Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Archana Archu

New member
Messages
15
Reaction score
11
Points
3
"வாவ்"😯 இந்த இமோஜி தான் எல்லா பதிவுலையும் போட்டுறப்பேன். கதை அவ்வளவு
சூப்பர் கா😍😍😍😍.

முடிஞ்சுது சொன்ன அப்போ தான் படிக்க தொடங்கினேன். முழுமையா இந்த ஸ்டோரியே படிச்சதும் நல்லா தான் இருந்திச்சு ஒரு சில இடம் ரொம்ப அழுத்தமா இருந்திச்சு🙁.
அடுத்த பதிவு வர காத்திருந்தா ரொம்ப கஷ்டமாயிருக்கும்.

ஆண்டி ஹீரோவே உண்மை தெரியாத வரை வசைபாடாம இருக்க முடிலே🤣🤣 ரொம்ப திட்டு வாங்கிட்டான் எங்கிட்ட ருத் பேபி என்ன பண்ண என்கிட்டயிருந்து திட்டு வாங்கினதும் அவனே, சைட் அடிக்க வெச்சதும் அவனே😉.

கடைசிலே அபூ சொன்ன மாறியே ஆண்டி - ஹீரோ கிடைச்சுட்டான் ஆனா அவன் தான் கடைசி வர ஹீரோவா இருந்திருக்கான்.

அபூ, லியா ஒருத்தவங்க மேல ஒருத்தங்க வெச்சிருக்க பாசம் இருக்கே கண்ணு பட்டுருச்சு😍😍😍😍 இரண்டு பேருக்கும்.

நட்ஸூக்கு இப்படி ஆகிருக்க வேணா😔😔 எல்லாம் விதியும் ரைட்டரோட சதியும் சேர்ந்து இப்படி ஆகிடுச்சே. தூய்மையான அவளோட கள்ளம்கபடமற்ற பாசம் அது உயிர் பிரியுற தருணம் வர இருந்ததுக்கே அந்த பொண்ண ரொம்ப பிடிச்சுடுச்சு😇😇.

ஆதிமா என்ன கட்ஸூ, என்ன பவரு அவங்களே பார்த்த உடனே லியா புரிஞ்சுகிட்டது தான் செம்ம ஷாக்கே🙃🙃, அவங்க முடங்கி இருந்தது பலவீனத்தால இல்லன்னு சொன்னது அவங்க மனோ பலத்த காட்டுது.

கரிகாலன் பண்ணது எப்படி தான் அந்த தாய்கிழவிக்கு சரியா பட்டதோ😡😡😡 நல்லவேளை விதி சரியான தண்டனையே எல்லாருக்கும் போய் கொடுத்திடுச்சு😌😌😌😌😌.

விஷ்வா தான் ஹீரோன்னு நினைச்சுட்டு இருந்த என்னோட பிஞ்சு ஹார்ட்டு பஞ்சா பறந்திடுச்சு அந்த கேடியும் ,ருத் தாடியும் செஞ்ச வேலையே பார்த்து🤣🤣 என்ன பண்ண ருத் சொன்ன மாறி அவனாவது ஆரம்பத்திலே இருந்தே வில்லன் இந்த கேடி ஹீரோ மாறி இருந்தே எல்லா வேலையும் செஞ்சிருக்கு🤭🤭🤭🤭.

வைகை, வந்தனா😜😜 தலமையிலே
கடைசிலே எல்லா பிரச்சனையும் முடிஞ்சுது🤭🤭🤭.

ரொம்ப சூப்பரா இருந்தது கா கதை❤❤❤❤❤💗💗💗💗 இந்த ஹார்ட்டு ருத்-அபூ, லியா-கிருஷ்க்கு🙈🙈🙈 இந்த விஷ்வா எனக்கு எப்போமே கிருஷ் தான்😁😁😁🥰🥰🥰🥰.
 

Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
"வாவ்"😯 இந்த இமோஜி தான் எல்லா பதிவுலையும் போட்டுறப்பேன். கதை அவ்வளவு
சூப்பர் கா😍😍😍😍.

முடிஞ்சுது சொன்ன அப்போ தான் படிக்க தொடங்கினேன். முழுமையா இந்த ஸ்டோரியே படிச்சதும் நல்லா தான் இருந்திச்சு ஒரு சில இடம் ரொம்ப அழுத்தமா இருந்திச்சு🙁.
அடுத்த பதிவு வர காத்திருந்தா ரொம்ப கஷ்டமாயிருக்கும்.

ஆண்டி ஹீரோவே உண்மை தெரியாத வரை வசைபாடாம இருக்க முடிலே🤣🤣 ரொம்ப திட்டு வாங்கிட்டான் எங்கிட்ட ருத் பேபி என்ன பண்ண என்கிட்டயிருந்து திட்டு வாங்கினதும் அவனே, சைட் அடிக்க வெச்சதும் அவனே😉.

கடைசிலே அபூ சொன்ன மாறியே ஆண்டி - ஹீரோ கிடைச்சுட்டான் ஆனா அவன் தான் கடைசி வர ஹீரோவா இருந்திருக்கான்.

அபூ, லியா ஒருத்தவங்க மேல ஒருத்தங்க வெச்சிருக்க பாசம் இருக்கே கண்ணு பட்டுருச்சு😍😍😍😍 இரண்டு பேருக்கும்.

நட்ஸூக்கு இப்படி ஆகிருக்க வேணா😔😔 எல்லாம் விதியும் ரைட்டரோட சதியும் சேர்ந்து இப்படி ஆகிடுச்சே. தூய்மையான அவளோட கள்ளம்கபடமற்ற பாசம் அது உயிர் பிரியுற தருணம் வர இருந்ததுக்கே அந்த பொண்ண ரொம்ப பிடிச்சுடுச்சு😇😇.

ஆதிமா என்ன கட்ஸூ, என்ன பவரு அவங்களே பார்த்த உடனே லியா புரிஞ்சுகிட்டது தான் செம்ம ஷாக்கே🙃🙃, அவங்க முடங்கி இருந்தது பலவீனத்தால இல்லன்னு சொன்னது அவங்க மனோ பலத்த காட்டுது.

கரிகாலன் பண்ணது எப்படி தான் அந்த தாய்கிழவிக்கு சரியா பட்டதோ😡😡😡 நல்லவேளை விதி சரியான தண்டனையே எல்லாருக்கும் போய் கொடுத்திடுச்சு😌😌😌😌😌.

விஷ்வா தான் ஹீரோன்னு நினைச்சுட்டு இருந்த என்னோட பிஞ்சு ஹார்ட்டு பஞ்சா பறந்திடுச்சு அந்த கேடியும் ,ருத் தாடியும் செஞ்ச வேலையே பார்த்து🤣🤣 என்ன பண்ண ருத் சொன்ன மாறி அவனாவது ஆரம்பத்திலே இருந்தே வில்லன் இந்த கேடி ஹீரோ மாறி இருந்தே எல்லா வேலையும் செஞ்சிருக்கு🤭🤭🤭🤭.

வைகை, வந்தனா😜😜 தலமையிலே
கடைசிலே எல்லா பிரச்சனையும் முடிஞ்சுது🤭🤭🤭.

ரொம்ப சூப்பரா இருந்தது கா கதை❤❤❤❤❤💗💗💗💗 இந்த ஹார்ட்டு ருத்-அபூ, லியா-கிருஷ்க்கு🙈🙈🙈 இந்த விஷ்வா எனக்கு எப்போமே கிருஷ் தான்😁😁😁🥰🥰🥰🥰.
வாவ் வாவ் ரொம்ப அழகா இருக்கு கமெண்ட்ஸ்😍😍😍😍 பார்த்தேன் உங்க எல்லா வாவ்மே... ரொம்ப நன்றிமா.... ஒவ்வொரு யூடியும் பொறுமையா படிச்சது மட்டுமில்லாமல் அழகானவிமர்சனம் தந்திருக்கீங்க❤️❤️😍😍😍😍😍😘😘😘😘😘😘
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
வணக்கம் தோழமைகளே....

நான் திவ்யஶ்ரீ.....

வண்ணங்கள் போட்டியில் சாம்பல் நிறத்தில் கதை எழுதப்போகிறேன்.. வாய்ப்பளித்த நித்யா கார்த்திகேயன் அக்காவிற்கு என் நன்றிகள். கதை போடுறதுக்கு முன்னாடி ஒரு குட்டி டீசர் உங்களுக்காக....



டீசர்:

"அடடா... என் கண்ணே பட்டிடும் போலயே. பிரக்ஸ் அசத்துற?" என்றவளின் கழுத்தை தன் இருகைகளால் வளைத்து பிடித்துக் கொண்டபடி சிரித்தாள் அவளின் தங்கை அபூர்வா.


அபூர்வா சொன்னதை போல் பச்சை நிற பட்டில் தேவதைப் போல் ஜொலித்திருந்தாள் பிரகல்யா. மூக்கில் இருக்கும் வைரமூக்குத்தி மேலும் அவள் முகத்திற்கு அழகு சேர்க்க, இதழ்பிரித்து வெட்கத்தில் சிரிப்பவளை இமைமூடாமல் பார்த்த அபூர்வாவோ ஏக்கப் பெருமூச்சொன்றை விடுத்தாள்.


"ஏண்டி... பெருமூச்சு எல்லாம் பலமா இருக்கு?"


"அதுவா அக்கா... என் கல்யாணத்தை பத்தி நினைச்சு பார்த்தேன். அதான் எப்போ வரும்னு ரொம்ப ஏக்கமா இருக்கு." என்றவளைக் கண்டு இளநகை புரிந்தவள்,


"அதுக்கு இன்னும் இரண்டு வருசமாவது ஆகும். இன்னும் காலேஜ் முடிக்கலை, அதுகுள்ள கல்யாணத்தை பத்தி பேசுற?"


"ப்ச்... அது இல்லைகா. உனக்கு நார்மல் அரெஞ்சுடு மேரேஜ்கா. ஆனால் எனக்கு அப்படி கிடையாது. சும்மா ஆன்ட்டி ஹீரோ ஸ்டையில்ல மேரெஜ் நடக்கணும்." என்று கண்களை விரித்தவள், தனது முப்பத்திரண்டு பல்லையும் காட்ட, அவளை புரியாத பார்வை பார்த்தாள் அவளின் தமக்கை.


அபூர்வாவை பொறுத்தவரை பத்தாம் வகுப்பில் தொடங்கி, வாரமலர் மாதமலர் என்று எதையும் விடாமல் எதிர்மறை நாயகர்களின் கதைகளை விடாமல் படிப்பவளது மனதிலும் தனக்கும் இப்படி ஒரு திருமணம் நடந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனைக் கோட்டைகளை வளர்த்தவளுக்கு கனவில் கூட தன்னை திருமண மேடையிலிருந்து கடத்தி செல்வது போன்ற சொப்பனம் தான் தோன்றும்.


"என்னாச்சு பூர்வா. கதைகள் வேற. நிஜம் வேற" என்றவளின் பார்வையில் தன் தங்கையை பற்றிய கவலை அப்பட்டமாக தெரிந்தது.


"போ அக்கா. நார்மல்லா கல்யாணம் நடக்குறதுல என்ன த்ரில் இருக்கும். கிட்நாப் பண்ணி தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணுனாதானே வேற லெவல்ல த்ரில் இருக்கும்." என்று உற்சாகமாக கூறும் தன் தங்கையின் தலையிலேயே செல்லமாக கொட்டினாள்.


"போடி போய் தூங்குற வழியைப் பாரு." என்று அதட்டியவள், பின் நாளை நடக்கவிருக்கும் திருமணத்தை எண்ணிப் பார்த்தாள். நினைக்கும் போதே முகம் சிவந்தது, அது வெட்கத்தாலா? இல்லை தன் கணவனாக வருபவனை நினைக்கும் போதே தோன்றிய கர்வத்தாலா? என்று அவள் அறியவில்லை.


அன்று இரவு அனைவரும் உறங்கும் வேளையில் அவள் கைபேசி சிணுங்க, அதிலிருந்த குறுஞ்செய்தியை கண்டு அதிர்ச்சி பயம் வெட்கம் என்று பல்வேறுப்பட்ட உணர்ச்சிகள் அவள் முகத்தில் ஒரு சேரத்தோன்ற, சத்தமின்றி மண்டபத்தின் பின்புறம் சென்றிருந்தாள் பிரகல்யா.
அவள் கண்களோ அவ்விருட்டில் சுற்றும் முற்றும் ஆர்வத்தோடு, அவனைத் தேடத் தொடங்கியிருக்க,


"என்னதான் தேடுறியா?" என்றவனின் அழைப்பில் உடலில் ஒருவித சிலிர்ப்பு தோன்ற, அவனையே இமைமூடாமல் பார்த்தாள்.


மெல்ல அவளின் அருகே அடியெடுத்து வைத்தவனோ, அழுத்தமான பார்வை பார்த்தான். அவனது இதழ்களிலே முறுவல் பூத்திருந்தது. அந்த முறுவலைக் கண்டு தானும் சிரித்தவள் அறியவில்லை அந்த முறுவலின் பின் ஒளிந்திருக்கும் ரகசியத்தை.


அவளின் அருகே நெருங்கியவன் பெண்ணவளின் கண்களையே ஆழமாக பார்க்க, படபடத்த நெஞ்சினை கட்டுப்படுத்த இயலாமல் தவித்தாள் பிரகல்யா.


"பயப்படுறியா?" என்றவனின் கேள்வியில் "இல்லை" என்று மறுப்பாக தலையாட்ட, பின்னிருந்து அவளது மூக்கை மயக்கமருந்தால் நிரம்பிய கைக்குட்டைக் கொண்டு அடைத்திருந்தது முகமூடி அணிந்த ஒருவனின் கை.


இவை அனைத்தும் அவள் சுதாகரிக்கும் முன் நடந்துவிட குழம்பிப் போனவள், "ஏன்?" என்பது போல் தன் முன் நின்றவனை வலி நிறைந்த பார்வை பார்க்க, தன் கண்களின் அழுத்தத்தைக் கூட்டியவனோ,


"பயப்படுடி..." என்று ஆக்கிரோசமான குரலில் கத்த, மயக்கமருந்து செலுத்திய அந்த முகமூடி அணிந்தவனின் கைகளின் மீதே மயங்கி சரிந்தாள் பிரகல்யா.


மயங்கியவளை காரில் ஏற்றச் சொல்லி தன் பார்வையாலே கட்டளையிட்டவன், அங்கிருந்து தனது அழுத்தமான பார்வையை செலுத்தியபடி நகர்ந்தான் ருத்ரஜித்.


கல்யாண மண்டபத்தின் பெயர்பலகையோ காற்றில் அசைந்தாடிக் கொண்டிருக்க, அதில் ருத்ரஜித் வெட்ஸ் பிரகல்யா என்று பிரகாசமாக மின்னிக் கொண்டிருந்தது மணமக்களது பெயர்கள்.


வேய்ந்தனின் ஆட்டம் விரைவில்........

கருத்துக்களை பதிய,

Adeii nee thana da mapilai.. neeye ponna thukura oru vela aburva pesinatha ketu irupano.. apdi irunthalum aburva va thana kidnap pani irukanum😒😒
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
வேய்ந்தனனின் வல்லினம்

View attachment 30

1.வல்லினம்

ஆடிக்கார் தொடங்கி லம்போர்கினி, பென்ஸ், லேண்ட்ரோவர், ஜாகுவார் என சீரான இடைவெளியில் உயர்ரக கார்கள் அவ்வரங்கத்தை நோக்கி வந்த வண்ணம் இருந்தது. நிலவொளியிடம் போட்டி போட்டபடி அவ்விடம் முழுவதும் கண்கவர் விலையுயர்ந்த மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க, ஒவ்வொரு தொழிலதிபதிர்களும், முக்கிய புள்ளிகளும் தங்களுக்கே உரிய மிடுக்குடன் காரிலிருந்து இறங்கி வர, அவர்களை அழகாக வரவேற்றது சிவப்பு நிற கம்பளம் மட்டுமல்ல, பத்திரிக்கை நிருபர்களும், புகைப்பட கலைஞர்களும் தான்.


பளிச் பளிச்சென்று அவர்களெடுக்கும் புகைப்படங்களின் சத்தங்கள் அவ்விடத்தினை நிரப்பியது. தொழில் துறையில் சாதித்தவர்களுக்காக நடத்தப்படும் பிரத்யேக விருது வழங்கும் விழா அது. பெரும் பொருட்செலவில் மிளிர்ந்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட மேடையை சுற்றிலும் உள்ள வட்ட வடிவ மேசையும், வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்த நாற்காலிகளிலும், முக்கிய புள்ளிகளின் பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருந்தது.


அரங்கத்தின் கடைக்கோடிகளில் பொதுமக்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு வருகைப்புரிந்த தொழிலதிபர்கள் வருகைகள் ஒவ்வொன்றும் திரையில் ஓடிக்கொண்டிருக்க, அங்கிருந்த அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது அவன் ஒருவனுக்காக மட்டுமே. இதோ விழாவும் தொடங்கியது. ஆனால் அந்நாயகனை மட்டும் காணவில்லையே? என்ற எதிர்பார்ப்பு அப்பட்டமாக தெரிந்தது அனைவரது முகத்திலும்.


முதல் ஒரு சில விருதுகள் வழங்கப்பட்டது. அதன்பின் நடனமும் நடந்திருந்தது. இவையனைத்தையும் நேரடி ஒளிபரப்பில் வெகுநிதானமாக பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அவனது இரு பக்கமும் பெண்கள் அவனது தோள்பட்டையை அழுத்தி மசாஜ் செய்த வண்ணமிருக்க, அவனின் முகத்திலோ சிறு சலனமுமின்றிக் குடிக்கொண்டிருந்தது புன்னகை.


"பாஸ்.... பாஸ்." என்று கூறிக்கொண்டே அந்த ஐந்து நட்சத்திர அறையில், நிதானமாக அமர்ந்திருந்த தனது முதலாளியை காண விரைந்து வந்தான் அவனின் பி.ஏவான வைகை செல்வன்.


உள்ளே வந்தவனுக்கோ தலை சுற்றாத குறைதான். அரைமணி நேரம் முன்பு, பார்த்த அதே நிலையிலேயே மேல்சட்டையின்றி அமர்ந்திருந்தான் அவன். குறும்பு தவழும் அதே கண்கள் கொண்டு வைகையின் மீது தன் பார்வையை பதித்தவன், "சொல்லு வைகை?" என்றான் வெகு நிதானமாக.


"பாஸ் ஃபங்சன் பாஸ்? உங்களுக்கு தான் அவார்டு கொடுக்குறாங்க?" என்று சிறு தயக்கத்துடன் எடுத்து உரைத்தவன் மனமோ, 'இவரு உட்கார்ந்திருக்க தோரணையே சரியில்லையே. என்ன வில்லங்கம் பண்ண போறாரோ?' என்று தீவிரமாக தனக்குள்ளே யோசிக்கவும் செய்தது.


"சோ வாட்?" என்று இரண்டே வரியில் அவன் முடித்துக் கொள்ள, அவனுக்கோ 'அய்யோ' என்றானது.


அவன் வருவானா? இல்லையா? என்று ஆயிரத்தெட்டு அழைப்புகளை ஏற்று, பேசியவன் அவன் அல்லவா? இனி சமாளிக்கும் தெம்பு தனக்கு இல்லை, என்று தெரிந்தவனோ, நின்னையே சரணடைந்தேன் என்று சொல்லாமல் தனது முதலாளியான அவன் முன்பே சரணடைந்து விட்டான்.


"பாஸ் ஃபங்சன் மேனேஜர் கால் பண்ணி கேட்குறான். இன்னும் கொஞ்ச நேரத்தில, உங்களுக்கு அவார்டு தரப் போறாங்களாமாம்?"

"அவனை வர சொல்லு வைகை." என்று வெகு நிதானமாக கூறியவன் வேறு எதுவுமே பேசவில்லை.


வைகையும் அவன் சொன்னதை தட்டாமல் செய்தவன் அழைப்பை விடுத்து கூறியிருக்க, அடுத்த பத்தாவது நிமிடம் மேனேஜர் அவ்விடம் வந்து நின்றான். விழா நடக்கும் அருகே இருந்த ஐந்து நட்சத்திர விடுதி என்பதாலும், அவன் கூறி வராமல் போனால்? என்ன நடக்கும் என்பதை நன்கு உணர்ந்ததாலும் அனைத்து வேலைகளுக்கு, நடுவில் ஓடோடி வந்திருந்தான் அவன்.


அவன் வருகையை வெளியே உள்ள சிசிடிவியின் உதவியோடு கண்ட வைகைக்கோ சற்று கவலையாக இருந்தது. 'பாவம்டா நீ' என்று மனதில் உச்சுக் கொட்டிக் கொண்டான்.


ருத்ரஜித் கண்களாலே அவனை உள்ளே அனுப்பச் சொல்ல, வைகையும் அவனை உள்ளே அழைத்தவன், நடப்பதை அமைதியாக நின்றுக் கவனிக்கத் தொடங்கியிருந்தான்.


ருத்ரஜித் அமர்ந்திருந்த தோரணையைக் கண்டு அதிர்ந்த மேனேஜரோ, "ருத்ரா சா....ர்" என்று தயங்கியபடி அழைக்க, அவனை தன் இரு விழிகளால் பொசிக்கியிருந்தான் ருத்ரஜித்.


"என்ன மேனேஜர், பேர் சொல்ற அளவுக்கு வளர்ந்திட்டீங்களோ?" என்று அலட்சியப் பார்வையில் பார்க்க, அவனுக்கோ உள்ளுக்குள் கிலி பரவியது.


"சார்ரும் சொன்னேன் சா..ர்" என்றான் மனம் பதைபதைக்க.


"ஓ.. என்னையவே எதிர்த்து பேசுறியா?" என்றவன் அழுத்தமான பார்வையை அவன் மீது செலுத்தியிருந்தான்.


"அப்படி இல்லைங்க சார். இன்னும் கொஞ்ச நேரத்தில, அவார்டு தராங்க சார். ப்ளீஸ் ரெடியாகி வாங்க சார்." என்று பயத்துடன் விழுந்தது அவனின் வார்த்தைகள்.


"ம்ம்ம் அப்போ தயார்படுத்து, மிஸ்டர்...." என்று அவன் வேண்டுமென்றே இழுக்க,


"மனோகர்... அதான் என் பேரு சார்." என்று தன்மையாக அவன் எடுத்துரைத்தான்.


"வாட்எவர், என் சர்ட், கோட் எடுத்துப் போட்டுவிடு." என்று கட்டளையாக அவன் எடுத்துரைக்க, அதிர்ந்து போய் பார்த்தான்.


"என்ன பார்க்குற, போ." என்றவன் அடிக்குரலை உயர்த்தியிருந்ததில் அன்னிச்சையாக நகர்ந்தது அவனின் கால்கள். பஞ்சு மெத்தையில் அழகாய் விரிக்கப்பட்டிருந்த சட்டையை கையில் எடுத்தவன் அவனது முறுக்கேறிய தேகத்தில் அணிவித்தான். அதன்பின் அவன் கைகளை விரிக்க, கோட்டை அணிவித்தவன், சட்டையை சரியாக பெல்ட்டின் உள்ளே அனுமதித்திருந்தான்.


அங்கிருந்த இரு பெண்களும் தங்களுக்கு அவ்வாய்ப்புக் கிடைக்கவில்லையே! என்று ஏக்கப் பெருமூச்சொன்றை விடுத்துக் கொண்டிருக்க, வைகை அங்கு நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி நின்றான்.


"ஷூ எடுத்துட்டு வா." என்றான் மீண்டும் கட்டளையாக.


அதில் கூனியவன், அவனை அதிர்ச்சியோடு பார்க்க, அவனது கண்களோ அதே கட்டளையை பிறப்பித்தது. வேறு வழியின்றி அவன் சொன்னதை செய்தான் மனோகர்.


"ஷூ யாரு உங்க அப்பனா வந்து போட்டுவிடுவான்." என்று எகத்தாளமாய் வந்து விழுந்தது ஆணவனின் வார்த்தைகள்.


மனோகரோ, பல்லைக் கடித்தவன் வேறு எதுவும் பேசாது அவன் கூறியதை செய்ய, அங்கிருந்த இரு யுவதிகளும் அவனைக் கண்டு நக்கலாகச் சிரித்தனர். அவமானமாக இருந்தது அவனுக்கு. கண்களோ கலங்கியது. அடிபணிந்து நடப்பவனைக் கண்டு ஏளனப் புன்னகையிட்டான் நம் நாயகன்.


"ம்ம்ம் எந்திரி. இங்கிருந்து போ." என்றான் கர்ஜனையோடு.


விட்டால் போதுமென்று நினைத்தவனோ, "சரிங்க சார்." என்று விரைந்து அங்கிருந்தோட, செல்லும் அவன் மனமோ ரணமாக வலித்தது. ஏழு வருடம் முன்பு அவன் இருந்த நிலையை நினைத்தும், தற்போது இருக்கும் நிலையையும் எண்ணியவனால் அழ மட்டுமே முடிந்தது. கடந்த சில வருடமாக அடி மட்டுமே கண்டவன் அல்லவா! அவன். அவனின் இந்நிலைக்கு காரணம் சாட்சாத் நம் நாயகன் மட்டுமே.


விழா மேடையில். தொகுப்பாளரும், தொகுப்பாளினியும் விழாவினை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தனர்.


"அடுத்ததாக நம்ம வழங்க போற விருது யாருக்குனா? இளம் தொழிலதிபருக்கான மிகசிறந்த விருது." என்று தொகுப்பாளர் கூறினார்.


" இருங்க இருங்க. அவரை பத்தி நான் தான் சொல்வேன். தொழில் துறையில் வந்த ஏழே வருடத்தில் தனக்கான இடத்தை பிடித்தவர். அவரு நின்னா டிரெண்டு, நடந்தா டிரெண்டு ஆமாங்க நம்ம சோசியல் மீடியாவின் மிக பிரபலமான ஸ்டார் அவர்தான். இளம்பெண்களின் மனதை திருடும் மாயக்காரர். என்ன கேர்ள்ஸ் எல்லாரும் ரெடியா?" என்று தொகுப்பாளினி பிரியலேகா மேடையில் கூற, ஆங்காங்கே இருந்த இளம் யுவதிகளோ, "ருத்ரா ருத்ரா" என்று கரகோஷம் எழுப்பினர்.


"அடடா சொல்லாமலே கண்டு பிடிச்சுட்டீங்க. அந்த விருதுக்கு சொந்தக்காரர் நன் அதர் தென் மிஸ்டர் ருத்ரஜித்." என்று கண்கள் மின்ன தொகுப்பாளினி எடுத்துரைக்க, அனைவரும் அவனது வருகையை எதிர்பார்த்தபடி காத்திருக்க, தனக்கே உரிய தோரணையில் சிவப்பு வர்ண கம்பளத்தில் நடந்து வந்தான் ருத்ரஜித்.


அலைஅலையான கேசமும் அவனோடு சேர்ந்தாட, குறும்பு மின்னும் கண்கள், முகத்தில் தவழும் புன்னகை, அப்புன்னகையை மறைக்கும் கருந்தாடி என கருப்புநிற சட்டையும், சாம்பலும், அரக்கும் கலந்த வண்ணம் இருக்கும் கோர்ட் சூட்டில் மிக கம்பீரமாக நடந்து வந்தான் ருத்ரஜித். ஆணவனின் நடையும், வசிகரிக்கும் புன்னகையும், கட்டுக்கோப்பான உடல்வாக்கும் அனைவரையும் அவன் புறம் இழுக்க, திரையில் தெரிபவனையே மெய்மறந்தபடி பார்த்தனர் அனைவரும்.


அவனை வளைத்து வளைத்து புகைப்படக் கலைஞர்கள் படம் பிடித்துக்கொள்ள, புன்னகையோடு அவர்களை கடந்து வந்தான் ருத்ரஜித்.


"நம் விழாவின் நாயகன். தன்னடக்கத்தின் மறுபெயர், டிரெண்டிங் சூப்பர் ஸ்டார். இளம் தொழிலதிபர் மற்றும் ஆதிமந்திரா நிறுவனத்தின் தலைமை நிறுவனர் மதிப்பிற்குரிய ருத்ரஜித் அவர்களை அன்புடன் மேடைக்கு அழைக்கிறோம்." என்று வரவேற்றார் தொகுப்பாளர். அந்நேரம் கூட்டத்தில் உள்ள அனைவரின் கரகோஷமும் அரங்கத்தை நிரப்பியது.


மேடையில் ஏறியவனோ, புன்னகையோடு அனைவரையும் கண்டு கை அசைக்க, அங்கு குழுமியிருந்த அனைவரின் கண்களும் அவன் மீதுதான். அதுவும் இளம்பெண்கள் அவனைக் கண்டு "ருத் சோ க்யூட்" என்று ஆர்ப்பரித்தபடி அமர்ந்திருந்தனர். மேடையில் ஏறியவன் அங்கிருந்த பெரியவர்களுக்கு மரியாதை நிமித்தமாக கை கூப்பி வணக்கம் வைத்தான்.


"என்ன பணிவு, என்ன பண்பு" என்று பெருமையாக அனைவரும் பேச, அங்கு மூலையில் நின்ற மனோகருக்கு வயிறெல்லாம் எரிந்தது. சற்று முன்பு அவன் முன்னே கூனிக்குறுகியவன் அவன்தானே. கண்கள் கலங்கிப் போயிருந்தவனுக்கு அங்கு நிற்கவே இயலவில்லை.


ருத்ரஜித்தின் புகைப்படம் திரையில் நிரம்பியிருக்க, அவனது கைகளில் இளம் தொழிலதிபருக்கான விருது வழங்கப்பட்டது. அதை ஏற்றவன் தன் அக்மார்க் புன்னகையை பரிசளித்தான்.


"என்ன மனோகர், ச்சே ச்சே சர்வேஷ் மனோகர்.... வயிறு எல்லாம் புகையிது போல.. ஏழு வருசத்துக்கு முன்னாடி நீங்க வாங்குன அவார்டு. இப்போ அதே இடத்துல சாதாரண எடுபிடி மேனேஜரா நிக்குற உங்க நிலைமை. பார்க்கவே கஷ்டமா தான் இருக்கு." என்று வேண்டுமென்றே அவனின் அருகே வந்த வைகை பேச, அவனையே உறுத்து விழித்தான் மனோகர்.


'நீயெல்லாம் பேசுற அளவுக்கு என் நிலைமையை மாத்துனதே, உன் பாஸ் தான்டா.' என்று மனதில் நினைத்தானே தவிர, வாய் திறந்து எதுவும் பேசவில்லை. அப்படி பேசினால் நடக்கும் விபரீதம் அவன் அறிவான் அல்லவே.


ஏழு வருடம் முன்பு, ருத்ரஜித் முன் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்தவன் கூறிய வார்த்தைக்குத்தானே இந்நிலையில் இருக்கிறான் அவன்.


"தம்பி இந்த பிஸ்னஸ் எல்லாம் தெரிஞ்சுக்குற வயசு உனக்கு இல்லை. ஏன் என் கம்பெனிக்கு ஒரு கிளர்க்கா இருக்க கூட உனக்கு தகுதி இல்லை. போ போய் ஏரியா பசங்ககூட சேர்ந்து கிரிக்கெட் விளையாடு. அதுதான் உன் ஃபேஸ்க்கு செட்டாகும். வந்துட்டான் பொடி பையன்." என்று சர்வசாதாரணமாக அவன் கூறிய வார்த்தைகளை இன்று அவனுக்கே திருப்பியிருந்தான் ருத்ரஜித்.


அன்று இருபத்தி இரண்டு வயது இளைஞனாக அனைவரின் முன்பு அவமானப்பட்டவன், இன்று தனது இருபத்தி ஒன்பது வயதில் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் வல்லமைக் கொண்டவனாக உயர்ந்துள்ளான் என்றால், அனைத்திற்கும் அவனது திறமை மட்டுமே காரணம்.


"சார் இந்த தருணத்துல நீங்க சொல்லவிரும்புறது சார்?" என்று பிரியலேகா ஆவலோடு கேட்க, மைக்கினை பெற்றவன்,


"விருது வழங்கிய ஜேஆர் அவார்ட்ஸ்க்கு நன்றி. அப்புறம் எப்போதும் என்னை உற்சாகப்படுத்தும் உங்க அனைவருக்குமே நன்றி." என்றான் புன்முறுவலோடு.


"ருத் சார். ரொம்ப சார்ட்டா முடிச்சுட்டீங்க.. இளம் வயதிலேயே சாதித்தவங்க நீங்க, இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?" என்று தொகுப்பாளர் ஆர்வத்தோடு கேட்டார்.


" உங்களை நம்புங்க. உங்களை யாரவது டீமோட்டிவேட் பண்ணாலும் உங்களை மட்டுமே நம்புங்க. ஒரு நாள் இந்த உலகம் உங்களை திரும்பி பார்க்கும்." என்று அவன் கூறவும் கரகோஷம் எழுந்தது.


"சார் அப்படியே என்னை பத்தி ஒரு வார்த்தை சொல்லுங்க சார்." என்றாள் பிரியலேகா பெரும் ஆர்வத்துடன்.


"ரொம்ப அழகா தொகுத்து வழங்குறீங்க மிஸ் பீயூட்டிபுல்." என்றவன் அக்மார்க் புன்னகையை உதிர்க்க, "அய்யய்யோ பறக்குறேனே." என்று சிறகே இல்லாமல் பறந்தாள் தொகுப்பாளினி பிரியலேகா.


"சார் ஒரு செல்ஃபி?" என்று பிரியலேகா கேட்க, "கண்டிப்பா.. வாங்க." என்று கூறியவன் தொகுப்பாளர்கள் இருவரிடமும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டான்.


பின் விருதினை கையில் ஏந்தியவன் கம்பீரமாக படிகட்டிலிருந்து இறங்க, அவன் கீழே இறங்கியதும் அவார்டை வாங்கிக் கொண்டான் வைகை. மனோகரை நக்கல் பார்வை பார்த்த ருத்ரஜித்தோ, அங்கிருந்த அவனுக்கென்ற இருக்கையில் அமர்ந்துக் கொண்டான்.


"ஹலோ மிஸ்டர் ருத்ரஜித்." என்று அவனிடம் தேடி வந்து கைக்கொடுத்துவிட்டு சென்றனர் அனைவரும். அதில் ஒருவரது மகளோ ருத்ரஜித்தை அனுஅனுவாக ரசித்துக் கொண்டிருந்தாள்.


"ஹலோ ருத்ரஜித். சீ இஸ் மை டாட்டர் ஸ்வரா." என்று அவர் அறிமுகப்படுத்த கருப்பு நிற கவுன் அணிந்திருந்த பெண்ணவளோ, "ஹாய் ருத்" என்று வசிகரிக்கும் புன்னகையை உதிர்த்தாள்.


அதை கண்டும் காணதவன் போல், "ஹாய்." என்று மட்டும் கூறியவன் நிகழ்ச்சியை கவனிக்கத் தொடங்கியிருந்தான்.


வைகைக்கோ ஸ்வராவைக் கண்டு பத்திக்கொண்டு வந்தது. 'போடி போ.... இன்னைக்கு உனக்கு இருக்கு. டன் கணக்குல வழியவா செய்யுற?' என்று மனதில் நினைத்துக் கொண்டபடி சற்று தள்ளி அமர்ந்துக் கொண்டான்.


விழா இனிதே முடிவடைய, வந்திருப்பவர்களுக்காக இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ருத்ரஜித்தோ, முக்கிய புள்ளிகளுடன் பேசிக்கொண்டே ஓயினை பருகிக் கொண்டு இருந்தான். ஸ்வராவோ மதுக்கோப்பையுடன் அவனையே வலம் வந்தபடி இருந்தாள். சரியாக அவன் தனியே வருவதற்காக காத்துக் கொண்டிருக்க, ருத்ரஜித்தோ புகைப்பதற்காக தனியே செல்ல, அவன் பின்னே சென்றாள் ஸ்வரா.


"எங்க இவரு..?" என்று நாலாபுறமும் அவள் கண்கள் தேட, அவளது இடையை வளைத்து தன்புறமாக மறைவான இடத்தில் இழுத்துச் சென்றான் ருத்ரஜித்.


"மேடம் என்ன தான் தேடுறீங்களோ?" என்று அவளின் காதுமடலில் இதழ் குவித்தவன் கேட்டதிலும், அவனது நெருக்கத்திலும் இன்ப அதிர்ச்சி அடைந்தவள், ஆர்வமாக அவனையே பார்த்தாள்.


"வாவ் ருத் பேபி. யூ லூக் சோ ஹேண்ட்சம்." என்று குளறியவளின் கைகளோ அவனது கழுத்தை வருடியது.


"யூ லுக் சோ ஹாட்." என்றவனது உதடுகள் அவளின் கழுத்தில் பதிய, தன் நாக்கை கடித்தவள், அவனது பின்னந்தலையை தன் இரு கைகளால் இதமாகக் கோர்த்துக் கொண்டாள்.


"ருத் பேபி. ஐ ரியலி லவ் யூ. நம்ம மேரேஜ் பண்ணிக்கலாமா?" என்றவள் இன்ப அவஸ்தையில் நெளிந்துக் கொண்டே கேட்க, பெண்ணவளின் கழுத்தில் உதடு குவித்திருந்தவன் தன் பல் படும் அளவிற்கு கடித்தான். வலியில் அவள் துள்ள, தன்னிடம் பிரித்து பொத்தென்று கீழே உதறியிருந்தான் ருத்ரஜித்.


"ஹே நீ என்ன வேம்பயர்ரா....? இப்படி கடிக்குற பைத்தியக்காரா?" என்றாள் வலியில் துடிதுடித்தபடி.


அடுத்தநொடி அவளது கழுத்தை பிடித்தவன், தன் உயரத்திற்கு அவளை தூக்கியிருக்க, அதில் மூச்சுத் திணறினாள்.


"ஹேய் ஸ்வீட் ஹார்ட் ஏன் என்னாச்சு?" என்று கூறிக்கொண்டே அவளது கழுத்தை விட, இருமினாள் பெண்ணவள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்த வண்ணம் இருந்தது. குரல்வலையோ ரணமாக வலித்தது.


"அச்சச்சோ பேபி. இப்போ சொல்லு கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்று அவளை ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டே கேட்டதில் பதறியவளுக்கு உடல்நடுக்கம் எடுக்க, "ஆளைவிடுடா சாமி." என்று கூறிக்கொண்டே அங்கிருந்து பிழைத்தால் போதுமென்று ஓடினாள்.


பஃபே உணவுகளை சுவைத்த வைகையோ, அவள் ஓடுவதைக் கண்டு, மெலிதாக புன்னகைத்துக் கொண்டவன், உணவினை உண்ணுவதில் கவனம் செலுத்தியிருந்தான்.


பின் அங்கிருந்து ருத்ரஜித் செல்ல, அவன் பின்னே தட்டோடு சென்றான். "நான் கார்ல இருக்கேன் வைகை. நீ சாப்பிட்டு வா." என்றவனின் சொல்லுக்கு மறுபேச்சின்றி "சரிங்க பாஸ்" என்றவனோ மீண்டும் உண்ணும் பணியினை செவ்வென செய்தான்.


தனது பதினாறாம் அகவையிலிருந்தே ருத்ரஜித்துடன் இருப்பவன் வைகை. அவனது அந்த வயதில் தான், அவனின் தந்தை குடிபோதையில் வைகையின் அன்னையினை கொல்ல முயற்சித்தார். அந்நொடி தன் அன்னையை காக்க அவரைப் பிடித்து சுவற்றில் தள்ளியிருந்தான் வைகை. அந்த நொடி அவர் தலையில் பட்ட கூர்மையான ஆணி அவரின் உயிரை காவு வாங்க, பதறியவன் வீட்டைவிட்டு ஓடினான்.


போலிஸிடம் சிக்காமல் அவன் தப்பிக்க பார்க்க, அன்று அவன் மறைந்த இடம் தான் ருத்ரஜித்தின் வீடு. அவனை யாரென்று விசாரித்து, அவன் செய்த செயல் தெரிய, பதினெட்டு வயது நிரம்பிய ருத்ரஜித்தான் அவனுக்காக தன் தந்தையிடம் பேசி, அவனைக் காப்பாற்றியிருந்தான். அதன்பின் அவன் படிப்பு முதற்கொண்டு உதவியவன் ருத்ரஜித்தே. படிப்பு முடிந்ததும் ருத்ரஜித்திற்கு தனிப்பட்ட பி.ஏ வாக மாறிப்போனான் வைகை.


செய்நன்றி உணர்வு என்றுமே வைகைக்கு உண்டு. ஆதலால் தான் ருத்ரஜித் என்ன செய்தாலும் துணையாக இருந்தான். வெளி உலகம் மற்றும் வீட்டை பொறுத்தவரை அவனைவிட நல்லவன் இவ்வுலகில் யாருமில்லை. ஆனால் அவனுள் ஒளிந்திருக்கும் அக்மார்க் வில்லத்தனத்தை அறிந்த ஒரே ஒருவன், வைகைசெல்வன் மட்டுமே.


உணவை உண்ட வைகையோ விரைந்து வெளியே வர, அதே சமயம் காரைத்திறந்தபடி வெளியே வந்தாள் இளம் நங்கை ஒருத்தி. அவளைக் கண்டதுமே வைகைக்கு கோபம் துளிர்த்தது. ருத்ரஜித்திடம் பிடிக்காத ஒரே விசயம் இது மட்டும் தான். கோபத்தோடு காரில் ஏறிக்கொண்டான் வைகை.


அவர்கள் பின்னே பாதுகாவலர்கள் புடை சூழ வர, ருத்ரஜித்தோ தனது கன்னத்தில் படிந்த லிப்ஸ்டிக் கரையை அகற்றிக் கொண்டிருந்தான் காரில் இருந்தபடியே.


முன் கண்ணாடி வழியாக பார்த்த வைகைக்கோ முகம் கடுகடுவென இருந்தது. அதை கண்டுக்கொண்ட ருத்ரஜித்தோ, "என்னடா ரொம்ப பொறாமையோ?" என்றான் நக்கலாக.


"பாஸ்... உங்ககிட்ட பிடிக்காத ஒரே விசயம் இதுதான் பாஸ். ஏன் இப்படி பண்றீங்க?" என்று ஆதங்கத்தோடு கேட்டான் அவன்.


அவனது கேள்வியில் அவனை முறைக்க, "தப்புதான் கேள்வி கேட்டது தப்பு தான். சாரி." என்று கூறிக்கொண்டே வண்டியினை ஓட்டினான் வைகை.


அடுத்த நிமிடமே, ருத்ரஜித்தின் உதடுகளில் புன்னகை நிரம்பியது. அவனின் இந்த புன்னகை பலவித அர்த்தங்களை சுமந்திருக்கும். கண்ணாடி வழியே பார்த்த வைகைக்கு நன்கு புரிந்தது. அடுத்த ஆப்பு தனக்கு தான் என்று.


"வண்டியை நிறுத்து வைகை." என்று அவன் நினைத்தது போன்றே மிக தீவிரமாக ஒலித்தது ருத்ரஜித்தின் குரல்.


"ஏன் பாஸ்?" என்று தவிப்போடு அவன் கேட்க, "சொன்னதை மட்டும் செய்." என்று அதிகாரமாக கூறியதில் வண்டியை ஓரமாக நிறுத்தினான் வைகை. பின்னிருக்கை கதவினை திறந்தவன் வெளியேற, வைகையும் பதட்டத்தோடு காரைவிட்டு இறங்கியிருந்தான்.


அவனது முகத்தை அழுத்தமாக பார்த்தவன், அடுத்த நொடியே டிரைவர் சீட்டில் ஏறியிருக்க, "பாஸ்" என்று பரிதவிப்போடு பார்த்தான் அவன். காரின் கண்ணாடியை கீழே இறக்கியவன், " பாடிகார்ட்ஸ்கூட வீட்டுக்கு போற வழியைப் பாரு." என்றவன் அலட்சியப் பார்வை பார்த்தான். அப்பார்வையே கூறியது தனக்கு ஆலோசனை சொல்லும் அளவிற்கு நீ வளரவில்லை என்று? .


"பாஸ்..." என்று பாவமாக அவன் பார்க்க, அவனை அழுத்தமான பார்வை பார்த்தவன், காரினை புயல் வேகத்தில் கிளப்பியிருக்க, கார் ஏற்படுத்திய புழுதியில் இருமியபடி நின்றான் வைகை.


இருபக்கமும் வந்துக் கொண்டிருந்த பாதுகாவலர்களோ, "சார் என்ன அதுக்குள்ள மறைஞ்சுட்டாரு." என்று ஆச்சரியமாய் கேட்க, "அவர் மறையாட்டி தான் ஆச்சரியமே. வண்டியை எடுங்கடா. நம்ம போவோம்." என்ற வைகையோ அவர்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்.


புயல்வேகத்தில் மறைந்த நம் வேந்தனவனோ, தனது உயர்ரக காரினை ஒரு வீட்டின் முன் நிறுத்தினான். அங்கிருந்த ஒரு நபரோ, விரைந்து வந்து ஒரு சாவியினை அவனிடம் ஒப்படைக்க, அதை வாங்கியவனோ, தனது காரை அவ்விடம் நிறுத்திவிட்டு, அந்த மாருதி காரினை எடுத்துக் கொண்டபடி அங்கிருந்து புயல்வேகத்தில் சென்றான்.



யுவதிகளின் மனங்களை

தன் புன்னகையால் கவரும்
மாயவன் அவன்....
இரட்டை வேடமிட்டு
தந்திரம் புரியும்
தந்திரனும் அவன்....

வல்லினமவனின்

தந்திரத்தில்
சிக்கிக் கொள்ளும்

மெல்லினம் அவளோ.....

வேய்ந்தனின் வல்லினம் தொடரும்........

கதை பற்றிய தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள,

https://www.sahaptham.com/community/threads/வேய்ந்தனனின்-வல்லினம்-comments.488/
அசத்தலான ஆரம்பம்.. ருத்ர ஏன் இப்படி.. ஏன்..ஏன் என்ற கேள்வி மட்டுமே இப்போது மனதிற்குள் ஓடிக் கொண்டு இருக்கிறது.
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
2.வல்லினம்

'ஏழைகளின் ஊட்டி' என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏலகிரி மலை, வேலூரின் மிக முக்கியமான கோடைவாசஸ்தலங்களில் ஒன்று. ஏலகிரியின் பதினான்கு கொண்டை ஊசி வளைவுகளை அடையும் முன்பு, அம்மலையடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் பொன்னேரி. பொன்னேரியின் முகப்பில் அமைந்திருந்தது, எஸ்எஸ் கிளினிக் என்று அனைவராலும் அழைக்கப்படும் சிறிய அளவிலான மருத்துவமனை ஒன்று.

அவ்விடத்தில், சீரான இடைவெளியில் காற்று பலத்த வேகத்துடன் அடித்துக் கொண்டிருக்க, வெள்ளி நிற கீற்றாய் மின்னல் வெட்டிக் கொண்டிருந்தது. காற்றின் வேகத்தில் படபடத்து அடித்துக் கொண்டிருந்த அம்மருத்துவமனையின் சாளரத்தின் சத்தம் கேட்டு, தனது இருக்கையிலிருந்து எழுந்தாள் மருத்துவர் பிரகல்யா.

படபடத்த சாளரத்தை தன் தளிர் விரல்களால் பிடித்தவளோ, சன்னலின் கதவு, அடிக்காத வகையில் தடுப்பை மாட்டிக் கொண்டிருக்க, அவளது மணிக்கட்டை அலங்கரித்தது அவளது தந்தை வாங்கித் தந்த பிரத்யேக சில்வர் நிற கைக்கடிகாரம்.

சாளரத்திலிருந்து ஊடுருவி வந்த தென்றல், வஞ்சனை இல்லாமல் அவள் முகத்தை தீண்டிச் செல்ல, பெண்ணவளின் சுருள்சுருளான முடிகள் பின்னோக்கி நகர்ந்தது. கடிகாரத்தை தவிர்த்து விலையுயர்ந்த எவ்வித நகைகளும் அவளை அலங்கரிக்கவில்லை. கூர்மையான மூக்கில் மட்டும் சிறு வைர மூக்குத்தி கண்ணுக்கே புலப்படாமல் மின்னிக் கொண்டிருந்தது.

"ரமேஷ் அண்ணா." என்றவளின் அழைப்பில் பவ்யமாக வந்தார் நாற்பத்தைந்து வயது மிக்கவர். வந்தவரோ, "சொல்லுங்க பாப்பா?" என்றார் தன்மையாக.

"அண்ணா மழை வர்ற மாதிரி இருக்கு. நீங்க வேணா கிளம்பிக்கோங்க."

"இல்லை பாப்பா. உங்களை தனியா விட்டுட்டு, நான் எப்படி போவேன்?"

"அண்ணா பிரச்சினை இல்லை. நான் கார் ஓட்டிட்டு போயிடுவேன். இன்னும் அரை மணி நேரம் தான் இருப்பேன். அதுகுள்ள யாராவது எமெர்ஜென்சினு வந்தாங்கன்னா அப்போ நான் இல்லைனா கஷ்டமாகிடும். நீங்க போங்க அண்ணா." என்றவள் மென்புன்னகையுடன் கூறும்போதே, அவர்களது கிளினிக்கின் முன்பு ஒரு மகிழுந்து வந்து நின்றது.

ரமேஷ் வெளியே எட்டி பார்க்க, சின்னஞ்சிறு குழந்தையை தூக்கியபடி காரிலிருந்து இறங்கியிருந்தனர் இருவர். பார்த்ததுமே அவர்கள் குழந்தையின் பெற்றோர் எனத் தெரிந்துவிட, அவர்களுக்கு வழியை விட்டபடி நகர்ந்து நின்றுக் கொண்டார் ரமேஷ்.

"டாக்டர், எங்க குழந்தைக்கு என்னாச்சுனு பாருங்க? இன்னைக்கு சாயங்காலமிருந்தே வாந்தி எடுக்குறா. வயிறு வலினு வேற துடிக்குதுங்க குழந்தை. ரொம்ப பயமா இருக்குங்க." என்று பதட்டத்துடன் வெளிப்பட்டது குழந்தையுடைய தந்தையின் வார்த்தைகள்.

"பயப்படாதீங்க. இங்க படுக்க வைங்க." என்றவள் குழந்தையினை அங்கிருந்த மெத்தையில் படுக்க வைக்க உதவினாள்.

"குழந்தைக்கு எவ்வளவு வயசாகுது? என்ன சாப்டாங்க? உங்க சொந்த ஊரு என்ன?" என்றவள் ஒருபுறம் கேட்டுக்கொண்டே, மறுபுறம் குழந்தையை பரிசோதனை செய்துக் கொண்டிருந்தாள்.

"நாலு வயசாகுது டாக்டர். இன்னைக்கு எதுவுமே சரியா சாப்பிடலை டாக்டர். சொந்த ஊரு திருச்சி. ஏலகிரிக்கு சுற்றி பார்க்க வந்தோம்." என்று குழந்தையின் தந்தைக் கூறும்போதே, இடையில் புகுந்தார் அவரது மனைவி.


"நான் அப்போவே, சொன்னேன் கேட்டீங்களா? பெரியவங்க நமக்கே இந்த மலை பயணம் சேராது. சின்ன புள்ளைக்கு எப்படிங்க ஒத்துக்கும்?" என்று விசும்ப, தன் மனைவியை சமாளிக்க இயலாது பரிதவிப்போடு நின்றார் குழந்தையின் தந்தை.

அவர்களது உரையாடலை சிறுதலையசைப்புடன் கடந்தவள், "பயப்பட ஒண்ணும் இல்லை. நீங்க வொரி பண்ணிக்காதீங்க." என்று சொல்லிக்கொண்டே, "ரமேஷ் அண்ணா, விளக்கெண்ணை கொண்டு வாங்க." என்றாள். அடுத்த நிமிடமே, விளக்கெண்ணையைக் கொண்டு வந்துக் கொடுத்தார் ரமேஷ்.

எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர், விளக்கெண்ணையை எதற்கு கேட்கிறார்? என்று குழப்பமாக பார்த்தது குழந்தையின் பெற்றோர் மட்டுமல்ல, வெளியே இருந்த இன்னொருவனும் தான்.

"பேபி, உங்க பேர் என்ன?" என்று குழந்தையின் தலையை ஆதரவாக வருடியவள் கேட்க, "தன்யா" என்று தனது மெல்லிய இதழ்களை பிரித்து அழுதுக்கொண்டே கூறியது குழந்தை.

"தன்யா பேபி ஸ்டராங்தானே. எழுந்து நில்லுங்க பார்ப்போம்." என்றவள், குழந்தை எழுந்து நிற்பதற்கு உதவிபுரிய, குழந்தையும் வலியுடனே எழுந்து நின்றது.

குழந்தை நின்றதும் குழந்தையின் துணியினை விலக்கியவள், வயிற்றினை தட்டி பார்த்தாள். அவள் சந்தேகித்தது போன்றே குடலிறக்கம் தான் என்று அறிந்துக் கொண்டவள், இரண்டு விரல்களில் விளக்கெண்ணெயை எடுத்தபடி குழந்தையின் வயிற்றில் நன்கு தேய்த்து விட்டாள். அதன்பின் மேலிருந்து கீழாக, வயிற்றின் இருபக்கத்திலும், நடுவிலும் மெதுவாக தட்டியவள், குழந்தையை தூக்கியபடி மூன்று முறை குதிக்க வைத்தாள்.

"டாக்டர் நீங்க என்ன பண்றீங்க? நீங்க உண்மையாவே டாக்டர் தானா?" என்று சற்றுக்கடிந்துக் கொண்டே கேட்டார் குழந்தையின் தந்தை.

அதற்கு மென் புன்னகை ஒன்றை பரிசளித்தவளோ, "பேரு பிரகல்யா, சென்னை மெடிக்கல் காலேஜ்ல எம்.பி.பி.எஸ் படிச்சேன். 2015 பேட்ஜ். விசாரிச்சுக்கோங்க. உண்மையாவே டாக்டாரா? இல்லையானு தெரிஞ்சிப்பீங்க?" என்றவளின் குரலில் எந்தவித நக்கலும் தெரியவில்லை. இயல்பிலேயே மென்மையான குணம் கொண்டவளுக்கு அவர்கள் மீது கோபம் கூட எழவில்லை.

"இல்லை டாக்டர். நீங்க ட்ரீட்மெண்ட் கொடுக்காமல், இப்படி பாட்டி வைத்தியம் மாதிரி பண்ணதும், பயமா இருக்கு?" என்று குழந்தையின் தந்தை கூறும்போதே, தன்யா தனது அழுகையை மெல்ல மெல்ல நிறுத்தியிருந்தாள்.

"அப்பா அம்மா இப்போ வயிறு வலிக்கலை." என்று ஆச்சரியத்துடன் தனது கண்களை உருட்டியபடிக் கூறியது குழந்தை. அதைக் கேட்ட பெற்றவர்கள் மகிழ்ச்சியுடன் பிரகல்யாவை காண, எவ்வித சலனமும் இன்றி புன்னகை புரிந்தாள் மருத்துவர் பிரகல்யா.

"சாதாரண குடலிறக்கம் தான். அதுக்கு பாட்டி வைத்தியத்தை விட சிறந்த ட்ரீட்மெண்ட் எதுவும் இல்ல. என்னைக்குமே, நம்ம முன்னோர்கள் சொன்ன விசயங்களை குறைத்து மதிப்பிடாதீங்க." என்றாள் சிறு முறுவலுடன்.

"சாரிங்க டாக்டர்." என்று இவர்கள் மன்னிப்பைக் கேட்க, வெளியே நின்றபடி அவளது செய்கைகள் ஒவ்வொன்றையுமே கவனித்துக் கொண்டிருந்தவனது உதடுகள் அன்னிச்சையாக, "இன்ட்ரெஸ்டிங்" என்று உதிர்க்க, அவனது கண்களோ அவளை ரசித்தது.


கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே....
கை நீட்டும் போது பாயும் மின்சாரமே...
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்...
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்......


என்றவனின் கைபேசியின் பாடல் ஒலிக்க, அழைப்பை ஏற்றவன் அங்கிருந்து நகர்ந்து சென்று பேசத் தொடங்கினான். அவனது கைபேசி ஒலியின் சத்ததில், சாளரத்தை நோக்கினாள் பிரகல்யா.

அவனது பின்பக்கம் மட்டுமே அவளது கண்களில் தென்பட, எஸ் - கிராஸ் என்றழைக்கப்படும் மாருதி காரின் மீது சாய்ந்தபடி பேசிக் கொண்டிருந்தான் அவன். அவனை உற்று ஒருமுறை பார்த்தவள், மீண்டும் திரும்பியபடி தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.

"இதுல வாமிட் வராமல் இருக்க டேப்லெட் எழுதியிருக்கேன். நைட் சாப்பிட்ட பிறகு கொடுங்க." என்றவள் பணம் எதுவும் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளவில்லை. பின் நன்றி கூறியவர்களோ குழந்தையை தூக்கிக்கொண்டு செல்ல, குழந்தையோ, பிரகல்யாவிற்கு பறக்கும் முத்தங்களை கொடுக்க, பதிலுக்கு பறக்கும் முத்தங்களை பரிசளித்தாள் பெண்ணவள்.

அந்நேரம் சரியாக போனை வைத்தபடி திரும்பி நின்றவனது கண்களில் அக்காட்சி விழ, தன் இதழ்பிரித்து சிரித்தவனது இதழ்கள், "பிரகல்யா." என்னும் அவளது பெயரை ஒருமுறை கூறிப்பார்த்தது.

பின் அவன் காரில் ஏறிக்கொள்ள, குழந்தையை அழைத்துக் கொண்டு வந்த பெற்றோர்களும் காரின் பின்புறம் ஏறிக் கொண்டனர்.

"ரொம்ப தாங்ஸ் சார். அவசரத்துக்கு ஹெல்ப் கேட்டதும் தவறாமல் அழைச்சுட்டு வந்தீங்க." என்று குழந்தையின் தந்தை அவனைக் கண்டு நன்றிகூற, சிறுபுன்னகை மட்டுமே பரிசளித்தான் அவன்.

அதன்பின்னர், எங்கு அவர்களை ஏற்றினானோ அதே இடத்தில் கொண்டு சென்று விட்டவன், மீண்டும் தனது காரினை ஏலகிரி நோக்கி செலுத்தினான். ஒவ்வொரு வளைவுகளிலும் மெதுவாக காரினை திருப்பியவனது கண்களில், பிரகல்யாவின் முகம் வந்து சென்றது. அகன்ற விழிகளின் அழுத்தமான பார்வையும், ஒப்பனைகள் எதுவுமில்லாத அவள் பூமுகமும், என்றுமே புன்னகையை சுமக்கும் இதழ்களிலிருந்து வெளிவரும் தேன்குரலும் அவன் கண்களில் ஆழமாக பதிய, அவனது உதடுகளில் சிறு முறுவல் துளிர்த்தது.

இப்படி ஒருவன் தன்னை நினைக்கிறான் என்று விசயம் அறியாத பேதையவளோ, கிளினிக்கிலிருந்து வெளியேறினாள். ரமேஷ் கதவினை பூட்டிக் கொண்டிருக்க, லேசாக சாரல் மழை பொழிய, வானத்தை அண்ணாந்து பார்த்தவளது முகத்தின் மீதே பட்டு சென்றது மழைதுளிகள்.

பின் காரில் ஏறிய பிரகல்யா, ரமேஷினை அவரது வீட்டில் இறக்கிவிட்டபடி, தனது வீட்டை நோக்கி பயணித்தாள். அரை மணி நேரப்பயணம் ஒருவழியாக முடிவடைந்திருக்க, காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்திருந்தவளை, அவள் வருகைக்காகவே காத்திருந்த அவளின் அன்னையோ சிரித்த முகத்துடன் வரவேற்றார்.

அன்னையின் சிரித்த முகமே பலகதைகளை பேச, "குட் நைட்மா." என்று இருவரிகளில் கூறிவிட்டு நகரச் சென்றவளது பாதையை மறைத்து நின்றார் பெண்ணவளின் அன்னை சரஸ்வதி.

'தயாரா இரு பிரகல்யா. இன்னைக்கு அம்மா செம ஃபார்ம்ல தான் இருக்காங்க.' என்றவளின் உள்மனம் எச்சரிக்கை மணியை எழுப்பியிருந்தது.

"ஏன்டா பாப்பா ஏன் இவ்ளோ சீக்கிரமே வந்துட்டீங்க? பாருங்க மணி பத்துதானே ஆகுது. நாளைக்கு விடிஞ்சதும் வந்திருக்கலாமேடா பாப்பா." என்று அக்கறையாக வந்த அன்னையின் வார்த்தைகளில் தெரிந்த வஞ்சப்புகழ்ச்சி அணியினை உணராமல் இல்லை பிரகல்யா.

"சாரிமா..." என்றவளின் மன்னிப்பில் சற்று கோபத்தை குறைத்தாலும், தன் மகள்களின் மீது எண்ணற்ற அன்பைக் கொண்ட தாயுள்ளமோ,

"மன்னிப்பு மட்டும் கேட்டிடு. பிரகல்யாமா. அந்த காணங்காட்டு பக்கத்துல தான் கிளினிக் வைப்பனு பிடிவாதம் பிடிச்சதுகூட பரவாயில்லைடா. ஆனால் நேரமாகும் போது எல்லாம் எனக்கு பக்குபக்குனு இருக்கு. ஏழு மணிக்கு எல்லாம் வரலாம்ல, காலையில குட்மார்னிங்னு சொல்லிட்டு போறவதான், அடுத்து நைட்தான் உன்னை பார்க்க முடியுது. எனக்கு உன்னை நினைச்சு ரொம்ப கவலையா இருக்குடா பாப்பா." என்று கவலைக்கொண்டது அன்னையின் உள்ளம்.

அவர் திட்டினால் கூட தாங்கிக் கொள்வாள் பிரகல்யா. ஆனால் சரஸ்வதியின் கவலைதான் அவளை வெகுவாக தாக்கும். அதை சரியாக உணர்ந்தவர், அவளை அன்பால் திருத்த நினைக்க, எப்படி அன்னையை சமாளிப்பது என்று தீவிரமாக யோசித்து, தன் தங்கையை பற்றி பேசி சமாளித்துவிடுவாள் பிரகல்யா.

"என் செல்ல அம்மா. நான் சின்னகுழந்தை இல்லை. அதனால என்ன நினைச்சு கவலைப்படாதம்மா. உன் சின்ன பொண்ணு என்னைவிட, ஐந்து வயசு சின்னவளையே டிரக்கிங்லாம் போக அனுப்புற? பெரியவ என் மேல மட்டும் என்ன பயம்?" என்று தன் தங்கையை நினைத்துக் கொண்டே கேட்டாள்.

"அவ வாயுள்ள புள்ளைடி. அவளை பார்த்து நாலு பேரு தெறிச்சு ஓடாம இருந்தால் சரி. ஆனால் நீ அப்படி இல்லடா பாப்பா. அதட்டி பேசக்கூட உனக்கு வராது." என்றவர் கூறும்போதே அவ்விடம் வந்தார் பிரகல்யாவின் தந்தை சத்யராஜ்.

"பாப்பா வந்துட்டியாடா. போடா போய் சாப்பிடு. என்ன சரசு மசமசனு நின்னுட்டு இருக்க? பாப்பாக்கு சாப்பாடு எடுத்து வை." என்றவரது கைகள், பிரகல்யாவின் தலையை வருடிக் கொடுக்க, தன் தந்தையின் அன்பில் நெகிழ்ந்தவள், "டாடி" என்று கட்டிக் கொண்டாள்.

"ஏங்க நீங்களாவது எடுத்து சொல்வீங்கனு பார்த்தால், செல்லம் கொடுத்தே அவளை கெடுக்குறது நீங்க தாங்க. நல்ல அப்பா. நல்ல பொண்ணுங்க." என்றவரோ முகத்தை திருப்பிக் கொண்டு செல்ல, பிரகல்யாவோ தனது அன்னையைக் கண்டு கவலைக் கொண்டவள், தந்தையைக் கண்டு, "டாடி." என்றாள் தவிப்புடன்.

"அட பாப்பா. நீ போடா தங்கம். அம்மா உன் மேல இருக்க அக்கறையில சொல்லுறா. போய் சாப்பிட்டு தூங்குடா பாப்பா. நாளைக்கு கிளினிக் போகணும்ல." என்று அன்போடு கூறவும், சரியென தலையசைத்தவள், உடை மாற்றுவதற்காக தனது அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

மகள் சென்றதும் தனது மனைவியின் அருகே வந்தவரோ, "சரசு.. கல்யாணம் ஆகுற வரைக்கும் அவளுக்கு பிடிச்சது செய்யட்டும்.நீ வீனா கவலைபட்டு உன் உடம்பை கெடுத்துக்காத."

"அப்போ அவளுக்கு சீக்கிரம் மாப்பிள்ளையை பாருங்க. அதுவரை என் கவலை இருந்துகிட்டேதான் இருக்கும்." என்றார் கோபமாக.

தன் மனைவியின் கோபத்தை கண்டு புன்னகைத்தவரோ, "இந்த செல்ல கோபம் கூட உனக்கு அழகு தான் சரசு." என்று கண்சிமிட்ட,

"என்ன பேச்சு வயசான காலத்துல, போங்க." என்று தலையில் அடிக்காத குறையாக அவ்விடமிருந்து சென்றார் சரஸ்வதி. அந்நேரம் கதவை திறந்து வந்த பிரகல்யாவின் முகமும் பிரகாசித்தது. தன் தந்தை தாயை போன்று, திருமணத்திற்கு பின் மனமொத்த தம்பதிகளாக தன்னவனுடன் வாழ வேண்டும் என்ற பல்வேறு கனவுகளுடன் உணவு உண்ண சென்றவள் அறியவில்லை. அவளது வாழ்வின் இரண்டாம் பாகம் அவள் நினைப்பதை விடவும் கொடூரமாக இருக்கும் என்று.

இந்த அழகிய கூட்டின், துடுக்குத் தனத்தின் செல்ல இளவரசியோ, ஏலகிரி மலையில், தனது சேட்டைகளை எல்லாம் மூட்டைக் கட்டிக்கொண்டு, போர்வையால் தன்னை மறைத்து நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள்.

அனைத்து மாணவர்களும் உறங்கி விட்டனரா? என்று ஒவ்வொரு கூடாரத்தையும் பரிசோதித்துக் கொண்டிருந்தனர் அவர்களது துறையின் பேராசிரியர்கள் இருவரும்.

இரவு பதினொன்று கடந்து இருக்க, அவர்களும் உறங்குவதற்காக அவர்களது கூடாரத்திற்கு சென்றனர். சில மணி நேரமுன்பு வரை மத்தியில் மூட்டப்பட்டிருந்த, கேம்ப் ஃபயர் என்று அழைக்கப்படும் நெருப்பானது முற்றிலும் அணைந்திருக்க, அதன் கங்குகள் மட்டும் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் பளபளப்பாக தெரிந்தது.


நித்திராதேவியின் பிடியில் உறங்கிக் கொண்டிருந்த அந்த சேட்டைக்காரியோ, உறக்கத்தில் பிதற்றிக் கொண்டிருந்தாள். "என்னைவிடு. எங்க என்னை கடத்திட்டு போற?" என்று படுக்கையில் இங்கும் அங்கும் உருண்டுக்கொண்டே இருந்ததில், அருகில் படுத்திருந்த பெண்ணவளின் தோழியான வந்தனாவோ விழித்துக் கொண்டாள்.

"அடியே கிறுக்கி. ஏண்டி என் உசுற வாங்குற?" என்றவள் அவளது முதுகில் அடிக்க, பெண்ணவளோ அவள் மீதே கைகால்களை போட்டபடி உருளத் தொடங்கினாள்.

"டேய் என்னையவே கடத்திட்ட இல்லை. உன்னை என்ன பண்றனு பாரு?" என்று கண்களை திறவாமலே வந்தனாவை நசுக்கி எடுக்க,

"அய்யோ என் கற்பை பறிக்க பார்க்குறாளே?" என்று அலறியவள், அருகில் இருந்த தண்ணீர் பாத்திரத்தை தட்டுத்தடுமாறி எடுத்தபடி பெண்ணவளின் முகத்தில் ஊற்றியிருக்க, அடித்துப் பிடித்து கண்விழித்தாள் அபூர்வா.

"என்னாச்சு?" என்றவள் மூச்சிறைக்க நாலாபுறமும் கண்களை சுழலவிட, அவளுக்கு அடியில் படுத்திருந்த வந்தனாவோ, "அடியே உருளைகட்டை எந்திரிடி என் மேல இருந்து?" என்று சத்தமாக கத்தவும்தான், அவளின் மீதிருந்து எழுந்துக் கொண்டாள் அபூர்வா.

"என்னாச்சு வந்து? ஆமா எதுக்குடி என் மூஞ்சியில தண்ணீ அடிச்ச?" என்றவளின் பார்வை அவள் கையிலிருந்த நீர் பாத்திரத்தின் மீது படிந்தது.

"சொல்லுவடி சொல்லுவ? கண்டகண்ட புக்கை படிச்சுட்டு தூங்குவ? கனவுல எதையோ கண்டுகிட்டு என்னை படுத்தி எடுப்ப? இது உனக்கே நியாயமா படுதா?" என்றவளுக்கு இன்னும் அவள் தன் மீது உருண்டது நினைவில் வர, "கருமம் கருமம்." என்று மானசீகமாக தனது தலையில் அடித்துக் கொண்டாள்.

"வந்தேன்னா அடிங்கு.. என்னை எது வேணாலும் சொல்லு. ஆனால் நான் படிக்குற ஆன்டிஹீரோ புக்கை ஒரு வார்த்தை சொன்னாலும் செவுள் பேந்திடும்." என்றவள் தனது பெரிய விழிகளை உருட்டியபடி முறைத்தாள்.

"அடிப்பாவி. அப்படி என்னத்தடி அதுல கண்ட? அது படிச்சு, படிச்சு நீ லூசானது தான் மிச்சம்."

"நான் லூசாகுறேனோ? மாஸ் ஆகுறேனோ? அது என்பாடு பேபி. நீ சத்தமில்லாமல் தூங்குற வேலையை மட்டும் பாரு." என்று அவளது கன்னத்தை தட்டியவள் படுத்துக்கொள்ள, "எல்லாம் என் கிரகம். உன்கிட்ட வந்து மாட்டிகிட்டு முழிக்கிறேன்." என்று புலம்பிக் கொண்டே சற்று தள்ளியே படுத்துக் கொண்டாள் வந்தனா.

அவளது செயலைக் கண்டு பளிப்பு காட்டிய அபூர்வாவோ, "ரொம்ப தான்." என்று முகத்தைத் திருப்பிக் கொண்டுப்படுத்தாள். கூடாரத்திற்கு இரண்டு நபர்கள் என்று பத்து கூடாரம் இருப்பதால், இவர்களது குரல் மற்றவர்களை அடையவில்லை.

அபூர்வா, பத்தொன்பது வயது நிறைந்த பாவை. அவளது ஆசைகள் மிகவும் சிறியவை தான். ஆனால் அந்த சிறிய ஆசைகள் என்று அவள் கூறுவதை கேட்டால்? யாராக இருந்தாலும் அதிர்வது நிச்சயம். ஊர் சுற்றுவதை விரும்பி செய்வாள். அதுவும் சாகசங்கள் நிறைந்த பயணம் என்றால் அலாதி பிரியம் பெண்ணவளுக்கு.

ஆதலால்தான் என்னவோ பிபிஏ டூரிசம் அண்டு மேனேஜ்மெண்ட் என்று கூறப்படும், சுற்றுலா துறை சார்ந்த படிப்பை எடுத்து தற்போது இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். தற்போது கூட டிரக்கிங் எனப்படும் படிப்பு சார்ந்து, மலையேற்றத்திற்காகவே அவ்விடம் வந்து தங்கியிருந்தனர் அவளது வகுப்பு மாணவர்களும், அவர்களது இரண்டு பேராசிரியர்களும் மற்றும் அவ்விடத்தை பற்றி நன்கு அறிந்த சுற்றுலா வழிகாட்டிகள் இருவரும். சுற்றுலாவை தவிர அவளது மிகப்பெரிய ஆசை. அவள் விரும்பி படிக்கும் எதிர்மறை குணம் கொண்ட நாயகனைப் போன்ற ஒருவனை தன் வாழ்வில் சந்திக்க வேண்டும் என்பதுதான்.

மறுபக்கம் திரும்பி படுத்திருந்த அபூர்வாவுக்கு உறக்கம் என்றோ தொலைந்தது. புரண்டு புரண்டு படுத்தவள், அருகில் குறட்டை விட்டபடி உறங்கிக் கொண்டிருந்த தனது தோழி வந்தனாவை பார்த்தாள்.

"என் மூஞ்சில தண்ணீ ஊத்திட்டு, ராட்சசி எப்படி தூங்குறா பாரு." என்று திட்டியவள், தான் வைத்திருந்த எதிர்மறைநாயகனின் கதை ஒன்றினை வாசிக்கத் தொடங்கினாள்.

"என்னபா இது. இன்ட்ரெஸ்டிங்காவே இல்லை. பார்த்த உடனே ஹீரோயினை தூக்கிட்டு போவானு பார்த்தால், அவளுக்கே தெரியாமல் அவளை ரசிச்சுட்டு போறான். ஒருவேளை அடுத்த சந்திப்புல தூக்குவானோ?" என்று யோசனையிலேயே இருக்க, நள்ளிரவு இரண்டு மணியை கடந்திருந்தது.

அதற்கு மேலும் தூக்கம் வராமலே போக, காற்றாட நடந்து வரலாம் என்று நினைத்தவள், யாரையும் எழுப்பாமல் சிறு சத்தமும் போடாமல் அங்கிருந்து மெல்ல அடியெடுத்து வைத்து வெளியேறினாள்.

ஏலகிரி மலையின் குளிர், அவளை சில்லிட செய்ய, தான் அணிந்திருந்த குளிராடையை தாண்டியும் அவள் மேனி குளிரில் நடுங்கியது. மெல்ல இயற்கையின் அழகினை ரசித்துக் கொண்டே சென்றவள் தனது கைகளை நன்கு உரசிக்கொண்டே வெகுதூரம் நடந்துச் சென்றாள்.

அடர்ந்த காடு அவளை வருக! வருக! என வரவேற்க, இரவு வெளிச்சத்தில் பயங்கரமாக காட்சியளித்த மரங்களைக் கண்டும், பூச்சிகளின் சப்தமும் அவளுக்கு நிதர்சனத்தை விளக்கியது.

"அய்யய்யோ ரொம்ப தூரம் வந்துட்டோம் போலவே? அபூமா அப்படியே கிளம்பிருமா." என்று தனக்கு தானே சொல்லியவள் வந்த வழியில் திரும்ப, அங்குள்ள புதர் அசைவது போல தோன்றியதில் முகம் முழுவதும் வியர்க்கத் தொடங்கியது.

"ஆளை விடுங்கடா சாமி." என்று ஓரே ஓட்டமாக ஓடியவளுக்கோ, ஓநாயின் ஊலைவிடும் சத்தம் அவளது செவி வழி நன்கு நுழைந்திருக்க, சற்று மிரண்டுதான் போனாள்.

"அய்யய்யோ.... இந்த ஓநாய்க்கு டின்னர் நான்தானோ? முருகா என்னை காப்பாற்று." என்று தெறித்து ஓடினாள்.

"ஓடினேன்... ஓடினேன் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடினேன்." என்று அவளது வாய் அந்த நிலையிலும் பிதற்றிக் கொண்டிருக்க, காட்டினை தாண்டி உள்ள சாலையை அடைந்தவள் மேல்மூச்சிறைக்க திரும்ப, அவள் மீதே உரசியபடி நின்றது அந்த மகிழுந்து.

அவளோ அந்த திடிர் அதிர்ச்சியில் மயங்கி விழ, காரிலிருந்து இறங்கியிருந்தவனோ, அவள் மீது மோதி விட்டோமோ? என்று அதிர்ந்து போய், அவளருகே சென்று பார்த்தான்.

சிறு காயமும் இன்றி படுத்திருந்தவளை, ஓரமாக படுக்க வைத்துவிட்டு தன் வேலையைக் காண செல்ல, அவன் மனம் நினைத்தாலும், ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது. இருந்தும் தனக்கு சம்மந்தம் இல்லாதவளை தூக்கிக் கொண்டு திரிவதில் விருப்பம் இல்லாதவனோ, அவளைத் தனது இருகைகளால் ஏந்தியபடி, ஓரமாக அமர வைத்துவிட்டு சென்றிடலாம் என்று நினைத்தான்.

பெண்ணவளின் தளிர் மேனியை, ஏந்தியவனின் கைகளுக்குள் ஒருவித குறுகுறுப்பு தோன்றியது. அவள் மதிமுகத்தை மறைத்திருந்த கற்றைக் கூந்தல் விலகியிருக்க, அவளது அழகிய வதனம் நிலவொளியில் பிரகாசித்தது.

அதைகண்டவனது மனம் ஒருநிலையிலேயே இல்லை. "நிலாபெண்ணே உறங்கும் உன் விழிகளை திறவாயோ?" என்று கூறியவனது உதடுகள் மட்டும் ரசிக்கவில்லை அவளை. அவனது கண்களும் அவளை ரசித்துப்பருகியது. சொடுக்கிட்டால் தன் முன் படிந்து வர, எத்தனையோ அழகிகள் இருந்தும் அவன் மனம் அவளை ரசிக்க, "ஹேய் பேபி. ஏன் என் கண்ணுல பட்ட?" என்று மயங்கி இருந்தவளிடம் கேட்டான் மானசீகமாக. அவளோ அவன் மார்பின் மீதே மயக்கத்திலும் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

அவளது செயலை வெகுவாக ரசித்தவனோ, தனது காரின் பின்புறம் அவளை படுக்க வைத்தபடி, முன்புற கதவை திறந்தவன், காரில் ஏறி அமர்ந்திட, ஒருமுறை அவளை திரும்பி பார்த்தவன் ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்டான்.
அந்த பெருமூச்சில் தெரிந்தது என்னவோ வருத்தம் மட்டுமே? தேவையில்லாமல் தன் கண்களில் விழுந்துவிட்டாளே? என்று அவளுக்காக வருத்தப்பட்டது ஆணவனின் மனம்.

அந்தநொடி அவனது கைபேசி சிணுங்கியது.


கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே....
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே.....
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்.....
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்....


பாடலை ரசித்துக் கொண்டே காதில் வைத்தவன், "ருத்ரஜித் ஸ்பீக்கிங்." என்றுரைக்க, அவனது பார்வையோ மயங்கியிருந்த அபூர்வாவின் மீது படிந்து மீண்டது.

ராதையை ரசிக்கும்
மாய கண்ணன் அவன்....
ருக்மிணியை கையில்
ஏந்தும் தந்திர
கிருஷ்ணன் அவன்....
தொலைதூர பயணம்
புரிந்து வந்த வேங்கையின் கைகளில், அகப்பட்ட பாவையவளோ
மீள்வாளா...? இல்லை
சிறைக் கொள்ளப்படுவாளா..?


வேய்ந்தனனின் ஆட்டம் தொடரும்......
Adeeiiiiiiii.... enna da nadakuthu inga... manda kayuthu...😣😣
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
3.வல்லினம்

கைபேசியின் மறுபுறம் அறிந்துக்கொண்ட செய்தியில், ருத்ரஜித்தின் முகம் பாறை போல் இறுகியது. குளிர்ந்த ஏலகிரி மலையின் குளிர்க்காற்று கூட, அவனது உஷ்ண மூச்சிற்கு முன் ஒன்றுமில்லாமல் போக, கண்களை மூடி தன் கோபத்தை கட்டுப்படுத்த நினைத்தவனது கூரிய விழிகள், பின்னிருக்கையில் படுத்திருந்த அபூர்வாவின் மீது தீண்டிச் சென்றது.

மயக்கத்தில் மூடியிருந்த பெரிய கண்கள் திறவாதா? என்ற யோசனை அவனுள்ளேயிருக்க, அவளை தன்னிருகைகளால் அள்ளியணைத்த போது, பெண்ணவளின் அளவான கூர் நாசியிலிருந்து வெளிவரும் சூடான மூச்சுக்காற்று, ஆணவனின் மார்பில் பட்டுச் சென்ற நிமிடம் உண்டான கதகதப்பை நினைத்தவனின் மனம் ஒரு நிலையிலேயே இல்லை.

அந்நொடி எதற்காக அவ்விடம் வந்தானோ அதை அனைத்தையும் மறக்க செய்பவளைக் கண்டு சிறு கோபம் அவனை எட்டிப் பார்க்காமல் இல்லை. அவளை உறுத்து விழித்தவனது பார்வை அவளின் ரோஜா இதழ்களின் மீது படிய, அவனது வசீகரிக்கும் பார்வை, பெண்ணவளை அணுவணுவாக ரசிக்கத் தொடங்கியது.

"வொய் பேபி. நீ என் கண்ணுல பட்ட?" என்று கூறியவனது வார்த்தைகளில் அழுத்தமாக மறைந்திருந்த பொருள், பின்னாளில் அவளை ஆட்டி படைக்க இருந்தது. பின் கடினப்பட்டே, தனது முகத்தை அவள் புறமிருந்து திருப்பியவன், காரினை உயிர்பிக்க, காரின் அதிர்வில், மெல்ல தன் கண்களைத் திறந்தாள் அபூர்வா.

"ம்ம்ம்... மம்மி ஓநாய்க்கு டின்னர் ஆகிட்டேனா?" என்று புலம்பியபடியே மெல்ல விழித்தவள், சுற்றிலும் பார்வையை சுழற்ற, அப்போதுதான் நடந்தவற்றை நினைவு கூர்ந்தாள்.

ஓநாய்க்கு பயந்து ஓடியவள், தன் மீது மோதவிருந்த காரைக் கண்டு மயங்கி சரிந்தது முதற்கொண்டு நினைவுவர, பெண்ணவளின் பார்வை காரின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவனின் மீது படிந்தது.

"ஹலோ... யாருயா நீ?" என்றவள் பட்டென்று எழுந்தவள் கேட்க, வண்டியின் இயக்கத்தில், பிடிமானமின்றி இருக்கையின் மீதே மீண்டும் விழுந்தாள். ஏற்கனவே அவள் விழித்துக் கொண்டதை அறிந்தவனோ, அவளது செயலைக் கண்டு நகைத்தபடி அமைதியாக அமர்ந்திருந்தான்.

"உன்னை தான் கேட்குறேன் மிஸ்டர். நீதான என்னை இடிக்க வந்த?" என்றவளின் கேள்வியில் நகைத்தானே தவிர, பதில் ஏதும் பேசவில்லை.

'என்ன இவன், சிரிக்குறான் எதுவும் பேச மாட்டிங்குறான். ஒருவேளை என்னை கிட்நாப் பண்ண போறானோ? எதுக்கும் நம்ம பொறுமையா பேசி பார்ப்போம்' என்று யோசித்தவள் அவன் புறம் திரும்பி, "இங்க பாருங்க. நீங்க யாருனு எனக்கு சொன்னதானே தெரியும்? என்னை எங்க கூப்பிட்டு போறீங்க?" என்றாள் சற்று மிரட்சியோடு முகத்தை வைத்தபடி.

அவனோ முன்னோக்கி திரும்பியிருந்ததால், முகம் வேறு சரியாக தெரியவில்லை அவளுக்கு. எட்டி எட்டி பார்க்க முயற்சித்தவளுக்கு, அவன் போட்டிருந்த தொப்பி மேலும் இடையூறாக இருக்க, 'அக்னி நட்சத்திர வெயில் மண்டையை பொளக்குற மாதிரில்ல தொப்பி போட்டிருக்கான். எதுவும் பேச வேற மாட்டிங்குறான். அபூமா எதவாது பண்ணுமா?' என்று மனதில் நினைத்தவளுக்கு மண்டை காய்ந்ததுதான் மிச்சம்.

"யோவ் என்னை கடத்திட்டு போக பார்க்குறியா? மரியாதையா வண்டியை நிறுத்து, இல்லைனா ஓடுற வண்டியில இருந்து கதவை திறந்து குதிச்சிடுவேன்." என்று கூறியவளோ 'யாருகிட்ட?' என்று மிதப்பாக அவனைப் பார்க்க, அதுவரை லாக் செய்திருந்த பின் கதவுகளை திறந்து விட்டிருந்தான் ருத்ரஜித்.

அவனது செயலே, 'தாராளமா குதி.' என்று சொல்லாமல் கூறியிருக்க, ஒருநிமிடம் அதிர்ந்துதான் போனாள் அபூர்வா.

"கூல் கூல்... நான் சும்மா சொன்னேன். நான் குதிச்சா தேவையில்லாமல் நீங்கதானே ஜெயிலுக்கு போகணும். லாக் போட்ருங்க." என்று பவ்யமாக கூறுபவளைக் கண்டு அன்னிச்சையாக முறுவலித்தது ஆணவனின் வன்மையான இதழ்கள்.

'இதுக்கும் பேச மாட்டிங்குறானே. ஒருவேளை வாய் பேச வராதோ?' என்று யோசனையோடு அவனை பார்த்தவளுக்கு சடுதியில் ஒரு எண்ணம் தோன்ற, அவனது தோளை சுரண்டினாள்.

"ஹேய் மிஸ்டர் என்னை கடத்திட்டு தானே போற? நீதானே அந்த ஆன்டிஹீரோ." என்று ஆர்வத்தோடு கூற, அடுத்த நொடி "வாட்?" என்று கர்ஜித்தான் ருத்ரஜித்.

"ஓஹோ... நீ ஊமையில்லையா. அப்போ கன்பார்ம் ஆன்டிஹீரோ தான். அவங்க தான் அதிகமா பேசவே மாட்டானுங்க. சாதாரணமா பேசுனாலே இப்படி தான் கத்துவாங்க." என்றவளின் முகத்தில் சொல்லிலடங்கா மகிழ்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

அதுவரை அழகியாக தோன்றியவளோ, தற்போது லூசாக அவனுக்கு தெரிய, குழப்பத்தோடு காரினை ஓட்டினான் ருத்ரஜித்.

"ஓய் சொல்லுபா... என்னை எங்க கடத்திட்டு போற? நான் கத்த எல்லாம் மாட்டேன். இன்பேக்ட் உன்னை மாதிரி ஒரு ஆளை பார்க்கணும்னு தான் ரொம்ப வருசமா காத்துகிட்டே இருக்கேன். நல்லவேளை எங்க காலேஜ் கேம்ப்க்காக ஏலகிரி சாகச முகாம்க்கு அழைச்சுட்டு வந்தாங்க. அப்படி வரமால் இருந்திருந்தேனா உன்னை பார்த்திருக்க முடியுமா? அதுமட்டுமா நான் யாருக்கும் தெரியாமல், இந்த நடுராத்திரி எழுந்து வந்தது கூட ரொம்ப நல்லதா போச்சு" என்று புன்னகை மாறாமல் பேசுபவளை வினோதமாக பார்த்தான் ருத்ரஜித்.

"நீ எப்போதும் இப்படி தானா? ஆமா அது என்ன ஆன்டிஹீரோ? என்னை பார்த்தால் ஆண்டியை க்ரெக்ட் பண்ற மாதிரியா இருக்கு?" என்று சற்று கோபத்தோடு வந்தது அவனின் வார்த்தைகள்.

அவனது கூற்றைக் கேட்டு வாய்விட்டு சிரித்தவளோ, "நீ இவ்ளோ எல்லாம் பேசுவியா? ஆன்டிஹீரோனா, ஹீரோவுக்கு எதிர்மறையான குணம் கொண்டவன்னு அர்த்தம். உதாரணத்துக்கு நீ நல்லவனா இருந்தால் என்னை கேம்ப் கூப்பிட்டு போய் விடுவ. அதே நீ ஆன்டிஹீரோனா என்னை கடத்திட்டு போய் வலுக்கட்டாயமா என்னை டார்ச்சர் பண்ணுவ. தினம் தினம் என்னை சித்ரவதை பண்ணுவ? வாழ்க்கையை வெறுக்க வைப்ப. இது மாதிரி இன்னும் சொல்லிகிட்டே போகலாம்." என்று முகத்தை பயங்கரமாக வைத்துக்கொண்டு அவள் கூற, ருத்ரஜித்தின் முகத்தில் வசீகரப் புன்னகை படர்ந்தது.

"உனக்கு அப்போ பயமா இல்லையா?" என்று ஆர்வமும், விசமமும் கலந்தவன் கேட்க,

"இல்லையே? எதுக்கு பயப்படணும்? சரி உங்க பேர் என்ன?" என்றாள் ஆர்வத்துடன்.

அவளது கேள்விக்கு பதில் ஏதும் பேசாதவனோ, காரினை ஓரிடத்தில் நிறுத்தியிருந்தான். "ஓ அதுக்குள்ள இடம் வந்திடுச்சா? பழைய பங்களாவா? இல்லை காட்டு பங்களாவா?" என்றாள் பேரார்வத்துடன்.

"இறங்கிப் பாரு. நீயே தெரிஞ்சுப்ப?" என்றவன், காரின் லாக்கினை திறந்துவிட, கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தவள், அவ்விடத்தைக் கண்டு அதிர்ந்துதான் போனாள்.

அவர்களது கல்லூரி முகாமிட்ட இடத்திற்கு தான் அழைத்து வந்திருந்தான் ருத்ரஜித். அவள் பேசும்போது சொன்ன இடத்தினை வைத்து பத்திரமாக அவளை கொண்டு வந்து சேர்த்திருந்தான் அவன். அவ்விடத்தைக் கண்டதுமே ஆர்வத்துடன் இருந்தவளின் பூமுகம், சோகத்தை தத்தெடுக்க, "அடப்பாவி இதுதான் அந்த இடமா? அப்போ இவன் நல்லவன்தான் போல." என்று பெருமூச்சொன்றை விட்டாள் பெண்ணவள்.

அவள் சொல்லி முடித்து திரும்புவதற்குள், பெண்ணவளின் கழுத்தினை பின்னிருந்து இறுக பற்றியிருந்தான் ருத்ரஜித். அவனது திடீர் செயலில் அதிர்ந்தவள் திரும்ப முயற்சிக்க, பாவம் அவளால் துளிகூட அசைய இயலாது போனது.

தன் உடலோடு, அவளது உடலை சேர்த்து அணைத்தவன், பெண்ணவளின் பின் தோளில் அவனின் நாடியை வைக்க, அவனது அடர்ந்த தாடி கொடுத்த குறுகுறுப்பும், அவனது சூடான மூச்சுக்காற்றும் அவளை நடுங்க செய்தது. கடினப்பட்டே எச்சிலை விழுங்கியவள், பேச நினைக்கும் முன், தனது கரத்தால் அவளது வாயை பொத்தினான்.

"இன்னொரு முறை இப்படி தனியா சுத்துன மவளே... இப்படி கொண்டு வந்து விடமாட்டேன். அப்புறம் நான் கொடுக்குற பனிஷ்மென்ட் வேற மாதிரி இருக்கும்." என்று கூறும்போதே அவனது கைகள் அவளது இடையை இறுக்கமாக பற்றியிருந்தது. அவனது அந்த இறுக்கம் அவளுக்கு வலியை உண்டாக்க, மறுபக்கம் அவனது தொடுதல் பெண்ணவளின் வயிற்றில் ரோலர்கோஸ்டர் ரைடை சிறப்பாக செய்திருந்தது.

"ஒழுங்கா நல்லபுள்ளையா கேம்ப் வந்தோம்மா.. போனோமானு இருக்கணும். ஆன்டிஹீரோனு வேற எவன்கிட்டயாவது போய் பேசிட்டு இருந்த, அவ்வளவுதான். அடுத்த நிமிசம் உன்னை எங்கிட்ட இருந்து எவனாலையும் காப்பாற்ற முடியாது." என்றவனது எச்சரிக்கை நிறைந்த வார்த்தைகள் அவளின் செவி வழி நுழைந்து, முதுகுதண்டினை சில்லிடச் செய்தது.

"அன்டர்ஸ்டாண்ட்" என்று மீண்டும் அவன் கர்ஜிக்க, அவளை அறியாமலே பயத்தில் தலையை மேலும் கீழும் ஆட்டினாள் பெண்ணவள்.

அவளது செயலில் ருத்ரஜித்தின் முகம் அன்னிச்சையாக மலர்ந்திருக்க, அவளது வாசனையை முகர்ந்தவனின் கைகளோ பெண்ணவளது இடையை இறுக்கமாக பற்றியிழுக்க, அவனது உடும்புபிடி பெண்ணவளது உடலில் பயபந்தை உருவாக்கியிருந்தது.

ஆணவனின் ஸ்பரிசமும், தீண்டலும், அவள் உணராத உணர்வுகளை தட்டி எழுப்பியிருக்க, பயத்தில் கண்களை மட்டும் இறுக மூடிக்கொண்டாள் அபூர்வா. மெல்ல அவளது இதழ்களை பிடித்திருந்த தனது கைகளை நகர்த்தியிருந்தவனோ, அவளின் அருகாமையில் தன்னையவன் இழந்தாலும், அவன் வந்த வேலை அவனுக்காக காத்திருக்க, மெல்ல அவனது பிடியை அவளைவிட்டு தளர்த்தியிருந்தான் ருத்ரஜித்.

அவன் முழுவதுமாக அவளைவிட்டு பிரிந்திருந்தாலும், அந்த பயமும், பெண்களுக்கே உரிய கூச்சமும் அபூர்வாவை கண் திறக்க இயலாது செய்திருக்க, அவ்விடத்தில் சிலை போல் நின்றிருந்தாள் அபூர்வா.

அவனது கார் செல்லும் சப்தம் கேட்டதும் தான், தனது கண்களை பட்டென்று திறந்தவள், சாலையினைத் திரும்பி பார்த்தாள். அவனது கார் சென்ற வழித்தடமின்றி அவ்விடம் மிக அமைதியாக இருக்க, அபூர்வாவின் இதயமோ நூறுமடங்கு துடித்தது.

யாரிவன்? முகத்தை கூட பார்க்க இயலவில்லை. இருந்தும் ஒருநொடியில் தன்னை அச்சமுற செய்துவிட்டானே? என்று கவலை அப்பட்டமாக அவள் முகத்தில் தெரிய, மறுபுறம் கோபமும் வர, "டேய் உன்னை விடமாட்டேன்டா பொறுக்கி." என்று திட்டியவளுக்கு அவ்விடம் நிற்கவே பிடிக்கவில்லை.

சாவி போட்டால் நடக்கும் பொம்மை போல, அங்கிருந்து சென்றவள் சத்தமின்றி வந்தனாவின் அருகில் வந்து படுத்துக் கொண்டாள். இந்த நிமிடம் வரை நடந்தவை கனவு போலவே தோன்றியது அபூர்வாவுக்கு. அதன்பின்னர் விடியற்காலை நான்கு மணிக்கு தன்னையும் மீறி கண்ணயர்ந்தவள் உறக்கத்தினைத் தழுவியிருந்தாள்.

****

அந்த அதிகாலை வேளையில் உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிக் கொண்டிருந்தான் ஒருவன். அவனது பயம் உடல் முழுவதும் விரவியிருக்க, சாவைக் கண்டு அஞ்சியவன், தான் பிழைத்துவிட மாட்டோமா? என்ற கவலையில் ஓடிக் கொண்டியிருக்க, அவனைத் துரத்திக் கொண்டு வந்திருந்தனர் நான்கு ரவுடிகள்.

அவர்களின் பிடியில் இரண்டு நாட்களாக அகப்பட்டு இருந்தவனுக்கு, நரகம் என்றால் என்ன என்பதைக் காட்டியிருந்தனர் அந்த நான்கு மலைமாடுகளும். ஆம் ,அவர்களது தோற்றம் மிக பயங்கரமாக இருந்தது. அதைவிட பாவம் பார்ப்பது, அவர்களது அகராதியிலேயே இல்லாமல் இருக்க, அவர்கள் அசந்த நேரத்தில் தப்பித்து இருந்தான் தற்போது ஓடிக் கொண்டிருப்பவன்.

அங்கிருந்த புதர் ஒன்றில் மறைந்துக் கொண்டவனோ, தனது மூச்சுக்காற்று கூட வெளியில் கேட்காத வண்ணம் வாயை அடைத்துக் கொண்டான். அவ்விடம் வந்த ரவுடிகளோ, நாலாபுறமும் அவனை தேடியபடி, இரண்டு நபர்களாக பிரிந்து, அவனைத் தேடுவதற்காக சென்றுவிட, அவர்கள் சென்றதும் வெளியே வந்தவன், வேறு வழியாக ஓடத் தொடங்கியிருந்தான்.

தன்னை காப்பாற்ற யாரேனும் வரமாட்டார்களா? என்றவனின் வேண்டுதலுக்கு இணங்க, அவன் ஓடிக்கொண்டிருந்த அதே சாலையில் தனது மகிழுந்தில் வந்துக் கொண்டிருந்தான் ருத்ரஜித்.

அவனது காரைக் கண்டதும், போன உயிர் மீண்டும் வர, வழியை மறைத்து நின்றவன் உதவி கேட்டான். காரை நிறுத்திய ருத்ரஜித்தோ, காரின் கண்ணாடியை கீழே இறக்கி "என்னாச்சு?" என்றதும் தான் தாமதம், பதட்டமடைந்தவனோ, கண்ணீரில் கரைந்தான்.

"சார் என்ன ரவுடிங்க துரத்துறாங்க. என்னை காப்பாற்றுங்க. ப்ளீஸ்." என்று இருகரம் கூப்பி கெஞ்சியவனைப் பார்க்கும் போதே பரிதாபம் தோன்றியது ருத்ரஜித்திற்கு.

"வண்டில ஏறுங்க. நம்ம இங்க இருந்து உடனே போகலாம்." என்றவனோ, அவரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

"யாரு அந்த ரவுடிங்க? எதுக்கு உங்களை துரத்துறாங்க?" என்று சந்தேகத்தை தெளிவாக்கிக் கொள்வதற்காக வினாவினான்.

"தெரியலை சார். இரண்டு நாளா பச்ச தண்ணீ கூட பல்லுல படாமல் கொடுமை படுத்துனாங்க சார்." என்று கண் கலங்கியவனைக் கண்டு பரிதாபம் கொண்டவனோ,

"பயப்படாதீங்க. ஒரு பிரச்சனையும் இல்லை. நம்ம நேரா போலிஸ் ஸ்டேசன் போவோம்." என்றவன் கூறியதும்தான், தனி தெம்பே வந்தது அவனுக்கு.

அடுத்த பத்தாவது நிமிடம் லேசாக கண் அயர்ந்தவனது நெத்தி பொட்டின் மீதே துப்பாக்கியை வைத்திருந்த ருத்ரஜித்தோ, சடுதியில் அவனது நிம்மதிக்கு குட்பாய் சொல்லியிருக்க, கண்களை பட்டென்று திறந்துக் கொண்டவனோ, அதிர்ச்சியுடன் அவனை ஏறெடுத்துப் பார்த்தான்.

அதற்குள் காரை நிறுத்தி இருந்தவனோ, "சதிஷ்... அம் ஐ ரைட்." என்று அவனது பெயரை அழுத்தம் திருத்தமாக அவன் உச்சரித்த தோரணையில் சர்வமும் நடுங்கியது சதிஷிற்கு.

"நீ... நீங்க.." என்று பயத்தில் சதிஷின் வார்த்தைகள் நாக்கை அடைக்க, மென்புன்னகை உதிர்த்தான் ருத்ரஜித். அவனது பரிட்சியமிக்க முகத்தை எங்கோ கண்டு இருக்கிறோம் என்ற சிந்தனையே அப்போதுதான் சதிஷின் மூளையை எட்டியது.

உயிரைக் கையில் பிடித்தபடி ஓடி வந்தவனுக்கு, அந்த நிமிடம் பதட்டத்தில் ருத்ரஜித் யாரென்று சிந்திக்க நேரமில்லாமல் இருந்தது. தற்போது தன்முன் துப்பாக்கியுடன் இருப்பவனைக் கண்டதும் தான் நிதர்சனமே விளங்கியது.

"என்ன சதிஷ் அப்படி பார்க்குற? காருல இருந்து இறங்குறியா? இல்லை நான் இறங்க வைக்கவா?" என்றான் அதிகாரமாக. அடுத்தநொடி காரைவிட்டு இறங்கியிருந்தவனோ, தப்பித்து ஓட பார்க்க, அடுத்துக்கூறிய ருத்ரஜித்தின் வார்த்தைகள் அவனை செயலிழக்கச் செய்தது.
மறுநொடி அவனது கால்களில் விழுந்திருந்தான் சதிஷ்.

"என்னை மன்னிச்சிடுங்க சார். நான் தெரியாமல் பண்ணிட்டேன் சார். இதுல முழுசா என்னோட தப்பு எதுவும் இல்லை. என்னை மன்னிச்சிடுங்க. என்னை நம்பி எனக்கொரு குடும்பம் இருக்கு சார். அவங்களை பார்த்துக்க வேண்டிய கடமையும் எனக்கு இருக்கு." என்று கண்ணீர் மல்க கேட்பவனைக் கண்டு சிறு பரிதாபம் கூட காட்டவில்லை ருத்ரஜித்தின் கண்கள்.

"தெரியும். நான் அவ்ளோ கெட்டவன் எல்லாம் இல்லை. உன் குடும்பத்தை பார்த்துக்குற பொறுப்பு என்னுடையது. அதே சமயம் உன் பாவத்தை கழிக்குற கடமை உன்னோடையது. இரண்டு சான்ஸ் தரேன். ஒன்னு அங்கிருக்க மலையிலயிருந்து குதிச்சு நீயே உன் பாவத்தை கழிச்சுக்கோ. இல்லைனா, வெரி சிம்பிள் நான் உன் பாவத்தை என் துப்பாக்கியால கழிக்குறேன். உனக்கு இதை விட்டா வேற ஆப்சனும் இல்லை." என்றவன் துப்பாக்கியை அவனை நோக்கி காட்ட, அதிர்ந்து போய் எழுந்தான் சதிஷ்.

இத்தனைக்கும் அவன் ஒன்றும் மிகப்பெரிய தவறை செய்யவில்லை. ஆனாலும் அவன் செய்த தவறை நினைத்து வருந்தாத நாளே இல்லை. தனது ஒரு வயது மகளை நினைத்து பார்த்துக் கொண்டவன், மனம் முழுவதும் ரணமாக, மலையை நோக்கி நகர்ந்தான்.

செல்லும் அவனைக் கண்டு வெற்றுப் புன்னகை உதிர்த்த ருத்ரஜித்தின் இதழ்களின் இடுக்கிலும் அனல் நிறைந்து தான் இருந்தது.

மலை உச்சியில் ஏறியவன், "நான் பண்ண தப்புக்கு என் குழந்தையை கஷ்டப்பட விட்ராதீங்க."என்று கூறியபடி பின்னோக்கி கண்களை மூடிக்கொண்டு விழ, தூரத்தில் இருந்தபடியே கண் குளிர ரசித்தான் ருத்ரஜித்.

அவனது குரூர முகத்தினை தனது புகைப்படக் கருவியின் மூலம், மறைந்திருந்த ஒருவனோ படம் பிடித்திருக்க, அதை அறியாத ருத்ரஜித்தோ, தனது காரில் ஏறி அங்கிருந்து சென்றான்.

இந்த இரண்டு நாட்களாக சதிஷை பிடித்து அடைத்து வைத்திருந்தது, அவனது ஆட்களே. அவனை கொல்வதற்காகவே சென்னையிலிருந்து நான்கரை மணி நேரம் பயணம் செய்து இவ்விடம் வந்திருந்தான் ருத்ரஜித். வந்த வேலை முடிந்ததும் அவன் அங்கிருந்து சென்றான்.

அவனை முறைமுகமாக புகைப்படம் எடுத்தவனோ,
"ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சு ருத்ரா." என்று கண்களில் குறும்பு அப்பட்டமாக மின்ன, இதழ்களிலோ பளிச்சென்ற புன்னகை தோன்ற கூறியிருந்தான்.

தனது புகைப்படக் கருவியினுள் உள்ள அனைத்து புகைப்படங்களையும் பார்த்தவனது கண்கள், அந்த ஒரு புகைப்படத்தின் மீது நிலைத்து நின்றது. அதிலிருந்த பெண்ணை கண்டவன், "அடுத்து அந்த ருத்ராவோட டார்கெட் நீதான். அந்த ருத்ரா கையில நீ மாட்டுறதுக்கு முன்னாடி, சீக்கிரமே உன்னை தேடி நான் வரேன்." என்று கூறிக் கொண்டான் அந்த நிழல் மனிதன்.

காரில் சென்றுக் கொண்டிருந்த ருத்ரஜித்தின் கோபம் சற்று மட்டுப்பட, சற்று முன்பு சந்தித்த அபூர்வாவை நினைத்துக் பார்த்தது அவன் மனம்.

"அழகான ராட்சசி" என்று தன்னை மீறி அவன் உதடுகள் உதிர்க்க, மறுநொடி பிரகல்யாவின் முகத்தை நினைத்தவன், "கிளவர் கேர்ள்." என்றுரைத்தான்.

ஒருவனின் மனதில் இருவேறு பெண்களை பற்றிய எண்ணமும் தறிக்கெட்டு ஓட, ருத்ரஜித்தின் வசம் சிக்கவிருக்கும் மூன்றாவது பெண் தான் யார்? என்ற கேள்வியுடன் பயணித்தது அவனின் பயணம் மட்டுமல்ல. நமது பார்வையும் கூட.

அடுத்தநாள் காலை அழகாக விடிந்திருந்தது. தன்னருகே படுத்திருந்த அபூர்வாவின் மீது தண்ணீரை ஊற்றி எழுப்பியிருந்தாள் வந்தனா. அவளது செயலில் அடித்துப் பிடித்து எழுந்தவளோ, தனது கண்களை உருட்டிபடி, தன்தோழியை அக்னிப் பார்வை பார்த்தாள்.

"எதுக்குடி தண்ணீர் ஊத்துன? அறிவு இருக்கா? இல்லையா." என்று கோபத்தில் கத்த, அவளது உஷ்ண பார்வையைக் கண்டு அதிர்ந்துதான் போனாள் வந்தனா.

"அபூ. ரொம்ப நேரமா எழுப்புனேன். நீ எந்திரிக்கவே இல்லைடி. அதான் தண்ணீ ஊத்துனேன். ஆமா எதுக்கு டென்ஷன் ஆகுற? இவ்ளோ எல்லாம் கோபப்படமாட்டியே."

"அது வந்து... யாருக்கா இருந்தாலும் தண்ணீரை தூங்கும் போது ஊத்துனா கோபம் தான் வரும். நீ போடி முதல்ல." என்று சமாளித்தவளுக்கு நன்கு தெரிந்தது அவன் மீதிருந்த கோபத்தை தான் இவள் மீது காட்டிவிட்டோம் என்று.

"நேத்து நடந்தது எல்லாம் ஒருவேளை கனவா இருக்குமோ?" என்று புலம்பியவளை முறைத்தாள் வந்தனா.

"சத்தியமா கனவு இல்லை ஆத்தா. நீ கனவு கண்டுகிட்டே, நிஜத்துல என்னை உருட்டி எடுத்துட்ட? ஸ்சப்பா உன்னோட ஒரே அக்கப்போற போச்சுடி." என்று புலம்பியவளைக் கண்டு மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள் அபூர்வா.

"நான் எத பத்தி சொன்னால்? இவ எத சொல்றா பாரு, லூசு." என்று அங்கிருந்து சென்றவள், பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட குளியலறைக்குள் நுழைந்தபடி குளிக்க, அப்போதுதான் சிவந்து போயிருந்த தனது இடையைப் பார்த்தாள்.

"அடக்கடவுளே. என்னை கொடுமை பண்ணியிருக்கான். இவன் நல்லவனா? கெட்டவனா?" என்று புலம்பியவளுக்கு, 'இதுல என்ன சந்தேகம் கெட்டவன் தான்.' என்று மறுப்பேயின்றி பதிலளித்திருந்தது பெண்ணவளின் மனம்.

கேம்ப் இன்றுடன் முடிவடைவதால், இறுதியாக, ஏலகிரியிலிருந்து இறங்கும் வழியில் அமைந்துள்ள ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிக்கு சென்றிருந்தனர், அவர்களது குழுவினர்.

சலனமில்லாமல் ஏலகிரி மலையிலிருந்து கொட்டும் பன்னீர் போன்ற அருவியைக் கண்டு அனைவரும் மெய்மறக்க,
வந்தனாவோ ஆர்பரித்து வரும் அருவியை பார்த்து மகிழ்ந்தவள், அபூர்வாவை அழைத்துக் கொண்டு அருவிக்குள் சென்றாள்.


தண்ணீர் அபூர்வாவின் மேனியில் பட்டும் கூட, முகத்தில் புன்னகையின்றி, அமர்ந்திருந்த தனது தோழியின் அருகே வந்தாள் வந்தனா.

"என்னடி டல்லா இருக்க?" என்ற தோழியின் உலுக்கலில் மீண்டவள், "அது ஒன்னும் இல்லை. வா என்ஜாய் பண்ணலாம்." என்று தன் மனதை மறைத்தவாறு அவளுடன் சென்றாள்.

'அவனால நான் எதுக்கு உம்முனு இருக்கணும். போடா முகம் தெரியாத காட்டேரி.' என்று அர்ச்சனை மழை பொழிந்தபடி, பெண்ணவளோ தண்ணீரில் நனைய, அவளது இடையை யாரோ உரசுவது போல தோன்றியதில், பட்டென்று திரும்பி பார்த்தாள் பெண்ணவள்.

ஆனால் அங்கு யாருமே இல்லாமலிருக்க, மீண்டும் அவளது கழுத்தை யாரோ தொடுவது போல தோன்றியதில், மீண்டும் அவள் திரும்பி பார்க்க, அருகே இருந்த புதருக்கு பின் ஒரு உருவம் மறைந்திருப்பது போல் அவள் கண்களில் தென்பட்டது.

அருவியில் நனைந்தபடி வந்தனா மனமகிழ்ச்சியில் குதுகளிக்க, அவளை இடையூறு செய்யாமல், தனியாகவே அவ்விடம் எட்டிப் பார்த்தவள், அங்குக் கண்ட காட்சியில் உறைந்து போய் நின்றாள்.


சிறகடிக்கும்
வண்ணத்துப் பூச்சியிவளை
புலம்பவிட்டு சென்றாயோ...?
இல்லை உனது பகையை
பழிதீர்க்க சென்றாயோ....?
உன் ரகசியத்தை படம்பிடித்தவன்
எவனோ.....?
அவனது நிலை நாளை என்னவோ...?
பாவையின் விழிகளை சிறை
எடுக்க மீண்டும் வருவானா வேந்தனவன்?



வேய்ந்தனனின் ஆட்டம் தொடரும்....
Deii... 2 pere unagu over idhula 3 vathu onna.. enga poi mudiumo therila..
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
4.வல்லினம்

உயர் தேக்குமரத்தாலான, மிக பிரம்மாண்டமாக அமைந்திருந்த, வாயிற்கதவினை வீட்டின் காவலாளிகள் திறந்துவிட, நெற்றியில் பட்டையும், கழுத்தில் ருத்ராட்சக் கொட்டையுமாக உள்ளே நுழைந்திருந்தார் புரோகிதர் பரஞ்சோதி.

பிரம்மாண்டமான பாதையின் இருபுறமும் அழகு தாவரங்களும், அதில் பூத்துக்குலுங்கும் மலர்களும் அழகாய் காட்சியளிக்க, அதனை கண்களால் ரசித்தவரது ரசனையினை தடுக்கும் வண்ணம் அவரை அழைத்துச் செல்வதற்காக ஜீப்பொன்று வந்து நின்றது.

ஆம் வாயிற்கதவுத் தொடங்கி வீட்டினை அடையவே அரைகிலோ மீட்டர் தூரம் இருக்கும். பின் ஜீப்பில் அமர்ந்தவர், சுற்றம் முழுவதையும் கண்களால் நிரப்பிக்கொண்டே வந்தார்.
சில நிமிடங்களில் அந்த வெள்ளை பளிங்கு கற்களாலான மாளிகையின் முன்பு ஜீப் வந்து நிற்க, மாளிகையைக் கண்டு வாயைப் பிளந்தபடி, ஜீப்பிலிருந்து இறங்கினார் பரஞ்சோதி.

அவர் மூன்றாவது முறையாக வருகிறார். இருந்தும் எத்தனை முறை அவ்விடத்தை பார்த்தாலும், அவரது கண்களில் நிறையும் பிரம்மிப்பு மட்டும் நீங்கியதே இல்லை. கோவிலில் நுழைவது போல், பணிந்தபடி அம்மாளிகைக்குள் நுழைந்தவரை, புன்னகையோடு வரவேற்றார் வைஜெயந்தி.

சிவப்பு நிற பட்டுசேலையில் ஆங்காங்கே தங்கநிற ஜரிகையில் வேலைப்பாடுகள் அமைந்திருக்க, குங்குமப் பொட்டும், கூர்நாசியில் தவழும் ஐந்து கல் மூக்குத்தியும், கழுத்தில் பொன் தாலியோடு, அலங்கரிக்கப்பட்ட சிவப்பு கல் பதித்த ஆரமும் என, புன்னகைத்த முகத்துடன் வந்து நின்ற வைஜெயந்தியோ, உள்ளிருந்தபடியே அவரை வரவேற்க, அவரைக் கண்டதும் அன்னிச்சையாக கைகளை கூப்பியபடி உள்ளே நுழைந்தார் பரஞ்சோதி.

போனமுறை வந்தபோது, ருத்ரஜித்திடம் வாங்கியத் திட்டுக்கள் நினைவுவர, பெருமூச்சொன்றை விட்டபடி நுழைந்தவரோ, நாலாபுறமும் ருத்ரஜித் இருக்கிறானா? என்பதை கண்களாலே ஆராய்ந்தபடி பார்த்தார்.

அவரது பார்வையை சரியாக கணித்த வைஜெயந்தியோ, "ருத்ரா இல்லை. இந்த முறை எல்லாமே நல்லதா நடக்கும். வாங்க, உட்காருங்க." என்றவர் கூறியதும், பவ்யமாக அமர்ந்துக் கொண்டார். அதன்பின் சிறு நலம் விசாரிப்புகள் நிகழ, வந்த காரியத்தை பேசத் தொடங்கியிருந்தார் பெரியவர்.

"அம்மா, நம்ம தம்பிக்கு ஏத்த மாதிரி வரன் நிறைய வந்திருக்கு. எல்லாரும் நல்ல பெரிய இடம் தான். அப்புறம் நம்ம தம்பி ஜாதகத்தோடு அமோகமா பொருந்தியிருக்கு." என்றவர் பெண்களது புகைப்படங்களை வைஜெயந்தியிடம் கொடுத்தார்.

வைஜெயந்தியோ, புன்னகையோடு புகைப்படங்களை பெற்றுக் கொண்டவர், ருத்ரஜித்தை மனதில் நினைத்தபடி, அவனுக்கு ஏற்ற சரியான துணையைத் தேடத் தொடங்கினார்.

"இந்த பொண்ணு அழகா இருக்கா. நம்ம ருத்ராக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா." என்ற, வைஜெயந்தியின் முகத்தில் சொல்லிலடங்கா பூரிப்பு நர்த்தனம் ஆடியது.

"என்ன ஜெயந்தி. பொண்ணு பார்க்கும் படலம் திரும்ப ஆரம்பிச்சிடுச்சா?" என்று கிண்டல் செய்தபடி மாடியிலிருந்து இறங்கி வந்தார், இந்திரன்.

தனது கணவரது பேச்சில் திரும்பி பார்த்தவரோ, "இந்த முறை கண்டிப்பா, நம்ம ருத்ரா கல்யாணம் நடக்கும். நான் நடத்திக் காட்டுவேன்." என்றார் உறுதியாக.

தன் மனைவியின் உறுதியை எண்ணி இந்திரனின் மனம் மகிழாமல் இல்லை. இருந்தும் தன் மனையாளை சீண்டாமல் இருந்தால், அந்த நாளே கழியாது அவருக்கு.

புன்னகையும், கம்பீரமும் ஒரு சேர வந்தவரோ, "அதுதான் நானும் ஆசைபடுறேன் ஜெயந்தி." என்றார்.

அவரைக் கண்டதும் மரியாதை நிமித்தமாக புரோகிதர் வணக்கம் கூற, அவரும் புன்னகையோடு பதில் வணக்கம் புரிந்தார்.

"நாங்க சொன்னபடி வசதி குறைவா இருந்தாலும் சரி. தங்கமான மகாலட்சுமி வேணும்." என்று இந்திரன் கூற,

"இந்த பொண்ணு பாருங்க. நம்ம ருத்ராக்கு சரியா இருப்பாங்க." என்று தான் தேர்ந்தெடுத்த பெண்ணின் புகைப்படத்தை தன் கணவனிடம் காட்டினார் வைஜெயந்தி.

"ம்ம்ம். நம்ம அண்ணிகிட்ட கேட்போம்." என்றவரோ தன் மனைவியை அழைத்துக் கொண்டு அண்ணியின் அறைக்கு சென்றார்.

வீட்டின் கடைக்கோடியில் அமைந்த அறை அது. அறையில் ருத்ரஜித்தை தவிர எவரும் செல்ல முடியாது. ஏதேனும் மிக முக்கியமான தகவல்களை பரிமாற வேண்டும் என்றால் தயங்கியபடியே வைஜெயந்தியும், இந்திரனும் செல்வர்.

அப்போது கதவு திறக்கபட, திரைக்கு பின்னே இருந்துதான் இந்திரனின் அண்ணியும், இந்திரனின் அண்ணன் கரிகாலனின் மனைவியுமான ஆதிமந்திரை பேசுவார். அதுவும் ஓரிரு வரிகள் மட்டுமே. அவர் கணவன் இறந்ததிலிருந்து அவர் அந்த அறையைவிட்டு வெளி வருவதை முற்றிலும் தவிர்த்திருந்தார். இருந்தும் ருத்ரஜித் நியமித்திருந்த வத்சலா என்னும் முப்பது வயதுமிக்க பெண்மணி மட்டும் ஆதிமந்திரைக்கு தேவையான உணவுகளை எடுத்துச் செல்வது முதல், அவருக்கு தேவையானவற்றை பார்த்துக் கொள்வது வரை உறுதுணையாக இருந்திருக்கிறாள்.

தற்போதும் வைஜெயந்தியும் இந்திரனும் தயங்கியபடி அறைகதவினைத் தட்டினர். வத்சலா தான் கதவினைத் திறந்தாள்.

"அண்ணிகிட்ட பேசணும்." என்றவர் கூறியதும், ஆதிமந்திரையிடம் கூறிய வத்சலாவோ, பின்னர் இவர்களுக்காக வழி விட்டபடி தள்ளி நின்றுக் கொண்டாள்.

வந்த விசயத்தை இந்திரன் சொல்ல, திரைக்கு பின்னிருந்த ஆதிமந்திரையின் முகத்தில் இனம்புரியாத மகிழ்ச்சி துளிர்த்தது. புகைப்படங்களை வைத்துவிட்டு வெளியே இருக்கும்படி கூறியவர், அவர்கள் சென்றதும் புகைப்படத்தினை எடுத்துப் பார்த்தார்.

ஒவ்வொரு புகைப்படமும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவரது மடி மீது ஒரு புகைப்படம் வந்து விழ, புகைப்படம் பின்பு எழுதியிருந்த பெயரும், மருத்துவர் என்ற செய்தி, அவரது கண்களை விரிய செய்தது.

அதன்பின்னரே புகைப்படத்தை திருப்பியவர், அதிலிருந்த பெண்ணை கண்கள் குளிர பார்த்தபடி, அந்த மேசையின் மீது அந்த பெண்ணின் புகைப்படத்தை தனியாக எடுத்து வைத்திருந்தார்.

"சாலா" என்று ஆதிமந்திரை அழைக்க, அவரது அழைப்பில் பரபரப்பாக வந்த வத்சலாவோ, "சொல்லுங்கம்மா." என்றாள் முகத்தில் தவிழும் புன்னகையுடன்.

"இந்திரனை வர சொல்லு." என்றவர் கூறியநொடி, அவர்களை உள்ளே அழைத்திருந்தாள் சாலா.

"இரண்டு பேரும் இந்த பொண்ணைப் பார்த்து பேசி முடிச்சிடுங்க." என்றவர் கூற, புகைப்படத்தை கண்ட இருவருக்குமே திருப்தியாக இருந்தது.

"சந்தோசம் அக்கா." என்று வைஜெயந்தி புன்னகையோடு அங்கிருந்து செல்ல, இந்திரனும் உடன் சென்றார்.

நேராக பரஞ்சோதியிடம் வந்தவர்கள், பெண்ணின் புகைப்படத்தை கொடுக்க, "இந்த பொண்ணா?" என்று அதிர்ந்தார் பெரியவர்.

"என்னாச்சு? எதுக்கு இப்படி அதிர்ச்சியாகுறீங்க?" என்று இந்திரன் கேட்க,

"இந்த பொண்ணுக்கும் நம்ம தம்பி ருத்ராக்கும் பொருத்தம் ஆறு தான் இருக்கு. தனியா எடுத்து வெச்சேன். ஆனால் எப்படி இந்த போட்டோகூட கலந்துச்சுனு தெரியலைங்க." என்று வருத்தத்துடன் கூறினார்.

அவர் அவ்வாறு கூறியதும் வைஜெயந்தியின் முகம் வாடிவிட, இந்திரனோ, "ஜாதகம் பொருத்தம் இதுல எல்லாம் நம்பிக்கை எனக்கும் இல்லை. ருத்ரஜித்துக்கும் இல்லை. நீங்க ஆக வேண்டியத பாருங்க. எங்க அண்ணி சொன்ன பொண்ணுதான் எங்க வீட்டு மருமகள்." என்று புன்னகையோடு கூற, பதில் புன்னகை புரிந்து சரியென தலையசைத்தார் பரஞ்சோதி.

அவர் கைகளிலிருந்த புகைப்படத்தினை இந்திரனிடம் கொடுக்க, அதை பெற்றவர் தன் மனையாளிடம் நீட்டினார். புகைப்படத்திலிருந்த பெண்ணவளை உற்று பார்த்த வைஜெயந்திக்கும் பிடித்துப் போக, புகைப்படத்திற்கு பின்னேயிருந்த பெண்ணவளின் பெயரோடு ருத்ரஜித்தின் பெயரையும் இணைத்து வாசித்துப் பார்த்தார்.

"பிரகல்யா ருத்ரஜித்" என்றவர் கூறும்போதே, வீட்டின் வாயிலிலிருந்த பச்சை மரமொன்று சாய்ந்தது. அதை அறியாதவரோ, தனது அறை நோக்கி செல்ல, வெளியே இருக்கும் தோட்டத்து வேலையாட்களோ, அதிர்ந்து போய் பார்த்தனர்.

******

"மூச்சு ஆழமா இழுத்து விடுங்க." என்ற பிரகல்யாவின் சொல் கேட்டு, எழுபத்தி ஆறு வயதுமிக்க பெரியவர் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டிருந்தார்.

பிரகல்யாவின் காதுகளில் மாட்டப்பட்டிருந்த இதயத் துடிப்புமானியோ, (ஸ்டெத்தெஸ்கோப்) பெரியவரின் இதயத்துடிப்பளவை சரிபார்க்க, உதவிக் கொண்டிருந்தது.

பின் தனது காதிலிருந்த ஸ்டெத்தெஸ் கோப்பை எடுத்தவள், அவரைப் பார்த்து, "ஆ காட்டுங்க, நாக்கை வெளியே நீட்டுங்க." என்று கூறியபடி பரிசோதித்தாள்.

"டாக்டரம்மா. இந்த சளி பிடிச்சு உயிரை வாங்குது. இருமி இருமியே தொண்டை எல்லாம் புண்ணா போகுதுமா." என்று தாத்தா குறைபட்டுக் கொண்டு கூறினார்.

"பயப்பட ஒண்ணுமே இல்லை தாத்தா. ஆமா சளி பிடிக்குற அளவுக்கு தாத்தா என்ன சாப்டீங்க?" என்றாள் ஆர்வமும், கண்டிப்பும் கலந்த குரலில்.

"பக்கத்து வீட்டு பையன் ஐஸ் வாங்கித் தந்தான். ஒண்ணு சுவைக்கும் போதே நல்லா இருந்துச்சு. அதான் இன்னும் இரண்டு சேர்த்து சாப்டேன். எல்லாம் அந்த எடுபட்ட பய செஞ்ச வேலையாக்கும்." என்று சலித்தபடி கூறியவரைக் கண்டு மென்னகை புரிந்தாள் பிரகல்யா.

"நான் கொடுக்குற டானிக்கை ஒரு நாலு நாளைக்கு குடிங்க, சுடு தண்ணீ தான் குடிக்கணும். அப்புறம் தாத்தா, வாழைப்பழம், ஐஸ்கிரீம் இது பக்கமே போக கூடாது. ஆசைக்காக சாப்டீங்க இன்னும் சளி அதிகமாகிடும், உங்களால சரியா தூங்ககூட முடியாது பார்த்துக்கோங்க. " என்று எச்சரிக்கை விடுப்பதை போன்று அவள் எடுத்துரைக்க, தாத்தாவின் தலை அன்னிச்சையாக சரியென தலையசைத்தது.

தாத்தாவுக்கான மருந்துகளை எழுதிக்கொடுத்தவள், அவர் சென்றதும் வாசலின் அருகே வந்து நின்றாள். கதவில் சாய்ந்தபடி நின்றவளின் சந்தன நிற சுடிதார் அவளது நிறத்திற்கு ஏற்ப, அழகாய் தேகத்தோடு பொருந்தியிருக்க, சிவப்பு நிறத்தாலான துப்பட்டாவோ காற்றில் அசைந்துக் கொண்டிருந்தது. தனது கைக்கடிகாரத்தை, ஒரு கைகளால் வருடிபடி நின்றிருந்தவளோ, எதிரே இருந்த மரங்களின் அசைவுகளை கண்களாலே ரசித்துக் கொண்டிருந்தாள்.

இயற்கையின் அழகினை ரசிப்பது அவளுக்கு மிகவும் பிடித்த செயல். இயற்கை விரும்பியவளின் கவனம் கலைப்பதற்காகவே,
அந்நொடி பெண்ணவளின் அலைபேசி அவளது செவிகளை தீண்டியது. உடனே சென்றவள், கைபேசியை எடுக்க, அதில் கூறப்பட்ட செய்தியில் அதிர்ந்துதான் போனாள்.

"ரமேஷ் அண்ணா." என்றவள் அழைக்க, விரைந்து வந்தார் ரமேஷ்.

"என்னாச்சு பாப்பா?" என்றவருக்கோ, அதிர்ந்த நிலையிலிருந்த பிரகல்யாவின் முகம் மனதை தைத்தது.

"அண்ணா, ஒரு முக்கியமான வேலையிருக்கு. நான் உடனே கிளம்புறேன். நீங்க கிளினிக் சாத்திட்டு, சாவி கொண்டு போயிடுங்க." என்றவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அடுத்த இரண்டே நிமிடத்தில் அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் அவள் வந்து சேர்ந்தது திருப்பத்தூர் காவல் நிலையத்திற்கு. காரை நிறுத்தியவள், விரைந்து காவல் நிலையத்திற்குள் நுழைந்திருந்தாள்.

பரபரப்பாக இருந்த காவல்நிலையமும், தேநீரை அருந்திய வண்ணம் பேசிக்கொண்டிருந்த ஏட்டுக்கள் தொடங்கி, ஜெயிலுக்குள் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்த கைதிகள் வரைக்கும், என அவ்விடத்தை காணும்போதே சிறு அச்சம் துளிர்த்தது பெண்ணுக்கு. இருந்தும் அவளது கண்கள் நாலாபுறமும் தேடியது என்னவோ தனது தங்கையை தான்.

தன் தங்கை காவல் நிலையத்தில் விசாரணைக்காக, அழைத்து வரப்பட்டாள் என்ற செய்தியினைக் கேட்டதும் பதறிக்கொண்டு வந்தவளுக்கு, அவ்விடம் ஓரமாக போடப்பட்டிருந்த மரயிருக்கையில் அமர்ந்திருந்த அபூர்வாவைக் கண்டதும் தான் உயிரே வந்தது.

"அபூமா..." என்றவள் அழைத்துக்கொண்டே தன் தங்கையின் தோளைத் தொட, அசையாது சிலைபோல் அமர்ந்திருந்தாள் பெண்ணவள். அவளது நிலைக் கண்டு அச்சம் கொண்டவள், "அபூர்வா" என்று பெண்ணவளை உலுக்க, அதில் தன்னிலை உணர்ந்தவள், அங்கு நின்ற தன் தமைக்கையை கண்களுக்குள் நிரப்பியிருந்தாள்.

"அக்கா வந்துட்டியா?" என்ற அபூர்வாவின் கைகள் பிரகல்யாவின் இடுப்பை வளைத்துக் கட்டிக் கொண்டது. அவளது உடல் வேறு, ஒருபுறம் நடுக்கத்தோடு இருக்க, அபூர்வாவின் முதுகை ஆதரவாக வருடிவிட்டாள் பிரகல்யா.

"ஒண்ணும் இல்லைடா அபூமா. என்னாச்சு? ஏன் இப்படி இருக்க?" என்று மென்மையாக தலையை வருடியபடி கேட்டாள்.

"அக்கா.... நான்..." என்று இழுத்தவள், தட்டுத்தடுமாறி தான் பார்த்தைக் கூறத் தொடங்கினாள்.

புதரின் பின்னே யாரோ இருப்பது போல் தோன்றியதில் எட்டிப் பார்த்த அபூர்வாவோ அவ்விடம் கண்ட காட்சியில் உறைந்து தான் போனாள்.

இறந்த நிலையில் ஒரு ஆணின் சடலம் யாரும் பார்க்க முடியாத நிலையில் கிடக்க, முகத்திலும், உடலிலும் ரத்தம் உறைந்து போயிருந்தது. அதனைக் கண்டதும் ஆவென அபூர்வா கத்தியிருக்க, அவள் சத்தம் கேட்டு அனைவரும் திரண்டனர் அவ்விடம்.

அடுத்தநொடி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த காவல் துறையினரோ, சடலத்தை முதலில் பார்த்த, அபூர்வாவிடம் விசாரணை நடத்த, பெண்ணவளோ அசையாமல் சிலைபோல் நின்றாள்.

சிலைபோல் நிற்பவளை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துவிட, அவளின் அலைபேசியின் மூலமே பிரகல்யாவை அழைத்திருந்தார் இன்ஸ்பெக்டர் பார்த்திபன்.

நடந்தவற்றை கூறியவள் தன் தமக்கையின் தோளில் சாய்ந்துக் கொண்டாள். "அக்கா. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. நம்ம வீட்டுக்கு போலாம்." என்று நெஞ்சு படபடக்க கூறினாள்.

"சரி அபூமா. நீ இங்க உட்காரு. நான் பேசிட்டு வரேன்." என்றவள் இன்ஸ்பெக்டரை நோக்கி செல்ல, அவரோ சப் இன்ஸ்பெக்டரிடம் கேசை பற்றி தீவிரமாக விசாரித்த வண்ணம் இருந்தார்.

"முகிலன். அங்க பாடி பக்கத்துல கிடைச்சா கேமிரா பத்தி எதாவது தெரிஞ்சுதா?"

"சார் அதுலயிருந்த மைக்ரோ எஸ்டி கார்டு மிஸ்ஸிங். அவன் ஒரு ரிப்போர்ட்டரா இருக்குறதுனால ஒருவேளை அவனை கொன்னுட்டு, அந்த கார்டை எடுத்துட்டு, அப்புறம் மலையில இருந்து தள்ளி விட்ருக்க வாய்ப்பு இருக்கு சார்."

"எஸ். இல்லைனா தற்கொலையா கூட இருக்கலாம். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வரட்டும் முகிலன்." என்று தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான் பார்த்திபன்.

அந்நேரம் "சார்." என்ற பிரகல்யாவோ, மென்மையாக அவனை அழைக்க, அவனோ அவளைக் காணாது தீவிரமாக பேசிக்கொண்டபடி இருந்தான்.

"க்கூம்... சார்" என்று தொண்டையை பிரகல்யா சொறும, அதுவும் அவனது காதுகளை எட்டவில்லை. மீண்டும் அவள் "சார்..." என்று சத்தமாக வாய் திறந்து அழைக்கும் முன், "இன்ஸ்பெக்டர் சார்." என்று ஒருவன் தனது சிம்மக்குரலில் அழைக்க, அந்த நிமிடம் அவனை அவள் மட்டும் திரும்பிப் பார்க்கவில்லை. இன்ஸ்பெக்டர் பார்த்திபனும் பார்த்தார்.

"விஷ்வா ஐ அம் ரைட். உங்களை வெயிட் பண்ண சொன்னனே." என்றான் பார்த்திபன் புருவம் தூக்கியபடி. பின் அவனைப் பார்த்துக்கொண்டே பிரகல்யாவின் மீது பார்வை படிய, "ஆமா... நீங்க?" என்றான் கேள்வியாக.

"இவங்க கூப்பிட்டே இருந்தாங்க. நீங்க பார்க்கலை. அதான் நான் சத்தமா கூப்பிட்டேன்." என்று விஷ்வா எடுத்துரைக்க, அவனை முறைத்தபடி, தனது பார்வையை பிரகல்யாவின் மீது பதித்தான் பார்த்திபன்.

பிரகல்யாவோ பார்வையாலே விஷ்வாவிற்கு நன்றியினை உரைத்திருந்தாள்.

"பார்ட் டைம் பத்திரிகை நிருபருக்கு ரொம்பவே அக்கறைதான்." என்று கிண்டலடித்தவன், பிரகல்யாவைப் பார்த்து, "சொல்லுங்க டாக்டர் என்ன விசயம்?" என்றான் அழுத்தமாக.

"சார் என்ன எப்படி உங்களுக்கு தெரியும்?" என்றவளுக்கோ சற்று முன்பு 'நீங்க?' என்று தெரியாததைப் போல் கேட்டவனே நினைவுக்கு வந்தான்.

"உங்க தங்கச்சி வந்ததுல இருந்து சொன்ன ஒரே வார்த்தை நீங்க தான். அப்புறம் உங்களுக்கு போன்ல இன்பார்ம் பண்ணதும் நான் தான். உங்க வாய்ஸ் நல்லா ஞாபகம் இருக்கு."

"ஓகே சார். ஆனால் எதுக்கு என் தங்கச்சியை போலிஷ் ஸ்டேஷன் வரை கூப்பிட்டு வந்திருக்கீங்க. அவ மட்டுமா அந்த டெட்பாடியை பார்த்திருக்கா? அங்க எவ்வளவு பேரு பார்த்தாங்க?" என்று சற்று காட்டமாகவே கேட்டாள்.

"எல்லாரும் பார்த்தாலும், முதல்ல பார்த்தது உங்க தங்கச்சி. சோ அவங்களை முதல்ல விசாரிக்காமல், நான் யாரை விசாரிப்பேன்." என்றவன் புருவத்தை உயர்த்த,

"அதை நீங்க அங்க வெச்சே விசாரிக்கலாமே சார்."

"ஆனால் உங்க தங்கச்சி பதில் சொல்ற நிலைமையிலேயே இல்லையே? நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்க?" என்று அவளுக்கே மீண்டும் வினாவினைத் தொடுத்தான் பார்த்திபன்.

"சின்ன பொண்ணு இறந்த சடலத்தை வெட்டவெளியில பார்த்தால் பயப்படாமல் என்ன பண்ணுவா? ப்ளீஸ் சார் அவளை விசாரிக்குறனு டார்ச்சர் பண்ணிடாதீங்க. அவ ஒன்னும் கொலை பண்ணதை பார்க்கலை. ஜஸ்ட் தண்ணீல கிடந்த பிணத்தை தான் பார்த்திருக்கா."

"ம்ம்ம். வெல் நாங்களே இன்னும் கொலையா தற்கொலையானு கண்டுபிடிக்கலை. நீங்க எப்படி டாக்டர் கொலைனு சொல்றீங்க?" என்றவனின் கேள்வியில் அதிர்ந்துப் போய் பார்த்தாள் பிரகல்யா.

"வாட்... சார் நீங்க விசாரிக்குறத பார்க்கும் போது எனக்கு அப்படிதான் தெரிஞ்சுது. அதான் அப்படி சொன்னேன். இதுக்கும் ஒரு சந்தேகமா?" என்றாள் குழம்பிய முகத்துடன்.

"ம்ம்ம்ம். நீங்க கிளம்பலாம் டாக்டர். எதாவதுனா உங்களையும் விசாரிப்பேன். என்ன பண்றது? போலிஸ்காரன் பொழப்பே அப்படி தான். எல்லாரையும் சந்தேகத்தோடுதான் பார்ப்போம்." என்று கூறும்போது அவனின் பார்வை சந்தேகமாக அபூர்வாவின் மீது படிந்து மீண்டது.

"தாங்ஸ்." என்று ஒற்றை நன்றியில் முடித்த பிரகல்யாவோ தனது தங்கையைக் கையோடு அழைத்துக்கொண்டு அவ்விடமிருந்து சென்றாள்.

செல்லும் வழியில், அபூர்வாவை பழைய நிலைக்கு திருப்ப பல்வேறு முறையில் முயற்சி செய்தாள் பெண்ணவள்.
ஒருகட்டத்தில் தன் தமக்கைக்காக புன்னகைத்தாள் அபூர்வா.

"அக்கா பயப்படாத. தூங்கி எழுந்திரிச்சா நார்மல் ஆகிடுவேன்." என்று புன்சிரிப்பொன்றை உதிர்க்க, அவளது தலையை செல்லமாக வருடினாள் பிரகல்யா.

அன்றைய பொழுது அவ்வாறே கழிய, அடுத்த நாள் காலை அழகாய் விடிந்தது. விடியற்காலை பொழுதில் உறங்கிக் கொண்டிருந்த தனது தங்கையின் தலையை வருடியவள், நடைப்பயிற்சி புரிவதற்காக எப்போதும் செல்லும் பூங்காவிற்கு சென்றிருந்தாள்.

எப்போதும் தன்னோடு அபூர்வாவையும் அழைத்துக் கொண்டே வருபவள், இன்று அவள் நிம்மதியாக தூங்கட்டும் என்று நினைத்துக் கொண்டு, தான் மட்டும் அவ்விடம் நோக்கி சென்றாள்.

அதிகாலை வேளையில் சிறு ஓட்டப்பயிற்சி அவள் மேற்கொள்ளும் போதே, யாரோ அவளின் பின்னே வருவது போல தோன்றியது பெண்ணவளுக்கு.

உடனே அவள் திரும்பிப் பார்க்க, அங்கு யாருமில்லாமல் இருப்பதைக் கண்டு மீண்டும் ஓடத் தொடங்கினாள். மீண்டும் அதே உள்ளுணர்வு எழ, திரும்பியவளுக்கு அங்கு யாருமில்லாமல் இருப்பதைக் கண்டு, குழப்பம்தான் ஏற்பட்டது..

"என்னாச்சு நமக்கு?" என்று யோசித்துக் கொண்டே பெண்ணவள் திரும்ப, அவள் முன் வந்து நின்றான் ஒருவன். அவனை அவ்வளவு அருகில் கண்டதும் ஒரு நிமிடம் பெண்ணவள் அச்சம் கொண்டபடி, பின்னோக்கி விழ சென்றவளின் இடையினை பற்றி, விழாமல் பிடித்து நிறுத்தினான் அவன், ருத்ரஜித்......


மருண்டு விழிக்கும்

மங்கையவளின் இடையைப்
பற்றிய கைகள்தான் - நேற்று
அவளின் தங்கையை பற்றியதோ...
யாரிவன் என்று அறியாமல்
அவன் விரிக்கும் வலையில்
அகப்படுவார்களோ!

இவ்விரண்டு மங்கைகளும்....

வேய்ந்தனனின் ஆட்டம் தொடரும்.....
Dei oru time la 2 pera epdi da crt pannuva... killadi than da ne.😂
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
5.வல்லினம்

கீழே விழச் சென்றவளை, தனது ஒற்றை கரத்தினால், விழாமல் பிடித்து நிறுத்தியிருந்தான் ருத்ரஜித். ஆணவனின் திடீர் தொடுகையில், அவளது உடலில் சிறு நடுக்கம் தோன்ற, தனது அதிர்ந்த விழிகளை மறைக்க முற்பட்டவள் தோற்றுதான் போனாள் அவனிடம். குறும்புத் தவழும் அவனது கண்களும், வசிகரிக்கும் சிரிப்பினை உதிர்க்கும் இதழ்களும் அவளோடு பேசத் தொடங்கியது.

"ஆர் யூ ஓகே." என்றவனின் வார்த்தைகள் பெண்ணவளின் செவி வழி நுழைந்த நொடி, பட்டென்று அவனது கைகளைத் தட்டி விட்டவள், அவனைவிட்டு தள்ளி நின்றுக்கொண்டாள்.

அவளைப் பொருத்தவரை அவன் அந்நியன் அல்லவா? சிரிக்கும் பெண்ணவளின் முகம் கோபத்தை சுமந்திருக்க, அவனை உறுத்து விழித்தாள் பிரகல்யா.

"கொஞ்சம் கூட அறிவில்லையா உங்களுக்கு? இப்படி தான் பொது இடத்துல வந்து, பொண்ணுகிட்ட தப்பா பிஹைவ் பண்ணுவீங்க?" என்றாள் அடிக்குரலை உயர்த்தியபடி.

"ஹலோ மேடம். நீங்க தான் எங்கேயோ வேடிக்கை பார்த்துட்டே என் மேல மோத வந்தீங்க. சரி விழப் போறீங்கனு, கீழவிழாமல் பிடிச்சு உதவுனா ரொம்பதான் பேசுறீங்க?" என்றவனோ தனது கைகளைக் கட்டிக்கொண்டபடி பொங்கி எழுந்தான்.

அவன் கூறியது போலவே, அவள்தான் தன்னை யாரோ பின்தொடர்கிறார்கள் என்று எண்ணியவாறு, திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடினாள். அவன் சொல்லில் தெரிந்த உண்மையினைப் புரிந்துக் கொண்டவள், அவனை சங்கடமாக பார்த்தாள்.

"சாரிங்க." என்றவள் உண்மையாக வருத்தப்பட்டே மன்னிப்பையும் அவனிடம் கேட்டாள்.

அவளது செயலில் சிறு புன்னகை அவனது இதழில் எட்டிப்பார்க்க, "இட்ஸ் ஓகே. உங்களுக்கு என்ன டென்ஷனோ, அதுனால அப்படி பேசியிருப்பீங்க. விடுங்க." என்றவன் சிறு தலையசைப்போடு, அவளைக் கடந்துச் சென்றான்.

"ச்சே, ரொம்ப நல்லவரா இருக்காரு. இவரை போய் தப்பா நினைச்சுட்டோம்." என்று தனது நெற்றியை செல்லமாக தட்டிக் கொண்டவளோ, செல்லும் அவனைக் கண்டு புன்னகையோடு பார்க்க, இவளை உண்மையாகவே பின்தொடர்ந்து வந்த வாலிபனோ, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சற்று தூரம் சென்ற ருத்ரஜித்தோ, வெளியே நின்றிருந்த தனது காரில் ஏறி அமர்ந்துக் கொண்டபடி, வெகுநேரமாக தனது அலைபேசியினை தொடர்புக்கொள்ள முயற்சித்திருந்த, வைகை செல்வனுக்கு அழைப்பை விடுத்திருந்தான்.

"பாஸ் எங்க போனீங்க? இரண்டு நாளா நம்ம போட்டிருந்த, மீட்டிங் எல்லாமே கேன்சல் பண்ணிட்டீங்க. பாஸ் நீங்க எங்க தான் இருக்கீங்க இப்போ?" என்று பரிதவிப்பில் கேட்டவனது குரலில் அவனைப் பற்றிய அக்கறையும் எட்டிப் பார்த்தது.

"இங்க பாஸ் நீயா? இல்லை நானா? நிறைய கேள்வி கேட்குற வைகை." என்றான் சிறு நக்கல் தொணிக்கும் குரலில்.

"அது இல்லை பாஸ். உங்களை இரண்டு நாளா பார்க்க முடியலையேனு பதட்டத்துல கேட்டுட்டேன்."

"ஹாஹா. எனக்கு பொண்டாட்டி இருந்திருந்தா கூட, இப்படி பதட்டப்பட மாட்டாங்கடா." என்றவன் சிரித்ததும் தான் வைகைக்கு போன உயிரே மீண்டும் வந்தது.

"பாஸ். நாளைக்கு மும்பையில எச்.ஆர்.கே கம்பெனியில மீட்டீங் இருக்கு. அப்புறம்." என்றான் தயங்கியபடி.

"அப்புறம் என்ன வைகை. எனக்கு பொண்ணு பார்த்துட்டாங்க அதானே." என்றவனின் பதிலில் வைகையின் கண்களில் ஆச்சரியம் எட்டிப்பார்க்காமல் இல்லை. எவ்விடமிருந்தாலும் தன்னை சுற்றி நடப்பதை தெரிந்து வைத்திருக்கிறார் என்பதில் அவனுக்கு என்றுமே பிரம்மிப்பு தான்.

"பாஸ். அம்மாவே தேர்ந்தெடுத்திருக்காங்க. அப்புறம் நாளைக்கே பொண்ணு வீட்டுக்கு போய் பேச போறாங்க."

"இண்ட்ரஸ்டிங்க். இந்த கல்யாணம் எப்படி நடக்குதுனு நானும் பார்க்குறேன். மும்பை மீட்டிங் அரெஞ்சு பண்ணு. ஈவினிங் பிளைட்ல கிளம்புறோம்." என்று உரையை முடித்தவன் போனை வைத்துவிட, மறுமுனையிலிருந்த வைகைக்கோ கலக்கமாக இருந்தது.

"இவருக்கு கால்கட்டு போட்டால் சரியாகிடுவாருனு பார்த்தால், பிடிக்கொடுக்க மாட்டாரு போலயே. சரி நடப்பது அனைத்தும் நன்மைக்கே." என்று பெருமூச்சொன்றை விடுத்த வைகையோ அவனது வேலைகளைப் பார்க்க ஆரம்பித்திருந்தான்.

இங்கு, தூங்கிக் கொண்டிருந்த அபூர்வாவோ அடித்துப் பிடித்து எழுந்தாள். "அய்யோ மம்மி. இது என்ன இந்த அபூக்கு வந்த சோதனை. என் வாழ்வை நினைச்சா ஒரே வேதனையா இருக்கே. பட்டபகல்ல கல்யாண கனவா வருதே. சரியில்லையே?" என்று உதட்டை பிதுக்கியவள், நல்லவேளையாக நேற்று நடந்தவற்றை மறந்திருந்தாள்.

அதுதான் அபூர்வா. தொண்டையை அடைக்கும் துக்கம் வந்தாலும் எளிதில் கடந்துவிடுவாள் என்பதைவிட மறந்துவிடுவாள் என்பதே திண்ணம். அடித்துப் பிடித்து எழுந்தவளின் புலம்பல் சத்தம், அவளின் அன்னைக்கே கேட்டுவிட, அவளது அறையின் கதவினைத் திறந்தபடி அவ்விடம் வந்தார் சரஸ்வதி.

"என்னடி இன்னும் நீ பெட்ல இருந்தே எழுந்திரிக்கலையா? நேரங்காலத்துல எழுந்திரிக்குற பழக்கமே இல்லாமல் இருக்க? உங்க அக்காக்கு அடுத்து, வேற வீட்டுக்கு போற பொண்ணு பொறுப்பா இருக்க வேண்டாமா?" என்றவரின் அதட்டலை, தேவகாணம் கேட்பது போல முகத்தை வைத்துக் கொண்டு இன்பமாக கேட்டாள் சின்னவள்.

"அடிக்கழுதை. நான் பாட்டுக்கு சொல்லிட்டே இருக்கேன். நீ என்னடானா, ரசிச்சுகிட்டு இருக்க?"

"எனது அன்னை சரஸ்வதியே, உங்களது பேச்சு என்னும் இசைமழையில் நனைந்துக் கொண்டிருக்கும் அடியவள் நான். உங்களது திட்டுக்கள் ஒவ்வொன்றும் தேவகானமாய், என் செவி வழி நுழைந்து, இதயத்தை தொடுகிறது." என்று சிலாகித்தவளின் மீதே தன் அக்னிப்பார்வையை பொழிந்தவர்,

"எங்க அந்த துடைப்பக்கட்டை." என்று நாலாபுறமும் தேட, பதறி எழுந்தவளோ, "சரஸ்வதி இப்போ பத்ரகாளியா மாறிடுச்சு. மீ எஸ்கேப்." என்று கூறிக்கொண்டே அறையை சுற்றி ஓடியவள், வெளியே ஓடிச் செல்ல, அவளைத் துரத்திக்கொண்டே மூச்சிறைக்க ஓடி வந்தார் சரஸ்வதி.

"நில்லுடி குட்டி பிசாசு." என்று மூச்சு வாங்கிக்கொண்டே அவர் வர, அவருக்கு பளிப்புக் காட்டிய சின்னவளோ, வாசலில் செய்தித்தாளை வாசித்தபடி அமர்ந்திருந்த, தனது தந்தைக்கு பின்னே சென்று மறைந்துக் கொண்டாள்.

"என்னடா பாப்பம்மா. வந்ததும் வராததுமா, அம்மாகூட சேட்டை பண்றியா?" என்றவருக்குமே அப்போதுதான் நிம்மதியாக இருந்தது. நேற்று வீட்டிற்கு வந்தவள் யாருடனும் பேசாமல் அமைதியாகவே தனது அறைக்கு சென்று விட்டாள். இன்று பழையபடி சேட்டை செய்பவளைக் கண்டதும் தான் சத்யராஜிற்கு நிம்மதியே பிறந்தது.

"டாடி. இந்த சரசு ரொம்ப பண்ணுது. அக்காவை மட்டும் தங்கம் வைரம்னு கொஞ்சுது. என்னை மட்டும் துடைப்பக்கட்டையால அடிக்க வருது டாடி. என்னென்னு கேளுங்க." என்றவள் செல்லமாக புகார் மழையைப் பொழிந்தாள்.

தன் கணவரின் முன் மூச்சிறைக்க வந்து நின்ற சரஸ்வதியோ, "பாருங்க. இந்த சின்னவாண்டு என்ன பேச்சு பேசுதுனு." என்று பதிலுக்கு அவரும் புகார் தொடுக்க, இருவரின் மத்தியிலும் மாட்டிக்கொண்டு அல்லல் பட்டார் அந்த மனிதர்.

அந்தநொடி அவரது கைபேசி அழைத்து அவரைக் காப்பாற்ற, "அமைதியா இருங்க இரண்டு பேரும்." என்று இருவரையும் அமைதிப்படுத்தியபடி அழைப்பை உயிர்பித்தார்.

எதிர்புறம் கேட்ட செய்தியில் புன்னகைத்தவர், "கண்டிப்பா. நாளைக்கே எல்லா ஏற்பாடும் பண்ணிடலாம். நேத்து அவ்ளோ பெரிய இடத்து சம்மந்தம் வரப் போகுதுனு தெரிஞ்சப்போவே ரொம்ப சந்தோஷமா தான் இருந்துச்சு. இப்போ அவங்க நேரடியாக வீட்டுக்கு வரது நினைச்சா இரட்டிப்பு மகிழ்ச்சி தான். நான் பார்த்துக்குறேன்." என்று மறுமுனையிலிருந்த புரோகிதர் பரஞ்சோதியிடம் பேசியபடி அலைபேசியை அணைத்திருந்தார்.

நேற்றைய தினமே, இந்த செய்தி புரோகிதரின் மூலமாக அவரை வந்தடைந்தது. தொழில் துறையில் மிகப்பெரிய இடத்தில் இருப்பவர்களது வீட்டில் தன் மகள் வாக்கப்பட்டு செல்லவிருக்கிறாள் என்ற மகிழ்ச்சியே அவரை சம்மதிக்க வைத்தது. இருந்தும் அவர் ருத்ரஜித்தை பற்றி விசாரிக்க, அவனைப் பற்றி நற்செய்திகளும், பாராட்டுக்களுமே கிடைக்க பெரும் உவகைக் கொண்டார் மனிதர். இன்று தான் தன் மகளிடம் இவ்விசயத்தை பற்றி உரைக்க இருந்த வேளையில், நாளை அவர்கள் வருகிறார்கள் என்ற செய்தி இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்திருந்தது அவருக்கு.

தன் தந்தையின் பிரகாசித்த முகம் பலநூறு கதைகளை பேச, "என்ன டாடி. முகம் டாலடிக்குது. என்ன விசயம்?" என்று ஆர்வமாக கேட்டாள் அபூர்வா.

"உங்க அக்காவை நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்க."

"என்ன டாடி சொல்லவே இல்லை." என்று இன்ப அதிர்ச்சியுடன் கேட்டாள் சின்னவள்.

"நீ கேட்கவே இல்லைடா பாப்பம்மா." என்று சின்னவளின் மூக்கினைப் பிடித்து ஆட்ட, தன்னை போலவே பேசும் தன் தந்தையை செல்லமாக முறைத்தாள் அபூர்வா.

"ஆமா. பெரிய மனுசி உங்கிட்ட சொல்லிட்டுதான் செய்வாங்க பாரு. இன்னும் உங்க அக்காக்கே சொல்லலை." என்று சரஸ்வதி அவளது கன்னத்தைக் கிள்ளினார்.

"அப்போ நான் தான் அக்காகிட்ட சொல்வேன். சோ அமைதியா வேடிக்கை பாருங்க இரண்டு பேரும்." என்று உத்தரவிட்டவள் அன்னை கிள்ளிய தனது கன்னத்தை நீவியபடி அங்கிருந்து சென்றாள்.

"அறுந்தவாலு." என்று புன்னகை புரிந்தார் சரஸ்வதி.

இவையாவும் அறியாத பிரகல்யாவோ வீட்டிற்கு வந்தவள் வந்ததும் சிறிது நேரம் இளைப்பாறினாள். அதன்பின்னரே குளிப்பதற்காக அறைக்கு சென்றிருக்க, அங்கு அபூர்வாவோ கணினியில் தீவிரமாக எதையோ பார்த்தபடி இருந்தாள்.

"என்ன பார்க்குறீங்க மேடம்?"

"சும்மா தான் அக்கா. ஆமா இன்னைக்கு நீ ஏன் என்னைவிட்டு தனியா ஜாக்கிங் போன?"

"நீதான் அசந்து தூங்கிட்டு இருந்தியே பேபி. சரிடி நான் குளிச்சிட்டு வரேன்." என்று கூறிக்கொண்டே அவளது உடைகளை எடுத்தவள் குளிக்க சென்று விட்டாள்.

'அடேய் பிரக்ஸ்... நான் என்னை பார்த்துட்டு இருந்தேன்னு தெரிஞ்சா. செம சாக் ஆகிடுவ.' என்று புன்னகையோடு நினைத்துக் கொண்ட சிறியவளோ, தனது மடிக்கணினியில் சிரித்த முகத்துடன் இருந்த ருத்ரஜித்தை மிக ஆர்வமாக பார்த்தாள்.

"வாவ் மாமா. செம ஹேண்ட்சமா இருக்கீங்க. அக்கா நீ கொடுத்து வெச்சவ." என்று புன்னகையும், பிரம்மிப்பும், ஆர்வமும் கலந்து, ருத்ரஜித்தின் புகைப்படத்தினை தன் கண்களுக்குள் நிரப்பிக் கொண்டவளோ, ருத்ரஜித் தான் தன்னிடம் அன்று அவ்வாறு நடந்துக்கொண்டான் என்று அறிந்தால், அந்த நொடி அவள் நிலை என்னவாக இருக்கும்? என்பது விதி அறிந்த ஒன்று.

குளித்து முடித்து வெளியே வந்த பிரகல்யா, தனது கிளினிக்கிற்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருக்க, அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டாள் அபூர்வா.

"என்ன டி காலையிலேயே பாச மழை பொழியுற. என்ன விசயம்?"

"என் அக்காவை கொஞ்ச எதாவது விசயம் இருக்கணுமா என்ன? ஏய் பிரக்ஸ் உன் கல்யாணத்துக்கு, எனக்கு செம கிராண்டா சாரி வேணும். வாங்கித் தருவியா?" என்றவளின் முகத்தில் டன்கணக்கில் ஆவல் தெரிந்தது.

"பார்ரா. என்னமோ நாளைக்கே எனக்கு கல்யாணங்குற மாதிரி பேசுற. அது நடக்கும் போது நம்ம அப்பாகடையில போயி எடுத்துக்கலாம் சரியா." என்றவள் லேசாக முறுவல் புரிந்தபடி தனது முடியினை பின்னலிட்டுக் கொண்டிருந்தாள்.

அவளது சொல்லில் களுக்கென்று சிரித்த சின்னவளோ, "கவலைப்படாத அக்கா. நாளைக்கே கல்யாணம் எல்லாம் இல்லை. நாளைக்கு உன்னை பொண்ணு மட்டும் பார்க்க வராங்கோ." என்றதும்தான் தாமதம், அவளை அதிர்ச்சியுடன், திரும்பி பார்த்தாள் பிரகல்யா.

"என்னடி சொல்ற? உன் விளையாட்டுக்கு அளவில்லாமல் போச்சு."

"அக்கா நான் உன்கிட்ட இந்த விசயத்துல விளையாடுவேனா? மாப்பிள்ளை பேரு ருத்ரஜித். செமையா இருக்காருக்கா. மிஸ் பண்ணிடாத." என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தன் தந்தையைக் காண அறையை விட்டு சென்றிருந்தாள் பிரகல்யா.

"டாடி..." என்றவள் அவர் அறையின் முன்பு வந்து நிற்க, அவளது குழப்பம் நிறைந்த முகத்தைக் கண்டதுமே, புரிந்துக் கொண்டார் சத்யராஜ்.

"டாடி எது பண்ணாலும் உன் நல்லதுக்குதானடா பாப்பா." என்று மிக சாதாரணமாக கூறிவிட்டார்.

ஒவ்வொரு முறையும் தன்னைக் கேட்டு, பார்த்து பார்த்து செய்யும் தந்தை இம்முறை தன்னை எதுவும் கேட்கவில்லையே என்ற கவலை நிறைந்திருக்க, சங்கடமாக அவரைப் பார்த்தாள் பிரகல்யா.

"புரியுதுடா பாப்பா. என்னடா, டாடி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் முடிவு எடுத்ததா நினைக்குறியா? மாப்பிள்ளை பத்தி எல்லாம் விசாரிச்சுட்டேன். நம்மளைவிட பலமடங்கு வசதியான குடும்பம் தான். இருந்தாலும் அவரை பத்தி விசாரிக்காமல் நான் இந்த முடிவு எடுக்கலைடா. பாப்பா உனக்கு வாட்ஸ்அப்ல மாப்பிள்ளை போட்டோ அனுப்பியிருக்கேன். பாரு. உனக்கு பிடிக்கலைனா சொல்லு. நான் வேண்டாம்னு சொல்லிடுறேன்."
என்றவருக்கோ, எங்கு அவள் வேண்டாமென்று சொல்லிவிடுவாளோ என்ற கவலை, முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

'இப்போவே மாப்பிள்ளைனு சொல்றீங்களே டாடி.' என்று மனதில் நினைத்தவள், "ஓகே டாடி. நான் கிளினிக் போறேன். நான் யோசிச்சு என் பதிலை சொல்றேன்." என்றவள் தனது கைபையை எடுத்துக்கொண்டபடி உணவுகூட உண்ணாமல் தனது காரில் ஏறி சென்றிருக்க, செல்லும் அவளையே கவலையோடு பார்த்தது தந்தையின் உள்ளம்.

"டாடி டோண்ட்வொரி. எப்படியும் அக்காக்கு அவரை பிடிச்சிடும்." என்று நம்பிக்கை ஊட்டும் விதமாக அவ்விடம் வந்த அபூர்வாவோ, தனது தந்தையின் கைகளை ஆதரவாக பற்றிக்கொண்டாள்.

"பிடிச்சா சந்தோசம் தான்டா பாப்பம்மா " என்றவர், சின்னவளின் தலையை ஆதரவாக வருடினார்.

"அப்படி அக்கா வேண்டாம்னு சொன்னால், நான் அவரை கட்டிக்குறேன் டாடி." என்று கேலிக்காக அவள் சொல்ல, அவ்விடம் வந்த சரஸ்வதியோ தன் மகளை முறைத்தார்.

"அடிங்கு. போய் படிக்குற வேலையைப் பாருடி." என்று உக்கிரமாக முறைக்க,

"க்கூம். என் தாத்தா பெரிய மிஸ்டேக் பண்ணிட்டாரு. சரஸ்வதினு உனக்கு பேர் வைக்குறதுக்கு பதில், பத்ரகாளினு பேர் வைச்சுருக்கணும்." என்று முகத்தை திருப்பிக்கொள்ள, "அடிக்கழுதை." என்று சரஸ்வதி சொன்ன நேரம், "அய்யோ மம்மி." என்று தெறித்து ஓடினாள் சிறியவள். அவளது சேட்டைகளைக் கண்டு மெலிதாக புன்னகைத்தபடி பார்த்தார் சத்யராஜ்.

****

"மைல்ட் பீவர்தான். ஒண்ணும் பிரச்சனை இல்லை. இந்த மாத்திரை, சாப்பிட்டதுக்கு அப்புறம் காலையில, இராத்திரி இரண்டு வேளை சாப்பிடுங்க. மூனு நாள் கழிச்சு பீவர் குறையலைனா வாங்க." என்று பிரகல்யா கூறிக்கொண்டிருக்க,

"சரிங்க டாக்டர்." என்றவர்களோ, மருந்தைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து செல்ல, உணவு உண்ணாமல் வந்த பிரகல்யாவுக்கோ பசி நன்கு எடுத்தது. காரில் ஏறியது முதல் யோசித்துக் கொண்டு வந்தாள். தற்போது வரை யோசித்தவளுக்கு என்ன பதில் சொல்வது என்று மட்டுமே தோன்றவில்லை.

"ரமேஷ் அண்ணா. பக்கத்துலயிருக்க ஹோட்டல்ல இரண்டு இட்லி வாங்கிட்டு வாங்க அண்ணா. சாப்பிடாமல் வந்துட்டேன்." என்று அவள் சொன்னதும் தான் தாமதம் விரைந்து அங்கிருந்து சென்றார் ரமேஷ்.

அவர் சென்றதும் மேசையின் மீதே கை ஊன்றி அமர்ந்தவள், தன் இமைகளை மூடியபடி சிந்திக்கலானாள்.

அந்த நொடி, அவளுக்கு எதிராக இருந்த நாற்காலியில் வந்தமர்ந்தான் ஒருவன். இமைமூடியவளை ஒரு நிமிடம் ஆர்வமாக பார்த்தவன், அடுத்த நிமிடம் அவளை அழைத்திருந்தான்.

"டாக்டர் மேடம்." என்றவனின் அழைப்பில் தன் இமைகளை பட்டென்று திறந்தவள், தன் முன்னே அமர்ந்திருந்தவனை கேள்வியாக பார்த்தாள்.

"நான்.." என்று அவன் தொடங்கும் முன்,

"தெரியும் விஷ்வா தானே. நேத்து போலிஸ் ஸ்டேஷன்ல பார்த்தேன். ஆமா என்ன விசயமா வந்திருக்கீங்க? உடம்பு எதாவது சரியில்லையா?" என்று அவளே பேசத் தொடங்கினாள்.

"ச்சேச்சே... மனசுதான் டாக்டர் சரியில்லை. இஃப் யூ டோண்ட் மைண்ட், உங்களை பேர் சொல்லி கூப்பிடலாமா?"

"ம்ம்ம் ஓகே சொல்லுங்க." என்றவளின் முகமே கூறியது குழப்பத்துடன் இருக்கிறாள் என்பது.

"ஓகே பிரகல்யா நேரடியா விசயத்துக்கு வரேன். நேத்து இறந்தது என் நண்பன் உதய். அவனும் நானும் ரிப்போர்ட்டரா இருந்தோம். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல சூசைடுனு தான் வந்திருக்கு. அவன் மேலயிருந்து கீழ விழுந்ததுனால தான் உயிர் போயிருக்குனு சொல்லிட்டாங்க."

"ஓகே. ஆனால் இது எல்லாம் என்கிட்ட ஏன் சொல்றீங்க?"

"காரணமில்லாமல் இல்லை. எனக்கு இது பக்கா மர்டர் மாதிரி தோணுது. உங்க தங்கை தான் அவனோட சடலத்தை பார்த்திருக்காங்க. அப்போ வேற எதாவது இல்லைனா, வேற யாரையாவது அங்க பார்த்தாங்களானு தெரிஞ்சுக்கணும். ஏன்னா உதய் ஒரு பெரிய விசயத்தை கண்டு பிடிச்சதா என்கிட்ட சொன்னான். அது என்னென்னு நேருல சொல்றேன்னு சொன்னான். ஒரு நண்பனா, அவனோட இந்த டெத்க்கான காரணமானவனை நான் கண்டுபிடிக்கணும்னு ஆசைப்படுறேன். அவனுக்கு தண்டனை சட்டப்படிக் கிடைக்கணும்."

"சாரி விஷ்வா. என் தங்கச்சி வேற எதுவும் பார்க்கலை. பார்த்திருந்தால் எதாவது சொல்லியிருப்பாங்க. பெட்டர் நீங்க வேற வழியில தேடுங்க. அதையும் மீறி அபூர்வாவை விசாரிப்பீங்கனு சொன்னால், உங்க மேலதான நான் கம்ப்ளைண்ட் கொடுக்க வேண்டி வரும்." என்று தன்மையாக எடுத்துரைத்தாலும், இறுதியில் அவளது எச்சரிக்கை விடுக்கும் குரல் விஷ்வாவையே ஆச்சரியம் கொள்ள செய்தது.

மெலிதாக புன்னகைத்தவன், "இன்னொரு விசயமும் இதுல இருக்கு. அவன் டைரியில உங்க ஹாஸ்பிடல் அட்ரஸ் இருந்துச்சு. அதுனால தான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன் லியா." என்றவனின் பதிலில் சிறு அதிர்ச்சி பெண்ணவளின் முகத்தில் தெரிந்தது.

"வாட். இது சுத்த பைத்தியகாரத்தனமா இருக்கு. மேபி எமெர்ஜென்சிக்காக இந்த அட்ரஸ் எழுதியிருக்கலாமே உங்க பிரெண்டு."

"ம்ம்ம் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். எதுக்கோ டேக் கேர் லியா." என்றவன் சிறு தலையசைப்புடன் அவளிடம் விடைப்பெற்று சென்றிருந்தான். அவன் கேட்டைக் கடந்து செல்லும் நேரம், எதிரே வந்த ரமேஷ் மீதே மோத, "சாரி" என்றவன் பரபரப்புடன் அங்கிருந்து சென்றிருந்தான்.

அவனது வருகையும், அவன் சொல்லிவிட்டு சென்றதும் பிரகல்யாவிற்கு குழப்பத்தை உண்டாக்க, ஆழ்ந்த மூச்சொன்றை விடுத்தவள், தனது கவனத்தை திசைத் திருப்புவதற்காக, வாட்ஸ்அப் புலனத்தை உயிர்பித்தாள்.

அவள் தந்தை அனுப்பிய ருத்ரஜித்தின் புகைப்படம் லோடாகும் வரை காத்திருக்க, அந்த நிமிடம் கையில் உணவுடன், அவ்வறைக்குள் நுழைந்தார் ரமேஷ்.

"பாப்பா முதல்ல சாப்பிடுங்க வாங்க." என்றவர் அழைக்கவும் உணவு உண்பதற்காக பிரகல்யா செல்ல, அவளது குழப்பமான முகம் ரமேஷிற்கு எதுவோ சரியில்லை என்பதை உணர்த்தியது.

அதன்பிறகு அன்றைய நாள் முழுவதும், சிகிச்சைக்காக வந்தவர்களை பார்ப்பதற்கே பிரகல்யாவிற்கு நேரம் சரியாக இருந்தது. அதன்பின்னர் எட்டு மணியளவில் வீட்டை அடைந்தவள், இரவு உணவினை உண்டபடி உறங்கச் சென்றாள்.

"பிரக்ஸ் என்ன முடிவு பண்ணியிருக்க?" என்ற அபூர்வாவின் அழைப்பில், அவளைத் திரும்பி ஒருமுறை பார்த்தவள்,

"உனக்கு பிடிச்சிருக்கா?" என்று மட்டும் கேட்டாள்.

"ஓ டபுள் ஓகே." என்று தலையை பலமாக ஆட்டினாள் அபூர்வா.

"அப்போ நீயே கட்டிக்கோடி." என்று மட்டும் கூறியவள் உறங்க செல்ல,

"விளையாடாதக்கா. நிஜமாவே கட்டிப்பேன். அவரு செமையா இருக்காரு. அழகா சிரிக்குறாரு. அவருக்கு ஃபேன் பேஜ் எல்லாம் இருக்கு தெரியுமா?"

"என்னமோ நேர்ல பார்த்தமாதிரி பேசுற?"

"நிஜமாக்கா. போட்டோ பார்த்தே அசந்துட்டேன். அப்புறம் அவரைப் பத்தி இன்ஸ்டகிராம்ல தேடுனா அப்படியே சாக் ஆகிட்டேன். செம ஃபேமஸ்க்கா அவரு."

"ஓ.. எங்க உன்னை அசரடிச்சவரோட போட்டோவை காமி." என்று கூறியவளுக்கும் அந்நிமிடம் அவனைப் பார்க்கும் ஆவல் எழுந்தது.

அடுத்த நொடியே அபூர்வா ருத்ரஜித்தின் புகைப்படத்தைக் காட்ட, பிரகல்யாவின் கண்கள் தன்னாலே ஆச்சரியத்தில் விரிந்தது.

"எப்படி அக்கா மாப்பிள்ளை. செமல்ல... பாரு நீயே வாயடைச்சு போயிட்ட." என்று புன்னகையோடு கூறினாள்.

அந்த நிமிடம், காலையில் அவனைப் பார்த்ததும், தனது இடையைப் பற்றியவனது புன்னகையான முகமும், அவனுக்கே உரிய புன்னகையும் பட்டென்று கண்முன்னே தோன்ற, பிரகல்யாவின் இதழ்களில் அன்னிச்சையாக புன்முறுவல் பூத்தது.

"பிரக்ஸ் என்ன வெட்கமா?" என்று அபூர்வா அவளைக் கட்டிக் கொள்ள, தனது வெட்கத்தை மறைக்க மிகவும் முயற்சித்தவள் தோற்று தான் போனாள்.

"ஐ அக்கா சிரிச்சுட்டா. டாடி, மம்மி" என்று கத்திக் கொண்டே அறையிலிருந்து சென்றவள் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ள, பிரகல்யாவின் முகம் மேலும் பிரகாசித்தது.

"பாப்பா. நிஜமாவாடா?" என்று தந்தை உற்சாகத்துடன் கேட்டதில் தனது சம்மதத்தை தெரிவித்தாள் பெண்ணவள்.

சரஸ்வதியோ தனது மகளை அணைத்தவர், அவளது நெற்றியில் முத்தமிட்டப்படி, "ரொம்ப சந்தோசமா இருக்குடா பட்டு." என்றார்.

"மம்மி வாங்க சந்தோசத்தை ஸ்வீட் எடுத்துக் கொண்டாடுவோம்." என்று மகிழ்ந்தவள், கையோடு கொண்டு வந்த இனிப்புகளை, தந்தைக்கும், தாய்க்கும், தனது அக்காவிற்கும் ஊட்டிவிட்டாள்.

சிறிது நேரம் அவர்களது மகிழ்ச்சியில் திளைத்த பிரகல்யா, தனது அறைக்கு தூங்குவதாக சொல்லிவிட்டு சென்றவளின் மனமோ, மகிழ்ச்சியில் திளைத்தது. தன் இடையை உரிமையுடன் பற்றியவனை நினைக்கும் போதே உடல் சிலிர்த்தது பெண்ணவளுக்கு.

" நான் தான் பொண்ணுனு தெரிஞ்சும் வேணும்னே என்னை பார்க்க வந்திருக்கீங்களா?" என்று இங்கிருந்தபடியே தன்னவனுக்குள் கேள்வியைக் கேட்டுக் கொண்டது பெண்ணவளின் மனம்.

ருத்ரஜித்தோ மும்பையிலிருந்த பப்பில், தனது கையில் தவிழ்ந்துக் கொண்டிருந்த இளம் நங்கையவளது இடையை பற்றிக்கொண்டு நடனம் புரிந்தவனது இதழ்களில் தன்னாலே முறுவல் தோன்ற, "கேம் ஸ்டார்ட் நௌவ்" என்று அழுத்தமாக கூறியபடி, அவளை தன்னிடமிருந்து பிரித்து தள்ளியவன், அங்கிருந்த அவனுக்கென்ற பிரத்யேக இருக்கைக்குச் சென்று அமர்ந்துக் கொண்டான்.

பின் தனது கைகளில் தவிழும் ஆப்பிள் ஐபோனை உயிர்பித்தவன், தொடுதிரையில் புன்னகைத்த முகமாக இருந்த பாவையளின் முகத்தை கண்களில் நிரப்ப,
அவனது நயனங்களில் நிறைந்திருந்தாள் அபூர்வா....


இவளின் கனா அவன்...
அவனின் கனா அவள்.....
வேய்ந்தனனின்
கண்ணாமூச்சி ஆட்டத்தில்
சிக்கிக் கொள்ளும்
பட்டுபூச்சி தான் இவளோ....!
நயனங்களில் நிரம்பிய
நளினமங்கை தான் அவளோ...!

வேய்ந்தனனின் ஆட்டம்

தொடரும்......
Nalla aduringa da kanna mochi attathai
 
Top Bottom