.
அவன் எதிர்பார்த்த எதுவும் வரவில்லை. ஏமாற்றை உணர்ந்தான். ‘ இன்வெஸ்டிகேட் செய்ய டைம் எடுக்கும் . போய் பிரஷ் ஆகிட்டு சாப்பிட வெளியில் போலாம்.’ என முடிவெடுத்தவன் கைப்பேசியை சார்ஜரில் போட்டுவிட்டு குளிக்கச் சென்றான்.
குளிக்கம் போதும் அவன் மனதில் ஆயிரம் கேள்விகள்.
‘அந்த நாலு பேரும் இப்ப வாழ்க்கையில் என்ன செஞ்சிட்டு இருப்பாங்க? அவங்க கனவை நிறைவேத்தினாங்களா? மீனினி வாழ்க்கையில் ஏதாவது முன்னேற்றம் இருக்குமா? சாருமதி அறிவை கல்யாணம் செஞ்சுருப்பாங்களா? யாழரசிக்கு கல்யாணம் ஆகிருக்குமா?....’ இப்படி நொடிக்கு நொடிக்கு அவன் மனம் கேள்விகளால் சுழன்று கொண்டிருந்தது. ஷவரின் நீர்த்துளிகள் வடிகாலில் வட்டமாக சுழன்று மறைவதைப் போல் அவனது மனத்தின் கேள்விகள் மறையவில்லை.
பாத் ரோபை அணிந்தபடி வெளியே வந்தவன் கருநிறச் சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்து கொண்டான். பார்க் அவன்யூ பர்ஃப்யூமைத் தெளித்தவன் தலையையும் வாரிக் கொண்டான்.
கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான். ‘ நீ எப்ப இருந்து ஒரு விஷத்திற்கு இப்படி எக்சைடடு ஆகற? நேத்து வரைக்கும் இப்படி இல்லையே ? ‘ என்றும் தோன்றியது.
அதற்கு அவனே மீண்டும் மனதில் காரணம் சொல்லிக் கொண்டான் .’ ஹூயுமன் மைண்ட் எப்பவும் டைனமிக்.’
தன்னுடைய பர்ஸ் , போன் , கேமரா பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான். முன்பே வாடகைக்கு வாகனம் ஏற்பாடு செய்துவிட்டதால் அது காத்திருந்தது. வெளியில் சென்று திருப்தியாக சாப்பிட்டு முடித்தவன் மீண்டும் திரும்பி வந்தான்.
இன்று எங்கும் வெளியில் செல்லப் பிடிக்கவில்லை. அறையில் ஓய்வெடுக்கலாம் என்று முடிவெடுத்தான்.
பன்னிரெண்டு மணிவாக்கில் அவன் எதிர்பார்த்த போன் கால் வந்தது. தேவ்வும் ஆர்வத்தோடு எடுத்து “ஹலோ.” என்றான்.
மறுமுனையில் “தேவ்..அந்த அகாடமி இருந்தது உண்மை. அங்க அந்த பொண்ணு படிச்சது உண்மை. ஆனால் அகாடமியில் அவங்க கொடுத்த அட்ரஸில் இல்லை. போன் நம்பரும் மாத்திட்டாங்க. என்ன செய்யறது? இன்னும் பர்தரா டிக் செய்யறதா? வேற எதாவது குளு இருக்கா?”
தேவ்வுக்கு சிறிது ஏமாற்றம்தான் . அதை மறைத்தவன்
“ இருக்கு. அந்த பொண்ணு கூட மீனினி , அறிவழகன் , வெற்றிவேள் இந்த மூணு பேர் படிச்சாங்க. அவர்களில் யாரைவது பிடிச்சா ஏதாவது இன்ஃபார்மேஷசன் கண்டிப்பாகக் கிடைக்கும். நான் டீடெய்ல்ஸ் வாட்ஸப் செய்யறேன். “
“ஓகே தேவ்.”
“தேங்க் யூ.”
“புரோ நமக்குள்ள என்ன?” என்று மறுமுனையில் இருந்தவன் சிரித்தான். “சரி நீ எதுக்கு இவங்களத் தேடறனு தெரிஞ்சுக்கலாமா?”
“அவங்க ஒரு பொருள் ஒன்னு எங்கிட்ட இருக்கு. அதைத் திருப்பிக் கொடுக்கனும்.”
“ஓகே..நீ செண்ட் பன்னு. நான் பார்த்துகறேன்.”
“ஓகே.”
அழைப்பு துண்டிக்கப்பட்டது.
பால்கனியில் அமர்ந்தான் தேவ்.
‘இந்த டைரி ரொம்ப சீக்கிரமாகவே முடிஞ்ச மாதிரி இருந்தது. டெலிபிரேட்டா கட் செய்த மாதிரி இருந்தது. ‘
அவன் எண்ணைத்தை இடையூறு செய்யும் விதமாக அலைபேசி ஒலித்தது.
அவனது அம்மா லைனில் வந்தார்.
“ மாம்..”
“தேவ்.. சாப்டியா?”
“இது என்ன ஸ்டாண்டர்டு புரசிட்சர் மாதிரி எப்பவும் இந்தக் கேள்வியை விட மாட்டிங்க போல?”
மறுமுனையில் அவனது அம்மா நகைக்க ஆரம்பித்தார்.
“தேவ்..பூமியில் ஒரு குழந்தை பிறந்ததும் ஒரு தாயோட முதல் கடமை என்ன தெரியுமா?”
“ நீங்களே சொல்லுங்க?”
“ குழந்தைக்கு பால் கொடுக்கறது. அதாவது சாப்பிட வைக்கிறது. மனுசங்க பெண்மையை போற்றுவோம் அப்படினு இதை பெண்கள் கடமையாய் மாற்றிவிடுவார்கள். ஆனால் பறவைகள் , விலங்குகளில் தந்தைப் பறவையும் தாய்ப் பறவையும் மாத்தி மாத்தி காவல் காத்து உணவு கொடுப்பாங்க. அதுவும் குட்டியோ குஞ்சோ தானா வாழக் கத்துக்கற வரை தொடரும். ஆனால் எப்பவும் உலகத்தில் எல்லாவற்றிற்கும் எக்சப்சன் இருக்கு. தாயால் கொல்லப்படும் உயிர்களும் இருக்கு. ஆனால் பேரண்டஸ்க்கு தன் குழந்தை சாப்பிடறது முக்கியம். “
“போதும் தாயே.. ரொம்பத் தெளிவா புரிய வச்சுட்டீங்க. எப்படிமா சன் டீவில ஆரம்பிச்சு டிஸ்கவரில முடிக்கிறீங்க. இப்பதான் புரியுது. எனக்கு எதனால் அவள புடிக்க ஆரம்பிச்சுருக்கும்.”
“டேய் என்னடா சொல்ற?”
“ஜஸ்ட் நத்திங்க். டீஸ் செஞ்சேன்.”
“அம்மா?”
“சொல்லு?”
“அதுவந்து… என் பிரண்ட் எப்படி இருக்கா?”
“அத நீயே கேட்க வேண்டியதுதான?”
“இல்லை மா. அது நல்லாருக்காது. நானே அவள ஹர்ட் செஞ்சுட்டு நானே சமாதானமும் செஞ்சா அது குரூயலா இருக்கும்.”
“ஓகே. ஆனால் அவ நல்லா இல்லைனு மட்டும் என்னால் சொல்ல முடியும்.”
அலைவான்....................